ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை

பாலமேடு ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடத்தப்பட்ட வரலாறு காணாத போராட்டம் அதன் இலக்கை எட்டிவிட்டது. ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மதிப்பு மிக்கது- இறுதியானது என்பதும், சட்டங்களுக்காக மக்கள் அல்ல- மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இடையிடையே ஒலித்த அபசுரமான தேச விரோத கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களும், இந்தப் போராட்டம் குறித்த மீள்பார்வையை அவசியமாக்கியுள்ளன.

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் 2016-இல் விதித்த தடையை நீக்கக் கோரி நடந்துவரும் வழக்கில் தீர்ப்பு பொங்கலுக்குள் வெளியாகியிருந்தால் இந்த மாபெரும் போராட்டமே நடந்திருக்காது. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது மரபு. ஆனால், ஜனவரி 13-ஆம் தேதி, இவ்வழக்கில் தீர்ப்பு உடனடியாக வழங்கப்படாது என்றும், பொங்கலுக்குப் பிறகே வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தபோது, அதை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தமிழக மக்கள் உணர்ந்தனர். தாமதமான நீதி அநீதியாகவே கருதப்படும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏன் மறந்தது?

இவ்விஷயத்தில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது அவ்வாறான சாகசங்களில் பொறுப்பான மத்திய அரசு ஈடுபட முடியாது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க தமிழக அரசுத் தரப்பிலோ, மத்திய அரசுத் தரப்பிலோ தேவையான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாக, மக்களின் அதிருப்தி அரசுகள் மீது திரும்பியது. அதைக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பிய திரை மறைவு சதிகாரர்களின் உந்துதலே இந்தப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது. ஆனால், வெகு விரைவில், இந்தப் போராட்டத்தின் லகான் அவர்களிடமிருந்து மாணவர்களின் கரங்களுக்குச் சென்றுவிட்டது.

மதுரை- தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டம்

இதில் மிகவும் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடுபவர் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அதேசமயம், நீதிமன்றத்துக்கு எதிரான போராட்டங்களும், தடையை மீறி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளும், வழக்கில் நமக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிடும் என்று அவர் எச்சரித்தார். ஆனால், அவரது எச்சரிக்கை ஊடகங்களால் திரிக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டது. அதன்காரணமாக, பாஜக ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அதன் எதிரிகள் முயன்றனர். போதாக்குறைக்கு விலங்குநல ஆர்வலரான மேனகா காந்தியின் பேட்டிகளும் சூழ்நிலையை பாஜகவுக்கு எதிராக மாற்றின.

நீதிமன்றத் தீர்ப்பு வரவில்லை என்பதால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இல்லை என்றானவுடன், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் மாட்டுப்பொங்கலன்று அறவழியிலான சட்டமீறல் போராட்டங்கள் நடந்தன. அவற்றை மாநில அரசு சட்டப்படிக் கையாண்டது. அதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்காட்டு ஆர்வலர்கள் போராட்டங்களைத் துவக்கினர். அதன் பின்னணியில் அதிகார வேட்கை மிகுந்த ஆளும்கட்சிப் பிரமுகர்களும் இருந்தனர்.

வழக்கமாக மரபு, பாரம்பரியம் போன்ற அம்சங்களுக்கு எதிரானவர்களாகக் கொடி பிடிக்கும் நக்சல் ஆதரவு தமிழ்த் தேசியவாதிகளும், கிறிஸ்தவ உதவி பெறும் தன்னார்வ அமைப்புகளும், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு அமைப்புகளும்கூட, இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு என்பது வழிபாட்டுக்குரிய தமிழ்ப் பண்பாடு என்பதை மறந்து, நாட்டின் பல பகுதிகளிலும் இதேபோன்ற பண்பாட்டு நடவடிக்கைகள் உள்ளன என்பதை மறைத்து, இந்தியத் தன்மையிலிருந்து மாறுபட்ட சாகச விளையாட்டாக ஜல்லிக்கட்டை அவர்கள் முன்னிறுத்தினர்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே சமயவழி பண்பாட்டு ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திவந்த போராட்டம் காரணமாக, தேச விரோதிகளின் முயற்சி முழுமை பெறவில்லை. தவிர, பீட்டா அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் குளிர்பான நிறுவனங்களுக்கு எதிர்ப்பு, பசு வதைக்கு எதிர்ப்பு, நாட்டுக் காளையினங்கள் பாதுகாப்பு என்பதாக போராட்டத்தின் திசை மாறியது. இருப்பினும், இந்தப் போராட்டத்தைக் கொண்டு மத்திய அரசுக்கு இழுக்கு ஏற்படுத்த தீவிரமான முயற்சிகள் தொடர்ந்தன. உண்ணாவிரதம், போராட்டம் நடைபெற்ற பல இடங்களில் மத்திய அரசுக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரான வாசகங்கள் வெளிப்படுத்தப்பட்டன. “இந்திய பாஜக அரசே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கு” என்ற வாசகம் ஒரு மென்மையான உதாரணம்.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டக் களத்துக்கு வந்தனர். அதையடுத்து வர்த்தகர்கள், மகளிர், தொழில்துறையினர், திரைத் துறையினரும் போராட்டக் களம் ஏகினர். அப்போது அது புதிய வடிவம் பெற்று, அரசியல்வாதிகள் போராட்டக் களத்தில் நுழையக் கூடாது என்று எச்சரிக்கும் அளவுக்குச் சென்றது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றோருக்கு எங்கிருந்து உதவிகள் கிடைத்தன என்பதைப் பரிசீலித்தால் பல பின்னணி உண்மைகள் புலப்படும். பல இடங்களில் திமுகவினரும், அதிமுகவில் ஒரு பகுதியினரும் போராட்டக்காரர்களுக்கு உணவு, வாகனம், ஒலிபெருக்கி, பந்தல், குடிநீர் வசதிகளைச் செய்தனர்.

ஆனால், மாணவர்களின் தன்னெழுச்சி, அவர்களை திரைமறைவில் ஆதரித்துக் கூர்தீட்டியவர்களின் எதிர்பார்ப்பை விஞ்சுவதாக மாறியபோது, தமிழக முதல்வரை சிக்கலில் மாட்டிவிட்டு அதிகார மாற்றம் காண விரும்பியவர்களின் எண்ணத்தில் இடி விழுந்தது. அப்போது அவர்களால் அந்தப் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மட்டுமே இயன்றது.

எது எப்படியோ, மக்கள் சக்தி இறுதியில் வென்றுவிட்டது. இப்போது மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நிதர்சனமாக்கிவிட்டது. ஆனால், இந்தப் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் அவ்வப்போது எடுப்பார் கைப்பிள்ளைகளாக – திரைமறைவிலிருந்து தூண்டியவர்களின் அம்புகளாக மாறியதுதான் சோகம்.

முதலாவதாக இந்த விவகாரத்துக்குக் காரணமே முந்தைய காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசுதான் (2011-இல் காளைகளை தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது) என்பதை மறந்து, தற்போதைய மோடி அரசை வசை பாடியது. அடுத்து உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக மத்திய அரசு அவசரச் அட்டம் கொண்டுவர முடியாது என்ற எளிய உண்மையைக் கூட உணராமல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் பலர் பேசியது.

போராட்டக் களத்தில் மாணவர்களை உசுப்பிவிட்டதில் த்மிழ் ஊடகங்களின் உள்ளடி வேலைகளும் இருந்தன. கேமராவும் மைக்கும் பல இடங்களில் மாணவர்களை மாபெரும் வீரர்களாக உருக்கொள்ள வைத்தன. இந்த மாபெரும் போராட்டம் நல்ல தலைமையை உருவாக்கக் கூடும் என்ற நம்பிக்கையை சிதைத்த காட்சிகள் இவை.

ஹெச்.ராஜாவும் தருண் விஜயும்…

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உள்ளூர் மனநிலையை உணர்ந்தவர்களாக பாஜகவில் செயல்பட்ட இருவர் ஹெச்.ராஜாவும் தருண் விஜயும் தான். தேசிய உணர்வு முதன்மையானது என்றபோதும், உள்ளூர் அளவில் மக்களின் அபிலாஷைகளை தேசியக் கட்சிகள் புறக்கணிக்க முடியாது- கூடாது.

அந்த வகையில், வாய்ச்சொல் வீரராக அல்லாமல், தான் வளர்த்த காளையுடன் சிங்கம்புணரியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றது, போராட்டக் களத்தில் குறிப்பிடத் தக்க விளைவை ஏற்படுத்தியது.

அதேபோல,  உத்தரகண்ட் மாநிலத்தைச் சார்ந்த மாநிலங்களை பாஜக முன்னாள் உறுப்பினர் தருண் விஜய், தனது தமிழ்ப்பற்று காரணமாக தில்லியிலும் தமிழகத்திலும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டது நல்ல விளைவை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டுக்கு பாஜக எதிரானதல்ல என்பதை தமிழக மக்களுக்குப் புரியவைக்க இந்த நிகழ்வுகள் உதவின.

உச்ச நீதிமனறம் தீர்ப்பளிக்க மறுத்த நிலையில் (ஜன. 13), ஜல்லிக்கட்டு நடத்த இயலாது போனதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வித்யாசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். இருப்பினும் சென்ற காலத்தில் அவர் அளவுக்கு மீறி அளித்த வாக்குறுதிகள் பூதாகரமாக அவரைத் திருப்பித் தாக்கின என்பதையும் மறக்கக் கூடாது.

உணர்ச்சிகரமான போராட்டங்களின்போது அறிவுப்பூர்வமான வழிகாட்டுதலும், நிதானமான தலைமையும் அவசியம். அதை இந்தப் போராட்டம் பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டு பண்பாட்டு மீட்பு நடவடிக்கை என்பதை உறுதி செய்த அளவில் மட்டுமே மாணவர்களின் விழிப்புணர்வில் தெளிவு காணப்பட்டது. தாங்கள் நடத்தும் போராட்டம்- அரசுகளுக்கு எதிரானதல்ல- நீதிமன்றத்தின் தன்னிச்சையான போக்கிற்கு மட்டுமே எதிரானது என்பதை வெளிப்படுத்தியிருந்தால், மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வை சிலாகித்திருக்கலாம்.

மாணவர்களின் இந்தக் குழப்ப சூழ்நிலைக்கு, போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத அமைப்புகளே காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள், இறை நம்பிக்கையற்ற குறுங்குழுக்கள், எஸ்.டி.பி.ஐ. போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், சர்ச் உதவியால் இயங்கும் தன்னார்வலர்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பலரும் ‘தமிழினப் பெருமிதம்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், தேசிய ஒருமைப்பாட்டை விமர்சித்தும் தங்கள் ஊடுருவலை நடத்தினர். அவர்களிடமிருந்து விலகி நிற்க போராட்டக்காரர்களின் உணர்ச்சிகரமான் மனநிலை இடமளிக்கவில்லை.

சுதேசி இயக்கம், இந்து முன்னணி, பசுப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தேசநலன் விழையும் அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டபோதும், பீட்டாவின் சதியை பல்லாண்டுகளாக அவர்கள் பிரசாரம் செய்துவந்தபோதும்,  வெகுஜன இயக்கமாக ஒரு போராட்டம் மாறும்போது அதை சுவீகரிக்க அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த வெற்றிடத்தை தேச விரோதிகள் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் அரசியல்கட்சிகள் தங்கள் போராட்டத்தில் பங்கேற்பதை மாணவர்கள் தடுத்தது, அவர்களின் விவேகத்தை வெளிப்படுத்தியது. சூழலில் விஷம் விதைக்க முயன்ற திரை இயக்குநர் சீமானை போராட்டக் களத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றியது நல்லதொரு உதாரணம்.

மக்கள் போராட்டத்துக்கு தலைவணங்கிய முதல்வரும் பிரதமரும்…

இருப்பினும், உணவு உரிமை என்ற பெயரில் காளைகளையும் பசுக்களையும் கொடூரமாக வதைப்பதை ஆதரிக்கும் மதத் தீவிரவாதிகள் எவ்வாறு தங்களுடன் சேர்ந்துகொண்டு நாட்டுக் காளையினங்களைப் பாதுகாப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிடுகிறார்கள் என்பதை மாணவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்.

போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள் மூலமாக புதிய அரசியல் தலைமை மலர வேண்டும். இந்த ஒரு வார காலத்தில் கிடைத்த அனுபவங்களை அசைபோட்டுப் பார்க்கும்போது, தங்கள் பிழைகளை மாணவ சமுதாயம் உணர முடியும். இந்த லட்சக் கணக்கான மாணவர் திரளில் நிச்சயமாக எதிர்கால சமுதாயத்துக்கான தலைமை உருவாக வாய்ப்புண்டு. அதற்கு அவர்கள் சுயபரிசோதனைக்கு தங்களை ஆட்படுத்துவதும், பொது விவகாரங்களில் தங்கள் அறிவை விசாலப்படுத்துவதும் அவசியம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த வெற்றிகரமான விளைவாக, தமிழ்ச் சமுதாயத்தில் புதிய இளம் தலைமை மலருமானால், அதற்காக உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தடையுத்தரவுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்லலாம்.

 

35 Replies to “ஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை”

  1. This all our tamil hindu rights but our all organization responsibility when they are ignore (as TAMIL)

  2. When ignore our tamil language state rights. we are working for “what they are demond” why lose credit think and change our work style mind. example: this is hindu festival,tamil former rights(cauvery tribunal)fisher man, srilanka tamil people such all politics. Please forgive me I am not against.

  3. உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தன்னிலை மறந்து விட்டனர். தாம் தேசத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்பதை உணரவேயில்லை.

  4. The author has given only 1 side of the picture. The protests were as much against the state & central govts as it was against the supreme court.

    The BJP govt cannot simply blame the previous congress govt alone. You say that the centre cannot pass an ordinance. ok, but if that is the case, how can they tell the state govt to do so? Will that be valid?

    The centre could have removed the bull from the restricted animals list in the parliament where it has a majority. Why did it not do so?

    Subramaniam Swamy called all supporters of tamil jallikattu as “tamil porikkis’. Did anyone from the BJP condemn that?

    How do you justify that?

    The protests were not just against jallikattu. Jallikattu was only a spark.

    There was anger simmering against the centre fo its step motherly attitude towards tamilnadu in many issues – fishermen, cauvery, mullaiperiyar, palar issue etc.

    The centre agreed before the supreme court that it would form the cauvery river water management board. Within 2 days, it backtracked & said that the court had no authority to issue such an order & it can be done only in parliament.

    Then, it said that a common water panel will be formed & the issue of national linking of rivers would be taken up.

    National linking of rivers is never going to happen & the board will not be formed.

    That is because the BJP wants to come back to power in Karnataka. Even a child knows it.

    Is Narendra Modi not responsible?

    He knows clearly that BJP will not be able even a single seat in TN assembly.

    The attitude of the centre – be it congress or BJP has been the same, towards TN.

  5. This writer is very biased and does not want to see the truth. He says when a case is pending in Courts the central govt cannot bring a new Act. If that is so how did they bring one now. There are so many distortions and lies in this article. He is bringing shame on Hindus. He may be related to Ratha Rajan another fanatic lady bringing shame on Hindus.

    Don’t you realise that PETA and North Indians don’t give a damn to “matharasi tamils ” in spite of their emotional foolish attachement to bharatha matha and it’s flag.

    Don’t be detached and away from people’s struggle. Be with them , just like Christians Muslims and others did, take part in their social cultural activities and lead an important role.

    Change your strategy otherwise you will achieve nothing. You will be like a dog barking at moon.

  6. போராட்டத்துக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளை இயன்ற வரை இந்த வ்யாசம் கோடிட்டுள்ளது. இன்னமும் பல தகவல்கள் பகிரப்பட்டிருக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விவகாரத்தின் பின்புலம் முழுமையாக விவரிக்கப்பட வேண்டும். தீரா விடக் கட்சிகளான தீ முக, தீ க போன்றவை ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு எதிராக என்னென்ன நிலைப்பாடு கொண்டிருந்தனர். இவர்கள் பேசியதெல்லாம் என்னென்ன.

    தவ்ஹீத் மற்றும் என்னென்ன க்றைஸ்தவ அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக முன்னர் எப்படியெப்படி ஜல்லியடித்துள்ளனர் என்பது தமிழ் ஹிந்து தளத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக முதலில் தீர்ப்பளித்த உச்ச ந்யாயாலய ந்யாயாதிபதி பானுமதி எனும் க்றைஸ்தவர் அளித்த தீர்ப்பு அலசப்பட வேண்டும். அதில் உள்ள குறைகள் அலசப்பட வேண்டும்.

    பீட்டா அமைப்பை ஆதரிப்பவர்கள் யார் யார்? இவ்வளவு நடந்த பின்னரும் கூட இன்றைய நிலையில் தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி ஜல்லிக்கட்டை வெளிப்படையாக எதிர்க்கும் போதும் கூட அதைப் பற்றி ஊடக வேசிகள் மௌனம் சாதிக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக வெளிப்படையாக துவக்கத்தில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் பாஜக கட்சியையும் ஹிந்துத்துவ அமைப்புகளையும் தமிழக ஊடக வேசிகள் எதிர்ப்பது விவரிக்கப்பட வேண்டும்.

    ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வின் பண்பாட்டுப் பின்புலம் தனியாக தமிழ் ஹிந்து தளத்தில் விசாரிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வு தமிழகத்தின் கோவில் வழிபாட்டு சடங்கு என்பது மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும். இந்த நிகழ்வின் பிரிக்ககூடாத அம்சமான கோவில்…………வழிபாடு………..சடங்கு …………. என்பதனை பலவந்தமாகப் பிரிப்பதன் மூலமாக………….. இதனை ஒரு விளையாட்டு அல்லது கேளிக்கை என்று சித்தரிப்பதன் மூலமாக ………….. பரங்கிய மற்றும் அராபியப் பணத்துக்கு விலைபோன ஆப்ரஹாமிய சக்திகள் ……….. ஒருபுறம் இதை ஆதரிப்பது போல பாவ்லா காண்பித்தாலும்…………உச்ச ந்யாயாலயத்தின் தீர்ப்புடன் தீய ஆப்ரஹாமிய சக்திகள் ஒத்து ஊதுவது தெளிவாகத் தெரிகிறது.

  7. Vaishnavathevi

    What has the country done to the Tamils? Why do they give prominence to American PETA and not to the tamils’ demands.

    When none of the states, specially the neighbouring states, do not care or respect you Tamils as a fellow citizen, only slavery minded Tamils like you worry about the country and flag.

    Country is a leading exporter of beef, yet we Hindus bow our head to those in power, local as well as Delhi. What a slavery minded people we are. Start a social minded Hindu organisation, gather peoples’ support and lead a struggle against beef export, instead of accusing other religious groups and students.

  8. India is one of the top countries in exporting beef. So salute to the country and its flag please.

    Let us praise Panneer .BJB Ratha madam and Swami for the success in our export.

  9. பொழுது போக்கு பஞ்சமிக்க பேதைகளின் பாசாங்கு ,இந்த கூட்டத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கு ,சல்லிக்காசுக்கு கூட சம்பந்தமில்லை -அவர்களுக்கு நாயக,நாயகி பாத்திரங்களை ஏற்று நாடகங்களை நடத்திப்பார்க்க ஒரு வாய்ப்பு ,அனுபவிக்கட்டும் ,உலகெங்கும் வலது சாரிகளின் எழுச்சி ,இடது சாரிகள் ,நாஸ்திக,அரைவேக்காட்டு குஞ்சுகளின் ரகசிய அரிப்புகளுக்கு சொரிந்து கொள்ள ஒரு நிகழ்ச்சி.சாணியை பார்க்காதவனெல்லாம்,ஜல்லிக்கட்டுக்கு உயிரைக்கொடுப்பேன் என்று ஜல்லியடிக்கிறான் .ராமனின் புகழ் பாடும் இடங்களிலெல்லாம் அனுமன் இருப்பான் என்பது போல் மோடியை வசைபாடும் ,வாழா வெட்டிகளுக்கெல்லாம் சோறு போடும் சிறுபான்மை சிங்கினிகள்.வந்ததே யுகப்புரட்சி ”என்று retired சினிமா நடிகர்கள்,கரு பழனியப்பன் ,புரட்சி திலகம் ,தியாகு,(இவனுங்களாம் சோத்துக்கு என்ன பன்றானுங்க?)உருகி உருக்குலைஞ்சி போனானுங்க பாவம்.புகழ் பிச்சைக்கு அலையும் பேதையர்கள்.தமிழர்களெல்லாம் பிரச்சினை என்றால் கடற்கரையில் கூடி கண்ணீர் சிந்துவார்கள் என்ற பிம்பத்தை கூட்டினார்கள்.வெட்கம்.

  10. very good Mr.Venkatesan.Jallaikattu is neither a game nor a sports.Two persons who played jallikattu were killed by Bull at Padukottai.What a pity. this loss of human being who are tamilians is not taken note of this tragedy, no dabatee no comments about it in press /TV.Brahmins/vellalar/Mudaliar/chettiyar youths never play jallikautu.swami Vivekananda has said You youths of non-brahmins,emulate the good habits of Brahmins-develop human resources -do not dowdle away your human resources in foolish acts and faction mongering. This abhorism must reach every men and women of Hindu society.

  11. மராட்டியத்தில் ,ஆந்திராவில் இது போல ஒரு நெருக்கடி வந்தபோது ,அந்த தலைவர்கள் இதழ்கடையில் புன்னகையோடு ”ப்பூ”என்று ஊதிய ஆண்மை எங்கே?கையாலாகாமல் கடற்க்கரையில் கூடி கண்ணீர் விடும் ‘பெட்டைநெடும் புலம்பல் எங்கே? வீட்டில் சில்லுண்டி பயல் யாராவது விடலைத்தனத்தால் கிளுகிளுப்பு கண்டால் ,தந்தையவன் கண்டித்து ,முதிர்ச்சியோடு நடந்து கொள்வான்.அனால்,பையனோடு சேர்ந்து கொள்ளும் ‘வீராசாமிகளால்’களைகட்டிய விடலை கூத்து!’வெட்கக்கேடு.இதில் அந்த’மூன்று டிவி காரர்கள் கையில் பிடித்துக்கொண்டு -காமிராவையும்,மைக்கையும் தான் சொல்கிறேன்-அலைந்து அரிஸ்டாட்டில்களின்,பிளட்டோக்களின்,”மேதாவிலாசங்களை ”வெளியிட்டு தங்கள் சமூக கடமைகளை முடித்தனர்.விவாதங்களில் ,அவர்கள் ஆட்சியை பிடித்து விட்டு,அமைச்சரவை மட்டும் தான் பாக்கி என்பது போல் ”உங்களின் அடுத்து கட்டளைகளென்ன?”என்றெல்லாம் ஏத்திவிட்டு வேலையில்லா நடிக குஞ்சுகள் குலைந்து போயின.அதனை கூத்தும் ஜல்லிக்கட்டுக்கே என்று மயங்க நாம் முட்டாள்களல்ல,நாட்டு மாடுகளை தேனிலவு’அனுப்ப அல்ல!இந்த லட்சணத்தில் இவர்கள் ”போராடுவது”புரிந்தால் அவமானத்தால் காளை மாடுகள் கருத்தடை செய்து கொள்ளும்.

  12. Krishnakumar & Venkates

    Don’t blame Dalits dravidians and Christians for everything. What have we Hindus done in the matters of public interest ? At least have we done a protest or any sort of agitation in regard to beef export / killing cows. Watch your Tamil TV channels where Hindu gods and Swamis are criticised and defamed. Why didn’t you come to the streets and picket against these medias. I know you cannot do this because you have no such organisation and no mass support. You could only grumble while sitting at home. Learn a few lessons from Christians and their organisations.

    Wake up sirs, when you are unable to form an organisation with public interest the best other option will be to join other organisations marches and pickets and identify with ordinary poor people and their struggle for justice. Be with the ordinary people and take swami Vivekananda’s message to them. Where were you when lakhs and lakhs students workers and ordinary poor people were protesting all over Tamil Nadu? Don’t say that amount of people will gather for free sex if provided.

    Please follow Swami Vivekananda and engage in social activities. Stop criticising others while being inactive.

  13. புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி இவ்விளையாட்டை எதிர்ப்பது ஒரு வெளிப்படையாகக்காரணம் அவர் சொல்லியிருப்பார்: நான் படிக்கவில்லை. ஆனால் உட்காரணம் நன்றாகத் தென்மாவட்டக்காரர்களுக்குத் தெரியும். ஜாதி வெறியே.

    முக்குலததோர் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தம் ஜாதியினரின் தலைமுறைதலைமுறையாகத் தொடரும் வீர விளையாட்டு இது… அழிக்கலாமா என்றுதான் சுவரொட்டிகள் முழங்குகின்றன. விருமாண்டி திரைப்பட்ம் மூலம் முக்குலத்தோரின் இன்றைய திரைப்பட நாயகனாகத் திகழும் கமலஹாசன் நிருபித்துவிட்டார்..

    கள நிலவரத்தின் சமீப வர‌லாறு முக்குலத்தோரின் ஜாதிவெறியைக்காட்டும் இரு வருட நிகழ்வுகளில் இவ்விளையாட்டும் ஒன்று; மற்றொன்று குருபூஜை.

    இவ்விளையாட்டை அவர்களின் ஜாதி அமைம்புக்கள் எதிர்நோக்கிக் காத்திருப்பர். குழுக்களாக ஜாதிமைப்புக்களின் துணையோரு தேவர் பாய்ஸ், மறவர் பாய்ஸ் என்று மஞ்சள் நிறப்பனியனக்களை அணிந்துகொண்டு காளை மாட்டுகளை அடக்க உள்ளுழைவ்ர். ஜாதிப்பெருமை பேசும் கோஷங்கள் விண்ணைப்பிளக்கும். சில்லாண்டுகளுக்கு முன் அரசு நுழைந்து இஜ்ஜாதி கோஷங்களையும் வேஷங்களையும் சட்டப்படி தடுத்து நிறுத்தியிருக்கிறது. எனினும் சிறு கிராமங்கள் அப்படியேதான். இஜ்ஜாதியினர் உடல் வலிமையையே தெய்வமாக பார்க்கின்றனர். இன்றைய உலகம் எங்கோயோ போய்விட்டது., ஒரு பட்டனை அமுக்கினால் நூற்கோடி மக்களை அழிக்கும் சக்தி ஒரு நோஞ்சானுக்கும் உண்டு என்று விஞ்ஞானம் கண்டுபிடித்து செயலாற்றுகிறது என்று இவர்களுக்குப் புரியாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்கின்றனர்.

    இவர்கள் தவிர மற்றவர்கள் உள்ளுழையா விளையாட்டாக இம்மாவட்டங்களில் இன்று திகழ்கின்றது. எனவே இஜ்ஜாதியினரால் பாதிக்கப்பட்ட கிருஸ்ணசாமியின் ஜாதிக்காரகள் இவ்விளையாட்டு நெருங்கனெருங்க ஜாதிக்கல்வரமாக ஆகிவிடக்கூடாதே என்று பயப்படுவது இயல்பு, கிருஸ்ணசாமி எதிர்ப்பது இயற்கை.

    இங்கு எழுதும் சூரப்புலிகள், தென்மாவட்டக்கிராமங்களில் வாழ்ந்திருந்தால், அவர்கள் நினைப்பு கிருஸ்ணசாமியாரின் நினைப்பையொட்டியே இருக்கும் அவர்கள் கமலஹாசனைப்போல முக்குலத்தோரின் ஆதரவாளர்களாக இல்லாவிட்டால்.

    கோயில், சாமி, பாரம்பரியம் என்பனவெல்லாம் இங்கு எடுபடா. ஆதிக்கசாதியினர்-பயப்படும் சாதியினர் என்ற பரிமாணத்தால் மற்றவை நீர்த்து விடுகின்றன.

  14. jallikkattu poarattam vetripera 7 kaaranangalea mukkiyamaaga irunthana.
    1. thalaimai kidaiyadhu. jallikkattu vendum enpathey thalaimai.
    2. arasiyalvaathikalai anumathikkavillai.
    3. cinemaa kaararkalai anumatthikkavillai.
    4. saathi peasappadavillai.
    5. matham peasappadavillai.(silar peasiyirunthalum avargal samoogavirothigal)
    6. panam theavai padavillai allathu ethir parkkappadvillai.
    7. mealum ithu palveru aandukalaaga makkalin manathil palveru
    visayangalukkaaga amukkivaikkappattiruntha kopam
    ivaiyea jallikkattu porattam vetripera kaaranam.

  15. I agree with BSV on the caste angle in jallikattu. There are reports that dalits generally keep away from it. If at all, a few take part & a dalit happenes to win, it leads to tensions.

  16. madam,maya.
    i am highly enlightened and disillusioned about all the ”holy forms of yours ideal protests”.what do mean by mass support?just having immature pack of a few lacks lads and lasses yelling shouting thus venting their spleen otherwise unnoticed by any creatures of wise nature?
    if so,we have an elected government which had won mandate of a crore and sixty thousands of voters ,just respect the governing authority. i think you don’t read my second comment which hungs just above yours which has more answers to yours,and not an innocent follower of vivekanandaa,but,am a rouge fan of my spiritual master OSHO who taught us well to study the truth even in the blackmailing fancies of much fanfare!

  17. \\ The protests were not just against jallikattu. Jallikattu was only a spark. \\
    The people who organised the protest were well intended people like karthikeya senapati who did real field work on the welfare, protection of desi breeds of cows and bulls. The prrotests were organised only for jallikkattu by the people who had long experience and did field work in lthis regard.
    Latter it was hijacked by ultra left goons, jihadist forces and racist white church who are both anti hindu and anti national.
    \\ There was anger simmering against the centre fo its step motherly attitude towards tamilnadu in many issues – fishermen, cauvery, mullaiperiyar, palar issue etc. \\
    As far as the fishermen issue is concerned, it is only during the regime of Modi there were less number of problems between the government of Hindustan and that of Srilanka. And there were prompt and early return of fishermen who were otherwise captured / arrested by Srilankan forces.
    And the role of racist white church and jihadist forces backed anti hindu dravidian regimes in all these issues were full of just sound bites, drama enactment and nothing more on all these issues. And worse, to humiliate tamils and act against the interest of tamils just for the sake of protecting their evil money and family monetary interests.
    \\ Subramaniam Swamy called all supporters of tamil jallikattu as “tamil porikkis’. Did anyone from the BJP condemn that? \\
    That is quoting some one out of context. He himself clarified that he condemns ********only those Jihadi forces and racist white church based elements who in the garb of supporting Jallikkattu were raising slogans of separatism and other anti national slogans*******. For people who indulge in sloganeering against unity and integrity of the country, “”””poriki””” is sort of softest abuse.
    \\ The centre agreed before the supreme court that it would form the cauvery river water management board. Within 2 days, it backtracked & said that the court had no authority to issue such an order & it can be done only in parliament. \\
    There seems to be some merit in the expression of views but I doubt the veracity of facts. I need to countercheck this and other legal aspects you raised in the beginning (which I hope had been addressed by people having some legal background either in Indiafacts or in some facebook post)
    \\ National linking of rivers is never going to happen & the board will not be formed.\\
    Thats a very tough job. But I strongly believe is in the agenda of BJP. If that is not fulfilled even the BJP karyakartas would raise and demand the government to move in the direction of implementing them.
    \\ That is because the BJP wants to come back to power in Karnataka. Even a child knows it. is Narendra Modi not responsible?He knows clearly that BJP will not be able even a single seat in TN assembly \\
    Well, nobody would have imagined that BJP could ever win a single seat in the state of West Bengal or ever imagined that it would capture power one day in Assam. The beginning of the end of worst looters of Tamil Nadu, i.e the evil dravidian forces have already started. And although, BJP has not won a single assembly seat, it stands next to DMK and ADMK.

  18. பெருமதிப்பிற்குறிய ஸ்ரீ ரிஷி ஐயா,
    \\ Don’t you realise that PETA and North Indians don’t give a damn to “matharasi tamils ” in spite of their emotional foolish attachement to bharatha matha and it’s flag. \\
    PETA is not just opposed by Tamils but a good lot of our brethern living in other states of HIndustan for their clandestine activities in the garb of animal welfare and imposing of the agenda of racist white church under a disguised manner.
    I spent about 40 years of my life in northern part of my motherland Hindustan. I know the sort of respect people have for Madrasis and for the divine compositions in Tamil. Currently, I am working on the borders of our country having much less time to pen my thoughts. Lot needs to be said about the respectful attitude of people of other states for madrasis and towards the divine compositions in Tamil.
    \\ When none of the states, specially the neighbouring states, do not care or respect you Tamils as a fellow citizen \\
    factually wrong statement. Lot needs to be written to counter this misnomer from my first hand experience and on the basis of experience of other fellow contributors of Tamilhindu.
    \\ only slavery minded Tamils like you worry about the country and flag.\\
    I strongly condemn this sort of a statement. To stamp respecting motherland as slavery is the worst form of abuse. I would like to invite your attention that with regard to respecting our Motherland Hindustan from Kashmir to Kanyakumari and from katch to Dibrugarh……………. a major chunk of 125 crores of brethern of my country from all the states including Tamil Nadu …………..cutting across the barriers of language, caste, religion are united. From the borders of my beloved country, I am writing this. People from all languages, caste groups and religious groups are ready to sacrifice their lives and have IN FACT SACRIFICED THEIR LIVES in the protection of the land of our beloved country and its flag with PRIDE.
    I hope brother rishi that you are of Srilankan origin. Please do not demean the patriotism of our countrymen and term it as slavery.
    WITH PAINS I NOTE THAT THIS SORT OF A COMMENT HAS BEEN PUBLISHED BY THE EDITORIAL BOARD EVEN WITHOUT A RIDER.
    \\ Country is a leading exporter of beef, yet we Hindus bow our head to those in power, local as well as Delhi \\
    Sir, in this issue, I totally endorse your anguish. But, again throughout our country ****GAUSAMRAKSHA***……..பசுபாதுகாப்பு………..is a countrywide phenomenon. Although Hindus being majority people in this country contribute a lot………….
    without any doubt and hesitation I would thank all my moslem and christian brethern also who also contribute for this good cause. However, when constitution of the country itself has in its guiding principles………..ban of cow slaughter……..the inability of the government to reduce / altogether ban beef export requires worst condemnation.
    \\ He may be related to Ratha Rajan another fanatic lady bringing shame on Hindus. \\
    Smt.Radha Rajan uttered shameful language for which she was condemned by people cutting across ideological divide and she apologised for using inappropriate language. Well meaning people can never endorse foul language. Every well meaning person should condemn use of foul language by RR.
    But that does not mean that you would brush aside her positive contribution for animal welfare and some of her other contributions in the protection of rights of hindus.
    She has been in the forefront of Animal Welfare. She is not just a sloganeering women. She is an activist. She is taking personal and keen interest in running and maintenance of many goshalas. And she engages herself in preventing illegal trafficking of cows for slaughter. And she takes similar interest for the welfare of many other animals too. She fought in the lower courts for the protection of samll temple built by the platform dwellers ……………. all alone without anybody’s support. You can find the relevant article in Vijayvaani.
    And as has been reported by vested interests……… she has no connection whatsoever with PETA.
    Yes, she is against jallikkattu. She penned an article in this regard which was opposed by me / endorsed by me on the specific demerits / mertis of specific points raised in that article.
    do not throw the baby along with bath water

  19. //However, when constitution of the country itself has in its guiding principles………..ban of cow slaughter……//

    Can you quote the Article or reproduce the Article of the Constitution which bans cow slaughter? Advance thanks.

    //WITH PAINS I NOTE THAT THIS SORT OF A COMMENT HAS BEEN PUBLISHED BY THE EDITORIAL BOARD EVEN WITHOUT A RIDER.//

    It may be their intention to allow it because, what has been written here by a few to which you are responding, are popular views in Tamil Nadu now, esp. among the youth. BJP, RSS and other outfits hold different views which you are echoing here. Congress, more or less, allies with your views in so far as the national fervor goes but they do not go with your ways, as you know.

    Everyone loves this country, but they don’t go fanatical in that love like you. That is the difference. In short, the views you express here, in response to Shri Rishi, are not popular.

    Patriotism is a two-way interaction. For citizen to feel proud of her country and unhesitatingly flaunt it, the country fathers should also work hard towards that i.e. by treating all as equal citizens, distributing all resources and benefits to all, in a manner no one feels left in the cold. It is an act that should come from the State. If a group of people among the population feels seriously, unjustly and continually wronged, no wonder they will be angry with the State, which, in your vocabulary, being traitors to the country.

    You are lucky by birth and benefits – in religion and as a citizen. So, your love for both turns fanatical when you come across someone who expresses their anguish.

    Unless you open your eyes to see the life as lived in our country – like Swami Vivekananda, you should travel incognito to various parts of the country moving with common indigent masses, in other words, come out of your ivory tower, life as being lived in our country by majority of people, will continue to hurt you in your old age.

    Patriotism is not born in anyone. It is germinated and grows. You should try to water it in any way you can. The watering is strictly called a great service to the nation. In religion also, you should serve only in this way. Go to those who are neglected by your religion. From borders, you can know Tamil Nadu only through, what you have called, ஊடக வேசிகள்

  20. அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ,
    புதிய தமிழகம் க்ருஷ்ணசாமி அவர்கள் ஜல்லிக்கட்டினை எதிர்க்க விழைவதன் பின்னணி புரிந்து கொள்ள முடிகிறது. ஜாதிப்பூசல் காரணம் என்றால் ………….. ஜாதிப்பூசலைத் தடுத்து ஹிந்துக்களை ஒன்றிணைக்க நாம் என்ன செய்யலாம் என்று யோசனை செய்யலாமே.
    ஜல்லிக்கட்டு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய கோவில் வழிபாடு சார்ந்த சடங்கு என்பதும் மிகத்தொன்மையான தமிழகத்து மற்றும் பாரதமளாவிய பண்பாட்டின் அங்கம் என்பதை ஒப்புக்கொண்டால் மற்றதெல்லாம் நிச்சயம் கைகூடும். ஊத்தபுரத்தில் அனைத்து ஜாதி ஹிந்துக்களையும் ஒன்று சேர்க்க முடியுமானால் தென் தமிழ்நாட்டில் ஏன் அது சாத்தியமாகாது. அனைத்து ஜாதி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து ஜல்லிக்கட்டு எனும் கோவில் வழிபாட்டு சடங்கினை………… ((((((((பரங்கியன் காசிலும் அராபியன் காசிலும் பந்தயம் வைத்து ………….. விலங்கினங்களைத் துன்புறுத்தும் படிக்கு……….விளையாடப்படும் ஜல்லிக்கட்டு எனும் கேளிக்கை விளையாட்டு இல்லை))))))………… நடத்த வேண்டும் என்ற அபிலாஷை அனைத்து ஜாதி ஹிந்துக்களுக்கும் உள்ளது என்பதனையே மெரீனா கடற்கரையில் கூடிய பெரும் கூட்டம் காட்டுகிறது.
    அஃதாகப்பட்டது அனைத்து ஜாதிஹிந்துக்களையும் ஹிந்து சமயத்து கோவில் வழிபாட்டு சடங்கு என்ற நூலில் ஒன்றிணைக்க விழைந்தால் அது நிச்சயம் சாத்தியமே. அது அந்த இலக்கினையொட்டி செயல்படும் வரை அது சாத்தியமே. எப்போது ஜிஹாதி சக்திகளும், சமூஹ விரோத பரங்கி க்றைஸ்தவ தேவாலயத்தின் ஏஜெண்டுகளும், பயங்கரவாத இடதுசாரி சக்திகளும் ஒன்றிணைந்து தங்கள் இலக்குகளை இப்படிப்பட்ட ஒன்றிணைந்த சக்திகளினூடே திணிக்க விழையும் வேளையில்…………. இப்படியெல்லாமும் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்க முடியாத ஒன்றிணைந்த சக்தி சிதறிய நெல்லிக்காய் மூட்டையாகப் போவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
    தெசலோனிக்கா (THESSALONICA) எனும் வாடிகன் பரங்கி க்றைஸ்தவ தேவாலயத்தின் திட்டத்தின் பாற்பட்டு ஹிந்துக்களுடைய ஒவ்வொரு திருவிழாக்களையும் ஏதாவது ஒரு குறை கூறி …………. அவற்றை இழித்துப்பழிப்பது……….. அதில் இருக்கும் கோவில்………… வழிபாடு …………. சடங்கு என்பதனை எப்பாடு பட்டாவது அழித்தொழிப்பது…………. எக்காரணத்தை முன்னிட்டாவது ஒவ்வொரு ஹிந்துத் திருவிழாக்களையும் நடத்தவொண்ணாது எண்ணற்ற தடங்கல்களை விலைபோயுள்ள ஊடகம், ஜிஹாதி சக்திகள், பரங்கி க்றைஸ்தவ தேவாலயத்தின் நேர்முக மற்றும் மறைமுகமாகச் செயல்படும் ஏஜெண்டுகள், பயங்கரவாத இடதுசாரி சக்திகள் மூலம் கட்டவிழ்த்து விடல், என்ற EVANGELICAL PLAN ……………… செயற்படுத்தப்பட முனைபவர்கள்…………..
    ஜல்லிக்கட்டினை எதிர்ப்பது என்பதில் இருந்து பல காத தூரம் தாண்டி……………………………..
    ******************கோயில், சாமி, பாரம்பரியம் என்பனவெல்லாம் இங்கு எடுபடா***************
    என்று சொல்லுவதை நிச்சயம் புரிந்து கொள்ள முடிகிறது x-(

  21. I have two points.Philo a Jewish philosopher said”contest for natural customs do among all men appear more important than other
    For the sake of life”communal symbols grow out of proportion to their inherent value.
    2Politicians use them for creating followers for grabbing power and soon their protégés themselves become leaders replacing them by creating another set of followers.This what is happening in tamilnadu.Thiruvengadam

  22. Communal symbols have a power out of all proportion to their inherent value. Jewish Philo says contest for natural customs do among men appear more important than others only for the sake of life.Politicians wield this sentiment to create followers to seize power and soon they are replaced by their protégés using the same technique.This is what is happening in Tamilnadu.Thiruvengadam

  23. In this whole episode, BJP was looking isolated and went through severe pressure. I feel, the earlier promises given by party leads in Tamil Nadu specially Mr PonR and the subsequent disappointments, made the people angry.The party really unable to convince the Center to work on tamil nadu people’s interest. It was visible during Cauvery Tribunal Issue.

  24. மதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார் ஐயா

    இதற்கு முன் ஓர் பதிலை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தேன் .என்ன நடந்ததோ தெரியவில்லை. பிரசுரிக்கப் படவில்லை. அல்லது அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டதோ தெரியவில்லை.
    எனது நிலைப்பாடும் கவலையும் சமூக அக்கறை அறிவு ஆற்றல் நவீன சிந்தனை செயற்பாடு போன்றவை அற்ற வெறும் பிற்போக்கு வாதிகளைப் பற்றியதுதான்.
    இவர்களில் பெரும்பான்மையனர் ஒளிக்கும் இடம் நாட்டுப் பற்றாக இருப்பதை இட்டு மிகவும் வருத்தப் படுகிறேன். அதே நேரம் உண்மையானவர்களை மதிக்கிறேன் வணங்குகிறேன்.உங்கள்மீது நான் சந்தேகப் படவில்லை. நாட்டுப் பற்றைப்போல் கட்சிகளின் பின்னாலும் மதங்களின் பின்னாலும் மறைந்திருக்கும் மூட நம்பிக்கையாளர்களையும் சுயநல வாதிகளையும் ஊழல் பேர்வழிகளையும் நான் வெறுக்கிறேன் நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என நம்புகிறேன் . எதன் மீதான பற்றும் எம் கண்களை மூடிவிடக் கூடாது.இந்துக்களாகிய நாம் விழிப்புணர்வுடன் புதிய யுகத்திற்கான சிந்தனையுடன் உலக மாற்றங்களுக்கு ஏற்ப சமூக அக்கறையுடன் அமைப்புடீதியாக இயங்கவேண்டும். ஏனைய மதத்தவர்கள் உலக நாடுகளில் அப்படித்தான் இயங்குகிறார்கள்.நாம் மட்டும் ஏன் பின் தங்கி இருக்கிறோம் என்பதுதான் என் கவலை.நாம் சோம்பேறிகள் அல்லது வெறியர்கள் . இதனை விட்டு விட்டு மக்களிடையே போய் அவர்கள் நிலை அறிந்து துயர் துடைக்கும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு அவர்களது வாழ்வை மேம்படுத்துவதுடன் எமது சமயத்தையும் போதித்தல் வேண்டும் .முதலில் சாதி வேறுபாட்டை ஒழிக்க வேண்டும். கூடவே நற் கல்வியைப் போதிக்க வேண்டும். இதனை விட்டு விட்டு கிறிஸ்தவன் அப்படி செய்கிறான் முஸ்லிம் இப்படி செய்கிறான் என்று குறை கூறிக் கொண்டே இருப்பது அழகல்ல . மாறி மாறி திராவிடக் கட்சிகள்தான் ஆட்சிக்கு வருகிறது எனப் புலம்புவதை விட்டு விட்டு வீதிக்கு வந்து மக்களோடு இணையுங்கள் . அவர்களது பிரச்சனைகளை தீர்க்க உதவுங்கள். உண்மையான சனாதன தர்மத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்.
    நான் ஈழத்தை சேந்தவந்தான். ஆனாலும் எங்களின் வீட்டு சுவரில் எனது பெற்றோர்களால் மகாத்மா காந்தியினதும் சுபாஸ் சந்திர போஷினதும் படங்கள்தான் மாட்டப்பட்டு இருந்தன. அதுவே எங்களது வாழ்க்கையிலும்அரசியலிலும்வெளிப் ப்பட்டன . ஈழத்து இந்துக்களுக்கும் இந்திய இந்துக்களுக்கும் ஒற்றுமையைத்தான் நாம் கண்டோம் . எவ்வாறு அங்கு பிற்போக்குத் தனம் இருக்கிறதோ அவ்வாறே ஈழத்திலும் புலம் பெயர்ந்த இடத்திலும் இருக்கின்றது. பொன்னாடை போர்ப்பதிலும் பட்டம் அளிப்பதிலும் நான் வாழும் லண்டனிலும் குறைவே இல்லை. இவர்களை திருத்த முயன்று கொண்டே இருக்கின்றேன் நீங்களும் அவ்வாறே அமைப்புரீதியாக முயல வேண்டும் என்பதே எனது அவா.

  25. Krishnakumar,

    BJP is next to ADMK & DMK in T,N?. Are you dreaming?

    Subramaniam swamy very clearly criticised tamils on the jallikattu issue. He was blunt & in no way, condemning jihadi forces/white church based elements.

    National linking of rivers is impossible. Let us not live in fools paradise.

    Simply blaming muslims & christians for anything & everything is not going to take us anywhere.

  26. //ஜல்லிக்கட்டினை எதிர்ப்பது என்பதில் இருந்து பல காத தூரம் தாண்டி……………………………..
    ******************கோயில், சாமி, பாரம்பரியம் என்பனவெல்லாம் இங்கு எடுபடா***************
    என்று சொல்லுவதை நிச்சயம் புரிந்து கொள்ள முடிகிறது x-(//

    பெரியவர் கிருஸ்ணகுமார் சர்மாவுக்கு,

    புரிய முடியாது. புரிந்ததைப்போல பாவ்லா வேண்டாம். மதுரை தேனி ராமநாதபுரம் திருனெல்வேலி சென்று அங்கு வாழ்ந்து பார்த்தால் மட்டுமே புரியும். அப்படிப்பார்த்தபின், பெரியவர் இங்கே தான் எழுதிய அனைத்துமே கனவுலகில் எழுதப்பட்டதாக உணர்வார். இந்தியாவின் எல்லையில் வாழ்ம் பெரியவரால் அங்கிருந்து ஊடக வேசிகள் வழியாகத் தென்மாவட்ட வாழ்க்கையை அறியவே முடியாது.

    அவணியாபுரத்திலும் அலங்காநல்லூரிலும் நேற்று பார்த்தோமே ஜல்லிக்கட்டு; அவர்களிடம் போய் //இது இந்துமத விளையாட்டு. அவாளையும் சேர்த்துக்கோங்கோ// என்று பெரியவர் க்ருஸ்ணகுமார் சர்மா சொன்னால் என்னாகும்? உயிரோடு திரும்ப முடியாது. கதை விட்டுத்திரிய வேண்டாம். நேரடியாகப் போய் பார்த்து எழுதுபவன் நான்.

    ஏணியில் உச்சியில் உட்கார்ந்து கொண்டு எளக்காரமாகப்பார்க்கும் உயர்ஜாதியினருக்கு தென்மாவட்ட வாழ்க்கை புலனாகாது. மேலும் எளிய மனிதர்களில் வாழ்க்கையின் சிக்கல்களை வெறும் மதத்தைக்கொண்டு சரி செய்து விட முடியாது. சிறையிலிருக்கும் கைதிகள் கைகளில் பைபில், குரான், கீதையைக் கொடுத்துவிட்டால் திருந்தி விடுவார்கள் என்று எந்த முட்டாள் நீதிபதியும் சொல்லமாட்டான். பாமர மனிதரின் மதத்தின் வீச்சு ஓரெல்லைக்குள் மட்டுமே!

    கண்டிப்பாக இந்துமதத்துத் தலைவரகளால் முடியாது. காரணம், தலித்துக்களுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டால், ஜாதி இந்துக்களின் உதவியும் ஆதரவும் நசித்து விடும். அவர்கள் விட மாட்டார்கள். சாத்தியாமாகும்…சாத்தியமாகும் என்று பெரியவர் வெறுங்கையில் முழம் போடுவது அவருக்கே தெரியும். எனவே பாவ்லா என்றேன். சுவாதி கொலையைக்கண்டு கொதித்தவா எல்லாம் நந்தினி கொலையைப் பற்றி வாய் திறக்க முடியாதபடி நம் வாழ்க்கை அமைகிறது. இதுதான் தமிழ்நாடு. புரிஞ்சுக்கோங்கோங்கோ

    சரி… இந்திய அரசியல் சாசனம் பற்றி கேட்டேனே? பதிலைக்காணேமே? எந்த சரத்தில் பசு கொலை தடுக்கப்பட்டிருக்கிறது? உண்மையாகவே எனக்குத் தெரியாது. அடிக்கடி பெரியவர் எழுதிக்கொண்டிருப்பதால் கொஞ்சம் சொன்னால் மிக்க நன்றி. அப்படித் தடுக்கப்பட்டிருந்தால், நித்தம் நித்தம் ஆயிரக்கணக்காணோரை அரசு கைது செய்யுமே? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே?

  27. BSV

    Your points are appreciated. Thanks.

    Shanmugham

    You are absolutely right. Present leaders have no gut or conviction or ability to convince the Centre. They are good to bend their bodies and put Salam hundred times. They might prostrate , as in Madras, , if necessity arises.

    BJB leaders in Tamil Nadu need to be replaced by brave intelligent selfless youngsters who are identified with the ordinary people and works for their interest and welfare. They will have no fear to present their case successfully because they do not expect any favour post or commission. What they will demand is the rights of the people. Centre will have no say but to grant the same. Will this happen? I am dreaming. Never in Tamil Nadu!

  28. பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரிஷி ஐயா

    நெகிழ்வளிக்கிறது தங்கள் விரிவான தமிழிலான உத்தரம். தேசிய ஒருமைப்பாடு என்பது எமது உயிருக்கு நிகரானது. எமது முந்தைய உத்தரத்தில் கடுமையிருந்தால் க்ஷமிக்கவும்.

    கிட்டத்தட்ட ஆறுமாத காலமாக காஷ்மீரத்தில் மிகக் கடும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றை எதிர்கொண்டவர்கள் ஹிந்துஸ்தானமுழுதுமளாவிய அனைத்து பாஷைகளையும் பேசும் அனைத்து மாகாணங்களிலும் வசிக்கும் அனைத்து மதங்களையும் பின்பற்றும் ஹிந்துஸ்தானியர். பாஷைகள் மாகாண நலன்கள் மதங்களின் தனிப்பட்ட நலன்கள் இவையனைத்தையும் கடந்து தேசத்தின் ஒட்டுமொத்த 125 கோடி மக்களுக்கும் ( வெளிநாட்டு சதிக்கு இலக்கான ஒரு குறுங்குழுவைத் தவிர்த்து) தேசிய ஒருமைப்பாடு என்பது சமரசத்திற்கு அப்பாற்பட்ட கோட்பாடு ஐயா.

    ஹிந்து என்ற படிக்கு ஹிந்துஸ்தானம் மற்றும் ஈழத்தில் வசிக்கும் அனைத்து ஹிந்துக்களும் உலகளாவிய ஹிந்துக்களது ப்ரச்சினைகளை தெளிவுடனும் தீர்க்கமாகவும் எதிர்கொள்ள வேண்டும். இதில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு ஐயா. ஈழத்தில் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா போன்ற தமிழ்ச்சான்றோர் ஹிந்துக்களது உரிமைக்காக தனியான ஸ்தாபனங்களை நிறுவி அதற்காகப் பாடுபட்டுவருவதை அறிகிறேன். இது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.

    ஜல்லிக்கட்டு என்பது கோவில் வழிபாட்டு சடங்கு. ஜல்லிக்கட்டு / ஏறுதழுவுதல் என்பது தமிழகத்திற்கு மட்டிலுமன்றி ஒட்டு மொத்த ஹிந்துஸ்தானத்திலும் சிறு சிறு வேறுபாடுகளுடன் கோவில் வழிபாட்டு சடங்காக ஹிந்துக்கள் கொண்டாடி மகிழும் கோவில் வழிபாட்டு சடங்கு.

    இதில் உள்ள முக்யமான அம்சங்களான…………. கோவில்………… வழிபாடு………… சடங்கு என்ற அம்சங்களை எப்பாடு பட்டாவது அழித்தொழித்து விட்டால் …………. இந்த முறைமையையும் அழித்தொழிக்க முடியும். ஹிந்துஸ்தானத்தில் உள்ள நாட்டு மாடு இனங்களையும் அழித்தொழிக்க முடியும் என்பது பரங்கிய க்றைஸ்தவ தேவாலயத்தின் ஆதரவில் செயற்படும் நேர்முக மற்றும் மறைமுக க்றைஸ்தவர்கள் ஈடுபடும் செயற்பாடு. வாடிகன் தேவாலயத்தின் தெசலோனிக்கா என்ற சதித்திட்டத்தின் பாற்பட்டு இந்த க்றைஸ்தவ ஏஜெண்டுகள் ஒவ்வொரு ஹிந்து திருவிழாக்களையும் ஹிந்து சடங்குளையும் இலக்கு வைத்து அவற்றை எதிர்மறையாக சித்தரிப்பதில் முனைந்து ஈடுபட்டு வருகின்றனர். காசுக்கு விலை போன ஊடகம், ஹிந்துக்களொடு விரோதப்போக்கு உள்ள ஜிஹாதி சக்திகள், பயங்கரவாதத்தில் ஈடுபடும் இடதுசாரி சக்திகள் போன்றவற்றுடன் கை கோர்த்து ஹிந்துக்களது சடங்குகளையும் திருவிழாக்களையும் இந்த சக்திகள் இழிவு படுத்தி வருகின்றன.

    இத்தகையோரே ஜல்லிக்கட்டு எனும் கோவில் வழிபாட்டு சடங்கினை, இந்த முறைமையை ****விளையாட்டு*** என்று மாற்றினர். அதற்குப்பின்னர் இப்படிப்பட்ட ஒரு ****விளையாட்டில்**** விலங்குகள் ஹிம்சிக்கப்படுகின்றன என்ற கருத்தை ஜோடித்து ஹிந்துஸ்தானத்தின் உச்ச ந்யாயாலயத்தில் இருந்து ஒரு க்றைஸ்தவ ந்யாயாதிபதியாகிய பானுமதி அவர்களிடம் இருந்து திடுதிப்பென்று ஒரு தீர்ப்பை பெற்றனர்.

    ஸ்ரீமதி ராதா ராஜன் அவர்கள் மிக இழிவான சொல்லாடலைத் தமது பேச்சினூடே பேசியிருக்கிறார். வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கிறார். அது சம்பந்தமாக விஜயவாணி தளத்தில் அவர் எழுதியிருந்த ஒரு ஆங்க்ல வ்யாசத்தொடரில் அவருடன் மிகக் கடுமாயாக விவாதித்திருக்கிறேன். இவை அவருடன் நான் கொண்டுள்ள எதிரான நிலைப்பாடுகள்.

    அந்த அம்மையார் ஒரு எழுத்தாளர் மட்டுமல்லர். நாட்டுப் பசுவினங்களின் பாதுகாப்புக்காக பல கோசாலைகளை போஷித்து வருகிறார். பசுக்கள் என்று மட்டிலுமில்லாமல் அனைத்து விலங்கினங்களின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகிறார். மிகக் குறைந்த வருமானம் உள்ள ப்ளாட்பாரத்தில் வசிக்கும் ஏழை எளிய ஹிந்து மக்களுடைய சிறு கோவில்கள் இடிக்கப்படும் போது தனியொரு நபராக அவர் கீழ் ந்யாயாலயங்களின் படிக்கட்டுகளேறி வாதிட்டிருக்கிறார். தேசத்தின் கீழ் ந்யாயாலயங்களின் செயற்பாடுகளை செம்மையாக விவரித்து அதன் அவலங்களை சித்தரித்திருக்கிறார். காந்தியடிகளின் செயற்பாடுகளில் உள்ள குறைகளை ஒளிவு மறைவில்லாமல் விமர்சித்திருக்கிறார். இந்த அனைத்து செயற்பாடுகளிலும் நான் அவருடன் பெருமளவு உடன்படுகிறேன்.

    யாராக இருந்தாலும் நாம் ஒப்புக்கொள்ளும் மற்றும் மாறுபடும் நிலைப்பாடுகள் உள்ளன என்றே நம்புகிறேன். ஒட்டு மொத்தமாக நான் யாரையும் எனக்குத் தெரிந்து மறுதலிப்பதில்லை. ஒருங்கிணைந்த பாரதத்தில் தமிழகத்தின் நலன்கள் நிச்சயமாக நிறைவேறுகின்றன.

    தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக தமிழகத்தை அழித்துக்கொண்டு வரும் தீரா விட தீய சக்திகள் …………தமிழகத்துக் கோவில்களைப் பாழ்செய்து, தமிழகத்துக் கோவில்களில் உள்ள சிற்பங்களை மணல்வீச்சடித்து நாசம் செய்து, கோவில்களில் உள்ள சரித்ரம் சொல்லும் கல்வெட்டுகளை நாசம் செய்து, தமிழகத்து ஆறு, ஏரி, குளம் போன்றவற்றை ஒவ்வொன்றாக சாராய வ்யாபாரிகளின் வ்யாபாரத்திற்காக தாரைவார்த்து தமது குடும்பத்தினரின் சொத்தை பெருக்கிக் கொண்டுள்ளனர். தமது குடும்ப சொத்து நலனுக்காக எத்தையும் செய்யும் துணுவுள்ளவர்கள் இந்த பகற்கொள்ளையர்கள். ஜிஹாதி சக்திகள் மற்றும் பரங்கிய க்றைஸ்தவ தேவாலயத்துக்கு விலைபோனவர்கள் இந்த தீய சக்திகள். ஈழத்தில் எமது தமிழ்ச்சஹோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட போது காலை நாஷ்டாவுக்கும் மதிய போஜனத்துக்கும் இடையில் உண்ணாவ்ரதம் இருந்த த்யாகச்செம்மல்கள் இந்த தீய சக்திகள். இது போன்ற சக்திகளால் தமிழகம் முற்று முழுதுமாக நாசம் செய்யப்படாதது இன்றளவுக்கும் ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு சிந்தனையாலேயே என்பதில் எமக்கு எந்த சம்சயமும் இல்லை ஐயா.

    சைவமும் வைஷ்ணவமும் ச்ரமணமும் நாட்டார் வழிபாடுகளும் தமிழகத்தின் நிச்சயம் புத்துயிர் பெறும் என்பதில் எனக்கு சம்சயமில்லை. தங்களைப் போன்று ஹிந்து நலனில் நாட்டம் கொண்ட ஈழத்து சஹோதரர்களும் ஹிந்துஸ்தானத்து ஹிந்துக்களொடு கைகோர்க்க இயலும் என்றால் உலக ஹிந்து நலன் வலுப்பெறும் என்பதில் சம்சயமில்லை ஐயா.

  29. Vaishnavathevi

    What has the country done to the Tamils? Why do they give prominence to American PETA and not to the tamils’ demands.

    When none of the states, specially the neighbouring states, do not care or respect you Tamils as a fellow citizen, only slavery minded Tamils like you worry about the country and flag.

    Country is a leading exporter of beef, yet we Hindus bow our head to those in power, local as well as Delhi. What a slavery minded people we are. Start a social minded Hindu organisation, gather peoples’ support and lead a struggle against beef export, instead of accusing other religious groups and students.
    //

    ரிஷி,

    நான் சொல்வது உரிமையை கேட்பது தவறில்லை. அங்கே எழுப்பப்பட்ட குரல்கள் அனைத்தும் தேசவிரோத மற்றும் கொச்சையான வசனங்கள். பல குழுக்கள் இணைந்தார்கள் அவரவர்களுக்கு வாயில் வந்ததை பேசினார்கள். எல்லாம் சரி என சொல்லமுடியாது. பல மக்கள் கலந்து கொண்டனர். சரியான உணவு சரியாய் நேரத்துக்கு வரும் போதே அவர்கள் சதி அறியமுடியவில்லையா? தன்னார்வலர்கள் இருக்கலாம் ஆனா இவ்ளோ நேர்த்தியாக நடக்குமா? அதுமட்டும் இல்லாமல் அந்த போராட்டம் நடக்கும்போது இது அரசியல் விளையாட்டு என தெரிந்தும் போயிற்று. என்னமோ செய்யுங்க என ஒதுங்கி நிற்கத்தான் முடியும்.

    மற்ற இடத்தில் தமிழ் மக்களை மதிப்பதில்லை என்றால் அது அவரவர்கள் பண்பை பொறுத்து.

    ஒரு காலத்தில் மிருகவதை இருந்ததை நம் யாராலும் மறுக்கமுடியாது. அதே நேரம் அந்த அமைப்பு நம் நாட்டு சட்ட மற்றும் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கிறதா என இதற்கு பின் அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அது ஒட்டுமொத்த இந்தியாவையும் கணக்கில் கொண்டுதான் செய்ய முடியுமே தவிர தமிழ் மக்கள் கேட்டார்கள் என செய்யமுடியாது. வலுவான காரணங்கள் மட்டும் போதாது ஆதாரம் வேண்டும். இந்தியா எல்லோருக்குமானது. தமிழன் என சொல்லி இனம் பிரிப்பது தேவையில்லாதது.

    தேசியமும், தெய்வீகமும் என சொன்ன மாநிலத்தில் வளர்த்த பெண். அதெல்லாம் விட்டுத்தர முடியாது.இன்று வேண்டுமானால் இவர்கள் மறக்கலாம். என்னால் முடியாது.

    ஒரு organization துவக்கி அதற்கு மெனக்கெடும் நேரம். எல்லேருக்குமே ஒரே மாதிரி நேரம், சூழ்நிலை,களம் அமைவதில்லை.என்னால் முடிந்ததை மாற்றத்தான் விழைகிறேன்.

    நன்றி.

  30. //தன்னார்வலர்கள் இருக்கலாம் ஆனா இவ்ளோ நேர்த்தியாக நடக்குமா? அதுமட்டும் இல்லாமல் அந்த போராட்டம் நடக்கும்போது இது அரசியல் விளையாட்டு என தெரிந்தும் போயிற்று. என்னமோ செய்யுங்க என ஒதுங்கி நிற்கத்தான் முடியும்.//

    எல்லா போராட்டங்களையுமே இப்படி ஒதுக்கித்தள்ளி விடலாம். உங்கள் விருப்பப்படி நடக்கும் போராட்டத்தை நீங்கள் தேடினால் கிடைக்கவே கிடைக்காது. எல்லா போராட்டங்களிலும் ஏதாவது செயல் உங்களுக்குப் பிடிக்காதுதான். ஆக, எப்போதுமே ஒதுங்கித்தான் நிற்க வேண்டும். இன்று நீஙகள் எப்போராட்டத்திலிருந்து ஒதுங்கினீர்களோ, அது வெற்றியானது. ஜல்லிக்கட்டுக்கள் தடையின்றி நடக்கின்றன.

    இறுதியில் வெற்றியா தோல்வியா என்பதை வைத்தே பொதுமக்கள் ஒரு போராட்டத்தைக் கணிக்க முடியும் என்பது குழந்தை பாடம். இப்போராட்டத்தில் வெற்றி உங்களால் வரவே இல்லை. மற்றவர்களாலே நடந்தது. உண்மையா பொய்யா? உங்களால் தமிழ்மக்களுக்கு ஏதேனும் நன்மையுண்டாயிற்றா? உங்களால் முடிந்தது என்றால், உதவி இல்லாவிட்டாலும் உபத்திரம் செய்யாதீர்கள் எனபதே.

    //மற்ற இடத்தில் தமிழ் மக்களை மதிப்பதில்லை என்றால் அது அவரவர்கள் பண்பை பொறுத்து…

    தமிழர்கள் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள் மற்ற மாநிலங்களில் என்பதை வாழ்ந்துபார்த்தே தெரிய வேண்டும். சும்மா அவா அப்படித்தான் என்று முடிப்பது சரியா? வாழ்ந்து பார்த்து கேவலப்படுங்கள்.பட்டறிவு உங்களுக்கு பலபாடங்களைக் கற்றுத்தரும்.

    இந்தியா ஒரே நாடுதான். ஆனால் பல மாநிலங்களையும் பலபல மொழிகள், பண்பாடுகளையுடைய மக்களைக்கொண்டது. ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட பண்பாட்டையும் மொழியையும் ”தேசியம்” என்ற தலையணையை வைத்து அமுக்கிக்கொல்லப்பார்த்தால் அதன் விளைவுகள் நாட்டு நலனுக்கு எதிராகவே போகும் என்பதை தமிழ்நாட்டை வைத்து மட்டுமன்று, எல்லா மாநிலங்களையும் வைத்தே சொல்ல்லாம். எ.கா. மராட்டிக்க்லாச்சாரத்தையோ, மொழியையோ நக்கலடிக்கட்டும் பார்க்கலாம்!

    ராஜ் நாத் பதவிக்கு வந்ததும் ஹிந்தி ஹிந்தி என்றார்.. ஹிந்தி பேசும்மாநிலங்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மொழிபேசும மாநிலங்களுக்கும் நான் அமைச்சர் என்ற சிந்தனை அவருக்குப்பட சில மாதங்களாயின. பின் என்ன? எல்லா பிராந்திய மொழிகளுமே சிறப்பானவை. மதிக்கப்படவேண்டும் என்றார்.

    ஆக, அவர்கள் உண்ர்ந்து விட்டார்கள் தேசியம் என்பது ஓரளவுக்குத்தான் நம்நாட்டில் பாயும்.

    தேசியமும் ஆன்மிகமும் என்பது உங்களைப்பொறுத்தவரை சரி. சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டதால். இனியாவது தன்னிச்சையாக சிந்தியுங்கள். அதாவது தேசியம் மாநிலமக்களின் நலங்களை மிதிக்காமல் வளர்க்கப்படவேண்டும். ஆன்மிகம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் நாட்டுக்கு நல்லது. தனிநபராகத்தான் பிறந்தோம். தனிநபராகத்தான் சாக வேண்டும். ஆன்மிகம் உங்களைத் தனிநபராக செம்மைப்படுத்தாவிட்டால் அஃதொரு நாடகம் !

  31. BSV

    நான் ஒதுங்கிய காரணமே அங்கே பேசப்பட்ட கொச்சையான வசனங்கள் தான். ஆன்மிகத்தை வீட்டுடன் வைத்து கொள்ள வேண்டும் என யாரையும், யாருக்கும் கட்டளையிட தேவையில்லை என்றே நினைக்கிறேன். தான் தான் என தின்றவனும் கெட்டான். தான் தான் என இனம் பிரித்தவனும் கெட்டான். எல்லா கலாசாரமும் சங்கமிக்கும் நாட்டில் ஒரு முடிவு எடுக்கும் போது, கூட குறைய இருக்கும். குறையும் பகுதியில் உள்ளோர் எங்களுக்கு வேண்டும் என கேட்க தான் செய்வர். அது உரிமை. அதற்காக எல்லாம் தனியா பிரியனும் என்று அவசியம் இல்லை. உரிமைக்கும், பிரிவினைக்கும் இடையில் உள்ள வேறுபாடு உள்ளது. அதில் தான் நான் வேறுபடுகிறேன்.

    ஒரு இடத்தில் இந்த குழுவை சேர்ந்தோரிடம் சேராதே என எச்சரிக்கை இருக்கலாம். அதிலும் சிலர் விதிவிக்க ஆவர். ஏன்? அங்கு அவரின் தனிப்பண்புகளே தீர்மானிக்கின்றன. முன்னாளில் சிறு பிழை யாரோ செய்ய சிலர் அனுபவிக்கும் சூழ்நிலை. அதை சரி செய்யுங்கள்.மதிக்கவில்லை மதிக்கவில்லை என புலம்பல் விடுத்து மதிக்கும் படி வாழ வழியை தேடுங்கள்.

    – வைஷ்ணவதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *