அக்பர் எனும் கயவன் – 2

சித்தூர் கோட்டைக்குள் புகும் அக்பர் அங்கிருக்கு அத்தனை பேர்களையும் கொல்ல உத்தரவிடுகிறார். ஏறக்குறைய முப்பதினாயிரம் ஆண், பெண், முதியவர்கள், சிறுவர் சிறுமிகள் எனக் கணக்கில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்படுகிறார்கள். அங்கு இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பூணூல் மட்டுமே ஏறக்குறைய எழுபத்தி நாலரை மாண்ட்கள் (1 maund = 37 kg) இருந்ததாகத் தெரிகிறது… இரண்டு வருடங்களுக்கும் மேலாக அக்பருக்கு எதிராகப் புரட்சி செய்து கொண்டிருந்த கான் ஜமானும் அவனது சகோதரனான பகதூரும் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவனுடன் பிடிபட்ட மற்றவர்கள் யானையின் கால்களில் இடறப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்… பிரபல சங்கீத வித்வானான தன்சேன் ராஜா ராம்சந்தின் அரசவைப்பாடகர். அக்பர் ஏராளமான பொக்கிஷங்களுடன் தான்சேனையும் கட்டித் தன்னுடன் இழுத்துச் செல்கிறார். செல்ல விருப்பமில்லாத தான்சேன் கண்ணீர் வடித்து துக்கத்துடன் அக்பருடன் செல்கிறார்…

View More அக்பர் எனும் கயவன் – 2