ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, புனிதவெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு, பக்ரி-ஈத், ரம்சான் போன்ற சமயப்பண்டிகைகளின்போது, அனைத்துச் சமயத்தோரும், சமய மறுப்பாளரும் ஒன்றுகூடி, நமது கிறித்தவ, இஸ்லாமிய உடன்பிறப்புகளை வாழ்த்துகிறார்கள்.  இப்படி வாழ்த்துவது சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாராட்டத்  தகுந்த  ஒரு நற்செயலே ஆகும்.

ஆயினும், இந்துக்களின் பண்டிகை எனில் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்ன பிற] அப்பண்டிகை ஏன் கொண்டாடப் படக்கூடாது என்று பெரிதாக வாதங்கள் கிளம்புகின்றன.
Image result for தீபாவளி கொண்டாட்டம்
இவ்வாதங்கள் இந்துக்களல்லாத மற்ற சமயத்தாரிடமிருந்து வருவதில்லை.  சமய மறுப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும், இந்துக்களில் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சாராரும்  அப்படிச் செய்கிறார்கள்.
இப்படிச் செய்யப் பேச்சுரிமை இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.  ஆனால் இப்படிச் செய்து எதைச் சாதிக்கிறார்கள் இவர்கள் – இந்துக்களின் [அவர் சைவரோ, வைணவரோ, சாக்தரோ, முருகனை வழிபடுபவரோ, எப்படித் தம்மை அடையாளம் காட்டிக்கொள்பவரோ, யாராக இருப்பினும்] பெரும்பான்மையினரின் மனதைத் துன்புறுத்துவதைவிட?  இதில் என்ன இலாபம் இருக்கிறது இவர்களுக்கு?
பண்டிகையைக் கொண்டாடுவது குருட்டு நம்பிக்கையென்றால், இந்த சூரப்புலிகள் அனைத்துச் சமயப் பண்டிகைகளையுமே எதிர்க்கவேண்டும்.  ஏனெனில் எல்லாப் பண்டிகைகளும்  ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது தான். இல்லை, பண்டிகைகள் அறிவுக்குப் புறம்பானவை என்றால், அப்பண்டிகைகளைக் கொண்டாடாமல், கொண்டாடுபவர்களைக் கொண்டாட விட்டுவிட்டுத் தனித்து இருந்துவிடுவதே மனிதத்தன்மையாகும்.
நம்பிக்கையில்லை  என்றாலும், மற்றவர்களின் மகிழ்ச்சியை, குறிப்பாக இந்துக்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் வண்ணம் நடந்து கொள்ளாமல் இருப்பதே மனிதத் தன்மையாகும்.
இதற்குக் காரணம் என்னவென்று நோக்கினோமென்றால், இந்துக்களின் பொறுமையே —  யார் பழித்தாலும், “துர்ச்சனர் கன்ணிற்படாத தூரத்தே நீங்குவதே நல்லநெறி” என்ற அறிவுரைப்படி விலகிச்செல்லும் தன்மையேயாகும்.
அத்தன்மையைச் சாதகமாகப் பய்ன்படுத்துவோர் வள்ளுவர் சொல்லிச்சென்ற,
 
“வலியார்முன் தன்னை நினைக்கத் தான்
தன் மெலியார்மேல் செல்லுமிடத்து”
என்ற குறளை ஒருகணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்துப் பண்டிகைகளைப் பழிக்கும் இந்த சூரப்புலிகளுக்கு மற்ற சமயத்தோரின் பண்டிகைகளைப் பழித்தெழுதும் துணிவு இருக்கிறதா என்று நோக்கினோமென்றால் “இல்லை” என்ற அழுத்தம் திருத்தமான பதிலே கிட்டும்.  எனெனில் மற்ற சமயத்தோரின்முன்பு இந்த சூரப்புலிகள் மெலியார்கள்.  அந்த அளவுக்குப் பகுத்தறிவு அவர்களிடம் உள்ளது.  அங்கு விளையாடினால், அது வினையாகிவிடும் என்று நன்றாகவே இச்சூரப்புலிகளுக்குத் தெரியும்.
அதனால் அச்சமயத்தில் நமது கிறித்தவ, இஸ்லாமிய உடன்பிறப்புகளின் திருநாள்களின் போது வாழ்த்துவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிககளில் கலந்து கொள்ளுவதுடன் மட்டுமன்றி — அப்பண்டிகைகளின் நோக்கத்தைப் புகழ்ந்தும் பேசி நற்பெயர் பெற்றுக் கொள்ளுகிறார்கள், இக்கோழைகள்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று ஒரு பழமொழி உண்டு.  சாந்தமான பசுவும் ஒரு சமயத்தில் தனது கொம்புகள் தற்காப்புக்குத் தான் என்று உணர்ந்தால் அதை உபயோகிக்கத் தயங்காது.  மூலையில் மாட்டிக்கொள்ளும் பூனையும், தன்னைத் துரத்திவரும் நாயை நோக்கிப் பிராண்ட முற்படும்.
அந்த நிலைக்குச் சாதுவான இந்துக்களைத் தள்ளாமல், மனிதநேயத்துடன், அனைத்துப் பண்டிகைகள் சமயத்திலும் [அதில் கலந்துகொள்ள விருப்பமில்லாவிட்டாலும்] பெருந்தன்மையுடன் வாழ்த்துக்கூறுவதே மனிதத்தன்மையும், நற்பண்புமாகும்.
***

75 Replies to “ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?”

  1. ஒரு முறை விநாயக சதுர்த்தி விழாவில் பங்கேற்குமாறு கட்டுமரத்திடம் இந்து முன்னணியினர் கோரிக்கை வைத்த போது, அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் விநாயகரை வணங்கினால் , அப்போது மட்டுமே கலந்து கொள்வேன் என்றார். அது சாத்தியமா ? இஸ்லாமியர்கள் ஒரே இடத்திலா ரம்ஜான் கொண்டாடுகிறார்கள் ? ஷியா , சன்னி, அகமதியா என்று பல்வேறு வகை இஸ்லாமியரும் தனித்தனியாகத்தான் ரம்சான், பக்ரீத் போன்ற பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். அதே போல கிறித்தவர்களும் ரோமன் கத்தோலிக், பிராட்டஸ்டன்ட், பெந்தகொஸ்து, மர்மான் என்று பலவேறு வகை கிறித்தவர்களும் தனித்தனியாகத்தான் வெவ்வேறு இடங்களில் கொண்டாடுகிறார்கள். கட்டுமரம் வாய்க்கு வந்தபடி சிறிதும் பொருத்தமில்லாமல் விஷமத்தனமான பதிலை அளித்தது. இன்றுவரை திமுக கட்சி தலைமை தீபாவளி விநாயக சதுர்த்தி உட்பட முக்கிய இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. அதே சமயம் திமுகவினரில் 95 சதவீதம் பேர் இந்துக்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் மீடியாவில் தங்கள் தொகுதி, பகுதி, மாவட்டம் சார்பாக தனிப்பட்ட வாழ்த்து செய்திகளை விளம்பரமாக கொடுக்கிறார்களே தவிர தலைமை இடத்தில் இருந்து வாழ்த்து வருவதில்லை. எனவே வரும் தேர்தலில் , திமுகவுக்கு இந்துக்கள் ஓட்டு பெரிய பூஜ்யம் தான் .

  2. //ஆயினும், இந்துக்களின் பண்டிகை எனில் [வருடப்பிறப்பு, சிவராத்திரி, தீபாவளி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, இன்ன பிற] அப்பண்டிகை ஏன் கொண்டாடப் படக்கூடாது என்று பெரிதாக வாதங்கள் கிளம்புகின்றன.//

    தீபாவளி மட்டுமே விமர்சனத்துக்குள்ளாக்கபடுகின்றது. அதுவும் பட்டாசு வெடிப்பைப்பற்றி மட்டுமே. உச்சநீதிமன்றத்திலும் பட்டாசு வெடிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மற்ற இந்துப்பண்டிகைகள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படவில்லை. அப்படி ஆகியிருந்தால் சொல்லவும், தெரிந்துகொள்கிறேன்.

    தீபாவளி மீது வைக்கப்படும் விமர்சனம் பட்டாசு வெடிப்பினை வைத்தே. ஏன் கொண்டாடுகிறார்கள்? என்பதை வைத்தன்று; எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதிலும் முழுவதுமில்லை. கொண்டாட்டத்தில் பட்டாசுவெடிப்பு மட்டுமே எடுத்துப்பேசப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பு மட்டும்தான் எனபவன் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதறகான‌ இந்து என்ற தகுதியை இழந்தவனாகிறான்.

    இந்துப்பண்டிகைகளைக் கொண்டாடுவது குருட்டு நம்பிக்கை என்று எங்கு எவர் சொன்னார்? நானறிந்தவரையில் எவருமே இல்லை. தி க காரர்களை இங்கெடுத்துப்பேசக்கூடாது. ஹிந்துக்கள் பலர் பட்டாசு வெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களின் எவரேனும் பண்டிகையே குருட்டு நம்பிக்கை என்றார்களா?

    மற்ற மதப்பண்டிகைகள் உயிருக்கு ஆபத்தான வழிகளில் கொண்டாடப்படுவதில்லை. இந்து விழாக்கள் பல அப்படி. நாமக்கல் சஞ்சீவராயர் கோயிலில் கிரிவலம் பண்ணினால் நல்லது நடக்கும் என்று இந்துக்களை நம்ப வைத்தவர் யார? இசுலாமியரா? கிருத்தவரா? ஃபோர்டு பவுன்டேசனின் பணம் வாங்கியவரா? தவறி கீழே விழ்ந்தால் எலும்பு கூட மிஞ்சாது என்று தெரிந்தும் அப்படிப்பட்ட நம்பிக்கைகளைக் கிளப்பிவிட்டவர் யார்? விழுந்து உயிர்போன பின், போலீசுதான் ஆபத்து கிரிவலம் போகாதீர்கள் என்று பதாகை வைத்ததே தவிர எந்த ஹிந்துக்களும், அல்லது கோயில்காரகளுமில்லை.

    உயிருக்காபத்து வராதபடி இருக்கும் நம்பிக்கைகள் நல்ல நம்பிக்கைகள். உயிருகாபத்து வந்தால் குருட்டு நம்பிக்கை மட்டுமன்று; கெட்ட நம்பிக்கைகள்.

  3. ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?-மிக நல்ல பதிவு – இந்த நேரத்தில் ஹிந்து துவேஷ கருத்துக்கள் பேசி ஹிந்துக்களை ஏளனம் செய்யும் கருணாநிதியின் வாதம் தவறான அனுமானம் என தான் கொள்ள வேண்டும்.ஹிந்துக்கள் பிள்ளையார்பட்டி போன்ற ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் போது அங்கு ஜாதி வித்தியாசங்கள் பார்ப்பதில்லை ,பார்க்கவும் முடியாது .அது மட்டும் அல்ல தமிழகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள விநாயகர் சன்னதியில் அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் வரிசையாக நின்று ஆனை முகனை வழிபடுவது தொன்று தொட்டு நடை பெறுகிறது .ஆதலால் கருணாநிதியின் வாதத்தை ஹிந்துக்கள் புறம் தள்ள வேண்டும்

  4. ஈ.வே ராமசாமி நாயக்கரின் தொண்டர்களை சமய மறுப்பாளர்கள் என்று சொல்வது மிகுந்த தவறு. அவர்களே சொல்கிறார்கள் தாங்கள் இந்து மத ஒழிப்பாளர்கள்,ஆனால் முஸ்லிம் மதபிரசாரர்கள்.

    அத்விகா அவர்கள் நன்றாக தெளிவுபடுத்தி உள்ளார்.

  5. தனி மனிதர்களை இழிவு படுத்தாமலும் கருத்துக்களை சிறப்பாகக் கூறலாம்.

  6. The reason why political parties & leaders continue to insult Hinduism & its festivals are because they know that hindus will continue to vote for them since they are divided on caste lines.

    Of course, Christians & muslims too are divided on caste lines, but when it comes to defending their religion, they are united.

    This is not the case with hindus. That is bcos of the false propaganda that Hinduism is a religion of & for Brahmins.

    EVR shrewdly used to criticized the so called Aryan Gods like Rama, Krisha etc, but not Amman, Muruga etc,

  7. BSV- மற்ற மத பண்டிகைகள் உயிருக்கு ஆபத்தான விதத்தில் கொண்டாடப்படுவதில்லையா ? ஆங்கிலப்புத்தாண்டு, கிறித்துமஸ் ஆகிய இரு நாட்களிலும் ஆண்டு தோறும் அவர்கள் நடத்தும் பட்டாசு வெடிப்பு எங்கள் காதே செவிடாகிறது.

    தனி மனிதர்களை இழிவு படுத்துவது யாருக்கும் நோக்கம் அல்ல. ஆனால் தலைமை பொறுப்பில் இருந்து மக்களுக்கு நல்ல வழி காட்டவேண்டியவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் எதிராக பேசிவிட்டு, இன்னொரு சமுதாயத்துக்கு ஆதரவாக பேசிவிட்டு, சிறிது காலம் சென்ற பின்னர் , ” பாப்பானுக்கு பயந்து இஸ்லாமியனை ஆதரித்தது, மாட்டு சாணியில் கால் வைக்க பயந்து மனித மலத்தை மிதித்த கதை ஆகிவிட்டது ” என்று பேசினால் அவர்கள் தலைமை பொறுப்புக்கு தகுதியானவரா என்று விமரிசனம் வரத்தான் வரும்.பொது வாழ்வில் இல்லாதவர்களை பற்றி யாரும் விமரிசிக்க மாட்டார்கள்.

  8. தற்போதம் என்ற கருத்து உள்ளது.எதிலும் நிதானமான போக்கு.பட்டாசு வெடிப்பு கொரணமாக சென்னையில் காற்றில் மாசுவின் அளவு இருமடங்காக உயா்ந்துள்ளது.80 ஆயிரம் டன் பட்டாசு குப்பைகள் மகாநகராட்சியால் சேகாிக்கப்பட்டுள்ளது.
    சமூக பொறுப்புகளள அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும். இந்து பண்டிகைகள் பல அருவருக்கத்தக்கதாக மாறி வருகின்றது.

    ஒரு கோவிலில் தலையில் தேங்காய் உடைக்கின்றாா்கள்.
    தேங்காய் உடைப்பதற்கா மனித தலை இருக்கின்றது.

    இந்த முட்ாள்தனமாக பழக்கத்தை எதிா்த்து ஒரு இந்து இயக்கம் குரல் கொடுக்கவில்லை.கன்னியாகுமாி விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது தெய்வ அதிசயம் என்று புகழ்ந்துள்ளது கேவலமானது.மனித வளம் குறித்து விவேகானந்தா் கேந்திராவிற்கே சாியான புாிதல் இல்லை என்று எண்ணும் போது மனம் வேதனைப்படுகி்னறது.இந்துக்களுக்கு தேவை ஸ்ரீநாராயணகுருதான்.முறையான சமய கல்வி அளிக்காமல் சமூகம் 1000 ஆண்டுகள் கழிந்து விட்டது. பதா்கள் முளைத்து பேயாட்டம் ஆடுகின்றது.பயிா்கள் அறுகிக்கொண்டுஇருக்கின்றது. பதா்களை களைந்து பயிரைக் காப்பாற்றும் வல்லமை கொண்டவா்கள் யாா் ? யாா் ? யாா் ?

  9. கருத்துக்களைக் கூறும்போது கருத்தாளர்களை இழிவுபடுத்த வேண்டாம். “இனிய உளவாக இன்னதான கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று.”திருக்குறள்.

  10. இந்துக்கள் ஆயிரம் பால்குடம் பவனி என்று ஊா்வலகமாக தற்போது கிளம்பி செல்வது சில இந்து இயக்கங்களின் விளம்பரத்திற்காக செய்யப்படுகின்றது. ஒரு கோவிலின் அன்றைய அபிசேக தேவைக்கு பால் 2 லிட்டா் தேவையெனில் அந்த தேவையை அளிப்பது சாியான தெய்வ வழிபாட்டில் அடங்கும். அது ஒரு வேண்டுதல் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரத்துஎட்டு பால்குடங்கள் ஒரு குடத்திற்கு அரை லிட்டா் பால் என்றாலும் 500 லிட்டா் பால கோவிலுக்கு கொண்டு செல்்லப்படுகின்றத. இந்தபாலை மூலவருக்கு தேவையான 2 லட்டா் மட்டும் முதலில் எடுத்துக் கொள்வாா்கள்.பின்பு வரும் குடங்களில் உள்ள பாலை சும்மா இருக்கும் ஒரு சிலைக்கு ஊற்றி கோவிலுக்கு வெளியே அது சாக்கடையாக பவனி வரும் கண்றாவி காட்சியைக் காணும் போது ஒருஉணவுப் பொருளை மதிப்பு மிகுந்ததை ஏன் இப்படி முட்டாள்தனமாக வீணடிக்கின்றோம் என்று நான் வேதனைபடுவதுண்டு.

    என்குடும்பத்தைச் சோ்ந்தவா்களை பால்குடம் எடுக்க நான் அனுமதிப்பதில்லை.

    அனைத்து சாதி மக்களும் பிரபல்யமாக கோவில்களுக்குள் நுழைய அனுமதி பெற்றுத்தந்தது சங்கர மடமா ? ராமகிருஷ்ண மடமா ? மதுரை ஆதீனமா ?திருவாடுதுரை ஆதீனமா ? திருப்பனந்தாய் ஆதினமா ? தொண்டை மண்டல ஆதீனமா ? யாரும் வரவில்லை.

    ஒவ்வொரு மடத்திற்கும் ஒரு சாதி சாா்பு உள்ளது.அந்த சாதி வளையத்திற்குள் இன்றும் பத்திரமாக இருக்கின்றாா்கள்.

    மதத்தின் போில் இந்துக்களாகிய நாம் செய்யும் கோமாளித்தனங்களை கொஞ்சநஞ்சம் இல்லை. ஆனால் எந்த இந்து இயக்கமும் கண்டு கொள்வதில்லை.
    கிறிஸ்தவ ஆலயத்தில் ஒரு பாட்டு போடுவாா்கள்

    கற்பாறை மீது கட்டியவன் புத்தியுள்ளவன்
    மணல் மீது கட்டியவன் புத்தியற்றவன்.பெரும் மழை பெய்தது
    மணல் மீது கட்டியவன் புத்தியற்றவன்அந்த வீடு அழிந்து போனது
    அந்த வீடு அழிந்து போனது
    கற்பாறை மீது கட்டியவன் புத்தியுள்ளவன்.அந்த வீடு நிலைத்து நின்றது

    இந்துக்களின் சமய நடவடிக்கைகள் அனைத்தும் மணல் வீடு கட்டுவதுபோல்தான் உள்ளது. விழாக்கள் அபிசேகம் ஆராதனை என்று அனைத்தும் ஒருசிலைக்ககு உபச்சாரம் செய்வதுதான் மதம் என்று மயங்கிக் கிடக்கின்றோம்.மிகச்சிறய கோட்பாடுகளைகக் கூட கற்ற இந்துக்கள் வெகு அல்பம். அதுவும் ஆப்பானிஸ்தானம் இந்துக்கள் வாழும் புமியாக இருந்தது.இன்று இந்துக்கள் நுழைய முடியாத அரேபிய மத கோட்டையாகி விட்டது என்பது போன்ற விபரங்களை எத்தனை பேருக்கு தொியும்.
    நான்கு வாி தேவார திருவாசகப்பாடலை பாடத் தொிந்தவா்கள் எத்தனை போ்கள் ?
    1000 ஆண்டு அடிமைகளாக இருந்து கலாச்சாரம் பண்பாடு ஆன்மீகம் மனித வளம் என்றால் என்ன என்பது தொியாத தொிய விரும்பாதமுக்கியம் இல்லாத விசயங்களை பொிதாக கட்டியழும் ஒரு சமுதாயமாகத்தான் நான் இந்து சமூகத்தைக் காண்கின்றேன்.அடிமைப்பெண் உத்தம புத்திரன் 23 ம் புலிகேசி ஆகிய திரைப்படங்களைப் பாா்த்தால் அடிமை வாழ்வு எவ்வளவு கொடூமையானது என்பது தொியவரும்.இந்துக்களும் இன்று அப்படித்தான் இருக்கின்றோம். பாலை சாமி சிலை மீது அள்ளி வீசி விட்டால் எல்லாம் நிறைவேறிவிட்டது என்று முட்டாள்தனமாக நம்புகின்றோம். அதற்கு ஒரு பட்டியல் மாவு அபிசேகம் செய்யதால“ …..கிடைக்கும் பால் அபிசேகம் செய்தால் …………….. கிடைக்கும்.நெய் அபிசெகம் செய்தால் ……………………. கிடைக்கும். சந்தனம் அபிசேகம் செய்தால் …………… கிடைக்கும் — இப்படி ஒரு போா்டு சில கோவில்களில் உள்ளது.
    புசாாிகள் மிகவும் கல்வியறிவில்லாத கற்காலத்தவா்களாக ளஉள்ளாா்கள்.எப்படி நாம்உருப்பட போகின்றோம்.சுயவிமா்சனம் செய்ய மறுத்த சமூதாயம் வீழ்ந்து போகும். நம்மை பவிமா்சிப்பவா்கள் அனைவரும் இந்துக்கள்.ஆகவே விமா்சிக்கின்றாா்கள்.கிறிஸ்தவா்களை அரேபிய மதவாதிகளை விமா்சிச்கவில்லை என்று குறை கூட வேண்டாம்.

  11. //ஆங்கிலப்புத்தாண்டு, கிறித்துமஸ் ஆகிய இரு நாட்களிலும் ஆண்டு தோறும் அவர்கள் நடத்தும் பட்டாசு வெடிப்பு எங்கள் காதே செவிடாகிறது.//

    Where? Please tell me. We can go there and agitate against the Christians responsible for such acts

  12. சிறுவயது திருமணம் பலதார மணம் முத்தலாக் நிக்கா ஹலால் போன்ற சமூக தீமைகளை எதிா்த்து முஸ்லீம்கள் அவா்களுக்குள்ளாக ஏற்கனவே போராடி வந்தாா்கள்.ஆனால் அவா்களை அடிப்படைவாதிகள் ”அரசின் துணைபோடு” அடக்கி வைத்து விட்டாா்கள்.தற்போது உள்ள அரசு முத்தலாக் விசயத்தில் துணிந்து -மக்கள் மீது கொண்ட அன்பினால் கருத்து தொிவித்து அதை ஒழித்து விட்டது.முஸ்லீம் சமூகத்திற்கு பொிய நன்மையை திரு.மோடி அரசு செய்துள்ளது.
    கேரளத்தில் ஸ்ரீநாராயணகுரு அய்யன் காளி போன்றவா்கள் முறையான சமய கல்வியை தாழ்த்தப்பட்ட வகுப்பினா்களுக்கு அளித்து அவா்களின் சமய சமூக தரத்தை உயா்த்தியதால்தான் இன்று தகுதியானவா்கள் உருவாகி கோவில் அா்ச்சகராக பொறுப்பேற்றுள்ளாா்கள். ஒரு அா்ச்சகா் என்பது பள்ளியில் உருவாக மாட்டாா்.அந்த குடும்பத்தின் வாழ்வே வாழும் முறையே அா்ச்சகா் தகுதிக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். அந்த தகுதியை அளித்தவா் ஸ்ரீநாராயணகுரு.
    குரு அவா்கள் ஈழவா்களின் ஊருக்கு சென்றிருந்தாா். ஈழவா்களின் ஆலயத்தில் 59 சந்நிதிகள் இருந்தது. குரு அவா்கள் ஒரு விநாயகா் சன்னிதியை மட்டும் வழிபாட்டுக்கு போதும் என வைத்து விட்டு பிற 58 சந்நிதிகளை உடைத்து எறிய உத்தரவிட்டாா்.அந்த மக்களும் அப்படியே செய்தாா்கள். பின் பள்ளியை நூலகத்தை ஒரு பால் டெக்னிக்கை உருவாக்கினாா்கள். பணத்தை கற்பாறை மீது கட்டிய வீடுபோல் செலவு செய்தாா்கள்.மனித வளம் உருவானது. இன்று ஈழவா்கள் பிறாமணா்களுக்கு இணையான கலாச்சாரம் பெற்றவா்கள்.குமாி மாவட்டத்தில் இல்லத்து பிள்ளைமாா் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட கோவிலில் ஒருசந்நிதியை மட்டும் வைத்துக் கொண்டு மீதம் உள்ள 21 சந்நிதிகளை உடை்கக உத்தரவிட்டு செயல்படுத்தினாா்.என்று இந்து சமூகம் ஒரு கோவில் ஒரு சிலை ஒரு விளக்கு என்று மாறுகின்றதோ அன்?றுமுதல் இந்துக்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
    1008 திருவிளக்கு புசைஎன்று எங்குபாா்த்தாலும் நடத்தப்படுகின்றத.ஆளுக்கு ஒரு விளக்குக்கு பதில் பொதுவாக அம்மன் விளக்கு எனறு ஒரு விளக்கு வைத்து வழிபாடு நடத்தனால் போதாதா ? எண்ணெய் விரயமாக்க வேண்டுமா ? விளக்கு புசைக்கு கைத்தறி புடவை அதுவும் சீருடை ஒன்று சிபாாிசு செய்தாா் கூட்டம் கூடவே கூடாது.பட்டும் நகையும் காட்ட முனையும் பகட்டு கூட திருவிளக்கு புசைக்கு வரும் கூட்டத்திற்கு ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். மேற்படி ஐயா அன்புராஜ சொல்வது சாிதான்.

  13. எனது கருத்துக்களை நீக்கி விட்டது வருத்தம் அளிக்கின்றது.
    இந்து மதத்தில் பழையன நிறைய கழிய வேண்டும்.
    கழிய விடவில்லையெனில் நாம் கிறிஸ்தவ அரேபிய நாத்திக வல்லாதிக்க சக்திகளிடம் தோற்று விடுவோம்.பதா்கள் களையப்பட வேண்டும்.தாங்களும் ஸ்ரீநாராயணகுரு போன்றவா்களை புறக்கணிப்பதாகவே நான் கருதுகின்றேன்.வளளலாா் சமூக வளா்ச்சி வேண்டி ஒற்றுமை வேண்டி அருட்பெருஞ்சோதி அகவல் வழிபாட்டை எற்படுத்தினாா்.வடலூா் தாண்டி அந்த வழிபாட்டு முறை வந்து விடாமல் அனைவரும் தடுத்து வருகின்றாா்கள். அந்த பட்டியல் நீளமானது

  14. ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில்

    சாதிச் சாா்பு கிடையாது.

    தவறாக பதிவு செய்யப்பட்டு விட்டது.மன்னிக்க வேண்டுகின்றேன்.

    ஆனாலும் சுவாமி விவேகானந்தா் காட்டிய உற்சாகத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடம் காட்டவில்லை.

    மற்ற அமைப்புக்களை விட செயல்பாடுகள் நிறைய உள்ளது.பாராட்டும் படி உள்ளது.

  15. I belong to Thirvarur Town. I am living in a street where muslims are mejority. There are 4 mosques around. One was very old and there will not be a sound on any day. They dont trouble anybody. But in recent years a mosque build by wahabists (so called themselves as true muslims) has loud speakers which were banned by the Government of India. Everyday morning at 5.00 AM they make loud announcement. The announcement is to call the muslims to come to pray in the morning. They announce that praying should be given priority than sleepiing. It will definitely has a telling effect on elders and kids who are in deep sleep. This is routine everyday for us. We are just tolerating it. Deepavali is celebrated for a day and burning crackers are for a day only. But it is sad that part of people of Tamilnadu are probagating that it is not dravidian festival so cannot be celebrated in India.

  16. Every festival in India has different meaning in various parts. Deepavali is celebrated on Narag Chathurdashi day on which Lord Vishu killed Naragasura. South India celebrates Deepavali on Narag Chathurdashi day where as the North India celebrates Diwali on Amavasya day on which Ram came to Ayodhya with Sitha. Most of the times Narag Chathurdashi and Amavasya fall on same day(This year it fell on different days.) The same way, Navarathri is celebrated in South India as one of the big ladies festival worshiping all 9 deviyars. On the 9th day Goddess Durga Devi killed Mahishasura after attaining the powers of 9 Devis. In Bengal it is celebrated for Kolota kaali devi. North India celebrates the Vijaya Dashami as the day on which Rama killed Ravana. So they do Ram leela. So various festivals has different meaning in different parts of country. So there is no point in suppressing Deepavali.

  17. //ஹிந்துக்கள் பிள்ளையார்பட்டி போன்ற ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் போது அங்கு ஜாதி வித்தியாசங்கள் பார்ப்பதில்லை ,பார்க்கவும் முடியாது .அது மட்டும் அல்ல தமிழகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள விநாயகர் சன்னதியில் அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் வரிசையாக நின்று ஆனை முகனை வழிபடுவது தொன்று தொட்டு நடை பெறுகிறது //

    பிள்ளையார்பட்டி ஒரு ஜாதிக்கோயில்தான். நகரத்தாரால் அமைக்கப்பட்டு அவர்கள் வழிபாட்டுக்கு உருவாக்கப்பட்டது. இன்றும் அவர்கள்தான் நிர்வாகிகள். சிவகங்கைச் சீமை எனப்படும் அவர்கள் பூமியில்தான். இக்கோயிலின் புகழ் பரவி பலதரப்பட்ட மக்கள் வரத்தொடங்கியதால் அனைவரும் வந்து வழிபடும் – வழிபடும் மட்டும்தான் – கோயிலாக இன்று திகழ்கிறது.

    //தொன்று தொட்டு// என்று சொல்லமுடியாது. பன்னெடுங்காலமாக தலித்துகள் அனுமதிக்கப்படவேயில்லை. அவர்களுக்கு அனுமதி பின்னரதான் நடந்தது. இராமானுஜர் மெர்காரா கோயிலில் அனுமதித்தார். அவர் எடுத்துக்காட்டியதைப் பின்பற்றுவர் என்று நினைத்தார். நடக்கவில்லை. அவருக்குப்பின் ஆயிரமாண்டுகளுக்குப்பின் இன்று முடிகிறது. அரசும், மற்ற தன்னலமில்லா பெரியோர்களும் நடாத்திய நெடும்போராட்டத்திற்கு பின்னர்தான்.

    இல்லையென்றால், தலித்துகள் இந்துக்கோயில்களுக்குள் நுழைய முடியாத நிலையே இன்றும் நின்றிருக்கும்.

  18. Anburaj,

    You talk of pollution due to crackers burst during deepavali. Do you know the pollution caused due to carbon monoxide emission from the vehicles every day? What steps have the govts taken to correct this?

    Emission control centres were set up & police checks were conducted, but how long did it last?

    Every day, loud speakers in mosques start blaring from 5 am in many areas disturbing the old & young alike in hospitals & homes in the vicinity. Does this not amount to noise pollution?

    Why is only deepavali being singled out? That too in these days, when the fire crackers sales keep going down every day as the present generation seem to be losing interest in bursting crackers.

    During muharram, youth lash themselves with a whip shedding blood on the streets. Is this act not barbaric? Imagine the effect this scene will have on children witnessing this ritual.

    Yes, Hinduism does indeed need to take an inside look & it will as it has done over the years.

    But singling out only hinduism for criticism is not correct.

    An objective view on such practices in all religions need to be taken.

  19. முஸ்லீம்களோ கிறிஸ்தவா்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். நமது வாழ்வில் விரயம் இல்லாத சமய பழக்க வழக்கங்களை ஏற்படுத்த வேண்டும்.

    இந்து குழந்தைகளுக்கு அரை மணி நேரம் பத்மாசனத்தில் அமா்ந்து
    ஒரு மந்திர பாராயணம் செய்யும் தகுதியை முதலில் வளா்க்க வேண்டும்.

    அந்த தகுதியை கிறிஸ்தவ இசுலாமிய குழந்தைகள் பெற்றுள்ளன. நமது கோளாறு அங்குதான் ஆரம்பம். கன்னியாகுமாி மாவட்டத்தில் உள்ள ஐயா வைகுண்டசாமி நிழல்தாங்கல் கோவில்களில் சிறுவா்சிறுமியா்களும் பொியோா்களும் மிகவும் ஒழுங்காக வாிசையில் நிற்க தக்க பயிற்சி பெறுகின்றாா்.ஆனால் அந்த ஒழுங்கை பிற கோவில்களில் காண முடியாது. ஏடு வாசிப்பு என்ற பழக்கமே அதற்கு காரணம். ஆனாலும் அண்ணமைக்காலங்களில் இந்து இயக்கங்களின் பணி காரணமாக மிகச் சிறந்த பண்பாட்டு மலா்ச்சி ஏற்பட்டுள்ளது.ஆனால் பிற மாவட்டங்களில் இந்த மாற்றம் என்று ஏற்படும் ?

  20. நான் இங்கே குறிப்பிடப் போவது ஈழத்தில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளிலும் லண்டன் அமெரிக்காவிலும் குடி ஏறிய சைவர்கள் பற்றியது. இவர்கள் எல்லோருமே சைவ சமயத்தவர்கள்.ஏனைய இந்து மதப் பிரிவினர்கள் ஈழத்தில் இல்லை என்றே சொல்லலாம். இந்த சைவ மதத்தினர் தென் இந்திய இந்து மதத்தவர்கள் போலவே தத் தமது மதத்தினை அறியாதவர்கள்.சமய அறிவு துப்பரவாகவே இல்லாதவர்கள்.ஆனால் மூலைக்கு மூலை கோவில் கட்டி வழிபாடு என்ற பெயரில் கூத்தாடுவார்கள்.குடம் குடமாய் பால் ஊற்றுவார்கள்.தனது பெற்றோர்கள் ஈழத்தில் உணவுக்கு கஷ்டப் பட்டபோதிலும் புலம் பெயர்ந்த நாடுகளில் பெயருக்காக கோவில்களில் படைப்புகள் படைப்பார்கள். பால் குடம் தீச் சட்டி வீதி வழியாக எடுப்பார்கள். இது பெண்களுக்கு மட்டும்தான்.ஆண்கள் ஏன் எடுப்பதில்லை எனக் கேட்டால் அதற்குப் பதில் தெரியாது. அண்மையில் லண்டனில் உள்ள தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஏன் பால் குடம் கொண்டு செல்கிரிர்கள் என வீதி வழியாக தேரின் பின்னால் சென்ற ஓர் பெண்ணைப் பார்த்துக் கேட்டபோது அதற்கு அவ் இளம் பெண்–லண்டனிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர் —அம்மா கொண்டு போகச் சொன்னார் அதுதான் நானும் கொண்டு போறன் என அசடு வழியக் கூறினார்.
    இதுதான் இந்த சைவத் தமிழர்களின் நிலை. அதுவும் பெயர்பெற்ற லண்டனில் வாழ்பவர்களின் நிலை. ஐயர் ஏதோ கிரியைகள் செய்வார் அதைப் பார்த்துவிட்டு கடலை வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குப் போகவேண்டியதுதான். இப்போ திருவிழாவின் போது கோவிலை சுற்றி சாரி உணவுக்கடைகள் வைத்து காசு சம்பாதிப் போரும் நிறைய உண்டு. சமயம் இப்போது வியாபாரத்திற்கும் பெயர் சம்பாதிப் பதட்கும்தான். வெளி நாடுகளிலே நிலைமை இப்படி இருக்கும்போது இந்திய நிலைமை எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை.

    இப்படியான மோட்டு நிலைமை ஏனைய கிறிஸ்தவ இஸ்லாமிய மதத்தவர்களிடையே இல்லவே இல்லை.

    முதலில் நாங்கள் எங்களை திருத்துவோம். சமய அறிவை ஊட்டுவோம் வளர்ப்போம்.அதற்காக முதலில் ஒவ்வொரு கோவிலும் அங்கே வருபவர்களுக்கு இலவசமாக சைவம் பற்றிய நூல்களை கொடுப்போம்.அதற்கு முன்பாக கோவில் நிர்வாகத்தவகளும் சில புத்தகம்களை வாங்கி படித்து தமது அறிவை வளர்க்க வேண்டும். இது எனது வெறும் கனவுதான். இந்த முட்டாள்களை மாற்றவே முடியாது அப்பனே.

  21. நமது சகோதரர்கள் திரு சஞ்ஜய் கருத்துக்கள் போன்று திரு அன்புராஜ் கருத்துக்களும் இந்துக்களால் கவனத்தில் எடுத்து கொள்ளபட வேண்டியவையே.
    ஒரு கிறிஸ்தவ மத பிரசாரம் செய்பவர் ஒருவர் குழந்தைகள் எவ்வளவு பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுகிறார்கள் அதை ஏன் சிலர் தடை பேடுகிறார்கள் என்று எழுதி இருந்தார். இது ஒரு நல்ல நோக்கத்துடன், அல்லது புகழ் பெற்ற திராவிட மதநல்லிணக்க நேய நோக்கத்துடன் அவர் சொல்லி இருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன்.

  22. பல வருஷங்களுக்கு முன் துக்ளக் பத்திரிகையில் அந்நாளைய திமுகவின் பெருந்தலையான நாஞ்சில் மனோகரனை ஒரு பேட்டி எடுத்தார்கள். கேள்விகளைக் கேட்டது சோ ராமசாமியேதானா அல்லது வேறு யாராவதா என்று நினைவில்லை.

    ஒரு கேள்வி – அமாவாசை அன்று நாள் பூராவும் உண்ணாமல் இருப்பது மூட நம்பிக்கை என்றால் ரம்ஜான் உண்ணாவிரதம் மட்டும் ஏன் மூட நம்பிக்கை இல்லை? நாஞ்சிலாரின் பதில் – அமாவாசை அன்று விரதம் இருப்பது மூட நம்பிக்கைதான். ரம்ஜான் போது உண்ணாமல் இருப்பது உடல் நலத்துக்கு நல்லது என்று அதை ஆதரிக்கிறோம்.

    நாஞ்சிலார் அப்போது கிழிகிழி என்று கிழிக்கப்பட்டதும் தன் பதில் திரிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு அறிக்கை கொடுத்தார். சோ விடுவாரா? டேப் ரெகார்டரில் பதிவு செய்யப்பட்டதை அப்படியே – அதாவது ‘வந்து வந்து’, ‘உம் அம்’ கொச்சையான பேச்சு உட்பட பிரசுரித்தார்.

    திராவிடக் கழகம் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களை எதிர்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் எதிர்த்ததே இல்லை என்பது தவறான எண்ணம். ஆனால் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இந்த இரண்டு மதங்களையும் கண்டித்து ஈவெரா/திராவிடக் கழகத்தினர் எழுதி இருக்கிறார்கள், புத்தகங்களைக் கூடப் பதித்திருக்கிறார்கள். நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன். காலப்போக்கில் அந்த எதிர்ப்பு அழிந்தேவிட்டது என்பதுதான் உண்மை.

  23. //Every festival in India has different meaning in various parts….//

    We are not discussing the meanings of Hindu festivals. About Deepavali also, we are not discussing its various meanings. Only one aspect of celebrations of Deepalval we are discussing and, that is, bursting of crackers. Even in this, we are concerned only with the kinds of crackers that are dangerous to environment (In Orissa many people died on the day of deepaavali) and personal safety like damage to hearing and vision, esp. to children.

    //One was very old and there will not be a sound on any day. They don”t trouble anybody. But in recent years a mosque build by wahabists (so called themselves as true muslims) has loud speakers which were banned by the Government of India. Everyday morning at 5.00 AM they make loud announcement.//

    It appears to be a false statement. Calls to prayers thorough loud speakers is common in all kinds of mosque. There’re five times a day the call is given. But I hear only thrice a day: early morning; 12 noon and 6 in the evening. It’s 6 a.m. I have never heard at 5 a.m in Madurai where I lived near a famous mosque in Goripplayam. 6 am, or even 5 a.m, is not a disturbance to Tamil people because they are early risers. Many people may use the call from mosque as a wake-up call. But 12 noon call is a real bother because people are engaged in work or studying in schools/colleges.

    If you advocate removal of noise through loud speakers, whether religious or otherwise, I am with you. I’m against all sorts of noise. But remember it’s like throwing stones at others from within a glass house. All religious, including Hindu religion, use various kinds of noise in the name of prayer and worship. It’s prayer to you or, a prayer call to Moslems, but nuisance to others or unbearable noise to others. Hindu religious practices will also suffer if you don’t want noise.

  24. அருடபெருஞ்சோதி இராமலிங்க வள்ளலாா் அருட்பெருஞ்சோதி வழிபாடு என்று ஒரு முறையை எற்படுத்தினாா். இதை யாராவது முன்னிலைப்படுத்துகின்றாா்களா ? காரணம் இங்கே சிலைகள் கிடையாது. அபிஷேகம் கிடையாது. ஒரு விளக்கு எண்ணெய் திாி இவ்வளவுதான். எவ்வளவு எளிமையான செலவில்லாத வழிபாடு.இந்த செலவில்லாத வழிபாடு அல்லது மிகச் குறைந்த செலவில் வழிபாடு என்ற நிலையை இந்துக்கள் மத்தயில் என்று வரும் ? அதற்கு யாா் உழைக்கப் போகின்றாா்கள் ?

  25. உருவம் உள்ளது மற்றும் உருவமற்றது என்ற இரு நிலைகளிலும் உள்ள ஒளியை வழிபட்ட வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்கள் அல்ல என்றும் அவை மருட்பாக்களே என்று வழக்கு தொடுத்தது இந்து (சைவ) சமயத்தை சார்ந்தவர்களே ஆவர். வழக்கை ஆய்ந்து தீர்ப்பளித்தவர் தமிழோ அல்லது தமிழ்ப் பாடல்களோ அறியாத ஆங்கிலேய நீதிபதி ஆவார்.

  26. // இந்த செலவில்லாத வழிபாடு அல்லது மிகச் குறைந்த செலவில் வழிபாடு என்ற நிலையை இந்துக்கள் மத்தயில் என்று வரும் ? அதற்கு யாா் உழைக்கப் போகின்றாா்கள் ? //

    ஏன் வரவேண்டும் என்று யோசித்தீர்களா ? இந்த ஓரிறை / ஒற்றை வழிபாட்டுமுறை என்பது இந்துத்துவத்தின் அடிப்படையான பல்லிறை / பல்வழிபாட்டுமுறைக்கே எதிரானது. இந்துமதம் என்பதே சற்றேறக்குறைய customized வழி. மானுடர் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பதுமைகள் போலல்லர். ஒவ்வொருவரும் இறைவழிபாட்டுக்கொள்கையில் ஒவ்வொரு இடத்தில் இருப்பர். எனக்கு சிவன் ஒப்புமையாக இருக்கும்; இன்னொருவருக்கு திருமாலாக இருக்கலாம்; உங்களுக்கு முருகனாக, மற்றோருவருக்கு விநாயகனாக, இன்னொருவருக்கு அம்மனாக ….. ஒவ்வொருவரும் ஒவ்வொரு உருவ வழிபாட்டில் நிறைவு கொள்ளலாம். வேறொருவர் எனக்கு உருவ வழிபாடே தேவையில்லை, மானச வழிபாடே போதும் என்றிருக்கலாம். இன்னும் சிலர் ஞானதாகியாக வினாக்களை எழுப்பி தேடியபடியே இருக்கலாம்.

    எனவே அவரவருக்கு தோதான வழி அவரவருக்கு. எல்லோருக்கும் ஒரே வழி என்று ஆரம்பித்தால் அது இந்துத்துவ சிறப்புகளையெல்லாம் இழந்து வெறும் ஒற்றைச்சடங்கில்தான் போய் நிற்கும்.

    வள்ளலாரின் ஜோதி வழிபாட்டை குறைத்து மதிப்பிடவில்லை. பல்வேறு வழிகளுள் அதுவும் ஒன்று என்றுதான் சொல்கிறேன்.

    சேருமிடம் ஒன்றேயெனினும் பாதைகள் பலவன்றோ ?

  27. RV,
    திராவிடக் கழகம் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களை எதிர்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் எதிர்த்ததே இல்லை என்பது தவறான எண்ணம். ஆனால் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இந்த இரண்டு மதங்களையும் கண்டித்து ஈவெரா/திராவிடக் கழகத்தினர் எழுதி இருக்கிறார்கள், புத்தகங்களைக் கூடப் பதித்திருக்கிறார்கள். நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன். காலப்போக்கில் அந்த எதிர்ப்பு அழிந்தேவிட்டது என்பதுதான் உண்மை.

    The above statement of yours is not wholly correct. EVR & his followers never really criticized other religions. They, very mildly, put across their points, which was ignored. When EVR advocated Thirukural as a common book for all religions, it was stoutly criticized & opposed by muslims.

    I will recount an incident witnessed by my uncle. EVR was addressing a meeting where, he , as usual criticized Brahmins & Hinduism. He then asked a question “Yaar intha christu”?

    Immediately a shoe was thrown on the dais. That’s it. EVR hurriedly packed up & left the meeting in his car parked behind the dais.

    I do not know about the nanjil manoharan interview, but I have read mu.ka interviews where he has said ” I support fasting during ramzan but in vaikuntha ekadasi day, I feel very hungry & eat a lot”.

    He also defended his participation in the ramzan festival saying that it is a social festival and not a religious one.

  28. ஐயா ரிஷி அவா்களே!
    எனது ஆதங்கத்தை புாிந்து கொண்டு பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி .தாங்கள் ஒருவராவது எனது கருத்தை ஏற்றுக் கொண்டதுபோல் உள்ளது.இந்துக்கள உருப்பட வேண்டும் என்றால் ” அபிசேகம்” என்ற பழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தீ மிதிப்பதால் யாருக்கு என்ன நன்மை ? விறகு வெட்டியாக எாிக்கப்பட்டதுதான் ? இதை அதிசயம் என்று எடுத்துக் கொள்வதில் அா்த்தம் இல்லை.

    ஆடை நீக்கி வேப்பிலையால் உடலை மறைத்துக் கொண்டு கோவில் வழிபாடு பெண்கள் செய்வது அசிங்கம். சென்னையில் தான் இந்த பழக்கம் உள்ளது.

    இதைக் கூட தடுப்பாா் யாரும் இல்லை. நமது ஆலயங்கள் கத்தோ லிக்க தேவாலயங்கள் போல் மாற்றப்பட வேண்டும்.புதிய ஆலயங்களாவது அந்த பாணியில் அமைக்க லாம். ஆனால் எந்தவித விழிப்புணா்ச்சியும் அற்றவா்களாக இந்துக்கள் இருப்பதுதான் காரணம். எதிா்காலத்தில் இந்து சமய மக்கள் சமய அனுஷ்டான முறைகளில் மாற்றம் ஏற்படாவிடில் கிறிஸ்தவா்களிடம் முஸ்லீம்களிடம் தோற்பது உறுதி. அன்று சிறுபான்மையினராகிப் போன இந்துக்கள் என்ன பாடு படுவாா்கள் ??????

  29. //எதிா்காலத்தில் இந்து சமய மக்கள் சமய அனுஷ்டான முறைகளில் மாற்றம் ஏற்படாவிடில் கிறிஸ்தவா்களிடம் முஸ்லீம்களிடம் தோற்பது உறுதி.//

    மாற்றம் செய்யபட வேண்டியவை மாற்றி அமைக்கலாம்.ஆடை நீக்கி வேப்பிலையால் உடலை மறைத்துக் கொண்டு பெண்கள் கோவில் வழிபாடு செய்வது போன்றவை அவசியமாக மாற்றபடவேண்டும்.
    ஆனால் பிற்போக்குதனங்களின் குவியலான முஸ்லிம்களிடம் நாம் ஒரு போதும் தோற்க மாட்டோம். அரபிய அடிமைதனங்களை இதர மக்களிடம் திணிப்பதே முஸ்லிம் மதம்.

  30. //சேருமிடம் ஒன்றேயெனினும் பாதைகள் பலவன்றோ ?//

    மாற்றிச்சொல்லிப்பாருங்கள்.

    பாதைகள் பலவென்றாலும் சேருமிறை ஒன்றே.

  31. //Immediately a shoe was thrown on the dais. That’s it. EVR hurriedly packed up & left the meeting in his car parked behind the dais.//

    EVR hurriedly packed up and fled – maybe his fans or escorts feared for his life. But did he withdraw his Question; Yaarindh Krishthu before leaving the stage ?. Only if he had done so, we could say he was against Hindu religion only. Your Uncle may have chosen this particular instance to make you hate him. But there were umpteen instances where he was pelted with shoes and sandals by Hindus in the crowd of audience.

    //I have read mu.ka interviews where he has said ” I support fasting during ramzan but in vaikuntha ekadasi day, I feel very hungry & eat a lot”.//

    You seem to haven’t understood the sentence. It means that he supports fasting during Ramzan BY MUSLIMs (not by him 🙂 as he is not a Muslim) but, regarding Vaikunta Ekadasi, he speaks as a Hindu.

    Diabetic Hindus or others shouldn’t fast (as per medical advice). Other than devout Vaishanava Hindus, all other Hindus don’t fast – some for the same reason as he has given. I don’t find anything wrong with this statement. It depends upon the nature and intensity of devotion of the individuals or the families. Please remember always there’s no compulsion on any Hindu to do anything and Mu Ka is fully granted the religious right as a Hindu to say I don’t fast on Vaikunta Ekadasi day.

    //He also defended his participation in the ramzan festival saying that it is a social festival and not a religious one.

    His statement that it’s a social festival is against truth. But his participation in breaking fast event of Ramzan days – is common to all politicians, including BJP. Vajpayee used to attend and you must have seen photos. As a politician, when everyone does, Mu Ka cannot be singled out for your attack. But if any Hindu groups had invited him and he refused, you have a strong case against him.

  32. //எனது ஆதங்கத்தை புாிந்து கொண்டு பதிவு செய்தமைக்கு …….. இந்துக்கள் என்ன பாடு படுவாா்கள் ??????//

    பிராமணர்கள் செய்த அதே தவறையையே நீங்கள் வேறுமாதிரி செய்கிறீர்கள். அவர்கள் தஙகளுக்கென்று வழிமுறைகளை உருவாக்கிக்கொண்டு இதுதான் இந்துமதம் என்று வாழ்கிறார்கள். வாழட்டும். பிறர்மேல் திணிப்பது தவறு. அப்படிச்செய்யும்போது, இந்துமதம் ஒற்றைப்படை ஆகிறது. பொன்முத்துக்குமார் சொன்னது போல சமூகம் – அல்லது இந்துச்சமூகம் – பலதரப்பட்ட மக்களால் ஆனது. எல்லா மக்களுமே ஒரு குழு – அவர்களுக்கு முடிந்த, மற்றும் பிடித்தமாதிரி – கடைபிடித்தொழுகும் மத வழக்கங்களை – காப்பியடிக்க முடியாது. குடிசையில் வாழும் ஏழைமக்களுக்குத்தான் இப்படி பெரிய பாளையத்தம்மன் வழிபாடு. (வேப்பிலையே உடையாக) அதைத்தான் அவர்கள் பரவ்சமாக ஈடுபட முடியும். மற்றவர்களிடையே பின்னர் பரவியது. அம்மன் வழிபாடு சாதாரண மக்களுக்கு. ஏழைக்கு நீராகாரம்; உங்களுக்கு பலகாரம். இல்லையா?

    வள்ளலார் வழி எனக்கே புரியவில்லை. எவ்வித‌ ஈடுபாடுமே வரவில்லை. இறைவன் ஜோதி வடிவானவன். ஓகே ஓகே….அதே நேரத்தில் மற்ற வடிவங்களில் அவன் இல்லை என்பது நகைச்சுவையான வாதம்.

    எங்கும் நீக்கமற நிறைந்து அவரவர் விண்ணப்பித்த வழியில் தோன்றி அவரவருக்கு அருள் பாலிப்பதே இறைவன் என்பதுவே இந்துமதம். நம்மாழ்வார் காட்டியது அதே:

    திட விசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை
    படர்பொருள் முழுவதுமாய் அவைஅவை தொறும்
    உடல்மிசை உயிர்எனக் கரந்தெங்கும் பரந்துளன்
    சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே

    அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
    அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்
    அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
    அவரவர் விதிவழி அடைய நின்றனரே

  33. திரு அன்புராஜ் அவர்கட்கு

    இந்துக்களைப்போல் மந்தம் மிக்க சமய அறிவற்ற சூடு சுரணை அற்ற ஜடங்கள் வேறு எந்த சமயத்திலும் இல்லை. அதனால் எல்லா இடங்களிலும் நாடுகளிலும் இவர்கள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இதிலும் அதி சிறப்பு என்னவென்றால் அப்படி அவர்கள் தோற்றுக்கொண்டிருபதை அவர்கள் உணராதவகையில் மந்தமாக இருப்பதுதான்.சமய மாற்றம் என்பது ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்துக்களிடையே மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. மதம் மாறிய இந்துக்கள்தான் ஏனைய இந்துக்களை மதம் மாற்றுவதில் மிக வேகமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.அவர்களது பிரச்சாரத்தின்போது இந்து மதத்தை மிகவும் கேவலமாகப் பழித்து வருகின்றார்கள்.மதம் மாறாத தமது பெற்றோர்களினதோ சகோதர்களினதோ இறப்புக்குக்கூட இவர்கள் போவது இல்லை.

    Koenraad Elst, Mrs Hilda Raja ஆகியோரினது இணையத் தளங்களில் இந்துக்களின் இந்த இழிவு நிலை பற்றி எழுதி வருகின்றார்கள். எத்தனைபேர் இவற்றை வாசிக்கிறார்களோ தெரியவில்லை.

    மொத்தத்தில் அடிப்படை மாற்றங்கள் இந்து சமயத்தில் மிகவும் வேகமாகவும் பெருமளவிலும் ஏற்படவேண்டும்.நூறல்ல ஆயிரம் விவேகானந்தர்களும் வள்ளலார்களும் இப்பொழுது எமக்கு வேண்டும்.உடனடியாக வேண்டும்.

  34. தமிழ்ஹிந்து போன்று வேறு ஏதாவது முற்போக்கான இணையத் தளங்கள் சஞ்சிகைகள்
    தமிழிலோ ஆங்கிலத்திலோ வெளிவருகின்றனவா? தயவு செய்து அறியத்தாருங்கள்.

  35. அன்பின் ஸ்ரீ ரிஷி மற்றும் ஸ்ரீ அன்புராஜ்

    பொதுவில் ஹிந்து மதம் பற்றிய சமய போதனைகள் மட்டுமின்றி ப்ரத்யேகமாக சமயம் சார்ந்து சைவம், வைஷ்ணவம், சாக்தம்………..மற்றும் அதனினும் அதன் உட்பிரிவுகள் சார்ந்து சமய வகுப்புகள் அந்தந்த சமய சான்றோர்களால் ஹிந்துஸ்தானமளாவியும் விதேசங்களிலும் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன.

    இப்படிப்பட்ட முறைமைகளுக்கு மிக முக்யமான ஒரு அலகீடு தம்மை அர்ப்பணம் செய்வது. சமய நூற்கள் கற்பவர்கள் சமய ஒழுங்கு முறைகளுக்கு தம்மை அர்ப்பணிப்பது ஒவ்வொரு சமயத்திலும் சமய உட்பிரிவிலும் அடிப்படையாக எதிர்பார்க்கப்படும் விஷயம். அதிலிருந்தே சமயக்கல்வியை முறையாகக் கற்று சமய ஒழுங்குமுறைகளில் தம்மை ஒருவர் ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.

    உலகளாவி இருக்கும் ஹிந்துக் கோவில்கள் பற்பல வழிமுறைகளைக் கடைபிடிக்கின்றன.

    சைவ வைஷ்ணவ் ஆலயங்களில் பெரும்பான்மையானவை சைவாகமங்கள் மற்றும் பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களைக் கடைபிடிக்கின்றன.

    வைஷ்ணவ ஆலயங்கள் பெருமளவிலும் வழிபாட்டு முறைகளை எம்பெருமானார் யதிராஜர் ராமானுஜர் வழிவகுத்திருக்கிறார். இவ்வாலயங்கள் அனைத்திலும் இவற்றைத் தவிர் இதே ஆகமங்களை ஒட்டி பூஜாமுறைகள் பின்பற்றப்படும் ஆலயங்களிலும் எம்பெருமானார் வகுத்த வழியை எந்த ஒரு ஸம்ப்ரதாய வைஷ்ணவனும் மீறவொண்ணார்.

    ஸ்ரீ ரிஷி அவர்களின் ஆதங்கம் முழுமையாகப் புரிகிறது. ஐயா, மலேயாவில் சித்தாந்த சைவ வழிபாட்டுமுறைகளை சைவ சமயத்தை பேண விழையும் அன்பர்களுக்கு முறையாக போதிக்க அமைப்புகள் இருக்கின்றன. ஈழமும் பின் தங்கவில்லை என்பது என் புரிதல். விதேசங்களில் இருக்கும் ஈழத்தமிழன்பர்கள் ……. சிவநெறிச்செல்வர் ஸ்ரீ ஆறுமுக நாவலர் போன்ற சான்றோர் ஒழுகிய சித்தாந்த சைவவழிபாட்டு முறைகளை பேண விரும்பினால்……….மலேயா மற்றும் ஈழத்தைச் சார்ந்த சித்தாந்த சைவச் சான்றோர்கள் நிச்சயம் உதவிகரமாக இருப்பர். முயலுங்கள். முயற்சி திருவினையாக்கும்.

    அன்புராஜ் ஐயா, ஆகமமுறைப்படியான ஆலயங்களில் தனிநபர் விருப்பு வெறுப்பினையொட்டி வழிபாட்டுமுறைமைகள் மாற்றியமைக்கப்படுவதில்லை. அபிஷேகம் அப்படிப்பட்ட ஒரு ஆலயவழிபாட்டு முறைமை. மாற்றப்படாது. வேண்டுமானால் நீங்கள் உங்கள் செலவில் ஒரு ஆலயமெழுப்பி அதில் நீங்கள் விரும்பும் வண்ணம் வழிபாடுகளை அமைத்துக்கொள்ளலாம். யாரும் கேழ்க்க முடியாது.

    எதற்காக வேண்டி கத்தோலிக்க க்றைஸ்தவ கிரிஜாக்ருஹ வழிபாட்டு முறைமைகளை ஹிந்துமதக் கோவில்கள் காப்பி செய்ய வேண்டும்? புரியவில்லை. மாறாக ஹிந்து ஆலய வழிபாட்டு முறைமைகளை கத்தோலிக்கம் இப்போது காப்பி செய்து வருகிறது. தேரோட்டம், மொட்டை போடுதல், உப்பு, மிளகு வெங்காயம் நேர்ந்து சமர்ப்பித்தல் (சில நாட்டார் கோவில்களில் உள்ள படிக்கு விளக்குமாறு செருப்பு கூட நேர்ந்து சமர்ப்பிக்கிறார்கள் என்றும் கேட்டிருக்கிறேன்), ஆலய அர்ச்சனை, அபிஷேகம், த்வஜஸ்தம்பம் இவையெல்லாம் கத்தோலிக்க க்றைஸ்தவ கிரிஜாக்ருஹ வழிபாடுகளின் அங்கமாகி விட்டது. ஏஸ்ஸப்பருக்கும் மரியாளுக்கும் பட்டை, நாமம், குங்குமம் மட்டிலும் பாக்கி. அதுவும் கூட வந்து விடலாம் யார் கண்டார்.

    நிலைமை இப்படி இருக்க நீங்கள் ஏன் குறுக்குசால் ஓட்டுகிறீர்கள் 🙂

  36. எந்த ஒரு நாத்திகனுக்கும் எல்லா மத பண்டிகைகளும்
    குருட்டு நம்பிக்கைகள்தான்.
    இந்து மத பண்டிகைகள் மட்டும்தான் நாத்திகர்களால்
    இந்த கோணத்தில் பார்க்கப்படுகிறது என்பது பொய்
    அல்லது

  37. தொடர்ச்சி…
    பொய் அல்லது கற்பனை.
    அவர்கள் இந்த கோணத்தில் இந்துமத பண்டிகைகள் பற்றிய விமர்சனத்தை வைக்கவில்லை..
    எந்த ஒரு கொண்டாட்டமும் கொண்டாடுபவனுக்கு மகிழ்ச்சியையும் மற்றவனுக்கும் திண்டாட்டத்தையும் தருவதாக இருக்கலாகாது..
    தீபாவளி நம்மவர்களால் அப்படி ஆக்கப்பட்டிருக்கிறதா இல்லையா..
    இதயநோயாளிகளும் பச்சிளங்குழந்தைகளும் முதியவர்களும் பாதசாரிகளும் பயணிகளும் பறவைகளும் வீட்டு விலங்குகளும் அன்று படும்பாடு நாம் அறியாததா…
    ஒரு தவறான காரியத்தை சுட்டிக்காட்டினாலோ விமர்சித்தாலோ உடனேயே அவர்களுக்கு ஒரு உள்நோக்கம் கற்பித்து…
    “நம்மை மட்டும்தான் விமர்சிப்பார்கள் …
    இந்துமதம் என்றால் ஏளனம் முஸ்லிமை சொல்வார்களா கிறிஸ்த்துவனை சொல்வார்களா”
    என்பதெல்லாம் அப்பாவி மக்களை தூண்டிவிடுகிற வேலைதானே…
    இது என்ன நியாயமற்ற போக்கு..
    பெரியாரியர்களால் நாங்களும் விமர்சனத்திற்க்கு உள்ளாகிறோம்.. கருத்தியல்ரீதியாக அவர்களோடு நிறைய விவாதித்திருக்கிறோம்..
    இறுதியில் அவர்களின் பகுத்தறிவு நமத்த பட்டாசாக புஸ்…சென்று ஆகியிருக்கிறது…
    ஒரு நாத்திகனுக்கு எல்லா இறைநம்பிக்கையாளனும் மூடநம்பிக்கையாளன்..
    இதில் இந்து இஸ்லாம் பேதமெல்லாம் இல்லை..

    கட்டுரையாளர் ஒருஅரிசோனன் அவர்களை ஒரு விசயத்திற்க்காக மனதார பாராட்டுகிறேன்
    அதாவது..
    இந்துமத பண்டிகைகளைகுறிப்பிட்டு
    எந்த இஸ்லாமியரும் விமர்சனம் பண்ணி பேசியதில்லை..
    பண்டிகை என்று இல்லை..
    இந்துக்களின் வழிபாட்டுமுறை நம்பிக்கைகள் என எதுவும் முஸ்லிம்களால் மேடை போட்டு குறை சொல்லி திரியப்படுவதில்லை..
    இஸ்லாமிய நம்பிக்கை என்பது இந்துமத நம்பிக்கைக்கு நேர்விரோதமானதாக இருந்தாலும் எங்கள் கொள்கையை நாங்கள் சொல்வோமே அன்றி யார் மனம்புண்பட்டும் பொது மேடைகளில் பேசுவதில்லை..
    அதை இந்துமதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகிற திராவிட இயக்கத்தார்தான் செய்கிறார்கள்

  38. //ஆப்பானிஸ்தானம் இந்துக்கள் வாழும் புமியாக இருந்தது.இன்று இந்துக்கள் நுழைய முடியாத அரேபிய மத கோட்டையாகி விட்டது என்பது போன்ற விபரங்களை எத்தனை பேருக்கு தொியும்.//
    இந்துக்கள் வாழும் இந்தியாவின் தமிழ் பிரதேசத்தையாவது அரேபிய பூமியாக மாற்றிவிடலாம் என்பது தான் ஈவே ராமசாமி நாயக்கரின் தொண்டர்களின் நோக்கம். காஷ்மீரையும் தமிழ்நாட்டையும் இரு அரேபிய முனைகளாக்கிவிடலாம் என்பது சில தீய கம்யுனிஸ்டுகளின் ஆசை.தமிழ் பிரதேசத்தையாவது கிறித்துவ பூமியாக்கிவிட வேண்டும் என்று வேறு சில ஓநாய்கள் முயற்சிகின்றன.

  39. உங்களைப் போன்றவர்களிடம் இருக்கிற பெரும் சிக்கல்
    இதுதான்.எந்த தலைப்பின் கீழ் பேசினாலும் கிளைதாவி
    கிளைதாவி துள்ளுவீர்களே தவிர தர்க்க ரீதியாய் விவாதிக்க இடம்தரவே மாட்டீர்கள்
    தீபாவளி கொண்டாட்டத்திற்க்கும் இதற்க்கும் என்ன சம்மந்தமோ தெரியவில்லை.
    சரி உங்கள் விவாதத்திற்க்கே வருகிறேன்..

    ராமசாமிநாயக்கர் என்பவருக்கும் இஸ்லாத்தாற்க்கும் என்ன
    சம்மந்தம்
    அவர் தான் பிறந்த மதத்தை விமர்சித்தார்
    அதற்க்காக இஸ்லாத்தை பரவச்செய்கிறார் என்று எப்படி
    எடுத்துக் கொள்கிறீர்கள் ..
    நாத்திகம் இஸ்லாத்தோடு ஒத்துப்போகுமா
    இணைவைத்தல் இறைநிராகரிப்பு இரண்டையும் இஸ்லாம்
    ஒரே தட்டில் வைத்து பார்த்தே அவற்றை மன்னிக்க முடியா குற்றம் என்கிறது
    அவருடைய இளவல்கள் இன்று அவரை சிலையாக்கி
    மாலை போடுவதையும் இதுதான் மரியாதை என்பதையும்
    இஸ்லாம் ஏற்றுக்கொள்ளுமா..
    அம்பேத்கரும் தான் பிறந்த மதத்தை மிக்கடுமையாக விமர்சித்து புத்த மதம் போனவர்தான்
    ஒருவேளை அவர் பௌத்தத்தை தழுவாவிடில் அவரையும் பெரியார் பட்டியலில்தான் கொண்டு வைத்திருப்பீர்களா..
    இதை தெரிந்துதான் அம்பேத்கரும் புத்தத்தை தழுவிக்கொண்டாரோ..
    அவர் பௌத்தத்தை தழுவியதால்
    “பௌத்தம் இந்தியாவில் தோன்றிய மதம் இந்து மத்தின்
    ஒரு பிரிவு”
    என்றெல்லாம் சமாளித்து ஏற்றுக் கொள்கிறீர்கள்
    நல்லவேளை அம்பேத்கர் தப்பித்தார்

    இது என்ன வாதம்… ஒருவன் ஒன்றை விமர்சித்தால் அவனை எதிரணியோடு கட்டி அவனையும் எதிரியாக்கி இகழ்வது..

    நான் கேட்கிறேன்
    பெரியாரியர்களும் கம்னியூஸ்ட்டுகளும் தான் பிறந்த மதத்தை நிராகரித்து இஸ்லாமிய கிறிஸ்த்துவரோடு கை கோர்த்து அந்த மதத்தை இங்கே மேலோங்கச் சொய்வதால் அவர்களுக்கு என்ன பயன்
    நாட்டின் அதிகாரம் யாரிடம் இருக்கிறது..
    இதைத்தாண்டி ஒரு சிறு கும்பல் பெரும்பாலான மக்கள்
    பின்பற்றும் ஒரு மதத்தை அவர்களிடமிருந்து பறித்து இன்னொன்றை அவர்களிடம் திணிக்க முடியுமா..
    அவ்வளவு பலவீனமானதாகவா இந்துத்துவம் என்ற சித்தாந்தம் இருக்கிறது . …
    பதட்டத்தை குறைத்து நிதானமாய் யோசித்து பதில் கூறுங்கள் தோழர்களே..

  40. திரு க்ரிஷ்ணகுமார் ஐயா அவர்கட்கு

    ஈழத்து நிலைமைகளைப் பற்றி உங்களிடம் தவறாகக் கூறியுள்ளார்கள்.மலேயா பற்றி எனக்குத் தெரியாது.ஆறுமுக நாவலரின் பெயரைப் பலர் ஈழத்தில் அறிவார்கள் என்பது உண்மை.ஆனால் அவரது நூல்களை எங்குமே காணமுடியாது.நூலகங்களிலோ கடைகளிலோ கிடைக்காது.ஒரு சில வயது வந்தவர்களிடம் அல்லது மேடைப் பேச்சாளர்களிடம் இருக்குமே தவிர இளம் தலைமுறையினரிடம் இருக்கவே இருக்காது.கட்டுரை எழுதுபவர்கள் புகழ்ந்து எழுதுவார்கள். அவர்களை நம்பாதீர்கள்.சைவ பரிபாலன சபை என்ற நிறுவனம் ஒருகாலத்தில் சிறப்பாக இயங்கியது. இப்போ நித்திரை கொள்கின்றது.யோகர் சுவாமிகளின் ஆச்சிரமம் சிவதொண்டன் என்றொரு சஞ்சிகையை வெளியிடுகின்றது. ஆனால் இப்படி ஒரு சஞ்சிகை வருவதை ஒரு சத விகிதத்தினர்தான் அறிவர்.சில சஞ்சிகைகளை ஈழத்திலிருந்து எடுத்து லண்டனில் உள்ள ஓர் கோவில் நிர்வாகத்தினரிடம் இலவசமாகக்கொடுத்தேன். என்ன பலன்.வாசித்ததாகக்கூட அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை.இளம் தலைமுறையினரின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை.ஆனால் வாய்ப்பேச்சு வீரர்கள் நிறையவே உள்ளனர்.இவர்கள் சொல்வதை நம்பி ஏமாறாதீர்கள்.

  41. இங்கே அத்விகா என்பவர் கடைந்தெடுத்த ஒரு பொய்யை கூறி திசைதிருப்ப நினைக்கிறார்
    கருணாநிதி விநாயகர்சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள மறுத்து சொன்ன கருத்திற்க்கு விளக்கம் என்ற பெயரில்
    உண்மைக்கு புறம்பான ஒன்றை வைக்கிறார்
    நான் இங்கே கருணாநிதிக்கு வக்காலத்து வாங்க வரவில்லை
    இருக்கும் அரசியல்வாதிகளிலேயே கடைந்தெடுத்த கள்ளன் கருணாநிதி என்பது என் உறுதியான கருத்து
    ஆனால் விசயம் அதுவல்ல..
    ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி பேசினால்
    உடனடியாக இஸ்லாத்தில் இல்லையா ஜாதி..
    ஷியா சன்னி அகமதியா
    என்று முழங்குவது…
    ஜாதி என்பது நடைமுறையில் என்ன…
    பிறப்பால் உருவாகி அவன் சாகும்வரை அழிக்கப்படவே
    முடியாமல் மேலோன் கீழோன் புனிதன் புனிதமற்றவன்
    என்று இறுக கட்டப்பட்டு அவனோடு கலந்து இருக்கிறது..

    மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் இந்திய கம்னியூஸ்ட் என்று
    பிரிந்து இருக்கிறதே.. இது ஜாதியா
    திமுக அதிமுக என்று பிரிந்து அரசியல் நடக்கிறதே
    இது ஜாதியா
    ஷியா என்பதும் சன்னி என்பதும் சில காரணங்களால்
    ஏற்பட்ட சித்தாந்த பிளவு..
    இதற்க்கு வரலாற்று காரணங்கள் இருக்கிறது
    ஆர்வம் இருந்தால் அதைப்பற்றி விவாதிக்கலாம்..
    ஒரு அகமதியா பிரிவில் இருப்பவன்
    தான் இருக்கும் கோட்பாடு திருக்குர்ஆனுக்கு எதிராக கருத்தை கொண்டிருக்கிறது என்று கருதுவானேயானால்
    மறுவினாடி அதிலிருந்து விலகி தான் விரும்பும் பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும்…
    ஒரு செட்டியார் விரும்பினால் முதலியாராவாரா
    ஒரு தலித் நினைத்த வினாடி ஐயராக மாறுவாரா…

    உங்கள் மத கொள்கையை நீங்கள் மெச்சுங்கள் புகழுங்கள் பரப்புங்கள் அது உங்கள் உரிமை…
    அடுத்தவைகளை பொய்யாக உதாரணப்படுத்துவதோ
    இல்லாத ஒன்றை இருப்பதாக பரப்புவதோ நேர்மையில்லை

  42. திரு கிருஷ்ணகுமார் ஐயா அவர்கட்கு

    ஆறுமுக நாவலரைப் பற்றிய ஓர் விமர்சனக் கட்டுரை காலச்சுவடு வெளியிட்ட மு தளையசிங்கம் படைப்புகள் என்ற நூலில் உள்ளது. சிறிலஸ்ரீ அறுமுக நாவலருக்கு எழுதும் விண்ணப்பம் என்ற தலைப்பில் காலம்சென்ற ஈழத்து எழுத்தாளர் விமர்சகர் மு தளயசிங்கத்தினால் எழுதப்பட்டது.தயவுசெய்து இதனை வாசிக்கவும்.இயலுமானால் தமிழ்ஹிந்துவில் மீள் பிரசுரிக்க முயற்சிக்கவும்.அரவிந்தன் நீலகண்டன், சுந்தர ராமஸ்வாமி ,ஜெயமோகன் போன்றவர்களினால் மிகவும் மதிக்கப்பட்டவர் மு தளையசிங்கம்.

    ஏனைய நண்பர்களும் இக் கட்டுரையை வாசிகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  43. தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவது சூழல் மாசினை ஏற்படுத்தும் என்கிற வாதம் நம் மக்கள் அனைவரையும் எத்தனை விதமான, வித்தியாசமான, பலவித உணர்வுகளில் இங்கே வெளிப்படுத்தி உள்ளது என்பதை என்னால் அறிய முடிகிறது. 125 கோடி மக்கள் இருக்கின்ற தேசத்தில் நாம் உருவாக்கிக் கொண்ட சித்தாந்தங்கள் குறைவுதான். இந்தியாவிற்கு வேற்றுமதங்களான இஸ்லாமும், கிறித்துவமும் நமக்கு இயல்பாகிப் போகும் அளவிற்கு நம்முடைய மதம் இயல்பாக மாறாததுதான் இன்றைய முக்கிய காரணம். இதற்கு நமக்குள் இருக்கின்ற மனித சுதந்திர தாகம்தான். நாம் இந்திய மக்களானாலும், இந்துக்களானாலும் நாம் ஒவ்வொருவரும் வேறானவர்கள், சுய மரியாதையும் சுய சார்பும் உள்ளவர்கள் என்கிற திடமான நம்பிக்கைதான் இதற்கு காரணம், இன்னொரு காரணம், இந்தியர் அனைவரும் ஒருதாய் மக்களே என நம்புங்கள் எனச் சொல்கிற கட்டாயம்தான். இந்தியா என்றுமே ஒரு தேசமாக தன்னை உருவாக்கிக் கொண்டதில்லை. இந்தியா பல இனங்கள், அவர்கள் இந்துக்களாகவே இருந்தாலும், பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்டிருந்த நாடு. வரலாற்றில் இன்றைய இந்தியா என்கிற ஒரு பூகோளத்தின் சிறப்பு இதுவரை இருந்ததில்லை. இந்தியா என்கிற இன்றைய கோடுகளுக்குள், நம் முந்தைய பெருமைகளை, வரலாறுகளை இருத்திப் பார்க்கும் போதுதான் இவ்விதமான வேறுபாடுகளும், சர்ச்சைகளும் , எழுகின்றன. இன்றைய மீரான் சாஹிபும், அத்விகாவும், அன்புராஜும், பண்டைய இந்தியாவானால் இப்படிப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். அவரவர்க்கு உரிய படைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திருப்பர், அவரவர் ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் நாசாமாகியிருக்கும், வலியவர் நலிந்தவரை ஒடுக்கி கொடி ஏற்றியிருப்பர். எந்த ஒரு நீதிமன்றமும் இடை புகாது. ஆனால் இது யாவும் அன்றைய சரித்திரம்.

    இன்று எல்லாமும் மாறியிருக்கும்போது, இன்றைய இந்தியா வெறும் பூகோளமாகப் பார்க்கப்படும்போது, இந்துக்களே உங்களுக்கென்று எந்த தேசமும் இல்லை. எந்த நாடும் இல்லை. உங்களுக்கென்று யாராவது வரிந்து கட்டினால் அவர்கள் உண்மையில் இந்தியர்களே அல்லர். இந்த பூமி கர்ம பூமி. இங்கே வினையாற்றுவோர் யாராகவும் இருக்கலாம். இந்து மத சாத்திரங்கள் உரைப்பது போல நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் என்றும் சாட்சிகள்தாம். உங்களுள் உள்ள கடவுளை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர் எவராகவும் இல்லை நீங்களாகவுமே இருக்கலாம். இங்கே நீங்கள் என்றுமே கர்த்தர் அல்லர்.
    ஒவ்வொரு இந்துவின் கடமையும், இந்தியா யாருடைய நாடு என்பதல்ல. ஒவ்வொரு இந்துவும் தான் யார் என்பதை அறிவதுதான். சும்மா இருத்தலே அறம். இந்த உண்மை சுடும். ஆதியும் அந்தமும் இல்லா, அடி முடி இல்லா இறைவனை வணங்குபவன் இந்தியா மட்டும் என்னுடைய நாடு என, இந்துக்கள் மட்டும் என்னுடையவர் என எப்படி எண்ணத்தோன்றுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என கொண்டாடும் ஒரு மதக் கோட்பாடு வந்தேறிகள் என எவரை நினைக்க இயலும். உங்களுக்குத் பிடித்ததை நீங்கள் செய்யுங்கள். ஆராதியுங்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லையா மெளனமாக இருங்கள். வேண்டுவதும் வேண்டாததும் இந்த யாக்கைக்குத்தானே ஒழிய, ஒரு ஆத்மார்த்தமான இந்துக்கு இல்லை .தான் வேறு தன உடல் வேறு என்று பிரித்தறியத் தெரிந்த இந்துக்களுக்கு அடுத்தவரின் சலனங்களை எப்படி சிலாகிக்க முடியும்.
    என் இனிய தோழர்களே, இந்துக்கள் என்பவர் எந்த மதங்களையும் சார்ந்தவரல்ல. இந்துக்கள் இவ்விடம் சார்ந்தவரே அன்றி எம்மதமும் சார்ந்தவரல்ல. இந்துக்கள் என்றுமே இனத்தால், மனத்தால் மாறுபட்டவர். ஆனால் தம் வாழும் இடத்தால் ஒன்றுபட்டவர். அவர்களுக்கு ஒரே அடையாளத்தைப் புகுத்தாதீர்கள். அவர்களின் மரபணுக்களே வெவ்வேறானவை . அவர்களின் சமயங்களையும் சாதிகளையும் முன்னிறுத்தி இந்நாள் இந்தியர்களே இந்துக்களுக்கு இவ்விடம் இல்லாமல் செய்துவிடாதீர்கள். நான் வழி வழி வாழ்ந்து வந்த என் தேசம், என் நம்பிக்கைகள் இந்தியா என்ற இன்றைய வரையறையில் எனக்கு இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தை இந்துப்பெருமக்களுக்கு உண்டாக்கிவிடாதீர்கள்.
    ஏனென்றால், இன்றைய இந்திய ஆட்சி அமைப்புக்கு ஒரு மெரீனாவையே சந்திக்கும் வலிமை இல்லை

  44. Arumuganavalar translated Bible in Tamil. This is the first Tamil Bible. Vellalar Christain collaboration is a long history having more than 500 years records. The basic root cause of Tamils in Lanka & extended in TN as Kazhagam. Pl note the recent contravercy of (Mersal-Mentals). Joseph Vijay father is leader of Christain Vellala association.

  45. ஐயா மீரான் சாயிபு அவா்களே தங்களை மனமார பாராட்டுகின்றேன்.தமிழ் இந்து வலைதளத்தை படிக்கும் வாசகராக தாங்கள் இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி.தங்களின் பதிவு

    ஜாதி என்பது நடைமுறையில் என்ன…
    பிறப்பால் உருவாகி அவன் சாகும்வரை அழிக்கப்படவே
    முடியாமல் மேலோன் கீழோன் புனிதன் புனிதமற்றவன்
    என்று இறுக கட்டப்பட்டு அவனோடு கலந்து இருக்கிறது..

    சற்று மேலோட்டமானது.இன்றைய நிலை அப்படித்தான் இருக்கின்றது.முதலியாா் செட்டியாா் ஆக மாறினால் என்ன லாபம் என்ன நட்டம்.ஏதுமில்லை.ஆனால் சாதியின் பெயரை தங்களது பெயருக்கு பின் போட்டுக் கொள்ளும் பழக்கம் என்று வந்தது ? 200 வருடங்களுக்குள்தான் வந்திருக்க வேண்டும். அதற்கு முன் இந்தியாவில் சாதி அமைப்பு வருணம் தான். பிறப்புஅடிப்டையில் வருணம் இல்லை.மனித வக்கிர புத்தி எதையும் காலப்போக்கில் சீரழித்து விடுவது.அதுபோல் வருண கோட்பாடும் பிறப்பின் அடிப்பைடையில் நிா்ணயம் செய்யப்பட்டு சாதியாகி விட்டது.சாதிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றது.பல சாதிகள் பாிணாமம் அடைந்து இன்றைய சமூக அமைப்பான சாதி அமைப்பாக மாறியுள்ளது என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பட்டண நாகரீகத்தில் சாதி மிகவும் மங்கிவிட்டது.குரானில் அல்லா பல கோத்திரங்களைப் படைத்ததாக சொல்லப்பட்டுள்ளது. அரேபியா நாடுகளில் இன்றும் கோத்திரப்பிாிவுகள் உள்ளன. அதனடிப்படையில் மோதல்கள் உள்ளன. சாதியைக் காட்டி பல அமைப்புக்கள் இந்துக்களின் நலனுக்க விரோதமாகச் செயல்பட்டு வருகின்றாா்கள். முஸ்லீம்கள் மத்தியில் நிலவும் சமூக கொடுமையாக 01.பலதாரமணம் 02.மனம் போல போக்கில் தலாக் அளிப்பது 03.தலாக் செய்து பெண்களை அநாதரவாக கைவிடுவது 04 மிகவும் அசிங்கமான நிக்கா ஹலால் 05.சிறுவயது திருமணம்.ஏன் யாரும் இது குறித்து பகிரங்கமான பேசுவது இல்லை. வீரமணி கருணாநிதி சுவவீரபாண்டியன் சீமான் இடது வலது கம்யுனிஸ்டகள் என்று தங்களை சமூக சீா்திருத்தவாதிகளாகக் காட்டிக் கொள்ளும் இக்கோமாளிகளுக்கு இந்திய முஸ்லீம்கள் படும்பாடு ஏன் கண்ணில் படமாட்டேன்குது என்பது ஆச்சாியமே.

  46. ஐயா மீரான் சாயிபு அவா்களே

    இந்துக்களின் வழிபாட்டுமுறை நம்பிக்கைகள் என எதுவும் முஸ்லிம்களால் மேடை போட்டு குறை சொல்லி திரியப்படுவதில்லை..
    இஸ்லாமிய நம்பிக்கை என்பது இந்துமத நம்பிக்கைக்கு நேர்விரோதமானதாக இருந்தாலும் எங்கள் கொள்கையை நாங்கள் சொல்வோமே அன்றி யார் மனம்புண்பட்டும் பொது மேடைகளில் பேசுவதில்லை..
    ——————————————————————-
    மன்னிக்க வேண்டுகின்றேன்.தாங்கள் சொல்வது பொய். அரேபிய கலாச்சாரம் த்தை பின்பற்றி அரேபியன் போல் வாழ வேண்டும்.அதுதான் இறைவனுக்கு அல்லாவுக்கு எற்புடையது.வேறு இந்து பண்பாடு படி வாழ்வது அல்லது வேறு எந்த கலாச்சாரத்தை பின் பற்றுவது ஹாராம்.காட்டுமிராண்டித்தனம் என்பது முஸ்லீம்களின் கொள்கை.ஒரு மனிதனின் சாதிக்கு இரண்டு போ் உண்டு. மாியாதையாக கூப்பிடும் போது ஐயரே என்பாான்.கோபம் வந்தால் பாா்பான் என்பாா்கள்.அன்பிறருந்தால் ”காக்கா” சாயிபு” என்ற சொற்கள் வரும்.வெறுப்பு இருந்தால் துலுக்கன் என்பாா்கள்.
    இந்துக்களை காபீா்கள் என்று சொலகின்றீா்களே! அரேபிய இலக்கியங்களில் எந்த ஒரு இடத்திலாவது காபீா் என்ற சொல் கண்ணியமான கௌரவமிக்க மாியாதை அளிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளதா ? ஒரு உதாரணம் தங்களால் காட்ட முடியுமா ?
    3ம் கலிபா உதுமான் முஹம்மதுவின் இரு மகள்களை மணந்தவா். 3ம் கலிபா வாக பொறுப்பபேற்று அவர் மீது உறவினா்களுக்கு அதிக சலுகை அளிக்கின்றாா் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மஹம்மதுவின் ஆசை மனைவி ஆயிசா -உதுமானின் பெருமைமிக்க மாமியாா் – உதுமானை ”காபிர்” என்று திட்டுகின்றாா். சீக்கிரமாக உதுமான் கொலை செய்யப்படுகின்றாா். இதுதான் காபீா் என்ற பட்டம் தரும் சிறப்பு. இந்துக்களை காபீா் கள் என்று பழிப்பது இழிவுபடுத்தவது கேவலப்படுத்துவது அசிங்கமாக உள்ளது. தாங்கள் அதை ஒப்புக் கொள்கினறீா்களா ?முஹம்மதுவின் மருமகன் காபீா் பட்டம் பெற்ற பின் கொல்லப்படுகின்றாா் ? இந்துக்களையும் இன்று முஸ்லீம்கள் காபீா்கள் என்று அழைப்பது ………. எங்கோ போய் முடியப் போகின்றது.

  47. திரு.கிருஷ்ணகுமாா் ஐயா அவா்களுக்கு
    எனது ஆதங்கத்தை தாங்கள் புாிந்து கொள்ளவில்லை.முறையான சமயகல்வியை அனைத்து இந்துக்களுக்கும் அளிக்க வேண்டும்.அது அவசியம்.என்பதுதான் என்து கருத்தின் ஆதார சுருதி. அதைச் செய்ய நாதியில்லை. அதுதான் என் வருத்தம். நானும் எனது ஊாில் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். நினைத்த வகையில் அறுவடை கிடைக்கவில்லை.
    திருச் செந்தூா் கோவிந்தம்மாள் கலை அறிவியல் கல்லூாியில் படித்த இரு இந்து மாணவிகள் (அக்கா தங்கை- ) முஸ்லீம் மாணவிகளுடன் பழகிய காரணத்தால் இசுலாத்திற்கு மாறிவிட்டாா்கள்.தற்போதும்உறுதியான முஸ்லீம்களாகத்தான் வாழ்ந்து வருகின்றாா்கள். இந்து தகப்பன் மூத்த பெண்ணிற்கு முஸ்லீம் மாப்பிள்ளை பாா்த்து திருமணம் முடித்து விட்டாா்.இளையவள் தகப்பன் வீட்டில் பா்தா அணிந்து முஸ்லீம் ஆக வாழ்ந்து வருகின்றாா். என்ன ஆச்சாியம் இந்தியாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அரேபிய பெண்மணிபோல் வாழத் துவங்கி விட்டாா் ? அழுவதா சிாிப்பதா என்று தொியவில்லை.

  48. அன்புராஜ் ஐயா, ஆகமமுறைப்படியான ஆலயங்களில் தனிநபர் விருப்பு வெறுப்பினையொட்டி வழிபாட்டுமுறைமைகள் மாற்றியமைக்கப்படுவதில்லை. அபிஷேகம் அப்படிப்பட்ட ஒரு ஆலயவழிபாட்டு முறைமை. மாற்றப்படாது. வேண்டுமானால் நீங்கள் உங்கள் செலவில் ஒரு ஆலயமெழுப்பி அதில் நீங்கள் விரும்பும் வண்ணம் வழிபாடுகளை அமைத்துக்கொள்ளலாம். யாரும் கேழ்க்க முடியாது.
    ————————————————————————–
    தவறு பழமைப் பைத்தியக்காரத்தனத்திற்கு என்ன பெயா் ? பழமையில் உள்ள முட்டாள்தனங்களைகைவிடவில்லையெனில் இந்துக்கள் வீழ்ச்சி அடைவாா்கள். இந்து மக்கள் நிறைய போ்கள் அபிஷேகத்தை விரும்புவதில்லை.அபிஷேகம் செய்தால்தான் அந்த கடவுள் வருவாா் என்றால் அந்த கடவுள் தேவையில்லை.நாத்திகமே உத்தமம்.

  49. திரு.ஃகிருஷ்ணகுமாா் ஐயா அவா்களுக்கு

    உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் அங்கு ஒரு மசுதி சா்ச இருந்தால் முஸ்லீமோ கிறிஸடதவன் அதில் சோ்ந்து பிராத்தனைக்கு சென்று அந்த ஜமாத் திருச்சபை உறுப்பினா் ஆகி விடுவான்.அவனுக்கு ஒரு சமூதாயம் அமைந்து விடும்.உறவுமுறை நட்பு வட்டம் எற்பட்டு விடுகின்றது. தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் கூட கிறிஸ்தவா்கள் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டீருப்பாா்கள். மனிதா்கள் கூடி பேசி பிரார்த்தனை செய்வது மனித வளம் குறித்து கலந்து உரையாடுவது அந்தமதத்திற்கு சிறப்பு. ஆனால் இந்து எண்ணெய் உற்றுவான் விளக்குஏற்றுவான் அபிஷேகம் செய்வான் காணிக்கை செலுத்துவான் சக இந்துவோடு அவனுக்கு எந்த உறவையும் அது ஏற்படுத்தாது. அவனவன் தனி ஆள்தான். மனித மன ஒருங்கிணைப்பு கிடையாது.இரண்டு கிறிஸ்தவா்கள் சந்தித்தால் ” ஜெபம்” செய்யலாமா என்பாா்கள். இரண்டு முஸ்லீம்கள் சந்தித்தால் ”தொழுகை” செய்வாா்கள். ஜெபத்திற்கு பின் தொழுகைக்க“ பின் அவா்களுக்குள் ஒரு உறவு முளைக்கும்.இந்துக்கள் வாழ்க்கை போராட்டத்தில் வெகு பலஹீனமாக நிலையில் இருக்கின்றோம். Unorganised ஆக இந்துக்கள் இருப்பது நன்மையா ?

  50. திரு லக்ஷமணகுமார்…
    உங்களிடம் இருப்பது வெறும் மதக்காழ்ப்பு…
    தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்
    வைகரை நேரத்திற்க்கான தொழுகை அழைப்பு என்பது அதிகபட்சம் மூன்று நிமிடத்தில் முடியக்கூடிய ஒன்று..
    உண்மையில் பல முஸ்லிம்களே அந்த அழைப்பொலி கேட்க முடியாத வகையில் இழுத்துமூடி தூங்கி கொண்டு கிடப்பான்.இது உங்களுக்கு தாங்கொன்னா தொந்தரவாய்
    தெரிந்தால் மனம் முழுக்க வெறுப்பு மண்டி கிடக்கிறது என்று பொருள்..

    நானும் சென்னையில் பிள்ளையார்கோவில் தெரு என்ற தெருவில்தான் குடியிருக்கிறேன்
    நான்கு வீடு தாண்டி கோயில்.
    பள்ளிவாசலில் தொழுகை அழைப்பு வரும் நேரத்தில் கோயிலில் சுப்ரபாதம் பாடத்தொடங்கிவிடும்
    இதுபோக வருடம் முழுக்க ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவதொரு விசேஷம் கோயிலில் நடந்து கொண்டுதான் இருக்கும்
    சீர்காழியும் சௌந்தரராஜனும் எல்ஆர் ஈஸ்வரியும் நாள் முழுக்க மிகப்பெரிய ஒலிப்பெருக்கியில் பாடிக்கொண்டேதான் இருப்பார்கள்..
    விசேசத்தின் உச்சமாக அந்த தெரு அடைக்கப்பட்டு சோறாக்கியோ கூல் காய்ச்சப்பட்டோ விருந்து நடக்கும்
    நாங்கள் சுற்றிக்கொண்டு வீடு வரவேண்டி இருக்கும்
    வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் அம்மன் உலா
    மிகப்பெரிய வெடிச்சத்தத்தோடும் மேளதாளத்தோடும்
    வருவதும் நடக்கிறது…
    இவை எதுவும் எங்களுக்குள் எந்த மாச்சர்யத்தையும்
    முகச்சுழிப்பையும் ஏற்படுத்தியதில்லை…
    இதுவே நல்லிணக்கம் இதுவே சகிப்புத்தன்மை
    தயவு செய்து யார் யாரை சதித்துக் கொள்கிறார்கள்
    யாருடைய சகிப்பு பெரியது என்று கணக்கு போட்டு பார்க்காதீர்கள்
    அப்படி கணக்கு போடுவதாயிருந்தாலும் நாங்கள் ரெடிதான்

  51. //சைவ வைஷ்ணவ் ஆலயங்களில் பெரும்பான்மையானவை சைவாகமங்கள் மற்றும் பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களைக் கடைபிடிக்கின்றன.

    வைஷ்ணவ ஆலயங்கள் பெருமளவிலும் வழிபாட்டு முறைகளை எம்பெருமானார் யதிராஜர் ராமானுஜர் வழிவகுத்திருக்கிறார். இவ்வாலயங்கள் அனைத்திலும் இவற்றைத் தவிர் இதே ஆகமங்களை ஒட்டி பூஜாமுறைகள் பின்பற்றப்படும் ஆலயங்களிலும் எம்பெருமானார் வகுத்த வழியை எந்த ஒரு ஸம்ப்ரதாய வைஷ்ணவனும் மீறவொண்ணார்.//

    மாற்றக்கூடாதவை அல்லது மாறாது என்பது இஸ்லாமியத்தனம். 5000 ஆண்டுகளாக்கு முன் தோன்றிய வேதகால இந்துமதம் புராணங்களும் சாஸ்திரங்களும் படைக்கப்பட்ட குப்தர்கள் காலத்தில் மாறியது. இடைப்பட்ட காலங்களில் எவ்வளவோ மாற்றங்கள். காலங்காலமாக எதைப்போற்றிவளர்த்தார்களோ அவற்றுள் சில‌ வெள்ளைக்காரர் காலத்தில் மாற்றப்பட்டது. காலத்திற்கேற்ப தன்னை அங்கங்கே மாற்றம் செய்துகொண்டதால் இந்துமதம் போய்க்கொண்டிருக்கிறது.

    ஆயிரமாண்டுக்கு முன்னர் இராமானுஜர் சொன்னபடி இன்று அவர் நிர்ணயித்த வைணவமில்லை. அவர் சொன்னதில் எது பிடிக்கவில்லையோ அவர் காலத்திலும் அதற்கு பின்னருமே அதை விட்டார்கள். தலித்துகளின் கோயில் நுழைவு. இக்காலத்தில் சட்ட்ம் போட்டுத்தான் அது சாத்தியமானது.

    அவரே நெடுங்கலாமாக நின்று நிலவி, அசைக்க முடியாதவை, மாற்றக்கூடாதவை என்றெல்லாம் சொல்லப்பட்ட மதத்தில் புரட்சிகரமாக மாற்றங்களைக்கொண்டு வந்தார். மாற்றக்கூடாது என்பது இசுலாமியத்தின் ‘எல்லாமே நிரந்தரம், ஒரு சொல்லைக்கூட மாற்றக்கூடாது” என்னும் மதப்பிடிவாதத்தை இந்துமதத்தில் நுழைக்க விரும்புகிறார்.

    அன்புராஜ் சொல்வது, வேப்பிலையே உடையாக அணிந்து பெரியபாளைத்தம்மனக் கும்பிடும் பக்தர்களை. அது அவருக்குப்பிடிக்கவில்லை. அதற்கு நான் சொன்ன விளக்கமே பொருந்தும். கிருஸ்ணக்குமாரின் விளக்கம் – நீங்களே ஒரு கோயிலைக்கட்டிக்கொள்ளுங்கள் என்பதன்று. அப்படி அவரே செய்தால், அது பலரால் விரும்ப்பட்டால் அது செக்ட் ஆகும்.

    அப்படித்தானே அய்யா வைகுண்டவர் வழிபாடானது. அதற்கும் இம்மதத்தில் வழியுண்டு என்றுதான் முடிக்க வேண்டும். அங்கே பிராமணர்களின் வைதீக வழிபாடு; இன்னொரு இடத்தில் அம்மனுக்கு வேப்பிலை உடையணிந்து கோயில் வளாகத்தில் மட்டன் பண்ணிச்சாப்பிடுவது (பெரிய பாளையம்); இன்னொரு இடத்திலே தூய சைவமாகி, ஜோதியையே வழிபாடு செய்வது – இப்படி பரந்துபட்ட பலபல பிரிவுகள் இருக்கட்டும். ஆனால் அவைகளும் மாறலாம். காலம் கட்டாயப்படுத்தினால் மாறியே ஆக வேண்டுமென்பதுதான் இந்துமதம். Dr Anburaj may note: The religion for the poor and the poorest of the poor who eke out hard physical labor for pittance and hardly have time for prayers and worship – even once in a week – will always pick up a religion that fits their style of life. If you insist they should have your elite way of religion only, you will lose them to other religions.

    மாறினால் மதம் அழியும் அல்லது பாழ்பட்டுப்போகுமென்று பூச்சாண்டி காட்டினார்கள். ஆனால் மாற்றங்கள் வந்தன. ஒன்றும் நேரவில்லை. இன்றும் மெருகுடன் இந்துமதம் .

    //ஸம்ப்ரதாய வைஷ்ணவனும் மீறவொண்ணார்// Just go and find out what was the sampradayam Ramanujar showed and what is obtaining or being followed. You can see a lot of changes. Except Jeeyars, many devout sampradaya vaishanava have different ammans as their kuladeivams ….L-)

  52. BSV,

    “EVR hurriedly packed up and fled – maybe his fans or escorts feared for his life. But did he withdraw his Question; Yaarindh Krishthu before leaving the stage ?. Only if he had done so, we could say he was against Hindu religion only. Your Uncle may have chosen this particular instance to make you hate him. But there were umpteen instances where he was pelted with shoes and sandals by Hindus in the crowd of audience.”

    Your support for EVR is weird. He fled when the shoe was thrown at him. If he had the guts, he would have stayed on stage & given an explaination. By the way, my uncle does not have an axe to grind.

    You say “Diabetic Hindus or others shouldn’t fast (as per medical advice). Other than devout Vaishanava Hindus, all other Hindus don’t fast – some for the same reason as he has given. I don’t find anything wrong with this statement. It depends upon the nature and intensity of devotion of the individuals or the families. Please remember always there’s no compulsion on any Hindu to do anything and Mu Ka is fully granted the religious right as a Hindu to say I don’t fast on Vaikunta Ekadasi day.”

    That diabetics should both fast is for all individuals. Mu,ka is well within his right to say that he does not fast. But to say that he feels more hungry that day, is mischievous. Also, let him say the same thing about ramzan also.

    “His statement that it’s a social festival is against truth. But his participation in breaking fast event of Ramzan days – is common to all politicians, including BJP. Vajpayee used to attend and you must have seen photos. As a politician, when everyone does, Mu Ka cannot be singled out for your attack. But if any Hindu groups had invited him and he refused, you have a strong case against him.”

    Just bcos all politicians attend ifthar parties does not make ramzan a social event. They do it for votes. I have no qualms about mu,ka refusing to attend vinayaka chathurthi, in fact we are better off without him. But giving lame reasons is what I am objecting to.

  53. Meeran sahib,

    I think you have not seen the late night channels like angel TV & WIN TV. You will then know what rabid speeches are given by your religious leaders.

    There is a street in mylapore by name mosque street. At the mosque entrance, there are verses of Koran written on the wall. One verse says” Oh people! which religion is better, the one that has many Gods or the one which says that there is only 1 God?’

    I leave the explanation of this verse & the meaning that it conveys, to you.

  54. ஐயா BSV அவா்களே, Dr Anburaj may note: The religion for the poor and the poorest of the poor who eke out hard physical labor for pittance and hardly have time for prayers and worship – even once in a week – will always pick up a religion that fits their style of life. If you insist they should have your elite way of religion only, you will lose them to other religions.
    தங்களின் விளக்கம் இந்து மதத்தின் சிறப்பை உணா்த்துகின்றது.நன்றி.ஆனால் அப்படிப்பட்ட அடிமட்ட குடும்பத்தில் பிறந்த அதாவது ஒரு பனைஏறும் நாடாா் சாதியில் அல்லது மலம் அள்ளும் தொழிலைச்செய்யும் குடும்பத்தின் கலாச்சாரம் வழிபாடு முறை அவனது கல்வி மற்றும் தாங்கும் வருவாய் மற்றும் பழக்க வழக்கங்கள் சமூக மக்களின் கலாச்சாரத்திற்கு தக்கதான் இருக்கும் – இருப்பதுதான் இயற்றையானது என்ற தங்களின் கருத்து சாியானதுதான்.ஆனால் அந்த குடும்பத்தில் ஒருவன் பட்டணத்திற்கு சென்று படித்து பட்டம் பெற்று ஒரு அரசு ஊழியராக காவல்துறை அதிகாாியாக ஆசிாியா் ஆக மாறிவிட்டான் என்றால் அவனது குடும்ப கலாச்சாரம் சமய வழிபாடு முறைகள் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை.ஆகவேதான் அவன் வெகு சுலபமாக பிற மதத்தின் சுழ்ச்சியில் வீழந்து வீடுகின்றான். இதுதான் இன்று பிரச்சனை. உயா் வருவாய் பிாிவினருக்கும் புசாரிகளுக்கும் சந்நியாசிகளுக்கும் சமய அனுஷ்டானமுறைகள் அதிகம் வேண்டும் என்பது இயல்பு.ஆனால் அனைவருக்கும் குறைந்த பட்ச ஒரு சமய அனுஷ்டான முறைகள் தேவை என்பதுதான் என்து கருத்து. அது அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஐயா வைகுண்டா் பிறக்கவில்லையெனில் கன்னியாகுமாி மாவட்டம் இன்று கன்னி மோி மாவட்டமாக மாறியிருக்கும் என்பது தங்களுக்கு தொியுமா ?ஏற்கனவே கன்னிமோி மாவட்டம் என்று கிறிஸ்தவ ஆா்வலா்கள் பலா் எழுதிக் கொண்டுயிருக்கின்றாா்கள்.பறையனோ சக்கிலியனோ விவசாயியோ கூலிக்காரனோ யாராக இருந்தாலும் ஒரு முறையான சிறிய அனுஷ்டானத்திற்கு அவா்களைப் பழக்கினாா்கள். ஸ்ரீநாராயணகுரு மற்றும் சுவாமிசித்பவானந்தா் ஆகிய இருவரும். அதுதான் இன்றைய தேவை. அபிஷேகம் நிறைந்த வழிபாடு சுமை.ஆடம்பரம்.எழை இந்துக்கு ? பொருத்தமானது அல்ல.
    ஸ்ரீநாராயணகுரு விதைத்த விதைதான் இன்று கேரளத்தில் யதுகிருஷ்ண என்ற புலையன் அா்ச்சகராக பாிணாமம் பெற்றுள்ளான். மறந்து விடாதீா்கள். புலையன் தலிக் இளைஞா் கள் அா்ச்சகராக நியமிக்கப்பட்டதற்கு வெற்றி என்று மாா்யை தட்டியவா்கள் , அவனது பயணத்தை அந்த கலாச்சார பாிணாமத்தை மறுப்பது நியாயமா ?

  55. //ஆனால் அனைவருக்கும் குறைந்த பட்ச ஒரு சமய அனுஷ்டான முறைகள் தேவை என்பதுதான் என்து கருத்து. அது அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்//

    இது சரியான விருப்பம்தான். ஆனால் பெரிய பாளையத்தம்மனுக்கு விரதம் இருந்து வேப்பிலை உடை கட்டிக்கொண்டு கோயில் வளாகத்தில் ஆட்டுக்கறி சமைத்துப்படையலிட்டு அம்மனைத் தொழும் மக்கள் சென்னைக்கு வெளியேயுள்ள சிற்றூர்களிலிருந்து மட்டுமல்ல, சென்னையிலிருந்து பலபாகங்களிலிருந்தும் செல்கிறார்கள். இவர்கள் எவருமே கிருத்துவர்களாகவில்லை. இவர்கள் நம்பிக்கையும் பக்தியையும் நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் இது வேணடவே வேண்டாமென்கிறீர்கள்.

    கீழ்சாதிகளிலிருந்து பட்டணம் வந்து தன்னிலையை மேமபடுத்தியோர் தங்கள் மூதாதையரின் வழிபாட்டை வெறுப்பார்கள்; அல்லது விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறீர்கள். சரியன்று. ஆனால், அவர்களை இலகுவாக பிறமதம் திருப்பிவிடலாமென்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். புரியவில்லை.

    கீழ்சாதியினர் தங்களூரிலிருந்தாலும் பட்டணம் சென்று தங்களை மேம்படுத்திக் கொண்டாலும் அவர்களை மிசுநோரிகள் மதமாற்றம் செய்வது அக்ஸசிபிலிட்டி கிடைப்பதால். கீழ்சாதியோ, மேல்சாதியோ, தங்கள் மதத்தில் பிடிமானம் இருப்பதற்கு நல்ல வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். ஏதோ முன்னொரு இருந்தார்கள்; நாமும்தான்; கேளிக்கையே மதம் என்று வாழ்பவர்களைத்தான் மிசுநோரிகள் நெருங்குவார்கள். இதற்கு பிராமணரைத்தவிர மற்றவர்களெல்லாம் இலக்குதான்.

    எல்லாருக்கும் குறைந்தபட்சம் மத வழிபாட்டு முறைகள் என்பது எப்படி வரையறுப்பது? யார் செய்ய முடியும்? இந்து மதத்தில்தான் அதிகார மையமே இல்லையே?

    இந்துமத்த்தில் இருக்கும் வரை, பிராமணரைத்தவிர மற்றவர்கள், மதமே வாழ்க்கை யென்று வாழவில்லை. ஆனால், அவர்களே இசுலாமியர் அல்லது கிருத்துவர் ஆகிவிட்டால் (குறிப்பாக பெந்தேகொஸ்து) மதமே வாழ்க்கையென்று போய்விடுகிறார்கள். அங்கு அவர்களுக்கு மதப்பிடிமானம் ஏற்பட்டு விடுகிறது. எப்படி இப்படி?

    பிராமணர்களைத்தவிர மற்ற‌ இந்துக்களுக்கு மதமே ஏன் வாழ்க்கையாகவில்லை. எப்போது வேண்டுமோ அப்போது மட்டும் போகுமிடமாக ஏன் மதம் இருக்கிறது?

    கேள்விகளுக்கு விடைகளென்ன?

  56. வைதீக மதத்துக்கும் பிராமணர்களுக்கும் கொடுக்கும் உயரமான இடத்தை, மற்ற இந்துமக்கள், குறிப்பாக, நீங்கள் சுட்டிய பெரியபாளையத்தம்மன் பக்தர்களுக்கும் கொடுங்கள். இம்மக்களும் ந்ம் வழிபாடும் மதிக்கப்படுகிறது. பிராமணர்களுக்கு நாம் கீழாகப் பார்க்கப்படவில்லை என்ற் நம்பிக்கையைக் கொடுங்கள். அப்போது அவர்களுக்கு இந்தமதத்தில் நெருக்கமான பிடிமானம் ஏற்படும். அவர்கள் வழிபாட்டுமுறைகள் இன்னும் சிற்ப்பாக சிற்ப்பாகச்செய்ய அவர்கள் வலிய இந்துக்களாவார்கள். ஆனால் நீங்களோ அதைச்செய்யாமல், அவர்கள் வாழ்க்கை மத வழிபாட்டு முறைகளை வெறுத்து, அதை நகர்த்தி விட்டு வைதீக முறைப்படி சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ”அனுஸ்டான முறைகளை’அவர்கள் மீது திணித்தால் ஏற்பார்களா? குருவி தலையில் பனங்காயை வைத்தால்? அது போல அவர்கள் உதறிதள்ளுவார்கள். கீழிலிருந்து நீர் மேலே பாயாது; மேலிருந்துதான் கீழே பாயும். அவர்கள் எப்படி மத வாழ்க்கை வாழ்கிறார்களோ அதனடித்தளத்தைச் சிதைக்காமல் எப்படி இன்னும் செம்மைப்படுத்துவது என்றுதான் சிந்தித்து செயல்படவேண்டும். பட்டுச்சேலையுடுத்திக்கொண்டு குத்துவிளக்குப்பூஜைக்கு வா; இல்லாவிட்டால் நீ மதத்துரோஹி என்பது இம்மதத்துக்கே வைக்கும் வேட்டு.

    தமிழ்நாட்டு தலித்துக்களுக்கு சமஸ்கிருதம் கற்பித்து பிராமணர்களைப் போல மாற்றும் ஒரு நாராயண குரு வந்தால் ஓகே.

  57. திரு சஞ்சே…
    நீங்கள் சொல்வது எப்படி சார் அடுத்தவர் மனதை புண்படுத்தும்…
    ஒருவன் தான் ஏற்ற கொள்கையின் சிறப்பைச் சொல்லி மக்ளுக்கு விளக்குகிறான்…
    அதே உரிமை மை பல கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இருக்கிறதுதானே…
    நான்கூட சில இந்து நம்பிக்கையாளர்களின் பேச்சில் எழுத்தில் அறிகிறேன்…
    அதாவது
    இந்து மதத்தில் கண்டிப்பான கறாரான கடவுள் கொள்கையில்லை….கடவுளை எந்த ரூபத்திலும் வணங்கலாம் எப்படியும் வணங்கலாம்
    வணங்காமலும் இருக்கலாம்…
    இந்து மதம் கடவுளைச்சொல்லி பயமுறுத்துவதில்லை..

    என்றெல்லாம் இந்து மத பெரியோர்கள் சொல்லி கேட்கிறேன்
    மக்கள் எதை ஏற்கிறார்களோ அது அவர்கள் உரிமை…
    மதக்கொள்கையை ஏற்கச்சொல்லி மிரட்டுவது
    மக்களின் அறியாமை வறுமை நோய் போன்ற வாழ்வின் சில சங்கடங்களை பயன்படுத்தி மதத்தை ஏற்றுக்கொள்
    உன் துன்பத்தை போக்குகிறேன் என்பது…
    இவையெல்லாம் இழிவான செயல்..
    இது கடுமையான கண்டனத்திற்க்கும் தண்டனைக்கும் உரியது
    இப்படி பரப்பப்படும் மதம் உண்மையாக இருக்குமா
    மதம் என்ன அரசியல் கட்சியா..
    அதிகமானோர் ஓட்டு போட்டு கடவுள் தேர்ந்தெடுக்கப்படுகிறானா….
    பைத்தியக்காரத்தனம்…..

    இது அல்லாத ஒவ்வொருவரும் தான் விரும்பி ஏற்ற கொள்கையை எடுத்துச் சொல்வதோ அதை பிறரும் ஏற்க
    வேண்டும் என நினைப்பதோ தவறே இல்லை
    இது அனைவருக்குமான உரிமை..
    உங்களுக்கும் இருக்கிறது…
    ………….. ……….
    திரு அன்புராஜிக்கான இரண்டு பதிவுகள் முழுதாக முழுங்கப்பட்டுவிட்டது…
    நான் எந்த கண்ணியகுறைவான வார்த்தையும் பயன்படுத்தவில்லை…
    தனிமனித தாக்குதல்,கேள்விக்கு தொடர்பில்லாத பதில்
    எதுவும் என் பதிவில் இல்லை…
    ஆனாலும் நீக்கப்பட்டிருக்கிறது….
    இதுதான் நீங்கள் தளம் நடத்தும் அழகு…
    உண்மையை சந்திக்க முடியாத நடுக்கம் இருப்பதாக
    இது ஆகாதா…
    அல்லது இந்துக்கள் மட்டும்தான் மறுமொழியிட வேண்டும் என்று அறிவித்து விடுங்கள்
    நடுநிலை…கருத்துசுதந்திரம் என்ற பம்மாத்து வேண்டாம்

  58. Meeran Sahib,

    You may well say that your religion is great. It is only when you make comparisons, the problems start.

  59. காற்றடித்தாலோ,கார்பன் காப்பிகளால் ஆன புத்தகமோ ,திறந்து வைத்தால் காற்று வீசி ,ஊசிபோக கூடிய கட்டு சோற்று கூடாரமுமல்ல ,சத்திய சங்கமும் ,சனாதன தர்மமுமான ,இந்து மதம்!
    ”இந்து மதத்தை பழிகளிலிருந்து துகாக்கப்போகிறோம்”,என்றெல்லாம் சிலர் கிளம்புவதை பார்க்கையில் சிரிக்கவே தோன்றுகிறது ,இந்து மதத்தை அழிக்கப்போவதாக கிளம்பிய சர்வ தேசத்தவரை,சாவுக்குழிகளே கைகொட்டி சிரித்து கூப்பிட்டுக்கொண்டன!

  60. ஐயா மீரான் சாகிப் அவா்களே
    இசுலாமிய -அதாவது அரேபிய இலக்கியங்கள் நபி வரலாறு மற்றும் அது சாா்ந்த பல நூல்களைப் படித்து விட்டேன்.அரேபிய ராணுவ வல்லாதிக்கம் முஹம்மதுவின் மரணத்திற்கு பின் துவங்குகின்றது.அதற்கானஅரேபிய வல்லாதிக்க எண்ணமும் பிற கலாச்சாரங்களின் அழிவை குரான் போதிக்கின்றது. குரான் உலகை அரேபிய மயமாக்க விரும்புகின்றது.அதற்கான வழிமுறைகளில் ” வாள்ததான் ” முதலும் இறுதியும்.பாக்கஸ்தானில் இந்து கிறிஸ்தவ சீக்கிய மக்கள் வாழ்க்கை நிலை அடிமைத்தனம்தான். அழிந்து சீரழிந்து கிடக்கின்ிறாா்கள். எந்த ஒரு முஸ்லீம்மும் இசுலாத்தை அவமாியாதை செய்து விட்டாா் என்று ஒரு இந்துவை தூக்கில் ஏற்ற முடியும். ஈராக்கியல் எஸ்டி என்ற அரேபிய மதத்தை பின்பற்றான மக்கள் இருக்கின்றாா்கள்.இசுலாமிய அரசு அமைக்க விழையும் தொண்டா்கள் குரான் மற்றும் ஹதீஸ் படித்தவா்கள்.அதுதான்உ ண்மை மற்றவை பொய் என்று துணிந்தவா்கள். எஸடி இன மக்களுக்கு அவா்கள் செய்தது என்ன? நிராயுத பாணியாக இருந்த ஆண்களைக் கொன்றாா்கள். இளம் பெண்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொண்டாா்கள். இன்றும் இசுலாமிய தேச ராணுவ முகாம்களில் வேசிகளாக தங்களின் வாழ்க்கையைத் தொலைத்த எஸடி இனப் பெண்கள் எத்தனை ஆயிரம்தொியுமா ? உலக மக்களின் ஜனத்தொகையை குறைப்பதில் குரான் பெரும் பங்கு வகித்து வருகின்றது.குரான் மட்டும் இல்லையனில் 15 25 என்று பெத்து தள்ளும் அரேபிய மற்றும் பிற முஸ்லீம்களின் ஜனத்தொகையில் மற்ற மக்கள் அழிந்திருப்பாா்கள்.

  61. BSV
    ஐயா அவா்களே ஒரளவிற்கு எனது கருத்துக்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.நான் அனைத்து மக்களின் தனிப்பட்ட விசயங்களில் கருத்துக்களை தொிவிப்பதில்லை.ஆனால் வழிபாட்டில் காலையில் திருவாசகம் திருப்பள்ளி எழுச்சியில் 3 பாடல்களையாவது பத்மாசனத்தில் அமா்ந்து குடும்பமாக பாட வேண்டும் என்றும் மாலையில் சிவபுராணத்தை குடும்பத்தோடு பாட வேண்டும் என்பது எனது கொள்கை. எனது வீட்டில் நாங்கள் இதை செயல்படுத்தி வருகின்றோம். மாலையில் 7.15 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் உவாி அருளமிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோவிலில் புஜை நடக்கும்.அதே நேரத்தில் எனது வீட்டில் நாங்கள் 4 போ்களும் எதேனும் ஒரு நாமாவளி சொல்லி விட்டு பின் சிவபுராணம் கூட்டாக பாடி பிராா்த்தனையை முடித்துக் கொள்வோம். கடந்த 18 வருடங்களாக இதை செய்து வருகின்றேன். தற்சமயம் கூடுதலாக பாடல்களை படித்து வருகின்றோம்.எனக்கு வழிகாட்டி ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நடத்தும் அந்தா் யோகம் மற்றும் ஸ்ரீநாராயணகுருவின் நடவடிக்கைகள்தாம்.இப்படி நாம் ஆரம்பித்தால் மதச்சுதந்திரமும“ பாதிக்கப்படாது.அவரவர்களின் தனிப்பட்ட கலாச்சாரமும் பாதிக்கப்படாது. கிணற்றுக்கு தூா் வாருவதுபோல் நமது சமயத்திலும் தூா் வாரப்பட வேண்டும்.தாங்களும் தங்கள் ஊாில் இப்படி ஒரு திட்டத்தை அனைத்து வீடுகளிலும் செயல்படுத்தலாமே.வைணவராக இருப்பின் வேறு பொருத்தமான பாடல்களை தோ்வு செய்து கொள்ளலாம். எனது வழிபாட்டில் சைவ-வைணவ பேதம் கிடையாது.

  62. 40 ஆண்டுகளுக்கு முன்னா் எனது வாழிவில் நடந்த சம்பவம்.எனது உறவினா் ஒருவா் பணக்காரராக இருந்தாா். இவரது மூத்த மகள் வயதுக்கு வந்த சடங்கு விழா ஒரு பிரமாண்டமான விழாவாக கச்சோி பலவகை சைவ அசைவ உணவுவகைகள் என்று அப்படி ஒரு சாதனை. ஊரே மெச்சி பல நாட்கள் பேசப்பட்டது. அந்த சடங்கு வீட்டில்தான் முதல் முதலீல் சக்தி வாய்ந்த மொ்க்குாி விளக்கை நான் பாா்த்து அதிசயத்தேன்.
    விதி விளையாடியது.அந்த குடும்பத்து பொருளாதாரம் முற்றிலும் அழிந்து விட்டது.4 பெண்களைப் பெற்ற புண்ணியவான் முட்டாள்தனமாக பெற்ற கடனுக்கு பல சொத்துக்கள் ஏலத்தில் போனது. தகப்பன் இறந்துவிட்டாா்.ஆண் மக்கள் 4 போ்கள்.உழைப்பு என்றால் என்ன வென்று அறியாதவா்கள்.மூத்த மகளுக்கு ஒரு ஏழை விவசாயி மகனுக்கும் திருமணம்.பெண் வீட்டில் குத்து விளக்கை ஏற்றி அதன் முன்னிலையில் சிறிய மஞ்சள் கயிற்றில் தங்க தாலி டாலா் மாட்டப்பட்ட தாலியை கட்டி மணமகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாா் மணமகன். குடியிருந்தவா்கள் மொத்தம் 30 போ்கள். 9ம்வகுப்பு படித்த நானும் அதில் ஒருவன். இன்று மேற்படி மணமக்கள் நியாயமாக முறையில் முன்னேற்றம் பெற்று சிறப்பாக வாழ்ந்து வருகின்றாா்கள்.
    இதே திருமணத்தை கேரளத்தில் ஈழவா் வீட்டில் நடந்தது. ஈழவ நண்பா் பெரும் கோடீஸ்வரா். திருமணத்தில் மணமேடையில் குத்து விளக்கு நடுநாயகமாக அலங்கிாிக்கப்பட்டு இருந்தது. மணமக்களின் கைபிடித்து உறவினா் கொடுத்து, 3 முறை குத்து விளக்கை வலம் வந்து தாலி கட்டீனாா்கள்.ஒரு வேளை உணவு. திருமணம் முடிந்தது. குத்து விளக்கை சாட்டியாக வைத்த திருமணம் வறுமையின் காரணமாக நடைபெற்றது.அதே திருமணம் கேரளத்தில் கொள்கை அடிப்படையில் ஸ்ரீநாராயணகுரு அவா்கள் வகுத்த முறைப்படி நடைபெற்றது. நமது திருமணங்களும் இப்படி நடந்தால் என்ன பாவம் வந்து விடும். மாலை அது இது என்று பணம் விரயம்.திருமணம் நடத்த பல லட்சம். காலியாகின்றது.

  63. கேரளதிருமணத்தில் மணமக்கள் புமாலை அணிந்து இருந்தாா்கள். திருமணமேடை கோலம் போடப்பட்டு நிறைநாளி பழங்கள் புரணகும்பம் ஆகியவை மங்கலப் பொருட்கள் அலங்காித்தது.ஹோமம் , அய்யா் கிடையாது.தனியாக புரோகிதரும் கிடையாது.அவனவன் வீட்டு நிா்வாகம்-திருமணம் அவா்களால் முடிக்கப்பட்டது. தன்கையே தனக்குதவி Self reliance self help என்பது கொள்கை. சாியானதுதானே!

  64. திரு மீரான் சாஹிப் , எனது பதிவில் நான் சுட்டிக்காட்டியிருப்பது எந்த மதத்திலும் பல்வேறு பிரிவுகள் உள்ளன என்பதால் அவர்கள் யாருமே தங்கள் பண்டிகையை ஒரே இடத்தில் , அதாவது ஒரே கோயில், ஒரே மசூதி, அல்லது ஒரே மாதா கோயில் அல்லது ஒரே சர்ச்சில் கொண்டாடுவது என்பது வழக்கத்தில் இல்லை. எனவே இந்துக்கள் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் பண்டிகை கொண்டாடினால் கலந்து கொள்கிறேன் என்று சொல்வது ஒரு முழு போலித்தனமான மற்றும் மோசடியான விளக்கம்.கட்டுமரத்தின் அந்த தவறான விளக்கத்தினை சுட்டிக் காட்டுவதற்கு தான் எனது பதிவில் முயன்றுள்ளேன். எனது பதிவில் பொய் எதுவும் இல்லை. இஸ்லாத்தில் உள்ள பிரிவுகள் எல்லோருமே அறிந்தவை. இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்பதும் தவறான கருத்து. முகம்மது மீரான் அவர்கள் சொல்லியிருப்பது போல, மதம் பிடிக்காவிட்டால் விலகி செல்ல , இஸ்லாத்தில் உடனே ஜிஹாத் பண்ணிவிடுவது வழக்கமாகி பல காலம் ஆகிவிட்டது. இஸ்லாத்தை பின்பற்றும் ஒருவர் பிற மதத்துக்கு மதம் மாறினால் அவர் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை தாக்குதல்கள் ஆகியவை பற்றி உலகே அறியும். உண்மை இப்படி இருக்க, இஸ்லாத்தை பற்றி அறிய திரு மீரான் சாஹிப் அவர்கள் இறையில்லா இஸ்லாம் போன்ற உண்மையான இணைய தளத்தை படித்து உண்மைகளையும் மோசடிகளையும் பிரித்து அறிவது நல்லது.

    ஏன் பாகிஸ்தானிலும், பிற இஸ்லாமிய நாடுகளிலும் வெள்ளிக்கிழமை தோறும் ஷியா முஸ்லீம் மசூதிகளில் சன்னி வஹாபிய தீவிரவாதிகள் தற்கொலைப்படையாக மாறி ஷியா முஸ்லீம்களை வாரா வாரம் கொன்று குவிக்கிறார்கள் ? அஹமதியாக்கள் கதி என்ன ? சன்னி முஸ்லீம் நாடுகள் பெரும்பாலானவற்றில் அஹமதியாக்கள் வேட்டையாடி கொல்லப்பட்டனர்.

    ஒன்றுக்கு மேற்பட்ட குரான்கள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டு, ஒரு காலிபாவின் ஆட்சிக் காலத்தில் , ஒரே ஒரு குரானை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கொளுத்தினார்கள் என்பது வரலாறு. ஹதீஸ்களை படித்துவிட்டு , கருத்து பதிவு செய்யுங்கள். இஸ்லாமிய வரலாறும், இஸ்லாமிய சட்டங்களும் படித்தவர்கள் இந்துக்களில் தான் அதிகம்.

  65. அத்விகா அவர்களே…

    மதங்களில் பல்வேறு உள்ளது என்பதும் இஸ்லாத்திலும் உள்ளது என்பதையும் நான் ஒத்துக்கொண்டிருக்கிறேன்
    அதற்க்கான காரணங்களையும் நான் விளக்கத்தயார்

    நான் தெளிவாக சாதிக்கும் பிரிவுக்கும் உண்டான வேறுபாடுகளை உதாரணம் கொண்டு விளக்கிய பிறகும்
    புரியாத மாதிரி இரண்டையும் போட்டு குழப்புவது
    “இஸ்லாத்திலும் ஜாதி உண்டு இஸ்லாத்திலும் உண்டு”
    என்று சொன்னதையே சொல்லுவது
    இதனாலெல்லாம் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை..
    இது உங்களுக்கே நட்டமாக முடியும்
    ஜாதி என்ற அரக்கனை அழிக்காமல் இந்து மதத்திற்க்கு விடிவில்லை என்று
    இந்துமத பெரியோர்களே சொன்ன பிறகும்
    “இஸ்லாத்தில் ஜாதி இருக்கிறது”என்று பொய் சொல்லி தப்பித்தால் பலவீனம் உங்களுக்கே…
    அடுத்து பள்ளிவாசலில் குண்டுவைக்கிறார்களே..
    பள்ளிவாசல்களில் குண்டு வைப்பவனின் லட்சணம் என்ன
    இஸ்லாம் பற்றி பேசும் போது சம்மந்தமில்லாமல் குண்டு வைப்பவனுக்கு ஏன் போகிறீர்கள்
    இப்போது குண்டு வைப்பவனை பற்றியா பேசிக்கொண்டிருக்கிறோம்…..
    குண்டு வைக்கிற கோழை மனித இனத்திற்க்கே அப்பாற்பட்டவன் எல்லா மதத்திலும் இந்த மதவெறி நாய்கள் இருக்கின்றது அவைகள் அனைவராலும் அப்புறப்படுத்தப்பட வேண்டியவைகள்..

    நாம் இங்கே பண்டிகை பற்றியும் ஜாதி பற்றியும் தானே பேசிக்கொண்டிருந்தோம்….
    எதற்க்கு சம்மந்தமில்லாமல் குண்டு அஹமதியா என்று அலைகிறீர்கள்
    நான் தெளிவாக சொல்கிறேன்
    ஷியா சன்னி அகமதியா என்பவையெல்லாம்
    அரசியல் மற்றும் சாமியார் மோகம் கொண்டவர்களால் உண்டான பிரிவுகள்
    இவை ஒருபோதும் ஜாதி அல்ல ஜாதி அல்ல
    ஜாதி என்பது பிறப்பால் கட்டமைக்கப்பட்டு உயர்ந்தோன் தாழ்ந்தோன் புனிதன் அசுத்தமானவன் என்று பிரிக்கப்பட்டு தொடரப்படுகிற அநீதி.
    இதை ஒத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு நல்லது
    திசை திருப்பாதீர்கள்
    இஸ்லாத்தைப்பற்றி அடிப்படையே தெரியாமல் உளறிக்கொண்டு எனக்கு வந்து என் மார்க்கத்தை பற்றி பாடம் எடுக்காதீர்கள்
    என்ன பொருளாசையும் உலகாசையும் எங்களை இம்மியளவும் எங்களை எங்கள் மார்க்கத்திலிருந்து நகர்த்தி வைத்திட முடியும்
    தெளிவோடு கொள்கையை ஏற்று வாழ்பவர்கள் நாங்கள்

  66. Meeran sahib,

    There are caste differences in islam. The only difference us that you do not use the word “caste”, instead the word “sect” is used. But the meaning is the same. It is not only just shias & sunnis.

    Right from the place of worship, this is visible. A friend of mine, who is a shia says that women are allowed to worship in their mosque. How many sects allow this?

    Also, how many marriage alliances happen between sects?

    I agree that caste differences are there in hinduism. No one can deny. Right thinking hindus have long fought against such practices & continue to do so.

    Muslims refuse to do so. By blindly refusing to agree that there are several differences & evil practices in islam (triple talaq for instance), you are only deceiving yourselves.

    Even the interpretation of the Koran differs amongst different groups.

    Pls wake up before it is too late.

  67. நண்பா் மீரான் சாகிப் அவா்களே!

    இசுலாம் குறித்து எனது பதிவுகளுக்கு பதிலளிக்கவேண்டுகின்றேன். அவரது கடிதத்ததை அப்படியே வெளியிட தமிழ் இந்து வலைதளநிா்வாகியை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
    சாதி என்கின்ற அமைப்பு மாறிக் கொண்டுயிருக்கின்றது.தங்களுக்கு விளங்காது.
    காட்டுமிராண்டியாக இருந்த மனிதன் படிப்படியாக கலாச்சாரமற்றும் அனைத்து துறைகளிலும் பாிணாமமாக மாறி வருகின்றாான். இதன் பலநிலைகள்தான் சாதி அமைப்பு. கலாச்சாரம் பண்பாடு பாிணாமம் தொடர ஆவன செய்ய வேண்டும். இந்து சமூகத்தில் அதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.இதில் அவசரம் காட்ட முடியாது.சாதி அமைப்பில் இருக்கும் குறைபாடுகளை நீக்க 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஸ்ரீகௌதமன் என்ற புத்தா் செய்யாததையா நீங்கள் செய்து விடுவீா்கள்.2000 ஆண்டுகளுக்கு முன்னா் பிறந்த திருவள்ளுவா் சொல்லாததை வேறு யாா் சொல்ல முடியும் ? முஸ்லீம்கள் ஆட்சிதான் சாதி அமைப்புகள் கொடுரமாக மாறியதற்கு காரணம்.

  68. திரு சஞ்சேய்
    நான் ஆங்கில பாண்டியத்யம் பெற்றவனல்ல
    நான் புரிந்து கொண்ட வகையில் எப்படியாவது
    இஸ்லாத்தில் ஜாதி இருக்கிறது என்று காட்டுகிற முனைப்பு உங்களிடம் தெரிகிறது.
    மீண்டும் மீண்டும் எதை எதையோ கூறி இஸ்லாத்தில் ஜாதியை நிலைநாட்ட பார்க்கிறீர்கள்
    முதலில் புரிந்து கொள்ளுங்கள் இஸ்லாம் என்பது பிறப்பினால் வருவது அல்ல.
    அது கொள்கை சார்ந்தது நம்பிக்கை சார்ந்தது

    நீங்கள் சொல்கிற ஷியா என்பதின் அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள்
    ஷியா என்பது ஒரு பாரசீக வார்த்தை
    ஷியா என்பது முழுமையான சொல் அல்ல
    ஷிய்யத்துல் அலி என்பதின் ஒரு பிரிவே ஷியா
    அதாவது ஷியா என்பது கட்சி என்று அர்த்தம்
    யார் கட்சி என்ன கட்சி என்றால்
    அலியின் கட்சி.
    யார் இந்த அலி?
    முஹம்மத் நபியின் மருமகன் ப்ளஸ் பெரியப்பா மகன் தம்பி.
    இவரின் மேல் ஒரு கூட்டத்திற்க்கு வரம்பு கடந்த குருட்டு பகதி
    இவர் ஒரு சிறந்த மனிதர் என்பதுதான் உலக முஸ்லிம்கள் அனைவரின் எண்ணமும் ஆனால் ஒரு தனி மனிதர் மேல் இதுபோன்ற வரம்பு கடந்த மரியாதை வைப்பதை இஸ்லாம் ஏற்பதில்லை
    இறைத்தூதராக நாங்கள் நம்பும் முஹம்மத் நபியையே வரம்பு கடந்து புகழ்வதையோ துதிப்பதையோ இஸ்லாம் தடுக்கிறது அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வரும்பொழுது எழுந்து நிற்பதையே தடுத்தார்
    காலில் விழ வந்தவர்களை கடுமையாய் கண்டித்து துரத்தினார்
    தான் ஒரு மனிதனே தனக்கு எந்த வகையிலும் இறைத்தன்மை கிடையாது தனக்குரிய ஒரே சிறப்பு தனக்கு இறைச்செய்தி வருகிறது என்பதே
    மனிதன் எல்லா நிலையிலும் மனிதனே
    மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டு எந்த மனிதனும் இல்லை
    இதுவே முஹம்மதின் வார்த்தை இதுவே இஸ்லாத்தின் கொள்கை
    இதனால்தான் இன்றுவரை முஹம்மத்நபிக்கு ஓவியம் இல்லை சிலை இல்லை மாலை இல்லை
    ஆனால் இந்த கட்டுப்பாடு தெரியாமல் தனிமனிதனை தலைக்கு மேல் தூக்கி ஒரு கூட்டம் துதிக்கும் பொழுது
    அது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையிலிருந்தே மாறிவிடுகிறது இதுதான் இந்த அலிகட்சி அதாவது ஷியா என்ற கூட்டத்திற்க்கும் நிகழ்ந்தது.
    இதற்க்கு அரசியலே பிரதான காரணமாய் இருந்தது.
    இந்த கூட்டம்தான் கர்பலா போர் துயரம் என்ற பெயரில்
    முகரம் மாதத்தில் மாரடித்து திரிகிறது.
    துக்கம் என்பது மூன்று நாட்களுக்கு மேல் அனுசரிக்க கூடாது என்பது உறுதியான நிலைப்பாடு
    இந்த கூட்டம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக துக்கம் அனுஷ்டிக்கிறது
    இதுமாதிரி பல விசயங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கும் காரியங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்
    இந்தியாவை ஆண்ட பல மன்னர்கள் இந்த ஷியா பிரிவைச்சேர்ந்தவர்களே..
    மீண்டும் சொல்கிறேன் இஸ்லாம் என்பது பிறப்பு சார்ந்தது அல்ல.
    கொள்கைச்சார்ந்தது.
    இப்படி அடிப்படை கொள்கையையே மாறிப்போனவர்களை நான் எப்படி கொள்கை சார்ந்து ஏற்றுக்கொள்ள முடியும்?

    திருமணம் என்பது கணவன் மனைவி சேர்ந்து தங்கள் குழந்தைகளை தங்கள் கொள்கைச்சார்ந்து வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமையுள்ள பந்தம்.
    இதில் நான் ஒரு கொள்கையும் என் மனைவி ஒரு கொள்கையும் கொண்டவளாய் இருந்தால் என் குழந்தைகளை எந்த முறையில் வளர்ப்பது
    எங்களுக்கு உலகவாழ்க்கை சதம் அல்ல.
    மறுமைக்கே இம்மை என்பதே எங்கள் கொள்கை
    அதில் சரியாக இருக்க வேண்டிய கடமை உள்ளவர்களாக நாங்கள் இருக்கிறோம்
    மற்றபடி இது அல்லாத உலக விசயங்களில் நல்ல உறவோடும் நட்போடும் அன்போடும் பிணைந்து இருப்பதில் எந்த தவறும் அப்படியே இருக்கிறோம்
    இதில் விரோதம் பாராட்டி குண்டு வைக்கும் வரை போவது சில அரசியல் மிருகங்களும் அதுகளின் கைக்கூலிகளும்தான்

  69. Meeran Sahib,

    Thanks for the clarification. U may not use the word “caste”.

    By whatever name u call it, you have agreed that there are differences between the sects in the mode of worship.

    The shias have a different interpretation altogether. They believe Ali is the true heir of the prophet but he has not been given the recognition & respect he deserves.

    The fact of the matter if tis – there are numerous differences of opinion in the way the Koran itself is interpreted.

    Also, the use of violence is not confined to one particular sect.

    I repeat – pls introspect & try to obliterate the differences instead of justifying the various atrocities that are committed in the name of Islam.

  70. திரு சஞ்ஞை அவர்களே..
    திரு அன்புராஜ் அவர்களுக்கு நான் இட்ட மறுமொழி இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.
    அதன் நகலை நான் எடுத்து வைத்திருக்கிறேன்
    அது பதிவிடப்படுமே கேட்டு சொல்லுங்கள இது நியாயமற்றது.
    இது ஒரு கருத்துக்கொலை.இதற்க்கு முன்பும் எனக்கு இப்படி ஆகியிருக்கிறது.

    நான் தேவையில்லாமல் உங்கள் மத விவகாரத்தில் மூக்கு நுழைத்ததில்லை.
    கண்ணியமற்ற வார்த்தைகளையும் பயன்படுத்துவதில்லை

    கருணாநிதி தீபாவளிவிழாவில் கலந்து கொள்ளாமைக்கு
    “இஸ்லாத்தில் ஜாதி இல்லையா”
    என்று சொன்னதால்தான் நான் உள் நுழைந்து என் கருத்தை தெரிவித்தேன்
    இதற்க்கு வழக்கம் போல்,ஷியா சன்னி அகமதியா
    என்று போனார்கள்…
    அதற்க்கும் என் பதிலை தர்க்கரீதியாகவே அளிக்கிறேன்
    நான் ஒருபோதும் கிளை தாவவோ அல்லது பதுங்கவோ இல்லை.
    அப்படி இருந்தும் ஏன் என் கருத்து நீக்கப்படுகிறது..

    இப்போதும் அன்புராஜ் அவர்களின் நியாயமான கேள்விக்கு ஆதாரப்பூர்வமாய் பதில் அளித்தேன்
    அதில் குறையிருந்தால் அவரோ மற்றவர்களோ மறுங்கள்
    என்னை அம்பலப்படுத்துங்கள்
    அதைவிட்டு கருத்தை அடியோடு நீக்குவது
    உங்கள் தரப்பின் பலவீனத்தை காட்டுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது..

    அதோடு, திரு சஞ்ஞை ஆங்கிலத்தை என்னால்
    முழுமையாக விளங்க முடியவில்லை
    நான் ஒரு வியாபாரி.
    பத்தாம் வகுப்புவரை தமிழ்வழியின்தான் என் கல்வி.
    தமிழில் விவாதித்தால் நன்றாக இருக்கும்
    தளத்தின் பெயரே “தமிழரின் தாய் மதம்’
    இதில் ஏன் ஆங்கிலம்

  71. ஜெனாப் மீரான் சாஹேப் நலமா

    \\ meeran sahib on October 29, 2017 at 1:05 pm
    திரு லக்ஷமணகுமார்…

    உங்களிடம் இருப்பது வெறும் மதக்காழ்ப்பு…

    தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்
    வைகரை நேரத்திற்க்கான தொழுகை அழைப்பு என்பது அதிகபட்சம் மூன்று நிமிடத்தில் முடியக்கூடிய ஒன்று.. \\

    ஜெனாப் அவர்கள் யார் இந்த லக்ஷமணகுமார்? அவர் எப்போது கருத்துப் பகிர்ந்தார்? அதுவும் தொழுகை சம்பந்தமாக இந்த லக்ஷமண குமார் எப்போது கருத்துப் பகிர்ந்தார் என்று நான் தேடோ தேடோ என்று தேடிக்கொண்டிருக்கிறேன் 🙂

    சாஹேப் ஜீ இது தாங்கள் பகிர்ந்த கருத்து என்பதால் லக்ஷமணகுமார் என்று இந்த தளத்தில் ஒரு அன்பர் என்று கருத்துப் பகிர்ந்தார்? தொழுகை சம்பந்தமாக லக்ஷமண குமார் அப்படி என்னத் தான் கருத்துப் பகிர்ந்தார் என்று தாங்கள் பகிர்ந்தால் இந்த படுபீதியான ஸஸ்பென்ஸ் முடிவு பெறுமே.

    அவுலியா குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களது ஒரு அருமையான கீதம் தங்களது பார்வைக்கு.

    திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
    தீன் கூறி நிற்பர் கோடி!

    சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
    ஜெய ஜெயா வென்பர் கோடி!

    ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
    அணி அணியாய் நிற்பர் கோடி!

    அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
    அனைந்தருகில் நிற்பர் கோடி!

    மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
    மன்னரே என்பர் கோடி!

    வசனித்து நிற்கவே கொழுவீற்றிருக்குமும்
    மகிமை சொல வாயுமுண்டோ

    தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
    தவராஜ செம்மேருவே!

    தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
    ஷாஹுல் ஹமீதரசரே!

    தவராஜ செம்மேரு என குணங்குடியார் மெச்சும் ஷாஹுல்ஹமீரதாசரை நீவிர் நினைக்க சித்தம் தெளிவு பெறும். அப்பால நீங்கள் தமிழ் ஹிந்து தளத்தில் பகிர்ந்த லக்ஷமணகுமார் ஸஸ்பென்ஸையும் லகுவாக உடைக்க முடியும் 🙂 🙂 🙂

    குதா ஹாஃபீஸ்

  72. பேரன்பிற்குரிய பெருந்தகை பீ எசு அவர்கள் சமூஹத்திற்கு

    அடியேன் தெண்டனிட்டு விக்ஞாபனம் செய்துகொள்வது யாதெனில் .

    \\ மாற்றக்கூடாதவை அல்லது மாறாது என்பது இஸ்லாமியத்தனம். 5000 ஆண்டுகளாக்கு முன் தோன்றிய வேதகால இந்துமதம் புராணங்களும் சாஸ்திரங்களும் படைக்கப்பட்ட குப்தர்கள் காலத்தில் மாறியது \\

    தேவரீர் செப்ப வருவது என்னவென்பது பரலோகத்தில் இருக்கும் அந்த பரமபிதவையன்றி வேறொருவருக்கும் பிரியாது போலிருக்கு ஸ்வாமின்.

    அது என்னா புராணம் மற்றும் சாஸ்த்ரம் ஸ்வாமின்? 5000 வருஷத்துக்கு மின்னாடி தோன்றியது குப்தர்கள் காலத்தில் மாறியது. அதுக்கு என்னாங்க பேரு திலகாஷ்ட மஹிஷபந்தனமா? கொஞ்சம் தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு தெளிவு செய்யுங்கள்.

    கையால மூக்கத் தொடணும்னா தேவரீர் முதுகுக்கு பின்னாடி கையக் கொண்டுபோயி உச்சந்தலையிலிருந்து கீழே இறக்குவீர்கள். அப்படியில்லாமல் அது இன்னா சாஸ்த்ரம் இன்னா புராணம் 5000 வர்ஷம் மின்னாடி இருந்தது. குப்தர் காலத்துல மாறிச்சுன்னு சொல்றத தெளிவு செய்யுங்க சாமி. நுப்பத்தஞ்சு வரி எழுத வேண்டாம். ஒரே வரி அந்த சாஸ்த்ரங்கள் மற்றும் புராணங்களின் பெயர் மட்டும் சொல்லுங்கள். போதும்.

    \\ மாற்றக்கூடாதவை அல்லது மாறாது என்பது இஸ்லாமியத்தனம். \\

    மாறுவது உலகம். அது பெரிதல்ல.

    என்ன மாத்தணும். எப்படி மாத்தணும்னு நீங்க சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    ஹிந்துக்கோவிலில்………….சிவாலயத்தில் அல்லது ஒரு விண்ணகரத்தில்………….தமிழக அரசின் அறமற்ற துறை………… சிற்பங்களால் நிறைந்த புராதனமான கதவைப் பெயர்த்தெடுத்து புதியதானதொரு மரக்கதவு பதிந்து ………….அதில் ராமர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த கயவன்…………. உங்கள் நாயகன் …………… ஆதிக்க ஜாதி இனவெறியரான ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் சித்திரம் மற்றும் நீங்கள் தளம் தளமா விதந்தோதும் ரெவரெண்டு புனித தெரசாள் சித்திரம் …………. இவற்றை கதவு மரத்தில் செதுக்கணும் இது தானே உங்களுக்குத் தேவையான மாற்றம்?

    இந்தக் கண்றாவியையெல்லாம் தான் ஒன்னு விடாம நீங்க வெவ்வேறு பேரில் இந்த தளத்தில் ஆதரித்திருக்கிறீர்களே.

    இந்த மாற்றத்தையெல்லாம் தேவரீர் ஆதரிப்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ராமர் படத்துக்கு ராமசாமி நாயக்கர் செருப்பு மாலை போட்டதையும் ஆதரித்து விட்டு வைஷ்ணவன் என்றும் சொல்லிக்கொள்வது தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

  73. தண்டனிட்டு விண்ணப்பித்தாலும் இந்து மதத்தில் மாற்றம் கூடாதென்பது இசுலாமியத்தனமே அப்படியே மாற்றம் க்ருஸ்னகுமார் அப்ப்ரூவலில்தான் செய்யவேண்டுமெனப்தௌ அதைவிட இசுலாமியத்தனம்

    முசுலீம் பக்கீரை கடவுளாக கும்பிட்டு சஃபிக்களை ஆலாபனம் செய்பவர்கள் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் அவர்கள் உள்ளத்தில் இருக்கும் இசுலாமியத்தனத்தை இந்துமதத்துக்கும் கொண்டு வர ஆசைப்படுகிறார்கள்

    இந்துப்பெயர்களை சூட்டிக்கொண்டு கிருத்துவர்களாக இருப்பவர்களைப்போன்று இந்து என்று சொல்லிக்கொள்ளும் இசுலாமியர்களையும் பார்க்கிறோம்

  74. அன்பர் பீ எசு அவர்கள் சமூஹத்திற்கு தெண்டனிட்டு செய்யும் விக்ஞாபனம் யாதெனில் எப்போது பொய் சொல்லுவதை நிறுத்தப்போகிறீர்கள்? எப்போது உங்களுக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாத விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கதையளப்பதை நிறுத்துவீர்கள்?

    பெயரில் மட்டும் தான் பொய்கள் சொல்லுவீர்கள் என்றால் கருத்திலும் கூடவா?

    \\ இந்து மதத்தில் மாற்றம் கூடாதென்பது இசுலாமியத்தனமே \\

    நான் ஹிந்து மதத்தில் மாற்றம் கூடாதுன்னு எங்குமே சொல்லவில்லையே. அப்படி சொல்லுவது தேவரீரின் பச்சைப்பொய். தேவரீர் எம்பெருமானார் ராமானுஜன் காட்டிய வழியை அது இன்னது என்று கூட தெரியாமல் மாற்றத்துக்கு கதையளப்பது இழிவானது. முதலில் பாஞ்சராத்ரத்துக்கும் பஞ்சகல்யாணிக்கும் இடையேயான வித்யாசத்தை அறிந்து கொள்ளுங்கள். அப்புறம் எம்பெருமானார் காட்டிய வழிமுறைகளைப் பற்றி விமர்சனம் செய்யப்புகலாம். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

    ஹிந்து மதம் என்பது வைதிக சனாதன தர்மம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் இவை அனைத்தும் உள்ளடக்கியது. இவை ஒவ்வொன்றிலும் மாற்றங்கள் சமயப்பெரியோர்களால் சமயத்தில் ஆழ்ந்த புரிதல் உள்ள பெரியோர்களால் சமயநூற்களின் வழியொட்டி அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

    கோவில் என்னும் ஒரு ஸ்தாபனத்தையே உருத்தெரியாமல் அழித்தொழிக்கும் தேவரீரது ராமசாமி நாயக்கத்தனமான மாற்றம் தான் ஹிந்துக்களாகிய எங்களுக்கு ஏற்புடையது அன்று. நீங்கள் அப்படி மாற்றம் என்ற பெயரில் வேறு பொய்ப்பெயரில் ஆதரித்துள்ள சில மற்றும் தீராவிட செயல்பாடுகளின் பாற்பட்ட சில உதாரணங்கள் :-

    ராமர் படத்துக்கு செருப்பு மாலை போடுதல். கோவில் கதவைப் பெயர்த்தெடுத்து புதுக்கதவு பொருத்தி அதில் தேவரீர் விதந்தோதும் ராமசாமி நாயக்கர் மற்றும் உங்களது ஆதர்சம் ரெவரெண்டு புனித தெரசாள் இவர்களின் படத்தைப் பொருத்துதல்………..சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் மண்வீச்சடித்து அழித்தொழித்தல்……..குளங்களை உங்களது தீராவிட கும்பல்கள் திருடி அவற்றைத் தூர்த்து நாசம் செய்து ரியல் எஸ்டேட் ப்ராபர்ட்டியாக்குதல்…………. இது போன்ற அசிங்கமான மாற்றங்களை ஹிந்துக்களாகிய நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்.

    அதற்கெல்லாம் தேவரீர் வேறு இடங்களில் கடை கட்ட வேண்டும். தமிழ் ஹிந்துவில் இல்லை.

    \\ க்ருஸ்னகுமார் அப்ப்ரூவலில்தான் செய்யவேண்டுமென \\

    நான் எங்குமே அப்படி சொல்லவில்லை. சொல்லுவதில் பொருளுமில்லை. அது தேவரீரின் பச்சைப்புளுகு மட்டிலுமே. எனக்குத் தெரியாத விஷயத்தில் தேவரீரைப் போல வெட்டிவாதமும் செய்யவும் மாட்டேன்.

    \\ முசுலீம் பக்கீரை கடவுளாக கும்பிட்டு சஃபிக்களை ஆலாபனம் செய்பவர்கள் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் \\

    ம்………….நேரடியாகப் பொய் சொல்லுவது போதாதென்று மறைமுகமாகப் பொய்யா? தமிழ் ஹிந்து தள வாசகர்கள் யாரும் அப்படிப்பட்டவர் இல்லை. என்னுடைய கருத்துக்களும் நீங்கள் பல பலப் பொய்ப்பெயர்களில் இங்கு பகிர்ந்துள்ள கருத்துக்களும் எல்லோருக்கும் தெரியும்.

    மேற்கண்ட கருத்து தேவரீர் என்னைக்குறித்து சொல்லுவதென்றால்…………. நான் இதுவரை எந்த முஸ்லீம் ஃபக்கீரையும் கடவுளாக கும்பிட்டதில்லை. மேலும் எனது ஹிந்து சஹோதரர்கள் அப்படி யாராவது கும்பிட்டால் அவர்களுக்கு நிச்சயம் புத்திமதி சொல்லித் திருத்துவேன். பொய் சொல்லலாகாது பாப்பான்னு பாரதியார் குழந்தைகளுக்கு மட்டிலும் தான் பாடியிருக்கிறார் என்று நினைக்காதீர்கள். நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பொய் சொல்லுதல் பாபம்.

    எமது இஸ்லாமிய சஹோதரர்கள் யாருமே கூட எந்த ஒரு ஃபக்கீரையும் கடவுளாக வணங்குவதில்லை.

    இஸ்லாமிய ஃபக்கீர்களை எந்த ஒரு ஹிந்துவும் எந்த ஒரு இஸ்லாமியரும் கடவுளாகக் கும்பிடுவதில்லை. ஆனால் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ கூசாமல் அப்படி யாராவது செய்வது போலப்புளுகுவார். எதற்கு?

    கூசாமல் 5000 வருஷத்துக்கு முந்திய சாஸ்த்ரம் அது இதுன்னு புளுகியுள்ளீர்களே……….அதை சாய்ஸ்ல விட்டாச்சா 🙂 🙂 🙂

    அதப்பத்தி சவுண்டே காணோம் 🙂

  75. க்ருஷ்ணகுமார் on November 20, 2017 at 1:23 pm
    அன்பர் பீ எசு அவர்கள் சமூஹத்திற்கு தெண்டனிட்டு செய்யும் விக்ஞாபனம் யாதெனில் எப்போது பொய் சொல்லுவதை நிறுத்தப்போகிறீர்கள்? எப்போது உங்களுக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாத விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கதையளப்பதை நிறுத்துவீர்கள்?–அருமையான பதிலுக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *