இரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்

ன்று தமிழ்நாட்டில் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பின் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது; மதவெறி, சாதிவெறியர்களுக்கு இந்த ஆட்சி ‘நம் ஆட்சி’ அதனால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு வந்துவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த து முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய தலைவர்கள் ராமகிருஷ்ணன், முஸ்லீம்கள் அமைப்புகள் வரை பிரச்சாரம் செய்து வருகின்றன. இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் (தாக்குதல்தானா?) அவர்கள் அரசியல் செய்வதற்கு வழியைக் காட்டியிருக்கிறது.

இவர்களுடைய ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவான கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. உண்மையிலேயே இவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு, ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவானவர்கள்தானா என்று பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் கலைந்துவிடுகிறது.

முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதை ஆராய்வோம்.

[1] 1950ல் வெளியான ஒரு கார்ட்டூன் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன் மீண்டும் அது சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் சேர்க்கப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டக் குழு நத்தைபோல நகர்ந்துகொண்டிருக்கிறது. சீக்கிரம் எழுதப்படவில்லை. காலதாமதம் ஆகிறது. அதனால் அன்றைக்கு குழு தலைவராக இருந்த அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிக்கின்ற மாதிரி ஒரு கார்ட்டூன்.

இந்த கார்ட்டூன் உண்மையிலேயே இப்போது பாடபுத்தகத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சேர்க்கப்பட்டது. அதை நானும் இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறோம். ஏன் அன்றைக்கு பாஜக கூட அதை பாடபுத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது.

Slide1

இந்த கார்ட்டூன் அம்பேத்கரை அவமதிக்கிறது, தலித்துகளை புண்படுத்துகிறது என்று சொல்லி திருமாவளவன் அன்று பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தார். பல்வேறு தலித் அமைப்புகள் போராடினர்.  அன்றைய மத்திய அமைச்சர் கபில் சிபில் இதற்காக மன்னிப்பு கேட்டார். கார்ட்டூனை அனுமதித்த இருவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர். கார்ட்டூனை வெளியிட்டது கருத்து சுதந்திரம் என்று அப்போது திருமாவளவன்  சொல்லவில்லை. தலித்துகளை அவமதிக்கிறது என்று சொல்லித்தான் போராடினார்கள்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் கருத்து சுதந்திரவாதிகள்!

[2] 2008ல் தினமலர் இதழ் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகட்சிகாரர்கள் தினமலர் இதழ் அலுவலகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். அங்கிருந்த பல பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். காவலாளி இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். தினமலர் வெளியிட்டது கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்று அப்போது அவர்களுக்கு தெரியாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை!

சொன்னால் நம்புங்கள் இவர்கள் ஊடக சுதந்திரவாதிகள்!

[3] சுந்தர ராமசாமி பிள்ளைகெடுத்தாள் விளை என்ற ஒரு சிறுகதையை 2005ல் எழுதினார். அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு தலித் அமைப்புகளிடம் எழுந்தது. ஏனென்றால் அதில் தலித் பெண்கள் பற்றி மிக மோசமாக எழுதப்பட்டிருந்தது என்று சொல்லி எதிர்த்தார்கள். டாக்டர் அம்பேத்கர் மையம் என்ற அமைப்பு இலக்கிய வன்கொடுமை எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை நடத்தினார்கள். சுந்தர ராமசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எஸ்ஸி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு தொடுக்கப்படும் என்று தீர்மானம் இயற்றி அச்சுறுத்தினார்கள். ஒரு எழுத்தாளரின் கருத்து சுதந்திரம் அது என்று அப்போது இவர்கள் பேசவில்லை.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் படைப்பாளர்களின் பாதுகாவலர்கள்!

[4] புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி என்ற சிறுகதை சென்னை பல்கலைக்கழக பாடபுத்தகத்தில் சேர்க்கப்பட்டது. இந்த சிறுகதை தலித்துகளை அவமதிக்கிறது என்று சொல்லி தலித் அமைப்புகள் போராடினார்கள். பின்பு சென்னைபல்கலைக்கழக பாடத்திலிருந்து அந்த சிறுகதை நீக்கப்பட்டது.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் எழுத்தாளர்களின் நண்பர்கள்!

[5] எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு பத்திரிகைக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பேட்டியில் தலித்துகளை அவமரியாதை செய்துவிட்டார், அந்த பேட்டி தலித்துகளை புண்படுத்துகிறது என்று சொல்லி மதுரையில் அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் கருத்து சுதந்திரம் என்ன வென்று தெரியாதவர்கள் இன்று கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் எழுத்தாளர்களின் நண்பர்கள்!

இதில் கொடுமை என்னவென்றால் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதுதான் வேடிக்கை.

[6] 2007ல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த எச்.ஜி.ரசூல் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினார்.இஸ்லாத்தில் குடி பண்பாடு என்பது பற்றி எழுதினார். உடனே முஸ்லீம்கள் பொங்கி எழுந்தார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா? அவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்றுவரை ஊர்விலக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். இதை தவறு என்று யாராவது சொன்னார்களா? இத்தனைக்கும் அவர் இடதுசாரி கலை இலக்கிய பெருமன்ற அமைப்பைச் சேர்ந்தவர். பெருமாள் முருகனுக்காக நாடுமுழுவதும் கண்டனக்கூட்டங்களை நடத்திய இவர்கள் கூட தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சினையை பேசவில்லை. ஜமாத்தை எதிர்த்து போராடவும் இல்லை. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம். எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் ரசூலுக்கு எதிராகவே இருந்து வருகின்றன. ஒரு கருத்து சுதந்திரவாதிகள் கூட இஸ்லாமியர்களை கண்டிக்கவில்லை. போராடவும் இல்லை.

Slide6

[7] தஸ்லீமா நஸ்ரின் பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்று அவர்கள் எவ்வளவு ஒடுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுகூட தெரியும். அவர்கள் நடத்தும் எந்த ஒரு கூட்டமும் முஸ்லீம்களால் வன்முறை உள்ளாக்கப்படும். அவர்கள் பெண் என்றுகூட பார்க்காமல் அடிபட்ட சம்பவமும் உண்டு. இதுதான் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்து சுதந்திரம்.

[8] 2013ல் சென்னை பல்கலைகழகத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அமீனா வதூத் என்கிற இஸ்லாமிய பெண்ணியவாதி பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு மட்டுமல்ல இஸ்லாமிய கல்லூரியான எஸ்ஐஈடியிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? சென்னை பல்கலைகழகத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்தது. அவர் பேசக்கூடாது என்று மிரட்டல் விடுத்தது. இறுதியில் அந்நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

[9] விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. எல்லா தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். தியேட்டர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. நடிகர் கமல் பேனருக்கு தீ வைத்தார்கள். தமிழகம் முழுவதும் அராஜகம் நடந்தது. ராமநாதபுரத்திலேயும் கோயமுத்தூரில் உள்ள திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திண்டுக்கல்லில் அரசு பேருந்துமீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறையில் அவர்கள் என்ன புகார் கொடுத்தார்கள் தெரியுமா? படத்தை தடை செய்யணும். இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். இதுதான் அவர்களுடைய புகார்.

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டுமுன்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி நடத்தியது. அதில் பெருமளவு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது நடிகர் மணிவண்ணன் என்ன தெரியுமா சொன்னார்? விஸ்வரூபம் பட பிரச்சினையில் நான் முஸ்லீம்களை ஆதரிக்கிறேன் என்று சொன்னார். இவர் முற்போக்குவாதியாக அறியப்படுகிறவர்.

எங்களுக்கு படம் போட்டுக் காட்டணும் என்று மிரட்டல் விடுத்தனர். இன்றைக்கு பெருமாள் முருகன் மாதிரி அன்றைக்கு கமலும் நான் வேறு நாடுகளுக்கு சென்றுவிடுவேன் என்று சொன்னார். ஆனால் கடைசியில் அவர் படத்தை போட்டு காண்பித்தார். சில சொற்களும், சில காட்சிகளும் நீக்கப்பட்டன. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

[10] இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒருவாரத்திற்கு மேலாக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டார்கள் முஸ்லீம்அமைப்பினர். அங்கிருந்த பெருவாரியான வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான். அந்த ஒருவாரகாலத்திற்கும் மேலாக மக்கள் பட்ட அவதிகள், தொல்லைகள் நாம் மறக்க முடியாது. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

Slide10

[11] உங்களுக்கெல்லாம் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களைத் தெரிந்து இருக்கும். அவர் ஒரு முஸ்லீம். அப்துல் ஹமீது அவருடைய நிஜப்பெயர். இந்து பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிறார். அவர்கூட கருத்துசுதந்திரத்தைப் பற்றி பேசினார். பெருமாள்முருகனுக்கு ஆதரவாக பேசினார். கருத்து சுதந்தித்தை நசுக்கும் செயல். இந்துத்துவ பேயாட்டம் என்றெல்லாம் பேசினார். ஆனால் சார்லி ஹெப்டோ பத்திரிகையின் கார்ட்டூன் விஷயத்தில் அவரின் உண்மை முகம் வெளிவந்தது.

கருத்து சுதந்திரம் என்பது வரையறை செய்யப்பட வேண்டும். நபிகள் பல்லாயிரம் முஸ்லீம்களின் ஐகான். அவரை கொச்சைப்படுத்தக்கூடாது என்று சொன்னார். அதாவது நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என்ற சொன்னார்.

இதுமட்டுமல்ல அவர் தொலைக்காட்சி விவாதத்தில் ஒன்று சொன்னார். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தடை செய்யவேண்டும் என்றுசொன்னார். அப்படங்கள் மக்களை கெடுக்கின்றனவாம். நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. ஆனால் இராமரை, கிருஷ்ணரை கொச்சப்படுத்தலாம். இதுதான் இந்த முஸ்லீம் வெறியனின் கருத்து சுதந்திரம்.

[12] இன்னொருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நுழைந்து மாநில அளவில் பதவி பெற்று முஸ்லீம் அடிப்படைவாதத்தை தமிழகத்தில் ஊன்றி வருபவர் ஷாநாவாஸ். இவர் ஒரு மதஅடிப்படைவாதி. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவளித்தவர்களில் இவரும் ஒருவர். இவருடைய முகநூலை பாருங்கள். ஐஎஸ்ஐஎஸ் போராடுவது மண்ணுக்காக. அவர்களுடைய மக்களுக்காக. அவர்கள் போராளிகள் என்று முகநூலில் பதிவிடுகிறார். அது மக்கள் போராட்டம் என்று சொல்கிறார். நேதாஜி ஆயுதம் ஏந்தி போராடினால் போராளி என்று சொல்கிறீர்கள். அதையே ஈராக்கிகள் செய்தால் தீவிரவாதியா என்று கேள்வி கேட்கிறார்.

அதுமட்டுமல்ல விடுதலைப் புலிகளையும் ஐஎஸ்ஐஎஸ்யும் இணைத்து அவர்களை போராளிகள் என்று சொல்கிறார். சூழல்கருதி முஸ்லீம் ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவு தர தயங்குகின்றனர் என்று வெளிப்படையாக முகநூலில் எழுதுகிறார். இவர்தான் கருத்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரவாதிகள்!

கம்யூனிஸ்டுகளின் கருத்து சுதந்திரம் என்ன தெரியுமா?

[13] 1990ல் கல்கத்தா பற்றிய ஒருபடத்தை எடுத்தார்கள். படத்தின் பெயர் சந்தோஷநகரம். (city of joy) 20 ஆண்டுகள் ஆகியும் கம்யூனிச ஆட்சியில் மக்கள் எவ்வளவு பசியும், பட்டினியுமாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்த படத்தின் கரு. விடுவார்களா கம்யூனிசவாதிகள்? படக்குழுவினரை ஓட ஓட அடித்தார்கள். வன்முறை மொத்த உருவமாக அன்று இருந்தார்கள். இவர்கள்தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்.

[14] ரஷ்யாவில் லெனின் பற்றி அலெக்சாண்டர் ஸோக்குரோய் ஒரு படம் தயாரித்தார். படத்தின் பெயர் டாரஸ் (ரிஷப ராசி) ரஷ்ய திரைப்பட தணிக்கைகுழு தணிக்கை செய்து அங்கு வெளியிடப்பட்டது. பல்வேறு நாட்டிலும் வெளியிடப்பட்டது. கொல்கத்தா திரைப்பட விழாவில் அந்தப் படம் திரையிட்டபோது மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அந்த படத்தில் நடித்த கதாநாயகனைக்கூட விடவில்லை. ஒரே வன்முறை. இவர்கள்தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்.

[15] சில ஆண்டுகளுக்கு முன்பு ஒச்சாயி என்றொரு படம் வந்தது. முக்குலத்தோரின் தெய்வமான ஒச்சாயி என்ற பெயரையே அந்த படத்திற்கு தலைப்பாக வைத்திருந்தார்கள். ஒச்சாயி என்ற பெயர் தமிழ்பெயரா என்று கேள்வி கேட்டு வரி விலக்கு அளிக்க தயங்கியது. அப்போது நம்ம காம்ரேட் தா.பாண்டியன் என்ன சொன்னார் தெரியுமா? தமிழ்நாட்டில் ஒச்சாயி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்காண தாய்மார்கள் வாழ்கிறார்கள். அவர்களையெல்லாம் அவர்களையெல்லாம் அவமதிக்கிற செயலாக இது இருக்கிறது என்று அறிவித்தார்.

அதாவது அவர் சார்ந்த சாதிக்கு அவர் வக்காலத்து வாங்கலாம். ஆனால் திருச்செங்கோட்டு பெண்களுக்கு வக்காலத்து வாங்கக்கூடாது? இதுதான் கம்யூனிஸ்ட்காரர்களின் கருத்து சுதந்திரம்.

Slide18[16] துரை.குணா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தை சார்ந்தவர். தலித் சமூகத்தைச் சார்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு புத்தகத்தை எழுதினார். ஊரார் வரைந்த ஓவியம் என்று. அந்த புத்தகத்தை குளத்திரான்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் தங்கராஜ் எதிர்க்கிறார். அந்த ஊரைச் சேர்ந்த எல்லா தலித்துகளும் மற்ற சமூக மக்களும் இந்த நூலை எதிர்க்கிறார்கள். இதில் என்ன செய்தி? ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு தலித். அது ஒரு செய்தியா? இல்லை. அவர் ஒரு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இதுதான் செய்தி.

அவர் சொல்கிறார்:- எழுத்தாளர் துரை.குணா தவறான  தகவல் தந்திருக்கிறார். அதனால் ஊரில் ஒற்றுமையாக இருக்கிற மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் இந்த புத்தகத்தை தடை செய்யணும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார். இதுமட்டுமல்ல

இந்த புத்தகத்துக்கு ஒருவர் அணிந்துரை எழுதியிருக்கிறார். பெயர் சின்னதுரை. அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? தெரியாமல் அணிந்துரை எழுதிவிட்டேன். அதில் கொச்சையாக எழுதி இருப்பவற்றை நீக்கும்படி குணாவிடம் சொல்லியிருக்கிறேன் என்று கூறுகிறார். அவர் யார் தெரியுமா? இவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இரண்டு கூட்டங்களில் இந்த புத்தகத்தையும் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அவர்கள் யாருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இதை எதிர்க்கிறார்கள் என்று கடைசிவரை சொல்லவேயில்லை. இதையும் இந்துத்துவா ஆட்கள்தான் எதிர்க்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

[17] முற்போக்கு ‘தி இந்து’ பத்திரிகை பிரான்சில் இஸ்லாமிய தாக்குதலுக்கு உள்ளாகிய சார்லி ஹெப்டோ பத்திரிகையை, கருத்து சுதந்திர  போராளிகள் தங்கள் கையில் வைத்திருப்பது போல ஒரு படத்தை வெளிட்டது  (தி இந்து சர்ச்சைக்குரிய கார்ட்டூனை மறுபிரசுரம் செய்யவில்லை – அந்தத் துணிச்சலை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?  மக்கள் கையில் வைத்திருந்த பத்திரிகை பிரதியில் அந்தக் கார்ட்டூன் லேசாகத் தெரியும் படி இருந்தது, அவ்வளவு தான்). இதற்குக் கூட தமிழகத்தின் முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மறுநாளே தொடை நடுங்கிக் கொண்டு பகிரங்க மன்னிப்புக் கேட்டது  தி இந்து. ஆனால் இதே பத்திரிகை பெருமாள் முருகனுக்கு  கட்டற்ற கருத்து சுதந்திரம் வேண்டும் என்று கெட்கமில்லாமல் ஆதரவு தெரிவிக்கிறது.

அதாவது சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற இவர்கள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் கூட கருத்து சுதந்திரம் பற்றி பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியினுடைய கருத்து சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

[18] நாடார் பெண்கள் பற்றி சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் மேலாடை அணிவது பற்றிய தகவல் சொல்லப்பட்டது. நாடார்கள் கொந்தளித்தார்கள். அதை நீக்க வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் குரல்கொடுத்தார். மத்திய இணை அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.. ஏனென்றால் நாடார்களின் மனம் புண்படுகிறது. அதை நாங்களும் வழிமொழிகிறோம். ஆனால் திருச்செங்கோட்டு மக்களுக்கு அந்த உணர்வு இருக்க கூடாதா? தாலி விஷயத்தில் இந்துக்களுக்கு அந்த உணர்வு இருக்க கூடாதா?

[19] இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ரெட் சாரி என்ற ஆய்வு நூலை எழுதினார். சோனியா காந்தியைப் பற்றிய நூல் அது. அந்நூலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. மணிஸ் திவாரி மிரட்டினார். அந்நூலை காங்கிரஸ்காரர்கள் கொளுத்தினார்கள். எழுத்தாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதான் இவர்களுடைய கருத்து சுதந்திரம்!

Slide21

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கருத்து சுதந்திர பின்னணி

இந்தியாவின் மரபுகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் கொச்சைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.

[20] பெருமாள் முருகன் எழுதியிருக்கிற நாவலை ஏன் எதிர்க்கிறோம்? ஆய்வு என்ற பெயரில் திருச்செங்கோட்டு பெண்களை பச்சையாக தேவடியாள் என்று கூறியிருப்பதால்.

நாம் ஆதாரம் கேட்டால் மகாபாரதத்தில் இப்படி இருக்கிறது, பழங்குடி சமூகங்களில் அப்படித் தான்  இருக்கிறது என்று சொல்கிறார்கள். தினமணி கூட அப்படித்தான் ஒரு தலையங்கம் எழுதியது.

எல்லா அலுவலகங்களிலும் பெண்களுக்கு பாலுறவு தொந்தரவு கொடுக்கப்படுகிறது. கம்யூனிச அலுவலகத்திலும் தினமணி அலுவலகத்திலும் அப்படி கொடுக்கப்படுகிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? ஆதாரம் கேட்க மாட்டார்களா? அப்போது எல்லா அலுவலகங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என்று நாம் பொதுவாக சொன்னால் அது சரியாக இருக்குமா? ஆதாரம் காட்ட வேண்டாமா? இதைத்தானே பெருமாள் முருகனிடம் திருச்செங்கோட்டு மக்கள் கேட்டார்கள்?

பெருமாள் முருகன் எழுதுகிறார் –  “வீதிகளிலே சாயங்காலம் முதலே அலையத் தொடங்கிவிட்டான். இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமே இல்லை. அந்தப் பெண்கள் நன்றாக சிங்காரித்துக் கொண்டு மண்டபங்களில் ஆடப்போனார்கள். இன்னிக்கு நம்மள எவன் பார்க்குறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னிக்குத் தேவடியாள்தான் என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்”. (பக்.87, மாதொருபாகன்)

ஆனால் உண்மை என்ன? 1929ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு எல்லா மாவட்டங்களிலும் இது ஒழிக்கப்பட்டது. எல்லா அலுவலங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது. அதன்படி எல்லா தேவதாசி இனாம்களை விடுவித்து, அவர்களை கோயில் பணியின் பொறுப்பிலிருந்து விடுவித்தனர் என்று முத்துலட்சுமி ரெட்டி தன் வாழ்க்கை சரிதத்தில் கூறுகிறார்.

இந்த நாவல் 1940ல் நடப்பதாக தினமலரில் பெருமாள் முருகன் கூறியுள்ளார். அப்படியென்றால் 1940ல் தேவதாசி முறை இருந்ததா? நீதிக்கட்சி தேவதாசி சட்டத்தை கொண்டு வந்து ஒழித்தது என்று பெருமையடிக்கும் திராவிட கழகம் இதற்கு என்ன சொல்லப்போகிறது?

அதாவது கோயிலுக்கு வரும் பெண்கள் எல்லோரும் தேவடியாள்கள் என்பதை வாசகர் மனதில் பதிய வைக்கத்தான் இதை பெருமாள் முருகன் சேர்த்திருக்கிறார். 11வருடத்திற்குமுன் தடைசெய்யப்பட்ட தேவதாசி முறையை இதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஏன் இவர் இப்படி எழுதுகிறார்? இதனுடைய பின்னணி என்ன?

இவர் 2013ல் தமிழ்பதிப்பான தி இந்துவில் சைவ சமயத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் சங்ககால தமிழ்நூல்கள் வெளிவராமல் இருந்ததற்கு காரணம் சைவ சமயம்தான் என்று எழுதினார். அந்த கட்டுரையை படித்தால் ஒருவனுக்கு நிச்சயமாக சைவ சமயத்தின்மேல் வெறுப்புதான் உண்டாகும். தமிழுக்கும் சைவத்திற்கும் பிரிக்கமுடியாத பிணைப்பு இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பல சங்க நூல்கள் சைவ மடங்களில் இருந்துதான் வெளிக்கொண்டுவரப்பட்டவை. உ.வே.சா வாழ்க்கையைப் படித்தவர்கள் இதை அறியலாம். ஆனால் இவர் அந்த உண்மைகளை மறைத்து சைவ சமயமே தமிழுக்கு விரோதியாக இருந்தது என்பதை கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Slide25

[21] இந்த சங்கத்தைச் சேர்ந்த டி.செல்வராஜ் (டேனியல் செல்வராஜ்) எழுதிய நோன்பு என்கிற சிறுகதை பாடமாக 2012-2013ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டது. அதில் ஆண்டாள் தாசியின் மகள் என்று கதை எழுதினார். நமக்கு தெரியும். ஆண்டாள் துளசி செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்டவள் என்று. ஆனால் ஆண்டாளை கொச்சைப்படுத்தும் விதமாக இவர் எழுதினார்.

[22] அதேபோல சோலைசுந்தரபெருமாள் தாண்டவபுரம் என்ற நாவலை எழுதினார். அதில் திருஞானசம்பந்தரை கொச்சைப்படுத்தி எழுதினார். இவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்தான்.

[23] இதனுடைய தொடர்ச்சிதான் கரூரில் புலியூர் முருகேசன்  கவுண்டர்களைப் பற்றி மிக மோசமாக எழுதியது. இவருக்கு பின்புலமாக இந்த சங்கம் இருக்கிறது. அதாவது யாரெல்லாம் இந்த பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் எதிராக இயங்குகிறார்களோ அவர்களை ஆதரிப்பது, அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது – இதையே ஒரு திட்டமாக வைத்து செயல்பட்டு வருகிறது.

[24] இந்த கம்யூனிச, திராவிட சித்தாந்த வாதிகள் கூட்டாக சேர்ந்து கும்மியடிக்கும் இடமாகத்தான் இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி இயங்கிவருகிறது. பட்டாசைக்கூட வெடிகுண்டு என்றுகூறி ஊடக தர்மத்தை மீறிவருகிறது இந்த தொலைக்காட்சி என்றால் இதனுடைய கருத்து சுதந்திரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆகவே நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். கருத்து சுதந்திரம் – ஊடக சுதந்திரம் பற்றிப் பேச மேற்சொன்ன்னவ அரசியல், சித்தாந்த, ஊடக ஆசாமிகள் ஒருவருக்குக் கூட அதற்கான தார்மீக தகுதி என்பது  சிறிதும் கிடையாது. இவர்கள் அத்தனை பேரும் இரட்டைவேடம் போடும் கபடதாரிகள்  மட்டுமே.

ம.வெங்கடேசன்
ம.வெங்கடேசன்

பிப்ரவரி 8, 2015 அன்று திருச்செங்கோட்டில் “எது கருத்து சுதந்திரம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம்  நடைபெற்றது.

அந்தக் கருத்தங்கில் ம.வெங்கடேசன் ஆற்றிய உரையின்  கட்டுரை வடிவம்.

இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் அனைத்துப் படங்களுடன் அடங்கிய பவர்பாயின்ட் பிரசன்டேஷன் வடிவத்தை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

28 Replies to “இரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்”

  1. ஹிந்து மதத்திற்கு எதிராக எழுதுபவர்களின் கருத்து சுதந்திரம் முற்றிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.

  2. ம.வெங்கடேசனாரின் பேச்சு பேச்சாக இருந்திருக்கிறது. கட்டுரை அருமையிலும் அருமை. அனைத்து ஹிந்துவிரோத சிகுலர் கட்சிகளின் முகத்திரையைக்கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் வெங்கடேசனார். பாராட்டுக்கள். அவரது உரையை யூடியூபில் போட்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் .

  3. இதேமாதிரி திருச்செங்கோடு கண்டனக்கூட்டத்தில் வீர. இராஜமாணிக்கம், அரவிந்தன் ஆகியோர் பேச்சுக்களையும் கட்டுரையாகவெளியிடுதல் வேண்டும்.

  4. நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. காலம் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். 🙁

  5. Evarkaluku,karuth suthantharam enpath hindugalai kevalapaduthvathu matume

    jagadeesan

  6. திரு ம.வெங்கடேசன் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி கோடானு கோடி வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். அருமையாக எழுதி இருகிறீர்கள்.

    தமிழக பிஜேபி தொண்டர்களுக்கு எனது கனிவான பணிவான் வேண்டுகோள்:- மேற்கண்ட கட்டுரையை துண்டு பிரசுரமாக அச்சடித்து பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், சந்தை, கடைதெரு என்று வீதி வீதியாக வீடுகள்தோறும் சென்று இதனை விநியோகம் செய்ய வேண்டும். இதை படித்து உண்மை நிலை அறிந்து பொது மக்கள் “போலி கருத்து சுதந்திர புலிகளை” பார்த்து தூ! தூ! என்று காரி துப்ப வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்து அமைப்புகளின் தனமானம் காப்பாற்றப்படும். இல்லையென்றால் மக்களின் கண்களுக்கு அந்த போலிகளின் கருத்துக்களே பொலிவாக தெரியும். எனவே பிஜேபி தொண்டர்களை பார்த்து இதனை சிரமம் பாராது செய்யுமாறு வேண்டி விரும்பி வணங்கி பணிவாக கேட்டு கொள்கிறேன்.

    8-2-2015 அன்று திருசெங்கோட்டில் கருத்தரங்கில் பேசினால் மட்டும் போதாது.(அங்கே ஒரு 1000 பேர் அவரது பேச்சை கேட்டிருப்பார்கள்) இந்த இணையதளத்தில் வந்தால் மட்டும் போதாது.(இதனை ஒரு 1000 பேர் படிப்பார்கள்) ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் இந்த கட்டுரை சென்று சேரவேண்டும். அதற்கு ஒரே வழி துண்டு பிரசுரம்.

    திமுகவை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் அதிமுக அமைச்சர்கள் ஆகியோர் துண்டு பிரசுரங்களை பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகளிடம் மற்றும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்ததை நாம் டிவி மற்றும் பத்திரிக்கை மூலம் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழக தலைமை பொறுப்பில் உள்ள பிஜேபி தலைவர்கள் இதனை செய்வார்களா என்று ஒரு சின்ன சந்தேகம் உள்ளது. அதற்கு காரணம் அவர்களது கடந்த கால வரலாறு. “விஜய பாரதம்” மற்றும் “ஒரே நாடு” ஆகிய பத்தரிக்கைகள் தயவு செய்து இந்த கட்டுரையை பிரசுரிக்க வேண்டும். அந்த கட்டுரைக்கு கீழே இதனை அந்தந்த ஊரிலுள்ள பிஜேபிகாரர்கள் துண்டு பிரசுரமாக அச்சிட்டு பொதுமக்களுக்கு கட்டாயம் விநியோகிக்க வேண்டும் என்று ஒரு குறிப்பு இருக்க வேண்டும். இப்படி செய்தால் நல்லது. ஆனால் அது நிச்சயம் நடக்காது என்பது என் அசைக்கமுடியாத 100% நம்பிக்கை. எப்போதுதான் அந்த ஆண்டவன் தமிழக பிஜேபிகாரர்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பானோ? அல்லது கடைசி வரைக்கும் அவர்கள் இப்படியேதான் இருப்பார்களோ என்னவோ?

  7. காலம் என்ன பதில் சொல்வது, நாம் தான் முடிவு எடுக்க வேண்டும். நம்மில் வேண்டும் ஒற்றுமை, கடவுளை நம்பும் அனைத்து இந்துக்களும் ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் இந்த போலி மத சார்ப்பின்மைவதிகளுக்கும், திராவிட திருட்டு கூட்டங்களுக்கும், சரியான பதிலடி கொடுக்கவேண்டும். ஊர் ஊராக கிருத்துவ பாவாடை சாமிகள் போலி பிரசங்கம் பண்ணி மதமாற்றம் செய்வதைய்ம் தடுக்க நாமும் ஊர் ஊராக கூட்டம் போட்டு மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். நம் கலாசாரம் & பண்பாட்டை காப்பாற்றவேண்டும். ஜெய ஹிந்த்! ஓம் நமசிவாய!

  8. விலாவாரியாக ………..நிகழ்வு வாரியாக……….. தெளிவாக………. முற்போக்கு முகத்திறை கிழிக்கப்பட்டுள்ளது.

    நன்றிகள் ஸ்ரீ ம.வெ.

  9. அற்புதம் வெங்கடேசன்.

    இவர்கள் உண்மையில் கருத்துச் சுதந்திர நடிகர்கள். அப்பட்டமாகத் தோல் உரித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியையும் அங்கு மார்க்சிஸத்தின் தோல்வியையும் ஆராயும் புதினத்தை (பின் தொடரும் நிழலின் குரல்) எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் முற்போக்குவாதிகள் முத்திரை குத்தி மிரட்டிய கதைகளை இதில் சேர்த்திருக்கலாம். இதுவரை ஜெயமோகன் அவர் பெற வேண்டிய எந்த ஒரு சிறப்பையும் அடையாமல் தடுப்பது இந்த ஒரு புதினம் தான்.

    அதேபோல, ‘எனது இந்தியா’ என்ற கட்டுரையை ‘வார்த்தை’ பத்திரிகையில் எழுதியதற்காக ஜெயமோகனின் வீட்டிற்கே சென்று மிரட்டினார்கள் இஸ்லாமிய வெறியர்கள். அப்போது எந்த் கருத்து சுதந்திரப் போராளியும் அவருக்கு ஆதரவாகப் பேசவில்லை.

    இதுதொடர்பாக 2010-இல் இதே தளத்தில் நான் எழுதிய கட்டுரை உள்ளது.
    காண்க: https://tamilhindu.com/2010/10/ayodhya_judgement_and_media_lament-4/

    -சேக்கிழான்

  10. இரட்டை வேஷம் என்பதைப் பொறுத்த வரை உங்கள் கருத்துகளை 200% வழி மொழிகிறேன். தனக்கு கருத்து சுதந்திரம் வேண்டும், ஆனால் அடுத்தவர் என் மனதைப் புண்படுத்திவிடக் கூடாது என்ற போலித்தனம் மலிந்து போய்விட்டது.

    திராவிட இயக்கத்தை மட்டும் விட்டுவிட்டீர்களே? கருத்து சுதந்திரம் பற்றி இல்லை, இருந்தாலும் திராவிட இயக்கத்தினரின் இரட்டை வேஷத்துக்கு ஒன்று – பல வருஷங்களுக்கு முன்னால் துக்ளக்கில் நாஞ்சில் மனோகரன் சோவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரம்ஜானுக்கு விரதம் இருப்பது உடலுக்கு நல்லது, ஆனால் அமாவாசையன்று ஒரு பொழுது சாப்பிடுவது மூட நம்பிக்கை என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். எத்தனையோ தோண்டி எடுத்துப் போடுகிறீர்கள், அதையும் போட்டால் கொஞ்சம் சிரிக்கலாம். 🙂

    ஆனால் இந்தக் கூற்றை வன்மையாக மறுக்கிறேன் – // பெருமாள் முருகன் எழுதியிருக்கிற நாவலை ஏன் எதிர்க்கிறோம்? ஆய்வு என்ற பெயரில் திருச்செங்கோட்டு பெண்களை பச்சையாக தேவடியாள் என்று கூறியிருப்பதால். //
    தான் விரும்பிய ஆணோடு உறவு கொள்ளும் பெண் எல்லாரும் தேவடியாள், பெண்ணின் பாலியல் உறவு அவள் கணவனோடுதான் இருக்க வேண்டும், அதை மீறுபவள் தேவடியாள் என்று நீங்கள் நினைத்தால்; அதற்காக இப்படி குமுறினால்; அவர்களோடு உறவு கொண்ட ஆண்களைப் பற்றி ஏன் உங்களுக்குத் தோன்றவே இல்லை? திருச்செங்கோட்டில் ஆண்களும் பெண்களும் காமவெறியர்கள் என்று எழுதிவிட்டார் என்று நீங்கள் போராட்டம் நடத்தினால் புரிந்து கொள்ள முடியும், (ஏற்கமாட்டேன், ஆனால் புரிந்து கொள்வேன்.) ஆனால் பெண்களை இழிவாக சித்தரித்துவிட்டார் என்றுதானே உங்கள் போராட்டம் இருக்கிறது?

    நீங்களே மேற்கோள் காட்டும் தேவடியாள் தெருவுக்கு வந்து போகும் கஸ்டமர்கள் யார்? அவர்களின் பாலியல் உறவுகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லையா? தேவடியாள் தெரு என்று பெ. முருகன் எழுதி இருக்கிறார், ஆய்வு என்ற பேரில் திருச்செங்கோட்டு ஆண்களை பச்சையாக தேவடியான்கள் என்று கூறிவிட்டார் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவே இல்லை? பெண் பெய் என்றால் மழை பெய்ய வேண்டும், அவள் கற்புக்கரசியாக இருக்க வேண்டும், திருச்செங்கோட்டில் சில பல பெண்கள் இப்படி ஒரு “வாய்ப்பை” பயன்படுத்திக் கொண்டார்கள் என்றாலே திருச்செங்கோட்டுப் பெண்களை அனைவரும் தேவடியாள்கள் என்று மிகைப்படுத்துவீர்கள், போராட்டம் நடத்துவீர்கள், ஆனால் ஆண்களைப் பற்றி உங்களுக்கு சின்ன உறுத்தல் கூட இல்லை.

    தூக்கி குப்பையில் எறியுங்கள் உங்கள் ஆணாதிக்க விழுமியங்களை!

    என் சில பதிவுகள்:
    மாதொருபாகன் சர்ச்சையைப் பற்றி – https://siliconshelf.wordpress.com/2015/01/16/மீண்டும்-பெருமாள்-முருகன/

    மாதொருபாகன் மீது எனக்குத் தெரிந்த சில ஹிந்துத்துவர்கள் எடுத்திருக்கும் நிலை பற்றி – https://siliconshelf.wordpress.com/2015/01/28/பெருமாள்-முருகன்-ஹிந்து/

    மாதொருபாகன் புத்தக விமர்சனம் (சுருக்கமாக: பெ. முருகன் ஏமாற்றிவிட்டார், புத்தகம் படுசுமார்) – https://siliconshelf.wordpress.com/2015/02/03/பெருமாள்-முருகன்-ஏமாற்றி/

  11. 8-2-2015 அன்று திருசெங்கோட்டில் கருத்தரங்கில் பேசினால் மட்டும் போதாது.(அங்கே ஒரு 1000 பேர் அவரது பேச்சை கேட்டிருப்பார்கள்) இந்த இணையதளத்தில் வந்தால் மட்டும் போதாது.(இதனை ஒரு 1000 பேர் படிப்பார்கள்) ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் இந்த கட்டுரை சென்று சேரவேண்டும். அதற்கு ஒரே வழி துண்டு பிரசுரம்.

  12. ஆசிரியர் சொல்லி இருப்பது எல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் அல்ல. The article is supported by facts and figures. Well done Sir.

  13. அற்புதமான பணி….

    நாம் அனைவரும் இதை கடந்தேதான் வந்திருக்கிறோம்…..

    அவற்றை நினைகூர்ந்து , வரிசைப்படுத்த திரு. ம. வெங்கடேசன் போன்ற சிலரே உள்ளனர்….

    மனமார்ந்த நன்றிகள்……

  14. ஆஹா இங்கே வந்தாரையா வந்தார் ஒரு பெண்ணியல் வாதி ஆர்வி.
    “ஆண்களைப் பற்றி உங்களுக்கு சின்ன உறுத்தல் கூட இல்லை.
    தூக்கி குப்பையில் எறியுங்கள் உங்கள் ஆணாதிக்க விழுமியங்களை!”
    ஆர் வி யாரே
    தேவரடியார்கள் பரத்தையராய் சீரழிந்தது வரலாறு. ஆண்கள்
    தேவரடியார்களிடம் போனது வரலாறு உண்மை. அது இன்னமும் ஒரு நிகழ்கால உண்மையாக இருக்கையில் அதுதவறயினும் அதைப்பற்றி எப்படிக்கோபம் கொள்ளமுடியும். விபச்சாரத்தினை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று போராடுகிறவர்களும் இப்போது நாட்டில் உண்டு. உங்களைப்போன்ற பெண்ணியவாதிகளால் அது முடியுமானால் கோபப்படுங்கள். திருச்செங்கோட்டின் பெண்கள் எல்லாம் தேவரடியார்களாய் விட்டார்கள் என்று தேவரடியார்கள் மூலம் பேசிய கதாசிரியரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டைத்தான் சாடமுடியும். திருச்செங்கோட்டு மக்களின் கேள்வி ஆதாரமெங்கே என்பதுதான்.

  15. வேங்கடேசன் பதிவுகள் வழக்கம் போல் “நெத்தியடி” பாணி நறுக்…. பாரதீய ஜனதாபார்ட்டி நூலுக்கான உங்கள் மறுப்பு நூலை ஆவலுடன் எதிர்பார்திருக்கும் …

  16. மிக நல்ல அலசல். அற்புதம்.

    ஹானஸ்ட் மேன், தமிழ் மாநில பா.ஜ.க காரர்களைக்காட்டிலும் காங்கிரஸ்காரர்கள் கூட தேவலாம் போல இருக்கிறது. தலைவர்களெல்லாம் தேர்தல் காலம், மோடி வரும் தருணங்கள் தவிர அமர்ந்திருக்கும் நாற்காலியைவிட்டு எழவே மாட்டார்கள் போல உள்ளது.

    இப்படியே கிடைக்கும் வாய்ப்புகளைக்கூட பயன்படுத்திக்கொள்ள வக்கற்றவர்களாக இருந்தால் காங்கிரஸ் போல சவாரி செய்ய எவன் முதுகு கிடைக்கும் என்று என்று தேடிக்கொண்டுதான் இருப்பார்கள்.

  17. சிவஸ்ரீ விபூதிபூஷண்:

    // திருச்செங்கோட்டு மக்களின் கேள்வி ஆதாரமெங்கே என்பதுதான். // கேள்வியை நீங்கள் முழுமையாகச் சொல்லவில்லை – பெண்கள் தாங்கள் விரும்பிய ஆணோடு உறவு கொள்ளலாம் என்பது பெண்களை மட்டுமே கேவலப்படுத்துகிறது, அதே உறவில் ஈடுபட்ட ஆணுக்கு ஒரு கேவலமுமில்லை, இப்படி பெண்களை மட்டும் கேவலப்படுத்துவதற்கு ஆதாரம் எங்கே என்பதுதான் முழுமையான கேள்வி. திருச்செங்கோட்டில் இதை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல; ம. வெங்கடேசன் மட்டுமல்ல; உங்கள் கேள்வியும் அதேதான்.

    ஒரு செயல் கேவலம் என்று நினைக்கிறீர்கள். அதில் இருவர் ஈடுபடுகிறார்கள். அது எப்படி அந்த இருவரில் ஒருவருக்கு மட்டுமே இழிவு, பெண்ணைத் தேவடியாள் என்று சொல்லிவிட்டார் என்று அத்தனை பேரும் குதிக்கிறீர்கள்? அட குறைந்த பட்சம் திருச்செங்கோட்டு ஆண்களை காமவெறியர்கள் என்று சொல்லி இழிவுபடுத்திவிட்டார் என்று கூடவா யாருக்கும் தோன்றாது? இத்தனை பேர் பெண்களுக்கு இழிவு பெண்களுக்கு இழிவு என்று பொங்குகிறீர்கள், ஒருவருக்குக் கூட ஆண்களுக்கு இழிவு – அட இழிவு என்று கூட வேண்டாம், ஆண்கள் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று ஒரு நொடி கூட தோன்றாமலா இருக்கும்? இந்தக் கேள்வியைக் கேட்கும் அடிப்படை தர்க்க அறிவைக் கூட உங்கள் ஆணாதிக்க விழுமியங்கள் அழித்துவிட்டதா? இதற்கு பெண்ணியவாதிகள் வர வேண்டுமா?

    வாய்ப்பு கிடைத்தால் போதும், எப்படியோ ஒரு பெண்ணோடு படுக்கும் ஆண் மீது தவறில்லை என்று நினைக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. சரி, ஒரு அடிப்படையான கேள்வி – தான் விரும்பும் ஆணோடு உறவு கொள்ளும் பெண் உங்கள் கண்ணில் தேவடியாளா? ம. வெங்கடேசன் இங்கே அப்படித்தான் எழுதி இருக்கிறார், சந்தேகம் இருந்தால் மீண்டும் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். பதில் சொல்வதற்கு முன் ஒன்றை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். இங்கே பல இலக்கிய வாசகர்கள் இருக்கிறீர்கள்; சில நேரங்களில் சில மனிதர்களின் கங்கா உங்கள் கண்ணில் தேவடியாளா? மோகமுள்ளில் பாபுவை விரும்பி தற்கொலை செய்து கொள்ளும் பக்கத்து வீட்டுப் பெண் தேவடியாளா? நான் அம்மா வந்தாளின் அலங்காரத்தம்மாளுக்கோ இல்லை மரப்பசுவின் அம்மிணிக்கோ இன்னும் போகவில்லை. 🙂

  18. இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய செய்தி ஒன்றும் உள்ளது. பு.த தொலை காட்சியில் பட்டாசை வீசியவர்கள் பிஜேபி அல்ல; இந்து முன்னணி அல்ல; இந்து மக்கள் கட்சியும் அல்ல. ஆனால் மேற்சொன்ன விடயங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் எல்லாம் அந்த அந்த கட்சியை சேர்ந்தவர்களே நடத்தினார்கள்.

  19. கீ. வீரமணி – விஸ்வரூபம் பட பிரச்சனை –

    கமல் பல வகையில் புதுமையைப் புகுத்த எண்ணுபவர்; எனவே, எதிர்ப்புக் காட்டுவது பழைமையையே கெட்டியாகப் பிடித்துள்ள நம் நாட்டவருக்கு இயல்பேயாகும்.

    அவரது ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படத்திற்கு, இஸ்லாமிய சகோதரர்களையும், அவர்களது உணர்வுகளை சங்கடப்படுத்துவதுமான காட்சிகள் இருப்பதாகக் கூறி, ஆங்காங்கு இஸ்லாமிய சகோதரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக நமது அன்பான வேண்டுகோள்:

    இரு சாராரும் சந்தித்து தங்களது உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி, புரிந்து கொண்டு, நட்புறவும், பல்வேறு சமூகத்தவர்கள், கலைஞர்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படும்படிச் செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.

  20. “The Hindu” newspaper is out and out anti Hindu and the erstwhile editor has thoroughly spoiled the publication . Well meaning Hindus have stopped subscribing to this antihindu paper.

  21. ////// தமிழ் மாநில பா.ஜ.க காரர்களைக்காட்டிலும் காங்கிரஸ்காரர்கள் கூட தேவலாம் போல இருக்கிறது. தலைவர்களெல்லாம் தேர்தல் காலம், மோடி வரும் தருணங்கள் தவிர அமர்ந்திருக்கும் நாற்காலியைவிட்டு எழவே மாட்டார்கள் போல உள்ளது////////.

    இங்கே உங்களை போன்ற பிஜேபி மீது அக்கறை கொண்ட நல்லவர்கள் பலரும் கட்சி உருபடுவதர்கான நல்ல பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் அவை அந்த கட்சியின் தலைவர்களின் பார்வைக்கு சென்று சேர்ந்தால் நிச்சயம் அவர்கள் அவற்றை பரிசீலித்து நல்ல்வற்றை கண்டிப்பாக எடுத்துகொள்வார்கள்.. ஆனால் இந்த கருத்துக்களை அவர்கள் பார்ப்பதில்லை படிப்பதில்லை என்று நினைக்கிறேன். அதற்கு இந்த இணையதளத்தினர் கொஞ்சம் சிரமம் பாராமல் நம் கருத்துக்களை அவர்கள் பார்த்து படிக்குமாறு ஏதாகிலும் உருப்படியான ஏற்பாடு செய்யவேண்டும். ஆனால் இவர்களும் பிஜேபிகாரர்களை போலவே மந்தராசியாக இருக்கிறார்கள். களிமண்ணு மாதிரி இருக்கிறார்கள். என்ன செய்வதென்றே புரியவில்லை.

    ஆனால் கட்சி வளர்ப்பதில் எள்ளின் மூக்களவும் அக்கறை காட்டாத அந்த பிஜேபிகாரர்கள் பேசுவதை பாருங்கள். “2016ல் எங்களது ஆட்சிதான்” என்று மார்தட்டி கூறுகிறார்கள்.”ஒரு மந்திரமில்லே ஒரு மாயமில்லே இதோ இந்த பாம்புக்கும் அந்த கீரிக்கும் சண்டை வர வைக்க்போகிறேன்” என்று ஒரு கண்கட்டு வித்தைக்காரன் சொல்வதற்கும் “ஒரு newspaper இல்லே ஒரு tv சேனல் இல்லே அடுத்த ஆண்டில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சியை மலர செய்வோம் என்று “a party with difference”காரர்கள் சொல்வதற்கும் கொஞ்சமாகிலும் difference இருக்கிறதா?

  22. பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு இந்துக்கடவுள்களையும் இந்து கலாச்சாரத்தையும் இழிவு படுத்த ஒரு துணிச்சல் வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட மாற்று மதத்தினருக்கு இப்படி தைரியம் வரக்காரணம் இவர்கள் திராவிட கட்சிகளுடனும், தாழ்நிலை சமுதாயத்தை சேர்ந்தவர்களுடனும் சேர்ந்துகொண்டு தங்களுக்கு ஒரு பாதுகாப்படி தேடிக்கொண்டு எதிர்க்கிறார்கள். பெருவாரியான இந்துக்களிடம் வியாபாரம் செய்து கொண்டு அவர்களின் காசை அராம் ஒதுக்காமல் வாங்கி மடியை நிறப்பிகொண்டு இந்துக்களை அவமானம் செய்தால் இந்துக்கள் இவர்களிடம் வணிகம் செய்வதை நிருத்த வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்ரு சொல்லப்படுபவர்களிடம் இந்து சனாதன தர்மம் பர்றி விரிவாக விளக்கி சொல்லப்படவேண்டும். இன்றைக்கு பிராமணன் என்ரு யாரும் இல்லை. எல்லோருமே வைஷ்யர்கள் தான் வர்ணம் என்பதே தொழிலின் அடிப்படையில் தான் சமூகம் பிரிக்கப்பட்டது என்ற உண்மையை தெளிவாக விளக்க வேண்டும். உண்ணும் உணவு எப்படி குணத்தை தீர்மானிக்கிறது என்பதையும், புலனடக்கம் பற்றியும் அதனால் அவன் எப்படி பிராமனனாக முடியும் என்பதும் சொல்லப்பட வேண்டும்.

  23. அய்யா வெங்கடேசன் மெயில் அட்ரஸ் கிடைக்குமா

  24. வீரமணி – ரங்கராஜன் பாண்டே விவாதம் முக நூலில் பிளந்து கட்டிகொண்டிருக்கின்றது . வீரமணியின் திணரல்களும் பொய்களும் வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன.

    யு டியுப் லிங்க் இதோ:
    https://www.youtube.com/watch?v=bU0H077e4DA

  25. சோரம்போன வீரமணியின் பேட்டியை டிவி யில் பாதியிலிருந்துதான் பார்த்தேன். இப்போது இங்கே முழுமையாக பார்த்துவிட்டேன். எனது செயல கருத்துக்கள் கீழே:–

    1. //////நான் ஒரு வழக்கறிஞர்.—- I am a lawyer. ——–As a lawyer உங்களுக்கு இதை சொல்கிறேன்/////// என்று மூச்சுக்கு 300 தடவை தற்பெருமையோடு கூறிகிறார்.

    2. //////இந்துமதம் என்ற பெயர் அந்நியர்கள் கொடுத்த பெயர்./////// சரி அதனால் என்ன? நீங்கள் கூடத்தான் மேடையில் யாரோ இருவர் பெற்றெடுத்த குழந்தைக்கு பெயர் வைக்கிறீர்கள். அதனால் அந்த குழந்தைக்கு இழிவா? ஆம் என்றால் அந்த இழிவை எதற்கு செய்கிறீர்கள்?

    3. ‘மதம் ஒரு அபின்’ என்று ஒரு ரஷ்ய கம்யூனிஸ்ட்காரன் சொன்னதை ஏற்றுகொண்ட நீங்கள் இந்துமதம் மட்டும்தான் உன் கண்ணுக்கு தெரிகிறதா? Christianity ஒரு மதமே இல்லையா? இஸ்லாம் ஒரு மதமில்லையா? ஒரு டாக்டர் தனது patient இடம் diabetes க்கு இனிப்பு (=sweet ) கூடாது. அது ரொம்ப ஆபத்து என்று சொல்லிவிட்டு “”லட்டு வேண்டாம் . ஆனால் ஜாங்கிரி தப்பில்லை”” என்று சொல்வது எப்படி தவறோ அதேபோல மதம் நாட்டுக்கு ஆபத்து. இந்து மதம் வேண்டாம். ஆனால் இஸ்லாம் தப்பில்லை என்று கூறுவதும் தவறே. அவர் டாக்டர். நீ வக்கீல். ஆனால் இருவரும் தவறே.

    4. இந்துக்கள் தாலி அணிவது தவறென்றால் கிறிஸ்தவர்கள் திருமணத்தின்போது மோதிரம் அணிவதும் முஸ்லிம் பெண்கள் கருமணி அணிவதும் சரியா? பகுத்தறிவு சிங்கம் கருணாநிதியின் மனைவியும் துணைவியும் அணிந்துள்ள தாலிகளை அறுக்க உனக்கு துணிவிருக்கா? விரும்பி வந்தால் மட்டுமே அறுப்போம் என்றால் அறுப்பதில் கருணாநிதிக்கு விருப்பமில்லையா?

    5. //பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேர கண்டால் பாம்பை விட்டுவிடு பார்ப்பானை அடி என்று பெரியார் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படி சொல்லியதாக சுட்டிகாட்டினால் நான் பொறுப்பிலிருந்து விடுபடுகிறேன்.”” என்று வீர வசனம் பேசிய வீரமணி “”இந்துத்துவாவின் படையெடுப்பு”” என்ற நூலை அதற்கு ஆதாரமாக காட்டியபின்னரும் எதற்கு இன்னும் பொறுப்பிலிருந்து விலகவில்லை?

    6. //ஒப்புகொள்கிறேன். இல்லை ஒப்புக்கொள்ளவில்லை///// இவர் ஒரு வக்கீலாம். தெருவில் ஒரு பைத்தியகாரன் போல மாறி மாறி பேசுகிறான்.

    7. ////////திருமணத்தின் போது ஒரு வீட்டார் தாலி வேண்டும் என்று வருபுறுத்துகிரார்கள்.. இன்னொரு வீட்டார் தாலி வேண்டாம் என்கிறார்கள். அதனால் முதலில் தாலி கட்டிகொள்ளட்டும். அதன் பின்னர் அதை கழற்றி எரியட்டும்/////// என்று முடிவு செய்துதான் பகுத்தறிவு திருமணங்களில் தாலி கட்ட செய்கிறோம். தாலி வேண்டும் என்று முதலில் வருபுறுத்தியவர்கள் அதை கட்டியபின் தூக்கி எறிய விரும்புவார்களாக்கும். என்ன முட்டாள்தனமான வாதமடா இது! தூக்கி எறிய அனுமதிக்கும் அவர்கள் கட்ட சொல்லி வற்புருத்துவார்களா?

    8. //இது 5000 வருடங்களாக நடக்கும் கொடுமை. ஆங்கிலேயேன் (=கிறிஸ்தவன்) இந்த நாட்டிற்கு வந்தபின்புதான் நமக்கு கல்வி கற்கும் வாய்ப்பு வந்தது.////// அப்படியானால் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த வள்ளுவர், ஒவ்வையார் எல்லாம் தற்குறிகளா? வள்ளுவர் பிராமண குலத்தை சேர்ந்தவரா? ராமாயணத்தை எழுதியவரும் மகாபாரதத்தை எழுதியவரும் பிராமண குலத்தை சேர்ந்தவர்களா? அவர்கள் எப்படி கல்வி கற்றார்கள்?

    9. ஆங்கிலேயன் (=கிறிஸ்தவன்) தான் ஆங்கில கல்வியை கொண்டுவந்தான்//// தமிழன், தமிழ் இன தலைவன், தமிழ்நாடு என்று சொல்லிகொள்ளும் இதுகள் ஆங்கில கல்வி கொண்டுவந்தவனை பெருமையாக பேசுகிறான்.

    10. ////வெள்ளைகாரந்தான் நம் இல்ல பெண்கள் ரவிக்கை அணிய உதவினான்////// மேற்கத்திய நாட்டுக்காரி (=whitewomen ) ரவிக்கை அல்ல முழு ஆடையே இன்றி அம்ம்மணமாக தெருவிலும் கடற்கரையிலும் சினிமாவிலும் திரிகின்றனர். இந்த ஆள் அவற்றையெல்லாம் பார்த்ததே இல்லையா? அதற்கு உன் என்ன பதில்?

    11. //////நாட்டில் சாதியை வேரறுக்கும் வேலையைத்தான் திக செய்து கொண்டிருக்கிறது.//// ஆனால் திக வழிவந்த திமுக சட்டமன்ற தொகுதி தேர்தலில் ஒரு ஊரில் எந்த சாதிக்காரன் மெஜாரிட்டி ஆக இருக்கிறான் என்று பார்த்து அந்த ஜாதிக்காரனை வேட்பாளராக நிற்கவைப்பது சாதியை ஒழிக்கத்தானா?

    12. இந்துமதத்தில் சாதி என்றால் பிற மதத்தில் பிரிவு (=denomination ) என்று ஒன்று உள்ளது. பெயர்தான் வேறு வேறு. ஆனால் meaning ஒன்றுதான்.

    13. //////எதற்கெடுத்தாலும் உங்களுக்கு(=ரங்கராஜன் பாண்டே) church மற்றும் மசூதி தான் தெரிகிறதா?////////// அதே போல உன (=வீரமணி) கண்ணுக்கு எதற்கெடுத்தாலும் கோவில்தான் தெரிகிறதா?

    14. //////87% ஆக உள்ளவனைத்தான் நாங்கள் முதலில் கவனிக்க வேண்டும் பிறகுதான் 2% மற்றும் 14% உள்ளவனை கவனிக்கவேண்டும்./////// பிஜேபி மக்களை பிரித்து வைக்கும் divisive policy கொண்ட கட்சி என்று சர்வ சதா காலமும் பேசிக்கொண்டு மதமே வேண்டாம் என்று கூறும் உனது கட்சி அனைத்து மதத்தங்களையும் விமர்சனம் செய்யாமல் அதில் percentage கணக்கு பார்க்கும் நீ மட்டும் ஒரு divisive policy கொண்டவந்தானே?

    15. ///ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் உடனே வேறு மதங்களை பற்றி கேள்வி கேட்டு இது போல திசை திருப்பும் வேலையெல்லாம் திக காரர்களிடம் நடக்காது. அதிலும் என்னிடம் நடக்கவே நடக்காது////// வாய் கிழிய மதசார்பின்மை பேசும் ஒரு மத்ததை மட்டும்தான் உனக்கு இழிவாக பேச தெரியும். உன் பத்திரிக்கை ”விடுதலை” யை பார்த்தாலே தெரியுமே! கோவிலில் திருடு போனால் உடனே “கோவிலில் பூட்டு உடைத்து திருட்டு. அதை சாமி வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்” என்று செய்தி போடுகிறீர்கள். ஆனால் மசூதியில் அல்லது சர்ச்சில் திருடு போனால் அதை செய்தியாக இதுவரை போட்டதே இல்லையே! திருப்பதியில் பஸ் கவிழ்ந்தால் உடனே “திருப்பதியில் பஸ் கவிழ்ந்தது – திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நிகழுமடா ஆமாம் பஸ் க்கு ஒரு திருப்பம் நிகழ்ந்தது””” என்று கிண்டலாக செய்தி போடும் நீ மெக்காவில் ஒரு முறை ”அல்லாவு அக்பர்” என்று கூறிக்கொண்டே stampede னால் நூற்றுக்கனக்கானோர் மாண்டனர். அதை கேலியாக செய்தி வெளியிட்டதுண்டா? அப்படி ”விடுதலையில்” செய்தி வந்த மறுநாளே உன் குடும்பமும் காலி உன் அச்சகமும் காலி (பிரான்ஸ் நாட்டு செய்தி படித்தாயா இல்லையா?)

    16. //////சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது சட்ட தீர்ப்பே அன்றி நீதி தீர்ப்பு அல்ல////// சட்டத்தை அம்பேத்கர் தானே இயற்றினார்? அவரிடம் நீதி இல்லையா? தர்மம் இல்லையா? அப்படியானால் அவர் இயற்றிய சட்டம் அனைத்தும் தவறானதா? அப்படிப்பட்ட தவறான சட்டங்களைத்தான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பாக சொல்கிறதா? நீயும் அவற்றை படித்துத்தானே வக்கீலாக உள்ளாய்?

    17. ////இந்து மதம்தானே எங்களை சூத்திரன் என்று இழிவு படுத்துகிறது ///// இஸ்லாம் கூட நம்மை (உன்னையும் சேர்த்துதான்) காபிர் என்று கூறுகிறார்கள். குரான் கூறுகிறது. “”””வெகு விரைவில் நாம் “நம்பிக்கை இல்லாதவர்கள் (=காபிர்) இதயத்தில் திகிலை உண்டாக்குவோம் (ஆதாரம்:—-குரான் அத்தியாயம் 3 வசனம் 151) மேலும்,
    “””பின் அவர்கள் கழுத்தை நொறுக்குவோம். அவர்களின் அனைத்து விரல்களையும் நொறுக்குவோம்””” (ஆதாரம்:—-குர் ஆன் அத்தியாயம் 8 வசனம் 12) உன்னை சூத்திரன் என்று இழிவு படுத்திவிட்டதாக கதறுகிறாயே. அவன்(=முஸ்லிம்) உன் கழுத்தையும் கை விரல்களையும் அறுக்க போகிரானாமே! . இது சந்தோஷமாக உள்ளதா?

    18. /////சில கோவில்களை ”நிறுவனம்” போல நடத்துகிறார்கள்.///// மதமே கூடாது என்று கூறிக்கொண்டு பெரியார் திடலில் பரிசுத்த ஆவிகாரர்களுக்கு கூட்டம் நடத்த (பணம் வாங்கிகொண்டு) அனுமதி தருவதேன்? ஆனால் மேற்படி பேட்டியில் பரி சுத்த ஆவி மூலம் குழந்தை (=இயேசு) உருவாகிறது என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுகொண்டதில்லை என்று கூறுகிறார்.ஆனால் சொலவதொன்று செய்வதொன்று.

  26. மாதொருபாகன் நாவல் பற்றி பெருமாள் முருகனின் கூற்றுக்களை விமர்சானம் செய்ய தகுதி, ஆய்வு, கள-அனுபவம் உடையவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதை வீடியோ ஆவணப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. முதலில் இதைப்பார்க்கவும். முற்போக்கு மாபியாவின் கூச்சலில் உண்மை இறந்துவிடாது..

    https://www.karikkuruvi.com/2015_04_01_archive.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *