ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்

ramanujacharyaயமையின், போலித் தனத்தின் திருவுருவாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மு.கருணாநிதி என்ற கிழவர் திரைக்கதை எழுதி, குட்டி பத்மினி போன்ற ஜோக்கர்களின் இயக்கத்தில் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் வருகிறது என்பது தமிழ் நாட்டின் சாபக் கேடு. இதற்குப் பதில் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கலாம். இந்த அவலத்தை ஆகா பாரீர் என்று அட்டைப் படம் போட்டு கல்கி வார இதழ் அறிவிப்பது சீரழிவு எந்த அளவு முற்றியிருக்கிறது என்பதன் அடையாளம்.

1989ல் ராமானுஜாசாரியார் என்ற தமிழ்த் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்திருக்கிறது. தூர்தர்ஷனில் இந்தப் படத்தை அப்போதே நான் பார்த்திருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கராசார்யா மற்றும் இன்னும் சில விருது பெற்ற திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற கலைப்பட இயக்குனர் ஜி.வி.ஐயர் இந்தப் படத்தின் இயக்குனர். மதிப்புமிக்க தமிழ், சம்ஸ்கிருத, வைணவ அறிஞர் குமாரவாடி ராமானுஜாசாரியார் வசனம் எழுதியிருக்கிறார். படம் யூ ட்யூபிலேயே கிடைக்கிறது –

இந்த ஜோக்கர்கள் நாலு ஜன்மம் எடுத்தால் கூட ஸ்ரீ ராமானுஜரைக் குறித்து இதற்கு ஈடான, கலாபூர்வமான, ஆதாரபூர்வமான அழகான திரைப்படத்தை எடுக்க முடியாது.

ஸ்ரீராமானுஜர் வாழ்வின் முக்கியமான தருணங்கள் அனைத்தையும் அருமையாகத் தொட்டுச் செல்லும் திரைக்கதை. இளவயது ராமானுஜராக நடிப்பவரின் களையான முகவெட்டும், மிதமான நடிப்பும் அற்புதமாக இருக்கும், முதிய ராமானுஜரைப் பார்த்தால், ஏதோ ஒரு வைணவ மடத்தின் ஜீயர் சுவாமிகளே வேடமிட்டு நடிப்பது போலத் தோன்றும்.

அக்ரகாரங்களையும், கோயில்களையும், காட்சிப் படுத்தியுள்ள விதமும் சரி, வேத மந்திரங்களையும் சுலோகங்களையும், ஆழ்வார் பாசுரங்களையும் மிதமான, உறுத்தாத இசையுடன் படம் நெடுகிலும் பயன்படுத்தியுள்ள பாங்கும் சரி, இந்தப் படத்தைப் பார்ப்பதே ஒரு தியான அனுபவம் போலிருக்கும்.. ஒரு காட்சியில் பிரம்ம சூத்ர பாஷ்யத்தின் முதல் சில வரிகளை 5 நிமிடங்களுக்கு சம்ஸ்கிருதத்திலேயே ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு கூறுவதாக வரும். அத்தகைய இடங்களில் அவற்றை மொழிபெயர்த்து சப் டைட்டில்களாக போட்டிருக்கலாம், அது செய்யப் படவில்லை என்பது மட்டுமே ஒரு குறை.

ஒரு புதிய தொலைக் காட்சித் தொடரை எடுப்பதற்குப் பதிலாக, இந்தத் திரைப்படத்தையே தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பலாம்.

(ஜடாயு ஃபேஸ்புக்கில் எழுதியது)

54 Replies to “ராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்”

  1. கருணாநிதி என்ன சொல்கிறார் என்பதைப் பார்த்து சொல்வதே முறை. மாற்றுக் கருத்துக்களை சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்வதுதான் முறை. பகுத்தறிவாளர் நோக்கில் ராமானுஜர் எப்படி சொல்கிறார் எனப்பார்க்கலாம்

  2. karunanithi oru hindu viruthi enpath ellorukkum therium. Avarai vaithu entha T.V serialai thayarippathu hindukkalai kevalapatuthuvath pola ullathu

    Jagadeesan

  3. ஜடாயு என்ற முகநூலாரிடமிருந்து எப்படி எதிர்வினை வருமென்று எதிர்பார்க்கலாமோ அப்படி வருவதில் வியப்பேது? . எனக்குத்தோன்றுவது என்னவென்றால், இத்தூடணைக்கும் வெறுப்புக்கும் தொடக்கப்புள்ளி பார்ப்பனர் ஜாதி மக்கள் மீது சமூகத்தில் வெறுப்பைத்தூண்டவைக்கும் வசனங்களும் காட்சிகளும் வந்துவிடுமோ என்ற பயந்தான். இராமானுஜர் என்றால், பார்ப்பனர்களின் பழங்கால விடாப்பிடித்தனமான வாழ்கை முறை சொல்லிக்காட்டப்படத்தான் செய்யும்; தவிர்க்கவியலாது.

    ஜடாயு பார்க்கத்தவறிய கருத்தை இங்கொருவர் முன்வைத்துவிட்டார்:

    அதாவது, திரைப்படம் வந்து அதனைப்பார்த்தபின்பே சொல்லமுடியும்.

    ஆனால் ஜடாயுவின் கருத்து கருநாநிதிக்குத் தகுதியில்லையென்பதும் ஆகும். அதற்கும் அவர் பதில் வைத்துவிட்டார். அதை சற்றுவிரிவுபடுத்துவது தகும்..

    இராமானுஜர் ஒரு மதச்சித்தாந்தை உருவாக்கியவர். அது நன்கு வளர்ந்து தமிழகத்தில் அதற்குவெளியிலும் வியாபித்துள்ளது. அம்மதக்காரர்களின் பார்வையில் அவர் பெருமாளில் அவதாரமும் கூட. அவரைத்தொழுவது வைணவர்கள் கடமை. இப்படியாக மதம் பார்க்கிறது. அவ்வைணவ நம்பிக்கையில் இங்கு எவரும் தலையிடவில்லை. கருநாநிதியும் தலையிட மாட்டார் கண்டிப்பாக.

    இன்னொரு தமிழகப்பார்வை இராமானுஜர் ஒரு புரட்சிக்காரர். அப்படிப்பட்ட புரட்சியைக் இக்காலத்தில் செய்தாலே ஜாதிக்கலவரங்கள் உண்டாகி தாழ்த்தப்பட்டோர் கொல்லப்படுகிறார்கள். அக்காலத்தில் எப்படியிருந்திருக்கும்? இக்காலத்தைப்போல அன்று ஜாதி இந்துக்கள் என்றழைக்கப்படும் இடைநில ஜாதியினரிடம் அவர் போராடவேண்டிய அவசியமில்லை. பார்ப்பன ஜாதியாரிடமே போராடி, அவர்களில் பலரின் ஒத்துழைப்பால் (அனைவரும் இல்லை) தம்முயிருக்கும் பங்கம் வருவதையும் பொருட்படுத்தாமல் கீழ்ஜாதி மக்களுக்கு மத நீதியைக்கொண்டுவர, அது சமூக நீதியாகவும் தொடர்ந்து விரிந்தது. அவர் விட்ட பணியைப் பொத்தென்று கீழே போட்டுவிட்டு, இடைநிலை ஜாதிக்காரர்களோடு சேர்ந்து அம்மக்களை மிதித்தபடியாலே அம்மக்கள் கிருத்துவத்துக்கும் இசுலாத்துக்கும் ஓடினார். அல்லது அநாதையாக நின்றார். பிறர் எடுத்துக்கொண்டார்.

    பார்ப்பனர்கள் பலபல எழுதிக்கொண்டு, அதை பார்பனரல்லா பிறருக்குக் கொடுக்ககூடாது. இந்துமதம் என்பது நமக்குள்ளேதான். மற்றவர்கள் வந்து போகலாம் அவ்வளவே என்ற திமிரான கொள்கை கொண்டு வாழ்ந்ததைக் கேள்விக்குள்ளாக்கி தகர்த்தெறியும் புரட்சியைச்செய்தார்.

    இது மாபெரும் புரட்சியாக இன்றைய காலகட்டத்தில் நின்றுபார்க்கும் போது தெளிவாகும். அப்படிப்பட்ட புரட்சிக்காரரைக் கண்டிப்பாக மாற்றுப்பார்வையாளர் போற்றத்தான் செய்வார்கள். போற்ற வேண்டும் இல்லாவிட்டால் அவரும்தான் சோரம்போனாரெனலாம். அப்படிப்பட்ட புரட்சிக்காரரைப் போற்ற கருநாநிதி முனையும்போது அதைக் கேவலப்படுத்தி பேசும் நோக்கம்தானென்ன‌?

    ஜடாயுவுக்கு இராமனுஜரைத் தெரிந்ததைவிட கருநாநிதிக்குத் தெரிந்தது நிறைய. கருநாநிதி ஒரு பொது மேடையில் இராமானுஜரைப்பற்றி ஆற்றிய பேருரை இங்குள்ளவர்கள் படித்தால் வாயடைத்துப்போவார்கள். அவ்வளவு சிறப்பான சிலிர்க்கவைக்கும் உரை. பல்லாண்டுகளுக்கு முன், ஆழ்வார் ஆராய்ச்சி மையம் நடாத்திய ஆண்டுவிழாவில் அவராற்றிய உரையே அது அது பலவிடங்களில் இன்றும் படிக்கக்கிடைக்கிறது. இம்மையம் ஆண்டுதோறும் வைணவ விழா நடாத்தி அதில் ஒரு சிறப்புப் பேச்சாளரின் பேருரையைக்கேட்க வைக்கும். அப்படி வந்தவர்தான் கருநாநிதி.

    குமாரவாடி இராமானுஜாச்சாரியாரும், ஜீ வி அய்யரும் எடுத்தப்படத்தை ஜடாயு சொல்லித்தான் பலருக்கும் தெரிய வரும். ஆனால் அதையே கருநாநிதியை வைத்துச்செய்யும் போது தமிழகத்தில் எல்லா மக்களும் ஆர்வமடைவர். இராமானுஜர் புகழோங்கும். வியாபிக்கும்.

    அதற்கு என் முன்னோடிய நன்றிகள் அவருக்கு.

  4. காட்டாட்சி நடத்துகின்ற
    கயவர்தம் அவைபுகுந்து
    கால் பிடித்துக் கைபிடித்து
    வால்பிடித்து
    எதுகை மோனையில் எதையெதையோ கழிந்து
    நாள்தோறும் இழிச்சாவு சாகும்
    கவிதைப் புழுவோ –
    வேல்பிடித்த அரக்கர் தமை
    வில்பிடித்து வீழ்த்திய
    வேதநாயகன் சரிதமும்,
    கோல்பிடித்துக் கான்சென்று
    ஆனிரை மேய்த்த எம் ஆதியின்
    நூல்பிடித்து உரையெழுதி
    நுண்ணிய நூற்பொருள் கண்டு
    சால்பிடித்து உழுதிட்ட
    சான்றாண்மை ஞான உழவனின் சரிதமும்
    கதைக்கப் புகுந்தது?
    கலிகாலம்!

    மறைந்த கவிஞர் வாலி அவதார புருஷன், கிருஷ்ண சரிதம், ராமானுஜ காவியம் என்ற பெயர்களில் விகடனில் எழுதியவைகளைக் குறித்து நான் 2011 செப்டம்பரில் ஒரு கூகிள் குழுமத்தில் எழுதியது இது.

    ஸ்ரீராமானுஜர் பற்றி கருணாநிதி திரைக்கதை எழுதுவதை நான் கண்டனம் செய்வதற்குக் காரணம் பார்ப்பனீயமும், சாதிய உணர்வும் என்று விமர்சிப்பவர்களுக்காக இந்த சான்று. ஏன் வைணவர்கள் மட்டும் தான் ராமானுஜரைப் பற்றி எழுதவேண்டுமா என்று கேட்பவர்களுக்காகவும். மேலும், எனது பதிவில், அத் தொடரை இயக்கப் போகும் குட்டி பத்மினியையும் “ஜோக்கர்” என்று நான் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் கவனிக்க வேண்டும்.

    மேற்கண்ட எதிர்வினைக்குத் தூண்டுதல், அந்த குழுமத்தில் @Kris Srikanth கொடுத்திருந்த கீழ்க்கண்ட கவிதை – தளைதட்டாமல் சீராக எழுதப் பட்ட மரபார்ந்த வசைக்கவிதை 🙂 ஒரு ஸ்ரீவைஷ்ணவ இதழில் இது வந்திருந்தது என்ற குறிப்புடன் ஸ்ரீகாந்த் இதைக் கொடுத்திருந்தார்.

    கற்பூர நறுமணத்தை
    கர்த்தபம் அறியதென்பர்
    கற்பெனும் மாண்பு தன்னை
    வேசிகள் உணரமாட்டார்
    அற்பராம் வாலிபோன்ற
    புன்கவியாளரெல்லாம்
    சற்குண கடலிராமா
    நுசர்குணம் அறிவர்தாமோ?

    கருக்குழி வாசம் நீக்கும்
    நான்மறைப் பொருளுரைத்து
    திருத்தினான் எங்கள் ராமா
    நுசனிந்த ஞாலம் தன்னை
    திரைப்படம் தன்னில் தோன்றும்
    தசைத்தொழில் காட்சிகட்கு
    உருப்படாக் கவிதை செய்யும்
    வாலி ஈதறிவானோதான்?

    தெள்ளியர் என்று தம்மைத்
    துணிவுடன் நினைத்துக் கொண்டு
    கள்ளத்தால் உலகோர் தம்மை
    கவிதையால் மயங்கச் செய்து
    உள்ளதைக் கூறிடாமல்
    உண்மையை மறைத்து வைக்கும்
    கள்வராம் வாலி போன்றோர்
    உருப்படமாட்டார் தாமே

    பெண்ணுடல் புகழ்வதற்கும்
    புலனின்பம் சொல்வதற்கும்
    எண்ணிலாக் கவிதை செய்து
    ‘புகழ்’ பெரும் வாலி இன்று
    எண்ணரும் ஏற்றம் கொண்ட
    எதிராசர் பற்றிக் கூறல்
    கண்ணிலான் ஓவியத்தைப்
    புகழ்வது போலு மன்றே!

    சீர்பெரும் வைணவத்தைச்
    சிதைத்திட எண்ணம கொண்டு
    சோரர்கள் பேசுகின்ற
    பேச்செலாம் அழிவதற்கு
    கார்வண்ண னடியாரெல்லாம்
    கண்டனக் கணை தொடுக்க
    வாரியாய் கிளம்பி விட்டார்
    வாலிக்கு எச்சரிக்கை!

    இன்னும் நான் எடுத்துச் சொல்வேன்
    வாலி! நீ தாங்க மாட்டாய்
    என்னும் நல்லெண்ணத்தாலே
    இத்துடன் விட்டுவிட்டேன்
    மன்பெருமானார் கொள்கை
    அழித்திட முயலுகின்ற
    உன்னைப்போன்றோரின் எண்ணம்
    என்றுமே நிறைவேறாதே!

    – சே. பத்மநாபன் B.A.

  5. அன்பின் ஸ்ரீ ஜடாயு

    அன்பர் கருணாநிதி அவர்கள் உடையவர் ராமானுஜரைப் பற்றி கதை வசனம் எழுதுகிறார்.

    சாத்தான் வேதம் ஓத விழைகிறது என்ற படிக்கு சம்சயம் என்னவோ சரி தான்.

    வாழ்நாள் முழுதும் அரசியலிலும் பொதுவாழ்விலும் நேர்மை என்பதன் சுவடு கூட தன்மீது படாதபடி ஒரு வாழ்வும் …………. போலி மொழியறிவு………… போலி மொழிப்பற்று……….போலி மதச்சார்பின்மை ………. போலி ஜாதிமறுப்பு……………..போன்று போலியாகவே வாழ்வைக்கழித்த ஒரு அன்பர் எழுதவிருக்கும் கதை வசனத்தின் மீது……………. அவர்தம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகிய போலித்தனம் இருக்கக்கூடும் என்று நினைப்பதில் வியப்பே இல்லை.

    அப்படியே இந்த த்ராவிடப் போலி அன்பர் எழுத விழையும் கதை வசனம் இருக்கவும் கூடும்.

    பின்னிட்டும் யார் கண்டது? சாலப்பிரம்பு போல் கடைசீ க்ஷணங்களில் பகவத் க்ருபை கிடைத்து நல்லது எதையாவது எழுதவும் விழைந்தால்……………

    வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்

  6. நன்றி BS
    ஜடாயு அவர்களின் பார்வைக்கு
    கருணாநிதி குறளோவியம் எழுதினார், தொல்காப்பியம், சங்க இலக்கியம் ,
    பல நாவல்கள் ,சிறுகதைகள் எழுதியுள்ளார். அவர் அளவுக்கு இலக்கிய ஆர்வம்
    கொண்ட அரசியல்வாதி இங்கு இல்லை. பொன்னர் சங்கர் நாவலாகவும், திரைப்படமாகவும் வந்தது. சிலப்பதிகாரத்தை பூம்புகார் என்னும் பெயரில் படமாக
    எடுத்தார். அவர் புராணங்களில் உள்ள குறைகளை சொல்வார். ராமாநுஜர் வாழ்க்கையை சிறப்பாக எழுதுவார். பொறுத்திருங்கள்.

  7. இவ்வுலகில் வாழ்ந்த ஒரு மகானுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு உரிய பின்புலம் உள்ளவர்கள் யார் எழுதினாலும் கவலையில்லை. ஆனால் விவரம் தெரிந்த வயது முதல் இந்து மத எதிர்ப்பு, பிராமண துவேஷம், ஒருதலை பட்சமான கற்பனை ‘திராவிட’ இன வரலாறு என்றெல்லாம் பேசி, நான்கு வருணத்தாரில் பிராமணர் நீங்க ஏனையோர் அனைவரையும் ஒரே தட்டில் வைத்து க்ஷத்திரியர், வைசியர் உட்பட அனைவரையும் ஒரே தட்டில் வைத்து, அந்த பிரிவினை விளையாட்டில் நல்ல அறுவடை செய்து எப்போதும் வெறுப்பை உமிழும் சொற்களால் மற்றவர் மனங்களைப் புண்படுத்துபவர் கருணாநிதி. இவர் விசிஷ்டாத்வைதம் எனும் வேதாந்த பிரிவைத் தோற்றுவித்த இராமானுஜர் எனும் பெரியவரை, இவர் கண்ணோட்டத்தின்படி அவரை ஒரு பிராமண எதிரி என்பதுபோல் சித்தரித்து எழுதுவதை எங்ஙனம் எதிர்கொள்ள முடியும். அவர் எழுதிய பிறகு அந்த கொடுமையைப் பார்த்துவிட்டுத்தான் விமரிசனம் செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை. எடுத்த மாத்திரத்தில் நம் கருத்தைச் சொல்ல ஜடாயுவுக்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற அனைவருக்கும் உரிமை உண்டு. எதில் எவருக்கு அதிகம் ஈடுபாடு என்பதறிந்து அவரிடம் அதற்குரிய பொறுப்பைக் கொடுப்பதே அறிவுடைமை. காசு சம்பாதிக்க எதை வேண்டுமானாலும், எவரைக் கொண்டு வேண்டுமானாலும் செய்யவைத்து காசு பார்க்கும் குட்டி பத்மினி போன்றோர் இந்த விஷயங்களில் அக்கறை காட்டமாட்டார்கள் என்பதும் தெரியும்.

  8. ஜடாயுவின் மறுமொழியில் தெரிவது மீண்டும் அதே: அதாவது இந்துமதத்தையும் அதன் மஹா புருஷர்களைப்பற்றியும் எங்களைத் தவிர பிறர் பேசவோ எழுதவோ கூடாது. இஃது இன்றைய புதிய சிந்தனை. அன்றில்லை. புதிய தலைமுறைக்கு என்ன மிரட்டல் விடப்பட்டதோ அஃதே இப்போதும் செய்ய வாய்ப்பு வரலாமென்பது குட்டி பத்மினியை ஜோக்கர் என இழிவு படுத்தியதிலிருந்து தெரிகிறது. இந்துமதத்தை மீண்டும் பார்ப்பன மதமாக்கும் சதியைச்செய்ய கிளம்பிவிட்டார்கள் இவர்கள்.

    வாலியைப்பற்றி கவிதை எழுதிய பத்மநாபன் பி ஏ இந்துமதத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் வாலியின் நெடுங்கவிதை என்றுமே செய்துகொண்டிருக்கும். யார் யாரை விமர்சிக்கவேண்டுமென்ற தகுதியே இல்லாமல் போயிற்று இன்று 🙁

    இராமாயணமும் மஹாபாரதமும் தொலைக்காட்சித்தொடர்களாக வந்துகொண்டிருக்கின்றன. அவை இந்துக்களுக்கு மட்டுமே காட்டப்படவில்லை; இந்துக்கள் அல்லாதோரும் சேர்ந்தே பார்க்கின்றார்கள். இந்தோனிசியாவில் இராமாயணம் ஒரு மதக்காப்பியமன்று; அஃது அவர்தம் தேசியக்காப்பியம். அங்கு போய் எங்கள் மதத்தை முசுலீம்கள் கொள்ளக்கூடாது என்று பேசுவார்களா இவர்கள்?

    இராமானுஜர் தொலைக்காட்சித்தொடர் ஜடாயு போன்றோருக்காக எடுக்கப்படவில்லை. தயை செய்து புரிந்து கொள்ளுங்கள்; அவர்களுக்கு அவர் சொன்னதுபோல ஜீவி அய்யரின் இராமானுஜரும் அதே அய்யரின் ஆதிசங்கரர் திரைப்படங்களும் இருக்கின்றன. மற்றவர்களுக்காக இராமனுஜரி தொலைக்காட்சித்தொடர் என்று விட்டுவிடுவதுதானே? ஏன் இழித்துரைக்கிறார்கள்? எடுப்போரை ஜோக்கர்கள் என்று திட்டுகிறார்கள்?

    (BTW, G. V. Iyer was not a conservative. He wasn’t an Iyer in the sense any other Iyer is i.e he never minded the tag. He was a left leaning progressive thinker. He blazed a new trail in Kannada cineme. His films included many other surprising ones. Hs objective in creating films like Ramanujar or Adi Sankarar was not Hindu religious fervor or seva; but an outcome of his ambition to record on celluloid the historical currents that created these two men: history, not religion was in his purview. Being a great director, he brought to life the hoary past in the most endearing way, which caught the imagination of Jadayu here. But Jadayu attempts to create a false impression about G V Iyer doing service to Hindus. It is motivated impression 🙂 I used past tense to G V Iyer because he is no more.)

    இராமானுஜர் என்றால் அது தமிழக மக்களின் வரலாற்று நாயகனாகவும் பார்க்கவேண்டுமென்று தெளிவாக எடுத்துச்சொல்லியபின்னர் வேறென்ன விமர்சனம் வேண்டிக்கிடக்கிறது?

    சிலவேளைகளில் இசுலாமிய மற்றும் கிருத்துவ நண்பர்களோடு உரையாடும்போது இராமனுஜரைப்பற்றி விவரிக்கையில் அவர்கள் // அட இப்படி ஓர் ஆள் இருந்திருக்கிறாரா? இவ்வளவு செயல்கள் நடாத்தியிருக்கிறாரே! நம்பவே முடியவில்லையே?? என்றுதான் வியந்தார்கள். (முதலில் இந்துக்கள் பலருக்கே சரியாகத் தெரியாது என்பதும் கசப்பான‌ உண்மை) இப்படிப்பட்ட இராமானுஜரைப்பற்றி தொலைக்காட்சித்தொடரை பலரைப்பார்க்கவைக்கும் டெகினிக்குக்களை உபாயங்களாக் கொண்டு (அஃதிலொன்றுதான் கருநாநிதியை வசனம் எழதச்சொன்னது; தப்பு. அவரே விரும்பி கேட்டுக்கொண்டதாக செய்தி) வைத்து தொடரை எடுத்தால், அதைத் தடுக்கக் காரணம், இராமானுஜர் எல்லோருக்கும் தெரிந்துவிடுவாரோ என்பதா? தடுக்கும் ஆசை நிறைவேற வேண்டுமானால் மிரட்டல் விடுங்கள் தொலைக்காட்சிக்கு.

    இல்ல…அவர் இந்துத்துரோஹி என்று சொல்லும் ஜெகதீசன் போன்றோர் கருநாநிதியின் உரையைப் படித்தால், கருநாநிதிக்கு இராமானுஜர் மேலுள்ள ஈடுபாடு நமக்கில்லையே என்ற வெட்க உணர்வு பற்றிக்கொள்ளும் !

  9. ஜடாயு “கயமையின், போலித் தனத்தின் திருவுருவாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மு.கருணாநிதி”
    அதென்ன கயவனுக்குத்திருவுரு. எப்படி இருக்கமுடியும்.

  10. திரு ஜயாயு அவர்களுக்கு

    இந்த அற்புதமான திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். பலருக்கும் உங்கள் முகநூல் மூலமாகவும் தமிழ் ஹிந்து இணையம் மூலமாகவும் இதனை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும், வெயில் காலத்தில் தான் நிழலின் அருமை புரியும் என்னும் அளவிற்கு இத்தகைய படங்களின் அருமையை தமிழகம் புரிந்து கொள்ளச் செய்யப் போகும் கருணாநிதிக்கும் நன்றி.

    யார் எப்படி பல்டி அடித்து குட்டிகரணம் போட்டு வக்காலத்து வாங்கினாலும் விஷயம் ரொம்ப சிம்பிள். கருணாநிதி தான் அதிகாரத்தில் இருப்பதற்காகவும் பொருள் ஈடுவதர்க்காகவும் எதையும் செய்யத் துணிந்தவர். நாளை பார்பனர்களை அனுசரித்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அவர் அதையும் திறம்பட செய்வார். நிற்க!

    இப்போது ஹிந்துத்துவத்த்தை விமர்சனம் செய்து அரசியல் செய்ய முடியாது என்பதனையும் ஹிந்துத்துவம் தமிழர்களிடையே தங்கள் தொன்மை தத்துவமாக ஏற்றுக் கொள்ளப் பட்டு வருவதையும் உணர்ந்த கருணாநிதி எங்கே தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து விடுவார்களோ என்கின்ற பயம் வருவது யதார்த்தமே. இது கருணாநிதியின் பயம். அதற்காக அவர் தனது வசனங்களில் சமஸ்க்ரிதத்திர்க்கு மாற்றாக வைக்கப் பட்ட திராவிட வேத தமிழ் பாணியை கையில் எடுப்பார். இது ஒரு வகையில் தென்கலை வடகலை உட்பூசலை ஊதிப் பெருசு படுத்துவது போல என வைத்துக் கொள்ளுங்களேன்?

    திராவிட வேதமே தமிழ் மறை என்ற உண்மையை தன்னக்கே உரிய புனசுர்ருடிற்குள் தமிழர்கள் ரசிக்கும் வண்ணம் சுருட்டிக் கொடுப்பார். ஆரிய பார்பநீயர்கள் வேதத்தை தமிழ் ஆலயங்களுக்குள் புகுத்தி விட்டார்கள் என சொன்னாலும் சொல்லுவார்.

    எல்லா சாதியினரிடம் இருந்தும் தோன்றிய ஆழ்வார்களை பார்பநீயர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என சாத்தான் வேதம் ஓதுவார். இதனால் தான் ஆலயங்கள் ஆர்ப்பாட்டக் காரர்களில் கூடாரம் ஆகி விடக் கூடாது என நான் சொல்லுவேன் என சப்பைக் கட்டுவார்.

    மதில் மீது ஏறி ராமனுஜர் உரைத்த மந்திரத்தையும் அதனை பிராமணர் தடுத்ததையும் பார்த்தீர்களா என கூக்குரல் இடுவார். ஆலயத்தில் இருந்து இந்த விஷமிகளை விரட்ட வேண்டும் என தமிழர்கள் எண்ணம் கொள்ளும் வகையில் தான் வசனம் வைப்பார். இது சத்தியம். இதனை கண்டு பிராமணர்களுக்கும் பயம். உண்மை.

    ஆனால் பிராமணர்கள் பயத்திற்கும் கருணாநிதி பயத்திற்கும் வித்யாசம் உண்டு. கருணாநிதியின் பயம் ஆட்சி அதிகாரம் என்னும் சுயநலம் சார்ந்தது. பிராமணர்களின் பயம் மாலிக் கப்பூரின் படை எடுப்பின் பொது திருவரங்க ஆலய பக்தர்கள் கொண்ட பயத்திற்கு இணையானது.

  11. ஸ்ரீ ராமானுஜரைப்பற்றி கருணாநிதி எழுதக்கூடாது என்பதைவிட எழுதுவதற்கு யோக்கியதை இல்லாதவர் என்பதே இங்கே கட்டுரையாளராக எனக்குப்புரிகிறது. பாரததேசத்தின் தத்துவ ஆளுமைகளுல் ஒருவர் ஸ்ரீ ராமானுஜர் அவரைப்பற்றி எழுதுவதற்கு அவரது பக்தி ஞானம் இவற்றிற்கெல்லாம் சம்பந்தம் இல்லாத ஒரு புல்லர் அவரது வாழ்வை தொலைக்காட்ச்சித்தொடராக எழுதுவது அபத்தம். பாரத நாட்டின் புரட்சியாளர் என்று மஹாத்மா காந்தி அடிகளால் பாராட்டப்பட்டதால் ஸ்ரீ ராமானுஜரையும் ஈரோட்டு கருவாட்டு ராமசாமியுடன் சேர்க்க முயல்கிறாறா. இல்லை திராவிடம் திராவிடம் என்றுசொல்லி கட்சி நடத்திக்கோடிகோடி குவித்துவிட்ட பாவம் தொலைய ஸ்ரீ ராமானுஜரின் பாதத்தினை சரணடைகிறாராரா திருக்குவளை முத்துவேல் கருணாநிதி. எல்லாம் அந்த பரந்தாமனுக்குத்தான் வெளிச்சம். என்னைப்போன்ற சைவர்கள் கூட கருணா நிதி எழுதிய நாடகத்தினைப்பார்க்கமாட்டோம். ஸ்ரீரங்க நாதனை பீரங்கிவைத்து பிளக்க சொன்ன கருணானிதியின் நாடகத்தைப்பார்க்க ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பித்துப்பிடித்துவிட்டதா? புத்திதான் கெட்டுவிட்டதா?

  12. பேரன்பிற்குரிய ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவரகள் சமூஹத்திற்கு……………..

    ஸ்தோத்திரம். ஏசப்பருக்காக தாங்கள் சில்சாமுக்கு கொடுத்த வாக்குதத்தத்தை நிறைவேற்ற விழைவது துலங்குகிறது.

    உங்களது பொய்ப்பரப்புரைகளை உங்களது வாசகங்களாலேயே தோலுரிக்க முடியும்.

    பாம்பின கால் பாம்பறியும். போலியாகவே தங்களை ஒவ்வொரு அவதாரத்திலும் முன்னிறுத்திய தாங்கள் இன்னொரு போலியான அன்பர் கருணாநிதி மீது கரிசனம் காட்ட விழைவதில் வியப்பில்லை.

    \\ இத்தூடணைக்கும் வெறுப்புக்கும் தொடக்கப்புள்ளி பார்ப்பனர் ஜாதி மக்கள் மீது சமூகத்தில் வெறுப்பைத்தூண்டவைக்கும் வசனங்களும் காட்சிகளும் வந்துவிடுமோ என்ற பயந்தான். \\\ அதாவது, திரைப்படம் வந்து அதனைப்பார்த்தபின்பே சொல்லமுடியும். \\ ஆனால் ஜடாயுவின் கருத்து கருநாநிதிக்குத் தகுதியில்லையென்பதும் ஆகும். அதற்கும் அவர் பதில் வைத்துவிட்டார். அதை சற்றுவிரிவுபடுத்துவது தகும்.. \\

    உங்களது தலித் சமூஹத்தினருக்கான முதலைக்கண்ணீர் ……….உங்களது முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் போன்றபடிக்கான அவதாரம் போன்றே……. போலியானது அல்லவா. தலித் சமூஹத்தினரின் மீது உங்களுக்கு லவலேசமாவது உண்மையான அக்கறை இருக்குமானால் தலித்துகளை தன் வாழ்நாள் முழுதும் இழிவு செய்த ஆதிக்க ஜாதி இனவெறியரான ஈ.வெ.ராமசாமி நாயக்க பஜனை இங்கு செய்ய மாட்டீர்கள்.

    மதிப்பிற்குரிய வைணவச் சுடராழி ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் (ஜோஸஃப் ஐயங்கார் ஸ்வாமின்) அவர்களைப் பற்றித் தாங்கள் இந்த தளத்திலும் திண்ணை தளத்திலும் எந்த மட்டுமில்லாது தூஷணை செய்தது மறந்து விட்டது போலும். உங்களது தூஷணைக்குத் தொடக்கப்புள்ளி நீங்கள் செய்யும் *******முகமூடி சுவிசேஷ அதிக ப்ரசங்கத்துக்கு********* ஜோஸஃப் ஸ்வாமின் போன்ற சான்றோர் சாவுமணி அடிக்கத் தகுந்தவர் என்பதனால் தான் அல்லவா?

    ஸ்ரீ ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை எண்ணிறந்த வைஷ்ணவ ஆசார்யாதிகளும் மற்றும் ஜாதிகள் கடந்து அனைத்து ஹிந்துக்களும் போற்றி விதந்தோதுவது ………….. அவர் ஆழ்வார் ஆசார்யாதிகள் அடியொற்றி மட்டிலுமாகவே வைஷ்ணவத்தை ப்ரசாரம் செய்ய விழைவது. முறையாக தகுந்த ஆசார்யனிடம் கசடறக் கல்வி கற்றவராயிற்றே. கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற வள்ளுவன் வாக்கின்படி வாழ்க்கையை நடத்தவும் செய்கிறாரே.

    தேவரீர் போன்று வைஷ்ணவத்தை தூஷணை செய்வதற்காகவே வைஷ்ணவதை தான் தோன்றித்தனமாக அரைகுறையாகக் கற்று……………. வைஷ்ணவத்தையும் ஆழ்வார் ஆசார்யாதிகளையும் இழிவு படுத்துவது ஒன்றே குறி என்ற படிக்கு மானுடர்க்காக பாடாத ஆழ்வார்களை …………….. பெருமாளுக்காக மட்டிலும் பாடிய ஆழ்வார்களை ………….. தமிழருக்காகப் பாடியவர் என்று இழிவு செய்த பெருந்தகை தானே தாங்கள்.

  13. அன்பின் ரெவ ரெண்டு ஜோ அமலன் ………………அது எப்படீங்க விதிவிலக்கே இல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக மட்டிலுமே உங்களால் பெனாத்த முடியும்?

    \\ ஜடாயு என்ற முகநூலாரிடமிருந்து எப்படி எதிர்வினை வருமென்று எதிர்பார்க்கலாமோ அப்படி வருவதில் வியப்பேது? \\

    ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற அவதார வரிஷ்டரிடமிருந்து எப்படி பெனாத்தல் வருமென்று எதிர்பார்க்கலாமோ அப்படியில்லாமல் வேறு எப்படி வரும்!!!!!!!

    \\ ஜடாயு பார்க்கத்தவறிய கருத்தை இங்கொருவர் முன்வைத்துவிட்டார்: அதாவது, திரைப்படம் வந்து அதனைப்பார்த்தபின்பே சொல்லமுடியும். \\

    என்னே ரெவ ரெண்டு வுடைய கருத்துத் தெளிவு. ஸ்ரீமான் ஜடாயு என்ன தீர்க்க தரிசியா? அன்பர் கருணாநிதி என்ன படம் எடுக்கப்போகிறார் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? படம் பார்த்த பிறகு தானே அதைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்க முடியும்? அவரு எப்படி அவசரக்குடுக்கையா அதைப்பற்றி முன்னாடியே அது மோசமாத் தான் இருக்கும்னு கருத்தை சொல்லலாம்? எப்புடி ந்யாயமா பாயிண்ட புடிச்சிருக்கார் இல்லையா ரெவ ரெண்டு ஜோ?

    அப்படித் தானே நினைக்கத் தோணும்.

    ஆனா அது அப்புடி இல்ல.

    ரெவ ரெண்டு ஜோ பின்னாடிக்கா என்ன சொல்லுகிறார் பாருங்கள் :-

    \\ அவ்வைணவ நம்பிக்கையில் இங்கு எவரும் தலையிடவில்லை. கருநாநிதியும் தலையிட மாட்டார் கண்டிப்பாக. \\

    ஜடாயு பார்க்கத் தவறிய கருத்தை இன்னொருவர் பார்த்ததாக வக்கணையாக நொட்டை சொல்லி…… படம் வந்த பிறகு பார்த்தால் தான் கருணாநிதி என்ன எழுதியிருக்கிறார்னு தெரியும்………. முன்னாடியே முந்திரிக்கொட்ட மாதிரி அது இப்படித்தான் இருக்கும்னு ஜடாயுவுக்கு உபதேசம் செய்த முகமூடி சுவிசேஷியாருக்கு அது பொருந்துமோ? பொருந்தவே பொருந்தாது.

    ஜடாயுவுக்குத் தான் கருணாநிதி என்ன எழுதுவார்னு தெரிய ந்யாயமில்லை. முகமூடி சுவிசேஷியான ரெவ ரெண்டு அவர்களுக்கு கருணாநிதி என்ன எழுதுவார் என்று மின்னாடியே தெரியும். அதனால் இப்போதே துண்டு தாண்டி சத்தியம் செய்து விட்டார் கருணாநிதி வைணவ நம்பிக்கையில் தலையிட மாட்டார் என்று.

    எப்புடீங்க இது. ஜடாயுவுக்கு முன்னாடி என்ன நடக்கும் என்பது தெரியாதுங்கர வரைக்கும் லாஜிக் சரியா இருந்தது. கருணாநிதி என்ன எழுதுவார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை உமாசங்கர் மூலமாக ஏசப்பரிடம் பேசி எதிர்காலத்தைத் தெரிந்து கொண்டுவிட்டீர்களா? அல்லது ஈ.வெ.ராமசாமி உங்கள் கெனால வந்து சொன்னாரா? 🙂 🙂

  14. அன்பின் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ…………….

    புல்லரிக்க வைக்கிறது உங்கள் திரியாவரக் கருத்துக்கள்.

    ஜடாயுவுக்குப் பாருங்கள் என்ன ஒரு இது. அடுத்தவர் தகுதி தகுதியின்மை பற்றியெல்லாம் பேசுறது. பரிசுத்த ஆவிக்கு வாக்குதத்தம் கொடுத்துள்ள ரெவ ரெண்டு தகுதி பற்றி பேசவே மாட்டார்.

    எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    அது தானே சரி. இது ஏன் ஜடாயுவுக்குத் தெரியவில்லை என்று தானே ஜோ சொல்ல விழைகிறார். ஆனால் ரெவ ரெண்டு சொல்வதெல்லாம் எப்போதும் ஊருக்குத் தான் உபதேசம். அது அவருக்கு மட்டிலும் பொருந்தவே பொருந்தாது.

    Jo Amalan Rayen Fernando on September 4, 2010 at 4:07 pm…………… https://tamilhindu.com/2010/09/some-azhwar-poems-1/

    ரெவ ரெண்டு வாள் ப்ரசங்கம் :-

    \\ திருக்குறளுக்கு கண்டவென்ல்லாம் உரையெழுதி போடுவதுபோல, நாலாயிரத்துக்கு எழுதுவது இல்லை. இன்றைய உரை ஏதாவது ஒரு ‘படியை’ அடித்தளமாக வைத்துத்தான் எழுதப்படும். \\

    அது எப்படி திருக்குறளுக்கு ****கண்டவென்ல்லாம்**** உரையெழுதி போடுவது போலன்னு ரெவ ரெண்டு வாள் சொல்லலாம்னு நீங்க கேழ்ப்பது புரிகிறது. அஃதாகப்பட்டது ரெவ ரெண்டு ஜோ அவர்களுக்குக் கேழ்க்க மட்டிலும் தான் தெரியும். நொட்டை சொல்ல மட்டிலும் தான் தெரியும். திருவிளையாடலில் புலவர் தருமி சொல்லுவார் இல்லையா? அது மாதிரி.

    அந்த கண்டவன் லிஸ்டுல ரெவ ரெண்டு வாள் யார் யாரையெல்லாம் சேர்த்துருக்கார்? அது ந்யாயமான்னு யாரும் கேழ்க்கக் கூடாது. கண்டதே காட்சி கொண்டதே கோலம். கலிகாலம்.

    நாலாயிரத்துக்கு உரையை இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஜோ அவதாரத்தில் தெளிவு இருந்தது. திருக்குறளுக்குக் கண்டவனெல்லாம் உரையெழுதி விட்டார்களே என்று கரிசனப்படுவது புரிந்து கொள்ள முடிகிறது. அது என்னங்க அப்படிப்பட்ட கரிசனம் உடையவருடைய வாழ்க்கை சரிதத்தின் பால் ரெவ ரெண்டுக்கு இன்று இல்லை? உடையவருடைய சரிதத்தைப் பற்றி வைஷ்ணவர்கள் எழுததா? அப்படீன்னு யாரும் ஜோ விடம் கேழ்க்கக்கூடாது.

  15. BS, Your insinuations are baseless. I praised GV Iyer’s Films NOT because of Iyer surname, but for the film’s substance, artistry, aesthetics. I am a big fan of all his films. He was a scholar and lover of Sanskrit, but not at all an orthodox man. But, Leftist? Show me proof for his Leftist inclinations. He was a proud and assertive Hindu and even supported Hindutva organizations including RSS on certain issues.

    Apart from the movies on 3 Acharyas, he also directed Bhagadgita (Sanskrit) and Swami Vivekananda (Hindi). In all these 5 movies that he made, he displayed a brilliant and fine style of artistry on how to present Hindu philosophy and lives of great Hindu sages. His depictions were very reverential towards the Acharyas, NOT just historical, as you wrote. But, they were far removed from the typical Masala religious / Puranic films that the Indian public was used to. He intentionally avoided showing supernatural things in these movies. They were realistic, but at the same time retained the sacred. meditative feel. It is a misfortune that there was no follower for his legacy.

    Your stance of appreciating GV Iyer and simultaneously *hailing* Karunanidhi is illogical and ridiculous. It is impossible for a sane person to have such a dubious artistic/literary sensibility :), unless there are deliberate and ulterior motives.

  16. what Sivashrivibhushan says is correct. Both Vaishnavs and shivas not forget what karnanidhi said “both Ranganathan and natarajan shooted by calvary is good day”. because Srirangam is no one for Vaishnavism and chidambram is no one for Shaivism. Donot fall on These smart politicians.

  17. BS

    ராமானுஜன் என்றாலே அங்கே மெய் சிலிர்க்கும் பக்தி ( அதனுடன் கூடவே வரும் உருவ வழிபாடு ) வந்து நிற்கும். இதை எப்படி திரு கருணாநிதி அவர்கள் கையாளுவார் ? திருக்குறளின் முதல் அத்யாயத்துக்கு அவர் எழுதிய உரை போலிருந்தால் ‘ சப்’ என்று போய்விடும்.

    ஒரு ‘reverse’ உதாரணம் தருகிறேன். திரு வேளுக்குடி அவர்களை பெரியார் பற்றி உபன்யாசம் செய்யுங்கள் என்று வேண்டி அவரும் செய்தால் எப்படி இருக்கும் !!!.

    ( சந்தடி சாக்கில் பார்பனர்கள் என்று பட்டையைக் கிளப்பிவிடீர்கள் – இனி கொண்டாட்டம்தான்.!)

  18. Jadayu! Good to see you have cared to read and reply. G V Iyer is a great director and his first loyalty was to art. I said left and progressive only in the sense he was different from the avarage Iyer Brahmins.

    Not being loyal to caste doesn’t mean the person needs to be irreverent to his religion. One can disown one’s caste; yet live a good Hindu. There are umpteen examples of such persons in life. RSS may praise this or that person; that is not relevant to us here. To me anyone, who is not casteist and doesn’t support superstitions in religion, is half left and full progressive. Iyer fits into that persona delectably. I became his fan after seeing his Vamsa Vriksha: inspited by that art, I picked up all his films to see, including the ones cited by you. Art is art and to be appreciated regardless of by whom it created: it transcends castes and religion. A connoisseur of art like me is no respecter of persons. Iyer and Karunanidhi are on same scales in the balance of arts of evaluation although fields of their art are different. Talk on this subject will take us away from the topic of this thread.

    I don”t ‘hail’ Karunanidhi; but I do respect and esteem the great speech he delivered on Ramanujar. The perspective is absolutely astounding to me. It is impossible for you to take that, being a blind follower of the religion as seen from your essay on Mancikavasagar. I rate any action on case by case basis. If I hail the great speech, it doesn’t mean I hail all his acts in all spheres. I have no reason to doubt about his ardor and sincerity in approaching Ramanujar for the serial. I don’t suffer from caste based hatred of anyone. You hate him because he has criticised your caste. My argument in Thali thread is abundantly applicable here: different perspectives are essential to know a subject threadbare.

    All of you may have strong objections to Muka writing the script – that is personal to you. At the same time, aren’t you dodging these questions:

    1. Why are you objecting to a serial which is NOT meant for you. It is for the general Tamil public all of whom are not Hindus; and even if they are, they are not like you.
    2. Why should you care when Ramanujar is treated as a historical figure who did things that revolutionsied the society? They loom large in our appreciation viewed against the background of our society of today where dalits are not allowed to enter temples still?
    3. Why are you attempting to appropriate Ramunjar to you only?

    I have already raised these in Tamil elaborately.

    Jadaya says I have ulterior motive or motives.

    No it isn’t ulterior: it is open: It is: Ramanujar should be made a property common to all Tamil Hindus, not brahmins exclusively; further, he is a great personality in Tamil religious and social history – when we say, social, all Tamils, irrespective of their religions, will be subsumed here. What is the motive of Jadayu and others of his ilk writing here: To appropriate Ramanujar and prevent his glory to be spread far and wide.

    It is a crying need to take such a serial and drive into the head of every Tamilian that the life they live today is nasty and they should follow Ramanujar’s way.

  19. //வாலியைப்பற்றி கவிதை எழுதிய பத்மநாபன் பி ஏ இந்துமதத்துக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் வாலியின் நெடுங்கவிதை என்றுமே செய்துகொண்டிருக்கும். யார் யாரை விமர்சிக்கவேண்டுமென்ற தகுதியே இல்லாமல் போயிற்று இன்று//
    எனது உறவினரான வாலி அவர்கள் ஸ்ரீ ராமானுஜரை பற்றி எழுதும்போது பன்னிரண்டு திருமண் இட்ட பெரியார், பூணூல் போட்ட அம்பேத்கார் என எழுதியதை மறுத்து /கண்டித்து கவிதையில் எழுதிடவே எனது பெருமதிப்புக்கு உரிய ஸ்ரீ உ.வே. பத்மநாபன் இரும்பாநாடு அவர்களை கொண்டு கவிதையில் பதில் செய்ய வேண்டினேன் . அது ஸ்ரீ வைஷ்ணவ ஸூதர்சனத்தினில் வெளியானது . .
    நக்கீரன் வார இதழ் நாஸ்திக வாதம் பரப்ப அக்னிகோத்ரம் தாதாசாரியார் என்பவரைக் கொண்டு இந்துமதம் எங்கே போகிறது என்னும் தொடரை எழுதியது, நூலாகிய அதை இன்றும் அதை திராவிடக்கழகம் பிரசாரம் செய்கிறது. அதை எதிர்த்து மறுப்பு நூல் ” அக்னிகோத்ரியின் அயோக்கியத்தனத்தினையும் நக்கீரனின் நேர்மையின்மையும் விளக்கி நூல் எழுதியவர் ஸ்ரீ பத்மநாமபன்.
    . வைஷ்ணவரும் ஆஸ்திகருமான வாலியால் கூட ஸ்ரீ ராமானுஜரை பற்றி சரியாக எழுதமுடியவில்லை. காராணம் அவர் கருணாநிதியின் நண்பர். அப்படியிருக்க கருணாநிதியால் … “சாத்தான்கள் வேதம் சரியாக ஓதும்” என bs எழுதுவது சிறந்த நகைச்சுவை. கண்ணதாசன் ஆஸ்திகரானபிறகு கிருஸ்துவர்கள் எற்கும்படி “ஏசுகாவியம்” எழுதமுடிந்தது. ஆனால்கருணாநிதியால் முடியாது. .கரு எழுதிய தொல்காப்பிய பூங்காவில்தான் எத்தனை களைகள்?????

  20. திரு மு கருணாநிதியின் இச்செயல் பாராட்டிற்குரியது. அதை விட்டுவிட்டு அவரின் கடந்த கால தவறுகளை விமர்சிப்பதற்கான நேரமில்லை இது. என்னவாக இருந்தாலும் அவர் தமிழில் ஒரு பேரறிஞர் . அவரின் தமிழ் வசனங்கள் பாராட்டும் வகையில் தான் இருக்கும்

  21. என்னைப்போன்ற சைவர்கள் கூட கருணா நிதி எழுதிய நாடகத்தினைப்பார்க்கமாட்டோம்//

    சி.வி.பூ எழுதியதுதான். சரியான அணுகு முறை. தொலை காட்சி, சினிமா, நாடகம், இணையதளங்கள் உங்களை கண்டிப்பாகப் பார்த்தே படித்தே தீர வேண்டும் என நிர்பந்திக்கவில்லை. இதே அணுகுமுறையையும் புதிய தொலைமுறை விவாதம் பண்ணமுயன்ற போதும் கடைபிடித்திருக்கலாம். விவாதமே தேவையில்லை. எல்லாம் முடிந்தது.

    //ஸ்ரீரங்க நாதனை பீரங்கிவைத்து பிளக்க சொன்ன கருணானிதியின் நாடகத்தைப்பார்க்க ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பித்துப்பிடித்துவிட்டதா? புத்திதான் கெட்டுவிட்டதா?

    //

    இந்தபீரங்கி செய்தியைக் கருநாநிதி படித்தால் உங்கள் மீது மான நஷ்ட வழக்குப்போடுவார். நீதிமன்றம் சான்றைக்கேட்கும். நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். இப்படி பலபல சமூகத்தில் செவிவழி புனைவுகளாக நிலவுகின்றன. இதை பாரதிதாசன் சொன்னதாக அப்புனைவுகளுள் ஒன்று. எவருமே எங்கு அப்படி எழுதினார் என்பதைக் காட்ட முடியவில்லை. அவர் சார்பாளர்கள் இது ஒரு புனைவு என்கிறார்கள். தயவு செய்து புறம் சொல்லித்திரியவேண்டாம். சான்றுகள் இருந்தால் மட்டுமே பேசவும். தமிழ்.ஹிந்து.காம் எல்லாருக்கும் பரவலாகத் தெரிந்த ஒன்று. கவனமாக எழுதவும்.

    இன்னும் தொலைக்காட்சித்தொடர் வருவதற்கு முன்பே வைணவர்கள் பார்க்க ஆசைப்பட்டார்கள் என்று எப்படி முடிவு கட்டி அவர்களுக்குப் புத்தியில்லையா என்று கேட்கிறீர்கள்? கற்பனையாக தூடணை செய்ய வேண்டாம்.

    வைணவர்களுக்கு சாதியுணர்வு இருக்கக்கூடாதென்பது வைணவக்கொள்கைகளுள் ஒன்று. அவர்களுக்கு ஒரே குலம். வைணவ அடியார்குலம். சாதி உணர்வு அற்ற அனைவரும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. தன்னை பிராமணன் என்று நினைத்துக்கொண்டவருக்கு இத்தொலைக்காட்சித் தொடரில்லை.

  22. /அவரின் தமிழ் வசனங்கள் பாராட்டும் வகையில் தான் இருக்கும்//

    ரொம்ப சரி. கரைத்து குடித்தவர் போல!??!!!

  23. // அவர் தமிழில் ஒரு பேரறிஞர் //

    ஜெயகாந்தன் அண்ணாவைப்பற்றி சொன்னது நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை :))

  24. கருணாநிதி வகையறாக்களைப் பாராட்டலாம்தான், ஆனால் அதற்க்குமுன் அவர்கள் தங்களுடைய அண்டப்புளுகுகள் சிலவற்றைத் திரும்பப்பெறவேண்டும், அப்பொழுதுதான் அவர்களுடைய கெடுமதி, ஓய்வில் இருக்கிறது என நாம் நம்ப முடியும்.

    1) இந்த சமுதாயத்தில் நிலவிவந்த கேடுகளை நீக்கி எல்லோரும் இன்புற்றுவாழ காலம் காலமாக அயறாது பாடுபட்டவர்கள் இத்தகைய சமய சான்றோர்கள் தான் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

    2) சமுதாய தீமைகள் மனித மனங்களின் விகாரங்கள், அவற்றை போக்கவந்ததே சமயமும் அதன் நூல்களும் – எனும் உண்மையை ஏற்பதாக அறிவிக்க வேண்டும்.

    3) சமூக அமைப்பால், கால சூழலால் ஏற்பட்ட, தற்காலிகத் தடைகளை நீக்கி, அனைவரும் ஆலயங்களுக்கு செல்லவேண்டும் என்று முயற்சித்து பாடுபட்டது மன்னர்களும்,சமய சான்றோர்களும்தான், தாங்கள் கதைவிட்டதுபோல் பெரியார் என்பவரும், திராவிடவாதிகளும் அல்ல எனும் உண்மையை வெளிப்படையாகச் சொல்லவேண்டும்.

    அவ்வாறு செய்யவில்லை என்றால்

    நட்டார்போல் நல்லவை சொல்லினும், ஒட்டார் சொல்
    ஒல்லை உணரப்படும்.

    கருணாநிதி ஒரு தீயசக்தி என்பதில்மட்டும் எனக்கு அம்மாவின் கருத்தில் உடன்பாடு உண்டு.

  25. Anybody can write on Ramanujar, that is not the point here. But is Karunanithi fit for this purpose?

    He is no doubt well versed in tamil literature & has the capability, but he will try to mischievously distort the teachings of Ramanujar to suit his political agenda.

    He will portray Ramanujar as a crusader who was detested by Brahmins & prevented by them to carry out reforms. To a certain extent, this may be true, but he will glorify this aspect.

    As for his speech on Ramanujar which has been praised by some readers here, if I remember right, he was given an award by the Vishistadvaita research centre, whose patron is R.M Veerappan. He had equated Ramanujar with EVR & hailed him.

    Surely mu.ka does not deserve this award but that is politics.

    As regards Vali writing Ramanuja kaaviyam, it was overrated. But that is not relevant here.

    Regarding G.V Iyer’s film, it was in Sanskrit & telecast on DD some years back with English sub titles. After the telecast, there were accusations galore from Jeeyars that the film did not capture the true essence of Ramanujar’s teachings.

    Some of you may remember that a few years back, there was a serial on Ramanujar in DD, which featured film actor Nambiar in a guest role. It was telecast on weekends at 5 pm.

    I agree that even many Hindus do not know about Ramanujar.

    I sport a picture of Ramanujar in my 2 wheeler. I was once asked at a petrol bank by the attendant “Sir, is this Buddha”?

    That way, a serial on Ramanujar is welcome.

    This will arouse interest if telecast on Kalaignar TV, but if you ask me whether it is going to portray Ramanujar in the right way & propagateh is teachings truthfully, the answer is a resounding NO.

    Simply bcos the script writer is mu.ka.

  26. ///////அவர் தமிழில் ஒரு பேரறிஞர்//////

    இந்த பேரறிஞர்தான் பல ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி உடல்நலம் குன்றி இருந்தபோது தனது முரசொலியில் உடன்பிறப்பிற்கு கடிதம் எழுதினர். அதில் “எனக்கு உடல்நலம் சரியில்லை. 1 capsules எடுத்துக்கொண்டேன்” என்று எழுதியிருந்தார். capsule என்பது ஆங்கில வார்த்தை. அதற்கு தமிழ் அறிஞருக்கு தமிழ் வார்த்தை தெரியவில்லை போலும்.மேலும் 1 என்று வரும்போது அதை அடுத்து capsule என்று ஒருமையில் வராமல் பன்மையில் எழுதியுள்ளார். (குறிப்பு:- இது printing mistake அல்ல. அவர் கைப்பட எழுதியதின் போட்டோ நகல் அது.) இப்படிப்பட்ட இவரை முத்தமிழ் அறிஞர் என்று கூறுகிறார்கள். எதுகை மோனையோடு (புது)கவிதை எழுதுபவனெல்லாம் தமிழ் அறிஞர் என்றால் அவரைவிட அருமையாக எழுதுவோர் உலகில் அநேகர் உள்ளனர்.

  27. கருணாநிதியின் கல்கி பேட்டியைப் படித்துப் பாருங்கள். ராமாநுஜர் தொடருக்கு வசனம் எழுதினால் தீவிர பிராமணர்கள் அவருக்கு ஓட்டு போடுவார்கள் என்று
    நம்பும் அளவுக்கு அவர் இல்லை. இலக்கியத்தையும் அரசியலையும் இணக்கக்
    கூடாது. ராமாநுஜர் வரலாற்றை இதுவரை எழுதப்பட்ட நூல்களின் அடிப்படையிலேயே எழுதப்போவதாக சொல்லி இருக்கிறார். அதில் வாலி,பி ஸ்ரீ, சாண்டில்யன் ஆகியோரின் நூல்களும் அடங்கும். அந்த வரலாற்றை அவர் திரிக்க முயன்றால் அவரை எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கும். மற்றபடி இந்த விவாதம் தேவையில்லை. உங்களுக்காக ஒரு கேள்வி? மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜாச்சாரியார் பதிப்பு தான் சிறந்த்தாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் அருட்செல்வப் பேரரசன், ஜெயமோகனின் வெண்முரசு , பாலகுமாரனின் மகாபாரதம் , பிரபஞ்சனின் மகாபாரதம் இவை எல்லாம் எதற்கு ? இன்றைய நடையில் இருந்தால்தான் எல்லோருக்கும் புரியும்.

  28. //மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜாச்சாரியார் பதிப்பு தான் சிறந்த்தாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் அருட்செல்வப் பேரரசன், ஜெயமோகனின் வெண்முரசு , பாலகுமாரனின் மகாபாரதம் , பிரபஞ்சனின் மகாபாரதம் இவை எல்லாம் எதற்கு ? இன்றைய நடையில் இருந்தால்தான் எல்லோருக்கும் புரியும்.//

    இந்த பைத்தியகார கேள்விகளும் அதற்க்கு தக்க பதில்களும் காலம் காலமாக வருபவை. என்ன மக்களுக்கு ஜாபக மறதி இருப்பதால் புத்திசாலித்தனமாக மறுபிறவி எடுக்கின்றது. நீங்கள் குருப்பித்த யாரும் மகாபாரத்தை தீ வைத்து கொழுத்தவில்லை , பகுத்தறிவு என்று பணம் சம்பாதிக்கவில்லை . என் அணுகுமுறை மாறிவிட்டது என்று சொல்லி இதை சைய்தால் யார் என்ன சொல்ல முடியும். “தற்கூறி பகுத்தறிவு” வாந்திகள் என்ன சொன்னாலும் கேக்கும் என்றால் ,நன்றாக கேளுங்கள்.

  29. நாயக்கரின் புக் public இல் வந்தால் பார்ப்பனர்கள், bharamin என்று மாற்ரப்படும் — சொன்னது திராவிட தற்கூறி பகுத்தரிவு.. இது இங்கு பொருந்தாது போல???

  30. நாயக்கர் , நாயாக்கர் பேரன், குஷ்பூ சிறி சிறி சிறி – இது ஒரு எதிர்வினயா??

  31. // மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜாச்சாரியார் பதிப்பு தான் சிறந்த்தாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் அருட்செல்வப் பேரரசன், ஜெயமோகனின் வெண்முரசு , பாலகுமாரனின் மகாபாரதம் , பிரபஞ்சனின் மகாபாரதம் இவை எல்லாம் எதற்கு ? இன்றைய நடையில் இருந்தால்தான் எல்லோருக்கும் புரியும். //

    மகாபாரதத்தை அருட்செல்வப்பேரரசனோ, ஜெ-வோ, பாலகுமாரனோ, பிரபஞ்சனோ அணுகுவதைப்போல்தான் மு.க-வும் ராமானுஜரை அணுகப்போகிறார் என்கிறீர்களா ?

    // ராமாநுஜர் தொடருக்கு வசனம் எழுதினால் தீவிர பிராமணர்கள் அவருக்கு ஓட்டு போடுவார்கள் என்று நம்பும் அளவுக்கு அவர் இல்லை. இலக்கியத்தையும் அரசியலையும் இணக்கக்கூடாது. //

    செல்வராஜ், பச்ச்ச்ச புள்ள சார் நீங்க. இப்படிப்பட்ட குழந்தை மனசு வாய்ப்பது மிக கடினம். தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும், தவறவிடவேண்டாம்.

  32. பா.ஜ.க-வின் எழுச்சி, தமிழகத்தில் சமீபமாக மெதுவாகவேனும் மௌனமாக எழும் போலி நாத்திகவாதத்துக்கு (தி.மு.க / தி.க பிராண்ட்) எதிரான் குரல்களை சாந்தப்படுத்தவே இந்த நாடகம் என்பது மு.க-வை அறிந்தவர்கள் அறிவார்கள். ”பாயும் புலி பண்டாரக வன்னியன்” யாருக்காக எழுதப்பட்டதோ அதே மாதிரிதான் ராமானுஜர் தொடரும்.

  33. //
    திரு மு கருணாநிதியின் இச்செயல் பாராட்டிற்குரியது. அதை விட்டுவிட்டு அவரின் கடந்த கால தவறுகளை விமர்சிப்பதற்கான நேரமில்லை இது. என்னவாக இருந்தாலும் அவர் தமிழில் ஒரு பேரறிஞர் . அவரின் தமிழ் வசனங்கள் பாராட்டும் வகையில் தான் இருக்கும்
    //

    தொண்ணூறு வயசு கடந்த காலத்தை மறந்து போகிடனுமாம்ல . இது எதோ ஒரு இருவது வயது இளைஞரை பார்த்து சொன்னால் பொருந்தும் . அவரது சங்கர மட எதிர்ப்பு அவரை சாகிற காலத்தில் சங்கர சங்கரா என்று கூட சொல்ல விட மாட்டேன் என்கிறது. தமிழ் நாட்டை குட்டிசுவராக்கியத்தில் பெரும் பங்கு கருநிதியை சேரும்

  34. பீ எஸ்

    மறுபடியும் சொல்கிறேன் விளங்கிக்கொள்ளுங்கள் . என்ன சொல்கிறோம் என்பது முக்கியமில்லை யார் சொல்கிறார் என்பது தான் முக்கியமானது (உபநிஷத் சொல்கிறது வாச்சரம்பம் விஜிஞாஷஸ்வ).

    கண்ணதாசன் பிறரை பார்த்து குடிக்காதே என்பதும் , கமலஹாசன் வாழ்வில் எல்லோரும் ஒழுக்கமொடு வாழ வேண்டும் என்றும், சோனியா காந்தி யாரும் ஊழல் செய்யக் கூடாது என்றும் பிரசாரம் செய்வது போல. விஷயம் நல்லாதான் இருக்கும் ஆனால் எடுபடாது

  35. பி.எஸ், அந்த பீரங்கிப் பாடல் பாரதிதாசன் எழுதியது அல்ல தான். வேறு ஒரு திராவிட இயக்கக் கவிஞர் எழுதி, பாரதிதாசனால் *சிலாகிக்கப் பட்டது*. திராவிட இயக்க மேடைகள் தோறும் கருணாநிதி உள்ளிட்ட பல பேச்சாளர்களால் முழங்கப் பட்டது.

    தமிழர்களைத் தங்கள் கலாசாரம் மீதே வெறுப்புக் கொள்ள வைத்து, தாலிபான்களைப் போன்ற மனநிலைக்குத் தள்ளிய திராவிட இயக்கத்தின் வரலாற்றை ஏன் வெள்ளையடித்து மழுப்ப முயல்கிறீர்கள்?

    ஆதாரம்:

    பாட்டு பறவையின் வாழ்க்கைப் பயணம் (கவியரசர் முடியரசன்)
    தமிழ்மண் பதிப்பகம், சென்னை – 600 017
    பக்கம் 257

    // ‘சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும்
    பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ?’

    என்ற பாடற்பகுதி, அக்காலத்தே எங்கும் பேசப்பட்டது. இது பாவேந்தர் பாட்டென்பது பலர் எண்ணம். பேராசிரியர் ஆ.முத்து சிவன் என்பார் தமது நூலொன்றில், இப்பாடல் பாவேந்தர் பாடலென்று கூறித்தாக்கியெழுதியிருக்கிறார். பாரதிதாசன் நூல்களில் இப்பாடல் யாண்டும் இடம் பெறவி ல்லையென்பதை நான் அறிவேன். எனினும் பாவேந்தரிடம் கேட்டுப் பார்ப்போம் எனக்கருதி,

    ஐயா, ‘சீரங்கநாதன்’ எனத் தொடங்கும் பாடல் உங்களு டையதா? என்று வினவினேன். ‘அது என் பாட்டில்லப்பா, எவனோ நல்லாப்பாடியிருக்கிறான்’ என்று சிரித்துக் கொண்டார். இது 1956ஆம் ஆண்டு நிகழ்ந்ததென்று கருதுகின்றேன். ஆண்டு பல ஆகிவிட்டமையால் மீண்டும் ஒரு திங்களுக்கு முன் கவிஞர் மன்னர் மன்னனுக்கு எழுதிக்கேட்டேன்.

    ‘சீரங்கநாதரையும்…. என்று தொடங்கும் பாடல் வரி பாவேந் தருடையதன்று. நாகை அம்மையப்பன் பாடலில் வருகிறது. அப்படி இது குறித்தும் நான் ஆதாரம் தேடி இருக்கிறேன்,’ என்று 26-7-1987ல் மன்னர் மன்னன் மறுமொழி எழுதியிருந் தார். பாவேந்தர் பாடல்களிற் காணப்பெறும் வேகத்தையறிந்த பலரும், கடவுளர், பீரங்கியால் பிளக்கப்படும் பாடலும் அவருடையதாகத்தானே இருக்கும் என்று மயங்கிவிட்டனர். சிலருக்கு இன்னும் அம்மயக்கந் தீரவில்லை. //

    https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=289&pno=257

  36. ஜடாயு!

    முதலில் நாகரிகமாக எதிர்கருத்தை எடுத்துவைத்ததற்கு நன்றி. சாரங்கைப்போல பெயர்களைத் திரித்து அற்ப இன்பம் காண்பதும் கிருஸ்ணகுமாரைப்போல ஆள் யார் என்றே தெரியாமல் கற்பனையாக அசிங்கமான சொற்களை வீசித் திட்டி எழுதுவதும் உங்களிடமில்லை. நன்றிகள்.

    இதுதான் சி.வி.பூஷன் எழுதியது:

    //ஸ்ரீரங்க நாதனை பீரங்கிவைத்து பிளக்க சொன்ன கருணானிதியின் நாடகத்தைப்பார்க்க ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பித்துப்பிடித்துவிட்டதா? புத்திதான் கெட்டுவிட்டதா?//

    அதாவது கருநாநிதி சொன்னார் என்றே எழுகிறார் தவறு. அதுபோல இதை பாரதிதாசன் எழுதினார் என்றும் சொல்வது தவறு என்று யான் கேள்விப்பட்டதை உறுதிப்படுத்திவிட்டீர்கள். என்னைவிட இந்துமதவிமர்சகர்களை பன்னெடுங்காலமாகத் தேடிப்படித்தும் கேட்டும் வருவதில் நீங்கள் கில்லாடி. யான் இந்துமத விமர்சகர்களையும் தேடுவதுமில்லை; படிப்பதுமில்லை. என்னிலை: பாபநாசம் சிவன் எடுத்த நிலை. அக்கதைச் சொன்னால் விரியும்.

    சொன்னார்; எழுதினார் என்பதும் சொன்னதை எழுதியதைக்கேட்டு சிரித்தார்கள் என்பதும் வேறு. நீதிமன்றம் ஏற்காது எனவே சி வி பூஷனை கவனமாக எழுதச்சொன்னேன் அவ்வளவுதான்.

    கருநாநிதியோ பாரதிதாசனோ – பொதுவெளியில் இப்படி வன்முறை வாசகங்களையோ தனிப்பட்ட முறையில் மனதில் கொண்டாலே தவறு தவறுதான். புதிய தலைமுறைத் தொலைக்காட்சிமீது குண்டு போடுங்கள் என்ற வன்முறை வாசகத்தை எதிர்த்தவன் நான் மட்டுமே. கிருஸ்ணகுமார் இன்னும் அதை எதிர்க்கவில்லை. வன்முறை எவரிடம் இருந்து வந்தாலும் தவறு. மலர்மன்னன் வன்முறைக்கு வன்முறையே சரியென்றபோது எதிர்த்தவன் நான் என்பது திண்ணைதளத்தைத் தொடர்ந்து படித்துவரும் கிருஸ்ணகுமாருக்குத் தெரியும்.

    மதத்தை எதிர்க்கலாம்; மத நம்பிக்கைகளை விமர்சிக்கலாம்; எவருக்குமே உரிமையுண்டு. இல்லையென்றால், நேற்று வங்காளத்தில் இன்னொரு பதிவாளர் கொல்லப்பட்டார்; இன்றைய செய்தியின்படி (https://indianexpress.com/article/cities/kolkata/kolkata-madrasa-head-attacked-for-trying-to-be-a-rushdie/) வேறொருவர் ருஸ்டியின் நிலைமை உனக்கு உருவாக்குவோம் என்று எச்சரிக்கப்பட்டார். அந்நிலை இல்லை இந்துமதத்தில் எனவே விமர்சிக்கலாம். வன்முறை வசனங்களைத் தவிர்த்து விமர்சிக்கலாம்.

    மனங்கள் புண்படாதவரையில் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. வன்முறையைத் தூண்டும் எனப்தை மட்டுமே ஏற்கிறேன். ஏனெனில் எந்த விமர்சனமுமே உங்கள் மனத்தைப்புண்படுத்தும். பிள்ளையார் பால் குடித்தததாகப் பரவலாகப் பேசப்பட்டதை விமர்சனம் பண்ணினால் உங்கள் மனம் புண்படும். சங்ககாலத்தெய்வங்கள் எவையெவை என்று காட்டும் உ வே சா விநாயகரைக்காட்டவில்லையெனறு எவரேனும் சொன்னால் உங்கள் மனம் புண்படும். புண்படாமல் விமர்சனமே இருக்க முடியாது.

  37. ஜி வீ அய்யர் நிகழ்வுகளை சித்தரிப்பதில் மிகவும் கவனம் செலுத்துவார் என்பதற்கு உதாஹரனமாக ராமானுஜர் படத்தில் யாதவப்ப்ரகாசறை எப்படி சித்திர்த்திருக்கிறார் என்பதை பார்த்தாலே புரியும் .

    குரு பரம்பர பிரபாவப்படி யாதவப்ரகாசர் ஒரு அகம்பாவம் பிடித்த ஆசார்யர் அவர்தான் ராமானுஜரை தீர்த்த யாத்திரை என்ற பெயரில் தீர்த்துக்கட்ட muyalvaar.

    திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட யாதவப்ரகாசறை காண முடியும், அவர் ராமானுஜரை மிக்க அறிவுடைய சிஷ்யனாகவும் அவரது நலனில் அக்கறை உள்ளவராகவும் siththariththiruppaar. ராமனுசுரக்கு எதிரான சதியில் ஈடு படுபவர்கள் சஹ சிஷ்யர்களாக காண்பிக்கப்படுவார்

    இதை இப்படி ஏன் காட்ட வேண்டும். யாதவப்ரகசரோ ஒரு மிக பெரிய வேதாந்த gyaani. பேத அபேத மதத்தில் கரை கண்டவர் . பல சிஷ்யர்களுக்கு aachaariyar. பிற்காலத்தில் ராமனுசுரின் சிஷ்யனாகவே மாறுபவர். இப்படிப்பட்ட ஒருவரை த்வேஷியாக சித்தரிப்பது சரியாகாது என்ற தீர்மானத்துடன் தான் ஜி வீ அய்யரின் யாடவப்ரகாசர் பாத்திரப்படைப்பு இருக்கும்

    குறைந்த பட்ஜெட்டில் அதிக கதா பாத்திரங்கள் இல்லாமல் நடந்ததை சொல்ல முனைவதென்பது அவ்வளவு எளிதல்ல . இதை ஜி வீ அய்யர் அவர்கள் அற்புதமாக செய்திருப்பார் .

  38. அன்பின் ரெவ ரெண்டு ஜோ அமலன்

    \\ இன்னும் தொலைக்காட்சித்தொடர் வருவதற்கு முன்பே வைணவர்கள் பார்க்க ஆசைப்பட்டார்கள் என்று எப்படி முடிவு கட்டி அவர்களுக்குப் புத்தியில்லையா என்று கேட்கிறீர்கள்? கற்பனையாக தூடணை செய்ய வேண்டாம். \\

    ஆமாம். கற்பனையாக மட்டிலும் தூஷணை செய்வதற்கான ஏகபோக உரிமை ரெவ ரெண்டு ஜோ அமலனுக்கு மட்டிலும் தான் உண்டு. ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்களை தளம் தளமாக கற்பனையாக தூஷணை செய்யும் உரிமை படைத்தவராயிற்றே ரெவ ரெண்டு ஜோ அமலன்.

    \\ அவ்வைணவ நம்பிக்கையில் இங்கு எவரும் தலையிடவில்லை. கருநாநிதியும் தலையிட மாட்டார் கண்டிப்பாக \\

    இன்னும் தொலைக்காட்சித் தொடர் வருவதற்கு முன்பே வைஷ்ணவ நம்பிக்கையில் கருணாநிதி தலையிட மாட்டார் கண்டிப்பாக என்று எப்படிச் சொல்கிறீர்கள்? கற்பனையை அடிப்படையாகக் கொண்டு கருணாநிதி பஜனை செய்ய வேண்டாமே.

    \\ வைணவர்களுக்கு சாதியுணர்வு இருக்கக்கூடாதென்பது வைணவக்கொள்கைகளுள் ஒன்று. அவர்களுக்கு ஒரே குலம். வைணவ அடியார்குலம் \\

    ஆமாம். ஆனால் தன்னை வைஷ்ணவனாகச் சொல்லிக்கொள்ளும் ரெவ ரெண்டு ஜோ அமலனுக்கு மட்டில்லாத ஆதிக்க ஜாதி வெறியும் போலி ஜாதி மறுப்பும் இருப்பதை யாரும் கண்டு கொள்ளக்கூடாது. தலித் சஹோதரர்களை தன் வாழ்நாள் முழுதும் இழிவு செய்த அன்பர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஈ.வெ.ரா பஜனை செய்து களிப்புறுவது ரெவ ரெண்டு ஜோ. ஏனெனில் ரெவ ரெண்டு ஜோ அமலனைப் போன்றே ஈ.வெ.ராமசாமிக்கும் தலித் வெறுப்பு உண்டு என்பதனால்.

    \\ I don’t suffer from caste based hatred of anyone. You hate him because he has criticised your caste. My argument in Thali thread is abundantly applicable here: different perspectives are essential to know a subject threadbare. \\

    THAT REV JOE AMALAN DOES NOT SUFFER FROM CASTE BASED HATRED OF ANYONE IS A PURE LIE. ON THE CONTRARY REV JOE AMALAN IS AN OUT AND OUT A CASTIST AND A RACIST.

    IT IS REV JOE AMALAN’S CASTIST CHRISTIAN RELIGIOUS BIAS THAT MOTIVATES HIM TO INDULGE IN PROPOGATING LIES ABOUT PUJYA SHRI D A JOSEPH SWAMIN.

    To the best of my memory, I do not remember either me or Sri.Jatayu or Srhi Aravindan Nilakantan have ever mentioed their caste anywhere.

    But REV JOE AMALAN IN HIS IIM GANAPATY RAMAN AVATAR EXPLICITLY SAID THAT HE WAS A BRAHMIN.

    \\ Ramanujar should be made a property common to all Tamil Hindus, not brahmins exclusively; \\

    BHAGAVAD RAMANUJAR IS NOT A PROPERTY. ONLY A CRYPTO CHRISTIAN CAN DEMEAN BHAGAVAD RAMANUJAR AS A PROPERTY. SHAME ON REV JOE AMALAN WHO HAS THE GUTS TO PRESENT HIMSELF AS VAISHNAVA AND SIMULTANEOUSLY DEMEAN EMPERUMANAR AS A PROPERTY.

    AND ………….. BHAGAVAD RAMANUJAR……….. YATHIRAJAR……….. EMPERUMANAR…………. UDAYAVAR ………………. IS HELD IN HIGH ESTEEM…………… AND IT IS NOT LIKE SHOULD BE HELD IN HIGH ESTEEM………… BY ALL SHRIVAISHNAVAS BELONGING TO ALL THE CASTES……………. BY PEOPLE BELONGING TO OTHER VEDANTA STREAMS ALSO.

  39. \\ I don’t suffer from caste based hatred of anyone. You hate him because he has criticised your caste. \\

    REV JOE AMALAN HAS THE PECULIAR HABIT OF OPENLY TELLING LIES. AND THAT TOO NOT FROM AVATAR TO AVATAR. FROM ONE SENTENCE TO ANTOHER SENTENCE IN THE SAME REPLY.

    IT IS WELL KNOWN THAT POET VALI WAS A BRAHMIN. IN SPITE OF HIM BEING A BRAHMIN…………… WHY JATAYU CONDEMNED HIM AND WHY REV JOE AMALAN LOVES HIM.

    THE DISLIKE AND HAILING BY JATAYU AND JOE AMALAN RESPECTIVELY HAS A COMMON GROUND. THAT POET VALI PRESENTED SHRIVAISHNAVAM IN OBSCURANT MANNER.

    JATAYU DISLIKED VALI FOR THAT PART OF BAD AND OBSCURANT PRESENTATION OF SHRIVAISHNAVAM AND IT IS FOR THE SAME REASON REV JOE AMALAN LIKES POET VALI BECAUSE IT HELPS REV JOE AMALAN IN HIS EVANGELICAL OBJECTIVES.

  40. //மனங்கள் புண்படாதவரையில் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. வன்முறையைத் தூண்டும் எனப்தை மட்டுமே ஏற்கிறேன். ஏனெனில் எந்த விமர்சனமுமே உங்கள் மனத்தைப்புண்படுத்தும். பிள்ளையார் பால் குடித்தததாகப் பரவலாகப் பேசப்பட்டதை விமர்சனம் பண்ணினால் உங்கள் மனம் புண்படும். சங்ககாலத்தெய்வங்கள் எவையெவை என்று காட்டும் உ வே சா விநாயகரைக்காட்டவில்லையெனறு எவரேனும் சொன்னால் உங்கள் மனம் புண்படும். புண்படாமல் விமர்சனமே இருக்க முடியாது.//

    மிகவும் சரியான வாதம். இதே போல் 72 கன்னியர்கள் சுவனத்தில் கிடைக்கும், குருடர்கள் பார்பார்கள், ஊமைகள் பேசுவார்கள் என்றெல்லாம் ‘விநாயகர் பால் குடித்த’ விஷயத்தைப் போல முட்டாள்தனமான நம்பிக்கைகள் என்று யாரேனும் சொல்லி யாருடைய மனமோ புண்பட்டால் வரிந்து கட்டிக்கொண்டு அந்த மனம் புண்பட்ட யாரோவுக்கு வக்காலத்து வாங்காமல் இருந்தால் சரி.

    விநாயகர் பால் குடித்தார் என்பது அபத்தமாக மக்கள் முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொண்ட விஷயம். அதை யாரும் இந்து மதத்தின் ஒரு அம்சமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கும் ராமானுஜர் பற்றிய கருணாநிதி எழுதப் போவதற்கும் துளியும் சம்பந்தமில்லை. என்னவோ இந்து மதம் ( சனாதன தர்மம் என்றாலே தீவிர வாதி என்றும் பல பேர் அர்த்தம் கொள்வதினால் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் மதம் சொல்லையே உபயோகிக்கிறேன் ) விமரிசனத்தையே பார்க்காத மாதிரி அல்லவே பேசிக்கொண்டு போகிறீர்கள். சிவவாக்கியரை விடவா நீங்கள் விமரிசனம் செய்து விடுவீர்கள்.

    மனம் படுவது பற்றி ஒரு உதாரணம். நேற்று ( 02.04.2015 ) கலைஞர் செய்தில் எத்தனை கோணம் எத்தனை பார்வையில் புகையிலை பற்றிய விவாதம் நடந்தது. முடியும் தருவாயில் ஒரு இஸ்லாமிய பங்கேற்பாளர் ( பெயர் நினைவுக்கு வரவில்லை) குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் அப்படி ஒன்றும் ஜனத்தொகை குறைவதற்கு உபயோகப்படவில்லை – அதுபோல புகைஇலைக்கு எதிரான பிரச்சாரம் எடுபடவில்லை என்றார். சும்மா இரண்டு வார்த்தைகளில் இதை அவர் சொல்லவில்லை. நன்கு விஸ்தாரமாக அரசின் குடும்ப கட்டுப்பாட்டின் கொள்கைகளை விமரிசித்தார். இதற்கு பிஜேபி கட்சி நாராயணன் அது அவர்கள் மத கொள்கைக்கு மாற்றான விஷயம் அதனால் இதை உதாரணம் காட்டுகிறார் என்று பேச ஆரம்பித்த உடனே நிகழ்ச்சி நடத்துபவர் விவாதம் வேறு திசைக்குத் திரும்ப வேண்டாம் என்று அவசரம் அவசரமாக நிகழ்ச்சியை முடித்துவிட்டார். இதுதான் நீங்கள் சொல்கின்ற மனம் புண்படும் விஷயம்.

    மனம் புண்படக்கூடாது என்பது எல்லோருக்கும் பொது. அதை விட்டு மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் உளறுவார்கள். இந்துக்கள் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் இப்படிச் சொன்னால் ‘ அப்போ நீ என்ன குண்டுதானே வெடிக்கப் போறே’ என்று நீங்களாக கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

  41. M Karunanidhi as this falling age of 90 years would have thought in his mind to do some justice to his life before his end to glorify Sri Bhagwat ramanujar prior to mid 2017 when this vaishnavit achariyar completes 1000 years of his birth anniversary. So M K might have had good intention to befit by giving credit to the achriayar and remove the ill feelings of many hindus against DMK party which is protrayed as anti hindus. In the last days of kavinjar valli who was a close friend of M K participated in a function of facilitation of ahobila mutt jeer at music academy hall releasing a book about the Pontiff jeer written by valli himself saying that he is the disciple of the ahobila mutt. so it could be a reason for M K to declare himself as disciple of Sri Bhagwat Ramanujar when the T V serial is released in a function like his friend.

    This will help M K to remove the ill feelings of hindus that DMK is an anti hindu party and also an athiests party.Besides M K knows that people of T N do not believe anymore on athiesm and become more and more religious now a days. M K knows that BJP is having a foothold in T N state recently and would take away the votes of hindus from DMK . MK aim is to make his son STALIN to become CM of state and for this purpose, he will never denounce or make fun of Sri ramanujar in this T V serial as it would lead to his Party already dwindling vote shares to clime down further to bottom,thereby demolishing his pinning hopes of future CM to his son. Hence let us wait for the T V serial to come and later make comments as it is too early to guess about the intention of M K . our guess should be on 50:50 now by crossing the fingers..

  42. there is no qualifications needed for writers. If the drama is directed well, people will see or it will be ignored. Please ask yourself :can your family members speak about Sri Ramanujar, more than 2 minutes?

  43. kmv,

    I disagree. Qualification is a must for a writer. He must be objective specially when dealing with sensitive topics. Here, we are discussing about a Mahapurusha who has lived for 120 years.

    I agree that many hindus are unaware of Ramanuja. However, that does not justify mu.ka writing for a serial.

    Rama,
    குறைந்த பட்ஜெட்டில் அதிக கதா பாத்திரங்கள் இல்லாமல் நடந்ததை சொல்ல முனைவதென்பது அவ்வளவு எளிதல்ல

    I wonder how budget comes in the way of character depiction. Also, Yadhavaprakasar was not a haughty man per se. He was a highly learned & respected teacher. He was however jealous of his disciple & tried to kill him. Later, he repented for a his guilt & became his sishya.

  44. விநாயகர் பால் குடித்தார் என்பது அபத்தமாக மக்கள் முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொண்ட விஷயம்
    Rangan,

    I disagree. I am digressing here, but this Is not a myth or some fallacy. When the news of Lord Ganesha idols drinking milk started making the rounds, rationalists were quick to point out that it was due to surface tension, capillary effect etc., But some idols drank milk while some did not. There was no capillary effect in these cases? Also, why did this happen only on that particular day? The capillary effect was there only on that day? No answer to such questions.

    There are lots of questions for which science still has no answers. So, till such time, there is nothing like mooda nambikkai. It works for me, so how can that be a moodanambikkai?

    Also, many people were saying that this is foolish to believe (as U have said) – how can an idol drink milk etc.,?

    My question is – U are the very same people who have prayed before that idol every day. If you had all along believed it was only stone, why were U wasting your time praying before an inanimate object? Do you stand in front of say a table/fan & pray? That is also an inanimate object.

    So, do U accept that you have been a fool all along since the idol was/is just a stone & nothing else?

    This topic requires a much deeper study & cannot be wished off in one sentence.

    Sorry for the digression, again.

  45. Rama,
    குறைந்த பட்ஜெட்டில் அதிக கதா பாத்திரங்கள் இல்லாமல் நடந்ததை சொல்ல முனைவதென்பது அவ்வளவு எளிதல்ல

    I wonder how budget comes in the way of character depiction. Also, Yadhavaprakasar was not a haughty man per se. He was a highly learned & respected teacher. He was however jealous of his disciple & tried to kill him. Later, he repented for a his guilt & became his sishya.

    Sorry, this was a reply for Sarang’s post, not Rama.

  46. திரு சஞ்சய் அவர்களே

    வசு ருத்ர ஆதித்ய தேவர்கள் மூலமாக என் பித்ருக்களுக்கு நான் அளிக்கும் தர்ப்பணம் சென்று அடைகிறது என்று நம்பித்தான் ( நம்பிக்கை – மூட நம்பிக்கை அல்ல ) நான் தர்ப்பணம் செய்து கொண்டிருக்கின்றேன். அது போல நாம் செய்யும் பூஜைகளும் அர்ச்சனைகளும் ஹோமங்களும் அந்தந்த தேவதைகளை சென்று அடையும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

    ஒரே ஒரு வித்தியாசம் என்னுடைய கண்ணோட்டத்திலே – தெய்வ வழிபாட்டு பலன்கள் நம்முடைய பன்ஜெந்திரியங்களுக்கு நேரடியாக தெரியாது – மறைமுகமாகத்தான் உணர முடியும். இது என்னுடைய நம்பிக்கை. நீங்கள் இதை ஒத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை.

  47. Rangan,

    I am also making the same point. I may or may not agree with your beliefs & vice versa. But I cannot term your belief as a “mooda nambikkai”.

    I think we are on the same page in this.

    Thanks for the clarification.

  48. ஸ்ரீ வைஷ்ணவ மரபு பற்றியும், ஸ்ரீ வைஷ்ண சம்பிரதாயங்கள் பற்றியும் கூட, இந்த படம் சிறப்பாக விளக்குவதாக நினைக்கிறேன்.. பாஞ்சராத்ர சம்ப்ரதாயங்கள் இப்படத்தில் தெளிவாக தெரிகின்றன..

    ஸ்ரீ வைஷ்ண மரபு சிறப்பாக வளராத இலங்கையில், இந்த படத்தை பார்க்கிறவர்களுக்கு வைஷ்ணவமரபு பற்றிய புரிதல் ஓரளவு உண்டாகலாம்.. இதற்காகவே, இந்த பட லிங்கை நான் பலருக்கு அனுப்பினேன்.. இதனை அறிமுகம் செய்த ஜடாயுஜீக்கு நன்றிகள்..

  49. இந்து மதம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தனி உடைமை அல்ல.

  50. //இந்து மதம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தனி உடைமை அல்ல.//

    அந்த குறிப்பிட்ட இனம் வேதம் மட்டும் போதும் என்கிறது. மதத்தை தாராளமாக யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். வேதமும் அவர்களிடமிருந்து வேண்டுமா ? முடியும். உங்கள் குழந்தைகளை 7 வயதிலே கொண்டு போய் வேத பாடசாலையில் விட தைரியம் இருக்கின்றதா ?

    அது சரி – திரு தனசேகரன் அவர்களே – ஐய்யப்பன், ஆடி அம்மன், தைப் பூச முருகன், மகாசிவராத்திரி மயானக் கொள்ளை இதெல்லாம் ‘ஒரு குறிப்பிட்ட இனத்தின்’ தனி உடைமையாகவா இருக்கின்றது ?

  51. எஸ் தனசேகரன்
    “இந்து மதம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தனி உடைமை அல்ல”.
    யார் சொன்னது ஹிந்துமதம் எங்களுக்குமட்டும் சொந்தமென்று. அதைச்சொல்லுங்க முதலில். ஹிந்து பண்பாடு பாரம்பரியம் தன்னை விமர்சிப்பதை எப்போதும் அனுமதித்துவந்திருக்கிறது. விவாதம் இதன் பல்லாயிரம் ஆண்டுவரலாற்றில் தொடர்ச்சியாகக்காணப்படும் ஒரு நடைமுறை. ஆனால் விவாதம் வேறு இழிவு செய்தல் வேறு. அபிராஹாமிய இழிவு செய்யும் நடைமுறையை ஏற்கமுடியாது. திராவிட இயக்கமே அபிராஹாமிய இழிவு அணுகுமுறையின் தொடர்ச்சி. இழிவுவாதிகள் தாங்களும் ஹிந்துக்கள் என்றால் அதற்காக மகிழும் மனோ நிலையில் தர்மத்தினைப்போற்றும் ஹிந்துக்கள் இல்லை. இதுவும் துரோகத்தின் ஒரு அங்கமாகவே யாம் காண்போம்.

  52. Namasthe Jatayu Sir
    I fully agree with your view that a kayavan who is the personification of hypocrisy is not suitable to write the biography of Saint Ramanujacharyar. It is appalling that a respectable magazine, like
    Kalki is promoting this Kayavan’s attempt to portray the life history of The Saint, Sri Sri Sri Ramanujacharyar. His intention is to profit monetarily and politically by hurting the feelings of Brahmins.
    Karunanidhi, is a home wrecker who introduced liquor in TN and ruined many families. Why can’t he take a documentary film about how happy families were ruined by the introduction of his liquor policy. He would profit nothing by such a documentary.
    Sakuntala

  53. கருணாநிதி ராமானுஜரை பற்றி எழுதுவது.. சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்

  54. Even religiously oriented people have taken documentaries on Sri Ramanujachariar. None of these came even close to G. V. Iyer’s production. Dedication and total faith in the tradition are essential to come up with a successful film on such a great saint. In a related topic none of the Indian production on Gandhi was as successful as the British production. It took a dedicated English man to come up with such a grand movie. Even the make up on the artists in the TV serial on Sri Ramanujar makes me vomit. The TV serial has been taken by unqualified people. In TV debates we come across unqualified people arguing on religious topics. These will only prmote ignorance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *