வன்முறையே வரலாறாய்…- 27

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்களின் மீது தாக்குதல் எதுவுமே நடக்கவில்லையா? என்ற கேள்வி நம் முன்னர் எழுப்பப்படுமானால், அதற்கு ‘ஆம். நடந்தது’ என்பதே நேர்மையான பதிலாக இருக்கமுடியும். ஆனால், முஸ்லிம்களின் மீதான வன்முறை ஒப்பீட்டளவில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடந்த வன்முறையை விடவும் மிக, மிகக் குறைந்ததே. அதனைக் குறித்து இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.

தேசப் பிரிவினையின் போது முஸ்லிம்களின் மீதான தாக்குதல் அதிக அளவில் நடந்தது இந்தியப் பகுதியிலிருக்கும் கிழக்கு பஞ்சாபில் மட்டுமே, பாகிஸ்தானியப் பகுதியில் சிக்கித் தங்களின் உடைமைகளையும், உயிரையும் இழந்த தங்களின் சகோதரர்களுக்குப் பதிலடியாக கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்தார்கள். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. முஸ்லிம்களின் மீதான சீக்கியர்களின் கோபத்திற்கு கடந்த கால வரலாறும் ஒரு காரணம்.

guru-nanak-dev-jee-holding-clay-lamp-32x38in-rustic-gold-leaf-frame-e1312991477223
குரு நானக்

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குரு நானக், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளனான பாபரின் காலத்தவர். தன் கண் முன்னே அப்பாவி இந்துக்கள் கூட்டம், கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதனையும், இந்துக்களின் வழிபாட்டிடங்கள் இடித்துத் தள்ளப்படுவதனையும் கண்டவர் குரு நானக். மொகலாயனான பாபரினால் நடத்தப்பட்ட அந்தக் கொடூரங்களைக் குறித்து அவரது “பாபர் வாணி”யில் துல்லியமாகப் பதியும் குரு நானக், அந்தக் காட்டுமிராண்டித்தனங்களை மிகக் கடுமையாகக் கண்டித்தவர். அப்பாவி இந்துக்களின் மீது முஸ்லிம்கள் நடத்திய குரூரங்களை கடவுளிடம் விவரிப்பது போல அவர் எழுதிய பகுதிகள், என்றைக்கும் அழியாத வகையில் சீக்கியர்களின் புனித நூலான ‘குரு கிரந்த சாஹிப்’பில் இணைக்கப்பட்டுள்ளன.

பிற்காலத்தில் குரு நானக்கின் பின் வந்த சீக்கிய குருக்களும் முஸ்லிம்களின் குரூரத்திற்கு ஆளானார்கள். ஜஹாங்கீர், தனக்கு எதிராக அவனது மகனான இளவரசன் குஸ்ரு புரட்சியில் ஈடுபட்ட போது அதற்கு ஆதரவளித்த சீக்கிய குரு அர்ஜுன் தேவினை (Guru Arjun Dev) இறக்கும் வரை சித்திரவதை செய்து கொல்லும்படி ஆணையிட்டான். அதன் பின்னர், காஷ்மீரி இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது குறித்துக் கேட்கச் சென்ற சீக்கிய குருவான தேஜ்பகதூரையும், அவரது சீடர்களையும் ஔரங்கசீப் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்தான். குரு தேஜ்பகதூர் இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கையில் அவரது தலை துண்டிக்கப்பட்டது.

1705-ஆம் வருடம் ஔரங்கசீப், குரு தேஜ்பகதூரின் மகனான குரு கோவிந்த் சிங்கையும் அவரது ஆதரவாளர்களையும் தாக்கி, அவர்களின் கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டான். அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வழியமைத்துத் தருவதாக வாக்குக் கொடுத்த ஔரங்கசீப், குரு கோவிந்த் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் கோட்டையை வெட்டு வெளியே வந்தும் அவர்களைப் படுகொலை செய்து கொன்றான். அதிர்ஷ்வசமாக குரு கோவிந்த் சிங் காயங்களுடன் அங்கிருந்து தப்பினார். இருப்பினும் ஔரங்கசீப் அவரை விடாமல் பின்தொடர்ந்தான். இறுதியில் 1707-ஆம் வருடம் ஔரங்கசீப்பின் சிர்ஹிந்த் (பஞ்சாப்) கவர்னரான வஸீர் கான் என்பவன் குரு கோவிந்த் சிங்கைக் கொன்றான்.

221574
குரு கோவிந்த் சிங்

இந்த வரலாற்றுப் பின்னணியில், முஸ்லிம்கள் மீதான சீக்கியர்களின் கோபம் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் தங்களின் சீக்கிய குருமார்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டதன் காரணமாக அவர்கள் தீராத வன்மத்தில் இருந்தார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம்களும் இணைந்து துவக்கிய சிப்பாய்க் கலகத்தின் போது (1987- முதல் இந்திய சுதந்திரப் போர்)  சீக்கியர்கள் பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்துகொண்டு அந்தக் கலவரத்தை அடக்கினார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

‘மாப்ளா’ கலவரங்களும், கல்கத்தாவில் முஸ்லிம்கள் தங்கள் சீக்கிய சகோதரர்கள் மீது நடத்திய வெறியாட்டங்களும், மேற்குப் பஞ்சாபிலும், அமிர்தசரஸிலும் நடந்தேறிய அவலங்களும், கிழக்கு பஞ்சாபில் சீக்கியர்கள் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களை நடத்தக் காரணமாக இருந்தன. இனி முஸ்லிம்களின் மத்தியில் அல்லது முஸ்லிம்களுடன் இணைந்து அமைதியாக வாழ்வது என்பது மிகவும் கடினம் என்பதனை உணர்ந்து கொண்ட சீக்கியர்கள் கிழக்குப் பஞ்சாபிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடிக்க முனைந்தார்கள். இருப்பினும் சீக்கியத் தலைவர்கள் ஒன்றுகூடி வெளியிட்ட ஒரு அறிக்கை, முஸ்லிம் பெண்கள், குழந்தைகளைத் தாக்குவதனை சீக்கியர்கள் தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறது.

“முஸ்லிம்களுடனான நட்பினை நாங்கள் விரும்பவில்லை; மேலும் இனி ஒருபோதும் அவர்களை எங்களது நண்பர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் மீண்டும் போரிட வேண்டியிருக்கலாம். ஆனால் அது நேரடியான போராகத் தான் இருக்கும். ஆண்கள் ஆண்களைக் கொல்லப்படுவதுதான் இனி நடக்கும். அகதிகளாக வரும் (முஸ்லிம்) பெண்களையும், குழந்தைகளையும் கொல்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்….(பாகிஸ்தானுக்குச் செல்லும்)  அகதி ரயில்களின் மீது, சாலையில் செல்லும் அகதிகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும்… நமது பாரம்பரியத்தினைக் காப்பாற்றுவது மிக முக்கியமானது….”

சிறிது விசித்திரமான அறிக்கையாக இருந்தாலும், முஸ்லிம் ஆண்களுடன் நேரடியாக சண்டையிடுவதன் முக்கியத்துவத்தையும், முஸ்லிம் பெண்கள், குழந்தைகளைத் தாக்காமல்  இருப்பதனையும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. ஆனால், பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம்களின் கொடூரங்களை அனுபவித்த சீக்கியர்கள் தங்களின் கோபத்தைக் காட்ட ஆரம்பித்தனர்.

இன்னொருபுறம், இந்துக்களின் தாக்குதல்கள் காரணமாக அல்வார் மற்றும் பரத்பூர் ராஜ்ஜியங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரும் அழிவினைச் சந்தித்தனர். பரத்பூரும், அல்வாரும் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற் பட்ட சுதந்திர அரசுகள். மியோக்கள் (Meo) என்றழைக்கப்பட்ட முஸ்லிம் இனத்தவர்கள் இந்தப் பகுதியில் பெருமளவில் வசித்தனர். முப்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், ஏறக்குறைய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மியோக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நவகாளியிலும், பஞ்சாபிலும் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு பதிலடியாக ராஜஸ்தானிலும் கலவரம் ஏற்பட்டது. இருபக்கத்திலும் ஏராளமான சேதம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் இயான் கோப்லெண்ட்.

டில்லியின் புறத்தே அமைந்திருக்கும் இந்து கிராமங்களின் மீது முஸ்லிம் மியோக்கள் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்துக்கள் அருகிலிருந்த அல்வார் ராஜ்ஜியத்தைத் தாக்கினார்கள். பத்திரிகையாளர் கோஸ்லா, “இந்துக்களின் கிராமங்களில் மீது முதலில் தாக்குதலை ஆரம்பித்த மியோக்கள் ஏரளமான வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதனைத் தொடர்ந்த இந்துக்களின் எதிர்த் தாக்குதல்களில் அல்வாரின் மியோக்கள் அழிக்கப்பட்டார்கள்” என்கிறார். இத்துடன் மியோக்கள் ராஜஸ்தானின் மத்தியப் பகுதியைக் கைப்பற்றித் தங்களுக்கென ஒரு தனி முஸ்லிம் நாடான  ‘மியோஸ்தானை’ அமைக்க முயன்றதுவும் இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

***

Sikhs migrating to Punjab after the division of India_October 1947_thumb[4]
பிரிவினையின் ஒரு கோரக் காட்சி
இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏறக்குறைய ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்து, சீக்கியப் பெண்கள் முஸ்லிம்களினால் கடத்திச் செல்லப்பட்டார்கள். பல மில்லியன் இந்து மற்றும் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். நவகாளியில் மட்டுமே நான்கு லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் வாள்முனையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.

இருபுறமும் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டார்கள், தேசப் பிரிவினையின் காரணமாக ஏறக்குறைய பத்தொன்பது மில்லியன் பேர் (1.9 கோடி)  தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளானார்கள். பஞ்சாப் பகுதியில் 1951-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 14.5 மில்லியன் பேர்கள் எல்லைகளைக் கடந்தார்கள் (இரு புறமும்). கிழக்கு பாகிஸ்தானிலிருந்து ஏறக்குறைய 3.5 மில்லியன் இந்துக்கள் இந்தியப் பகுதிக்கு அகதிகளாக வந்தார்கள். ஆனால் வெறும் ஏழு இலட்சம் முஸ்லிம்கள் மட்டுமே கிழக்குப் பாகிஸ்தானுக்குச் சென்றார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்கள் தாருல்-ஹரப்பான இந்து இந்தியாவை விட்டுத் தங்களின் கனவு தேசமான இஸ்லாமிய பாகிஸ்தானுக்கு விருப்பத்துடன் மட்டுமே சென்றார்கள். அவ்வாறு செல்ல விரும்பாத முஸ்லிம்களை பெரும்பாலும் எவரும் இந்துப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நிலையோ வேறு. முஸ்லிம் லீகும் பிற இஸ்லாமிய இயக்கங்களும் திட்டமிட்டுத் தங்களின் பகுதியிலிருண்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை படுகொலைகள் செய்து விரட்டியடித்தார்கள்.

பிரிவினை காரணமாக இந்துக்களும், சீக்கியர்களும் இழந்த சொத்துக்கள் முஸ்லிம்களின் சொத்து மதிப்பினை விடவும் பல மடங்கு அதிகமானவை. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இந்து வணிகர்களும், சீக்கிய விவசாயிகளும் தங்களின் கடின உழைப்பு காரணமாக செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள். குறிப்பாக கிழக்குப் பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்த இந்துக்களின் கட்டுப்பாட்டில் ஏறக்குறைய 80 சதவீத வளம் இருந்தது. வங்காள நகரங்களில் இருந்த பல கட்டிடங்களும், கிராமப்புற நிலங்களும் என 85 சதவீத செல்வம் இந்துக்களுக்கு உரிமையாக இருந்தது.

வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவர்கள் வெறும் 8.2 சதவீதமே இருந்தாலும், அந்தப்பகுதியின் 80 சதவீத வரி அவர்களால் மட்டுமே அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்டது. பிரிவினைக்கு முன்னர் லாகூரிலிருந்த 80 சதவீத சொத்துக்கள் முஸ்லிம்களல்லாதோர் வசமே இருந்தன. இந்த சொத்துக்களைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கவே முஸ்லிம் லீக் பல பொய்ப் பிரசாரங்களையும், பிரிவினைவாதத்தையும், வன்முறையையும் திட்டமிட்டுத் தூண்டியது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், பஞ்சாப் பகுதியில் கலவரங்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இந்து, சீக்கியர்களை விரட்டியடித்து அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் கைப்பற்றிய ஒவ்வொரு முஸ்லிமும்  ‘தான் பஞ்சாபின் நவாபாக மாறியதாக’ சந்தோஷம் கொண்டான்.

(தொடரும்)

71 Replies to “வன்முறையே வரலாறாய்…- 27”

  1. வாள் முனையில் மதமாற்றப்பட்ட முஸ்லிம்கள் தான் இப்போது இந்தியாவிலும் பாகிஸ்தான் பங்களாதேசிலும் உள்ளனர், அப்படியானால் நீங்கள் முஸ்லிம்களை அழிக்க சொல்லுகிறீர்கள். அப்போது ஒருகாலத்தில் நம் இனத்தவர்களாக இருந்த (முஸ்லிம்)இந்துக்களை நாமே அழித்ததாக ஆகாதா?
    வாளைக்கண்டு பயப்பட்டு மதம் மாறும் அளவுக்கு அந்தக்காலத்தில் ஹிந்துக்கள் அவ்வளவு பயந்தான் கோழிகளா? அல்லது உங்களின் மதவெறியை வெளிப்படுத்த முஸ்லிம்கள் மீது பழி சுமத்துகிரீர்களா? அல்லது உலக அளவில் இந்தியாவின் நற்ப்பெயரை கெடுக்க நம் நாட்டு மக்களுக்குள் மதச்சண்டைகளை ஏற்ப்படுத்த பொய் செய்திகளை வெளியிடும் எதிரி நாட்டு ஏஜென்டா நீங்கள்?
    அயோக்கியனே வரலாற்றில் பல நல்ல குறிப்புகளெல்லாம் உள்ளது. உன் மதவெறிக்கண்ணுக்கு குறைகள் மட்டுமே தெரியுது. உன்னால் பாதிக்கப்படப்போவது முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்துக்களும் இந்த நாடும் தான்.
    அயோக்கியனே உன்னைப்போன்றவர்களை தூக்கில் கூட போடலாம் ஏனெனில் உன் விஷ கருத்துக்களால் மதக்கலவரங்கள் ஏற்ப்பட்டு எத்தனை என் இந்துத்தாய்மார்கள் பாதிப்படைவார்களோ. அதற்க்குத்தண்டனையாக உனக்குத்தூக்குத்துதண்டனை.

  2. அப்பா நாஞ்சிகுமார்,
    முதலில் இது ஒரு வரலாறு என்பதை நினைவில் கொள்.

  3. சுய சிந்தனை இல்லாத நண்பர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். திரு ரூபன் எழுதுவது அவருடைய கருத்துக்கள் அல்ல. திரு கான் அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம். வரலாறுகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் சரித்திரம் என்ற பெயரில் இருக்கும் பாடத்தில், உலகில் நடந்த பல போர்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்படுகின்றன. இங்கிலாந்தும், பிரான்சும் நூறாண்டுகளுக்கு ஒருவரோடு ஒருவர் போர் செய்த நாடுகள். அந்த போர்களினால் அவை இழந்தவை ஏராளம். அந்த வரலாற்றை படித்துவிட்டு, அந்த நாடுகள் இன்று சண்டையிட்டுக்கொண்டா திரிகின்றன.?

    இந்த தமிழாக்கத்தை படிக்கும் இந்துக்கள் , அந்த காலத்தில் ஏற்பட்ட நிலை நமக்கு மீண்டும் ஏற்படாமல் நாம் தற்காத்துக்கொள்ளவேண்டும் என்ற பாதுக்காப்பு நோக்கத்துடன் இது எழுதப்படுகிறது என்பது ஜடங்களுக்கு புரியாது.

    முன்னர் நடந்த மோதல்கள் மற்றும் அழிவுகளைப்பற்றி யாரும் எழுதக்கூடாது அப்படி எழுதினால் அதனைப்படித்து மீண்டும் வெறுப்பு வளரும் என்று அஞ்சுபவர்கள், பள்ளி கல்லூரிகளில் இருக்கும் சரித்திரப்பாடத்தை நீக்குமாறும் கூறுவார்கள்.

    முதல் இரு உலகப் போர்களில் மனித இனம் ஏராள உயிர்களை இழந்தது. அதனை வரலாற்றில் படிக்கும் நாம் என்ன நினைக்கிறோம் ? கடவுளே, இது போன்ற போர்கள் எதிர்காலத்தில் மீண்டும் நேரக்கூடாது என்று தான் பிரார்த்தனை செய்கிறோம். அதுதான் மனித இயல்பு. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் முத்து துறைமுகத்தில் ஜப்பான் குண்டு வீசியது. உடனே பதிலடியாக அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசித் தாக்கியது. அந்த அணு ஆயுதப்போரில் பல லட்சம் பேர் இறந்து, பல லட்சம் பேர் கதிரியக்க பாதிப்புக்களை அடைந்தனர். அந்த வரலாற்றைப் படிக்கும் நாம், மீண்டும் கடவுளே அதே போன்ற ஒரு அணு ஆயுத தாக்குதல் உலகில் எந்த மூலையிலும் நிகழக்கூடாது என்று பிரார்த்திக்கிறோம்.

    இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அந்த வரலாற்றை படித்த ஜப்பானிய மக்கள் அமெரிக்கர்களுடன் பகைமை பாராட்டி சண்டையிட்டுக்கொண்டா இருக்கிறார்கள். ஜப்பான் அமெரிக்காவில் ஏராளம் முதலீடு செய்துள்ளது. இதுதான் வரலாறு. உண்மை புரியாமல் எழுதுவோருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    உண்மைகளை வரலாற்றில் உள்ளது உள்ளபடி பதிவு செய்த திரு கான் அவர்களுக்கு மேலும் மேலும் இறைஅருள் பெருகட்டும். தமிழாக்கம் செய்து தந்த திரு ரூபன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைப் பேரருள் அனைத்து உதவிகளையும் செய்யும்.

    இந்த வரலாறுகளைப் படிக்கும் இளைய இந்து சமுதாயம் எதிர்காலத்தில் , முன்பு ஏற்பட்ட பாதிப்புக்கள் வராமல் பார்த்துக்கொள்ளும். நாஞ்சில் குமார் போன்ற கருத்துக் குருடர்கள் நமது ஆழ்ந்த அனுதாபத்துக்கு உரியவர்கள்.

    வரலாற்றை படித்தால் சண்டையும் வெறுப்பும் வரும் என்று அஞ்சுபவர்கள் உண்மை புரியாதவர்கள். வரலாறு எழுதப்படுவதால் பலரின் பொய் முகமூடிகள் கிழியும்.

  4. நூறு ஆண்டுகள் போர் புரிந்த இங்கிலாந்தும், தன்னுடைய ஆங்கில அகராதிகளில் அதாவது டிக்சனரியில், ஏராளம் பிரஞ்சு சொற்களை சேர்த்துக்கொண்டு விட்டது. அதே போல பிரஞ்சு காரர்களும் ஆங்கிலேயர்கள் உறுப்பினராக உள்ள ஐரோப்பிய யூனியனில் சேர்ந்து தான் வாழ்கிறார்கள். வாழ்வின் உண்மை நிதர்சனங்கள் புரியாமல் ஏதாவது உளறுவது சிலருக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

    நாஞ்சில் குமார் போன்றவர்கள் சொல்வது உண்மையானால், உலகில் எந்த நாட்டிலுமே சரித்திரப்புத்தகங்கள் தடை செய்யப்படும். ஆனால் அவ்வாறு செய்யாமல் , சரித்திர ஆராய்ச்சிகள் மேலும் மேலும் செய்து வரலாறுகளை துல்லியமாக எழுதிவருகிறார்கள். ஏனெனில் சரித்திரத்தை படித்து நாம் நல்ல பாடங்களை கற்கவேண்டும். எதிர்காலமாவாது அமைதியாக இருக்கவேண்டும் , பழைய தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகத்தான்.

    நாஞ்சில் குமார், உங்களுக்கு ஒரு கேள்வி ? மதம் மாற்றப்பட்ட இந்துக்கள் முஸ்லீமாக மாறிய பின்னர் , இப்போது பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இருப்பவன் பழைய இந்துக்கள் தானே என்ற உங்கள் கேள்வி முற்றிலும் பொருத்தமற்றது. பாகிஸ்தான் மற்றும் பங்களா தேசத்தில் வாழும் இஸ்லாமியர்கள் முல்லாக்களால் மதவெறி ஏற்றப்பட்டு , பெண்ணடிமை, ஆணாதிக்கம் ஆகியவற்றின் கைக்கூலியாகவே உள்ளனர். சுய சிந்தனை இல்லாத மிருகங்கள் ஆகத்தான் உள்ளனர். பிற மதத்தினரை கொல்லும் காட்டுமிராண்டி தனத்தை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஷியாக்களை மற்றும் அஹமதியாக்களை கோடிக்கணக்கில் கொன்று வரும் , வஹாபிய தீவிரவாத இஸ்லாமியர்களை ஆதரிக்கும் நாஞ்சில் குமார் போன்றவர்களை தான் தக்க நீதி விசாரணை செய்து தண்டிக்கவேண்டும். இவர்களைப் போன்ற காலிகளுக்கு கடவுள் நிச்சயம் நல்ல தண்டனை கொடுப்பார்.

  5. தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவினருக்கு,

    இந்தக் கட்டுரைத் தொடரை நாஞ்சில் குமார் போன்ற சிறுவர்களும் படிக்கிறார்கள் என்பதினை அறிந்து ஆச்சரியமடைந்தேன். இது வயது வந்தவர்களுக்கான கட்டுரைத் தொடர் என்பது நீங்கள் அறிந்ததே. குமார் போன்ற சிறுவர்கள் படித்தால் அவர்கள் பயந்து போய் கெட்ட கனவுகள் வரும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதல்ல. எனவே இனிவரும் கட்டுரைகளின் முகப்பில் “வயது வந்தவர்களுக்கும் மட்டும்” என்று போடுவதா வேண்டாமா என்கிற முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

    நாஞ்சில் கொமாரு, இது பெரியவங்க சமாச்சாரம்டா கண்ணு. இத்தையெல்லாம் படிச்சா ரொம்ப திகிலா இருக்கும். பால் குடிச்சிட்டுப் போய்த் தூங்கு. இன்னா?

  6. பெரியவர்களுக்கு மட்டும் என்று போட்டுவிட்டால் சிறுவர்கள் பார்க்காமலிருப்பார்களா? சைல்ட் லாக் இருக்கவேண்டும். சினிமாவில் ஏ சர்டிபிகேட் மட்டுமில்லாமல் தியேட்டரிலும் சிறுவர்களுக்கு நுழைவுச்சீட்டு விற்கமாட்டார்கள். வலைபதிவுகளில் சாத்தியமே கிடையாது. எனவேதான், அவர் பயப்படுகிறார். மனமுதிர்ச்சியடையாதோர் இப்படிப்பட்ட கட்டுரைகளைப்படித்து இசுலாமிய மக்களை தாக்க வந்தால்? அதற்கு உங்கள் பதில் அவரைச் சிறுவனாக்கி படிக்காதே கண்ணு என்கிறீர்கள். என்ன நகைச்சுவை ரூபனிது?

    ரூபன் எனக்குச் சொல்லுங்கள் பெரியவர்களுக்கு மட்டும் என்று போட்டுவிட்டு தடுக்க முடியுமா?

    மணி1

    அவரை ஒருமையில் இழிவாக அழைத்ததால் உங்களுக்கும் அதே.

    மணி, வரலாறு எழுதப்படக்கூடாதென்பதில்லை. அவ்வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட இன மக்களைப்பற்றி கொடூரமானவர்கள் என எழுதப்படும்போது அதன் விளைவுகளை எண்ணிப்பார்த்தாயா?

    ஜீக்கள் என்றோ இயேசுநாதரை சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் மெல்க்ப்சன் இயேசு என்ற சினிமாவை எடுத்துக்காண்பித்தபோது ஜீக்கள அதை ஆன்டி செமிட்டிசம் என்றார்கள். ஏனப்பா மணி? ஜீக்கள்தானே இயேசுவை கொன்றார்கள்? அது உண்மையான வரலாறுதானே? அதைச்சொல்லிக்காண்பித்தால் அதை ஏன் தடுக்கிறார்கள்?

    எனவே, வரலாறு அறிஞர்கள் படிக்கமட்டும் இருக்கட்டும். உன்னைப்போன்ற ஆட்களும் படிக்கட்டும். ஏன் எல்லாரும் படிக்கும்படி இருக்கவேண்டும் என்பதுதான் நாஞ்சில் குமார் என்ற பெயரில் எழதும் இசுலாமியரின் கேள்வி.

    தமிழ் ஹிந்து காம் ஆசிரியர் குழ்வை அழைக்கிறார் ரூபன். இந்த .காம் ஒரு பக்கத்தில் இசுலாமியர்களைச் சகோத்ரர்க்ளாகப்பாவித்து எழதப்படும் கட்டுரைகளை (க்ருஸ்ணகுமாரின்) கட்டுரைகளைப்போடுகிறது. இன்னொரு பக்கம் ரூபனின் இந்துக்களை இசுலாமிய்ருக்கு எதிராக வெறியேற்றும் எழுத்துக்களையும் போடுகிறது. உண்மையிலேயே ஜனநாயகம்தான்.

  7. முகமூடிகளை ஒன்றும் புதிதாக இங்கு எவரும் கிழிக்கவில்லை. அது உலகமுழுக்க தெரிந்த கதைதான். அவுரங்கசீப் சீக்கிய குருவை (தேக் பஹதூர்) கொன்றது சீக்கிய மக்களுக்குத் தெரியும். இன்றும்தெரியும். இதை கான் சொல்லியும் ரூபன் மொழிபெயர்த்தும்தான் தெரியவேண்டுமா? சீக்கியர்கள் தங்கள் வலைபதிவுகளிலும் குருத்துவாரக்களிலும் இசுலாமியருக்கு எதிராக வரலாறு எழுதி சீக்கியமக்கள் மனங்களில் இசுலாமிய வெறுப்பேற்றுகிறார்களா?

    இந்துக்கள் இவ்வரலாற்றைப்படித்து பின்னர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமென் உறுதியைப்பூண்டுவிடுவார்களாம். இதை அறியாதவர்கள் ஜடங்களாம்.

    இந்துகள் என்றால் பொதுமக்கள்தான். அவர்கள் சாதாராணமவர்கள். இப்படிப்பட்ட இசுலாமிய வெறுப்புக்கட்டுரைகள் கண்டிப்பாக அவர்களைத் தவறான வழிக்கு இழுத்துதான் செல்லும். இதையறியாதவந்தான் ஜடம். கருத்துக்குருடன்.

    இசுலாம் என்பது ஒரு மதம். இந்து, கிருத்துவம், சீக்கியம், பவுத்தம், ஜைனம், என்று எல்லாம் மதங்கள். ஒரு மதத்தில் சொல்ல்ப்பட்டவை அதில் சாராத அன்னியருக்குப் பிடிப்பதில்லை. அதற்காக அம்மதத்தை இழிவாகப்பேசுவதா? பிடிப்பவர்கள் அதில் இருக்கிறார்கள். பிடிக்காதவர்கள் வேறுமதத்தில் இருக்கிறார்கள் என்று விடவேண்டியதுதானே?

    அவர்கள் கொடூரமானவர்கள். நாங்கள் நல்லவர்கள் என்று பீற்றல் ஏன்? எல்லாமதங்களிலும் குற்றம், குறைகள் உள்ளன. இந்துமதத்தில் இல்லாக்குறைகளா?

    மனதில் வெறுப்பு இருந்தால் அவன் இந்து இல்லை. அன்பே சிவம்.

  8. ‘பெரியவர்களுக்கு மட்டும்'” என்று போடுவதை விட, ஆசிரியர் குழு இப்படிப்போடலாம்;

    //இவ்வரலாற்றுக்கட்டுரையில் குறிப்பிடப்படுவோர் இசுலாமின் ஒரு பிரிவாகக்கருதப்படும் அல்லது திரிக்கப்பட்ட பிரிவாக கருதப்படும் ஜிஹாதிகள், வஹாபிகள் போன்ற தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுமே.

    பொது இசுலாமையும் பொது இசுலாமிய மக்களையும் குறிப்பதாக் எடுத்துக்கொள்ளக்கூடாது என எச்சரிக்கிறோம்.//

    This is being fair and just and humanitarian. Such disclaimer will make Tamil hindu.com a truly a Hindu organsiation believing in

    अयं बन्धुरयं नेति गणना लघुचेतसां
    उदारचरितानां तु वसुधैव कुटुम्बकं.

  9. மதிப்பிற்குரிய தமிழ் ஹிந்து இணையதளத்திற்கோருக்கு,

    //அயோக்கியனே வரலாற்றில் பல நல்ல குறிப்புகளெல்லாம் உள்ளது. உன் மதவெறிக்கண்ணுக்கு குறைகள் மட்டுமே தெரியுது. உன்னால் பாதிக்கப்படப்போவது முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்துக்களும் இந்த நாடும் தான்.
    அயோக்கியனே உன்னைப்போன்றவர்களை தூக்கில் கூட போடலாம் ஏனெனில் உன் விஷ கருத்துக்களால் மதக்கலவரங்கள் ஏற்ப்பட்டு எத்தனை என் இந்துத்தாய்மார்கள் பாதிப்படைவார்களோ. அதற்க்குத்தண்டனையாக உனக்குத்தூக்குத்துதண்டனை.//

    மீண்டும், மீண்டும் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், இப்படிப்பட்ட கருத்துக்களை வலையேற்றம் செய்யாதீர்கள், உயர்திரு தாயுமானவன் அவர்களுக்கு நீங்கள் விடுத்த எச்சரிக்கை இவருக்கும் பொருந்தும். அவராவது “…ன்” என்றுதான் எழுதினர். இவரோ திரு ரூபனின் உயிரே பறிக்கப்பட வேண்டும் என்று கட்டளை இடுகிறார். இது வெறுப்பையும், வெறியையும் தூண்டுவதாக அமைந்து இருக்கிறது.

    வெளியிடத்தான் வேண்டும் என்றால், தரம் குறைந்த சொற்தொடர்களை நீக்கிய பின்னர், கருத்துக்களை வலையேற்றம் செய்யுங்கள். இல்லாவிட்டால், அதுவே, மேலும் தரம் குறைந்த சொர்தொடர்களைத் தாங்கிய பதில்களையும் வரவழைக்கும். வேண்டாம், இந்த விஷப் பரீட்சை! ஜனநாயகம் என்பதற்காக, நாம் எதையும் பேச முடியாது,

    “ரூபன் எழுதி இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை” என்று ஒருவர் எழுதி இருந்தால், அது ஜனநாயகம். மாறாக, “அயோக்கியனே” என்றும், “உனக்குத் தூக்குத்தண்டனை” என்னும் பொறுப்பில்லாத பதில்களை வலையேற்றம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஜனநாயகம் அல்ல, அது ஜனநாயத்தையே தகர்க்கும்.

    உயர்திரு BALA SUNDARAM KRISHNA அவர்களே,

    //இவ்வரலாற்றுக்கட்டுரையில் குறிப்பிடப்படுவோர் இசுலாமின் ஒரு பிரிவாகக்கருதப்படும் அல்லது திரிக்கப்பட்ட பிரிவாக கருதப்படும் ஜிஹாதிகள், வஹாபிகள் போன்ற தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் மட்டுமே.//

    உங்களுடைய இந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அது உண்மையும் அல்ல. வரலாறு கசப்பாகத்தான் இருக்கும். அதற்கு இனிப்புப் பூச்சு பூசவேண்டிய அவசியமும் இல்லை. வரலாறு எழுதப் படுவதே, அப்படிப்பட்ட கசப்பான சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது என்று அனைவரும் உணர்ந்து கொல்வதறகாகத்தான்.

    உயர்திரு ரூபன் அவர்கள் கிண்டலாகத்தான் //எனவே இனிவரும் கட்டுரைகளின் முகப்பில் “வயது வந்தவர்களுக்கும் மட்டும்” என்று போடுவதா வேண்டாமா என்கிற முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.// எழுதி உள்ளார்.

    அதை அப்படியே ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்?

    ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய இனப் படுகொலையை யூதர்கள் திரும்பத் திரும்ப நினைவு படுத்தி எழுதும்பொதெல்லாம், கிறித்தவர்களும் சேர்ந்து வருந்தினார்களே தவிர, “ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி, வெறியன், அவன் செய்ததைத் திரும்ப நினைவூட்டக்கூடாது” என்று சொல்லவில்ல. மாறாக, யூதர்களுக்கு ஆதரவாக, இனவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு நியூரம்பர்க்கில் தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள். யூதர்களுக்குச் சிறந்த நண்பர்களாகத்தான் கிறித்தவர்கள் இன்று விளங்குகிறார்கள்.

    நீங்கள் “Last Temptation of Jesus Christ” என்ற படத்தைப் பார்த்தீர்களா? சில கிறித்தவர்களுக்கு அது பிடிக்காவிட்டாலும், யாரும் போர்க்கொடி பிடிக்கவில்லை.

    இன்றும் அமெரிக்காவில் ஆப்பிரிக்க இனத்தவர்களை வெள்ளையர்கள் அடிமையாக வைத்திருந்த வரலாறு பேசப்படுகிறது. வெள்ளையர்கள் யாரும் அதை எதிர்ப்பதில்லை. சம உரிமை வேண்டும் என்று புரட்சி நடத்தி வெற்றிகண்ட மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாள் அமெரிக்காவில் அனைவராலும் கொண்டாடப் படுகிறது.

    இந்துக்கள் கோழைகளா என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில்……………..

    யாரும் கழுத்தில் கத்தியை வைத்து, “தமிழைக் கற்காதே!” என்று மிரட்டவில்லை. ஆனால், சில நூறு ரூபாய்கள் அதிகப்படி சம்பளத்திற்காக, வேலை வாய்ப்பு வேண்டி, அதிக மதிப்பு எண்களுக்காக, தமிழைக் கற்பதையே தமிழர்கள் இன்று தாமாகவே விட்டுவிட்டார்கள்!!!!!

    இன்று இப்படி இருக்கையில், பெரும்பாலான இந்துக்கள் அன்று துணிவுடன் இருந்ததால்தான் இன்று இந்தியாவில் 8௦ சதவிகித இந்துக்களாவது இருக்கிறார்கள். இன்று எத்தனை பேர் கத்திமுனை முன்பு துணிவுடன் நிற்பார்கள்? அன்றிருந்த சூழ்நிலை இன்று மீண்டும் ஏற்பட்டால் இந்துக்கள் ஒரு சதவிகிதம் கூட இந்தியாவில் இருக்கமாட்டார்கள். பாகிஸ்தானே இதற்கு ஒரு உதாரணம். பிரிவினையின்போது 15 சதவிகிதம் இந்துக்கள் பாகிஸ்தானில் இருந்தார்கள். தற்பொழுது, இரண்டு சதவிகிதம் கூட இல்லை.

    யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் என்பது இந்துக்கள் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது.

  10. என் கருத்தில் ஒரு எழுத்துப் பிழை ஏற்பட்டுவிட்டது.

    ஏழாம் பாராவில், கடைசி வரியில், “உணர்ந்து கொல்வதறகாகத்தான்.” என்பதை “உணர்ந்து கொள்வதற்காகத்தான்”. என்று திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். தவறுக்கு வருந்துகிறேன்.

  11. சில சமயங்களில் இறைவன் (இயற்கை) நமக்கு சில கேள்விகளுக்கான விடையைத் தருகிறான். இன்று காலை தினமலரில் அப்படி ஒரு விடை, அது இங்கே எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்குச் சரியான விடை.

    ///18ம் நுாற்றாண்டில், சென்னை மின்ட் பகுதியிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியிட்ட நாணயத்தில், காசு என்னும் தமிழ் சொல்லுக்கு பதிலாக, ஆங்கிலத்தில் ‘கேஷ்’ என, குறித்து உள்ளனர். இதுதான், ஆங்கில வார்த்தை, ‘கேஷ்’, தமிழில் இருந்து மருவியது என்பதற்கான ஆதாரம்.

    வரலாறு தெரியாமல், அறிவியல் மட்டும் அறிந்து கொள்பவர்களால், அடுத்த நாட்டுக்கு தான் பயன். வரலாறு தெரிந்து, தேசப்பற்றும் கொண்டவர்களால் தான் தாய்நாட்டுக்கு பயன். நம் நாட்டுக்கு பயன்படக்கூடிய, இளைய சமூகத்தை உருவாக்குவதே என் நோக்கம்.
    மன்னர் மன்னன்,
    நிறுவன தலைவர், ‘பயிற்று’ அமைப்பு
    99448 84432 ///

    இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்துப் பயன்பெற ….

    https://www.dinamalar.com/news_detail.asp?id=1031363

    வாழ்க வளமுடன் ….
    வாழ்க வரலாற்று அறிவுடன் ….

  12. திரு அரிசோனன் அவர்களின் அற்புதமான மறுமொழிக்கு நமது நன்றிகள்.

  13. ஓர் அரிசோனன்!

    மாறுபட்ட வாழ்க்கை முறைகள், கருத்துகள், மதங்கள் கொண்டோர் ஓரிடத்தில் ஒன்றாக வாழமுடியும். உ-ம்: இன்றைய அடுக்குமாடி வாழ்க்கை. அவர்கள் பொதுவிடங்களில் ஒற்றுமையாகத்தான் வாழ்வார்கள். அப்படி வாழ்வதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு. Human beings come together in open society, not because they love one another, but because it gives them a safety net. For every religious people their religion gives the feeling of safety, according Durkheim. He adovacates religion only for that purpose. Our Tamilians said ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு although they didn’t exclusively refer to religion. Many philosophers have pointed out that society living is basically a collective selfishness; a convenient arrangement only. When a group of people feel that their life style is threatened, or cannot be kept intact, they cuddle together in a place Ighetto), for safety. E.g Tamil brahmins in earlier period (They wanted to preserve their life style: hence agraharams. Today Muslims all over India don’t live with other people.or Jews. It is easy to provoke them by just spread an alarm that their culture and religious life is in danger of extinction or threat from outside)

    ஒரு கன்வீனியன்ஸ். அது வீட்டிற்குள் நுழையும‌ளவுக்கும், வாழ்க்கை முறைகளை விட்டுக்கொடுப்பதற்கும் உபயோகிக்கப்படுவதில்லை. இதைத் தெரிந்தே அவர்களும் வாழ்கிறார்கள். அதாவது, ஒருவரையொருவர் புரிந்து விலக வேண்டிய இடத்தில் விலகி, சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து வாழ்வதுதான் நாகரிக வாழ்க்கை. I need not change my religion. My muslim neighbour need not change his. We can live together in society amicably and happily.

    At the same time, such convenient is nebulous and thin. It should be always kept in watch and constant repair. Eternal vigilance is the price of democracy. So also, eternal vigilance is the price of communal harmony. Because it can be easily ruptured by scheming anti-social elements. எனவே என்னேரமும் அதைச்சீரழித்து மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாகப் பண்ணவைக்க முடியும். நூறுபேரில் ஒரு கெட்டவன் இருந்தால் அதைச்சாதிக்க இலகுவாக முடியும். இரவோடு இரவாக ஒரு பள்ளிவாசல் முன்பு ஒரு பன்றியை வெட்டிப்போட்டுவிட்டால்? ஒரு பெரிய கோயிலுக்குள் ஒரு பசு மாட்டை வெட்டிப்போட்டுவிட்டால்? ரமலான் மாதத்தில் ஒலி பெருக்கிகளை அலறவிட்டு வேற்றுமதப்பாடல்களைப்போட்டுவிட்டால்? விநாயகர் ஊர்வலத்தில் இரகசியமாக கல்லெறிந்து ஓடி விட்டால்? இப்படியாக‌ திட்டமிட்டு சதி செய்தால், மக்களை ஒருவொருக்கொருவர் நிரந்தர எதிரிகளாக்க முடியும்.

    சிங்களவர்களும் தமிழர்களும், பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் ஒன்றாக வாழமுடியும். முடியாக்காரணம், தூண்டுதல்களே. Once they become enemies, they themselves create more and more provocations: chain reaction follow one after another. And communal wounds will fester for ever, as we see in Gaza and Srilanka.

    கிருத்துவர்களும் யூதர்களும் இன்று லிபரல் வால்யூக்களைக்கொண்ட காரணத்தாலும் மதம் மிகவும் முக்கிய அங்கத்தை வாழ்க்கையில் இடம் பெறாமையாலும் பணத்தைச்சம்பாதித்து வாழ்க்கையை அனுபவித்தலே நோக்கமென்பதாலும், அவர்களுக்கிடையே இணக்கம் நிலவுகிறது. இந்தியாவில் முடியாது. இங்கு மதம் நெருக்குகிறது அனைவரையும். மதத்திற்காகத்தான் இந்த வலைபதிவே. தெரியவில்லை?

    எனவே தூண்டுதல்கள் ஆபத்தானவை. முன்பே கண்டுகொண்டு அவற்றை நீர்த்துப்போகச் செய்யவேண்டுவது சமூக நலவிரும்பிகளுக்கு கட்டாயம். படிப்போருக்கு வெறியேற்றும் கட்டுரைகள் இவற்றுள் ஒன்று.

  14. உண்மையை சொன்னால் ஏன் வலிக்கிறது.வேறொரு பெயரில் எழுதினால் தெரியாதா நாஞ்சிகுமாரரே.

  15. அடியவன்!

    உலக மக்கள் முன்னோக்கி வளர ஆசைப்படுகிறார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் மக்கள் சமூக வாழ்க்கைக்கு நலம பயக்கும். ஆனால், பழைமை வாதிகள் ஆதிகாலத்தில் அப்படி இப்படி என்று வரலாற்றைப்போட்டு மக்களை உசுப்பேத்தி இன வெறியை அவர்களுக்கு ஊட்டுகிறார்கள். வரலாறு மறக்கடிக்கப்பட்டாலே பல மக்கள் ஒன்றாக வாழ முடியும். அதுதான் நடக்கவில்லை. வர்லாறு அறிஞர்களுக்கு மட்டுமே இருக்கட்டும். பொது மக்களுக்கு நன்மையில்லை. தீமையே. ராஜேந்திர சோழன் உலகையே வென்றான்; போதி தர்மன் சீனர்களுக்கே கற்றுக்கொடுத்தான்; கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே முந்தோன்றி மூத்த குடி- இப்படி வரலாற்றில் இருந்த அல்ல இல்லா எல்லாவற்றையும் போட்டு ஒரு காக்டெயில் கொடுத்து மக்களின் நிம்மதி வாழ்க்கையைக்கெடுக்கும் ஜடங்களும் குருடர்களும் இருக்கும் வரை எங்கும் அமைதி இல்லை. வரலாறு உண்மையாகவே இருந்தாலும், அதனால் கெடுதிதான் என்று தெரிந்த பிற்கும் அதைப்பற்றி உணர்ச்சிகரமாக எழுதுவது சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும். ரூபனின் கட்டுரைகள் அதைத்தான் செய்யும். வரும் தலைமுறைகள் மன்னிக்காது. If an immature Hindu reads his essays, he can’t live in peace with his fellow humans if they are Muslims. History is therefore only for mature minds who can take correct lessons from the past.

  16. //உண்மையை சொன்னால் ஏன் வலிக்கிறது.வேறொரு பெயரில் எழுதினால் தெரியாதா நாஞ்சிகுமாரரே.//

    இதையையே நானும் கேட்கிறேன் நாஞ்சில் குமார் என்ற பெயரில் எழுதிய இசுலாமியர் சார்பாக: எல்லார் சார்பாகவும் கூட கேட்கலாம்.

    உண்மையை சொன்னால் ஏன் வலிக்கிறது.எந்த பெயரில் எவரெழுதினாலென்ன? ஏன் உங்களுக்கு உண்மையைசொன்னால் படபடக்கிறது?

    என்ன உண்மை?அடியவனுக்கு எழுதிய பதிலைப்படியுங்கள். சமூகத்துரோகம் பண்ணாதீர் என்பதுதான் உண்மை.

  17. In my remembrance, there is not more than two to three lines about partition in school History books. Our own hisory need to be taught in a straight way.

  18. /////வரலாறு உண்மையாகவே இருந்தாலும், அதனால் கெடுதிதான் என்று தெரிந்த பிற்கும் அதைப்பற்றி உணர்ச்சிகரமாக எழுதுவது சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும்//////

    இதை வீரமணி மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு போய் சொல்லும். கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் நம்மை கொடுமை படுத்தியவர்கள் என்று சதா 24 மணி நேரமும் மேடைதோறும் முழங்குகிறார்கள். அவர்களிடம் போய்
    “””வரலாறு உண்மையாகவே இருந்தாலும் அதனால் கெடுதிதானப்பா. அதனால் இனிமேல் இந்த மாதிரி சமூக துரோகத்தை செய்யாதீர்கள்””” என்று சொல்லு. அந்த தைரியம் உள்ளதா?

  19. ஆசிரியர் குழுவிற்கு ஒரு சிறு விண்ணப்பம்….

    வன்முறையே வரலாறாக என்பது எப்போது முடியுமோ என்று எனக்கு தெரியாது.. அனால் எப்போது முடிந்தாலும் இந்த கட்டுரை தொகுப்பை தயை கூர்ந்து நூலாக அச்சிட்டு வெளியிட வேண்டாம். கட்டுரைகள் அனைத்தும் மத வெறியை தூண்டும் விதமாக இருக்கின்றன. இதனால் பெரும்பான்மையான இந்துக்கள் மனதில் இசுலாமியர்களை பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்பட்டு அதனால் சிறுபான்மையினர் மீது வெறுப்பு ஏற்பட்டு மத கலவரம் வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது… ஆகவே இந்த கட்டுரை இணைய அளவிலேயே இருக்கட்டும்..

  20. சரித்திரம் படித்தால் சமூகத்தில் அமைதி குலையும் என்று அஞ்சுகிறார் புனைபெயர் நண்பர். அப்படி கருதுவது உண்மையானால் பள்ளி மாணவர்களுக்கு சரித்திரப் பாடப்புத்தகம் உடனடியாக பாடத்திட்டத்தில் இருந்து உலகம் முழுவதும் நீக்கப்பட வேண்டும். சரித்திரத்துக்கே இவ்வளவு பயப்படும் இந்த அஞ்சா நெஞ்சர், மதநூல் என்ற பெயரில் , கடவுள் நம்பிக்கை இல்லாவதவரை கொல்லவும், பிற மதத்தினரை கொல்லவும், பிற மதத்தினர் வழிபாட்டு தளங்களை இந்த 21- ஆம் நூற்றாண்டில் கூட , வெடிவைத்து தகர்த்துவரும் வெறிக்கூட்டத்தின் செயல்பாடுகளை தடுக்க என்ன செய்யப்போகிறார். அவர்கள் தகர்ப்பது பிற மதத்தினரின் வழிபாட்டு இடங்களை மட்டும் அல்ல. ஷியாக்கள் மற்றும் அஹமதியாக்கள் என்று இஸ்லாத்தின் பிற பிரிவினரின் மசூதிகளையும் கூட தொடர்ந்து தகர்த்து வருகிறார்கள். மேலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்தும் ஏராளமான தர்காக்களையும் தகர்த்துவருகின்றனர். புலம் பெயர்ந்த திரு இசை அமைப்பாளர் ரஹ்மான் அவர்கள் கூட கடப்பாவில் உள்ள இஸ்லாமிய ஞானியின் சமாதி தர்காவில் தான் வழிபடுகிறார். இந்த வஹாபிகள் எல்லா தர்காக்களும் தகர்க்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள், தொடர்ந்து தகர்த்தும் வருகிறார்கள். புனைபெயர் பேர்வழி சிறிதாவது சிந்திப்பாரா ?

  21. பாலசுந்தரம்

    உங்கள் கருத்துக்கள் சிறப்பானவை, ஆனால் there is no perfect society என்பது ஒரு maxim.
    அதில் உண்மை இருக்கிறது. எல்லாரும் ஒரே சீரானவர்களாஇ இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வது கவைக்கு உதவும்.

    வரலாற்று அறிவு என்பது பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற தத்துவத்தை நிலை நிறுத்தச் சில சமயங்களில் பயன்படுத்தப் படுகிறது என்பது உண்மை, ஆனால் பாமியான் சிலைகளை வெடி வைத்தும் குண்டுகளால் துளைத்தும் அழிக்கும் நாசக்காரக் குணம் நிலவும் உலகில் வரலாற்று அறிவு மிக மிக அவசியம், இல்லா விட்டால் ஒருபுறம் உங்களைப் போன்றவர்கள் அமைதியையும், நன்னடத்தையையும் பேசிக் கொண்டிருக்கையில் மறுபுறம் தாலிபான் போன்ற காட்டுமிராண்டிகள் உலகையே அழித்து விடுவார்கள். அவர்கள் போன்றோரை, அவர்கள் வளரும் முன்னர் அறிந்து தடுக்க வரலாற்று அறிவு அவசியம்.

    உணர்வு ?/

    “உணர்வு இல்லையேல் உரிமை இல்லை. உரிமை இல்லையேல் உயிரே இல்லை. உயிர் இல்லையேல் மனித சமுதாயமே இல்லை.”

    ஆழச் சிந்தித்தால் இந்த ஒரே வரிக்கு ஒரு கட்டுரையே எழுதலாம்.

  22. ராஜேந்திர சோழன் பிற நாடுகளின் மீது படை எடுத்தான்-அதனை இடம் பொருள் ஏவல் தெரியாமல் இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள்.எதற்காகப் படை எடுத்தான் என்றாவது தெரியுமா ? தமிழ் நாட்டு வணிகர்களின் கப்பல்களை கடல் கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளை அடித்தனர்.இதனால் வணிகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மேலும் கடல் கொள்ளையர்களுக்கு சில வெளிநாட்டு மன்னர்கள் மறைமுக ஆதரவு கொடுத்து, கடல் கொள்ளையில் கிடைத்த திரவியங்களில் பங்கு பெற்று வந்தனர். இதனை அறிந்த மாமன்னன் இராஜ இராஜ சோழன் அந்த நாடுகளின் மீது படை எடுத்து வென்றான்.

    இலங்கை எனப்படும் ஸ்ரீலங்காவில் நம் தமிழ் நாட்டு மன்னனின் மணிமுடியும் இதர அரசுரிமைப் பொருள்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை திருப்பி தந்துவிடுமாறு சிங்கள மன்னனிடம் கேட்டபோது , சிங்கள மன்னன் மறுத்தான் எனவே தான் இலங்கை மீது படை எடுத்தான் மாமன்னன் இராஜ இராஜ சோழன். இந்த பேரரசனின் வரலாற்றை எழுதினால் என்ன பிரச்சினை வரும் ?

    வெள்ளையன் எழுதிய பொய் வரலாறுகளை நாம் இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துக்கொண்டிருக்கிறோம். அடிமை தேசமாக இருந்த இந்தியா போன்ற நாடுகளில், பொய் வரலாறுகளால் ஏகப்பட்ட குழப்பங்கள் நேர்கின்றன. வெள்ளையன் இந்தியாவுக்கு சுதந்திரம் சும்மா கொடுக்கவில்லை. சுதந்திரம் கொடுக்கும் போதே, ஆறு மாதத்துக்குள் நீங்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மீண்டும் சுக்கு நூறாக மீண்டும் 700- மன்னர்களின் குட்டி நாடுகள் ஆகிவிடுவீர்கள் என்று சாபம் கொடுத்தான் இரண்டாம் உலகப்போரில் வென்ற பிரிட்டிஷ் பிரதமர். அவன் சாபத்தை முறியடித்து இன்னமும் இந்தியா இருக்கிறது.

    தாலிபான், அல்காயிதா, வஹாபி தீவிரவாதிகளால் ஷியா மற்றும் அகமதியா முஸ்லீம்களுக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்படும் என்று கருதுவோர் அறிவிலிகள். ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே பேரிழப்பு ஏற்படும். உலகிலேயே பெரிய எண்ணெய் சுரங்கமான ஈரானின் அபேதான் , சுமார் 7-8 வருடம் நடந்த ஈராக்- ஈரான் சண்டையில் நெருப்புக்கு இரையானது. அதனால் உலகுக்கு ஒரு 30 வருடத்துக்கு பயன்படுத்தக்கூடிய எரிபொருள் கருகி, ஒருவருக்கும் உதவாமல் போனது. அந்த சண்டையை ஆரம்பித்தவன் சத்தாம் ஹுசைன். எனவே போர்களில் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட இரு நாடுகள் மட்டுமல்ல. பூமிப்பந்தின் அனைத்து மக்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

    இப்போதைய போரில் சண்டையை ஆரம்பித்தது ஹமாஸ் தீவிரவாத வன்முறை இயக்கத்து ரவுடிகள் தான். வன்முறையை பார்த்து பயந்துகொண்டிருந்துவிட்டு, கண்டிக்க தவறினால் உலகமே பெரும்பாதிப்புக்கு ஆளாகும்.

  23. இதை வீரமணி மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு போய் சொல்லும்//

    Honest!

    Two wrongs do not make a right. They don’t have brains. I hoped you are different from them, so I am saying we must be socially concerned in whatever we do or write.

    Two wrongs make a right enpathu honesty illai. Dishonesty 🙂

  24. //சரித்திரம் படித்தால் சமூகத்தில் அமைதி குலையும் என்று அஞ்சுகிறார் //

    தவறான புரிதல். என் ஒரே கவலையென்னவென்றால் ரூபனின் எழுத்துக்களை இளைய தலைமுறைகள் படித்துவிடக்கூடாது. ஒரு நூலாக வெளியிட்டு பள்ளி கல்லூரிகளில் வைக்கப்பட்டால், அல்லது இளைஞர்களுக்கு விநியோக்கப்பட்டால், தமிழகத்தில் இசுலாமியர்கள் உயிருக்குப்பயந்துதான் வாழ வேண்டும். பொதுயிடங்களிலும் தம் வீடுகளிலும். ரூபனைப்படித்து தம் மனங்களை இசுலாமியருக்கெதிரான வெறுப்பால் நிரப்பாமலிருப்பதற்கு ஒரு மனமுதிர்ச்சி இளைஞர்களிடம் இருக்காது. இங்கே ஜாதித்தலைவர்கள் ஏன் இளைஞர்களைக் குறிவைக்கிறார்கள் என்று நினைத்துப்பார்க்கவேண்டும். அவர்களின் மனங்களை தம் விருப்பப்படி மாறவைக்கலாம். சட்டக்கல்லூரியில் நடந்தது தெரியுமே. அந்த இரு ஜாதியினரும் அரசு வங்கி ஊழியர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை ஜாதித்தலைவர்களால் வெறியேற்ற முடியாது.

    எனவே, தமிழ் ஹிந்து.காம் வாசகர்கள் படிக்கலாம். ரூபனின் எழுத்துக்கள் அவர்களை வெறியர்களாக மாற்றாது. மற்றவர்களைப் பற்றித்தான் நாம் கவலைபடவேண்டும்.

    ராஜேந்திரன் சோழனைப்பற்றி சொன்னது ஒரு உதாரணம்தான். அதைப் பிடித்துக்கொண்டு விளக்கவேண்டாம். பழம்பெருமை நல்லதன்று. பிற‌ நாட்டைக்கைப்பற்றி அந்நாட்டுமக்களின் வாழ்க்கையைச் சினனாபின்னப்படுத்தி தன் நாட்டை வளப்படுத்தினார்கள் மன்னர்கள். கங்கை கொண்டான்; கடாரம் கொண்டான் எனவே தமிழ் இனமே புறப்படு; வாளேந்தி வா என்பது மூடர்களின் பேச்சு.

    எனவே வரலாறு வாழவைக்காது என்பதே என் முடிபு.

    New thinking in the Modi Government is we should wean Muslim youth away from radicalisation. It is already in force in UK. Government should see where and how the terrorists succeed in getting Muslim youth for radicalisation and turn them into their warriors and our govt should nullify such efforts. If Government had been alert, the youth from Cuddalore and some youths from Mumbai would not have gone to ISIS.

    Terrorists use visuals and writings by non Muslims to radicalise youth. Reuban should keep this in mind. It is possible to cite his essays and the comments to such immature minds and say how these Hindus hate us. That was why I said, his essays are social dis-service.

  25. //the trolls are back//

    Krishnakumar!

    Give your views on:
    Whether history of violence can be graphically narrated with shocking visuals as Reuban is doing here?
    Will it serve the purpose Kathiravan is proposing?
    When you write a lot about Muslims, don’t you have an iota of Muslim youth getting radicalised by terrorists and jihadis and such radicalisation is easily facilitated by such writings and comments and criticisms?
    How, you as a brahamin, felt pain when the dravidian leaders commented and criticised your community?
    Don’t you feel that the same pain the Muslim community of TN will get when they are adversely commented upon and their youth are misled? Prick your conscience and write back.
    When you are ready to support Modi government, why can’t you support their new idea of weaning Muslim youth away from radicalisation and suggest ways and means for that?
    Be constructive.

  26. @BALA SUNDARAM KRISHNA
    முகமூடிகளை ஒன்றும் புதிதாக இங்கு எவரும் கிழிக்கவில்லை. அது உலகமுழுக்க தெரிந்த கதைதான். அவுரங்கசீப் சீக்கிய குருவை (தேக் பஹதூர்) கொன்றது சீக்கிய மக்களுக்குத் தெரியும். இன்றும்தெரியும்
    How sir one will know the past without reading about it?
    “ஜீக்கள் என்றோ இயேசுநாதரை சிலுவையில் அறைந்தார்கள்.”
    There never was an HISTORICAL JESUS CHRIST. You need to read TRUE history to know this. We all have been taken for a ride by the Vatican on this.
    History is a useful tool. We don’t to make the same mistake of our fore fathers. Will you let another East India company set up shop in India again? Will you forgive Islamic savage Ghori 17 times?
    No, I thought so.

  27. பேரன்பிற்குரிய ஸ்ரீமான் தாயுமானவன்

    \\\ அனால் எப்போது முடிந்தாலும் இந்த கட்டுரை தொகுப்பை தயை கூர்ந்து நூலாக அச்சிட்டு வெளியிட வேண்டாம். கட்டுரைகள் அனைத்தும் மத வெறியை தூண்டும் விதமாக இருக்கின்றன. இதனால் பெரும்பான்மையான இந்துக்கள் மனதில் இசுலாமியர்களை பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்பட்டு அதனால் சிறுபான்மையினர் மீது வெறுப்பு ஏற்பட்டு மத கலவரம் வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது… \\\

    ஸ்ரீமான் ரூபன் அவர்களுடைய வ்யாசம் மதவெறியைத் தூண்டும் விதமாக இருக்கிறது என்பது பிழையானது.

    அராபிய தேசங்களிலிருந்து ஹிந்துஸ்தானம் வந்த பயங்கரவாத காட்டுமிராண்டிக்கும்பல் இஸ்லாம் என்ற மதத்தை ஹிந்துஸ்தானத்தில் பரப்பியது மட்டற்ற வன்முறையின் மூலம் என்பது சரித்ரம். ஸ்ரீமான் ரூபன் எழுதி வருவது ஜெனாப் எம்.ஏ.கான் சாஹேப் என்ற இஸ்லாமிய பெருந்தகை முன்னமேயே ஆங்க்ல பாஷையில் எழுதிய ஒரு நூலின் தமிழ் மொழியாக்கம். இது தமிழில் நூலாக வெளிவருவது தமிழக அறிவியக்கத்தின் ஒரு முன்னகர்வாக இருக்கும். அது மிகவும் அவசியமும் கூட. அவ்வளவே.

    மதவெறி என்பது ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாம் பரப்பப்பட்ட விதத்தில் இருந்ததே அன்றி இந்த வ்யாசம் எழுதப்பட்ட விதத்தில் இல்லை. அறவே இல்லை. இது தெளிவான பார்வை.

    கான் சாஹேப் அவர்கள் இஸ்லாமியர்களாலேயே உர்தூ, ஃபார்ஸி பாஷைகளில் எழுதப்பட்ட பல மூல நூற்களை ஆதாரமாகக் கொண்டே மொகலாய காலத்திய சரித்ரத்தை வடித்திருக்கிறார். இந்த விஷயத்தை அறிவு பூர்வமாக அணுகுவது என்பது மூல நூற்களில் சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து கான் சாஹேப் அவர்கள் எழுதிய நூலோ அல்லது ஸ்ரீமான் ரூபன் அவர்கள் எழுதிய வ்யாசத்தொடரோ மாறுபடுகிறதா என்று அணுகுவது. இதை பலமுறை ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் சொல்லுகிறேன்.

    இந்த வ்யாசத்தொடரின் ஆரம்பத்தில்……. ஆங்க்லத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் சம்பந்தமாக………… அப்படியொரு பிழை ஸ்ரீமான் அரிசோனன் மற்றும் ஸ்ரீமான் பாலா அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அறிவு பூர்வமான அப்படியொரு செயல்பாடை ஸ்ரீமான் ரூபன் அவர்களும் ஏற்றார்கள். தளத்து வாசகர்கள் அனைவரும் ஏற்றோம்.

    சரி. ஹிந்துஸ்தானத்தில் அராபியர்களால் இஸ்லாம் பரப்பப்பட்டது மட்டற்ற வன்முறையின் மூலம். அதன் பின் ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாம் தழைத்த காலத்தில் வன்முறை மட்டிலும் தான் இருந்ததா? இந்த சரித்ரம் சொல்லப்பட்ட காலங்களில் வன்முறைக்கு விதிவிலக்கான சம்பவங்கள் இருந்ததில்லையா? ……………..

    என்றால் அதற்கு விடை ………….. விதிவிலக்குகளும் இருந்திருக்கின்றன என்பது. அப்படிப்பட்ட சில விதிவிலக்குகளும் கூட சரித்ரத்தின் ஒரு பகுதியே. பாரத அன்னை பெற்றெடுத்த….. நாம் அனைவரும் போற்ற வேண்டிய………. ஏன் நாம் அனைவரும் வணங்கத்தக்க…….. இஸ்லாமியப் பெருந்தகைகளும் கூட இருந்திருக்கின்றனர்.அதை நான் என்னுடைய சமர்ப்பிக்க இருக்கும் வ்யாசத்தில் பகிர இருக்கிறேன். கூடவே இன்றைய திகதியிலும் அதன் மறுபக்கமான வன்முறை மிகு ஆப்ரஹாமியரின் அடாவடி செயல்பாடுகளும்.

    ஹிந்துக்கள் மத்தியில் இஸ்லாமியர் பற்றிய தவறான கண்ணோட்டம் என்பது விதேசிய இஸ்லாமியர் வன்முறையால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற வரலாறால் உருவாகாது.

    மாறாக இன்றைய திகதியிலும் கூட……… ஜிஹாதி, பித்தலாட்ட மதமாற்ற வன்முறையில் ஈடுபாடுள்ள வழிதவறிய சில ஆப்ரஹாமிய அன்பர்கள்……….. வன்முறையை விட்டொழிக்காது ஹிந்துக்களின் சிவாலயங்கள்,விண்ணகரங்கள் மற்றும் அம்மன் கோவில் நிலங்களை, குளங்களை அதார்மீக முறையில் ஆக்ரமிப்பது போன்ற இழிவான செயல்பாடுகளாலும்…….. ஹிந்து திருவிழாக்கள் நடக்கையில்…… திருவிழாவில் பங்கெடுக்கும் பெண்மணிகளின் ஊர்வலத்தை ……… முனைந்து தடுக்க முனையும் சில இஸ்லாமிய சஹோதரர்களின் அடாவடித் தனத்தாலும் ……….இஸ்லாமியர் பால் ஹிந்துக்களுக்கு தவறான கண்ணோட்டம் நிச்சயமாக ஏற்படும்.

    ஹிந்து திருவிழாவை முஸல்மாணியர் தடுக்க விழைந்த அவலத்தை கண்டனம் செய்யும் நேர்மை சஹோதரர் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களிடம் காணப்பட்டது. அது போற்றத் தக்கது.

    அந்த நேர்மை ஹிந்துக்களிடமும் இருக்க வேண்டும்.

    எதைக்கண்டிக்க அவசியமில்லையோ அதைக் கண்டிப்பதும் எதைக்கண்டிக்க அவசியமோ அதைக் கண்டும் காணாதது போல் போவதும் தான் மதப்பிணக்குகளை உண்டு செய்கிறது என்பதை அறிதல் நலம்.

  28. \\ Krishnakumar! Give your views on…………\\

    Are you our beloved Reverend Joe Amalan Rayon Fernando @ Kavya @ thiruvazhmarban @ Tamil?

    His common attitude in as many avatars…….. derailing the main topic of discussion by needless lenghty diatribes……….. in order to divert the attention of readers to discuss on some other pet issues of him……….. is found in your replies to this article. And strikingly, the language!!!!!!!!!!

    Reverend Tamil had taken a vow that he would return after a year. Hope that is not over.

    The editorial board of this website comprise of eminent well meaning elders who have great cocern for unity of Hindus. It is this same website which has published my articles on Shri Ayaz Rasool Nazki saheb’s spiritual journey to Sharada Pith across the Line of cotrol at Kashmir and it is the same website which has published my articles on conerns and expectations of Muslim brothers on Modi Sarkar. As far as possible, verbatim with respect to the latter article. There are other articles on similar topics too. Enough to elaborate on the good intentions of this website.

    That the Editorial Board of this site decided to publish this article is sufficient enough to close the matter as to whether or not this type of an article should be published. If you have strong views against that why dont you submit a separate article and participate on further debates on that? Why dont you spare the readers of this forum for a genuine discussion on the contents of this article?

    If you want to say specifically anything on the content of this article ………… the factual accuracy or otherwise………. I would like to go through that and join on a healthy well meaning discourse………… else you may continue with your ill intended derailing.

    Whoever you may be………. I would prefer discussions on the topic of the article ONLY.

    SHALOM REVEREND BR JOE.

  29. திரு பலசுந்தரம்க்ரிஷ்ணா மற்றும் நாஞ்சில்குமார் தாயுமானவன் சகோதரர்களே நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் நியாயம் எடுபடாது .அவர்களுடைய நோக்கமே ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்பட்டு ஏதாவது சின்ன உரசல் ஏற்பட்டாலும் வெட்டிக்கொண்டு சாகவேண்டும் என்பதுதான்.நீங்கள் சொல்கிற நியாமெல்லாம் அவர்களுக்கு தெரியாதென்றா நினைதுக்கொண்டிருக்கிரீர்கள்

  30. //History is a useful tool.//

    Of course it will be a useful tool provided it is sensibly written not sensationally written. 🙂

  31. கான் சாஹேப் எழுதிய நூல் வடமாநிலங்களில் எவருமே படித்து விமர்சித்ததாகத் தெரியவில்லை. பொதுவாக இப்படிப்பட்ட நூல்கள், வலது, இடது சாரி பத்திரிக்கையாளர்களிடையே கடுமையாக விமர்சிக்கப்படும். அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவிலலை. அனைவரும் வெறும் வரலாறு எப்படி எடுத்துக்கொள்ள்ப்படவேண்டுமோ அப்படி எடுத்துக்கொள்ளப்படவேண்டுமென நினைத்துவிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. ஆக, கானின் நூல் இசுலாமியரையே எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.

    பிர்ச்சினை, ரூபனின் நூல்தான். இதுவும் தமிழ்.ஹிந்து.காமின் வந்து போனது என்றும், அப்படியே நூல் வடிவில் வந்தால் விஜயபாரதம் ஸ்டாலில் விற்கப்படும் நூலக்ளுள் ஒன்றாகப் போனது என்றும் ஆகிவிட்டால் பிர்ச்சினை இல்லை. மாறாக, பெரும் வியாபார உத்திகளை வைத்து விற்பனை செய்யப்படும்போது பிரபலமாகிவிட்டால், அதாவது இந்து இளைஞர் பட்டாளத்தில் வாசகர்கள் பெருகிவிட்டால், தமிழ் இசுலாமியர்கள் எப்படி தமிழ்நாட்டில் வாழமுடியும்? என்பதுதான் எம் அச்சம், க்ருஷ்ணகுமார்.

  32. Dear brethern, With due respects to all,as they say Knowledge is Power, every one must know the real history irrespective of its contents. Even majority of western writers have agreed that our Indian history has been distorted by vested interests both in England and India and the real truth is brought out with historical records ( Of course true..)all should welcome it.
    I learnt a lot about history,religion,spirituality etc. through this site.
    Though as like any other person,knew a few things about Islam,Christianity,Judaism etc.
    on visiting a few sites referred by a few readers of this site, it certainly pave a way to know more about those religions. As a few writers fear unnecessarily over the history being published will lead to communal tension holds no water…..because the question and answers and the extensive video debates side by side with TNJ and the representative of Christianity regarding bible is not the word of god makes me feel proud that in our Tamilnadu this type of healthy debate is a far fetched one but still it has materialised .Real wonder.I really thank the head of TNJ to conduct such debates is a welcome step and that the present generation especially youngsters mingle with one another irrespective of caste,creed,religion will certainly involve to know more and clarify and they will buy the VIRTUES only and shrug off the VICES and move forward for a healthy, prosperous future which is in store for them. Once again I wish for a healthy debate/argument in this site.
    மௌலானா அஜ்மல் காத்ரியிடமிருந்து அலி சினாவுக்கு இரண்டாவது மின்னஞ்சல் – பாகம் 2
    [முழு அஞ்சல்களையும் காப்பி பேஸ்ட் செய்வதற்கு பதிலாக அந்த URL ஐ மட்டும் பதியவும்- ஆசிரியர் குழு]

  33. Dear friends, Mr.Ali Sina, founder of Faith Freedom International is from Iran and formerly a muslim and his revelations thought provoking….reveals a lot…..read and have your views.
    Thursday, 16 May 2013
    முஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம் வியாழன், 31 மார்ச் 2011 – கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders)
    ஏன் இஸ்லாம் கொல்லக்கூடிய அபாயமாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு குர்ஆனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குர்ஆனையும் மனதில் உருவகித்த முஹம்மதின் குணாதிசயத்தையும் கூட ஒருவர் சிந்தித்து பார்க்கவேண்டும்.

    …முழு கட்டுரையையும் இங்கு காபி-பேஸ்ட் செய்வதற்கு பதிலாக சுட்டியை மட்டும் அளிக்கவும்- ஆசிரியர் குழு

    இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார் – நான் அனுபவித்து இருப்பதை போல. இஸ்லாம் மற்றும் முஹம்மதின் செல்வாக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் எவரும் மரண அபாயத்துக்கு உள்ளாகிறார். விஷயங்களின் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வதை நாம் தொடர முடியாது. முஹம்மதின் உண்மையான இயல்பையும் குணத்தையும் பற்றிய வெளிப்படையான விவாதம் இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அறிவையும் ஆதரவையும் கொடுக்கும். நம்பிக்கையை துறந்தவ ர்கள் (apostates) நாயகர்கள். முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாக, உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மனிதர்களின் ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த விஷயத்தில் கட்சி அரசியல் விளையாடக்கூடாது. முகம்மதை அம்பலபடுத்துவதின் மூலம் இந்த மக்களுக்கு நாம் உதவி புரிவதற்கு இதுவே சரியான தருணம். கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders) நெதர்லாந்தில் பாராளுமன்ற உறுப்பினர். அவர் சுதந்திரத்திற்கான கட்சியின் (PVV) தலைவராக உள்ளார். “HP/De Tijid” என்ற டச்சு மொழி வார இதழில் இந்த கட்டுரை மார்ச் 30, 2011 அன்று பிரசுரமானது.

    மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
    இடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 23:10 16 கருத்துரைகள்
    Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook
    Share to Pinterest

    லேபிள்கள்: ஆனந்த் சாகர்

  34. ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ @ காவ்யா @ திருவாழ்மார்பன் @ Tamil @ அய் அய் எம் கணபதிராமன் !!!!!!!!!!

    ஒரு வருஷ அக்ஞாத வாச வாக்குறுதியை உடைத்து விட்டீர்கள்

    \\ மாறாக, பெரும் வியாபார உத்திகளை வைத்து விற்பனை செய்யப்படும்போது பிரபலமாகிவிட்டால், \\\

    தமிழ் இளைஞர்கள் உருப்படுவார்கள். தமிழகம் உருப்படும்.

    முகமூடி சுவிசேஷ ப்ரசாரகராகிய உங்களது ஹிந்து மதக்காழ்ப்பு உத்திகளை இங்கு யாரும் அறியார் என்ற இறுமாப்பில் புகுந்து விளையாடுகிறீர்கள்.

    அதெப்படி ஐயன்மீர் எத்தனை அவதாரம் எடுத்தாலும் பின்னூட்டங்களால் வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து அப்படியே விவாதத்தை மாற்றி வெட்டி விவாதமாக்கும் அவலத்தை விட மாட்டேன் என்று ஹடம் பண்ணுகிறீர்கள்.

    ஸ்ரீமான் வெங்கட் சாமிநாதன் மஹாசயர், அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் போன்றோரையும் நண்பர் ஒத்திசைவு ராமசாமி அவர்கள் போன்றோரையும்…….. நீங்கள் மட்டில்லாமல் இழித்துப் பழித்த செயல்பாடுடைய பெருந்தகை……… என்பது இந்த தளத்தில் கருத்துப்பதியும் வாசகர்கள் பலருக்கும் தெரியாது.

    இப்போது வேறு அவதாரத்தில் இருக்கிறீர்களே. ஆனால் அந்த நயவஞ்சகமான ஹிந்துமதக்காழ்ப்பு மிகுந்த முகமூடி சுவிசேஷ ப்ரசார செயல்பாடு அப்படியே கொப்பளிக்கிறதே.

    திண்ணையில் தாங்கள் காவ்யா / Tamil அவதாரத்தில் தமிழ் ஹிந்து தளம் கல்லாதோர் சபை என்று கருத்துப்பகிர்ந்ததும் ஸ்ரீமான் சாரங்கன் அவர்கள் அதற்காக உங்களுக்கு மண்டகப்படி கொடுத்ததையும் வாசகர்கள் அறியாரே.

    இந்த வ்யாசத்தை 27 பாகங்களாக பரிச்ரமப்பட்டு எழுதிய ஸ்ரீ ரூபன், இந்த தளத்து ஆசிரியர் குழுப் பெருந்தகைகள் இவர்களெல்லோரும் மதவெறியர்கள்…………. ஒரே சொந்தப்பெயரில் கருத்துப்பதியும்……..நேர்மை இல்லாமல்……. பற்பல பெயர்களில் தளம் தளமாக ஹிந்துமதக்காழ்ப்புக் கருத்துக்கள் பதியும் வீர தீர சூர ப்ரதாபம் உடைய தாங்கள் மதநல்லிணக்கம் பற்றி போதனை செய்வீர்கள்……. இப்படி ப்ரதாபம் உடைய உங்களுடைய செயல்பாடு தெரியாத அப்பாவி வாசகர்களை வ்யாசத்தின் கருப்பொருளை அப்படியே குழி தோண்டிப்புதைத்து………. வெட்டி விவாதத்தில் ஈடுபடச் செய்வீர்கள்.

    ம்……….பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவிடம் வாக்கு தத்தம் செய்திருக்கிறீர்களே பித்தலாட்ட சுவிசேஷ ப்ரசாரம் செய்வதற்கு. அதை நிறைவேற்றியாக வேண்டுமே.

    உங்களது நுனிப்புல் மேதாவிலாஸம் அறிந்த விஷயம் தான். எப்போதாவது விதிவிலக்காக வ்யாசத்தின் கருப்பொருள் சார்ந்து ஒரு வரி அல்லது அரை வரி ஏதாவது எழுத விழைந்தீர்கள் என்றால் என்னுடன் உரையாட முயற்சி செய்யலாம்.

    இப்படி அவதாரம் அவதாரமாக உங்களது முகமூடியைக் கிழிப்பது கூட அலுப்பாகத் தான் இருக்கிறது. இந்த அவதாரத்தில் இந்த மண்டகப்படி போதுமே.

    SHALOM REVEREND JOE

  35. திரு.பாலசுந்தரம் கிருஷ்ணா,….

    தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. சிறுப்பான்மையினர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கருத்தியல் கொடுமைகளுக்கு எதிராக தாங்கள் தொடுக்கும் வாதங்கள் மிக்க அருமை..

  36. மதிப்பிற்குரிய திரு. தாயுமானவன்…

    ஒரு இந்துவாக இருந்தாலும் சிறுப்பான்மையினர்களுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது.. சிறுப்பான்மையினருக்கு எதிராக செயல்ப்படும் இந்துத்துவ நச்சு பிரச்சாரத்தை தாங்கள் சிறப்பாக வெளிக்கொணர்கின்றீர்கள் வாழ்துக்கள். பெரியார் போன்ற முற்போக்கு சக்திகள் பிறந்த மண்ணில் ஆர்.எஸ்.எஸ் நிச்சயம் தலை எடுக்க முடியாது.

    வேறு மதத்தில் இருந்தாலும் எப்போதும் எங்களை நாங்கள் தமிழர்களாகவே தான் உணர்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கத்தோலிக்கதில் இருந்தாலும் தமிழ்மொழி மீதான என் காதலும், தமிழ் தேசியத்தின் மீதான என் அபிமானமும் என்றும் குறையாது. என்னுடைய எண்ணம் இந்து மதத்தில் இருந்து கொண்டு தாங்கள் எந்த மாற்றத்தையும்(கருத்தளவில் கூட) ஏற்படுத்த முடியாது என்பது தான். தாங்கள் கிறித்துவை ஏற்றால் தங்களின் இலக்குகளை எவ்வித இடையூறும் இன்றி ஜி.யு,போப், சீகன் பால்கு, கால்டுவெல் போன்று தமிழுக்கான சேவையை செவ்வனே செய்யலாம் என்பது என் அபிப்ராயம் மட்டிலுமே. ஏனெனில் எங்களின் அனைத்து வழிப்பாடுகளையும் தமிழில் தான் நடத்துகிறோம். தேவ பாஷை என்று கிறித்துவத்தில் ஏதும் கிடையாது. ஆகவே தங்களுக்கான வாய்ப்புகள் எப்போதுமே திறந்திருக்கும். மற்றப்படி தவறாக ஏதும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

  37. இந்திய பிரிவினை என்பதே வங்காள மாநிலமும், பஞ்சாப் மாநிலமும் அதனை யொட்டிய பிரதேசங்களிலும் நடந்த பிரிவினையே. ஒட்டு மொத்த இந்தியாவை நாம் பாதியாக பிரித்துக் கொடுத்து விடவில்லை. தென் நாட்டில் நாட்டின் பிரிவினையின் போது இங்கிருந்து எந்த முஸ்லிமும் பாகிஸ்தானை நோக்கி ஓடவில்லை.

    இந்துக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்களோ அதே அளவு முஸ்லிம்களும் பாதிப்படைந்தனர். இந்த வரலாறானது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த கட்டுரையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை பற்றி ஒன்றுமே சொல்லாமல் இந்துக்களின் இழப்புக்களை மட்டுமே பட்டியலிடுகிறது. இதிலிருந்தே இதனை எழுதிய கான் இஸ்லாமிய பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு இந்துத்வாவாதி என்று அறியலாம்.

    மேலும் இந்த தொடர் கட்டுரையானது இந்துக்கள் மத்தியிலோ இஸ்லாமியர் மத்தியிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. ஏனெனில் கட்டுரை வெளியிடுபவர்களின் நோக்கமே இதன் மூலம் இந்துத்வாவை வளர்க்க வேண்டும் என்பதே. ஆனால் இவர்களின் எண்ணமும் பலிக்காது. சாதி வெறியும், வர்ணாசிர கொடுமைகளும் இன்றும் நிறைந்துள்ள இந்து மதத்திலிருந்து வெளியாகுவோரை சில காலம் இந்த வன்முறைகளை போதித்து நிறுத்தி வைக்கலாம். காலாகாலத்துக்கும் நிறுத்தி விட முடியாது. இன்னும் ஆயிரம் கட்டுரைகள் புனையப்பட்டாலும் அதனை நம்புவதற்கு தமிழகத்தில் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே இன்னும் ஆர்வமாக பொய்களை பரப்பவும்.

  38. BALA SUNDARAM KRISHNA
    Obviously you are against teaching history. The question then comes to one’s mind is this. “How do you know what you know is the true history? And how do we can we take your statements as true without verification? The tools we use are called history. Accept history as true when the evidence are from primary source. This article is a translation which again was sourced from primary evidences. Example: articled written by the Islamists themselves during invasion of India.
    As they say, people who fail to read history are bound to fail again.
    “Of course it will be a useful tool provided it is sensibly written not sensationally written”
    Your statement is based on your perception of history. If you find it sensational, obviously you have been reading the wrong history, Sir.

  39. RAMA

    I am not against history proper. My point is that history teaching should be graded. Reuban can write here as he does. Because you and I are discerning readers. I suspect everything when it is offered to me. I accept only If I am sure it is worthy of taking. Do people of lower calibre behave like me?

    Therefore, our concern ought to be : What, if Reuban’s graphic details and gory visuals, are read by young impressionable minds? That is why I call for customised history to suit different people.

    We cannot teach history in gory details to primary and high school students and place it before common masses. The history for young people should be outline history only.

    If you had lived in North, you would have seen the Spashta Ramayana books for school children. This Ramayana is abridged suitably in that many parts that you read in the big Ramayana wont be there. Only that which the children can read, understand and enjoy will be there. There are parts in both Ithikasas which are disturbing.

    Similarly, history. Whether it is based on primarcy and incontrovertible evidences is not at all my point.

  40. சுவனம்,

    இந்தப் புளுகெல்லாம் கூடாது. இந்தக் கட்டுரைத் தொடரில் இந்து மற்றும் முஸ்லிம்களின் இழப்புக்கள் எழுதப்பட்டே இருக்கிறது. அதிகம் இழந்தது இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. கான் என்பவர் முஸ்லிம் பெயரில் ஒளிந்திருக்கும் இந்துவாம். சுவனப் புளுகன் சொல்கிறார். ஒரிஜினில் புத்தகம் இணையத்திலேயே இருக்கிறது. அதில் தான் யார் என்பதனை கான் விரிவாகவே விளக்குகிறார். படித்துப் பார்த்தால்தானே? சும்மாவே குரான் அப்பிடியாக்கும் இப்பிடியாக்கும் என்று புளுக வேண்டியது. அது அப்படி இல்லை என்று முகத்திரையைக் கிழிக்கும் முஸ்லிமை இந்து என்று வாய் கூசாமல் புளுகுவது. நன்றாக இருக்கிறதய்யா உமது விளக்கம்.

  41. //தென் நாட்டில் நாட்டின் பிரிவினையின் போது இங்கிருந்து எந்த முஸ்லிமும் பாகிஸ்தானை நோக்கி ஓடவில்லை//

    The same question you have raised already and Malarmannan gave you answer. again and again you are doing the same — something serious problem you have. don’t think that others are idiot..

  42. //வர்ணாசிர கொடுமைகளும் இன்றும் நிறைந்துள்ள இந்து மதத்திலிருந்து வெளியாகுவோரை சில காலம் இந்த வன்முறைகளை போதித்து நிறுத்தி வைக்கலாம். காலாகாலத்துக்கும் நிறுத்தி விட முடியாது//

    who is sunny, who is shiya? why they are doing ugly fight in everywhere?

  43. //////பெரியார் போன்ற முற்போக்கு சக்திகள் பிறந்த மண்ணில்/////

    அந்த உங்கள் பெரியார் தான் கீழ்கண்ட முத்துக்கள் உதிர்த்தார். “”பறை பொண்ணுங்க ரவிக்கை போட ஆரம்பித்ததனால்தான் துணி விலை ஏறிபோச்சு”” (ஆதாரம் வேண்டுமா? இதோ:- அம்பேத்கர் மாத இதழ் நவம்பர்/டிசம்பர் 1963). அடடா, என்ன அருமையான முற்போக்கு சக்தி!
    அதுமட்டுமா? மைனாரிட்டிகளின் ஆதிக்கம் நாட்டுக்கு நல்லதல்ல. அவர்களுக்கு சலுகை அளிப்பது நல்லதல்ல. (ஆதாரம்:– பெரியார் சிந்தனைகள் “மைனாரிட்டி சமுதாயம் ” பக்கம் 46 – 48)
    ///////ஒரு இந்துவாக இருந்தாலும் சிறுப்பான்மையினர்களுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது/////// யார் கண்டது? சுவனபிரியன் சொல்வது போல “”இந்து பெயர் தாங்கிகளோ”” என்னவோ! ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

    //////////”””””””தாங்கள் கிறித்துவை ஏற்றால்”””” தங்களின் இலக்குகளை எவ்வித இடையூறும் இன்றி ஜி.யு,போப், சீகன் பால்கு, கால்டுவெல் போன்று தமிழுக்கான சேவையை செவ்வனே செய்யலாம்////// கொஞ்சம் gap கிடைத்தல் போதுமே. மதமாற்றம் செய்ய தூண்டுவார்கள். இவர்கள் வேலையே இதுதான்

    ///////எங்களின் அனைத்து வழிபாடுகளையும் தமிழில் தான் நடத்துகிறோம்////
    ஆலேலூயா, ஆமென் போன்ற வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளா?.

  44. //////தென் நாட்டில் நாட்டின் பிரிவினையின் போது இங்கிருந்து எந்த முஸ்லிமும் பாகிஸ்தானை நோக்கி ஓடவில்லை////////

    The Muslim in UNDIVIDED India wanted a separate homeland and a vast majority of them opted out of India. In 1946 election more than ””’90%””’ of the Muslims VOTED FOR the breakup of the greater India and the creation of a Muslim land called Pakistan. Despite getting their Muslim land, only ””15%”” of the Muslims left for Pakistan and 85% of them stayed put in India.
    வோட்டு போடும்போது 90% ஆனால் பாகிஸ்தானுக்கு போகும்போது மட்டும் 15%.ஏனென்றால் நாடு கிடைத்து விட்டது. நினைத்தது நடந்துவிட்டது. இங்கேயே 85% தங்கினால்தானே இன்னும் மீதி இடத்தையும் முஸ்லிம் நாடாக ((விரைவில்) மாற்றமுடியும்
    //////இந்த கட்டுரையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை பற்றி ஒன்றுமே சொல்லாமல் இந்துக்களின் இழப்புக்களை மட்டுமே பட்டியலிடுகிறது//////
    குஜராத்தில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் மட்டுமா இறந்தனர்? அதில் 781 முஸ்லிம்களும் 388 ஹிந்துக்களும் இறந்தனர். ஆனால் டிவி விவாததிலும் ஒத்து கூட்டங்களிலும் இறந்த இந்துக்களை பேசியதே இல்லை. முஸ்லிம்கள் இறந்தனர் என்றுதானே பேசினார்கள்? அது நியாமாக பட்டதா? அப்போது இந்த கேள்வியை கேட்டதுண்டா?

    //////ஒட்டு மொத்த இந்தியாவை நாம் பாதியாக பிரித்துக் கொடுத்து விடவில்லை/////
    1947 ல் இந்துக்களின் % எவ்வளவு முஸ்லிம்களின் % எவ்வளவு.? இரு இனமும் சரிபாதியாக 50%ஆ? என்ன ஆசையப்பா. பாதி பிரித்து கொடுக்க வேண்டுமா? உண்மையை சொல்லபோனால் முஸ்லிம்களின் % க்கும் அதிகமாக காங்கிரஸ் கார முட்டாள்கள் பிரித்து கொடுத்துள்ளனர். அது தெரியுமா?.

    ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் வெறிகளுக்கு முன்னால் சாதி வெறி கம்மிதான்.உங்கள் முதுகில் உள்ள அழுக்கை முதலில் நீக்கிவிட்டு அதன் பின் எங்கள் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசலாம்.

    இன்றைய செய்தி என்ன தெரியுமா? நைஜீரியாவில் kano பகுதியில் திங்கள் அன்று 2 வோமேன் suicide bombers வெடித்து 3 பேர் இறந்தனர். 13 பேர் காயமுற்றனர். ((2)) பாக்தாத்தில் திங்கள் அன்று 3 civilians உட்பட 17 ஜிஹாதிகளை ஈராக் ராணுவம் கொன்றது. சாதி வெறியை பற்றி பெருசா பேச வந்துட்டார்.

  45. \\ கான் என்பவர் முஸ்லிம் பெயரில் ஒளிந்திருக்கும் இந்துவாம். சுவனப் புளுகன் சொல்கிறார். ஒரிஜினில் புத்தகம் இணையத்திலேயே இருக்கிறது. அதில் தான் யார் என்பதனை கான் விரிவாகவே விளக்குகிறார். \\

    ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுக்கு சவாலே விடப்பட்டிருக்கிறது.

    அறிவு பூர்வமான செயல்பாடு என்பதற்கும் பயங்கரவாத வஹாபிய இஸ்லாத்துக்கும் எங்கிருந்து சம்பந்தம் இருக்கவியலும்

    ம்……… ஜெனாப் சுவனப்ரியன், ஈத் முபாரக்.

    முன்பெல்லாம் எப்போதும் அல் தக்கியா செய்வீர்கள். மேலும் அவ்வப்போது பொய் சொல்வீர்கள். இப்போதெல்லாம் உண்மை பேசவே கூடாது என்று ஈத் அன்று உறுதி எடுத்திருக்கிறீர்கள் போலும்.

  46. \\\ தமிழ்மொழி மீதான என் காதலும், தமிழ் தேசியத்தின் மீதான என் அபிமானமும் என்றும் குறையாது. \\\

    நரி வேஷமிட்டு மே மே என்று கத்தினால் நாடகம் போண்டியாகும் என்று அறியீர்களா?

    அம்மணி மேற்கண்ட வாசகத்தில் எத்தனை சதமானம் தமிழ் இருக்கிறது என்று அறிவீர்களா?

    உங்களுடைய பெயரே தமிழிலிருந்து பல்லாயிரம் காத தூரம்………..

    \\\\\ இந்து மதத்தில் இருந்து கொண்டு தாங்கள் எந்த மாற்றத்தையும்(கருத்தளவில் கூட) ஏற்படுத்த முடியாது என்பது தான். தாங்கள் கிறித்துவை ஏற்றால் தங்களின் இலக்குகளை எவ்வித இடையூறும் இன்றி ஜி.யு,போப், சீகன் பால்கு, கால்டுவெல் போன்று தமிழுக்கான சேவையை செவ்வனே செய்யலாம் \\\\\

    ம்……… மிஷ நரி ப்ரசாரத்தை நடத்துவதற்கான இடம் இது அல்ல அம்மணி.

    ஸ்ரீமான் தாயுமானவன் என்ற சிவ பக்தரையும் தமிழகத்தின் தொல் சமயமான சைவத்தையும் இழிவு செய்வதற்கு உங்களுக்கு இதை விட சரியான வழியில்லை போலும். ம்……..உங்கள் செயல்பாட்டில் எனக்கு வருத்தமில்லை. மிஷ நரிகளின் செயல்பாடு அறிந்த விஷயமே.

    சைவத்தையும் சைவ சமயியையும் இழிவு செய்யும் இது போன்ற இழிவான அழைப்பை நிந்திக்காத ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் செயல்பாட்டில் தான் எமக்கு வருத்தம்.

    தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு, கலை இவையெல்லாம் பயங்கரவாத ஆப்ரஹாமியத்தால் சுவடில்லாமல் அழிக்கப்பட்டு வரும் அவலமே……………… மெல்லத் தமிழினி சாகும் என்ற கூற்றை பறைசாற்றுகிறது என்றால் மிகையாகாது.

    ஸ்ரீமான் ஜோ.டி.குரூஸ் மற்றும் ஸ்ரீமான் சாலமன் பாப்பையா போன்ற அன்பர்களும் கூட க்றைஸ்தவர்கள் தான். க்றைஸ்தவ மதத்தை உங்களை விட இன்னமும் மேலாகவும் ஒழுகுகிறார்கள். ஆயினும் ஹிந்துஸ்தானத்தின் மற்றும் தமிழகத்தின் தொன்மையான கலாசாரத்திலும் பெருமை கொண்டவர்கள் இவர்கள்.

  47. திருமதி ரெபேக்கா மேரி அவர்களே,

    தாங்கள் தாயுமானவன் அவர்களைப் பாராட்டி இருப்பதற்கு மிக்க நன்றி. ஆயினும், நீங்கள் எழுதியிருக்கும் சில கருத்துக்களுக்கு மறுப்புக் கூறவேண்டும் என்று தோன்றியதால் எழுதுகிறேன். மறுப்பு எழுதாவிட்டால், நீங்கள் எழுதி இருப்பது உண்மை என்று ஆகிவிடும்.

    1. //பெரியார் போன்ற முற்போக்கு சக்திகள் பிறந்த மண்ணில் ஆர்.எஸ்.எஸ் நிச்சயம் தலை எடுக்க முடியாது.//
    ஈ.வெ. இராமசாமி நாயக்கர் “கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள்!” என்று சொன்னார். இந்து சமயத்தில் நாத்திகமும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. ஆனால், கிறித்தவத்தில், நாத்திகம் கடுமையாக எதிர்க்கப் படுகிறது. எனவே, நீங்கள் உண்மையாகவே, கிறித்தவத்தில் நம்பிக்கை கொண்டு ஒழுகுபவர் ஆனால், ஈ.வே. இராமசாமி நாயக்கர் சொன்னதை எதிர்க்கவேண்டும். அவர் சொன்னதை முற்போக்கு சக்தியின் குரல் என்று புகழ்வது, உங்கள் சமயக் கருத்தக்களையே எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    மேலும், ஆர்.எஸ்.எஸ். கிறித்துவ சமய எதிர்ப்பு நிறுவனம் அல்ல. ஆகவே, அதன் மேல் காழ்ப்பு உணர்வு கொள்ளவேண்டிய தேவை கிறித்தவர்களுக்கு இருப்பதாக நீங்கள் நீங்கள் நினைப்பது தவறு என்று எனக்குப் படுகிறது.

    2. //ஏனெனில் எங்களின் அனைத்து வழிப்பாடுகளையும் தமிழில் தான் நடத்துகிறோம். தேவ பாஷை என்று கிறித்துவத்தில் ஏதும் கிடையாது. //

    தமிழ்நாட்டுக் கோவில்களில் ஓதப்படும் தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப்ப்ரபந்தம் ஆகியவை தமிழில்தான் உள்ளன. கத்தோலிக்கரான நீங்கள் உங்களது போப் ஆண்டவர் இலத்தீனில்தான் தொழுகையை ரோமாபுரியில் இருக்கும் வாட்டிகனில் நடத்துகிறார். அவர் ஏன் இத்தாலியின் மொழியான இத்தாலியனில் நடத்தவில்லை? ஒருவிரலால் சுட்டினால், மூன்று விரல்கள் உங்களைத் திருப்பிச் சுட்டும்.

    3. //வேறு மதத்தில் இருந்தாலும் எப்போதும் எங்களை நாங்கள் தமிழர்களாகவே தான் உணர்கிறோம். //

    பல சமயத்தார் ஒரு மொழியைப் பேசலாம். அதேபோல் பல மொழியைப் பேசுபவர்கள் ஒரே சமயத்தையும் பின்பற்றலாம். உங்களது தமிழ்ப் பற்றைப் இங்கு யாருமே, குறை கூறவில்லை.

    4. //ஒரு இந்துவாக இருந்தாலும் சிறுப்பான்மையினர்களுக்கு ஆதரவாக தாங்கள் இருப்பது மிகவும் போற்றுதலுக்குரியது..//

    மாற்றுச் சமயம் என்பதை சிறுபான்மையினர் என்று அரசியல் பேசும் உங்கள் திறனை நான் வியக்கிறேன். அதே சமயத்தில் இந்துக்கள் மாற்று சமயத்தாருக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று மறைமுகமாக விஷ மூளைச்சலவை செய்வதும் தவறு என்று கண்டிக்கிறேன்.

    5. இந்து மதத்தில் இருந்து கொண்டு தாங்கள் எந்த மாற்றத்தையும்(கருத்தளவில் கூட) ஏற்படுத்த முடியாது .//

    யாரும் மாற்றுச் சமயத்தாருக்குப் பரிந்து பேசினால், அவர்கள் உடனே, சிறுபான்மையினரின் சமயத்திற்கு மாறிவிட வேண்டுமா? இப்படி நீங்கள் சொல்லிக்கொண்டே போனால், அவர்கள் மாற்றுச் சமயத்திற்குப் பரிந்துபேசுவதை நிறுத்தும் முயற்சியாக ஆகிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. நான் முன்பே இந்த வலையத்தின் பின்னூட்டத்தில், என் உயிருக்கு ஆபத்தையும் பொருட்படுத்தாது, மதக் கலவரத்தின்போது, முஸ்லிம் முதியோர் இருவருக்கு அடைக்கலம் கொடுத்தேன் என்று எழுதியதை ஜனாப் சுவனப்பிரியன் பாராட்டினாரே தவிர, என்னை இஸ்லாமுக்கு மாறும்படி அழைப்பு விடுக்கவில்லை. அவரிடம் இருக்கும் அந்த உயர்ந்த பண்பை நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

    6. //தாங்கள் கிறித்துவை ஏற்றால் தங்களின் இலக்குகளை எவ்வித இடையூறும் இன்றி ஜி.யு,போப், சீகன் பால்கு, கால்டுவெல் போன்று தமிழுக்கான சேவையை செவ்வனே செய்யலாம் //

    இதைவிட விஷமமான கருத்தை நான் யாரிடமிருந்தும் கேட்டதில்லை. திருக்குறளை இப்பாருக்குத் ஈந்த திருவள்ளுவர், “என்னை நன்றால் இறைவன் செய்தான், தன்னை நன்றாய்த் தமிழ் செய்வதற்கே” என்று திருமந்திரம் எழுதிய திருமூலர், தன்னைத் “தமிழ்ஞான ஞானமுனிவன்” என்று பெருமையுடன் தேவாரம் பகர்ந்த காழிப்பிள்ளையார், மற்றும், பலப்பல சைவ, வைணவப் பெரியோர்கள் இந்துக்கள், ஐம்பெரும் காப்பியங்களைத் தமிழில் படைத்தவர்கள் சமணர்கள், புத்தர்கள், சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் ஒரு முஸ்லிம் என்பதைத் தாங்கள் அறியவில்லையா, அல்லது மதமாற்றம் செய்வதற்காக அறிந்தும் அறியாததுபோல நடந்துகொள்கிறீர்களா?

    கிறித்தவர்கள் உள்பட, பல சமயத்தாரும், நாத்திகர்க்களும்கூட தமிழைச் சிறக்க வைத்தார்கள். எனவே, ஒரு சமயத்திற்கே தமிழ் உரியதுபோல எழுதி, இந்து மதத்தின் ஒரு பிரிவினர் தமிழர் அல்லர் என்ற திராவிடப் பிரச்சாரத்த்தையே பெரிதாக்கிக் கைக்கொள்ள முயலாதீர்கள், அனைவரும் தமிழர்கள், நாம் அனைவரும் — எந்த நிறமானாலும், எந்த சமயமானாலும், எந்த இனமாலும், எந்த சாதி, எந்தப் சமய உட்பிரிவானாலும் — தமிழ்த்தாய் ஈன்றேடுத்த தமிழ்ச் செல்வங்கள் என்று ஒற்றுமைக்கு முயலுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்.

    இறுதியாக, அமரகவி பாரதி வெள்ளையரை எதிர்த்துப்பாடிய கவிதை ஒன்றின் வரியை மேற்கோள் கொடுத்து விடைபெறுகிறேன்:

    “ஆயிரம் உண்டிங்கு சாதி, இதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?”

    வணக்கம். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்!

  48. பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க திட்டமிட்டவர் முஹமது அலி ஜின்னா. இவர் ஒரு ஷியா முஸ்லிம். இஸ்லாமிய நடைமுறைகளை வெறுத்து மேற்கத்திய கலாசாரத்தை வாழ்வியலாக கொண்டவர். முஸ்லிம்களும் இந்துக்களும் மோதிக் கொண்டு குருதியைக் கொட்ட காரணமாயிருந்தவர்.

    அதே சமயம் மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஒரு வஹாபிய சிந்தனை உடையவர். பூர்வீகம் அரபு நாடு. அரபு நாடுகளை துறந்து நமது நாட்டை தாயகமாக ஆக்கிக் கொண்டவர். கடைசி வரை பாகிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர். பாகிஸ்தான் பிரிவினையால் இந்த பிராந்தியம் முழுவதும் காலாகாலத்துக்கும் பிரச்னைகளை உண்டு பண்ணும். பாகிஸ்தான் எனற் நாடு உருவானால் இந்திய முஸ்லிம்கள் கடும் அவச் சொல்களை ஏற்க வேண்டி வரும் என்று ஜின்னாவோடு பல முறை மன்றாடிப் பார்த்தார்.

    ஆனால் ஜின்னா என்ற அந்த இஸ்லாமிய துரோகி அபுல் கலாம் ஆசாத்தின் சொற்களை கேட்க மறுத்தார். இன்று பாகிஸ்தான் அவர் சொன்னது போல் ஒரு தோல்லியடைந்த தேசமாக காட்சியளிக்கிறது.

    ஆனால் திரு க்ருஷ்ணகுமாரோ ஷியாக்களைத்தான் அதிகம் ஆதரிப்பார். இந்த நாடு பிப்பதை எதிர்த்த வஹாபிகளை எதிர்ப்பார். இந்துத்வாவுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த நாடு பிரிந்து இஸ்லாமியர் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டதற்கு ஜின்னா காரணமாக இருந்ததால் க்ருஷ்ணகுமார், சுப்ரமணியம் சுவாமி போன்றோர் ஷிஆக்களை தலை மேல் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். இந்த நாட்டை துண்டாடியதில் ஷிஆக்களே முழு பங்கையும் வகித்தனர் என்பதை ஏனோ பலரும் மறந்து விடுகின்றனர்.

  49. ஷியாக்களையோ, வேறு எந்த வஹாபி தீவிரவாதத்தையோ இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. நண்பர் சுபி அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி பாகிஸ்தான் பிரிவினையை தூண்டிய தீயவன் ஜின்னா என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது ஜின்னாவோடு ஓடியவர்கள் சன்னி முஸ்லீம்களே பெரும்பான்மையினர். சன்னி முஸ்லீம்கள் நாங்கள் இந்தியாவில் தான் இருப்போம் என்று சொல்லவில்லை. நீங்கள் சொன்ன அபுல் கலாம் ஆசாத் ஒரு மைனாரிட்டி. மெஜாரிட்டி பாகிஸ்தானுக்கு ஓடியவர்கள் என்பதே உண்மை. இதில் என்ன ஷியா சன்னி வேண்டிக்கிடக்கிறது.

    இந்த தளத்தில் நாங்கள் வலியுறுத்துவது என்னவெனில் , எந்த மனிதனுக்கும் தன்னுடைய கருத்துக்களை வெளியிட உரிமை உண்டு. ஆனால் அவற்றை பிறர் மீது திணிக்க உரிமை கிடையாது. கடவுள் நம்பிக்கை உயர்வானது. அதனைவிட உயர்வானது கடவுள் நம்பிக்கை இன்மைதான். ஆனால் எந்த தரப்பினரும் நீ என் வழிக்கு வந்துவிடு வராவிட்டால் உன்னை ஜிஹாத் பண்ணிவிடுவேன் என்று மிரட்டக்கூடாது. கடவுள் நம்பிக்கை என்பது உணவு, உடை, மொழி, நாடு என்ற விஷயங்களில் குறுக்கிடக்கூடாது. கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் பெண்ணடிமை செய்வது மிகப்பெரிய பாவம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் ஷியாக்கள் சன்னிகளை கொல்வதும் , வகாபிக்கள் ஷியாக்களை கொல்வதும் தொடர்ந்தால், (இப்போதே மூன்று வருடத்துக்குள் சிரியா மற்றும் ஈராக்கில் இருதரப்பிலும் கொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டிவிட்டது.) இந்த பூமியில் கடவுள் நம்பிக்கை 100 சதவீதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஷியாக்களை மட்டுமல்ல ஆபிரகாமியர்கள் யாரையுமே நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏனெனில் மதமாற்றம் என்ற அஜெண்டாவை மட்டுமே வைத்திருப்பவர்கள் அவர்கள். அவர்கள் யாராக இருந்தால் என்ன ? எல்லாம் ஒன்றுதான்.

  50. அன்பார்ந்த ஜெனாப் சுவனப்ரியன்

    உங்களில் ஆழ்ந்து பதிந்திருக்கும் ஹிந்துஸ்தானிய அற விழுமியங்களுக்கும் அராபிய பயங்கரவாத வஹாபியத்துக்கும் இடையே பெரும் மனப்போராட்டம் நடக்கிறது என்பது புரிகிறது.

    நேர்மையாவும் கண்ணியமாகவும் கருத்துப்பதியும் மாண்பு குறைந்து கொண்டே வருகிறது உங்கள் தரப்பிலிருந்து.

    \\\\ ஆனால் திரு க்ருஷ்ணகுமாரோ ஷியாக்களைத்தான் அதிகம் ஆதரிப்பார். இந்த நாடு பிப்பதை எதிர்த்த வஹாபிகளை எதிர்ப்பார். இந்துத்வாவுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த நாடு பிரிந்து இஸ்லாமியர் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டதற்கு ஜின்னா காரணமாக இருந்ததால் க்ருஷ்ணகுமார், சுப்ரமணியம் சுவாமி போன்றோர் ஷிஆக்களை தலை மேல் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். \\\\

    உங்களுடைய கருத்து பச்சைப்பொய் என்பதை என்னுடைய பகிரப்பட்ட கருத்துக்களின் பட்டியல் வாயிலாகப் பகிர்கிறேன். பிழையிருந்தால் குறிப்பாகச் சுட்டிக்காட்டவும்.

    தர்காஹ் ஷெரீஃபுகளை இடிப்பதற்கு குரான்-ஏ-கரீம் உங்களுக்கு அனுமதி கொடுக்கிறது என்ற கருத்தைப் பதிந்திருந்தீர்கள். இக்கருத்தை மிக வன்மையாக எதிர்த்திருந்தேன். பின்னிட்டும் உங்கள் வஹாபிய பயங்கரவாத இஸ்லாத்தில் ஆழ்ந்த உங்கள் உள்ளக்கிடக்கையை உள்ளது உள்ளபடி பகிர்ந்த உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்.

    AIMPLB அங்கத்தினராகிய ஜெனாப் எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் அவர்கள் கருத்தை இந்த தளத்தில் நான் விதந்தோதி பகிர்ந்திருந்தேன். அன்னார் ஹிந்துஸ்தானத்தின் மிக ப்ராசீனமான மற்றும் ப்ரபலமான தேவ்பந்தி இஸ்லாமிய கல்விக்கூடமாகிய தாருல் உலூம் – நடுவாட்-உல்-உலேமா-இ-ஹிந்த் என்ற ஸ்தாபனத்தில் கல்வி கற்ற அறிஞர். இவர் ஷியா முஸல்மான் இல்லை.

    All India Imam Association அங்கத்தினராகிய மௌலானா சாஜித் ரஷீதி சாஹேப் அவர்களுடைய பல கருத்துக்களை விந்தந்தோதியிருந்தேன். அன்னார் ஷியா முஸ்லீமா அல்லது சுன்னி முஸ்லீமா என்று தெரியாது. அவ்வாறே ஜெனாப் ஜாஃபர் சரேஷ்வாலா, ஜெனாப் சையத் ஜாஃபர், மோஹ்தர்மா ஆஸிஃபா கான் சாஹிபா போன்றோருடைய அருமையான கருத்துக்களும் என்னால் விதந்தோதப்பட்டது.இவர்கள் இஸ்லாமின் ஷியா என்றோ சுன்னி பிரிவினரா என்று துலக்கிப்பார்த்து ஆதரிக்கப்பட்டதல்ல இவர்கள் கருத்துக்கள்.

    காலம் சென்ற ஜெனாப் அஹ்மத் ராஜா கான் பரேல்வி சாஹேப் தர்காஹ் ஷெரீஃப் வழிபாடுகளில் நம்பிக்கையுள்ள பரேல்வி சுன்னி இஸ்லாத்தில் செயல்பாடுடைய அன்பர். அன்னார் 1930களில் பயங்கரவாத வஹாபிய சுன்னி இஸ்லாமிய செயல்பாடுகளுக்கு எதிராக மக்காவின் உலமாக்களிடமிருந்து ஃபத்வா கூட ஜாரி செய்திருந்தார். இவர் செயல்பாட்டை நமது தளத்தில் விதந்தோதியிருந்தேன். இவர் ஷியா கிடையாது.

    ஹிந்துஸ்தானத்தில் அஹ்மதியா இஸ்லாமிய சஹோதரர்கள் சட்டப்படி இஸ்லாமியராகக் கருதப்படுவதை விதந்தோதியிருந்தேன். இவர்கள் ஷியா முஸல்மாணியர் இல்லை. தாங்கள் பாக்கி ஸ்தானம் என்ற மதவெறி நிலப்பரப்பில் அஹ்மதியாக்கள் இஸ்லாமியர் இல்லை என்று சட்டம் வரையறுத்ததை ஆதரித்துள்ளீர்கள்.

    ஷியா தர்ம குருவான மௌலானா கல்பே ஜவ்வாத் சாஹேப் அவர்கள் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து போராடும் ஒவ்வொரு தேசபக்தியுள்ள போராட்டங்களில் அந்த சமுதாயத்தின் பங்களிப்பின் அடையாளமாக குரல் கொடுக்கும் அன்பர். ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்தோஸிதா ஹமாரா என்று ஹிந்துஸ்தானத்தின் பெருமை பாடும் அன்பர்.

    தர்க்காஹ் ஷெரீஃப் வழிபாடுகளில் ஈடுபாடுள்ள பரேல்வி சுன்னி முஸ்லீம்களை இழித்துப்பழிக்கும் செயல்பாடுடைய தாங்கள், அஹ்மதியா முஸ்லீம் சஹோதரர்கள் ஹிந்துஸ்தானத்தில் சட்டரீதியாக இஸ்லாமியர்களாக ஏற்கப்படுகையில் மதவெறி பாக்கி ஸ்தானத்தின் செயல்பாடான அஹ்மதியாக்களை இஸ்லாமியர் அல்ல என்ற இழித்துப்பழிக்கத்தக்க செயல்பாடை விதந்தோதும் செயல்பாடுடைய தாங்கள், ஹிந்துஸ்தானத்தின் கோடானு கோடி ஷியா இஸ்லாமிய சஹோதரர்கள் அகண்ட ஹிந்துஸ்தானத்துக்குப் பாடுபட்ட போதிலும் ஒட்டு மொத்த ஷியா சமூஹத்தினரை இழித்துப்பழிக்கும் தாங்கள் ………………

    எமக்கும் உங்களுக்கும் சஹோதரர்களான ஹிந்துஸ்தானத்தின் மற்றைய இஸ்லாமிய பிரிவினர்களின் செயல்பாடுகளை தாங்கள் மட்டற்று இழித்துப்பழித்தாலும் கூட…………..கோவில் திருவிழாக்களை தடுத்து நிறுத்த விழைந்த அடாவடி முஸ்லீம் சஹோதரர்களை கண்டித்த உங்கள் செயல்பாடுகளை குறிப்பாக விதந்தோதியிருக்கிறேன். பொதுவில் கண்ணியமாகக் கருத்துப் பகிரும் உங்கள் பாங்கை தொடர்ந்து இந்த தளத்தில் விதந்தோதி வந்திருக்கிறேன். ஆனால் கண்ணியமாகக் கருத்துப்பகிரும் உங்கள் பாங்கு குறைந்து ………………பச்சைப் பொய்களை எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் பதியும் அவலத்தையும் வருத்தத்துடன் அவதானிக்கிறேன்.

    தங்களில் ஆழப்பதிந்துள்ள ஹிந்துஸ்தானத்தின் அற விழுமியங்களை மீட்டெடுத்து நேர்மையாக உண்மையாகக் கருத்துப்பதியும் உங்களது பாங்கை மீட்டெடுக்கவும்.

    உலக அமைதிக்கு எதிரான பயங்கரவாத வஹாபிய இஸ்லாத்தின் ……………………. சொந்த இஸ்லாமிய சஹோதரர்கள் அனைவரையுமே தேச விரோதிகள் என்று இழித்துப்பழிக்க உங்களுக்கு போதனை செய்யும்…………. அறத்துக்கு எதிரான விழுமியங்களிலிருந்து மீளவும்.

    குதா ஹாஃபீஸ்

    என்றென்றும் உங்கள் அன்பார்ந்த
    க்ருஷ்ணகுமார்

  51. I Totally Agree with Mr.thayumanavan’s statement. The article contain’s nothing but blasphemy and obloquy about minorities in india. By publishing this fanatic article in form of book among the public, it’ll lead to communal violence between hindus and minority citizens. So in order to maintain the peace among the society this article had to stopped from transforming a book. Thanking you. Also thanks to Mr.Balasundaram Krishna..

  52. அன்பார்ந்த ஜெனாப் சுவனப்ரியன்

    \\\\ நாம் என்ன வகாபிகளா? ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை? இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். islam2அதே வேளையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும். அவர்கள் நம்மவர்கள். நம் சொந்தங்கள். நம் தொப்புள்கொடி உறவுகள் \\\\

    ஹிந்துத்வவாதிகளின் அலகீடு என்பது ஸ்ரீமான் ம.வெங்கடேசன் அவர்களது பொன்னில் பொறிக்கப்பட வேண்டிய மேற்கண்ட வாசகங்களில் தெளிவாகப் பகிரப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு படி மேலே போய் அக்கருத்தை மெருகேற்றுகிறேன்.

    சொந்த இஸ்லாமிய சஹோதரர்களை மட்டற்று இழித்துப்பழிக்கும் செயல்பாடுடைய வஹாபிய செயல்முறைகளின் படி ஒழுகுபவர்களாக இருந்தாலும் கூட சரி……….. அவர்களுடைய கருத்துக்களில் கூட விதிவிலக்காக ந்யாயம் என்பது தென்பட்டாலும்………………. எந்த தயக்கமும் இல்லாமல்………………. அதை நேர்மையுடன் விதந்தோதுவது ஹிந்துத்வவாதிகளின் செயல்பாடு. உங்களுடைய எத்தனையெத்தனை நேர்மையான செயல்பாடுகளை நானும் இந்த தளத்து மற்றைய சஹோதரர்களும் விதந்தோதியிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வீர்களாக.

    அலகீடு வஹாபியம் இல்லை. அலகீடு குறிப்பிட்ட செயல்பாடுகள் என்பதை அறியத்தலைப்படுவீர்களாக. வஹாபியம் சார்ந்தும் நேர்மை என்பதும் அறவிழுமியங்கள் என்பதும் பகிரப்பட்டால் அதையும் விதந்தோதத் தயங்க மாட்டோம் என்பதை அறிவீர்.

    அலகீடு யார் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர் என்ற படிக்கு இல்லை. அலகீடு அற விழுமியங்களின் பாற்பட்ட செயல்பாடுகள்.

    ஹிந்து, முஸ்லீம், க்றைஸ்தவர் என்று எந்த சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ஏற்கப்படுபவை மற்றும் மறுக்கப்படுபவை என்பவை மிகக்குறிப்பாக சுட்டப்படும் செயல்பாடுகள். ஒட்டு மொத்தமாக எந்த மதத்தவரது செயல்பாடுகளையும் ஹிந்துத்வவாதிகள் ஏற்றதும் இல்லை. மறுத்ததும் இல்லை.

    இஸ்லாமிய வாழ்வியல் கூறுகளில் ஆழ்ந்து பொதிந்துள்ள ஜாதிவெறி என்ற கோட்பாட்டிலிருந்து வெளிவராத தாங்கள் ஹிந்துக்களை இழித்துப்பழிக்க ஒட்டுமொத்தமாக ஒன்று / பல ஜாதியை/ ஜாதிகளை அலகீடாகக்கொண்டு தானே உங்கள் கருத்தை பகிர்கிறீர்கள். செயல்பாடுகளைக் குறிப்பாகக் கொண்டு கருத்துப்பகிர்வதில்லையே. உங்கள் கருத்தவதானிக்கும் பாங்கு என்றுமே அறவிழுமியங்களின் பாற்பட்டு இருந்ததே இல்லையே.

    இனியாவது உங்களது ஜாதிக்காழ்ப்பு, மதவெறி-மதக்காழ்ப்பு, மொழிக்காழ்ப்பு போன்ற இழிவான செயற்பாடுகளிலிருந்து வெளிவர முயலுங்கள்.

    ஹிந்துக்களில் ஒரு சாராரை ஒட்டுமொத்தமாக ஜாதி/ஜாதிகள் சார்ந்து காழ்ப்பு மிக இழிவாக இந்த தளத்தில் விமர்சித்து இருக்கிறீர்கள்.

    ஹிந்துக்களை தாங்கள் அறியாமை மிக இழித்துப்பழிப்பது கூட அடுத்த பக்ஷம். சொந்த இஸ்லாமிய சஹோதரர்களையே இழித்துப்பழிக்கும் மதக்காழ்ப்பு செயல்பாடு உடையவராக பரிணமிக்கிறீர்கள்.

    ஒரு உத்தரத்தில் சம்ஸ்க்ருதத்தை விதந்தோதி உடனேயே அதற்குக் கீழேயே சம்ஸ்க்ருதத்தை மட்டற்று இழித்துப்பழிக்க முனைகிறீர்கள்.

    அடுத்தவர் சொல்லாத கருத்தை அடுத்தவர் சொன்னதாக பொய் சொல்லி தரம் தாழ்ந்து கருத்துப் பகிர விழைகிறீர்கள்.

    அகண்ட ஹிந்துஸ்தானம் என்பது ஹிந்துத்வவாதியினருக்கு மட்டிலும் தான் போற்றத்தகுந்த கோட்பாடா? ஹிந்துஸ்தானத்தின் வஹாபிய முஸல்மாணியர் பாக்கி ஸ்தான் (Baqi Sthan), பாங்க்ளாதேசம் போன்ற நிலப்பரப்புகள் ஹிந்துஸ்தானத்துடன் இணைவதை ஏன் எதிர்க்க விழைகிறார்கள்.

    பே-இமானி என்பது ஹராம் என்பதை அறியத் தலைப்படுவீர்களாக.

    நேர்மையாக ………………. உண்மையுடன்……… முன்பு நீங்கள் இதே தளத்தில் கருத்துக்கள் பகிர்ந்தது போன்று…………… மீண்டும் கருத்துப் பகிர முயற்சியாவது செய்ய விழையுங்கள்.

    குதா ஹாஃபீஸ்

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  53. We have been taught only the congress govt.based history from our schooling time.But the reality was totally different.15 years back There was a book released by vikatan group in tamil (vantharkal vendrarkal) briefed the atrocities of Muguls.Due to the vote bank politics being played by the parties in order to appease the minorities all the truths was shattered.Already the society is divided and polarized.There will be no chance of win win situation unless otherwise mutual consent but it will not going to happen. The bitter happenings in india and around the world due to the Jihadi groups, creating more and more hate on the particular religion.If everyone follows their own way nothing will happen.Problem will start only when they try to Impose their wishes on others.

  54. @ க்ருஷ்ண குமார்……..

    //அம்மணி மேற்கண்ட வாசகத்தில் எத்தனை சதமானம் தமிழ் இருக்கிறது என்று அறிவீர்களா?//

    //உங்களுடைய பெயரே தமிழிலிருந்து பல்லாயிரம் காத தூரம்………//

    ஐயா க்ருஷ்ண குமார் அவர்களே, உங்கள் அளவிற்கு இல்லை என்றாலும் ஒன்றிரண்டு சொற்கள் இருப்பது உண்மை தான். தவறை சுட்டிக் காட்டியமைக்கு கோடி நன்றிகள். எதிர் வரும் காலங்களில் தவறு நிகழாமல் இருக்க முயற்சிக்கிறேன்.

    அப்புறம் பெயரில் என்ன இருக்கிறது. உணர்வுக்கும், பெயருக்கும் முடிச்சிடு போடும் தங்களின் அறிவு திறத்தை கண்டு நான் வியக்கிறேன். தமிழ் உணர்விற்கும் நான் தாங்கி வரும் பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

    //ம்……… மிஷ நரி ப்ரசாரத்தை நடத்துவதற்கான இடம் இது அல்ல அம்மணி.//

    இங்கு நான் எந்த பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை. என்னுடைய கருத்தை திரு.தாயுமானவன் அவர்களிடம் கூறினேன் அவ்வளவே. அதனை ஏற்பதும் ஏற்காமல் போவது வருடைய தனிப்பட்ட விருப்பம்.

    //ஸ்ரீமான் தாயுமானவன் என்ற சிவ பக்தரையும் தமிழகத்தின் தொல் சமயமான சைவத்தையும் இழிவு செய்வதற்கு உங்களுக்கு இதை விட சரியான வழியில்லை போலும். ம்……..உங்கள் செயல்பாட்டில் எனக்கு வருத்தமில்லை. மிஷ நரிகளின் செயல்பாடு அறிந்த விஷயமே.//

    நான் சைவத்தையோ அல்லது அதன் கோட்ப்பாடுகளையோ எங்கும் இழிவு படுத்தவில்லை. நீங்களாக ஒன்றை நினைத்து கொண்டு கேள்வி கேட்டால் அதற்க்கு நான் பொறுப்பில்லை. தாயுமானவன் அவர்கள் கிறித்துவத்தை ஏற்றால் நன்றாக இருக்கும் என்று என் கருத்தை நான் கூறினேன். அதில் தவறொன்றும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

    //தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு, கலை இவையெல்லாம் பயங்கரவாத ஆப்ரஹாமியத்தால் சுவடில்லாமல் அழிக்கப்பட்டு வரும் அவலமே……………… //

    மன்னிக்கவும், தமிழ் மொழியை அழிப்பது யார் என்று இங்கிருக்கும் சிறுபிள்ளைக்கு கூட தெரியும். சமஸ்க்ருத சொற்களை புகுத்தி மணிப்ரவாளம் என்னும் நடையை புகுத்தியது எந்த அப்ரகாமியரின் சதி என்று கூற முடியுமா? தமிழ் மொழியை மீட்டெடுக்க வேண்டியது உங்களின் ஆர்.எஸ்.எஸ் விஷ நரிகளிடம் இருந்து தான். இப்போது கூட பிற மொழியின் சொற்களை கலந்து தமிழ் மொழியை சித்தரவதை செய்வது தாங்கள் தான்.

  55. திரு. அரிசோனன்…..

    //திருமதி ரெபேக்கா மேரி அவர்களே,//

    மன்னிக்கவும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காலம் இருக்கின்றது.

    //ஈ.வெ. இராமசாமி நாயக்கர் “கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள்!” என்று சொன்னார். இந்து சமயத்தில் நாத்திகமும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. ஆனால்………..//

    மீண்டும் மன்னிக்கவும், நான் அவரிடம் இருக்கும் பார்பனிய எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் ஒழிப்பு இவைகளை மட்டுமே தான் எடுத்து கொண்டது. ஒருவரின் அனைத்து கருத்து பரிமானங்களும் பிடித்து இருந்தால் மட்டுமே ஏற்க வேண்டும் என்று கூறுவது வறட்டு வாதம். பைபிளில் கூட எனக்கு பிடித்ததை மட்டும் தான் ஏற்று கொள்வது. கிறித்துவ மதத்தில் பிறந்து விட்டேன் என்பதற்காக அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டது கிடையாது.

    //மேலும், ஆர்.எஸ்.எஸ். கிறித்துவ சமய எதிர்ப்பு நிறுவனம் அல்ல. //

    நீங்கள் வேறு உலகத்தில் இருக்கிறீர்களோ. ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் கிருத்துவர்கள் தாக்க பட்டது தங்களுக்கு தெரியாது போல் . 2008 ஆம் ஆண்டு ஒரிசாவின் கந்தமால் நகரில் மட்டும் இந்து மத வெறியர்களால் 200 க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டார்கள். 5000திர்க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை ஆக்கப்பட்டன, 200க்கும் மேற்ப்பட்ட வழிப்பாட்டு கூடங்கள் அழிக்கப்பட்டன. சான்று வேண்டுமானால் கூகுளில் தேடி பாருங்கள் உண்மை உங்களுக்கே தெரியும்.

    //கத்தோலிக்கரான நீங்கள் உங்களது போப் ஆண்டவர் இலத்தீனில்தான் தொழுகையை ரோமாபுரியில் இருக்கும் வாட்டிகனில் நடத்துகிறார். அவர் ஏன் இத்தாலியின் மொழியான இத்தாலியனில் நடத்தவில்லை?//

    இதை நீங்கள் போப் ஆண்டவரிடம் கேளுங்கள். என் தாய்நாடான தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் தமிழில் மட்டுமே வழிப்பாடுகள் அனைத்தும் நடத்த படுகின்றன. கேரளத்தில் மலையாளத்தில் மட்டுமே நடத்த படுகின்றன.

    //கிறித்தவர்கள் உள்பட, பல சமயத்தாரும், நாத்திகர்க்களும்கூட தமிழைச் சிறக்க வைத்தார்கள். எனவே, ஒரு சமயத்திற்கே தமிழ் உரியதுபோல எழுதி, இந்து மதத்தின் ஒரு பிரிவினர் தமிழர் அல்லர் என்ற திராவிடப் பிரச்சாரத்த்தையே பெரிதாக்கிக் கைக்கொள்ள முயலாதீர்கள், //

    அப்படியெல்லாம் இல்லை.. தமிழை நேசிப்பவர்கள் அனைவருமே தமிழர்களே. குறிப்பாக பிற மொழிகளை தமிழின் மீது கலவாதவர்கள். கலப்பவர்கள் யார் என்று நான் கூற வேண்டியதில்லை. தங்களின் மனசான்றுக்கே அது தெரியும்.

  56. சஹோதரி ரெபெக்கா மேரி, ஸ்தோத்திரம்.

    ஆப்ரஹாமிய மிஷ நரிகளுக்கும் தமிழுக்கும் என்றென்றும் சம்பந்தமே இருந்ததில்லை. சம்பந்தமெல்லாம் மத அறுவடை முயற்சிகளுடன் தான். தமிழ் என்பது மத அறுவடைக்கு ஒரு சாதனம் மட்டிலுமே.

    ஆப்ரஹாமிய மிஷ நரிகள் தமிழ் என்ற பெயரில் நாடகமாடி தமிழகத்தின் தொல் சமயங்களை அழித்தொழிக்கும் மத அறுவடை வேலையையே செய்து வருகின்றன.

    \\ சமஸ்க்ருத சொற்களை புகுத்தி மணிப்ரவாளம் என்னும் நடையை புகுத்தியது எந்த அப்ரகாமியரின் சதி என்று கூற முடியுமா? \\

    உலகெங்குமேவிய தேவாலயந்தொறும் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தமிழர்களும் உலகத்தில் உள்ள அனைத்து மொழி மக்களும் பாடித்துதித்து வழிபடுவது எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய திருப்புகழ் என்ற தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்த மொழிநடையால் என்று உங்கள் பகுத்தறிவு இல்லாத புத்தியில் ஏற்றுவீர்களாக. தமிழர், மலேயர், சீனர், பரங்கியர் என்று உலகெங்கும் உள்ள மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவன் எங்கள் முருகப்பெருமான். அவர்கள் உளத்தைக் கொள்ளை கொண்டது அமுதினும் இனிய திருப்புகழ் என்று அறிவீர். தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஆன திருப்புகழை அமுதம் என்றே கொண்டாடியவர்கள் திருப்புகழை உலகிற்கு அளித்த குஹத்திரு வ.தசுப்ரமணிய பிள்ளையும் அவர் தம் திருக்குமாரருமான குஹத்திரு தணிகைமணி வ.த.சு செங்கல்வராய பிள்ளையவர்களும். இவர்கள் பரங்கியர் மதத்தை சைவ சமயத்தாருக்கு பரிந்துரை செய்யும் அடாவடி அம்மணியைக் காட்டிலும் தமிழ்க்காதல் உள்ளவர்கள் என அம்மணி அறியக்கடவார்களாக.

    அம்மணி, இன்றைய திகதியில் தமிழில் வரும் எந்த க்றைஸ்த்வ சேனலை வேண்டுமானாலும் பாருங்கள். சம்ஸ்க்ருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாளம் என்பது வாழும் ஒரு மொழிநடையாக பெருமளவு போஷிக்கப்பட்டு வருவது மத வ்யாபாரம் செய்ய விழையும் க்றைஸ்தவத்தினால் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.

    உர்தூ என்பது முஸ்லீம்களுடையது சம்ஸ்க்ருதம் என்பது பார்ப்பனர்களுடையது மணிப்ரவாளம் என்பது ஒரு குழுவினருடையது என்ற பித்துக்குளி ப்ரசாரங்கள் மிஷ நரிகளால் தந்திரமாக இந்த தேசத்து மக்களை மொழிவெறியேற்ற விஷமத் தனமாக விதைக்கப்பட்டவை. உண்மையான பகுத்தறிவின் பாட்டு சிந்திக்க முயல்பவர்கள் எந்த மொழிகளும் மொழிநடைகளும் எந்தக் குழுவிலும் சிறைப்படுத்தப்பட்டவை அல்ல என்பதனை அறிவார்.

    அந்த அளவு தமிழ் மீது காதலும் சம்ஸ்க்ருதம் என்ற மொழியின் மீதும் மணிப்ரவாளம் என்ற மொழியின் மீதும் வெறுப்பு இருக்குமானால் உங்கள் கை வசம் இருக்கும் மணிப்ரவாள நடையிலான பைபிளை என்ன செய்வதாக உத்தேசம்? அல்லது சம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்ட க்றைஸ்த்வ நூற்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்று ஃபத்வா விதிப்பீர்களா? ஒவ்வொரு மொழிக்கும் மொழி நடைக்கும் அதனதன் அழகியல் கூறுகள் உண்டு என்பதனை பகுத்தறிவு உடைய மக்கள் மட்டிலும் அறிவர். பகுத்தறிவை அறவே உபயோகிக்கக்கூடாது என்றும் ஆப்ரஹாமிய இறைநூலை மீறி சிந்தனை செய்யக்கூடாது என்று விதிக்கப்பட்ட ஆப்ரஹாமியரிடம் பகுத்தறிவை எதிர்பார்ப்பது மூடத்தனமே.

    இன்று புழக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு விவிலிய நூலும் முற்று முழுதாக மணிப்ரவாளத்தில் இருக்கையில்……… தன்னுடைய சொற்களில் தனக்கே தெரியாத விதத்தில் மணிப்ரவாளம் புகுந்து புறப்படுகையில் ……….. தன்னுடைய பெயருக்கும் தமிழுக்கும் பல்லாயிரம் காத தூரம் இருக்கையில்……… தமிழ் உணர்வு பற்றியும் தமிழ்க்காதல் பற்றியும் ப்ரசங்கம் செய்வாராம் அம்மணி அவர்கள். வெட்கம். வெட்கம்.

    உங்களது காதல் விவிலியத்திலும் அதை பித்தலாட்ட முறையின் பாற்பட்டு மாற்று மதத்தினரின் பால் திணித்தலிலும் மட்டிலும் இருக்கிறது என்பது மட்டிலும் நேர்மையானது. உங்களது காதல் தமிழ் மொழியின் மீதானது என்பது நாடகத் தனமானது. ஹிந்துஸ்தானத்தை துண்டு துண்டாக மொழிவெறியின் பாற்பட்டு பிளந்து ஒவ்வொரு துகளும் இன்னொரு துகளுடன் மோதும் ஒரு அவலத்தை துணைகொண்டு உங்களது பரங்கிய எஜமானர்களின் கைக்கூலிகளாக செயல்படுவது என்பதே உண்மையின் பாற்பட்டது. தின்ற உப்பிற்கு கூசாது பச்சை தேச த்ரோஹத்தை தமிழ்த் தேசியம் என்ற சொல்லில் அடக்க விழைவது பசுத்தோல் போர்த்திய மிஷ நரிகளின் செயற்பாடு என்பதை உலகறியும். ஹிந்துஸ்தானமுழுதும் மதக்கலவரத்தை உண்டாக்க மிஷ நரிகள் பரங்கியரிடமிருந்து சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் கோடிக்கணக்கான பணம் பெறுவது உலகம் அறிந்த விஷயமாயிற்றே.

    \\ இப்போது கூட பிற மொழியின் சொற்களை கலந்து தமிழ் மொழியை சித்தரவதை செய்வது தாங்கள் தான். \\

    மாற்று மதத்தவர் தமிழில் சம்ஸ்க்ருதத்தைக் கலந்தால் சித்ரவதை. க்றைஸ்தவர்கள் தங்களது வழிபாட்டு க்ரந்தமான பைபிளில் கலந்தால் அது வழிபாடு. சபாஷ். இது அடாவடியை மட்டிலுமே ஆதாரமாகக் கொண்ட சண்டியர் மட்டிலுமே கைக்கொள்ளும் செயற்பாடு. பூர்ண சுவிசேஷ வேதாகம கல்லூரி — இது க்றைஸ்தவர்கள் தங்கள் இறையியல் பயிற்சி செய்யும் கல்லூரியைக் குறிக்கும் சொல். என்னே மணிப்ரவாளக்காதல் அம்மணி.

    நீங்கள் எந்த மொழியையும் மொழி நடையையும் ப்ரயோகம் செய்வது உங்கள் சுதந்திரப்படி. அதில் எமக்கு எந்த பிணக்கும் இல்லை. மத அறுவடையைக் கைக்கொள்ள மொழி பற்று கொண்டது போல மிஷ நரிகள் ஹிந்துஸ்தானம் முழுதும் நாடகமாடிச் செயல்படுவது உலகமறிந்த விஷயமே.

    எமது மொழியையோ மொழி நடையையோ இழித்துப் பழிக்கும் அடாவடிச் செயலை செய்ய உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. சுதந்தர ஹிந்துஸ்தானத்தில் மணிப்ரவாளத்தில் புழங்க எப்படி க்றைஸ்தவர்களுக்கு உரிமை இருக்கிறதோ அப்படியே எமக்கும் உரிமை இருக்கிறது.

    ஆனால் மணிப்ரவாளத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து கொண்டே அதை இழித்துப்பழிக்கும் நாடகத்தை க்றைஸ்த்வ மிஷ நரிகளால் மட்டிலும் திறமையாகச் செய்ய முடியும்.

    மனிதர்களின் புழக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு மொழியையும் மொழிநடையையும் முதலில் மதிக்கத் தெரிந்து கொண்டு மானுடம் பற்றியும் தார்மீகம் பற்றியும் அதற்கப்புறம் பேச விழையுங்கள்.

    \\\ நான் சைவத்தையோ அல்லது அதன் கோட்ப்பாடுகளையோ எங்கும் இழிவு படுத்தவில்லை. \\\

    எதற்காக பச்சையாகப் பொய் சொல்கிறீர்கள்? சைவத்தில் ஒழுகும் ஒரு தமிழரை சைவத்தில் என்ன குறை கண்டு விட்டீர்கள் என்பதற்காக………… சைவ சமயத்தின் அற விழுமியங்களில் ஒரு கோடியில் ஒரு பங்கு பெறாத…….. தரம் தாழ்ந்த ஆப்ரஹாமியக்கோட்பாட்டுக்கு அழைப்பு விடத் துணிவீர்கள்? சைவ சமயத்தை ஏற்காத உங்களை எங்கும் எமது சைவ சமயம் இழிவாகப் பழிக்க முனைவதில்லையே. ஆனால் உங்களது ஆப்ரஹாமியக் கடவுளை ஏற்காதவர் மீளா நரகம் ஏகுவார் என்று உமது நூலாகிய பைபிள் அடாவடித் தனமாகப் போதிக்கிறதே.

    உங்களை இந்த தளத்தில் யாரும் சைவ சமயத்தை ஏற்க அழைப்பு விடவில்லையே.

    பின் எதற்காக கொல்லுப்பட்டறையில் ஊசி விற்கும் விஷமத்தனத்தைச் செய்யும் படியாக………….. எமது சஹோதரரான ஸ்ரீ தாயுமானவன் அவர்களை தெய்வத்தமிழ் சைவத்தைத் துறந்து அடாவடி அரக்கக்கோட்பாட்டை பரிந்துரை செய்யும் க்றைஸ்தவத்தை ஏற்கச் செய்யுமாறு விஷமத் தனமாகத் துணிகிறீர்கள்.

    எந்த மொழியையும் எந்த மொழி நடையையும் காழ்ப்பு கொண்டு அணுகுதல் மானுட செயற்பாடு ஆகாது. ஆனால் ஆப்ரஹாமியத்துக்கும் மானுடத்துக்கும் சம்பந்தம் என்பதே இருக்கவியலாதே. உலகமெங்கும் நரவேட்டையாடி ரத்த ஆறு பெருக்கி சிலுவையை ஆழப்பதித்ததின் மூலம் தானே க்றைஸ்தவம் பரப்பப்பட்டது என்பதை உலகறியும்.

    தன்னை ஏற்காத மக்கள் துன்புறுத்தப்படுவார்கள் மீளா நரகத்துள் தள்ளப்படுவார் என்பது ஒரு அரக்கக் கோட்பாடாக வேண்டுமானால் இருக்கலாமே அன்றி இறைக்கோட்பாடாக என்றும் இருக்கவியலாது என்பதை அறியக்கடவீர்.

    \\\ தாயுமானவன் அவர்கள் கிறித்துவத்தை ஏற்றால் நன்றாக இருக்கும் என்று என் கருத்தை நான் கூறினேன். \\\

    “பாவிகளே” என்ற க்றைஸ்தவ பித்தலாட்ட வசனத்தையும் கூடவே சேர்த்துக்கொள்ளலாமே.

    \\\ தேவாலயங்களில் தமிழில் மட்டுமே வழிப்பாடுகள் அனைத்தும் நடத்த படுகின்றன. \\\

    பச்சைப்பொய். கத்தோலிக்க தேவாலயங்களில் மணிப்ரவாளத்திலேயே வழிபாடுகள் அனைத்தும் நடத்தப்படுகின்றன. ஜெயா டிவியில் வேளாங்கன்னி தேவாலய வழிபாடுகளை நேரலையில் இன்றைக்கும் அன்பர்கள் பார்த்தறியலாம் இந்த அம்மணி எப்படி கூசாது பொய் சொல்கிறார்கள் என்று.

    \\ சான்று வேண்டுமானால் கூகுளில் தேடி பாருங்கள் உண்மை உங்களுக்கே தெரியும். \\

    பகுத்தறிவில்லாத அம்மணி.

    கூகுளில் தேடினால் க்றைஸ்தவர்கள் உலகில் சிலுவைப்போர்கள் மூலம் எப்படி நரவேட்டை ஆடினார்கள் என்பதும் கூடத் தெரிய வரும். பாண்டிச்சேரியில் தமிழர்களது சிவாலயங்களை க்றைஸ்தவர்கள் எப்படி தகர்த்து நொறுக்கினார்கள் என்பதும் தெரிய வரும். கோவாவில் எப்படி இன் க்விசிஷன் என்ற வன் கொடுமைகளால் ஹிந்துக்களை க்றைஸ்தவர்கள் சித்ரவதை செய்தனர் என்றும் தெரியவரும். மண்டைக்காட்டில் எப்படி பகவதி அம்மனைத் தொழ வந்த ஹிந்துப்பெண்டிரை பலாத்காரம் செய்து க்றைஸ்தவ குண்டர்கள் படுகொலைகள் செய்தனர் என்றும் தெரிய வரும். ஈரோட்டில் எப்படி அம்மன் கோவில் நிலத்தை அபகரிக்கின்றனர் என்பதும் தெரிய வரும். நீங்கள் சொல்லும் அதே கந்தமாலில் தங்களது தாய்மதமான ஹிந்து மதத்திலிருந்து பித்தலாட்ட முறைமைகளில் க்றைஸ்தவத்துக்கு மாற்றப்பட்ட சஹோதரர்களை மீண்டும் ஹிந்து மதத்துக்கு மாற்ற விழைந்த ஸ்வாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி அவர்களை க்றைஸ்த்வர்கள் படுகொலை செய்தனர் என்பதும் தெரியும். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பச்சைக்குழந்தைகளை நெற்றியில் பொட்டிட்டுக்கொண்டார்கள் என்பதற்காக எப்படி தற்கொலை செய்யத்துணிந்தது க்றைஸ்த்வ மதவெறித் தனம் என்பது தெரியவரும்.

    தமிழ்ப்பெண்டிர் நெற்றியில் பொட்டிடுவது தலையில் பூச்சூடுவது என்பது தமிழ்க்கலாசாரம். ஹிந்துஸ்தானப் பெண்டிரின் கலாசாரம். இன்றைய திகதியில் கூட உத்தரபாரதத்தில் இஸ்லாமியப்பெண்டிர் நெற்றியில் பொட்டும் சிந்தூரமும் அணிகின்றனர்.

    தமிழ்ப்பெண்டிரின் பொட்டழித்து பூவழித்து தமிழ்க்கலாசாரத்தை தமிழகத்திலிருந்து அடிச்சுவடில்லாமல் அழித்தொழிக்க விழைவது பரங்கியருக்கும் அவர்களது கலாசாரத்துக்கும் அடிமை சாஸனம் எழுதித் தந்த க்றைஸ்தவ மதத்தின் செயல்பாடு.

    க்றைஸ்தவர்கள் ஹிந்துக்களை படுகொலை செய்தால் சிந்தப்படுவது தக்காளி சட்னி என்று உங்கள் நூற்கள் சொல்லுகின்றனவோ?

    அப்பாவி மக்கள் படுகொலை செய்வதை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஆதரித்ததில்லை. அப்பாவி மக்களை படுகொலை செய்வதை தமது வழிமுறையாக ஆயுத வ்யாபாரம் செய்வதின் மூலம் தழைப்பது கத்தோலிக்கம். ஆயிரம் ஆண்டுகளாக யூதர்களைப் படுகொலை செய்தது தானே கத்தோலிக்கம். ஹிட்லருக்கு ஆதரவளித்தது தானே கத்தோலிக்கம்.

    அப்பாவி மக்களை ஆர்.எஸ்.எஸ் படுகொலை செய்தனர் என்பது துஷ்ப்ரசாரம். மத அறுவடை செய்வதற்கு வசதியாக க்றைஸ்த்வ மிஷ நரிகள் செய்யும் ப்ரசாரம்.

    இந்த தேசத்தில் தழைத்த சமயங்களுடன் ஒப்பிடுகையில் தரம் தாழ்ந்த இறைக்கோட்பாடை உடையது……… என்றாலும் கூட க்றைஸ்தவ சஹோதரர்கள் தங்கள் மதப்படி ஒழுகுதலை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஆதரிக்கவே செய்கிறது.

    ஆயின் தங்கள் மதத்தை ஒழுகுதல் தங்கள் செயல்பாடு என்றில்லாது ஹிந்துக்கள் மீது பித்தலாட்ட முறையில் க்றைஸ்தவத்தை திணிக்க முயலும் ஒவ்வொரு முயற்சியும் சட்ட ரீதியாகவும் சமூஹ ரீதியாகவும் ஹிந்து இயக்கங்களால் எதிர்கொள்ளப்படும் என்பதையும் அறியக்கடவீர்.

    மனிதராக முதலில் முயற்சி செய்யுங்கள். மனிதர்களை அவர்களது மொழிகளை மொழி நடைகளை மானுடத்துடன் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

    மதத்தைப் பற்றியெல்லாம் அதற்கப்புறம் ப்ரசாரம் செய்ய விழையுங்கள்.

  57. செல்வி ரெபேக்கா மேரி அவர்களே,

    1. //பார்பனிய எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் ஒழிப்பு இவைகளை மட்டுமே தான் எடுத்து கொண்டது.//

    இதுவரை Brahmin baiting வரவில்லையே என்று நினைத்தேன். அப்பாடா! வந்து வந்துவிட்டது. ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோவில் ஆண்டிகள் அவர்கள்தானே! பிராமணர்களைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? பிராமணர்கள் பெரும்பாலும் பயந்தாங்கொள்ளிகள். அவர்களைவிட வலிமை குறைந்தவர்கள் யாரராது சண்டைக்கு வந்தாலும்கூட, நமக்கேன் வம்பு என்று அஞ்சி ஓடுபவர்கள். ஒரு காலத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர், “நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று சொல்லாதே!” என்று பிராமணர்களின் போக்கை எதிர்த்தால், அதில் நியாயம் இருந்தது. இப்பொழுது பிராமணர்களைத்தான் மற்றவர்கள் தீண்டத்தகாதவர்கள் மாதிரி நடத்துகிறார்கள். அதனால் எண்ணற்ற பிராமணர்கள் புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். பிராமணர்கள் என்று வெளியில் சொல்லிக்கொள்ளக்கூட அஞ்சுகிறார்கள். வேண்டுமானால், ஆராயச்சிக்கட்டுரைகளை நான் சுட்ட இயலும்.

    கால்டுவெல் காலத்திலிருந்து, மதம் மாற்றுவதற்கு கையாண்ட ஒரே வழியைத் திரும்பத் திரும்ப உபயோகிக்கவேண்டாம். உங்களது வீரமாமுனிவர் ஒரு அந்தணரைப்போல வேடம் அணிந்து, மக்களை ஏமாற்றித்தான் மதம் மாற்றினார் என்பது வரலாறு!

    2. இன்னும் ஒன்று, உங்களின் கருத்து, வெளியாகி இருக்கும் கட்டுரையைப்பற்றி இல்லவே இல்லை. மாறாக, முஸ்லிம் சகோதரர்களுக்கு ஆதரவாக எழுதிய தாயுமானவனை கிறித்தவத்திற்கு மாற்றவே எழுதப்பட்டது. ஜனாப் சுவனப்பிரியன் ஒரு சாது. அவருக்கு இந்தமாதிரி கலைகள் கைவருவதில்லை. அவரது நேர்மை உங்களுக்கு என் இல்லை? திசை திருப்புவதிலும், எதையும் அரசியலாக மாற்றுவதிலும் மிகவும் வல்லவராக இருக்கிறீர்கள், நீங்கள்!

    3. //இதை நீங்கள் போப் ஆண்டவரிடம் கேளுங்கள்.//

    எனக்கு என்ன பைத்தியமா? மதத்தலைவர் என்ற முறையில் அவருக்கு நான் மரியாதையை தர இயலுமே தவிர, அவர் வழி வழியாகச் செய்துவரும் முறைமையை, மாற்றுச் சமயத்தவனான நான் தடுத்துக் கேட்க மாட்டேன், கேட்பதும் முறைமை அன்று. இந்துமதம் அனைத்து சமயப் பெரியோர்களையும் மதிக்கும்படிதான் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்களைப்போல அவதூறு செய்ய அல்ல. நீங்கள்தான் கத்தோலிக்கக் கிறித்தவர். நீங்கள்தான் அவரைக் கேட்கவேண்டும். உங்களது போப் ஆண்டவர் தமிழ்நாட்டுக்கு, உங்கள் சர்ச்சுக்கு வந்தாலும், இலத்தீனில்தான் தொழுகை நடத்துவார். அவ்வமையம், நீங்கள் அவரை, “நீங்கள் தமிழில் ஏன் தொழுகை நடத்தவில்லை?” என்று துணிவுடன் கேட்பீர்களா? கேட்கத்தான் முடியுமா, கேட்கத்தான் உங்களை யாரும் விடுவார்களா? விதண்டாவாதம் வேண்டாம்.

    4. //குறிப்பாக பிற மொழிகளை தமிழின் மீது கலவாதவர்கள். கலப்பவர்கள் யார் என்று நான் கூற வேண்டியதில்லை.//

    என்ன கதை பேசுகிறீர்கள்? தமிழர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நடத்தும் டி.வி. நிகழ்சிகளை நீங்கள் பார்ப்பது கிடையாதா? புதிதாக தங்க்லீஷ் என்ற மொழி உருவாக்கி வருகிறதே, அது உங்கள் கருத்தில் பதியவில்லையா? அப்படி தங்க்ளிஷைப் பேசுபவர்கள் பிராமணர்கள் மட்டும்தானா? வேறு யாரும் இல்லையா?

    இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்திலேயே பிறந்து வளந்தவர்கள் தமிழர்கள் அல்ல, அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு தமிழ்தொண்டல்ல, புதிதாக எங்கிருந்தோ வந்து, அனைவரையும், “பாபாத்மாக்களே!” என்றவர்கள் தமிழர்களாகிப் போனார்களா? நல்ல கதையம்மா, இது! நகைப்புதான் வருகிறது.
    அனைவரும் போற்றும் தமிழ்க் காவியங்களான ஐம்பெருங்காப்பியங்களைத் தமிழுக்கு மீட்டுத் தந்த தமிழ்த்தாத்தா உ.வெ. சுவாமிநாத ஐயர் ஒரு பிராமணர்தான்! சைவ சமய குரவர்கள் நால்வரில், மூவர் அந்தணர்கள்தாம். அவர்களின் தேவாரமும், திருவாசகமும் தமிழாக உங்கள் கண்ணில் படவில்லையா? அது தமிழ்த் தொண்டாக உங்களுக்குத் தெரியவில்லையா?

    5 மதம் மாற்றுவதுதான் உங்கள் தொழில் என்றால் அதைச் செவ்வனே செய்யுங்கள். ஏசுபிரானைப் பற்றியும், கிறித்தவ சமயக் கொள்கைகளைப் பற்றியும் எடுத்து உரையுங்கள். அன்பால் அனைவரையும் அரவணைக்க முயலுங்கள். அதை விடுத்து, தமிழர்களைப் பிரித்து, உங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவதை, நீங்கள் வணங்கும் ஏசுநாதரே விரும்பமாட்டார். அன்பை உபதேசித்த அவர், வெறுப்பை உபதேசிக்கவில்லை. நீங்கள் செய்வது அவரது கொள்கைக்கே மாறானது!

    6 உயர்திரு தாயுமானவன் அவர்களுக்கும், உங்கள் நாடகம் தெரியாது போகும் என்றா நினைக்கிறீர்கள்? தென்னாடுடைய சிவனை நெஞ்சில் நிறுத்தி இருக்கும் அவர், இதற்கெல்லாம் மசிவார் என்றா எண்ணுகிறீர்கள்?

    7. எனக்கு கிறித்தவத்தை தழுவுகின்ற எண்ணற்ற கத்தோலிக்க, பிராடெஸ்டென்ட், ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸ், மார்மன், யூனிடேரியன், பாப்டிஸ்ட், மெதடிஸ்ட், இன்னும் பல பிரிவுகளைச் சேர்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் மனம்விட்டு ஒருவர் சமயத்தைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள முற்படுகிறோம். ஒருவரை மற்றவர் மதிக்கிறோம். எவரும், இந்தியாவில் கிறித்தவர்கள் மதம் மாற்றக் கையாலும் வழிகளை ஒப்புக் கொள்வதில்லை. மனம் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய அன்புவழியே கையாளப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இனவெறி, மொழிவெறி போன்ற எந்த வெறிகளும் கிடையாது.

    அவர்கள்தான் என்னைப்பொறுத்தவரை உண்மையான கிறித்தவ உடன்பிறப்புக்கள்.

  58. ஸ்ரீமான் அரிசோனன்,

    சஹோதரி ரெபெக்கா மேரி அம்மணியின் பித்தலாட்ட மதமாற்ற முறைமைகளுக்கு வயணமாக பதிலளித்தமைக்கு நன்றிகள் பல.

    வேலும் மயிலும் சேவலும் துணை.

  59. குமாரி ரெபேக்கா! இந்துக்கள் & பிராமணர் என்றால் அவர்கள் எல்லாம் உங்களுக்கு
    பேக்கா? “”பைபிளில் கூட எனக்கு பிடித்ததை மட்டும் தான் ஏற்று கொள்வது”” என்று கூறும் நீர் இந்து மதத்தில் மட்டும் உள்ள நல்லவை பிடிக்காதோ? கெட்டவற்றை மட்டும்தான் கெட்டியாக பிடித்து கொள்வீர்களோ? அரிசியில் கல் இருந்தால் கல்லை தூக்கிபோட்டுவிட்டு அரிசியை மட்டும் சாதமாக்கி சாபிடுவதில்லையா? இந்து மதத்திலுள்ள குறையை மட்டும் உமக்கு சாதகமாக்கி சாடுவது முறையா?

    ////இதை நீங்கள் போப் ஆண்டவரிடம் கேளுங்கள்///
    நீங்கள் கேட்டால் பதில் சொல்லமாட்டார்களா? நாங்கள் அவரிடம் இந்த விஷயத்தை “”மட்டும்”” கேட்கமாட்டோம் தற்போதைய பிரான்சிஸ் என்ற போப்புக்கு முன்னர் இருந்த போப் பெனெடிக்ட் XVI சிறார்களுக்கு பாலியல் தொந்திரவு இழைத்த பாதிரிகளை பற்றி கண்டுகொள்ளவே இல்லையே. வாடிகனில் செக்ஸ் மற்றும் பணம் கையாடல் விஷயங்கள் அவருக்கு தெரிந்தே நடந்தது. இருந்தும் வாய் மூடி மௌனியாய் இருந்தார். அவரை சந்தித்தால் அதை பற்றி””யும்” கேட்போம்.

    ////குறிப்பாக பிற மொழிகளை தமிழின் மீது கலவாதவர்கள். கலப்பவர்கள் யார் என்று நான் கூற வேண்டியதில்லை.///// ஆர்.எஸ்.எஸ். என்று எழுதியுள்ளதில் வரும் ‘ஸ்’ என்ற எழுத்து தமிழ் எழுத்தா? அல்லது RSS என்பது தமிழா? அதை எழுதிய நீர் தமிழரா? உண்மையில் நீர் ஒரு தமிழராக இருந்திருந்தால் தே.த.தொ( =தேசிய தன்னார்வ தொண்டரமைப்பு) என்றல்லாவா எழுதியிருக்க வேண்டும்? விவிலிய நூல் என்பதற்கு பைபிள் என்கிறீர்கள். அது சரியா? சுவிசேஷம் என்ற வார்த்தையில் ஷ என்ற எழுத்தை எங்கிருந்து திருடினீர்கள்?ஆலேலூயா மற்றும் ஆமென் என்பெதெல்லாம் தமிழ் வார்த்தை என்று சொன்னால் அதை நம்பினால் என்னை விட ஒரு பெரிய பைத்தியகாரன் இந்த உலகில் வேறு எவனும் இருக்க மாட்டான்.

    கூகுளில் தேடிபார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும் தாயி. ஒரிசாவில் ஏற்பட்ட கலவரத்திற்கு மூல காரணம் என்ன? சாமியாரை கொன்றதுதானே? அது நல்ல செயலா? தீக்குச்சியை கொளுத்தி போட்டுவிடுவீர்கள். அப்புறம் எரியுதே எரியுதே என்று கூககுரளிடுவீர்கள. முஸ்லிம்கள் அப்படிதான் ரயிலை கொளுத்தி 58 பேரை சாகடித்தனர். அதற்கு எதிர்வினை நடந்தபோது அநியாயம் என்கிறார்கள். இந்துக்களை சாகடிக்கும்போது அந்த அநியாயம் கண்ணுக்கு தெரியவில்லை.அதேபோல இஸ்ரேலில் 3 இஸ்ரேல் இளைஞர்களை அநியாயமாக கொன்றார்கள். இப்போது 1000 கணக்கில் (பாலஸ்தீனியர்கள்) சாகிறார்கள்.வள்ளுவர் அதைத்தான் “முற்பகல் செயின் பிற்பகல் விளையும்” என்றார். நீங்கள் இந்துக்களை சாகடித்தால் நாங்கள் வாய் பொத்தி கை கட்டி இருக்கவேண்டுமா? எதுவும் எதிர்த்து பேசவே கூடாதா? அராஜவாதிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடுத்த வாரிசுகள் என்று உங்களுக்கு நினைப்போ?

    தாயே! உமது கட்டளைக்குஇணங்க கூகுளை அலசி பார்த்தேன். அதில் கிடைத்தவைகளை கீழே தருகிறேன். படித்து மகிழவும்.
    1. பூமி உருண்டை எனும் கோபர் நிகஸ் என்ற விஞ்ஞானியின் கருத்தை ஆதரித்து பேசியதால் புருனோ (1548 – 1660)என்பவர் ஐரோப்பாவில் பாதிரிகளால் உயிருடன் கொளுத்தபட்டார்.
    2. கத்தோலிக்க மதம் பாதிரிகள் திருமணம் செய்துகொள்வதை தடுக்கிறது.அமெரிக்காவில் சமீபத்தில் பாதிரிகளின் காம இச்சைக்கு பலியான குழந்தைகளுக்கு 100 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்கியது.
    3. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு “””தமிழ்””” கிறித்தவ பாதிரியார் (பெயர்:–கிறிஸ்ட தாஸ் –வயது 48 –Guhiyaj என்ற ஊரில் உள்ள St Joseph ‘s school ன் பிரின்சிபால்) என்பவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கபட்டார். எதற்கு தெரியுமா?
    14 வயது பள்ளி மாணவனை sodomy க்கு பயன்படுத்தினாராம்.

    வாயை வைத்துகொண்டு சும்மா இல்லாமல் எதையோ எழுதபோய் அதற்கு இப்படி எல்லாம் வாங்கி கட்டிக்கொள்ளவேண்டுமா தாயி?

  60. செல்வி. ரெபேக்கா மேரி அவர்களுக்கு ………….

    முதலில் தங்களின் தமிழ் தேசிய சிந்தனைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் மொழியின் மீது தங்களுக்கு உள்ள அன்பை பெரிதும் போற்றுக்கிறேன். இந்த எண்ணம் மங்கி விடாமல் சுடர் விட்டு கொண்டே இருக்குமாக.

    //என்னுடைய எண்ணம் இந்து மதத்தில் இருந்து கொண்டு தாங்கள் எந்த மாற்றத்தையும்(கருத்தளவில் கூட) ஏற்படுத்த முடியாது என்பது தான். தாங்கள் கிறித்துவை ஏற்றால்……………//

    தங்களின் அழைப்பிற்கு நன்றி, ஆனால் தயவு செய்த இது போன்று இனியும் எங்கும் யாரிடத்திலும் பேசி விட வேண்டாம். சைவமே எனது வாழ்வு, அம்மையப்பன் ஆகிய எம் பெருமானே என் உயிர் மூச்சு. இந்து சமயத்தில் இருக்கும் சில குறைகளையும் ஆர்.எஸ்.எஸ் பிற்போக்கு தனங்களையும், இந்துத்துவா பாசிசத்தையும் நான் எதிர்க்கிறேன். அதற்காக நான் வாதிட்டு கொண்டும் இருக்கிறேன் அதற்காக பிற மதங்களை விதந்தோத வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தமிழ் மொழியின் உயர்விற்காக பாடுப்பட்ட கால்டுவெல், சீகன் பால்கு, ஜி.யு.போப் போன்ற கிறித்துவ அடியார்களை என்றும் சிரமேற் கொன்று போற்றுவேன். அது அவர்களின் அயராத தமிழ் பணிக்காக தானே அன்றி, அவர்கள் இம்மண்ணில் செய்த சமயப் பணிக்காக அல்ல. தயவு செய்து இந்த வேறுப்பாட்டை உணர்ந்துக் கொள்ளவும்.

    இத்தளத்தில் தாங்கள் சார்ந்த கிறித்துவ மதத்தின் மீதான விமர்சன கட்டுரைகள் நிறையவே இருக்கின்றன அங்கு சென்று அது பற்றி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். உங்களுக்கான இடம் அங்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அல்லது நமது தாய் மொழி தமிழின் மீதான வடமொழி ஆதிக்கத்தினை எதிர்த்து தங்கள் மேலான கருத்துக்களை பதியலாம். மற்றப்படி இந்து மதம் மற்றும் அதன் பிரிவுகளையும் அதன் மேலான தத்துவார்தங்களையும் பற்றி தவறாக பேசவோ அல்லது விமர்சிக்கவோ தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. வேறு ஏதும் தவறாக நினைக்க வேண்டாம். ஆண்டவர் எப்போதும் தங்களுக்கு அருள் புரிவாராக. அமென்.

  61. உயர்திரு. கிருஷ்ண குமார் அவர்களுக்கு…..

    //சைவத்தையும் சைவ சமயியையும் இழிவு செய்யும் இது போன்ற இழிவான அழைப்பை நிந்திக்காத ஸ்ரீ தாயுமானவன் அவர்கள் செயல்பாட்டில் தான் எமக்கு வருத்தம்.//

    தவிர்க்க முடியாத சொந்த வேலையின் காரணமாக நான் மதுரை செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே என்னால் 2 நாட்கள் இணையத்தின் பக்கமே வர முடியவில்லை. அதற்குள் இவ்வளவு களேபரம் நடந்து இருக்கிறது. ஆயிரம் பிணக்குகள் இருப்பினும் பரசமயம் மாறிச் செல்லும் அளவிற்கு நான் ஈனன் அல்ல. அரனை சேவித்த கரங்களால் அரங்கநாதனை சேவிப்பதை கூட விரும்பாத யாம், ஆண்டவரை மட்டும் எப்படி சேவிப்போம் ஐயன்மீர், தாங்கள் யோசிக்கலாகாதா? சொந்த வேலையின் காரணமாக மதுரை சென்றாலும், தவிர்க்காமல் எம்பெருமான் கொலுவீற்றிருக்கும் இம்மையில் நன்மை தருவாரையும், மீனாட்சி உடனுறை சொக்கநாதனையும் கண்ணார கண்டு திருக்காட்சி பெற்று தான் வந்தேன். திருச்சிற்றம்பலம்.

  62. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்,

    \\ எம்பெருமான் கொலுவீற்றிருக்கும் இம்மையில் நன்மை தருவாரையும், மீனாட்சி உடனுறை சொக்கநாதனையும் கண்ணார கண்டு திருக்காட்சி பெற்று தான் வந்தேன். திருச்சிற்றம்பலம். \\

    கேழ்ப்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.

  63. ////அமென்///
    .
    இந்தத தளத்தில் சிலர் தமிழைக காக்க தன தலையை கொடுக்கவும் தயார் என்பது போல பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது ஒன்று செய்வது இன்னொன்று. ஆமாம். மரியாதைக்குரிய ஒரு கிறித்தவ woman ஐ பார்த்ததும் Amen என்று சொல்கிறார்கள்.அமென் என்பது ஒரு Hebrew மொழி. அதை தமிழ்படுத்தி “அப்படியே ஆகுக” என்று சொன்னால் இவர் இதில் குறைந்தா போய் விடுவார்? (இதற்கு சுவனபிரியன் போல இவரும் என்னென்ன விளக்கெண்ணை விளக்கங்களை கொடுக்க போகிறாரோ? ரொம்ப பயமா இருக்கிறது)

    இவர் பெரிதும் போற்றி புகழும் அந்த பெண்மணியின் “தமிழ் மீதான காதல் மங்காமல் சுடர் விடவேண்டும் என்று” வாழ்த்துகிறார். ஆனால் அவரை போன்றவர்கள் “ஆலேலூஜா” என்று தான் சொல்கிறார்கள் (நான் பலமுறை நற்செய்தி கூட்டங்களிலும் டிவி நிகழ்சிகளிலும் கேட்டிருக்கிறேன்) கர்த்தருக்கு தோத்திரம் என்று சொல்லவதில்லை. இந்த அளவிற்கு இருக்கிறது அவர்களது தமிழ் மீதான காதல். அட கடவுளே! இவர்களெல்லாம் கருநா(க்கு)நிதியை போன்றவர்கள். ஆம்.
    தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லவார். ஆனால் தன மகனுக்கு ‘அழகிரி’ என்று பெயர் வைப்பார். ‘கிரி’ என்பது தமிழா? (கிரி – மலை :::::::கிரிவலம் =மலை வலம்) இன்னொரு மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைப்பார். ‘ஸ்’ என்பது தமிழ் எழுத்தா? ச்டாலின் என்று கூறவா முடியும்?

    ////என்றும் சிரமேற் கொன்று போற்றுவேன்/////

    இந்த மறுமொழியில் மொத்தம் 5 பத்திகளை . 23 வரிகளில் எழுதியுள்ளார். 2 நாள் மதுரைக்கு போய் திரும்பி விட்டார். என்ன அவசரம்? அந்த 23 வரிகளை ஒரு முறை மீண்டும் படித்து சரி பார்க்க வேண்டாமா? “கொன்று” போற்றுவதை விட இவர் அவர்களை போற்றாமல் இருப்பதே மேல். இவர் அவர்களை கொன்றாரா அல்லது தமிழை கொன்றாரா? மதுரை சோமசுந்தர கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

  64. அன்புள்ள ஆசிரியருக்கு

    2 வது பத்தியில் வரும் “இதில் குறைந்தா” என்பதை “எதில் குறைந்து” என்று மாற்றி வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன். அதேபோல 3 வது பத்தியில் 4 வது வரியில் சொல்லவதில்லை என்பதை “சொல்வதில்லை” என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்து correction க்கான இந்த “”மறுமொழியை”” delete செய்துவிடவும்

  65. ///என்றும் சிரமேற் கொன்று போற்றுவேன்/////

    தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்.. என் சிரமேற் கொண்டு போற்றுவேன். போதுமா.

    //2 நாள் மதுரைக்கு போய் திரும்பி விட்டார். என்ன அவசரம்? //

    அவசரமெல்லாம் ஒன்றுமில்லை.. நான் சென்ற வேலை விரைவாக முடிந்து விட்டது என்று அர்த்தம். 2 நாட்களுக்கு மேல் எனக்கு அங்கு எந்த வேலையும் இல்லை என்று பொருள்.

  66. ஒரு அரிசோனன் அவர்களுக்கு நன்றி.

    #”மாற்றுச் சமயம் என்பதை சிறுபான்மையினர் என்று அரசியல் பேசும் உங்கள் திறனை நான் வியக்கிறேன். அதே சமயத்தில் இந்துக்கள் மாற்று சமயத்தாருக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று மறைமுகமாக விஷ மூளைச்சலவை செய்வதும் தவறு என்று கண்டிக்கிறேன்.”#.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *