தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-4

அடுத்த சர்ச்சைக்கு வருவோம். திரு.பாண்டே அவர்கள் பெரியார் தலித்துகளுக்காக வைக்கம் போராட்டத்தை தவிர வேறு என்ன போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? என்று கேட்டார். மேலும் அவரே தொடர்ந்து சொல்லும்போது பெரியார் கோரிக்கை வைத்தார், நிறைய எழுதினார், பேசினார் என்பது அல்லாமல் நேரடியான போராட்டங்கள் என்ன என்று கேட்கிறார்.

அதற்கு திரு.வீரமணி அவர்கள் நேரடியான பதிலை சொல்லவில்லை என்பதை பார்த்த அனைவருக்கும் தெரியும். பேட்டி முடிந்தவுடன் மறுநாள் திராவிடர் கழகம் சார்பாக ஒரு மறுப்பை அளித்தார்கள். அதில் பாண்டே கேட்ட இந்த கேள்விக்கான விடையாக அவர்கள் அளித்த பதில் :

தாழ்த்தப்பட்டோருக்கான திராவிடர் இயக்கத்தின் போராட்டங்கள் எனும் பெருவரலாற்றின் ஒரு சிறுதுளி என்ற தலைப்பில் அது வெளியிடப்பட்டது.

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரன் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்! (தந்தை பெரியார் (குடியரசு 11-10-1931)

அந்தக் காலத்தில் திராவிடர் கழகத்திற்குப் பெயரே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்பதுதான். அதைப் பெருமையாக கருதும் கழகம் இது.

நீதிக்கட்சி ஆட்சியிலும், அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களின் ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டோர் நலன் காக்கவும் உரிமை பெறவும் ஆற்றிய பணிகள் ஏராளம்! ஏராளம்! சான்றுக்குச் சில…..

எந்தப் பொதுஇடத்திலும் ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டோர் நுழைவதைத் தடை செய்ய முடியாது, தடை செய்யக் கூடாது என்று அரசு ஆணையை 1924லேயே வெளியிட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாவிட்டால் முன்னறிவிப்பு இன்றி பேருந்து உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணை விடுத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்த ஊ.பு.ஆ.சௌந்தரபாண்டியன். (1930)

பள்ளிகளில், கல்லூரிகளில் நுழையவும், படிக்கவும் தடை செய்தால் உரிமம் ரத்து என்று அறிவிப்பு

பச்சையப்பன் கல்லூரியில் 1935வரை தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க அனுமதிக்கப்படாதிருந்த நிலையை அழுத்தம் கொடுத்து மாற்றியவர் பெரியார்.

1957 (முதுகுளத்தூர் கலவரத்திற்குப் பின்) ஜாதியை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத்தையே கொளுத்தி ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தினர் 3மாதம் முதல் 3 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை பெற்றனர்.

100 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட நீதிபதியாக வரமுடியவில்லையே என்று பெரியார் வெளியிட்ட கருத்துதான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜஸ்டிஸ் திரு.ஏ.வரதராசன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி பின்பு உச்சநீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக ஆனதற்குக் காரணம்.

காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையில் தாழ்த்தப்பட்ட தோழர்களின் உரிமை மறுக்கப்பட்டால் கிணறுகளில் இறங்கி நீர் எடுப்போம். செருப்பணிந்து வீரநடை நடப்போம் என்று போராட்ட அறிவிப்பு விடுத்து அங்கிருந்த கொடுமையை ஒழித்தவர் கீ.வீரமணி.

திருச்சி கரூரையடுத்த தோட்டக்குறிச்சி கிராமத்தில் பள்ளர் சமுதாயத்தவர்க்கும் கவுண்டர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று (1-5-1985)  பாதிக்கப்பட்ட பள்ளர் சமுதாய மக்களைச் சந்தித்தவர் கீ.வீரமணி அவர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு 18 என்று இருப்பதை மேலும் உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருவது திராவிடர் கழகம்.

தாழ்த்தப்பட்டவர் ஒருவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்ற நோக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.வரதராசன் அவர்களை முன்னிறுத்தி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டவர் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி.

சென்னையில் இயங்கும் தென்மண்டல உணவுக் கார்ப்பரேஷசனில் நான்காம் பிரிவு ஊழியரிலிருந்து மூன்றாம் பிரிவுக்குப் பதவி உயர்வு கொடுத்தபோது தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு விகிதாச்சாரத்தைக் கடைபிடிக்க உயர்ஜாதி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதனை எதிர்த்துப் போராடிய 42 தாழ்த்தப்பட்ட அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து குரல் எழுப்பியது திராவிடர் கழகம்.

திருச்சி மாவட்டம் தளவாய்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அஞ்சல்துறை அலுவலர் ஒருவரை பதவி ஏற்க விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தார்கள். திராவிடர் கழகத்தின் முயற்சியால் ஜாதி வெறியர்களின் கொட்டம் அடக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து பெருங்கலவரத்தில் ஈடுபட்டனர். தாழ்த்தப்பட்ட தோழர்கள் அங்கு கொளுத்தப்பட்ட நிகழ்ச்சியையும் ஆதரித்துத் தமிழ்நாட்டிலும் பேரணி ஒன்றை22-3-1981 அன்று நடத்த தயாரானார்கள் உயர்சாதியினர். ஆதிக்கவாதிகள் பேரணி கிளம்பும் அதே இடத்திலிருந்து எதிர் பேரணி கிளம்பி அதே பாதையில் செல்லும் என்று போராட்ட அறிவிப்பைக் கொடுத்தார். தடை விதித்தால் மீறப்படும் என்று போர்ச்சங்கு ஊதினார். விளைவு,  உயர்ஜாதியர் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

3-7-1985 அன்று தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றைப் பார்ப்பனர்கள் அரங்கேற்றத் திட்டமிட்டனர். அதேநாளில் அதனை எதிர்த்து உண்ணும் விரதம் போராட்டம் என்று அறிவித்தார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். உடனே அரசு பார்ப்பனர்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

பரமக்குடி, இராமநாதபுரம், மீனாட்சிபுரம், விழுப்புரம், மேலவளவு, தர்ம புரி போன்ற பல்வேறு இடங்களில் ஜாதி வெறியாட்டத்தின்போது, முதலில் சென்று தாழ்த்தப்பட்டோரை சந்தித்த்தோடு, அதே பகுதியில் பல்வேறு இயக்கத்தவர்களையும் இணைத்து ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தியது.

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைகள் நடத்தப்பட்டபோதெல்லாம் நாடு முழுக்க எண்ணற்ற ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணங்களை நடத்தியது.

இவை எல்லாவற்றையும் கடந்து 100 ஆண்டுகாலமாக சகமனிதனை மனிதனாக மதிக்கும் பண்பை வளர்க்கவும் ஜாதியை ஒழிக்கவும் தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை வன்கொடுமைகளை களையவும் திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் ஆற்றியிருக்கும் மகத்தான பணியின் விளைவையும் பட்டித் தொட்டி எங்கும் நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் விளைவையும் தமிழ்நாடு,  இந்தியாவின் சமூக வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள்.

இதுதான் திராவிடர் கழகம் கொடுத்த விளக்கம். நன்றாக கவனியுங்கள். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக நடத்திய போராட்டங்கள் அதாவது வைக்கம் போராட்டம் மாதிரி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சுற்றி சுற்றி விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கேட்ட கேள்விக்குத்தான் பதில் இல்லை. இந்த விளக்கத்தில்கூட பல திரிபுவாதங்கள் உள்ளன.

பள்ளன், பறையன் கட்சி என்றால் அந்தப் பெயர் ஏன் இன்றுவரை தொடரவில்லை? இதற்கு பதில் இருக்கிறதா? சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து எந்த தலித் தலைவர் இந்த அமைப்பில் பொறுப்பில் இருந்தார்? திராவிடர் கழகம் பெயர் மாற்றம் பெற்ற பிறகாவது எந்தெந்த தலித் தலைவர்கள் பொறுப்பில் இருந்தார்கள்? இதற்கு பதில் தருவார்களா? இயக்கம் ஆரம்பித்தபோது தலித்துகள் எதிரிக்கு எதிரி நண்பர் என்ற அளவில்தான் நம்பினார்கள். ஆனால் போக போக இந்த அமைப்பு நமக்கானது அல்ல என்று புரிந்துகொண்டார்கள். தலித்துகளின் இந்தப் புரிதலுக்கு முதலில் வித்திட்டவரே தலைவர் எம்.சி.ராஜா.தான். நீதிக்கட்சி செய்த துரோகங்களை அம்பலப்படுத்தியவரும் இவரேதான். தலித் தலைவர்கள் அவரும் ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற அளவில்தான் அவருடன் நட்புடன் பழகினர். பெரியாரை தலித்துகளுக்கான மீட்பராக என்றுமே தலித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. பெரியாருடன் நெருக்கமாக பழகிய என்.சிவராஜ் போன்றவர்கள் கூட அண்ணல் அம்பேத்கரைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டாரே தவிர பெரியாரை அல்ல.

Mcrajaபச்சையப்பன் கல்லூரியில் 1927வரை தலித்துகள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதை எதிர்த்து பெரியார் எந்தவொரு போராட்டத்தையும் அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அப்போது எம்.சி.ராஜா முதலான தலித் தலைவர்களே அப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பெரியார் அழுத்தம் தந்தார் என்று ஒரு ஆதாரத்தையும்கூட அவர்கள் காட்டவில்லை. தெருவில் நடக்கும் உரிமை சட்டம் கூட இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் முயற்சியாலேயே கொண்டுவரப்பட்டது.

1925வரை பெரியார் காங்கிரசில் இருந்தார் என்பதை நினைவில் கொண்டு இதை ஆராயவேண்டும். அப்போது பெரியார் நீதிக்கட்சியை எதிர்த்தார் என்பதுதான் வரலாறு. நீதிக்கட்சியை எதிர்க்க பெரியார் முதலானவர்கள் பிராமணரல்லாத வேறொரு அமைப்பை ஆரம்பித்தனர். அந்தளவுக்கு நீதிக்கட்சிக்கும் பெரியார் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்கும் பிணக்கு இருந்தது. நீதிக்கட்சி கொண்டுவந்த தலித்துகளுக்கான உரிமை சட்டங்கள் பின்னால் ஒவ்வொரு கதை இருக்கிறது. அதற்குப் பின்னால் தலித் தலைவர்களின் முயற்சிகள், போராட்டங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் மறைத்துவிட்டு ஏதோ பெரியார் செய்ததுபோல் திரிபுவாதங்களை இப்போது செய்கிறார்கள்.

W_P_A__Soundrapandiyanarசௌந்தரபாண்டிய நாடார் கொண்டுவந்த பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் கூட ஏதோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துவிடக்கூடாது. அன்றைய நிலையில் நாடார்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதை மனதில் வைத்துதான் அவர் அப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் பெரியாரின் பங்கு என்ன? கலவரத்தை தடுக்க பெரியாரை நீங்கள் போகலாமே என்று சொன்னபோது இருமூர்க்கர்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தில் சென்று அடிபட வேண்டுமா? என்ற ரீதியில் பதில் அளித்தவர்தான் பெரியார். தேவரை கைது செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னார் என்று சொல்கிறார்கள். எப்போது சொன்னார்? எங்கு சொன்னார்? என்ற ஆதாரத்தை இதுவரை யாரும் வெளியிடவில்லை.

மற்றுமொரு முக்கியமான விஷயம் தலித் நீதிபதி நியமனத்தில் பெரியாரின் பங்கை வீரமணி மிகப்பெரிய பொய்யை சொல்லியுள்ளார். இதன் உண்மை விபரத்தை ஏற்கனவே தி.பெ.கமலநாதன் அவர்கள் போட்டுடைத்துள்ளார். அந்த தந்துள்ள அந்த விபரத்தை பார்க்கலாம்.

PARM1OTUS7BQQR94BW0E6I7EKD6VXF_grande

‘அவர் (நீதிபதி ஏ.வரதராஜன்) நியமிக்கப்பட்டது சாதி அடிப்படையிலா? அல்லது தகுதி அடிப்படையிலா அல்லது பணி மூப்பின் அடிப்படையிலா? அந்த நியமனம் சாதி அடிப்படையில் நடைபெற்றதென்று சொன்னால் அது நீதித்துறையில் தமது சொந்த த் திறமையைக் கொண்டே உச்சநீதிமன்ற நீதிபதியாகும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ள ஒருவரின் தகுதியையும் திறமையையும் இழிவுபடுத்துவதாகும். சாதி அடிப்படையில் அந்நியமனம் நடைபெற்றிருக்குமானால் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இன்னும் அதிகமான தலித்துகள் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும்.

இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் நீதிபதி வரதராஜன் செசன்ஸ் நீதிபதிக்குரிய அந்தஸ்தில் நீதிமன்றங்களின் பணிவரம்பு நிர்ணயக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். அடுத்த பதவி உயர்வு இயல்பாகவே உயர்நீதிமன்ற நீதிபதி பதவியே. நீதிபதி வரதராஜன் மிகக் கீழ்மட்டத்திலுள்ள மாவட்ட நீதிபதி என்ற நிலையிலிருந்து செசன்ஸ் நீதிபதியெனும் அந்தஸ்துக்குத் தம்மைத் தாமே உயர்த்திக் கொண்டவர். எந்தவொரு கறையுமில்லாதிருந்த அவரது பணி அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன வட்டத்தில் பணி மூப்புள்ள நீதிபதியின் வாய்ப்பு வந்தது. அவ்வேளையில் நீதிபதி வரதராஜன் பதவி உயர்வுக்கான விளிம்பில் இருந்தார். நீதிபதி வரதராஜனின் பெயர் பணிமூப்புள்ள நீதிபதிகளின் பட்டியலிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்குச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்டது.

அக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் திமுக கட்சி அதிகாரத்திலிருந்த்தென்பது வெறும் தற்செயல் நிகழ்வேயாகும். முதல் அமைச்சரும் சட்ட அமைச்சரும் குடியரசுத் தலைவரால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்காகத் தலைமை நீதிபதி அளிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் தந்து அப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

திமுக பெரியாரின் விருப்பங்களை முழு மனதுடன் நிறைவேற்றிருக்குமானால் முதல் அமைச்சரும் சட்ட அமைச்சரும் தங்களிடம் அந்தக் கோப்பு வந்தவுடனேயே தங்களது முத்திரையை அதில் இட்டிருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்தார்களா? நீதிபதி வரதராஜனைத் தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையத்தின் ஒரு உறுப்பினராக்கிட திமுக முயற்சி செய்தது. நீதிபதி வரதராஜன் தமது இசைவினைத் தந்திட மறுத்துவிட்டார். பின்னர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மூலமாகவும் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய கோரிக்கை அவரும் நிராகரித்தார். நீதிபதி வரதராஜன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவது ஆறு மாதங்களாகத் தாமதப்படுத்தப்பட்டது.

(நூல் : தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும் : மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும், ஆசிரியர் : தி.பெ.கமலநாதன், பக்கம் :102-103)

இந்த உண்மைகளை மறைத்து வீரமணி எப்படி பொய் சொல்கிறார் என்று பாருங்கள். இதுதான் இவர்களின் திரிபுவாதம். மேலும் வீரமணி என்னென்ன போராட்டங்கள் செய்தார் என்று பாண்டே கேட்கவில்லை. பெரியார் என்னென்னப் போராட்டங்களை நடத்தினார் என்பதுதான் கேள்வி.  ஆனால் வீரமணி செய்தது எல்லாம் சான்றாக அளித்திருக்கிறது திராவிடர் கழகம். (இவைகளை ஆராய்ச்சி செய்தால் நிகழ்ச்சிகளின் உண்மைத்தன்மைகள் வெளிவரும்) இதன்மூலம் நமக்கு திராவிடர் கழகம் சொல்வது என்னவென்றால் பெரியார் எதுவுமே செய்யவில்லை என்பதைத்தான். பாண்டேவுக்கு பதிலும் அதுதான். நமக்கும் பதிலும் அதேதான்.

இந்த நேர்காணல் சம்பந்தமாக முகநூலில் திராவிட இயக்க எழுத்தாளர்கள் பலர் திராவிட இயக்கங்கள் செய்த தலித்துகளுக்கான கோயில் நுழைவு போராட்டங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். இதுவும் எப்படியெல்லாம் திரிபுவாதம் செய்யப்படுகிறது என்பதையும் அடுத்து பார்த்துவிடுவோம்.

தொடரும்

30 Replies to “தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-4”

  1. இந்தத் தளத்தில் சொல்லும் கருத்துக்களைப் பார்க்கும் போது, ஹிந்து மதம் இனி அவ்வளவுதான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

    பாண்டேவின் அந்த நேர்காணல்களைப் பற்றி இங்கேப் படித்துவிட்டுதான், இணையத்தில் அந்த நேர்காணலைப் பார்த்தேன்.
    அவர் கேட்டவை குதர்க்கமானக் கேள்விகள், அது முட்டாள்தனமானது என்று, எவரும் சொல்லிவிடுவார்கள். அப்படிப் பட்ட நேர்காணலை வைத்துக் கொண்டு நீங்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை.

    //பெரியார் கோரிக்கை வைத்தார், நிறைய எழுதினார், பேசினார் என்பது அல்லாமல் நேரடியான போராட்டங்கள் என்ன என்று கேட்கிறார்//

    வாத்தியார் பள்ளிக்கூடத்தில் , பாடம் நடத்தினார், டியூசன் வைத்தார், பிரம்பால் அடிப் பின்னியெடுத்து சொல்லிக் கொடுத்தார், அதை தவிர வேறு என்ன செய்தார்?

    மாணவர்களுக்காக அவரே போய் பரீட்சை எழுதினாரா?, பிட் எடுத்துக் கொடுத்தாரா, இல்லை கேள்வித்தாளைத் தான் லீக் செய்தாரா? என்றும் கேட்டு, பதில் சொல்லமுடியவில்லை எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளுங்களேன்.

    பெரியார், பேசினார், எழுதினார் என்றால் அதன் மூலம் சாதியைத் தூக்கிப் பிடிக்கும் மக்களின் மனநிலையைத் தானே மாற்ற முயன்றார். இது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

  2. வீரமணி கும்பலின் உண்மையான தன்மையை தோலுரித்துக்காட்டும் அற்புதமான கட்டுரை!

  3. ஈவேரா நாயக்கர் பல மாநிலங்களில் எழுந்த மாற்று கருத்து சீர்திருத்தம் கூறியோரில், தமிழகத்தில் எழுந்த ஒரு எதிர்மறை செயல்பாட்டாளர், கிறிஸ்துவ சர்ச்சுகள் துணையை பெற்றவர், ஆனால் தமிழக் ஆட்சிகள் ஈவேரா தமிழர்களை பண்பாட்டை எதிர்த்து செயல்பட்டதை, உடனடியாக காவல்துறை மூலம் அன்றும், இன்றும் செயல் பட்டிருக்க வேண்டும்.

    ஈவேரா நாயக்கர் பிள்ளையார் சிலை உடைத்தது தவறு என வீரபத்ரன் செட்டியார் போட்ட வழக்கின் தீர்ப்பின் கடைசி வரிகள் . https://indiankanoon.org/doc/165707/
    Courts have got to be very circumspect in such matters, and to pay due regard to the feelings and religious emotions of different classes of persons with different beliefs, irrespective of the consideration whether or not they share those beliefs, or whether they are rational or otherwise, in the opinion of the court.
    The action complained of against the accused persons, if true, was foolish, to put it mildly, but as the case has become stale, we do not direct further inquiry into this complaint. If there is a recurrence of such a foolish behaviour on the part of any section of the community, we have no doubt that those charged with the duty of maintaining law and order, will apply the law in the sense in which we have interpreted the law.
    சட்டப்படி உயர்நீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது. மீண்டும் பெரும்பான்மை மக்கள் மனதை புண்படுத்தினால் நடவடீகை என.
    எனவே பெரும்பான்மை மக்கள் மனதை புண்படுத்துவதை வழக்கமாகக் கொண்ட தி.க. போன்றோரை அரசு மிக நிச்சயமாய் கடுமையாய் முதலிலேயே தடுத்திருக்க வேண்டும்.
    ஆனால் ஈவேரா நாயக்கர் நாடு முழுதும் எழுந்தபல சீர்திருத்தம் சொன்னவர்களில் அறுவருப்பாக எதிர்மறையாக செயல்பட்டவர். அவரின் சாதனையைவிட 1000 மடங்கு அவரை உயர்த்துவதும் தவறு, தனக்குப் பின்னர் தன் மகன் என வீரமணி செயவது அதைவிடக் கேவலம். எப்படி ஈவேரா நாயக்கர் தன் திருமணத்தால் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் சிந்தனையாளர் இடையே இழந்தார்.

  4. வஞ்சனை சொல்பவன் என்ற புனை பெயரில் பம்மும் இந்த கோழை தனது வஞ்சனை கருத்தை தைரியமிருந்தால் இஸ்லாமிய தளங்களில் சென்று தெரிவிக்கட்டும். இந்த தளம், தேச தெய்வ பக்தி கொண்ட இந்து சமயத்தவர்களுக்கானது. எம் இந்து சமுதாய மக்கள் எவ்வாறெல்லாம், வேற்று மதத்தோர், மற்றும் அந்நிய அடிவருடி இயக்கங்கள் மூலம் வஞ்சிக்கபடுகின்றனர் என்பதை இந்துக்களுக்கு உணர்த்தவே இத்தளம். அந்நியர்களுக்கும், அந்நிய அடிவருடிகளுக்குமானது அல்ல.

  5. வஞ்சனை சொல்பவன்

    // இந்தத் தளத்தில் சொல்லும் கருத்துக்களைப் பார்க்கும் போது, ஹிந்து மதம் இனி அவ்வளவுதான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. .//

    மதம் என்பதே மனிதனின் விலங்கு எண்ணங்களை விலக்கி (உதாரணமாக கோழை மணியின் தாலி அறுப்பு போராட்டம் ஒரு விலங்கு எண்ணம் கொண்ட செயல்தான்) மனிதநேயத்தோடு வாழ வழிநடத்துவதே ஆகும். இதை ஹிந்து மதம் தவிர மற்ற மதங்கள் செய்வதில்லை என்பது வரலாறு கூறும் உண்மை. அன்னிய மதங்கள் செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது இன, கலாசார, மனிதநேயமற்ற படுகொலைகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. எனவே ஹிந்து மதம் அழிந்தால் மனித இனமும் அழியும் என்பது நிதர்சனம்.

    // பாண்டேவின் அந்த நேர்காணல்களைப் பற்றி இங்கேப் படித்துவிட்டுதான், இணையத்தில் அந்த நேர்காணலைப் பார்த்தேன். அவர் கேட்டவை குதர்க்கமானக் கேள்விகள், அது முட்டாள்தனமானது என்று, எவரும் சொல்லிவிடுவார்கள். அப்படிப் பட்ட நேர்காணலை வைத்துக் கொண்டு நீங்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை. //

    அட வஞ்சனை சொல்பவ…….. னே பாண்டே கேட்ட கேள்வி குதர்கமானது அல்ல கோழைமணி பதில்தான் குதர்கமானது குழந்தை தனமானது. பாண்டே திரும்ப திரும்ப ஏன் நீங்கள் ஹிந்து மதத்தை மட்டும் தாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு திரும்ப திரும்ப அவர்கள் பெருன்பான்மையானவர்கள் அவர்களின்தாக்கம்தான் சமூகத்தில் அதிகம் எனவே எதிர்கிறோம் என்கிறார். ஆனால் 3 சதவிகிதத்திற்கு குறைவான பிராமணர்களின் தாக்கம் இந்த பெருன்பான்மை ஹிந்து சமூகத்தின்தாக்கத்தை விட அதிகம் என்ற அடிப்படை கொள்கையுடன் வயிற்று பிழைப்பை நடத்தி கட்சியை வளர்த்தவர்கள். இன்று இந்தியாவில் இஸ்லாமியர்கள் 20 சதவிகிதத்தையும் கிருஸ்துவர்கள் 10 சதவிகிதத்தையும் எட்டிவிட்டார்கள். இவர்களின் தாக்கம் சமூகத்தில் பல பிரிவினை தீமைகளை வித்திட்டுவறுகிறது என்பதை கண்மூடி வாய்பொத்தி கேள்வி கேட்க பயந்து சகித்துக் கொண்டிருப்பவர்தான் இந்த கோமாளி மணி. இந்த பித்தலாட்ட பேர்வழி செவ்வாய் கிழமை தாலி அறுப்பு போராட்டம் செய்தார் உடனே இவர் முன்பு நடத்திவைத்த சுயமரியாதை திருமணத்தில் இவர் கையால் மணமகளுக்கு தாலி எடுத்து கொடுக்கும் விடியோ வலை தளங்களி்ல் அசிங்கப்பட்டு வருகிறது என்பது தெரியுமா உங்களுக்கு !! ??

    https://www.facebook.com/video.php?v=462054250625854&fref=nf

    // பெரியார், பேசினார், எழுதினார் என்றால் அதன் மூலம் சாதியைத் தூக்கிப் பிடிக்கும் மக்களின் மனநிலையைத் தானே மாற்ற முயன்றார். இது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? //

    இதோ இவர்தான் பெரியார்

    1. கடவுளை படைத்தவன் முட்டாள் கடவுள் இல்லவே இல்லை என்று முழங்கிய பெரியார்
    2. தமிழை காட்டுமிராண்டி பாஷை என ஏளனம் பேசிய பெரியார்
    3. விலை மாதர் இல்லங்களில் பெரியார்
    4. தனது 17வது வயதில் 13 வயது நாகம்மையை திருமணம் செய்த பெரியார்
    5. தனது 75வது வயதில் 26 வயது மணியம்மையை மணந்த பெரியார்
    6. நாகம்மையை தாசி என்று நன்பர்களிடம் பெருமைபட்ட பெரியார்
    7. வெளிநாடு சென்று நிர்வாண சங்கத்தில் கூத்தடித்த பெரியார்
    8. ஆண் ஆதிக்க மனோபாவம் படைத்த பெரியார்
    9. ஆண் பெண் உறவு குடும்பமுறையை லீகல் விபசாரம் என்று வர்ணித்த பெரியார்
    10. வைகம் போராட்டதின் சொற்ப பங்கை மிகைபடுத்திய பெரியார்
    11. தனது 46 வயது வரை தெய்வ நம்பிக்கை கொண்டிருந்த பெரியார்
    12. கடவுளை மறுத்தவர் இந்துகளை சீண்டினாரே அன்றி முஸ்லீம்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் பயந்த தொடை நடுங்கிய பெரியார்
    13. ஜாதி இந்துகள் முன்னேற்றத்திற்கு மட்டும் பாடுபட்ட பெரியார் தீண்டதகாதவர்களை கண்டுகொள்ளாத பெரியார்
    14. சுதந்திரமே வேண்டாம் நாம் பிரிடிஷ்ஷாரால் அங்கிருந்தே ஆளபடுவதை வரவேற்று முழங்கிய அடிமை புத்தி பெரியார்

    இப்படி 108 நாமாவளிகளை கூறதக்க முறையில் வாழ்கை நடத்திய சிறியாராகிய கண்னட நாயகரை பெரியார் ஆக்கியதே இந்த பிற்போக்கு திராவிட வியாதிகள் செய்தது பெரிய தவறு.

  6. //வஞ்சனை சொல்பவன் என்ற புனை பெயரில் பம்மும் இந்த கோழை….. இந்த தளம், தேச தெய்வ பக்தி கொண்ட இந்து சமயத்தவர்களுக்கானது. எம் இந்து சமுதாய மக்கள் எவ்வாறெல்லாம், வேற்று மதத்தோர், மற்றும் அந்நிய அடிவருடி இயக்கங்கள் மூலம் வஞ்சிக்கபடுகின்றனர் என்பதை இந்துக்களுக்கு உணர்த்தவே இத்தளம். அந்நியர்களுக்கும், அந்நிய அடிவருடிகளுக்குமானது அல்ல.//

    இது எனக்குச் சரியாகப்படவில்லை. சிலவருடங்களாக தமிழ்.ஹிந்து.காம் படித்துவரும் எனக்குத் தெரிந்த மட்டும், இத்தளம் இந்து சமயத்தவருக்கானது என்று வரும் கட்டுரைகளை வைத்து மட்டுமே சொல்லலாம். பின்னூட்டங்கள் சுவனப்பிரியன் போன்ற இசுலாமியர்களால், ரெபெக்கா, சிசம போன்ற கிருத்துவர்களால், வைதீகத்தையும் பிராமணீயத்தையும் சமசுகிருத்தத்தையும் தள்ளி இந்துக்களாக இருக்கும் என்னைப்போன்ற அவைதீகரகளாலும் போடப்படுகின்றன‌.

    எனவே கண்ணன் த‌ன் கோரிக்கையை இத்தளத்தாரிடமே வைத்துவிட்டால் நல்லது. என்னைப்பொறுத்தவரை, பின்னூட்ட விவாதமேடை தேவையில்லை. கம்ப்ளீஸ்ட் வேஸ்ட்.

    திராவிட இயக்கத்தை விமர்சித்து கட்டுரை வருமாம். அவ்வியக்கத்தைச்சேர்ந்த ஒருவர் அதை விமர்சிப்பாராம். கண்ணன் போன்றோரின் மனங்கள் புண்படுமாம். கட்டுரையை விமர்சித்தவரை ஒருமையில் இழித்துரைத்து திட்டுவார்களாம்.

    இவையெல்லாம் தேவையா? அன்னாரின் பின்னூட்டமே தேவையில்லையென்பதே என் நிலைபாடு. ஈவெராவைப்புகழ அவர்கள் தளமிருக்க இங்கேன்?

    (But I suspect someone from the regulars here i.e. pro Hindu, is playing a Devil’s Advocate by putting such anti comments 🙂 my guess only)

    ஒரு கட்டுரை போடப்பட்டால், அதில் வைதீகத்தையும் பிராமணீயத்தையும் சமசுகிருத்தையும் போற்றும் இந்துக்கள் மட்டுமே பின்னூட்டமிடலாம் என்று வைத்துவிடுதல் நலம். திராவிட இயக்கத்தைப்பற்றிய கட்டுரைகள் போடப்பட்டால், அக்கட்டுரைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே பின்னூட்டமிடலாம் என்றிருக்க வேண்டும். மேலும், அக்கட்டுரைகளை விமர்சித்து பிறர பின்னூட்டமிட்டால் கடுமையாகவும் அசிங்கமாகவும் ஏசப்பட்டு அவர்கள் தனிநபர் ஒழுக்கம் இகழப்படும் என எச்சரிக்கை விட்டால் எல்லாரும் ஓடிவிடுவார்கள். இப்படிச்செய்யாமல், தாங்கள் ஒரு ஜனநாயக தளம் என்று சொல்லிக்கொண்டு உங்களைப்போன்றோருக்கு சங்கடம் ஏன் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    Please restrict it to not only Hindus, that too, to those Hindus who accept all kinds of articles here. Remove comments area. For real debates, persons like me can go to other netural forums. In English, swarajyamag.com is emerging as a fine forum for stimulating debates.

  7. The Reverend is back again offering pearls of wisdom to us,the unwashed Hindus, in his usual patronising ways. Thanks but no thanks Reverend. You should spend more of your time and energy on the thorny issue of padophilia in your church. Now we have another new sidekick in VS.

  8. ///////வாத்தியார் பள்ளிக்கூடத்தில் , பாடம் நடத்தினார், டியூசன் வைத்தார், பிரம்பால் அடிப் பின்னியெடுத்து சொல்லிக் கொடுத்தார், அதை தவிர வேறு என்ன செய்தார்?/////

    வாத்தியார் ஒழுங்கா பாடம் சொல்லிகொடுத்திருந்தால் பிட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒழுங்கா பாடம் சொல்லியிருந்தால் tuition ம் தேவை இல்லை. மேல் வருமானத்திற்காக பள்ளியில் பாடம் சொல்லி தருவதில்லை. அப்புறம் வீட்டுக்கு tuition க்கு வா என்று சொல்லி சிறு சிறு வீட்டு வேலைகள் செய்ய சொல்வதுதான் வாத்தியார் வேலையா?

    அவர் எழுதினார், பேசினார் என்றால் அது போதுமா? இவர் என்ன IAS ஆபீசரா ? மாற்றம் வேண்டுமெனின் பீல்டில் இறங்கி வேலை செய்யணும். சும்மா மேடையில் பேசி, பேப்பரில் எழுதிவிட்டால் போதுமா?

  9. அன்பின் ரெவ ரெண்டு ஜோ அமலன்

    \\ But I suspect someone from the regulars here i.e. pro Hindu, is playing a Devil’s Advocate by putting such anti comments 🙂 my guess only) \\

    அது வேறொன்றுமில்லை. கூசாமல் பொய் சொல்வதற்காக பொய்யான பெயர்களில் திரும்பத் திரும்ப அவதாரம் எடுப்பது தங்களது செயல்பாடு என்பதால் அவ்வாறு தோன்றுகிறது.

    ஒரே நபர் பல பெயர்களில் செயல்படுவது ஒழுங்கற்ற செயல் என்று நானும் அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயரும் இந்த தளத்தில் தொடர்ந்து கருத்துப் பகிர்ந்துள்ளோம்.

    \\ கண்ணன் போன்றோரின் மனங்கள் புண்படுமாம். கட்டுரையை விமர்சித்தவரை ஒருமையில் இழித்துரைத்து திட்டுவார்களாம். \\

    அது வேறொன்றுமொல்லை. தற்போது பி.எஸ் என்ற பொய்ப் பெயரில் கருத்துப் பதியும் அன்பர் ஜோ அமலன் அவர்கள் முன்னாளில் ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவாகக் கருத்துப் பகிர்ந்த போது கொடுத்த வாக்குமூலத்தை இங்கு பகிர்ந்து விடுகிறேன்

    https://tamilhindu.com/2010/09/some-azhwar-poems-1/

    “””””” படிக்கக்காத்திருக்கிறேன். ஏன்னா. நமக்கு தமிழ் கொஞ்சம் வீக்கு. தமிழிந்து.காமை அதுக்குத்தான் படிக்கிறேன்.”””””

    ஒரு அன்பரை …….. அவன் ……. இவன் …….. என்று சுட்டுவது தமிழில் ஒருமையில் விளிப்பது என்பதாகும். ரெவ ரெண்டு அவர்கள் தமிழ்ல் வீக்கு என்ற படிக்கு இப்படி வீங்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

    கண்ணன் அவர்கள் அன்பர் வஞ்சனை சொல்பவன் அவர்களை ஒருமையில் விளிக்காத போது…….. ஒருமையில் விளித்ததாகவும் சொல்லி இழித்துரைத்ததாகவும் அன்பர் ஜோ அமலன் சொல்வது பொய்.

    அது மட்டுமின்றி இங்கு தளை தட்டாது கவிதை புனைந்துள்ள ஸ்ரீ பத்மனாபன் அவர்கள் அமரர் ஸ்ரீ வாலி அவர்களை விமர்சித்தமையை ……… தகுதி இல்லாதவர் செயல் என்றும் கருத்துப் பகிர்ந்துள்ளார். தமிழில் வீக்கான ஒரு நபர்(அப்படி வாக்குமூலம் கொடுத்தவர்)……. தமிழில் புலமை பெற்ற ஒரு அன்பரின் தகுதியை எதிர்மறையாக விமர்சிப்பது……. நேர்மையில்லாத செயல்………அதிக ப்ரசங்கம்.

    \\ திராவிட இயக்கத்தை விமர்சித்து கட்டுரை வருமாம். அவ்வியக்கத்தைச்சேர்ந்த ஒருவர் அதை விமர்சிப்பாராம். கண்ணன் போன்றோரின் மனங்கள் புண்படுமாம். \\

    கண்ணன் தான் புண் பட்டதாக இங்கு கருத்து முன் வைக்கவும் இல்லை. அதற்கு மாறாக கண்ணன் அவர்கள் புண்பட்டதாக அன்பர் ஜோ அமலன் சொல்வதும் கூசாத பச்சைப் பொய்.

    \\ எனவே கண்ணன் த‌ன் கோரிக்கையை இத்தளத்தாரிடமே வைத்துவிட்டால் நல்லது. என்னைப்பொறுத்தவரை, பின்னூட்ட விவாதமேடை தேவையில்லை. கம்ப்ளீஸ்ட் வேஸ்ட். \\

    ஜெனாப் சுவனப்ரியன், அன்பர்கள் சில் சாம், ரெபெக்கா போன்றோர் மாற்று மதத்தவர்கள் ஆனாலும்………மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் ஆனாலும்…….. வ்யாசத்தை ஒட்டியே தங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அன்பர் ரெவ ரெண்டு ஜோ அமலன் அவர்கள் ………. தமிழ் ஹிந்து தளத்தில் வ்யாசத்தை ஒட்டி விவாதம் என்பது நிகழவே கூடாது என்பதற்காக ……… பொய்யான வெட்டிக்கருத்துக்களை தொடர்ந்து வைக்கிறார். அந்த அலகீட்டின் படி அவருடைய பின்னூட்டங்கள் கூட வேஸ்ட் என்று சொல்லிவிடலாமே.

    \\ ஒரு கட்டுரை போடப்பட்டால், அதில் வைதீகத்தையும் பிராமணீயத்தையும் சமசுகிருத்தையும் போற்றும் இந்துக்கள் மட்டுமே பின்னூட்டமிடலாம் என்று வைத்துவிடுதல் நலம். \\

    இப்போது இந்த வ்யாசத்துக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் வைதீகத்துக்கும் ப்ராமணியத்துக்கும் என்ன சம்பந்தம். வேலை மெனக்கெட்டு ஸ்ரீ.ம.வெங்கடேசன் அவர்கள் தரவுகளை ஆராய்ந்து த்ராவிட தேசவிரோத சக்திகளின் பொய்க்கருத்துக்களை கருத்து வாரியாக அம்பலம் செய்வது ………… தலித் விரோதியாகிய……….. போலி தலித் முதலைக்கண்ணீர் வடிக்கும்…….. ஆதிக்க ஜாதி வெறியுடன்……….. ஈ.வெ.ராமசாமியின் பக்தகோடியாகிய……… ஏற்புடையது இல்லை என்றால்………..

    ஒன்று விவாதங்களில் பங்கெடுக்காமல் இருக்கவும்.

    அல்லது அன்பின் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் பகிரும் கருத்துக்கள் தவறானவை என்றால்……… அவருடைய தரவுகம் ஏன் தவறு என்று கருத்துப் பகிரட்டும்.

    பின்னூட்டங்களால் இழையின் போக்கை மடைமாற்றம் செய்பவர் ……… என்று ரெவரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ…… காவ்யா……..TAMIL……..அய் அய் எம் கணபதி ராமன்……..பால சுந்தரம் க்ருஷ்ணா……….. அப்பால பி எஸ் என ஒவ்வொரு அவதாரத்திலும் தொடர்ந்து ………. செயல்பட்டு வரும் அன்பர் ஜோ அமலனின் செயற்பாடு நேர்மையானது அன்று.

    அன்பர் ரெவ ரெண்டு ஜோ அமலன் அவர்கள் நிச்சயமாக மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கலாம். அவை தரவுகள் சார்ந்தவை என்றால் வாசகர்களால் ஏற்கப்படும். இல்லையென்றால் மறுதலிக்கப்படும்.

    கண்ணன் ஜீ யாரையும் இழிவு செய்யவில்லை. ஆனால் அன்பர் ஜோ அமலன் நிச்சயமாக ……….. தலித் விரோதி மற்றும் ஆதிக்க ஜாதி வெறியரான இனவெறி ஈ.வெ.ராமசாமி அவர்களது பக்தகோடியாக இருப்பதால்…….. தரவுகள் சார்ந்து இந்த வ்யாசத் தொடரில் விவாதம் நடக்கவொண்ணாது………. அன்பின் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்களை ……… அவர்களது உழைப்பை இழிவு செய்கிறார்.

    \\ Please restrict it to not only Hindus, that too, to those Hindus who accept all kinds of articles here. \\

    தமிழ் ஹிந்து தளம் நமது இஸ்லாமிய, க்றைஸ்தவ சஹோதரர்கள் மாற்றுக் கருத்துடைய எல்லா அன்பர்களுடைய மாற்றுக் கருத்துக்களையும் அனுமதித்தே வருகிறது. தங்களைப் போன்ற முகமூடி க்றைஸ்தவருடைய கருத்துக்களையும் கூட தொடர்ந்து அனுமதிதே வருகிறது என்பதும் தாங்கள் அறிந்ததே.

    \\ For real debates, persons like me can go to other netural forums. In English, swarajyamag.com is emerging as a fine forum for stimulating debates. \\

    இந்த தளத்து விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று யாரும் தங்களை வற்புறுத்தியதாகத் தெரியவில்லையே. இதுவரை தாங்கள் வ்யாசம் சார்ந்து தாங்கள் விவாதிக்க விழைந்தமை விதிவிலக்குகளே அல்லாமல் விதி என்று இருந்ததே இல்லை.

  10. //அவர் கேட்டவை குதர்க்கமானக் கேள்விகள், அது முட்டாள்தனமானது என்று, எவரும் சொல்லிவிடுவார்கள்.//

    பாண்டே இப்படிக் கேட்டிருக்கலாமோ ?

    ” ஹிந்து மதத்தைத் தவிர பிற மதங்களை – முக்கியமாக – இஸ்லாம் மதத்தை தி க விமரிசிப்பதில்லை, ஏனென்றால் பயம்தான் காரணம் என்று கூறும் பார்பன சதிகார சூழ்ச்சி பேச்சுக்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?”

    ( வீரமணி – என்ன வேண்டுமான்னாலும், சொல்லலாமா பாண்டே ?
    அடிச்சு விடுங்க அண்ணே – இது ஒங்க நிகழ்ச்சி யார் என்ன சொல்ல போறாங்க.)

    இப்போ இது அறிபூர்வமானது என்று எவரும் சொல்லிவிடுவார்கள் !!!!!

  11. அன்பின் ஸ்ரீ ம.வெ,

    தங்களுடைய வ்யாசத் தொடரை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அயராது உழைப்பின்பாற்பட்டு……. ஒவ்வொரு வ்யாசத் தொடரையும் ………தரவுகள் சார்ந்து பகிர்ந்து வரும் தங்களது உழைப்புக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    \\ சௌந்தரபாண்டிய நாடார் கொண்டுவந்த பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் கூட ஏதோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துவிடக்கூடாது. அன்றைய நிலையில் நாடார்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதை மனதில் வைத்துதான் அவர் அப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். \\

    மேற்கண்ட கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஐயா.

    சௌந்தரபாண்டிய நாடார் அவர்களது உளக்கிடக்கை நாடார் சமூஹத்தினருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இருந்ததாகவே வைத்துக்கொண்டாலும்……..தாழ்த்தப்பட்ட சமூஹத்தினர் அனைவரும் பேருந்துகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கொணரப் பாடுபட்டது……… அனைத்து தாழ்த்தப்பட்ட சமூஹத்தினரின் நலனுக்காகத் தானே. இந்த செயற்பாட்டில் என்ன குறை கண்டீர்கள்?

    செயற்பாடு நேர்மையானது என்ற போது உளப்பாடு குறுகிய நோக்கம் உடையது என்று எதிர்மறையாக விமர்சிப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

  12. அன்பர் ஸ்ரீ வெங்கடேசன் அவர்களது உழைப்புக்கு அணி சேர்க்கும் விதமாக மேலதிகத் தரவுகள் பகிர்ந்துள்ள அன்பின் ஸ்ரீ கருப்பையா அவர்களுக்கு நன்றிகள்.

    அன்பர் ஈ.வெ.ராமசாமி அவர்களது செயற்பாடுகள் ந்யாயாலயங்களால் எதிர்மறையாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள்து என்று ஆதாரபூர்வமான தங்களது கருத்துக்கள் த்ராவிட இயக்கம் என்ற சமூஹ விரோதக் கும்பலின் செயற்பாடுகளைத் தோலுரிக்கிறது என்றால் மிகையாகாது.

    ரெவ ரெண்டு ஜோ அமலன் அவர்கள் வ்யாசத்தில் சொல்லப்படும் கருத்துக்களை மறுக்க அவர்களிடம் தரவுகள் இருந்தால் நிச்சயம் பகிரலாம். இங்கு கருத்துப் பகிர்ந்த ஸ்ரீமான் கருப்பையா அவர்களது ஜாதி என்ன என்று பார்த்து யாரும் அவரது கருத்துக்களை ஏற்கவில்லை அல்லது மறுதலிக்கப்போவதில்லை. மதிப்பு கருத்துக்களுக்கே.

  13. பாம்பையும் பாதிரியையும் ஒண்ணாப் பார்த்தால் பதிரியை முதல்ல அடி என்பது தென் மாவட்ட செவிவழி பழமொழி.

    ஏசு யூதரல்லாதவர்களை நாய், பன்றி என இனவெறி மிக்க பேசியவர் அதைப் பற்றி பாதிரியார் ஜோ அமலன் சொல்லவேண்டும்.
    இயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே
    https://tamilsamayam.wordpress.com/2014/03/09/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/

  14. /திராவிட இயக்கத்தை விமர்சித்து கட்டுரை வருமாம். அவ்வியக்கத்தைச்சேர்ந்த ஒருவர் அதை விமர்சிப்பாராம். கண்ணன் போன்றோரின் மனங்கள் புண்படுமாம். கட்டுரையை விமர்சித்தவரை ஒருமையில் இழித்துரைத்து திட்டுவார்களாம்.//

    BS

    இதை இப்படிப் போட்டுப் பாருங்களேன் –

    ”ஹிந்து மதத்தை விமர்சித்து கட்டுரை வருமாம். அம்மதத்தைச் சார்ந்த ஒருவர் அதை விமரிசிப்பாராம். வஞ்சனை, BS போன்றோரின் மனங்கள் புண்படுமாம்.”

    இப்போது நீங்கள் கேட்கலாம். ஒருமையில் இழித்துரைத்தோமா என்று. வினவு தளத்துக்குப் போய்ப் பாருங்கள்.
    கண்ணன் சொன்னது ஒன்றுமே இல்லை.

    //பெரியார், பேசினார், எழுதினார் என்றால் அதன் மூலம் சாதியைத் தூக்கிப் பிடிக்கும் மக்களின் மனநிலையைத் தானே மாற்ற முயன்றார்//

    பிராமண ஜாதி தவிர வேற எந்த ஜாதியும் பெரியார் எதிர்க்கவில்லை என்பதுதான் இந்த தளத்தில் உள்ள அனேகரது கருத்து.

    //இந்தத் தளத்தில் சொல்லும் கருத்துக்களைப் பார்க்கும் போது, ஹிந்து மதம் இனி அவ்வளவுதான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.//

    2008 லிருந்து இந்தத் தளத்தில் இருக்கும் அத்தனைக் கட்டுரைகளையும், கருத்துக்களையும் படித்துவிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தாரா ?

  15. I have no comments what is being said by Venkatesan in his series of essays on DK and EVR. So far as I am concerned, I always feel that it is between the Tamil brahmins and DK – a personal matter. Hindu religion shouldn’t be dragged in or we shouldn’t go and protect one community under cover of Hindu religion. This is my confirmed view. So, I have no comments on Venkatesan’s points. As expected, Tamil brahmins can defend themselves.

  16. பெரியார் சேர்த்துவைத்த சொத்தை அனுபவிக்க வந்த தலைவர் இவர் ஒருவரே வேறு யாரும் அனுபவிக்க இடம் கொடாதவர் இவருக்கு ஒரு கட்சி ஒரு கொடி ஒரே தலைவர் தொண்டர் பலம்இல்லா கட்சி

  17. //இங்கு கருத்துப் பகிர்ந்த ஸ்ரீமான் கருப்பையா அவர்களது ஜாதி என்ன என்று பார்த்து யாரும் அவரது கருத்துக்களை ஏற்கவில்லை அல்லது மறுதலிக்கப்போவதில்லை. மதிப்பு கருத்துக்களுக்கே.//

    கருப்பையா என்ற புது புனைப்பெயரை வைத்து இப்போது எழுதியவர் ஒரு ரெகுலர்தான் எனப்து நன்றாகவே தெரிகிறது. என்னுடைய பதில்கள் இருட்டடிப்பு தளத்தாராலேயே செய்யப்படுகிறது. இவர்கள் பார்ப்பன பின்னூடடக்காரகளை உடனே தனிநபர் தாக்குதல் செய்ய அனுமதித்து அதற்கு நான் வைக்கும் பதிலகளைப்போடாமல் தடுப்பது ஏன்? இது நியாயமா? ஒருவனை அறியாமல் அவனை கிருத்துவன் என்று சொல்லும் பின்னூட்டங்களைப்போடும் இத்தளத்தாருக்கு என் கேள்வி: இது நீதியா? இது நேர்மையா? இப்படிப்பட்ட பொய்யுரைகளை அனுமதித்து வெளியிட இந்துமதம் என்ற பேரில் எதற்கு ஒரு தளம்?

    தளத்தார் பதில் சொல்லவும். இல்லயென்றால் தளத்திலேயே //இன்னார் இன்றுடன் இங்கு எழுதுவதிலிருந்து நீக்கப்பட்டார்//என்று சொல்லி என்னைத் தடை செய்யவும். இந்துமதத்தின் பெயரை வைத்துப்போலி விளையாட்டை விளையாடி ஒரு தனிநபரைத் தாக்குதல் செய்வதை பார்க்கும் துர்பாக்கியம் எனக்கிராது.

    இவண்
    பால சுந்தர விநாயகம் (பி எஸ்)

  18. இரங்கன்!

    வினவு தளத்தை எந்த வொரு தளத்துடனும் ஒப்பிடமுடியாது. அவர்கள் ஓபனாகவே இந்துமத பார்ப்பனஜாதி எதிர்ப்பாளர்கள் என்று சொல்லித்தான் கட்டுரை போடுகிறார்கள். பாதிக்கப்பட்டோர் நீதிமன்றத்தை அணுகலாம். அங்கு போய் பின்னூட்டமிட்டால் மரியாதை இருக்காது.

    என் கருத்தில் சாரத்தை நீங்கள் புரிந்துகொள்ளவே இல்லை. அது இதுதான்:

    திராவிட இயக்கத்தைப்பற்றிய விமர்சனக்னள்தான் வெங்கடேசன் கட்டுரைகள். அக்கருத்துக்கள் எல்லாமே ஏற்கனவே சுப்பு எழுதிய திராவிட மாயை என்று நூலில் உள்ளவை. அதுபோக மலர்மன்னன் தன் வாணாளை அவ்வியக்கத்தை விமர்சிப்பதிலேயே செலவிட்டு பல பாப்புலரான நூல்களும் எழுதிப்பிரசுரித்து விட்டார்.

    இக்கட்டுரைகளைப்படிப்போர் திராவிட இயக்கத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தால் ஒழிய பிறரால் எவ்விவாதமும் நடக்காது. அனைத்தையும் ஏற்பவர்களால் என்ன விவாதம் செய்ய முடியும்?

    எனவே என் பின்னூட்டம் அப்படி ஆளில்லாத கடையில் ஏன் டீ ஆற்ற வேண்டும் என்ற கேள்வி. இதற்கு பதில் சொல்லவேண்டியவர் ப வெங்கடேசனே. ஏன் அவர் இங்கு எழுதிக்கொண்டிருக்கிறார்? எல்லாரும் படிக்கும் மேடையில் ஏன் போடவில்லை? அங்குதானே விவாதம் நடக்கும்? அதே வேளையில்,இக்கட்டுரைகளை இங்கு போடுவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. திராவிட இயக்கத்துக்காரர்கள் எவராகினும் படிக்க வாய்ப்புண்டு. மேலும் இத்தளத்தில் வேலையே அதுதான். அதை செய்கிறார்கள் என்று விடவேண்டியதுதான். தி இயக்கத்தைச்சார்ந்தவர்களும் தங்கள் இணயதளத்தையும் பதிவுகளிலும் வெங்கடேசன், மற்றும் பல ஈவெரா எதிர் விமர்சனங்களுக்குப் பதிலகள் வைத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

    என்னைப்பொறுத்தவரை, என் கருத்து ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது: மீண்டும் உங்களுக்காக:

    ஈவேராவின் மீது வெறுப்பு கொண்டோர் தமிழ்ப்பார்ப்பனரே. அவர்களுக்கும் அவருக்கும்தான் பிணக்கு. இதில் ஏன் இந்துமதம் உள்ளுழைந்தது என்பதுதான் என் கேள்வி. இம்மதத்தைப்பற்றி விமர்சனம் என்பனவெல்லாம் ஈவேரா பார்ப்ப்னரமேல் தொடுக்கப்பட்டவைகளை மேனிருத்தப்பயன்படுத்திக்கொண்டவையே. அவரின் முதற்குறி தமிழ்ப்பார்ப்ப்னர்களே. அவர்களல்லவா அவரை எதிர்க்க வேண்டும்? போராட வேண்டும்?

    தமிழ்ப்பார்ப்பனருக்கொன்றென்றால் இத்தளம் தையோ தையோ என்று குதிக்கிறது. அதற்குக்காரணம் ஆசிரியர்குழுவில் அவர்களும் அவர்களை விதந்தோருமே இருப்பதால். பின்னூட்டக்காரர்களோடு சேர்ந்து தளத்தாரும் என்னை இகழவதன் உள்ளோக்கம் இதுதான்: இத்தளத்தில் கொள்கை: வைதீகமதத்தையும் பிராமணர்களையும் ஏற்காதவன் இந்துவல்ல என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதன்படி அய்யா வைகுண்டர், நாராயண குருவெல்லாம் இந்துக்கள் அல்ல. அவர்கள் இங்கு வந்தால், கிருத்துவ பாதிரிகள் என்றுதான் பின்னூட்டம் போடுவார்கள்,

    ஆதிகாலத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இருந்தே வந்திருக்கிறது. இன்றும் என்றும் இருக்கும். ஆனால் அவ்வெதிர்ப்பை இம்மதம் ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியிலேயே இந்துமதத்தைப் பேண விடுகிறது. எனவேதான், நான் பிராமண சிவாவை பிரதிஸ்டை செய்யவில்லை. ஈழவ சிவாவையே பண்ணினேன் என்று குருவால் சொல்லமுடிகிறது. ஆனால், தமிழகத்தில் முடியவில்லை. பிராமணர் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொணடே தீரவேண்டும்; இல்லாவிட்டால் இந்துமதத்துரோகி என்று இந்துமதத்தை முழுவதும் பிராமணருக்குத் தாரை வார்த்துவிட்டார்கள். இதுவே இத்தளத்தின் கொள்கையாக இருப்பதனால், என்னச் சூழ்ந்து நின்று பல புனைபெயர்களில் தாக்க இத்தளம் உதவுகிறது. என்னை கிருத்துவ பாதிரி என்று சொல்லி அவமானப்படுத்த ஆசைப்பட்டு நிறைவேற்றுகிறது.

    இவண்
    பால சுந்தர விநாயகம்

  19. உலக – பாரத ஊடகத்தின் பெரும் பகுதியை கிறிஸ்துவ சர்ச்சின் உடமையாய் உள்ளது. கிறிஸ்துவம் விவிலியத்தை அறிவியலை ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்தோரை துன்புறுத்தியதும் வரலாறு.
    விடுதலை முதல் பக்கத்தில் சங்க இலக்கியத்தில் தாலி உள்ளதா என சவாலாக போட்டவர்கள், சங்க இலக்கியத்தில் தாலி உள்ளது, ஆவினம் காக்க வேண்டும் என உள்ளது என்பதை, அந்த அருவருப்பான நிகழ்ச்சிக்கு முன்பே விடுதலை இணையத்தில் பதித்தேன் – அனுமதிக்கவில்லை. அருள்மொழி முகநூலில் உள்ளது -அடங்கினர்., அதே போல வெங்கடேசன் எழுத்துக்களின் இணைப்பும் அருள்மொழி முகநூலில் உள்ளது. தீயகாவினர் கண்டிப்பாக படிக்கின்றனர்.
    உலக – பாரத ஊடகத்தின் பெரும் பகுதியை கிறிஸ்துவ சர்ச்சின் உடமையாய் உள்ளது. கிறிஸ்துவம் விவிலியத்தை அறிவியலை ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்தோரை துன்புறுத்தியதும் வரலாறு.
    விடுதலை முதல் பக்கத்தில் சங்க இலக்கியத்தில் தாலி உள்ளதா என சவாலாக போட்டவர்கள், சங்க இலக்கியத்தில் தாலி உள்ளது, ஆவினம் காக்க வேண்டும் என உள்ளது என்பதை, அந்த அருவருப்பான நிகழ்ச்சிக்கு முன்பே விடுதலை இணையத்தில் பதித்தேன் – அனுமதிக்கவில்லை. அருள்மொழி முகநூலில் உள்ளது -அடங்கினர்., அதே போல வெங்கடேசன் எழுத்துக்களின் இணைப்பும் அருள்மொழி முகநூலில் உள்ளது. தீயகாவினர் கண்டிப்பாக படிக்கின்றனர்.
    //ஆதிகாலத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இருந்தே வந்திருக்கிறது.// ஏன் ஐயா நீர் பாதிரி என்பதை நிருபிக்க சாட்சி தருகீறீர். தோமா முதல் போப், கால்ட்வெல் என அனைவர் பெயர் பின்னும் ஐயர் எனப் பட்டம் போட்டுகொண்டது ஏன். தொல்காப்பியம்- திருக்குறள், சங்க இலக்கியம் எல்லாவற்றிலும் ஐயர், பார்ப்பனர், அந்தணர் என பிராமணரைக் குறிப்பது அனைவரும் அறிந்ததே.
    பாம்பையும் பாதிரியையும் ஒண்ணாப் பார்த்தால் பாதிரியை முதல்ல அடி என்பது தென் மாவட்ட செவிவழி பழமொழி. இதை மாற்றி பாதிரிகள் மாற்றி தீயகாவினர் வாயில் பொய்யைப் பரப்புவதும் ஏனோ?

    அடுத்த நிலையில் கிறிஸ்துவர் – தமிழறிஞர்கள் தீயகாவினருக்கு ஏனோ அதரவு- தமிழ் பாரம்பரியத்தை, தமிழர் மெய்யியலை அழிக்க நேர் ஆதரவு. தமிழ் சூசை என்பவர் முக பக்கத்தில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்த்த பி.சுப்பிரமணிய சாஸ்திரியார் பற்றி எழுத, தொல்காப்பியர் அந்தணர் என ஒருவர் எழுத, பேராசிரியர் இலக்குவனார் பதிலாய் உளறலாக- //நற்றமிழர் தொல்காப்பியரை அந்தணர் எனத் தவறாகக் கூறாதீர். அவர் காலத்தில் சாதியும் இல்லை. அவர் தமிழரே! அவரை இழிவுபடுத்து முயன்று முடியாததால் பிராமணராகக் கூறுகின்றனர் அச்சாதியினர்// எனப் பிதற்றினார்.

    தொல்காப்பியர் ஓர் ஆரியர் (பார்ப்பனர்) என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் மொழிஞாயிறு _ ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள்.
    தொல்காப்பியர் பல இடங்களில் தவறினதற்குக் காரணம் அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. _(பாவாணர்:நூல்: ஒப்பியன் மொழிநூல்_பக்கம்: 82)

    தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினி என்பதாலும், தந்தை ஜமதக்னி முனிவர் என்பதா லும், தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக் களாலும் தொல்காப்பியர் ஆரியரே! என்று துணியப் படும். _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழி நுல். _ பக்கம்: 73)

    நால்வேதம் அல்லது நால்மறை, ஆரங்கம் ஆகமம் என்பன எல்லாம் ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இப்போதுள்ள பண்டை நூல்களெல்லாம் அந்தணர் என்பதும் பிரமணரையே குறிக்கும் என்பது சரியே.
    பக்க- 102 தமிழர் மதம்.தேவநேயப்பாவணர்.
    சுவிசேஷத்தில் ஏசு சாதாரணப் பாவி மனிதன் என வரும் வசனக்தை எல்லாம் இடைச்செருகல் எனப் புனைந்துள்ளன்ர். அது போலெ இங்கும் பலர் செய்துள்ளனர், இது போலே செய்யப்பட்ட போலி ஆய்வுகள் தவறு எனத் தெளிவாக பலமுறை சுட்டப்பட்டும் உள்ளதே. உள்நோக்கம் கொண்ட பொய்ப் பரப்புரை என்பதை பல நடுநிலையாளர் தவறு என நிருபித்தும் உள்ளனர்.

    கிறிஸ்துவப் பாவாணர் தமிழ் ஆய்வு போர்வையில் விஷம் பரப்பிய பலவற்றை நீக்கி இப்போது தமிழ் மண் பதிப்பக மறுபதிப்பில் வருகிறதே, தெரிந்து பாரத மக்களை ஆரியர் – திராவிடர் எனப் பாரப்பி பிரித்து சுரண்ட செய்தவை தானே அவை.https://solvanam.com/?p=5574
    தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா? – சொல்வனம்

    கிறிஸ்துவ பைபிள் ஆதாரமற்ற செய்திகளை ஒருவர் சொல்ல அவற்றை மற்றொருவர் மீண்டும் சொன்னால் சுவிசேஷம் ஆகும். தமிழ் பற்று என்ற வேடத்தில் சர்ச் ஏமாற்றி கொண்டு இருக்கிறது. பாவாணர், தெய்வநாயகம், இப்போது மா.சோ. விக்டர் ஆய்வுகள். இவர்கள் கதைக்கும்படி, தமிழன் உலகின் முதல் மாந்தன், தமிழ் முதல் மொழி. ஆனால் கிறிஸ்துவம் முதல் நூலினின்று கடைசி வரை கட்டுக் கதை என நிருபிக்கப்பட்டதை மட்டும் அவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். தமிழை போற்றுவோர் பாலைவன மதங்களை ஏற்றல் – தமிழ்பற்று வெறும் வேடம் என்பதை நிருபிக்கும்.

    தமிழில் நடுநிலை செய்தி ஊடகம் இல்லாததும், சினிமா பின்பலமும் தீயகாவினர் பொழப்பை ஓட்டியது. ஒரு 45 நிமிடம் ஒரு பத்திரிக்கையாளர் நடுநிலையோடு செயல்பட்டால் முகத்திரை கிழிய பாவம் புலம்புகின்றனர்.

  20. பேரன்பிற்குரிய ஜோ அமலன். ஸ்தோத்திரம்.

    \\ இந்துமதத்தின் பெயரை வைத்துப்போலி விளையாட்டை விளையாடி ஒரு தனிநபரைத் தாக்குதல் செய்வதை பார்க்கும் துர்பாக்கியம் எனக்கிராது. \\

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ (க்றைஸ்தவ அவதாரம்) , காவ்யா, டமில், அய் அய் எம் கணபதிராமன் (ப்ராம்மண அவதாரம்) ………… சமீபமாக பால சுந்தரம் க்ருஷ்ணா, பிறகு பால சுந்தர விநாயகம், பிறகு பி எஸ் ………… என பெயர் மாறினாலும் மாறாத அந்த மாற்றுமதக் காதல், ஹிந்து மத இகழ்ச்சி, வைஷ்ணவ சமயத்தை சமத்காரமாகப் பகடி செய்தல்………… என்று ஹிந்து மதத்துடன் போலி விளையாட்டு விளையாடுவது யார்?

    விளையாட்டுப் பிள்ளை 🙂 🙂 🙂 🙂

    \\ பிராமணர் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொணடே தீரவேண்டும்; இல்லாவிட்டால் இந்துமதத்துரோகி என்று இந்துமதத்தை முழுவதும் பிராமணருக்குத் தாரை வார்த்துவிட்டார்கள்.\\

    இல்லீங்களே. டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ரெவ ரெண்டு ஜோ அமலன் தானே ஏற்றுக் கொள்வதில்லை. எங்கயோ ஜோ வுக்கு எசகு பெசகா மதம் இடிக்குது.

    அக்னி ஹோத்ரம் தாத்தாசாரியார் என்ற ப்ராம்மணர் சொன்னதை ரெவ ரெண்டு ஜோ அமலன் எல்லா அவதாரத்திலும் ஏற்றுக் கொள்கிறார். இந்த தளத்தில் யாருமே ஏற்றுக் கொள்வதில்லை.

    ரெவ ரெண்டு ஜோ அமலன் அவர்கள் ஹிந்து மதத்தை அக்னி ஹோத்ரம் தாதாசாரியார் என்ற ப்ராம்மணருக்கு தாரை வார்க்க விழைவதை இந்த தளமும் இந்த தள வாசகர்களும் புரிந்து கொள்ளவே மாட்டாது ஹடம் பண்ணுகிறார்கள் 🙂

    \\ ஈவேராவின் மீது வெறுப்பு கொண்டோர் தமிழ்ப்பார்ப்பனரே. அவர்களுக்கும் அவருக்கும்தான் பிணக்கு. இதில் ஏன் இந்துமதம் உள்ளுழைந்தது என்பதுதான் என் கேள்வி. \\

    இனவெறி ஈ.வெ.ராமசாமி ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டதை எதிர்த்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் என்று ரெவ ரெண்டு சொல்ல வருகிறாரா?

    அல்லது ராமபிரானுக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று ரெவ ரெண்டு அட்ச்சு விட்லாம்னு பார்க்கிறாரா 🙂

    இனவெறி ஈ.வெ.ராமசாமி தமிழ் நூற்களை, தமிழ் மொழியை, தமிழர்களை, தமிழ்ப்புலவர்களை இழித்துப்பழித்ததை எதிர்த்தவர்களெல்லாம் பார்ப்பனர்கள் என்று ரெவ ரெண்டு சொல்ல வருகிறாரா?

    இனவெறி ஈ.வெ.ராமசாமியை மிகப்பல தனித் தமிழ் தேசியவாதிகளும் வடுகர் என்று காட்டமாக எதிர்த்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் பார்ப்பனர் என்று அட்ச்சு வுட்லாம்னு பார்க்குறாரா 🙂

    ஜோ அமலனின் ப்ரியரான ராமசாமி குடுத்த பாலை குடித்து விட்டு அவர் தமிழ்ப் புலவர்களை இழிவு செய்ததற்காக அதை தன் வாயில் விரலை விட்டு வாந்தி எடுத்த கதிரைவேற்பிள்ளையை ரெவ ரெண்டு ஜோ அமலன் பார்ப்பனர் என்று அட்ச்சு வுட்லாம்னு பார்க்குறாரா 🙂

  21. பார்பனர் இல்லாத இந்து மதம் என்று இங்கு பால சுந்தர விநாயகம் என்கிற அவைதீகர் ( இது அவருடைய இன்னொரு பெயரா கொள்கையா அவருக்கே வெளிச்சம் ) பகுத்தறிவோடு புலம்பிக்கொண்டே இருக்கின்றார். அவருக்கு இந்த செய்தி பிடிக்குமோ என்னவோ:

    புதிய தலைமுறை தளத்துக்குக் சென்றால் இந்த செய்தி கிடைக்கும் ( லிங்கை சரியாக என்னால் கோப்பி செய்ய முடியவில்லை – முக நூலில் இன்று பல பேர் இந்த செய்தியை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் )

    ”சென்னை மயிலாப்பூரில், கோவில் குருக்கள் மீது தாக்குதல்: 4 பேர் கைது

    சென்னை மயிலாப்பூரில், கோவில் குருக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக திராவிடர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மயிலாப்பூர் மாதவபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாத குருக்கள். இவர் மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயிலில் குருக்களாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பூஜை செய்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த நபர்கள் விஸ்வநாத குருக்களின் புனூலை அறுத்து அவரின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

    இவர் அளித்த புகாரின் பேரில் திராவிடர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த 4 பேரை மயிலாப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.”

    ஆக மீண்டும் தி காவின் வெறித்தனம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஆனால் இது பற்றி ஒருமையில் மனது புண்படும்படி யாரும் பேசக் கூடாது. நல்ல நியாயம் !!!

  22. ஈவேராவின் நாத்திகவாதம் பற்றி எழுதுவதும் விவாதிப்பதும் செத்த பாம்பை அடிப்பது போன்றதே. தமிழகத்தில் எவனும் திகவை மதிப்பதில்லை. இது பெரியார் பிறந்த பூமி என்று காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த பீட்டர் அல்பொன்ஸும் பிஜேபி பிராமணர் பார்டி என்று ….மணி என்கிற காங்கிரஸ் பெண்மணியும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தொலைக்காட்சியில் பேசினர். இப்போது எல்லோரும் கப்சிப்.

    கோபாலன்

  23. Krishnakumar Sarma

    முதலில் என்னை கிருத்துவன் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம்? என் ஜாதகப்பெயரே பால சுந்தர விநாயகம்? வந்து என் வீட்டில் பார்த்துக்கொள்ளலாம்.

    — Bala Sundara Vinayagam

  24. Krishnakumar!

    Why do you bother or so much concerned about my names Krishakumar? If you have any personal problems with me, you can come and discuss with me via e-mail. I can give you my home address in Delhi. And I am ready to invite you to my home. Have a good vegetarian fare and go in piece. Don’t worry: the food will be brahminical to suit your acharams. My wife is a pappaathi only and I am not dalit. No pollution for youl.

    My email: rangaarangaarangaa@gmail.com (same as I gave to this forum)

    — Bala Sundara Vinayagam

    (Forum admn should not encourage him to indulge in personal attacks on me. Advise him to sort out his personal problems with me outside this forum. Releasing this request will help silence his repeated personal attacks. If not, you are encouraging him! )

  25. https://aggraharam.blogspot.in/2015/04/blog-post_19.html

    மேற்கண்ட இணைப்பில் விபூதி வீரமுத்து என்ற தேவர் இனத்தை சேர்ந்த திராவிட மாயை எதிர்பாளரைப் பற்றி ஒரு கட்டுரை உள்ளது.

    “என் பணத்தில் வாங்கிய ராமர் படம் ; என் செருப்பு ,நான் அடிப்பேன்” என்று பஹுத் அறிவு “கருத்து சுதந்திரம்” பேசிய ஈவேராவின் படத்திற்கு [ தான் வாங்கியது ] அதே மரியாதையை செய்தவர் இவர்.

    “செருப்பு மாலை, துடைப்பக்கட்டை ‘ புகழ் திராவிட மாயையை அது தறி கேட்டு தலை விரித்தாடிய காலத்திலேயே தமிழர்கள் எதிர்த்து இருந்திருக்கிறார்கள்.

    பாம்பு கடிக்கும் நேரத்திலும் [!] அடிக்கப் பட வேண்டிய ஜாதியினர் மட்டுமல்ல மற்ற ஜாதியை சேர்ந்த தமிழர்களும் எதிர்திருந்திருக்கிறார்கள். நாமெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். தாங்கள் தமிழ் பேசும் பாரதீயர்கள் என்பதை அமைதியாக நிரூபித்த வண்ணம் இருந்து இருக்கிறார்கள்

    பரவலாக எல்லா தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப பட்ட இயக்கம் தீரா விட இயக்கம் என்பது பச்சை பொய். வீரமுத்துக்கள் இருந்ததே பலருக்கு தெரியாமல் ஆக்கும் தீராவிட ஊடகங்கள் நாடகம் இது.

    ம போ சி அவர்கள் அப்போதே எதிர்ப்பு மாநாடு நடத்தி இருக்கிறார்.

    கண்ணதாசன் நாத்திகனை [ ஒரு குறிப்பிட்ட பிராண்டு நாத்திகம் ] நம்பி வீட்டுக்குள் விடாதே அவன் எதுவும் செய்வான் என்று ஊரில் ஒரு வழக்கு உண்டு என்கிறார். அவர் அப்போதே தைரியமாக பல உண்மைகளை எழுதிருக்கிறார். அவரைப் போன்றோர் அப்பட்டமான பார்ப்பன அடி வருடிகள் … இளங்கோ அடிகளையே இப்படி சொல்லும் பொது தீரா விடர்கள் ஆதரவாளர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்?:-)

    சாய்

  26. அன்பின் ரெவ ரெண்டு ஜோ அமலன்,

    \\ முதலில் என்னை கிருத்துவன் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம்? \\

    ஸ்வயம் தேவரீரே 🙂

    ஸ்வயம் தாங்களே ஆதாரம் 🙂

    தங்களது கருத்துக்களே ஆதாரம் 🙂

    இதற்கு முன் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற அவதாரத்தில் கருத்துக்கள் பகிர்ந்தது தாங்கள் தானே ஐயன்மீர். அதில் தங்களது சம்வாதங்கள் இந்த தளத்தில் பதிவானவையே.

    அதற்குப் பிறகு அய் அய் எம் கணபதி ராமன் என்ற அவதாரத்தில் நீங்கள் உங்களை ப்ராம்மணராக வெளிப்படையாக அறிவித்துள்ளீர்கள்.

    க்றைஸ்தவப் பெயரை உபயோகித்து க்றைஸ்தவ ஆதரவுக்கருத்துக்களை பகிர்வதிலும் ஹைந்தவ ஆப்ரஹாமிய மதங்களின் பன்மைத்துவத்தை இகழ்வதிலும் (மற்றைய அவதாரங்களிலும் இந்த செயற்பாடு) அதிதீவ்ர ஆப்ரஹாமிய மதக்கோட்பாடுகளை விதந்தோதியதிலும் ஹிந்து இழிவுக் கருத்துக்கள் மற்று வைணவ சமய இழிவுக்கருத்துக்களையும் தொடர்ந்து பதிந்து வந்ததில் உங்களுக்கு தயக்கமே இருந்ததில்லையே. ஆனால் க்றைஸ்தவர் என்று சொல்லப்படுவதில் மட்டிலும் முரண்பாட்டைக் காண்பது விந்தையாக இல்லை?

    க்றைஸ்தவப் பெயரிலும் மற்றைய ஹிந்துப் பெயர்களிலும் மேற்கண்ட செயற்பாடுகளை வெளிப்படையாகச் செய்து விட்டு ………….. க்றைஸ்தவன் என்று சுட்டப்பட்டதை மட்டும் தவறாகக் கருதுவது……………. க்றைஸ்தவத்தை மட்டிலும் இழிவு படுத்தும் செயற்பாடு ஆகாது. மேலதிகமாக ஹிந்து மதத்தையும் இழிவு படுத்தும் செயற்பாடு ஆகும்.

    மதிப்பிற்குரிய ஸ்ரீ தேவப்ரியா சாலமன், ஸ்ரீ கருப்பையா, இன்னும் எத்துணை அன்பர்கள் தங்களது பல்பெயரில் கருத்துப் பல மதங்களைச் சார்ந்தவராக பல ஜாதிகளைச் சார்ந்தவராக காட்டிக்கொள்ளும் செயல்பாடுகளாலும் தங்களது அதிதீவ்ர ஆப்ரஹாமிய ஆதரவுக் கருத்துக்களாலும் தங்களை க்றைஸ்தவராகவே அவதானிக்கிறார்கள் என்பதைத் தாங்கள் எப்படி மறுதலிக்க முடியும்?

  27. அன்பின் ஜோ அமலன்

    \\ என் ஜாதகப்பெயரே பால சுந்தர விநாயகம்? \\

    இதற்கு முந்தைய அவதாரங்களான ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ, காவ்யா, TAMIL, அய் அய் எம் கணபதிராமன் என்ற ப்ராம்மண அவதாரம், பால சுந்தரம் க்ருஷ்ணா என்ற அவதாரம்……………. இதெல்லாம் நிஜமா அல்லது பால சுந்தர விநாயகம் என்பது நிஜமா நீங்களே சொல்லுங்கள்.

    இப்படி சகட்டு மேனிக்கு நீங்கள் அவதாரம் எடுத்து வந்தால் உங்களுக்கே உங்களது ஜாதகப் பெயர் எது என்பதில் டவுட்டு வந்து விடும்

    இவ்வளவு பெயர்கள் இருக்கும் பக்ஷத்தில் காட்டப்படும் ஜாதகம் உண்மையாக இருக்காது என்று சம்சயிக்க ஹேது உண்டல்லவா?

    இந்த தளத்தில் பங்கு பெறும் நானோ அல்லது வேறு அன்பர்களோ …………… யாரும் தங்களது ஜாதி இன்னது என்று எங்கும் பதிவு செய்ததில்லை.

    ஆனால் தாங்கள் தெளிவாக தங்களை ப்ராம்மணன் என்று திண்ணை தளத்தில் அய் அய் எம் கணபதிராமன் அவதாரத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    நீங்கள் க்றைஸ்தவராக பிறக்காமல் இருந்திருக்கலாம். உங்களுடைய அதீதமான ஆப்ரஹாமிய வாதங்களையும் ஹிந்து இழிவுக் கருத்துக்கள் மற்றும் வைஷ்ணவத்தை இழிவு செய்யும் கருத்துக்களையும்………..சடுதியில் பெயர் மாறிக்கொள்ளும் தரம் தாழ்ந்த செயற்பாட்டையும் கணக்கில் கொண்டு……….. அமரர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயர் அவர்கள்………… ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவதாரத்தில்…………….. உங்களை க்ரிப்டோ க்றைஸ்தவர் என்று தமிழ் ஹிந்து தளத்தில் கருத்துப் பகிர்ந்தது நினைவில் இருக்கும் அல்லவா?

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற அன்பரின் மீது எனக்கும் தளவாசகர்கள் அனைவருக்கும் அன்பு உண்டு. உங்களது பரந்த வாசிப்பு மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு.

    எதிர்க்கப்படுவது ஜோ அமலனீயம் 🙂

    எதிர்க்கப்படுவது தத்தக்கா பித்தக்கா என்று தங்கள் தரப்பிலிருந்து ஒவ்வொரு அவதாரத்திலும் சம்பந்தமே இல்லாமல் செய்யப்படும் விதண்டா வாதம் 🙂

    எதிர்க்கப்படுவது ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு வ்யாசத்திலும் வ்யாசத்தை விட அதிகமான நீளத்தில் தாங்கள் பகிரும் பின்னூட்டம் 🙂

    எதிர்க்கப்படுவது ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு வ்யாசத்திலும் (இந்த வ்யாசத்திலும்) வ்யாசத்தின் கருப்பொருளைப் பற்றி வாதம் நடக்கவொண்ணாது தாங்கள் முனைந்து செய்யும் மடைமாற்றம் 🙂

  28. அன்பின் ஜோ அமலன்

    \\ தமிழ்ப்பார்ப்பனருக்கொன்றென்றால் இத்தளம் தையோ தையோ என்று குதிக்கிறது. அதற்குக்காரணம் ஆசிரியர்குழுவில் அவர்களும் அவர்களை விதந்தோருமே இருப்பதால். \\ கருப்பையா என்ற புது புனைப்பெயரை வைத்து இப்போது எழுதியவர் ஒரு ரெகுலர்தான் எனப்து நன்றாகவே தெரிகிறது. என்னுடைய பதில்கள் இருட்டடிப்பு தளத்தாராலேயே செய்யப்படுகிறது. இவர்கள் பார்ப்பன பின்னூடடக்காரகளை உடனே தனிநபர் தாக்குதல் செய்ய அனுமதித்து அதற்கு நான் வைக்கும் பதிலகளைப்போடாமல் தடுப்பது ஏன்? \\

    இது தங்களது கருத்து. இப்படிக்கருத்துப் பதிந்துள்ள நீங்கள் :-

    \\ முதலில் என்னை கிருத்துவன் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம்? \\

    என்று கருத்துப் பதிந்துள்ளீர்கள்.

    ஆசிரியர் குழுவில் இருக்கும் அனைவரும் பார்ப்பனர்கள் என்று சொல்வதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேழ்க்கலாம் இல்லையா?

    ஸ்ரீ ஜடாயு அவர்கள் பார்ப்பனர் என்று நீங்கள் சொல்லிக்கொள்வதற்கு உங்களிடம் என்ன ஆதரம் இருக்கிறது என்று கேழ்க்கலாம் இல்லையா?

    ஸ்ரீ தேவப்ரியா சாலமன் அவர்கள் பார்ப்பனர் என்று நீங்கள் சொல்லிக்கொள்வதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேழ்க்கலாம் இல்லையா?

    ஸ்ரீ கருப்பையா என்ற அன்பர் ஒரு ரெகுலர் என்று நீங்கள் சொல்வதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேழ்க்கலாம் இல்லையா?

    இந்த மாதிரி உங்களுடைய ஹிந்துக்காழ்ப்புக் கருத்துக்களை எதிர்ப்பவர் அனைவரையும் பார்ப்பனர் என திரும்பத் திரும்ப அலுக்காமல் எந்த ஆதாரமும் இல்லாமல் அட்ச்சுவுடும் உங்களுக்கு…………….. உங்கள் பெயரை…………. உங்கள் கருத்துக்களை………… ஆதாரமாகக் கொண்டு க்றைஸ்தவர் என்று சொல்லப்படுவதில்………. அலுப்பு வரக்கூடாது.

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற பெயரில் உள்ள அன்பரை………….. க்றைஸ்தவர் என்று சொல்வதை தனிநபர் தாக்குதல் ……………. என்று சொல்வது வாசிப்பவர்களுக்கு முரண்பாடாகத் தெரியாதா ஐயன்மீர்?

    முதலில் நீங்கள் உங்களது பார்ப்பனோஃபோபியாவிலிருந்து வெளியே வாருங்கள். உங்களுக்கு எதிராகக் கருத்துப் பதிபவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனர்களை விதந்தோதுவதைத் தவிர வேறு கார்யம் இல்லாதவர்கள் என்ற கருத்திலிருந்து வெளியே வாருங்கள்.

    சீசே கீ மெஹல் மே ரெஹ்னே வாலே பத்தர் நஹீன் ஃபேங்க்தே. கண்ணாடி மாளிகையில் இருப்பவர்கள் கல்லெறியக்கூடாது.

    இந்த வ்யாசம் உங்களது முகமூடி சுவிசேஷ பஜனை மடமாகிய த்ராவிட கும்பல்களின் பொய் மற்றும் புனைசுருட்டுகளை கட்டுடைக்கிறது. இந்த வ்யாசத்திற்கும் பார்ப்பன ஆதரவு என்பதற்கும் சம்பந்தமே இல்லை. **பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி** என்ற வாசகம் சம்பந்தமான விவாதம் கூட மானமிகு வீரமணியின் பச்சைப்பொய்களை தோலுரித்து முன்வைக்கும் விவாதமாகவே ஸ்ரீ ம.வெ அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ம.வெ அவர்கள் தன் தரவுகள் அத்தனையையும் ஸ்ரீ சுப்பு மற்றும் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயரின் நூற்களில் இருந்து சுட்ட தரவுகள் என்று நீங்கள் சொல்வது *****குசும்புத்தனமான கருத்து*****. ஸ்ரீ ம.வெ அவர்கள் த்ராவிட முகமூடி சுவிசேஷ பஜனை மடத்தினரின் இணையப்பக்கங்களை எத்தனையெத்தனை ஸ்க்ரீன் ஷாட் போட்டு அம்பலப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் நீங்க்ள் சொல்லியுள்ள இவர்களது புத்தகங்களிலிருந்து உங்களால் காண்பிக்க முடியும்?

    த்ராவிட முகமூடி சுவிசேஷ பஜனை மடம் பார்ப்பனர்களுக்கு மட்டிலும் எதிரானது என்பது முகமூடி சுவிசேஷிகளின் அதிக ப்ரசங்கம். த்ராவிட முகமூடி சுவிசேஷ பஜனை மடம் ஈடுபடும் தாலியறுப்பு கந்தறகோள கண்றாவி நிகழ்ச்சியை மதறாஸ் உயர்நீதிமன்றத்தின் மேல் பெஞ்சு தடை விதித்துள்ளது. இவர்களது மாட்டுக்கறி உண்ணும் பொழுதுபோக்கு, ராமர் படத்துக்கு செருப்புமாலை போடும் கொழுப்பு இத்யாதிகளை நிச்சயம் ஒட்டு மொத்த ஹிந்து சமூஹமும் எதிர்ப்பார்கள் எதிர்க்கவே செய்வார்கள்.

    அன்பர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் படத்திற்கு செருப்படி கொடுத்தவர்களோ அல்லது அதன் மீது தங்கள் சிறுநீர் கழித்தவர்களோ ………………. இந்த இனவெறியர் இயக்கத்தின் தாலியறுப்பு நிகழ்வு, ராமர்படத்துக்கு செருப்பு மாலை, மாரியம்மனை சுவர் சுவராக இழிவு செய்யும் கொழுப்பு …………. இத்யாதிகளால் வெகுண்டே இப்படி செய்திருக்க வேண்டும். இவர்கள் என்ன ஜாதி என்று யாரும் பார்க்காமல் த்ராவிட முகமூடி பஜனை மடத்துக்கு எதிர்ப்பாகவே இதனை சமூஹம் பார்க்கிறது. மிகவும் வீரதீரமுள்ள இந்த த்ராவிடப் பேடிகள் வயதான பலமற்ற பார்ப்பனர்களின் பூணூலை அறுத்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். ஸ்வராஜ்யா தளத்தில் ERGO என்ற பெயரில் கருத்துப் பதிந்துள்ள நீங்கள்…………. அப்பாவி வயோதிகர்கள் தாக்கப்பட்டுள்ள சமூஹ விரோதச் செயற்பாட்டைக் கண்டிக்காது……….பத்ரி சேஷாத்ரியின் வ்யாசத்தில் ஆரம்பம் முதல் கடைசீ வரை உள்ள கருத்துக்களை அம்போவென விட்டு விட்டு …………. பார்ப்பனர்கள் எல்லோரும் கோவிலில் செமர்த்தியாக பணம் சம்பாதிக்கிறார்கள் என்று அட்ச்சுவுட்ருக்கிறீர்கள். க்றைஸ்தவர்கள் யஹூதிகளைக் கொன்றொழித்த அவலத்தை க்றைஸ்தவத்துக்கு வாக்குதத்தம் செய்துள்ள தங்களால் எப்படி விதந்தோத முடியுமோ…………. அதே அடிப்படை தான்……….. அப்பாவிகள் தாக்கப்பட்ட ஒரு செய்தியை நீங்கள் மடைமாற்றம் செய்ய விழையும் கீழ்த்தரமான இழிவான செயற்பாடுக்கும்.

    த்ராவிட முகமூடி சுவிசேஷ பஜனை மடமாகப்பட்டது ஒட்டு மொத்த ஹிந்துமத நம்பிக்கைகளையும் இழிவாகப் பேசுகிறது (பார்ப்பனர்களை இழிவாகப் பேசுவது மற்றும் வன்முறை மிகத் தாக்குவது என்பது தவிர) என்பது இன்று ஊரறிந்த விஷயம். சுவிசேஷிகள் மற்றும் அல்லது முகமூடி சுவிசேஷிகளுக்கு ஹிந்து மதத்தினை ஜாதி வாரியாகப் பிரிப்பதில்……….. ஹிந்து மதத்தை இழிவு செய்வதில்………….. ஆன்ம அறுவடை செய்யும் லாபம் கிட்டுகிறது. ரெவ ரெண்டு ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ த்ராவிட முகமூடி சுவிசேஷ பஜனை மடத்தின் ஹிந்து விரோதப் போக்குகளை ஏன் கபள சோற்றில் முழுப்பூசணியாக மறைக்க விழைகிறார் என்பதற்கு ராக்கெட் சயின்ஸ் வாசிக்கத் தேவையில்லை.

  29. I am a regular reader of this website. Let us have civilized debates focused on topics, without attacking the person.

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *