தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்

  • அவரது வாய் மீண்டும் மீண்டும் வெட்டப்பட்டிருந்தது. அவரது மார்பு பிளக்கப்பட்டு அதில் கையளவு மணல் போடப்பட்டிருந்தது. வெறும் கொலை அல்ல அது. மத ரீதியிலான தண்டனை என்பது பார்த்ததும் புரிய வேண்டுமென கொலையாளிகள் எண்ணி செயல்பட்டிருந்தனர். நான்குமுறை கொலை முயற்சிகள் அவர் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது பின்னர் தெரிந்தது. திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவரான சுரேஷ்குமார் (48) அவர்களைத்தான்  இப்படி உடல் சிதைத்து கொலை செய்திருந்தார்கள் ஜிகாதிகள். கொலை செய்யப்பட்ட நேரம் இரவு 9:30. தேதி: 18-ஜூன் 2014.

martyrs

  • அந்த வயதான இரவுக் காவலாளி இருபதுகள் மதிக்கத்தக்க அந்த மூன்று இளைஞர்களும் அமைதியாக சம்பவ இடத்திலிருந்து சென்றதை கண்டதாக கூறினார். அதில் ஒருவன் அந்த காவலாளியின் கைகளை பிடித்து வைத்திருக்க மற்ற இருவரும் தங்கள் இலக்கை தாக்கியதை அந்த காவலாளி கண்டார். அவர்களின் இலக்கு ஆடிட்டர் ரமேஷ். தமிழக பாஜக பொது செயலாளர். ஒருவன் அவரது கைகளை முறுக்கி மோசமாக உடைக்க மற்றவன் அவரது தலையை சுவரில் கொடூரமாக மோதினான். பின்னர் அமைதி மார்க்கத்துக்கே உரிய வழிமுறையில் அவரது தொண்டையை கிழித்து கொல்ல ஆரம்பித்தான். அதே நேரத்தில் மற்றவன் சடங்குத்தன்மையுடன் அவரது உடலெங்கும் வெட்ட ஆரம்பித்தான். இறுதியில் காவல்துறையினர் வரும் போது அந்த 53 வயது மனிதரின் உடலில் உருகுலைந்த தலையும் 23 வெட்டுக்காயங்களும் இருந்தன. அதை செய்தவர்கள் புனித ரம்ஸான் நோன்பின் ஒரு வெள்ளி கிழமையில் சேலத்தின் இரவில் கரைந்தனர். நாள்- 19-07-2013. [1]
  • இந்த கொடூரக் கொலைக்கு சில வாரங்கள் முன்னர் இதை போலவே பயங்கரத்துடன் மற்றொரு கொலை நடந்தது. 45 வயதான வெள்ளையப்பன் – இந்து முன்னணி தலைவர்களில் ஒருவர் – கோவில் நிலங்கள் மீட்பதில் ஆர்வம் கொண்டு போராடியவர்; மதமாற்றங்களை தடுப்பதில் தீவிரமாக இயங்கியவர் வேலூரில் கொல்லப்பட்டார். அது ஜூலை 1 2013. இந்த கொலை வேலூரில் முழுக்க முழுக்க பொதுமக்கள் பார்வையில் நடத்தப்பட்டது. [2]
  • ஏப்ரல் 2013 இன் அதி காலையில் கன்யாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் நகரில் நடை பழகிக் கொண்டிருந்த மாவட்ட பாஜகவின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி அவர்கள் நால்வர் கொண்ட ஒரு கும்பலால் வெட்டப்பட்டார். அவரது மென்மையான போக்கும் பரந்த உள்ளமும் அனைவருக்கும் தெரியும். அவரை கொலை செய்ய முயன்றது நான்கு பேரைக் கொண்ட ஒரு கும்பல். அவர்கள் மேலப்பாளையத்திலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. [3]
  • நவம்பர் 6 2012 திரு.ஆனந்த் ஒரு ஆர்.எஸ்.எஸ் அதிகாரி கொடூரமாக தாக்கப்படுகிறார். 10 நாட்களுக்கு பின்னர் சையது அபு தகிர் என்கிற 19 வயது இளைஞன் கைது செய்யப்படுகிறார். இது கோவையில். [4]
  • அக்டோபர் 24 2012 வேலூரில் மருத்துவராக பணி புரியும் பாஜக மருத்துவ அணியின் தலைவர் அரவிந்த் ரெட்டி கழுத்தின் பின்புறம் கத்தியால் குத்தி கொலை செய்யப்படுகிறார்.[5]

நன்றாக திட்டமிட்டு நடத்தப்படும் இந்த தொடர்கொலைகளை புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும். திராவிட இயக்கம் ஊட்டி வளர்த்த அமைதி பூங்கா என வர்ணிக்கப்படும் தமிழகத்தின் உள்ளே ஜிகாத் எனும் வன்முறை விலங்கு அடைகாக்கப்படுகிறது. வகுப்புவாத, வாக்குவங்கி, இந்து வெறுப்பு சக்திகளால் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. இறுதியில் இதில் பலியாவது தமிழர்களின் ரத்தமேதான்.

ஆட்களை கொல்வது முதல் ஆர்.டி.எக்ஸ் வரை

ஏதோ பாப்ரி கும்மட்டத்தை உடைத்த பிறகுதான் இந்தியாவிலும் தமிழகத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதம் உருவானது என்பதாக பொதுவாக ஒரு எண்ணம் நிலவுகிறது. அறிவுஜீவிகளும் போலி-மதச்சார்பின்மை பேசுகிறவர்களும் இந்த எண்ணத்தை மேலும் பிரச்சார நீர் ஊற்றி வளர்க்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழ்நாட்டில் பாப்ரி கும்மட்டம் அகற்றப்படுவதற்கு பத்தாண்டுகள் முன்பே உருவாகிவிட்டது என்பதுதான் உண்மை. 1982 இல் பாஷா என்பவன் இந்து தலைவர்கள் கோவையிலிருந்து திரும்பும் போது ஒரு கொலைவெறித்தாக்குதலை மேற்கொண்டான். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 18-7-1984 அன்று பொதுமக்கள் முன்னிலையில் இந்து முன்னணியின் நிறுவன தலைவர் ராம.கோபாலன் மீது கொலை முயற்சியை அவன் செய்தான். அவர் மதுரை ரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்து வீழ்ந்தார். பாஷா சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டான். ஆனால் இந்த வழக்கில் குற்றம் உறுதிப்படுத்தப்படாமல் விடுதலையானான். [6] திராவிட சூழலில் நீதியை வெற்றி கொள்ள முடியும் என்கிற முதல் குருதி ருசியை ஜிகாதி மிருகம் ருசி பார்த்தது.

அகில இந்திய ஜிகாத் கவுன்ஸிலும் அல்-உம்மாவும்: இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக இஸ்லாமிய பயங்கரவாத சக்திகள்  அகமது அலி என்கிற பழனி பாபா எனும் அடிப்படைவாத இஸ்லாமிய மத பிரச்சாரகர் தலைமையில் இணைந்தன. 1989 இல் தமிழ்நாட்டின் முதல் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அகில இந்திய ஜிகாத் கவுன்ஸில் (All India Jihad Council, AIJC) உருவானது.  அதன் பின்னர் இந்து இயக்கத்தவர் மீதான தாக்குதல்கள் தீவிரமும் கடுமையும் கொண்டதாக மாறின. 30-ஆகஸ்ட்-1989 அன்று வீர கணேஷ் எனும் இந்து முன்னணி இளைஞர் கோவையில் கொல்லப்பட்டார். செப்டம்பர் 5 1991 அன்று வீர சிவா மற்றொரு இந்து முன்னணி இளைஞர் கொல்லப்பட்டார்.  இந்த தாக்குதல்கள்  அனைத்துமே தமிழ்நாட்டின் வர்த்தக தலைநகரான கோவையை சுற்றி அமைந்தன. jihadisஅல்-உம்மா. இப்போது ‘பாப்ரி கும்மட்டம் இடிப்பின் விளைவுதான் இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்பது எப்படிப்பட்ட கதை என்பது புரிந்திருக்கும். ஆட்களை கொல்வது மட்டுமல்ல ஆர்.டி.எக்ஸ் கடத்தலும் பாப்ரி கும்மட்டம் அகற்றப்படுவதற்கு முன்னாலேயே தொடங்கி விட்டது.  இந்த கடத்தல் தென்னிந்தியாவில் மாநிலங்கள் தாண்டிய ஒரு வலைப்பின்னல் மூலம் செயல்படுத்தப்பட்டது. அக்டோபர் 1992 இல் தமிழக காவல்துறை அல்-உம்மா உறுப்பினர் நால்வரை கைது செய்தது. அவர்கள் ஹைதர் அலி (38), அப்துல் முதாலிப் (47), முகமது அப்துல் காதர் (50) மற்றும் ஸாகிர் ஹுசைன் (38) . இவர்கள் அனைவரும் கேரளாவிலிருந்து ஒரு திருடப்பட்ட காரில் ஆர்.டி.எக்ஸை கடத்தி வந்தனர். இந்த நிகழ்வு 29-அக்டோபர்-1992 – அதாவது பாப்ரி கும்மட்டம் இடிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்னர். [7]

தொடர்ந்து தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடந்தேறின..  21-ஜனவரி-1993 ராமேஸ்வரம் இந்து முன்னணியின் மாநில செயலாளர் திரு.முனியசாமி ஜிகாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 1993 இல் ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டு ஆர்.எஸ்.எஸ் தலைமை செயலகம் தகர்க்கப்பட்டது.  11 பேர் இதில் உயிரிழந்தனர். அக்டோபர் 1994 இல் இந்து முன்னணி மாநில தலைவர் ராஜகோபாலன் அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து கொல்லப்பட்டார். ஏப்ரல் 1995 இல் இந்து முன்னணியின் மாநில தலைமையகம் தகர்க்கப்பட்டது. ஜூலை 1995 இல் இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வீட்டுக்கு நாகூரில் பார்சல் வெடிகுண்டு அனுப்பப்பட்டது. அதில் அவர் மனைவி உயிரிழந்தார்.

சிக்கந்தர் பக்த் அறிக்கை: தொடரும் படுகொலைகளையும் குண்டு வெடிப்புகளையும் தொடர்ந்து பாஜக  உண்மை கண்டறியும் குழு ஒன்றை தமிழ்நாட்டுக்கு சிக்கந்தர் பக்த் தலைமையில் அனுப்பியது.  ராஜ்ய சபை எதிர்கட்சி தலைவராக இருந்த பக்த் தலைமையில் வந்த அந்த குழு ஒரு முக்கியமான விசயத்தை அவதானித்தது.  சிக்கந்தர் பக்தின் வார்த்தைகளில்: “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை… திராவிட இயக்க தாக்கத்தால் இந்து விரோத தன்மை கொண்டதாக உள்ளது” எனவே எந்த ‘தேசிய செயல்பாட்டையும் அது குறுகிய கண்கள் கொண்டே பார்க்கிறது.”  அந்த அறிக்கை மேலும் கூறிய விஷயம் நமக்கு இன்றைக்கும் முக்கியமானதாக இருப்பது வேதனையான உண்மை: “இன்றைய ஆளும் கட்சியான அஇஅதிமுகவில் ஒரு பகுதியனருக்கு இந்து என்றாலே ஒரு ஒவ்வாமை இருக்கிறது.” அவர் மேலும் சுட்டிக்காட்டினார்:  ”சையது அகமது பாஷாவால் உருவாக்கப்பட்ட அல்-உம்மாவுக்கு  அஇஅதிமுக தலைவர்களில் சிலர் உட்பட, பல அரசியல் தலைவர்களின் ஆதரவு உள்ளது. ” 1995 இல் எழுதப்பட்டது இந்த அறிக்கை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  AIJC  அமைப்பு சர்வதேச இஸ்லாமிய சமூகத்திடன் இந்து அமைப்புகளுக்கு எதிராக போராட நிதி திரட்ட கடிதங்கள் எழுதி அனுப்பப்பட்டன. அக்கடிதங்கள் வளைகுடா நாடுகளில் பெரிய அளவில் விநியோகிக்கப்பட்டன.  கேரளாவில் மதானிக்கும் தமிழ்நாட்டு ஜிகாத் பயங்கரவாத அமைப்புகளும் தொடர்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் இந்த அறிக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது.[8]

கேரளத் தொடர்புகளும் ஆயுத ஆம்புலன்ஸ்களும்: ஜிகாதி வலைப்பின்னலில் கேரளத்தொடர்பு முக்கியமானது. ஏனெனில் பழனிபாபா தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருந்த அதே காலகட்டத்தில் கேரளாவில் அப்துல் நாசர் மதானி எனும் அடிப்படைவாத பயங்கரவாதி செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஜிகாத் வலைப்பின்னலின் மரணவியாபாரி என்றுகூட இவனை கூறலாம். இவனது அமைப்பான இஸ்லாமிக் ஸேவா சங்க் (ISS) 1993 keralaஇல் தடை செய்யப்பட்டது.  இதற்கு அவன் மதச்சார்பற்ற ஒரு பெயர் சூட்டி மக்கள் ஜனநாயக கட்சி (PDP, People’s Democratic Party) என மாற்றினான். அதே காலகட்டத்தில் உருவான மற்றொரு அடிப்படைவாத ஜிகாதி அமைப்பு தேசிய முன்னேற்ற முன்னணி (NDF , National Development Front).  அதிகாரபூர்வமாக இவை வெவ்வேறு அமைப்புகள் என்றாலும் செயல்பாட்டில் அவ்வாறல்ல என்கிறார் எர்ணாகுளம் காவல்துறை உதவி கமிஷனரான  A.V. ஜியார்ஜ். பயங்கரவாத செயல்களை செய்வதில் NDF அமைப்பும் PDP அமைப்பும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்தன என்கிறார் அவர்.[9]. மார்ச் 22 1997 முதல் மே 16 1999 வரை கோழிக்கோடு மாநகராட்சி காவல்துறை கமிஷனராக இருந்தவர் நீரா ராவத்.  அவர் NDF அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஒரு ரகசிய அறிக்கையை தயாரித்தார். அதில் பாகிஸ்தான் ISI அமைப்பும் ஈரானும் NDF அமைப்புக்கு உதவி செய்வதை குறிப்பிட்டிருந்தார். சிறப்பு பிரிவு அறிக்கைகளின் படி ஆம்புலன்ஸ் வேன்களில் ஆயுதங்களை இந்த அமைப்புகள் கடத்துவதையும் இவர் குறிப்பிட்டிருந்தார்.  [10]  ஆம்புலன்ஸ்களை ஜிகாதுக்கு பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பின்னர் தமிழ்நாட்டில் தெளிவாக வெடிக்கும்.

இதற்கிடையில் இந்த அமைப்புகளுக்காக மக்கள் குடியாட்சி அமைப்புகளில் வாதாட வாக்குவங்கிகளை பயன்படுத்த ஒரு அமைப்பு வேண்டும்.  அந்த தேவையை பூர்த்தி செய்தது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (தமுமுக). வெளிப்படையாக இவர்கள் அல்-உம்மாவின் வன்முறை பயங்கரவாத போக்குகளை விட்டுவிடுவதாக கூறினார்கள். பயங்கரவாத குற்றவாளிகளை மக்கள் மனதில் ஹீரோக்களாக உலவவிடும் கோடம்பாக்கம் இவனது பெயரின் பிராபல்யத்தை பயன்படுத்தி ‘பாட்சா’ எனும் படத்தை வெளியிட்டது நம் சுரணையின்மையின் வெட்கக்கேடான சுவாரசியம்.   ஆனால் கோடம்பாக்கத்தின் அத்தகைய ‘நல்லெண்ண’ முயற்சிகள் ஜிகாதிகளால் கேலிக்கூத்தாகவே பார்க்கப்பட்டன. கோலிவுட்டின் ‘பாட்ஷா’ படம் கோடம்பாக்கத்தின் முன்னணி இயக்குநரான மணி ரத்னத்தின் வீட்டில் அல் உம்மா பைப் வெடிகுண்டுகளை எறிவதைத் தடுத்திடவில்லை. அவர் எடுத்த ‘ரோஜா’ ‘பம்பாய்’ ஆகிய திரைப்படங்கள் காஷ்மிர் பிரச்சனையையும் மும்பை கலவரங்களையும் பேசியது காரணமாக இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பாஷா வலிமையிலிருந்து வலிமைக்கு  வளர்ந்து வந்தான். அவனுக்கு அல் உம்மாவுக்கும் நிதிகள் வருவதில் தடை இருக்கவில்லை. 1990களில் அவனது அல்-உம்மா ‘பையன்களுக்கு’1990களில்   மாதம் ரூபாய் 5000 மும் அதில் முன்னேறிய பயங்கரவாதிகளை ஊக்குவிக்க  100 cc மோட்டார் சைக்கிள்களும் வெகுமதிகளாக அளிக்கப்பட்டன. [11] . பின்னர் இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒரு பெரிய அவலத்தின் முக்கிய அச்சுகளாக மாறும்.

ஆகஸ்ட் 1997 இல் மதுரையில் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் 4 அல்-உம்மாவினரால் சிறைக்குள்ளேயே அடித்து கொல்லப்பட்டார்.அன்றைய அஇஅதிமுக அரசு யதார்த்த நிலையை உணர்ந்து அதிமுக அரசு கொஞ்சமாவது ஜிகாதிய பயங்கரவாத சக்திகளைக் கட்டுப்படுத்த முனைந்த போது காலம் தாமதமாகியிருந்தது.  இக்காலகட்டத்தில் கோவையில் கோட்டமேடு பகுதிகளிலும் இன்னும் சில முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் காவல்துறையால் அமைக்கப்பட்டன. உடனடியாக செயலில் இறங்கினர் போலி-மதச்சார்பின்மை ஊடகங்கள். திமுகவுக்கு ஆதரவான நெருக்கமான ஊடக குரல்கள் இஸ்லாமியரை அதிமுக தனிமைப்படுத்துவதாகவும் இந்த காவல் கோபுரங்கள் அகற்றப்பட வேண்டுமென்றும் கூக்குரல்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து கோவை மாநகரம் ஜிகாதின் நீண்ட கொடும் இரவுக்குள் நுழைந்தது.

ஆபரேஷன் ’அல்லாஹு அக்பருக்கு’ முன்:

1989 முதல் 1997 காலகட்டங்களில் 42 இந்துக்கள் கோவை பகுதிகளில்badsha1 இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளில் இந்துக்களை கொலை செய்ய வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலைகள் இருந்தன. காஃபிர்கள் மனதில் அச்சத்தை உருவாக்க செய்யப்பட்ட இறையியல் கொலைகள் என்று கூட இவற்றை கருதலாம். (உதாரணமாக 02-09-1997 இல் ஐந்து இந்துக்கள் கொல்லப்பட்டனர்.) பல கொலைகள் குறிவைத்து செய்யப்பட்ட கொலைகள். இந்த கொலைகளை செய்த அமைப்பு அல்-உம்மா. உதாரணமாக ஒரு சில:  ஐந்து பேரைக் கொன்ற வன்முறைக்காக மூவர் கைது [12]; இரண்டு முஸ்லீம் தீவிரவாதிகள் வெறுப்பை தூண்டும் சுவரொட்டிகள் ஒட்டியதற்காக கைது, [13], காவல்நிலையத்தை தாக்கிய இஸ்லாமிய பயங்கரவாதி கைது, [14] இந்த மோசமான சூழ்நிலைக்கு முன்னோடியாக மாநில உளவுத்துறை எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் திமுக அரசு அல் உம்மா அமைப்பின் தலைவன் பாஷாவை விடுதலை செய்ய முன்வந்தது. அவன் மீதான தடா வழக்குகள் பின்வாங்கப்பட்டு 28 ஜனவரி 1997 இல் அவன் விடுவிக்கப்பட்டான். [15]

நவம்பர் 1997 இன் விடிகாலை பொழுது. மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து விதிகளை மீறி வந்த அல் உம்மா அமைப்பினர் ஒரு போலீஸ்காரரால் தடுக்கப்படுகிறார். காவல் நிலையத்தில் selvarajவாக்குவாதம் நிகழ்கிறது. அல்-உம்மா உறுப்பினர்கள் இதற்கு தாங்கள் பழிவாங்குவதாக காவல் நிலையத்தில் சவால் விடுகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்த சவால் கொடூரமாக நிறைவேற்றப்படுகிறது. போலீஸ் கான்ஸ்டபிள் செல்வராஜ் என்பவர் அல்-உம்மாவினரால் கொல்லப்படுகிறார்.  பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையினரின் மனைவி மக்களே தங்கள் கணவர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு பொதுவில் வந்து போராடும் அவலநிலையை கோவை பார்க்கிறது.  அன்றைய முதலமைச்சர் கருணாநிதி ஒரு அபத்தமான விளக்கத்துடன் நொந்த மனங்களில் வேல் பாய்ச்சுகிறார். ‘வெறும் புள்ளி விவரங்களுக்காக காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களில் போகும் இளைஞர்களை தொந்தரவு செய்யக் கூடாது.” [16]

கோவையில் கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து அந்த கலவரத்தில் இஸ்லாமியர் அடைந்த பாதிப்பு வீடியோக்கள் மூலமாகalummah1 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தீவிரமாக பண வசூல் செய்தார்கள். ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக திட்டமிட்டார்கள். போலிமதச்சார்பின்மை/திராவிட அரசியலின் வாக்கு வங்கி அரசியலின் ஒவ்வொரு பலவீனமும் அவர்களின் ரத்த அறுவடைக்கு பலமாக மாறியது. அதன் விளைவுதான் ’ஆபரேஷன் அல்லாஹு அக்பர்’. அது திடீர் திட்டமிடுதல் அல்ல. எப்போதும் எங்கும் குண்டு வெடிப்புகளை நடத்தும் கட்டமைப்புகளை பல்லாண்டுகளாக அவர்கள் வளர்த்தெடுத்திருந்தார்கள். 1998 இன் வாலண்டைன் தினத்தன்று கோவையில் நடத்தப்பட்டு 70-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய அந்த குண்டு வெடிப்புக்கு முந்தைய 20 மாதங்களில் தமிழ்நாடெங்கும் 21 குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் சில அமெச்சூர்தனமான குண்டு வெடிப்புகள் தமிழ் அமைப்புகளால் செய்யப்பட்டன. ஆனால் மிகக் கொடுமையான மிகுந்த ஒருங்கிணைப்புடன் குண்டு வெடிப்பு 1997  டிசம்பரில் ஒரே நாள் திருச்சி ஈரோடு என மூன்று ரயில் வண்டிகளில் நடத்தப்பட்டதாகும். அதை செய்தது அல் உம்மா என்றாலும் அதற்கான உதவி கேரளாவிலிருந்து பெறப்பட்டது. [17] ஆனால் இந்த எச்சரிக்கைகள் எல்லாம் உளவுத்துறையால் ஆவணமாக்கப்பட்டாலும் திராவிட இந்து வெறுப்பு அரசியலும் போலி மதச்சார்பின்மையின் வாக்குவங்கி கணக்கீடுகளும் காவல்துறை நடவடிக்கைகளை தடுத்துவிட்டன. அதன் விளைவாக கோவை மிகப் பெரிய தொடர் குண்டு வெடிப்பை சந்தித்தது. 76 அப்பாவி உயிர்கள் ’ஆபரேஷன் அல்லாஹு’ அக்பருக்கு பலியானார்கள். [18]

’ஆபரேஷன் அல்லாஹு அக்பருக்கு’ பின்:

இதற்கு பின்னர் மார்ச் 1998 இல் பாஜக அரசு ஏற்படும் எனும் சூழ்நிலையில் இந்துக்கள் மீது ஒரு வெறித்தாக்குதலை நடத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டனர். காந்தியவாதியும் பேராசிரியருமான பரமசிவம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டார். martyr1எல்லா மாணவர்களுக்கும் மத வேறுபாடின்றி உதவிய அவர் வீட்டிலிருந்து வெளியே இழுத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் முகம் சிதைக்கப்பட்டது.  கோவை குண்டு வெடிப்புகளால் கொஞ்சம் அதிர்ந்து போன திமுக அரசு சிறிதளவு தனது இஸ்லாமிய ஆதரவு முகத்தை மாற்றியது.  அல் உம்மாவினர் வேட்டையாடப்பட்டனர். ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டனர். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகி திமுக உள்ளே வந்தது. இக்காலகட்டத்தில் பெரும்பாலான அல் உம்மாவினரின் கைதுகள் பேரா.பரமசிவத்தின் கொலை தொடர்பான கைதுகள் உட்பட நடந்தன.[19]   இருந்தாலும் கொலைகள் தொடர்ந்தன. பிப்ரவரி 2 1999 இல் திருச்சி நகர பாஜக தலைவர் டாக்டர் ஸ்ரீதர் அல்-உம்மாவினரால் கொல்லப்பட்டார். 13 அல் உம்மாவினர் இந்த கொலைக்காக கைது செய்யப்பட்டனர். [20]

இக்காலகட்டத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறின. 2001  மாநில தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. அதே நேரம் தமுமுக அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. பழைய ஜிகாதிகள் இப்போது இஸ்லாமிய மத பிரச்சாரகர்கள் ஆனார்கள். டெலிவிஷன், இணையதளம் தொடங்கி இலக்கிய பத்திரிகைகள் வரை இஸ்லாமிய பிரச்சாரமும் இஸ்லாமிய அரசியல் பிரச்சாரமும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமிய அமைப்புகள் இப்படி தங்கள் பயங்கரவாத ஓநாய்கள் மீது அமைதி மார்க்க பசுத்தோலை போர்த்திக் கொண்டிருந்த போது பாஜக அமைப்பு ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. பாஜக அரசில் இருந்த காலகட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் வாக்குவங்கிகளை நிலைப்படுத்தி திராவிட அரசியல் அரங்கின் முக்கிய இரு அணிகளுடனும் பலன்களை அறுவடை செய்யவும் தங்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கவும் முனைந்தனர்.

கர்நாடகத்தில் கால்பதிக்கும் ஜிகாத்: இப்போது மாநில எல்லைகளைத் தாண்டிய மற்றொரு செயல்பாட்டை ஜிகாதி அமைப்புகள் தொடங்கின. தமிழ்நாட்டில் மனிதநீதி பாசறை (MNP) கர்நாடகத்தில் ‘கர்நாடக சுயகௌரவ அமைப்பு’ (Karnataka Forum for Dignity, KFD) ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. கோவை குண்டுவெடிப்பு முதல் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன்imam_ali இமாம் அலி என்கிற அல் உம்மா பயங்கரவாதி. 7-மார்ச்-2002 இல் மதுரை அருகே திருமங்கலத்தில் காவல்துறையை தாக்கி அவனையும் அவன் கூட்டாளியான ஹைதர் அலி என்பவனையும் விடுவித்தது ஒரு பயங்கரவாத கும்பல். அவன் அல் முகைதீன் எனும் அமைப்பை பெங்களூருவில் உருவாக்கினான். இந்து தலைவர்களை கொல்வது முதல் இஸ்ரோ போன்ற அமைப்புகளின் கேந்திரங்களை தாக்கி நாசம் செய்வது வரை பெரிய திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அக்டோபரில் அவன் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த தமிழக -கர்நாடக காவல்துறை அவனையும் அவன் கூட்டாளிகளுமாக நால்வரை கொன்றது. [21]. தமிழ்நாட்டில் ஜிகாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பாக இதை சொல்லலாம். ஒருவேளை இதை மட்டுமே சொல்லலாம்.  ஆனால் ஜிகாத் இப்போது கர்நாடகத்தில் கால்பதித்துவிட்டது.

அல்-உம்மா விடுதலை பெருவிழா – வழங்குவது அதிமுக:  2002 இல் மதுரை கல்லூரி பேராசிரியர் கொலையில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஏக இறைவனின் ஜிகாத்துக்காக வெற்றிக்குரல் எழுப்பியபடி வெளியே வந்த அவர்களில் ஒருவன் பெயர் போலீஸ் பக்ரூதின்.[22]  2013 இல் இவன் மீண்டும் கைது செய்யப்பட்டான்- ஆடிட்டர் ரமேஷ் படுக்கொலைக்காக. விடுதலைகள் தொடர்ந்தன. 2003 இல் கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட 8 அல் உம்மாவினரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.[23] அதே ஆண்டு மீண்டும் 16 அல் உம்மாவினர் விடுதலை செய்யப்பட்டனர். காவல்துறை தங்கள் குற்றச்சாட்டுக்களை தகுந்த முறையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால்.[24]  அதிமுகவுடனான இஸ்லாமிய அமைப்புகளின் அணி மாற்றத்துக்கும் அல் உம்மாவுக்கு கிடைத்த இந்த விடுதலை பெருவிழாவுக்கும் தொடர்பு உண்டா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி தீர்ப்புகளுக்கு மேல் தீர்ப்புகளில் அல் உம்மாவினர் விடுதலையாகிக் கொண்டிருந்த போது அந்த பயங்கரவாத செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தோ அல்லது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி குறித்தோ இந்து சமுதாயமும் ஊடகங்களும் மறந்துவிட்டன. செல்வராஜ் அவர்களின் மனைவியும் மகளும் வாடிப்பட்டியில் வறுமையில் வாழ்ந்து வந்தனர். ஒரு உயர் காவலதிகாரி தனது சொந்த முயற்சியில் அவர்களுக்கு உதவி செய்தார்.

மதானி மசாஜும் மாராடு படுகொலைகளும்: 

அந்த மனிதரின் கண்களில் நிரந்தர சோகம் உள்ளது. நடுத்தர வர்க்கத்துக்கும் வறுமை கோட்டுக்கும் சரியாக இடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம். அவர் வயதுக்கு அவர் தோற்றம் அதிக முதுமையை காட்டும். காரணம் இருக்கிறது. அவரது ஒரே மகன் – நன்றாக ஹாக்கி விளையாடக்கூடிய சூட்டிகையான சிறுவன்- கோவை குண்டு வெடிப்பில் பலியாகி போனான்.  இதைத்

தொடர்ந்து நஷ்ட ஈடாக அவனது தந்தை  கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவியாளராக பணி அளிக்கப்பட்டார். அவர் ஒரு நபருடைய அனைத்து தேவைகளையும் பார்த்து கொள்ள வேண்டும். யார் அந்த நபர்? அந்த தந்தையின் ஒரே சிறுவன் இறக்க காரணமான கோவை வெடிகுண்டு நிகழ்வின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவன் – அப்துல் நாசர் மதானி என்கிற தென்னிந்திய ஜிகாதின் அருட்தந்தை. ஜிகாத் எனும் பயங்கரவாத மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்ட ஏழை இந்துக்களுக்கு எவ்வித கருணையையும் அரசிடமிருந்து எதிர்பார்க்கமுடியாதென்றால் நீதி என்பதும் இந்துக்களுக்கு எட்டாகனிதான். அரசு எதுவானாலும்.

மாராடு மீனவர் படுகொலை: பயங்கரவாதத்துக்கு பாதுகை தாங்கும் அரசியல் லாப போக்கு அதிமுக அரசும் விதிவிலக்கில்லை என்பது 2002 இல் தெரியவந்தது. தமுமுக ஆதரவு கொண்ட அதிம்முக அரசு சையது முனீர் கோதா எனும் ஐ ஏ எஸ் அதிகாரியை உட்துறை செயலராக்கியது. [25]  பின்னர் இந்த ஐஏஎஸ் அதிகாரி அப்துல் நாசர் மதானிக்கு உதவியதாக அதே ஜெயலலிதாவால் தமுமுகவுடனான உறவு முறிந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டார்.[26] மதானி சிகிச்சைக்காக இப்படி சிறையிலிருந்து வெளியே வர ஆரம்பித்ததும் அவனது தகவல் தொடர்புகளின் எல்லை விரிவடைய ஆரம்பித்தது. marad1மே- 2- 2003 இல் கேரளாவின் மாராடு எனும் கடற்கரை கிராமத்தில் எட்டு இந்து மீனவர்கள் ஜிகாதிகளால் கொல்லப்பட்டனர். ஆயுதம் ஏதுமின்றி கடற்கரையில் குடும்பத்தினர் முன்னால் வெட்டப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தாமஸ் கமிஷன் கேரள அரசால் நியமிக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது இந்த படுகொலைகளை செய்ய திட்டமிட்ட முக்கிய பேர்வழியான முகமது நஃபி என்பவன், மாராடு மீனவர் படுகொலைக்கு முன்னால் அப்துல் நாசர் மதானியை கோவை மத்திய சிறையில் வந்து எட்டுமுறை சந்தித்தது தெரியவந்தது.  [27] அது மட்டுமல்ல மற்றொரு ஐ ஏ எஸ் அதிகாரியான சூரஜ் என்பவரே உள்ளூர் நிர்வாகம் இந்த படுகொலையை தடுக்க முடியாமல் போனதற்கு காரணம். [28] ஆக சூரஜ் என்கிற இஸ்லாமிய ஐ ஏ எஸ் அதிகாரி கேரளத்திலும், முனீர் கோதா என்கிற ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாட்டிலும் செய்கின்ற செயல்கள் இறுதியில் மாராடு படுகொலைக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியளிக்கின்றன. இது இருவருக்கும் தெரியாமல் தற்செயலாக நடந்திருக்குமா என்பதை படிப்பவர்களின் ஊகத்துக்கு விட்டுவிடலாம். அவை தற்செயல் இல்லை என்றால் ஜிகாதிகளின் கரங்கள் அரசதிகாரத்தின் உயர் பீடங்கள் வரை நீண்டுவிட்டன என்பதுதான் பொருள்.

2004 இல் அதிமுக மீண்டும் பாஜகவுக்கு அரசியல் ரீதியில் அருகாமையில் வர தொடங்கியது. இஸ்லாமிய அமைப்பான தமுமுக உடனே உறவை முறித்துக் கொண்டது. அப்போதுதான் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு முனீர் கோதாவின் வரம்பு மீறி மதானிக்கு உதவிய செயல்பாடுகள் உறைக்க ஆரம்பித்தன. கோதா நீக்கப்பட்டார். இஸ்லாமியவாதிகள் பெரும் கூச்சலை எழுப்பினர். 2004 இல் பாஜக – அதிமுக கூட்டணி முழுமையாக தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டது. 2004 இல் காவல்துறை மனிதநீதி பாசறையின் ஒரு முகாமை வெளிக்கொண்டு வந்தது.  காவல்துறையினரின் தகவல்களின் படி MNP   இந்தியா முழுக்க வலைப்பின்னல்களை உருவாக்கி விட்டிருந்த ஒரு இயக்கமாகியிருந்தது. அதற்கு யாசின் மாலிக்கின் JKLF உடன் தொடர்பு இருந்தது. காஷ்மிர் பயங்கரவாத இயக்கங்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை அணி திரட்டுவது அதன் வேலைகளில் ஒன்றாக இருந்தது என காவல்துறை கருதுகிறது. [29] மனிதநீதி பாசறை பின்னாட்களில் உருவான பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியாவின் முன்னோடி. இந்த அமைப்பின் முதல் கொடி பிரிவினைவாத அமைப்பான  JKLF கொடியாகவே இருந்தது. பின்னர் ஒரு சிறிய நட்சத்திரம் மட்டும் சேர்த்து மாற்றியமைக்கப்பட்டது.

2005 இல் ஒரு தமிநாட்டு பேரூந்து கேரளத்தில் எரியூட்டப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவன்  தடியந்தவிடே நாஸீர்.  கோவை பிரஸ் கிளப்பிலும் குண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடையவன் இவன். கேரளத்தை பூர்விகமாக கொண்ட இவனே தென்னிந்திய ஜிகாத்துக்கான  லஸ்கர் இ தொய்பா  பொறுப்பதிகாரி. 2009 இல் பெங்களூரில் இவன் கைது செய்யப்பட்ட போது மத்திய உட்துறை அமைச்சரகம் (MHA) இந்த விவரங்களை தயங்கியே வெளியிட்டது.[30]  குறிப்பாக பயங்கரவாதி இஷ்ரத் ஜெகான் விவகாரத்துக்கு பிறகு பயங்கரவாத எதிர்ப்பு என்பது மிகவும் அரசியலாக்கப்பட்டதன் விளைவு இது.

ஆடம்பர மசாஜ்: மதானி சிறையில் இருந்த போதும் அவனுக்கு கிடைத்த அரசியல் ஆதரவினால் ஜிகாதி வலைப்பின்னலை தென்னிந்தியாவில் மேலும் மேலும் பலமடைய செய்ய முடிந்தது.  அவனது ஆதரவாளர்கள் –madhani1 தீவிர அடிப்படைவாதிகள், திராவிட இயக்கத்தவர்கள், இலக்கியவாதிகள் இடதுசாரிகள் – என  அவனுடைய விடுதலைக்காக  பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தினர். மார்ச் 2006 இல் கேரள சட்டசபையில் மார்க்ஸிஸ்ட்களும் காங்கிரஸும் இணைந்து அவனை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். [31] திமுக தன் பங்குக்கு சிறை வாசத்தையே ஆயுர்வேத ஆரோக்கிய மையத்துக்கான வாசமாக மாற்றியது. ஆயுர்வேத மசாஜ் முதல் அத்தனை madhani1வசதிகளும் மதானிக்கு சிறைவாசத்தின் போது மக்கள் வரிப்பணத்தில் கிட்டியது.  2006 இல் மாநிலத் தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டு திமுக அரசு வந்தது. இஸ்லாமிய அமைப்புகள் திமுகவுடன் கைகோர்த்து கொண்டன.  திமுக மீண்டும் தன் கோவை குண்டு வெடிப்புக்கு முந்தைய ஜிகாத் ஆதரவு நிலைபாட்டுக்கு சென்றது.  முனீர் ஹோதா உள்துறை செயலர் ஆக்கப்பட்டார். அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி மதானியின் PDP அமைப்புடன் கூட்டணி வைத்தது. ஜூலை 2006 இல் திமுக அரசு ஜிகாதிகளுக்கு பச்சைக் கொடி காட்டியது. மதானிக்கு ஆடம்பர ஆயுர்வேத சிகிட்சை 10 மசாஜ் செய்வோரைக் கொண்டு நான்கு ஆயுர்வேத வைத்தியர்களை கொண்டு செய்வித்தது. 35 நாட்கள் சிகிச்சை அரசு செலவில் அளிக்கப்பட்டது.[32]

தாலிபான் காட்சிகள்-வழங்குவது திமுக

ஜூலை 22 2006 அதிகாலையில் கோவை மாநகர காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.இவர்கள் மனிதநீதி பாசறை எனும் ஜிகாத் mnp1அமைப்பைச் சார்ந்தவர்கள். இவர்களிடம் டிடோனேட்டர்கள், மேப்கள், IED ஆகியவை இருந்தன. கோவை மாநகர மருத்துவமனையை, ரயில்நிலையம், காவல்நிலையம் ஆகியவற்றை சிதறடிப்பது இவர்களின் திட்டமாக இருக்கலாம் என காவல்துறை கருதியது. ஆகஸ்ட் 2006 இல் கோவை மாநகராட்சி துணை கமிஷனர் V.ரத்னசபாபதி கோயம்புத்தூரை மீண்டும் தாக்க ஒரு திட்டத்தை ஜிகாதிகள் வகுத்திருப்பதை கண்டுபிடித்திருப்பதாக கூறினார். மனிதநீதி பாசறைக்கு ஆதரவாக இஸ்லாமிய அரசியல் அமைப்புகள் திமுக அரசுக்கு அழுத்தம் அளித்தன. திமுகவும் வளைந்து கொடுக்க தயாராகவே இருந்தது. ரத்னசபாபதி இடமாற்றம் செய்யப்பட்டார். வழக்குகள் பலவீனப்படுத்தப்பட்டன. பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். [33]

திமுகவின் இந்த செயல் ஜிகாதிகளுக்கு பச்சை சமிக்ஞை காட்டியதாயிற்று. கூடவே காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்தது. காவல்துறையினர் தங்கள் பெயர்களை தெரிவிக்காமல் எப்படி திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்களிலேயே 12 இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீதான வழக்குகளை பின்வலிக்கக் கூறிவிட்டார்கள் என்பதை விளக்கினர். இவர்கள் கிச்சான் புகாரியின் ஆட்கள். சையது முகமது புகாரி என்கிற கிச்சான் புகாரி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவன். அல் உம்மா.  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் அடைக்கப்பட்டவர்களுக்கு கூட பிணை கொடுக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேலப்பாளையம் ஜிகாதி செயல்களின் முக்கிய மையமானது. திமுக அரசு ஜிகாதிகளுக்கு காட்டும் ’வெளிப்படையான ஆதரவு’ குறித்து காவல்துறை அதிகாரிகள் தங்கள் பெயர்களை சொல்லாமல் கவலை தெரிவிக்க ஆரம்பித்தனர். [34]

அவர்களின் கவலைகள் நியாயமானவையே. ஏனெனில் தொடர்ந்து இந்து தலைவர்கள் மட்டுமல்லாது சமரசவாத இஸ்லாமியர்களும் தாக்கப்பட்டனர். தலிபான் ஆட்சியை ஒத்த சூழல்கள் உருவாகலாயின.  ஜூலை 2006 இல் மேலப்பாளையத்துக்குள் ஒரு அல் உம்மா பயங்கரவாதியை கைது செய்ய சென்ற தலைமை கான்ஸ்டபிள் அடித்து துரத்தப்பட்டார். [35] காவல்துறை போக இயலாத குட்டி தலிபானிய பிரதேசங்கள் ஆங்காங்கே உருவாகலாயின.  நவம்பர் 2006 இல் இந்து சிறைகைதிகளை அல் உம்மா கைதிகள் கடுமையாகத் தாக்கி மதுரை சிறையிலிருந்து அவர்களை வெளியே கொண்டு செல்ல வேண்டிய சூழலை ஜிகாதிகள் உருவாக்கினர்.kpandiyan [36] டிசம்பர் 17 2006 அன்று திரு.எம்.ஆர்.காந்தி குமரி மாவட்ட பாஜகவின்மூத்த தலைவர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார். அவரை உயிருடன் எரிக்கப்போவதாக அவர்கள் மிரட்டினர். [37]அதே இரவு தென்காசியில் ஜிகாதி பயங்கரவாதிகள் தென்காசி இந்து முன்னணி தலைவரான குமார பாண்டியனை வெட்டிக் கொன்றனர். [38] புகழ் பெற்ற தென்காசி சிவன் கோவில் எதிரில் ஒரு மசூதியை கட்டும் இஸ்லாமிய ஆதிக்க திட்டத்தை அவர் எதிர்த்ததே இதற்கு காரணமாக இருக்க வேண்டும்.  இதே எம்.ஆர்.காந்தி அவர்கள்தான் 2013 இல் மீண்டும் ஜிகாதிகளால் தாக்கப்பட்டார். தங்கள் காஃபிர் இலக்குகளை ஜிகாதி வல்லூறுகள் அத்தனை எளிதில் மறந்துவிடுவதில்லை.

உள்துறை அமைச்சகத்தால் வெளிநாட்டு பணம் பெறுவதிலிருந்து கூட தடை படுத்தப்பட்ட தமுமுக திமுகவின் அன்பிற்குரிய அமைப்பாக வலம் வந்தது.ஷரியத் சட்டம் தாலிபான் அமுல்படுத்துதல் என தென் மாவட்டங்களில் தாலிபானிய ஆட்சியை இந்த அமைப்பு அரங்கேற்றியது.

பெண்கள் கொலைகள்: மார்ச் 2007 இல் திருநெல்வேலி மாவட்டத்தில் 35 வயது இஸ்லாமிய பெண் கல்லால் அடித்து பின்னர் கத்தியால் குத்தி சடங்குத்தன்மையுடன் கொலை செய்யப்பட்டார்.   மே 2007 இல் தேநீர் விற்கும் மற்றொரு இஸ்லாமிய பெண் அனைவர் முன்னிலையிலும் வெட்டி கொல்லப்பட்டார்.  [39] காஃபிர் தொழிலாளிகள் வரும் வழியில் அந்த டீக்கடை taliban1இருப்பதால் அவர் ஜிகாதிகளால் எச்சரிக்கப்பட்டிருந்தார். அதை அவர் புறக்கணித்ததால் அதற்கு அவர் உயிரையே விலையாக கொடுக்க நேர்ந்தது.மாவட்ட தமுமுக அதிகாரி ‘ஒழுக்கமற்ற’ பெண்களை கல்லால் அடித்து கொல்லுவது சட்டமாக்கப்பட வேண்டுமென வெளிப்படையாக கூறினார். [40]  அண்டைய கேரளத்திலும் நிலை மோசமாகத்தான் இருந்தது. ஒழுக்க காவல்துறையாக மதானியின் PDP அமைப்பினரும் மார்க்ஸிஸ்ட்களின் DYFI அமைப்பினரும் செயல்பட்டனர். [41]

திமுக ஆட்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு ஜிகாதி அமைப்புகள் தமிழ்நாட்டில் தம் உள் கட்டமைப்பை நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டன.  மாநிலம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவைகளை அது உருவாக்கியது.  இது குறித்து செப்டம்பர் 2007  விழா ஒன்றில் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி தனது சொந்த நிதியிலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ்களை தமுமுக ஆம்புலன்ஸ் அமைப்புக்கு வழங்கினார். [42] ஆகஸ்ட் 2007 இல் தென்காசியில் தமுமுக இந்துக்களுடனான கொலை வெறி மோதலில் தங்கள் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தியிருந்தது.

வன்முறை ஆம்புலன்ஸ்கள்: ஏற்கனவே ஜிகாதிகளால் கொல்லப்பட்ட குமார பாண்டியனின் சகோதரர்களையும் கொல்ல ஜிகாதிகள் திட்டமிட்டனர். இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் ஆகஸ்ட் 14 – பாகிஸ்தான் சுதந்திர தினம்murder1. இந்த தாக்குதல் குறித்து நெல்லை மாலைமலர் (14-8-2007) செய்தி தெளிவாக சொல்கிறது: திட்டமிட்டு வன்முறையைத் தொடங்கியவர்கள் ஜிகாதிகள்தான் என்று. [43]வழக்குக்காக சென்று கொண்டிருந்த குமார பாண்டியன் குடும்பத்தினரை ஜிகாதிகள் இரண்டு மோட்டார்பைக்குகளில் வந்து தடுத்தனர் அத்துடன் ஆம்புலன்களை இந்த தாக்குதலின் போது இயக்கியுள்ளனர்.

இதற்கிடையில் ஆகஸ்ட் 2007 இல் மதானிக்கு எதிரான தமிழக காவல்துறை வழக்கு திமுக அரசினால் முடிந்த அளவு பலவீனப்படுத்தப்பட்டது என்றே கருத வேண்டியுள்ளது. அவன் விடுவிக்கப்பட்டுவிடுவான் என்பது ஏறத்தாழ முடிந்த முடிவாகிவிட்டது. ஆனால் இறுதி தீர்ப்பு விநோதமாக அமைந்தது. வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதி “சட்ட காரணிகளைக் காட்டிலும் வேறுபல காரணிகளை கணக்கில் எடுத்து மரண தண்டனை அளிப்பதை தவிர்த்தது.[44]  மதானி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டான் மதானி 2007 இல் வெளியே வந்தான். பாஷா தூக்கு கயிறிலிருந்து தப்பவைக்கப்பட்டான். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் படோடபமில்லாமல் கமுக்கமாக அல் உம்மா இயக்கத்தினர் ஒன்பது பேரை அவர்களின் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்தது கருணாநிதி அரசு. [45]

2008 இல் புழல் சிறையில் இருந்தபடியே தமிழ்நாடு முழுக்க குண்டு வெடிப்புகளை நடத்த ஜிகாதிகள் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூளையாக இருந்தவன் அலி அப்துல்லா. அப்துல் காபர் என்கிற பழைய அல் உம்மா உறுப்பினரின் வீடுali1திருநெல்வேலியில் (பேட்டை) சோதனையிடப்பட்ட போது அங்கு வெடிகுண்டு தயாரிக்கும் பாகங்கள் கிட்டின. இதைத் தொடர்ந்து மதுரையில் ஒரு வீடு சோதனை செய்யப்பட்ட போது ஒரு கிலோ வெடிமருந்து சிக்கியது. அப்துல் காபர் தமிழ்நாடு முஸ்லீம் லீகில் இணைந்து 2004 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறான். பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலும் இணைந்து விலகியிருக்கிறான். அலி அப்துல்லா ‘இஸ்லாமிக் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்’ (Islamic Defense Force, IDF) என்கிற அமைப்பை உருவாக்கியவன். அண்ணா சாலை மேம்பால குண்டு வெடிப்பை இந்த அமைப்புதான் பொறுப்பேற்றிருந்தது. 2008 இல் அவன் புழல் சிறையில் ஈரோடு-திருச்சி ரயில் குண்டு வெடிப்பு குற்றச்சாட்டில் கைதியாக இருந்தான்.[46] ஆனால் 2010 இல் ஈரோடு-திருச்சி ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் 13அல் உம்மா இயக்கத்தினர் விடுவிக்கப்பட்டபோது அதில் அலி அப்துல்லாவும் ஒருவன்.[47]

அல் உம்மாவினரை கைது செய்யும் காவல்துறை சில ஐந்தாண்டுகள் அவர்களை சிறையில் வைத்திருக்கிறது. அப்போது அவர்கள் சர்வ தகவல் தொடர்பு வசதிகளுடன் இருக்கிறார்கள். வெளியே இயக்கக் கட்டமைப்புகளை பலப்படுத்துகிறார்கள். பின்னர் வழக்குகள் பலவீனப்பட்டு அவர்கள் விடுபட்டு வெளியே வருகிறார்கள். மக்களோ பயங்கரவாதிகள் கைதான செய்திகளை படித்துவிட்டு திருப்தி அடைந்துவிடுகிறார்கள். அந்த கைதுகளுக்கு பிறகு இந்த பயங்கரவாதிகளுக்கு சிறைக்குள் வசதிகளும், சிறையிலிருந்து நினைக்கும் காலகட்டத்தில் வெளியே கொண்டு வர செய்யப்படும் அரசியல் ரீதியான முயற்சிகளும் கவனிக்கப்படுவதே இல்லை.  ஆனால் இப்படி வெளியே வரும் அல் உம்மாவினரை ‘பொய் வழக்குகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள்’ என்று அடுத்த கட்ட பொய் பிரச்சாரமும் அல்தக்கியாவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்படும்.

மீண்டும் மதானி: பெங்களூரில் 2008  இல் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.  ஆகஸ்ட் 17, 2010 இல் இவை தொடர்பாக மதானி மீண்டும் கைது செய்யப்பட்டான். [48]  ஜிகாதி கரங்கள் கர்நாடகத்தில் இப்போது கேரள வலைப்பின்னலுடன் இணைந்து வலிமையாக்கப்பட்டிருந்தது. பாஜக அரசு நிச்சயமான தோல்வியை கர்நாடகத்தில் சந்திக்கும் என்கிற விஷயம் மதானிக்கு நற்செய்தியாக அமைந்தது. சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் ‘அராப் நியூஸ்’ பத்திரிகை மதானிக்கு இது நல்லது என்றும் காங்கிரஸ் அரசு மதானியின் பிணையை எதிர்க்காது என்றும் செய்தி வெளியிட்டது. [49]  மீண்டும் கர்நாடகத்தின் காங்கிரஸ் அரசாங்கம் ஆனால் அதற்கு முன்னர் பாஜக ஆட்சியிலேயே கூட மதானியின் ஆயுர்வேத சிகிச்சைக்காக ஐந்து-எட்டு லட்சம் செலவளித்தது. ஜிகாதிகளுக்கான அரசாங்க செலவிலும் பணவீக்கத்தின் கொடுமை.[50]  அதிர்ஷ்டவசமாக  உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அவர்கள் மதானியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார். [51]

 மீண்டும் அஇஅதிமுக

2011 இல் அ இ அதிமுக ஆட்சிக்கு வந்தது. தமுமுக இம்முறை தனது விசுவாசத்தை அதிமுகவுக்கு மாற்றியிருந்தது.  இம்முறை மனிதநேய மக்கள் கட்சி என்கிற பெயரில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் cbi1அதிமுக கூட்டணியில் இந்த ஜிகாதி வேர்கள் கொண்ட அமைப்பு வெற்றியும் பெற்றிருந்தது. இத்தனைக்கும் 28-11-2011 தேதியிட்டு MHA வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டு நிதி உதவி பெறுவதிலிருந்து தடுக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று தமுமுக. [52])  தமுமுக தலைவரான ஜவஹருல்லாவும் நான்கு அடிப்படைவாதிகளும் வெளிநாட்டு பணம் பெறுவதற்காக ஒரு அமைப்பை சட்ட நியதிகளுக்கு புறம்பாக அமைத்து செயல்பட்டமைக்காக சிபிஐ நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.  15.12.1997 முதல் 20.06.2000 வரையான காலகட்டத்தில் இவர்கள் ரூபாய் 1,54,88,000/- வெளிநாட்டு பணத்தை சேகரித்துள்ளனர். இந்த பணத்தின் சேகரிப்பு எதற்காக ஏன் என்பதை எவரும் ஊகிக்கலாம். [53] ஆனால் இதெல்லாம் அதிமுக அரசுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.

பொதுவாக ஒரு எண்ணம் உள்ளது அதிமுக என்பது திராவிட கட்சிகளில் இந்துக்களுக்கு அந்த அளவு எதிர்ப்பு இல்லாதது என்பதே அது. எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில் இது ஓரளவு உண்மைதான். மதமாற்றம் முதல் பல விஷயங்களில் எம்.ஜி.ஆர் இந்துபார்வையுடன் பரிவுடையவர். ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவே தொடர்ந்து நிலைபாடுகளை எடுத்துள்ளார். அவரைப் பொறுத்தவரையில் வாக்குவங்கியும் தனிப்பட்ட ஆத்திரங்களும் முதன்மை காரணங்களாக உள்ளன. அதிமுக அரசு வந்த பிறகு தொடர்ந்து இஸ்லாமிய ஜிகாதி அடிப்படைவாத அமைப்புகள் வலு பெற்றவாறு உள்ளன. ‘துப்பாக்கி’ படத்துக்கான எதிர்ப்பும் ’விஸ்வரூபம்’ படத்துக்கான vbmஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவர்கள் நபி என்று நம்புகிற முகமது  குறித்து சில மாறுபட்ட விஷயங்களை காட்டியது என ஒரு யூட்யூப் வீடியோவுக்கு எதிராக  செப்டம்பர் 2012 இல் அமெரிக்க கான்ஸுலேட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்முறையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் குறித்து அடிப்படைவாதியும் தமுமுக பாசிச இயக்கத்தின் தலைவருமான ஜாவருல்லா  ’அந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது ஆனால் நாங்கள் அதற்காக வருந்தவில்லை’ என தெரிவித்தார். [54]  இந்த சென்னை வன்முறைக்காக 12 தமுமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்து ரத்தத்தின் மீது அல்-தக்கியா

2012-3 இல் இந்து இயக்கத்தலைவர்கள் படுகொலை ஆரம்பமானது. இம்முறை படுகொலையுடன் இணைந்து அவர்கள் கொல்லப்பட்டது தனிப்பட்ட காரணங்களுக்காக எனும் அல்-தக்கியாவும் இணைந்து நடத்தப்பட்டது.  23-10-2012 அன்று அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். 19-3-2013 அன்று பரமக்குடியில் பாஜக தலைவர் முருகன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்ட  கட்டுரையில் முஸ்லீம்கள் இந்து இயக்கத் தலைவர்கள் கொலையில் பலிகடா ஆக்கப்படுவதாக எழுதி அது அனேக இஸ்லாமிய மற்றும் இடதுசாரி தளங்களில் வெளியாகியது.  அது குறித்து இப்படி எழுதப்படுகிறது:”பரமக்குடி பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகன். இவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ” [55]  murugan

அதே போல மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை விஷயத்திலும் ’மதச்சார்பற்ற தீவிர இடதுசாரியான’ வினவு தளத்துக்கும்  இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிரச்சாரத்துக்கும் அதிசயிக்கத்தக்க ஒற்றுமை உள்ளது. வினவு தளம் சொல்கிறது: “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூரில் பாஜகவின் மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி கொலைசெய்யப்பட்ட போது இதே போன்று ஆரவாரம் செய்து கடையடைப்பு நடத்தியது வேலூர் பாஜக. ஆனால் அந்தக் கொலை தொடர்பாக திட்டம் தீட்டியது வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா என்பதோடு கைது செய்யப்பட்ட அனைவருமே இந்துக்கள்தான். கொலைக்கான காரணம் பெண் விவகாரம் எனவும் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.”  [58]   ஆனால் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து கைதான போலீஸ் பக்ருதீன் கொடுத்த வாக்குமூலத்தில் அவன் தானே அரவிந்த் ரெட்டியை கொன்றதை ஒத்துக் கொண்டிருக்கிறான். [59]

மேலப்பாளையம்: திரும்பும் வரலாறு

பெங்களூரு குண்டு வெடிப்பு, மதுரையில் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயற்சி ஆகியவற்றில் மீண்டும் மீண்டும் வரும் பெயர்கள் கிச்சான் புகாரி பறவை பாதுஷா. padusha12013 ஜூலை 27 இல் தேதி சிறப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த போலீஸார் சாகுல் ஹமீதையும்  அவனது கூட்டாளி முகமது தாசிமையும் கைது செய்தனர். மேலும் சோதனையில் மேலப்பாளையத்திலுள்ள ஒரு வீட்டில் வெடிமருந்து பொருள்களையும் டிடெனேட்டர்களும் கண்டெடுக்கப்பட்டன.  மேலப் பாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பிஸ்மி, நூருல் அகமது, முகமது சம்சுதீன் ஆகியோருக்கு இதில் தொடர்பிருந்தது.  மேலும் மேலப்பாளையத்தில்  145 எலக்ட்ரிக் டெட்டனேட் டர்கள், 17.50 கிலோ வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன. bukariஇதன் பின்னணியில் மூளையாக செயல்படுகிறவர்கள் கிச்சான் புகாரியும் பறவை பாதுஷாவும் ஆவர்.  [60] பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பில் புலனாய்வு செய்த காவல்துறை கிச்சான் புகாரியை  ஏப்ரல் 2013 இல் கைது செய்தது. பிப்ரவரி 2014 இல் பறவை பாதுஷா கைது செய்யப்பட்டான். கிச்சான் புகாரி எப்படி தொண்டு நிறுவனம் ஒன்றை போர்வையாக கொண்டு பயங்கரவாத செயல்களை புரிந்தான் என்பதை காவல்துறை கண்டுபிடித்தது.  அல்-உம்மாவுக்கு தடை விதிக்கப்பட்ட போது உருவானதே இந்த அமைப்பு – சிறுபான்மை உதவி அறக்கட்டளை (Charitable Trust for Minorities – CTM ) . இந்த அமைப்பின் மூலம் புகாரி செயல்பட்டான். இந்த அமைப்பின் மூலம் இஸ்லாமிய அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டு இவர்களில் எவரேனும் கைது செய்யப்படும் போது அரசியல் அழுத்தங்களும் சட்டரீதியிலான தடங்கல்களையும் காவல்துறைக்கு உருவாக்குவது ஜிகாதிகளின் செயல்முறை.  [61]

இப்போது இது மீண்டும் முழுமையாக ஆரம்பித்துவிட்டது. கிச்சான் புகாரியை விடுவிக்க வேண்டுமென்று தமுமுக ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகிறது.  அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் tmmk_supporஇஸ்லாமிய வாக்கு வங்கி புரோக்கர்கள் திராவிட அரசியல் கட்சிகளுடனும் இடதுசாரிகளுடனும் இந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் விடுதலைக்காக வாக்குவங்கி பேரம் நடத்துவார்கள். மனவக்கிரம் பிடித்த மார்க்ஸிய இடதுசாரிகளுக்கு மக்களின் மரணங்களில் என்ன ஆனந்தம் இருக்குமோ! இந்த பயங்கரவாதிகளுக்காக மனித உரிமை போராளிகளாகவே இவர்கள் மாறிவிடுவார்கள். தெருக்களிலும் ரயில்களிலும் உடல் சிதறி மாண்டவர்களும் தந்தையை தனயனை கணவனை இழந்து நிற்பவர்களும் மனித உரிமை அற்ற அஃறிணைகள் என்பது இந்த மனித உரிமை வியாபாரிகளின் எண்ணம். 2016 க்கு பிறகு நம் நினைவுகளில் நம் பலிதானிகள் மங்கிவிடும் நிலையில் நம் உயிரிழப்புகளின் வேதனை நீர்த்துவிடும் தருணத்தில் போலீஸ் பக்ருதீனும் கிச்சான் புகாரியும் மீண்டும் வெளியே வருவார்கள். அதன் பிறகு சில ஆண்டுகளில் மீண்டும் தொடரும் இந்துக்களின் கொலைகள். தவிர்க்கமுடியாத நிலையில் மட்டுமே நிகழும் சில ஜிகாதிகளின் கைதுகள்… ஆனால் அவர்கள் பெற வேண்டிய தண்டனை… அவர்களால் கொலை செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி! அதை பெற்றுத் தருவதில்தான் உள்ளது இந்துக்களின் மானமும் நீதி உணர்வும்.

மற்றொரு அபாயம்: இந்த கட்டுரையாளனுடன் 2013 இல் தொடர்பு கொண்ட ஒரு ஈழத்தமிழ் பத்திரிகையாளர் (பெயரை வெளியிட இயலாது) இப்படி கூறினார்: “இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து தீர்வு காண்பதே அவசியம் என்பதை உங்களில் தொடர்புகள் மூலம் வலியுறுத்தவேண்டும்.வடக்கு கிழக்கு பிரிக்கப்படுவது இந்தியாவின் தென்பிராந்திய நலனுக்கு ஆபத்தானது.சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த கிழக்கு மாகாணம் இன்று முஸ்லிம்களின் கையில் சென்றுவிட்டது.இந்த ஆதிக்கம் நீடிக்குமாயின் தற்போது அம்மாகாணத்தில் 35% – 40% இருக்கும் தமிழர்கள் மதமாற்றங்களின் மூலம் இல்லதொழிக்கப்படுவார்கள்.விடுதலைப்புலிகள் இருந்தவரை இந்த மதமாற்றக்கும்பலால் ஒருவரைக் கூட மதம் மாற்றமுடியாத நிலமை இருந்தது.தற்போது நிலமை தலைகீழாகி விட்டது.கிழக்கில் முஸ்லிம்கள் பலம் பெருவது இந்தியாவின் கால்களுக்கு இடையில் நெருப்பை வைப்பது போன்று ஆகிவிடும்.” இதை அவர் கூறியது 15 மே 2013 இல். மே 1 2014 அன்று சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் விரக்தியை பயன்படுத்தி அவர்களை மதம் மாற்றும் முயற்சிகளில் சவூதி முதல் பாகிஸ்தான் வரை உள்ளூர் தூய இஸ்லாமிய வஹாபிகள் ஊடாக ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக உருவாகிவரும் இந்த வலைப்பின்னல் மற்றொரு பெரும் அபாயம். இலங்கைத் தமிழர் விஷயத்தில் முந்தைய இந்திய அரசு நடந்து கொண்ட கேவலமான போக்குக்கு நாம் கொடுக்கப் போகும் பெரும் அபாய விலை  இது. பாகிஸ்தான் இலங்கை மலேசியா என விரியும் மற்றொரு வலைப்பின்னல் இது. அண்மைக்காலமாக மலேசியாவில் தமிழ் இந்துக்கள் தாக்கப்படுவதுடன் தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் வர்த்தக-பிரச்சார கேந்திரமாகவும் அது மாறியிருக்கிறதோ என்கிற ஒரு ஐயமும் எழுகிறது. அண்மையில் செய்யப்பட்ட சில பிரபல மதமாற்றங்கள் மலேசியாவை மையப்படுத்தி நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதைப் போலவே  சென்னை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஐஎஸ்ஐ அமைப்பின் இலங்கை சார்ந்த உளவாளி மலேசியாவில் இருந்து இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[62] அது போலவே சென்னையில் குண்டு வெடிப்பதற்கு இரு நாட்கள் முன்னர் ஐ எஸ் ஐ உளவாளி எனும் ஐயத்தில் ஸாகிர் ஹுசைன் என்பவனை காவல்துறை கைது செய்தது. ஸாகிர் ஹுசைன் இலங்கையைச் சார்ந்தவன்.[63]

ஸ்லீப்பர் கொலையாளிகள்: இந்து முன்னணி தலைவர் பாடி சுரேஷ் கொலைக்கு பிறகு மற்றொரு புதிய சவால் நீதி துறைக்கும் காவல்துறைக்கும் விடப்பட்டுள்ளது. இந்து தலைவர்களை கொலை செய்ய ஒரு முழு நேர புதிய இயக்கம் ஸ்லீப்பர் செல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு பெரிய அளவில் தொகையும் நெருங்க முடியாத அளவு அதிகாரம் படைத்தவர்களின் மூளையும் பின்னணியில் உள்ளதாக அதில் கைது செய்யப்பட்டுள்ளன. இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்பத்தூர் பாடியைச் சேர்ந்த நசீர் (28), கடலூர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த குத்புதீன் ஆகியோரில் குத்புதீன் இந்த உண்மைகளை சொல்லியுள்ளான். நசீரும் குத்புதீனும் கொலை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் நபரை கண்காணித்து அவரது அன்றாட நடவடிக்கைகளை கொல்ல சரியான நேரத்தை கூறுகிறவர்கள் என்பது தெரிகிறது. மற்றொரு அணி கொலையை நேரடியாக செய்வது. இதில் அலாவுதீன் என்பவன் கைதாகியுள்ளான்.[64]

போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், கிச்சான் புகாரி , அலி அப்துல்லா என இப்போது ஜிகாதி பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அணிகளின் முதன்மை கொலையாளிகள் ஏற்கனவே கொலை செய்தவர்கள். பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் அரசியல் நிர்ப்பந்தங்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள். killersநம் கண் முன்னரே வழக்குகள் பலவீனப்படுத்தப்பட்டு தொடக்க கைதுகளுக்கு பிறகு மிகவும் திட்டமிட்ட ரீதியில் விடுதலை செய்யப்பட்டவர்கள்.  இங்கு நடக்கும் விளையாட்டை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறையால் கைது செய்ய மட்டுமே முடியும். சில ஆண்டுகள் அல்லது மாதங்கள் மட்டும் இவர்களை அடைத்து வைப்பதும் பின்னர் அரசியல் நிலைகளுக்கு தகுந்து விடுதலை செய்வதும் தொடர்கின்றன. இவர்கள் வெளியே வந்து இந்துக்களை கொலை செய்கின்றனர். அரசியல் ரீதியாகவோ ஜிகாதி வலைப்பிணைப்புகள் மரணக்கயிறாக இந்து சமுதாயத்தை அமுக்குகின்றன.

ஏற்கனவே ஊடகங்களில் ஒரு கும்பல் இந்த வேலையை தொடங்கிவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தெகல்கா பிலால் மாலிக்கின் மனைவி குழந்தைகள் குறித்து படம் வெளியிடுவதும், போலீஸ் பக்ருதீனின் காதல் கதையை மவுண்ட்ரோட் மாவோ எனப்படும் தி இண்டு பத்திரிகை வெளியிடுவதும் எதற்காக?பயங்கரவாதிகளின் குடும்ப நபர்கள் -குறிப்பாக sob_storyபெண்கள் குழந்தைகள் படங்களை போட்டு அவர்களுக்காக ஒரு பரிவை உருவாக்கும் வேலை தொடங்குகிறது.நாட்கள் செல்ல செல்ல இந்த பிரச்சார ஓலம் அதிகமாகும். ஆனால் கடைசியாக என்றைக்கு நீங்கள் ஜிகாதி வெறியர்களின் தாக்குதலால் தந்தையை இழந்த குழந்தையின் சோகத்தை தி இண்டுவோ அல்லது பிற போலி-மதச்சார்பற்ற ஊடகங்களோ வெளியிட்டதை பார்த்தீர்கள்? இந்த ஊடக விலைபோகுதலும் பரிதாபம் உருவாக்கும் அவல உக்தியும் ஜிகாதின் ஒரு பகுதி. எப்படி கொலை செய்வதற்கு முன்னர் ஜிகாதி உளவு அமைப்புகள் வேவு பார்க்கின்றனவோ அப்படித்தான் கொலை செய்த பிறகு ஜிகாதி ஊடக அமைப்புகள் பரிவு உருவாக்கும் வேலையை பார்க்கின்றன. ஜிகாதியின் கொலை ஆயுதமும் போலி-மதச்சார்பற்ற ஊடகவாதியின் பேனாவும் காமிராவும் கொலைக்கருவிகளின் இருபக்கங்கள்.  இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எப்படி சீக்கியர்கள் தங்கள் குருக்களின் பலிதானங்களை தம் வீரர்களின் தியாகங்களை நினைவு கொள்கிறார்களோ அப்படியே தியாகி குமார பாண்டியனையும், பேராசிரியர் பரமசிவத்தையும், ஆடிட்டர் ரமெஷையும் பலிதானி வெள்ளையப்பனையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பலிதான தினங்கள் இந்து ஒற்றுமைக்கும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும் நாம் பிரதிக்ஞை எடுக்கும் தினங்கள் ஆக வேண்டும்.

இந்நிலையில் நாம் மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது இதைத்தான். காவல்துறை செய்யும் கைதுகளுக்கு அப்பால் இந்துக்களாகிய நமக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்து இயக்கங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்த வழக்குகளின் போக்குகள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்களால் இங்கு ஜிகாதி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காது என்பதை உணர்ந்தால் நிச்சயமாக இந்து இயக்கங்கள் அந்த வழக்குகளை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு எடுத்து சென்று விசாரிக்க அழுத்தங்கள் அளிக்க வேண்டும். மரண தண்டனை என்பது ஒரு பண்பட்ட சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் ஜிகாதி பயங்கரவாதம் போன்ற அபாயத்தை எதிர்நோக்கும் போது அதை வேரும் வேரடி மண்ணுமற களைய அந்த மரண தண்டனை இப்போது அவசியமே. எனவே ஜிகாதி பயங்கரவாதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு ஜிகாதியும் சரியான விதத்தில் தண்டிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களால் உயிரிழந்த நம் சகோதர சகோதரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கும் வரை நாம் விழிப்புடன் இருந்தாக வேண்டும். மோதி அரசே வந்துவிட்டதென்றாலும் அயர்ந்திருக்க நாம் அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியா ஒட்டுக்கும் இது பொருந்தும்.

 ***ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பலிதான தினத்தை முன்னிட்டு-அவர் நினைவுக்கு **

ஆதாரங்கள்:

[1] ஜூனியர் விகடன் 28-ஜூலை-2013
[2] தினகரன், 2-ஜூலை-2013
[3] தினகரன் (குமரி பதிப்பு), 26-ஏப்ரல்-2013
[4]‘One held in the recent assault on senior RSS cadre‘, Times of India, 16-Nov-2012
[5]’Vellore doctor done to death’, The Hindu, 25-Oct-2012
[6] Report on Islamic Terrorism in India, A study conducted by Akhil Bharathiya Vidhyarthi Parishad, Tamil Nadu, 1999
[7]‘41 years of imprisonment for four Al-Umma activists‘, The Hindu, 10-Apr-2008
[8]‘Al-Umma enjoyed AIADMK support, alleges BJP report’, The Indian Express, 26-Apr-1998
[9]`NDF received aid from foreign countries‘, The Hindu, 30-Oct-2005
[10]‘ISI, Iran funded NDF: Rawat‘, The Hindu, 14-May-2005
[11]Sunday 5-11-May-1995 referred in Srikanta Gosh, ‘Pakistan’s ISI: Network of Terror in India‘, APH Publishing, 2000, p.59
[12]’கோவை வன்முறை சம்பவம் மூன்று பேர் கைது’, தினமணி, 18-செப்டம்பர்-1997
[13]’வன்முறையைத் தூண்டும் சுவரொட்டி இருவர் கைது’, தினமணி 15-டிசம்பர்-1997
[14]’போலீஸ் நிலையம் தாக்கியதாக ஒருவர் கைது’, தினமணி, 2-ஜனவரி-1998
[15] மாலை முரசு, கோவை பதிப்பு, 28-ஜனவரி-1997
[16] A Ganesh Nadar,‘The Al-Umma has finally united the Hindus’, Rediff Special, Accessed: 23-Jul-2013).
[17] ’10 killed, 64 hurt in 3 train blasts’,UNI, 6-Dec-1997
[18] History of Coimbatore City Police:90s,https://www.coimbatorecitypolice.com/ccp-history-90s : accessed on 23-Jul-2013
[19]‘3 held for ABVP worker’s murder’, UNI, 13-Apr-1998
[20]’Chargesheet filed in Sridhar murder case’, The Hindu, 2-Mar-2000
[21]’The end of a chase’, Frontline, Vol.19 – Issue 21, Oct 12 – 25, 2002
[22]‘ All accused in Paramasivam murder case acquitted‘, The Hindu, 11-Jul-2002
[23]‘All 8 Al-Umma men acquitted in Selvaraj murder case’, The Hindu, 27-Feb-2003
[24]‘5 Al-Umma activists acquitted‘, The Hindu, 05-Apr-2003 and ‘ 11 Al-Umma men acquitted in bus burning case‘, The Hindu, 27-May-2003
[25]‘Syed Munir Hoda new Home Secretary‘, The Hindu, 13-Aug-2002
[26]’Jayalalithaa angers Tamil Nadu’s Muslims with remarks on Syed Munir Hoda‘, 23-Sep-2006, webIndia.com, accessed on 24-07-2013
[27] Thomas P Joseph Commission of Inquiry-Marad Communal Distrabances, Chapter IV, p.55
[28]‘Marad: tribunal examines NIA SP‘, The Hindu, 23-Mar-2011
[29]‘Fundamentalist outfit busted at Nellikuppam‘, The Hindu, 29-Oct-2004
[30]‘MHA confirms arrest of LeT’s southern commander Nazeer‘, India Today, 3-Dec-2009
[31]‘Kerala polls: UDF, LDF woo rabble-rousing Abdul Nasser Madani’, India Today,17-Apr-2006
[32]’DMK turns jail into spa for Coimbatore terror accused‘, The Indian Express, 23-Jul-2006
[33]‘DMK bends for MNP, Intelligence officer transferred’, The Indian Express,8-Aug-2006
[34]‘DMK govt ordered six cases dropped against Muslim hardliners in TN’, The Indian Express, 8-Aug-2006
[35] ‘மேலப்பாளையத்தில் ஏட்டு மீது தாக்குதல்’,தினகரன், நெல்லை பதிப்பு, 20-ஜூலை-2006.
[36]’6 Imam Ali aides shifted out of Madurai prison‘, The New Indian Express, 26-Nov-2006
[37] ’குமரி மாவட்ட பாஜக தலைவரை கொல்ல முயற்சி. ‘தீ வைத்து எரிப்போம்’ என மிரட்டல்’, மாலைமலர், நாகர்கோவில் பதிப்பு, 18-Dec-2006
[38]’TN: Hindu Munnani leader hacked to death’, Rediff News, 18-Dec-2006
[39]‘அழகிய பெண்களை குறிவைக்கும் அல் உம்மா’, தமிழன் எக்ஸ்பிரஸ், 14-May-2007
[40]‘In Tamil Nadu town, fundamentalists play moral cops, even kill to have way‘, The Indian Express, 26-Mar-2007
[41]’Inaugurated: The Malabar Moral Police!‘, 13-Jan-2010, www.kafila.org : accessed on 24-Jul-2013
[42]’I shall continue to serve minority communities”‘, The Hindu, 25-Sep-2007
[43]’தென்காசியில் கலவரம் : ஆறுபேர் கொலை’, மாலை மலர் (நெல்லை பதிப்பு),
[44]‘No ‘direct’ evidence in Coimbatore blasts: Judge’, IANS, 30-Oct-2007
[45]‘Men guilty of Coimbatore blasts released early from jail‘, NDTV.com, 17-Sep-2009: Accessed on 24-Jul-2013
[46]’Plot Unveiled’, Frontline, Volume 25 – Issue 17 :: Aug. 16-29, 2008
[47]’Eight acquitted in bomb blast case’, The New Indian Express, 22-May-2010
[48]‘PDP chief Madani arrested in Bangalore blast case’, PTI, 17-Aug-2010
[49]’Congress win bades well for Madani’, Arab News, 11-May-2013
[50]’Spa treatment for Madani costs govt Rs 8 lakh‘, Times of India, 8-Jun-2011
[51]‘Supreme Court denies bail to Bangalore blast accused Madani’, India Today, 3-Jan-2012
[52] https://mha1.nic.in/fcra/NGOS_ProhibitedCategory.pdf
[53] https://cbi.nic.in/pressreleases/pr_2011-10-05-1.php
[54]US consulate attack was unfortunate, but don’t regret that incident: TMMK chief Dr. Jawahirullah, Mohd. Ismail Khan, TwoCircles.net,20-Sep-2012
[55]பீர் ஷாகுல் ஹமீது, ”இதுவரை நடந்த 8 கொலைகளுக்கும் முஸ்லிம்தான் பலிகடாவா ? – ஓர் அலசல்”, www.appadiaa.com
[56]வசந்தன், ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள்!, ஜூலை-23-2013, வினவுதளம்
[57] பாஜ பிரமுகர் கொலை 4 பேர் பிடிபட்டனர், தினகரன், 7-ஏப்ரல்-2013
[58](வசந்தன், ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !, ஜூலை 23 2013, வினவுதளம்
[59]Al-Umma operatives say they killed two more BJP leaders in Tamil Nadu, Times of India, 10-10-2013
[60]வெடி பொருள்கள் பறிமுதல் வழக்கு: கிச்சான் புகாரி கூட்டாளி கைது, தி இந்து, பிப்ரவரி 24 2014
[61]Charitable trust served as terror front, say police, 24-Oct-2013, Deccan Herald
[62]Cops want ISI man held in Malaysia, Times of India, 29-May-2014
[63]Suspected ISI agent arrested in Chennai, The Hindu, 30-Apr-2014
[64]திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை: இரண்டு தீவிரவாதிகள் கைது, தினகரன், 19-07-2014

 

156 Replies to “தென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்”

  1. சுமார் 1800 வருடங்கள் பழமையான ஒரு கிறித்தவர்களின் சர்ச் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத சன்னி வஹாபி கும்பலால் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்த கிறித்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறிவிடுமாறும், இல்லையெனில் ஜிசியா எனப்படும் கூடுதல் வரியை கொடுக்கவேண்டும் எனவும், கொடுக்க முடியாதவர்கள் நகரை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லி பலரும் மோசூல் நகரை விட்டு வெளியேறவைத்து, அவர்கள் இப்போது அனாதையாக அலைகிறார்கள். இங்கே நமது சுவனப்பிரியன் போன்ற பொய்யர்கள் அது அன்புவழி என்று சொல்லி, ஐ எஸ் ஐ எஸ் க்கு ஆதரவாக சன்னி வஹாபி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்கிறார் . பாவம்.

  2. அத்விகா,

    //சுமார் 1800 வருடங்கள் பழமையான ஒரு கிறித்தவர்களின் சர்ச் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத சன்னி வஹாபி கும்பலால் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்த கிறித்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறிவிடுமாறும், இல்லையெனில் ஜிசியா எனப்படும் கூடுதல் வரியை கொடுக்கவேண்டும் எனவும், கொடுக்க முடியாதவர்கள் நகரை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லி பலரும் மோசூல் நகரை விட்டு வெளியேறவைத்து, அவர்கள் இப்போது அனாதையாக அலைகிறார்கள்//

    ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் மீதான குற்றச்சாடிற்கு தங்களிடம் ஏதவாது ஆதாரம் உள்ளதா… 1800 ஆண்டு பழமையான சர்ச்சை இடித்தது கொடுஞ்செயல் என்றால்.. 600 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் வானர படைகள் இடித்ததற்கு பெயர் என்ன?

  3. மிக அருமையான கட்டுரை. இந்து விரோதி கருணாநிதி – துரோகி இந்து ஜெயலலிதா ஆகிய இருவரின் பிடியில் மாறிமாறி சிக்குண்டு தமிழக இந்துக்கள் அல்லல்படுவது சரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக இதை இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் அனுவாதகம் செய்து மத்திய உள்துறை அமைச்சரின் பார்வைக்கு அனுப்பி வைத்தால் நல்லது.

  4. I was all along thinking that there is none to write on Indian Jihad by fanatic Muslims. It has come in fruition. Thanks Shri Aravindan Neelakantan
    Jihad is a MUST prescribed for every Muslim from 638AD onwards,

    the relevant Verse in Quran:
    9:28 (O you who believe! Verily, the Mushrikûn (unbeleivers) are Najasun (impure). So let them not come near Al-Masjid-al-Harâm (at Makkah) after this year);
    9:29 (Fight those who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya with willing submission, and feel themselves subdued.) 9:123 (Murder the kaffirs); 9:5 (Slay the idolaters); 47:4 (When you meet the unbelievers,
    It is the basic intention of Islam strike off their heads; then when you have made wide slaughter among them, carefully tie up the remaining captives)

    It is the basic intention of Islam to establish DAR-UL-iSLAM -world full of Islam from Dar-Ul-Harb -the world filled with non-believers of Islam, So the Muslims have to annihilate Kaffirs. The world belongs to Islam and Muslims are the rightful owners of the entire world — Quran 57:10)
    Quran 8.39 – Until all non–believers are killed or converted to Islam, Muslims should fight i.e Jihad

  5. தாயுமானவன் அவர்களே ,

    ஆதாரம் இதோ. கீழே உள்ள லிங்குக்கு செல்லுங்கள்.

    https://www.maalaimalar.com/2014/07/20121251/IS-burns-1800-year-old-church.html

    600- ஆண்டு பழைய கட்டிடத்தை இடித்ததைகூட யாரும் நியாயப்படுத்தவில்லை. உங்கள் ஒப்பீடு சிரிக்க வைக்கிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு யார் தவறு செய்தாலும் அதுபற்றி விவாதமும், கடுமையான விமரிசனமும் செய்ய இடம் இருக்கிறது. நீதிமன்றங்களில் 22 வருடங்களாக வழக்கு நடக்கிறது. நீதிமன்ற தீர்ப்பும் வந்த பின்னர், நீங்கள் இப்படி எழுதுவது வருந்ததக்கது.

    ஆனால், இராக்கில் இடிக்கப்பட்ட 1800- ஆண்டு பழமையான சர்ச் பற்றி எங்கேயாவது அந்த நாட்டில் நீதிமன்ற வழக்கோ, விசாரணையோ நடக்காது. ஜிசியா வரி கொடுக்காத கிறித்தவர்கள் , குடும்பத்துடன் மூட்டை முடிச்சுடன் வேறு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடுகிறார்கள். இதே நிலை தான் இந்தியாவில் கொடுங்கோலன் அவுரங்க ஜீப் போன்றோர் ஆட்சிக்காலத்திலும் நிலவியது.

    மேலும் உங்களுக்கு ஒரு மனோ வியாதி உள்ளது. ஒரு முஸ்லீம் தவறு செய்தால், ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயமே தவறு செய்ததாக கொள்ளக் கூடாது. அதேபோல ஒரு இந்து தவறு செய்தாலும், ஒட்டு மொத்த இந்துக்களும் தவறு செய்ததாக கொள்ளக்கூடாது. அயோத்தி கும்மட்டத்தை இடித்தவர்கள் ஒரு ஐம்பது பேர்தான் இருப்பார்கள். அவர்களும் அந்த இடிபாடுகளிலேயே சிலர் மரணம் அடைந்தனர். இன்று நாம் தெருவில் பார்க்கிறோம், பத்துப் பேர் வன்முறையில் இறங்கினால், வேடிக்கை பார்க்கும் லட்சம் பேரில் யாரும் போய்த்தடுக்க மாட்டார்கள். ஏனெனில் தடுக்க முயல்வோருக்கு நிச்சயம் ஆபத்து என்று அனைவரும் அறிவார்கள். உங்கள் மகன் அல்லது மகள் ஒரு தவறு செய்தால் , உங்கள் ஊரையே கொளுத்துவது நியாயமாகுமே ? தவறு செய்தவன் மீது வழக்கு தொடுத்து தண்டனை கொடுப்பது தான் முறை ஆகும். நான் சுட்டிக்காட்டுவது என்னவெனில் சர்ச்சை கொளுத்துவது நியாயம் அல்ல. ஈராக்கில் பல மசூதிகள் கூட ஐ எஸ் ஐ எஸ் ரவுடிகளால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த ரவுடிக்கும்பலை ஆதரிப்பது பெரிய பாவம்.

  6. அரவிந்தன் நீலகண்டன்

    ///”சையது அகமது பாஷாவால் உருவாக்கப்பட்ட அல்-உம்மாவுக்கு அஇஅதிமுக தலைவர்களில் சிலர் உட்பட, பல அரசியல் தலைவர்களின் ஆதரவு உள்ளது. ///

    அல்-உம்மாவின் நிறுவனர்கள் இருவர்.

    ஒருவர் எஸ்.ஏ. பாஷா என்று அறியப்பட்ட சையது அகமது பாஷா.
    மற்றவர் ஜவஹரிருல்லா …..

    பிறகு அதை தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கட்சி என்று பெயர் மாற்றினார்.

    அதுவும் ” மதத்தைக்” குறிப்பிடுவதால், “மனிதநேய” மக்கள் கட்சி என்று பெயர் வைத்து பசுத்தோல் போர்த்திக் கொண்டார்.

    இந்த மனித நேயர் இப்போது எம்.எல்.ஏ. ஜெயாவுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ ஆகி விட்டார். ஜெயா மாற்றி கருணா, கருணா மாற்றி ஜெயா என்று கூட்டணி வைக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் கோவைப் பிரசாரக் கூட்டத்தில் கருணாவுக்கு வலது பக்கத்தில் அமரவைக்கப் பட்டார். எந்தக் கோவையில் கருணாவின் ஆட்சிக் காலத்தில் 1998-இல் ஜவஹரிருல்லா துவக்கிய அல்-உம்மா குண்டு வெடிப்புச் செய்ததோ, அதே கோவையில் அதே கருணாவுடன் மேடையில் அவரது வலப் பக்கத்தில் உட்கார்ந்தார். கருணாவுக்கு வெட்கமில்லை. மானமில்லை. அறிவுமில்லை. அதே மேடையில் இந்த ஜவஹரிருல்லா ஜோராகக் கிட்ட, கருணா இந்தத் தமிழ் நாட்டில் மோடிகளை உள்ளே நுழைய விடமாட்டோம் என்று முழங்கினார். கருணாவுக்குத் தன்னிடம் வந்து உங்களுக்கு வாக்குக் கேட்கிறேன், அதற்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்லிவிட்டால், நரியிடம் காக்காய் ஏமாந்து வடை தோற்ற கதையை ஏமாந்து விடுவார். பதவி மீதான ஆசை அவரது கண்ணை மறைத்து விடுகிறது. ஒரு வன்முறையாளரை, தீவிரவாதியைக் கழுவிக் குளிப்பாட்டித் தன அருகில் அதுவும் வலது புறம் வைத்துக் கொண்டு, ஒரு தேசபக்தரைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடமாட்டோம் என்று சொல்லும் அளவுக்கு மூளை பிசகி விடும்.

    இந்த ஜவஹரிருல்லாவும், தவுகீத் ஜமாத்தின் ஜைனுல்லாபுதீனும்தான் தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் நச்சு மரங்கள். எத்தனை பன்னா இஸ்மாயில்களை, போலிஸ் பக்ருதின்களை, பிலால் மாலிக்குகளை, இமாம் அலிகளைப் பிடித்தாலும் பயனில்லை. ஜவஹரிருல்லாவும் ஜைனுலாபுதீன்களும் புதிய கொலைகாரர்களை, தீவிரவாதிகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.

    தவுகீத் ஜமாத்தின் ஜைனுலாபுதீன் உருவாக்கியவர்களில் ஒருவராகத்தான் நம்மிடையேயும் சுவனப்பிரியன்கள் உலவுகிறார்கள் என்பது அவரது பதிவுகளில் இருந்து தெரிகிறது.

  7. தாயுமானவன்

    ///ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் மீதான குற்றச்சாடிற்கு தங்களிடம் ஏதவாது ஆதாரம் உள்ளதா… 1800 ஆண்டு பழமையான சர்ச்சை இடித்தது கொடுஞ்செயல் என்றால்.. 600 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் வானர படைகள் இடித்ததற்கு பெயர் என்ன?////

    அதன் பெயர் எதிர்வினை.

    மிகவும் கால தாமதமாக நடந்த எதிர்வினை.

    கிட்டத் தட்ட 465 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த எதிர்வினை.

    ராம ஜன்மஸ்தான் கோவிலை முகலாயர் 1527 இல் இடித்ததற்கு எதிர்வினை.

    பொ.ச. 1527 இல் முகலாய ஆட்சியில் இடிக்கப்பட்ட ராம ஜன்மஸ்தானில் கட்டப்பட்டது அது. அதனை இன்றளவும் ஜன்மஸ்தான் மசூதி என்றுதான் சொல்லிவருகின்றனர். பாப்ரி மசூதி என்ற சொல்லாக்கம் இந்நாளைய அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது.

    இதே சென்னையில் கூட சமணக் கோவிலையும் இந்துக் கோவிலையும் இடித்துக் கட்டப்பட்ட மசூதி உள்ளாது. நேரில் வந்தால் காட்டுகிறேன். தொல்பொருள் துறை ஆய்ந்து அறியப்பட்ட இடம் அது. ஆதாரம் உளளது. பொது அமைதிக்காக இந்த விஷயத்தை மிகவும் பிரபலப் படுத்த விரும்பவில்லை.

  8. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்,

    படுகொலை செய்யப்பட்ட ஹிந்து இயக்க செயல்வீரர்கள் அனைவரும் குடிகாரர்கள், கந்துவட்டிக்காரர்கள், அயோக்யர்கள் என்றும் ……….அதே சமயம் இவர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்கு ஆளாகியுள்ள அனைவரும் காந்தியவாதிகள் …………… ரகுபதி ராகவ ராஜா ராம்………… ஈஸ்வர அல்லா தேரோ நாம் ………… என்று பஜனை செய்பவர்கள்…………என்றபடிக்குத்தானே போலி மதசார்பின்மை வாதிகள் சொல்லுவது வழக்கம்.

    வானர சேனை என்பது அநீதியை அழித்து நீதியை நிலை நாட்ட தங்கள் இன்னுயிரை அளித்தவர்களின் சேனை.

    சிவனடியாரான தாங்கள் பெரிய மனதுடன் ஆர்.எஸ்.எஸ் – ஹிந்துத்வ இயக்கத்தினரை வானரப்படை என்று பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றி.

    எனக்குத் தெரிந்து இதுவரை தமிழ் ஹிந்து தளத்தில் பகிரப்பட்ட வ்யாசங்களில்……….. பரிமாணத்திலும் குறிப்புகளுக்கான சான்றாதாரங்கள் அணுகப்பட்ட விஷயத்திலும் இது மிக நீண்ட வ்யாசம். இந்த வ்யாசத்தைப் பகிர்ந்த ஸ்ரீ அ.நீ ஹிந்துத்வ இயக்க செயல்வீரர். இதுவரை அவரை பிழைப்புவாதி என்று சுட்டாததற்கும் மனமார்ந்த நன்றி.

    பிணியாளர்களுக்கு மத்தியில் பணி செய்யும் செவிலியர் பெண்மணிகளது பணியை முடக்கி அவர்களைப் பிணைக்கைதிகளாக ஐஎஸ் ஐ எஸ் பிடித்து வைத்த அவலம் எந்த மதத்தில் அறநெறியாகச் சொல்லப்பட்டுள்ளது என்று சொல்வீர்களா? எனக்குப் பரிச்சயமான ஹைந்தவ கலாசாரத்தில் மூழ்கிய…… ஹிந்துஸ்தான சாஸ்த்ரீய சங்கீதத்திற்கு தலைமுறைகளாகத் தொண்டு செய்யும் ஷியா மற்றும் பரேல்வி மற்றும் தேவ்பந்தி சுன்னி இஸ்லாம் சமயத்தைச் சார்ந்த சான்றோர்கள் அனைவரும்………… இப்படிப்பட்ட அயோக்யத்தனத்தினை மிகக் கடுமையாக கண்டிக்கிறார்கள்.

    ம்…………அடிப்படை அற உணர்வு அவர்கள் அனைவருக்கும் இருக்கிறதே. தினம் ஐந்து முறை தொழும் சமய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் நல்லுணர்வும் அவர்களிடம் இருக்கிறதே. ஹிந்துஸ்தானத்தின் தொன்மையான இசையின் கலாசாரக்கூறுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஹிந்து – முஸ்லீம் என்று வேறுபாடு இல்லாமல் பகிர விழையும் மாண்பும் அவர்களிடம் இருக்கிறதே.

  9. இங்கே எவருக்கும், சு பி போன்றோருக்கு,

    1. சிரியாவில் 1,50,000 சுன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது கண்ணில் படாது.

    2. டார்பரில் கருப்பின முஸ்லீம்கள் அரபு முஸ்லீம்களால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டது கண்ணில் படாது.

    3. ஈராக்கின் சதாம் உசேன், குருது இன மக்கள் மீது நடத்திய வேதிஇயல் குண்டுகள் மூலம் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோர் கண்ணில்படாது.

    4. அல்குவேதா ஷியா பிரிவினர் மீது நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை கண்ணில் படாது.

    5. பலுச்சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுமழை பொழிந்து ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொல்வது கண்ணில் படாது.

    6. தெற்கு சூடானில் கருப்பின முஸ்லீம்கள் மீது அரபு முஸ்லீம்கள் நடத்திய இனப்படுகொலை கண்ணில் படாது.

    7. நைஜீரியாவில் இஸ்லாமிய போகோ ஹராம் அமைப்பு ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்களை கொல்வதும், பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று பாலுறவு அடிமைகளாக்க முனைவதும் கண்ணில் படாது.

    8. புதியதாக சிரியாவிலும், ஈராக்கிலும் உருவாகியிருக்கும் ஐ எஸ் ஐ எஸ் ரவுடிக் கும்பல் அங்கிருக்கும் கிறிஸ்துவர்களையும் ஷியா பிரிவினரையும் கொன்றொழிப்பதும், மசூதிகளை இடிபப்தும் கண்ணில் படாது.

    9. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் அனுப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் கூட கண்ணில் படாது. ஆனால், பதிலுக்கு இஸ்ரேல் அனுப்பும் ராக்கெட்டுகளில் இறப்பவர்கள் மட்டுமே கண்ணில் படும்.

    10. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், இறந்த இஸ்லாமிய சிறுவர்களின் படத்தைப் போட்டு, இஸ்ரேல் தாக்குதலில் இறந்த பாலஸ்தீனக் குழந்தை என்று இஸ்லாமிய வஹாபிய தீவிரவாதப் பொய்யர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்வதை சில தளங்கள் தோலுரித்து காட்டிவருகிறது. https://puthu.thinnai.com/?p=25986

    11. இந்த வஹாபிய தீவிரவாதிகளால் இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் சவூதி அரேபியாவிலும், அதனை சுற்றியுள்ள சுமார் 20 நாடுகளிலும் மக்கள் வாழமுடியாத பிரதேசம் ஆகி, அப்பகுதிகள் முழு சுடுகாடு/ புதைகுழியாகிவிடும் என்று அமைதி விரும்பும் நல்லவர்கள் அனைவரும் அஞ்சுகிறார்கள்.

  10. உயர்திரு தாயுமானவன்,

    //ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் மீதான குற்றச்சாடிற்கு தங்களிடம் ஏதவாது ஆதாரம் உள்ளதா… //

    அருள்கூர்ந்து கீழ்க்கண்ட லிங்கைப் பார்க்கவும். CNN செய்தி நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான செய்தி இது.

    https://www.cnn.com/2014/07/18/world/meast/iraq-isis-christians-threatened/index.html?hpt=wo_c2

    இதைப் பற்றி ஜனாப் சுவனப்பிரியனிடம் கேட்டதற்கு (தாங்கள் என்னைக் கேட்டுக்கொண்டபடி) அவர் CNN கதை அளக்கிறது என்று கூறிவிட்டார். உங்களுக்கு எப்படிப்பட்ட ஆதாரம் வேண்டும்?

  11. மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஏன் இவ்வளவு வெறி என்று தெரியவில்லை. அந்த சமூகத்தில் உள்ள பெரியவர்கள் இத்தகைய செயல்களை கடுமையாக கண்டிக்க வேண்டும்.

  12. சிக்கந்தர் பக்தின் வார்த்தைகளில்: “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை… திராவிட இயக்க தாக்கத்தால் இந்து விரோத தன்மை கொண்டதாக உள்ளது” . அவர் ஒரு இஸ்லாமியர் என்று நினைக்கிறேன். இருந்தும் அவருடைய கருத்தை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் சொல்லி இருக்கிறார். இக் கட்டுரை எழுதுவதற்கு மிக கடுமையாக உழைத்து இருக்கிறிர்கள். உங்கள் கட்டுரையில் ஆதாரத்துடன் நீங்கள் விளக்கி சொல்லி இருப்பது மிகவும் போற்றத்தக்கது.

  13. thank you for your essay. but there is one important think is missing. if muslims are always terrorist., then why want muslims are killed? who does kill the muslims. what did in hujarath, why was destroyed babary masjith? who destroyed it?

  14. அக்கறையோடு, பல காலகட்டங்களில் நம் இந்து சமுதாயத்திற்க்காக உழைத்த நமது இந்து இயக்க சகோதரர்களை ஒரே விதமாக கொலை செய்த வேற்றுமத பயங்கரவாத சம்பவங்களை அலசி ஆராய்ந்து தொகுத்தமைக்கு நன்றிகள். இதற்க்கெல்லாம் மூளையாக உள்ளது ஒரே அமைப்புதான் என்பது தெள்ள தெளிவாக தெரிகின்றது. நம்மவர்கள் வெறும் அஞ்சலி கூட்டங்கள் நடத்துவதோடு நின்றுவிடாமல், 5 விஷயங்களில் அக்கறை காட்டவேண்டும்.
    1. வழக்கு துரிதமாக நடைபெற எல்லாவித நிர்பந்தங்களையும்தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டும்.
    2. ஓட்டுக்காக இவர்கள் தேர்தல் நேரத்தில் இவ்வித வழக்கிற்கு மூடுவிழா நடத்த இனியும் நினைத்தால், நமது இயக்கங்கள்; தொடர்ந்து வழக்கினை சரியான திசையில் நடத்திச்செல்ல வேண்டும்.
    3. பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு, எல்லாவித பாதுகாப்பும் வழங்கவேண்டும். மாநில அரசு, அவர்களின் குடும்பத்தாருக்கு உதவ முன்வரவில்லை எனில், அதற்காகவும் நாம் நீதிமன்றத்தை அணுக தயாராக இருக்கவேண்டும். குண்டு வைத்தவனுக்கெல்லாம், ‘மறுவாழ்வு’ என்ற பெயரில் நமது வரிப்பணத்தில் இருந்து தொழில் தொடங்க பணம் கொடுத்துவிட்டு, நமது தேசத்திற்காக பணி செய்த ஒரே காரணத்திற்க்காக வெட்டி சாய்க்கப்பட்ட நம் சகோதரர்களின் குடும்பம் நடுத்தெருவில் நாதியற்று நிற்ப்பதை நாம் இனியும் வேடிக்கை பார்க்ககூடாது.
    4. இத்தனை அராஜகங்கள் நடந்த பின்பும், தங்களையே ஆகுதியாக்கி, களப்பணியாற்றும், அத்தனை இந்து சமய காவலர்களுக்கும் அரசு முழுமையான பாதுகாப்பு வழங்க, தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகவும் தயங்ககூடாது.
    5. இறுதியாக, நாம் ஒவ்வொருவரும் களப்பணியாற்றி நமது இயக்க கிளைகள் எல்லா கிராமங்களிலும் வேரூன்றி, ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் நம் சகோதர இந்துக்கள் விழிப்படைய செய்வோம். அதுவே நம் ஆருயிர் சகோதர பலிதானிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலி ஆகும்.

  15. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

    தனிப்பட்ட முறையில் சித்தாந்த ரீதியாக ஆப்ரஹாமியத்தில் கூறப்படும் இறைக்கருத்தாக்கத்துடன் எனக்கு அறவே உடன்பாடு கிடையாது.

    பாரதீய மெய்யியல் கோட்பாடுகளான ஷட்தர்சனங்கள், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் போன்றவை ஒன்றுடன் ஒன்று……சில விஷயங்களில் கருத்தொற்றுமை கொண்டும் சில விஷயங்களில் வேறுபட்டும் உரையாடியுள்ளன.

    ஆப்ரஹாமியம் ஹிந்துஸ்தானத்தில் வன்முறைகள் மூலமும் பித்தலாட்ட வழிமுறைகள் மூலமும் உள் நுழைந்த பின்னர் இங்குள்ள மெய்யியல் கோட்பாடுகளை எதிர் கொண்ட போது தன்னுடைய உருவகத்தையும் அது சீர்திருத்திக்கொண்டது. இது வரலாறு. ஆணித்தரமாக இஸ்லாமியர் மற்றும் க்றைஸ்தவர்களாலேயே பதிவு செய்யப்பட்ட வரலாறு. ஆப்ரஹாமியம் தன்னை சீர்திருத்திக்கொண்டது என்பது மட்டிலும் முக்யமில்லை. அப்படி சீர்திருத்தப்பட்ட ஆப்ரஹாமியமே ஹிந்துஸ்தானத்தின் வெகுஜன ஆப்ரஹாமியமாக புழங்கி வருகிறது. இதைச் சார்ந்த அன்பர்களுக்கு இந்த தேசத்தில் பிறந்து புழங்கிய மற்ற தர்சனங்களுடன் சித்தாந்த ரீதியில் பிணங்கியும் கலாசார ரீதியில் இணங்கியும் சஹஜமாகப் புழங்க முடிகிறது.

    அதே சமயம் வெளிநாட்டுப் பணத்தில் இயங்கும் இன்னொரு பயங்கரவாத ஆப்ரஹாமியம் இங்கு உள்ள தன்னுடைய பயங்கரவாத சித்தாந்தத்துக்கு ஒத்து வராத அனைத்து கோட்பாட்டுகளையும் ஒட்டு மொத்தமாக அழித்தொழிக்க திட்டமிட்டு வேலை செய்கிறது என்பது மறுக்க முடியாது. அதன் ஒரு கூறே ஸ்ரீ அ.நீ பகிர்ந்த தென்னக ஜிஹாத். இந்த பயங்கரவாதிகளுக்கு ஹைந்தவ தர்சனங்கள் மட்டிலும் குறி கிடையாது. தங்களுடன் வேறுபடும் தங்களது சஹோதர இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ சித்தாந்திகள் கூட அழிக்கப்பட வேண்டிய இலக்கு. எந்த அளவுக்கு வெறுப்பு என்றால் சஹோதர சித்தாந்திகளை முஸ்லீம் என்று கருதக்கூட இவர்கள் மறுப்பது. அதுமட்டுமின்றி மாறுபட்ட சித்தாந்தத்தவர்களின் வழிபாட்டிடங்களை குண்டு வைத்து தகர்ப்பது. மாற்று சித்தாந்த வாதிகளை வன்முறை மூலம் அழித்தொழிப்பது.

    மாற்று மதத்தைச் சார்ந்தவர்களின் வழிபாட்டு முறைகளை மதிக்க விழையும் ஹைந்தவ ஆப்ரஹாமியத்தைச் சார்ந்தவர்கள் நமது அண்ணன் தம்பி முறை கண்டிப்பாக ஆவர். ஆனால் தன்னுடைய அண்ணன் தம்பிகளையே அழித்தொழிக்கும் வெளிநாட்டு இறக்குமதி பயங்கரவாத ஆப்ரஹாமியம் ஹிந்துஸ்தானத்துக்கு மட்டிலும் குந்தகம் விளைவிக்கக் கூடியது அன்று. உலகத்திற்கே இது பெரும் கேடு.

    தமிழகத்து தேசவிரோதப் பிரிவினைவாத குழுக்கள் தேசத்தில் பெரும்பான்மையினரான முந்தைய ஆப்ரஹாமியரை விலக்கி பிந்தைய பயங்கரவாதக் குழுக்களையே தம் அண்ணன் தம்பியராக உறவாடி……….. அவர்கள் நமது சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், நமது மொழிகள், நமது ஆலயங்கள், நமது கலாசாரக்கூறுகள், ……….. இவை அனைத்தையும் மட்டில்லாமல் இழிவு செய்வது மட்டுமின்றி……… இவற்றை சுவடில்லாது அழித்தொழிக்க வழிவகை செய்கிறார்கள் என்பது என் புரிதல். தேச விரோதத் தமிழகத்துப் பிரிவினை வாத குழுச் செயல்பாடுகளில் தமிழும் இல்லை. தமிழகத்து சைவ, வைஷ்ணவ, பௌத்த, ஜைன சமயமும் இல்லை. பயங்கரவாத ஆப்ரஹாமிய அடிமைத்தனமும் ஆப்ரஹாமியப் பணமும் மட்டிலும் இருக்கிறது. மிக விரிவாகப் பேச வேண்டிய விஷயம் இது. இந்த பகிர்வு ஒரு முகவுரை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

  16. Jenab Hussain,

    \\ if muslims are always terrorist., then why want muslims are killed? who does kill the muslims. what did in hujarath, \\

    Nobody in this site has ever said that Muslims are always terrorists.

    But terrorist muslims are threat not only to Hindus but also to Muslims.

    Remember that In Gujarat during communal violence in 2002, both muslims and Hindus were murdered in both communal violence and subsequent firing by police.

    Khuda Hafiz.

  17. ///////600 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் வானர படைகள் இடித்ததற்கு பெயர் என்ன?/////////

    12 வது நூற்றாண்டில் நயச்சந்த்ரா என்ற ராஜாவால் கட்டப்பட்ட ராமர் கோவிலை இடித்து அதன் மீது ஒரு மசூதியை பாபர் கட்டினான். அதைத்தான் இவர்கள் இடித்தார்கள். ஒரு தவறை இன்னொரு தவறால் சரி செய்தார்கள். முஸ்லிம்கள் மற்ற மதத்தினரின் வழிபாட்டு தளங்களை இடிப்பதில் பேர் போனவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. சோமநாதபுர கோவிலை 17 முறை படையெடுத்து கொள்ளையடித்து அதன் பின்னர் இடித்தவர்கள் யார்? ஆப்கன்ஸ்தானில் புத்தர் சிலையை இடித்தவர்கள் யார்? 1992 பாபர் மசூதி இடிப்பிற்கு முன் காஷ்மீரில் 32 கோவில்களை இடித்தவர்கள் யார்?

    நமது நாட்டில் இப்போது தீவிரவாத முஸ்லிம்களுக்கு ஆதரவாக அனுசரணையாக பேசுவது ஒரு பேஷன் ஆகிவிட்டது அதை ஒரு நோய் என்று கூஅ சொல்லலாம்.
    அப்படிப்பட்ட ஒரு நோய் மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள வாக்கியத்தை உதிர்த்த புண்ணியவானுக்கு வந்துவிட்டதா? முஸ்லிம்கள் என்றால் முழுக்க முழுக்க நல்லவர்கள் உத்தமர்கள் என்றும் இந்துக்கள் என்றால் அயோக்கியர்கள் என்றும் இவரைபோன்றவர்களுக்கு நினைப்பு.

    1. பெங்களூர் விப்ஜியார் பள்ளியில் படித்து வந்த 6 வயது சிறுமியை கற்பழித்தவன் யார் தெரியுமா? முஸ்தபா என்ற நல்லவன் தான்.

    2. இம்ரானா என்ற 28 வயது முஸ்லிம் பெண்ணை (5 குழந்தைகளின் தாய்) கற்பழித்தவன் யார் தெரியுமா? அவளின் சொந்த மாமனார். அதை அந்த நல்லவனே ஒப்புகொண்டுள்ளான்

    3. கோவையில் 85 வயது கிழவி (சின்ன கண்ணு) ஷாஜஹான் என்ற tailor தொழில் செய்யும் நல்லவனுக்கு கொடுத்த 1000 ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்கு அவளது கன்னத்தில் அறைந்தான். அந்த அதிர்ச்சியில் அவள் இறந்தே போனாள்

    ஏன் இது போன்ற நிகழ்வுகள் இந்துக்களிடம் நிகழ்வதில்லையா என்று கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்துக்கள் என்றாலே அயோக்கியர்கள் என்று இவர்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளதே! முஸ்லிம்கள்தான் ஒழுக்கமானவர்கள், நியாயமானவர்கள் என்றும் . இஸ்லாம் என்றால் அமைதி ஆகவே அந்த மதத்தை கடைபிடிக்கும் அவர்கள் அமைதியானவர்கள் என்றும் இவர்களுக்கு நினைப்பு. இந்த அமைதி விரும்பிகள்தான்(HAMAS ) இஸ்ரேலிய நாட்டை சேர்ந்த 3 இளைஞர்களை 12-6-2014 அன்று Hebron நகரிலிருந்து கடத்தி சென்று பின்னர் கொன்று விட்டார்கள். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள். உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கிறான் ஈராக்கில் தவிக்கும் நம் நாட்டவரை அங்கிருந்து வெளியேற்ற இஸ்ரேல் நாடு தான் நமக்கு உதவியது. . அதை நாம் மறந்து விடகூடாது.

  18. Just a few minutes back I read this in F.B.which certainly invokes something…would like to share with our friends ……….
    Swami Vedanishthananda Saraswati:

    வாதம் நான்குவகை.

    விவாதம் – ஸமமானவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்காக புரிவது.
    ஸம்வாதம் – பெரியவரிடம் புரிந்துகொள்ள கேட்பது
    ஜல்பம் – நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்பது, நான் சொல்வதே சரி என்பது.
    விதண்டை – நீ சொல்வதெல்லாம் தப்பு என்பது.

    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. கேள்விகள் கேட்டால் நிறைய கேட்கலாம்.. ஆபிராமிய மதங்களை மூலத்தையே கிள்ளி எரிந்து விடலாம்..

    ஒரே கேள்வி.. மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை. ஒரே பிறப்புதான்.. அந்த ஒரே பிறப்பை, என்னை ஏன் ஹிந்துவாக பிறக்க வைத்தான் அல்லாஹ்? ஹிந்து தாய் தந்தைக்கு பிறந்தால், நான் ஹிந்துவாகத்தான் வளர்க்க படுவேன். யூதன் யூதனாக வளர்க்க படுவான். கிறிஸ்துவன் கிருதுவனாக வளர்க்க படுவான். பவுத்தான் பவுத்தனாக வளர்க்க படுவான்..

    இப்படி பலரை பல மதங்களில் ஒரே ஒரு பிறப்பு பிறக்க வைத்த அல்லாஹ், இஸ்லாமியர்களை ஏன் இஸ்லாமியர்கள் குடும்பத்தில் பிறக்க வைக்க வேண்டும். பிறந்த முதல் தன்னை வணங்கக்கூடிய வாய்ப்பை ஏன் அவன் தர வேண்டும். மற்றவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு இல்லை?

    அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? பிறப்பதற்கு முன்பு பாவம் செய்தார்களா? முந்தய பிறப்பே இஸ்லாத்தில் இல்லையே.. ஆக, அவர்களுக்கு கொடுக்காதா அந்த இஸ்லாம் குடும்பத்தில் பிறக்கும் வாய்ப்பை இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்து, அவர்களை மட்டும் சிறுவயது முதல் ஏன் தன்னை சுலபமாக வணங்க வைத்துள்ளான்? இப்படி எல்லாம் பாகு பாடு காட்டிய அல்லாஹ், ஹிந்துவாக பிறந்த ஒருவன், நல்லவனாக, கருணை உடையவனாக, நேர்மையாக பொய் திருட்டு, செய்யாமல், மற்றவர்கள் பொருளுக்கு ஆசை படாமல், யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல், ஏழைகளுக்கு இல்லாதவர்களுக்கு உதவிகள் புரிந்து தன தர்மம் சொல்கிறபடி வாழ்ந்து மடிந்தால், அந்த ஹிந்துவானவன் தன்னை வணங்காமல் , அவன் வேதம் சொன்ன இறைவனை வணங்கியதால் அவனை நரக தீயில் அல்லாஹ் தள்ளுவான் என்றால்.. அந்த அல்லாஹ் என்ற இறைவன் கருணை மிக்கவனா? அனைத்து ஜீவா ராசிகளிடம் சம நோக்கு உள்ளவனா?

    ஹிந்துவாக பிறந்த ஒருவன், இஸ்லாமியனாக மாறலாம் என்றால்.. அதனால் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றால்.. பாதியில் அவன் ஏன் மாற வேண்டும்? இஸ்லாமியர்களான நீங்கள் பிறப்பு முதல் இஸ்லாமியனாக அல்லாஹ் ஏன் படைக்க வேண்டும்? இப்படி நூறு கேள்விகள் உண்டு. கேட்டல் டவுசர் கிழிந்து விடும்.

    ந்துவாக பிறந்த நான் எதற்கு என் மூளையை பயன்படுத்தி உண்மையான இறைவனை அறிய வேண்டும்? இஸ்லாமியனாக பிறந்த நீங்கள், பிறந்த முதல் உங்கள் பெற்றோர்கள் அல்லாஹ்தான் இறைவன் என்று கூறி, அவனை அறிய மிக சுலபமான வாய்ப்பை அல்லாஹ் ஏன் தர வேண்டும்.

    பல ஆண்டுகள் பிறகு, ஒருவன், இஸ்லாத்தை படித்து, சிந்தித்து, தன குடும்பத்தை பகைத்து, சமுதாயத்தை பகைத்து ஏன் இஸ்லாத்தில் மாற வேண்டும்? உங்களை மட்டும் அல்லாஹ் பிறக்கும்போதே எதற்கு இஸ்லாமியனாக படைக்க வேண்டும்?உங்களையும் என்னையும் படைத்த அல்லாஹ் ஏன் இந்த பாகு பாடு காட்ட வேண்டும்? இதுதான் என் கேள்வி.. நண்பரே.. யார் மாறினார்கள் என்ற அறிவுப்பு எல்லாம் எனக்கு தேவை இல்லை. என் கேள்விகளுக்கு மட்டும் பதில் தாருங்கள்..

    அந்த அல்லாவை பற்றி சிந்திக்கும் திறன் ஹிந்துவாக கிருஸ்துவனாக யூதனாக, சீனன் ஜப்பானியனாக பிறந்ததால் கிடைக்க வில்லை.. கிடைத்தாலும் மிகவும் கஷ்ட பட்டு, படித்து அறிந்து அல்லாஹ்தான் கடவுள் என்று உணர வேண்டி உள்ளது.. என் கேள்வி.. இப்படி ஏன் அல்லாஹ் எங்களை படைக்க வேண்டும்.. இஸ்லாமியர்களான உங்களை இஸ்லாத்து தாய் தந்தைக்கு பிறக்க வைத்து, பிறந்த முதல், குர் ஆண், ஹதிஸ் படிக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும்?

    நீங்கள் முஸ்லிமாக பிறக்க காரணம் உங்கள் தந்தை. அப்போ நான் ஹிந்துவாக பிறக்க காரணம் என் தந்தை.. இதில் அல்லாஹ் வரவில்லையா? அப்படியென்றால் நாம் பிறப்பதற்கு அல்லாஹ் காரணம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?

    அந்த ஹிந்து தாய் தந்தைக்கு நான் ஏன் பிறக்க வேண்டும்? என்னை படைத்த அல்லாஹ் ஏன் என்னை இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறக்க வைக்க வில்லை. நான் என் அறிவை ஏன் வழுக்கட்டாயமாக பயன்படுத்தி அல்லாவை அறிய வேண்டும்? நீங்கள் தீர ஆராய்ந்து படித்து பெரியோர்களிடம் கேள்விகள் கேட்டு ஞானம் பெற்று, அல்லாஹ்தான் கடவுள் என்று அறிந்தீர்களா அல்லது, உங்கள் தாய் தந்தை வளர்ப்பினால் அல்லாஹ்தான் கடவுள் என்று அறிந்தீர்களா? உண்மையை கூறுங்கள் — with கிருஷ்ண பரமாத்மா and 2 others.
    1 ShareLikeLike · · Share

  19. திரு ஜனவி புத்திரன்!

    //ஒரே கேள்வி.. மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை. ஒரே பிறப்புதான்.. அந்த ஒரே பிறப்பை, என்னை ஏன் ஹிந்துவாக பிறக்க வைத்தான் அல்லாஹ்? ஹிந்து தாய் தந்தைக்கு பிறந்தால், நான் ஹிந்துவாகத்தான் வளர்க்க படுவேன். யூதன் யூதனாக வளர்க்க படுவான். கிறிஸ்துவன் கிருதுவனாக வளர்க்க படுவான். பவுத்தான் பவுத்தனாக வளர்க்க படுவான்..//

    இங்கு இறைவனை குற்றம் சொல்ல முடியாது. ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர்கள் இந்த உலகத்துக்கு. அதன் பின் நமது காலம் வரை இந்த உலகத்துக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான இறைத் தூதர்கள் மனிதர்களை நேர் வழிப் படுத்த வந்துள்ளார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தூதரை அனுப்பியுள்ளதாக குர்ஆனில் இறைவன் கூறுகிறான். ஆனால் மனிதனோ தனக்கு அருளப்பட்ட வேதத்தை சில காலத்துக்குப் பிறகு தனது வசதிக்காக மாற்றி விடுகின்றான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இறைத் தூதரான ஏசு நாதரை இன்று கிறித்தவர்கள் கடவுளாக மாற்றியதை பார்க்கிறோம். அவரும் நபிகள் நாயகத்தைப் போல ஒரு இறைத் தூதரே! அதே போல் இந்து மத வேதங்களும் ஏக தெய்வக் கொள்கையையே பறை சாற்றுகின்றன. ஆனால் அந்த வேதத்தை மொழி பெயர்க்காமல் தெருவுக்கு கடவுளை உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதூனே நமது தமிழர்களின் பண்பாடு. அதனைத்தானே இஸ்லாமும் போதிக்கிறது?

    ஒரு இந்துவுக்கு மகனாக பிறந்ததனால் நீங்கள் இந்துவுவாக உள்ளீர்கள். ஆனால் உங்கள் மூதாதையரில் யார் ஏக தெய்வ கொள்கையில் இருந்து பல தெய்வ கொள்கைக்கு மாறினாரோ அவரையே இறைவன் குற்றம் பிடிப்பான். ஆனால் உண்மை விளங்கிய பின்னும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தால் அவர்களை இறைவன் தண்டிப்பதாக கூறுகிறான். இந்த காலத்தில் உங்களுக்கு அனைத்து வேதங்களையும் பார்வையிட வசதியுள்ளது. இணையம் மிக அழகிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலக மதங்கள் அனைத்தையும் நமது உள்ளங் கையில் அடக்கி விடலாம். அந்த அளவு வசதிகள் வந்து விட்டது. இவ்வளவு வசதிகள் வந்த பின்னும் இத்தனை ஆதாரங்கள் இருந்த பின்னும் நான் எனது தாய் தந்தையர் வழியையே பின் பற்றுவேன் என்று அடம் பிடிப்பது யாருடைய குற்றம்? இதற்கு இறைவன் எப்படி பொறுப்பாவான்.

    இனி இறைவன் பேசுகிறான் அதனைக் கேளுங்கள்:

    இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் மாதிரி ஆகி விடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (குர்ஆன் 3:105)

    “நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)

    ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நல்லோருக்கு நன்மாராயங் கூறுவோராகவும் தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களுக்கிடையே ஏற்படும் விகற்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்களும் அத்தாட்சிகளும், வந்த பின்னரும் தம்மிடையே உண்டான பொறாமை, பகை ஆகியவற்றின் காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (2 : 213)

    “எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைத் தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் நபியே! உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்” (6 : 159)

    “அவர்களுக்கு (மார்க்க) விஷயத்தில் தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால் அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்”. (45 : 17)

    “நிச்சயமாக உங்கள் சமுதாயம் – வேற்றுமை ஏதுமில்லா ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் ரப்பு: ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்.
    ஆனால் பிந்தைய சந்ததியர் தங்கள் மார்க்கக் காரியத்தில் பிளவுண்டு (பல பிளவுகளாகப்) போயினர், (ஆனால் இறுதியில்) இவர்கள் யாவரும் நம்மிடையே மீள்பவர்களாக இருக்கிறார்கள்”. (21 : 92, 93)

    “நிச்சயமாக இதுவே (குர்ஆன்) என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான்” (6 : 153)

  20. Thanks AN Ji. Good incisive article, as usual.
    @JANAVI PUTHTHIRAN, excellent questions. Now, we have to wait for SP’s Taqqya on this.

  21. இவ்வளவு ஆதாரங்களையும் செய்திகளையும் தொகுத்து நீண்ட கட்டுரையாக்கியிருக்கும் மதிப்பிற்குரிய திரு. அ.நீ அவர்களது சிரத்தைக்கும் பெரும் உழைப்பிற்கும் தலைவணங்குகிறேன்.

    மனம் பதைக்க வைக்கும் அளவுக்கு இவ்வளவு கொடூரங்களை புரிந்தபிறகும்கூட, தங்களை பாதிக்கப்பட்டவர்கள்போல நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டுமல்லாமல் புகழ்பெற்ற ஒரு தமிழ்க்கவிஞனை, கொடும் வக்கிரத்தோடு ’இடுப்புக்குக்கீழே இயங்காதவனே’ என்றும், நாடறிந்த ஒரு நடிகனின் மகளை ‘நீ உன் அப்பனோடு படுக்க விரும்புகிறாயா’ என்றும் அதேபோல நாடறிந்த ஒரு திரை இயக்குனரை ‘நீ உன் குடும்பத்தினரை விபச்சாரம் செய்யவைக்கப்போகிறாயா’ என்றெல்லாம் வெளிப்படையாக விமர்சனம் செய்வதும் தமிழகம் போன்ற ஒரு இடத்தில்தான் நடக்கும் என்று நினைக்கிறேன்.

    ”ஆயுர்வேத மசாஜ் முதல் அத்தனை வசதிகளும் மதானிக்கு சிறைவாசத்தின் போது மக்கள் வரிப்பணத்தில் கிட்டியது.”

    இதுதான் உண்மையிலேயே குமட்டியது. தேவைப்பட்டால் எல்லா வேலையும் பார்த்திருக்கும்போல கருணாநிதி அரசு.

    இந்த ஒரு காரணத்திற்காகவேனும் வேரோடும் மண்ணோடும் தி.மு.கவும் அவரது குடும்பமும் அரசியலில் பூண்டோடு ஒழிந்துபடவேண்டும்.

  22. திருமதி. அத்விகா ….

    ஜெயலலிதாவையே கண்கண்ட தெய்வமாக புகழந்து காலை கழுவி குடிக்கும் தினத்தந்தி குழுமத்தின் ஏடான மாலை மலர் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றி பேசியதில் வியப்பொன்றுமில்லை.. CNN , Times போன்றவை மோடியை வரலாற்று நாயகனாக சித்தரிக்கும் பொழுது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மோசமான ஜிஹாதிகளாக இருப்பதில் ஐயம் வேண்டுமோ?

    இதே தினத்தந்தி, தினமலர்,தினமணி போன்ற பம்மாத்து ஊடகங்கள் அனைத்திலும் இந்திய செவிலியர்கள் அனைவரும் இந்தியாவிற்கு வரும் வரை அவர்களின் நிலை குறித்து என்னென்ன எழுதி தள்ளினார்கள் என்று இப்போது புரட்டினாலே இவ்வர்களின் ஊடக தர்மம் சந்தி சிரிக்கும். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் போது தாங்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று அவர்கள் கூறியதில் இருந்தே ஊடகத்தின் முகமூடி கிழித்து தொங்கவிட பட்டது.

    ஆதாரம் அவசியம் வேண்டுமானால் இதில் பார்க்கலாம்
    https://www.youtube.com/watch?v=9UfOmcGW1ik

    ஆனால் இப்போது இங்கு பிரச்சனை அதுவல்ல இசுலாமிய தீவிரவாதத்தை பற்றி விமர்சிக்கும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அவ்வளவு தகுதி இருக்கிறதா என்பது தான். நீங்கள் பாபர் மசூதியை இடித்தது நியாயப்படுத்த முடியாத செயல் என்கிறீர்கள். ஆனால், அடியவன் கூறுவதை பாருங்கள் மசூதியை இடித்தது 14ஆம் நூற்றாண்டில் பாபர் செய்த காரியத்திற்கான எதிர் வினையாம். இதே நிலைப்பாட்டை சமணர்கள் எடுக்க நேர்ந்தால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான கோவில்கள் எதுவும் மிஞ்சாது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    இங்கு யாரையும் நான் மொத்தமாக குறைகூறவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் வகாபியத்தை விமர்சிக்கும் பொழுது ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவத்தை அம்பலபடுத்துவது இங்கு அவசியமாகிறது. மற்றபடி நீதிமன்ற தீர்ப்பு என்னும் கோமாளி கூத்தை பேசுவதில் இங்கு எந்த பயனுமில்லை..

  23. நீதிமன்ற தீர்ப்பினை கோமாளிக் கூத்து என்று கூறும் உங்களுடன் விவாதிப்பதில் ஒரு பொருளும் இல்லை. வன்முறையை நியாயப்படுத்தக் கூடாது.

  24. திரு ஜனவி புத்திரன்!

    //ஒரே கேள்வி.. மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை//

    மறு பிறவி என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு வாழ்வு முறை நடைமுறை சாத்தியமில்லாதது. அது எப்படி என்று இனி பார்ப்போம்.

    மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

    இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர். நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

    இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

    மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

    அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

    மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

    பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

    புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

    அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

    இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

    ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

    அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

    இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?
    ————————————————————————————————-
    மறுஉலக வாழ்வைத்தான் இந்து மக்கள் மறு பிறவி என்று தவறாக விளங்கிக் கொண்டனர். அது பற்றி நான் முன்பு எழுதிய இடுகையை மீண்டும் மீள் பதிவு செய்கிறேன்.
    எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். நம் அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட ஒன்று. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டா? இல்லையா? இஸ்லாம் மறுமைக்குப் பின் வாழ்வு உண்டு என்று குர்ஆனில் பல இடங்களில் தெளிவாக்குகிறது. இதைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

    மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் ‘புனர் ஜென்மம்’, ‘பர்லோக்’ என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

    ‘இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல’ என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

    ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

    ‘மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.’
    -சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
    10 பக்கம்
    97 ஏப்ரல்

    மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

    ‘ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்’
    10 : 16 : 5 – ரிக் வேதம்

    ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
    21 : 35 – குர்ஆன்

    ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
    6 : 122 : 3 – அதர்வண வேதம்

    பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
    3 : 133 -குர்ஆன்

    மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
    43 : 70 -குர்ஆன்

    சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
    4 : 34 : 6 – அதர்வண வேதம்

    நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

    – ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

    மேலே நான் கொடுத்துள்ள இந்து மத வேத ஆதாரங்களும் இஸ்லாமிய வேத ஆதாரங்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இந்து மதமும் மறு உலக வாழ்க்கையை வலியுறுத்துகிறது. மறு பிறவி என்பது இந்து மத கோட்பாடு அல்ல. அது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒன்று என்று விளங்கிக் கொள்ளலாம்.

  25. // மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும். //

    முட்டாள்தனமான வாதம். இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்னவென்றால் ஆபிரகாமிய சிந்தனையில் தேகத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டினைப் பற்றிய விவேகமின்மை.

    வேதாந்தத் தத்துவவியல் கூறுவது இவ்வாறு… உயிரினங்கள் வெறும் தேகங்கள். அதுவும், நம் கண்ணுக்கு எட்டும் மனிதன், விலங்கு, தாவரம் போன்ற organic biological forms நம் இந்திரியங்களுக்கு (புலன்களுக்கு) எட்டும் தேக வடிவங்களே – தேகங்களில் ஒரு வகையே. அதீந்திரியமான (புலன்களுக்கு எட்டாத) தேகங்கள் பல பல உண்டு, லோகங்கள் பல பல உண்டு. அதைப் போலவே அண்டங்களும் பல பல உண்டு.

    மேலும், வேதாந்தம் கூறுவது என்னவென்றால், எண்ணிலடங்காத ஜீவான்மாக்கள், எண்ணிலடங்கா அண்டங்களில் ஏதோ ஒரு அண்டவெளியில், கண்ணுக்கு எட்டும்படியான வடிவங்களிலோ கண்ணுக்கு எட்டாத வடிவங்களிலோ பிறந்திறந்து கொண்டிருக்கின்ற. ஒரு மாபெரும் கடல் போன்ற இவ்வமைப்பில் இயங்கி வருகின்றன. அந்த அளவற்ற ஜீவான்மாக்களின் கடலிலிருந்து ஒரு ஓடை இறையருளால் பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு (பரமபதம், கைவல்யம் இப்படிப் பல பெயர்களில் வழங்கப்படும்) நிரந்தரமான மோட்ச ஸ்தானத்திற்குச் செல்கிறது. இந்த மாபெரும் சுழற்சியை ஒரு ஜன்னல் வழியாகப் பார்த்தால் சில சமையம் கடல் தண்ணீர் (உயிர்களின் எண்ணிக்கை) குறைந்திருப்பது போலவும் சில சமயம் அதிகரித்திருப்பது போலவும் தோன்றும். இந்த சிறு பூமியில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையைப் பார்ப்பது அப்படித் தான்.

    தத்துவவியலில் ஜீவான்மாக்களின் எண்ணிலடங்காமை, முன்பிறவிகளின் முடிவில்லா எண்ணிக்கை (அநாதி சம்சாரபந்தம்) ஆகிய இரு சித்தாந்தங்கள் இருந்தால் தான், “இறைவன் கருணையுள்ளவனாக பட்சபாதமற்றவனாக இருக்கும்பொழுது உலகத்தில் அப்பாவிகள் துன்பப்படுகிறார்களே?” என்ற தத்துவ ஆராய்ச்சிக்குத் தர்க்க ரீதியிலான பதில் கூற முடியும். இந்த அரிய தத்துவவியற் சாதனை நம் நாட்டில் சங்கரர் காலத்துக்குப் பல நூறாண்டுகள் முன்பே பாதராயணரின் பிரம்ம சூத்திரங்களிலே காணலாம். changarar

    மேலும், இந்த ஆராய்ச்சியில் “ஒரே பிறவி தான், மறுபிறவி கிடையாது” என்று முழங்கும் ஆபிரகாமிய மதங்கள் மூன்றும் (யூதம், கிறித்தவம், இஸ்லாம்) தர்க்க ரீதியில் அடிபடும். ஆகையால், “இதுவே உண்மையான மார்க்கம்” என்று கூவிக்கொண்டிருக்கும் இம்மூன்று மதங்களும் உண்மையான மார்க்கமாக இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு முட்டாள்தனத்தைப் பின்பற்றிவரும் மக்களின் எண்ணிக்கை பெருகி வந்தால் அந்த முட்டாள்தனம் உண்மையாகிவிடாது. இக்காலத்தில் அறிவிலிகள் மலிந்துக் கிடக்கின்றனர் என்பதற்கான அறிகுறியே அது.

  26. suvanappiriyan
    ஹிந்து மதத்திற்கென்று ஒரு standard code இல்லை இங்கு. யாரோ சொன்னார் , புக் இல் உள்ள நம்பர் சொல்லியது என்று இங்கு யாரும் அதை குருட்டுத்தனமாக ஃபாலொ பண்ணுவது இல்லை. மாற்ரபடி உங்களுக்கு காபீ பேஸ்ட் பன்ணாலம் நிறைய , உங்கள் கருத்தை ஒட்டி – அது எல்லாம் simple google search ல் கிடைப்பவை

  27. மலர்மன்னன் சொல்லுவார் , இங்கு இருந்து மதம் மாறுபவர்கள் முதலில் இழப்பது சுதந்திரத்தை என்று .. அது அவர்கள் தான் புக் சொல்லியது , நம்பர் சொல்லியது என்று சொல்லிக்கொண்டா இருக்கவேண்டும். ஹிந்துவுக்கு இல்லை

  28. மறுபிறவி இல்லை என்று மறுப்பவரின் பார்வைக்கு: “”இப்போது எவ்வாறு அவன் உங்களை படைத்துள்ளானோ இதே போன்று ‘மீண்டும்’ நீங்கள் படைக்கபடுவீர்கள்” (ஆதாரம் -குரான் 7 : 29) இதற்கு என்ன பொருள்?

    2. “”அவனே சிரிக்க வைக்கிறான் அழவும் வைக்கிறான். மரணிக்க செய்கிறான்.உயிர் அளிக்கிறான். செல்வனதனாக்குகிறான். சொத்துக்கள் அளிக்கிறான்.( 53 : 43-53)

    3) எல்லாவித ஆற்றலும் உடையவன் (54 -55) வரிசை எண் 2 மற்றும் 3 ல் உள்ள வசனங்களில் எல்லாவற்றிற்கும் அல்லா தான் காரணம் என்று தெரிகிறது.. அப்படியிருக்க ஒன்று இந்துக்களின் மனத்தை மாற்றவேண்டும். அல்லது இந்துக்கள் அனைவரையும் மலடிகளாக மலடுகலாக ஆக்கி அந்த இனமே அழிந்து போக செய்யவேண்டும். அந்த ஆற்றல் உடையவன் தானே அல்லா? அவ்வாறு அவர் செய்யட்டுமே!
    ////////// நிச்சயமாக இதுவே (குர்ஆன்) என்னுடைய நேரான வழியாகும்//////// குர் ஆன் நேரான வழியோ அல்லது கோணையான வழியோ நமக்கு தெரியாது. ஆனால் குரானை படித்து அதன் நடப்பதாக டுபுக்கு விடும் பேர்வழிகள் நேரான ஆட்கள்தானா? Triplicane ஐ சேர்ந்த முகமது ஷெரிப் (25) என்பவர் குவைத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒரு கிறிஸ்தவ பெண்ணை காதலித்தார். ஆனால் அந்த பெண் அவர் காதலை மறுத்து விட்டாள் அந்த முகமது ஷெரிப் குரான் படித்து நேரான வழியில் செல்லும் ஆளாக இருந்தால் “சீச்சி இந்த பழம் புளிக்கும்” என்று விட்டு விட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த பெண்ணை அந்த நிறுவன CEO இணைத்து கேவலமான photos களை மின்னஞ்சலில் அனுபியுள்ளான் இதுதான் நேர்வழியா? கூறும்.

  29. ஹானஸ்ட் மேன்!

    //மறுபிறவி இல்லை என்று மறுப்பவரின் பார்வைக்கு: “”இப்போது எவ்வாறு அவன் உங்களை படைத்துள்ளானோ இதே போன்று ‘மீண்டும்’ நீங்கள் படைக்கபடுவீர்கள்” (ஆதாரம் -குரான் 7 : 29) இதற்கு என்ன பொருள்?//

    இதில் உங்களுக்கு என்ன குழப்பம்? இந்த உலகத்தில் நாம் வாழும் போது இறைவனால் ஒரு உருவம் கொடுக்கப்படுகிறோம். உருவம் கொடக்கப்பட்ட அந்த மனிதன் இறந்து மண்ணோடு மண்ணாகி விடுகின்றான். அதன் பின்னர் மறுமை நாளில் அவன் உலகில் எந்த உருவத்தில் வாழ்ந்தானோ அதே உருவத்தில் திரும்பவும் உயிர் கொடுக்கப்படுவான் என்கிறது குர்ஆன். இதில் உங்களுக்கு என்ன குழப்பம்? இந்த வசனம் நீங்கள் கூறும் மறு பிறவியை எப்படி ஆதரிக்கும்?

    //எல்லாவற்றிற்கும் அல்லா தான் காரணம் என்று தெரிகிறது.. அப்படியிருக்க ஒன்று இந்துக்களின் மனத்தை மாற்றவேண்டும். அல்லது இந்துக்கள் அனைவரையும் மலடிகளாக மலடுகலாக ஆக்கி அந்த இனமே அழிந்து போக செய்யவேண்டும். அந்த ஆற்றல் உடையவன் தானே அல்லா? அவ்வாறு அவர் செய்யட்டுமே!//

    நீங்கள் கேட்பது விதி சம்பந்தமான கேள்வி. இந்த விதியைப் பற்றி அதிகம் சர்ச்சை செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டுள்ளார். இருந்தாலும் ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். இன்றும் நேற்றும் நடந்த எனது விதியைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். நாளை என்ன நடக்கும் என்ற விதி எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு 10 நாளில் நான் இறந்து விடுவேன் என்ற விதி எனக்கு தெரிந்திருந்தால் என்னால் மற்ற நாட்களை சுகமாக கழிக்க முடியுமா? எனவே இந்த விதியைப் பற்றிய ஞானம் நமக்கு மறைவாக்கப்பட்டுள்ளது நமது நன்மைக்காகவே. இது பற்றி குர்ஆன் கூறுகிறது

    ‘உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.’
    -குர்ஆன் 57:23

    முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகள் குறைவாக இருப்பதற்கு இந்த வசனத்தை நம்புவதுதான் காரணம். எவ்வளவு துன்பம் வந்தாலும் ‘நம் விதியில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது’ என்று கூறி தனது பாரத்தை முஸ்லிம்கள் இறைவன் மேல் இறக்கி வைத்து விடுவார்கள். உலகம் முழுவதிலும் தற்கொலை விகிதத்தில் முஸ்லிம்கள் பின் தங்கியிருப்பதற்கு அசைக்க முடியாத இந்த இறை நம்பிக்கையே காரணம்.

    ‘மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழியில் நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்ல என்று முஹம்மதே! கூறுவீராக’
    -குர்ஆன் 10:108

    இந்த வசனத்தின் மூலம் விதியை காரணம் காட்டி மனிதர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. எது நேர் வழி, எது தீய வழி என்று பகுத்து காட்டப்பட்டு விட்டது. எனவே ஒருவன் தீய செயல் செய்தால் அச்செயலுக்கு அவனே பொறுப்பாளி.

    எல்லோரையும் நல்லவர்களாகவே படைத்து விட்டால் பிரச்னையே இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். இப்படி ஒரு அமைப்பை ஏன் இறைவன் ஏற்படுத்தினான் என்ற விபரம் சொல்லப்படவில்லை. அது நமது நன்மையைக் கருதியும் கூட இருக்கலாம். இதற்கான விடையை மறு உலக விசாரணையில் இறைவன் தெளிவு படுத்துவான். அது வரை பொறுப்போமே!

    //ஆனால் அந்த பெண்ணை அந்த நிறுவன CEO இணைத்து கேவலமான photos களை மின்னஞ்சலில் அனுபியுள்ளான் இதுதான் நேர்வழியா? கூறும்.//

    முஸ்லிம்கள் அனைவரும் பத்தரை மாற்று தங்கங்கள் என்று நான் எங்குமே சொல்லவில்லை. இது போன்று தவறாக நடப்பவர்களிடம் தொழுகை போன்ற இஸ்லாமியருக்கு உரிய நல்லொழுக்கங்கள் இல்லாதிருப்பதை பார்க்கலாம். எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். இது போன்று சமூகங்களில் உள்ள தீயவர்களை இறைவன் தண்டிப்பான் என்ற உண்மையை உணர்த்தி அவர்களை நேர் வழிப் படுதத வேண்டும். அந்த சமூகப் பொறுப்பு எனக்கும் உள்ளது உங்களுக்கும் உள்ளது.

  30. திரு பாண்டியன்!

    //ஹிந்து மதத்திற்கென்று ஒரு standard code இல்லை இங்கு. யாரோ சொன்னார் , புக் இல் உள்ள நம்பர் சொல்லியது என்று இங்கு யாரும் அதை குருட்டுத்தனமாக ஃபாலொ பண்ணுவது இல்லை.//

    பிறகு எதற்கு கோவிலில் சென்று சாமி கும்பிடுகிறீர்கள்? அந்த சாமியைக் கும்பிடும்போது சமஸ்கிரதத்தில் ஸ்லோகங்களை ஒரு பார்பனரை சொல்ல வைத்து அவரிடமிருந்து பிரசாதமும் வாங்கிச் செல்கிறீர்கள். கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும். எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். என்று கட்டளைகளை நீங்கள் பின் பற்றுவதில்லையா?

    மனு ஸ்ருமிதி ஒரு இந்து எப்படி நடக்க வேண்டும். ஒரு பார்பனரிடம் மற்ற சாதி இந்துக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளதே! திருமணம் இப்படித்தான் செய்ய வேண்டும். என்று சட்டங்கள் வரிசையாக உள்ளதே. ஆக உலகின் எந்த மதமாக இருந்தாலும் அந்நந்த மதத்துக்கென்று சில சட்டங்கள்: சில சம்பிரதாயங்கள் இருந்தே வருகிறது. இந்து, முஸ்லிம், கிறித்தவ, யூத மதத்தவர் அதனை (உங்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்) குருட்டுத் தனமாக பின்பற்றியே வருகின்றனர். இதற்கு இந்து மதம் மட்டும் விதி விலக்கன்று.

  31. //மலர்மன்னன் சொல்லுவார் , இங்கு இருந்து மதம் மாறுபவர்கள் முதலில் இழப்பது சுதந்திரத்தை என்று ..//

    எனது மூதாதையர் முன்பு இந்துக்கள். இன்று நான் ஒரு முஸ்லிம். இப்படி இஸ்லாமுக்கு மாறியதால் நான் எந்த சுதந்திரத்தை இழந்து விட்டேன் என்று மலர் மன்னன் ஆதங்கப்படுகிறார். கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி, திருமணம், பொருளீட்டுதல் என்று எந்த துறையிலும் நான் இஸ்லாமியன் என்பதால் பின் வாங்கவில்லை. எனது சுதந்திரத்தை இழக்கவுமில்லை. சொல்லப் போனால் இப்பொழுதுதான் எனக்கு அதிக சுதந்திரமும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது.

    நான் இந்துவாகவே இருந்திருந்தால் ஸ்ரீரங்கம் கோவிலின் கருவறைக்குள் எங்களையும் அனுமதியுங்கள் என்று இன்று கும்பலாக கோஷம் போட்டுக் கொண்டிருப்பேன். பக்தி முத்திப் போய் திருமணத்தையும் வெறுத்து இந்து மதம் காட்டும் சாமியாராகக் கூட மாறியிருப்பேன்.(நித்தியானந்தவைப் போல் ஒரு ஆசிரமத்தையும் இது வரை உண்டாக்கியிருப்பேன்) 🙂 தேரை அந்த சாதி இழுப்பதா அல்லது இந்த சாதி இழுப்பதா என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பேன். அர்ச்சகராக பட்ட படிப்பு படித்த பின்னும் கோவில்களில் எங்களை ஏன் ஆனுமதிப்பதில்லை என்று ஒவ்வொரு கோர்டாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பேன். இரட்டை குவளை முறை, அக்ரஹார ஒதுக்கல், பொது குளத்தில் தண்ணீர் எடுக்க தடுத்தல் என்று தலித்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டித்து போராட்டமெல்லாம் நடத்திக் கொண்டிருப்பேன். சிதம்பரம் கோவிலில் தமிழில் இறைவனை பாட போராட்டம் நடத்திக் கொண்டிருப்பேன். வன்னியர்களும், தேவர்களும் தலித்களுக்கு வருடா வருடம் இழைத்து வரும் கொடுமைகளை தட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

    ஆனால் அதற்கெல்லாம் இன்று அவசியம் இல்லை. ஏனெனில் நான் இன்று ஒரு இஸ்லாமியன். இதற்காக எனது மூதாதையருக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கும் நன்றி செலுத்திக் கொள்கிறேன்.

    மலர் மன்னன் என்னை ‘பேராண்டி’ என்று செல்லமாக அழைப்பார். ஆனால் இன்று அவர் நம்மிடம் இல்லை. அறியாமல் செய்த அவரது பாவங்களை மன்னித்து இறைவன் அவரை பொருந்திக் கொள்வானாக!

  32. //பிறகு எதற்கு கோவிலில் சென்று சாமி கும்பிடுகிறீர்கள்? அந்த சாமியைக் கும்பிடும்போது சமஸ்கிரதத்தில் ஸ்லோகங்களை ஒரு பார்பனரை சொல்ல வைத்து அவரிடமிருந்து பிரசாதமும் வாங்கிச் செல்கிறீர்கள். கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும். எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். என்று கட்டளைகளை நீங்கள் பின் பற்றுவதில்லையா? //

    இந்தக் கருத்தும் சொல்லுகின்றது. உங்களுக்கு ஹிந்துமத துவேசம் தான் உள்ளது, அதை பற்றிப் புரிந்துகொள்ள அக்கறை இல்லை என்று. இப்பொழுது புரிகின்றதா மலர்மன்னன் சொன்னது எந்த அளவு உண்மை என்று …ஆனால் ஒன்று ஹிந்துவில் பிராமணனும், முஸ்லிமில் ஷியாவும் உங்களுக்கு வேண்டாத மனிதர்கள் என்று. இதை திண்ணையிலும் சரி, இங்கும் சரி பல முறை வெளிச்சம் போட்டு விட்டீர்கள்.

  33. //தேரை அந்த சாதி இழுப்பதா அல்லது இந்த சாதி இழுப்பதா என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பேன். அர்ச்சகராக பட்டப் படிப்பு படித்த பின்னும் கோவில்களில் எங்களை ஏன் ஆனுமதிப்பதில்லை என்று ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பேன். இரட்டைக் குவளை முறை, அக்ரஹார ஒதுக்கல், பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க தடுத்தல் என்று தலித்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைக் கண்டித்து போராட்டமெல்லாம் நடத்திக் கொண்டிருப்பேன். சிதம்பரம் கோவிலில் தமிழில் இறைவனைப் பாட போராட்டம் நடத்திக் கொண்டிருப்பேன். வன்னியர்களும், தேவர்களும் தலித்களுக்கு வருடா வருடம் இழைத்து வரும் கொடுமைகளை தட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்//

    இதைவிட கேவலமாக அசிங்கமாக அருவருப்பாக முஸ்லிம்களில் இருக்கின்றதே. அதற்க்கு என்ன செய்தீர்கள்? உயிரை விட்டீர்களா? இல்லை மாற்று மதம் ஓடீனீர்களா?

  34. சுவனப்பிரியனுக்கு இஸ்லாமும் புரியவில்லை, இந்துமதமும் புரியவில்லை. பாவம். இந்துக்களுக்கு மனுஸ்மிருதி என்பது வேதப்புத்தகம் அல்ல. மேலும் வேதம் என்பதை ஏற்காதவர்களே இந்துமதத்தின் 90 சதவீதம். இதெல்லாம் ஆபிரகாமியருக்கு புரிய வழியே இல்லை.

    கோயிலில் எவ்வளவு சுற்று சுற்ற வேண்டும் என்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. முடிந்தவன் 100 சுற்று சுற்றலாம். முடியாதவன் வீட்டிலேயே இருந்துகொண்டு, உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்று இருக்கலாம். இந்துக்களுக்கு தலைவன் இறைவனே. அந்த இறை நம்பிக்கை இல்லாத இந்துக்களுக்கும் இறைவனே தலைவன்.

    மேலும் எவனோ எழுதிவைத்ததை புனித நூல் என்று தூக்கிவைத்துக்கொண்டு, சிறிதும் பகுத்தறிவு இல்லாமல், அதனைப் பின்பற்றவேண்டிய நிர்ப்பந்தம் இங்கு யாருக்கும் கிடையாது. இந்துக்களின் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்- எங்கும் நிறைந்தவன்- அவர் சொர்க்கத்திலும் கூட இருக்கிறார். நரகத்திலும் கூட அவரே இருக்கிறார். இதனையெல்லாம் புரிந்துகொள்ள, முகபடாம் அணிந்துள்ள குதிரை போன்று இருக்கும் ஆபிரகாமியருக்கு இயலாது. ஏனெனில் முகபடாத்தினை அகற்றிவிட்டுப் பார்த்தால் தான் உண்மை புரியும்.

    திருமணத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறும் சட்டம் எதுவும் இந்துக்களுக்கு கட்டாயம் கிடையாது. சுவனப்பிரியன் ஒரே பொய்களை அளந்துவிடுகிறார். மரத்தடியிலே இருக்கும் பிள்ளையார் முன்பும் திருமணம் செய்யலாம். பெரிய கல்யாண மண்டபங்களிலும் திருமணம் செய்யலாம். பலவகை திருமணம் உள்ளது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். மேலும் பகுத்தறிவு திருமணம் என்று கூட இங்கே செய்துகொள்ளலாம். கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகரை உயிருடன் வாழ அனுமதிப்பது எங்கள் நாட்டில் தான். இஸ்லாமோ, நாத்திகரை உடனே கொல்ல கட்டளை இட்டுள்ளது.

    கருவறையில் நுழைவதனைப் பற்றி பேசும் யோக்கியதை உங்களுக்கு கிடையாது. ஏனெனில் நீங்கள் உங்கள் மசூதியிலும், மதத் தலைமை முல்லாக்கள் பதவியிலும், பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு செய்து கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் மற்றவர்களைப் பற்றி பேச யோக்கியதை வரும் என்பதை உணர வேண்டும். ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும். ஆணுக்குக் கொடுக்கும் சொத்தில் பாதியை மட்டுமே கொடுக்கும் நீங்கள் பேசவே யோக்கியதை கிடையாது. ஆணாதிக்க வெறியர்கள் நீங்கள்.

  35. ” நான் இந்துவாகவே இருந்திருந்தால்- கும்பலாக கோஷம் போட்டுக் கொண்டிருப்பேன். பக்தி முத்திப் போய் சாமியாராகக் கூட மாறியிருப்பேன். தேரை அந்த சாதி இழுப்பதா அல்லது இந்த சாதி இழுப்பதா என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பேன். கோவில்களில் எங்களை ஏன் ஆனுமதிப்பதில்லை என்று ஒவ்வொரு கோர்டாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பேன். கொடுமையை கண்டித்து போராட்டமெல்லாம் நடத்திக் கொண்டிருப்பேன். தமிழில் இறைவனை பாட போராட்டம் நடத்திக் கொண்டிருப்பேன். ,, ஆனால்……. இறைவனின் பெரும் கருணையினால், இன்று எமது இஸ்லாமிய சகோதரர்கள்,எம் குலபெண்களை கல்லால் அடித்து கொல்வதையும்,தங்களுக்குள் அடித்துகொண்டு சாவதையும், பிற மசூதிகளுக்கும்,வழிபாட்டு தளங்களுக்கும் வெடி குண்டு வைத்து தகர்பதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இவையா அதிக சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் தரும் செயல்கள்?

  36. எவ்வளவு பேசியும் பலனில்லை-ஆர். எஸ்.எஸ்-மறுபடியும் வீறுகொண்டு எழாதவரை இந்துவுக்கு பாதுகாப்பு இல்லை…குழல்

  37. //எவ்வளவு பேசியும் பலனில்லை-ஆர். எஸ்.எஸ்-மறுபடியும் வீறுகொண்டு எழாதவரை இந்துவுக்கு பாதுகாப்பு இல்லை…குழல்//

    பதில் இல்லா விட்டால் உங்களின் கடைசி ஆயுதம் வன்முறை வழி. அது தெரிந்ததுதானே! ஆனால் பெரியார் மண்ணில் அந்த கனவு பலிக்காது.

  38. வன்முறையைப் பற்றி சுவனப்பிரியன் பேசுவது ஒரே நகைச்சுவை. பெண்களை கல்லால் அடித்துக்கொல்லும் கும்பல் இப்படிப் பேசுவது வெட்கமாக இல்லையா ? ஷியா மசூதிகளையும், சுபி ஞானிகளின் தர்காக்களையும் தினசரி தகர்க்கும் வஹாபி குருடர்கள் வன்முறையை பற்றி பேசுவது சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஷியா, அகமதியா, போன்ற இனங்களை தினசரி வேட்டை ஆடி கொன்றுவரும் வகாபிக்கள் விரைவில் இறைவனால் ஒழிக்கப்படுவார்கள்.

  39. //பெரியார் மண்ணில் //

    ஹிந்துகள் நாங்கள் ஒரு வேலை அவர் மண் இவர் மண் என்று பகுத்தரிவோடு எர்ருகொள்வோம் . முஸ்லிம்கள் அவர் மண் இவர் மண் என்று சொல்லத்தயாரா ? அப்படியே அவர்கள் சொன்ன அது என்ன அரை என்னா என்ற புனித வார்த்தாயைம் முஸ்லிம்கள் உண்மைதான் என்று சொல்ல தயாரா ?

  40. திரு கதிரவன்!

    //கருவறையில் நுழைவதனைப் பற்றி பேசும் யோக்கியதை உங்களுக்கு கிடையாது. ஏனெனில் நீங்கள் உங்கள் மசூதியிலும், மதத் தலைமை முல்லாக்கள் பதவியிலும், பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு செய்து கொடுத்துவிட்டு, அதன்பிறகு தான் மற்றவர்களைப் பற்றி பேச யோக்கியதை வரும் என்பதை உணர வேண்டும். ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும். ஆணுக்குக் கொடுக்கும் சொத்தில் பாதியை மட்டுமே கொடுக்கும் நீங்கள் பேசவே யோக்கியதை கிடையாது. ஆணாதிக்க வெறியர்கள் நீங்கள்.//

    இஸ்லாமிய சட்டங்கள் சரியாக தெரியாததால் முன்பு தமிழகத்தில் பெண்களை மசூதிக்குள் அனுமதிக்காமல் இருந்தனர். ஆனால் தற்போது இஸ்லாம் பெண்களை மசூதிக்குள் வருவதை தடுக்கவில்லை என்ற சட்டத்தை விளங்கியவுடன் இன்று தமிழகமெங்கும் பெண்கள் அதிக அளவில் பள்ளிக்கு வருகின்றனர். ரமலானில் இரவுத் தொழுகையில் பெண்களின் கூட்டம் அலை மோதுவதை ஒவ்வொரு பள்ளியிலும் நீங்கள் பார்க்கலாம். மெக்காவில் கஃபாவில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே தொழும் காட்சிகளை நேரலைகளில் பார்க்கலாம்.

    அடுத்து பள்ளியின் இமாமாக பெண்களை நியமிக்க சொல்கிறீர்கள்.

    ‘சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு’-குர்ஆன் 4:32

    இதன் மூலம் ஆண்களுக்கு சில சிறப்புகளும் பெண்களுக்கு சில சிறப்புகளும் உள்ளதாக இறைவன் கூறுகிறான். அதன்படி பள்ளியின் தொழுகைக்கு தலைமை தாங்க ஆண்களையே இறைவன் தேர்ந்தெடுத்துள்ளான். பெண்களை இமாமாக நியமித்தால் மாதத்தில் 3 நாட்கள் அவர்களால் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்படலாம். குழந்தை பராமரிப்பு, வீட்டை பாதுகாத்தல் போன்ற பணிகளும் அவர்கள் இமாமாக தினமும் நிற்க தடையாக இருக்கும். இதை எல்லாம் அனுசரித்தே இறைவன் இப்படி ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்தியிருக்கலாம்.

    அடுத்து இந்து மதத்தில் எத்தனை பெண்களை கோவில்களில் பூசாரிகளாக ஆக்கியிருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? சங்கராச்சாரியாராக ஒரு பெண்ணை ஏன் நீங்கள் தேர்வு செய்வதில்லை? இதற்கு நீங்கள் பதில் தர மாட்டீர்கள்.

    அடுத்து சொத்துரிமை. இந்து பெண்களுக்கும், கிறித்தவ பெண்களுக்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் சொத்தில் உரிமையே கொடுக்கப்பட்டது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய பெண்கள் தங்களின் வாரிசு சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். தாய் தந்தையரை கடைசி வரை காப்பாற்றுவதாலும், அக்கா தங்கைகளை திருமணம் முடித்து கொடுக்கும் கடமையையும் சேர்த்து பார்ப்பதால் ஆண்களுக்கு சொத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறது. அதுதான் நீதியும் கூட.

  41. //பெரியார் மண்ணில் அந்த கனவு பலிக்காது.//

    ஒரு கிறுக்குத்தனமாகத்தான் பதிலடி கொடுக்கவேண்டும் என்றாலும் — சேர மண்ணில் ஓரளவு நடந்ததே..பெரியார் மண் அப்பொழுது என்ன பண்ணியது ?

  42. //சேர மண்ணில் ஓரளவு நடந்ததே..//

    என்ன நடந்தது? இந்துக்களும் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் சரி சமமாக இருந்தாலும் அனைவரும் மலையாளிகள் என்று தங்கள் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றனர். இந்தியா முழுவதும் மோடி அலை என்று சொன்னாலும் தமிழகமும், கேரளாவும் பிஜேபியை ஒரேயடியாக புறம் தள்ளியதை மறுக்க முடியுமா? இனி வரும் காலங்களிலும் இதே நிலைமை தான் தொடரும். படித்தவர்கள் மலையாளிகள். தங்களின் எதிர்காலத்தை வளமுள்ளதாக மாற்ற யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை நன்கு விளங்கியே வைத்துள்ளார்கள்.

  43. //நான் இந்துவாகவே இருந்திருந்தால் ஸ்ரீரங்கம் கோவிலின் கருவறைக்குள் எங்களையும் அனுமதியுங்கள் என்று இன்று கும்பலாக கோஷம் போட்டுக் கொண்டிருப்பேன். பக்தி முத்திப் போய் திருமணத்தையும் வெறுத்து இந்து மதம் காட்டும் சாமியாராகக் கூட மாறியிருப்பேன்.(நித்தியானந்தவைப் போல் ஒரு ஆசிரமத்தையும் இது வரை உண்டாக்கியிருப்பேன்) 🙂 தேரை அந்த சாதி இழுப்பதா அல்லது இந்த சாதி இழுப்பதா என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பேன். அர்ச்சகராக பட்ட படிப்பு படித்த பின்னும் கோவில்களில் எங்களை ஏன் ஆனுமதிப்பதில்லை என்று ஒவ்வொரு கோர்டாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பேன். இரட்டை குவளை முறை, அக்ரஹார ஒதுக்கல், பொது குளத்தில் தண்ணீர் எடுக்க தடுத்தல் என்று தலித்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டித்து போராட்டமெல்லாம் நடத்திக் கொண்டிருப்பேன். சிதம்பரம் கோவிலில் தமிழில் இறைவனை பாட போராட்டம் நடத்திக் கொண்டிருப்பேன். வன்னியர்களும், தேவர்களும் தலித்களுக்கு வருடா வருடம் இழைத்து வரும் கொடுமைகளை தட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்.//

    மிக சிறந்த கருத்துகள், இந்துத்துவத்தை இதைவிட யாரும் கிழித்து தொங்க விட முடியாது.. சுவனப்ரியனின் கேள்விகளுக்கு நேர்மையான பதிலை நம்மால் அளிக்க முடியுமா? இந்துத்துவர்களே யோசியுங்கள்.. மேலே சுவன்ப்ரியனால் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் எதற்காவது ஆர்.எஸ்.எஸ் போராடியதுண்டா? இனியும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தமிழர் விரோத அமைப்பு இத்தமிழ் மண்ணிற்கு தேவை தானா?

  44. திரு சுவனப்பிரியன் அவர்களே,

    இந்துப் பெண்களுக்கு ஆரம்ப காலத்திலேயே சொத்துரிமை உண்டு. அதற்கு ஸ்திரீ தனம் என்று பெயர். அது மருவி சீதனம் என்று கிராமங்களில் சொல்வார்கள். மேலும் திருமணத்திற்கு முன்னர் தந்தை சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு. திருமணமான பின்னர் கணவன் சொத்திலும் பங்கு உண்டு. தமிழகத்தில் திருமணமான பெண்களுக்கும் 1989-க்கு பிறகு, தந்தை சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

    மசூதிகளில் தொழுகை நடத்த பெண்கள் அனுமதிக்க படுவது முன்பு இல்லை. இப்போது மாற்றியமைக்கு , வரவேற்கிறோம். மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் பல இடங்களில் பெண்களே பூஜை செய்கின்றனர்.

    சங்கராச்சாரியார் இந்துமத வழிகாட்டிகளில் ஒருவர் என்றபோதும் அவர் மட்டுமே இந்துமத வழிகாட்டி அல்ல. எங்களிலும் பெண்கள் தலைமை தாங்கும் பீடம் இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். மாதா அமிர்தானந்த மயி பீடம் என்பது அதன் பெயர்.எங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு, நாங்களே புதிய முறைகளையும், புதிய கருத்துக்களையும் படைப்போம். உங்களால் அது முடியாது. ஏனெனில் நீங்கள் ஒரு தேங்கிய குட்டை. குறிப்பிட்ட எல்லைகளை தாண்டி வர உங்கள் மத நூல்கள் தடுக்கின்றன. எங்களுக்கு எந்த கொம்பனும் எஜமானன் அல்ல. நாங்கள் இறைவனிடம் பயப்படுபவர்கள் அல்ல. யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்- இறைவனிடம் நாங்கள் வைப்பது பக்தி- இந்த பக்தி என்பது உயர்நிலை அன்பு.

    இந்து பெண்களுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் சொத்துரிமை கொடுக்கப்பட்டதாக தவறாக சொல்லி உள்ளீர்கள். இந்து மரபுகள் தெரியாமல் எழுத வேண்டாம்.

    ஆண்களுக்கு கூடுதல் சொத்து கொடுப்பதை நியாயப்படுத்தி எழுதி உள்ளீர்கள். இந்த ஆணாதிக்க புத்தி உங்களை விட்டு போகாது. தாய் தந்தையரை மகன் மட்டுமே காப்பாற்றுகிறான் என்பது முழுப்பொய். பல குடும்பங்களில் மகன் தாய் தந்தையரை காப்பாற்றாததால், திருமணமான பெண்களே தங்கள் தாய் தந்தையரை காப்பாற்றி வருகிறார்கள். யதார்த்தநிலை தெரியாமல் ஒரு மதவாதி என்ற முறையில் உளறி இருக்கிறீர்கள்.

    இஸ்லாத்தில் ஏழு திருக்குர்ரான்கள் இருந்தன. அவை ஒரு காலிபாவின் காலத்தில், ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அழித்துவிட்டனர் என்பது தான் உண்மை. இதற்கு ஹத்தீச்களிலேயே ஏராளம் ஆதாரம் உள்ளது. பிற மதத்தினரை அழித்து எந்த மதமும் வாழ முடியாது. மதமாற்றப் பேய்கள் ஆபிரகாமிய மதங்கள். மனித இனம் விரைவில் ஆபிரகாமியப் பேய்களுக்கு முடிவு கட்டும். கடவுள் நீதி வழங்கமாட்டான் என்று நினைப்பதால் தான் துப்பாக்கி, வெடிகுண்டு, தற்கொலைப்படை என்று அலைகிறார்கள். வன்முறை ஒழிக ! வன்முறையை ஆதரிப்போர் ஒழிக !

  45. திரு தாயுமானவன் அவர்களே, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டத்துக்கு திமுக அரசு ஆண்டபோது என்ன கிழித்தது ? பயிற்சி முடித்தோருக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை ? யார் காரணம் ? திமுக அரசே காரணம். மேலும் நம் நாட்டில் ஒரு சிலர் கைகளில் நிலம் அதிகமாகவும், ஒரு சிலருக்கு குறைவான நிலமும் உடைமையாக இருக்கிறது. வேறு சிலருக்கோ நிலமே இல்லை. இந்நிலை மாறி எல்லோருக்கும் நிலம் பிரித்துக் கொடுக்கப்படவேண்டும் . அந்த நிலை வந்தால் தான் சமத்துவம் ஏற்படும். அக்கிரஹார ஒதுக்கல் என்று சுவனம் சொல்வது ஒரு முழுப் பொய்தான். அந்த பொய்யை மீண்டும் மேற்கோள் காட்டியிருப்பது தேவை இல்லாதது. சுவனம் கூறியிருக்கும் பிரச்சினைகள் மதப்பிரச்சினைகள் அல்ல. சில குழுக்கள் செய்யும் தவறுகளுக்கு மதம் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல.

    ஆர் எஸ் எஸ் பற்றி ஒன்றும் புரியாமல் நீங்கள் கருத்து எழுதி இருக்கிறீர்கள் ஆர் எஸ் எஸ் ஒரு உண்மையான சமத்துவ இயக்கம். ஆனால் அது இந்துமத இயக்கம் அல்ல ஆர் எஸ் எஸ் இல் , எல்லா மதத்தினரும் உறுப்பினர் ஆகலாம். நாத்திகர் கூட அதில் உறுப்பினர் ஆகலாம். ஆர் எஸ் எஸ் இந்தியாவை காக்கப் பாடுபடும் இயக்கம்.

    ஆந்திராவில் 1977- ஆம் ஆண்டு பெரிய புயல் வீசி ஒரு பத்தாயிரம் பேருக்குமேல் இறந்த காலக் கட்டத்தில் , ஆந்திர அரசு கூட செய்யமுடியாத உதவிகளை ஆர் எஸ் எஸ் செய்தது என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே ஆர் எஸ் எஸ் சுக்கு பாராட்டு வழங்கி உள்ளார். ஆர் எஸ் எஸ் ஒரு தேசபக்தி இயக்கம்.

    உங்களுக்கு நேரம் இருந்தால், ஊத்தப்புரம் பிரச்சினையை எப்படி ஆர் எஸ் எஸ் தீர்க்க பாடுபட்டது என்று இதே தளத்தில் வந்துள்ள கட்டுரைகளை படித்து தெரிந்து கொண்டு , அதன் பின்னர் கருத்து எழுதவும். தீண்டாமைக்கு இந்து மத நூல்களில் எவ்வித அனுமதியும் இல்லை. சுவன்ப்பிரியனைப் போன்ற குழப்ப வாதிகளின் பொய்யுரைகளை கேட்டு நீங்களும் குழம்பி விட்டீர்கள். .

    மதநூல்கள் என்ற பெயரில் அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துவோர் வேறு. மத நூல் சொல்லாத தவறுகளை செய்வோர் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்தி பார்ப்பது ஒரு பார்வைக் கோளாறு. சுவனப்பிரியன் இந்து மதத்தில் உள்ள வன்னியர், தேவர், ஆதிதிராவிடர் ஆகியோரிடையே சிண்டு முடியும் வேலையை செய்ய முயல்கிறார். இவரைப் போன்ற தீய சக்திகளிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஷியாக்களையும், அகமதியாக்களையும் படுகொலை செய்வதை நியாயப்படுத்தும் நச்சு இயக்கங்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெண்ணடிமையை நியாயப்படுத்தும் அயோக்கியர்களை நம் நாட்டை விட்டே விரட்டுவோம்.

  46. அன்பின் ஸ்ரீ கதிரவன் நீங்கள் பெருமளவு ஜெனாப் சுவனப்ரியன் மற்றும் ஸ்ரீ தாயுமானவன் அவர்களது விதண்டாவாதங்களுக்கு பதிலளித்துள்ளீர்கள்.

    சிதம்பரம் கோவிலில் தமிழில் திருமுறைகள் பாடப்படுவதில்லை என்று ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் அன்னார் நோன்பு இருக்கும் ரம்ஜான் மாதத்தில் கூசாது மாற்று மதத்தைப் பழிக்க பொய் சொல்லலாம்.

    பச்சைப்புளுகிற்கு விஷயம் தெரிந்த சிவனடியாரான ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் ஒத்தூதலாமோ.

    தர்சனார்த்திகளாலும் தில்லையந்தணர்களாலும் தினமும் தில்லையம்பலத்தில் திருமுறைகள் ஓதப்பட்டு வருகின்றன.

    சிற்றம்பல மேடையில் திருமுறை ஓதுவதற்கு யாருக்கு அதிகாரம் என்பது மட்டிலும் தான் ப்ரச்சினையே. அதுவும் அதிகாரம் சார்ந்த ப்ரச்சினையே.

    ஸ்ரீமான் தாயுமானவன் அவர்கள் தமிழறிஞர் என்றும் சிவனடியார் என்றும் அறிவேன். ஆனால் அன்பர் ஸ்ரீ தாயுமானவன் அவர்களைக் காட்டிலும் ஆழ்ந்த கல்வியறிவும் வாழ்க்கை அனுபவமும் உள்ள முனைவர் ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி மஹாசயர் அவர்கள். சிதம்பரம் கோவிலில் சிவனடியார் என்ற பெயரில் நாஸ்திகப்பதர்களுடன் கைகோர்த்து ஆலய வழிபாட்டை குந்தகம் செய்பவர்களை முனைவர் ஐயா அவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளார். அதை ஸ்ரீ தாயுமானவன் அவர்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

    தில்லையம்பலம் சார்ந்து முனைந்து ஒரு பொய் முனைந்து முன்வைக்கப்படலாகாது

    திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.

  47. \\ இனியும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தமிழர் விரோத அமைப்பு இத்தமிழ் மண்ணிற்கு தேவை தானா? \\

    தமிழர் அமைப்புகள் என்ற பெயரில் பயங்கரவாத ஆப்ரஹாமியர்களுடன் கைகோர்த்து………. சிவாலயங்கள் ஆப்ரஹாமியர்களால் சிதைத்து நொறுக்கப்படுவதை கடப்பாரை எடுத்துக்கொடுக்காத குறையாக தமிழர் அமைப்புகள் மௌனம் சாதிப்பதையும்…………சைவர் தம் வழிபாட்டை பரங்கிப்பிச்சைப் பணத்துக்காக ஆப்ரஹாமிய மிஷநரிகள் தமிழர் அமைப்புகள் என்ற பெயரில் இழித்துப்பழிக்கும் செயலைத் தமிழர்கள் தமிழர் நலன் ……… பகுத்தறிவு என்ற பெயர்களில்……..அப்படியே வாங்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடும் அவலத்தையும்….. சொல்ல நாக்கூசுகிறது. எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானும் சிவகுருநாதனும் எம் சிந்தை தனை தெளியதாக்கட்டும்.

    தலித் சஹோதரர்களின் மேன்மைக்காக உண்மையாகப்பாடுபடும் ஆர் எஸ் எஸ் அமைப்பு தமிழகத்திற்குத் தேவை. ஹிந்துக்கள் அனைவரையும் ஆப்ரஹாமிய மதங்களுக்கு கொத்துக்கொத்தாக பித்தலாட்ட முறையிலும் வன்முறை சார்ந்தும் மதம் மாற்றுவதற்கு ஆப்ரஹாமியருக்கு உற்ற துணையாகத் தொண்டூழியம் செய்யும் தமிழர் அமைப்புகளின் நயவஞ்சகத்திலிருந்து தமிழர்களைக் காக்க ஆர் எஸ் எஸ் தேவை. தமிழர் தம் சமயங்களான சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், நாட்டார் வழிபாடுகள்………. எமது ஆலயங்கள், உருவ வழிபாடு, இசை, சித்திரம், கலை, இலக்கியம் இவற்றை ஒட்டு மொத்தமாக அழித்தொழிக்க விழையும் ஆப்ரஹாமிய சக்திகளுக்கு எதிராக பொது தளத்தில் பாடுபடும் ஆர் எஸ் எஸ் தமிழகத்திற்கு அவச்யம் தேவை.

    தமிழர் அமைப்புகளில் தமிழும் இல்லை. சமயமும் இல்லை. இருப்பதெல்லாம் தமிழர்களை ஆப்ரஹாமியத்துக்கு மதம் மாற்ற விழையும் செயல்பாடுகளே. மிக விபரமாக போலித் தமிழினவாத ……… பயங்கரவாத ஆப்ரஹாமியத்தில் அமிழும் பிரிவினை வாதப் போலித் தமிழ் அமைப்புகளின் …………..செயல்பாடுகள்………… சைவ சமயத்திற்கு எதிரான ஆப்ரஹாமியத்துக்கு ஆதரவான அதன் மௌனம்……….. அதன் முழு அவலத்துடன் பகிரப்படும்.

  48. திரு சுவனப்பிரியன் அவர்களே,
    அரபு சேக்க்குகளுக்கு hydrabad பொண்ணுகளை கூட்டிக்கொடுக்கும் இமாம்களுக்கு எதிராக நீங்கள் பண்ணிய நல்லவைகளை இங்கு சொல்ல முடியுமா?

  49. மதிப்பிற்குரிய எனது உடன்பிறப்புக்களே,

    நாம் அனைவரும் ஜனப் சுவனப்பிரியன் எழுதும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளித்து நம் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று தாழ்மையுடன், மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்வதன்மூலம், அவரது தவறான கருத்துக்களைப் பரப்பும் ஊடகமாக தமிழ் இந்து இணையத்தை ஆக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
    மேலும், ஒருவர் சமயத்தை ஒருவர் தாக்கி எழுதும் மேடையாகவும் இந்த இணையத்தை ஆக்கிவிட வேண்டாமே!

    நமக்கு எச்சமயத்தின் மீதும் வெறுப்பு கிடையாது.

    வலுக்கட்டாயமாகவோ, ஏமாற்றியோ, மூளைச்சலவை செய்தோ மற்ற சமயத்தை நம் மீது திணிக்கும் நடவடிக்கைகளைக் கண்டனம் செய்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.

    ஜனாப்பின் பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பது, நமக்குள்ளேயே கருத்து மாறாட்டத்தை உண்டுபண்ணும் அவலத்தைப் பார்த்துவிட்டு, அந்த வருத்தத்தில்தான் எழுதி உள்ளேன்.

    வணக்கம்.

    தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  50. /////இந்த உலகத்தில் நாம் வாழும் போது இறைவனால் ஒரு உருவம் கொடுக்கப்படுகிறோம். உருவம் கொடக்கப்பட்ட அந்த மனிதன் இறந்து மண்ணோடு மண்ணாகி விடுகின்றான். அதன் பின்னர் மறுமை நாளில் அவன் உலகில் எந்த உருவத்தில் வாழ்ந்தானோ அதே உருவத்தில் திரும்பவும் உயிர் கொடுக்கப்படுவான் என்கிறது குர் ஆன் ////// இறைவன் ஒரு உருவம் கொடுப்பது குழந்தை பருவத்தில்தான். அப்படியானால் மறுமை நாளில் அதே உருவத்தில் திரும்ப உயிர் கொடுக்கபடுவான் என்றால் குழந்தையை மறுமை நாளில் விசாரிப்பது நியாயமா? பேசமுடியாத அந்த குழந்தை விசாரணையின்போது பதில் சொல்ல இயலுமா?

    //////முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகள் குறைவாக இருப்பதற்கு இந்த வசனத்தை நம்புவதுதான் காரணம்////// தற்கொலை குறைவா அதிகமா என்பது இருக்கட்டும். குண்டு வைத்து (ஷியாவை சன்னியும் அல்லது சன்னியை ஷியாவும்) கொலை செய்வது அதிகமாக இருக்கிறதே. அதற்கு எந்த வசனத்தை கண்டுபிடித்து கூறப் போகிறீர்கள்? அல்லது நான் சொல்வது பொய் என்று கூரபோகிரீர்களா? புதன் கிழமை (அதாவது நேற்று) நைஜீரியாவில் கடுனா என்ற இடத்தில 2 குண்டுகள் வெடித்து 42 பேர் அல்லாவின் அடி சேர்ந்தனர். அது மட்டுமா? பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 23 பேர் இறந்து 40 பேர் காயமுற்றனர். (இவை இரண்டும் இன்று வந்த செய்திதாளின் செய்தி. இப்படி தினசரி வந்த வண்ணம்தான் உள்ளது)

    ///////இது போன்று தவறாக நடப்பவர்களிடம் தொழுகை போன்ற இஸ்லாமியருக்கு உரிய நல்லொழுக்கங்கள் இல்லாதிருப்பதை பார்க்கலாம்/////. தொழுகை ஒரு நல்லொழுக்கமா? நோன்பு என்பது தொழுகையை விட உயர்ந்தது. அப்படிப்பட்ட நோன்பின்போதே “””நோன்பு இருக்கும்போது நபி அவர்கள் தன்மைனைவிகளை தழுவி முத்தமிடுவார்””” என்று (நான் சொல்லவில்லை) உங்கள் அன்னை ஆயிஷா கூறியுள்ளார். (ஆதாரம் வேண்டுமா? இதோ! Sahih Muslim Book 6 No 2439) இவரே இப்படி இருக்கும்போது அவரது தொண்டரடி பொடிகள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் பெண் விவகாரத்தில் மட்டுமா ஈடுபடுகிறார்கள்? (1) சென்ற திங்கள் சிங்கபூரிலிருந்து 2 கோடி மதிப்புள்ள தங்கத்தை Fsirose Khan என்ற நல்லவர் கடத்தி வந்துள்ளார். (2) நாசர் அலி மற்றும் அஹமத் ஜலாலுதீன் ஆகிய இரு நல்லவர்களும் மலேசியாவிலிருந்து 5-70 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கட்த்டிவந்த்போது சென்ற செவ்வாய் இரவு மாட்டிகொண்டனர். நான் என்ன கேட்கிறேன் என்றால்: 1400 வருடங்களுக்கு முன் அனுப்பட்ட நபியும் சரியில்லை. இறக்கப்பட்ட குரானும் சரியில்லை. சரியாக இருந்தால் அவரை பின்பற்றும் முஸ்லிம்கள் இந்த குற்றங்களை செய்ய கூடாதே! ஏனென்றால் மனிதர்களை நேர்வழி படுத்ததானே குரான் அருளப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் திருந்தவில்லையே!

    நான் பட்டுகொட்டைக்கு வழி கேட்டால் திருவாளர் HEAVEN Buff கொட்டைபாக்கு விலை சொல்கிறார். “”””சர்வசக்தி படைத்த”””” அல்லா அனைத்து இந்துக்களையும் மன மாற்றம் செய்து இஸ்லாமை தானாக முன்வந்து ஏற்கும்படி செய்யாமல் முஸ்லிம் தீவிரவாதிகள் எதற்கு மதமாற்றம் செய்ய முனைகிறார்கள் என்று கேட்டால் விதி கதி என்று பேசுகிறார். அல்லா மனமாற்றம் செய்துதான் ஒரு நடிகையும் ஒரு இசை அமைப்பாளரும் மதம் மாறினார்கள் என்று பதில் கொடுப்பார். அப்படியானால் நாகபட்டனத்தை சேர்ந்த சீர்காழியில் வசிக்கும் ஜாஸ்மின் என்ற முஸ்லிம் பெண் ராமலிங்கம் என்பவரை மணந்து 14-2-2014 அன்று லக்ஷ்மி என்று தன பெயரைமாற்றிகொண்டாரே! (ஆதாரம்:- இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 20-4-14) இதற்கும் உங்கள் அல்லாதான் மன மாற்றம் செய்தாரா? சரி அது போகட்டும். இவர்கள் இங்கே ஒரு இந்துவை முஸ்லிமாக மாற்றினால் அரபு நாடுகளில் அவர்களுக்குள்ளேயே (ஷியா உயர்ந்தவனா சன்னி உயர்ந்தவனா என்று) அடித்துக்கொண்டு 10 முஸ்லிம்கள் சாகின்றனர். ஆகவே உலக முஸ்லிம் ஜனத்தொகையில் 1 கூடினால் 9 குறைகிறது.

    களிமண், செம்மண் என்று கேள்விபட்டு இருக்கிறேன். அது என்ன பெரியார் மண்? புதுசா ஏதேனும் சந்தையில் வந்திருக்கா? பெரியார் யார்? “இறை” என்று ஏதும் இல்லை என்று சொல்பவர். ஒரே “இறை” ஒரே மறை, மூன்றாம் பிறை என்று கூறும் நீங்கள் “இறை” இல்லை என்று ஏற்றுகொள்கிறீர்களா? அப்புறம் எதற்கு வக்கற்ற அல்லாவிற்கு வக்காலத்து வாங்கும் வக்கீலாக இங்கே அடிக்கடி வருகிறீர்கள்? வன்முறை பெரியார் மண்ணில் ஏற்படாது என்றால் அந்த ராமசாமி ராமரை செருப்பால் அடித்தாரே அதற்கு வன்முறை என்று பெயரில்லையா? உங்களுக்கு அது நன்முறையா?

  51. One we must know that our same Hindu peoples who are standing other side are suffered by Stockholm syndrome. They never going to awake from that.only allhHindu people get rid of them.that is the day we will going to celebrate as a freedom day.we are very cowards not tolerance,that’s why they are living freely here and giving comments.

  52. Honest man, sabash! Do not expect any sensible reply from SP. He has no answer to questions posted earlier. Why did Allah make people born in Hinduism in the first place? No answer. SP denies castes in Islam but I have ( and many others) proved him wrong by furnishing links on this, ex; Muslim Matrimonial columns. But he keeps his silence and jumps to some other topic. Why ( apparently ) an enlightened person like Mohammed did marry a 6 year old child and consummate it when she was only 9 years old? No answer. I feel he has been appointed by the Saudis as their official Taqqya head of the southern Indian branch. I cannot blame him. I understand. People do have weakness for money, position, etc.

  53. உயர்திரு. கிருஷ்ண குமார்….

    கதிரவன் உருப்படியான பதில்கள் எதையும் இதுவரை வைக்கவில்லை. அவருடைய பதில்கள் வெறும் அபத்தங்களாகவே தான் இருக்கின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சர்கராவது பற்றிய அவரின் கருத்தை பார்த்தாலே தெரியும்.. இப்போது உங்களின் வாதத்திற்கு வருகிறேன்.

    //பச்சைப்புளுகிற்கு விஷயம் தெரிந்த சிவனடியாரான ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் ஒத்தூதலாமோ.//

    ஒத்தெல்லாம் ஊதவில்லை.. உண்மை நிலை தெரிந்தே தான் பேசுகிறேன். சிவனடியாரான ஆறுமுக சாமியை அவரின் தள்ளாத வயதிலும் கொஞ்ச கூட இரக்கமில்லாமல் திருசிற்றம்பல மேடையை விட்டு தீட்சித தெள்ளவாரிகள் கீழே தள்ளியதை மனசாட்சியுள்ள யாராலும் மறக்க முடியாது.

    ஆதாரம்: https://www.youtube.com/watch?v=FzOXhWCxOM0
    https://mothipaar.blogspot.in/2008/03/blog-post_02.html

    இந்த நெறி கேட்ட இழி பிறவிகளான தீட்சிதர்களையும், இவர்களை கண்டிக்காமல் வாய் மூடி மவுனமாக இருந்து வக்காலத்து வாங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தமிழ் விரோத அமைப்புகளையும் முற்று முழுதாக துடைத்தெறிய வேண்டும். சுவனப்ரியன் நியாயத்தை பேசியிருக்கிறார், நடந்ததை பேசி இருக்கிறார்.

    //சிற்றம்பல மேடையில் திருமுறை ஓதுவதற்கு யாருக்கு அதிகாரம் என்பது மட்டிலும் தான் ப்ரச்சினையே. அதுவும் அதிகாரம் சார்ந்த ப்ரச்சினையே.//

    யார் யாருக்கு அதிகாரம் தரவேண்டும் என்பதையும் கூறி விடலாமே. தில்லை கோவில் என்பது தமிழ் மக்களின் சொத்து. சிற்றம்பல மேடையில் ஏறி நின்று தேவாரம் பாட யாவருக்கும் அங்கு உரிமை உண்டு. இதற்க்கு எந்த ஞமலியிடம் அதிகாரம் பெற வேண்டும். இதே யாருக்கு அதிகாரம் என்ற பிரச்சனை தான் அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் விடயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கதிரவன் கூறும் அபத்தத்தினை பாருங்கள் அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆகாமல் போனதற்கு கருணாநிதி தான் காரணமாம்.அனைத்து சாதியினரையும் அரச்சகராக்கும் தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று தடை வணங்கியது யார்? கருணாநிதியா? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களும், தமிழ்நாடு பிராமணர் சங்கமும் தானே இதை செய்தது. இப்போது வரை இந்த விடயத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீர்மானம் தான் என்ன? தடை வாங்கியது தவறு என்றால் ஏன் இது வரை உங்களின் சமத்துவ சன்மார்க்கிகள்(ஆர்.எஸ்.எஸ்) இதற்காக போராட முன்வரவில்லை.

    //சிவனடியார் என்ற பெயரில் நாஸ்திகப்பதர்களுடன் கைகோர்த்து ஆலய வழிபாட்டை குந்தகம் செய்பவர்களை முனைவர் ஐயா அவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளார்//

    கண்டித்த கையோடு வேறு என்ன சாதித்து இருக்கிறார். வேண்டுமானால் ஆஸ்திகர்கள் உங்கள் அனைவரையும் திரட்டி தில்லைக்கு சென்று போராட சொல்லுங்கள். “ஆஸ்திக மலர்கள்” நீங்கள் சென்று தில்லையில் நடக்கும் அதிகார சிக்கலுக்கு எதிராக போராடி சிற்றம்பல மேடையில் தமிழை ஏற்றுங்கள். நாஸ்திக பதர்கள் தானாக ஓடிவிடும். தமிழ்ஹிந்துவில் கட்டுரை எழுதி கூப்பாடு போடுவதால் ஒரு புண்ணியமும் இல்லை.

    இன்று பிரதோஷ நன்னாள் எல்லாம் வல்ல அம்மை அப்பனாகிய சிவ பெருமானின் துணை உங்களுக்கு எப்போதும் இருப்பதாக.

  54. Honest man னின் கருத்துக்கள் உண்மையில் ஹானஸ்ட் ஆகவே உள்ளது.

  55. ஹானஸ்ட் மேன்!

    //இறைவன் ஒரு உருவம் கொடுப்பது குழந்தை பருவத்தில்தான். அப்படியானால் மறுமை நாளில் அதே உருவத்தில் திரும்ப உயிர் கொடுக்கபடுவான் என்றால் குழந்தையை மறுமை நாளில் விசாரிப்பது நியாயமா? பேசமுடியாத அந்த குழந்தை விசாரணையின்போது பதில் சொல்ல இயலுமா?//

    ஒரு துளி இந்திரியத்தில் தாய் தகப்பனின் முகம், நிறம், குரல், குணம் என்று அனைத்தையும் ஜிப் செய்து அடைத்து வைத்த இறைவனால் ஒரு குழந்தையை பேச வைக்க முடியாதா? ஒரு குழந்தையை எந்த நியாயமும் இன்றி கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க அந்த குழந்தையிடம் விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதாக இறைவன் கூறுகிறான். அன்றைய அரபுகள் நபிகள் காலத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தால் அதனை உயிரோடு புதைத்து விடுவார்களாம். உசிலம் பட்டியிலும், சேலம் போன்ற பகுதிகளிலும் பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப் பால்,அல்லது நெல் மணிகளைக் கொடுத்து கொன்று விடும் பழக்கம் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இப்படிகொல்லப் பட்ட பெண் குழந்தைகள் மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் தன் பெற்றோர்களின் மேல் ‘எந்த காரணத்திற்காக ஒரு பாவமும் அறியாத நாங்கள் கொல்லப் பட்டோம்’ என்று வழக்கு தொடர்வார்கள் என்று இந்த வசனம் சொல்லிக் காட்டுகிறது.

    ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.’

    -குர்ஆன் 17 : 31

    ‘என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்ட பெண் குழந்தை மறுமை நாளில் விசாரிக்கும் போது’

    -குர்ஆன் 81 :8,9

    //புதன் கிழமை (அதாவது நேற்று) நைஜீரியாவில் கடுனா என்ற இடத்தில 2 குண்டுகள் வெடித்து 42 பேர் அல்லாவின் அடி சேர்ந்தனர். அது மட்டுமா? பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 23 பேர் இறந்து 40 பேர் காயமுற்றனர். (இவை இரண்டும் இன்று வந்த செய்திதாளின் செய்தி. இப்படி தினசரி வந்த வண்ணம்தான் உள்ளது)//

    ஈராக், நைஜீரியா, லிபியா, சிரியா போன்ற நாடுகள் முன்பு அமைதி தவழும் நாடுகளாகவே இருந்தன. அங்குள்ள கனிம வளங்களை சுரண்டுவதற்காக அமெரிக்காவும் அதன் அடிவருடியான இஸ்ரேலும் ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்ற பொய்க் காரணத்தை கூறி அந்த நாடுகளின் மீது பொர் தோடுத்தனர். லிபியாவில் கடாபியை எதிர்க்கும் குழுவுக்கு ஆதரவு நல்கினர். அன்றிருந்து அந்த நாடுகள் நிம்மதி இழந்து தவிக்கிறது. இதற்கு முழு காரணமும் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் ஆகும். நமது நாட்டிலும் குண்டு வெடிப்புகள், பெண் கொடுமை, கொலைகள் தினமும் நடந்தே வருகின்றன. அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் சீரழிந்ததாக காட்ட முடியுமா?

    //சரியாக இருந்தால் அவரை பின்பற்றும் முஸ்லிம்கள் இந்த குற்றங்களை செய்ய கூடாதே! ஏனென்றால் மனிதர்களை நேர்வழி படுத்ததானே குரான் அருளப்பட்டதாக சொல்கிறீர்கள். ஆனால் திருந்தவில்லையே!//

    நபியையும் குர்ஆனையும் அனுப்பி கூடவே ஷைத்தானையும் இறைவன் அனுப்பியுள்ளான். நல் வழியில் செல்லாமல் தடுப்பது இந்த சாத்டதானின் வேலை. அதனையும் மீறி இந்த பரீட்சையில் வெற்றி பெறுபவர்களே பாக்கியசாலிகள்.
    //அது என்ன பெரியார் மண்? புதுசா ஏதேனும் சந்தையில் வந்திருக்கா?//

    பெரியாரை அதிகம் மதிக்கும் அவரது கொள்கைகளை அதிகம் பின் பற்றும் இந்துக்களை கொண்ட நாடு நமது தமிழ்நாடு என்பது அதற்கு அர்த்தம்.

    //வன்முறை பெரியார் மண்ணில் ஏற்படாது என்றால் அந்த ராமசாமி ராமரை செருப்பால் அடித்தாரே அதற்கு வன்முறை என்று பெயரில்லையா? உங்களுக்கு அது நன்முறையா?//

    பெரியார் ராமர் என்ற மனிதனை அடிக்கவில்லை. ராமர் என்ற சிலையைத்தான் அடித்தார். அந்த அளவு அந்த மதத்தினால் பாதிப்படைந்ததனால் எழுந்த ஒரு வேகம் அது. ஆனால் பலரும் மதிக்கும் ஒருவரின் சிலையை இவ்வாறு பொதுவில் அடித்தது எனக்கு உடன்பாடு இல்லை. அது மேலும் குழப்பங்களையே உண்டு பண்ணும் என்பதே எனது நிலை. கல்வியிலும் சமூக அந்தஸ்திலும் தமிழர்களை தலை நிமிரச் செய்ததில் பெரியாரின் பங்கை அவ்வளவு லேசாக மதிப்பிட முடியாது. ஆனால் அதற்கு பின்னால் வந்த அவரது தம்பிகள் தங்களின் வாரிசுகளை முன்னிறுத்தி பெரியாரின் வழியை புறக்கணித்ததால்தான் இன்று தமிழன் டாஸ்மார்க்கில் க்யூவில் நிற்கிறான். உங்கள் ஆர்எஸ்எஸிடம் சொல்லி குடியால் அழியும் தமிழர்களை காக்க முயற்சி செய்யுங்கள்.

  56. @ சுவனப்பிரியன்,

    //மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.//

    உங்களின் மேற்கண்ட வாதம் உங்க அண்ணன் பீ ஜே வின் அறிவுப்பூர்வமான(!?) சிந்தனை.

    மனிதர்களின் எண்ணிக்கையைத்தான் கணக்கெடுக்கிறார்கள். சுமார் 700 கோடி மனிதர்கள் தற்போது பூமியில் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் மற்ற உயிரினங்கள் எத்தனை பூமியில் வாழ்கின்றன என்று மனிதனால் கணக்கெடுக்கவே முடியாது. உயிரியல் விஞ்ஞானிகளால் இதுவரை அறியப்படாத உயிரினங்கள்(species), குறிப்பாக பூச்சிகள் பல லட்சம் இருக்கின்றன. பாண்டா கரடி, புலி போன்ற அருகி வரும் சில மிருகங்களின் எண்ணிக்கைதான் கணக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற ஒவ்வொரு உயிரினங்களில்(species) உள்ள உயிர்களின் எண்ணிக்கை எத்தனை என்று எவருக்கும் தெரியாது. அவை ஒவ்வொன்றிலும் பல கோடிகள் இருக்கும். அதுவும் கடலில் வாழும் உயிரினங்களை பற்றி சொல்லவே வேண்டாம். அப்படிப்பட்ட உயிர்களில் ஒரு மிக சிறு பகுதி மனிதர்களாக பிறப்பெடுத்தாலே அந்த எண்ணிக்கை பல ஆயிரம் கோடியை தாண்டும். ஆனால் இன்று மனிதர்கள் வெறும் 700 கோடிதான் உள்ளனர்.

    //பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம்.//

    வேறு உயிர்கள் மனிதர்களாக பிறப்பெடுத்து உள்ளன, அதனால் மனிதர்களின் எண்ணிக்கை கூடியுள்ளன என்று எடுத்துகொள்ளலாம்.

    // நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.//

    அப்படியா? உங்களுக்கு தெரிந்தால் எந்தெந்த உயிரினங்களில் எத்தனை கோடி உயிர்கள் அதிகமாகி இருக்கின்றன என்று புள்ளி விவரத்தோடு கூறுங்கள்.

    //புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.//

    நாம் வாழும் இந்த பௌதீக பிரபஞ்சம் மட்டும் இருக்கவில்லை. இதைபோன்ற எண்ணற்ற பௌதீக பிரபஞ்சங்கள் இந்த முப்பரிமாண உலகத்திலேயே இருக்கின்றன(three dimensional world). ஒவ்வொரு பௌதீக பிரபஞ்சத்திலும்(physical universe) கோடி கோடியான நட்சத்திரங்களும்(சூரியன்கள்) அவற்றை மையமாக வைத்து சுற்றிவருகின்ற பல கோடி கோடி கோடி கோடியான பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. அவைகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கிருந்தும் சில ஆன்மாக்கள் இந்த நமது பூமியில் பிறப்பெடுக்கின்றன. அப்படியே இங்கிருந்தும் சில ஆன்மாக்கள் அந்த கிரகங்களில் பிறப்பெடுக்கின்றன. ஆகையால் கிரகங்களில் உயிர்களின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் ஒன்றும் புதிரல்ல, அது தொடர்ந்து நடந்து வருகிற ஒரு விஷயம்தான்.

    மேலும் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருக்க முடியும். அதாவது ஒரே ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருந்து உடல் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது குவாண்டம் இயற்பியல் (quantum physics) மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணதிற்கு ஒரே ஆன்மாவானது ஒரே நேரத்தில் இருவேறு நபர்களாக இருவேறு உடல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும். இந்த இரு நபர்களும் இருவேறு நபர்களாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உண்மையிலேயே ஒரே நபர்தான். எனவே உயிர்களின்(உடல்களின்) எண்ணிக்கை கூடுவது என்பது புதிரான விஷயம் அல்ல.

    மேலும் இந்த முப்பரிமாண பௌதீக உலகம் ஒரு மாயை(illusion). நாம் உண்மையில் இங்கு இல்லை. நாம் நமது இல்லமான ஆன்ம உலகில்தான்(spiritual world) இருக்கிறோம். அங்கே இருந்துகொண்டு இந்த கற்பனையான பௌதீக உலகத்தை ஒரு காட்சியாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த ஆன்ம உலகில் எண்ணற்ற ஆன்மாக்கள் இருக்கின்றன. அவைகளில் மிக மிக சொற்ப எண்ணிக்கையான ஆன்மாக்களே இந்த பௌதீக உடல்(physical body) எடுத்து இங்கு வருகின்றன. சில கூடுதல் ஆன்மாக்கள் பௌதீக அனுபவத்தை(physical experience) பெற இங்கு பிறப்பெடுத்தால்கூட இங்கு உயிர்களின் எண்ணிக்கை கூடும்.

    இன்னும் பல அரிய ஆன்மீக உண்மைகள் இருக்கின்றன.

  57. Dear Mr.Suvanappiriyan,
    ” No scientist can start a sentence with “ABSOLUTE”…..thus start the first sentence of ” The Marvels and the Mysteries around the World” published by Reader’s Digest” in the year 1974/75,which I read long back. Almost ..right from Big Bang Theories ..all were or are only “HYPOTHESIS”. If only you start watching Discovery/National Geography/Animal Planet etc.it will be incomprehensible about the Flora and Fauna of billions of creatures including human beings how they formed, their life,behaviour etc. etc. ..

    Can you answer whether the egg first or the hen?

    From the above book, scientists also say that our earth has totally altered or changed once in 30 million years….once upon a time the north or south pole was in sahara desert!!! or how was the first nuclei taken shape…is a mystery.. Like this a lot on assumptions and hypothesis only.
    மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.
    Therefore how come you think the above statement made by you is correct or full proof.

    I consider all the muslims and christians in India are my brethren only.
    Because just 800 years or so/ 200 years… that our own blood brethren converted into Islam (Maximum under force) and Christianity ( divide and rule,encashing poverty and untouchability)…this is history.I hope that you will never repudiate this.

    As far as our Bharat or India….. Hindu is not a religion at all!!!!!!!!!!!!!!!!
    ‘IT IS A WAY OF LIFE AND VIEW OF LIFE’ ..that is all.
    Can you define who is a “HINDU”? You may please verify with a lawyer, how Hindu is defined in our Law. You will be or for that matter any one will be awe struck,wonder struck and thunder struck….. The line starts like this ….”Other than those who are christians,muslims,sicks etc. ” like that it narrates.. No one can define a Hindu…those who were living under the SIND RIVER were all known or called as Hindus by the west or others..
    The biggest freedom in our so called hindu culture is….you can be a theist or an atheist,believer or non-believer,iconoclast ,parents as gods,even a grass can be considered as god,no compulsion to go to temples or follow rites or rituals,consider husband as god or vice versa…like that you can go on summarising……..simply you are a FREE BIRD to fly of your own!!!!!!!!!!!!!!!!!!

    If only you read Thrukkural,Thrumanthiram,Thiruvachaham..etc you could imbibe a lot.( Please do read without any prejudice…at least for the sake of what they all deal with?

    The following book written by a person from a stanch catholic bishop family will make anyone for that matter even a christian to have some introspection…..once again say and write this without any prejudice or favour… only the contents that matter..

    HOW I BECAME A HINDU
    My Discovery of Vedic Dharma
    By David Frawley (Pandit Vamadeva Shastry)

    Last but not least,I love all human beings besides all living creatures .
    The human birth is a rarest gift!!
    Let us try to understand with right thinking and approach.
    Peace..Peace..and Peace…….& Patience ..patience…and patience is the real TRUTH or GOD or LIFE.

    Wish you good luck.

  58. //////இப்படிகொல்லப் பட்ட பெண் குழந்தைகள் மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் தன் பெற்றோர்களின் மேல் ‘எந்த காரணத்திற்காக ஒரு பாவமும் அறியாத நாங்கள் கொல்லப் பட்டோம்’ என்று வழககு தொடர்வார்கள்//////

    கிழவியிடமிருந்து வடை திருடிய ஒரு காகம் மரத்தின் மேல் உட்கார்ந்தது. அவ்வழியாக வந்த நரி காகத்தை பார்த்து “”””காக்கா! காக்கா! நீ ரொம்ப அழகா இருக்கே. நல்லா பாட்டு பாடுவியாமே! ஒரே ஒரு பாட்டு பாடேன்”””” என்று கூறியதாம்!. நரி பேசியது போல காக்காய் பாடியது போல மேலே உள்ள 3 வரிகள் உள்ளன. அது சரி, குறை பிரசவம் ஏற்பட்டு உடனே இறந்துவிடும் குழந்தை அதன் தாய் தந்தையர்மீது என்ன புகார் கொடுக்கும்.? அவர்கள் அந்த குழந்தையை கொல்லவில்லை. ஆனாலும் அது இறந்துவிட்டது. இறப்பிற்கு என்ன தண்டனை?

    ஈராக் நைஜீரியாவை விடுங்கள் ஆனால் பாகிஸ்தானை அமேரிக்கா அமோகமாக ஆதரித்துகொண்டுதானே இருக்கிறது? ஆனாலும் பாகிஸ்தானில் ஒரு முஸ்லிம் பிரிவினர் தனக்கு பிடிக்காத இன்னொரு முஸ்லிம் பிரிவினரின் மசூதிகளில் குண்டுமேல் குண்டு வெடித்து கொண்டுதானே இருக்கிறார்கள். இங்கே LoC ல் இன்றும் ceasefire யும் மீறி குண்டு வெடிப்பதற்கும் அமெரிக்காதான் காரணமா? கவிஞர்கள் “எழுத்து எமது தொழில்” என்பது போல முஸ்லிம்கள் “குண்டுவெடிப்பது எமது தொழில்” என்று கூறுகின்றனர். அதை அவர்களால் நிறுத்தமுடியாது. தினமும் ஆடு வெட்டி வெட்டி பழக்கப்பட்டு போனவர்களுக்கு மனிதனை வெட்டுவதும் சர்வ சாதாரணம். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இந்து தலைவர்களை கொன்றதாக செய்திகள் வருகின்றனவே . ஆனால் முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றனவா?

    //////நபியையும் குர்ஆனையும் அனுப்பி கூடவே ஷைத்தானையும் இறைவன் அனுப்பியுள்ளான். நல் வழியில் செல்லாமல் தடுப்பது இந்த சாத்டதானின் வேலை.///
    நல்ல வழியில் தடுக்க சைத்தானை எதற்கு அந்த அல்லா அனுப்பினான்? திரைகதை வசனம் எழுதும் சினிமாகாரன் வேண்டுமானால் படம் பண்ணி பணம் சம்பாதிக்க கதையில் ஒரு கதாநாயகனையும் ஒரு வில்லனையும் படைப்பான். கதாநாயகியை வில்லன் கற்பழிக்க சூழலை ஏற்படுத்துவான். சினிமாக்காரன் சமுகத்தை ஒரு சீரழிக்கும் சிறுபுத்தி படைத்தவன். அல்லாவும் அப்படிதானா? சரி அல்லா தெரியாத்தனமாக சைத்தானை படைத்துவிட்டான். போகட்டும். பின்னர் அவனை அழித்து விடவேண்டியதுதானே! அவனை அழிக்க அல்லாவிற்கு சக்தி இல்லையோ? அவரது சக்திக்கு அப்பாற்பட்டனவா?

    பெரியார் கொள்கைகளை அதிகம் பின்பற்றும் இந்துக்கள் என்றால் முஸ்லிம்கள் பின்பற்றுவதில்லை என்றுதானே அர்த்தம். அவரது கொள்கை என்ன? இறைவனை நம்புவன் முட்டாள். கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி. இறைவனை மற. மனிதனை நினை. இந்த மூன்றையும் நம்பாத நீங்கள் எதற்கு பெரியாரை புகழ்கிறீர்கள்? பெரியார் மண் என்று எதற்கு கூறுகிறீர்கள்? ஏனென்றால் அவர் இந்துக்களை மட்டும் கேவலபடுத்தினார். அவரது கண்ணுக்கு கடவுள் என்றால்
    இந்து வணங்கும் கடவுள் மட்டும்தான் தெரியும். அப்போ அல்லா ஒரு இறைவன் இல்லையா? இயேசு ஒரு கடவுள் இல்லையா? அவர்களை கற்பித்தவன் முட்டாள் இல்லையா?

    எவனோ ஒரு மேடையில் “பெரியார் மண்” என்று சொல்லிவிட்டாலும் சொல்லிவிட்டான். அதற்கு பிறகு மேடை ஏறியவர்களும் இன்னும் மேடை ஏறாதவ ர்களும் சும்மா “பெரியார் மண்” என்று சொல்லி கொண்டிரு திரிகிறார்கள்.. பெரியார் தோன்றுவதற்கு முன் இந்த தமிழ் நாட்டில் வேறு நல்லவர்களே பிறக்கவில்லையா? இவர் பிறந்து செய்த காரியங்களால் இன்று சாதி வெறிதான் அதிகமாகி உள்ளது. மதத்தை அழிக்கவேண்டும் என்று சாதி என்ற தீயை வளர்த்து விட்டார். அதுதான் அவரால் விளைந்த நன்மை(!!??) திமுக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் பெரியாரை எப்போதோ மறந்து விட்டிருப்பார்கள். சிலையை செருப்பால் அடித்தவருக்கு ஊருக்கு ஊர் சிலை எழுப்பி போலி புகழ் பரப்பி விட்டார்கள்.

    ராமர் “சிலையை தான்” அவர் அடித்தார் என்றால் தற்போது அரசியல் தலைவர்களின் சிலையை செதபடுத்துகிரார்களே அதை “சிலையைதானே சேதபடுதினார்கள்” என்று ரொம்ப cool ஆக சொல்லிவிடுவீர்களா? குரானை கொளுத்தினால் “வெறும் காகிதங்களைதானே கொளுத்தினார்கள்” என்று சொல்வீர்களா?

  59. @Ananda Sagar,

    I watching you in alisina ‘ tamil site and iriyalla islam. probably swarna piryan seems not to know this matter. Even you teared one guy in padagu blog spot.

    @swarna priyan,

    you think here people are naive and easily could cheat us. we read all kuron and hadiths (authenticated) . your takiya not valid here.we knew well how M.K Khan and Alisina smashed all very good islamic scholars.

  60. பேரன்பிற்குரிய ஸ்ரீமான் தாயுமானவன்,

    \\ ஒத்தெல்லாம் ஊதவில்லை.. உண்மை நிலை தெரிந்தே தான் பேசுகிறேன். \\

    தில்லையம்பலத்தில் தமிழில் திருமுறை ஓதப்படவில்லை என்று கூறியது பச்சைப்பொய். அந்தப்பொய்யை திரும்பித் திரும்பி ஜெனாப்-ஏ-அலி கூறி வருகிறார். தில்லையம்பலத்தில் தமிழில் திருமுறை பாடப்படுவதில்லை என்று சொல்வது தகாது.

    \\ சிவனடியாரான ஆறுமுக சாமியை அவரின் தள்ளாத வயதிலும் கொஞ்ச கூட இரக்கமில்லாமல் திருசிற்றம்பல மேடையை விட்டு தீட்சித தெள்ளவாரிகள் கீழே தள்ளியதை மனசாட்சியுள்ள யாராலும் மறக்க முடியாது. \\

    திருவைந்தெழுத்தை ஒரு நபர் நடிப்பதற்காகச் சொன்னாலும் கூட ………….

    திருவைந்தெழுத்தை எனக்கு கேழ்க்கும் பாக்யத்தை ஈந்த அந்த நபர் வணங்கத் தக்கவர் என்றே தான் கருதுவேன்.

    அந்தக் காணொலியைப் பார்த்தேன். தீக்ஷிதர்கள் தரப்பிலிருந்து மிகத் தெளிவாக ………… நாங்கள் தேவாரம் திருமுறைகளைப் பாடக்கூடாது என்று யாரையும் மறுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

    திருப்புகழமுதம் கேட்ட அளவிற்கு திருமுறைகள் நான் கேட்டதில்லை. ஆனால் சைவப்பெரியோர்கள் அனைவரும் திருமுறைகளில் மறைகளை வணக்கத்திற்குரிய தேவார நால்வரும் விதந்தோதியுள்ளதாகவே வாசித்துள்ளேன்.

    வேதாகம ரீதியிலான கோவில் வழிபாடுகளில் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டு மொழிகளிலும் வழிபாடுகள் நிகழ்கின்றன. கோவிலில் இறைந்து இறைவனை வழிபடுவதும் கூட நமது வழிபாட்டு முறைகளில் ஒன்று தான்.

    ஒரே சமயத்தில் இரு வழிபாடுகள் நிகழ்ந்தால் தர்சனார்த்திகள் இரண்டையும் அனுபவிக்க இயலாமற் போகும். ஒன்றன் பின் ஒன்றாக ஏன் வழிபாடுகள் நிகழ்த்தப்படக்கூடாது.

    லத்தாக் பகுதியில் உள்ள பத்தர் சாஹேப் குருத்வாராவுக்கு சென்றிருக்கிறேன். க்ரந்திகள் எனப்படும் பற்பல பாடகர்கள் அங்கு பாட விரும்புகின்றனர். ஆனால் தடியெடுத்தவன் தண்டல் காரன் என்ற படிக்கு ஒரே சமயத்தில் எல்லோரும் பாட நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அவரவருக்கு பாட நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படுகிறது. அப்போது மட்டிலும் அந்தந்தக்குழுக்கள் பாடலாம்.

    கோவில் வழிபாட்டை முனைந்து தடுப்பவர் யாராக இருந்தாலும் தேவையான பலப்ரயோகம் செய்து கோவில் வழிபாட்டை தடுப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டியது சிவத்தொண்டு செய்பவர் கடமை.

    \\ இந்த நெறி கேட்ட இழி பிறவிகளான தீட்சிதர்களையும், \\

    தில்லைவாழந்தணர் தம் அடியார்க்குமடியேன் என்று துவங்கும் திருத்தொண்டத்தொகை கூறுவது பொய் என்று என் மனம் கனவிலும் சொல்லாது.

    சைவம் வைஷ்ணவம் இரண்டும் எனது இரு கண்கள்.

    த்ருணாதபி சுனீசேன தரோரபி சஹிஷ்ணுனா — புல்லை விடத்தாழ்ந்தவனாகவும் மரங்களை விடப் பொறுமை வாய்ந்தவனாகவும் மானாபிமானாம் பார்க்கது அடக்கமுடையவனே ஹரிநாமம் சொல்லத்தகுதி படைத்தவன் என்று சைதன்ய மஹாப்ரபு அவர்கள் போதித்தமையை என் வாழ்நாள் முழுதும் நினைவிலிருத்துவேன்.

    நீங்கள் யாரையும் எப்படி வேண்டுமானாலும் இகழ முனையுங்கள்.

    ஆனால் இறைவனால் உலகில் படைக்கப்பட்ட எந்த உயிரினத்தையும் இறைவனுடைய அம்சமாகவே பார்க்க எனக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு புழு பூச்சியைக் கூட இழி பிறவியாக நான் கருதவொண்ணேன். க்ஷமிக்கவும்.

    \\ தில்லை கோவில் என்பது தமிழ் மக்களின் சொத்து. \\

    இல்லை. காசி விஸ்வநாதர் ஆலயம் ஹிந்திக்காரர்களின் சொத்து என்பது எப்படி மடைமையோ அப்படி மடமையானது தில்லையம்பலம் தமிழர்களின் சொத்து என்பது. கோவில் என்பது யாருடைய சொத்தும் கிடையாது. சிவப்பரம்பொருளை மனமொன்றி வழிபட விழைவோர் செல்லும் வழிபாட்டு ஸ்தலம் விஸ்வநாதர் ஆலயம் மற்றும் தில்லையம்பலம்.

    உலகெங்கிலும் சிவப்பரம்பொருளை துதிப்பவர்கள் அடக்கத்துடன் வழிபட வேண்டிய இடம் ஆலயம். தில்லையம்பலம் தமிழகத்தில் இருப்பதால் உலகெங்கிலும் இருந்து தர்சனத்திற்கு வரும் தர்சனார்த்திகளுக்கு மனமொன்றி தர்சனம் செய்ய வழிவகுப்பது தமிழ் மக்களின் கடமை.

    திருவாரூர்த் த்யாகராஜனையும் திருவரங்கத்தெம்மானையும் பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்று சொல்பவர் எவரும் தமிழர் கிடையாது. அப்படிப்பட்ட அரக்கர்களுடைய கரங்களைக் கோர்த்து தமிழகத்து ஆலயங்களை அழித்தொழிக்க விழையும் எவரையும் ……. ஆலய வழிபாடுகளுக்கு முனைந்து குந்தகம் விளைவிக்க விழையும் எவரையும்……..ஆலய வழிபாடுகளில் ஈடுபாடு உடைய அனைத்து அன்பர்களும் தேவையான பலப்ரயோகம் செய்து நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டும்.

    //சிவனடியார் என்ற பெயரில் நாஸ்திகப்பதர்களுடன் கைகோர்த்து ஆலய வழிபாட்டை குந்தகம் செய்பவர்களை முனைவர் ஐயா அவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளார்//

    \\ கண்டித்த கையோடு வேறு என்ன சாதித்து இருக்கிறார். \\

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.

    முனைவர் ஐயா தமது வாழ்வில் சாதித்ததில் நூற்றில் ஒரு பங்கு நாம் சாதித்திருப்போமா என்று நினைத்து நம்மை மேம்படுத்திக்கொள்ள விழைவது சாலத்தகும்.

    \\ \\ இவர்களை கண்டிக்காமல் வாய் மூடி மவுனமாக இருந்து வக்காலத்து வாங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற தமிழ் விரோத அமைப்புகளையும் முற்று முழுதாக துடைத்தெறிய வேண்டும். \\

    கண்டிக்கப்பட வேண்டியவர்கள் கோவில் வழிபாடுகளுக்கு இடையூறு செய்பவர்கள்.

    *தமிழ்* என்ற போலி நாடகமாடி *பகுத்தறிவு* என்ற பெயரில் சைவ வழிபாட்டை தெருத்தெருவாக இழித்துப்பழிப்பவர்களை எதிர் கொள்ள முனைப்புள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள். தமிழ் விரோத அமைப்புகள் என்பவை *தமிழ் மற்றும் பகுத்தறிவு என்ற பெயரில்* சைவ வழிபாட்டை இழித்துப் பழிக்கும் அமைப்புகள். அப்படிப்பட்ட அரக்க சக்திகளை வீறு கொண்டு எதிர்க்கும் அமைப்பு தமிழுக்கும் சைவத்துக்கும் சேவை செய்யும் அமைப்பு. சைவ வழிபாட்டை இழிவு செய்யும் *போலித் தமிழ் குண்டர் அமைப்புகளை* எதிர்த்து நீங்கள் இது வரை என்ன செய்தீர்கள் என்று இங்கு பகிரலாமே.

    \\ சுவனப்ரியன் நியாயத்தை பேசியிருக்கிறார், நடந்ததை பேசி இருக்கிறார். \\

    யார்? தமிழகத்து தர்க்காஹ் ஷெரீஃப்புகளை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று சொல்லும் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களா? தமிழகத்து சிவாலயங்களையும் விண்ணகரங்களையும் அல்லாவுக்கு காவு வாங்க தகர்த்து நொறுக்க வேண்டும் என்று கூட சொல்வார். அதை கேட்டும் கேட்காத படிக்கு நீங்கள் போய்விடலாம். நாங்கள் போய் விட மாட்டோம். அப்படிப்பட்ட இழிவான அவலத்தை ஒரு சிவனடியாரே ந்யாயம் என்று சொன்னாலும் அதை எக்காரணம் கொண்டும் ஏற்க மாட்டோம்.

    மாற்று மதத்தைப் பற்றி இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கந்தறகோளாதிகளை வாசித்து அதை அப்படியே காபி பேஸ்ட் செய்வது ந்யாயம் என்று ஆகாது.

    அவரது கண்யத்துடன் உத்தரம் பகிரும் பாங்கு நீங்கள் சொல்லி எனக்குப் புரிய வைக்க வேண்டிய விஷயம் இல்லை. அம்மன் கோவில் வழிபாடுகளை இஸ்லாமிய குண்டர்கள் தடுத்து அடாவடி செய்தபோது சஹோதரர் சுவனப்ரியன் எதிர்த்துக் கருத்துப் பகிர்ந்தபோது அதை முதலில் விதந்தோதியவன் சிறியேன் என்றும் அறியவும்.

    ஆனால் அனைத்து மஸ்ஜிதுகளிலும் அரபியில் மட்டும் தொழுகை நடத்திக்கொண்டே……. தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் வழிபாடு நடக்கும் ஆலய முறைமைகளை……….. தமது மட்டில்லா சம்ஸ்க்ருத த்வேஷமிக்க இழித்துப்பழிக்கும் அவர் பாங்கும்….. தமிழுக்காக முதலைக்கண்ணீர் விடும் அவரது நாடகத்தை அப்படியே நம்புவதற்கும் இங்கு யாரும் முட்டாள்களில்லை.

    அவரது அரபி மொழி முதற்கொண்டு எந்த மொழியின் பாலும் எமக்குத் த்வேஷம் இல்லை. ஆனால் அவரது மொழித் த்வேஷத்தையும் முற்று முழுதாகப் பொய் கூறும் திறனையும் அப்படியே ஏற்க முடியாது.

    தமிழுக்காக முதலைக்கண்ணீர் விடுவதற்கு முன்னர் அனைத்து மஸ்ஜிதுகளிலும் தமிழகத்தில் அரபி மொழியில் தொழுகை நடத்துவதை முதலில் நிறுத்தி தமிழில் மட்டும் தொழுகை நடத்தி……. பின்னர் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய அவர் விழையலாம். அப்படியில்லாமல் தமிழுக்காக வசனம் பேசுவது………..வெறும் நாடகம் மட்டிலுமாகவே அவதானிக்கப்படும்.

    \\ சிற்றம்பல மேடையில் தமிழை ஏற்றுங்கள். \\

    சிற்றம்பல மேடையில் திருமுறை ஓதுதல் என்ற படிக்கு தமிழ் என்றென்றும் கொலுவீற்றிருக்கிறது.

    அரன் நாமத்தால் தீயது நீங்குக. அரன் நாமம் மட்டிலும் மனதில் தங்குக.

    என்றென்றும் திருவைந்தெழுத்து சிந்தையில் ஓங்குக.

    திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  61. ” பாக்தாத்; ஜூலை, 24-

    கடந்த மாதம் ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஜிஹாதிப் போராளிகள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு தீவிர இஸ்லாமிய சலாபிஸ்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள இந்த நாட்டில் வாழும் 11 வயதிலிருந்து 46 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவருக்கும் பெண் உறுப்பு சிதைப்பை சமய அரசாணையாக இந்த இயக்கம் அறிவித்துள்ளது. இன்று காலை தெரிய வந்துள்ள இந்த ஆணையால் நான்கு மில்லியனுக்கும் மேலான பெண்களும், சிறுமிகளும் பாதிக்கப்படுவார்கள். “- இன்றைய செய்தி.

    இதுபோன்ற ரவுடிக் கும்பலை நியாயப்படுத்திப் பேசும் ஜனாப் சுவனப்பிரியன் அவர்கள் எங்கே இருக்கிறார் ? இதனை நியாயப்படுத்தி அவரது தளத்தில் ஏதாவது உலருவாரா ? இது எந்த ஊர் நியாயம் பாருங்கள். ஒவ்வொரு ஆணோ, பெண்ணோ தன்னை தானோ தற்கொலை செய்து கொள்வதை கூட நமது குற்றவியல் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த ஐ எஸ் ஐ எஸ் கும்பல் பல ஆயிரம் இஸ்லாமியர்களை தினசரி கொன்று குவித்து வருகிறது. பெண்களுக்கு எதிராக இந்த அமைப்பு விடுத்துள்ள மதக்கட்டளை பற்றி இங்குள்ள செகுலரிஸ்ட் என்று சொல்லித்திரியும் தாயுமானவன் போன்றோர் என்ன கூறப்போகிறார்கள்.?

    https://www.maalaimalar.com/2014/07/25001555/ISIS-jihadists-order-genital-m.html

  62. திரு ஆனந்த் சாகர் அவர்கள் தெளிவாக பதில் கொடுத்துள்ளார். பெரியவர் சுவனப்பிரியன் அவர்கள் இப்போதாவது சிறிதளவேனும் சிந்திப்பாரா ?

  63. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

    சொல்ல விட்ட சில விஷயங்கள்.

    தமிழகத்தில் அனைத்து ஜாதிகளைச் சார்ந்த மக்களும் ஆலயங்களில் தெய்வத் திருமேனி தீண்டி தொண்டு செய்து வருகிறார்கள் என்பது மூன்று தசாப்தங்கள் முன் தமிழகம் விட்டுப் புலம் பெயர்ந்த எனக்குத் தெளிவாகத் தெரியும்.

    ஹிந்து அமைப்புக்கள் அனைத்தும் அனைத்து ஜாதி மக்களும் அர்ச்சகர் ஆகும் உரிமையை ஆதரிக்கின்றன. ஸ்ரீ அ.நீ அவர்கள் தமிழ் ஹிந்து தளத்தின் ஒரு சஹோதர தளத்தில் இது சம்பந்தமான ஒரு வ்யாசம் / நேர்காணல் பதிவு செய்திருந்தார். சுட்டி நினைவிலில்லை. ஹிந்து அமைப்பைச் சார்ந்த எனக்கு இதில் பெருமிதமே.

    மோதியின் குஜராத்தில் இது சட்டமாக்கப்பட்டு அமலும் செய்யப்பட்டிருக்கிறது. ஆர் எஸ் எஸ் — ஹிந்து இயக்கங்க்ள் என்ன கிழித்துள்ளன என்பதற்கு பதில் இது.

    ஸ்ரீமான் கதிரவன் மிகத் தெளிவான கருத்தைப் பகிர்ந்திருந்தார். அப்பாவி இளைஞர்களுக்கு ஆசை காட்டி அவர்களுக்கு பயிற்சிகளையும் அளித்து ஆனால் கோவில்களில் பணி செய்ய நியமனம் அளிக்காத கருணாநிதியின் செயலில் எங்கு தார்மீகம் இருக்கிறது? த்ராவிட குப்பை அரசியல் வ்யாதி கும்பல்கள் ஹிந்துஸ்தானத்தின் திறமை வாய்ந்த வக்கீல்களை வைத்து துரித கதியில் ந்யாயாலயங்களில் போராடி தான் பயிற்சி அளித்த ஹிந்து இளைஞர்களுக்கு ந்யாயம் கிடைக்க வழி செய்திருக்கலாமே. ம்…………. 2ஜி வழக்குகளை வழக்காட நேரமில்லாத போது இதற்கெல்லாம் எங்கு நேரம் இருக்கும்.

    தீண்டாமைக்கு எதிராகப் போராடுவது என்பது…… ஆப்ரஹாமியத்துக்குத் தொண்டூழியம் செய்யும் போலித் தமிழ் அமைப்புகள் செய்வது போன்று…… பொதுச்சொத்தை கொளுத்தி கோவில் வழிபாடுகளை இடையூறு செய்து……. கோவில்களை இழிவு செய்யும் நாடகமாடுதல் இல்லை. மனதார்ந்த செயல்பாடு. நூற்றுக்கணக்கான ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அவை அனைத்திலும் அனைத்து ஜாதியைச் சார்ந்த (மதத்தைச் சார்ந்தும் இருக்கக் கூடும்) சஹோதரர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து போஜனம் செய்து…… போஜன காலத்தில் சங்கம் விதித்த மந்த்ரங்கள் ஓதி……. ஒன்றாக தேஹாப்யாசங்கள் செய்திருக்கிறேன் / றோம். இவை வாழ்க்கையில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் ஒழிய அதில் ஈடுபாடுள்ள அன்பர்கள் நேரடியாகச் செய்ய வேண்டிய செயல்பாடு.

    தமிழகத்து தமிழர் அமைப்புகள் என்ற குண்டர்படைகள் செய்வது போல் பொதுச்சொத்தை கொளுத்துவது தீண்டாமை ஒழிக்கும் செயல்பாடு ஆகாது.

    உத்தபுரத்தில் ஹிந்து அமைப்புக்கள் பாடுபட்டது அனைத்து ஹிந்துக்களும் சஹோதரர்களாக புழங்கி ஆலயங்களில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கருத்துக்கு. அதில் பெருவெற்றியும் பெற்றார்கள். ஆனால் ஆப்ரஹாமியப் பிச்சைப் பணத்தில் ஆப்ரஹாமியத்துக்குத் தொண்டூழியம் செய்ய கடமைப்பட்டுள்ள தமிழ் விரோத தமிழகத்தைச் சார்ந்த *தமிழர் அமைப்புகள்* என்ற குண்டர் படைகள் எக்காரணம் கொண்டும் ஹிந்துக்கள் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து ஒன்றிணையக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். அப்போது தானே தங்கள் எஜமானர்களான ஆப்ரஹாமியர்களுடைய மதங்களுக்கு கொத்துக்கொத்தாக தமிழர்களை மதம் மாற்றி தொண்டூழியம் செய்ய முடியும்.

    வன்முறையால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டு ஆனால் சுயமாக இஸ்லாத்தை முழுமையாக ஹிந்துஸ்தானத்தில் சீர்திருத்திய ஹிந்துஸ்தானத்து இஸ்லாத்துக்கு பெரும்பாரம்பர்யம் இருக்கிறது. அது தேசத்தின் கலாசாரத்தின் ஒரு கூறு. அடிமட்ட மக்களான கோடானுகோடி முஸ்லீம் சஹோதரர்களின் வாழ்வாதாரம் இப்படிப்பட்ட தேசிய கலாசாரம் சார்ந்த இஸ்லாம். இம்மக்கள் ஹிந்து சஹோதரர்களுடன் இணைந்து பணியாற்றியும் வருகிறார்கள்.

    தன்னுடைய சொந்த முஸ்லீம் சஹோதரர்கள் வழிபடும் ( எமக்கும் உங்களுக்கும் கூட சஹோதரர்களே) தர்க்காஹ் ஷெரீஃபுகளை தகர்க்க வேண்டும் என்று சட்ட விரோதமாக சொல்லும் ஜெனாப் சுவனப்ரியன் நிறுவ முனையும் ஆப்ரஹாமியம் பயங்கரவாத ஆப்ரஹாமியம். சித்தாந்த மாறுபாடுகள் உள்ள முஸ்லீம் சஹோதரர்களை முஸ்லீம்களே இல்லை என்று ஃபத்வா விதிக்கும் பயங்கரவாத இஸ்லாமியம். அது பாக்கி ஸ்தானத்தில் மட்டிலும் சாத்யம். ஹிந்துஸ்தானத்தில் அல்ல. அது உலகில் நிகழ்த்துவது பேரழிவு. தன்னுடைய சஹோதர முஸ்லீம்கள் வழிபடும் வழிபாட்டு ஸ்தலங்களை தகர்ப்பதை முனைப்பாகக் கொண்ட ஒரு பயங்கரவாத ஆப்ரஹாமியத்தின் அடுத்த இலக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் பெருமையாக காட்சியளிக்கும் ஆலயங்கள் என்று கண்டுபிடிக்க ராக்கெட் சயின்ஸ் படிக்க வேண்டாம். தமிழகத்து கோவில்களை ஆப்ரஹாமிய குண்டர்கள் கைப்பற்றியதை ஆப்ரஹாமியத்துக்குத் தொண்டூழியம் செய்யும் தமிழர் குண்டர் படைகள் வாயைத்திறந்து கேழ்வி கேழ்க்காது. ஆனால் ஹிந்து அமைப்புக்கள் நிச்சயம் அதை மீட்கப் பாடுபடும்.

    இவர் சொல்லும் அன்யாயத்தை ந்யாயம் என்று சொல்லும் தாங்கள் உங்களையும் என்னையும் துலாக்கோலிட்டு பார்க்கையில் ஞானாதிகரான வயோவ்ருத்தரான இந்த தளத்து பீஷ்ம பிதாமஹரான முனைவர் ஐயா என்ன சாதித்துள்ளார் என்று துடுக்கு மிகப் பேசுவது முள்ளாக உறுத்தும் விஷயம். ஜெனாப் சுவனப்ரியன் அவர்களிடமிருந்து மாற்று மதங்களை சுவடினிறி அழித்து ஒழித்தல் என்பது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இல்லை. சான்றோர்களை மதித்தல் என்ற உயர்வான பண்பு அவரிடமிருந்து கற்க வேண்டிய விஷயம்.

    மனதுக்குச் சொல்லொணா தாபம் தந்த தங்களது உத்தரத்தை வாசித்த பின் முனைவர் மஹாசயர் அவர்கள் பகிர்ந்த உத்தரத்தை நினைவு கூர்ந்து தாப சமனம் செய்து கொண்டேன்.

    https://tamilhindu.com/2012/12/tamils-and-vedanta-8/

    \\\\\ /“அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம், வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் விஷ்ணுவை உகப்பிப்பவை” / சிவபூசையிலும் அஷ்டபுஷ்பம் சாத்தி வழிபடல் ஓரங்கமாகும். புறப்பூசைக்குமுன், அந்தயாகப் பூசையாக, “நாபௌ குண்டமிதி விபாவ்யா| அஹிம்சா இந்திரிய நிக்ரஹ க்ஷமா தான மாற்சரிய பாவ சிந்தனா, ஞான சமாதியோக புஷ்பாணி சமர்ப்பயாமி|| என்று கூறி அட்டபுஷ்பம் சார்த்தி வழிபடுவதாகப் பாவித்த பின்னர் சிவமூலமந்திரத்தினால் நாபியாகிய் குண்டத்தில் சிவவேள்வி செய்வதாகப் பாவிக்கப்படும் இவ்வெட்டுக் குணங்கள் ஆன்மிக வாழ்வுக்கு அடிப்படை. \\\\

    இந்த உயர்ந்த ஆத்ம குணங்கள் என் வாழ்வில் முற்றாகக் ஒழுகப் பெற்றேனில்லேன்.

    ஆனால் இவையே இறைவனை அடையத் தகுதிகளான உயர்ந்த குணங்கள் என்றும்…… எம் இரு கண்களான….. தமிழகத்து தொல் சமயங்களான சைவம் வைஷ்ணவம் ஒருங்கே தெரிவிக்கும் விஷயம் என்றும்……. எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளால் நான் அடையத் தக்கதான இலக்கு என்றும் நிச்சயம் அறிவேன்.

    உங்களைக் குறை சொல்லுதல் என் இலக்கு இல்லை. ஏன் என்னிடம் ……. என் செயல்பாடுகளில் எத்தனையெத்தனை குறைகள் உண்டு?

    ஆனால் தமிழகம் பல் சமயங்கள் தழைக்கும் தமிழ் தழைக்கும் சம்ஸ்க்ருதமும் தழைக்கும் பாரத பூமியின் பெருமை மிகு ஸ்தலம்.

    இங்கு இவையத்தனையையும் அழித்தொழித்து ஆப்ரஹாமியம் மட்டிலும் நிலைக்கப்பாடுபடும் சக்திகள் கருவறுக்கப்பட வேண்டும்.

    தமிழையும் எமது கலாசாரத்தையும் எமது ஆலயங்களையும் (மாற்று மதத்தினரின் — பரேல்வி சுன்னி முஸ்லீம்களின் தர்காஹ் ஷெரீஃப் மற்றும் ஷியா முஸ்லீம்களின் இமாம்பராக்கள் கூட ) நமது கலாசாரத்தின் கூறாக ஏற்று காக்க அல்லும் பகலும் பாடுபடும் ஹிந்துத்வ இயக்கங்களில் தொடர்ந்து பங்களிப்பது நானும் இந்த உயர்ந்த பணியில் பங்கேற்கிறேன் என்ற மன நிறைவைத் தருகிறது. முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற முஸ்லீம் சஹோதரர்களது அமைப்பும் ஹிந்துக்களொடு கரத்தொடு கரம் கோர்த்து இந்த உயர்ந்த பணியில் உள்ளது. அதிலும் எனக்குப் பெருமிதமே.

    வள்ளிக்கு வாய்த்த பெருமானின் அசீம க்ருபை உங்களுக்கும் நமது தளத்து அனைத்து சஹோதரர்களுக்கும் உரித்தாகுக. மாற்று மதத்தைச் சார்ந்த நம்முடன் கருத்துப் பகிரும் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுக்கும் உரித்தாகுக.

    திருமுறையென்றும் உங்கள் – நம் சிந்தையில் தங்குக. சித்தம் தெளிக.

    இறைவனை அடைய தகுதியானவை என்று சைவமும் வைஷ்ணவமும் போற்றும் உயர் குணங்கள் நாம் அனைவரும் அடையப்பெருவோமாக.

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  64. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.

  65. உயர்திரு. கிருஷ்ண குமார்….

    //தில்லையம்பலத்தில் தமிழில் திருமுறை ஓதப்படவில்லை என்று கூறியது பச்சைப்பொய். அந்தப்பொய்யை திரும்பித் திரும்பி ஜெனாப்-ஏ-அலி கூறி வருகிறார். தில்லையம்பலத்தில் தமிழில் திருமுறை பாடப்படுவதில்லை என்று சொல்வது தகாது.//

    அப்படியா.. அப்படி என்றால் அந்த கானொளியில் கூறுவது என்ன பொய்யா?ஆறுமுக சாமி நீதிமன்ற ஆணையுடன் சிற்றம்பல மேடையில் பாடி கொண்டிருக்கும் பொழுது திரையை மூடி சமற்க்ருத மந்திரங்களை உரக்க சொல்லி அவரை தேவாரம் பாட விடாமல் செய்து இருக்கிறார்கள் என்றால். இவர்களுக்கு இருக்கும் பார்பன திமிர் தான் எத்தகையது.

    //அந்தக் காணொலியைப் பார்த்தேன். தீக்ஷிதர்கள் தரப்பிலிருந்து மிகத் தெளிவாக ………… நாங்கள் தேவாரம் திருமுறைகளைப் பாடக்கூடாது என்று யாரையும் மறுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.//

    தீட்சித காவாளிகளின் பேட்டியை மட்டும் கூறினீர்கள், அப்படியே ஓதுவார் ஆறுமுக சாமியும் அதில் கூறியிருப்பதை இருட்டடிப்பு செய்து விட்டீர்கள். எப்படி தீத்சித தெள்ளவாரிகள் திரையை போட்டு சிவபெருமானின் தெய்வ திருமேனியை மறைத்து,வடமொழி மந்திரங்களை உரக்க கூறி தம்மை பாடவிடமால் தடுத்ததை கூறி இருப்பது தங்களின் கண்களுக்கு தெரியவில்லையா… தீட்சிதர்களுக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள்..

    //கோவில் வழிபாட்டை முனைந்து தடுப்பவர் யாராக இருந்தாலும் தேவையான பலப்ரயோகம் செய்து கோவில் வழிபாட்டை தடுப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டியது சிவத்தொண்டு செய்பவர் கடமை.//

    இங்கு நடக்கும் உரிமை பிரச்னையை, தன்மான பிரச்னையை தீர்த்துவிட்டு அதன் பிறகு வழிப்பாட்டை தொடரலாம். ஒன்றும் பாதகம் இல்லை. நிச்சயம் இந்த அய்யோக்கிய தீட்சதர்களின் பூசையை எம்பெருமான் ஈசன் ஏற்று கொள்ளமாட்டான். இந்த தீட்சத சிவ துரோகிகளை அப்புறபடுத்துவது தான் உண்மையான சிவ தொண்டாக இருக்க முடியும்.

    //ஆனால் இறைவனால் உலகில் படைக்கப்பட்ட எந்த உயிரினத்தையும் இறைவனுடைய அம்சமாகவே பார்க்க எனக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு புழு பூச்சியைக் கூட இழி பிறவியாக நான் கருதவொண்ணேன். க்ஷமிக்கவும்.//

    நிச்சயமாக .. இதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால், அந்த புழு பூச்சியை விட கேவலமானவர்களை நீங்கள் வியந்தோதுவது தான் தாங்க முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது. சந்தேகம் இருந்தால் தீட்சதர்களின் யோகிதையை தில்லை வாழ் மக்களிடம் போய் கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் அவர்கள் இழி பிறவிகளா இல்லையா என்று.

    //இல்லை. காசி விஸ்வநாதர் ஆலயம் ஹிந்திக்காரர்களின் சொத்து என்பது எப்படி மடைமையோ அப்படி மடமையானது தில்லையம்பலம் தமிழர்களின் சொத்து என்பது. கோவில் என்பது யாருடைய சொத்தும் கிடையாது. சிவப்பரம்பொருளை மனமொன்றி வழிபட விழைவோர் செல்லும் வழிபாட்டு ஸ்தலம் விஸ்வநாதர் ஆலயம் மற்றும் தில்லையம்பலம்.//

    இதை நீங்கள் எனக்கு சொல்வதை விட, தில்லை கோவிலை தன் அப்பன் வீட்டு சொத்து என்று நினைத்து அராஜகம் செய்து கொண்டிருக்கும் தீட்சிதர்களிடமும், அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவதை தடுக்கும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்திடமும் போய் சொல்லுங்கள்.

    //முனைவர் ஐயா தமது வாழ்வில் சாதித்ததில் நூற்றில் ஒரு பங்கு நாம் சாதித்திருப்போமா என்று நினைத்து நம்மை மேம்படுத்திக்கொள்ள விழைவது சாலத்தகும்.//

    அதை தான் கேட்டேன் அவர் என்ன சாதித்தார் கூறுங்கள் என்று. எனக்கு ஒன்றும் தெரியாது, கூறினால் சிறியேன் தெரிந்து கொள்வேன். அதை விட்டு அடக்கத்தை பற்றி எனக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கிறீர்கள்.

    மற்றபடி, சுவனப்ரியன் பற்றி தாங்கள் கூறி இருக்கும் குறைகளுக்கு நான் பதில் அளிப்பது நியாயமாகாது, நான் கூறியது சிதம்பரம் கோவில் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் இருக்கும் சாதி வெறி தொடர்ப்பாக அவர் கூறியதை நான் அமோதிக்கிறேன் என்று தான் அவ்வளவே. மற்றப்படிமுனைவர் ஐயாவை நீங்கள் தலைமேல் வைத்து தக்காடுவது போன்று நான் ஒன்றும் தக்காட்டவில்லையே..

    //அரன் நாமத்தால் தீயது நீங்குக. அரன் நாமம் மட்டிலும் மனதில் தங்குக.//

    அரண் நாமத்தால் தமிழகத்தை பிடித்து இருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்னும் காவி பிழைப்புவாதம் என்கிற தீங்கு விரைவில் நீங்குமாக.. ஓம் நம சிவாய….

    -தாயுமானவன்

    ஆசிரியர் குழு மட்டுறுத்தல்://தீட்சித காவாளிகளின் // //தீட்சத சிவ துரோகிகளை// //அய்யோக்கிய தீட்சதர்களின்// //தீத்சித தெள்ளவாரிகள்// //புழு பூச்சியை விட கேவலமானவர்களைஇவ்வாறு தொடர்ந்து தகாத வார்த்தைகளை கூறி இங்குள்ள உரையாடலின் தரத்தை கெடுத்து வரும் தாயுமானவன் என்கிற பெயரில் கருத்துகளை எழுதும் நபரின் வசைகள் இதுவரை அனுமதிக்கப்பட்டன. காரணம் ஏதாவது ஒரு விதத்தில் அவர் ஆரோக்கியமான உரையாடலுக்கு உதவுவார் என்பதும் ஜனநாயக உரிமையை இந்த தளம் மதிப்பதாலுமே. ஆனால் அவர் தொடர்ந்து வாதங்களை வைக்காமல் வசவுகளையே வைத்து வருவதால் இது திரு. தாயுமானவன் எனும் பெயரில் எழுதும் நபருக்கு முதல் எச்சரிக்கையாக அளிக்கப்படுகிறது. தயை செய்து தங்கள் எதிராளி தங்களிடம் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்கும் போது தாங்கள் அந்த தரத்தில் உரையாடவும். இதன் மேலும் தாங்கள் இதே போக்கில் தொடர்வீர்களென்றால் இந்த தளத்தில் தாங்கள் தடை செய்யப்படுவீர்கள்.

  66. சு.பி

    //
    //புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.//

    சரி அப்படியே வச்சிகிருவோம். அல்லா ஹு அக்பர் எதற்காக எட்டுக்கால் பூச்சியை படைத்தார். அவரே படைக்கிறார் என்று பார்த்தீர்கள் ஆனால். எதுக்காக ஒரு எட்டுக்கால் பூச்சியை படைத்தார். எதற்காக நாயை படைத்து அதை கடைசி இறை தூதர், தூதருள் மாணிக்கம், கருணைக் கடல் அவர்கள் தொழும் பொது உச்சா, ஆய் போக வைத்தார்.

    குரான் படிக்க தெரியாத ஒரு நாயை படைத்து என்ன பயன். அது உங்கள் தூதர் சொல் பேச்சை கேக்குமா. அவரை பத்து கொலைக்காம தான் இருக்குமா.

    உங்களது வாயில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கை இந்த உலகத்தில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது. இவ்வுலகத்தில் எல்லாமே constant என்ற அடிப்படை விஷயம் கூடாவா உங்களுக்க் தெரியவில்லை. இந்த உலகத்தில் இல்லாத ஒன்றை யாராலும் புதிதாக செய்ய முடியாது.

    உங்க அல்லா according to புனித நூல், மில்கி வே கேலெக்சியில தான் சார போட்டு குந்திகினு கீரார். இங்கன உக்காந்து கிட்டு அவரு என்கநேருந்து சாமான் செட்ட எடுத்து மனிதனை, பல்லிய, கோழிய, ஒட்டகத்த, அமைய, சுறா மீனை, எட்டுக்கால் பூச்சியை, கரடியை, ஆக்டோபச, அனகோண்டாவ, சில்வண்ட, தவக்களை, எலியை, எப்படி கோடிக்கும் மேற்பட்ட வகையராக்களை தயார் பண்றார்.
    உங்களுக்கு ஒன்னு தெரியுமோ, எந்த ஒன்றை செய்ய வேண்டுமானாலும் அதற்க்கு மூல பொருள் வேண்டும். நம்பளால் மூல பொருளை வைத்து கொண்டு புதிதாக ஒன்றை design செய்ய முடியுமே தவிர ஒன்றுமே இல்லாததை உருவாக்க முடியாது.

    இதை அல்லாவால் செய்வார் என்று நீங்கள் சொன்னால், அது நீங்கள் பார்க்கும் விஷயத்திற்கு விரோதமானது. உங்களால் இவ்வுலகில் இதை போன்று ஒரு உதாஹரணம் தர இயலாது. ஆகா என்ன சித்தமாகிறது, அல்ல களிமன்ன உருட்டி ஆளை தயார் செய்கிறார் என்பது கப்ச. சரி மொதல்ல அவ்வளோ களிமண்ணு எங்க சார் இருக்கு. ஒரு வேல மோதல் மணல் திருட்டு கேசு இது தானோ.

    மறு பிறவிக்கு ஒரே சமாதானம் போதும் – விச்வத்தில் உள்ள உயிர்களின் எண்ணிக்கை சமானம், அவை சதா உரு மாறுகின்றன. இதை என்ன உங்களால் முடியாது, ஆத்து மணலை எண்ணுவது போல தான்.
    மரமும் ஒரு உயிர் பாரும், உலகில் எத்தனை மரங்கள் குறைந்துள்ளன. மிருகங்கள் அதிகம் என்றால், எத்தனை இனங்கள் அழிந்தே போயுள்ளன.

    அப்புறம் இன்னொரு விஷயம். இப்போ நான் செத்தா உடனே சடக்குன்னு சவுதி அராபியாள ஒரு ஒட்டகமா பிறந்துருவேன் என்பது மறு பிறவி அல்ல. மறு பிறவி எடுக்க பல லட்சம் வருடம் பிடிக்கலாம். உங்களது தொலை பேசி என்னை தந்தால், உங்களை அழைத்து இதை விளக்கி சொல்லுவேன் 🙂

  67. Yokkiyanga sanndai!,,,,,
    லக்னோ, ஜூலை 25-

    உத்தர பிரதேசத்தில் வக்பு வாரியத்திற்கு ஊழல்வாதிகளை நியமனம் செய்ய வக்பு மந்திரி முகமது ஆசம் கான் முயற்சிப்பதாகக் கூறி ஷியா உறுப்பினர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஷியா மதகுரு மவுலானா கல்பே ஜவாத் தலைமையிலான போராட்டக் குழுவினர் இன்று காலை தொழுகைக்குப் பிறகு மந்திரி ஆசம் கான் வீட்டை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். ஆனால் ஷாகீத் ஸ்மாரக் அருகில் போலீசார் பேரிகார்டுகளை குறுக்கே வைத்து அவர்களை தடுத்தனர்.

    ஆனால், போராட்டக்காரர்கள் தடுப்பைத் தாண்டி தொடர்ந்து ஊர்வலமாக செல்ல முயன்றதால் போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் முதியவர்கள், குழந்தைகள் என நோன்பு மேற்கொண்டிருந்த பலர் காயமடைந்ததாக மவுலானா ஜவாத் கூறினார். தடியடியில் ஒருவர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    ஷியா வக்பு வாரிய தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை கொள்ளையடிக்கும் நபர்களை உறுப்பினர்களாக நியமிக்க மந்திரி ஆசம் முடிவு செய்துள்ளார் என்று மவுலானா குற்றம் சாட்டினார்.
    –மாலைமலர்

  68. தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவிற்கு….

    கடுமையான சொற்க்களை பயன்ப்படுத்தியமைக்கு மன்னிக்கவும்… நான் இங்கு யாரையும் தனி மனித தாக்குதல் செய்ய வில்லை… இத்தளத்தின் கட்டுரை ஆசிரியர்களையோ அல்லது மறுமொழி போடும் மற்ற அன்பர்களையோ இது நாள் வரை நான் தாக்கி பேசியதில்லை.. இப்போதும் அப்படி தான் தொடர்கிறேன்..

    தீட்சிதர்களை கடுமையாக பேசியது எனக்கு தப்பாக தென்படவில்லை. ஏனென்றால் தில்லையில் தீட்சதர்களின் ஆடுழியங்களை நேரில் கண்டவன் என்கிற முறையில் நான் அப்படி பேசினேன்.. நான் தவறான சொற்களை பயன் படுத்துவதாக நினைத்தால் அந்த சொற்களை மட்டும் நீங்கள் தடை செய்து என் மறுமொழிகளை போடலாம். மாறாக என்னையே தடை செய்து விடுவேன் என்று கூறுவது அப்பட்டமான கருத்து சுதந்திர பறிப்பு . சரி, இனி அது போன்று பேசமாட்டேன்..

    அப்புறம் இன்னொன்று…

    //தயை செய்து தங்கள் எதிராளி தங்களிடம் மோசமான வார்த்தைகளை//

    யாரும் யாருக்கும் இங்கு எதிராளி கிடையாது … அவர் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். நடப்பது வெறும் கருத்து பரிமாற்றம் மட்டுமே. இனி கடும் சொற்கள் வராமல் பார்த்து கொள்கிறேன்…

  69. 1. ஆப்கனிஸ்தானில் ஒரு மசூதியில் இருந்த மௌலவி 10 வயது சிறுமியை ரம்ஜான் மாதத்தில் கற்பழித்துள்ளான். கேடுகெட்ட இவர்களுக்கெல்லாம் ஒரு மதம். ஒரு தூதர்.இந்து மதத்தில் இப்படி நடப்பதில்லையா என்று கேட்கலாம். ஆனால் முஸ்லிம்கள் தான் எங்கள் மதம் போல இந்த உலகில் எந்த மதமும் இல்லை இந்து மதம் ஒரு மதமே இல்லை என்று சதா பீத்தி கொள்கிறார்கள்.

    2. UN ன் மூத்த அதிகாரியான Jacqueline Badcock கூறுகிறார்:- ஈராக்கில் சில கிறிஸ்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். மற்றவர்கள் அங்கே தங்கி ஜிசியா வரியை செலுத்த விரும்பியுள்ளனர்.
    (ஆதாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் 25-7-2014)

  70. ஆனந்த் சாகர்!

    //ஒவ்வொரு பௌதீக பிரபஞ்சத்திலும்(physical universe) கோடி கோடியான நட்சத்திரங்களும்(சூரியன்கள்) அவற்றை மையமாக வைத்து சுற்றிவருகின்ற பல கோடி கோடி கோடி கோடியான பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. அவைகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கிருந்தும் சில ஆன்மாக்கள் இந்த நமது பூமியில் பிறப்பெடுக்கின்றன. அப்படியே இங்கிருந்தும் சில ஆன்மாக்கள் அந்த கிரகங்களில் பிறப்பெடுக்கின்றன.//

    முதல் பாதி சரி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மறு பாதியான அங்கிருந்து உயிர்கள் இங்கு வருவதும் இங்கிருந்து உயிர்கள் அங்கு போவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஏனெனில் பூமியன் தட்ப வெப்பத்தை தாங்கும் அளவிலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். சந்திரனுக்கு நாம் செல்ல இங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கிறோம். அங்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மற்ற பல கொள்களை நீங்கள் நெருங்கவே முடியாது. அந்த அளவு வெப்பம். இன்னும் சில கோள்களில் தாங்க முடியாத குளிர். உறைந்து விடுவீர்கள். எனவே மற்ற கோள்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வருவதென்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அறிவியல் அறிஞர்களால் இதனை நிரூபிக்கவும் முடியவில்லை.

    //மேலும் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருக்க முடியும். அதாவது ஒரே ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருந்து உடல் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது குவாண்டம் இயற்பியல் (quantum physics) மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணதிற்கு ஒரே ஆன்மாவானது ஒரே நேரத்தில் இருவேறு நபர்களாக இருவேறு உடல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும். இந்த இரு நபர்களும் இருவேறு நபர்களாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உண்மையிலேயே ஒரே நபர்தான். எனவே உயிர்களின்(உடல்களின்) எண்ணிக்கை கூடுவது என்பது புதிரான விஷயம் அல்ல.//

    நீங்கள் அதிகம் விட்டலாச்சாரியா படங்களை விரும்பி பார்ப்பவர் என்று நினைக்கிறேன். அல்லது ரஜினியின் சந்திரமுகி படத்தை பார்த்த பாதிப்பாகவும் இருக்கலாம்.  ஒரு உடலில் இன்னொரு உயிரின் ஆன்மா நுழைவது என்பது படத்துக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். நிஜ வாழ்க்கையில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே! சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள். ஏனெனில் குர்ஆனின் கட்டளைப் படி பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று. அறிவியலும் பேய் பிசாசுகளை ஒத்துக் கொள்வதில்லை.

    நான் கேட்ட கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

    அதாவது ஒருவர் முன்பு ஒரு நாயை கொடுமைபடுத்தியிருந்தால் மறு பிறவியில் அந்த நாய் மனிதனாக பிறந்து போன பிறவியில் நாயை கொடுமை படுத்தியவன் நாயாக மறு பிறவி எடுப்பான் என்பது உங்களின் கொள்கை. பாதிப்படைந்த அந்த நாய் இந்த மனிதனை இந்த பிறவியில் கொடுமைப்படுத்துவான் என்பது மறுபிறவியின் தத்துவம். அந்த தத்துவத்தின் படி இன்ன குற்றத்திற்காக இவன் இவ்வாறாக படைக்கப்பட்டான் என்று அவனுக்கு தெரிய வேண்டும் அல்லவா? இத்தனை கோடி ஆண்டு ஆகியும் ஒருவருக்கும் தான் முற்பிறவியில் என்னவாக இருந்தோம். நமது ஏழு பிறவியில் இது எத்தனையாவது பிறவி என்ற உண்மை தெரிந்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே தெரியாமல் அவனை மறுபிறவியில் இழிவானவாக பிறக்க வைப்பதில் என்ன நன்மை கிடைக்க முடியும்?

    தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்ற காரணமே தெரியாமல் ஒருவன் துன்பத்தை அனுபவிப்பது அவனை எந்த வகையில் நேர்வழியில் கொண்டு வரும்? இதைக் கொண்டு மற்றவர்கள் எப்படி பாடம் படிக்க முடியும்?

    மேலும் உயிரைப் பற்றி இன்றைய அறிவியல் உலகம் ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர இயலவில்லை. அது ஒரு பெரும் புதிராக இருப்பதாக அறிவியல் அறிஞர்களே ஒத்துக் கொள்கின்றனர். உயிருக்கே சரியான விளக்கம் கிடைக்காத போது ஒரு உயிர் மற்றொரு உயிரில் ஏறிக் கொள்வதாகவும், மற்ற கோள்களில் இருந்து சில உயிர்கள் நமது பூமியில் மனிதனின் உடலில் புகுந்து கொள்வதாகவும் சொல்வதை எங்கிருந்து படித்தீர்கள்? இது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? சங்கரிடம் இதைப் பற்றி சொன்னால் எந்திரன் போல ஒரு சினிமா எடுக்க வேண்டுமானால் இந்த கதை உதவும் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராத ஒன்று.

  71. பேரன்பிற்குரிய ஸ்ரீமான் தாயுமானவன்

    நான் தமிழகத்தில் இல்லை என்பது தங்களுக்குத் தெரிந்த விஷயமே. காய்த்தல் உவத்தில் இல்லாமல் உண்மைகளை நாம் பகிர்வது மட்டிலும் கால விரயமாகத செயற்பாடு.

    உங்களது இடையறா வாதங்களால் கீழ்க்கண்ட இரு உரல்களையும் வாசிக்கும் பேறு பெற்றேன்.

    வாசகர்கள் அனைவரும் சற்று வேறுபடும் இரு தளத்துக் கருத்துக்களை வாசிக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்

    1. https://jataayu.blogspot.in/2008/03/blog-post.html
    2.https://madhavipanthal.blogspot.in/2008/03/blog-post.html

    \\ //பச்சைப்புளுகிற்கு விஷயம் தெரிந்த சிவனடியாரான ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் ஒத்தூதலாமோ.//

    ஒத்தெல்லாம் ஊதவில்லை.. உண்மை நிலை தெரிந்தே தான் பேசுகிறேன்.\\

    கேழ்வி தில்லையம்பலத்தில் தமிழில் திருமுறைகள் பாடப்படுகின்றனவா இல்லையா?

    ஸ்ரீமான் ஆறுமுகசாமி என்ற அன்பர் ரகளை செய்வதற்கு முன்னமிருந்தே ஆறுகால பூஜைகளின் போதும் தில்லையம்பலத்தில் திருமுறைகள் பாடப்பட்டு வருகின்றன.

    இல்லை என்று சொல்வது பச்சைப்பொய்

    \\ தீட்சிதர்களுக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள்.. \\

    ம்…………. ஆலய வழிபாடுகளுக்கு ……….. தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத ……… இரண்டு மொழி வழிபாடுகளுக்கும் வக்காலத்து வாங்குகிறேன். தீக்ஷிதர்களுக்கு இல்லை. தெளியவும்.

    தில்லையம்பலத்தின் சில தீக்ஷிதர்கள் (நிச்சயமாக அனைவரும் இல்லை) தர்சனார்த்திகளுக்கு தொல்லையளிப்பதை நானும் வாசித்திருக்கிறேன். நெறி தவருபவர்களை முறையாக மிகக் குறிப்பாக நேரடியாகச் சுட்டி அவர்களை நெறிப்படுத்த விழைவதை நான் எப்போதும் மறுக்க மாட்டேன். ஆனால் அப்படியின்றி ஒட்டு மொத்தமாக அனைத்துத் தில்லைவாழந்தணர்களையும் மிகக் கொடுமையான வசவுகளால் வைதல் என்பது…………… நிச்சயமாகத் தமிழ்க்கலாசாரம் கிடையாது…………. சைவ ஒழுக்கமும் கிடையாது………… நீங்கள் மிகக் கடுமையாக இழித்துப் பழிக்கும் ஜாதிவெறியே ஆகும். தெருத்தெருவாக நின்று கொண்டு போகுபவர் வருபவர்களை பாவிகளே என்று கூவும் ஆப்ரஹாமிய கலாசாரமே ஆகும்.

    \\ இங்கு நடக்கும் உரிமை பிரச்னையை, தன்மான பிரச்னையை தீர்த்துவிட்டு அதன் பிறகு வழிப்பாட்டை தொடரலாம். ஒன்றும் பாதகம் இல்லை. \\

    நீங்கள் சைவ ஒழுக்கப்படி நடக்கும் அன்பர் தானே.

    கோவிலில் இறைவனது வழிபாடு தானே முதல்.

    ஆலய வழிபாடு நடக்கக்கூடாது என்று சொல்பவர் யாருக்கும் சிற்றம்பல மேடை என்ன. கோவில் வாசல் கதவைத் தாண்டக்கூட அதிகாரம் கிடையாது.

    கோவில் வழிபாடுகளைக் குலைக்க முனைபவர்களைச் செம்மையாகத் தண்டிக்க அதிகார நந்தியம்பெருமான் இருக்கிறார்.

    திருமுறைகள் என்பது எப்படி இறைவனிடமிருந்து தோன்றியவையோ அப்படியே இறைவனிடமிருந்து தோன்றியவை வேதாகமங்கள். அப்படித்தானே திருமுறைகளும் கூட சொல்லுகின்றன அன்பரே. அப்படியான வேதாகம வழிபாடுகளை எப்படி இழித்துப் பழிக்க முடியும். யாரும் திருமுறை வழிபாடுகளை பழிக்கவில்லை. தீக்ஷிதர்கள் முதற்கொண்டு என்பதை அறியத் தலைப்படுவீர்.

    தில்லையம்பலம் தன்னை முன்னிறுத்தி இறைவனை நினைக்க மறுப்பவருக்கு இல்லை. தன்னை மறந்து ஒரு க்ஷண நேரமாவது தன் மனதை தில்லையம்பல வாணனிடம் ஒப்படைக்க விழைபவருக்கு மட்டிலும் தான் தில்லையம்பலம்.

    தன்னை நினைக்க விரும்புவர்கள் சினிமாக்கொட்டாய்களுக்கோ அரசியல் பொதுக்கூட்டங்களுக்கோ போய் ரகளை செய்யலாம்.

    ரகளை செய்வதற்கான இடம் ஆலயம் இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

    அது நெறி தவறி தர்சனார்த்திகளிடம் முறை தவறிப் பழகும் சில தீக்ஷிதர்களாக இருக்கட்டும் (எல்லா தீக்ஷிதர்களும் நெறி தவறியவர்கள் என்று நிச்சயமாக தில்லைவாசிகளோ தில்லையம்பலத்தில் தர்சனம் செய்தவர்களோ சொன்னதில்லை) அல்லது வழிபாட்டை குலைக்க விழைந்து ரகளை செய்யும் ஆப்ரஹாமிய கையூட்டு பெறும் அடியாட்களாக இருக்கட்டும்.

    \\ இங்கு நடக்கும் உரிமை பிரச்னையைம, தன்மான பிரச்னையை தீர்த்துவிட்டு அதன் பிறகு வழிப்பாட்டை தொடரலாம். ஒன்றும் பாதகம் இல்லை. \\

    கழகம் யாருக்கு ………… அழகிரிக்கா ஸ்டாலினுக்கா ………. என்று தன்மான ப்ரச்னையைத் தீர்த்த பின்னர் தான் தேர்தல் என்று கழகம் கூட செயல்படாது.

    ஆனால் சைவ அடியார் என்ற பெயரில் செயல்படுபவர்கள் ……………. ரகளை செய்வது உரிமை………… கோவில் வழிபாட்டை குலைப்பது உரிமை…………. வழிபாட்டை குலைக்க முயலும் செயலை தடுக்க முனைதல் என்பது …………… தன்மான ப்ரச்னை……… என்பதில் ……………… சைவமும் இல்லை…………. சமயமும் இல்லை………… தமிழும் இல்லை…………அடாவடி ஆப்ரஹாமியம் இருக்கிறது. கோவில் விழா நடக்கும் போது விழாவை இஸ்லாமிய குண்டர் படை தடுத்ததான செய்தி இந்த தளத்தில் பகிரப்பட்டதே…………. அதற்கும் இதற்கும் எந்த வித்யாசமும் கிடையாது.

    இப்படி கோவில் வழிபாட்டை குலைக்க முனைபவர்கள் அடியாள் ஆவர்…………. அதாவது ஆப்ரஹாமிய அடியாட்கள்…………..

    ஆனால்………… அடியாட்களாகவே இருந்தாலும் சரி…………. நடிப்பதற்காகவேனும் சரி………….. ஒரு முறையாவது *சிவ* என்ற இரு எழுத்து வாயில் வந்தால் அடியாளைக்கூட அடியாராகவே நினைக்க வேண்டும் என்பது எமது அழுத்தம் திருத்தமான கருத்து.

    *சிவ* என்ற இரண்டெழுத்து ஒருமுறையாயினும் தம் வாயினால் சொல்லும் பேறுபெற்றவர் இறையருளைப் பெற்றவர். நல்லூழுடைய பெருந்தகை. எமது வணக்கத்திற்குரியவர்.

    ஆனாலும்…………… என்ன தான் வணக்கத்திற்குரியவரானாலும் சரி …………….. ஆலய வழிபாட்டை குலைக்க விழைபவர் அடியாராகவே இருந்தாலும் கூட சரி……………….. பலப்ரயோகத்தால் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் எந்த சம்சயமும் எமக்குக் கிடையாது. அப்படி வழிபாட்டைக் குலைக்க விழையும் எவரும் சரி அதிகார நந்தியம்பெருமானுடைய தண்டனைக்கு நிச்சயம் ஆளாவர்.

    ஆலயத்தில் சாமிக்கு மட்டிலும் தான் முன்னுரிமை…………… ஆசாமிகளுக்கு ………….. எந்த ஆசாமிகளுக்கும்…………… எந்த உரிமையும் கிடையாது……….. எல்லா ஆசாமிகளுக்கும் கோவிலில் கடமை மட்டிலும் தான் உண்டு…………. தன்னை முன்னிறுத்தாது …………இறைவனிடம் மனதைக் கொடுத்து வழிபட விழையும் அனைத்து தர்சனார்த்திகளுக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நிகழ்த்த வேண்டிய கடமை.

    அல்லாவுக்கு வேண்டுமானால் அரபியில் மட்டிலும் தொழுகை நடத்த வேண்டும் என்ற உலகளாவிய முறைமை இருக்கலாம். சிவப்பரம்பொருளின் வழிபாடு காலகாலமாக ஹிந்துஸ்தானமுழுதும் எண்ணிறந்த மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொன்றின் பின்னும் பன்னூற்றாண்டு பல்லாயிரத்தாண்டு பழமையான ஒரு உயரிய பாரம்பர்யம் இருக்கிறது. அவையனைத்தும் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல விழைய வேண்டியது அனைத்து சைவ சமயத்தினரின் கடமை.

    \\\ தமிழ்நாட்டில் இருக்கும் சாதி வெறி \\\

    உங்களது ஒவ்வொரு எழுத்துக்களிலும் வெடித்துத் தெரிக்கிறதே.

    மாற்று மதத்தினராக இருந்தாலும் சரி………..அனைவரிடத்தும் நல்லதை ஏற்றலும் தீயதை சமரசம் இல்லாமல் இடித்துறைத்தலும் செய்யப்பட வேண்டியது………..

    ஸ்ரீமான் தொல் திருமாவளவன் என்ற அன்பரை நான் இந்த தளத்தில் ………….

    அவர் தமிழில் லோக்சபையில் பேசுகிறார். ஈழத்து சிவாலயங்கள் இடிக்கப்பட்ட அவலத்தை தட்டிக்கேட்ட ஒரே தமிழ் அரசியல் வாதி என்று விதந்தோதிய போது…………..அந்த அன்பர் பயங்கரவாத ஆப்ரஹாமிய வெறியர்களுடன் கைகோர்க்கும் நபர் என்று என்னை வறுத்தெடுத்த அன்பர்கள் பலர் உண்டு.

    அப்போதும் …………….. ஏற்க வேண்டியது அவரிடம் காணப்படும் பாராட்டப்பட வேண்டிய நற்செய்கைகள்……………… சமரசமில்லாமல் எதிர்க்கப்பட வேண்டியது அவர் பயங்கரவாத ஆப்ரஹாமிய குழுக்களுடன் கை கோர்க்கும் நெறி தவறும் போக்கு என்று கருத்துப்பகிர்ந்திருந்தேன்.

    தேர்தலின் முன்னர் ஸ்ரீமான் தொல் திருமாவளவன் அவர்கள் தில்லையம்பலவாணப் பெருமானை தரிசனம் செய்து தில்லைவாழந்தணரிடம் ஆலய ப்ரசாதம் பெறும் காட்சியை பல முகநூல் பக்கங்களில் பார்க்க நேரிட்டது. குறைகளை மட்டுமே காண விழையும் அன்பர்கள் இதைக்கூட நடிப்பு என்று வசவிட முனைந்தது மிகுந்த மனவருத்தத்தை தந்தது. பயங்கரவாத ஆப்ரஹாமியரிடம் கையூட்டு பெற்று நோன் பு கஞ்சி குடிக்கும் கேக் சாப்பிடும் அரசியல் வ்யாதிகள் ………….. ஹிந்து என்றால் திருடன் என்று கூசாமல் சொல்லும் அரசியல் வ்யாதிகள் அப்படி நடிப்பதற்காகவாவது நிழலுக்காகவாவது தில்லையம்பல வாணன் ஆலய நிழலில் ஒதுங்கியது கிடையாதே என்று நினைத்ததுண்டு.

    என்னைப் பொறுத்த வரையில்………. நான் ஸ்ரீமான் தொல் திருமாவளவன் என்ற அன்பரிடம்………….. சிவாலயத்தில் தர்சனம் செய்யும் பாக்யம் பெற்ற வணக்கத்திற்குரிய சிவனடியாரிடம்…………. கோவில் வழிபாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காத இந்த சிவனடியாரிடம்………. நான் விதந்தோத வேண்டிய நல்ல விஷயங்களின் லிஸ்ட் பெருகுவதில் பெருமிதம் அடைகிறேன்.

    ம்……….. உங்களைப் போன்ற சிவனடியாருடன் பிணக்கு கொண்டு சம்வாதம் செய்யும் போது தில்லையம்பலவாணனை தர்சனம் செய்த இன்னொரு வணக்கத்திற்குரிய சிவனடியாரை நினைவு கூர்தல் கூட நன்றே…… ஏன் ரகளை செய்த ஸ்ரீமான் ஆறுமுக சாமி கூட திருமுறை ஓதும் பாக்யம் பெற்ற வணக்கத்திற்குரிய அன்பராயிற்றே………… என்ன ஸ்ரீமால் தொல் திருமாவளவனிடம் காணப்படும் வழிபாடைக் குலைக்காத பண்பு ஸ்ரீமான் ஆறுமுக சாமியிடம் காணக்கிட்டவில்லை.

    ஏன் என்னிடம் எத்தனையெத்தனை குறைகள் இல்லை? அடுத்தவர்களைக் குறை சொல்ல வந்து விட்டேன் பெரிதாக.

    ம்…………. உங்களுடைய நல்ல செயல்பாடுகளிடமிருந்தும் ஜெனாப் சுவனப்ரியன் போன்ற அன்பரின் நல்ல செயல்பாடுகளிலிருந்தும் கூட நான் கற்றுக்கொள்ள வேண்டியவையும் நிறைய இருக்கின்றனவே.

    எப்படியோ ப்ரதோஷத்துக்கு ப்ரதோஷம் சிவனடியாரின் வாழ்த்துக்களைப் பெறும் பாக்யம் என்னையன்றி யாருக்கு உண்டு. அதுவும் பிணக்குகளுக்குப் பின்னும் கூட.

    வசவுகள் விடுத்து செவிக்கும் மனதிற்கும் இனிய உங்களுக்குப் பழக்கமான திருமுறைகளை ஓதி மனதைக் குளிர்விப்பீர்களாக.

    உங்கள் மனது குளிர

    வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
    கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
    நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

    இணக்கத்துடனும் பிணக்கத்துடனும்
    ஆனால் என்றும் மாறாத குறையாத அன்புடனும்
    ஸ்ரீ தாயுமானவன் அவர்களின் தமிழ்ப்பற்றுக்கும் சிவபக்திக்கும்
    என்றென்றும் தலைவணங்கும்
    குறைகள் மிகுந்த
    க்ருஷ்ணகுமார்

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  72. திரு ஜனவி புத்திரன்!

    //Can you answer whether the egg first or the hen?//

    சந்தேகமே இல்லாமல் கோழிதான். அதன் பிறகுதான் முட்டை வந்தது. இதற்கு ஆதாரமாக உலக மதங்களின் வேத நூல்கள் அனைத்தும் இந்த பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் கடவுளே படைத்ததாக சொல்லுகின்றன. நமது சுய அறிவை உபயோகித்து யோசித்தாலும் கடவுள் படைக்காமல் தானாக எந்த பொருளும் உருவாகி விடாது என்று நமது அறிவே சொல்கிறது.

    இதற்கு மாற்றாக கடவுள் படைக்கவில்லை என்று நீங்கள் சொன்னால் அதற்கான ஆதாரத்தை நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும்.

    //From the above book, scientists also say that our earth has totally altered or changed once in 30 million years….once upon a time the north or south pole was in sahara desert!!! or how was the first nuclei taken shape…is a mystery.. Like this a lot on assumptions and hypothesis only.//

    ‘வானங்களும் பூமியும் இணைந்திருந்தன எனபதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?’
    21 : 30 –குர்ஆன்

    நீங்கள் சொல்வதைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

    பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)

    ‘வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.’

    பெரு வெடிப்புக் கொள்கையும் குர்ஆனின் வார்த்தைகளும் எந்த அளவு ஒத்து வருகிறது என்பதைப் பாருங்கள்.

    //I consider all the muslims and christians in India are my brethren only.
    Because just 800 years or so/ 200 years… that our own blood brethren converted into Islam (Maximum under force) and Christianity ( divide and rule,encashing poverty and untouchability)…this is history.I hope that you will never repudiate this.//

    ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு சிலர் கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கலாம். பெரும்பாலானவர் இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு பயந்தே மாறினர். கட்டாய மத மாற்றம் என்றால் இன்றைய மோடி ஆட்சியில் அனைவரும் தாய் மதம் திரும்ப வேண்டியதுதானே. அனைத்து சலுகைகளும் கிடைக்குமே!

    //Can you define who is a “HINDU”? You may please verify with a lawyer, how Hindu is defined in our Law. You will be or for that matter any one will be awe struck,wonder struck and thunder struck….. The line starts like this ….”Other than those who are christians,muslims,sicks etc. ” like that it narrates.. No one can define a Hindu…those who were living under the SIND RIVER were all known or called as Hindus by the west or others..
    The biggest freedom in our so called hindu culture is….you can be a theist or an atheist,believer or non-believer,iconoclast ,parents as gods,even a grass can be considered as god,no compulsion to go to temples or follow rites or rituals,consider husband as god or vice versa…like that you can go on summarising……..simply you are a FREE BIRD to fly of your own!!!!!!!!!!!!!!!!!!//

    நீங்கள் சுதந்திர பறவையாக இருந்து கொள்ளுங்கள். யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தலித்துகளை நசுக்கி, முஸ்லிம்களை இம்சித்து அந்த சுதந்திரத்தை பெற முயற்சித்தால் அதனை நாங்கள் எதிர்க்கலாம் இல்லையா?

    நேற்றைய செய்தியை பார்த்திருப்பீர்கள். டெல்லியில் சிவசேனா எம்பி உணவில் தரம் இல்லை என்பதற்காக நோன்பிருந்த ஒரு முஸ்லிமை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்து அவரை இம்சித்துள்ளார். இது தான் நீங்கள் காட்டும் சகிப்புத் தன்மையா? சுதந்திர பறவை என்று சொன்னது இதைத்தானா?

    //If only you read Thrukkural,Thrumanthiram,Thiruvachaham..etc you could imbibe a lot.( Please do read without any prejudice…at least for the sake of what they all deal with?//

    திருக்குறளின், திருமந்திரத்தின் பெருமைகளை வியந்து பல பதிவுகளே எழுதியுள்ளேன். இனியும் எழுதுவேன்.

    //Last but not least,I love all human beings besides all living creatures .
    The human birth is a rarest gift!!
    Let us try to understand with right thinking and approach.
    Peace..Peace..and Peace…….& Patience ..patience…and patience is the real TRUTH or GOD or LIFE.//

    அதைத்தான் நானும் சொல்கிறேன். இந்த உலகில் நாம் வாழப் போவது 60 வருடமோ எழுபது வருடமோ. வாழும் காலங்களில் மற்ற உயிர்களை துன்புறுத்தாது அமைதி வழியில் நமது பயணத்தை இந்த பூமியில் தொடர்வோம்.

    ‘ஒன்றே குலம்: ஒருவனே தேவன்’

    ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’

    https://soundcloud.com/arrahman/karnamotcham

    அமைதிக்காக ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பாடலையும் கேளுங்கள்…….

  73. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது ! அல்லாவையும் சேர்த்து தான் . பெண்கள் கோஷா போடும் காட்டு மிரண்டி தனத்தை கடுமையாக சாடினார் .. தில்லை கோவிலுக்கு இறைவனே நல்ல தீர்ப்பு வழங்கி விட்டான் ! ஆபிரகாம் மத கும்பல்கள் தங்கள் மத நாற்றத்தை முதலில் சரி செய்யட்டும் . தங்கள் வழி பாட்டு தலங்களில் குண்டு போட்டு அப்பாவி மக்களை கொல்வதை- தடுத்து நிறுத்தட்டும் !தமிழகத்தில் பிஜேபி 3 வது இடத்தில இருக்கிறது அது சரி காஷ்மீரில் அப்துல்லா கும்பல் மண்ணை கவ்வி பிஜேபி வந்ததை – சொல்ல வேண்டியது தானே !சுவன பிரியன் – புலம்புவது பரிதாபமாக இருக்கிறது ! ஈராக் சிரியா ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் காரனம இருக்கலாம்

  74. நான் ஒரு தடவை எழுதினேன்.

    …ஜனாப் சுவனப்பிரியன் எழுதும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிப்பதன்மூலம், அவரது தவறான கருத்துக்களைப் பரப்பும் ஊடகமாக தமிழ் இந்து இணையத்தை ஆக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
    மேலும், ஒருவர் சமயத்தை ஒருவர் தாக்கி எழுதும் மேடையாகவும் இந்த இணையத்தை ஆக்கிவிட வேண்டாம்…

    நமக்கு எச்சமயத்தின் மீதும் வெறுப்பு கிடையாது.

    வலுக்கட்டாயமாகவோ, ஏமாற்றியோ, மூளைச்சலவை செய்தோ மற்ற சமயத்தை நம் மீது திணிக்கும் நடவடிக்கைகளைக் கண்டனம் செய்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்….

    மீண்டும் தொடர்கிறேன்…

    மாற்று சமயத்தாரின் ஆயுதங்களாக, இந்து மதத்தைப் பழிக்கும் ஆயுதங்களாக, நாம் மாறிக்கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நம் கை விரல்களாலேயே நம் கண்ணை ஏன் நாம் குத்திக் கொள்கிறோம்? யானை மாதிரி நம் தலையிலேயே ஏன் மண்ணை வாரிப் போட்டுக்கொள்கிறோம்? எப்படி ஒற்றுமையாக இருப்பது என்பதை மற்ற சமயத்தாரிடம் கற்றுக்கொள்வோமே! அது தவறில்லை! நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம்.

    தில்லையில் ஐந்து ஆண்டுகள் இருந்தவன் நான். அந்த ஐந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தடவை தில்லைக் கோவிலுக்குச் சென்று அம்பலவானனைத் தரிசித்து மனம் உருகி இருக்கிறேன். எப்பொழுது தமிழ்நாடு வந்தாலும், தில்லைக்கு வந்து அம்பலவானனைத் தரிசிக்கவே முயல்கிறேன். தமிழ்நாட்டில் சிறந்த நிர்வாகத்தோடு நடத்தப்பட்டு கோவில்களில் தில்லையும் ஒன்று.

    தில்லைக் கோவிலைப் போல, அடியார்களை எந்த ஒரு தடையும் இன்றி தரிசனம் செய்ய அனுமதிக்கும் கோவில்கள் மிகவும் சிலவே. காசு கொடுத்தால்தான் தரிசனம், அப்படிக்கொடுத்தாலும் “போ, போ!” என்று விரட்டும் கோவில்களுக்கு நடுவில் — வரும் காசை எடுத்து, வேறுவிதத்தில் செலவழிக்கும் கோவில்களுக்கு நடுவில் — அம்பலவாணனை மனம் குளிரும் வரைக்கும் தடையில்லா தரிசனம் செய்ய இயல்வது, தில்லை தீட்சிதர்கள் கையில் நிர்வாகம் இருப்பதால்தான். இல்லாவிட்டால், தமிழ்நாடு அரசு எடுத்துக்கொண்ட கொவில்கள் மாதிரி ஊழல் நிறைந்துவிடும். காசுகொடுத்தால்தான் அம்பலவாணனைக் காணமுடியும் என்ற நிலையும் உருவாகிவிடும்….

    ஜனாப் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். நாம் மற்ற சமயங்கக் கருத்துகளைத் தாக்குவதை நிறுத்திவிட்டு, நமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை மட்டும் தரமான சொற்களின் மூலம் கண்டனம் செய்வோமே! நாம் மற்றவரைப் பார்த்து ஒரு விரலைச் சுட்டும்போது, மூன்று விரல்கள் மடங்கி, நம்மைத்தானே சுட்டுகின்றன?

    இதை எனது இந்து சமய உடன்பிறப்புகளுக்கும்தான் கூறுகிறேன். தரக்குறைவாக கருத்து இடுபவர்களுக்கு, அது நமது சமயத்தாராக இருந்தாலும் சரி, நாம் பதில் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. அது நம்மைத்தான் களங்கப்படுத்தும்.

    தமிழ் இந்து இணைய தளத்திற்கோருக்கு ஒரு வேண்டுகோள்! தரக்குறைவான சொற்கள் உடைய கருத்துக்களை வெளியிட்டு, தரமான இந்தத் தளத்தின் தரத்தைக் குறைய விட்டு விடாதீர்கள்.

    வணக்கம்! தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! நமச்சிவாய!!!

  75. திரு அரிசோனன்!

    //…ஜனாப் சுவனப்பிரியன் எழுதும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிப்பதன்மூலம், அவரது தவறான கருத்துக்களைப் பரப்பும் ஊடகமாக தமிழ் இந்து இணையத்தை ஆக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.//

    திருவாசகத்தின் பெருமையையும், திருமந்திரத்தின் அருமைகளையும் பறை சாற்றும் இடமாக தமிழ் இந்து இருந்திருந்தால் இங்கு எனக்கு வேலையே இருந்திருக்காது. ஆனால் இங்கு பதியப்படும் பல கட்டுரைகள் இஸ்லாம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதவும் தப்பும் தவறுமாக ஒரு சார்புடையதாக இருக்கும் போது இஸ்லாமியனான நான் அதற்கு மறுப்பை தெரிவித்து உண்மையை விளக்குகிறேன். ஒருகால் உண்மை தெரியாமலும் பதியப்படலாம் அல்லவா? எனவே இஸ்லாத்தின் மீது எழும் காழ்ப்புணர்வை நீக்கி விட்டால் நான் எனது வேலையை பார்த்துக் கொண்டு போய் விடுவேன். எனவே தவறு என்னிடம் இல்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  76. //சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள். ஏனெனில் குர்ஆனின் கட்டளைப் படி பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று. அறிவியலும் பேய் பிசாசுகளை ஒத்துக் கொள்வதில்லை.
    //

    அதான் Malaysia ஃப்லைட் போது பூச்சாண்டிய பார்த்தோமே.. . மனசாtchiye இல்லாமல் பொய்யிகளை மட்டும் வைத்து புரட்டு பண்ணுவாங்கள் இந்த முஸ்லிம் ..

    //அந்த தத்துவத்தின் படி இன்ன குற்றத்திற்காக இவன் இவ்வாறாக படைக்கப்பட்டான் என்று அவனுக்கு தெரிய வேண்டும் அல்லவா? இத்தனை கோடி ஆண்டு ஆகியும் ஒருவருக்கும் தான் முற்பிறவியில் என்னவாக இருந்தோம். நமது ஏழு பிறவியில் இது எத்தனையாவது பிறவி என்ற உண்மை தெரிந்திருக்க வேண்டும்//

    ஹிந்து மதத்தை கரைத்து குடித்தவன இன்னும் ref. தேடி படிக்க வேண்டி இருகின்றது. இதில் ஒன்றுமே தெரியாமல் அதை பற்ரி புரியாமல் குருட்டுத்தனமாக கேள்வி கேட்டால் அதி புத்திசாலி. அப்படி தெரிந்த மாகன்கள் (ராகவேந்திரர் ம’ற்ரும் பல பல…) படித்து தெரிந்து கொண்டு வரலாமே. இங்கு IP அட்ரெஸ் பேஸ்ட் பண்ணும் time இல் எங்கள் மாகன்கள் பற்ரி படித்து தெளிவு பெறலாம் அல்லவா ?
    — சுருக்கமாக மறு பிறவி பற்ரி தெரிவதர்க்கும் புண்ணியம் பண்ணி இருக்கவேண்டும்.

  77. அன்பார்ந்த ஜெனாப் சுவனப்ரியன்

    \\\ ஆனால் இங்கு பதியப்படும் பல கட்டுரைகள் இஸ்லாம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆதவும் தப்பும் தவறுமாக ஒரு சார்புடையதாக இருக்கும் போது இஸ்லாமியனான நான் அதற்கு மறுப்பை தெரிவித்து உண்மையை விளக்குகிறேன். \\

    ஆப்ரஹாமிய பயங்கரவாதம் என்று நான் எப்போதும் சொன்னதில்லை சொல்லவும் மாட்டேன்.

    ஆனால் பயங்கரவாத ஆப்ரஹாமியம் என்ற ஒரு இழிவுக்கோட்பாடு சந்தேஹமேயில்லாமல் மனித குலத்தின் அழிவுக்காக சளையில்லாமல் பாடுபட்டுக்கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு இழிவான கோட்பாடு தமிழகம் மட்டுமின்றி உலகத்துக்கே ஒட்டு மொத்த மனித குலத்துக்கே பெரிய சவால். உலக அமைதிக்கு ஒரு சவால்.

    நான் வாசித்தறிந்த படிக்கும் நீங்கள் இந்த தளத்தில் தொடர்ந்து பதிந்து வரும் வ்யாக்யானாதிகளாலும் ஆப்ரஹாமிய இறைக்கோட்பாடு (யஹூதிய + க்றைஸ்தவ + இஸ்லாமிய) என்பது மிகவும் தரம் தாழ்ந்த கோட்பாடு என்பது தெள்ளெனத் தெளிவாகத் துலங்குகிறது. வாதம் புரிய எந்த சாரமும் இல்லாத கோட்பாடு என்பது தெளிவு.

    ம்………….. சர்வ நிச்சயமாக ஒரு விஷயத்தில் உங்கள் கருத்துக்களுடன் மனமார்ந்து உடன்படுகிறேன்.

    ஆப்ரஹாமியம் என்பது மட்டற்ற வன்முறையை மட்டிலும் உபதேசம் செய்யும் ஒரு அவலக்கோட்பாடு என்று நினைத்திருந்தேன். ஆப்ரஹாமிய நூற்களில் கொட்டிக்கிடக்கும் வசனங்கள் மட்டற்ற வன்முறையை உபதேசம் செய்வதை அந்தந்த வசனங்களை உதாஹரித்து எழுதும் அன்பர்களால் அது சித்தமும் ஆகிறது. ஆனால் உங்களது நூற்களில் அபூர்வமாக அன்பை போதிக்கும் வசனங்களும் கூட இருக்கின்றன என்பது நீங்கள் பகிரும் உத்தரங்களால் தெரிய வருகிறது.

    ஒரு சார்பாக மட்டிலும் இல்லாது மறு சார்பும் அறியப்பட வேண்டும் என்பது அறிவு பூர்வமான விஷயம். அதனடிப்படையில் உங்களது செயல்பாடு ஏற்கத் தக்கதே. போற்றத்தக்கதே.

  78. //////சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள்/////

    சவூதி அரேபியா இருக்கட்டும் “Heaven Freak ” அவர்களே! 26-7-2914 தேதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரை “Classified Reader Service” பகுதியில் வந்துள்ள ஒரு விளம்பரத்தை பாரும். “தோஷம், செய்வினை கழிப்பு ” பற்றிய விளம்பரம் வந்துள்ளது அந்த விளம்பரத்திற்கு சொந்தகாரர் யார் தெரியுமா? P M D இக்பால். இதற்கு என்ன சொல்லபோகிறீர்கள்? அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளலாமா? மோடி மஸ்தான் என்றாலே ஒரு மந்திரவாதி என்று சொல்வார்கள். மஸ்தான் என்பது ஒரு முஸ்லிம் பெயர்தானே!

    ///////வர்ணாசிரமத்துக்கு பயந்தே மாறினர்///// உங்கள் பிரியமான நடிகை கூட இதற்கு பயந்துதான் மதம் மாறினாரா? இசை அமைப்பாளரை சாதியால் யாராவது கொடுமை படுத்தினார்களா? யுவன் சங்கர் 3 வது திருமணம் புரிந்துகொள்ளவும் அந்த பழியிலிருந்து தப்பிக்கவும் சரியான மதம் இஸ்லாம் என்று மாறினார். அவ்வளவுதான்.

    /////திருக்குறளின், திருமந்திரத்தின் பெருமைகளை வியந்து பல பதிவுகளே எழுதியுள்ளேன். இனியும் எழுதுவேன்//// எழுதுங்கள் எழுதுங்கள் தாராளமாக எழுதுங்கள். அவர்தான் பொருட்பாலில் கல்வி என்ற அதிகாரத்தில் 398 வது குரலில் 7 பிறவிகளை பற்றி கூறியுள்ளார்..

    ////////அதைத்தான் நானும் சொல்கிறேன். இந்த உலகில் நாம் வாழப் போவது 60 வருடமோ எழுபது வருடமோ. வாழும் காலங்களில் மற்ற உயிர்களை துன்புறுத்தாது அமைதி வழியில் நமது பயணத்தை இந்த பூமியில் தொடர்வோம்//////
    “மற்ற உயிர்களை துன்புறுத்தாது” என்று படிக்கும்போது உடம்பெல்லாம் அப்படியே புல்லரிக்கிறது. மனிதர்களை நீங்கள் துன்புறுத்துவது ஒருபுறம் கிடக்காட்டும் ((((1)சிரியாவில் கடந்த 48 மணி நேரத்தில் ஜிகாதிகள் தாக்கி 95 பேர் அல்லாவின் திருவடிக்கு சென்றுவிட்டனர். (2). ஆப்கனிஸ்தானில் Ghor என்ற மாநிலத்தில் சாலையில் இருந்த 15 passengers கலை சுட்டு கொன்றனர்.(இது நடந்தது வெள்ளி கிழமை (நேற்று))))) கசாப்பு கடையில் ஆட்டை தோலை உரித்து தொங்கவிட்டிருக்கீரீர்களே அது”மற்ற உயிரில்” அடக்கமில்லையா?
    ///////// கடவுள் படைக்காமல் தானாக எந்த பொருளும் உருவாகி விடாது என்று நமது அறிவே சொல்கிறது////// அப்படியா? கடவுள் படைக்காமல் எந்த பொருளும் உருவாகாது என்றால் அந்த கடவுளை படைத்தது யாருங்க சாமி? தானாக எந்த பொருளும் உருவாகாது என்றால் கடவுள் மட்டும் தானாக உருவாகிவிட்டாரா?
    பூமி கடந்த 30 மில்லியன் ஆண்டுகளில் பல மாற்றங்கள் அடைந்துள்ளன மற்றும் வட துருவம் தென் துருவம் பற்றி அவர் கூறினால் பூமியும் வானமும் ஒட்டிகொண்டிருந்ததாம். அதை அல்லா பிரித்து விட்டாராம்! உங்கள் அல்லா படிக்கும்போது வானத்தை தனியாகவும் பூமியை தனியாகவும்தானே படைத்தார். அப்புறம் எதற்கு பிரிக்கிறார்? ஒரு தோசை மற்றொரு தோசையோடு ஒட்டிகொண்டது போல பூமியும் வானமும் ஒட்டிகொண்டதா? மேலும் அல்லா மலைகளை பூமி மீது “நட்டு வைத்தாராம்” அது என்ன செடியா? பூமி தோன்றும்போதே மலைகளும் சேர்ந்து தோன்றியதுப்பா

    ரஹ்மான் “அமைதி” பற்றி மட்டுமா பாடியிருக்கிறார்? கொலைவெறி, காதல் வெறி பாட்டுக்கு கூட இசை அமைத்துள்ளார்.

    //////ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன்////// புவி ஈர்ப்பு விசை பற்றி குர்ஆனில் எந்த வசனத்தில் அல்லா சொல்லியிருக்கிறார்? மேலும் “படிப்படியாக” அறிவியல் கூறுகிறது ஆனால் குர்ஆனில் செவ்வாய் கிழமை அல்லா பூமியை படைத்தார் என்றும் அதுவும் “””ஆகுக”” என்று சொன்ன உடன் ஆகிவிட்டதாக கூறுகிறார். அப்படியானால் படிப்படியாக என்ற அறிவியல் வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டதே!

    திரு அறிசொணன் அவர்களுக்கு:- இந்து வாசகர்களுக்கு “பிரியன்” கருத்துக்களுக்கு மறுமொழி செய்யாதீர்கள் என்று கூறுகிறீர்கள். அந்த பிரியன் பொய் மூட்டைகளை இங்கே அவிழ்த்து கொட்டுகிறார். அவற்றை படித்து ஜீரணிக்க முடியாததால்தான் மனம் கொதித்துபோய் நாங்கள் மறுமொழி இங்கே எழுதுகிறோம். நாங்கள் எழுத கூடாது என்றால் “பிரியனின்” கருத்துக்களை வெளியிட கூடாது என்று இந்த தளத்தினருக்கு வேண்டுகோள் வையுங்கள். அவரது கருத்துக்கள் இங்கே வரவில்லையென்றால் நாங்கள் படிக்கபோவதுமில்லை. அதற்கு மறுமொழி எழுதவும் போவதில்லை. உங்கள் கோரிக்கையை செவிமடுத்து “தமிழ் இந்து” தளம் கேட்கிறாதா என்று பார்ப்போமே!

  79. அன்பார்ந்த ஜெனாப் சுவனப்ரியன்

    \\\ திருவாசகத்தின் பெருமையையும், திருமந்திரத்தின் அருமைகளையும் பறை சாற்றும் இடமாக தமிழ் இந்து இருந்திருந்தால் இங்கு எனக்கு வேலையே இருந்திருக்காது. ஆனால் இங்கு பதியப்படும் பல கட்டுரைகள் இஸ்லாம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. \\\\

    ம்…………. திருவாசகத்தின் பெருமையையும் திருமந்திரத்தின் அருமைகளையும் பறை சாற்றுவதில் தமிழ் ஹிந்து தளத்தின் செயல்பாடுகளில் குறைவு ஏதுமே இல்லையே. முனைவர் ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி மஹாசயர் அவர்களும் ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி அம்மை போன்ற அன்பர்களும் சளையில்லாது வாசிக்கும் வாசகர்கள் உளமுருக சைவக்கோட்பாடுகளை பகிர்வதில் குறையொன்றும் இல்லையே.

    ஆனால் அந்த திருவாசகம் மற்றும் திருமந்திரம் மட்டிலும் என்ன உங்களது சஹோதர கோட்பாடுகளான பரேல்வி சுன்னி இஸ்லாம், தேவ்பந்தி சுன்னி இஸ்லாம், ஷியா இஸ்லாம், காதியானி எனப்படும் அஹ்மதியா இஸ்லாம் இவையெல்லாம் இஸ்லாமே இல்லை. இவற்றை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்களே இல்லை என்று நீங்கள் வ்யாக்யானாதிகள் செய்து வருவதின் நீட்சியும்………………..

    தர்க்காஹ் ஷெரீஃபுகள் தகர்க்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்லி வருவதன் நீட்சி மேலும் எப்படி நீளும் என்பதற்கு ராக்கெட் சயின்ஸ் ஒன்றும் படிக்க வேண்டாமே.எங்களுக்கு புனிதத்திலும் புனிதமான திருமந்திரமும் திருவாசகமும் ……………….. நீங்கள் மட்டற்ற மதத்வேஷம் ஜாதித்வேஷம் மொழித்வேஷம்………….. என்று த்வேஷ பூர்வமாக வேதங்கள், சம்ஸ்க்ருத மந்திரங்கள் இவற்றை மட்டற்று இழித்துப்பழிக்கும் உங்களது செயல்பாடுகள்………… திருவாசகம், திருமந்திரம், சம்ஸ்க்ருத மந்திரங்கள், வேத நூற்கள் எமது ஆலயங்கள் இவற்றிற்கும் உலை வைக்கும் என்பதால் ………..

    இவையெல்லாவற்றிற்கும் மூல காரணமான தரம் தாழ்ந்த ஆப்ரஹாமிய இறைக்கோட்பாடுகள் எதிர்மறையாக விமர்சிக்கப்படுவது தவிர்க்கப்பட இயலாதது. எந்த விதமான சந்தேஹமும் இல்லாமல் சர்வ நிச்சயமாக வெட்டி விவாதமாக இல்லாமல் கருத்தாழத்துடனும் தர்க்கபூர்வமாகவும் விமர்சிக்கப்பட வேண்டும்.

    ம்………… அதே சமயம் நேர்மறையான கோட்பாடுகளும் கூட பகிரப்பட வேண்டும் தான். அதை நீங்கள் செய்து வருவதில் எந்த ஆக்ஷேபமும் இல்லை. ஆனால் நீங்கள் பரப்புரை செய்யும் எங்கள் மதத்தைப் பற்றிய பச்சைப்பொய்கள் கருவறுக்கப்படாமல் மௌனம் சாதிக்கப்படும் என்று நீங்கள் கனவு காணக்கூடாது.

    மேல் விஷாரத்தில் ஹிந்துக்கள் வாழ முடியாமல் முடக்கப்பட்ட விஷயங்களை ஹிந்துக்கள் மறக்க முடியுமா. கீழ் விஷாரத்து ஹிந்து மக்களை அடிமைப்படுத்த மேல் விஷாரத்தினர் கயமைத்தனமாக முயன்றதுமறக்க முடியுமா. விஷயம் தேசத்தின் உச்ச ந்யாயாலயம் வரை சென்று வழக்காடப்பட்டது என்பது மறக்க முடியுமா? நான் மேல் விஷாரத்தில் பிள்ளையார் கோவில் முஸ்லீம்களது கோடௌனாக மாறிய அவலத்தைப் பகிர்ந்த போது அதைத் தாங்கள் ந்யாயப்படுத்திய அவலத்தை மறக்க முடியுமா? ஆஃப்கனிஸ்தானத்தில் தாலிபானிய பயங்கரவாதிகள் புத்தர் ப்ரதிமைகளை குண்டுவைத்து தகர்த்த அவலத்தை தாங்கள் ந்யாயப்படுத்திய அவலத்தை மறக்க முடியுமா?

    இந்த வ்யாசத்தில் பேசப்பட வேண்டிய விஷயம் தமிழகத்திலும் தக்ஷிண பாரதத்திலும் ஹிந்துக்களது இருப்பையே கேழ்விக்குறியாக்க விழையும் பயங்கரவாத ஆப்ரஹாமியத்தின் நரவேட்டை செயல்பாடுகள்.

    நீங்களும் ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களும் பயங்கரவாத ஆப்ரஹாமியத்தின் நரவேட்டையை அப்படியே கபள சோற்றில் மறைக்க விழையும் அவலத்தையு புறந்தள்ளி….. தமிழகத்து ஹிந்துக்களது ஒற்றுமைக்காகவும்…… ஹிந்துக்களது வாழ்க்கையில் புறையோடிப்போயிருக்கும் குறைபாடுகளைக் களைய……. அல்லும் பாடுபட்ட ஹிந்து இயக்க செயல்வீரர்கள் பயங்கரவாத ஆப்ரஹாமியத்தால் மிகக்கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட கொடுமை தனை………ஹிந்து ஒற்றுமைக்கு பாடுபட்டவர்களை ஸ்ரீ தாயுமானவன் பிழைப்புவாதிகள் என்று இழித்துப்பழிப்பதையும் ………நீங்கள் இருவரும் கை கோர்த்து விவாதிக்கப்பட வேண்டிய விஷயத்தை விவாதிக்க முடியாமல் தடம் புரளச் செய்வதை…… அல் தக்கியா செய்வதை…….. ஏற்க வேண்டுமா?

    நடுவாட்-உல்-உலேமா-இ-ஹிந்த் ———— தாருல் உலூம் ———– என்ற ஸ்தாபனத்தின் பிதாமஹ ஸ்தானத்தில் இருந்த அலி மியான் சாஹேபின் பேரனான இஸ்லாமிய அறிஞரான மௌலானா சல்மான் நத்வி சாஹேப் அவர்கள் ஈரக்கிய அல் பக்தாதி என்ற கலீஃபா அவர்களை ஏற்றுக்கொண்டதாகவும் உலக முழுதிலும் ஷியாக்களை எதிர்க்க வேண்டி சவூதி ராஜாங்கம் ஹிந்துஸ்தானத்திலிருந்து 5 லக்ஷம் சுன்னி முஸல்மான் களை தேர்வு செய்து ஒரு படை தயார் செய்ய வேண்டும் என்று சொன்னது இஸ்லாமிய அறிஞர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

    ஷியா முஸல்மாணியரின் இஸ்லாமிய வழிபாட்டு ஸ்தலங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதை மிகத் தெளிவாக சந்தேஹமன்னியில் எந்த கூச்ச நாச்சமும் இல்லாது ஆதரிக்க முனையும் உங்களுக்கு …… தர்க்காஹ் ஷெரீஃபுகளை இடிப்பதற்கு குரான்-ஏ-கரீம் எனக்கு அனுமதி அளிக்கிறது என்று கருத்துப்பகிர்ந்த உங்களுக்கு……அயோத்தி மாநகரில் ……சட்ட விரோதமாக …… சர்சைக்குள்ளான கட்டுமானம் ………… இடிக்கப்பட்டதைப் பற்றிப்பேச எந்த தார்மீக அடிப்படையும் இல்லை.

    தமிழகத்தில் பயங்கரவாத இஸ்லாமியரால் சிவாலயங்களும் பெருமாள் கோவில் நிலங்களும் குளங்களும் ஆக்ரமிப்பு செய்யப்படுவதை பற்றி ஸ்ரீமான் தாயுமானவன் அவர்கள் அறவே கண்டு கொள்ளாது மௌனம் சாதிப்பாராம். தர்காஹ் ஷெரீஃபுகள் தகர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கண்டும் காணாமல் போவாராம். ஆனால் அயோத்தியில் இடிக்கப்பட்ட சர்ச்சைக்குள்ளான கட்டுமானத்திற்கு பாப்ரி மஸ்ஜித் என்று நாமகரணம் இட்டு கண்ணீர் சொறிவாரம்? ஹிந்துக்களும் முஸ்லீம்களும் தேச வளர்ச்சிக்காக ஒன்று சேர வேண்டும் என்று பொது தளத்தில் கருத்துப்பகிரும் முஸல்மாணியர் மேட்டுக்குடியைச் சார்ந்தவர்கள் என்று கருத்துப்பகிர்வாராம்.

    தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். ஆனால் தர்மமே வெல்லும்.

  80. ஜெனாப் சுவனப்ரியன்,

    \\ திருக்குறளின், திருமந்திரத்தின் பெருமைகளை வியந்து பல பதிவுகளே எழுதியுள்ளேன். இனியும் எழுதுவேன்.\\\ அதைத்தான் நானும் சொல்கிறேன். இந்த உலகில் நாம் வாழப் போவது 60 வருடமோ எழுபது வருடமோ. வாழும் காலங்களில் மற்ற உயிர்களை துன்புறுத்தாது அமைதி வழியில் நமது பயணத்தை இந்த பூமியில் தொடர்வோம்.\\\
    ‘ஒன்றே குலம்: ஒருவனே தேவன்’ \\\

    மனதை குளிர்விக்கும் வார்த்தைகள். போற்றத்தக்க செயல்பாடு. கூடவே தர்க்காஹ் ஷெரீஃபுகளை தகர்க்க விழையும் நிலைப்பாடு தவறுதலான நிலைப்பாடு…………….. அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடு ……….. என்றும் கருத்துப் பகிர்ந்தீர்களானால் நன்று.

    நல்ல செயல்பாடுகள் என்றென்றும் போற்றத் தக்கவையே. நல்ல செயல்பாடுகளில் உங்களுடைய ஈடுபாடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  81. மதிப்பிற்குரிய திரு.க்ருஷ்ணகுமார்,

    நம் தளம் ஜனநாயகத்தை இந்துத்துவத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கிறது. திரு.சுவனப்பிரியன் எனும் பெயரிலும் திரு.தாயுமானவன் எனும் பெயரிலும் எழுதுகிறவர்களின் பின்னூட்டங்கள் அறிவுசார்ந்தவை அல்ல என்பது ஆசிரியர் குழுவின் ஏகோபித்த முடிவு என்ற போதிலும் அவர்கள் ஆபாசமாக, வெறுப்பைத் தூண்டாமல், எழுதும் பின்னூட்டங்களை நம் தளம் தவிர்ப்பதோ தடை செய்வதோ ஜனநாயக விரோதமானவை. உண்மையில் நடந்திருப்பது என்னவென்றால் இதுவரை தங்களைப் போன்றவர்கள் கொடுத்த மறுமொழிகள் அவர்களின் ‘வாதங்களின்’ உள்ளீடற்ற வெற்றுத்தன்மையை வெளிக்காட்டியுள்ளன. திரு.சுவனப்பிரியன் எனும் பெயரிலும் திரு.தாயுமானவன் எனும் பெயரிலும் எழுதுவோர் தம் அறியாமையை தாமே வெளிப்படுத்துகின்றனர். அது அவர்களின் ஜனநாயக உரிமை. இவர்கள் கூறும் ’கருத்துகளுக்கு’ நேரம் எடுத்து எதிர்வினையாற்றி அவர்களுக்கு அறிவூட்டும் தங்கள் செயலுக்கு ஆசிரியர் குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

  82. In IRAI ILLA ISLAM and PAGADu, there are are so many articles. I request 72 virgins’ fan to go to that blog and do Thaqiya there. Is it not his duty?

  83. திரு க்ருஷ்ணகுமார்!

    //மனதை குளிர்விக்கும் வார்த்தைகள். போற்றத்தக்க செயல்பாடு. கூடவே தர்க்காஹ் ஷெரீஃபுகளை தகர்க்க விழையும் நிலைப்பாடு தவறுதலான நிலைப்பாடு…………….. அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடு ……….. என்றும் கருத்துப் பகிர்ந்தீர்களானால் நன்று.//

    நான் முன்பே கூறியுள்ளேன். இஸ்லாமிய சட்டங்களை நமது விருப்பத்துக்கு வளைக்க முடியாது என்று. குர்ஆனின் கட்டளைகளும் நபி மொழிகளும் தர்ஹா கட்டுவதற்கோ, அதில் சென்று வழிபாடு நடத்துவதற்கோ தடை விதிக்கிறது. இதில் தவறிழைத்தவர்கள் தர்ஹாக்களை கட்டி வழிபடும் இஸ்லாமியர்கள். மற்ற பாவங்களை கூட மன்னிப்பதாக கூறும் இறைவன் தனக்கு நிகராக மனிதர்களில் எவரையும் வணங்குவதை மன்னிக்க மாட்டேன் என்கிறான்.

    எங்களுக்கு தர்ஹாதான் அவசியம் என்று கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தை இஸ்லாமிய சட்டங்களிலிருந்து தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் இஸ்லாத்திலிருந்து விலகி தங்களை தனி மதமாக அறிவித்துக் கொள்ளட்டும். அவ்வாறு அவர்கள் தனி மதமாக அறிவித்துக் கொண்டால் அதில் என்றுமே இஸ்லாமியர் தலையிடமாட்டார்கள்.

    //பரேல்வி சுன்னி இஸ்லாம், தேவ்பந்தி சுன்னி இஸ்லாம், ஷியா இஸ்லாம், காதியானி எனப்படும் அஹ்மதியா இஸ்லாம் இவையெல்லாம் இஸ்லாமே இல்லை. இவற்றை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்களே இல்லை என்று நீங்கள் வ்யாக்யானாதிகள் செய்து வருவதின் நீட்சியும்………………..//

    காதியானிகள் முகமது நபிக்கு பின் வந்த நபி என்று மிர்ஸா குலாமை காட்டி புதுப்புது வணக்கங்களை புகுத்தியுள்ளனர். இதற்கு ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. பிறகு எப்படி அவர்கள் இஸ்லாமிய வட்டத்துக்குள் வர முடியும்? பாகிஸ்தான் அவர்களை தனி மதமாக அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதையேதான் நானும் சொல்கிறேன். அவர்கள் முஸ்லிம்கள் அல்ல. அவர்கள் தனி மதம் என்று.

  84. //சவூதி அரேபியா இருக்கட்டும் “Heaven Freak ” அவர்களே! 26-7-2914 தேதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரை “Classified Reader Service” பகுதியில் வந்துள்ள ஒரு விளம்பரத்தை பாரும். “தோஷம், செய்வினை கழிப்பு ” பற்றிய விளம்பரம் வந்துள்ளது அந்த விளம்பரத்திற்கு சொந்தகாரர் யார் தெரியுமா? P M D இக்பால். இதற்கு என்ன சொல்லபோகிறீர்கள்? //

    என்னத்த சொல்ல அவர் ஒரு பெயர் தாங்கி முஸ்லிம். இஸ்லாமிய அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீன் தனக்கு யாரும் செய்வினை வைத்தால் 50 லட்ச ரூபாய் பரிசாக தருவதாக சொல்லியுள்ளார். இஸ்லாமிய பார்வையில் பேய், பிசாசு, பில்லி சூன்யம் என்பதெல்லாம் சுத்த கப்ஸா. நடைமுறையில் சாத்தியமே இல்லாதது என்பதற்காகவே இந்த அறிவிப்பு. நீங்கள் முயற்சித்து பரிசை தட்டிச் செல்லலாமே!

  85. //ஹிந்து மதத்தை கரைத்து குடித்தவன இன்னும் ref. தேடி படிக்க வேண்டி இருகின்றது. இதில் ஒன்றுமே தெரியாமல் அதை பற்ரி புரியாமல் குருட்டுத்தனமாக கேள்வி கேட்டால் அதி புத்திசாலி. அப்படி தெரிந்த மாகன்கள் (ராகவேந்திரர் ம’ற்ரும் பல பல…) படித்து தெரிந்து கொண்டு வரலாமே. இங்கு IP அட்ரெஸ் பேஸ்ட் பண்ணும் time இல் எங்கள் மாகன்கள் பற்ரி படித்து தெளிவு பெறலாம் அல்லவா ?
    – சுருக்கமாக மறு பிறவி பற்ரி தெரிவதர்க்கும் புண்ணியம் பண்ணி இருக்கவேண்டும்.//

    நான் கேட்டதற்கு இதுதான் பதிலா? பதில் இல்லை என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இப்படி கண் மூடித்தனமாக ஒரு கொள்கையை பின் பற்றுவது யார் என்பது இப்போது தெரிந்திருக்குமே!

  86. திரு.மணி,

    //@Ananda Sagar,

    I watching you in alisina ‘ tamil site and iriyalla islam. probably swarna piryan seems not to know this matter. Even you teared one guy in padagu blog spot.//

    ஆமாம். நான் அதே ஆனந்த் சாகர்(ஆர்ய ஆனந்த்) தான். இறையில்லா இஸ்லாம், பகடு, தமிழ் அலி சினா தளங்களை அறியாதவர்போல் சுவனப்பிரியன் நடிக்கிறார் என்று நினைக்கிறேன். அங்கு வந்து பின்னூட்டமிட அவருக்கு தைரியம் இல்லை போலும்!

    எஸ்.இப்ராஹிம் என்பவரோடு நான் பகடு தளத்தில் முஹம்மதின் வழிப்பறி கொள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் புரிந்தேன். அதைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

  87. suvanappiriyan
    முஸ்லிம் பெயர் என்றால் என்னப்பா? குரான் இல் IP அட்ரெஸ் அதுக்கு இல்லயா? அவன் குடி தாங்கி என்றால் Malaysia ஏர்‌போர்ட் இல் பண்ணியவன் குடிகெடுத்த முஸ்லிமா , இல்லை கேடுகெட்ட முஸ்லிம் ஆ?

    அது இஸ்லாமில் இல்லை, இவன் பெயர் தாங்கி, isral விசயம் வேறு, சுன்னி ஷியா வேறு, சூடான் வேறு இன்று பினாத்த நான் ஒன்றும் IP பைத்தியம் இல்லை.

  88. @ சுவனப்பிரியன்,

    //முதல் பாதி சரி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மறு பாதியான அங்கிருந்து உயிர்கள் இங்கு வருவதும் இங்கிருந்து உயிர்கள் அங்கு போவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஏனெனில் பூமியன் தட்ப வெப்பத்தை தாங்கும் அளவிலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். சந்திரனுக்கு நாம் செல்ல இங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கிறோம். அங்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மற்ற பல கொள்களை நீங்கள் நெருங்கவே முடியாது. அந்த அளவு வெப்பம். இன்னும் சில கோள்களில் தாங்க முடியாத குளிர். உறைந்து விடுவீர்கள். எனவே மற்ற கோள்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வருவதென்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அறிவியல் அறிஞர்களால் இதனை நிரூபிக்கவும் முடியவில்லை//

    என்ன சுவனப்பிரியன், உமக்கு குழந்தைக்கு சொல்லி கொடுப்பதைப்போல பாடம் எடுக்க வேண்டும் போலிருக்கிறதே! உம்முடைய சிந்தனை மிக அமெச்சூர் தனமாகவே இருக்கிறது. ஐந்து வயது குழந்தை எப்படி சிந்திக்குமோ, பேசுமோ அப்படித்தான் உம்முடைய சிந்தனையும் பேச்சும் இருக்கிறது! குழந்தைகளால் பெரிய விஷயங்களை விளக்கி சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது. உங்களுடைய புரிந்துகொள்ளும் சக்தியும் அந்த நிலையில்தான் உள்ளது என்பதை பல முறை பார்த்திருக்கிறேன்.

    சரி, விஷயத்துக்கு வருவோம். ஆன்மாக்கள்தான் பல கிரகங்களில் மாறி மாறி பிறவி எடுக்கின்றன என்று கூறினேன். பௌதீக உடலோடு(physical body) அப்படி செல்வதாக நான் கூறவில்லை. குளிர், வெப்பம், காற்று , நீர், உணவு எல்லாம் பௌதீக உடலுக்குத்தான் தேவை. ஆன்மாவுக்கு(soul) அவை தேவை இல்லை. ஆன்மா அவைகளால் எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை. எனவே ஆன்மா எந்த கிரகத்திற்கும் சென்று அந்த கிரகத்திற்குரிய உடல் எடுத்து அந்த சூழலில் உள்ள பௌதீக அனுபவத்தை அனுபவிக்க முடியும். எந்த கிரகத்தில் எப்பொழுது உடலில் பிறவி எடுக்கலாம் என்பதை அந்தந்த ஆன்மாக்களே ஆன்ம உலகில் முடிவெடுக்கின்றன. கிரகங்களுக்கு மாறி மாறி செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. விரும்புகிற ஆன்மாக்கள் விரும்புகிற கிரகங்களுக்கு செல்கின்றன. நாம் பெரும்பாலும் இந்த பூமிக்கே திரும்ப திரும்ப பிறவி எடுத்து வருகிறோம்.

  89. //முஸ்லிம். இஸ்லாமிய அறிஞர் //
    அறிஞர் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும். சவால் விட வேண்டும். ஒண்டிக்கு ஒண்டி வரயா என்று பேசவேண்டும். sound விட வேண்டும். அதுதான் அறிஞர்
    //
    அது என்ன முஸ்லிம் இசுலாமிய அறிஞர் ?????

  90. /இப்படி கண் மூடித்தனமாக ஒரு கொள்கையை பின் பற்றுவது யார் என்பது இப்போது தெரிந்திருக்குமே!//

    கண்ணை தொறந்து சுட்டு கொள்வதும். சூடானில் சூறை, ஈரானில் சுடுகாடு, ஆஃபாகனில் கஞ்சா , மலேசியாவில் திருட்டு, சௌதியில் அடிமை என்று மதத்தை வைத்து மாரடிப்பதற்க்கு , முட்டாள்களுக்கு , அடிமைகளுக்கு , மூளை என்பதே
    இல்லாத மடயர்களுக்கு — நாங்கள் எப்பொழுதும் மேலானவர்கள்தான்.

  91. சூடானில் முப்பது லட்சம் பேருக்கு சோத்த்துக்கு வழி இல்லை . சூடானை சுடுகாடாக்கி பஞ்ச பரதேசியாக்கியவன் எல்லாம் கேடுகெட்ட பயங்கரவாதிகள். இங்கு இப்படிப்பட்டவர்கள் இந்திய வரிப்பணத்தில் ஹஜ் க்கு ஆராம்பித்துவிட்டாங்கள் . கேட்டால் அதுக்கு ரெண்டு IP அட்ரெஸ் கொண்டுவருவார்கள் .

  92. மதிப்பிற்குரிய ஆசிரியர் குழு அன்பர்களுக்கு.

    வணக்கம்.

    ஸ்ரீமான் தாயுமானவன் மற்றும் ஜெனாப் சுவனப்ரியன் போன்ற நமது தளத்து வாசகர்கள் என்னுடைய மற்றும் நம் தளத்தின் அனைத்து வாசகர்களின் மாறாத மற்றும் குறையாத பேரன்பிற்கும் பாத்ரமானவர்களே. இதில் எனக்கு எந்த சம்சயமும் இல்லை. இந்த அன்பர்களது கருத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கவே விரும்புகிறேன்.

    ஏற்கப்பட வேண்டியது மற்றும் இடித்துறைக்கப்பட வேண்டியது என்பது முறையே தார்மீகமான மற்றும் அதார்மீகமான கருத்துக்கள்.

    அரை ஜாண் வயிற்றுக்காக பரதேசியாகப் பிழைக்கப் போய் மொழி குலைந்த எனக்கு ஞமிலி, காவாளி, தெள்ளவாரி போன்ற சொற்கள் தமிழ்ச் சொற்களா என்று கூடத் தெரியாது; அவற்றின் பொருளும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. அன்பின் ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் தாம் வெறுக்கும் தீக்ஷிதர்களுக்கு இந்த சொற்களை அடைமொழியாகப் போட்ட படிக்கும் ஆசிரியர் குழுவினரான தாங்கள் இவை வசைமாரி என்று மட்டுறுத்தல் செய்ய விழைந்த போதும் தான் இவற்றின் வீர்யம் முழுதாக உறைத்தது.

    எதிர்மறையான கருத்துக்கள் தளத்தில் நிச்சயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசிரியர் குழுவினரின் தார்மீக முடிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகவும் சரியான முடிவு. தேவையான மட்டுறுத்தலுக்கும் மனமார்ந்த நன்றி.

    நான் வெகுவாக எப்போதும் மதிக்கும் ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் பக்ஷத்திலிருந்து…….. தில்லையம்பல வாணனின் திருமேனி தீண்டித் தொண்டு செய்யும்…………… திருத்தொண்டத்தொகையில் தில்லைவாழந்தணர் தம் அடியார்க்குமடியேன் என்று போற்றப்படும் தொண்டர்களை……….. ஒட்டுமொத்தமாகத் தில்லைவாழந்தணர்களை வசவிடும் ……. எதிர்பாராத செயல்பாடு ……ஒரு புறம் வருத்தத்தைத் தந்தாலும் ஸ்ரீமான் தாயுமானவன் மற்றும் ஜெனாப் சுவனப்ரியன் போன்ற அன்பர்களின் உத்தரங்களால் தில்லையம்பலத்தைச் சுற்றியே எமது மனது செல்ல விழைந்ததற்கு எப்படி நன்றி சொல்லாமல் இருக்க முடியும். நன்றி கொன்றவன் ஆகிவிடுவேனே.

    மதிப்பிற்குரிய முனைவர் ஐயா செந்தமிழினம் என்று சொல்வதின் உயர்ந்த கோட்பாடை உள்வாங்க முனையும் போதே அன்பர் ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் தமிழினம் என்ற படிக்குப் பகிர முனையும் கருத்துக்கள் பேரதிர்ச்சியை அளிக்கின்றன என்றால் மிகையாகாது. அதை மறுக்க ஒரு வ்யாசம் எழுத விழைகையில் ஒன்று இரண்டாக இரண்டு மூன்றாக நீள்கிறது.

    வ்யாசத்தின் ஒரு கூறான……. வன்முறையால் மதம் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தில் இணைந்த பின் அதனை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்ற எனது புரிதல் மிக விரிவாக நீண்டு சென்றது. வன்முறையால் இஸ்லாத்தை மஜ்பூரியின் பாற்பட்டு ஏற்ற ஹிந்துக்கள் பன்னூற்றாண்டு காலமாக ஹிந்துஸ்தானத்தின் தொன்மையான கலாசாரத்தை எப்படி இன்றளவுக்கும் பாதுகாத்து வருகின்றனர் என்ற பெருமிதமும் ………… நமது தேசத்து தொன்மையான கலாசாரத்தை பாதுகாத்து வரும் இந்த அன்பர்களின் பால் மட்டற்ற மதிப்பும் பெருகுகிறது. அதே சமயம் அதன் மறுபக்கமான ஜிஹாதி பயங்கரவாத ஆப்ரஹாமியம் எந்த அளவுக்கு நமது தொன்மையான தேசத்தின் கலாசாரத்துக்கு தீங்கு செய்து நமது மொழி, கலை, இலக்கியம், இசை, சித்திரம், சிற்பம் —— இவையனைத்திற்கும் ஊறு விளைவிக்கிறது என்ற பார்வையும் நீள்கிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கம் போலும். இரு பார்வைகளையும் பகிர விழைகிறேன்.

    குறைவிலா தமிழ்ப்பற்று கொண்டவரான….சிவனடியாரான ஸ்ரீமான் தாயுமானவன் மற்றும் எனது அன்பார்ந்த ஜெனாப் சுவனப்ரியன் போன்றோருடைய கருத்துக்களில் தரம் தாழ என்னுடைய உத்தரம் பகிரும் பாங்கில் குறை ஏதும் இருந்திருக்கும் என்றால் நானும் கூட அதற்கு ஜவாப்தாரி தான்….. என்னுடைய உத்தரங்கள் எவ்வாறேனும் இந்த அன்பர்களுடைய உள்ளத்தை புண்படுத்தியிருக்குமானால் அதற்கு என்னுடைய க்ஷமாயாசனங்கள்.

    என்னுடைய வ்யாசத்துடன் வாசகர்களை சந்திக்கிறேன்.

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  93. // இஸ்லாமிய அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீன் //

    யாரது ? புகழ்பெற்ற தமிழ்க்கவிஞர் மனுஷ்ய புத்திரனை ”மிருக புத்திரா” என்றும் சக்கர நாற்காலியில் இயங்கும் அவரது உடற்குறையை கொடிய மனதுடன் “இடுப்புக்குக்கீழே இயங்காதவனே” என்றும் நாடறிந்த கலைஞன் கமல்ஹாசனின் மகளை “நீ உன் அப்பனோடு படுக்க விரும்புகிறாயா” என்றெல்லாம் கேட்ட, பூமிமாதாவே தவமிருந்து பெற்ற அந்த பெருமானா ?

    என்னே இஸ்லாமிய மதம் செய்த பாக்கியம், இவரெல்லாம் அறிஞராகக் கிடைப்பதற்கு.

  94. Islamic State Fighters சிரியன் army யை சேர்ந்த 85 பேரை கொன்று அதில் 50 பேரின் தலைகளை கொய்து Raqa city யில் காட்சிக்கு வைத்தனாராம்! எப்படி இவர்கள் இவ்வளவு ஈவு இரக்கம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. தினமும் ஆடு வெட்டி வெட்டி இரத்தத்தை பார்த்து பார்த்து இரக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டதோ? ஆனாலும் நாங்கள் “””அமைதி””” மதத்தை சேர்ந்தவர்கள் என்று வெட்கமில்லாமல் கூறுகிறார்கள்.

    “பிரியன்” தனது மறுமொழிகளில் குரானை ஏதோ ஒரு அறிவியல் விஞ்ஞானி எழுதிய புத்தகம் போல அதில் வெடிப்பு கொள்கை பற்றி இருக்கிறது அது இருக்கிறது இது இருக்கிறது. அதில் இல்லாதது எதுவுமே இல்லை என்று கலர் கலராக ரீல் எடுத்து விடுகிறார். கேட்கிறவன் முட்டாளாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்வார்களாம். பேசாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடங்களை எடுத்துவிட்டு இந்த குரானை பாடமாக வைத்து விடலாம் போல இருக்கிறதே! அது சரி, மேற்கத்திய கல்வி கூடாது என்று கூறும் போகோ ஹராம் என்ற அமைப்பின் ஒரிஜினல் தலைவர் முஹம்மத் யூசுப் என்பவன் தனது followers க்கு “””பூமி தட்டையானது””” என்று போதித்தானாம். இது எப்படி இருக்கு?

    Secularism என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்கள் இந்துக்கள்தான். அதனால்தான் கோவா மாநிலத்தில் இன்றைக்கு டெபுடி முதல்வராக இருப்பவர் Francis D ‘souza என்ற கிறிஸ்தவர் ஆவார். ராஜேந்திர சோழன் இலங்கையில் சைவம் மற்றும் புத்தமதம் இரண்டையும் ஒரு சேர வளர்த்தான். ஆனால் அசோகன் புத்தமதத்தை மட்டும் பரப்பினான். இதில் யார் உண்மையான secularist ? அது மட்டுமா? முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் வந்தேறிகளும் (=immigrants ) தொழுவதற்காக ஒரு இந்து அரசனால் கேரளாவில் கட்டப்பட்டதுதான் “சேரமான் மசூதி” இது மெக்காவிற்கு அடுத்த 2 வது மிகப் பழமையான மசூதி ஆகும். அந்த காலத்தில் இப்படி இந்துக்கள் உண்மையான secularist களாக வாழ்ந்தனர். ஆனால் சோமநாதபுர கோவிலை 17 முறை படையெடுத்து கொள்ளையடித்த கஜினி மற்றும் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து அங்கே பாபர் மசூதி என்று கட்டிக்கொண்ட பாபர் வழி வந்த இன்றைய முஸ்லிம்கள் இந்துக்களை மதவாதிகள் என்று வாய் கூசாமல் கூறுவதுதான் உலக மகா வேடிக்கை. Constituent Assembly யின் Vice-Chairman ஆக இருந்த H C முகர்ஜி (இவர் ஒரு கிறிஸ்தவர்) “”நம் நாடு ஒரு secular state ஆக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மதத்தின் அடிப்படையில் மைனாரிட்டி மெஜாரிட்டி என்று மக்களை அங்கீகரிப்பது ஆபத்து என்று எச்சரித்தார். மதத்தின் அடிப்படையில் நாட்டை துண்டாக்கி பாகிஸ்தானை பெற்றனர். இன்றும் காஷ்மீரில் எங்கள் மக்கள் அதிகமாக (மெஜாரிடியாக) உள்ளனர். அதனால் அதை எங்களுக்கு கொடு என்று கேட்கின்றனர்.

  95. ஹானஸ்ட் மேன்!

    //Islamic State Fighters சிரியன் army யை சேர்ந்த 85 பேரை கொன்று அதில் 50 பேரின் தலைகளை கொய்து Raqa city யில் காட்சிக்கு வைத்தனாராம்! எப்படி இவர்கள் இவ்வளவு ஈவு இரக்கம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. தினமும் ஆடு வெட்டி வெட்டி இரத்தத்தை பார்த்து பார்த்து இரக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டதோ?//

    இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. உண்மை பின்னரே தெரிய வரும்.

    மற்றபடி ஆட்டை அறுத்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம் கொலைகளை செய்வார்கள் என்று இல்லை. மாமிசமே சாப்பிடாத பவுத்த மதத்தை சார்ந்தவர்கள்தான் இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றனர். மாமிசம் சாப்பிடாத இந்துக்கள்தான் குஜராத்தில் கர்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை வெளியில் இழுத்து தீயில் இட்டனர். அதனை கேமராவுக்கு முன்னால் சந்தோஷமாக சொல்லியும் காட்டினர். காஞ்சியில் சங்கரராமனைக் கொன்றவர்கள் சைவப்பிரியர்களே!

    //கேட்கிறவன் முட்டாளாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்வார்களாம். பேசாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடங்களை எடுத்துவிட்டு இந்த குரானை பாடமாக வைத்து விடலாம் போல இருக்கிறதே!//

    குர்ஆன் பல விஷயங்களை பேசுகிறது. வரலாறு, அறிவியல் என்று பல துறைகளை தொடுகிறது. இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா? குர்ஆனே சவால் விடுகிறது.

    ‘நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளராகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.’
    2 : 23 – குர்ஆன்

    ‘அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’
    4 : 82 – குர்ஆன்

    இது போன்ற வசனங்களின் சவால்கள் இன்று வரை முறியடிக்கப் படாததால் நான் குர்ஆனை இறை வேதம் என்றே நம்புகிறேன்.இதற்கு முன் அருளிய வேதங்களையும் நம்புகிறேன். மதிக்கிறேன்.

    மேலும் நம் முன்னோர்களான தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர், சித்தர்கள், திரு மந்திரத்தை அருளியவர்கள், ரிக்,யஜீர், சாம,அதர்வண வேதத்தை அருளியவர்கள் அனைவரையும் நானும் மதிக்கிறேன். இவற்றில் ஏதாவது ஒன்று முன்பு இறைச் செய்தியாகக் கூட வந்திருக்கலாம். இது போன்ற வேதங்களில் புராணங்களில் மனிதக் கருத்துகளும் புகுந்து விட்டதால் இதற்கு முன் அருளிய வேதங்களையெல்லாம் உள்ளடக்கி உலக முடிவு நாள் வரைக்கும் வரக் கூடிய மக்களுக்கு குர்ஆனை இறைவன் வழங்கினான். எனவே தான் மற்ற வேதங்களை நான் மதிப்பதோடு பின் பற்றத் தக்கதாக குரஆனைப் பார்க்கிறேன்.

    //அது சரி, மேற்கத்திய கல்வி கூடாது என்று கூறும் போகோ ஹராம் என்ற அமைப்பின் ஒரிஜினல் தலைவர் முஹம்மத் யூசுப் என்பவன் தனது followers க்கு “””பூமி தட்டையானது””” என்று போதித்தானாம். இது எப்படி இருக்கு?//

    யாரும் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் குர்ஆன் பூமியை தட்டை என்று எங்கும் சொல்லவில்லை. இது பற்றி நான் முன்பு விளக்கியும் இருக்கிறேன்.

    //Secularism என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்கள் இந்துக்கள்தான். அதனால்தான் கோவா மாநிலத்தில் இன்றைக்கு டெபுடி முதல்வராக இருப்பவர் Francis D ‘souza என்ற கிறிஸ்தவர் ஆவார்.//

    அதனால்தான் ‘இந்தியாவை சேர்ந்த அனைவரும் இந்துக்களே’ என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். இப்படி சொல்பவர்களைத்தானே பதவியிலும் அமர்த்துவீர்கள்.

    //அது மட்டுமா? முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் வந்தேறிகளும் (=immigrants ) தொழுவதற்காக ஒரு இந்து அரசனால் கேரளாவில் கட்டப்பட்டதுதான் “சேரமான் மசூதி” இது மெக்காவிற்கு அடுத்த 2 வது மிகப் பழமையான மசூதி ஆகும்.//

    இந்தியாவின் வந்தேறிகள் யார் என்பது 90 சதமான இந்தியர்களுக்குத் தெரியும். கி.வீரமணியிடம் கேட்டால் ஆதாரங்களோடு பட்டியலிடுவார். அடுத்து கேரளாவில் இருக்கும் சேரமான் பள்ளி என்பது முகமது நபி காலத்திலேயே அவரை சென்று சந்தித்து தனது பெயரை தாஜூதீன் என்று மாற்றிக் கொண்ட சேரமான் பெருமாளின் வாரிசுகள் கட்டிய பள்ளி அது. இது பற்றியும் முன்பு நான் விளக்கியுள்ளேன்.

  96. தேசிய நீதி ஆணையத்தில் சட்ட அமைச்சர் இருப்பது பேராபத்து. சட்ட அமைச்சர் என்றால் அரசியல். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு எல்லாம் இருக்கும்.

    அது சுதந்திரமான நீதித் துறையை அடையும் வழி அல்ல.

  97. நல்லா கேள்வி கேக்கணும் போல இருக்கு… ஆனா தூங்கற மாதிரி நடிக்கிறவங்கள எழுப்பி விடமுயற்சி செய்யறது வேஸ்ட்டு.. நாம கட்டுரையை மட்டும் படிச்சிட்டு போவோம்னு விட்ரலாம்னு பாத்தா இவுங்க வெத்துவெட்டு வியாக்கியானம் பேசி டார்ச்சர் பண்ணி சாவடிக்கிறாங்க. ஏன் சார், தாயுமானவன் சார்? மசூதிகள் ல காலங்கார்த்தால 5:30 மணிக்கு அல்லாஹ்கு அக்பர்னு கும்பிடுராங்கலே அது தமிழா சார்? அதைப் பத்தி என்ன நெனக்கிறீங்க?

    ஹிந்து மதம் அப்படிங்கறது வெள்ளைக்காரன் இல்லேன்னா வெளிநாட்டுக்காரன் வெச்ச பெயர் தான். இன்னுக்கு நாம இந்திய நிலப்பகுதிகள்ல இருந்த தொன்று தொட்டு நமது முன்னோர்களால வணங்கப் பட்டு வந்த தெய்வங்களையும், தத்துவங்களையும், தரிசனங்களையும் ரொம்ப சுலபமா ஒரு சின்ன புட்டிக்குள்ள அடிச்சு எல்லாருக்கும் புரியரதுக்கும், தெரியறதுக்கும் ஒரு அடையாளமா தான் ஹிந்துங்க்ர பெயரை உபயோகிக்கறோம். ஹிந்துன்னு பெயர் வைச்சுட்டு கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் வளர்க்கலை. கருத்துக்களும், சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் அவற்றால் வளர்ந்த கலாச்சாரமும், பண்பாடும் ஹிந்துத்துவம்னு அழைக்கப்படுது. பல்வேறுபட்ட மொழிப்பிரிவினாலான, மெய்ப்பொருண்மை விளக்கங்களும் இதிலே அடக்கமாகுது. இதிலே மொழியை முன்வைத்து நடக்கிற அரசியல் சார்ந்த கூத்துக்களுக்கு பதிலளிப்பது தனியா நடக்க வேண்டிய விவாதம்.

    இங்க விஷயம் என்னன்னா குண்டு வெச்சாலும், வெட்டினாலும், கூறு போட்டாலும் சூடு சொரணை இல்லாம ஒன்று சேர்ந்து போராடாம, ஆதி நூல்களிலுள்ள மூல கருத்தைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணாம, கடமையை சரியா செய்யாம, இஸ்லாமியத்தை என்னன்னு புரிஞ்சிக்காம, ஹிந்துத்த்வத்தையும் முழுசா தெரிஞ்சிக்காம சக மனிதன் சாகும்போது மௌன சாட்சியா வேடிக்கை பார்த்து,வெட்டி நியாயம் பேசிக்கிட்டு நிக்காம இருக்கணும்னு தான் கட்டுரை எழுதியிருக்காரு. அதுக்குள்ள புகுந்து ஆர்.எஸ்.எஸ் இதைக் கேக்கலாமான்னு கேக்கறது கதையை திருப்பி சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டப்பாக்குறது பெரிய மனுஷத்தனமா தெரியலையே!

    உண்மையா வரலாற்றுல நிகழ்ந்த உண்மைகளையும், அவை இருட்டடிப்பு செய்யப்படுவதையும் ஒருத்தர் சுட்டிக்காட்டி கட்டுரை எழுதும்போது அந்தக் கட்டுரை சம்மந்தப்படாத விஷயத்துக்கு விவாதத்தை திசை திருப்புறது, தூங்கற மாதிரி நடிக்கிறதுனு படுது.

    இன்னொருத்தர் இருக்கிறார். அவரு நாம கேள்வி கேட்டாலே இதுவரை ஒரு பதிலும் சொன்னதில்ல. வெட்டி நியாயம் 4 பக்கத்துக்கு பேசுவாப்ல. தமிழ்ஹிந்துவின் ஜனநாயகம், ஹிந்துத்வம் அவரைப் போன்றவர்களுக்குத் தரும் சமத்துவத்தை மத மாற்றம் செய்ய ஒரு வாய்ப்பாக நினைத்து மூச்சைப் போட்டு தம் கட்டி இழுத்து நம்மளை சிரிக்க வைப்பாப்ல…. விடுங்க, எதுக்கு நம்ம வாயால அவரைப் பத்தி பேசிக்கிட்டு… அவரே அப்புறம் குரானும் நாம சொல்றத தான் சொல்லுதுனுவாரு.

  98. உயர்திரு. கிருஷ்ண குமார்….

    நான் எதாவது தங்கள் மனதை புண்படுத்தும் முகமாக பேசி இருந்தால் என் சிரம் தாழ்ந்த மன்னிப்பினை கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக நான் இங்கு தமிழையும், சைவத்தையும் தவிர்த்து வேறு எது சார்ந்தும் பெரும்பாலும் மறுமொழியிடுவதுக் கிடையாது… பிற மதங்கள் சார்ந்த திரிகளுக்கோ, அரசியல் சார்ந்த கட்டுரைகளுக்கோ, இவர்களால் வியந்தோதப்படும் இந்துத்துவ பண்பாட்டை சார்ந்த கட்டுரைகளிலோ நான் மறுமொழிகள் மூலமாக எவ்வகையிலும் பங்கெடுத்தது கிடையாது. தமிழ் மொழியும் அதன் சீரிய பண்பாடும் இங்கு கட்டுரையின் வாயிலாகவோ அல்லது யாரேனும் மறுமொழியின் மூலமாகவோ தவறாக திரிக்க நேர்ந்தால் அப்போது மட்டுமே நாம் பங்கெடுக்க விழைவது..

    அதன் தொடர்ச்சியாகத் தான் சித்திரை தமிழ் புத்தாண்டு சார்ந்த கட்டுரைகள் மற்றும் தமிழில் வடமொழியை கலக்கப்பதை ஆதரிக்கும் புல்லுருவித் தனமான கட்டுரைகளில் மட்டுமே நாம் பங்கெடுத்தது. இவை யாவும் தங்களுக்கு தெரிந்தே ஒன்றே.

    ஆனால், அண்மைய காலங்களாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவம் சார்ந்த விடயங்களில் நான் இப்போது பங்கெடுப்பதற்கு முதன்மையான காரணங்கள் வேறு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது எப்போதுமே எமக்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது. நிச்சயம் அது தமிழர் விரோத அமைப்பே. இன்றைய நாளில் இந்திய தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் ஆரியத்தை எதிர்த்து நிற்கும் ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே, எப்படியாவது அதன் தனித்தன்மையை ஒழித்து ஆரிய மயமாக்க முயன்ற ஒரு முயற்சி தான் “மணிப்ரவாள” நடை என்பது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருக்கும் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அது போன்ற நடையை தான் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். இப்படி தமிழரின் பண்பாடு, மொழி, கலை யாவற்றையுமே ஆரியமயமாக்க துடிக்கும் ஒரு கூட்டம் தான் ஆர்.எஸ்.எஸ். உங்களுக்கு புரியும் படி கூற வேண்டுமானால், எப்படி ஆபிரகாமிய மதங்கள் இந்து மத கலை பண்பாடுகளை அழிக்க பார்கிறார்கள் என்று இங்கு சிலர் கூப்பாடு போடுகிறார்களோ.. அதே போன்றது தான் இந்து இயக்கங்கள் என்று கூறி கொள்ளும் சில _____________ இயக்கங்கள் தமிழ் பண்பாட்டிற்கு எதிராக செய்வதும்.

    எங்கிருந்தோ வந்த கிறித்துவ சமயப்ப்பரப்புனர்களால் ( missionaries)தான் தமிழின் தனி தன்மை உலகிற்கு தெரியவந்தது. இல்லை என்றால் வடமொழியினின்று தான் தமிழ் தோன்றியது, வடமொழி சொற்களின் துணையில்லாமல் தமிழால் தனித்து இயங்க முடியாது என்னும் நச்சுக் கருத்து தான் உலா வந்து கொண்டிருக்கும். அதற்க்கு ஏற்றார் போல் எரிகிற நெருப்பில் எண்ணையாக மணிப்ரவாள நடையும் உதவி கொண்டிருந்தது. இதற்க்கு சான்றாக ஒரு நிகழ்வினை கூறுகிறேன்..

    “சீகன்பால்கு என்னும் ஜெர்மானியப் பாதிரியார் தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில் தங்கி சமயத் தொண் டாற்றி வந்தார். அவர், தம் தாய் நாடு திரும்பியபோது இலண்டன் வழியே சென்றார். இலண்டனின் மிகப் பெரிய கிறித்துவ அடிகளார் காண்டர்பரியார், சீகன் பால்குவுக்கு விருந்தொன்று வைத்து, தமிழ்நாட்டில் அரிய சமயத் தொண்டாற்றித் திரும்பியுள்ள அவருக்கு மிக உயர்ந்த மொழியான இலத்தீன் மொழியில் பாராட்டிதழ் படித்துத் தருவதாய்ப் பெருமையுடன் கூறியிருக்கிறார். வரவேற்பினை ஏற்றுப் பேசிய சீகன்பால்கு, “”””உயர்ந்த மொழியான இலத்தீனில் எனக்கு வரவேற்பிதழ் படித்தளிப்பதாகச் சொன்னீர்கள். நானும் ஓர் உயர்ந்த மொழியில் நன்றி கூறுவதுதான் பொருத்தம்”” எனச் சொல்லித் தமிழில் பேசியிருக்கிறார். அங்கிருந்தோர் அவரிடம் அம்மொழியின் பெயரைக் கேட்டதும், “தமிழ்” என்று பெருமை பொங்க சீகன் பால்கு கூறினாராம். ”

    மேலும், திரு. கால்டுவெல் அவர்கள் …,

    ” பிறமொழி நூல்கள் சிலவற்றில் எவ்வுளவுக்கு எவ்வளவு வடமொழி சொற்களை பயின்று வருகின்றனவோ அவ்வுளவுக்கு அவ்வளவு அந் நூல்கள் அவ்வம் மொழியினரால் சிறப்புடன் போற்றப்படும். தமிழிலோ, எவ்வுளவுக்கு எவ்வளவு தமிழ் நூல்கள் வடமொழியின் உதவியை நாடாமல் தனித்தியங்குகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்புடன் போற்ற படும் “.
    -கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்.

    ஆர்.எஸ்.எஸ் சார்புடையவர்களுக்கு ஏன் ஜி.யு.போப், கால்டுவெல், சீகன்பால்கு போன்றோரை பிடிக்காது என்பது இப்போதாவது தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சமற்கிருத மொழியின் எற்றதிற்க்காக வேண்டுமானால் பாடுப்படுவார்கள். அதன் நீட்சியாக தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சி.பி.எஸ்.ஈ தற்போது மத்திய அரசின் நிறுவனமான சி.பி.எஸ்.ஈ. (Central Board of School Education) இயக்குநர் சார்பில் நான்கு பக்க சுற்றறிக்கை ஒன்று அனுப்பப் பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொண்டாடட்டுமே தாரளமாக கொண்டாடிக் கொள்ளட்டும் யாரும் தடுக்கவில்லை. அனால் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள முதன்மையான விடயம் இது தான் “சமற்க்ருத மொழியே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய்” என்கிற விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்ற வேண்டுமாம்.

    ஆர்.எஸ்,எஸ்ஸின் கொள்கைகள் அனைத்தையுமே மோடி எந்த தடங்கலுமின்றி செய்து வருகிறார் என்பது மேற்கண்ட விடயத்தின் மூலம்மாக தெற்றென விளங்குகிறது.

    இவர்களாக தமிழுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள் செய்பவரையும் இகழ்ந்து பேசுவார்கள். தமிழர்களின் மன்னிக்கவும் செந்தமிழர்களின் கலை சின்னமான தில்லை கோவிலை தீதச்சதர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூக்குரல் இடுவார்களாம். ஆனால், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வியந்து வாழ்த்த வேண்டுமாம். இது என்ன நியாயம் திரு. கிருஷ்ண குமார் அவர்களே.

    நிச்சயம் இவர்கள் (ஆர்.எஸ்.எஸ்) சாதி ozhipprikku எதிராகவெல்லாம் போராட முன்வரமாட்டார்கள். அதை பல நிகழ்வுகள் மூலம் நிருப்பித்து விட்டார்கள். இனியும் ஆர்.எஸ்.எஸ் பற்றி எதுவும் கூற மாட்டேன், தங்கள் மனம் நோகும் ஒன்றை மீண்டும். மீண்டும் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.. எல்லாம் வல்லவனான் எம்பெருமான் ஈசனின் பரிபூரணம் கடாட்சம் தங்களுக்கு துணை இருக்குமாக. நன்றி.

  99. மேலும் தில்லை தொடர்புடைய பதிவுகள் பற்றி….

    //ம்…………. ஆலய வழிபாடுகளுக்கு ……….. தமிழ் மற்றும் சம்ஸ்க்ருத ……… இரண்டு மொழி வழிபாடுகளுக்கும் வக்காலத்து வாங்குகிறேன். தீக்ஷிதர்களுக்கு இல்லை. தெளியவும்.//

    தமிழ் மொழியில் அங்கு வழிப்பாடுகள் நடைபெறுவதில்லை. பெயரளவிற்கு சில தேவார, திருவாசக பாடல்கள் பாடப்படுகின்றன அவ்வளவுதான்.. தில்லையில் மட்டுமில்லை தமிழகத்தில் எங்குமே தமிழில் அர்ச்சனை(வழிப்பாடு) என்பது கிடையவே கிடையாது…

    //ஆனால் அப்படியின்றி ஒட்டு மொத்தமாக அனைத்துத் தில்லைவாழந்தணர்களையும் மிகக் கொடுமையான வசவுகளால் வைதல் என்பது…………… நிச்சயமாகத் தமிழ்க்கலாசாரம் கிடையாது…………. சைவ ஒழுக்கமும் கிடையாது………… ///

    மன்னிக்க வேண்டும் எனக்கு சாதி வெறியெல்லாம் கிடையாது.. என் சாதியை வைத்து எந்த ஆதாயமும் நான் அடைந்ததில்லை. ஆகவே பிராமணர்கள் மீது எனக்கு சாதி வெறுப்பெல்லாம் கிடையாது, உணர்ந்து கொள்ளவும். தமிழுக்கான என் போராட்டத்தில் நான் தீட்சதர்களை வைதது தங்களை புண்ப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும். கண்டிக்க விழைவது அவர்களின் துவேஷ போக்கைத் தான்.

    //நீங்கள் சைவ ஒழுக்கப்படி நடக்கும் அன்பர் தானே.//

    தில்லை கூத்தனுக்கு மட்டுமே தான் அது தெரியும்…

    //திருமுறைகள் என்பது எப்படி இறைவனிடமிருந்து தோன்றியவையோ அப்படியே இறைவனிடமிருந்து தோன்றியவை வேதாகமங்கள். அப்படித்தானே திருமுறைகளும் கூட சொல்லுகின்றன அன்பரே. அப்படியான வேதாகம வழிபாடுகளை எப்படி இழித்துப் பழிக்க முடியும். யாரும் திருமுறை வழிபாடுகளை பழிக்கவில்லை. தீக்ஷிதர்கள் முதற்கொண்டு என்பதை அறியத் தலைப்படுவீர்.//

    நான் எங்கும் வேதத்தையோ அல்லது ஆகமத்தையோ இழித்தோ பழித்தோ பேசவில்லை.. முதலில் தில்லை தீட்சதர்கள் ஆகம நியதிப்படி ஒழுக்கமாக தான் இருக்கிறார்களா என்பதை என்றாவது ஒரு நாள் நீங்கள் தில்லை வர நேர்ந்தால், இங்கிருக்கும் தில்லை வாழ் மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒன்றை மட்டும் கூறுகிறேன் கோவில் நிர்வாகம் அறநிலையத் துறையை விட்டு மீண்டும் தீட்சிதர்கள் வசம் சென்றதை அங்கிருக்கும் தில்லை வாழ் மக்கள்(இந்துக்கள்தான்) யாரும் கொஞ்சமும் விரும்பவில்லை. தலையில் அடித்து கொள்கிறார்கள்(இதை வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் நேரில் வந்து உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள்).

    //தேர்தலின் முன்னர் ஸ்ரீமான் தொல் திருமாவளவன் அவர்கள் தில்லையம்பலவாணப் பெருமானை தரிசனம் செய்து தில்லைவாழந்தணரிடம் ஆலய ப்ரசாதம் பெறும் காட்சியை பல முகநூல் பக்கங்களில் பார்க்க நேரிட்டது. குறைகளை மட்டுமே காண விழையும் அன்பர்கள் இதைக்கூட நடிப்பு என்று வசவிட முனைந்தது மிகுந்த மனவருத்தத்தை தந்தது. //

    நீங்கள் மனவருத்தப் பட தேவை இல்லை.. அது நடிப்பு தான். தேர்தலுக்காக மக்கள் முன்னிலையில் போட்ட வேடம் தான் அது. ஏனென்றால் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நிமிடமே அந்த வேடம் கலைந்து விட்டது. எப்போதும் போல் இசுலாமியர்கள் நடத்தும் கூட்டதிற்கு சென்று இந்து மதத்தையும், அதன் பண்பாட்டையும் பற்றி தரக் குறைவாக பேச ஆரமித்து விட்டார்.. அதற்க்கான காணொளிகள் அனைத்தும் youtube இல் இருக்கின்றன . நான் அறுவெறுக்கும் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். எல்லோரையும் போல் இவரும் ஒரு ஒட்டு கட்சி நடத்தும் அரசியல்வாதி அவ்வளவே..

    //என்னைப் பொறுத்த வரையில்………. நான் ஸ்ரீமான் தொல் திருமாவளவன் என்ற அன்பரிடம்………….. சிவாலயத்தில் தர்சனம் செய்யும் பாக்யம் பெற்ற வணக்கத்திற்குரிய சிவனடியாரிடம்…………. கோவில் வழிபாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காத இந்த சிவனடியாரிடம்………. //

    ரொம்ப அவசரப் பட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்…. எம்பெருமான் உங்களுக்கு உண்மை நிலையை உணர்துவாராக…

    //அரை ஜாண் வயிற்றுக்காக பரதேசியாகப் பிழைக்கப் போய் மொழி குலைந்த எனக்கு ஞமிலி, காவாளி, தெள்ளவாரி போன்ற சொற்கள் தமிழ்ச் சொற்களா என்று கூடத் தெரியாது; அவற்றின் பொருளும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. //

    நான் எந்த அபாசமான கெட்ட சொற்களும் பேசவில்லை… ஞமிலி அல்ல அது “ஞமலி” தூய்மையான சங்க இலக்கியத்தில் காணப்படும் சொல். அதற்க்கு நாய் என்று பொருள் படும்.. பக்தி இலக்கியங்களான தேவாரத்திலும் இந்த சொல் கையாள பட்டிருக்கும். எது எப்படியோ நன்றியே உருவான பைரவப் பெருமானை யாரையோ வசைப்பாட இங்கு இழுத்தது மிக தவறு தான் மன்னிக்கவும். மற்றப்படி தெள்ளவாரி, காவாளி என்றால் திருடர்கள், ஏமாற்றி பிழைப்பவர்கள்(பிழைப்புவாதிகள்) என்று பொருள் அவ்வளவே. கடும் சொற்கள் பேசியதற்காக மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்

    உங்களின் அறிவார்ந்த ஆலோசனைகள் எப்போதும் எனக்கு தேவை.. தில்லை நடராசனின் பேரருள் எப்போதும் தங்களுக்கு துணையாக இருக்கும்..

    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்குமிண் சிரிப்பும் பனித்தசடையும் பவளம்போல்மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்தபொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்தமா நிலத்தே.

    ஓம் நமசிவாய ….திருச்சிற்றம்பலம் …..

    ..

  100. //இந்தியாவின் வந்தேறிகள் யார் என்பது 90 சதமான இந்தியர்களுக்குத் தெரியும். கி.வீரமணியிடம் கேட்டால் ஆதாரங்களோடு பட்டியலிடுவார். //

    வீரமணியிடம் கேட்டேன் அவர் சொன்னது, கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி, அல்லாவை நம்பாத , ராசகுல்லாவை நம்பி சாப்புடு, உடம்புக்கு நல்லது என்று…

  101. Kuran il irukkaaa ..masoothi idika???

    பாக்தாத், ஜூலை 28-

    ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ அமைப்பை சேர்ந்த போராளிகள் ராணுவத்துடன் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சன்னி பிரிவை சேர்ந்த இவர்கள் ஈராக்கின் மொசூல், கிர்குக்–திக்ரித் உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

    சிரியாவில் சில பகுதிகளும் இவர்களது கட்டுப்பாட்டுக்குகள் வந்துவிட்டது. எனவே, ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து தனியாக ‘இஸ்லாமிய நாடு’ அமைத்துள்ளனர்.

    அதன் தலைவராக அபுபகர் அல்–பக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அமைத்துள்ள புதிய நாட்டில் அதிரடி உத்தரவுகள் மற்றும் சட்டங்களை தீவிரவாதிகள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.

    மொசூல் நகரில் இருந்து கிறிஸ்தவர்களை மிரட்டி வெளியேற்றியுள்ளனர். மொசூல் நகரில் சன்னி பிரிவின் நபி ஷியத் என்ற வழிபாட்டு தலம் உள்ளது. அதை போராளிகள் நேற்று முன்தினம் குண்டு வைத்து தகர்த்தனர்.

    அதனையடுத்து, யூனுஸ் நபி என்பவரின் அடக்கஸ்தலம் மற்றும் அவர் காலத்து மசூதியையும் இடித்து தள்ளினர்.

    இந்நிலையில், மொசூல் நகரில் உள்ள இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க மசூதியையும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இடித்து தரைமட்டமாக்கினர். ஜிஜ்ரிஸ் நபி என்றழைக்கப்பட்டவரின் அடக்கஸ்தலம் மற்றும் அவர் காலத்து மசூதியையும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் இன்று இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக மொசூல் நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.

    –மாலைமலர்

  102. @சுவனப்பிரியன்,

    //நீங்கள் அதிகம் விட்டலாச்சாரியா படங்களை விரும்பி பார்ப்பவர் என்று நினைக்கிறேன். அல்லது ரஜினியின் சந்திரமுகி படத்தை பார்த்த பாதிப்பாகவும் இருக்கலாம்.//

    நான் விட்டலாச்சாரியா படங்களை பார்த்ததில்லை. சந்திரமுகி படத்தின் சில பகுதிகளை(clippings ) தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன், முழுதாக பார்க்கவில்லை.

    //ஒரு உடலில் இன்னொரு உயிரின் ஆன்மா நுழைவது என்பது படத்துக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். நிஜ வாழ்க்கையில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே!//

    ஒரு உடலில் ஒரு ஆன்மா இருக்கும்போது அதனுள் இன்னொரு ஆன்மா நுழையாது. அதாவது ஒரு கரு உருவாகும்போது அதை தேர்ந்தெடுக்கும் ஆன்மா மட்டுமே அந்த உடல் வாழும்வரை அதில் தங்கி இருந்து பௌதீக அனுபவத்தை பெறும். இன்னொரு ஆன்மா அதில் நுழையாது, நுழைய விரும்பாது.

    ஒரே நேரத்தில் ஒரு ஆன்மா பல உடல்களில் தங்கி இருக்க முடியும் என்று நான் முன்பு கூறியதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

    ஒரு உடலில் ஒரு ஆன்மா மட்டுமே இருக்க முடியும். ஆனால் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களை அவை கருவாக உருவாகும்போது தேர்ந்தெடுத்து அவற்றின் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கி அந்த மனிதர்களாக வாழ்ந்து மனித அனுபவத்தை பெற முடியும். இந்த மனிதர்களின் உள்ளே இருப்பது ஒரே ஆன்மா தான். வேறு வகையில் சொல்வதென்றால், ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல மனிதர்களாக வாழ முடியும். உதாரணத்திற்கு, ஒரே ஆன்மா நீங்களாகவும் உங்கள் அண்ணன் பீ ஜே வாகவும் பிறப்பெடுத்து இரு வேறு தனி நபர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கலாம். உங்கள் இருவரின் உடல்களிலும் தங்கி உங்கள் மனித அனுபவத்தை பெறுவது ஒரே ஆன்மா என்பதால் உண்மையில் நீங்கள் இருவரும் தனித்தனி நபர்கள் அல்ல, ஒரே நபர்தான்.

    உண்மையில் சொல்லப்போனால் இருப்பது ஒரே ஒரு ஆன்மாதான். அந்த ஒரே ஆன்மாவின் பூரண பிரதிகள்தான் (fractals) எல்லா தனி ஆன்மாக்களும். தனி ஆன்மா என்பதும் ஒரு மாயைதான்.

    // சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள். ஏனெனில் குர்ஆனின் கட்டளைப் படி பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று. அறிவியலும் பேய் பிசாசுகளை ஒத்துக் கொள்வதில்லை.//

    அப்படியா? அப்ப ஜின்கள் பற்றி குரான் ஏன் பேசுகிறது? அரபியர்களின் ஜின்கள் பற்றிய நம்பிக்கைக்கும் மற்ற கலாசாரங்களில் உள்ள பேய், பிசாசு பற்றிய நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

  103. நாம் முஸ்லிம் fanatic களின் அராஜகத்தை பட்டிய போட்டு காட்டினால் “இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது” என்று கூறி தப்பித்து கொள்வார். ஆனால் மெக்காவிலுள்ள காபா விலிருந்து ஜெருசலதிலிருக்கும் al Aqsa எனும் மசூதிக்கு Buraq என்ற சொர்க்கலோக விலங்கு மீது சென்றார். பிறகு 7 வானங்களை கடந்து Bayt al-mamur மற்றும் Sidra al-muntaha சென்றார். அதன் பிறகு சொர்க்கம் மற்றும் நரகம் சென்றார் அந்த விலங்கு மீது ஏறி மீண்டும் மெக்கா வந்து சேர்ந்தார். இவை அனைத்தும் ஒரு இரவில் நடந்து முடிந்தது என்று சொன்னால் அதை மட்டும் “”இது எந்த அளவிற்கு உண்மை””” என்று எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுகொள்வார்

    /////////// மாமிசம் சாப்பிடாத இந்துக்கள்தான் குஜராத்தில் கர்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை வெளியில் இழுத்து தீயில் இட்டனர்//////
    நீங்கள் அப்பாவி இந்துக்களை ரயிலில் எரித்து கரி கட்டையாக்குவீர்கள். அதற்கு நாங்கள் பதிலடி கொடுக்க கூடாது. அதுதானே உமது வாதம். அராஜகம் செய்ய உங்களுக்கு மட்டும் உரிமை உண்டு அதற்கு எந்தவித reaction யும் காட்ட எங்களுக்கு உரிமை கிடையாது. அதற்கு பிறகு குஜராத்தில் எந்த அசம்பாவிதமாவது நடந்ததா?ஆனால் பேப்பரை பாருங்கள் தினந்தோறும் உலகில் ஏதாவது இடத்தில் கொலை நடக்கிறது.போகோ ஹராம் என்ற அராஜகவாதிகள் Cameroon vice president ன் மனைவியை கடத்தி சென்றுள்ளனர்.மேலும் 4 civilians 2 போலிஸ் கொல்லப்பட்டுள்ளனர்.(நேற்று). (2) பாக்தாத்தில் Benghazi என்ற சிட்டியில் 38 பேரை கொன்றுள்ளனர் (இதுவும் நேற்று) (3) ஈராக்கில் Baquba என்ற சிட்டியில் ஷியா தீவிரவாதிகள் Islamic State jihadist களின் சடலங்களை இழுத்துவந்து ஒரு bridge ல் கடி தொங்கவிட்டுள்ளனர். (இதுவும் நேற்று) (4) Public முன்பாக சாப்பிட்டார்கள் என்று ஈரானில் 5 பேருக்கு சவுக்கு அடி விழுந்திருக்கு (இதுவும் நேற்று) இப்படி தினம் தினம் நடுந்து கொண்டிருப்பதை பற்றி சொன்னால் குஜராத்தில் நடந்ததாம். நீங்கள் பாவம் ஒண்ணுமே பண்ணலை. நாங்கதான் கொழுத்துபோய் செய்தோமா?
    (மற்றவற்றிற்கு பதில் பிறகு வரும்)

  104. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்

    உங்களுடைய பகிர்வுகளில் இருக்கும் ஆழ்ந்த தமிழ்ப்பற்றும் உயர்ந்த சிவபக்தியும் நான் என்றென்றும் உகக்கும் விஷயங்கள். மேலும் நான் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விழையும் விஷயங்களும் கூட.

    எனக்குத் தெரியாத *ஞமலி* என்ற தொல் தமிழ் வார்த்தையை உங்களிடமிருந்து கற்றுக்கொண்டது இந்த சம்வாதத்தின் லாபம் தானே 🙂

    பரங்கிப்பாதிரி கால்டுவெல் தமிழகத்தில் உள்ள சைவ வைஷ்ணவ மற்றும் நாட்டார்வழிபாடுகளில் ஆழ்ந்திருந்த தமிழ் மக்களை தமது பித்தலாட்ட மதமாற்ற முறைகளால்….. இந்த சமயங்களின் தத்துவார்த்தங்களில் கோடியில் ஒரு பங்கிற்குப் பெறாத க்றைஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்தமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் எதிர்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் தமிழுக்கும் சமயத்துக்கும் மற்றெந்தத் தமிழர்களைப்போல் பெருந்தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களை இழித்துப் பழித்து இந்த பரங்கிப்பாதிரி நூல் ஒன்றை பதிப்பித்தது சரித்ரம். அப்படி ஒரு நூலைப் பதிப்பித்ததால் சான்றோர் பெருமக்களால் இந்த நயவஞ்சகப்பாதிரி செம்மையாகப் புடைக்கப்பட்டான் என்பதும் சரித்ரம். இப்படித் தமிழ் மக்களுக்கிடையே ஜாதிப்பூசல்கள் ஏற்பட காரணமாக இந்தப் பரங்கிப்பாதிரிமார்கள் செயல்பட்டமை ஆர் எஸ் எஸ் மற்றும் மற்றைய ஹிந்து இயக்கங்களால் எதிர்க்கப்படுகிறது.

    ஆரியம் த்ராவிடம் பற்றிய உங்களது புரிதல்கள் பாதிரிமார்களால் விஷமாக விதைக்கப்பட்டவை. உங்கள் குழப்பங்கள் பரங்கிப்பாதிரி கால்டுவெல் சம்பந்தப்பட்டது என்றால் அந்தப் பாதிரி தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு எத்தகையது தமிழரின் தொல் சமயங்களான சைவ வைஷ்ணவ சமயங்களுக்கு இந்தப் பரங்கிப் பாதிரிகள் செய்த தீங்கு யாது என்ற விஷயங்கள்……..இந்த விஷயங்களில் ஆழ்ந்த புரிதல் உள்ள அன்பர்களால் பகிரப்பட வேண்டியவை. எனக்கு இது சம்பந்தமான விபரங்கள் முற்றாகத் தெரியாததால் எனக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றி விசாரம் செய்ய இயலாது. சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் மொழிகள் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை என்பது மட்டற்ற அறியாமையின் பாற்பட்ட கருத்து. தமிழ் நன்றாக அறிந்து (உங்களளவுக்கு இல்லை) ஒரளவு சம்ஸ்க்ருதமும் அறிந்த என்னால் இதைத் தெளிவாகச் சொல்ல இயலும். சம்ஸ்க்ருதம் தமிழ் மொழியின் தாய் என்று என்னிடம் யாராவது சொன்னால் அந்தக்கருத்து சரியில்லை என்று புரிய வைக்கவும் முடியும். சம்ஸ்க்ருத மொழிப் படைப்புகள் சொல்ல வருவது என்ன என்பது அந்த மொழியறிவு பெற்றால் மட்டிலும் அறிய முடியும். நீங்கள் அந்த மொழியறிவு பெற்றிருக்கிறீர்கள் என்றால் மட்டிலும் இது சம்பந்தமாகப் பேச விழைவது கூட ஞாயமாக இருக்கும்.

    \\\\\ ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருக்கும் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அது போன்ற நடையை தான் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். இப்படி தமிழரின் பண்பாடு, மொழி, கலை யாவற்றையுமே ஆரியமயமாக்க துடிக்கும் ஒரு கூட்டம் தான் ஆர்.எஸ்.எஸ். \\\\

    அறியாமையின் பாற்பட்ட கருத்து. இந்த தளத்தில் என்னைத் தவிர்த்து கலப்பு மொழிநடையில் ( மணிப்ரவாளம் இல்லை) யார் எழுதுகிறார்கள்? தமிழகத்தைச் சார்ந்த சங்கத்தைச் சார்ந்த பெரியோர்கள் உங்களை விட மிகவும் தூயதான தமிழில் பேசி எழுதுவதையே பார்த்திருக்கிறேன்.

    எந்த மொழியும் / மொழிநடையும் ஒரு ஜாதி / ஒரு இயக்கம் / ஒரு மதம் சார்ந்தது என்பது அறியாமை. உர்தூ என்பது முஸ்லீம்களுடைய பாஷை என்பது எப்படி மட்டற்ற அறியாமையின் பாற்பட்டதோ அப்படியே மணிப்ரவாளம் பற்றிய அறியாமையும்.

    ஆர்.எஸ்.எஸ் ஸுக்கும் மணிப்ரவாளத்துக்கும் சம்பந்தம் கோர்ப்பது அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் கோர்ப்பது போன்று.

    மணிப்ரவாளம் என்பது ஒரு குழுவினரை எதிர்ப்பதற்கு அலகீடு என்றால் நீங்கள் முதலில் எதிர்க்க வேண்டியது அனைத்து க்றைஸ்தவ மத ப்ரசார குழுக்குளை. இன்றைய திகதியில் எந்த க்றைஸ்தவ சேனலை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாருங்கள். அதில் அவர்கள் ப்ரயோகிக்கும் மொழிநடை மணிப்ரவாளம் என்பது தெளிவாகத் தெரியும்.

    ஆரியம் என்று நீங்கள் சொல்ல வரும் விஷயம் என்ன என்று உங்களுக்கு புரிதலும் இல்லை என்பது என் புரிதல். நிற்க.

    தமிழரின் மொழியை காக்க வேண்டிய கடமை தமிழருடையது. தமிழ் பேசும் அனைத்து மக்களுடையது. அதில் தமிழகத்தில் இருக்கும் ஆர் எஸ் எஸ் காரர்களும் நீங்களும் நானும் கூட அடக்கம்.

    தமிழரின் பண்பாடு, மொழி மற்றும் கலை இவற்றுக்கு பெரும் ஆபத்து ஆப்ரஹாமியரிடமிருந்து. அல்லோஹோ அக்பர் மற்றும் அல்லேலூயா இதற்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தொல் தமிழ் சமயங்களான சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம் மற்றும் நாட்டார் வழிபாடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் சொன்னால் நான் தெரிந்து கொள்வேன். தமிழகத்தை முழுதுமாக அராபிய மயமாக்க விழையும் வஹாபிய இஸ்லாம் உங்களுக்கு ஏன் உடன்பாடாக இருக்கிறது? தமிழ்ப்பெண்டிரின் தமிழ்க்கலாசாரமான நெற்றிப்பொட்டு மற்றும் தலையில் சூடும் பூ இவற்றை அழித்தொழிக்கும் இழிவான கலாசாரமான ஆப்ரஹாமிய கலாசாரத்துடன் எப்படி உங்களால் உடன்பட முடியும்?

    ஆரிய கலாசாரம் என்று நீங்கள் கூறுவதன் பொருள் என்பதாவது என்ன என்று அறிந்தால் தான் அது பற்றி விவாதிக்கவும் கூட முடியும்.

    \\\\ குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்குமிண் சிரிப்பும் பனித்தசடையும் பவளம்போல்மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்தபொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்தமா நிலத்தே. \\\\

    இதை விட என் ஹ்ருதயத்துக்கு குளிர்விக்கும் வாசகங்கள் வேறெது இருக்கவியலும். திருமுறையை என் கண் குளிர மனம் குளிரப் பகிர்ந்த உங்களது உயர்ந்த செயல்பாட்டுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.

  105. சுபி

    //
    குர்ஆன் பல விஷயங்களை பேசுகிறது. வரலாறு, அறிவியல் என்று பல துறைகளை தொடுகிறது. இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா? குர்ஆனே சவால் விடுகிறது.
    //

    ஹி ஹீ உங்களுக்கே காமடியா இல்லையா. புனித ரமதான் மாதத்தில் அண்டப் புழுகு. எல்லாம் இறை காரியம் போலும்.

    எல்லா உயிரையும் அல்லா தான் ஷிப்டு போட்டு படைத்தார் என்பது இன்றைய அறிவியலுக்கு புறம்பானது, முரண்படுகிறது. பரிணாமவியல் உண்மைங்க. அது இல்லேன்னா உங்களுக்கு பல வாக்சின் பல anti biotic மருந்து கிடைக்காதுங்க. வெளி நாட்டுல குரங்க, மான, ஆட எல்லாம் மனிசனே உசுரோட உருவாக்கி இருக்காங்க. அல்லா இத பேடன்டு பண்ணாம் விட்டுடாரு போலும்.

    நீங்கள் இன்று அடித்து சாப்பிட்ட ஆட்டை அல்லா படைக்கல சார். அது பரிணாமவியலின் தொடர்ச்சியால் வந்தது.

    சரி, குரான்ல எவ்வளவு பேத்தல்கள் இருக்கின்றன என்று அசால்ட கேக்குறீங்க. உலகம் தட்டை என்று எம்புட்டு தரவ குரான்ல இருக்கு (91:6).
    சூரியன் பூமியை சுத்துது (21:33)
    மனிதனை அல்லா மண் கட்டியிலிருந்து தயார் செய்தார். அரபு நாட்டு காரங்களின் படைப்பு என்பதை பார்த்தால், இது ஒண்டி உண்மையா இருக்கலாம்

    குரான் அறிவியல் இல்லேன்னா அறிவிலியல்

  106. //
    அப்படியா? அப்ப ஜின்கள் பற்றி குரான் ஏன் பேசுகிறது? அரபியர்களின் ஜின்கள் பற்றிய நம்பிக்கைக்கும் மற்ற கலாசாரங்களில் உள்ள பேய், பிசாசு பற்றிய நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
    //

    அரேபியாவுல ஒரு கல்லு கூட பேசி ஒரு காபிர காட்டி கொடுக்கும், அப்புறம் நமது இறை தூதரின் சிஷ்ய புள்ளைங்க அவன போட்டு தாக்குவாங்க. கல்லும் ஒரு முஸ்லிமு தான். அப்படிதானே சகோ சூபீ

  107. திரு.தாயுமானவன் அவர்களுக்கு…..

    தாங்கள் சீகன் பால்கு அவர்களை பற்றிய வரலாற்று தரவுகளை அளித்ததற்கு மிக்க நன்றி. அருமையான தகவல். படித்து முடித்ததும் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. இலண்டன் மாநகரில் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் லத்தின் மொழிக்கு இணையாக நம் தமிழை உலக அரங்கில் பதிவு செய்த உன்னத செய்தியை படித்ததில் மகிழ்ச்சி. எப்படியெல்லாம் நம் தமிழ் மொழியை பார்பனீயம் இருட்டடிப்பு செய்தது என்பதை இதை விட யாரும் தெளிவாக கூற முடியாது… நன்றி…

  108. //நீங்கள் அப்பாவி இந்துக்களை ரயிலில் எரித்து கரி கட்டையாக்குவீர்கள். அதற்கு நாங்கள் பதிலடி கொடுக்க கூடாது. அதுதானே உமது வாதம். அராஜகம் செய்ய உங்களுக்கு மட்டும் உரிமை உண்டு அதற்கு எந்தவித reaction யும் காட்ட எங்களுக்கு உரிமை ிடையாது.// அது ஒரு விபத்து என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அப்படியே அதனை எரித்திருந்தால் யார் எரித்தார்களோ அவர்களையல்லவா நீங்கள் பழி வாங்க வேண்டும். அப்பாவி முஸ்லிம்களையும் பெண்களையும் கொல்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

  109. தாயுமானவன் அவர்களே!

    தொல்காப்பியர் கூறுவது யாதெனில் –
    “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
    அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.” என்கிறார். ஆரியர் என்றால் ‘போற்றுதலுக்கு உரியவர், தலைவர்’ என்றே பொருள் என்று குறுந்தொகை, தேவாரம், கம்பராமாயணம், திருவாசகம் போன்ற தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், அரசியல் காரணங்களுக்காக, ஆரியம் என்பது ஒரு இனம் என்றும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒவ்வாத சில சிந்தனைகள் உடையது என்றம், ஒரு கருத்து பரப்பப்பட்டது. மரபணு விஞ்ஞானிகளும், இந்த வாதத்திற்கு எந்த விதமான அறிவியல் சான்றுகளும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    உண்மையில் சமஸ்க்ரிதமும் தமிழும் இந்த தேசத்தில் ஆன்மீக தரிசனங்களின் இரு கண்களாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் காணவும். பல தமிழ் சொற்கள் தனித்தன்மையுடனே பொருள் தரவல்லதாயிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் தமிழின் மீது ஊடகத் தாக்கத்தினாலும், திரைப்படங்களின் மூலமாகவும் செலுத்தப்படுவது போலன்றி தமிழுக்கும், சமஸ்க்ருதத்திற்கும் உள்ள பிணைப்பு நன்கு விளங்கும்.

    https://sanskritroots.files.wordpress.com/2013/04/sanskritwordsintamil_v3.pdf

    சமஸ்க்ருதம் ஏற்கனவே அழிந்து ஒழிந்து நைந்து போய் உள்ளது. தமிழில் உள்ள சொற்களை தூய்மைப்படுத்துகின்றேன் என்னும் வாக்கில் ஜி.யு.போப், கால்ட்வெல் போன்றவர்களை தமிழ் ஆன்றோர்களாக சித்தரிப்பது கேலிக்கூத்து. திருவனந்த புரத்தை, டிரிவேண்ட்ரம் என்றும், உதகமண்டலத்தை ஒட்டகமெண்ட் என்றும் தங்கள் விருப்பத்துக்கு உச்சரித்து மொழியின் சொற்களையே மாற்றியவர்களை பிதாமகர்களாக சித்தரிப்பது அவலத்தினும் அவலம். தமிழின் இன்றைய அவல நிலைக்கு சமஸ்க்ருததின் அழிவும் ஒரு காரணம்.

    உதாரணத்திற்கு – ஆண்மந்தி என்பதுவும் ஹனுமந்த் என்பதுவும் எடுத்துக் கொள்ளலாம். தமிழில் சதுரம் என்பது நான்கு புறமும் சமமாயிருத்தலைக் குறிப்பது என்றால் சதுர் என்னும் சமஸ்க்ருத சொல் நான்கை குறிப்பதாயுள்ளது. சதுர்தசி, சதுரங்கம் என்பதெல்லாம் சமஸ்க்ருத, தமிழ் வார்த்தைகளாக இருந்து வந்தன. இப்போது மக்கள் வசதியாக Alexander “Square” பக்கத்துல “U” turn போட்டு left cut பண்ணா கிண்டி railway station என்று பேசுகிறார்கள். இதற்குக் காரணமான மூல கர்த்தாக்களை பிதாமகர்களாக சித்தரிப்பது மடத்தனம். வெறும் 26 எழுத்துக்களை நம் மீது திணித்தவர்களுக்கு பாராட்டுப் பத்திரமா? மானமுள்ள சுத்தத் தமிழர் இவற்றை அனுமதிப்பரோ?

  110. //அது ஒரு விபத்து என்று ஒரு அறிக்கை கூறுகிறது.//

    அதே அறிக்கைதான் கலவரம் காரணம் அரசாங்கம் இல்லை என்றும் சொல்லுகின்றது. அதை பார்க்கும் போது உங்கள் கண்கள் குருடு ஆகிவிடுமோ?

  111. //
    து ஒரு விபத்து என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அப்படியே அதனை எரித்திருந்தால் யார் எரித்தார்களோ அவர்களையல்லவா நீங்கள் பழி வாங்க வேண்டும். அப்பாவி முஸ்லிம்களையும் பெண்களையும் கொல்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
    //

    இப்படி பார்த்து பார்த்தா நீங்கள் யுத்தம் செய்தீர்கள். இந்தியா பூந்து முப்பது கோடி மக்களை பினங்களாக்கின மதத்தை சேர்ந்தவர் நீங்கள் நாக் கூசாமல் பேசுகிறீர்களே.

    அது ஒரு விபத்து என்று சோனியா காந்தியும், லாலுவும் தான் சொல்வார்கள். அது ஒரு விபத்து என்று அறிக்கை வந்தால் இதுவும் ஒரு விவாத்து என்று ஒரு அறிக்கை தயார் செய்து மூடிவிடலாமே.

    இன்றைக்கும் உங்கள் மார்கத்தவர் எத்தனை எத்தனை பிஞ்சுகளை கொண்டு குவிக்கிறார்கள்,. உங்க ஆளுங்களே உங்க ஆளுங்களுக்கு வைக்கும் குண்டு கெழுடுகளை மட்டுமா கொள்கிறது. இராக் குவைத், பாகிஸ்தான், வங்காளம், ஆப்கான், ஈரான், எகிப்து, சிரியா, நைகீரியா என்று உங்கள் ஆட்கள் உள்ள இடங்கள் எல்லாம் சுடு காடாக பற்றி எரிகிறது.

    சரி நைகீர்யாவில் சின்ன சின்ன பள்ளி செல்லும் பிள்ளைகளை வைத்து என்ன செய்கிறீர்கள். கோலி விளையாடலாம், குண்டு விளையாடலாமா

  112. //
    எங்களுக்கு தர்ஹாதான் அவசியம் என்று கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தை இஸ்லாமிய சட்டங்களிலிருந்து தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் இஸ்லாத்திலிருந்து விலகி தங்களை தனி மதமாக அறிவித்துக் கொள்ளட்டும். அவ்வாறு அவர்கள் தனி மதமாக அறிவித்துக் கொண்டால் அதில் என்றுமே இஸ்லாமியர் தலையிடமாட்டார்கள்.
    //

    அப்போ என்ன சொல்ல வாறீங்க, அவுகள குண்டு வெச்சு கொல்றத ஓரடியா நிப்பாட்டிருவீ ங்களா !!! அப்போ பல பேருக்கு எம்ப்லாய்மன்ட் போயிருமே.

  113. ./////// அப்பாவி முஸ்லிம்களையும் பெண்களையும் கொல்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?/////

    அமெரிக்காவில் எவனோ முகமது பற்றி படம் எடுத்ததற்கு அவனை மட்டும் பழி வாங்காமல் இந்தியாவில் தமிழ்நாட்டில் மவுண்ட் ரோட்டில் வருவோர் போவோரின் இருசக்கர வாகனங்களை தாக்கியது எதற்கு? அவர்கள் அந்த படத்திற்கு வசனம் எழுதினார்களா? மேக் அப் போட்டார்களா? இசை அமைத்தார்களா? Direction செய்தார்களா? அல்லது அந்த படத்தை பார்க்க black மார்கெட்டில் டிக்கெட்விற்றார்களா? அவர்களை தாக்க யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது?

    ////////இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’//////

    குரான் முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதை கீழ்கண்ட உதாரணங்கள் மூலம் அறியலாம்.
    (1)நீங்கள் செஇபவற்றையெல்லாம் அல்லா “””நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்””
    (ஆதாரம் 2 :265)
    (2) நான் எந்நிலையிலும் உங்களை “””கண்காணிப்பவன் அல்லன்””” (11 : 86)
    ————————————————————————————————————————-
    (1) பூமியை “”2 நாளில்”” படைத்தான் (41 : 9-12)
    (2) பூமியை “””செவ்வாய் கிழமை”” அன்று படைத்தான்
    ———————————————————————————————————————–
    (1)சுவனத்தில் கற்பூரம் கலந்த மது அருந்துவார்கள் (76 : 5)
    (2) இஞ்சி கலந்த மது பானங்கள் வழங்கப்படும் . (76 : 76 : 20)
    ———————————————————————————————————————-
    (1) “”‘சீழ்நீரை தவிர”” அவனுக்கு (அதாவது நரகவாசிக்கு ) எந்த உணவும் இங்கு இல்லை (69:37)
    (2)முட்கள் நிறைந்த காய்ந்துபோன “””புற்பூண்டை தவிர””” அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்காது (88 : 1-16)
    ——————————————————————————————————————–
    (1) எவனுடைய வினாபட்டியல் அவன் “””முதுகுக்கு பின்னால்””” கொடுக்கப்படுமோ அவன் மரணத்தை அழைப்பான். (84 : 1-15)
    (2) தன்னுடிய “””இடது கரத்தில்””” செயலேடு கொடுக்கபடுபவர் கூறுவார்: அந்த உலகத்தில் வந்த மரணமே இறுதியாக இருக்க கூடாதா? ( 69 : 25 – 37)
    ————————————————————————————————————————-
    மீண்டும் வருவேன்

  114. ///////இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா? குர்ஆனே சவால் விடுகிறது//////
    —————————————————————————————————————————-
    1) அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாக்கினான். ( 2 : 21 -22)
    ஒரு பெட் சீட்டை விரிக்கலாம். மடிக்கபட்டுள்ள ஒரு வரை படத்தை (ப்ளூ பிரிண்ட் )விரிக்கலாம் . ஒரு பந்தை விரிக்க முடியுமா? ஒரு கோலி குண்டை விரிக்க முடியுமா? ஒரு பந்தை விரித்தால் என்னாகும்? தட்டையாகிவிடும். பூமியை விரிப்பாக்கினான் என்றால் என்ன அர்த்தம்? பூமி உருண்டை என்பதை நபி காலத்தில் கண்டுபிடிக்கபடவில்லை. அவருக்கு பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னால் பூமியை தட்டை என்றுதான் அனைவரும் கருதினர்.
    ————————————————————————————————————————-
    (2) இதயங்கள் தொண்டைகளை அடைத்துகொண்டன ( (33 : 9 -11)
    துக்கம் தொண்டையை அடைத்துகொண்டதாக கேள்விபட்டுள்ளேன். இதயம் தொண்டையை அடைத்துகொண்டதா? அரே, அல்லா!
    ————————————————————————————————————————
    (3) அவன் கிழக்கு மேற்கு திசைகளின் அதிபதி ஆனான் (73 : 1 -14)
    அப்போ வடக்கு தெற்கு திசைகளின் அதிபதி யாருங்கோ?
    ————————————————————————————————————————-
    (4) அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும் (73 : 1 – 14)
    பூமியில்தான் மலைகள் உள்ளன.பூமி தனியாக மலைகள் தனியாக நடுங்குமா?
    —————————————————————————————————————————
    (5) முதுகெலும்புக்கும் நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து (விந்து) வெளியாகிறது (86 : 1-17)
    மேற்சொன்ன 2 க்கும் இடையில்தான் testicle உள்ளதா?
    ———————————————————————————————————————–
    (6) களிமண்ணிலிருந்து மனிதனை நாம் படைத்தோம் (15 : 26)
    அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான் (18 : 4)
    இப்லிசை நீ நெருப்பினால் படைத்தாய் (38 : 69 : 85)
    உங்களை அற்பமான நீரிலிருந்து படைத்தான் (76 : 1 -3 )
    உண்மையில் எங்களை எதிலிருந்துதான் படைத்தாய்?
    ————————————————————————————————————————
    மேலும் வருவேன்

  115. /////இந்தியாவின் வந்தேறிகள் யார் என்பது 90 சதமான இந்தியர்களுக்குத் தெரியும். கி.வீரமணியிடம் கேட்டால் ஆதாரங்களோடு பட்டியலிடுவார். //

    வீரமணியை கேட்டேன். வந்தேறிகள் விவரம் பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. அல்லாவிடம் கேட்டால் அத்தனை விவரத்தையும் புட்டு புட்டு வைப்பார் என்று சொன்னார். அவரை எப்படி தொடர்பு கொள்வது என்றேன். “786” என்ற நம்பரை கொடுத்து அவரை hotline மூலம் contact செய்து கேட்டு தெரிந்து கொள் என்றார்.

    முகமது கோரி இந்திய மண்ணில் பிறந்தானா? கஜினி முகமது இந்திய மண்ணில் பிறந்தானா? இவர்கள் எல்லாம் வந்தேறிகளா? அல்லது மரமேறிகளா? [edited]

  116. “””””எவர்கள் தம்மீது கொடுமை இழைக்கப்பட்டபின் பழி வாங்குகிறார்களோ அவர்கள் மீது ஆட்சேபனை கூறமுடியாது””” (ஆதாரம் 42 : 36 – 43)

    குஜராத் கலவரத்தில் 56 பேரை சாகடித்தவர்களை பழி வாங்கியவர்கள் மீது ஆட்சேபனை கூறக்கூடாது என்று அல்லாவே கூறிவிட்டார், அப்புறம் என்ன?

    கரசேவகர்களை கொன்ற 11 முஸ்லிம்களுக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி ஸ்பெஷல் ஜட்ஜ் பி.ஆர்.படேல் தீர்ப்பளித்தார். விஷயம் இப்படியிருக்க அது ஒரு விபத்து என்று ஊரை ஏமாற்ற பார்க்கிறார்கள். அந்த கோத்ரா ரயில் நிலையத்தை சுற்றி வசிப்பவர்கள் முஸ்லிம்கள். அந்த ஊரே முஸ்லிம்கள் பெரும்பான்மையான பகுதியாகும். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

  117. சர்வ கிருபையும் பொருந்திய தீர்க்க தரிசி ஸல் சொல்கிறார் செத்தவன் புதைத்த குழியிலேயே கிடப்பான். அப்புறம் judgement day வரும் அன்னிக்கு இஸ்ரபில் சங்க எடுத்து கொய்ய்யுன்னு ஊதுவார். அவா ஊத, புதைந்திருந்தவன் அப்படியே உடம்போட கெளம்பிருவான் . அவுகல சல்லின் பரிந்துரை படி அல்லா நரகத்திலேயோ (காபிர் என்றால்) சொர்கத்திலே (முஸ்லிமு என்றால்) சேர்ப்பார்.

    1) எலிய பொதச்சா அதுவும் சங்கோட சவுண்டு கேட்டு கிளம்புமா
    2) ஒரு முஸ்லிம பொதைக்கவெ இல்லைன்னு வெச்சுகிருவொம் அவன் கதி என்ன

  118. Dear friends, We are wasting unnecessarily in reading the replies which takes a lot of time.
    The real enjoyment is here. The cat is not ” the full grown up tiger” is out of the bag…
    I hope almost all will put their entire time in watching these videos and few more extra “High lights”
    the Bible as well as Kuron which hitherto unheard and unread so far. Listening is very easy and the entire readers of this site will pour more replies after listening the video episodes.

    I started viewing and listening the videos just a few days back only.
    I felt that I was wasting a lot of time in reading and replying to many a rubbish writings,arguements,etc. so far. Though watching and listening these videos is equally waste of time, we at least come to know , what all inside in Bible and Kuron !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    Watch and listen and have your views. https://www.youtube.com/watch?v=H8bWCpdt2I8
    Will Thayumanavan,Rebekka Mary,Adiyavan reply to this video?
    For reasons, I omit Mr.Suvanappiriyan!!!!!!!!!!!!!
    https://www.youtube.com/watch?v=H8bWCpdt2I8

  119. உயர்திரு Honest man அவர்களே,

    ஒருவர் சொல்லும் கருத்துக்கு, எதிருக்கருத்து வழங்க முற்படுவது நமது உரிமை. நீங்கள் எழுதும் பல கருத்துக்களையும், எதிர்க்கருத்துக்களையும் நான் இரசித்திருக்கிறேன்.

    //வீரமணியை கேட்டேன். வந்தேறிகள் விவரம் பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. அல்லாவிடம் கேட்டால் அத்தனை விவரத்தையும் புட்டு புட்டு வைப்பார் என்று சொன்னார். அவரை எப்படி தொடர்பு கொள்வது என்றேன். “786″ என்ற நம்பரை கொடுத்து அவரை hotline மூலம் contact செய்து கேட்டு தெரிந்து கொள் என்றார்.//

    தங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். வீரமணியை நீங்கள் எள்ளி நகையாடலாம், ஜனாப் சுவனப்பிரரியனைக்கூட எள்ளி நகையாடலாம். அவர் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், ஜனாப் வணங்கும் இறைவனை எள்ளி நகையாடாதீர்கள். இந்துக்களாகிய நாம், மனிதர்களையே தரக்குறைவாகப் பேசக்கூடாது, அது பாவம் என்கிறோம். இந்து சமயக் கொள்கைப்படி இறைவனை, எந்த சமயத்து இறைவனாக இருந்தாலும்சரி, மாறாகப் பேசுவது மகா பாவம் ஆகும்.

    உங்களது மூத்த உடன்பிறப்பாக வேண்டிக்கொள்கிறேன். இதை நாம் தவிர்ப்போமாக!

    வணக்கம்!

  120. ஹானஸ்ட் மேன்

    //முகமது கோரி இந்திய மண்ணில் பிறந்தானா? கஜினி முகமது இந்திய மண்ணில் பிறந்தானா? இவர்கள் எல்லாம் வந்தேறிகளா? அல்லது மரமேறிகளா? [edited]//

    உங்களை பொறுத்த வரையில் அகண்ட இந்துஸ்தானம் தானே உங்களின் கனவு. அதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்திய பகுதிகள் இவை அனைத்தும் சேர்ந்ததுதானே நீங்கள் குறிப்பிடும் அல்லது இந்துத்வா குறிப்பிடும் அகண்ட ஹிந்துஸ்தானம். ராமாயணத்தின் பல பகுதிகள் இன்று ஆப்கானிஸ்தானத்தில் அல்லவா இருக்கிறது. அதன்படி கோரி முஹம்மதும், கஜினி முஹம்மதும் உங்கள் பார்வையில் அகண்ட இந்துஸ்தானத்துக்குள் வருகிறார்கள். மேலும் இந்திய ராஜ புத்திர பெண்களை மணந்து கொண்டு நமது பாரத மண்ணிலேயே தங்கள் உடலையும் புதைக்க சம்மதித்தார்கள். இவ்வாறு இந்த நாட்டு ரத்தத்தில் கலந்து விட்ட அவர்களை அந்நியர்கள் என்று மற்ற யாரும் சொல்லலாம் நீங்கள் சொல்லலாமா? ராம பிரான் கோபித்துக் கொள்ள மாட்டாரா?

    நீங்கள் அதிகம் வெறுத்து ஒதுக்கும் ஒளரங்கஜேப்பின் வரலாறை பார்ப்போம்.

    இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

    முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

    “Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
    Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

    ********************************************

    இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

    முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

    ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

    குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
    1998, page 461.

    “Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

    Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

    ************************************

    ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

    இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

    நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

    ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

    பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
    page 545.

    ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர் ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல் என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.

    ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
    1942, Page 170, Chennai.

    இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம் வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?

    இப்பொழுது சொல்லுங்கள். முகலாய மன்னர்கள் வந்தேறிகளா?

  121. ஹானஸ்ட் மேன்!

    //1) அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாக்கினான். ( 2 : 21 -22)
    ஒரு பெட் சீட்டை விரிக்கலாம். மடிக்கபட்டுள்ள ஒரு வரை படத்தை (ப்ளூ பிரிண்ட் )விரிக்கலாம் . ஒரு பந்தை விரிக்க முடியுமா? ஒரு கோலி குண்டை விரிக்க முடியுமா? ஒரு பந்தை விரித்தால் என்னாகும்? தட்டையாகிவிடும். பூமியை விரிப்பாக்கினான் என்றால் என்ன அர்த்தம்? பூமி உருண்டை என்பதை நபி காலத்தில் கண்டுபிடிக்கபடவில்லை. அவருக்கு பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னால் பூமியை தட்டை என்றுதான் அனைவரும் கருதினர்.//

    உங்கள் கேள்விக்கு பதில் மிக விரிவாக கொடுக்க வேண்டும். நான் கொடுக்கும் லிங்கில் சென்று விரிவாக பார்த்துக் கொள்ளுங்கள். அதன் கீழே வரும் பின்னூட்டங்களிலும் மேலும் விபரம் இருக்கிறது.

    https://suvanappiriyan.blogspot.com/2012/03/blog-post_13.html

    //(2) இதயங்கள் தொண்டைகளை அடைத்துகொண்டன ( (33 : 9 -11)
    துக்கம் தொண்டையை அடைத்துகொண்டதாக கேள்விபட்டுள்ளேன். இதயம் தொண்டையை அடைத்துகொண்டதா? அரே, அல்லா!//

    இந்த வசனம் போர்க்கள காட்சியை விவரிக்கிறது. திடீரென உங்களை ஒரு பயம் ஆட்கொண்டால் உடல் முழுக்க ஒரு சிலிர்ப்பை உணர்வீர்கள். பயம், துக்கம், அன்பு போன்ற உணர்வுகளின் பிறப்பிடம் நமது இதயம் தானே! அவ்வாறு இது போன்ற உணர்வுகள் அளவுக்கதிகமாக ஆகும் போது தொண்டைக் குழிகளை அடைக்கும். பலர் உடனே அந்த நேரத்தில் தண்ணீரை தேடுவதும் அதனால்தான். நீங்கள் நிகழ்வைச் சொல்கிறீர்கள். குர்ஆன் அந்த நிகழ்வின் மூலத்தை சொல்கிறது.

    //(3) அவன் கிழக்கு மேற்கு திசைகளின் அதிபதி ஆனான் (73 : 1 -14)
    அப்போ வடக்கு தெற்கு திசைகளின் அதிபதி யாருங்கோ?//

    திசைகள் சூரியனின் உதயத்தைக் கொண்டுதான் நமது வசதிக்காகக் கணிக்கப்படுகிறது. ஒருவருக்கு சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. அதே நேரத்தில் அந்த சூரியன் மறையும் திசை மேற்கு. பூமி சுழலும் போது பூமியின் அனைத்து பாகமும் இந்த வரையறைக்குள் வந்து விடும். வடக்கு தெற்கு என்பது அளவைகளுக்காக நாமாக வைத்துக் கொண்டது.

    மேலும் ஒரு மெகா சைஸ் உலக உருண்டையில் பல இடங்களிலும் பலரையும் நிற்க வைத்து ‘கிழக்கு எது? மேற்கு எது?’ என்று கேளுங்கள். பல திசைகளைக் காட்டுவார்கள். ஏனெனில் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் இடங்கள் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது சம்பந்தமாக வந்த வேறு சில வசனங்கள்.

    37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்!

    55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
    ‘கிழக்குகளுக்கும் மேற்குகளுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையாக!’
    -70:40
    இந்த வசனங்களில் இறைவன் திசைகளை பன்மையில் கூறியிருப்பதையும் கவனியுங்கள்.

    //(4) அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும் (73 : 1 – 14)
    பூமியில்தான் மலைகள் உள்ளன.பூமி தனியாக மலைகள் தனியாக நடுங்குமா?//

    அந்த மலைகளை பூமி முழுக்க நிறுவியதே அந்த பூமியின் கீழடுக்குகளும் மேலடுக்குகளும் நகர்ந்து விடாமல் இருப்பதற்காகவே! அந்த நாளில் முளைகளாக நாட்டப்பட்ட அந்த மகைளும் மண் குவியல்களாக மாறும். பூமியின் மற்ற பாகங்களும் ஆட்டம் காணும். நிலப்பரப்பு நகர்ந்து விடாமல் இருக்க முக்கிய காரணமே மலைகள் தான் என்கிறது அறிவியல்.

    //(5) முதுகெலும்புக்கும் நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து (விந்து) வெளியாகிறது (86 : 1-17)
    மேற்சொன்ன 2 க்கும் இடையில்தான் testicle உள்ளதா?//

    //(6) களிமண்ணிலிருந்து மனிதனை நாம் படைத்தோம் (15 : 26)
    அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான் (18 : 4)
    இப்லிசை நீ நெருப்பினால் படைத்தாய் (38 : 69 : 85)
    உங்களை அற்பமான நீரிலிருந்து படைத்தான் (76 : 1 -3 )
    உண்மையில் எங்களை எதிலிருந்துதான் படைத்தாய்?//

    இரண்டு கேள்விகளுக்கும் பதில் எனது இந்த பதிவில்.

    https://suvanappiriyan.blogspot.com/2013/04/blog-post_25.html

  122. அகண்ட பாரதத்தை பற்றி பேசும் அருமை நண்பா! பிராமணர்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சாகும்போது வேறு நாட்டிலா புதைக்கப் படுகிறார்கள்? அவனை வந்தேறி என்று கருதி உமது ஒரு மறுமொழியில் “வந்தேறிகள் யார்” என்று வீரமணியிடம் பொய் கேள் என்று எழுதிநீரே! அப்போது இந்த பரந்த மனப்பான்மை எங்கே போனது. அந்த வீரமணி சென்னையில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் “பிராமணர்களே! தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்”” என்று வீர முழக்கமிட்டபோது உங்களை போன்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தீர்களே!

    நீங்கள் புகழாரம் சூட்டி புளகாங்கிதம் அடையும் அத்தனை அரசர்களும் இந்து பெண்களை மணந்து முஸ்லிம் புதல்வர்களை பெற்று விட்டு சென்றுவிட்டார்கள். அந்த பெண்கள் (நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல) வர்ணாசிரம் மற்றும் சாதிவெறிக்கு பயந்துதான் மதம் மாறினார்களா? (ராணி ஷாபாய் என்பவர் மரியம் உஸ்மாநியாக மாறியது போல) மதமாற்றத்திற்கு அதுதான் காரணம் என்று சதா சர்வகாலமும் இங்கே எழுதிகொண்டிருப்பது ஏன்?

    இந்து பெண்களை மணந்து இந்து ஜனத்தொகையை குறைத்து முஸ்லிம் ஜனத்தொகையை அதிகரித்தது தவிர வேறென்ன நடந்துவிட்டது? நம் தாய் பிறப்பினால் ஒரு இந்து என்று கூட நினைக்காமல் இந்துக்களுக்கு ஜசியா வரியை விதிக்க வில்லையா? தமிழ்நாட்டில் ஹிந்து தலைவர்கள் வரிசையாக (1 அல்லது 2 cases தனிப்பட்ட காரணங்களுக்காக கொள்ளபட்டிருக்கலாம் அதை விடுங்கள்) கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதே ஆனால் முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதா? அப்படியானால் யார் அராஜகவாதிகள்?
    இங்கே கொல்லப்படும் இந்து ஒரு காலத்தில் உமது பாட்டன் பாட்டியின் பேரனாக இருக்கலாம். நபி அவர்களுக்காக அவனை கொல்லும் முஸ்லிம்களுக்கு நபி அவர்கள் என்ன உறவு? கொள்ளு தாத்தாவா? எள்ளு தாத்தாவா?

  123. //
    அந்த மலைகளை பூமி முழுக்க நிறுவியதே அந்த பூமியின் கீழடுக்குகளும் மேலடுக்குகளும் நகர்ந்து விடாமல் இருப்பதற்காகவே!
    //

    அல்லா பாத்து மலைகளை நட்டு வைத்தார் தானே. அப்போ மலைகள் இல்லதா காலத்தில் பூமி என்னவாயிற்று. மலைகள் தானே உருவானவை என்று தான் அறிவியல் கூறுகிறது.

    //
    55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
    ‘கிழக்குகளுக்கும் மேற்குகளுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையாக!’
    -70:40
    இந்த வசனங்களில் இறைவன் திசைகளை பன்மையில் கூறியிருப்பதையும் கவனியுங்கள்.
    //

    அப்போ அல்லாவுக்கு இலக்கணமும் தெரியாதா. ரெண்டு கீழ் திசை, இரண்டு மேல் திசை எப்படி. அது சரி திசைகள் எத்தனை. பன்மையில் இருப்பதால் கேட்கிறேன்

    //
    மேலும் ஒரு மெகா சைஸ் உலக உருண்டையில் பல இடங்களிலும் பலரையும் நிற்க வைத்து ‘கிழக்கு எது? மேற்கு எது?’ என்று கேளுங்கள். பல திசைகளைக் காட்டுவார்கள். ஏனெனில் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் இடங்கள் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது சம்பந்தமாக வந்த வேறு சில வசனங்கள்.
    //
    அப்படி நின்று கொண்டு கிழக்கு மேற்கு ஒன்னும் புரியாமல் தான் ஸல் அவர்கள் கதைகளை கட்டினார்.

    இத்தோடவா நிக்குது குரான். பூமி தட்டை என்று எத்தனை எத்தனை இடங்களில் வருகிறது.

    சரி அல்லா எப்படி மனிதனை உண்டு பண்ணினார் என்பதற்கு பதில் தரவேண்டுகிறேன்

  124. அவுரங்கசீப் ஒரு கடைந்தெடுத்த கயவன். துரோகி, தொடை நடுங்கி அவனுக்கு பொய் வரிந்து கட்டுகிறீர்கள்.

    அவுரங்கசீப் சிவாஜியை கொல்ல, தோற்கடிக்க எத்தனை எத்தனை முயற்சிகள் செய்து மண்ணை கவ்வினான். அவன் உங்களுக்கு பாரதீயனா.

  125. நிலா எங்கிருந்து உதிப்பதாக அல்லா சொல்கிறார். அல்லாவின் மூக்கிலிருந்து தானே. பகல்ல ஓடோடி பொய் அல்லாவோட மூக்குல ஒக்காந்துகுவான், ராத்ரி ஓடோடி வந்து நமக்கு தரிசனம் தரும் இல்ல. இதுக்கும் வெளக்கம் வெச்சிருபீகளே. வைரமுத்து வாலி கணக்கா ஸல் அவர்கள் கவிதையா எழுதி வெச்சிருக்காரு.

    நெஞ்சு தொண்டைய அடிப்பதாக வைரமுத்து எழுதி வைக்கலாம். அல்லா இப்படி இறக்கலாமா. குரான் முழுக்க உண்மை உண்மை உண்மை அல்லவா.

  126. நபி அவர்களால் கூறப்படும் அல்லா என்ற கடவுள் எங்கும் இல்லை. அவர் இவருக்கு கேப்ரியல் மூலம் 23 ஆண்டுகளாக இறக்கப்பட்டதாக கூறப்படும் “வஹி”யும் பொய். இவருக்கு முதல் முதலாக வஹி வந்ததாக சொல்லப்படும் நாளுக்கு முன் ஒரு மலை குகைக்குள் அடிக்கடி சென்று வந்தார். அப்போது நிறையவே யோசித்திருக்கிறார். நாமே இப்படிஇப்படி வாழவேண்டும் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கருதி அவற்றை எனக்கு வஹி மூலம் அல்லா சொன்னார் என்று அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு (இவர் மனதிற்கு எது நியாயம் தோன்றியதோ அதை தீர்வாக நினைத்து ) அல்லா இவ்வாறு பதில் கூறியுள்ளார் என்று தனது கருத்தை கூறி அல்லா (என்ற இல்லாத ஒரு கடவுள்) மீது பழியை போட்டு விட்டார். அப்படித்தான் ஒரு பெண் இவரை அணுகி சொத்து பகிர்வு குறித்து விளக்கம் கேட்டபோது இவர் “எனக்கு இன்னும் அல்லாவிடமிருந்து வஹி வரவில்லை” என்றார். அன்று இரவு நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்து இருப்பார். அடுத்த நாளே இவருக்கு “வஹி” வந்துவிட்டதாக நாடகம் ஆடி “அல்லா இப்படி இப்படி சொத்து பிரிவினை குறித்து சொல்லியுள்ளார்” என்று நேற்று இரவு சிந்தித்து முடிவு செய்தவைகளை சொல்லிவிட்டார்.
    (மீண்டும் வருவேன் இன்னும் நிறய இருக்கிறது)

  127. ஹானஸ்ட் மேன்!

    //அகண்ட பாரதத்தை பற்றி பேசும் அருமை நண்பா! பிராமணர்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சாகும்போது வேறு நாட்டிலா புதைக்கப் படுகிறார்கள்? அவனை வந்தேறி என்று கருதி உமது ஒரு மறுமொழியில் “வந்தேறிகள் யார்” என்று வீரமணியிடம் பொய் கேள் என்று எழுதிநீரே! அப்போது இந்த பரந்த மனப்பான்மை எங்கே போனது. அந்த வீரமணி சென்னையில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் “பிராமணர்களே! தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்”” என்று வீர முழக்கமிட்டபோது உங்களை போன்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தீர்களே!//

    அதற்கு காரணம் பார்பனர்களே! இந்த மண்ணின் மைந்தர்களோடு திருமண உறவு வைத்துக் கொண்டு சந்ததிகளை உருவாக்கியிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது. வீரமணியும், பெரியாரும் வேறு வேலைகளை பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள். அக்ரஹாரம் என்ற தனி குடியிருப்புகளை நாடு தோறும் உருவாக்கிக் கொண்டு உழைக்கும் மக்களை வீட்டுக்குள்ளும் ஏற்ற மாட்டீர்கள். உட்கார்ந்த இடத்தை தண்ணீர் விட்டு கழுவி தோஷத்தை நீக்குவீர்கள். நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே இந்த சம்பவம் நடந்துள்ளது. எனது வீட்டில் சுமதி என்ற இந்து பெண் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். தனது சொந்த வீட்டைப் போல் உரிமையோடு அனைத்து இடங்களுக்கும் வருவார். இந்த உரிமையை ஒரு பார்பனர் வீட்டில் அந்த பெண் பெற்று விட முடியுமா?

    வரன் தேடும் பக்கங்களை பார்வையிடுங்கள். பிராமிண் ஐயர் என்று போட்டு வடமா என்ற உட்பிரிவையும் குறிக்கத் தயங்குவதில்லை. பிராமிண் ஐயர் என்று போட்டு விட்டு பிரஹாசரணம் என்ற உட்பிரிவையும் மறக்காமல் குறிப்பிடுகிறீர்கள். மற்ற சாதிகளும் அப்படித்தான். விஸ்வகர்மா, இசை வேளாளர், மறவர் என்று 1000க்கு மேற்பட்ட சாதிகளை முதலில் குறிப்பிடுகின்றனர். எனவே பார்பன எதிர்ப்பு தமிழகத்தில் ஒழிய ஒரே வழி அவர்கள் விரும்பி பிற்படுத்தப்பட்ட சாதியில் சம்பந்தம் வைத்து இந்த நாட்டு ரத்தத்தோடு கலக்க வேண்டும். அவ்வாறு செய்வார்களேயானால் ‘வந்தேறிகள்’ என்று வீரமணி சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.

    //நீங்கள் புகழாரம் சூட்டி புளகாங்கிதம் அடையும் அத்தனை அரசர்களும் இந்து பெண்களை மணந்து முஸ்லிம் புதல்வர்களை பெற்று விட்டு சென்றுவிட்டார்கள். அந்த பெண்கள் (நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல) வர்ணாசிரம் மற்றும் சாதிவெறிக்கு பயந்துதான் மதம் மாறினார்களா? (ராணி ஷாபாய் என்பவர் மரியம் உஸ்மாநியாக மாறியது போல) மதமாற்றத்திற்கு அதுதான் காரணம் என்று சதா சர்வகாலமும் இங்கே எழுதிகொண்டிருப்பது ஏன்?//

    குறிப்பிட்ட ஒரு சிலர் மன்னனின் விருப்பத்திற்காக மேலும் மகாராணி ஆகி விடும் ஆசையில் மாறியிருக்கலாம். மேலும் அந்த மன்னர்கள் அந்த பெண்களை வைப்பாட்டிகளாக வைக்காமல் தனது மனைவியாக்கிக் கொண்டு சம உரிமையை கொடுத்தார்கள். ஆனால் எங்கள் ஊர் ராஜராஜனின் வைப்பாட்டிகள் தங்கியிருந்த ஒரு தெருவே தஞ்சையில் இன்றும் சான்று பகன்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை தலைமுறை கடந்தும் அந்த குடும்பங்களின் இழிநிலை போன பாடில்லை. இதுதான் வித்தியாசம்.

    ஆனால் அடித்தட்டு மக்கள் மாறக் காரணம் வர்ணாசிரமக் கோட்பாடே. மிரட்டி மதம் மாறியிருந்தால் இந்துத்வ ஆட்சி நடக்கும் இந்த காலத்தில் ஏன் தாய் மதம் திரும்புவதில்லை என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

    //இந்து பெண்களை மணந்து இந்து ஜனத்தொகையை குறைத்து முஸ்லிம் ஜனத்தொகையை அதிகரித்தது தவிர வேறென்ன நடந்துவிட்டது? நம் தாய் பிறப்பினால் ஒரு இந்து என்று கூட நினைக்காமல் இந்துக்களுக்கு ஜசியா வரியை விதிக்க வில்லையா?//

    இந்த திருமணங்களால் சாதி வெறி இந்துக்களிடம் குறைய ஆரம்பித்தது. ஒளரங்கஜேப் சாதி ஒழிப்பிற்கு பல திட்டங்களையும் தீட்டினார். இந்து ரத்தம் தனது உடலில் கலந்ததனால் எழுந்த பாசமாகக் கூட இருக்கலாம்.
    //ஜசியா வரி//
    இதனை எத்தனை முறை விளக்குவது. அதைவிட அதிகமாக ஜகாத் என்ற ஒரு பெரும் தொகையை முஸ்லிம்கள் அரசு கசானாவுக்கு மாதா மாதம் அனுப்பி வந்தனரே. முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தி விட்டு இந்துக்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருந்தால் அது நியாயமாகுமா?

    //கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதே ஆனால் முஸ்லிம் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறதா? அப்படியானால் யார் அராஜகவாதிகள்?//

    பழனி பாபா கொல்லப்படவில்லையா? நமது தேசத் தந்தை காந்தியை கொன்றது யார்? எதற்காக இந்த கொலை?

    //இங்கே கொல்லப்படும் இந்து ஒரு காலத்தில் உமது பாட்டன் பாட்டியின் பேரனாக இருக்கலாம். நபி அவர்களுக்காக அவனை கொல்லும் முஸ்லிம்களுக்கு நபி அவர்கள் என்ன உறவு? கொள்ளு தாத்தாவா? எள்ளு தாத்தாவா?//

    சட்டத்தை மதிக்காமல் ஒரு இந்துவை ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு முஸ்லிமை ஒரு இந்துவோ கொல்வதை நான் பார்த்தால் அதனை முதலில் தடுப்பேன். என்னால் தடுக்க முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் காவல் துறையில் புகார் செய்து நீதி மன்றத்தில் அந்த கொலையாளிகளை காட்டியும் கொடுப்பேன். இஸ்லாம் காரணமின்றி அப்பாவிகளை கொல்வதை வன்மையாக கண்டிக்கிறது.

  128. கேப்ரியல் இடமிருந்து வந்ததாக கூறப்படும் வசனங்களை தனது illiterate disciples க்கு ஒப்புவிப்பார். அவர்கள் அவற்றை மனப்பாடம் செய்திடுவர். சில நேரத்தில் தோலில் எழுதி வைப்பார்கள். இப்படியாக 23 ஆண்டுகளாக மனப்பாடம் செய்யப்பட்டவற்றை ஒன்று சேர்த்து புத்தக வடிவில் வந்தன(அதுவும் நபி அவர்கள் இறந்தபின்னர்தான்). மனப்பாடம் செய்தவற்றில் எதுவும் மறந்து விடுபடவில்லை என்பதற்கு என்ன guarantee ? குர்ஆனில் இலக்கண தவறுகள் எக்கசக்கம். உதாரணத்திற்கு:— 16-66 வசனத்தில் butunihi என்ற வார்த்தை bellies க்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் 23-21 வசனத்தில் butuniha என்று bellies க்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வசனம் 569ல் sabiyoon என்றும் வசனம் 22-17 ல் sabyeen என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் சொன்ன வார்த்தை தவறாகும். பின்னர் சொன்ன sabyeen என்ற வார்த்தையே சரியாகும். முஸ்லிம்கள் இந்த தவறுகளை சுட்டி காட்டப்பட்டபோது Caliph Uthman “”இதெல்லாம் minor mistakes என்று சொல்லிவிட்டார்.

    பல சந்தர்பங்களில் எழுதுபவர் (=scribe ) வசனங்களின் கடைசி வார்த்தைகளை நபி அவர்களின் சம்மதத்தோடு மாற்றியிருக்கின்றார். உதாரணத்திற்கு:— நபி ஒருமுறை ” God is mighty and wise ” என்று சொன்னபோது Abdullah Abi Sarh “knowing & wise ” என்று எழுதலாமா என்று ஆலோசனை சொன்னபோது நபி “ஆட்சேபனை இல்லை” என்று பதிலளித்தார். இப்படி பல யோசனைகள் பேரில் பல மாற்றங்கள் செய்தபோது வெறுப்படைந்து Abdullah இஸ்லாம் மதத்தை துறந்தார். பிறகு மெக்கா சென்று Qurayshites உடன் சேர்ந்துகொண்டார். முகமதுவும் அவரது ஆட்களும் குறேஷியர்களுடன் போரிட்ட நேரிட்டபோது முகமது அப்துல்லாஹவை தானே கொன்றார். ஆனால் முஸ்லிம்கள் “எந்த விதத்திலும் மாற்றம் செய்யப்படாத அல்லாவின் வார்த்தைகள் குர்ஆனில் அப்படியே இடம்பெற்றதுள்ளது” என்று விவரம் தெரியாமல் வாதிடுகின்றனர்.

  129. //
    குறிப்பிட்ட ஒரு சிலர் மன்னனின் விருப்பத்திற்காக மேலும் மகாராணி ஆகி விடும் ஆசையில் மாறியிருக்கலாம். மேலும் அந்த மன்னர்கள் அந்த பெண்களை வைப்பாட்டிகளாக வைக்காமல் தனது மனைவியாக்கிக் கொண்டு சம உரிமையை கொடுத்தார்கள். ஆனால் எங்கள் ஊர் ராஜராஜனின் வைப்பாட்டிகள் தங்கியிருந்த ஒரு தெருவே தஞ்சையில் இன்றும் சான்று பகன்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை தலைமுறை கடந்தும் அந்த குடும்பங்களின் இழிநிலை போன பாடில்லை. இதுதான் வித்தியாசம்.
    //

    இதற்க்கு முன்னோடி ஸல்வர்களே.

    மகாராணி ஆசையில் மாறினார்களாம். நா கூசாமல் பேசுவதென்றால் இது தான். துருக்கிய மன்னன் படை எடுத்ஹு வருவதை அறிந்து ஆயிரம் ஆயிரம் பெண்கள் உயிருடன் அக்னி புகுந்த நாடு இது.
    மனைவியாக வைத்திருந்தார்களாம். போகும் இடமெலாம் பார்க்கும் பென்னஎல்லாம் மான பங்க படுத்தி வருபவனுக்கு பொண்டாட்டியும் அவசியமோ. இன்றைக்கு சவுதி காரர்கள் எதற்கு பக்கத்து நாட்டுக்கு வார கடைச்யில் செல்கிறார்கள் சார்.

    காயல் பட்டினத்தில் ஒரு முசுலிமு அக்ராஹர்ரம் இருக்கே சார். அங்க யாராவது போக முடியுமா. மேல் விஷாரம், கீழ் விசாரம், அங்க தெகிரியமா ஒரு ஹிந்து வீடு வாங்க முடியுமா.

    உங்கள் சவுதியில் ஜாதிகென்ன குறைச்சல், சந்தி சிரிக்கிது. பிராம்மண வீட்டில் எல்லோரையும் அடுப்பங்கரைக்கு அழைக்க மாட்டார்கள் அவ்வளவு தான். நீங்க ஒரு சுபி முஸ்லிமோ, அஹமதீயனோ தென் பட்டால் குண்டு வெச்சு காலி பண்றீங்க. வெக்கமில்லாமல் பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.

    //
    ஆனால் அடித்தட்டு மக்கள் மாறக் காரணம் வர்ணாசிரமக் கோட்பாடே. மிரட்டி மதம் மாறியிருந்தால் இந்துத்வ ஆட்சி நடக்கும் இந்த காலத்தில் ஏன் தாய் மதம் திரும்புவதில்லை என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன
    //
    சார் தாய் மதம் மாறுவது இன்னும் நடந்துகிட்டு தான் இருக்கு. மாற ஒருத்தன் நினைச்சாலே வெட்டிருவீங்களே அந்த பயம் தான். உங்கள் மதத்தை விட்டு லட்சம் லட்சமாக உலகளாவிய அளவில் வெளியேறுவது ஏன்.

    உங்க ஆளுங்க எப்படி மதம் மாத்துராங்கன்னு ஒரு நாலு வருஷம் நான் கிட்ட இருந்து பாத்திருக்கேன். வருணாஸ்ரமத்தை வெறுத்தா மாறுகிறார்கள். சும்மா விடாதீங்க சார்.

    சீர்காழி டு வைதீஸ்வரன் கோவில் உம்மவர்கள் மானபங்கபடுத்திய ஒரு முழு கிராமமே அந்த அடையாளங்களை தாங்கிக் கொண்டு இன்றும் கீழ் நிலயில் இருக்கிறது.

    உங்களிடம் இருக்கு கவர்ச்சியான விஷயங்கள்
    1) ஒருவன் நாலு பொண்டாட்டி வெச்சுக்கலாம். எத்தனை வேண்டுமானாலும் பெண்களை கூட வெச்சுகிலாம்
    2) என்ன ரௌடி தனம் வேண்டுமானாலும் பண்ணலாம். அல்லா சொர்க்கம் தருவாரு அங்க ஊத்தி கொடுப்பாரு
    3) ஓசி பிரியாணி

    இன்னும் ஒன்று யோசித்தீர்களா. இரான் நாறு வெறும் ஐம்பது வருடத்தில் முழுதும் இலாமிய மாயம். மலேசிய, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் எல்லாம் சடக்கென மடிந்தன.

    ஆயிரத்தி முன்னூறு வருசமாக ரௌடித்தனம், வன் புணர்ச்சி, கொலை கொள்ளை செய்து பார்த்துள்ளீர்கள், முப்பது கோடி ஹிந்துக்களை கொன்று குவித்துலீர்கள் இன்னும் பாரதம் உங்களுக்கு மடியவில்லை, மடியப் போவதும் இல்லை.

    //
    பழனி பாபா கொல்லப்படவில்லையா? நமது தேசத் தந்தை காந்தியை கொன்றது யார்? எதற்காக இந்த கொலை?
    //
    ஒரே ஒரு ஆளை மட்டும் தான் உங்களால காட்ட முடிஞ்சிருக்கு. அவன் எவ்வளோ பேர கொன்னிருக்கான். பழனி பாபா உத்தமன் போல பேசறீங்க.பழனி பாபா மூஞ்சியை பாருங்கள் அப்படியே ஞான ஒழி தெரிகிறது.
    நீங்க கொன்னதெல்லாம் நல்லவர்களை. வண்டு முருகன், அட்டாக் பாண்டி செத்த கணக்கா நாங்க செத்த கணக்குல சேர்கிறோம். உங்களுக்கு வெக்கமே இல்லையா?

    மேலும், ஒரு கர்பிணி பெண் வயித்தை கிழித்து குழந்தையை தூக்கி எறிந்ததாக புளுகு விடுகிறீர்கள். அதை விசாரித்த நீதிபதி, அறிவியல் பூர்வமாக நிருபித்துள்ளது என்னவென்றால், அந்த பெண்ணின் கர்ப்பம் சிதயகூடவில்லை அவள் நெருப்பு காயங்களால் இறந்துள்ளால் என்று.

    //
    இந்த திருமணங்களால் சாதி வெறி இந்துக்களிடம் குறைய ஆரம்பித்தது. ஒளரங்கஜேப் சாதி ஒழிப்பிற்கு பல திட்டங்களையும் தீட்டினார். இந்து ரத்தம் தனது உடலில் கலந்ததனால் எழுந்த பாசமாகக் கூட இருக்கலாம்.
    //

    ஐயோ சாமி. நிப்பாட்டுங்கப்பா. ஆவுரங்கசீப் ஒரு கேவலமான மிருகம். அவன் உடலில் ஓடுவது விஷ ரத்தம் தான். அவன் செய்த அட்டூழியங்கள் இன்றைக்கு நிறைய கிடைக்கின்றன. சிவாஜியை ஒழிக்க அவனது அல்ப முயற்சிகளை படித்தால் மட்டும் போதும்.

  130. ////////////////என்னத்த சொல்ல அவர் ஒரு பெயர் தாங்கி முஸ்லிம். இஸ்லாமிய அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீன் தனக்கு யாரும் செய்வினை வைத்தால் 50 லட்ச ரூபாய் பரிசாக தருவதாக சொல்லியுள்ளார். இஸ்லாமிய பார்வையில் பேய், பிசாசு, பில்லி சூன்யம் என்பதெல்லாம் சுத்த கப்ஸா. நடைமுறையில் சாத்தியமே இல்லாதது என்பதற்காகவே இந்த அறிவிப்பு. நீங்கள் முயற்சித்து பரிசை தட்டிச் செல்லலாமே!//////

    உங்களுக்கு விரோதமா நடந்தால் உடனே அவர் ஒரு “”பெயர் தாங்கி முஸ்லிம்” என்று சொல்லிவிடுவது வாடிக்கை. இதை கேட்டு கேட்டு வெறுப்பாகிவிட்டது.

    கிறிஸ்தவர்கள் “நற்செய்தி” என்ற பெயரில் பொதுமேடைகளில் பேயை பிசாசை ஒட்டுகிறேன் என்று கூறிக்கொண்டு நாடகமாடுகிறார்கள்.(சில நேரங்களில் அதை அவர்களது டிவி களில் கூட காண்பிக்கிறார்கள்) அவர்களை என்ன செய்யபோகிறீர்கள்? அவர்களுக்கு சவால் விட தயாரா? அதுசரி, உங்கள் கதை என்ன? கீழே படிக்கவும்.

    1. ஜோதிடம் பற்றிய அரபி நூல் “பால் கிதாபு” ஆகும். அக்பர் என்ற மன்னன் ஜோதிடர்களை ஆலோசிக்காமல் அவர் எக்காரியத்திலும் ஈடுபடுவதில்லை.
    2. குரானின் 23 வது அத்தியாயம் 28, 29 வது வசனங்களை வீட்டில் ஒதிகொண்டிருந்தால் அந்த வீட்டிற்குள் திருடர்கள் நுழையமாட்டார்கள். இவ்வாறு இமாம் அவ்ஜாகி (ரஹ்) கூறுகிறார்.அவர் மேலும் கூறுகிறார்.
    3. குர்ஆனில் 2 வது அத்தியாயம் 102 103 வது வசனங்களை புதிய செப்பு தாம்பாளத்தில் எழுதி அதற்கு சாம்பிராணி புகை பித்து அதனை கழுவி “செய்வினை” செய்யப்பட்டவரை குடிக்க செய்தால் “செய்வினை” செயலற்றுபோகும்.
    3. குரானின் 23 வது அத்தியாயம் 115, 116, 117 வது வசனங்களை 3 முறை தண்ணீரில் ஓதி அவர் முகத்தில் அடிக்க வேண்டும் அல்லது அவரது காதில் ஓதி ஊதா வேண்டும். பேய் பிசாசு ஓடிவிடும்.
    4. “தாஜூல் salavaa” தை “பஜ்ருத்” தொழுகைக்கு பின்னர் தண்ணீரில் 11 தடவை ஓதி ஊதி கொடுத்தால் காலரா, வைசூரி (அம்மை) நீங்கும்.

    மேலும் மசூதியிலிருந்து 6 1/2 மணிக்கு பிறகு வெளியே வரும் முஸ்லிம்கள் குழந்தைகளின் முகத்தில் புஸ புஸ என்று வாயால் ஊதுகிறார்களே! அது எதற்கு? குழந்தைகளின் நோயை குணமாக்கும் சக்தி அந்த புஸ புஸ என்று ஊதும் காற்றிற்கு உண்டா? இல்லையென்றால் எதற்கு இந்த நாடகம்?

    பஸ்சில் ஏறி உட்கார்ந்தால் சாம்பிராணி புகையை போட்டு தலையில் மயி இறகை அடித்துவிட்டு காசு கேட்கிறார்களே! அதனால் அடிக்கபட்டவனுக்கு என்ன விளையும்? இது மூட நம்பிக்கை இல்லையா?

  131. சாரங்க்!

    //சரி அல்லா எப்படி மனிதனை உண்டு பண்ணினார் என்பதற்கு பதில் தரவேண்டுகிறேன்//

    அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
    அல்குர்ஆன் 25 : 54

    மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.
    அல்குர்ஆன் 30 : 20

    அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.
    அல்குர்ஆன் 96 : 2

    மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

    ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட ‘தி எலமெண்ட்ஸ்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.

    எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:

    1. ஆக்சிஜன் – 43 கிலோ கிராம்
    2. கார்பன் – 16 கிலோ கிராம்
    3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
    4. நைட்ரஜன் – 1.8 கிலோ கிராம்
    5. கால்சியம் – 1 கிலோ கிராம்
    6. பாஸ்பரஸ் – 780 கிராம்
    7. பொட்டாஷியம் – 140 கிராம்
    8. சோடியம் – 100 கிராம்
    9. குளோர்ன் – 95 கிராம்
    10. மக்னீசியம் – 19 கிராம்
    11. இரும்பு – 4.2 கிராம்
    12. ஃப்ளூரின் – 2.6 கிராம்
    13. துத்தநாகம் – 2.3 கிராம்
    14. சிலிக்கன் – 1 கிராம்
    15. ருபீடியம் -0.68 கிராம்
    16. ஸ்ட்ரோன்ட்டியம் – 0.32 கிராம்
    17. ப்ரோமின் – 0.26 கிராம்
    18. ஈயம் – 0.12 கிராம்
    19. தாமிரம் – 72 மில்லி கிராம்
    20. அலுமினியம் – 60 மில்லி கிராம்
    21. காட்மியம் – 50 மில்லி கிராம்
    22. செரியம் – 40 மில்லி கிராம்
    23. பேரியம் – 22 மில்லி கிராம்
    24. அயோடின் -20 மில்லி கிராம்
    25. தகரம் – 20 மில்லி கிராம்
    26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
    27. போரான் – 18 மில்லி கிராம்
    28. நிக்கல் – 15 மில்லி கிராம்
    29. செனியம் – 15 மில்லி கிராம்
    30. குரோமியம் – 14 மில்லி கிராம்
    31. மக்னீஷியம் – 12 மில்லி கிராம்
    32. ஆர்சனிக் – 7 மில்லி கிராம்
    33. லித்தியம் – 7 மில்லி கிராம்
    34. செஸியம் – 6 மில்லி கிராம்
    35. பாதரசம் – 6 மில்லி கிராம்
    36. ஜெர்மானியம் – 5 மில்லி கிராம்
    37. மாலிப்டினம் – 5 மில்லி கிராம்
    38. கோபால்ட் – 3 மில்லி கிராம்
    39. ஆண்டிமணி – 2 மில்லி கிராம்
    40. வெள்ளி – 2 மில்லி கிராம்
    41. நியோபியம் – 1.5 மில்லி கிராம்
    42. ஸிர்க்கோனியம் – 1 மில்லி கிராம்
    43. லத்தானியம் – 0.8 மில்லி கிராம்
    44. கால்ஷியம் – 0.7 மில்லி கிராம்
    45. டெல்லூரியம் – 0.7 மில்லி கிராம்
    46. இட்ரீயம் – 0.6 மில்லி கிராம்
    47. பிஸ்மத் – 0.5 மில்லி கிராம்
    48. தால்வியம் – 0.5 மில்லி கிராம்
    49. இண்டியம் – 0.4 மில்லி கிராம்
    50. தங்கம் – 0.4 மில்லி கிராம்
    51. ஸ்காண்டியம் – 0.2 மில்லி கிராம்
    52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
    53. வாளடியம் – 0.11 மில்லி கிராம்
    54. தோரியம் – 0.1 மில்லி கிராம்
    55. யுரேனியம் – 0.1 மில்லி கிராம்
    56. சமாரியம் – 50 மில்லி கிராம்
    57. பெல்யம் – 36 மில்லி கிராம்
    58. டங்ஸ்டன் – 20 மில்லி கிராம்

    மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.

    https://web2.airmail.net/uthman/elements_of_body.html

  132. Contents of clay, an analysis. This the material which was used by Allah to create man.Koran is so scientific!!!.
    “Clay minerals are composed essentially of silica, alumina or magnesia or both, and water, but iron substitutes for aluminum and magnesium in varying degrees, and appreciable quantities of potassium, sodium, and calcium are frequently present as well. Some clay minerals may be expressed using ideal chemical formulas as the following: 2SiO2·Al2O3·2H2O (kaolinite), 4SiO2·Al2O3·H2O (pyrophyllite), 4SiO2·3MgO·H2O (talc), and 3SiO2·Al2O3·5FeO·4H2O (chamosite). The SiO2 ratio in a formula is the key factor determining clay mineral types. These minerals can be classified on the basis of variations of chemical composition and atomic structure into nine groups: (1) kaolin-serpentine (kaolinite, halloysite, lizardite, chrysotile), (2) pyrophyllite-talc, (3) mica (illite, glauconite, celadonite), (4) vermiculite, (5) smectite (montmorillonite, nontronite, saponite), (6) chlorite (sudoite, clinochlore, chamosite), (7) sepiolite-palygorskite, (8) interstratified clay minerals (e.g., rectorite, corrensite, tosudite), and (9) allophane-imogolite
    We can only make pots from clay, unlike Allah.
    The question is, how of much of this particles exist in human body? The fact of the matter is, a lot of these minerals are ABSENT in human body! Plus the body contains a lot MORE substances in varying degrees not found in clay.
    SP now will go on about “கருவுற்ற சினை ” etc. Where did this come from?
    Bottom line: You cannot create anything that is not there already in some form. Matter cannot be made or destroyed and human body is matter.

  133. //மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது.//

    ஆமாம். மனிதன் பரிணாம வளர்ச்சியில் தோன்றினான் என்று அறிவியல் நிரூபிக்கிறது.

    //குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.//

    குரான் குழந்தைத்தனமாக பைபிள் கதையை காப்பி அடித்து உளறுகிறது.

  134. @ சுவனப்பிரியன்,

    //முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது.//

    எந்த குரான் வசனம் சினைமுட்டை பற்றி பேசுகிறது? பெண்ணின் சினைமுட்டை பற்றி முகம்மதுவுக்கு தெரியாது, அதனால் அல்லாஹ்வுக்கும் தெரியாது. அதனால் அதைப்பற்றி ஒரு வார்த்தையும் குர்ஆனில் இல்லை. குரான் சினைமுட்டை பற்றி பேசுகிறது என்று யாரை ஏமாற்ற கதை விடுகிறீர்? நீர் சரியான பிராடு என்று நன்றாகவே தெரியும்.

  135. @ சுவனப்பிரியன்,

    //அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.
    அல்குர்ஆன் 96 : 2//

    மேற்கண்ட மொழிபெயர்ப்பு உங்கள் அண்ணன் பீ.ஜே வின் ஏமாற்றுவேலை. அறிவியலை குரானின் உளறல்களுக்குள் நுழைப்பதற்கு உங்கள் அண்ணன் போடும் தமாஷான குட்டிக்கரனங்களில் இதுவும் ஒன்று. உங்கள் அண்ணன் சேர்த்துள்ள தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் ஒரு பிராடு கூட்டம். உங்களுக்கு ஏன் இந்த ஈனத்தனமான பிராடு பிழைப்பு? முஹம்மது ஒரு பிராடு என்று தெரிந்தும் அந்த பிராடை தூக்கி பிடிப்பதற்காக, அதன்மூலம் கல்லா கட்டுவதற்காக இப்படி உங்கள் கூட்டம் வெட்கம்கெட்டத்தனமாக பொய் பிரசாரம் செய்து வருகிறது.

    குர்ஆன் 96 : 2 வசனத்திற்கான மற்ற முஸ்லிம் அறிஞர்களின் மொழி பெயர்ப்பை கீழே பார்க்கவும் :

    Dar-us-Salam Publications :

    ”Has created man from a clot (a piece of thick coagulated blood).”

    Ali Unal :
    Created human from a clot clinging (to the wall of the womb)

    Sher Ali :
    Created man from a clot of blood.

    Muhammad Ali :
    Creates man from a clot

    Ahmed Raza Khan: Mohammed Aqib Qadri:
    Created man from a clot.

    Yusuf Ali:
    Created man, out of a (mere) clot of congealed blood:

    Pickthal:
    Createth man from a clot.

    மேற்கண்ட அனைத்து மொழிபெயர்ப்புகளும் ரத்த கட்டியிலிருந்து(clot ) மனிதனை
    அல்லாஹ் படைத்ததாக கூறுகிறது. அலக் என்ற அரபி வார்த்தைக்கு ரத்த கட்டி என்றுதான் பொருள். பீ. ஜே. சொல்வதுபோல சினைமுட்டை என்ற பொருள் இல்லை. இந்த பீ. ஜே. சரியான ஏமாற்று பேர்வழி.

  136. திரு.ஒரு அரிசோனன்,

    //ஆனால், ஜனாப் வணங்கும் இறைவனை எள்ளி நகையாடாதீர்கள். //

    முஸ்லிம்கள் இறைவன் என்று சொல்லும் அல்லாஹ் காபிர்களை கொலை செய்ய சொல்கிறான், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் நண்பர்களாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று கூறுகிறான், தன்னை தவிர மற்றவற்றை/மற்றவர்களை வணங்குபவர்களை நரக நெருப்பில் என்றென்றும் சர்வ காலமாக எரிப்பேன் என்கிறான், அவர்களுக்கு கள்ளி செடியை உண்ண கொடுப்பேன், சீழும் கொதிக்கும் நீரும் குடிக்க கொடுப்பேன், அவர்கள்மேல் கொதிக்கும் நீரை ஊற்றுவேன் என்றெல்லாம் குர்ஆனில் கூறுகிறான். இப்படிப்பட்ட வன்முறை மனநோயாளியை கேலி செய்யாமல் என்ன செய்வது?

  137. ஆன்ந்த் சாகர்!

    //மேற்கண்ட மொழிபெயர்ப்பு உங்கள் அண்ணன் பீ.ஜே வின் ஏமாற்றுவேலை. அறிவியலை குரானின் உளறல்களுக்குள் நுழைப்பதற்கு உங்கள் அண்ணன் போடும் தமாஷான குட்டிக்கரனங்களில் இதுவும் ஒன்று. உங்கள் அண்ணன் சேர்த்துள்ள தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் ஒரு பிராடு கூட்டம். உங்களுக்கு ஏன் இந்த ஈனத்தனமான பிராடு பிழைப்பு?//

    சகோ பிஜே இந்த ஆராய்ச்சிகளை செய்யவில்லை. டாக்டர் கெய்த் மூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீரகளா?

    டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார். இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் “The Developing Human” என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியிலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

    In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

    “We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ – Quran 23 : 12,13 ,14

    literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
    1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

    Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

    2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

    Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

    3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

    Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

    Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

    அரபு இலக்கணத்தின்படி ‘அலக்’ என்ற சொல்லுக்கு இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்ற மூன்று பொருளை தருகிறது. இந்த மூன்று மொழி பெயர்ப்புகளையும் அந்த நிலைக்கு பொருத்திக் கொள்ளலாம்.

    ஆக ‘அலக்’ எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.
    மேலும் விரிவாக காணொளிகளோடு பார்க்க இந்த லிங்குக்கு செல்லவும்.
    https://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post.html

    அறிவியல் விளக்கப் படங்களுடன் குர்ஆன் கூறும் கருவியலைப் பார்க்க இந்த லிங்குக்கு செல்லுங்கள்.

    https://suvanappiriyan.blogspot.com/2013/04/blog-post_25.html

    டாக்டர் கெய்த் மூரும் உளருகிறார் என்று நீங்கள் அடம் பிடித்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 🙂

  138. @ சுவனப்பிரியன்,

    //அரபு இலக்கணத்தின்படி ‘அலக்’ என்ற சொல்லுக்கு இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்ற மூன்று பொருளை தருகிறது. இந்த மூன்று மொழி பெயர்ப்புகளையும் அந்த நிலைக்கு பொருத்திக் கொள்ளலாம்.

    ஆக ‘அலக்’ எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.//

    சரி, அலக் என்ற அரபி வார்த்தை இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்ற மூன்று பொருளை தருகிறது. பிறகு ஏன் உங்கள் சகோ பீ.ஜே சினை முட்டை என்று இல்லாத அர்த்தத்தை நுழைத்து தகிடுத்தத்த வேலை செய்தார்? அவர் சரியாக பெயர்த்து இருந்தால், அந்த வசனத்தை பின்வரும் ஏதாவது ஒரு மொழி பெயர்ப்பைதானே செய்திருக்க வேண்டும் ?

    “அவன் மனிதனை ரத்த கட்டியிலிருந்து படைத்தான்”

    “அவன் மனிதனை தொங்கிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து படைத்தான்”

    “அவன் மனிதனை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டதிலிருந்து படைத்தான்”

    இங்கே சினைமுட்டை என்ற பொருள் எங்கு வந்தது? இது பீ.ஜே வின் ஏமாற்று வேலைதானே? இது ஏமாற்று மொழிபெயர்ப்பு என்பதை ஒரு வழியாக ஒப்புக்கொண்டீர்!

  139. இப்படியாக குர் ஆனின் எந்த பக்கத்தை தொட்டாலும் அளப்பரிய அறிவியல் கருத்துக்கள் மிதக்கின்றன(???!!!) . அவற்றை படிக்க படிக்க உடம்பில் உள்ள முடிகள் எல்லாம் குத்திட்டு நிற்கின்றன மேகங்களை கருக்கொள்ள செய்யும் காற்றை நாமே அனுப்புகிறோம். (15: 19-25) மேகங்கள் கருக்கொள்ள இவர் காற்றை அனுப்புகிறாராம். இதற்கு விளக்கம் தர எந்த விஞ்ஞானி கிடைப்பானோ. அந்த விஞ்ஞானி கூறுவதை ஆங்கிலத்தில் தருகிறேன் படியுங்கள் என்று கூறுவார் ஆகவே அறிவியல் அதை மைப்பிக்கறது. குரானும் அதையே கூறுகிறது என்று சொல்லவார். விரைவில் எதிர்பாருங்கள்.
    ————————————————————————————————————————

    அதேபோல கீழே உள்ளவைகளை படிக்கும்போதும் உடம்பு முறுக்கேருகின்றது.
    1). நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. இனி இரவில் அவர்களுடன் கூடுங்கள். (2) மஸ்ஜித்களில் இதிகாப் இருக்கும் நிலையில் மனைவியரோடு கூடாதீர்கள்(2:187)
    இது குரானா அல்லது செக்ஸ் புத்தகமா? இதற்கு பெயர்தான் புனித நூலா?
    ———————————————————————————————————————–
    மேலும் ஜக்காரியாவுக்கும் அருட்பெற்றினை வழங்கினோம் அவர் தம் இறைவனிடம் “என் இறைவனே! என்னை நீ தன்னந்தனியாக விட்டுவிடாதே. “நீயே மிகசிறந்த வாரிசு ஆவாய்” (21 : 89-90)

    நீயே மிகசிறந்த வாரிசு ஆவாய் என்றால் அல்லா யாருடைய வாரிசு. அவரை யாரும் படைக்க வில்லை என்று சொல்லும்போது எப்படி அவர் மிகசிறந்த வாரிசு ஆவார்?

    அடுத்து அல்லாவை பார்த்து அந்த ஜக்கரியா “நீ என்னை தனித்தனியாக விட்டுவிடாதே” என்று ஒருமையில் கூறுகிறார். நான் ஒருமுறை “பிரியனை” நீ என்று சொன்னபோது மரியாதைஇல்லம் பேசவேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறினார். அதேபோல அறிசொணன் அவர்களும் எனக்கு “இதுபோல இனி வேண்டாம்” என்று கூறினார். இப்போது இதற்கு என்ன பதில்?

    ..

  140. //அதேபோல கீழே உள்ளவைகளை படிக்கும்போதும் உடம்பு முறுக்கேருகின்றது//
    இன்னும் ஒன்று. ஏதோ என்னால் ஆனது
    “”
    நபிகளார் – ஆயிஷா (ரலி) அவர்களை 6 வயதில் மணமுடித்தாகவும் 9 வயதில் தாம்பத்தியத்தில் இணைந்ததாகவும் மற்றும் மாமானர் மருமகள் திருமணம் திரைசீலை நபிகள் .. அதாவது;

    தன் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனாபை,எப்படியாவது அடைய வேண்டும் என்று நபி நினைத்ததால் –.ஆனால்,அன்றைய அரபு கலாச்சாரத்தின்படி,இது தவறானது.ஆதலால்,நபி ஒரு குரான் வசனத்தை உருவாக்கி…அது தான் இது :

    (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர் “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர் ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன் ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால் முஃமின்களால் (சவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)”””

  141. //இங்கே சினைமுட்டை என்ற பொருள் எங்கு வந்தது? இது பீ.ஜே வின் ஏமாற்று வேலைதானே? இது ஏமாற்று மொழிபெயர்ப்பு என்பதை ஒரு வழியாக ஒப்புக்கொண்டீர்!//

    ‘ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்ளுதல்’ என்றால் அங்கு நடைபெறும் மாற்றம் என்ன? ஆணின் விந்து பெண்ணின் கரு முட்டையில் சென்று கோர்த்துக் கொள்கிறது. இவ்வாறு கோர்த்துக் கொண்டவுடன் அது கருவுற்ற சினை முட்டையாகிறது. நீங்கள் நடப்பை சொல்கிறீர்கள். பிஜே அந்த நடப்பால் நடந்த நிகழ்வைக் கூறுகிறார். இதில் என்ன பித்தலாட்டத்தைக் கண்டீர்கள்?

  142. அன்பார்ந்த ஸ்ரீ ஆனந்தசாகர்

    \\\\ தன்னை தவிர மற்றவற்றை/மற்றவர்களை வணங்குபவர்களை நரக நெருப்பில் என்றென்றும் சர்வ காலமாக எரிப்பேன் என்கிறான், அவர்களுக்கு கள்ளி செடியை உண்ண கொடுப்பேன், சீழும் கொதிக்கும் நீரும் குடிக்க கொடுப்பேன், அவர்கள்மேல் கொதிக்கும் நீரை ஊற்றுவேன் என்றெல்லாம் குர்ஆனில் கூறுகிறான். இப்படிப்பட்ட வன்முறை மனநோயாளியை கேலி செய்யாமல் என்ன செய்வது? \\\\

    இஸ்லாம் என்று மட்டிலும் இல்லை.

    ஒட்டு மொத்தமான ஆப்ரஹாமிய இறைக்கோட்பாடு இழிவான தரம் தாழ்ந்த மற்றும் மானுடகுலத்துக்கும் உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கோட்பாடு.

    தாங்கள் சித்தாந்த ரீதியாக உலக அமைதிக்குக் கேடு விளைவிக்கும் இழிவான ஆப்ரஹாமியக் கோட்பாடுகளை தர்க்கபூர்வமாக கருவறுப்பது உலக அமைதிக்கும் ஒட்டு மொத்த மானுட குலத்துக்கும் செய்யும் அளப்பரிய சேவை.

    உங்களது கருத்துக்களை முழுமையான வ்யாசங்களாக தமிழ் ஹிந்து தளத்தில் சமர்ப்பிக்க விக்ஞாபித்துக்கொள்கிறேன். வாசிக்கும் வாசகர்கள் ஒரு முழுமையான பார்வையைப் பெறுவார்கள்.

    வள்ளிக்குவாய்த்த பெருமானின் வேலும் மயிலும் சேவலும் உங்களுக்குத் துணையிருக்குமாக.

  143. பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமான் அரிசோனன்,

    \\\ வீரமணியை நீங்கள் எள்ளி நகையாடலாம், ஜனாப் சுவனப்பிரரியனைக்கூட எள்ளி நகையாடலாம். அவர் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், ஜனாப் வணங்கும் இறைவனை எள்ளி நகையாடாதீர்கள். இந்துக்களாகிய நாம், மனிதர்களையே தரக்குறைவாகப் பேசக்கூடாது, அது பாவம் என்கிறோம். இந்து சமயக் கொள்கைப்படி இறைவனை, எந்த சமயத்து இறைவனாக இருந்தாலும்சரி, மாறாகப் பேசுவது மகா பாவம் ஆகும். \\\

    அப்படியா? ஆப்ரஹாமியம் *இறைவன்* என்று சுட்டும் ஒரு வஸ்துவை மட்டும்தான் பழிக்கலாகாது என்று ஸ்ரீமான் அரிசோனன் சொல்லவருகிறாரா?

    ஸ்ரீமான் அரிசோனன் அவர்கள் சைவத்தையும் சமணத்தையும் எள்ளி நகையாடக்கூடாது என்ற அலகீட்டிலிருந்து புறந்தள்ளியிருக்கலாம் போலும். ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக……………ஒரே புனைவில் சைவம் சமணம் என்ற இரண்டையும் நாசூக்காக இழிவு செய்யும்படிக்கு ஒரு புனைவு.

    சமணர்கள் அனைவரையும் அரக்கத்தனமாக கழுவேற்றிய மாபாதகர்கள் சைவர்கள் என்று ஒரு பக்ஷம். அப்படி கழுவேற்றத் தக்கவர்கள் சமணர்கள் என்பதாக சித்தரிக்க முனைந்தமை மற்றொரு பக்ஷம்.

    ஆனால் வரலாற்றாய்வாளர்கள் மூடர்களாயிற்றே. வலதுசாரி பக்ஷத்திலிருந்து ஸ்ரீமான் ஜடாயு பகிர்ந்த வரலாற்றாய்வும் இடதுசாரி பக்ஷத்திலிருந்து ஸ்ரீமான் அனந்த க்ருஷ்ணன் பக்ஷிராஜன் பகிர்ந்த வரலாற்றாய்வும் சமணக்கழுவேற்றம் வெறும் கட்டுக்கதை என்று பகிர்ந்த பின்பும் …………… சமணர்கள் தாடி மீசை வைக்காதவர் என்பது தத்யம் என்றாலும்…………. தாடி மீசை வைத்த தபஸ்விகள் கழுவேற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதான சிற்பத்தை வைத்து………….நடக்காத விஷயத்தை நடந்ததாக புனைந்தது மட்டுமில்லாமல்………..மேற்கொண்டு அதை வக்காலத்தும் வாங்குவதும்……….. சைவ பக்ஷத்தின் படி சரியா? அல்லது ஜைன பக்ஷத்தின் படி சரியா தெரியவில்லை? எந்த பக்ஷம் ஜெயித்தாலும் இன்னொரு பக்ஷம் அபஜெயத்தை அடைகிறதே.

    விஷயம்……….. ஆப்ரஹாமிய இறைக்கோட்பாடு என்பது தர்க்க பூர்வமாக தரம் தாழ்ந்த கோட்பாடா? சமதர்சனத்தை முன்னிறுத்தும் இறைமையை அல்லாமல் பக்ஷபாத அரக்கத்தனத்தை முன்வைக்கும் கோட்பாடா? ஆம் என்றால் அது சர்வ நிச்சயமாக கருவறுக்கப்பட வேண்டும்.

    ஹிரண்யகசிபு நாந்தான் ஸ்வாமி என்னை வணங்காதவர்களை அழித்தொழித்து விடுவேன் என்று சொன்னான். லக்ஷோப லக்ஷம் ஜனம் அவனை ஸ்வாமியாகவே ஏற்றுக்கொண்டது. அசுர குரு சுக்ராசார்யாரின் புத்ரர்களான சண்டா மர்க்கர்கள் பள்ளிக்கூடம் வைத்து குழந்தைகளுக்கெல்லாம் ஹிரண்யகசிபுவே ஸ்வாமி என்று பாடமும் சொல்லிக்கொடுத்தார்கள்.

    ஆனால் பாருங்கள் ஹிரண்யன் பெத்த பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு போயும் போயும் நாரத முனி குருவாகக் கிடைத்தார் திருவஷ்டாக்ஷரத்தை உபதேசிக்க.

    உங்களைப் போன்ற ஒருவர் “எந்த சமயத்து இறைவனாக இருந்தாலும் சரி, மாறாகப் பேசுவது மகாபாவம் ஆகும்” என்று ப்ரஹ்லாதனுக்குத் தெளிவாக உபதேசம் செய்திருந்தால்……………நரசிம்மருக்கும் வேலையிருந்திருக்காது……….ஹிரண்யனும் சிரஞ்சீவியாக இருந்திருப்பான் பாருங்கள் 🙂

  144. ஹானஸ்ட் மேன்!

    // மேகங்களை கருக்கொள்ள செய்யும் காற்றை நாமே அனுப்புகிறோம். (15: 19-25) மேகங்கள் கருக்கொள்ள இவர் காற்றை அனுப்புகிறாராம். இதற்கு விளக்கம் தர எந்த விஞ்ஞானி கிடைப்பானோ. அந்த விஞ்ஞானி கூறுவதை ஆங்கிலத்தில் தருகிறேன் படியுங்கள் என்று கூறுவார் ஆகவே அறிவியல் அதை மெய்ப்பிக்கறது. குரானும் அதையே கூறுகிறது என்று சொல்லவார். விரைவில் எதிர்பாருங்கள்.//

    அடடே… நான் சொல்ல வந்ததை அப்படியே சொல்லிட்டீங்களே! இதற்கான விளக்கமும் மிக நீளமானது. கீழே உள்ள லிங்கில் சென்று விளக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    https://suvanappiriyan.blogspot.com/2014/08/blog-post.html

  145. உயர்திரு Honest Man அவர்களே,

    //அதேபோல அறிசொணன் அவர்களும் எனக்கு “இதுபோல இனி வேண்டாம்” என்று கூறினார். இப்போது இதற்கு என்ன பதில்?//

    நான் சுவனப்பிரியன் வணங்கும் கடவுளான அல்லாவை இழித்துப் பேசாதீர்கள் என்றுதான் கூறினேன். இப்பொழுதும் அதையேதான் கூறுகிறேன். ஆனால், நாம் எவ்வளவு தடவை நட்புக்கரம் நீட்டினாலும் எள்ளி நகையாடுகிறார். அதற்கு நான் சிறிது கடுமையாகவே பதில் எழுதியுள்ளேன்.

    அவர் நம்மை எள்ளி நகையாடினால், நாமும் அதற்குத் தகுந்தவாறு பதில் எழுதத்தான் வேண்டும், தவறில்லை. அதற்காக, அவரது இறை நூலையும், அவரது இறைவனையும் நாம் பழிக்கவேண்டாம். அவர் நமது இறை நூலையும், நமது கடவுளர்களையும் பழித்தால், அதற்குத் தகுந்த பதிலைக் கூறத்தான் வேண்டும். இல்லாவிடில் அவர் எழுவதை நாம் ஒப்புக்கொள்வதாகவே ஆகும்.

    வணக்கம்.
    //

  146. பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    //ஒரே புனைவில் சைவம் சமணம் என்ற இரண்டையும் நாசூக்காக இழிவு செய்யும்படிக்கு ஒரு புனைவு//
    இது உங்கள் வாதமே. எனது கருத்து அல்ல.

    \//சமணர்கள் அனைவரையும் அரக்கத்தனமாக கழுவேற்றிய மாபாதகர்கள் சைவர்கள் என்று ஒரு பக்ஷம். அப்படி கழுவேற்றத் தக்கவர்கள் சமணர்கள் என்பதாக சித்தரிக்க முனைந்தமை மற்றொரு பக்ஷம்.//
    தாங்களே இப்படிக்கூறினால் என் செய்வேன்? இருப்பினும் பதில் அளிக்கக் கடமைப்பட்டவன் ஆகிறேன்.

    சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரே தமது மூன்றாம் திருமுறையில் திரு ஆலவாய்ப்பதிகங்களில் பகர்ந்ததைத் தங்களுக்குக் கீழே தந்துள்ளேன்.

    1. மங்கையர்க்கரசியார் மதுரையில் காழிபில்லையாரைக்கண்டு, அவருக்குச் சமணர்களால் தீங்கு வருமோ, அவர்களை வாதில் வெல்ல இயலுமா என்று அஞ்சியபோது அருளிச் செய்தது:
    அத்தகுபொரு ளுண்டுமில்லையு மென்றுநின்றவர்க் கச்சமா
    ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி லழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
    சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே
    சித்திரர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே. 3.39 .3.
    பொழிப்புரை :
    கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது , இல்லை என்றும் சொல்ல முடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும் , ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று , எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர் . பார்ப்பவர் வெட்கப் படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை பேசுபவர்கட்கு , நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன் .
    பிள்ளையாருக்கு சமணர்மேல் உள்ள சீற்றம் “கவிப் பெயர்ச் சத்திரத்தின் (ஆயுதத்தின்) மடிந்தொடிந்து” என்பதிலும், “சித்திரர்க்கு எளியேன் அல்லேன்” என்பதிலும் புலப்படவில்லையா?
    2. காழிப்பிள்ளையார் தங்கியிருந்த மடத்திற்கு எரியூட்ட முற்பட்ட சமணர்களின் தீ, பாண்டிய மன்னனைப் பற்றட்டும் என்று பணித்தார். சமயத்திற்குப் புறம்பான பொய்களைச் சொல்பவர்கள் சமணர்கள் என்றும் குறிப்பிட்டார். தமது இருப்பிடத்திற்கு எரியூட்டியவர்கள் சமணர்கள்தான் என்று அறிந்தும், அவர்கள் மீது காழ்ப்பு காட்டாது, மக்கள் செயலுக்கு மன்னனே பொறுப்பு, ஆயினும் தீ வேகத்தில் சென்று பாண்டிய மன்னனைப் பற்றினால், அவனால் தாங்க முடியாது இறந்துபோவான், மக்கள் மன்னனின்றி வருந்துவர் என்று, “எம்மிடத்திற்கு இட்ட தீ மன்னனைப் மெதுவாக அடையட்டும்” என்றார். சைவர்களின் பொறுமையை, உயர்வை இதைவிட எப்படி உயர்த்திக் காட்டிவிட முடியும்! இப்படிப்பட்ட சைவ குரவரைப் பின்பற்றுவோர் அரக்ககுணம் கொண்ட மாபாதகர்கள் என்று நான் மனதால் நினைத்தாலும் எனக்கு உய்வு கிடைக்குமா? அப்படி சுட்டத்தான் நான் விழைவேனா?

    செய்ய னேதிரு வாலவாய் மேவிய
    ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
    பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
    பைய வேசென்று பாண்டியற் காகவே. 3.51. 1.
    பொழிப்புரை :
    நடுநிலைமை உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரே ! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக . பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .
    3. அனல்வாதம், புனல்வாதம் செய்து தோற்றால் நாங்கள் கழுவேற்றப் படுவோமாக என்று அவர்களே விரும்பிப் பெற்ற தண்டனையை நிறைவேற்றும்படி பாண்டிய மன்னன்தான் அமைச்சர் குலச்சிறையாருக்கு ஆணையிட்டான். இது மன்னன் இட்ட கட்டளை. இதற்கும் சைவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவர்கள் அரக்கத்தனமான மாபாதகர்கள் என்று எங்கு என் கதையில் குறிப்பிட்டேன்? தாங்களாகவே அர்த்தம் செய்துகொண்டு, அப்படி நான் எழுதினேன் என்று குற்றம் .சாட்டுவது தகுமா? கன்றைத் தேரோட்டிக் கொல்ல முயன்ற மனுநீதிச் சோழனை நாம் இன்றும் போற்றி எழுதுகிறார்கள். அவர்களை,. “ஒரு சோழன் பிள்ளைக்கொலை செய்ய முயன்றான் என்று குற்றம் சட்டுகிறாயே!” என்று சாடுகிறோமா? மன்னர்கள் தத்தம் கடமையை விருப்பு வெறுப்பின்றிச் செய்தார்கள். அவர்கள் செயல்களைச் சைவர்கள் செயல்கள் என்று புனைந்தோதுவது நானல்ல. அப்படிப்பட்ட எண்ணமும் என் நெஞ்சில் ஒருபோதும் எழுந்ததில்லை.

    //வலதுசாரி பக்ஷத்திலிருந்து ஸ்ரீமான் ஜடாயு பகிர்ந்த வரலாற்றாய்வும் இடதுசாரி பக்ஷத்திலிருந்து ஸ்ரீமான் அனந்த க்ருஷ்ணன் பக்ஷிராஜன் பகிர்ந்த வரலாற்றாய்வும் சமணக்கழுவேற்றம் வெறும் கட்டுக்கதை என்று பகிர்ந்த பின்பும் //
    அது அவர்கள் ஆய்வு. அதை நான் நேரடியாக மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. அவர்கள் எழுதியது உண்மையா, அல்லவா என்று ஆராயும் அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை, தகுதியும் இல்லை. என் கதையின் புனைவுக்கு காழிபிள்ளையாரின் திருமுறையும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணமுமே கரு. அதைத் தேவையில்லாத அளவுக்கு விமர்சிப்பது ஏனோ? அதுபோக, இந்துக்களையும், பிராமணர்களையும் தாக்குவதையே பொழுதாகக் கொண்ட நடிகன் ஒருவனுடன் ஒப்பிட்டதும் ஏனோ?

    4. //உங்களைப் போன்ற ஒருவர் “எந்த சமயத்து இறைவனாக இருந்தாலும் சரி, மாறாகப் பேசுவது மகாபாவம் ஆகும்” என்று ப்ரஹ்லாதனுக்குத் தெளிவாக உபதேசம் செய்திருந்தால்……………நரசிம்மருக்கும் வேலையிருந்திருக்காது……….ஹிரண்யனும் சிரஞ்சீவியாக இருந்திருப்பான் பாருங்கள்//

    ஜனாப் அவர்களின் காற்று உங்கள்மீது வீசியிருக்கிறது என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், செல்வி ரெபேக்கா மேரிக்கு நான் எழுதிய பதிலைப் பாராட்டிய கையோடு இப்படி எழுதி இருப்பீர்களா?
    பிரகல்லாதன் திருமாலைத்தான் சிறந்த தெய்வம் என்றான். தானே தெய்வம் என்ற அரக்கனைத்தான் தெய்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் எந்த தெய்வத்தைப் பழித்தான்? தன்னையே தெய்வம் என்று சாதித்த தன தந்தையைக்கூடப் பழிக்கவில்லையே! திருஞான சம்பந்தர் சமணர், மற்றும் புத்த சமயத்தொரின் கொள்கைகளைத்தான் மறுத்து, சைவத்தை நிலைநாட்ட முயன்றார். மாற்று சமயத்திற்கு மாறிய சைவர்களைத் தாய் மதம் திருப்ப முயற்சித்தார். அவர் எந்த தெய்வத்தை நிந்தனை செய்தார்? அயனும், அரியும் முயன்று தேடியும் கண இயலா அடி முடி கொண்ட பெருந்தகையாகத்தானே அரனை ஏற்றினார்? திருமாலையும், பிரம்மனையும் அவர் தூற்றினாரா? அவர் தனது ஒவ்வொரு பதிகத்திலும், எட்டாம் செய்யுளில் இராவணனை சிவ பெருமான் கயிலைக்கடியில் கால்விரலால் அழுத்தியதைப் பற்றியும், ஒன்பதாம் செய்யுளில் திருமாலும், பிரம்மனும் பலவாறு தேடியும் சிவனாரின் அடி, முடி அறிய இயலா மகத்துவம் பற்றியும், பத்தாம் செய்யுளில் புத்தரும், சமணரும் புற சமயத்தவர் என்றும் எழுதியிருக்கிறார். என்றும் அவர் பர சமயக் கடவுள் நிந்தனை செய்ததில்லை. எந்த சைவ குரவர்களும், வைணவ ஆழ்வார்களும் அதைச் செய்ததில்லை. யதிராஜர் இராமானுஜாச்சாரியார், வைணவத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைத்தாரே தவிர, சிவ நிந்தனையை ஒருபொழுதும் செய்ததில்லை.

    நமது குருமார்கள் நமக்குக் காட்டிய அறிவுரையைத்தான் நான் தமிழ் இந்து சமய உடன்பிறப்புகளுக்குப் பகர்ந்தேன். அதற்காக, நமது சமயத்தோர் எவரையும் பழிப்பவரையும், நமது சமயத்தொரை தமது சமயத்திற்கு வஞ்சகமாக மாற்ற முயல்வோரையையும் என்றும் நான் பொறுத்ததில்லை. “அன்பே சிவம்” என்னும் நான், தேவைப்பட்டபோது சிவனாரின் உருத்திர உருவத்தையும் எடுக்கத் தயங்கமாட்டேன் என்று தங்களுக்குத் தாழ்மையுடன் அறிவித்துக்கொள்கிறேன். அதை நான் செல்வி ரெபேக்க மேரி, ஜனாப் இவர்களுக்கு பகர்ந்த கருத்துகளிலிருந்து அறிந்துகொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.
    நீங்கள் ஜனாப்பை பாராட்டவும் செய்கிறீர்கள், கண்டிக்கவும் செய்கிறீர்கள். அதைதான் நானும் செய்கிறேன்.

    வேலும், மயிலும் துணை. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் நமச்சிவாய.

  147. சூ பீ

    சினை முட்டை என்றெல்லாம் கதை வேண்டாம். செமெடிக் மதங்களின் நம்பிக்கை ரத்தில் தான் உயிர் உள்ளது என்று. அதனால் தான் இயேசுவின் ரத்தம் ஜெயம் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.

    அதனால் தான் கோஷர் உணவை உண்கிறார்கள் ஜூக்கள். ரத்தம் குடித்தால் எங்கே உயிரை குடிக்கிறோமோ என்ற எண்ணம் (பயம்) தான் இதற்க்கு காரணம். இதை அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடிச்சு தான் நீங்கள் ஹலால் என்கிறீர்கள். உங்களது நம்பிக்கையும் அதனால் உயிர் ரத்த கட்டியிளிருந்து பிறக்கிறது என்று தான் ஆகும்.

    ஒன்றுடன் ஒன்று சேர்வதென்றால் ஆன் விந்து பெண் வித்து என்றெல்லாம் கதை வேண்டாம்.

    ஒன்றுடன் ஒன்று சேர்வது என்றால். கலி மண்ணுடன், காத்து சேருவது. ஒரு கையுடன் இன்னொரு கை சேருவது. தலை மயிருடன் மூக்கு சேருவது. சுண்ணாம்புடன் புனுகு சேர்வது என்று எத்தனை வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.

    இதை விட இன்னும் ultra generic வசனம் சொல்லட்டுமா.
    “உயிர் அவனது இச்சையால் உண்டாகிறது வளர்கிறது மேலும் அல்லா எல்லாவற்றையும் செய்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான்”

    என்று மட்டும் அல்லா சொல்லாங்காட்டி நீங்க இன்னா பன்னுவீங்கோ. அல்லா சொன்னததான் டார்வின் சொல்லிகிறாரு என்பீங்கோ சர்தானே.

    பி:கு – பாருங்க எனக்கு கூட வஹீ வந்து ஒரு குரான் வசனம் சொல்லிட்டேன்.

  148. அல்லா கண்டறிந்த test tube baby

    ஒன்றுடன் ஒன்று சேர்ந்தால் மனிதன் பிறப்பான் என்று சொன்னதன் மூலம். அல்லா test tube baby மற்றும் genetic முறையை பற்றி அன்றே சொல்லிவிட்டான். உலகம் தொடங்கி பில்லியன் வருஷம் ஆகிறது என்கிறார்கள். இதை கண்டு பிடித்து சொல்ல அல்லாவுக்கு ஏன் இம்புட்டு சமயம் பிடிச்சது என்று தெரியல.

    சூ பீ. இதை பீஜே அண்ணனுக்கு சொல்லுங்கள். நபி வழியில் நடக்கும் உலகம் என்ற தலைப்பில் test tube baby பற்றி பின்னி எடுப்பார்.

  149. சாரங் சார். எந்த ஒரு விஞ்ஞான கேள்விக்கும் அல்குர் ஆனில் விடை இருக்கிறது என்று ‘பிரியன்’ கூறுகிறார்.

    ஒரு வேற்றுநாட்டு தூதர் மன்னனை பார்த்து “”கன்னா பின்னா தென்னா மன்னா” என்று தன வாயில் வந்ததை உளறிவிட்டார் . அதற்கு விளக்கம் சொல்லுமாறு மன்னன் தன அவை புலவரை கேட்டபோது அவர் “இது ஒரு உளறல்” என்று சொல்லிவிட்டால் அவருக்கு தண்டனை கிடைக்கும். அதை தவிர்க்க வேண்டி அவர் கீழ்கண்டவாறு விளக்கம் கொடுத்தார். “”கன்னா என்றால் கர்ணனை குறிக்கும் கன்னா பின்னா என்றால் கர்ணனுக்கு பிறகு வந்தவனே என்பதாகும். தென்னா மன்னா என்றால் தென்னாட்டிற்குரிய மன்னனே என்று பொருள்”” என்று விளக்கம் கொடுத்தாராம்.இப்படி நபி “”அல்லா சொன்னான் அல்லா சொன்னான்”” என்று தன மனதில் தோன்றியதை எல்லாம் உளறி குரான் என்ற பெயரில் ஒரு நூலை தந்துவிட்டு போய் விட்டார். அவர் உளறி கொட்டியதற்கு எல்லாம் விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

    Test tube baby பற்றிக்கும் பதில் சொல்லும் பிரியனுக்கு ஒரே ஒரு கேள்வி. நபிக்கு கேப்ரியல் மூலம் அல்லா மெசேஜ் னை அனுப்பியதற்கு பதிலாக நபிக்கு ஒரு கலர் செல்போனை அல்லா கொடுத்து இருக்கலாமே! அதன் மூலம் மேசெஜ்னை அனுப்பி இருக்கலாமே. இந்த மெசேஜ்களை குரைஷி மக்களிடம் காட்டியிருந்தால் அவர்களும் இவர் ஒரு தூதர்தான் என்று நம்பியிருப்பார்கள். 21 வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கபோகும் செல்போன் பற்றி அல்லாவிற்கு தெரியாது என்றால் அவர் முக்காலமும் தெரிந்தவன் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது?

  150. @ சுவனப்பிரியன்,

    //நீங்கள் நடப்பை சொல்கிறீர்கள். பிஜே அந்த நடப்பால் நடந்த நிகழ்வைக் கூறுகிறார். இதில் என்ன பித்தலாட்டத்தைக் கண்டீர்கள்?//

    அலக் என்ற அரபி வார்த்தையை பி.ஜே கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். இது மொழிபெயர்ப்பு இல்லை, அது ஒரு பித்தலாட்ட இடைசெருகல் என்று நான் கூறுகிறேன். இதைத்தான் நீங்கள் வேறுவிதமாக ஒப்புக்கொள்கிறீர்.

    பிஜே அந்த நடப்பால் நடந்த நிகழ்வைக் கூறுகிறார் என்றால் பிறகு அதை மொழிபெயர்ப்பு என்று எப்படி கூறமுடியும்? மொழிபெயர்ப்பு என்றால் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வது மட்டுமே. ஒரு சம்பவத்தை விவரிக்கும் சொற்றொடரை வேறு மொழியில் மொழிபெயர்க்க வேண்டுமென்றால் அந்த சம்பவத்தை சொல்லும் சொற்றொடரைத்தான் வார்த்தைக்குக் வார்த்தை மொழியாக்கம் செய்ய வேண்டுமே ஒழிய அந்த சம்பவத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றி கதை சொல்வது மொழிபெயர்ப்பாகாது. உதாரணத்திற்கு, ஒருவர் காய்ச்சலுக்கு மாத்திரை உட்கொண்டார் என்கிற சம்பவத்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்வதென்றால் அந்த இரு மொழிகளிலும் உள்ள சொற்தொடர் ஒருவர் மாத்திரை உட்கொண்டார் என்றுதான் கூறவேண்டும். மாறாக, அந்த மாத்திரை உட்கொண்டதால் அந்த நபருக்கு தூக்கம் வந்தது, பிறகு வியர்வை ஏற்பட்டது, சில மணி நேரத்திற்கு பிறகு உடல்வலி நீங்கியது, கடைசியாக காய்ச்சல் நீங்கியது என்று விளைவுகளை பற்றி கூறுவது மொழிபெயர்ப்பு ஆகாது. அப்படி செய்வது வெறும் கதையாடல்தான். இந்த கதையாடல் வேலையைத்தான் பி.ஜே குரான் மொழிபெயர்ப்பு என்று பித்தலாட்டம் செய்கிறார்.

    தன்னை அல்லாஹ்வின் உடன்படிக்கை தூதர் என்று ஏமாற்றிய ரஷாத் கலிபாவும் ஆங்கில மொழிபெயர்ப்பு என்று கூறிக்கொண்டு குரான் வசனங்களுக்கு பொருள் என்று தான்தோன்றித்தனமாக எண்ணியதை எல்லாம் மொழிபெயர்ப்பு என்று வெளியிட்டார். அவருடைய நோக்கம் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று நிரூபிக்க வேண்டும், அதற்கு எண் 19 என்கிற அற்புதம் குர்ஆனில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும், குரான் வன்முறையை போதிக்கவில்லை என்று காட்ட வேண்டும் என்பதாக இருந்தது.

    உங்கள் சகோ பி.ஜே வின் நோக்கம் குரான் அறிவியல் பூர்வமானது, அறிவியல் பேசுகிறது என்று நிரூபிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக அவர் எல்லாவித வார்த்தைஜால பித்தலாட்டங்களை நிறையவே அவர் சொல்லிக்கொள்கிற மொழிபெயர்ப்பில் செய்திருக்கிறார்.

  151. அன்பிற்குரிய திரு.கிருஷ்ணகுமார்,

    //தாங்கள் சித்தாந்த ரீதியாக உலக அமைதிக்குக் கேடு விளைவிக்கும் இழிவான ஆப்ரஹாமியக் கோட்பாடுகளை தர்க்கபூர்வமாக கருவறுப்பது உலக அமைதிக்கும் ஒட்டு மொத்த மானுட குலத்துக்கும் செய்யும் அளப்பரிய சேவை.//

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அலி சினா, ராபர்ட் ஸ்பென்செர், வாலித் ஷூபட், M.A. கான், பமீலா கெல்லெர், வபா சுல்தான், அயான் ஹிர்சி அலி போன்ற பலர் இஸ்லாத்தின் உண்மையான கோர முகத்தை அம்பலப்படுத்துவதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். நம் தமிழ்நாட்டில் நண்பர் தஜ்ஜால் இஸ்லாத்தை அம்பலப்படுத்தும் பணியை செவ்வனே செய்து வருகிறார். ஆனால் எனக்கு அந்த அளவுக்கு இந்த நல்ல பணியை செய்ய நேரம் கிடைக்கவில்லை. என்னால் முடிந்தவரை ஒரு சில கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட முயற்சிக்கிறேன். ஆவலோடு இப்பணியை கூடுதலாக செய்ய விழைகிறேன்.

    //உங்களது கருத்துக்களை முழுமையான வ்யாசங்களாக தமிழ் ஹிந்து தளத்தில் சமர்ப்பிக்க விக்ஞாபித்துக்கொள்கிறேன். வாசிக்கும் வாசகர்கள் ஒரு முழுமையான பார்வையைப் பெறுவார்கள்.//

    இஸ்லாத்தை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தும் கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது அவற்றை தமிழ் ஹிந்து தளத்தில் வெளியிட மிக ஆவலாக உள்ளேன். அவற்றை ஒவ்வொன்றாக ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆசிரியர் குழு விரும்பினால் அவற்றை இந்த தளத்தில் வெளியடலாம்.

    நான் ஆன்மீகத்தில் ஒரு ஆரம்ப மாணவனாக இருக்கிறேன். ஆன்மீக விஷயங்களை கற்க கற்க இன்னும் பல மேலான பாடங்களை கற்க வேண்டும் என்பதை உணர்கிறேன். ஆன்மீக உண்மைகளில் ஓரளவாவது தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது அந்த உண்மைகளை கட்டுரைகளாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். இருப்பினும் என் இறுதி மூச்சு உள்ளவரை நான் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டுள்ளேன்.

  152. சுவனப்ரியன் போன்ற அதிமேதாவிகளே கடவுள் என்றால் உள்ளதை கடந்தவன் என்று பொருள். நம் தாயும், தந்தையும், குருவும் கடவுள் தான். எங்களின் முன்னோர்கள் தான் குல தெய்வங்கள். எங்கள் பண்பாட்டோடு பார்பனர்கள் என்று கூறப்படும் அந்தணர்கள் கலந்தார்கள். அவர்கள் எங்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையு மதித்து அதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்களே ஒழிய முஸ்லிம் கிறிஸ்துவர் போல அவர்கள் கலாச்சாரத்தை எங்கள் மீது திணிக்கவில்லை. பாரதர்களின் (இந்தியர்களின்) கலாச்சாரமும் பண்பாடும் கொண்ட அமைப்பை வந்தேறிகளான இஸ்லாமியர்கள் இந்து & இந்துஸ்தான் என்று அழைத்தார்கள். மற்றொரு வந்தேறிகளான கிறிஸ்துவர்கள் ஆரியம் திராவிடம் என புது கதையினை கட்டி பிரிவினை புரிந்தார்கள். அவர்கள் சொன்ன பொய்யுரைகளை தான் திராவிட கட்சி திருட்டு கூட்டமும், கமுனிஸ்ட் கட்சி தேச துரோகிகளும், காங்கரஸ் கட்சி ஊழல் பெருச்சாளிகளும், இன்னும் பிற முட்டாள் கட்சிகளும் இன்னமும் கட்டி அழுது கொண்டு ஆதி பாரத மைந்தர்களான இந்துக்களையும் சாதி, இன, மொழி வேறுபாடுகளை கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சி புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அநியாயம் அக்கிரமம் புரிந்தவர்கள் யாரென்று உன் மனசாட்சியை கேட்டு பார் தெரியும்.

  153. oru kolaiku innoru kolai theervu aagathu, athey neram indiayaavula sattam kadumaiyaaka padanum, sariyath sattatha kondu varanum. athey nerathuku pengal freedoma kuraika koodathu.
    pothuvaa oruthan oru kolai pannuna avanuka kolaiya poruthu thandanai kodukanum, ex oruthan jaathi veriyala kolapandraana avanuku thooku thandanai kodukanum, kooli paaiya seyal paduraana avanuku 20 to 25 varusam jailla podanum, avanuku jaamin valanga koodaathu. pengala karpalikiraana avana 20 varusam jaila podanum with kudumba kattupaadu pannidanum.
    therinja kolaipandravannuku jaaminay illama 20 varusam or thooku thandanai kudukanum. bom vaikaravana vadakoriyavula pannuna maathiri beerangiyila kattivachu sudanum, ithellam pannuna itha paakaravannuku meendum intha maathiri thappu seiyannumnu oru ennam varavavarathu. oruthan jaathikaaga kolai pannitaanna avana antha kolaiyaala paathika pattavanga kallala adichu kollanum appo evanuku intha jaathi veri varathu ithu eppo sattam akka padutho appothaan namma naadula intha jaathi pirachanai mathapirachanai ithu ellam kuraiyum, athey maathiri inga panakaaranuku oru maathiri sattam alayku oru maathiriya sattam iruka koodathu. thappu pannuna kandipa thandanai kidaikumnu ellorukum theriyanum ennaiku antha naal varutho annaiku thaan namma nadula jaathi kalavaram oliyum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *