பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்

2014 செப்டம்பர் மாதம் 10ந் தேதி சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை தமிழரான அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டான். கைதின் எதிரெலியாக, தமிழகத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஊடுருவியதாக ஊடகங்கள் புலம்ப துவங்கி விட்டன.  ஏற்கனவே மே மாதம் மன்னடியில் கைது செய்யப்பட்ட ஜாகீர் உசைனிடம் நடத்திய விசாரனையின் அடிப்படையில் அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய  விசாரனையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உளவாளி என்பது தெரிய வந்த்து.  .  உண்மையில் தமிழகத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தது, நிதி கொடுத்தது போன்ற செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது உளவு துறையினருக்கு நன்கு தெரியும்.  1967 லிருந்து தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகள் இது பற்றி பெரிய அக்கரை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.  காஷ்மீர் பிரச்சினையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஐ.எஸ்.ஐ இன்று வரை நாட்டின் பல பகுதிகளில் தங்களது கைவரிசையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்ற உண்மை பலருக்கு தெரியாது.

pakistan_cia_isiஐ.எஸ்.ஐயின் கோஷமே விசித்திரமானது, இந்திய ராணுவத்திற்குள் ஊடுருவ முடியாவிட்டால், இந்தியாவுக்குள் ஊடுருவுங்கள்.  காஷ்மீர் மட்டும் இந்தியா அல்ல, காஷ்மீர் இந்தியாவுடையது அல்ல என்ற பழைய பாட்டை அரசியல்வாதிகளின் ராகம் என்று கூறிய ஐ.எஸ்.ஐ. காஷ்மீர் மீட்கப்பட  வேண்டுமென்று அரசியல் தலைவர்கள் பேசட்டும், ஆனால் மீட்பதற்கு என்ன செய்ய  முடியும் என்பதை நாம் யோசிப்போம் என்ற சிந்தனையில் செயல்பட்டது.  ஆனால் இந்தியாவில் தப்புக் கணக்கு போட்டதால், அதாவது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ காஷ்மீர் பிரச்சினையை மட்டுமே கவனிக்கும் என்ற கணக்கு.   ஆனால் அச் சமயத்தில் இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து பஞ்சாப்பை பிரித்து தனி நாடாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், காலிஸ்தான் என்ற ஒரு புதிய இயக்கம் தோன்றியது.  இதை சரியாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ பயன்படுத்திக் கொண்டது.  1966 மத்தியில் ஐ.எஸ்.ஐயின் அதிரடி கமாண்டோ பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள் லண்டனில் தங்கியிருந்து சீக்கியத் தலைவர் சரண்சிங் பஞ்ச்சி என்பவரைச் சந்தித்து, காலிஸ்தான் கோரிக்கைக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளிப்பதாகவும், இதற்கு தேவையான நிதி உதவி செய்வதாகவும் ஐ.எஸ்.ஐ வாக்குறுதி கொடுத்த்து.  காஷ்மீரில்விட்ட கோட்டைக்கு பதில் பஞ்சாப்பில் தங்களது காரியங்களை செயல்படுத்த துவங்கினார்கள்.  இன்றைக்கு இந்தியாவின் முலை முடுக்கெல்லாம் ஐ.எஸ்.ஐயின் ஊடுருவல் முடிந்திருக்கிறதென்றால் அதன் தொடக்கம் தான் பஞ்சாப் அதாவது காலிஸ்தான் கலாட்டா என்றால் மிகையாகாது.

காஷ்மீர் பிரச்சினையை பொறுத்த வரை ஐ.எஸ்.ஐயின் பங்கு வேறு மாதிரியானது.  நேரடி யுத்தங்களானாலும், நிழல் யுத்தங்களானாலும், அல்லது வெறும் கலவர கலாட்டாக்களானாலும், முன்னணி பின்னணி எல்லாவற்றிலும் ஐ.எஸ்.ஐ.தான் நிற்கும்.   பாகிஸ்தான் ராணுவதற்கு பாதை போட்டுக் கொடுத்தவர்களே ஐ.எஸ்.ஐயினர்.  இந்தியாவுடன் பாகிஸ்தான் 1965-ல் தொடுத்த யுத்த்திற்கு முழு வடிவம் கொடுத்தவர்கள் ஐ.எஸ்.ஐ.யினர்.   காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ யினர் காஷ்மீர் முஸ்லீம் மக்களிடம் இந்தியாவின் மீது வெறுப்பை ஏற்படுத்த செய்த செயல்பாடுகள் மிகவும் கீழ்தரமானது.  ஆகவே ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகள் வரிசையாக பார்த்தால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத இயக்கங்களை தடை செய்ய முடியாது என்ற காரணத்தால், முஸஃபராபாத்துக்கு  இடப்பெயற்சி செய்யும் படியும், ஏன்எனில் முஸஃபராபாத் காஷ்மீர் எல்லைக்கு அருகில் இருக்கின்ற ஒரே காரணத்திற்காக மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியது ஐ.எஸ்.ஐ.  இந்த இடப்பெயற்சிக்கு மற்றொரு முக்கியமான காரணம் உண்டு, அதாவது லஷகர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹர்கத் உல் அன்ஸார் போன்ற இயக்கங்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும், இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேற வேண்டுமானால், இந்த இடப்பெயற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும் என புதிய சிந்தனையை ஏற்படுத்திக் கொடுத்த்து ஐ.எஸ்.ஐ.   யின் லெஃப்டினண்ட் ஜெனரல் ஹமீத் குல் என்பவன்.

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் குறிப்பாக அல்-உம்மா கால் ஊன்றிய பின்னர், தங்களது தொடர்புகளை விரிவு படுத்திய போது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டதாக உளவு துறையினர் தகவல்களை தெரிவிக்கிறார்கள்.   கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜ் இலங்கையைச் சார்ந்த தமிழர்.  இதுவரை ஐ.எஸ்.ஐக்கு உளவு சொல்வதற்கு நியமிக்கப்பட்டவர்கள் என உளவு துறையினர் கைது செய்த மூன்றாவது நபர்.   தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ யின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதை பற்றிய ஒரு ஆய்வு செய்தால் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகிறது.  இந்த கைது சம்பந்தமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் விடுத்த அறிக்கையையும் சற்றே ஆய்வு செய்ய வேண்டும்.

மும்பை தாக்குதலுக்கு பின்னர், இந்திய அரசு மேற்குக் கடற்கரைப் பகுதியில் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதின் காரணமாக, ஐ.எஸ்.ஐ. தங்களது செயல்பாடுகளுக்கு  கண்காணிப்பு குறைவாக இருக்கும் பகுதிகள் வழியாக இந்தியாவில் ஊடுருவ முயற்சி எடுத்தார்கள்.   இதன் காரணமாக இந்தியாவிற்கு அண்டை நாடுகளான நேபாளம், வங்க தேசம், இலங்கை போன்ற நாடுகளில் தங்களின் எண்ணங்களை செயல்படுத்த முனைந்தது.

உயர் பதவியில் உள்ளவர்களை தூதர்களாக நியமிக்கும் வழக்கம் பாகிஸ்தானில் கிடையாது.  ஐ.எஸ்.ஐக்கு மிகவும் நெருக்கமான பத்திரிக்கையாளர் ஹசைன் ஹக்கானி (Hassain Haqqani ) என்பவன் இலங்கையின் ஹைகமிஷனராக நியமிக்கப்பட்டவன்.  இவனுக்கு பின்னர் பதவிக்கு வந்தவன் பஷிர் வாலி முகமது., பாகிஸ்தான் தனது செயல்பாடுகளை தென்னக பகுதியில் நடத்தும் நோக்கத்துடன் நியமிக்கப்பட்டதாக பல்வேறு நிபுனர்கள் கருத்து தெரிவித்தார்கள்.  இதற்கு முக்கியமான காரணம் பஷிர் வாலி முகமது, பாகிஸ்தான் உளவுத் துறையின் தலைவராக பதவி வகித்தவர், ஐ.எஸ்.ஐவுடன் நெருங்கிய தொடர்ப்பு கொண்டவர்.  ஏற்கனவே பஷிர் வாலி முகமது இலங்கையில் பணியாற்றியவன்.  முன்னர் பணியாற்றிய போது, தமிழகத்தில் உள்ள அல்-உம்மா இயக்கதினரை சந்தித்தது, இந்த சந்திப்பு நடந்த இடம் லன்டன், இதற்கு ஏற்பாடு செய்த இயக்கம் லஷ்கர்-இ-தொய்பாவாகும்.  , இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள இஸ்லாமிய  இளைஞர்களை பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காகவே காராச்சியில் உள்ள Mufti Nizamuddin Shamzai Madrasa   படிக்கவும், பயிற்சி பெறவும் அனுப்பி வைத்தவன்.

ஐ.எஸ்.ஐ. முத்திரை
ஐ.எஸ்.ஐ. முத்திரை

2006-ல் கொலும்பில் பஷிர் வாலி முகமதுவை கொல்லும் நோக்கத்துடன் மனித வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தற்செயலாக பஷிர் வாலி முகமது தப்பித்து விட்டார்.  இந்த செயலை செய்தவர்கள் விடுதலை புலிகள் என்பது பலருக்கும் நன்கு தெரியும்.  ஆனாலும் இந்திய உளவுத்துறையின் செயல்பாட்டால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகளை கசிய விட்டதில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கும், இலங்கை அரசுக்கும்  சம்பந்தம் உள்ளது.  இதன் காரணமாகவே கொலும்பில் பாகிஸ்தான் உளவுத்துறையை பலப்படுத்துவது என்பது இந்தியாவை சீர்குலைப்பதற்குதான் என்பது வெட்ட வெளிச்சமாகியது.  விடுதலை புலிகள் ஏன் பஷிர் வாலி முகமதுவை கொல்ல முயல வேண்டும்.              விடுதலை புலிகளுக்கு ஆரம்ப காலங்களில் ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் கொடுத்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.  இது சம்பந்தமாக சுப்பையா என்ற ராவின் பொறுப்பாளர் இந்திய அரசுக்கு தெரிவித்த தகவல்கள் ஊர்ஜிப்படுத்துகின்றன.  ஐ.எஸ்.ஐயின் ஆதரவுடன் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பாகிஸ்தானின் ஹர்கத்-உல்-முஜாகுதீன் அமைப்பினரால் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டன.  ( ஆதாரம் நிழல் வீர்ர்கள்  பி.ராமன்  பக்கம் 266)  இந் நிலையில் விடுதலைப் புலிகள் பஷிர் வாலி முகமதுவை தாக்கப்படுவதற்கு முதன்மையான காரணம், பாகிஸ்தான் அரசு இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஆயுதங்கள் வழங்கவும், இலங்கை ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பாலமாக  இருந்தவன் பஷிர் வாலி முகமது என்பதால்  தாக்குதல் நடத்தப்பட்டது.

. 1998-ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் நடத்திய குண்டு வெடிப்பு தமிழக வரலாற்றில் மறக்க இயலாத சம்பவம்.   இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தான் முதன்மையான காரணம் என அன்றைய பிரதமர் குஜ்ரால் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மையானது என கருணாநிதி கூறியதை தற்போது நினைவுப் படுத்த வேண்டும்.  ராவில் பணியாற்றிய உயர் அதிகாரி கே.பி.பத்மநாபன் தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் உள்ள தமிழ் புலிகள் அமைப்பும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யும் இணைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்களை தெரிவித்தும், அன்றைய முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையில் விசாரனை நடத்திய குழு அளித்த அறிக்கையிலும், சிறப்பு புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரனையிலும் கோவை குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தான் திட்டம் வகுத்து கொடுத்த்து என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் உளவு பார்ப்பதற்காக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், தமிழ் பேசும் இஸ்லாமியர்களையே நியமிக்கிறது.  இவ்வாறு நியமிக்கப்படுகிறவர்களின் தாயகமாக தமிழகமாக இருக்க வேண்டும் என்றும் பார்க்கிறார்கள்.  ரகசியமாக அனு ஆயுதங்கள் பாகிஸ்தான் தயாரிக்கிறது என்பதும், அதன் தலைவர் ஏ.க்யு. கான் என்ற விஞ்ஞானி, இந்த விஞ்ஞானிக்கு உதவி புரிந்த இலங்கை முஸ்லிம் புக்காரி சயீத் அபு தகீர் என்பவன் இந்தியாவில் பிறந்த இஸ்லாமியன். ஆகவே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கூடிய வகையில் இருப்பவர்கள் இலங்கை இஸ்லாமியர்கள் என்பது நன்கு தெரிந்த உண்மையாகும்.

2012-ம் வருடம் செப்டம்பர்மாதம் திருச்சி விமான நிலையத்தில் தமீம் அன்சாரி என்பவனை காவல் துறையினர் கைது செய்தார்கள்.  தன்னை வெங்காய வியாபாரியாக காட்டிக் கொண்டு, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியராக செயல்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள்.

தில்லி சரோஜினி மார்க்கெட் குண்டுவெடிப்பு 2005
தில்லி சரோஜினி மார்க்கெட் குண்டுவெடிப்பு 2005

கேரளத்திலிருந்து செயல்படும் நேஷனல் டெவல்மென்ட் பிராண்ட் என்ற இஸ்லாமிய அமைப்பிற்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக் கணக்கான பணம் நிதியாக வந்துள்ளது.  கேரளத்தில் மராட் பகுதியில் நடந்த கலவரத்தில் நேஷனல் டெவல்மென்ட் ப்ராண்ட் முக்கிய பங்கு உள்ளது என்றும், இவர்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தொடர்ப்பு இருப்பதாகவும், முன்னாள் கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் நீரா ரவாத் என்பவர் மராட் கலவர விசாரனை கமிஷன் முன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  பல்வேறு கட்ட விசாரனையில் கேரளத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. முழு பயிற்சி அளித்து, இந்தியாவின் தென் பகுதியில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கும், உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.

கேரளத்தில் காவல் துறை பணியிலிருந்து மூப்பு அடைந்த அதிகாரி திரு.சி.கே.மோகன் தாஸ் கூறியது, கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கேரளத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் நெருங்கிய தொடர்ப்பு இருக்கின்றது.  இநத தொடர்ப்பின் காரணமாக, நிதி மற்றும் ஆயுத் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறினார்.  மேலும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் நடத்திய விசாரனையில் ஐ.எஸ்.ஐ உதவியுடன் தமிழகத்தில் செயல்படும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் கேரளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இதற்கு முக்கிய காரணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதி மற்றும் ஆயுதங்கள் மாற்றும் இடமாக கேரள விளங்குகிறது என்று தெரிவித்தார்கள்.

2013-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் மனியாட்சி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து ஒரு மர்ம தொலை பேசியில் இலங்கையிலிருந்து 35 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படகின் மூலமாக தமிழக கடற்கரை பகுதியில் புகுந்துள்ளார்கள்.  அவர்கள் தங்களுடம் ஆயுதங்கள்,  மற்றும் மேலும் ஆறு பேர்கள் வருவதற்கு வழி வகையும் செய்துள்ளார்கள் என பேசியதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள்.  இலங்கையிலிருந்து தொலைபேசியில் பேசியதாகவும், காவல் துறையினர் விசாரனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்கள்.

2014 மே மாதம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் , மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறைக்கு அனுப்பிய கடித்த்தில், தங்கள் மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ யின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்கள்.  இதற்கு பதிலாக தமிழகம் மற்றும் காநாடக அரசு பதில் அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.  இந்த அறிக்கையில் இரு அரசுகள் தெரிவித்துள்ள தகவல்கள், தென்னிந்தாயவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடாகவில் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பது நன்கு தெரியும்.

கர்நாடாகவில் பெங்களுர், குல்பர்கா,  ஹூப்ளி போன்ற இடங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன் குல்பர்க்காவில் சர்சில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின்  தலையீடு இருந்த்தாகவும், ஐ.எஸ்.ஐயின் தலைமையகமாக குல்பர்க்கா விளங்குகிறது.  1994-ல் ஏ.பி.எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பு, மதீன கல்வி சென்டர் ஆகிய இரு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பின்னர், ஆறு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்கள் குல்பர்க்காவில் ரகசியமாக தங்கி இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தமிழகத்திலும், கர்நாடாகவிலும் நடக்கும் வகுப்பு மோதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ முக்கியமான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஐ.எஸ்.ஐயின் முளையாக செயல்படும் இடங்களாக காவல் துறையினர் தெரிவித்தவை  சென்னை, கோவை, கீழக்கரை மற்றும் நாகப்பட்டினம் என குறிப்பிடுகிறார்கள்.  கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் நடத்திய சோதனையில் 70க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  தமிழகத்தில் அல்-உம்மா அமைப்பும் அதன் சார்பு அமைப்புகளும் வளர்ச்சியடைய அடைய முழு உதவி செய்தவர்கள் ஐ.எஸ்.ஐ அமைப்பினர்.

2014ந் தேதி மே மாதம் ஜாகீர் உசைன் என்ற பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி சென்னையில் கைது செய்யப்பட்டான்.  கைது செய்யப்பட்ட ஜாகீர் உசைனுக்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.  பெங்களுர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக  கோவையை சேர்ந்த ஹக்கீம் என்பவன் கைது செய்யப்பட்டான், இவனுக்கும் ஜாகீர் உசைனுக்கும் தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது.  முழு விசாரனையில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவாளியான ஜாகீர் உசைனுக்கு கொடுக்கப்பட்ட பணி, சென்னையில் உள்ள அமெரிக்க கவுன்சில் அலுவலம் மற்றும் பெங்களுரில் உள்ள இஸ்ரேல் கவுன்சில் அலுவலகம் பற்றி முழு விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டியது.       கைது செய்யப்பட்ட ஜாகீர் உசைன் மே மாதம் 1ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 7.20 மணிக்கு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாவான்.

   simi4

      ஜாகீர் உசைன் விசாரனையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அமீர் சுபையர் சித்தகி என்பவரின் உத்திரவின்  பேரில் தமிழகத்தில் உளவு பார்த்த்தாகவும், கடந்த ஒரு வருடத்தில் பல முறை இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வருகை புரிந்த்தாகவும், மருந்து வியாபாரியாகவும், சில சமயங்களில் ஜவுளி வியாபாரியகவும் வருகை புரிந்ததாக தெரிவித்தான்.  தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள்.  முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது போன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது.  இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள்.    உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும் தெரிவித்தார்கள்.  தமிழகத்தில் குறிப்பாக குமரி மற்றும் ராமநாதபுரத்தில் கள்ள நோட்டு மாற்றியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட தக்கது.

zakir_chennai_bomb_blast_arrest

                        2014 தேர்தலுக்கு பின்னர் மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி அமைத்தவுடன், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஒரு புதிய திட்டத்தை மோடிக்கு எதிராக வகுத்துள்ளது.  ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் மோடி மீது ஒரு புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளது.  இந்த திட்டத்தை வகுத்தவர்கள் ஐ.எஸ்.ஐ அமைப்பினர்.  இது சம்பந்தமாக லன்டன், ஜெனிவா, நியுயார்க் போன்ற இடங்களில் இதற்காக முயற்சிகளை ஐ.எஸ்.ஐ யின் இணை அமைப்பான பாகிஸ்தான்- அமெரிக்கா கம்யுனிட்டி (Pakistan-American Community ) செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இதற்காக ஐ.எஸ்.ஐ யின் மூலம் அமைக்கப்பட்ட இன படுகொலைக்கு எதிரான கூட்டணி (Coalition Against Genocide (CAG) )என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு கொடுப்பவர்கள் என 16க்கு மேற்பட்ட தொண்டு அமைப்புகள் தயார் படுத்தப்பட்டுள்ளது.  இன படுகொலைக்கு எதிரான கூட்டணி என்ற அமைப்பு நேரிடையாகவும், மறைமுகமாகவும் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்புகள் 47 என்றும் , இதில் 16 அமைப்புகள் மனு கொடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ நேரிடையாக நிதி உதவி அளித்து வருகிறது.  மேலும் இந்த அமைப்புகளுக வளைகுடா நாடுகளில் ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council  ) என்ற அமைப்பும் நிதி உதவி அளித்துள்ளது.  இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அமெரிக்கன் கம்யுனிட்டி ( )என்ற அமைப்பும் எல்லாவிதமான உதவிகள் அளித்துள்ளது.

மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்படும் மனுவில் மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை மோடி மீது சுமத்த மனு தயாரிக்கப்பட்டுள்ளது.  இதில் பெண்களுக்கு எதிரான வன்முறை, ஆட்கடத்தல், இறுதியாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீது நடத்திய இன படுகொலை என்ற குற்றச்சாட்டுகள்.  இந்த மனு தயாரிக்கும் பொறுப்பில் இலங்கையில் உள்ள சிங்களவர்களும் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்தார்கள்.  இதற்காக இந்தியாவிலிருந்து 247 நபர்களை ஐ.எஸ்.ஐ தயார் படுத்தி, அவர்கள் மோடி மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை விளக்கமாக எடுத்து கூறுவதற்காகவே, முக்கிய நாடுகளில் தலைநகர்களுக்கு செல்வதற்கு திட்டங்கள் வகுத்த்தும், அதற்கான நிதியை தயார் செய்து கொடுத்த்தும் ஐ.எஸ்.ஐ யாகும்.  இந்த திட்டத்திற்கு ஐ.எஸ்.ஐ செய்யும் செலவு தொகை சுமார்  34 மில்லியன் டாலர் என்றார்கள்.

1993 மார்ச்சு 13ந்தேதி மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிற்கு முக்கிய சூத்திரதாரி தாT+த்  இப்ராஹிம் என்றால், அவனை ஆட்டிப்படைத்தவர்கள் ஐ.எஸ்.ஐ. தாT+தின் பின்புலத்தை ஆராய்ந்த ஐ.எஸ்.ஐ.  அவரைப் பயனபடுத்திக் கொள்ள முயன்றது.  இந்தியாவில் தான் விரும்பும் நாச வேலைகளை செய்து முடிக்கவும், ஹவாலா பணப் பரிமாற்றங்களுக்கும் மற்றபல நிழல் காரியங்களுக்கும் தாT+த் சரியான ஆளாக இருப்பான் என்று ஐ.எஸ்.ஐ நம்பியது.   தாT+த் செய்த தொழிலை வைத்தே ஐ.எஸ்.ஐ மடக்கியது.  ஆகவே இந்தியாவில் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடு என்பது 1993லிருந்தே தொடங்க துவங்கி விட்டது.  .   தாT+த் என்கிற வெறும் கடத்தல்காரனை முதல் முதலில் மத ரீதியில் சிநதிக்கச் செய்து உணர்ச்சி வசப்பட வைத்த்து ஐ.எஸ்.ஐ யின் மிக முக்கியமான சாதனையாகும்.

ஆகவே தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமும், அதன் அமைப்புகளும் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யின் வழிகாட்டுதலில் செயல்படுகிறார்கள் என்பது உண்மையாகிறது.

 

4 Replies to “பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்”

  1. What’s the point in publishing such articles when so many of your commenters are busy establishing their secular credentials by eating Karachi Halwa and begging secular Muslims to condemn such acts of terror? From what I’ve been seeing so far, it’s very clear that Hindus, those in the South in particular, are always reactive, never proactive. Not to mention the fact that they are woefully ignorant of Hindu history. Until that attitude changes, we’ll continue to remain soft targets for Evangelists and Jihadis.

  2. It is true. Majority of Hindus are ignorant or simply not interested to find about their history. I spoke to some Hindu friends before trying to tell them about our past brutal history under islam rule. The reaction i get from them was this, “that was in the past long time ago why talk about it now”

    Most of the hindu families spend most of their time infront of TV sets watching for long hours. Youngsters are even worst. Only want to discuss movies or fly to other countries for work.

    Hindu Unity looks more like a dream only. But I appreaciate Erode Saravanan for this detailed article.

  3. வினவு தளத்தில் ”பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது”(https://www.vinavu.com/2014/10/09/common-civil-code-busting-the-myths-2/) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அந்த கட்டுரைக்கு நியாயமான மறுமொழி போட்டாலும் அதை நீக்கிவிடுகிறார்கள். இத்தனைக்கும் நான் ஒன்றும் இந்துதுவா ஆதரவாளன் கிடையாது. நான் கேட்ட கேள்விகள் மிக சாதாரணமானது. அதை கூட அவர்களால் சகிக்க முடியவில்லை. அவர்கள் மறைமுக இஸ்லாமிய மதவெறி ஆதரவாளராக மாறிவிட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. எனவே வேறு வழியின்றி அவர்களின் முகத்திரையை கிழிக்க அந்த கட்டுரை பற்றிய நான் போட்ட பின்னூட்டத்தை இங்கு வெளியிடுகிறேன்.

    ”என்ன அய்யா இது பொது சிவில் சட்டம் என்பதே இந்து மதவெறி பிடித்த பார்பனர்களின் சதி என்று தானே இத்தனை நாள் கூறிக்கொண்டு இருந்தீர்கள். இப்போது திடீ‌ரென அப்படியே அந்தர் பல்டி அடித்து ”பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது” என்ற பெயரில் பதிவை போட்டு என்னை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டீர்கள். அப்படி பாத்தால் லாஜிக் படி நீங்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க தானே வேண்டும். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல் உங்களுக்கு பார்ப்பது எல்லாம் பார்பனர்களின் சதியாகவே தெரிகிறது போல. ”

    இதுதான் நான் போட்ட பின்னூட்டம். இதைகூட அவர்களால் வெளியிட முடியவில்லை. அவர்களின் இந்த செயல் இந்துதுவாவை ஆதரிக்காத நேரு காந்தி போன்றவர்களின் மதச்சார்பின்மை யை நம்பக்கூடிய என்னை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. நான் எப்படி இந்துதுவாவை எதிர்கிறேனோ, அதுபோல இஸ்லாமிய மதவெறியையும் எதிர்கிறேன். இவர்கள் இஸ்லாமிய மதவெறிக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஒருவேளை எதிர்காலத்தில் தமிழகத்தில் உங்கள் பிஜேபி ஆட்சியமைத்தால் அதற்கு இவர்களை போன்ற போலி மதச்சார்பின்மைவாதிகள் ஒரு முக்கிய காரணமாக இருப்பார்கள்.

  4. Kannan,

    The fact that you compare Hindutva with Islamic fundamentalism shows that you know nothing about the history of India or the history of Islam. Until you do, please refrain from commenting on these issues. If you want, I can recommend some books to bring you up to speed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *