தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

இந்து  அண்மையில் பாரதிய வம்சாவளி ‘ரோமா’ சமுதாயத்தினர் மேற்கத்திய நாடுகளில் படும் இன்னல்கள் குறித்து எழுதிய உடனேயேmorning_hindutva சில இஸ்லாமிய சகோதரர்கள் வந்து மேற்கத்திய நாடுகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக ‘தலித்துகள் இந்தியாவில் இன்னல்கள் அனுபவிக்கவில்லையா?’ என கேட்டிருக்கிறார்கள். ஏதோ சாதியமும் சமுதாயக் கொடுமைகளும் இந்து சமுதாயத்துக்கு மட்டுமே உரியது என்பது போலவும், இஸ்லாம் ஏதோ சமூக விடுதலை சித்தாந்தம் என சித்தரிப்பது நோக்கம். ஆனால் இஸ்லாத்தை விட சமூக அநீதிகளை மூடி மறைத்து சமத்துவ வேடம் போடும் சமுதாயம் வேறொன்று கிடையாது. இதை இந்த கட்டுரையை எழுதுபவன் சொல்லவில்லை. போதிசத்வ அம்பேத்கர் கூறுகிறார்:

இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகள் அனைவருக்கும் தெரியும். காதரின்ambedkar1 மேயோவின் மதர் இந்தியா இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகளை வெளிக்காட்டிய அதே நேரத்தில் ஏதோ இஸ்லாமிய சமுதாயம் முற்போக்கானது எனும் எண்ணத்தை உருவாக்கியது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தை அருகாமையிலிருந்து பார்த்த எவருக்கும் அது அதிசயத்தை அளிக்கும். இந்துக்களிடம் இருக்கும் எந்த சமூக தீமை இஸ்லாமியர்களிடம் இல்லை என கேட்கலாம்.

பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது.

ஒருவேளை பாகிஸ்தான் உருவாகி இஸ்லாமியர்களுக்கு என்று தனி தேசம் ஏற்பட்டால் நிலை சரியாகிவிடுமா? என நினைத்தால் அதுவும் இல்லை. நவம்பர் -15-2003 இல் ’எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ caste_pakistan இதழில்  இர்ஃபான் அகமது என்பவர் எழுதிய கட்டுரை விஷயங்கள் மிக மோசமாகவே உள்ளன என்பதை காட்டுகின்றன. அவர் சொல்கிறார்: இஸ்லாமிய பாகிஸ்தானில் இந்த ‘இந்து’ தன்மையான சாதி இருக்காது என நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சாதி பாகிஸ்தானில் இந்தியாவில் இருப்பதைவிட தீர்க்கமாக இருக்கிறது.

ஒரு தெளிவான வரலாற்று ஆதாரத்தையே நாம் சொல்லலாம். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவுதினம் நேற்று. பாபு ஜெகஜீவன் ராமை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொன்னார் மதன் மோகன் மாளவியா. இத்தனைக்கும் மாளவியா ஆச்சாரவாதி என கருதப்படுபவர். jramஆனால் தலித்தான ஜெகஜீவன்ராம் அவர்களை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. ஆனால் அலிகார் முஸ்லீம் கல்லூரியை நிறுவிய சையத் அகமதுகானுக்கு இஸ்லாமிய ஒடுக்கப்பட்ட சாதிகளான நெசவாளர் போன்றவர்களை கல்லூரியில் சேர்க்க மனத்தடை இருந்தது. எனவேதான்  1970களில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா பத்திரிகை நடத்திய பேட்டியில் பாபு ஜெகஜீவன் ராம் தன்னை ’பெருமை மிக்க இந்து’ என வர்ணித்தார். இதற்கு இஸ்லாமிலேயே நெடிய பாரம்பரியம் உண்டு என்பதுதான் உண்மை. முல்லா அப்துல் க்வாதிர் பதாயுனியின் ‘முன்தகப் அல் தவாரிக்’, மௌலவி ஸையது ஸியதின் பர்னியின் ‘தாரிக் இ ஃபெரோஸ் ஷாகி’ அல்லது குன்வர் முகமது  அஷ்ரப்பின் ‘ஹிந்துஸ்தான் மாஷ்ரா அகத் இ உஸ்தா மைன்’  ஆகிய சட்ட, மார்க்க விளக்க நூல்கள் இஸ்லாமிய சாதிய சமுதாயத்தை நியாயப்படுத்துகின்றன.  காஸி சஜத் ஹுசைன் என்கிற இஸ்லாமிய அறிஞர் நல்ல இஸ்லாமியர்கள் எந்தெந்த சாதி முஸ்லீம்களுடன் சேர்ந்து உணவு அருந்த கூடாது என வரிசைப்படுத்தியிருக்கிறார் என்பதுடன் அதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும் சொல்லியிருக்கிறார்.  ஆம்.. நிச்சயமாக நமது இஸ்லாமிய சகோதரர்கள் அது சஹீ ஹதீஸ் அல்ல என சொல்லக் கூடும். ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தூக்கிப் பிடிக்கப் படும் ஹிட்லரின் முன்னோடி அவுரங்கசீப் ஆட்சியில் கூட நிலை இப்படித்தான் இருந்தது.  அவுரங்கசீப் காலகட்டத்தில் அதிகாரபூர்வமாக அவனது கட்டளையின் அடிப்படையில் எழுதப்பட்ட ’பத்வா இ அலம்கிரி’ நூலில் இஸ்லாமிய சட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராக இயற்றப்பட்டன.

ஆனால்  இஸ்லாமிய சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் முழங்குகிறவர்கள் உண்மையில் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களுக்கு இஸ்லாமிய சமத்துவம் என்கிற பிரச்சார மாயைக்கு அப்பால் பேச எதுவுமே இல்லை.  ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்கிற அடிப்படைவாத அமைப்பு தூய இஸ்லாத்தை முன்வைப்பதாக சொல்லி செயல்படும் அமைப்பு. இதே அமைப்பின் பங்களாதேஷ் அவதாரம்தான் இந்துக்களை இனப்படுகொலை செய்வதில் முன்னணியில் நின்றது. தமிழ்நாட்டில் தூய இஸ்லாத்தை பரப்பும் பலரும் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவோ அல்லது அதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பர். ஆனால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியரின் பிரச்சனைகள் குறித்து இந்த அமைப்பினர் ஏதாவது செய்தார்களா என்றால் இல்லை என்கிறார் இர்ஃபான் அகமது. மாறாக அதை மூடி மறைக்கவே இவர்கள் பார்க்கிறார்கள்.  என்னதான் மூடி மறைத்தாலும் சாதிய கொண்டை தெரியாமல் இல்லை.  இர்ஃபான் அகமது தோலுரிக்கிறார்:

ஜமாத் இ இஸ்லாமியின் ’தவாத்’ இதழின் இறுதி பக்கத்தில் திருமண விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையான விளம்பரங்களில் மணமகள்/மகனின் சாதி குறிப்பிடப் பட்டுள்ளது.  என்னுடைய களப்பணியில் ஒரு ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் எப்படி தனது சகோதரிக்கு திருமணம் ஆவது சாதி பிரச்சனையால் தள்ளிப் போனது என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏனென்றால் அவர் நெசவாளர் சாதியைச் சார்ந்தவர். இத்தனைக்கும் அவர் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சார்ந்தவர்களே சாதியை சொல்லி திருமணம் செய்ய மாட்டோம் என கூறியவர்களில் இருந்தார்கள்.

இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்:  ஒஸாமா பின் லேடனின் முன்னாள் கூட்டாளியும் அல்-கொய்தா அமைப்பிலிருந்தவருமான சாத் அல்-ஃபாகிக் என்பவர் ஒஸாமா பின் லேடன் என்றென்றைக்கும் அல் கொயிதா வென்றிருந்தாலுமே கூட காலிப் ஆகியிருக்க முடியாது என கூறுகிறார். ‘லேடன் ஹத்ரமவுத் (Hadramaut) சாதியை சார்ந்தவர். இஸ்லாமிய மரபின் படி கிலாபத் அரசை மீண்டும் உருவாக்கக் கூடியவர் குரேஷி சாதியில் இருந்துதான் வர வேண்டும்.’  ஆக ஒரு இந்தியர் காலிப் ஆவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். அத்தனை ஏன் ஜும்மா மசூதியில் இமாம் ஆக வேண்டும் என்றால் சையது புகாரியின் இரத்தத் தொடர்பு கொண்ட சந்ததிகளைத் தவிர வேறுயார் வர முடியும்?  தூய இஸ்லாம் என்கிற பெயரில் வஹாபிய வைரஸ்களை உலகமெங்கும் பரப்பும் சவூதியில் அமெரிக்க தயவில் ஓடிக்கொண்டிருக்கும்  மன்னராட்சி நடைபெறுகிறதே… யூட்யூப் வீடியோவுக்காக சென்னையில் அமளிதுமளி செய்து பொது மக்களை கொடுமைப்படுத்திய இஸ்லாமிய பாசிசத்தின் குண்டர்கள் சவூதிக்கு எதிராக அங்கே நடைபெறும் மன்னராட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கலாமே… அதை விடுங்கள்… இதே தமிழ்ஹிந்து இணையதளத்தில் இந்து ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர்களின் இட ஒதுக்கீடு உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சகோதரர் ம.வெங்கடேசன் அவர்களின் கட்டுரையை படித்தவர்கள் இதை உணரலாம். அனைத்து இந்துக்களும் அர்ச்சகராவதற்காக இந்த தளத்தின் ஆசிரியர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம்.

1. ஜும்மா மசூதியில் பாரம்பரிய முறையில் இருக்கும் இமாம் சையது புகாரியின் பதவி தகுதி வாய்ந்த அனைத்து இஸ்லாமியருக்கும் அளிக்கப்பட வேண்டும். அது பாரம்பரிய முறையில் இருக்கக் கூடாது என இயக்கம் நடத்தலாம்.

2. ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கு அல்ல ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த இஸ்லாமியருக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த மிக முக்கிய கோரிக்கையை முன்வைக்கலாம்.

அதை விடுத்து இங்கே வந்து போலி கரிசனை காட்டுவது நகைப்புக்குரியது. ஏனெனில் இந்த தளம் ‘தலித்தை சங்கராச்சாரியார் ஆக்குங்கள்’ என்றே கட்டுரை வெளியிட்டுள்ளது.  எனவே சமூகநீதியை இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர் கற்றுத்தர வேண்டியதில்லை. முடியுமானால் இந்துக்களின் சமூகத்தில் இருக்கும் சமூகநீதி இயக்கங்களை இஸ்லாமியர் தங்கள் சமூகத்துக்கு பிரதி எடுக்கலாம். இணையதளத்துக்கு வரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு நல் வாழ்த்துகள்.

இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் rettaimalai_seenivasanஅழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம். ஒடுக்கப்பட்ட மக்களை ‘சீர்திருத்த இந்துக்கள்’ என அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர் அவர். மதமாறியவர்கள்  தலித் இந்துக்களின் சலுகைகளைத் தட்டிப்பறித்திடக் கூடாது என்பதை தெளிவாக கூறியவர். அன்று ஆரிய திராவிட இனவாதம் தூக்கலாக இருந்தது. வைதீகம் ஆரிய மதம் என்றும் தமிழரின் மதம் வேறு என்றும் கூறப்பட்டது. ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் இந்த இனவாத பார்வையை தாண்டி இந்த இருபிரிவினர் என கருதப்படுவோரிடையில் சமய ஒருமை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்துவாக இருந்தே போராடி உரிமைகளை பெற வேண்டுமென்று சொன்னவர். அவரது பிறந்த தினத்தில் அவருக்கு வணக்கங்களுடன் சாதியத்தை வேரும் வேரடி மண்ணுமற அழிக்க உறுதி ஏற்போம். அதற்கான ஆன்மிகவலு இந்து சமுதாயத்துக்கு உண்டு என நம்பிய அவரது நம்பிக்கை நமக்கு அவர் அளித்து சென்றுள்ள கடமை.  இன்றைய தேநீர் நிறைவுறுகிறது. நாளை காலை மீண்டும் சந்திப்போம்.

48 Replies to “தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…”

  1. Khyber Pakhtunkhwa Chief Minister Parvez Khattak issued a statement in July that “only non-Muslims will be recruited as sweepers”. Junaid Saqib said his community saw the statement as derogatory and discriminating. A government job advertisement published in a Lahore-based Urdu daily in February 2010 stated that applicants for the sweeper’s job “must be Christian”.

    – See more at: https://www.thefridaytimes.com/tft/a-somber-christmas/#sthash.uVdrOJbt.dpuf

    In Pakistan, Christians work as sweepers and cleaners and so we were told not to shake hands with them or take any food from them, thus making me believe as a child that all Christians in the world were sweepers and dirty

    https://www.dailytimes.com.pk/opinion/11-Feb-2014/emptying-our-cup

  2. நல்ல கருத்தாக்கம். மொழி, மதம், சாதி ஆகியவை மனித இனத்தை ஒற்றுமைப்படுத்த இயலாது என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது. டெல்லி ஜும்மா மசூதியில் ஒரு தலித்து இனத்தவரை இமாம் ஆக்கட்டும் பார்க்கலாம். அதேபோல பெண்களுக்கு இமாம் பதவியில் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்கட்டும். முடியுமா இவர்களால் ?

    தைரியம் இருந்து, இவர்கள் உண்மையான சீர்திருத்தவாதியாக இருந்தால், காலிப்பாக ஒரு இஸ்லாமியப் பெண்மணியை உடனடியாக நியமிக்கட்டும். சாதிப்பிரிவுகளின்படி தாழ்த்தப்பட்டவரை ஆன்மீக நிலையங்களின் தலைமைப்பதவிகளில் நியமித்தால் தான், இவர்கள் யோக்கியர்கள். இல்லையெனில் அயோக்கிய சிகாமணிகளே ஆவார்கள். இமாம் , காலிப் ஆகிய பதவிகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கினால் தான் சமத்துவ சமுதாயம் பிறக்கும். ஆண் பெண் சமத்துவம் வாழ்க ! இஸ்லாத்தில் எல்லா சாதியினரும் இமாமாகவும், காளிபாகவும் ஆகட்டும்- அதன் பின்னர் தான் இவர்கள் மற்றவர்களைப் பற்றி பேச யோக்கியதை உண்டு.

  3. அருமையானக்கட்டுரை இஸ்லாமில் சாதி இல்லை என்ற கட்டுக்கதையை உடைத்தெரிந்துள்ளார் ஸ்ரீ அநீ. இந்தியாவில் மட்டுமல்ல அரேபியாவிலேயே இஸ்லாமியரிடத்தில் சாதிய நோக்கு சாதி இருக்கிறது என்பதை அழகாகச்சொல்கிறார் ஸ்ரீ அரவிந்தன். தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு பொருத்தமான அஞ்சலியாக அமைந்துள்ளது இந்தக்கட்டுரை. பாராட்டுக்கள்.
    இந்தியாவில் இஸ்லாமியர்களிடையே சாதி பேதங்கள் இருப்பது சமூகவியலாளர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்திதான். அவர்களில் அன்னிய நாட்டிலிருந்து வந்தவர்கள் அஸ்ரப் என்றும் இந்திய நாட்டிலிருந்து மாறியவர்கள் அல்ஜாப் என்றும் அழைக்கப்படுகின்றனர்.முன்னவரே உயர்குடியினர் பின்னவர்கள் எப்போதும் தாழ்ந்தவர்களே.அன்சாரி எனப்படும் நெசவாளர்கள் உயர்குடியினரால் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர்.

  4. அரவிந்தன் நீலகண்டனிடம் இருந்து மற்றும் ஒர் அருமையான படைப்பு.

  5. indru ஈராக்கில் நடப்பது ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்குமான சண்டைதனே மற்றும் உலகம் ம்ழுவதிலும் குர்து இனத்தவருக்கும் பஹயீக்கலுக்கும் எதிராக நடக்கும் மோதல்கள் சகோதரத்துவம ஆகுமா

  6. திரு அரவிந்தன் நீலகண்டன்!

    // ‘லேடன் ஹத்ரமவுத் (Hadramaut) சாதியை சார்ந்தவர். இஸ்லாமிய மரபின் படி கிலாபத் அரசை மீண்டும் உருவாக்கக் கூடியவர் குரேஷி சாதியில் இருந்துதான் வர வேண்டும்.’ ஆக ஒரு இந்தியர் காலிப் ஆவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். அத்தனை ஏன் ஜும்மா மசூதியில் இமாம் ஆக வேண்டும் என்றால் சையது புகாரியின் இரத்தத் தொடர்பு கொண்ட சந்ததிகளைத் தவிர வேறுயார் வர முடியும்? //

    இந்த வரிகளைப் படித்தவுடன் என்னையறியாமல் சிரித்து விட்டேன். ஏனெனில் ‘ஹதரல்மவுத்’ என்பது எமனில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். அதனை சாதியாக நீங்களே உருவாக்கிக் கொண்டீர்கள். குரைஷி இனத்தைச் சேர்ந்தவர்தான் கிலாபத்துக்கு தலைமையேற்க வேண்டும் என்று எந்தகுர்ஆன் வசனத்தில் படித்தீர்கள். அல்லது எந்த நபிமொழியில் படித்தீர்கள்? தெரிவித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

    புதிதாக இஸ்லாத்தை ஏற்ற தலித் சகோதரன் தமிழகத்தின் பல பள்ளிகளில் இமாமாக இன்றும் பணியாற்றிக் கொண்டுள்ளனர். ஜூம்ஆ பள்ளிகளில் அழகிய முறையில் பிரசங்கமும் செய்து தொழுகையும் நடத்துகின்றனர். இமாம் புகாரியின் வாரிசுகள்தான் இமாமாக முடியும் என்ற உங்கள் வாதத்துக்கு குர்ஆன், அல்லது நபி மொழிகளின் ஆதாரத்தை சமர்ப்பியுங்கள். அல்லது சொன்னது தவறு என்று ஒத்துக் கொள்ளுங்கள்.

    //இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம்.
    1. ஜும்மா மசூதியில் பாரம்பரிய முறையில் இருக்கும் இமாம் சையது புகாரியின் பதவி தகுதி வாய்ந்த அனைத்து இஸ்லாமியருக்கும் அளிக்கப்பட வேண்டும். அது பாரம்பரிய முறையில் இருக்கக் கூடாது என இயக்கம் நடத்தலாம்.
    2. ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கு அல்ல ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த இஸ்லாமியருக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த மிக முக்கிய கோரிக்கையை முன்வைக்கலாம்.//

    1. ஒரு பள்ளியின் இமாமை தேர்ந்தெடுப்பது அந்த பள்ளியின் நிர்வாகிகளே! அவர்கள் நினைத்தால் நீங்கள் தகுதியானவராக இருந்தால் உங்களையும் இமாமாக நியமிக்கலாம். குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்து இஸ்லாமிய சட்டங்களை நன்கு படித்திருப்பது ஒன்றே அங்கு தகுதியாக பார்க்கப்படும். குர்ஆனும் நபி மொழிகளும் அதனைத்தான் முஸ்லிம்களுக்கு போதிக்கின்றன.

    2. சாதிகளே இஸ்லாத்தில் இல்லை எனும் போது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்து மதத்தில் சாதிக் கொடுமை தாங்க முடியாமல்தான் ஒரு தலித் இஸ்லாத்தை நோக்கி வருகிறார். இங்கும் அதே சாதி முறையை பின் பற்றினால் அதற்கு இந்து மதத்திலேயே இருந்து கொள்ளலாம்.

    ஒரு சில மார்க்க அறிவற்ற முஸ்லிம்கள் கிராமப் புரங்களில் சில சாதி வேறுபாடுகளை கடை பிடிக்கின்றனர். வட நாடுகளில் இது தொடர்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களும் மசூதிக்குள் நுழைந்து விட்டால் அனைவரையும் ஒன்றாகவே பாவிக்கின்றனர். இந்த சிறு வித்தியாசத்தையும் போக்குவதற்கு பல அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. பாகிஸ்தானிலும் சாதி பாகுபாடு பார்க்கும் முஸ்லிம்களை திருத்த முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.

    இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிரிவு என்பது திராவிடன், ஆரியன், ஐரோப்பியன் என்ற இனத்திலான பிரிவுகளே! ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளானது பிறப்பினால் உருவாக்கப்படுகிறது. அதற்கு வேதங்களும் உபநிஷத்துகளும் துணை நிற்கின்றன. இந்த வேறுபாடுகளை புரிந்து கொள்ளுங்கள்.

  7. ///// (1) சாதிகளே இஸ்லாத்தில் இல்லை எனும் போது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்ற பேச்சுக்கே இடமில்லை.//// (2) ஒரு சில மார்க்க அறிவற்ற முஸ்லிம்கள் கிராமப் புரங்களில் சில சாதி வேறுபாடுகளை கடை பிடிக்கின்றனர். வட நாடுகளில் இது தொடர்வதை நான் மறுக்கவில்லை///// இந்த இரண்டையும் படித்து விட்டு நீங்கள் உங்கள் தலையை பிய்த்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

  8. திரு. suvanappiriyan on July 7, 2014 at 6:11 pm

    //… குரைஷி இனத்தைச் சேர்ந்தவர்தான் கிலாபத்துக்கு தலைமையேற்க வேண்டும் என்று எந்தகுர்ஆன் வசனத்தில் படித்தீர்கள். அல்லது எந்த நபிமொழியில் படித்தீர்கள்? தெரிவித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்….//
    நீங்கள் தாம் அதைக் குறிப்பிடவேண்டும். எங்களுக்கு நீங்கள் இந்த வேறுபாட்டைக் கடைபிடிக்கிறீர்கள் என்பது மட்டும்தான் – நாங்கள் கண்களால் காண்பதால், கேள்விப்படுவதால், உங்கள் மார்கத்தவர்களே வருந்தி எழுதுவதால் – தெரியும். ஆனால் அதற்கு ஹதீஸ்களைக் காண்பித்தால் அவை குரான் அல்ல என்று ஒதுக்குவீர்கள் என்றும், ஆனால் நீங்கள் குரானை ஹதீஸ்கள் மூலமாகவே விளங்கிக்கொள்வீர்கள் என்றும் தெரியும்.

    //…ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளானது பிறப்பினால் உருவாக்கப்படுகிறது. அதற்கு வேதங்களும் உபநிஷத்துகளும் துணை நிற்கின்றன.//
    இதற்கு ஆதாரத்தை நீங்களும் சமர்ப்பிக்கலாமே. உண்மையிலேயே வேதம் அல்லது உபநிஷதங்களில் இருந்து.

    //புதிதாக இஸ்லாத்தை ஏற்ற தலித் சகோதரன் தமிழகத்தின் பல பள்ளிகளில் இமாமாக இன்றும் பணியாற்றிக் கொண்டுள்ளனர். ஜூம்ஆ பள்ளிகளில் அழகிய முறையில் பிரசங்கமும் செய்து தொழுகையும் நடத்துகின்றனர்.//
    எங்களுக்கும் எங்கள் கோவில்களில் நாங்களேதான் பூஜை செய்துகொள்கிறோம். பார்ப்பனர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. எல்லா ஜாதியினரும் பூஜாரிகளாக எந்த சீர்திருத்த இயக்கமும் வரும்முன்னரே நடைமுறையில் இருந்து வருகிறது. நடைமுறை கடைபிடிக்கப்படுகிறதே தவிர, ஜாதி கடைபிடிக்கப்படுவதில்லை. சங்கர மடத்தில் எப்படி அன்னிய ஜாதி வரமுடியாதோ, அதேபோல் ஆதீனங்களிலும் வரமுடியாது, பார்ப்பானாக இருந்தாலும். தி.க.வில், தி.மு.க.வில் போல. அதே சமயத்தில் இராமகிருஷ்ண மடங்களைப்போல எல்லாரையும் ஏற்று, முதுமையின் அடிப்படையில் யாரும் தலைவராக வரமுடிந்த மடங்களும் உண்டு. பா.ஜ.க போல. அந்த மடங்களில் அது நடைமுறை. இங்கு இது. சங்கரன்கோவில் அன்னபூர்ணாபுரம், ஆ்சநேயர் கோவில் ஸ்வாமீ இராகவாநந்தரைக் கேளுங்கள் – எத்தனை திருக்குலத்தவர் சாதுக்களாகக் கூட இருக்கிறார்கள் என்பதை. ஆதாரம் கேட்பீர்களே அதற்காகச் சொன்னேன்.
    //…2. சாதிகளே இஸ்லாத்தில் இல்லை எனும் போது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்ற பேச்சுக்கே இடமில்லை…//
    //ஒரு சில மார்க்க அறிவற்ற முஸ்லிம்கள் கிராமப் புரங்களில் சில சாதி வேறுபாடுகளை கடை பிடிக்கின்றனர். வட நாடுகளில் இது தொடர்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களும் மசூதிக்குள் நுழைந்து விட்டால் அனைவரையும் ஒன்றாகவே பாவிக்கின்றனர். இந்த சிறு வித்தியாசத்தையும் போக்குவதற்கு பல அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. பாகிஸ்தானிலும் சாதி பாகுபாடு பார்க்கும் முஸ்லிம்களை திருத்த முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.//
    மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா. உங்களில் இருந்தால் அது அறியாமை, சிலர், கிராமப்புறம், வடநாடு, பாகிஸ்தானா. எங்களில் இருந்தால் அது இந்துமதமா. நாங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தயாரானவர்கள், தவறு இருந்தால். உங்களைப் போல் நாங்கள் சொல்வதையே குரானும் சொல்கிறது. அதை நீங்கள் கடைபிடித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஷியாவானாலும் கொன்றே தீருவோம் என்பது எங்கள் கொள்கை அன்று. எங்கள் சமுதாயத்தில் உள்ளவர்கள் புரிந்து திருந்திக்கொள்ளும்வரை காத்திருப்பவர்கள். கொன்றொழிப்பவர்கள் அல்லர். நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்பவர்கள் அல்லர். திறந்த மனதுடன் எங்கள் குறைகளை யார் சுட்டினாலும், பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம். பத்வா வழங்கோம். மத நிந்தனை எனோம்.

  9. SP as usual likes to bury his head in sand. When he has no defense, then obfuscate and change topic. If he has any doubts about caste in Islam, all he need to do is look at Muslim matrimonial colums.
    May be I can direct him to this site. Just a casual search will show the caste system of Muslims
    https://www.muslimmatrimony.com/matrimonials/Muslim-Matrimonial-sites/India/
    Here is another link on TOI article
    https://timesofindia.indiatimes.com/home/stoi/deep-focus/Being-Muslim-in-India-means-Syeds-spit-on-Julahas-in-an-egalitarian-community/articleshow/5935797.cms

  10. சுவனப்பிரியன்

    கருணா நிதியின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து உங்களைப் போன்ற ஒருவருக்கு யாரோ எழுதிய பதில்:

    ////ஈராக் தீவிரவாதி நல்ல மனதுள்ள போராளிகளாம்.
    ஒரு வாரத்திற்குள் நர்ஸுகளை நன்கு கவனித்து
    திருப்பி அனுப்பிட்டாங்களாம்.
    கூமுட்டை.. அவன் நல்லவனா இருந்தா நர்ஸுகளைக்
    கடத்தி ஏன் நாலுநாளா பிணைக்கைதிகளா வச்சிருக்கான்..?
    உன் அக்கா நர்ஸா இருந்து தீவிரவாதி கடத்திட்டு
    பொயிட்டான்னா ‘தினமும் நாலு தடவை கதறக்கதற
    கற்பழிச்சான் சார்’ன்னு சொல்லுவாளா..?
    இல்லை..
    டீயும் பன்னும் கொடுத்து அன்பா பாத்துக்கிட்டாங்க.
    இன்னும் ஏதாவது வேணும்னாலும் பயப்படாம கேளுங்கள்
    சகோதரின்னு அன்பொழுக பேசுனாங்கன்னு சொல்வாளா..?கண்ணியமிக்க காயிதெமில்லத் பரம்பரையில் பிறந்த ,
    கணினியமிக்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் எங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டார்கள்
    சரி/////
    பிறகு இதே செவிலியரில் ஒருவர் சென்ற 3ஆம் தேதி

    — “Our government wasted a lot of time. Now, they can send coffins to take us back,” a sobbing Sona Jospeh told HT over the phone.

    என்று சொல்ல காரணம் என்ன ?
    Iraq live: India too late, send coffins for us now, say abducted nurses
    ‘Send coffins,’ Indian nurses say as ISIS moves them out of Tikrit – See more at: https://www.hindustantimes.com/…/article1-1236272.aspx… ///

    கண்ணியமோ கண்ணியம் !!!
    ஒருவேளை அது
    கன்னியமோ?
    குர்ஆனில் இது குறித்து என்ன சொல்லி இருக்கிறது?

  11. ஆடு நனைகின்றதே என்று ஓநாய் கவலைப்பட்டது போல் இங்கு பல ஓநாய்கள், அரிஜனங்கள் மீது கள்ள கரிசனம் காட்டுகின்றது.

  12. சுவனப்பிரியன்
    “இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிரிவு என்பது திராவிடன், ஆரியன், ஐரோப்பியன் என்ற இனத்திலான பிரிவுகளே! ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளானது பிறப்பினால் உருவாக்கப்படுகிறது. அதற்கு வேதங்களும் உபநிஷத்துகளும் துணை நிற்கின்றன. இந்த வேறுபாடுகளை புரிந்து கொள்ளுங்கள்”.
    பிரியரே ஆரியன் திராவிடன் என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் வளர்ப்பின் அடிப்படையிலாவருகின்றன. சரி இஸ்லாத்தில் எங்கே ஆரியன் திராவிடன் வருகிறது காட்ட்டுங்கள்.
    வேதத்திலும் உபனிடத்திலும் எங்கே சாதி பிறப்பின் அடிப்படையில் வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

  13. ஜெனாப் மீரான் சாஹிப்

    ஸ்வாமி வேதநிஷ்டானந்த ஸரஸ்வதி உங்கள் அல் தக்கியாவை
    https://tamilhindu.com/2014/07/dalit_islam/
    தகர்த்துள்ளார்.

    ம்…………..ஹதீஸ்களில் ஜாதி வித்யாசம் சொல்லப்பட்டுள்ளது. இல்லையென்று அல் தக்கியா செய்வீர்கள்?

  14. always muslims there no caste in kur-on but failed to remember hadiths. Even vedas of hindus donot have castes. kuron and hadiths both are mandatory for muslism. they cannot skip hadiths. because,hadiths only explains about way of worship, fasting, and manythings.

  15. As usual Mr சுவனப்பிரியன் chucks allegations of dreadful caste system in Hinduism and when pointed out with evidence about similar caste system in his beloved Islam, he runs away. Where are you Sir?

  16. நிச்சயமாக இஸ்லாத்தில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இதை என் சவுதி வாழ்வில் கண்கூடாக கண்டுள்ளேன். ஆனால் அந்த ஏற்ற தாழ்வுகளுக்கு சாதி என்ற பெயர் அங்கு கிடையாது. எனவே இஸ்லாத்தில் சாதி வித்யாசங்கள் கிடையாது என்று அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். அவர்கள் அதை குழுக்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை திருமணம் செய்வது குறைவுதான்.உதாரணமாக நம் ஊரில் மரைக்காயர் , பட்டாணி, லப்பை, ராவுத்தர் போன்ற பிரிவுகளில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை திருமணம் என்னும் நிக்காஹ் செய்வது குறைவு அல்லது அறவே இல்லை. அதே போல் சுன்னி முஸ்லிம்கள் , ஷியா முஸ்லிமை திருமணம் செய்வது கிடையாது. நான் சவுதியில் சந்தித்த பல ஹைதராபாதி நண்பர்கள் இந்த விஷயத்தில் மிக கண்டிப்பானவர்கள் . சவுதியில் வரும் பல மேட்ரிமோனி விளம்பரங்களில் இந்த வித்யாசங்களை கண்கூடாக காணலாம். சுன்னி முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக பல இந்திய ஹைதராபாதி முஸ்லிம்கள் பாகிஸ்தானிய முஸ்லிம்களை நிக்காஹ் செய்வதும் , நிக்காஹ் செய்ய தயாராக இருப்பதும் சவுதி நடைமுறையில் வெகு சகஜம். நாம் அறிந்தது சானிய மிர்சா ஒன்றுதான் ( அவர் பிரபலமாக இருந்த காரணத்தால் ).

    மற்றபடி தலித் ஹிந்துக்களுக்கு இந்திய காஷ்மீரில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கேள்விப்பட்டேன், அது நிஜமானால் தலித் சகோதரர்களுக்கு அந்த உரிமையை பெற்று தர தமிழக முஸ்லிம்கள் போராடலாம். ஏனென்றால் தோழர் திருமாவளவன் அதற்காக நிச்சயமாக குரல் கொடுக்க மாட்டார் என்பது வெள்ளிடைமடை.

    என்றெண்டும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

  17. ”/சாதிகளே இஸ்லாத்தில் இல்லை எனும் போது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்து மதத்தில் சாதிக் கொடுமை தாங்க முடியாமல்தான் ஒரு தலித் இஸ்லாத்தை நோக்கி வருகிறார். இங்கும் அதே சாதி முறையை பின் பற்றினால் அதற்கு இந்து மதத்திலேயே இருந்து கொள்ளலாம்./”- அப்படியா திரு .சுவனப்பிரியன் அவர்களே கருப்பாயி எனும் நூர் ஜஹான் என்றொரு நாவல் உண்மையை உரத்து சொல்கிறது. அனவர் எழுதி இருக்கிறார். வாய்ப்பும், புரிந்து கொள்ளும் சக்தியும், மனதும் இருந்தால் முயற்சித்து பாருங்கள்

  18. திரு ராஜ மாணிக்கம்!

    //”/சாதிகளே இஸ்லாத்தில் இல்லை எனும் போது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்து மதத்தில் சாதிக் கொடுமை தாங்க முடியாமல்தான் ஒரு தலித் இஸ்லாத்தை நோக்கி வருகிறார். இங்கும் அதே சாதி முறையை பின் பற்றினால் அதற்கு இந்து மதத்திலேயே இருந்து கொள்ளலாம்./”- அப்படியா திரு .சுவனப்பிரியன் அவர்களே கருப்பாயி எனும் நூர் ஜஹான் என்றொரு நாவல் உண்மையை உரத்து சொல்கிறது. அனவர் எழுதி இருக்கிறார். வாய்ப்பும், புரிந்து கொள்ளும் சக்தியும், மனதும் இருந்தால் முயற்சித்து பாருங்கள்//

    அன்வர் பால சிங்கம் என்பவர் எழுதிய கற்பனை கலந்த அந்த கதையை அந்த கிராமத்து மக்களே மறுக்கின்றனர். பிபிசி எடுத்த ஆவணப்படத்தை நான் தமிழில் ஆக்கமாக தந்துள்ளேன். அதனை படித்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

    ‘வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?’

    ‘எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை ‘முருகேஷா இங்க வாடா’ என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை ‘வாங்க அன்வர் அலி’ என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’

    நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.

    ‘அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்ட பெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள் வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீக முஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

    பேட்டியை முழுவதும் படிக்க….

    https://suvanappiriyan.blogspot.com/2014/05/blog-post_23.html

  19. Sp, congrats, Taqqya at it’s best. Lies after lies after lies. Obviously, you don’t want to pull your head out of sand. What about all the Muslim matrimonial columns? Ignoring this uncomfortable truths will not make them all disappear. Dalit when he converts to Islam or Christianity remains a Dalit. No hogwash from SP will change this.Can a Indian Muslim man marry a Saudi Muslim girl? Answer this SP and don’t disappear again.
    More reading for you
    https://www.anti-caste.org/muslim_question/caste/bhatty_article.html

  20. இந்தியன்!

    //Can a Indian Muslim man marry a Saudi Muslim girl? Answer this SP and don’t disappear again.//

    உங்கள் கேள்வி வித்தியாசமாக உள்ளது. சவுதியில் வெளிநாட்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள எந்த தடையும் இல்லை. பல திருமணங்கள் நடந்து அந்த ஆசிய நாட்டவரும் சவுதி குடியுரிமை பெற்றுள்ளனர். ஹைதரபாத், மற்றும் கேரள முஸ்லிம்கள் பலர் சவுதி பெண்களை மணந்து சந்தோஷமாக தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர்.

    குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ சவுதி அல்லது அரபு நாட்டு பெண்களோ, அல்லது ஆண்களோ ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய ஆண்களையோ பெண்களையோ மணப்பதற்கு எந்த தடையும் இல்லை.

    ஆனால் இது போன்ற திருமணங்கள் அதிகம் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் மொழி மற்றும் இனம் சார்ந்த வேறுபாடுகளே! ஆசிய கலாசாரத்துக்கும் , மொழிக்கும் அரபுகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. அரபு மொழியை நன்கு பேசத் தெரிந்தவர்களே இது போன்ற திருமணங்களுக்கு ஆசைப் படுவர். சென்ற மாதம் கூட மும்பையைச் சார்ந்த ஒரு இளைஞருக்கு சவுதி பெண்ணை மணமுடித்துக் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானிகளும் சவுதிகளும் திருமணம் செய்து கொள்வது ஆங்காங்கே அதிகம் நடந்து கொண்டிருக்கிறது.

    https://www.youtube.com/watch?v=j2KmF9JpAU8#t=52

    ஒரு சவுதி நாட்டு இளைஞன் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்துள்ளதை இந்த யுட்யூபில் பார்த்துக் கொள்ளுங்கள்.

    https://www.youtube.com/watch?v=tMtctM9LB44

    இந்திய முஸ்லிம் பெண் எகிப்திய அரபு இளைஞனை திருமணம் செய்து கொண்டுள்ளதை இந்த யூட்யூபில் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இவ்வளவு ஏன்? எனது சொந்த அத்தை மகள் ஒரு எகிப்து நாட்டு இளைஞரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு மலேசியாவில் சந்தோஷமாக தங்கள் வாழ்வை கொண்டு செல்கின்றனர். ஒரு தமிழச்சியையும், ஒரு அரபியனையும் மொழி இனம் கடந்து இணைத்துள்ளது இஸ்லாம். எனவே அரபுகளும் இந்தியர்களும் திருமணம் செய்து கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. அதிகம் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் மொழிப் பிரச்னையே தவிர சாதியோ, இனமோ காரணம் அல்ல.

    2011 ஆம் ஆண்டில் மட்டும் 988 சவுதி பெண்களும், 2640 சவுதி ஆண்களும் வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக சவுதி அரசின் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டு செல்கின்றனது. அரப் ந்யூஸ் கொடுத்துள்ள செய்தியையும் இதற்கு ஆதாரமாக தருகிறேன்.

    The number of Saudi women marrying citizens of other countries increased in 2011 compared to previous years, according to a Ministry of Justice report. The report showed that 1,988 Saudi women and 2,640 Saudi men married to foreigners last year. Most of the women were in Makkah, while Riyadh came second, Eastern Province third and Al-Baha with the least number of interracial marriage. Yemen nationals topped the list with 456 marriage contracts, followed by Kuwaitis with 351 contracts, then Qataris, Syrians, Emiratis, Egyptians, Lebanese and Pakistanis. Dr. Tawfiq Al-Suwailem of Awaser Society shared his views to Arab News on the topic.

    https://www.arabnews.com/more-saudi-women-married-non-saudis-2011

  21. சுவனப்ரியன் அவர்களே, சவுதி கிழ ஆண்கள் தங்கள் மூன்றாவது, அல்லது நான்காவது மனைவியாக 13 அல்லது 15 வயது ஹைதராபாத் முஸ்லிம் சிறுமிகளையோ அல்லது கேரள முஸ்லிம் சிறுமிகளையோ மூட்டுத் திருமணம் செய்வது பன்னெடுங்காலமாய் நடைபெற்றுகொண்டிருப்பதுதான்.. இது வெட்கப்பட வேண்டிய விஷயம், இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது. அப்படி திருமணம் செய்த பெண்களுக்கும், அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் இன்னும் சவுதி குடிவுரிமை மறுக்கப் படுகிறது என்பதை ஏன் மறைக்கிறிர்கள்?.

    மற்றபடி மதம் மாறிய ஒரு தமிழக முஸ்லிம் ஒரு சவுதி சுன்னி பிரிவு பெண்ணை திருமணம் என்னும் நிக்காஹ் செய்திருந்தால், அந்த விஷயங்களை தெரியப்படுத்தினால் நான் நிஜமாகவே சந்தோஷப்படுவேன் . மேலும் உங்களுக்கு ஒரு கேள்வி ஒரு மனிதன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறி வந்தால் அவரை எந்த பிரிவு மனிதராக ஏற்று கொள்வீர்கள். ஷியாவாகவா? , சுன்னியாகவா?, அஹ்மதியாகவா?, .அல்லது உட்பிரிவுகளான ராவுத்தராகவா?. மறைக்காயராகவா ?, பட்டாணியாகவா? லப்பையாகவா?.

    என்றெண்டும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

  22. முரளி தரன்.
    //ஒரு கேள்வி ஒரு மனிதன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறி வந்தால் அவரை எந்த பிரிவு மனிதராக ஏற்று கொள்வீர்கள். ஷியாவாகவா? , சுன்னியாகவா?, அஹ்மதியாகவா?, .அல்லது உட்பிரிவுகளான ராவுத்தராகவா?. மரைக்காயராகவா ?, பட்டாணியாகவா? லப்பையாகவா?. //

    நேற்று எப்படியோ இன்று அவனை போராளியாக (!?!..) ஏற்றுக்கொண்டு ஈராக் புனித பயணம் அனுப்புவார்கள் 🙂

  23. திரு முரளிதரன்!

    //மேலும் உங்களுக்கு ஒரு கேள்வி ஒரு மனிதன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறி வந்தால் அவரை எந்த பிரிவு மனிதராக ஏற்று கொள்வீர்கள். ஷியாவாகவா? , சுன்னியாகவா?, அஹ்மதியாகவா?, .அல்லது உட்பிரிவுகளான ராவுத்தராகவா?. மறைக்காயராகவா ?, பட்டாணியாகவா? லப்பையாகவா?.
    என்றெண்டும் அன்புடன்,
    பா. முரளி தரன்.//

    குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பிலும் வந்து வெகு நாட்களாகிறது. குர்ஆனின் சட்டங்கள் தான் ஒரு முஸ்லிமைக் கட்டுப்படுத்தும். அந்த குர்ஆன் முழுக்க நீங்கள் தேடினாலும் அதில் ஷியா, என்றோ, சுன்னிகள் என்றோ, ராவுத்தர் என்றோ, பட்டாணி என்றோ ஒரு வார்த்தையையும் பார்க்க முடியாது. ஏனெனில் முகமது நபிக்கு அருளப்பட்ட இந்த வேதத்தில் அன்றைய சமூகத்தில் இது போன்ற எந்த பிரிவுகளும் இல்லை. அனைவரும் இஸ்லாமியர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவர்.

    இஸ்லாத்தின் வளர்ச்சியை அரபு நாடுகளில் தடுக்க நினைத்த யூதர்கள் முஸ்லிம்களாக மதம் மாறுவதாக நடித்து அன்றைய ஈராக்கில் பல வதந்திகளை பரப்பி விட்டனர். ஊடக வசதி இல்லாத அந்த காலத்தில் எகிப்திலிருந்து வந்த ஒரு யூத குழு இஸ்லாமிய போர்வையில் பல குழப்பங்களை ஏற்படுத்தினர். இதற்கு நமது நாட்டு பார்பனர்களும் அன்று உடந்தையாக இருந்தனர். ‘ஹுசைனி பிராமணர்கள்’ என்று இன்றும் அறியப்படுபவர்கள் அவர்கள். இந்த கூட்டு சதியினால் உருவானதே ஷியா என்ற பிரிவு. ஷியா பிரிவு முஸ்லிம்களை சுப்ரமணியம் சுவாமி வானளாவப் புகழ்வதும் இதற்காகத்தான். பிற்கால முஸ்லிம்களும் அந்த மாய வலையில் அறியாமையால் வீழ்ந்து விட்டனர்.

    எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர் இஸ்லாமியர் என்றுதான் பார்க்கப்படுவார். நீங்கள் குறிப்பிடும் எந்த பிரிவுகளிலும் வர மாட்டார். உங்களுக்கு பரிச்சயமான ஏ ஆர் ரஹ்மனோ, யுவன் சங்கர் ராஜாவோ, நடிகை மோனிகாவோ, பெரியார் தாசனோ முஸ்லிம்களாகத்தான் அறியப்படுகின்றனர். நீங்கள் குறிப்பிட்ட எந்த பிரிவுகளிலும் அவர்கள் இல்லை. ஏனெனில் குர்ஆன் பிரிவுகளை அங்கீகரிக்கவில்லை.

  24. சவூதி பெண் ஒருத்தி இந்திய இளைஞனை (அதாவது ஆந்திராவை சேர்ந்தவர்) இந்தியாவுக்கு ஓடி வந்து மணந்து கொண்டார். அவர் சவூதியில் இருந்து தப்பி வந்துதான் இங்கு திருமணம் செய்துகொண்டார். இது அனைத்து செய்தி தாள்களிலும் படித்தோம். பாவம், சுவனப்பிரியன், ஏதோதோ உளறுகிறார். ஷியாக்களை தினசரி கொல்லுவதை நியாயப்படுத்தும் இவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும் ? மனித தன்மையே இல்லாத வஹாபி தீவிரவாத வெறியர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

    உலகில் பல நாடுகளிலும் கலப்பு திருமணங்கள் ஏராளம் நடந்துவருகிறது. அது கிறித்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர் என்று அனைத்து தரப்பிலும் உள்ளது. ஏதோ புதுமையாக இஸ்லாமியர்களிடையே மட்டும் நடப்பது போல புனைந்து கூறுகிறார். இது தவறு. இஸ்லாமியர்கள் பிற மதத்தவரை மணந்து கொள்ளும்போது, மதமாற்றம் செய்தே மனக்கின்றனர். அதுதான் தவறு. உண்மையான காதல் திருமணங்கள் என்றால் மதமாற்றம் இன்றி நடைபெறவேண்டும். மத வெறியர்களுக்கு எப்படிப் புரியும் ?

  25. ஜனாப் சுவனப்பிரியன்,

    “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி!” என்று ஒரு பழமொழி உண்டு.

    // இதற்கு நமது நாட்டு பார்பனர்களும் அன்று உடந்தையாக இருந்தனர். ‘ஹுசைனி பிராமணர்கள்’ என்று இன்றும் அறியப்படுபவர்கள் அவர்கள். இந்த கூட்டு சதியினால் உருவானதே ஷியா என்ற பிரிவு. //

    இதைப் படித்ததும் அந்தப் பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முஸ்லிம் ஆனாலும், brahmin baitingதான் எந்தக் கருத்தைச் சொல்வதற்கும் வசதியாக இருக்கும் போலிருக்கிறது. ஆக, ஈரானில் (persia, பாரசீகம்) உள்ள ஷியா இஸ்லாமியர்களை உருவாக்கியவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் என்ற வரலாற்று உண்மையைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!

    வணக்கம்.

  26. @svana
    Many times,all muslim scholars clearly said kur-on and hadiths both are important for muslims. you act not to hide this. arab muslims people driven out jews from from arab land and play victim hood.
    nowadays, all people read history in correct angle. you here also drag brahmins of hindu society. How dare you link brahmins with arab land. we also known islam knows sects. there are 72 sects in Islam.
    In tamil nadu, people are naive about islam because muslims are very less but other states people known very well about islam. read newageislam.

  27. /இஸ்லாத்தின் வளர்ச்சியை அரபு நாடுகளில் தடுக்க நினைத்த யூதர்கள் முஸ்லிம்களாக மதம் மாறுவதாக நடித்து அன்றைய ஈராக்கில் பல வதந்திகளை பரப்பி விட்டனர். ஊடக வசதி இல்லாத அந்த காலத்தில் எகிப்திலிருந்து வந்த ஒரு யூத குழு இஸ்லாமிய போர்வையில் பல குழப்பங்களை ஏற்படுத்தினர். இதற்கு நமது நாட்டு பார்பனர்களும் அன்று உடந்தையாக இருந்தனர். ‘ஹுசைனி பிராமணர்கள்’ என்று இன்றும் அறியப்படுபவர்கள் அவர்கள். இந்த கூட்டு சதியினால் உருவானதே ஷியா என்ற பிரிவு. ஷியா பிரிவு முஸ்லிம்களை சுப்ரமணியம் சுவாமி வானளாவப் புகழ்வதும் இதற்காகத்தான். பிற்கால முஸ்லிம்களும் அந்த மாய வலையில் அறியாமையால் வீழ்ந்து விட்டனர். //

    NABITTOM.. approam Next????

  28. வரலாறு தெரியாதவர்களை ஏமாற்றி உளறுவதே சுவனப்பிரியனுக்கு தொழிலாக இருக்கிறது.இஸ்லாத்தில் இருந்த பல குரான்களைப் பார்த்து பயந்து, ஒரு கலிபா ஒன்றே ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றக் குரான்களை அழித்துவிட உத்தரவிட்டார். மேலும் காலிப் உத்மான் காலத்தில் அழிக்கப்பட்ட அந்த குரான்களில் என்ன இருந்தது என்பது இன்றைய சாதாரண முஸ்லீம்களுக்கு ஒன்றும் தெரியாது.

    ஷியா , சன்னி என்ற பிரிவினைகளுக்கு அடிப்படையாக அமைந்தது காலிபாக்கள் வரிசையில் யார் முதல் காலிபா என்பதுதான். முஹம்மதின் மாப்பிள்ளை ஆன திரு அலி அவர்களைத்தான் முதல் காலிபாவாக ஷியாக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அலி அவர்களை சந்நிக்கள் நாலாவது காலிபாவாக மட்டுமே ஏற்கின்றனர்.

    யார் காலிபா என்பதற்கு அவர்கள் போரிட்டு செத்துமடிந்த வரலாறு எல்லாம் உலகம் முழுவதும் தெரியும். அது சரி விடுங்கள், சுவனப்பிரியன் அவர்களே, உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஷியாக்களின் புதைகாட்டை , அபகரித்த சன்னி முஸ்லீம்கள், ஷியாக்களிடமே புதைகாட்டை திருப்பிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி உளறுங்கள்.

    இஸ்லாத்தில் பிரிவினை ஏற்பட்டதற்கு இந்தியாவில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த எந்த பிரிவினரும் காரணமல்ல. நீங்கள் யோக்கியராக இருந்தால், சுப்பிரமணிய சாமி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயலுங்கள் . அதனை விடுத்து அவரை சாதி அடிப்படையில் குற்றம் சாட்டுவது, உங்கள் தரப்பில் நியாயம் இல்லை என்பதை தான் காட்டுகிறது.

  29. அத்விகா
    சன்னி என்ற பிரிவினைகளுக்கு அடிப்படையாக அமைந்தது காலிபாக்கள் வரிசையில் யார் முதல் காலிபா என்பதுதான் என்பதை சுவனப்பிரியனுக்கு மார்ற தெரியதா என்ன ? அந்த காலிபா சண்டையை கொண்டு வந்ததே சொழவந்தான் சுவாமி வோட கொல்லு தாத்தா என்று மாற்றினால் போயிற்ரு

  30. ஜெனாப் சுவனப்ஸ்ரியன் எப்போதிருந்து இஸ்லாம் பற்றி ஹாஸ்யமாக எழுதப்புகுந்தீர்கள் 🙂

    நீங்கள் வஹாபி என்றால் பரேல்வி சுன்னி இஸ்லாம் பற்றி என்ன வேண்டுமானாலும் கதைக்கலாம். அல்லது தேவ்பந்தி சுன்னி இஸ்லாம் பற்றி என்ன வேண்டுமானாலும் கதைக்கலாம். அல்லது ஷியா பிரிவு பற்றி என்ன வேண்டுமானாலும் கதைக்கலாம் என்பது முறையான கருத்துப்பரிவர்த்தனத்தில் அமையாது. அது இஸ்லாமியர் – ஹிந்துக்களின் மத்தியிலாகட்டும். அல்லது இஸ்லாத்தின் பலபலப்பல பிரிவினரிடையே நிகழும் ஒரு சம்வாதமாகட்டும்.

    \\\ இதற்கு நமது நாட்டு பார்பனர்களும் அன்று உடந்தையாக இருந்தனர். ‘ஹுசைனி பிராமணர்கள்’ என்று இன்றும் அறியப்படுபவர்கள் அவர்கள். இந்த கூட்டு சதியினால் உருவானதே ஷியா என்ற பிரிவு. ஷியா பிரிவு முஸ்லிம்களை சுப்ரமணியம் சுவாமி வானளாவப் புகழ்வதும் இதற்காகத்தான். \\\

    இதை வாசித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த மாதிரி பப்பரப்பா சமாசாரங்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள். ஸாகிர்நாயக்? தெஹல்கா? கூகுள் சர்ச்?

    டாக்டர் சுப்ரமண்ய ஸ்வாமி மீது நீங்கள் வேறு ஏதாவது குற்றச்சாட்டு அடுக்கினீர்கள் என்றால் ஒரு பேச்சுக்கு சரியா தப்பா என்றாவது பார்க்கப்படும்.

    அவர் ஜாதியவாதி என்று நீங்கள் அடித்து விடுவது உங்களுக்கே தமாஷாகத் தோன்றவில்லை.

    அவருடைய தர்மபத்னி ஸ்ரீமதி ரோக்ஸ்னா ஸ்வாமி ஃபார்ஸி மதத்தைச் சார்ந்தவர். அவருடைய ஒரு மகளான ஸ்ரீமதி சுஹாஸினி ஹைதர் முன்னாள் வெளியுறத்துறை மந்த்ரி ஜெனாப் ஸல்மான் ஹைதர் அவர்களின் மகனை மணந்தவர் 🙂

    \\ எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர் இஸ்லாமியர் என்றுதான் பார்க்கப்படுவார். நீங்கள் குறிப்பிடும் எந்த பிரிவுகளிலும் வர மாட்டார். \\

    தப்பு. அவரை இஸ்லாத்துக்கு பித்தலாட்ட முறையில் புள்ளை பிடிக்க எந்த கும்பல் முயற்சி செய்தது என்பதில் விஷயம் அடங்கியுள்ளது. எந்த கும்பல் அப்படி பிள்ளை பிடித்ததோ அந்த கும்பலைச் சார்ந்தவராக ஆகிவிடுவார். பொதுப்படையாக ஒப்புக்கு அவர் இஸ்லாமியர் என்று சொல்லிக்கொள்ளலாம்.

    திலீப் (ஏ.ஆர். ரெஹ்மான்) உங்களுக்கு ஒத்து வராத ஆனால் பரேல்வி சுன்னி முஸல்மாணியருக்கு ஒத்து வரும் தர்காஹ் ஷெரீஃப் வழிபாடுகளில் ஈடுபடுகிறார்.

    ஜெனாப் – ஏ – அலி ——- புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் உலகம் பல வண்ணப்பூக்களால் ஆனது. ஓரிறைக் கொள்கை என்பது பெயரளவில் மட்டும் தான் சாத்யம். மனிதனுக்கு இருக்கும் அறிவை உபயோகிக்க ஆரம்பிக்கும் போது அது பல பரிமாணங்களை அடைகிறது. ஆப்ரஹாமியத்தின் அனைத்துப் பிரிவுகளான யஹூதிய, க்றைஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதற்கு விதிவிலக்கல்ல.

  31. “அந்த வெளிநாடு வாழ் இந்திய முஸ்லிமுக்கு” முஸ்லிம் என்றால் யோக்கியர்கள் இந்துக்கள் என்றால் அனைவரும் ஒட்டுமொத்தமாக அயோக்கியர்கள் என்று வீண் நினைப்பு.

    1) பெங்களூர் Fraser Town கற்பழிப்பு வழக்கில் நசீர் ஹைதர். Atiq , Imtiaz ஆகிய 3 முஸ்லிம்கள் வியாழனன்று (அதாவது நேற்று) கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 22 வயது கொண்ட கற்பழிப்புக்கு பலியான பெண் கொடுத்த புகாரை பதிய மறுத்த “முஸ்லிம் இன்ஸ்பெக்டர்” முஹமது ரபிக் என்பவர் suspend செய்யப்பட்டுள்ளார். பார்த்தீர்களா சகோதரர்களே!! கற்பழித்தவர் முஸ்லிம்கள் என்றதும் அதை ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர் அவர்கள் மீதான புகாரை பதிய மறுத்திருக்கிறார். இவர்களின் எண்ணிக்கை போலீஸ் துறையில் அதிகமானால் என்னாகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். அது சரி கற்பழிப்பு குற்றத்திற்கு குர்ஆனில் என்ன தண்டனை?

    2. சென்னை கொளத்தூரை சேர்ந்த அல்டாப் ஹுசைன் (28) என்பவர் ஒரு உநானி மருத்துவர். அவர் புதுபேட்டையில் நாராயண நாயக்கர் தெருவில் கிளினிக் வைத்து நடத்துகிறார்.இவரிடம் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற 22 வயது பெண்ணை sexual abuse செய்தார் என்று நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நடந்துள்ளார். இதுபோல ஏற்கனவே வேப்பேரியில் ஒரு பெண்ணிடமும் இது போல நடந்துள்ளார். ஆகவே இவர் செய்துள்ள இந்த குற்றம் முதல் முறையாக செய்யவில்லை. இது ஒரு தொடர்கதை. இந்த குற்றத்திற்கு குர்ஆனில் என்ன தண்டனை?

    3) பாகிஸ்தானில் வடக்கு waziristan tribal area வில் வாழ்ந்து வரும் Gulzar Khan (54) என்பவர் 3 மனைவிகளை மணந்து 36 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.(ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு டசன் பிள்ளைகள்) அந்த அல்லா குரானில் அனுமதித்துள்ளது போல இன்னொரு மனைவியை திருமணம் செய்ய இப்போது ஏற்பாடு செய்து வருகிறாராம்! அவரை மணந்து அவருக்கு 1 டசன் குழந்தை கொடுத்தால் மொத்தம் 48 குழந்தைகள் ஆகும். மனைவிகளுக்கு வரம்பு (cap ) விதித்த அல்லா குழந்தைகளுக்கு வரம்பு விதிக்க வில்லையோ?

    4) முகமது ஷரிப் (31) என்பவர் 58 ஸ்டார் ஆமைகளை இந்தோனேசியாவிற்கு கடத்தி செல்ல முயற்சி செய்தபோது International Airport ல் கைது செய்யபட்டார். கடத்தல் குற்றத்திற்கு குர்ஆனில் என்ன தண்டனை?

    5) மும்பையில் ஒரு 18 வயது டெலிபோன் operator ஐ கற்பழித்த குற்றத்திற்காக Ashfaque Sheikh
    மற்றும் சிராஜ் ரெஹ்மான் ஆகிய இருவருக்கும் life imprisionment வழங்கப்பட்டது.

    6) 22 வயது photojournalist ஐ கற்பழித்த குற்றத்திற்காக Fast track court 3 குற்றவாளிகளுக்கு அதாவது காசிம் பெங்காலி (21), முஹமது சலீம் அன்சாரி (28) மற்றும் விஜய் ஜாதவ் (19) ஆகிய மூவருக்கு capital punishment விதித்து உத்திரவிட்டது.

    முஸ்லிம்கள் நல்லவர்களா? யோக்கியர்களா? கூறுங்கள்.

  32. ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,

    உயர்திரு தாயுமானவன் அவர்கள் உங்களிடம் நான் எதைப்பற்றியும் கேட்பது, ஜனநாயக உரிமை என்று எழுதி இருந்தார்.

    நான் எந்த சமயத்தை பற்றியும் அவதூறு கூற விரும்பவில்லை. எல்லாச் சமயங்களும் இறைவனை அடைவதற்கான வழிகள் என்றும், வழியைத் தேர்ந்தெடுப்பது தனி மனித உரிமை என்றும், கட்டாயப் படுத்துவதோ, ஒரு வழி சிறந்தது, இன்னொரு வழி தவறானது என்பதோ எனக்கு உடன்பாடில்லை.

    ஆகவே, நான் கேட்கப்போவது, சமயத்தைப் பற்றிய கேள்வி அல்ல. ஒரு உலக நிகழ்ச்சியைப் பற்றி, ஒரு இஸ்லாமிய அமைப்பைப் பற்றி உங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

    இன்று CNN செய்தியில் ஒன்று சொல்லப்பட்டது.
    கீழ்கக்ண்ட வலையத்தில் முழுச் செய்தியையும் அறியலாம்.
    ISIS threatens Iraqi Christians in Mosul: Convert, pay taxes or die
    https://www.cnn.com/2014/07/18/world/meast/iraq-isis-christians-threatened/index.html?hpt=hp_bn2

    ஈராக் நாட்டின் வட எல்லையில் இருக்கும் மோசூல் என்ற நகரை ISIS என்ற இஸ்லாமிய இயக்கம் கைப்பற்றி உள்ளது. அங்கு உள்ள கிறித்தவர்களுக்கு ISIS அமைப்பு ஒரு இறுதி எச்சரிக்கை செய்துள்ளது. அந்த எச்சரிக்கை இதுதான்:

    1. அங்கு இருக்கும் கிறித்தவர்கள் இஸ்லாம் சமயத்தைத் தழுவ வேண்டும். அதிகப்படியான வரியையும் ஷாரியா நீதிமன்றங்களுக்குக் கட்ட வேண்டும்.
    2. இல்லாவிட்டால் மோசூல் நகரத்தைவிட்டு வெளியேறவேண்டும்.
    3. மேற்கொண்ட இரண்டில் ஒன்றை, ஒரு நாளுக்குள் செய்யாவிட்டால் வாளுக்குப் பதில் சொல்லவேண்டும் (will have to answer the sword),

    1. “வன்முறையே வரலாறாய்” என்ற வரலாற்றுக் கட்டுரையை — ஜனாப், நீங்கள் மருதளித்தீர்கள். இஸ்லாமியர்கள் கத்தி முனையில் மதமாற்றம் செய்யவில்லை என்றீர்கள்.
    2. மேற்கண்ட செய்தி பற்றி உங்கள் கருத்து என்ன?
    3. வரலாறு தொடர்கிறதா?
    4. அருள்கூர்ந்து அவர்கள் இஸ்லாமின் வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறாதீர்கள்.
    5. உங்கள் வலையத்தில் ISIS அமைப்பின் செயலைக் கண்டனம் செய்யுங்கள் என்று முஸ்லிம் உடன்பிறப்பான உங்களை, இந்து உடன்பிறப்பாக — மத நல்லிணக்கத்தைக் குறிக்கோளாகக்கொண்டு — தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். ஒரு இந்துவோ, கிறித்தவரோ ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் இந்தப் போக்கைக் கண்டனம் செய்வதை விட, அமைதி மார்க்கமான இஸ்லாமைத் தழுவி நிற்கும், சமயப் பற்றுள்ள நீங்கள் கண்டம் செய்வது, அதுவும் உங்கள் இணையத்தில் கண்டனம் செய்வது, உங்கள் மீது இருக்கும் மதிப்பை உயர்த்தும் என்று உறுதியாக நம்புகிறேன்.
    6. தயவுசெய்து, இஸ்ரேல்-பாலஸ்தீனிய சண்டையைப் பற்றி எழுதாதீர்கள். அங்கும் சமரசமும், சமய நல்லிணக்கமும் நிலவவேண்டும்,என்றுதான் விரும்புகிறேன். வன்முறையால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண இயலாது என்பதே எனது கருத்து.

    இந்த உள்ளீட்டத்தைப் படிக்கும் மற்ற இந்து, கிறித்தவ உடன்பிறப்புகளுக்கு ஒரு வேண்டுகோள். ஜனாப் சுவனப்பிரியன் தனது கருத்தைச் சொல்லும்வரை, அமைதி காக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    வணக்கம்.

  33. திரு அரிசோனன்!

    //1. “வன்முறையே வரலாறாய்” என்ற வரலாற்றுக் கட்டுரையை — ஜனாப், நீங்கள் மருதளித்தீர்கள். இஸ்லாமியர்கள் கத்தி முனையில் மதமாற்றம் செய்யவில்லை என்றீர்கள்.
    2. மேற்கண்ட செய்தி பற்றி உங்கள் கருத்து என்ன?//

    இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது இஸ்லாமிய நடைமுறை அல்ல. ஏனெனில் இஸ்லாத்தில் கட்டாய மத மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. முகமது நபிக்கு பணிவிடை செய்த ஒரு யூத சிறுவன் ‘நான் இஸ்லாத்துக்கு செல்லட்டுமா?’ என்று தனது தந்தையிடம் கேட்கிறான். ‘முகமது நபியின் மார்க்கத்தில் இணைந்து கொள்’ என்று அந்த சிறுவனின் தந்தை அனுமதியளிக்கிறார். அதன் பிறகுதான் அந்த சிறுவன் இஸ்லாத்தை ஏற்கிறான். அந்த நேரம் நபிகள் நாயகம் அவர்கள் முழு அரபுலகத்துக்கும் சக்கரவர்த்தியாக இருந்த நேரம். அந்த சிறுவனைக் கூட நபி அவர்கள் கட்டாயப்படுத்தாமல் அவனது விருப்பத்துக்கு விடுகிறார்கள்.

    ஈராக்கின் செய்தி ஸ்தாபனங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு உலக ஆதரவு பெருகி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. எனவே உண்மை செய்தி வெளி வரும் வரை நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. சிஎன்என் கூறும் செய்தி உண்மையானால் அந்த ஈராக்கிய போராளிகள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்றுதான் அர்த்தம். ஈராக்கின் உண்மையான நிலவரம் என்ன என்பது இன்னும் நமக்கு அறிய வரவில்லை.

    அடுத்து தற்போது இஸ்ரேல் கோழைத் தனமாக பாலஸ்தீன அப்பாவி சிவிலியன்களை இலக்காக்கி ஏவுகணைகளை வீசி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் இறந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல கிறித்தவ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிலி என்ற கிறித்தவ நாடு இஸ்ரேலுடனான தொடர்புகளை முற்றாக நிறுத்தி விட்டது. மும்பை ஹோட்டல்கள் அனைத்தும் இஸ்ரேலிய பொருள்களை பயன் படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. அரபு நாடுகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்ந்தால் இஸ்ரேலின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடையும் என்று இஸ்ரேலிய அமைச்சரே வருத்தப்பட்டு பேட்டி கொடுத்துள்ளார். எனவே கிறித்தவ நாடுகளின் கவனத்தை திசை திருப்ப ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் வீண் பழி சுமத்துவதாகவே நான் நினைக்கிறேன். பிபிசியிலோ, அல்ஜஜீராவிலோ இந்த செய்திகள் எதனையும் நான் பார்க்கவில்லை.

    அதே நேரம் நமது நாட்டு செவிலியர்கள் கொடுத்த பேட்டியையும் நாம் புறம் தள்ள முடியாது. ‘நாங்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை தெரிந்து கொண்டு அந்த போராளிகள் நோன்பிருந்தாலும் எங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தனர். எங்களை சகோதரிகள் என்றே அழைத்தனர். எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினர்’ என்று கேரள செவிலியர்கள் நமது தொலைக் காட்சிக்கு கொடுத்த பேட்டியை நீங்கள் பார்க்கவில்லையா? இவ்வளவு பரந்த மனம் உடைய அந்த போராளிகள் இவ்வாறு தனது நாட்டு கிறித்தவர்களோடு நடப்பார்கள் என்று நம்மால் நம்ப முடிகிறதா? எனவே முன்பு போல் அவசரப்படாதீர்கள். சற்று பொறுமையாக இருப்போம். உண்மை இரண்டொரு நாளில் வெளி வரும். சிஎன்என் சொல்வது உண்மையாக இருந்தால் அந்த இயக்கத்தை எதிர்க்கும் முதல் ஆள் நானாகவே இருப்பேன்.

  34. /////எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினர் — இவ்வளவு பரந்த மனம் உடைய அந்த போராளிகள் இவ்வாறு தனது நாட்டு கிறித்தவர்களோடு நடப்பார்கள் என்று நம்மால் நம்ப முடிகிறதா? ////////

    “” போகோ ஹராம்”” என்ற இயக்கத்தை சேர்ந்தவர்களும் முஸ்லிம்கள்தானே? அவர்கள் கடத்தி வந்த அந்த 320 பள்ளி மாணவிகளிடம்கண்ணியமாகவா நடந்து கொண்டனர்? அந்த பள்ளி மாணவிகளில் சில பேர் கிறிஸ்தவர்கள். அவர்கள் (இவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து) முஸ்லிம்களாக மாறி கையில் குரானை வைத்து படித்து கொண்டிருக்கும் படம் செய்திதாள்களில் வந்ததை பார்க்கவில்லையா? படிக்கவில்லையா? அந்த பனிகள் இஸ்லாமை விரும்பி ஏற்றுக்கொண்டு (பள்ளி பாடங்கள் இனி வேண்டாம் என்று) குரானை விரும்பி படிக்கிறார்களா?

    //////சிஎன்என் கூறும் செய்தி உண்மையானால் அந்த ஈராக்கிய போராளிகள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்றுதான் அர்த்தம்////// இஸ்லாமிய பேரரசை அமைக்க பாடுபடும் அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்றால் யாராவது நம்புவார்களா? இவர்களை பொருத்தவரை யாராவது தவறாக நடந்தால் அவர்கள் இஸ்லாத்தில் இல்லை என்பார்கள். யாராவது தவறாக பேசினால் அவர்கள் “முஸ்லிம் பெயர் தாங்கிகள்” என்று கூறி தப்பித்து கொள்வது. ஹரே அல்லா!

    இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் நடைபெறும் “”தற்போதைய”” சண்டைக்கு முதல் காரணம் யார்? முதலில் இவர்கள் அவர்களை தாகினார்களா? அல்லது அவர்கள் இவர்களை முதலில் தாக்கினார்களா? இவன் அவனை ஒரு அடி அடித்ததால் அவன் இப்போது இவனை 9 அடி அடிக்கிறான். கொழுத்துபோய் ஒரு அடி அடித்தவன் வாங்கி கொள்ளத்தான் வேண்டும். வேறு வழி? இஸ்ரேல்காரர்கள் அப்பாவி சிவிலியன்களை கொல்கிறார்கள் என்று ரொம்ப வருத்தபடுகிறார். ஐயோ பாவம்! . ஒசாமா பின் லேடன் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை விமானம் கொண்டு தாக்கியபோது அங்கும் சிவிலியன்கல்தான் இறந்தனர். அப்போது அதைப்பற்றி நினைத்து வருந்தவில்லையே! ஏனென்றால் இறந்தவன் கிறிஸ்தவன் தானே! செத்து தொலையட்டும் என்ற எண்ணம்.

    ////அந்த சிறுவனைக் கூட நபி அவர்கள் கட்டாயப்படுத்தாமல் அவனது விருப்பத்துக்கு விடுகிறார்கள்.//// 1400 வருடங்களுக்கு முன்னாடி நடந்தது எல்லாம் உண்மையா அல்லது பொய்யா என்று சரி பார்க்க வழியில்லை அதில் சில பொய்யுமிருக்கும் மெய்யும் இருக்கும். இன்று நம் கண் முன்னாடி நடப்பதற்கு பதில் சொல் என்றால் அன்று இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று கதை விடவேண்டாம். அது சரி, நபிகள் காலத்தில் மசூதியில் மைக் செட் வைத்துதான் பாங்கு (=தொழுகை அழைப்பு) நடந்ததா? ஆனால் இப்போது நடக்கிறதே? இப்போது காலம் எவ்வளவோ மாறிபோச்சு. உலகத்தை இஸ்லாம் மயமாக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு வெறி ஏறிபோச்சு.

    மும்பை ஹோட்டல்களில் இனி இஸ்ரேலிய பொருட்களை வாங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளன என்று கூறுகிறார். இந்த மும்பைகாரர்கள் இந்திய சிபாய்களின் தலைகளை பாகிஸ்தான்காரன் கொய்து சென்றபோது எங்கே போயிருந்தார்கள்?

    விலாசமில்லாத ஒரு நடிகை இஸ்லாம் மாறியதை ஒரு பெரிய உலக அதிசய நிகழ்வாக கூறினார் இந்த நபர். சமீபத்தில்கூட ஒரு இயக்குனர் (விஜய் – இந்து) அமலா பால் என்ற கிறிஸ்தவ நடிகையை இந்து மத சம்பிராதயபடி மணந்தார். இதற்காக இந்துக்கள் ஆஹோ ஓஹோ என்று குதித்து கூத்தடித்தார்களா? இந்த “HEAVEN BUFF ” இந்த தளத்தில் அடிக்கிற கூத்து தாங்க முடியலடா சாமி

  35. ஜனாப் சுவனப்பிரியன்,

    நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் திசை திருப்புகிறீர்கள்? என்னைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டீர்கள்!

    இனி நான் உங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்டு என் நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. ஏனென்றால், நீங்கள் விரும்பாததை, அது உண்மையாக இருந்தாலும், நம்ப மறுக்கிறீர்கள். அது பொய் என்று விதண்டாவாதம் செய்கிறீர்கள்.
    உங்களுக்கு நான் ஏன் பொய்யான செய்தியைக் கூற வேண்டும்?

    எனது இந்து, கிறித்தவ நண்பர்களே, ஜனாப் சுவனப்பிரியன் அவர்களிடமிருந்து பதில் வரும்வரை அமைதி காத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி.

    வணக்கம்.

  36. உயர்திரு தாயுமானவன் அவர்களே,

    ஜனாப் சுவனப்பிரியனிடம் கேள்வி கேட்பதால் எந்தப் பலனுமில்லை என்பதை உணரமைத்தமைக்கு மிக்க நன்றி!

    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஓம் நமச்சிவாய!!!

  37. Will any Indian woman(abducted & released nurses) will openly say what really happened in their abduction and during their captivity. ?

  38. ஜெனாப் சுவனப்ரியன், காமெடி ட்ராக்கை விட்டு வெளியே வரவே கூடாது என்று முடிவு செய்து விட்டீர்கள் போலும்.

    \\ இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது இஸ்லாமிய நடைமுறை அல்ல. \\

    ஜெனாப் எம்.ஏ.கான் சாஹேப் அவர்கள் தாங்கள் கதை திரித்தது போன்று கைர் ஹனாஃபி வஹாபி பயங்கரவாத இஸ்லாம் மட்டுமே இஸ்லாம் மற்றைய இஸ்லாமியர்கள் எல்லாம் இஸ்லாமியர்களே அல்ல …………. ரீதியில்………

    சித்தாந்த சரடுகள்……….. அல்லது…….

    ஷியாக்கள் என்பவர்கள் ஹுஸைனி ப்ராம்மணர்கள்…………. என்ற ரீதியில் திகில் கதைகளை பரப்பவில்லையே…………

    அவர் முற்று முழுதாக சரித்ர ஆதாரங்களை சான்றாக வைத்து ……….. நீள ஒரு பட்டியல் கூட கொடுத்திருக்கிறார்……. ஹிந்துஸ்தானத்தில் மொகலாயர்கள் எழுதிய சரித்ர ஆவணங்களைப் பற்றி…………

    இது உண்மையாக இருந்தால்………. என்று அடித்து விடக்கூடாது……….

    உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்று சொல்லியிருந்தீர்கள். மருவனமாகிய அரேபிய தேசத்தில் வாழ்ந்து வரும் படிக்கு அரபி, ஃபார்ஸி பாஷைகளையும் வாசித்திருப்பீர்கள். மொகலாயர்களின் சரித்ர ஆவணங்களை வாசித்தறிந்து கான் சாஹேப் பகிர்ந்த விஷயங்களில் எங்கு சரித்ரம் உள்ளபடி பகிரப்படவில்லை என்று சொல்வது நேர்மையின் பாற்பட்ட விஷயம்.

    முன்னம் கூட உங்களுக்கு இது சம்பந்தமாக சவால் விடுத்திருந்தேன். நேர்மையான செயல்பாட்டில் ஏன் செல்ல மறுக்கிறீர்கள்?

    அஜ்மல் கசாப்…………. குண்டு வைத்தது உண்மையாக இருந்தால்………. என்பது போல இன்றும் தாங்கள் சொல்லிக்கொண்டு போவீர்கள். ஆனால் குஜராத்தாக இருந்தால் ……………….. அனைத்து குற்றங்களும் மோதிக்கே……. கோர்ட் விட்டுவிட்டாலும் சாமி கண்ணு குத்தும் என்று சொல்லி விடுவீர்கள்…. சபாஷ்.

  39. ஜெனாப்-ஏ-அலி

    \\ அடுத்து தற்போது இஸ்ரேல் கோழைத் தனமாக பாலஸ்தீன அப்பாவி சிவிலியன்களை இலக்காக்கி ஏவுகணைகளை வீசி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் இறந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. \\

    இதுவரை ஷியா முஸ்லீம்கள் முஸ்லீம்களே இல்லை என்று தங்கள் ப்ரவசனாதிகளைக் கேட்டுக் கேட்டு…… இப்போது வஹாபி பயங்கரவாதத்தினர் ஹமாஸ் என்ற ஷியா பயங்கரவாத இயக்கத்தினருக்கு சொம்பு தூக்குவதைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறேன்.

    ம்…………. ஷியாக்களுக்கு சுப்ரமண்ய ஸ்வாமி வக்காலத்து வாங்கக்கூடாது. சீ சீ இந்த வக்காலத்துப் பழம் புளிக்கிறது.

    வஹாபிய பயங்கரவாத இயக்கங்களே ஷியா பயங்கரவாத இயக்கங்களுக்கு வக்காலத்து வாங்கலாம். புல்லரிக்கிறது. அல்லது ஃபுல்லரிக்கிறது.

    அப்பப்பா என்ன கருணை என்ன கருணை.

    அப்படியே உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடி அராபியப் பாலை வனங்களையே குளங்களாக நிரப்பி விடும் போல் இருக்கிறதே.

    இது வரை காஸா பட்டியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 275 பேர் மரணம். குழந்தைகள் பெண்கள் உட்பட.

    இஸ்ரேலியர் குழந்தைகளை கொன்றால் அது இரக்கமற்ற கொலை. ஆனால் சிரியா, ஈராக், குர்திஸ்தான் இத்யாதி ப்ரதேசங்களில் க்றைஸ்தவ மற்றும் சவூதி பணத்தில் வஹாபி / ஸலாஃபி சுன்னி பயங்கரவாதிகள் ஆயிரக்கணக்கில் பெண்கள் குழந்தைகளைக் கொன்று போட்டால் ……. ஷியாக்கள் தொழும் மஸ்ஜிதுகளை குண்டு வைத்து தகர்த்தால்……. அது போராளிகளின் செயற்பாடு.

    இஸ்ரேலிப்படை கொன்றால் வருவது ரத்தம். சுன்னி பயங்கரவாதப் போராளிகள் கொன்றால் வருவது தக்காளி சாஸ்.

    சுபானல்லாஹ். சுபானல்லாஹ்.

  40. \\\\ மும்பை ஹோட்டல்கள் அனைத்தும் இஸ்ரேலிய பொருள்களை பயன் படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. அரபு நாடுகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்ந்தால் இஸ்ரேலின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடையும் என்று இஸ்ரேலிய அமைச்சரே வருத்தப்பட்டு பேட்டி கொடுத்துள்ளார். \\\

    1967 ம் வருஷம் ஆறு நாள் யுத்தத்தின் போது தொடை தட்டிய துரியோதன துச்சாதன சவடால்…… இஸ்லாமிய பக்கத்து வீட்டு தேசங்களான …… ஜோர்டான், லெபனான், எகிப்து, சிரியா போன்ற தேசங்களின் தொடைகளை முறித்து எல்லோருடைய நிலப்பரப்புகளையும் இஸ்ரேல் கபளீகரம் செய்தது மறந்து போயிருக்கலாம்.

    ஜோர்டன் கைவசமிருந்த மேற்குக்கரை (West Bank), சிரியா கைவசமிருந்த கோலன் சிகரங்கள், எகிப்து கைவசமிருந்த சினாய் மருவனம் இத்யாதி ப்ரதேசங்களை தம்மாத்தூண்டு இஸ்ரேல் தேசம் கபளீகரம் செய்ய முடிந்ததும்……… இந்த துரியோதன துச்சாதன சவடால் தேசங்கள் தொடை முறிவு பட்டதற்கும்………. ஒரே காரணம். இறைவன் அளித்த முக்யமான கொடையான *மதி* என்ற சமாசாரத்தை உபயோகம் செய்ய முடிந்ததும் முடியாததும்.

    யஹூதிகள் இஸ்லாமியருக்கு பாட்டன் முறை. ஒரு காலத்தில் லியான் ஊரி எழுதியதையெல்லாம் பாராயணம் செய்திருக்கிறேன். ஒரே ஜெனடிக் ஸ்டாக்கைச் சார்ந்த யஹூதிகளின் செயற்பாடுகளில் பல வித்யாசங்கள் இருந்தாலும் ஒற்றுமைகளும் இருப்பதையெல்லாம் ஒதுக்க முடியாது. யஹூதிகள் உங்களை விட மிக சாமர்த்யமாக அல் தக்கியா செய்யக்கூடியவர்கள். இஸ்லாமியர்களின் அப்பன் மார்களான க்றைஸ்தவர்களால் ஒரு காலத்தில் கொடுமையாக வதம் செய்யப்பட்டு பின்னர் அவர்களையே யஹூதியர்களுக்கு உலகெங்கும் தொண்டூழியம் செய்ய வைத்தவர்களாயிற்றே.

  41. \\\\ அதே நேரம் நமது நாட்டு செவிலியர்கள் கொடுத்த பேட்டியையும் நாம் புறம் தள்ள முடியாது. ‘நாங்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை தெரிந்து கொண்டு அந்த போராளிகள் நோன்பிருந்தாலும் எங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தனர். எங்களை சகோதரிகள் என்றே அழைத்தனர். \\\

    அட அட……

    மெய் சிலிர்க்கிறது.

    எதிர்த்துப்போராடத் தெரியாத அப்பாவிப் பெண்களை பிணயக்கைதிகளாக கைப்பற்றும் பொறுக்கிகள் போராளிகள். அப்படி அப்பாவிப் பெண்களை பிணயக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொள்வதன் பெயர் போராட்டம். அதுவே வஹாபி இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தும் ஜிஹாதிப் போர். அல்ஹம்துலில்லாஹ்.

    அந்தப் பொறுக்கிகள் ரமதான் நோம்பின் போது பிரியாணி போட்டார்கள் என்று செவிலிப்பெண்கள் சொன்னதால் அந்த அயோக்யர்கள் பொறுக்கிகள் ஆகார் போராளிகள் ஆவர். மாஷா அல்லாஹ்.

    பாலஸ்தீனியர்கள் மீதும் இஸ்ரேலியர்கள் மீதும் எனக்கு ஏற்புடைய நிலைப்பாடுகளும் உண்டு மறுக்க விழையும் நிலைப்பாடுகளும் உண்டு. ஆனால் உங்களுடைய இடையறா காமெடி ட்ராக்குகளை வாசித்து வாசித்து விலா நோகுகிறது.

    குதாஹ் ரெஹம் கரோ. இறைவனே நகைச்சுவைக் கொடுமைகளிலிருந்து காத்து கருணை செய்.

  42. 19-7-2014 தேதியிட்ட “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ல் வந்துள்ள செய்தியை கீழே (சுருக்கமாக) தருகிறேன்.

    Christian families are on their way to Dohuk and Arbil. For the first time in the history of Iraq, Mosul is now empty of Christians. Messages telling Christians to leave the city by Saturday were blared through LOUD SPEAKERS from the city’s MOSQUES on Friday. Mosul’s Christians should CONVERT, pay a special tax or face DEATH.

    திருவாளர் “HEAVEN BUFF ” எதை சொன்னாலும் எப்படி சொன்னாலும் நம்ப மாட்டார். முஸ்லிம்கள் மட்டும்தான் under the sun யோக்கியர்கள் என்று நினைத்து கொண்டிருக்கிறார். தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் தூங்குபவனைப் போல நடிப்பவனை எழுப்பவே முடியாது.திரு அரிசோணன் சொல்வது போல இந்த Heaven Buff யிடம் வாதம் செய்வது கிரிமினல் வேஸ்ட்.

  43. கட்டுரைத்தலைப்புக்கு இணையான, வசவின் தளத்தில் வெளியான இந்த கட்டுரைக்கு (எழுதியவர் ஒரு தலித் இளைஞர் என்பதால் அதை கட்டுரை என்று மரியாதையோடு விளிக்கிறேன்) திரு.அ.நீ அவர்களது தரப்பு விளக்கம் வேண்டி இந்த பின்னூட்டம். வசவார் திரு.அ.நீ தரப்பு உண்மைகளை முழுமையாக வெளியிட்டிருக்கமாட்டார் என்பது எனது உறுதியான ஐயம், ஆகவே அ.நீ-யிடம் இந்த வேண்டுகோள்.

  44. உயர்திரு பொன். முத்துகுமார் அவர்களே,

    நானும் நீங்கள் குறிப்பிட்ட தளத்திற்குச் சென்று அங்கு எழுதியிருந்ததைப் படித்தேன்.

    மதிப்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களே,

    அக்கட்டுரையில் நீங்கள் சொன்னதாக கீழ்க்கண்ட சொற்தொடர்கள் வருகின்றன.

    //சென்னையை சேர்ந்த பிராமணர்கள் தான் இந்தக் கண்காட்சிய நடத்துறாங்கன்னு அவர் சொன்னார். //
    //தாழ்த்தப்பட்ட மக்களை தாக்குறதுக்கு ஜாதி இந்துக்களை தூண்டுறது மேல இருக்குற பிராமணர்கள் மாதிரியான எஃப்சின்னு விளக்குனார். //

    1. சாதி வேறுபாடு மறையவேண்டும் என்று வற்புறுத்திவரும் நீங்கள் இருமுறை “brahmin baiting” செய்ததாக வருகிறதே, அது உண்மையா?
    2. இந்துத்துவம் என்னும் சமத்துவ கங்கை என்னும் கட்டுரையில் //உங்களிடம் ‘இந்துத்துவம் மேல்சாதி பார்ப்பனீய பெண்ணடிமை சித்தாந்தம்…’ என கூறும் வரலாற்று அறிவிலியிடம் கேளுங்கள் … பாபா சாகேப் போலேயைத் தெரியுமா என்று// என்று எழுதியிருக்கும் நீங்கள் அப்படிப் பேசியிருப்பீர்கள் என்று என்னால் நம்ப இயலவில்லை…
    2. சாதி வேறுபாடு மறையவேண்டும் என்று வற்புறுத்திவரும் நீங்கள் சாதியைப் பற்றி ஸ்டால்கள் அமைத்து வரும் கண்காட்சியில் ஏன் கலந்து கொண்டீர்கள்?
    3. செய்யும் தொழில் முக்கியம் இல்லை, Dignity of Labor தான் முக்கியம் என்று உரைத்த ஜார்ஜ் வாஷிங்டனின் பொன்மொழி ஏன் அந்த இளைஞருக்குத் தெரியாமல் போனது? அமெரிக்காவுக்குப் படிக்க வந்த நான் பணம் ஈட்ட, கழிப்பறையையும் துப்புரவு செய்து இருக்கிறேன். அதை நான் தாழ்வாக நினைத்ததில்லை. இந்து சமய அற நூல்களில் உரைத்தபடி “என் கர்மவினையைத்” தீர்க்கிறேன் என்றுதான் நினைத்தேன். ஒரு பணி நம்மைத் தாழ்வு படுத்துகிறது என்று நினைத்தால் அப்பணியைச் செய்யமாட்டோம் என்று மறுக்கவேண்டுமே தவிர, மற்றவர் மீது பழி போடக்கூடாது என்றுதான் எடுத்து நவிலவேண்டும்.

    நான் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறேன். அருள்கூர்ந்து விளக்கம் தருமாறு தங்களைத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

    வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *