இந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?

தீண்டாமை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இந்துமதம் தான் ஜாதியை உருவாக்கியது. அதன் காரணமாகத்தான் இந்தியாவில் தீண்டாமை தோன்றியது என்று பல வருடங்களாக பிரச்சாரம் நடந்துவருகிறது. இந்தியாவைத் தவிர வேறுநாடுகளில் தீண்டாமை இல்லையா என்று கேட்கும்போது இல்லை என்று தைரியமாகவே சொல்லிவிடுகின்றனர். இவர்களைப் போல பொய்யர்கள் உலகில் யாரும் இல்லை.

இந்தியாவில் பிறப்பை வைத்து, ஜாதியை வைத்து தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்றால் மேற்கு நாடுகளிலும் பிறப்பை, ஜாதியை, நிறத்தை வைத்து தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள எல்லா மதத்திலும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

ஆனால் நம்நாட்டு கம்யூனிஸ்ட், திராவிடர் இயக்கங்களுக்கு இந்தியாவில் மட்டுமே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்ற ஞானம்(?) இருக்கிறது. பல்வேறு நாடுகளில் வெள்ளையினத் தீண்டாமை, அடிமைமுறை இருந்ததைக் கீழே படத்துடன் காணலாம்.

help-wanted-white-only

https://www.pinterest.com/pin/360710251377494947/

selma-pool-segregation-small

https://theislamicmonthly.com/does-a-woman-only-pool-mean-segregation/

101580704-3420465.530x298

https://www.cnbc.com/id/101580692

seg segregation-drinking-fountain-300x174

 

https://djdrfusion.co.uk/segregation/

02no-dogs whites-only

Expansive School Segregation in Texas: Predicts Accountability Rating

1344227341_no-colored-allowed-black-americana-cast-iron-sign-10x4_220665307171

அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டார்கள். ஓட்டல்கள், தியேட்டர்கள், பொது போக்குவரத்து வண்டிகள், ஓய்வு அறைகள் என்று எல்லா இடங்களிலும் பாகுபாடு காட்டப்பட்டது.

racist-sign-31-swscan10607 racist-signs-32-swscan10607-copy

Why They Marched on Washington in 1963

irony-jesus

https://www.jamesfortune.co.uk/parade/background/racism-in-the-south/

drinking-fountains-1

https://newpittsburghcourieronline.com/2014/06/06/for-whites-only-man-in-tenn-fired-for-alleged-racism/

a-sign-for-a-white-race-beach-in-apartheid-s

Black and White Wars: Two Photography Exhibitions

234

https://uncouthmarie.wordpress.com/page/2/

SHORPY_04394u

https://www.junipergallery.com/taxonomy/term/73?page=4

rex_theatre_l

https://www.digitalhistory.uh.edu/disp_textbook.cfm?smtID=8&psid=2668&filepath=https://www.digitalhistory.uh.edu/primarysources_upload/images/rex_theatre_l.jpg

622x350

https://www.chron.com/life/article/Black-Like-Me-turns-50-2195648.php#photo-1635520

21

https://iftbqp.com/bookmark/mlk-also-had-nightmare

colored-only-drinking-fountain1

A Dream Deferred

1950_North_Carolina_segregation_060714 Whites Only - Racism in The U.S., 1955 (2)

https://aftershock.su/?q=node/294620

AtlantaNegroSalesLOC

https://en.wikipedia.org/wiki/History_of_Atlanta

இப்படி ஆயிரக்கணக்கில் நாம் ஆதாரத்துடன் பிறப்பின் மூலமாக வருகிற நிறவெறியின் மூலம் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதை கூறலாம். தீண்டாமையின் அத்துனை கோரமுகத்தையும் இங்கும்  காணலாம். பல இஸ்லாமிய தீவிரவாத குறுங்குழுக்கள் பிறப்பின் மூலமாக வருகிற ஜாதியை வைத்து (சன்னி, ஷியா) தங்கள் ஜாதியைத் தவிர பிறரை படுகொலை செய்யும் செய்தியை நாள்தோறும்  நாம் இப்போது கண்முன் (youtube மூலமாக) பார்த்து வருகிறோம். இந்தக் குறுங்குழுத் தீவிரவாதிகள் தாங்கள் அரங்கேற்றும் கோரப் படுகொலையை வீடியோ எடுத்து செய்தி சேனல்களுக்கு அனுப்புகிறார்கள் என்றால் அவர்களின் ஜாதி வெறி எந்த அளவுக்கு தலைக்கேறி இருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடியும்.

ஆனாலும் தினம் தினம் இதே பல்லவிதான்….

இந்தியாவில் மட்டுமே, இந்துமதத்தில் மட்டுமே தீண்டாமை உள்ளது.

நமக்கும் கேட்டு கேட்டு புளித்துவிட்டது.

இனியாவது பல்லவியை மாற்றுங்கள் தோழர்களே, பகுத்தறிவுவாதிகளே….!

34 Replies to “இந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?”

  1. இன்று தீண்டபடாதவர்கள் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் இன்றைய திருகோவில்களில் அறெம்காவலர்கள் அரசியல்வாதிகள் தீண்டாமை ஒழிய ஒரே வழி கோயில்களை புறக்கணித்தல்

  2. இசுலாமிய உலகில் ஷியா முஸ்லீம்களும் சன்னி அகமதி மற்றும் பல பிாிவுகள் பின்பற்றும் ஒரு இரத்த வெறி கொண்ட தீண்டாமைதான் ” இசுலாமிய பயங்கரவாதம்-படுகொலைகள். இந்நியாவிலாவது உாிமைகள் சில மறுக்கப்பட்டது.ஆனால் அரேபியாவில் கொடுமையான மரணம்தான்.அதுவும் அதை மிகச்சிறந்த ஒரு பாராட்டுக்குாிய செயல் போல, இறைவனுக்குகந்த புண்ணிய காாியம் போல் நம்பிச் செய்வது வேதனையானது. அரேபிய தீண்டாமையின் நோக்கம் படுகொலை. இந்தியாவில் தீண்டாமை அஎன்பது சில உாிமைகள் மறுப்புதான்.

  3. இசுலாமிய தீண்டாமைக்கு மறுபெயா் ” காபீா் ” என்பதாகும். ஆனால்தங்களை சீா்திருத்த வாதிகள் எனப்பீற்றிக் கொள்ளும் ஆன பொியாரோ அண்ணாவோ தொல் திருமாளவளவனோ ” காபீா்” தத்துவம் இந்த உலகிற்கு செய்து வரும் கொடுமைகள் – தீண்டாமைகள் – குறித்து பேச தைாியம் அற்ற கோழைகளாகவே இருக்கின்றாா்கள்.இசுலாமிய மேடைகளில் இசுலாம் சகோதரத்துவம் பேணுகின்றது என்று முட்டாள்தனமாக முழங்குகின்றாா்கள். காபீா் என்ற சொ்ல்லை தீண்டாமை தடுப்?புச சட்டத்த்னகீழ் தடை செய்ய வேண்டும் என்று கோர ஒருவனுக்கும் தைாியம் இல்லை.

  4. யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்’ என்று நபிகள் நாயகம் நமக்கு அறிவுறுத்தியிருக்க யூதர்களின் பழக்கமான தொப்பி அணியும் முறையை இனியும் கட்டாயப்படுத்துவது சரியாகுமா? என்று யோசிக்க வேண்டும்.
    ஆதாரம் சுவனப்பிாியன்.
    யுதா்கள் என்ன பாவம் செய்தாா்கள் அவர்களுக்கு முகம்மது மதத்தாா் 1700 ஆண்டுகளாக மாறு அநியாயம் செய்கின்றாா்களே!அதுவும் இறைதூதா் என்று சொல்லத்தக்கவா் சமூக நீதியை போதித்தவா் அன்புமதத்தை போதித்தவா் என்ற பெருமையை யஉடையவராக சொல்லப்படும் முகம்மது இப்படி போதனை செய்தால் அவரது தகுதி என்ன ?

  5. இங்கு பிரசுரிக்கப்பட்ட எந்த புகைபடத்திலாவது இஸ்லாமிய தீண்டாமை என்ற அடையாளம் இருக்கிறதா?தீண்டாமை என்பது முதலில் என்ன ஒரு மனிதனை தீண்ட தகாதவனாக நம்புவதுதானே.வெள்ளையன் தன்னை உயர் பிறப்பாக நம்பிக்கொண்டு கருப்பர்களை இழிவாக நடத்துவது தீண்டாமை.நம் நாட்டிலும் பிறப்பால் சிலர் தங்களை உயர்வாய் கருதிக்கொண்டு மற்றவர்களை தொடுவது அருகில் அண்டவிடுவதே பாவம் என்று கருதுவது தீண்டாமை.இஸ்லாமிய தீண்டாமை என்று நீங்கள் சொல்வது என்ன ஷியா சன்னி அகமதியா ஒருவரைஒருவர் குத்தி கொன்று கொண்டே இருக்கிறார்கள் என்கிறீர்கள்.ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வது போல் எல்லா சுன்னியும் எல்லா ஷியாக்களையும் கொன்று குவித்து கொண்டே இருக்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும் அது எப்படி தீண்டாமையில் சேரும்.பயங்கரவாதமும் தீண்டாமையும் ஒன்றா?பயங்கரவாதத்தை பற்றி பேசும்பொழுது இஸ்லாம் என்பதே பயங்கரவாதம்தான்.முஸ்லிகள் மட்டுமே பயங்கரவாதிகள் என்கிறீர்கள்.தீண்டாமையை பற்றி பேசும்பொழுதுமா வலிந்து இஸ்லாத்தை இழுக்க வேண்டும்.

  6. நிறவெறியையும், அடிமைத்தனத்தையும்விட சனாதன ’இந்து’ தருமத்தின் தீண்டாமை எத்தனை கொடியது என பக்கம், பக்கமாக அண்ணல் அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.

    அண்ணலின் காலத்திலிருந்து தீண்டப்படாத சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் துரோகிகளின் பட்டியல் நீளமானது என்பதையும், தற்போது வரை அது நீள்கிறது என்பதையும் கவனத்தில் கொள்க…

    உங்கள் புரட்டுகளை அம்பலப்படுத்த அண்ணல் அம்பேத்கர் இப்படித்தான் எழுதத் தொடங்குகிறார்..

    இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளைவிட தீண்டாமை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக இருக்கமுடியாது என்பதை நம்பிவிடும் என்பதால் இதை மறுத்துக் கூறவேண்டியுள்ளது.

    https://www.ambedkarcollections.com/2015/04/slaves_untouchables/

  7. கடந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தி சென்றிருக்கின்றனர். காவி பரிவாரத்திலிருந்து ஒருத்தன் குரலும் காணலையே…வெளிநாட்டுல போய் காமெடி பண்ற மோடிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லையோ…

    கர் வாப்சி..வெங்காய வாப்சின்னு…..

    அந்த ‘கர்’ இருந்தாதானே….கர் வாப்சின்னு ஊளையிடுவீங்க…

  8. meerasahib

    ஒங்க கருத்த படிச்சால ஓரே ஸ்ரிபுதான், comedythaan, ஜோக் thaan. படத்த திண்ணை சைட் இல இருந்து காபி பன்னினாத்தான் பார்பீங்கள ?

    //ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வது போல் எல்லா சுன்னியும் எல்லா ஷியாக்களையும் கொன்று குவித்து கொண்டே இருக்கிறார்கள் என்று வைத்து கொண்டாலும் அது எப்படி தீண்டாமையில் சேரும்.பயங்கரவாதமும் தீண்டாமையும் ஒன்றா?//

    ஐயோ ஐயோ , இன்னும் நேரிய காமெடி பண்ணுங்க

  9. பாண்டியன் என் கருத்தை படிக்கவேண்டாம்.என் பெயரே உங்கள் வெறுப்பை தூண்டும்.மகிழ்நன் கருத்தை படித்து அவர் உணவர்வை மதித்து பதில் சொல்லுங்கள்

  10. இந்த தளத்திலேயே February, 11, 2010 – March 11, 2010 வரை சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் வந்த 6 கட்டுரைகள் link கீழே இந்த தளத்திலேயே February, 11, 2010 – March 11, 2010 வரை சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் வந்த 6 கட்டுரைகள் link கீழே கொடுத்திருக்கின்றேன்.

    தமிழ் ஹிந்து தளம் எப்போதும் சாதிகள் தவறு என்றுதான் கூறி வந்திருக்கிறது என்பதை இந்த கட்டுரைகளில் நன்கு அறியலாம். ஆனால் கொஞ்சம் பொறுமையாக ஒரு தரத்துக்கு இரு தரம் படிக்கவும்.

    https://tamilhindu.com/2010/02/jati-castes-a-new-outlook-1/

    https://tamilhindu.com/2010/02/jati-castes-a-new-outlook-2/

    https://tamilhindu.com/2010/02/jati-castes-a-new-outlook-3/

    https://tamilhindu.com/2010/02/jati-castes-a-new-outlook-4/

    https://tamilhindu.com/2010/03/jati-castes-a-new-outlook-5/

    https://tamilhindu.com/2010/03/jati-castes-a-new-outlook-6/

  11. //நிறவெறியையும், அடிமைத்தனத்தையும்விட சனாதன ’இந்து’ தருமத்தின் தீண்டாமை எத்தனை கொடியது என பக்கம், பக்கமாக அண்ணல் அம்பேத்கர் எழுதியிருக்கிறார்// அப்புறமும் ஏன் ஐயமாருங்கல ஊருக்குள வெச்சுனுகீரீங்கோ? தலித் மகாஜனங்கோ…, சத்திரிய சாம்ராட்டுவோ..,வைசிய முதலாளிகோ, அல்லாருமா சேர்ந்து ஐயர்வோல i அடிச்சு தொரத்தலாமே! அண்ணல் அம்பேத்கருக்கு அம்பேத்கார்னு பேர் வந்ததுக்கு காரணமே ஒரு ஐயர் அவருக்கு ஆசிரியரா அமைஞ்சு வாழ்க்கையில கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி கொடுத்து வழிகாட்டியதுக்காகவா? இன்னிக்கும் அம்பேத்கர் சிலைகளை கூண்டுக்குள வெச்சு பாத்துக்கற நிலைமை தான் இருக்குது. அதுக்கு காரணம் யாரு? ஹிந்து மதத்தின் ஆன்மீகமா? ஹிந்து சமுதாயத்தில் அரசர்களால், போர் செய்து வென்ற சத்திரியர்களால் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட தீண்டாமை என்னும் விஷமா? இல்லை இது ரெண்டுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மக்களை பேசிபேசியே மடையர்களாக வைத்திருக்கும் நாத்திகர்கள் கட்சிகளா?

  12. //மகிழ்நன் கருத்தை படித்து அவர் உணவர்வை மதித்து பதில் சொல்லுங்கள்//

    who is he? converted guy?

  13. பிரசன்னா சுந்தர் அவர்களே ஒன்றை மறந்து விட்டீர்களே! அண்ணல் அம்பேத்கரின் 2 வது மனைவி ஒரு பிராமண பெண் டாக்டர்

  14. திரு செ. சுகுமார்!

    //யுதா்கள் என்ன பாவம் செய்தாா்கள் அவர்களுக்கு முகம்மது மதத்தாா் 1700 ஆண்டுகளாக மாறு அநியாயம் செய்கின்றாா்களே!அதுவும் இறைதூதா் என்று சொல்லத்தக்கவா் சமூக நீதியை போதித்தவா் அன்புமதத்தை போதித்தவா் என்ற பெருமையை யஉடையவராக சொல்லப்படும் முகம்மது இப்படி போதனை செய்தால் அவரது தகுதி என்ன ?//

    நபிகள் நாயகம் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். வணக்கம் என்ற பெயரில் யூதர்கள் செய்வதற்கு மாறு செய்ய இஸ்லாமியருக்கு கட்டளையிட்டது உண்மைதான்.அதற்கு காரணம் இரக்கிறது.

    1. யூதர்கள் இறைத் தூதர்களை கொன்றனர்.

    2. உலகிலேயே தாங்கள் தான் அறிவிற் சிறந்தவர்கள் என்று மமதை கொண்டிருந்தனர்.

    3. வேத வசனங்களை தெரிந்து கொண்டே யூத குருமார்கள் வேதங்களிலிருந்து அழித்தனர்.

    4. வேதங்களில் தங்களுக்கு சாதகமான செய்திகளை எடுத்துக் கொண்டு மற்றதை மறைத்தனர்.

    6. தீண்டாமையை மிக அதிகமாக கடைபிடித்தனர்

    7. நபிகள் நாயகத்திடம் வந்து ‘முஹம்மதே! நீர் சொல்வதெல்லாம் சரிதான். ஒத்துக் கொள்கிறோம். ஆனால் கீழ் சாதிக்காரர்களை உயர் சாதியில் பிறந்த நீ ஒன்றாக அழைத்து உபதேசம் எல்லாம் செய்கிறாய். அதை நாங்கள் ஒத்தக் கொள்ள முடியாது. எங்களுக்கு ஒரு நாள் அவர்களுக்கு ஒரு நாள் என்று போதனை செய். அவர்களோடு எங்களை ஒன்றாக உட்கார வைக்காதே’ என்று பேரம் பேசினர். நபிகள் நாயகம் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவும் நினைத்தனர். இஸ்லாத்தை ஏற்றவுடன் அவர்களின் திண்டாமையை ஒழித்து விடலாம் என்பது நபிகளின் எண்ணம். ஆனால் இதனை கண்டித்து ஒரு வசனத்தையே இறைவன் குர்ஆனில் இறக்குகிறான். முகமது நபியையே கண்டித்து ‘அபசா’ என்ற அத்தியாயாமே இறங்குகிறது.

    ஆரம்ப காலங்களிலிருந்து ஏகத்தவத்துக்கு தடையாக இருந்ததும் யூமர்கள். எனவெ அவர்களின் சாயல் கூட இஸ்லாமியர் மேல் படக் கூடாது. இப்படி பட்டால் அதன் மூலம் இஸ்லாமிய சட்டங்களிலும் குளறுபடிகள் வந்து விடும். வேத வசனங்கள் திரித்து கூறப்படலாம் என்ற எண்ணத்தினாலேயே யூதர்களை நபிகள் நாயகம் தூரமாக வைத்தனர். அப்படி தூரமாக்கியதால்தான் குர்ஆன் இடைச் செறுகல் இல்லாமல் தப்பித்தது.

    அதே சமயம் ஒட்டு மொத் யூதர்களையும் நபிகள் நாயகம் வெறுக்க வில்லை. ஒரு யூதரின் தனது கவச ஆடையை அடமானமாக வைத்து கடன் பெற்றிருந்தனர். பணிவிடை செய்ய ஒரு யூத சிறுவன் நபிகள் நாயகத்திடம் இருந்து வந்தான். யூதர்களிடம் அன்றைய முஸ்லிம்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருந்தனர். ஒரு யூத பெண்ணையே நபிகள் நாயகம் இஸ்லாத்தில் இணைத்து திருமணம் முடித்திருந்தனர்.

  15. //ஒரு யூத பெண்ணையே நபிகள் நாயகம் இஸ்லாத்தில் இணைத்து திருமணம் முடித்திருந்தனர்.//
    oh. first conversion???

  16. caste politics?
    சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மசூதியில் இன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் 30 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியாத்தில் உள்ள அல்- கொய்த் என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் மசூதியில் பல தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

  17. இந்த தளத்தில் கருத்து பதிகிறவர்கர்கள் பாண்டியனைப்போல உள்ளவர்களின் மன நிலையை புரிந்து கொள்ள முடிகிறதா?எனக்கு முடியவில்லை.”தீண்டாமை நம் நாட்டில் மட்டுமல்ல.மேலை நாடுகளிலும் நிறவெறி அடிப்படையிலான தீண்டாமை இருக்கிறது “என்று புகைப்படத்தின் ஆதாரத்தோடு கட்டுரை இருக்கிறது.அதற்கு சரியான பதிலடியாக சகோதரர் மகிழ்நன் அவர்களின் கருத்து இருக்கிறது.அதிலும் அம்பேத்கர் அவர்களின் கருத்தை மிகச்சரியான முறையில் மேற்கோள் காட்டி அவர் பதிலளித்து இருக்கிறார்.இதற்கு பதில் இருந்தால் சொல்ல வேண்டும்.இல்லையன்றால் இந்த தீண்டாமை என்ற மனித விரோத தன்மைக்கு வருந்த வேண்டும்.அதை விடுத்து சம்மந்தமே இல்லாமல் இஸ்லாம் ஷியா சன்னி சவூதியில் வெடிகுண்டு என்று வேறு எங்கோ போய் ஏன் முட்டுகிறார்கள்? தீண்டாமைக்கும் இவர்களின் கருத்துக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா?இலங்கை சிங்களவன் தமிழர்களை அடித்து விரட்டினானே அது தீண்டாமை அடிப்படையிலா விரட்டினான்?எனக்கு சுப்பிரமணி ஒருவரோடு வன்மம் நான் அவரையும் அவர் குடும்பத்தையும் அடியோடு வெறுக்கிறேன் என்று வைத்துகொள்வோம்.அவரையும் அவர் குடும்பத்தையும் எங்கு கண்டாலும் முறுக்கிகொண்டு நிற்கிறேன்.இதை தீண்டாமை என்று சொல்வீர்களா?ஒரு மனிதன் மேல் உள்ள வெறுப்பு ,காழ்ப்பு என்று சொல்வீர்களா?இதோ இங்கு தீண்டாமை என்ற தலைப்பின் கீழ் நடக்கிற விவாதத்தில் வலிந்து இஸ்லாம் முஸ்லிம் என்று இழுக்கிறீர்களே இது தீண்டாமையா?இது வெறுப்பு.ஒரு சமுதாயத்தின் மேல் உள்ள காழ்ப்பு.இதை விவாதிப்பது வேறொரு தலைப்பின் கீழ்.என்ன சொல்கிறோம் எதற்கு சொல்கிறோம் என்ற நிதானத்தோடு கருத்து பதியுங்கள்.உங்களின் வெறுப்பு என்பது உங்களையே திருப்பி அழிக்கும் ஆயுதம் என்பதை நினைவில் வையுங்கள்.

  18. தம்பி மகிழ்நன்! (உம போட்டோவை பார்த்தால் என்னைவிட வயதில் ரொம்ப குறைவாகத்தான் இருக்கிறாய். அதனால்தான் தம்பி என்ற வார்த்தை). உமது கருத்தை MEERA sahib என்பவர் குரங்குபிடியாக பிடித்து கொண்டு தொங்குகிறார். உமது கருத்துக்கு ”பதில் சொல் பதில் சொல்” என்று திரு பாண்டியனை பிடித்துகொண்டு சத்தாய்க்கிறார். ஆனால் நான் அவரை (சாஹிப் ) பார்த்து (இந்த கட்டுரையில் அல்ல. வேறு ஒரு கட்டுரையில்) சில கேள்விகளை கேட்டிருந்தேன் அதற்கு இதுவரை பதில் இல்லை. என் கேள்விக்கு முதலில் பதில் சொல்லட்டுமே அவர்!

    மீண்டும் தம்பியிடம் வருகிறேன். நாட்டில் சாதி சண்டை நடக்கிறது. ஆமாம் நடக்கிறது ஒத்துகொள்கிறேன் யார் யாருக்கும் நடக்கிறது? ”பெரும்பாலும்” கவுண்டனுக்கும் (= வன்னியருக்கும்) தலித் இனத்தவருக்கும்தான் நடக்கிறது. முதலியாருக்கும் தலித்துக்கும் அல்லது ரெட்டியாருக்கும் தலித்துக்கும் அல்லது செட்டியாருக்கும் தலித்துக்கும் சண்டை நடக்கிறதா? இல்லவே இல்லை. இப்போது அதிக அளவில் அவர்கள் இரண்டு இனத்தவர்களுக்கும் சண்டை நடப்பதற்கு காரணம் தமிழ் நாட்டில் PMK வும் VCK தான் காரணம். இருவருமே பெரியார் போட்டோவை தங்களது banner களில் வைத்துள்ளனர்.அப்படியானால் இந்த வன்முறைக்கு வித்திட்டவர் உங்க பெரியார்தான் என்பதை அறிந்துகொள்ளும் சுயமரியாதை புலியே! சாதி வேண்டாம் என்று கூறும் சுயமரியாதைகாரன் கருணாநிதி சாதி வெறி பிடித்து அலையும் PMK உடன் கூட்டணி வைத்து கொண்டதேன்? இப்போதும் வைத்து கொள்ள துடிப்பதேன்? அந்த கட்சியை வளர்த்துவிட்டது யாரப்பா? பதில் கூறப்பா.

    அலிஜனாப் அல்ஹாஜ் MEERA சாஹிப் அவர்களே! தீண்டாமையோ அல்லது நீர் சொல்வது போல வெறுப்போ அது எதுவாகவாவது இருந்து தொலையட்டும். அஹ்மதியர்களும் அல்லாவை தொழுகிறார்கள் . நீரும் அதே அல்லாவைத்தான் தொழுகிறீர். ஆனால் அவன் முஸ்லிமே அல்ல என்று (பாகிஸ்தானில்) எதற்கு கூறுகிறீர்கள்? அப்படி கூறி எதற்கு அவர்களை உங்கள் மதத்திலிருந்து ””’ஒதுக்கி”’ வைக்கறீர்கள்? தீண்டாமை காரணமாக தலித்துக்களை “”கொடுமை”” படுத்துகிறார்கள் என்பது உண்மை. ஆனால் (நீர் சொல்வதுபோல) வெறுப்பு or காழ்ப்பு காரணமாக அஹமதியாககளை அல்லது ஷியா முஸ்லிம்களை “”கொலை”” செய்கிறார்களே! நீங்கள் தினமும் பேப்பர் படிப்பவர்தானே! ”கொடுமை” செய்வது மிகவும் மோசமானதுதான்.ஆனால் ”கொலை” அதை விட மிக மிக மிக மிக மிக மிக மோசமானது என்பதை நீர் உணரவில்லையா? ஆகவே தீண்டாமையோ அல்லது வெறுப்போ அதன் கோரமான விளைவுகள் எந்த மதத்தில் கொடூரமாக உள்ளது என்று பதில் சொல்லும். இதற்கும் எனது பழைய கேள்விகளுக்கும் பதில் சொல்வீரா? அல்லது ஒளிந்து கொள்வீர்களா? நீர் தைரியமான ஆள்தானே! பதில் கூறும்.

  19. திரு மீராசாஹிப்

    கிழே உள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்து பாட்டைக் கேளுங்கள்.
    ( இது இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் இருந்தாலும் பரவயில்லை.)

    https://www.facebook.com/jalal.riyas/videos/vb.100000641994499/773763662655026/?type=2&theater

  20. //.”தீண்டாமை நம் நாட்டில் மட்டுமல்ல.மேலை நாடுகளிலும் நிறவெறி அடிப்படையிலான தீண்டாமை இருக்கிறது “என்று புகைப்படத்தின் ஆதாரத்தோடு கட்டுரை இருக்கிறது.அதற்கு சரியான பதிலடியாக சகோதரர் மகிழ்நன் அவர்களின் கருத்து இருக்கிறது.அதிலும் அம்பேத்கர் அவர்களின் கருத்தை மிகச்சரியான முறையில் மேற்கோள் காட்டி அவர் பதிலளித்து இருக்கிறார்.இதற்கு பதில் இருந்தால் சொல்ல வேண்டும்//

    article title says: இந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா?
    and my proof ;https://puthu.thinnai.com/?p=18181
    அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்
    https://ezhila.blogspot.co.uk/2012/09/blog-post_7886.html

    what else do you need? doing comedy to divert us???

  21. சட்டப்படி நிறவேற்றுமையும் , தீண்டாமையும் அமெரிக்காவில் ஒழிக்கப்பட்டுவிட்டன. எந்த மதத் தலைவரும் அங்கு இவற்றை நியாயப் படுத்துவது இல்லை.

  22. ஒரு முக நூல் பக்கத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்துள்ளது. இதனைப் பற்றிய உண்மைக் கருத்து இங்கு ஏதேனும் தெரிவிக்க முடிந்தால் நல்லது. ஏனெனில் அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறி விட்டதானாலேயே ஹிந்து மதம் தவறு என்ற பொய் தற்போது ( ஐஐடீ விவகார விவாதங்களில் ) பரப்பப் பட்டு வருகின்றது. இந்த கட்டுரையில் RSS ஐயும் குறை சொல்லி எழுதப்பட்டு இருக்கின்றது. முடிந்தால் பதில் எழுதவும்.

    https://www.facebook.com/notes/ananda-ganesh/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-/854691517899389

  23. அந்த நாட்டில் நிலவும் தீண்டாமைக்கு காரணம் மதமல்ல.ஆனால் இந்தியாவில் தீண்டாமைக்கு காரணம் சாதி, அதற்கு ஆதாரமாக இருப்பது இந்து மதம். அங்கு மனிதன் தவறாக இருக்கிறாரான் இங்கு மதமே தவறாக இருக்கிறது

  24. //அந்த நாட்டில் நிலவும் தீண்டாமைக்கு காரணம் மதமல்ல//
    எந்த நாட்டில் ?

    //அங்கு மனிதன் தவறாக இருக்கிறாரான் //

    முஸ்லிம் மனிதனா ? எந்த மனிதன் ?

  25. திரு மகிழ்நன் மற்றும் அலிஜனாப் ”மீரா” சாஹிப் ஆகிய இருவரும் இங்கே வந்து போய்விட்டார்கள்? இப்போது புதியதாக அன்பிற்குரிய சகோதரர் திரு தமிழ் அமுதன் என்று ஒருவர் வந்து சேர்ந்திருக்கிறார். வருக! வணக்கம். வாழ்க! (((மீரா சாஹிப் எனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் எங்கே போய்விட்டார்? ஒருவேளை மீரா(ன்) பாய் ஈரான் போய் விட்டாரா?)))

    /////அந்த நாட்டில் நிலவும் தீண்டாமைக்கு காரணம் மதமல்ல/////

    தீண்டாமைக்கு காரணம் மதமல்ல. ஓகே . ஆக, ”’அந்த”’ நாட்டில் தீண்டாமை நிலவுகிறது என்பதை முழுமனதோடு ஒத்துக்கொண்டுவிட்டார். அது போதும். அதற்கு காரணம் எதுவாக இருந்தால் என்ன? அதுவா முக்கியம்? அடுத்து ”’அங்கே”’ மனிதன் தவறாக நடக்கிறான் என்றால் மதம்தானே அவனை வழி நடத்துகிறது? அப்படியானால் மதம் ஒழுங்காக இருந்தால் மனிதனும் ஒழுங்காக இருப்பானே! அவன் சரியில்லை என்றால் அந்த மதமும் சரியில்லை என்றுதானே அர்த்தம்?

    திருவாளர் தனசேகரன்: அங்கே சட்டப்படிதான் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டப்படி நிறவேற்றுமை கொடுமை இன்றும் நடந்துகொண்டுதானிருக்கிறது என்பதை பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொள்ளவில்லையா?

  26. இன்று தினத்தந்தியில் வந்த செய்தி :

    உயர்சாதி பயில்வான் மீது தலித் சிறுமியின் நிழல் விழுந்ததாக கூறி அடி உதை

    சட்டர்பூர்

    தலித் சிறுமியின் நிழல் ஒரு உயர்ந்த சாதி மனிதர் மேல் விழுந்ததாக கூறி அந்த சிறுமியை அடித்து உதைத்து உள்ளனர்.

    இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் மத்திய பிரதேசம் கணேஷ்புரா கிராமத்தில் நடந்து உள்ளது. கடந்த் 13 ந்தேதி இது குறித்து காடி மல்ஹெர்ர போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யபட்டு உள்ளது. இந்த புகாரை சிறுமியின் தந்தை அளித்து உள்ளா.

    சிறுமி கிராமத்தில் இருந்த ஒரு குழாயில் தண்ணீர் எடுத்து கொண்டு வரும் போது உயர்சாதியை சேர்ந்த பூரண் யாதவ் என்ற பயில்வான் மீது சிறுமியின் நிழல் விழுந்து விட்டதாக கூறி சிறுமியை அடித்து உதைத்து உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக பயில்வானின் குடும்பத்தை சேர்ந்த பெண்களும் சிறுமியை அடித்து உதைத்து இந்த தண்ணீர் குழாய்க்கு மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

    யாதவ் குடும்பம் பதிக்கபட்டவர்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்வதை தடுத்து உள்ளனர் ஆனால் அதையும் தாண்டி அவர்கள் வந்து புகார் கொடுத்து உள்ளனர்.

    போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    தினத்தந்தி
    16.06.2015

    https://www.dailythanthi.com/News/India/2015/06/16173542/MP-Dalit-Girl-Beaten-Up-As-Her-Shadow-Falls-On-High.vpf

    மற்றவர்கள் சொல்லும்போது கஷ்டமாக இருந்தாலும் இந்த தீண்டாமைக் கொடுமை எப்போதுதான் இந்த நாட்டை விட்டுப் போகும் என்று தெரியவில்லையே ?

    திரு சிவராஜ் சிங் சௌஹான் அதிரடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் BJP பெயர்தான் கெடும்.

  27. திரு.மீரான் சாஹிப் அவர்களே ,

    தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் வெறும் 5% இருக்கிறார்கள். ஆனால் உத்திரப்ரதேசத்தில் 18% இருக்கிறார்க்கள். அங்கு பஸ்மன்டா முஸ்லிம் க்ருப் ஒன்று இருக்கிறது. அவர்கள் அங்கு அவர்களொடைய உரிமைக்காக உயர் ஜாதி முஸ்லிம்களை எதிர்த்து போராடுகிறார்கள் . தெரியுமா?

  28. இதே தமிழ் ஹிந்து இணையதளத்தில் பலமுறை இஸ்லாமிய ஜாதீயத்தை பற்றி கட்டுரை வந்துள்ளது. அஸ்ரஃப் உயர் ஜாதி ,அஜ்லஃப் மற்றும் அஜல் தாழ்ந்த ஜாதி முஸ்லீம் பிரிவுகள் பற்றி தெரியாதா? உடன் குரானில் ஜாதி உண்டா? கேட்பீர்கள். ஐயா,ஹிந்து வேதத்திலும் ஜாதி இல்லை. எவ்வாறு ஹதீஸிருந்து முஸ்லீம் ஜாதிகள் வந்ததோ அவ்வாறே பிற்காலத்தில் ஹிந்து மதத்திலும் ஜாதி வந்ததது. அரபு ,ஆஃபிரிகா ஜாதிகள் பற்றி இணையத்தில் நிறைய வந்துள்ளன.படியுங்கள்

  29. சுவனபப்பாியன் அவர்களே யுதா்களுக்கு அநியாயம் செய்வதை முஸ்லீம்கள் தங்களின் கொள்கையாக வைத்துள்ளாா்களே அதற்கு என்ன காரணம்.யுதா்களை நம்பாதீா்கள்இ யுதா்களை நண்பா்களாக கொள்ளாதிா்கள் என்று முஹம்மது உபதேசித்துள்ளது தவறு.
    முஸ்லீம்களோ அரபியா்களோ ஒட்டு மொத்தமாக நல்லவா்களா ? முஹம்மதுவின் மகள் பாத்திமாவின் குடும்பம் ஏன் படுகொலை செயயப்பட்டு அழிக்கப்பட்டது ?யுதா்களா காரணம் ? தன்னை நபி என்று யுதா்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.எனவே பயங்கரமான முறையில் அவர்களை அழித்து ஒழித்தாா்.மதினா நகரம் யுதா்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடமாகும். கொடும் ?யுத்தம் நடத்தி யுதா்களை விரட்டி மேற்படி நகரத்தை முஹம்மது கைபற்றினாா்.முஹம்மது ஒரு அரேபிய தாதா.நபி என்று சொல்ல எந்த தகுதியயும் அவரு்க்கு இல்லை.

  30. இந்து சயமத்தில் தீண்டாமையை ஒழிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். ஹிந்து திருமணமங்களை போற்ற வேண்டும். திருமணத்திற்கு சாதியில்லை என்று ஆகிவிட்டால் தீண்டடாமை ஒழிந்து விடும். அனைவருக்கும் முறையான சமய கல்வி கிடைக்க வேண்டும்.

  31. //இந்து சயமத்தில் தீண்டாமையை ஒழிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். ஹிந்து திருமணமங்களை போற்ற வேண்டும். திருமணத்திற்கு சாதியில்லை என்று ஆகிவிட்டால் தீண்டடாமை ஒழிந்து விடும். அனைவருக்கும் முறையான சமய கல்வி கிடைக்க வேண்டும்.//

    வெறும் கை முழம் போடாது.

    உங்கள் விருப்பம் நிறைவேற இந்துக்கள் அனைவரின் ஒட்டுமொத்தமாக ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்படிப்பட்ட ஒத்துழைப்பு இல்லை. தமிழ்நாட்டைப்பார்த்தாலே தெரியுமே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *