யமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை!

தில்லி தேர்தல் கள போராளிகள்
தில்லி தேர்தல் கள போராளிகள்

எப்படியாவது தில்லி தேர்தலில் பாஜக தோற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றனர் சில ஊடகக் கைக்கூலிகள். அவர்கள் அளவுக்கு அதிகமாகவே கேஜ்ரிவாலை கொம்பு சீவி விடுகின்றனர். இந்நிலையில் தலைநகரின் அரசியல் நிலவரம் குறித்து ஹிந்து விரோத மனப்பான்மையின்றி ஓர் அலசல் தேவையாகிறது. அந்தத் தேவையை நிறைவேற்றுகிறது இக்கட்டுரை….

மீண்டும் தில்லி மாநில சட்டசபைத் தேர்தல் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிப். 7-இல் நடைபெறும் தேர்தலை தனது இறுதிப் போராட்டமாகக் கருதிப்  போராடுகிறார் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால். ஆனால், காலம் அவரை கருணையின்றி நிராகரித்துவிடும் என்பதற்கான சான்றுகள் இப்போதே தென்படத் துவங்கி இருக்கின்றன.

2013 சட்டசபை தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற (28 தொகுதிகள்) ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்து 49 நாட்களில் பதவி விலகியதால் தான் தற்போதைய தேர்தலே நடத்தப்படுகிறது.  “முதல்வர் பதவியிலிருந்து இனி எக்காலத்திலும் விலக  மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்து இப்போது வாக்குவேட்டையாடுகிறார் கேஜ்ரிவால். ஆனால், வாக்காளர்களின் முதுகில் குத்திய கேஜ்ரிவாலை தில்லி மக்கள் அவ்வளவு சீக்கிரம் மன்னித்துவிட மாட்டார்கள் என்றே தெரிகிறது.

இந்நிலையில், ஆம், ஆத்மி கட்சியின் பல முன்னணி தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமானதும், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி  கிரண் பேடி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களத்தில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. கடைசிநேரத்தில் களமிறக்கப்பட்ட அவருக்கு எதிராக பாஜகவில் முணுமுணுப்புகள் எழுந்தாலும், கட்சியின் கட்டுக்கோப்பால் அனைவரும் இணைந்து பணியாற்றத் துவங்கி இருக்கின்றனர்.

அணி மாறிய கேஜ்ரிவாலின் சகாக்கள்
அணி மாறிய கேஜ்ரிவாலின் சகாக்கள்

ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்திய அண்ணா ஹஸாரேயின் தளகர்த்தர்களாக விளங்கியவர்கள் தான் கிரண் பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் இருவரும். நேரடி அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற ஹஸாரேயின் விதியை மீறி அரவிந்த் கேஜ்ரிவால் தான் முதலில் அரசியலில் நுழைந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. அவரது அரசியல் நுழைவால் தில்லி அரசியலில் நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டது தான் மிச்சம்.

தனது முதிர்ச்சியற்ற அரசியல் நடவடிக்கைகளால்,  கிடைத்த தில்லி முதல்வர் பதவியையும் கடாசிவிட்டு, தன்னை முன்னிறுத்திய அனைவர் முகத்திலும் கரியைப் பூசினார் கேஜ்ரிவால். பாஜகவின் வளர்ச்சியை முடக்க கேஜ்ரிவாலை ஆதரித்து, அதன் பலனாக கையைச் சுட்டுக் கொண்டது காங்கிரஸ் கட்சி. இப்போது, “ஆம் ஆத்மி கட்சியை எந்தக் காலத்திலும் ஆதரிக்கும் வாய்ப்பே இல்லை” என்று தில்லி மக்களிடம் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அஜய் மாக்கான்.

தேசப் பிரிவினைக்குப் பிந்தைய தில்லி அரசியலில் ஆரம்ப காலத்திலிருந்தே ஜனசங்கம் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. பாரதீய ஜனதா உதயத்துக்குப் பின், தில்லி மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், பெரும்பாலான காலங்களில் ஆளும் தரப்பாகவும் இருந்தது பாஜக. மதன்லால் குரானா- சாஹிப்சிங் வர்மா- விஜய்குமார் மல்ஹோத்ரா என்ற மூவர் அணியால் காங்கிரஸ் தடுமாறிய காலம் இருந்தது. ஆனால், அவர்களே கட்சிக்கு தடையான காட்சியும் உருவானது.  மாறிவரும் புதிய தலைமுறை வாக்காளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமல் பாஜகவின் மூத்த தலைவர்கள் தடுமாறினர். போதாக்குறைக்கு பாஜகவின் உள்கட்சி ஜனநாயகம் அளவுக்கு மீறியதில் கட்சியின் கௌரவம் அடிபட்டது. இந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்ஷித் முதல்வரானார்.

கேஜ்ரிவாலுக்கு சிக்கலாக மாறிய பூஷன்கள்
கேஜ்ரிவாலுக்கு சிக்கலாக மாறிய பூஷன்கள்

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தில்லியில் நிலவிய ஊழல்களும் (உ.ம்.: காமன்வெல்த் விளையாட்டு ஊழல்),  மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியின் அலங்கோலங்களும் ஷீலா தீக்ஷித்தை விட்டுக்கு அனுப்பின. அந்த வெற்றிடத்தை முழுமையாக நிரப்ப பாஜகவால் இயலவில்லை. காரணம் கேஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சியின் திடீர் நுழைவால் வசீகரிக்கப்பட்ட தில்லியின் இளம் தலைமுறையினர் அளித்த வாக்குகளால் குழப்பமான தேர்தல் முடிவு கிடைத்தது. மொத்தமுள்ள 71 தொகுதிகளில் 31 தொகுதிகளில் பாஜக வென்றாலும், ஆட்சி அமைக்க முடியவில்லை. அதன் விளைவாக கேஜ்ரிவாலின் சிறுபான்மை அரசு பதவியேற்று, பின் விலகியது. இப்போது தில்லி வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது நிலையான அரசைத் தரும் என்பதை நன்கு புரிந்துகொண்டுவிட்டனர்.

தவிர, மத்தியில் ஆளும் நரேந்திர மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், கிரண் பேடியை பாஜக தனது முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பது தில்லியில் பெரும் பலன் தரும் என்றே கணிக்கப்படுகிறது. அநேகமாக பாஜக- அகாலிதளம் கூட்டணி 50-க்கு மேற்பட்ட இடங்களில் வென்றாலும் வியப்பில்லை. எனவே தான், கேஜ்ரிவாலின்  தலைமை ஆலோசகரான சாந்தி பூஷன் (இவர் தான்  ஆ.ஆ.கட்சியின் தேசியத் தலைவர்) , “கிரண் பேடியை பாஜக முன்னிறுத்தியது அற்புதமான அரசியல் நடவடிக்கை. அவர் சிறந்த முதல்வராக இருப்பார்” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். (பிறகு அவர் பல்டி அடித்த தமாஷ்  தனிக்கதை).

கிரண் பேடி: பாஜகவின் சரியான தேர்வு
கிரண் பேடி: பாஜகவின் சரியான தேர்வு

போதாக்குறைக்கு, ஆம் ஆ.ஆ.கட்சியின் வேட்பாளர்கள் பணபலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, கேஜ்ரிவாலுக்கு அடுத்த நிலையில் உள்ள பிரசாந்த் பூஷனும் புகார் கூறி இருக்கிறார். சர்ச்சைக்குரிய 12 வேட்பாளர்களை நீக்க வேண்டும் என்று அவர் கட்சியின் தேர்தல் பிரிவு பொறுப்பாளர் சஞ்சய் சிங்கிடம் மனு அளித்திருக்கிறார்.  இவ்வாறாக, ஆ.ஆ.கட்சியின் கோட்டைக்குள் இப்போதே குத்துவெட்டு துவங்கிவிட்டது.  போலியான நிறுவனங்களிடமிருந்து ரூ. 2 கோடி நன்கொடை பெற்ற விவகாரத்திலும் ஆ.ஆ.கட்சியின் சாயம் வெளுத்திருக்கிறது.

“அராஜகவாதி கேஜ்ரிவாலா?  மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்யும் சிறந்த நிர்வாகி பேடியா? யார் தேவை?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் பிரதமர் மோடி.  அவரது கூட்டங்களுக்கு வரும் மாபெரும் மக்களின் எண்ணிக்கை, தேர்தல் முடிவை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

காங்கிரஸ் கட்சியோ, பாஜக- ஆ.ஆ.கட்சி இடையிலான மோதலில் சிறு துரும்பாக நின்று வேடிக்கை பார்க்கிறது. தனது வழக்கமான ஆதரவாளர்களான இஸ்லாமியர்களை நம்பி அக்கட்சி இருக்கிறது. பெரும்பாலான  தொகுதிகளில்  காங்கிரஸ்  களத்தில் காணப்படவே இல்லை. கேஜ்ரிவாலே, தங்களுக்கும் பாஜகவுக்கும் இடையில் தான் போட்டி என்று தான் பிரசாரம் செய்கிறார். தன்னை எதிராளியாக முன்னிறுத்தும் இந்த வியூகமே ஆம் ஆத்மி கட்சியை சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை முந்தச் செய்தது. அதே பாணி இம்முறை பலனளிக்குமா என்று தெரியவில்லை.

ஜீ மீடியாவின் கருத்துக்கணிப்பு
ஜீ மீடியாவின் கருத்துக்கணிப்பு

கிரண் பேடியின் அரசியல் நுழைவை அவரது அரசியல் குரு  ஹஸாரே விரும்பவில்லை. ஆனால், ஹஸாரேவையும் காலம் தாண்டிக் சென்றுவிட்டதை அவர் இன்னமும் அறியாமல் இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு தனது சகா பேடியை ஆசீர்வதிக்க இப்போதே அவர் தயாராகிக்கொள்வது அவரது மரியாதையைக் காப்பாற்றும்.

பாஜகவின் பல மாநிலத் தொடர்வெற்றிகளில் அடுத்த கோப்பையாக தில்லி இருக்கும் என்பது தேர்தல் போக்கைக் காணும்போதே  தெரிகிறது.

கிரண் பேடியின் அப்பழுக்கற்ற தலைமையும், சிறந்த நிர்வாகி என்ற பெயரும், மோடியின் பிரசார பலமும், அமித் ஷாவின் தேர்தல் உத்திகளும்,  சங்க ஸ்வயம்சேவகர்களின் அர்ப்பணமயமான ஜனநாயகப் பணியும் பாஜகவின் கூடுதல் பலங்கள். பாஜகவின் அனைத்து நிலைத் தலைவர்களும் பல்வேறு மாநில முதல்வர்களும் கிரண் பேடியை முதல்வராக்க கடுமையாக பிரசாரம் செய்கிறார்கள். இதனுடன் ஒப்பிடும் அளவுக்கு தலைநகர் தில்லியில் இப்போதைக்கு வேறு யாரும் இல்லை.

.

இடைத்தேர்தல் நிலவரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கம்
அரங்கநாதர் கோயில்

தில்லி தேர்தலுடன், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மாநிலத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

வருமானத்துக்கு மிஞ்சிய அளவில் சொத்து சேர்த்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற (2013, செப். 27) அதிமுக தலைவியும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வென்ற தொகுதி ஸ்ரீரங்கம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்ததால், அவர் வென்ற தொகுதிக்கு பிப். 13-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் அதிமுக சார்பில் வளர்மதி, திமுக சார்பில் ஆனந்த், பாஜக சார்பில் சுப்பிரமணியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். களத்தில் அதிமுகவின் கரமே ஓங்கியுள்ளது. தவிர பெரும் அமைச்சர் குழுவே அங்கு தேர்தல் களமாடி வருகிறது.  எனினும் ஜெயலலிதா பெற்ற  அதிகபட்ச வாக்கு வித்யாசம் இம்முறை அதிமுகவுக்கு கிட்டாது போகலாம்.

42 Replies to “யமுனைக் கரையிலும் மலர்கிறது தாமரை!”

  1. டில்லி ஊடகங்களின் கண்ணிப்பு வேறு விதமாக அல்லவோ இருக்கிரது1 பொறுதிருந்து பார்போம். ப ஜ க வெற்றிபெற்றால் மிக்க மகிஷி.. நடக்குமா? வாக்காளர்கள் கவனமாக செயல்படவேண்டும்.

  2. நேற்று டைம்ஸ் நவ் டிவியில் கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.கவை விட அதிக இடங்கள் பிடிக்கும் என்று கூறுகிறது. இது சரியான கணிப்பா? அல்லது பா.ஜ.கவை கவிழ்க்க நடக்கும் சதியா? ஆம் ஆத்மி இதுவரை ஆட்சிப் பொறுப்பையே பாக்காமல் டெல்லியில் 40 நாட்களில் ஓடி ஒளிந்தவர்கள் இப்போது எந்த நம்பிக்கையில் இத்தனை பணம் செலவு பண்ணி தேர்தலில் நிற்கிறார்கள். ஆயிரக்கணக்கான தொப்பி, கோடி, விளம்பரம் இதற்கெல்லாம் பணம் யார் தருகிறார்கள்? ஒருக்கால் திக் விஜய் சிங் போன்றவர்கள் தருவார்களோ என்று இங்கு சிலர் பேசிக் கொள்கிறார்கள். அது உண்மையா?

  3. ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெரும் எனக் கருத்துக் கணிப்புக் கூறுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

  4. முன்னாள் நக்ஸலைட்டுகள், இன்னாள் நக்ஸலைட்டு ஆதரவாளர்கள் போன்றோரைப் பெருமளவில் கொண்டது ஆப்பு கட்சி.

    அப்பட்டமான தேசவிரோதக்கருத்தாக்கங்கள், பிரிவினைவாதத்துக்கு தூபம் போடுதல், தேச வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுதல், தேசத்தின் பெருமைகளை சிறுமை செய்தல் போன்றவை இந்தக் கட்சியின் செயல்பாடுகளில் காணக்கிட்டும்.

    இவை எதிர்மறையான அம்சங்கள். பேசுவதற்குக் கவர்ச்சிகரமான ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கு அவ்வளவு எளிதானதாக இல்லாத LOKPAL, CITIZEN CHARTER போன்றவற்றை கோஷத்தில் மட்டும் வைத்து பொது மக்களை ஆப்பு கட்சி கவர்ந்துள்ளது. பொதுமக்களில் படித்தவர்களே கூட கவரப்பட்டுள்ளார்கள்.

    லெஃப்டினண்ட் கவர்னர் அவர்களது 8 மாத கால ஆட்சியில் உருப்படியாக ஏதும் செய்யவில்லை. இந்த எதிர்மறை அம்சம் பாஜக தலையில்.

    தில்லியில் மின்சார சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்கள் பொய்க்கணக்கு காட்டி மின்சார பில்லை தொடர்ந்து உயர்த்துகின்றனர். அதிவிரைவாக ஓடும் மீட்டரின் ஆதாரத்தில் சகட்டுமேனிக்கான மின்சார பில் கட்ட வேண்டியுள்ளது ……….. இவை பொது ஜனங்களின் குமுறல். ஆப்பு கட்சி இந்த தனியார் சப்ளை நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் சிஏஜி ஜமாபந்திக்கு உட்படவேண்டும் என்று வாதாடியது. இவர்கள் தவிர எந்த முக்ய கட்சியும் இதற்கு வாயைத்திறந்து ஆதரவு தெரிவிக்கவில்லை. கோர்ட் வரை விவகாரம் சென்று கோர்ட் இந்த நிறுவனங்களை சிஏஜி ஜமாபந்திக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டது. ஆனாலும் லெஃப்டினண்ட் கவர்னர் தரப்பிலிருந்து ஒன்றும் செய்யப்படவில்லை. இதற்கான பொறுப்பு பாஜக அல்லாமல் வேறு யார்?

    யமுனைக்கரையில் இருந்தும் தண்ணீர் தில்லி வாசிகளுக்கு சீராகக் கிடைப்பதில்லை. சில இடங்களில் உபியிலிருந்து சில இடங்களில் ஹரியாணாவிலிருந்து……… கொஞ்சம் கங்கையிலிருந்து கொஞ்சம் யமுனையிலிருந்து தண்ணீர் சப்ளை. கொஞ்சம் போர் கிணறு. கிணற்றுத் தண்ணீர் டேங்கர் மாஃபியாக்களால் வினியோகம். இந்த குண்டர்களுக்கு அனைத்து கட்சியின் ஆதரவும் உண்டு.

    அரிசி, ஆட்டா (கோதுமை மாவு)…… இந்த இரண்டு பண்டங்களின் விலை ஓரளவு ஸ்திரமாக உள்ளது. பருப்பு வகைகள், காய்கறி மற்றும் பழங்களின் விஷம் போல் ஏறும் விலையின் பொறுப்பு பாஜக தலையில் தான். பெட்ரோல் டீஸல் விலை குறைந்து வருகிறது. அதற்கான சபாஷ் பாஜகவுக்கு கிட்டவில்லை.

    ஆப்பு கட்சி தேர்தல் ப்ரசாரத்தை இரண்டுமாதம் முன்பு ஆரம்பித்து விட்டது. பாஜக பத்து பதினைந்து நாள் முன்னர் தூக்கத்திலிருந்தே விழித்துள்ளது. ஏகே49ஐ ஆப்பு கட்சி முக்யமந்த்ரியாக முன்னிறுத்தி ப்ரசாரம் செய்து வருகையில் காங்க்ரஸ் அஜய் மாக்கனை முன்னிறுத்தி இருக்கையில் பாஜக தரப்பு தூங்கி வழிந்தது. கடேசி நேரத்தில் கிரண் பேடி களமிறக்கப்பட்டுள்ளார். உறுதியான நிர்வாகி. ஆனால் அனுபவமில்லாத அரசியல்வாதி. அதுவும் சாதுர்யமான அல்லது அப்படி படம் காட்டும் கேஜ்ரிவாலறிவானர் முன்னால் பேடி அம்மணி எடுபடவில்லை.

    கணக்கில்லாத ப்ரசாரப் பிழைகள். லேட்டான வாக்குறுதி பத்ரம். manifesto என்றில்லாமல் vision document என்று சொதப்பல். அதில் வடகிழக்கு மாகாணத்தவரை immigrants என்று போட்டு அசடு வழிந்தது… கிரண்பேடி கார்யகர்த்தர்களை வேலைக்காரர்கள் போன்று ஏவ முனைந்து அது எம்பி மனோஜ் திவாரி போன்றோராலேயே இடித்துரைக்கப்பட்டது…….. இப்படி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய சறுக்கல்கள்.

    ஒரு ஒருங்கிணைந்த வலுவான ப்ரசாரம் நிச்சயமாக மிஸ்ஸிங்க். 2014 தேர்தலில் உபி ப்ரசாரம் பாஜகவின் ப்ரசார யுக்திக்கு உதாஹரணம் என்றால்…………. பிழைகளே சறுக்கல்களே நிரம்பிய இந்த ப்ரசாரம் எதிர்மறையான வலுவற்ற ப்ரசாரத்துக்கு உதாஹரணம்.

    மொபைல் ஃபோனில் ஆப்பு கட்சிக்கு வலுவான ப்ரசாரம் போல பாஜக தரப்பிலிருந்து வலுவான ப்ரசாரம் ஏதும் செய்யப்படவில்லை. அழுகுணி தேர்தல் சர்வே கூட ஆப்பு கட்சி தரப்பிலிருந்து மொபைல் ஃபோன் வழியே செய்யப்பட்டுள்ளது. பாஜக தரப்பிலிருது இப்படியான் ப்ரசார யுக்திகள் கையாளப்படவில்லை.

    இண்டியா டிவி, சுதர்சன் ந்யூஸ், ஜி ந்யூஸ் போன்ற ஹிந்தி தொலைக்காட்சி சேனல்கள் பாஜக தரப்பிற்கு – ஹிந்துத்வ தரப்பிற்கு சாதகமாகப் பேசி வருகிறது. இது கொஞ்சம் முன்னேற்றம். காங்க்ரஸின் பின்னணியில் ஆப்பு கட்சியின் சார்பினை பல சேனல்கள் முன் வைக்கின்றன டைம்ஸ் நவ், எண்டிடிவி, சிஎனென் ஐபின், ந்யூஸ் எக்ஸ் — இத்யாதிகள்.

    FIRST POST – இணைய தளத்தில் சில கருத்துக்கணிப்பின் sample size பகிரப்பட்டிருந்தது……….. 6000த்து சொச்சம் 5000 த்து சொச்சம். இப்படி sample size இருந்தால் அதன் நம்பகத் தன்மை எப்படிப்பட்டது என்பது யோசிக்கத் தக்கதே. ஆனால் பொது மக்களின் பொதுப்புத்தியில் இப்படியான சேம்பிள்கள் கொடுக்கும் முடிவு கருத்துக்கணிப்பாக முன்வைக்கப்பட்டு ஒரு பிம்பம் வைக்கப்படுகிறது. அது ஆழமாக இறங்கியுள்ளது மக்கள் மனதில்.

    சாதுர்யமாக பேசும் ஏகே 49 ஐ முன்னிறுத்தும் ஆப்பு கட்சிக்கும் பேசத்தெரியாது மாட்டிக்கொள்ளும் கிரண்பேடியை முன்னிறுத்தி அவரை அடக்கி வாசிக்க முனைந்துள்ள பாஜகவுக்கும் கடுமையான போட்டி. நானும் ரவுடி தான் என்ற கணக்கில் காங்க்ரஸும் களத்தில்.

    ஆப்பு கட்சி ……………ஜெயித்தாலும் சரி தோத்தாலும் சரி…………..கபாப் மே ஹட்டி என்ற சொல்லாடலுக்கு ஏற்ப ம்ருதுவான மாமிசப்பண்டத்தில் ஆப்படும் எலும்பு போல……….. என்ற சொல்லாடலுக்கு ஏற்ப உறுத்தல்வாதியாக இருக்கும்.

  5. Pavam, Sekkizan. Ungal asaiyai padivu seidirukirigal. Unmal aduvalla. Kiram Bedi than magalukku medical seat vangiya muraiye avar eppadi pattavar endru makkalukku telivu paduthi irukkum. Ungallukku AAP meethu payam illai endral yen ithannai MPkkal matrum amaichargal matra manila pradinidhigal Delhi terdal pracharathil kalam irakka pada vendum. Srirangathil ADMK seivathithan neengalum Delhiyil seigirirgal. Poruthirundu porpom. Analam BJP asurabalathodu AAP udan modum nilaiyai uruvakkiyathe AAPku kidaitha vetrithan.

  6. The author of the essay should have traveled to Delhi and hobnobbed with its citizens for a week or so, as journalists should do. To write an important essay based on mere hearsay is disappointing. Perhaps, this website magazine doesn’t have paid journalists to carry out such forecast of poll verdict.

    As I see it, AAP will walk with the cup; BJP lagging behind and Cong is just an also-ran.

    BJP is far away in the imagination of slum population who once voted for Cong, now getting close to AAP. Everyone, I mean, every Delhite, has now become sure that Cong is not in the fray. The choice is between BJP and AAP. Day after day, the BJP has dug their grave deeply: by selecting a non-party candidate (joined only for the purpose of standing for CM post) as their CM aspirant, hitting Kejrawal below the belt, casting aspersions on the integrity of Agarwal community, who are a decisive voting population here and, to cap the bag of idiocies, calling North Eastern people IMMIGRANTS to Delhi, in their vision document or manifesto, as if they are foreigners in India, and, instead of tendering an unconditional apology, defending it as a typographical error, refusing to give Statehood to Delhi (which will help Delhi to look after herself thoroughly), BJP has sunk in the estimate of Delhites.

    I live here and the AAP fellows are disturbing my sleep late into the night much with a lot of meetings and shouting and distributing variety of coloured papers. BJP is not seen anywhere. Cong is working in slums secretly because, even in defeat, they want to go down with some honors.

    Campaign is getting over tomorrow. Everything will fall silent. It is too late for you to go and see what is happening in Delhi. As psephologists say, people will have already decided their choices before the voting day. No one decides who to vote for standing in front of the voting machine!

  7. காமன் வெல்த் ஊழல் என்று 2013 தேர்தலில் BJP, காங்கிரசுக்கு எதிராக, குறிப்பாக ஷீலா தீட்சித்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தது . மே மாதம் முதல் இன்று வரை, தில்லி நிர்வாகம் மத்திய அரசின் (மோதி அரசின் ) கீழ்தான் உள்ளது. ஏன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ? ஷீலா தீட்சித்தை ராஜினாமா செய்ய வைப்பதில் (கேரளா கவர்னர் பதவியிலிருந்து ) காட்டிய சுறுசுறுப்பை, காங்கிரசுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் மோதி அரசாங்கம் காட்டுவதே இல்லை .

  8. அடிப்படையில் பா ஜ க வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கான எந்த தகுதியும் இல்லாதவை.

    மாறாக பா ஜ க வை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரே துருப்பு சீட்டு மோடி + அமீத்ஷா ஆகிய இருவரின் மீது கட்சியினர் தவிர பொதுமக்களும் கொண்டுள்ள நல்ல அபிப்ராயம் ஒன்று தான்.

    இந்தியாவில் இனி எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும், “மோடி” என்னும் மந்திர சொல் மட்டுமே பயனளிக்கும். பா ஜ க விற்கும் பிற கட்சிகளுக்கும் செயல்பாடுகளில் எந்த வேறுபாடும் இல்லை என்பது வேதநியான விஷயம்.

  9. பாஜக 45-முதல் 55 வரை கிடைக்கும். எஞ்சியவை யாருக்கு எவ்வளவு என்று சொல்லமுடியாது. காங்கிரசுக்கு கூட ஒன்றிரண்டு கிடைக்கலாம். யாரும் சொல்ல முடியாது.

  10. டேரா ஸச்சா ஸௌதா என்ற தொண்டு ஸ்தாபனம் / ஸத்சங்கத்தைச் சார்ந்த ஸ்ரீ ராம் ரஹீம் சிங்க் இன்ஸான் அவர்கள் பா ஜ க தரப்பிற்கு தமது ஆதரவைத் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான எம் எஸ் ஜி திரைப்படக்கதாநாயகன் இவர்.

    ஜே ஜே கலோனி எனப்படும் ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளில் இவரது ஆதரவாளர்கள் லக்ஷக்கணக்கில் இருக்கிறார்கள்.

    சேரிப்பகுதியில் பா ஜ க வுக்கு ஆதரவு இல்லை என்ற படிக்கான கருத்துப்பகிர்வது வடிகட்டிய பொய்.

    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சேவாபாரதி மூலம் ஏழை எளிய மக்களுக்காக சேவை செய்து வருவதில் சேரி வாழ் மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளது. மேலும் சேரி வாழ் மக்களும் சங்கப் பணிகளில் நேரடியாக ஈடுபடுகிறார்கள். சங்கப்பணிகளில் ஈடுபடும் அனைவரும் பா ஜ க ஆதரவாளராக இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் இல்லை தான். ஆனால் பா ஜ க சேரி வாழ் மக்களுக்கு முற்றிலும் அன்னியம் என்பது முகமூடி சுவிசேஷ ப்ரசங்கம்.

    சமீபத்திய கருத்துக்கணிப்புகள் பாஜக தரப்பிற்கு அறுதிப்பெரும்பான்மையை சுட்டுகிறது.

    முன்னமே பார்த்தப்படி கடைசீ நேரத்து அவசர அடி கருத்துக்கணிப்புகள் கணிப்பாளர்களின் யூகங்களைக் காட்டுகிறதே அல்லாமல் நிதர்சனத்தைப் படம் பிடித்துக்காட்டுகிறதா என்பது கேழ்விக்குறியே.

    பின்னிட்டும் முறையான சாதனங்களின் பாற்பட்டு நிதர்சனத்தை அறிய விழையும்…….பா ஜ க கட்சித்தரப்பிலிருந்து இந்தத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெறுவோம் என்றே சொல்லப்படுகிறது.

    ஹம் ஹோங்கே காம்யாப். நாம் வெற்றி பெறுவோம்.
    தில்லி ஹை தில் வாலோங்கி. தூய மனதுடையோரின் நகரம் தில்லி.

  11. BJP வெற்றிபெற்றால் – அது மக்களுக்கு மோடி அவர்களின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் நல்ல அபிப்ராயத்தினால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. தேசிய அளவில், பா ஜ க மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றால் – அதற்கு ஒரே காரணம் மோடி என்னும் ஒரு மந்திர சொல் தான்.

    ஒரு வேளை பா ஜ க வெற்றி பெற முடியாமல் போனால், அதற்கான ஒரே காரணம் பா ஜ க வின் அரசியல் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் தான் காரணமாக இருக்க முடியும்.

  12. Exit polls show that the AAP will get a majority.

    Modi-Amit shah made a mistake of projecting Kirrn Bedi as the CM candidate, who was till the other day with the AAP.

    Is the Modi wave receding?

  13. இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து விடும். டெல்லி வாசிகளை ஏதோ கொஞ்சம் புத்தி சாலிகள் என்று நினைத்திருந்தேன்.
    அந்த நாற்பத்தைந்து நாட்கள் நபரை இன்னுமா நம்புவார்கள்?
    சாய்

  14. /////ஒரு வேளை பா ஜ க வெற்றி பெற முடியாமல் போனால், அதற்கான ஒரே காரணம் பா ஜ க வின் அரசியல் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் தான் காரணமாக இருக்க முடியும்////.
    காரணங்கள் என்ன? 1)பிஜேபி கட்சியில் உள்ள சில MP க்கள் மேடைகளில் வாய்க்கு வந்தபடி உளற ஆரபித்து விட்டனர். அவர்களை மோடி அவர்கள் கட்டுபடுத்தி அவர்களின் வாய்க்கு பூட்டு போடா வேண்டும்.
    2. வெற்றி மேல் வெற்றி என்று தொடர்ந்து (மகாராஷ்டிரா, ஹரியான etc ) வந்ததால் கட்சியினருக்கு திமிர், சோம்பேறித்தனம் வந்துவிட்டது.
    3. மோடி வெளிநாடு வெளிநாடு என்று ஓடிவிடுகிறார். தேர்தல் வரும்போது இந்தியாவில் இருக்கிறார். மற்ற நேரத்தில் எல்லாம் வெளிநாட்டில் உள்ளார். நாடு உருப்படுமா?
    4. இந்திய மக்கள் மிகவும் மோசமானவர்கள். இன்று தலையில் வைத்து ஆடுவார்கள். நாளையே காலில் போட்டு மிதி மிதி என்று மிதிப்பார்கள்.
    5. VHP RSS Bajrang Dal ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது எப்படி செயல்பட்டனவோ அப்படியே இப்போது அமைதியாக இருந்தால் பிஜேபி க்கு நல்லது.ரொம்ப ஆடினால் பிஜேபி ஆட்சி ஆட்டம் கண்டுவிடும். மதமாற்றத்தை கிறிஸ்தவ மிஷினர்கள் 365 நாட்களும் செய்து வருகின்றன. அதைப்பற்றி மீடியா வாய் திறப்பதில்லை. இந்து முன்னணி செய்தது. பத்திரிக்கையில் பக்கம் பக்கமாக செய்தி வருகிறது. காரணம் என்ன? மிஷினரி சந்தடி இன்றி செய்கிறது. ஆனால் இவர்கள் போஸ்டர் போட்டு படாடோபமாக செய்கின்றனர். அதுதான் காரணம். ஆகவே அவர்கள் தங்களின் STYLE ஐ மாற்றிக்கொள்ளவேண்டும். RSS வெள்ளம் மற்றும் புயல் வரும் காலங்களில் செய்கிற நற்காரியங்களை நாட்டு மக்களுக்கு தெரியபடுத்தாமல் (அதாவது வெளிச்சம் போட்டு காட்டாமல் அமைதியாக) சேவையை செய்கின்றனர். ஆனால் இந்த மத மாற்றத்தை மட்டும் எதற்கு இப்படி விளம்பரம் செய்கின்றனர் என்று தெரியவில்லை. இனியேனும் திருந்துவார்களா?
    6. துடப்பகட்டை வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டில் செம்மறி ஆடுகளை போல பலர் அந்த கட்சியில் சேருவார்கள். பிஜேபி யில் தொண்டர்களை சேர்க்கும் பணி இதனால் பாதிக்கும். ஸ்ரீ ரங்கம் தொகுதியில் வரக்கூடிய potential defeat மேலும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கட்சி தமிழ்நாட்டில் வளரவேண்டும் என்று தமிழக பிஜேபி நினைத்தால் (அ ) ஒரு தமிழ் தினசரி உடன் துவக்குங்கள் (ஆ) மகளிருக்கென வார இதழ் ஒன்றை துவக்குங்கள்(இ) Lotus டிவி யை கட்சிக்கு ஆதரவாக மாற சொல்லுங்கள். மேலும் ஜனரஞ்சகமான programme களை ஒளிபரப்ப சொல்லுங்கள். அவர்கள் அதற்கு மறுத்தால் ஒரு புதிய டிவி சேனலை துவக்குங்கள்.
    (ஈ )Membership சேர்ப்பதை தொய்வில்லாமல் இன்னும் தீவிரமாக செய்யவேண்டும்.
    (உ ) ஊரு ஊராக சென்று பொது மேடைகளில் தமிழக பிஜேபி தலைவர்கள் தோன்றி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் (ஊ ) தொண்டர்களிடம் கட்சி வளர கருத்துக்களை கேட்டறிய வேண்டும். (எ) முடிந்த வரை நடிகர்களை கட்சியில் சேர்க்க பகிரீத முயற்சி எடுக்க வேண்டாம். ஆனால் அவர்களாக வந்தால் தடுக்காதீர்கள்.. (ஏ) மற்ற கட்சிளின் மற்றும் மீடியா க்களின் கண்டனத்திற்கு ஆளாகும் முறையில் மோடி (உடை போன்ற விஷயங்களில்) நடந்து கொள்ள கூடாது. அதாவது சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்க கூடாது. (ஐ ) தமிழ் நாட்டு மக்களுக்கு முடிந்த வரை சாதகமான விஷயங்களை செய்யவேண்டும். இல்லையென்றால் தமிழ் நாட்டில் தலை காட்ட முடியாது. போதாகுறைக்கு AAP வேறு வளர கூடிய ஆபத்து உள்ளது. இவற்றையெல்லாம் உணர்ந்து அடுத்து வர கூடிய பீகார் தேர்தலில் பிஜேபி வெற்றி முகத்தை காண இப்போதே செயல்படவேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் எனது கருத்துக்களுக்கு தமிழக பிஜேபி மதிப்பளித்து செயல்படவேண்டுமென பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

  15. பெரும்பான்மை இந்துக்களின் மன ஓட்டம் இந்துத்வாவுக்கு எதிராக உள்ளதையே டெல்லி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன. இனிமேலாவது வறுமையிலும் தீண்டாமையிலும் தினம் செத்து மடியும் பெரும்பான்மை இந்துக்களை அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர இந்துத்வா முயலட்டும். இதை விடுத்து இஸ்லாமியரிடத்தில் தொடர்ந்து மோதல் போக்கை கடை பிடித்தால் இந்துக்களே பிஜேபியை ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

  16. //சேரிப்பகுதியில் பா ஜ க வுக்கு ஆதரவு இல்லை என்ற படிக்கான கருத்துப்பகிர்வது வடிகட்டிய பொய்.//

    சேரிமக்கள் பிஜேபிக்கு என்றுமே தில்லியில் வாக்களிக்கவில்லை. அவர்கள் பார்வையில் பிஜேபி பணக்காரகள்; பஞ்சாபி இந்துக்கள்; உயர்ஜாதியினருக்கே. கிட்டத்தட்ட தமிழகத்துப் பார்வையே. என் கருத்து வடிகட்டின உண்மையென்று தேர்தல் முடிவு காட்டியபின் வேறென்ன சொல்லவிருக்கிறது?

    பிஜேபி இத்தேர்தலில் சேரிகளுக்குச் செல்லவில்லை. ஆப் கட்சிமட்டுமே அங்கு.

    பிஜேபியின் படுதோல்விக்குக் காரணங்கள்:

    மோடி, அமிட்ஷா – போன்றோரின் கரிஷ்மா இங்கு செல்லாது. இம்மக்கள் எவரையும் தனிநபர் துதிபாடுவதில்லை. எனவே தனிநபராக சாதிக்கலாமென்பது வெறுங்கனவு. தமிழகத்தில் சாதிக்கலாம். தில்லியில் முடியாது. தில்லியைப்பொறுத்தவரை இருவரும் அந்நியர்கள். நாட்டுத்தலைவர்களாகலாம். தில்லி வீட்டுத்தலவர்களாக அந்நியர்கள் முடியாது. கெஜ்ரவால் தில்லிக்காரர்.

    கடைசி நேரத்தில் ஆப்பில் மேல் வைக்கபப்ட்ட குற்றச்சாட்டுக்களை மக்கள் புறந்தள்ளக்காரணம் அவை வேண்டுமென்றே திணிக்கப்பட்டன என்று நினைத்தபடியால். பிஜேபியின் டைம் சென்ஸ் மஹா முட்டாள்தனம்.

    அக்ரவால் சாதியை இகழ்ந்து வாக்குகளை இழந்தது பிஜேபி.

    சேரிமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்ற‌ கெஜ்ரவாலில் உறுதியை அம்மக்கள் நம்பினார்கள்.

    கடைசி நேரத்தில் பிஜேபியில் சேர்ந்த கிருஸ்ணதிராத், இல்மி, பின்னி போன்றோர், பிஜேபியின் இமேஜை மக்களிடம் வெகுவாகக் குறைத்தார்கள். முசுலீம்கள் வாக்குகளை இல்மி போன்றோரின் சேர்ப்பு ஒரேயடியாக இழக்கக் காரணம் இல்மியின் பணக்காரத்தோரணை. க்ருஷ்ணதிராது மத்தியில் முன்னால் உபிஏ அமைச்சர். மீண்டும் அமைச்சராகும் கனவில் சேர்ந்தார்.

    பேடியை இழுத்து தில்லி பிஜேபியை அவமானப்படுத்தி விட்டார் அமிட்ஷா. பேடி, என்றுமே தில்லிக்காரரில்லை. ஒரு அன்னியர். தில்லியில் போஸ்டிங். தில்லியில் வேலைபார்த்தபோது அவரின் செயலகள் அவரை முன்னிறுத்தவே என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். விள்மபரப்பிரியர். பேடியில் போலீசுத்தனம் மக்களால் வெறுக்கப்படுகிறது. எனவே அவர் தன் தொகுதியில் வெற்றிகூட பெறமுடியவில்லை.

    பேடியைக்காட்டி, தில்லி பிஜேபி தலைவர்களுள் ஒருவர் கூட தில்லி சி எம் ஆக லாயக்கில்லை என்று பிஜேபி தலைமையிடம் மக்களுக்குக் காட்டிவிட்டது.

    தில்லி பிஜேபிக்கு இதைவிட அவமானம் இருக்க முடியாது. இத்தனக்கும் மக்களிடம் நற்பெயர் வாங்கிய தில்லைத்தலைவர்கள் இருக்கிறார்கள் (எடுத்துக்காட்டு. ஹர்ஷ் வர்தன் எம் பி பி எஸ்).

    கெஜ்ரவால் மக்கள் தலைவராக முன்னிருத்தப்பட்டார். பேடி பிஜேபி நாமினி என்றே அறியப்பட்டார்.

    தன் தொகுதியில் இசுலாமியப்பகுதிக்குள் அவர் நுழைய தடுக்கபபட்டார். இசுலாமியர் ஒட்டுமொத்தமாக ஆப் கட்சிக்கே வாக்களித்தனர்.

    இந்துத்வா கொள்கை தில்லியில் எடுபடாது. பஞசாபி இந்துக்களிடம் எடுபடும். ஆனால், அவர்கள் கூட தற்போது பிஜேபிக்கு கைவிரித்துவிட்டார்கள். எனவே இந்துத்வா கொள்கைகள் என்றுமே இங்கு முன்னிலைப்படுத்தப்பட்டால் தொல்லைதான்.

    பிஜேபியின் பேடி வந்தால், அவர் பிஜேபியின் மத்திய தலைவர்களின் கைப்பாவையாகத்தான் செயல்படுவார். கெஜ்ரவால் தன்னிச்சையாக செயல்படுவார் என்ற நம்பிகை உறுதியாக காண்பட்டது.

    மாபெரும் வெற்றியை மக்கள் கொடுத்தது போன தடவை செய்த தவறை இப்போது செய்ய விரும்பவில்லை. கெஜ்ரவால் 5 ஆண்டுகள் செயல்படட்டும் என்பது அவர்கள் தீர்ப்பு.

  17. உண்மைநிலை இன்று வெளியாகிவிட்டது . சேக்கிழான் அவர்கள் தம் கருத்தை மறு ஆய்வு செய்வாரா?

  18. /பெரும்பான்மை இந்துக்களின் மன ஓட்டம் இந்துத்வாவுக்கு எதிராக உள்ளதையே டெல்லி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன. இனிமேலாவது வறுமையிலும் தீண்டாமையிலும் தினம் செத்து மடியும் பெரும்பான்மை இந்துக்களை அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர இந்துத்வா முயலட்டும். இதை விடுத்து இஸ்லாமியரிடத்தில் தொடர்ந்து மோதல் போக்கை கடை பிடித்தால் இந்துக்களே பிஜேபியை ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.//

    அப்போ win பண்ணற இடத்துல எல்லாம் அவங்கலை தூக்கி போட்டு மிதி என்று “எடுத்துகொல்லலாமா”?

  19. யானை படுத்தா என்ற பழமொழிதான். இந்த காமென்ட் கூட பரவாயில்லை. கட்சி ஆரம்பித்து அரைகிழவியான வைகோ வோட அறிக்கைதான் தாங்க முடியலை. எனக்கு தீ மு க கட்சி வேண்டாம் என்று கருணாநிதியும் , ஸ்டாலின்ம் ம தி மு க உடன் சேர்ந்தாலும் அவர்கலையும் தோல்விக்கு அலைத்து செல்லும் மர்ரும் வெர்றி என்பதை வாழ்க்கையில் பார்காத வைகோவோட அறிக்கையை என்ன என்று சொல்லுவது.

  20. /தன் தொகுதியில் இசுலாமியப்பகுதிக்குள் அவர் நுழைய தடுக்கபபட்டார். இசுலாமியர் ஒட்டுமொத்தமாக ஆப் கட்சிக்கே வாக்களித்தனர்.//

    நட்ச் காமென்ட் பாஸ் Madurai காரன்ன்னு நீரூபிட்சீட்டீங்க

  21. டெல்லி தேர்தலில் தேவை இல்லாமல் ஒருவருடம் தாமதம் செய்துவிட்டது பாஜக.2014- பிப்ரவரியில் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்த பின்னர் ஒரு 6 மாதத்திலேயே தேர்தலை நடத்தி இருந்திருக்கவேண்டும். கடுமையான தாமதம் செய்த பாஜக இப்போது வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.

    நடந்திருப்பது இதுதான் :

    1. காங்கிரசின் ஓட்டும், பகுஜன்சமாஜ் , கம்யூனிஸ்ட்கள், புதியதாக சேர்ந்த 11 லட்சமும் ஆக மொத்தம் 21.5 லட்சம் ஒட்டு அரவிந்த் கேஜ்ரிவால் கூடுதலாக பெற்றுள்ளார். பாஜகவுக்கு சுமார் 2,87,000 மட்டுமே சென்ற சட்டசபை தேர்தலை விட கூடுதலாக கிடைத்துள்ளது.

    2. அரவிந்த் கேஜ்ரிவால் ஐ ஐ டி முன்னாள் மாணவர் என்பதால், இப்போது ஐ ஐ டி யில் படிக்கும் ஏராளம் மாணவர்கள் ஆம் ஆத்மிக்காக இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து, இளைஞர்கள் வாக்கையும் , புதிய வாக்காளர்களையும் கவர்ந்தனர்.

    3. காங்கிரஸ் 63- தொகுதியில் டெபாசிட் இழந்ததுடன் , பகுஜன்சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை- அதாவது அகில இந்தியக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.

    4. 49-நாளில் ராஜினாமா செய்தவர் தான் செய்தது தவறு என்று சொல்லி ஒட்டுக் கேட்டதால், டெல்லி வாக்காளர்கள் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து, முழு மெஜாரிட்டியுடன் ஆள வைப்போம். என்று வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

    குடிநீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றில் ஆம் ஆத்மி தேர்தல்வாக்குறுதியில் முன்பும், இப்போதும் சொன்ன சலுகைகளை நிறைவேற்றுவது கடினம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டெல்லியில் இப்பதி சலுகை காட்டினால் நாடுமுழுவதும் மற்றவர்கள் இளிச்சவாயர்களா ? எல்லா நகரங்களிலும் இதே சலுகைகளை மக்கள் கேட்பார்கள். ஆம் ஆத்மி என்ன செய்யப்போகிறதோ ?

    பாஜக டெல்லியில் 7/2014லேயே தேர்தல் நடத்தி இருந்திருக்க வேண்டும். தாமதத்துக்கு இப்போது வருந்தி புண்ணியம் இல்லை.

    ;

  22. சுவனப்ரியன்

    பீஜெபிக்கு வாக்களித்த மக்கள் மறுபடியும் வாக்களித்துள்ளார்கள். கான்க்ராச்சின் ஒட்டு தான் ஆப்புக்கு போயுள்ளது, அதாவது போலி மதச்சார்பின்மை பேசி ஒட்டு வாங்கின காங்கிரஸ்சின் ஒட்டு ஆப்புக்கு போயிருக்கு. மக்கள் இதை தான் நிராகரித்துள்ளனர்.

    மேலும் பெரும்பாலானவர்கள் ஆயிரம் ஓட்டுக்கு கீழ் தான் தோற்றுள்ளனர்.
    ஹைதராபாத்கார ஒவைசி என்ற தீவிரவாதி டெல்லிக்கு சென்று அங்குல்லா இஸ்லாமியர்கள் அனைவரையும் ஆப்புக்கு ஒட்டு போட சொல்லி பிரசாரம் செய்ததும் அம்பலமான விஷயமே.

  23. பேரன்பிற்குரிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் எந்த வேகத்தில் பெயரை மாற்றி அவதாரம் எடுக்கிறார்களோ அதே வேகத்தில் ப்ரதிக்ஞைகளை கடாசுகிறார் என்பதை நோக்க வேண்டியுள்ளது.

    க்ருஷ்ணகுமார் எழுதியதை வாசிக்கப்போவதில்லை என்று ரெவ ரெண்டு அவர்கள் துண்டு தாண்டி ஸ்மைலி போட்டு ப்ரதிக்ஞை எடுத்ததை பரிசுத்த ஆவி மாற்றி விட்டதா அல்லது உமாசங்கர் ஏசப்பரிடம் பேசி மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டாரா புரியவில்லை.

    ரெவ ரெண்டு அவர்கள் கர் வாப்ஸி ஆனதைப் போன்று படம் காட்டி எழுதியதெல்லாம் செல்லாது செல்லாது செல்லாது…………. என்றே அவர்கள் பகிரும் கருத்துக்கள் முரசறைகின்றன.

    பாஜக செயல்பாடுகளில் நிச்சயம் சறுக்கல்கள் உள்ளன. ஹிந்து ஒற்றுமையிலும் பாஜக வளர்ச்சியிலும் அக்கரை கொண்டுள்ள அன்பர்கள் அதை விவாதிக்க வேண்டும். அது மிக அவசியம். ஆனால் ரெவ ரெண்டு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களுக்கும் ஜெனாப்-ஏ-அலி சுவனப்ரியன் அவர்கள் பகிர்ந்த கருத்துக்களிலும் வித்யாசமே இல்லை என்பது கண்கூடாகிறதே.
    ஜெனாப் சுவனப்ரியன் அவர்கள் கருத்து ஒரு வஹாபியரின் தரப்பிலிருந்தான கருத்து. இஸ்லாமியரின் கருத்து அல்ல. ஆனாலும் அவரது கருத்துக்களில் சாரம் இல்லை எனினும் நேர்மையும் கண்ணியமும் இருக்கிறது. த்ரிசங்குவான ரெவ ரெண்டு அவர்களின் கருத்துக்களில் அது காணப்படவில்லையே.

    ஆனைக்கு அடி சறுக்கும் தான். ஆனால் ஆனைக்கு அடி சறுக்கினால் சந்தடி சாக்கில் உமாசங்கர் போன்றோரும் கருத்துக்கந்தசாமியாகக் கிளம்பி விடுவதைப் பார்த்தால்………..பெருமாளே.

  24. ஜெனாப் சுவனப்ரியன்

    உங்களுடைய அல்லாஹ்வின் பெருங்கருணையால் உத்தரபாரதத்தில் பரேல்வி சுன்னி முஸல்மான், தேவ்பந்தி சுன்னி முஸல்மான், ஷியா முஸல்மான், அஹ்மதியா முஸல்மான் போன்றோர் …………… இஸ்லாத்தையே ஒழுகுகின்றனர். அரேபியாவிலிருந்து இறக்குமதியாகியுள்ள பயங்கரவாத வஹாபியம் இன்னமும் அங்கு எடுபடவில்லை தமிழகம் போன்று.

    \\ இதை விடுத்து இஸ்லாமியரிடத்தில் தொடர்ந்து மோதல் போக்கை கடை பிடித்தால் இந்துக்களே பிஜேபியை ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவார்கள். \\

    தேச விரோத சக்திகளான பயங்கரவாத வஹாபிக் குழுமங்கள் மற்றும் பிரிவினைவாதத்துக்குத் தூபம் போடும்……. பரங்கிப்பணத்தில் பித்தலாட்ட மதமாற்றத்தில் ஈடுபடும்….. மிஷ நரிகள் போன்றவற்றை ஹிந்துத்வ சக்திகள் எதிர்ப்பதை ஒட்டு மொத்த ஹிந்துக்களும் ஏற்கிறார்கள். க்றைஸ்தவர்களைப் பற்றி எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் மிகப்பெரும்பான்மையான எமது இஸ்லாமிய சஹோதரர்களும் இந்த தேச விரோத சக்திகளை எதிர்க்கிறார்கள்.

    ஹிந்துஸ்தானத்து இஸ்லாமியர்கள் தங்களது சமூஹத்தை அராபியத்திலிருந்து இறக்குமதியாகியுள்ள பயங்கரவத வஹாபியத்திலிருந்து பாதுகாக்க நிச்சயம் விரும்புகின்றனர். இதில் தங்களுக்கு சம்சயம் வேண்டாம். ஹைந்தவ இஸ்லாமியர்களது மொழி, கலை, பண்பாடு போன்ற விழுமியங்கள் மிகச் செறிவானவை. இதற்கும் எந்த மானுட விழுமியங்களும் அற்ற…….அராபியத்திலிருந்து இறக்குமதியாகும் பயங்கரவாத வஹாபியத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

    தில்லியில் பாஜக விற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வாஸ்தவம் தான். அந்தக் கட்சியின் வெகுஜன ஆதரவு கொஞ்சம் போல தசமப்புள்ளிகளில் அடி வாங்கியுள்ளது. இதுவும் வாஸ்தவம் தான். நிச்சயம் எமது ஹைந்தவ இஸ்லாமிய சஹோதரர்கள் தவறான ப்ரசாரத்தில் மயங்கிப் போயுள்ளார்கள். அவர்களை மீண்டும் தேசிய நீரோட்டத்தில் இணைப்பது அவச்யம். கொஞ்சம் பரிச்ரமப்பட்டு செய்ய வேண்டிய வேலை தான். ஆனால் இயலாத கார்யம் இல்லை இது.

    இறையருளால் அது நிச்சயம் நடக்கும்.

    ஆப்பு கட்சியின் சில சரியான நிலைப்பாடுகளான ஊழல் எதிர்ப்பு போன்றவை பாஜக வின் தரப்பினாலும் முன்வைக்கப்பட்டு அது ஆட்சி செய்யும் மாகாணங்களில் பெருமளவு தூய்மையான ஆட்சி தருவதன் மூலம் அமலில் உள்ளவை. ஆனால் நக்ஸல்வாதிகளின் ஆதரவு மற்றும் பயங்கரவாத மற்றும் தேசவிரோதப்பிரிவினைவாத சக்திகளின் பேராதரவு இந்த ஆப்புக்கட்சியின் வசம் உள்ளது. இந்தச் செய்தி மக்களிடம் முறையாகச் சென்றடையவில்லை. அதைப்பற்றிய தெளிவும் மக்களிடம் சென்று சேரும்.

    தேச ஒற்றுமையும் ஹிந்துத்வத்தின் அடிநாதமான பன்மை பேணுதலும்…………. மாற்று மதத்தவரிடம் சஹோதரத்துவம் பேணுதலும்……….. அதே சமயம் மாற்றுமதம் என்ற பெயரில் தேச விரோத மற்றும் பிரிவினைவாதச் செயல் பாடுகளில் ஈடுபடுதலை வேரும் வேரடி மண்ணுமாகக் களையும் பாங்கும்………………மிக உறுதியுடன் தொடரும்.

  25. ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள் சமூஹத்திற்கு

    \\ சேரிமக்கள் பிஜேபிக்கு என்றுமே தில்லியில் வாக்களிக்கவில்லை. அவர்கள் பார்வையில் பிஜேபி பணக்காரகள்; பஞ்சாபி இந்துக்கள்; உயர்ஜாதியினருக்கே. கிட்டத்தட்ட தமிழகத்துப் பார்வையே. \\

    சேரிமக்கள் பாரதீய ஜனசங்கத்து காலத்திலிருந்து தற்போது நடந்து முடிந்த தேர்தல் வரை பாஜகவுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள் தில்லியில்.
    பாஜக 28.92 லக்ஷம் ஓட்டு பெற்றுள்ளது ஆப்பு கட்சி 48.79 லக்ஷம் ஓட்டு பெற்றுள்ளது. ஆப்பு கட்சி ஆகட்டும் பாஜக ஆகட்டும் ………….. இரண்டு கட்சிகளுக்கும் ஜாதி வாரியாகவெல்லாம் தில்லியில் வாக்குகள் சேகரிக்கவும் படவில்லை. போடப்படவும் இல்லை. இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் ஜாதிவெறிப் பள்ளிக்கூடத்தில் தப்புப்பாடம் படித்து ஆதிக்க ஜாதிவெறியில் ஆழ்ந்துள்ள ரெவ ரெண்டு அவர்கள் தமிழகத்து ஆதிக்க ஜாதிவெறிப் பார்வையின் பாற்பட்டு தில்லியை பார்க்க முனைந்த கோளாறு இது.

    எல்லா தொகுதிகளிலும் ஆப்பு கட்சி பலமான ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உண்மையே.

    2013 தேர்தலில் பாஜக தற்போது பெற்ற ஓட்டு சதமானமான 32.2 என்பதை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 33 சதமானம் பெற்றது. ஆனால் 2014 லோக்சபை தேர்தலில் கிட்டத்தட்ட 46 சதமானம் ஓட்டு பெற்றது பாஜக.

    தன்னுடைய பொதுஜன ஆதாரமான வலுவான வாக்குகள் அன்றி முஸல்மாணிய சஹோதரர்கள் மற்றும் தன்னுடைய கட்சியைச் சாராத பற்பல மக்களின் (கவனிக்க தில்லியில் வாக்குகள் ஜாதி அடிப்படையில் அளிக்கப்படுவதில்லை) வாக்குகளை 2014 தேர்தலில் திரட்ட முயன்ற பாஜக தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பெற முடியவில்லை. இது நிச்சயம் பின்னடைவு. ஆனால் தமிழகத்து இனவெறி ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் பார்வையில் தில்லி வாக்காளர்களை ரெவரெண்டு அவர்கள் தன்னுடைய ஆதிக்க ஜாதிவெறிப்பார்வையில் பார்க்க முயல்வது ப்ளா ப்ளா.

    \\ அக்ரவால் சாதியை இகழ்ந்து வாக்குகளை இழந்தது பிஜேபி. \\

    இது ரெவ ரெண்டு ஜோ அவர்களின் அறியாமை.

    தில்லி மற்றும் உத்தர ப்ரதேசத்து அகர்வால் சமூஹத்தினர் ஆகப்பட்டவர்கள் கர்க், கோயல், மித்தல், ஜிந்தல் போன்று 18 கோத்ரத்தைச் சார்ந்தவர்கள்.

    ஆப்புக்கட்சியின் அராஜக அரசியல் செயல்பாட்டினை இடித்துறைக்கையில் பாஜக கட்சி *உபத்ரவி கோத்ரத்தினரின்* என்ற சொல்லாடலைக் கையாண்டுள்ளது. இங்கு இடித்துறைக்கப்பட்டது ஆப்பு கட்சி. மற்றும் ஆப்புக்கட்சியின் செயல்பாடு. ஒரு சமூஹம்/ ஜாதி கிடையாது. கேஜ்ரிவால் அவர்கள் ………லோக்சபைத் தேர்தலில் ப்ரியங்கா தவறாகக் கையாண்ட சொல்லாடலை மோதி பிடித்துக்கொண்டது போல் தான் பிடித்துத் தொங்கியதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அகர்வால் சமூஹத்தினருக்கு பாஜக இடித்துறைத்தது யார் என்று நிச்சயமாகத் தெரியும். பாஜக கட்சி தங்கள் சமூஹத்தை இகழவில்லை என்பதும் தெரியும். சாலா மற்றும் சால இதற்கு வித்யாசம் தெரியாத ரெவ ரெண்டு ஜோ………. இது போன்று அரைகுறையாகத் தனக்குத் தெரிந்த ஹிந்தி பாஷை…………. என்ற விஷயத்தில் மூக்கை நுழைக்க முயல்வது வீண்.

    கேஜ்ரிவால் பனியாவாக இருந்தாலும் அவர் அகர்வால் என்று சொல்லப்படும் இந்த 18 கோத்ரத்தைச் சார்ந்தவர் கிடையாது. மேலும் அகர்வால் சமூஹத்தைச் சார்ந்தவர்கள் என்றென்றும் பாஜகவுக்கு பெருமளவில் ஆதரவு அளித்துள்ளார்கள். அளித்தும் வருகிறார்கள். பாஜக தரப்பிலிருந்து பொறுப்பற்றுக் கையாளப்பட்ட சொல்லாடல் என்று நிச்சயமாக சொல்லலாம். பின்னிட்டும் இதனால் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் சாரம் இல்லை. வெற்றுப் பேத்தல்.

    \\ பேடி, என்றுமே தில்லிக்காரரில்லை. ஒரு அன்னியர். தில்லியில் போஸ்டிங். தில்லியில் வேலைபார்த்தபோது அவரின் செயலகள் அவரை முன்னிறுத்தவே என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். \\\

    கேஜ்ரிவாலே தில்லிக்காரர் இல்லை. அவர் காஸியாபாத்தைச் சார்ந்தவர். நாம் டம்ளர் கட்சி போன்று த்ராவிட் டம்ளர்கள் டம்ளர்கள் இல்லை சைவ வழிபாட்டைத் தெருத்தெருவாக இழித்துப்பழிக்கும் நாம் டம்ளர் கட்சியினரே ஒரிஜினல் டம்ளர்கள் என்ற பேத்தல் வாதம் போல் உள்ளது உங்கள் அன்னியிர் பின்னியர் வாதங்கள். ஒரு முப்பது வருஷம் முன்னர் தில்லி …………பஞ்சாபி மற்றும் பனியாவினரின் கோட்டையாக இருந்தது. இன்று பஞ்சாபி, பனியா, ஜாட், தலித் சஹோதரர்கள், உபி பீஹாரி பையாக்கள் என்று சொல்லப்படுபவர் (பற்பல ஜாதியினர்) அனைவரையும் அடக்கிய நகரம். கடந்த சில வருஷங்களாக தேர்தல்களில் ஜாதி என்ற அடையாளம்……….லோக்சபையாகட்டும்……… தில்லி சட்டசபையாகட்டும்…….. முனிஸிபாலிடி ஆகட்டும் ………… ஜாதி……… ஒரு பெரும் பொருட்டாக தில்லியில் இருந்ததில்லை………… ம்…………. மத ரீதியில் இஸ்லாமியர் முன்னர் கும்பலாக ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் போக்கு இருந்துள்ளது. 2014ல் அது முறியடிக்கப்பட்டது. இந்த முறை முஸல்மாணியர் மத அடிப்படையில் ஆப்பு கட்சிக்கு வாக்களித்தனர் என்றோ மத அடிப்படையில் பாஜகவை புறக்கணித்தனர் என்றோ சொல்வது கடினம்.

    \\ இந்துத்வா கொள்கை தில்லியில் எடுபடாது. பஞசாபி இந்துக்களிடம் எடுபடும். ஆனால், அவர்கள் கூட தற்போது பிஜேபிக்கு கைவிரித்துவிட்டார்கள். எனவே இந்துத்வா கொள்கைகள் என்றுமே இங்கு முன்னிலைப்படுத்தப்பட்டால் தொல்லைதான். \\

    ஹிந்துத்வா என்ற கொள்கையை முகமூடி சுவிசேஷ ப்ரசாரத்துக்காகத் திரித்து ரெவ ரெண்டு என்ற பார்வையில் பார்க்க முனைவதின் கோளாறு இது. பாஜகவுக்கு வாக்களித்த 28 லக்ஷம் சொச்ச மக்கள் ரெவ ரெண்டை விட புத்திக் கூர்மை உள்ளவர்கள். அதே போல ஆப்பு கட்சிக்கு வாக்களித்த 48 லக்ஷம் சொச்சமும் ஹிந்துத்வாவிற்கு உடன்படாமல் ஆப்புக்கு வாக்களித்தார்கள் என்பது ரெவ ரெண்டு அவர்களின் அறியாமையின் பாற்பட்ட பார்வை என்றே சொல்லல்லாம்.

    \\ மாபெரும் வெற்றியை மக்கள் கொடுத்தது போன தடவை செய்த தவறை இப்போது செய்ய விரும்பவில்லை. \\

    அசட்டுப்புரிதல். 2013ல் செய்த தவறினை மக்கள் திரும்ப செய்யவில்லை. 2014ம் சரி 2015ம் சரி. 2014ல் மோதியை பெருமளவில் ஆதரித்துள்ளார்கள். 2015. கேஜ்ரிவாலை பெருமளவில் ஆதரித்துள்ளார்கள். மக்கள் மாபெரும் வெற்றியை நிச்சயம் கொடுத்துள்ளார்கள். ஆள் மற்றும் குழுமம் மாறியுள்ளது.

    ஆப்புக்கட்சியின் தற்போதைய ஆதரவு………… பாஜக தான் 2014ல் தான் பெற்ற அதிகப்படியான ஆதரவை இழந்ததற்கான உருப்படியான காரணங்கள் ரெவ ரெண்டு ஜோ அமலனின் ஆதிக்க ஜாதிவெறிப்பார்வையில் அல்லாமல்……………. ரெவ ரெண்டு அவர்களின் ஹிந்து வெறுப்புப் பார்வையில் அல்லாமல்……… புரிந்து கொள்ள முடியும்……… அதையும் பார்ப்போம்.

  26. ALL POLITICAL SENIOR ANALYSIST/COMMENTATOR’S.. ANYBDOY READ THIS ARTICLE TODAY;
    பிற மாநிலங்களில் பா.ஜ.க.தோற்காது.. ஏன்?: விளக்குகிறார் ‘ஆம் ஆத்மி’ யோகேந்திர யாதவ்

    ATLEASE ANYBODY KNOWS WHO IS யோகேந்திர யாதவ்??

    டெல்லியைப் பொறுத்தவரை இது ஒரு பெருநகரம். கணிசமான மத்திய தர வாக்காளர்கள் உள்ள மாநிலம். இதே சூழ்நிலை பிற மாநிலங்களில் இல்லை.பாரதிய ஜனதா கட்சியினர் இந்துத்துவா கொள்கையை மிகத் தீவிரமாக பேசினர்..ஆனால் இதை டெல்லி வாக்காளர்கள் ஏற்கவில்லை.டெல்லியின் சாதாரண வாக்காளர் ஒருவரும் மேற்கு வங்கம் அல்லது பீகாரின் வாக்காளரும் ஒரே மாதிரியானவர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.பிற மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மாற்றான அரசியல் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்துகிற சக்திகளாகத்தான் இருக்கின்றன.உதாரணமாக மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலமாக்குவதை மமதா பானர்ஜி தடுத்துவிடவில்லை. சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை ஜாதி, மதம் என குறிப்பிட்ட குறுகிய வரையறை கொண்ட கட்சிகளாக இருக்கின்றன.திரிணாமுல் காங்கிரஸைப் போல ஆம் ஆத்மி கட்சி எந்த ஊழல் புகார்களிலும் சிக்கிக் கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியிருந்தார்.

  27. “எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு கைல கடைக்கிறதை எடுத்து அடுச்சுபுடுவேன்” இதுதான் டில்லி முடிவா?

  28. ////திரிணாமுல் காங்கிரஸைப் போல ஆம் ஆத்மி கட்சி எந்த ஊழல் புகார்களிலும் சிக்கிக் கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியிருந்தார்///

    யோவ் யோகேந்திர யாதவ்! TMC க்கும் சாரதா சிட் பண்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா? அது ஊழல் இல்லை என்று உமக்கு யார் சொன்னது. அது சரி ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு சாதி கட்சி என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் உமது பெயரில் “”யாதவ்”” என்று சாதி பெயரை வைத்து கொண்டு உள்ளீரே! அது நியாயமா? .வங்காள தேச முஸ்லிம்களை மேற்கு வங்காளத்தில் திருட்டு தனமாக குடியமர்த்துவதே ஒரு பெரிய குற்றமாகுமே!

  29. தோல்வி படுதோல்வி. 3/70 மட்டுமே. இதை ஏற்றுக்கொள்வது அரசியல் நாகரிகம். அதைத்தான் ஆர் எஸ் எஸ் தலைவர்களும் பி ஜே பி தலைவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். தோல்விக்குக் காரணங்களை அலசிக்கொண்டிருக்கிறார்கள். சுப்பிரமணியம் சுவாமியும் அதையே டிவிட்டரில் எழுதியிருக்கிறார்.முன்பு பேடி முதல்வராவார் என்றெழதிய்வரே மாற்றிக்கொண்டாரல்லவா?

    ஆர் எஸ் எஸ் இன்று சொல்வதை – அதாவது பேடியை நிற்க வைத்ததே தோல்விக்கு காரணம் – என்பதை நான் முன்பே எழுதிவிட்டேன். ஆனால் பேடி தோல்விக்கு பி ஜே பியே காரணம்; தானன்று என்று ஏமாற்றுகிறார். பேடியை எவருக்குமே பிடிக்காது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நிறுத்தியிருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கலாம். பேடி ஒரு நல்ல அரசியல்வாதியாக அவருக்கு மனப்பக்குவமில்லை.

    இசுலாமியர் வாக்கு ஒன்றுகூட பி ஜே பிக்கு வரவில்லை என்பதை கிருஸ்ணாநகர் தொகுதி வாக்கு கணிப்பு நிரூபித்துவிட்டது. அங்கு பேடி முன்னிலையில் இருந்தார். இசுலாமியர் மட்டுமே வாழும் பெட்டிகள் எண்ணப்பட்ட போது, அனைத்து வாக்குகளும் ஆம் ஆத்மிக்குச் செல்ல அவர் பின்னடைந்து தோல்வியைத்தழுவினார்.

    சேரிமக்கள் ஆதரவு உண்டு எழுதுவது முழுப்பொய்: ஏனென்றால், கணிப்பு முடிவுகள் வெளியாகிவிட்டன. இளைஞர்களூம் ஏழைகளும் ஆம் ஆத்மிக்கே வாக்களித்தனர்.

    இந்துத்வா கொள்கைகளுக்காக தில்லி மக்கள் பி ஜே பிக்கு 7 எம் பிக்களைத்தரவில்லை. காங்கிரசுக்காரர்களின் அளவிலடங்கா ஊழல்களும், பி ஜே பி யின் வளர்ச்சித்திட்டங்களைப்பற்றிய வாக்குறுதிகளுக்காக மட்டுமே.

    இத்தோல்விக்கு இன்னொரு பெரிய காரணம்: தில்லி வளர்ச்சிக்கு பி ஜே பியிடம் திட்டங்கள் இல்லை. அவர்கள் கவலைப்படவில்லை.

    எனவே கனவுலகத்தில் வாழாமல் நிதர்சனத்தை எதிர்நோக்கினால் பி ஜே பி க்கு எதிர்காலத்தில் வெற்றி கிடைக்கும்.

    (edited and published)

  30. //ஹிந்து வெறுப்புப் பார்வையில் அல்லாமல்……… புரிந்து கொள்ள முடியும்……… அதையும் பார்ப்போம்.//

    அரசியலையும் மதத்தையும் சேர்த்துப்போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

    அரசியலில் நுழையும்போது நீங்கள் நினைத்தவைகளை உடனேயே திணிக்கமுடியாது.

    இந்து வெறுப்புப்பார்வை என்று சொல்லி கசப்பான உண்மைகளைக்கண்டு ஓடிவிடலாமா?

    ஐந்தாண்டுகள் கழிய வேண்டும். அவ்வாண்டுகளில் செய்த தவறுகளை நிவிர்த்தி பண்ணவேண்டும். இளைஞர்களையும் சேரிமக்களையும் ஒதுக்காமல் சேர்க்க வழிபார்க்கவேண்டும். தில்லிவளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

    உழையுங்கள் முதலில். பின்னர் பார்ப்போம்.

  31. //இனிமேலாவது வறுமையிலும் தீண்டாமையிலும் தினம் செத்து மடியும் பெரும்பான்மை இந்துக்களை அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர இந்துத்வா முயலட்டும்.//

    மெய் சிலிர்க்கிறது ! மேல் விஷாரம், கீழ் விஷாரம் என்று இரண்டு ஊர்கள் தமழ் நாட்டில் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன் திரு சுவனபிரியன் !!

  32. தஞ்சை கோபாலன் எழுதிய கட்டுரையில் சான்றோன் போட்டிருக்கும் பின்னூட்டம் இங்கு வந்திருக்க வேண்டும். கிருஸ்ணகுமார் போன்றவர்கள் அப்பின்னூட்டதிலிருந்து எப்படி எந்தவொரு விசயத்தையும் எதார்த்தமாக நோக்க வேண்டும். கனவுலகில் வாழ்ந்து கசப்பான உண்மைகளை பார்க்க மறுக்கக் கூடாதென்றும் தெரிந்துகொள்ளலாம்.

  33. பேரன்பிற்குரிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்களின் முழுநேர செயல்பாடான சிரி வைணவ துஷ்ப்ரசாரத்தை அடுத்து பகுதிநேர வேலையான அவருடைய செல்லக் கோட்பாடான ஆதிக்க ஜாதிவெறி ப்ரசங்கம், சிரி வைணவத்துக்கு நாமம் போட்டுக்கொண்டே………. ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டுக் குத்தாட்டம்போட்ட……. இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்க பஜனை (இதுகூட முகமூடி சுவிசேஷ ப்ரசங்கம் தான்) மற்றும் முகமூடி சுவிசேஷ ப்ரசங்கத்தின் அங்கமான ஹிந்துத்வத் திரிபு ப்ரசாரம் போன்றவற்றை ஏசப்பருக்கு கொடுத்த வாக்கு தத்தத்தின் பாற்பட்டு தற்போதைய அவதாரமான பி எஸ் அவதாரத்தில் செய்து வருவது தெரிகிறது. *சிரி* வைணவ சிகாமணியான தேவரீரது களப்பிணி பொலிக பொலிக 🙂 🙂 🙂

    ஸ்ரீ சான்றோன் ஐயா அவர்கள் ஹிந்துத்வத்தின் மீதும் ஹிந்து ஒற்றுமை மீதும் கரிசனம் உள்ளவர்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. அவருடைய கூற்றுகளில் பலதை நான் ஏற்கிறேன். பாஜக மற்றும் சங்கம் நிதர்சனத்திலிருந்து விலகுவதில்லை என்பதை அவரும் அறிவார். சங்கத்துடன் தொடர்புள்ள நாங்கள் யாவரும் அறிவோம் ஐயன்மீர்.

    நான் மறுதலித்தது தாங்கள் பாஜக கட்சியின் தோல்விக்கானவை என்று பட்டியலிட்ட ……….. ஆனால் உண்மையில் தோல்விக்கு காரணமில்லாத பேத்தல்களையே என்பதை அறிவீர்களாக. தோல்விக்குக் காரணம் என்றதாகப்பட்ட என்னுடைய புரிதல்களை தனியாகப் பகிர்கிறேன் ஐயா.

    எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம் என்று எங்கள் வள்ளல் பெருமான் பாடியருளியிருக்கிறார்.

    ஒரே பிறவியில் முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கத்திற்காக அசங்க்யேயமான அவாதாராதிகளை இப்படி கலிகாலத்தில் எடுக்க வல்ல தேவரீரது ப்ரபாவத்தை எண்ணுங்கால் வள்ளல் பெருமானது வாக்கு நினைவுக்கு வந்து விட்டது பாருங்கள்…….. எங்கயும் சுத்தி ரங்கனச் சேவி என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுவார்கள்…….. தங்களது வார்த்தாலாபத்தால் திருப்புகழமுதத்தை சுவைக்கும் வாய்ப்புக்கிட்டியதற்கு கைம்மாறறியேன்.

    இந்த அவதாரம் அலுத்து விட்டது. சடுதியில் வேறு அவதாரத்துக்கு மாறி விடுங்கள்.

    என்ன இறுமாப்பு பாரீர்!!!!!

    இணையாந்தரிக்ஷத்தில் தற்காலத்திலேயே தேவரீர் வெவ்வேறு அவதாராதிகளில் வ்யாபித்திருப்பதை உலகம் அறிந்தாலும் நான் அறியாது பேசுதல் 🙂

    தமிழ் ஹிந்து தளத்தில் நகைச்சுவை குறையும் போதெல்லாம் தேவரீர் தடாலடியாகப்புகுந்து அதை பூர்த்தி செய்வது LAUGHING THERAPY ஐ விட மேன்மையானது. தொடர்க தேவரீரது களப்பிணி.

    அவதார வரிஷ்டாய தோஷாரோபாய மங்களம்.

    சீரேசு நாதனுக்கு வாக்குதத்தம் செய்துள்ள ரெவரெண்டு ஜோவுக்கு சுப மங்களம். ஆமீன் 🙂 🙂 🙂

  34. பேரன்பிற்குரிய ஜோ அமலன் சாஹேப்

    ஸ்தோத்திரம். உங்களது ஏசப்பரது நாமத்தால் நீங்கள் இந்த அவதாரத்திலிருந்து சடுதியில் மோச்சம் பெறக்கடவீர். விரைவில் புது அவதாரம் எடுக்கக் கடவீர் 🙂

    \\ இளைஞர்களையும் சேரிமக்களையும் ஒதுக்காமல் சேர்க்க வழிபார்க்கவேண்டும். தில்லிவளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். \\

    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தினர் தங்களது சேவா பஸ்திகள் என்ற அமைப்பின் மூலம் சேரிகளில் பெரும் இளைஞர் குழாத்தினரால் …….. தில்லி மட்டுமின்றி ஹிந்துஸ்தானமுழுவதும் களப்பணி ஆற்றி வருவது ஹிந்துத்வர்களுக்குத் தெரிந்த விஷயம். ஆனால் பாவம் ஏசப்பருக்கு வாக்கு தத்தம் செய்துள்ள தங்களுக்குத் தெரியாததில் ………. அல்லது தெரியாதது போல நடிப்பதில் ……..வியப்பில்லை.

    தாங்கள் எழுதியுள்ள பேத்தல்களில் செக்யூலரிஸம், கம்யூனிஸம், சோஷலிஸம், தகரடப்பா உண்டியல் குலுக்கலிஸம் என்று பற்பல கோஷ்டங்களை தாங்கள் சேர்த்திருக்க வேண்டும். அதையெல்லாம் டிலீட் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

    இளைஞர்களும் சேரிமக்களும் பாஜகவினரால் அல்லது சங்கத்தினரால் ஒதுக்கப்பட்டார்கள்…….. என்பது த்ராவிட டம்ளர் முகமூடி சுவிசேஷ பாசறையைச் சார்ந்த தங்கள் துஸ்வனங்களின் பாற்பட்டு மட்டிலும் தான் ஐயன்மீர். அது நிதர்சனத்தில் சரியல்ல. சரியல்ல. சரியல்ல.

    தங்களது துஸ்வப்னங்களை ஏதாவது அக்கினி அபிஷேக பரிசுத்த ஆவி எழுப்புதல் கூட்டத்திற்கு சென்று அல்லோலூயா பாடி தொலைத்து வருவீர்களாக. ஆமீன் 🙂

  35. ஏழை மக்களும் இளைஞர்களும் ஆம் ஆத்மிக்கே வாக்களித்து பிஜேயைப் புறக்கணித்தார்கள். அவ்விரு வாக்குகளுடன் இசுலாமியர் வாக்குகளும் சேர்ந்தே கிடைத்ததனால், ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. க்ருஷ்ணாநகர் என்ற ஆர் எஸ் எஸ் கோட்டையில் பேடி தோல்வியடைந்ததற்கு ஒரே காரணம் இசுலாமியர் வாக்குகளை மொத்தமாக இழந்ததுவே. காரணம். தேர்தல் பரப்பரைக்காக‌ அவர் அப்பகுதிக்குள் நுழையச்சென்ற போது இசுலாமியர் எதிர்த்தார்கள். அவர் பரப்புரைக்கு பண்ணவரவில்லையென்று சமாளித்தார்.

    இந்த சேரி மற்றும் இசுலாமியர் வாக்குகள் காங்கிரசுக்குப் போக வேண்டியவை. காங்கிரசு இருவரின் நம்பிக்கையை இழந்ததால், ஆம் ஆத்மிக்கே போய்ச்சேர்ந்தன. 3/70- என்ற படுதோல்வியை இல்லை இல்லையென்று சொல்லால் இல்லாமல் போகுமா? முழுச்சோற்றில் மறைக்கக்கூடிய பூசணிக்காயாயிது?

    சான்றோன் என்னைப் பொறுத்தவரை இங்கு பின்னூட்டம் போடுகிறார். அதை நாம் வாசிக்கிறோம். பின்னூட்டமிடுவோரின் பிற்புலத்தை நான் ஆராய்வதில்லை. போடப்படும் கட்டுரைகளுக்கு பின்னூட்டம் போடுபவர்கள் நாம். அவ்வளவுதான் பார்க்கவேண்டியது. அவர் எழதியது உங்களைப்போன்று கனவுலகில் வாழ்ந்து வெறுங்கையால் விருந்து சாப்பிட ஆசைப்படுவோருக்கு ஒரு எச்சரிக்கை மணி. உங்களைப்போன்று கனவுலகில் தில்லி பிஜேபி ஐந்தாண்டுகள் சஞசாரம் பண்ணினால், ஆம் ஆத்மி அடுத்தமுறையும் வெல்லும்.

    நல்ல வேளை, எல்லா பிஜேபி தலைவர்களும் ஆர் எஸ் எஸ் காரர்களே கோர்ஸ் கரெகஷன் செய்யவேண்டும். மக்களிடம் நாம் நன்கு ரீச்சாக வில்லையென்று கூட்டம்போட்டு பேசி ஆலோசித்துவருகிறார்கள். கிருஷ்ணகுமார் எந்த கட்சிக்காரர் என்றே எனக்குப் புரியவில்லை.

    ஐந்து வருடங்களின் சேரிமக்களின் இழந்த வாக்குகளைப்பெற களப்பணி ஆற்றுங்கள். 5 ஆண்டுகளுக்குப்பின் பார்ப்போம். வாழ்த்துக்கள்.

  36. பேரன்பிற்குரிய ரெவரெண்டு ஜோ

    அப்பப்ப சொன்ன படியும் செய்வீர்கள் போல. அடுத்தவர்கள் கருத்தை வாசிப்பதே இல்லை என்று நீங்கள் பகிர்ந்த படிக்கு.

    அடுத்தவர்கள் பகிர்ந்த கருத்தை வாசிக்காமலே கருத்துக்களை அள்ளி விடுவது உங்களது எல்லா அவதாரத்திலும் மாறாத சமாசாரம் போலும் 🙂

    \\ பாஜக செயல்பாடுகளில் நிச்சயம் சறுக்கல்கள் உள்ளன. ஹிந்து ஒற்றுமையிலும் பாஜக வளர்ச்சியிலும் அக்கரை கொண்டுள்ள அன்பர்கள் அதை விவாதிக்க வேண்டும். அது மிக அவசியம் \\ எல்லா தொகுதிகளிலும் ஆப்பு கட்சி பலமான ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உண்மையே. \\ //ஹிந்து வெறுப்புப் பார்வையில் அல்லாமல்……… புரிந்து கொள்ள முடியும்……… அதையும் பார்ப்போம்.//

    வடிகட்டிய விதண்டாவாத மொக்கைகள் ரெவரெண்டு அவர்களாலேயே பகிர முடியும்.

    பாஜக தோற்றது என்பது ஹிந்துத்வவாதிகள் அனைவராலும் கண்ணியமாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமே. இதைத் தெளிவாக எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லை அல்லவா. எப்போது அடுத்தவர்கள் எழுதிய கருத்தை வாசித்து கருத்துப் பதிந்துள்ளீர்கள்.

    \\ அரசியலையும் மதத்தையும் சேர்த்துப்போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. \\ இந்துத்வா கொள்கை தில்லியில் எடுபடாது. பஞசாபி இந்துக்களிடம் எடுபடும். ஆனால், அவர்கள் கூட தற்போது பிஜேபிக்கு கைவிரித்துவிட்டார்கள். எனவே இந்துத்வா கொள்கைகள் என்றுமே இங்கு முன்னிலைப்படுத்தப்பட்டால் தொல்லைதான். \\

    ஒரு பக்கம் அரசியலையும் மதத்தையும் சேர்த்துப்போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்று பின்னாடி சொன்ன கருத்துக்கு……….. முன்னாடி தானே……… இந்துத்வாக் கொள்கை தில்லியில் எடுபடாது பஞ்சாபி *****இந்துக்களிடம்****** எடுபடும் என்ற இன்னொரு மொண்ணைக்கருத்து சொல்லப்பட்டுள்ளது.

    ஹிந்துத்வர்களின் தரப்பிலிருந்து கணப்பணி எல்லாம் நிச்சயமாக கனஜோராகவே நடந்து வருகிறது. நிச்சயமாக சில சறுக்கல்கள். சில STRATGIC தவறுகள் உண்டு. அவை விவாதிக்கவும் பட வேண்டும்.

    ஆனால் நீங்கள் பினாத்தும் ராமசாமி நாயக்க பஜனை, ப்ளா ப்ளா எடுபடாத ஹிந்துத்வக் கொள்கை, உங்கள் த்ராவிட டம்ளர் பாசறையின் உளுத்துப்போன ஆதிக்க ஜாதிவெறிக் காழ்ப்பு………… இத்யாதிகள் நிச்சயமாகக் காரணமே இல்லை.

    சாரங்கன் விட்டு விட்டார்…………..நான் விடுவதாக இல்லை.

    மொக்கை போடுவது …………….. முகமூடி சுவிசேஷ ப்ரசங்கம் செய்வது உங்கள் உரிமையே. மறுக்கவில்லை.

    ஆனால் உங்கள் கருத்துக்கள் வெட்டி விவாதங்கள். உங்கள் கருத்துக்கள் சம்சயமே இல்லாமல் முகமூடி சுவிசேஷ ப்ரசங்கம் என்பது துலக்கப்பட வேண்டுமல்லவா?

    \\ கிருஷ்ணகுமார் எந்த கட்சிக்காரர் என்றே எனக்குப் புரியவில்லை. \\

    ஸ்வாமின், எனது அறிமுகம் நான் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்து ஸ்வயம் சேவகன். பெருமை உள்ள ஹிந்து. பாஜக விற்கு ஆதரவாளன். அந்த அலகீட்டின் படி மற்ற கட்சியினரின் சாதக பாதகங்களை உள்ளபடி அறிவதில் நாட்டம் உள்ளவன்.

  37. அன்புள்ள வாசக சகோதரர்களுக்கு,

    தில்லி தேர்தல் நிலவரம் குறித்த எனது கட்டுரைக்கு அளித்த பின்னூட்டங்களுக்கு நன்றி.

    கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எனது கணிப்பு தவறியது வருத்தமே. தில்லியில் பாஜகவின் படு தோல்வி ஏமாற்றமே. ஆனால், கட்சி மீதான அபிமானத்தால் பாஜக வெல்லும் என்று நான் எழுதவில்லை. பாஜகவின் சாதக அம்சங்களை கணக்கில் கொண்ட நான், பாஜகவுக்கு எதிராக தன்னை முழுமையாக முன்னிறுத்திய கேஜ்ரிவாலின் வியூகத்தையும் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன். உண்மையில் கேஜ்ரிவாலின் வியூகம் வெல்ல வசதியாக, மோடியும் தனது பிரசாரத்தில் அதீதத் தாக்குதலை கேஜ்ரிவால் மீது தொடுத்து உதவினார்.

    உண்மையில் இத்தோல்வி பாஜகவுக்கு அளித்துள்ள அதிர்ச்சி அக்கட்சி தன்னை சுயபரிசோதனை செய்ய அளித்திருக்கும் வாய்ப்பே. மோடியை தனிமனித துதி பாடாமல், நல்லாட்சி நடத்த வேண்டும் என்ற நிர்பந்தத்தை பாஜகவுக்கு இத்தேர்தல் முடிவு ஏற்படுத்தியுள்ளது.

    மக்களவைத் தேர்தலில் மோடி வெல்ல முன்வைத்த வியூகம் காங்கிரஸுக்கு ‘தான் மட்டுமே மாற்று’ என்பது. அதையே தில்லியில் மோடிக்கு திருப்பி அடித்திருக்கிறார் கேஜ்ரிவால். மோடியின் எதிர்ப்பாளர்களை ஒருமுனையில் திரட்டியதன் மூலமாக அவர் பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறார். இது எதிர்மறை வாக்குகள்+ ஆ.ஆ.கட்சியின் நமபகத் தன்மையின் வெற்றி. அதன் விளைவே காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது.

    பாஜகவின் வாக்கு சதவிகிதம் (சட்டசபை தேர்தலில்) குறையவில்லை. ஆனால், மக்களைவைத் தேர்தலில் பெற்ற ஆதரவை அக்கட்சியால் தக்கவைக்க முடியவில்லை. தவிர உள்கட்சி களேபரங்கள், ஆணவத்தால் வந்த மநத நிலை, எதிரியைக் குறைத்து மதிப்பிட்டது ஆகியவையும் பாஜகவுக்கு பாடம் கற்பித்துள்ளன. ஊடகங்களின் தாக்கம் இத்தேர்தலில் அதிகம் என எனது தில்லி ஊடக நண்பர்கள் கூறினர். இதிலும் மோடியை கேஜ்ரிவால் சமத்காரமாக முந்தினார்.

    ஆனால், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்க வாய்ப்பில்லை. (இதனை ஆ.ஆ.க.யின் மதியூகி யோகேந்திர யாதவே குறிப்பிட்டிருக்கிறார்). தில்லி தேர்தல் முடிவுகள் வந்த ஒருவாரத்தில் வெளியான அஸ்ஸாம் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனை நமது ஊடகங்கள் ஏன் வெளிப்படுத்தவில்லை?

    இந்தப் பதிலுரை எனது கணிப்புகள் தவறியதற்கான சமாளிப்பல்ல. அதேசமயம், எனது கட்டுரையில் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு நான் பொறுப்பாளி என்ற முறையில் அளிக்கும் விளக்கமே இது. முன்முடிவுகளுடன் கணிப்புகளைச் செய்யக் கூடாது என்று பலகாலமாக நான் எழுதி வந்திருக்கிறேன். அந்தக் கட்டுரைகளை நானே மறுபடியும் படிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றி.

    மத்தியில் மோடியும் தில்லியில் கேஜ்ரிவாலும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது, ஊழல்வாதிகளுக்கும் உழைக்காமல் ஏமாற்றும் அரசு இயந்திரத் திருகாணிகளுக்கும் எச்சரிக்கையே. எது நடந்துள்ளதோ அது நன்றாகவே நடந்துள்ளது. தில்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்.

    -சேக்கிழான்

  38. வரிசையாக மகாராஷ்டிரா, ஹரியான, ஜார்கண்ட் என்று பிஜேபி வெற்றி மேல் வெற்றி பெற்றபோது இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சில கட்சிகள் டெல்லி சட்டசபையில் பிஜேபி தோற்றதும் துள்ளி குதிக்கின்றன. ஏதோ டெல்லி தேர்தலோடு பிஜேபி கட்சி (காங்கிரஸ் போல) அஸ்தமனம் ஆகிவிட்டதாக இவர்கள் கருதி கொண்டிருக்கின்றனர். அவர்கள் கற்பனை உலகில் சிலகாலம் வாழ்ந்துகொண்டிருக்கட்டும். நாம் வெற்றி கண்டு வெறி கொள்வதுமில்லை . தோல்வி கண்டு துவளவுவதுமில்லை

    தமிழ் நாட்டில் பிஜேபி பலம் பெறவேண்டும் என்றால் நண்பர்களே! தோழர்களே! சகோதரர்களே! பிஜேபியில் இணையுங்கள். 1800 266 2020 என்ற எண்ணுக்கு missed call ஒன்று கொடுங்கள். அப்போது உங்களுக்கான உறுப்பினர் எண்ணும் (=Membership Number ) மற்றும் வேறு சில தகவல்களும் SMS மூலமாக உங்கள் செல்போனுக்கு வரும். அதில் கேட்டுள்ளபடி நீங்கள் உங்கள் முழுமுகவரி மற்றும் தேர்தல் அடையாள அட்டை எண் (=Election ID Card Number ) ஆகியவற்றை மேற்சொன்ன 1800 266 2020 என்று எண்ணுக்கு நீங்கள் ஒரு SMS (=message ) அனுப்பவேண்டும். அவ்வளவுதான். நீங்கள் பிஜேபி கட்சி உறுப்பினர் ஆகிவிடுவீர்கள். திரு அமிட்ஷா அவர்கள் வரும் மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வருவதற்குள் இதை செய்யுங்கள். நீங்கள் செய்வதோடு உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரையும் பிஜேபி உறுப்பினர்களாக ஆக்க சிரமம் பாராமல் முயற்சி எடுக்குமாறு பணிவோடு கேட்டு கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

  39. Honest man,

    In Trichy some months back, thamizhisai soundararajan announced that 1 lakh people had become members of BJP party via the procedure U mentioned (missed call, sms etc.,)

    However, in the recent Srirangam byelection, BJP got only 5000 votes.

    How come?

    Let us face the fact that BJP can never ever dream of coming to power in Tamilnadu.

  40. தனது கருத்தை மறு ஆய்வு செய்து விளக்கம் வெளியிட்ட திரு. சேக்கிழான் அவர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *