ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்

இடையறாத தியானத்தால்
வசப்பட்ட மனத்தினால்,
குணங்களும் செய்கைகளுமற்ற
பரஞ்சோதி ஒன்று உள்ளதாமே,
அதனை யோகிகள் காண்பார்களாகில்,
காணட்டும்.
ஆனால் நமக்கோ
காளிந்தியின் மணல்திட்டுகளில் ஓடுகிறானே
நீலச்சிறுவன்
அவனே என்றென்றும்
விழிகளுக்கு அதிசயமாய்
விளங்கட்டும்.

– ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி (பகவத்கீதை உரையின் இடையில் வரும் பாடல்)

ध्यानाभ्यासवशीकृतेन मनसा तन्निर्गुणं निष्क्रियं
ज्योतिः किञ्चन योगिनो यदि परं पश्यन्ति पश्यन्तु ते ।
अस्माकं तु तदेव लोचनचमत्काराय भूयाच्चिरं
कालिन्दीपुलिनोदरे किमपि यन्नीलं महो धावति ॥

த்⁴யாநாப்⁴யாஸவஶீக்ருʼதேந மநஸா தந்நிர்கு³ணம்ʼ நிஷ்க்ரியம்ʼ
ஜ்யோதி​: கிஞ்சந யோகி³நோ யதி³ பரம்ʼ பஶ்யந்தி பஶ்யந்து தே |
அஸ்மாகம்ʼ து ததே³வ லோசநசமத்காராய பூ⁴யாச்சிரம்ʼ
காலிந்தீ³புலிநோத³ரே கிமபி யந்நீலம்ʼ மஹோ தா⁴வதி ||

பிற்கால அத்வைத வேதாந்த ஆசான்களில் மிக முக்கியமானவர் முகலாய மன்னர் அக்பரின் ஆட்சிக்காலத்தில் (16ம் நூற்றாண்டு) வாழ்ந்த ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி. வங்கத்தின் மாபெரும் தர்க்க சாஸ்திர விற்பன்னராக இருந்து பின்பு துறவு பூண்டு வேதாந்த விசாரத்திலும் கிருஷ்ண பக்தியிலும் ஆழ்ந்து ஜீவன் முக்தராகத் திகழ்ந்தார். தொடக்க காலத்தில் இவர் சைதன்ய மகாபிரபுவின் கௌடிய வைஷ்ணவ பக்தி மரபால் ஈர்க்கப்பட்டு துவைத (இருமைக் கோட்பாடு) கொள்கைகளைக் கற்றார். பின்பு ஞானத்தேடலின் பாதையில் அத்வைதியாக நிலைபெற்றார். துவைதிகளின் சிக்கலான தர்க்கங்களுக்கு ‘அத்வைத ஸித்தி’ முதலான தமது நூல்களின் மூலமாக கூர்மையான மறுப்புகளை நிறுவியது இவரது முக்கியமான பங்களிப்பாகும். பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதம், சங்கரரின் ஆத்மபோதம் முதலான நூல்களுக்கு சிறப்பான உரைகளையும், அற்புதமான கிருஷ்ண பக்திக் கவிதைகளையும் இவர் படைத்திருக்கிறார். பக்தி யோகத்தை முழுவதுமாக அத்வைத தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு நிலைநிறுத்தியவர். தனது வாழ்நாளின் பெரும்பகுதி காசித் தலத்தில் வாழ்ந்தார். ஹிந்தி மொழியில் ராமாயணம் இயற்றிய துளசிதாசர் உட்பட பல அருளாளர்களுக்கும் சாதுக்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினார்.

மேற்கூறிய பாடல் நிர்குண பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை, கண்டனம் செய்யவில்லை, சண்டைக்குப் போகவுமில்லை. யோகிகளே நீங்கள் அதை வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, எனக்கு கோபாலனின் தரிசனமே போதும் என்கிறது.  சகுணம் – நிர்க்குணம் என்ற முரணையே இவ்வாறு சமன்வயப் படுத்தும் ஆன்மீக நெறி, சிவன் விஷ்ணு என்ற  இரண்டு சகுண மூர்த்திகளுக்கிடையில் வேறுபாடுகளைக் காணுமா என்ன? அதனால் தீவிர கிருஷ்ண பக்தராகத் திகழ்ந்தபோதும்  இவர் தத்துவ ரீதியாக சிவ-விஷ்ணு அபேதத்தை ஏற்றவர்.  புஷ்பதந்தர் சிவபெருமானைப் போற்றி அருளிய சிவ மஹிம்ன ஸ்தோத்திரத்திற்கு இவர் எழுதிய உரை அபாரமானது. அதில் ஒவ்வொரு சுலோகத்திற்கும் சிவனைப் போற்றும் வகையிலும் (ஹர பக்ஷே), விஷ்ணுவைப் போற்றும் வகையிலும் (ஹரி பக்ஷே) என்று இரண்டு விதமாகவும் உரையெழுதி இதனை நிறுவுகிறார்.  முதிர்ச்சியடைந்த ஞானிகளின் வாக்குகள் அனைத்தும் இதே போன்று உள்ளதை நாம் காண முடியும். வடநாட்டில் அத்வைதமும் கிருஷ்ண பக்தியும் இணைந்த ஆன்மீக நெறியைக் கடைப்பிடித்த இவரைப் போலவே, தென்னாட்டில் அத்வைதமும் சிவபக்தியும் இணைந்த ஆன்மீக நெறியை அப்பய்ய தீட்சிதர் கடைப்பிடித்தார் என்று கூறுவார்கள்.

ஸ்ரீ சங்கரரின் உரைகளிலும் கோவிந்தாஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் போன்ற அழகிய துதிப்பாடல்களிலும் இந்த இணைவை நாம் காண முடியும். அதன் நீட்சியே மதுசூதன சரஸ்வதியின் நெறியாகும்.

****

மேற்கண்ட பதிவை எனது ஃபேஸ்புக்கில் எழுதி,  கோவிந்தாஷ்டகத்தின் முதல் பாடலின் மொழியாக்கத்தையும் அளித்திருந்தேன். அப்பதிவை வாசித்துப் பாராட்டிய  நண்பர் மோகன் ராமையா,  அஷ்டகம் முழுவதற்கும் தமிழில் மொழியாக்கமும் விளக்கமும் அளிக்குமாறு அன்புடன் கோரினார். அதைத் தொடர்ந்து நான் எழுதியதன்  முழுமையான தொகுப்பு இது.

(1) 

सत्यं ज्ञानमनन्तं नित्यमनाकाशं परमाकाशं
गोष्ठप्राङ्गणरिङ्खणलोलमनायासं परमायासम् ।
मायाकल्पितनानाकारमनाकारं भुवनाकारं
क्ष्मामानाथमनाथं प्रणमत गोविन्दं परमानन्दम् ॥

ஸத்யம்ʼ ஜ்ஞானமனந்தம்ʼ நித்யமனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ
கோ³ஷ்ட²ப்ராங்க³ண-ரிங்க²ணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் |
மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ பு⁴வனாகாரம்ʼ
க்ஷ்மாமாநாத²மநாத²ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம்
இடைவெளியற்றது (அனாகாசம்)
இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்)
எனும் பொருள்
மாட்டுத் தொழுவத்தில்
ஓடிவிளையாடிக் கொண்டிருக்கிறான்.
அனாயாசமானவன்
மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்).
தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும்
உருவமின்றியும்
உலகே உருவாகவும்
திகழ்வோன்.
ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும்
தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்)
பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை
வணங்குவீர்.

(2) 

मृत्स्नामत्सीहेति यशोदा-ताडन-शैशव सन्त्रासं
व्यादित-वक्त्रालोकित-लोकालोक-चतुर्दश-लोकालिम् ।
लोकत्रयपुर-मूलस्तम्भं लोकालोकमनालोकं
लोकेशं परमेशं प्रणमत गोविन्दं परमानन्दम् ॥

ம்ருʼத்ஸ்நாமத்ஸீஹேதி யஶோதா³-தாட³ந-ஶைஶவ ஸந்த்ராஸம்ʼ
வ்யாதி³த-வக்த்ராலோகித-லோகாலோக-சதுர்த³ஶ-லோகாலிம் |
லோகத்ரயபுர-மூலஸ்தம்ப⁴ம்ʼ லோகாலோகமநாலோகம்ʼ
லோகேஶம்ʼ பரமேஶம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||

இங்கு மண்ணைத் தின்கிறாயே என
யசோதை அடிக்க வருகையில்
குழந்தைப்பருவத்தின் பீதியை அடைந்தவன்.
திறந்த வாயில்
லோகாலோக பர்வதங்களுடன் கூடிய
பதினான்கு லோகங்களைக் காட்டியவன்.
மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன். 
உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்)
தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்)
லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும்
பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை
வணங்குவீர்.

புராணங்களின்படி, பதினான்கு உலகங்களில் ஒவ்வொரு உலகத்திற்கும் கிழக்கிலும் மேற்கிலும் உதய, அஸ்தமன பர்வதங்கள் உண்டு. அவற்றின் ஒருபுறம் ஒளியும் மறுபுறம் இருளும் உள்ளதால், அவை லோகாலோக பர்வதங்கள் என அழைக்கப் படுகின்றன. பாடலின் இரண்டாம் அடியில் பர்வதங்களைக் குறிக்கும் லோகாலோகம் என்ற சொல், அடுத்த அடியிலேயே பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனைச் சுட்டுமாறு வருகிறது – உலகங்கள் அனைத்திற்கும் ஒளியூட்டி தன்னொளியால் தானே பிரகாசிப்பவன் (லோகான் ஆலோகயதி ஸ்வாத்மபா4ஸா ப்ரகாஶயதி இதி லோகாலோக:). உலக இயக்கமனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அதில் பற்றுக் கொள்ளாது சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது வேதாந்த உட்பொருள்.

மூவுலகிற்கும் நிலைப்பொருளாக (அதிஷ்டானம்) விளங்கும் பிரம்மத்தின் சைதன்ய பிரகாசத்தினாலேயே அதனிடம் கற்பிக்கப் பட்டவையான மூன்று உலகங்களும் ஒளிபெறுகின்றன. கற்பிக்கப் பட்ட பொருள்களுக்கு தனியாக சொந்த இருப்பும் ஒளியும் கிடையாது.

அங்கு சூரியன் ஒளிர்வதில்லை
நிலவு நட்சத்திரங்கள் இல்லை
இந்த மின்னலும் ஓளிர்வதில்லை
எனில் நெருப்பிற்கு ஏது இடம்
அவன் ஒளிர்கையில்
அனைத்தும் பின்னொளிர்கின்றன
அவனது ஒளியினாலேயே
இவையனைத்தும் ஒளிர்கின்றன.

– கட உபநிஷதம் 2.5.9

(3) 

त्रैविष्टप-रिपु-वीरघ्नं क्षिति-भारघ्नं भव-रोगघ्नं
कैवल्यं नवनीताहारमनाहारं भुवनाहारम् ।
वैमल्य-स्फुट-चेतोवृत्तिविशेषाभासमनाभासं
शैवं केवल-शान्तं प्रणमत गोविन्दं परमानन्दम् ॥

த்ரைவிஷ்டப-ரிபு-வீரக்⁴நம்ʼ க்ஷிதி-பா⁴ரக்⁴நம்ʼ ப⁴வ-ரோக³க்⁴நம்ʼ
கைவல்யம்ʼ நவநீதாஹாரமநாஹாரம்ʼ பு⁴வனாஹாரம் |
வைமல்ய-ஸ்பு²ட-சேதோவ்ருʼத்தி-விஶேஷாபா⁴ஸ-மநாபா⁴ஸம்ʼ
ஶைவம்ʼ கேவல-ஶாந்தம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

அமரர்பகையாம் அரக்கவீரரை அழிப்பவன் 
புவியின் பாரத்தை அழிப்பவன்
பிறவிப்பிணியை அழிப்பவன்
தானொருவனேயானவன் (கைவல்யம்) 
வெண்ணெய் உண்பவன் (நவநீதாஹாரம்)
உணவற்றவன் (அனாஹாரம்)
உலகனைத்தும் உண்பவன் (புவனாஹாரம்)
மாசற்றுத் தெளிந்து சிறந்த 
மனவெளியில் தோன்றுபவன்
தோற்றமற்றவன் 
மங்கள வடிவினன் (சைவம்) 
தனித்து மாறுபாடற்றிருப்பவன் (கேவல சாந்தம்) 
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை
வணங்குவீர். 

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் – பிறவிப்பிணிக்குக் காரணமான அக்ஞானத்தை குருவாக விளங்கி ஆத்மஞானம் எனும் மருந்தால் அழிப்பவன்.

அக்ஞானத்தினால் தோன்றும் பொய்ப்பொருள்கள் அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் மெய்ப்பொருள் – கைவல்யம்.

பசி, தாகம் முதலியவை பிறவியில் கட்டுண்ட ஜீவன் உடலுடன் கொள்ளும் அபிமானத்தால் ஏற்படுபவை. தளையற்ற பிரம்ம சொரூபத்திற்கு இவையேதும் இல்லை என்பதால் உணவற்றவன். ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டவன். ஒடுக்கத்தின் போது (பிரளயம்) உலகனைத்தும் அதன் நிலைப்பொருளாகிய (அதிஷ்டானம்) பிரம்மத்தில் சென்று ஒடுங்குவது உலகனைத்தையும் உண்பதாகக் கூறப்பட்டது.

மனவெளியில் தோன்றும் எண்ண அலைகள் சித்த வ்ருத்தி அல்லது சேதோ வ்ருத்தி எனப்படும். இவற்றை முழுவதுவாக அடக்குவதும் தடுப்பதுமே யோகம் (யோக3ஶ்சித்தவ்ருத்தி நிரோத4:) என்பது பதஞ்சலியின் முதல் சூத்திரம். இப்படி அனைத்து எண்ண அலைகளும் அடங்கிவிட்ட மனத்தில் பின்பு ஏதுமற்ற வெறுமையும் சூனியமும் தான் இருக்கும் என்பதே பதஞ்சலி யோகம் மற்றும் பௌத்தம், ஜைனம் முதலான அவைதிக தரிசனங்களின் கோட்பாடு. அது எந்தவிதமான சூனியம் என்பதில் தான் அவைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு  வேதாந்த மரபில் உணர்வற்ற அத்தகைய யோக நிலை ‘ஜட சமாதி’ என்று அழைக்கப் படுகிறது. வேதாந்தத்தின் படி, பிரம்ம ஞானத்தேடலுடைய யோகியின் மனம் மற்ற எண்ண அலைகளனைத்தும் அடங்கிய பிறகு சூனியத்தில் அல்லாமல் பூரணத்தில் நிலைக்கிறது – தனது நித்திய ஸ்வரூபவமான பிரம்மத்துவம் அன்றி வேறேதும் இல்லை என்ற என்ற எண்ணம் உறுதிப்படும் நிலை. ‘பிரம்மாகார அகண்ட வ்ருத்தி’ என்று தத்துவ மொழியில் அது குறிப்பிடப் படுகிறது. அத்தோற்றமே இங்கு ஸ்ரீகிருஷ்ணனுடையதாகக் குறிப்பிடப் பட்டது.

‘சாந்தம் சிவம் அத்வைதம்’ என்பது பிரம்மத்திற்குரிய அடைமொழியாக மாண்டூக்ய உபநிஷதத்தில் கூறப்பட்டது. அதனையே ‘சைவம் கேவல சாந்தம்’ என்று இந்த சுலோகத்தின் கடைசி அடி குறிப்பிடுகிறது.

(4) 

गोपालं भूलीला-विग्रह-गोपालं कुल-गोपालं
गोपीखेलन-गोवर्धनधृति-लीलालालित-गोपालम् ।
गोभिर्निगदित गोविन्द-स्फुट-नामानं बहुनामानं
गो-धी-गोचर-दूरं प्रणमत गोविन्दं परमानन्दम् ॥

கோ³பாலம்ʼ பூ⁴லீலா-விக்³ரஹ-கோ³பாலம்ʼ குல-கோ³பாலம்ʼ
கோ³பீகே²லந-கோ³வர்த⁴நத்⁴ருʼதி-லீலாலாலித-கோ³பாலம் |
கோ³பி⁴ர்நிக³தி³த கோ³விந்த³-ஸ்பு²ட-நாமாநம்ʼ ப³ஹுநாமாநம்ʼ
கோ³-தீ⁴-கோ³சர-தூ³ரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

கோபாலன்
விளையாட்டாய்ப் புவியில் கோபால உருவெடுத்தவன் 
கோபால குலத்தவன் 
கோபியருடன் விளையாடி கோவர்த்தனம் தூக்கி
கோபர்களை லீலைகளால் சீராட்டியவன் 
பசுக்கள் கூவியழைக்கும் 
கோவிந்தா என்ற சிறப்பான பெயருடையவன்
மிகப்பல பெயர்களுடையவன் 
புலன்களும் புத்தியும் செல்லமுடியாத தூரத்திலிருப்பவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை 
வணங்குவீர். 

கோ3 என்ற சொல்லுக்கு பசு, பூமி, சப்தம் (வேதம்), புலன், என்று பல பொருள் உண்டு.

கோபாலன் – பசுக்களை, பூமியை, வேதங்களை, பசுக்களைப் போன்ற உயிர்களைக் காப்பவன்.

கோவிந்தன் – வேதவாக்குகளால் அறியப்படுவன். வேதவாக்குகளை அருளியவன். வராகாவதாரத்தில் பூமியையும், கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களையும் காத்தவன். இவ்வாறு ‘கோவிந்த’ பதம் நிர்குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்), ஸகுண பிரம்மம் (உருவமான பரம்பொருள்) இரண்டையும் குறிப்பதனால், இவ்விரண்டு பரம்பொருள் தத்துவங்களையும் மாறிமாறி சுட்டும் வகையில் கோவிந்தாஷ்டகம் அமைந்துள்ளது.

கடைசி அடியில், கோ3-தீ4-கோ3சர-தூ3ரம் என்பதில் முதல் கோ3 புலன்களையும், அடுத்து வரும் கோ3சர என்பது செல்லுதலையும் குறிக்கிறது.

(5)

गोपी-मण्डल-गोष्ठी-भेदं भेदावस्थमभेदाभं
शश्वद्गोखुर-निर्घूतोद्गत-धूली-धूसर-सौभाग्यम् ।
श्रद्धा-भक्ति-गृहीतानन्दमचिन्त्यं चिन्तित-सद्भावं
चिन्तामणि-महिमानं प्रणमत गोविन्दं परमानन्दम् ॥

கோ³பீ-மண்ட³ல-கோ³ஷ்டீ²-பே⁴த³ம்ʼ பே⁴தா³வஸ்த²மபே⁴தா³ப⁴ம்ʼ
ஶஶ்வத்³கோ³கு²ர-நிர்தூ⁴தோத்³க³த-தூ⁴லீ-தூ⁴ஸர-ஸௌபா⁴க்³யம் |
ஶ்ரத்³தா⁴-ப⁴க்தி-க்³ருʼஹீதாநந்த³மசிந்த்யம்ʼ சிந்தித-ஸத்³பா⁴வம்ʼ
சிந்தாமணி-மஹிமாநம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன். 
வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன்
வேற்றுமையற்றவன். 
பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து
மங்கிய மேனியழகுடையவன். 
சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன். 
அறியவொண்ணாதவன். 
சத்தியப்பொருளென அறியப்படுபவன். 
சிந்தாமணியின் மகிமையுடையவன். 
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை 
வணங்குவீர். 

தனது மாயையினால் வெவ்வேறு உணர்வு நிலைகளை (அவஸ்தைகள்) உடையவன். விழிப்பு, உறக்கம், கனவு (ஜாக்ரத் ஸுஷுப்தி ஸ்வப்னம்) ஆகிய மூன்று மாறுபட்ட நிலைகளிலும் தான் என்ற ஆத்ம ஸ்வரூபம் மாறாதிருப்பவன்.

பிரம்மத்தின் இயல்பே ஆனந்தம் என்பதால், அவன்மீது கொண்ட சிரத்தையாலும் பக்தியாலும் பக்தர்கள் ஆனந்தமடைகின்றனர்.

சிந்தாமணி வேண்டியதை எல்லாம் தருவது. அது போன்றே ஈசுவரனும்.

மற்ற பொருள்களைப் போலல்லாமல் நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டதால், வேறு எந்த வகையிலும் அறியவொண்ணாதவன். ஆனால் உபநிஷத வாக்கியங்களாலும் வேதாந்த விசாரத்தாலும் அபரோக்ஷமாக (indirectly perceptible) அறிதற்குரிய ஞானமாயிருப்பவன்.

பிரம்மம் அறியவொண்ணாதது என்றவுடன், ஓ சரி, அதைத்தான் அறியவே முடியாதே வேறு வேலையைப் பார்க்கப் போகலாம் என்று அர்த்தமல்ல. மாறாக, அந்த அறிதலுக்கான இச்சையே மானுட வாழ்க்கையின் மிக உன்னதமான இலட்சியம் என்கிறது வேதாந்தம். ஏனென்றால், சம்சாரம் என்னும் பிறவிச்சுழலிலிருந்து விடுபடுதல் (மோட்சம்) என்பது உண்மையில் தனது நிஜ ஸ்வரூபத்தைப் பற்றிய முழுமையான அறிதலே (ஞானம்). “பிரம்மத்தை ஆய்ந்து அறிக” (அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா) என்று தான் பிரம்ம சூத்திரம் தொடங்குகிறது. அறிதலே விடுதலை, அறிதல் அன்றி வேறேதும் விடுதலையன்று. வேதாந்த விசாரமே அந்த அறிதலுக்கான வழிமுறை.

“அன்பே, அந்த ஆத்மாவை (அறிவினால்) காணவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்கவேண்டும், தன்னில் நிலைக்க வேண்டும்” (ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்யோ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:)

மைத்ரேயியிடம் யாக்ஞவல்கியர், பிரகதாரண்யக உபநிஷதம். 

வலிமையற்றோன் அடைவதில்லை
ஆத்மாவை
ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும்
அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும்
அறிவுடையோனது ஆத்மா
பிரம்மத்தின் இருப்பிடத்தில்
சென்றடைகிறது.

சொல்விளக்கங்களால் அடைவதல்ல
அந்த ஆத்மா
மேதமையால் அல்ல
கேள்வியின் மிகுதியாலும் அல்ல.
அதற்காக ஏங்குபவன்
அதனையடைகிறான்.
அவனுக்கே தன்னியல்பை
வெளிப்படுத்துகிறது
ஆத்மா.

முண்டக உபநிஷதம்

(6)

स्नान-व्याकुल-योषिद्वस्त्रमुपादायागमुपारूढं
व्यादित्सन्तीरथ दिग्वस्त्रा दातुमुपाकर्षन्तं ता: ।
निर्धूतद्वयशोकविमोहं बुद्धं बुद्धेरन्तस्थं
सत्तामात्रशरीरं प्रणमत गोविन्दं परमानन्दम् ॥

ஸ்னான-வ்யாகுல-யோஷித்³-வஸ்த்ரமுபாதா³யாக³முபாரூட⁴ம்ʼ
வ்யாதி³த்ஸந்தீரத² தி³க்³வஸ்த்ரா தா³துமுபாகர்ஷந்தம்ʼ தா: |
நிர்தூ⁴தத்³வயஶோகவிமோஹம்ʼ பு³த்³த⁴ம்ʼ பு³த்³தே⁴ரந்தஸ்த²ம்ʼ
ஸத்தாமாத்ரஶரீரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

குளியலில் ஆழ்ந்த யுவதிகளின்
ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டு
பின்பு திக்கே ஆடையாக நின்று 
தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை
அருகில் அழைப்பவன். 
வேற்றுமையும் சோகமும் மோகமும் அற்றவன்.
[வேற்றுமையும் சோகமும் மோகமும் அழிப்பவன்] 
அறிபவன் (புத்தன்) 
அறிவின் அகத்துள் இருப்பவன்
உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன். 
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை
வணங்குவீர். 

ஸ்ரீகிருஷ்ணன் கோபியரின் ஆடைகவர்ந்த லீலையை முதலிலும், அதன் தத்வார்த்தமான உட்பொருளை அதன் பின்பும் குறிப்பிடுகிறார்.

இங்கு வேற்றுமை என்பது ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கும் பேதபுத்தியைக் குறிக்கிறது. இந்தப் பேத புத்தியினால் தான் சோகமும் மோகமும் தோன்றுகின்றன. நிலையற்ற பொருள்களில் (அனாத்ம வஸ்து) நான், என்னுடையது என்று கொள்ளும் தோற்றப்பிழை மோகம். அதன் காரணமாக, அப்பொருள்களின் அழிவையும் இழப்பையும் தனது அழிவாகவும் இழப்பாகவும் கருதி அடையும் துன்பம் சோகம். ‘நிர்தூ4த-த்3வய-ஶோக-விமோஹம்‘ என்ற சொல்லாட்சி, இந்தப் பிழைகள் அற்றவன், இவற்றை அழிப்பவன் என்று இரண்டு அர்த்தங்களும் தருவதாக அமைந்துள்ளது.

உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன் (ஸத்தா மாத்ர ஶரீரம்) என்பதில் வரும் ‘ஸத்தா’ என்பது வேதாந்தத்தில் முக்கியமானதொரு தத்துவச் சொல். மாறாமல் என்றும் இருப்பதான தன்மையே ஸத்தா எனப்படும். ஸத் எதுவோ அது ஸத்யம். உள்ளது எதுவோ அது உண்மை. இதுவே நேர்ப்பொருள். உண்மை என்றால் பொய் பேசாமலிருப்பது (வாய்மை) என்பது அச்சொல்லின் வழிப்பொருள் மட்டுமே. பிரம்மம் இந்த ஸத் சொரூபத்தைத் தவிர வேறு எந்த சரீரத்தையும் (உருவையும்) உடையது அல்ல. உலகமும் உயிர்களும் மற்றப் பொருள்கள் அனைத்தும் இந்த ‘பிரம்ம ஸத்தா’ என்ற மெய்ப்பொருளை ஆதாரமாகக் கொண்டு பல சரீரங்களில் (உருவங்களில்) அறியப்படுகின்றன.

அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்? (விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்) என்ற உபநிஷத் வாக்கியத்தின் பொருளே இங்கு சுட்டப் படுகிறது. பிரகதாரண்யக உபநிஷதத்தின் புகழ்பெற்ற உரையாடலின் இறுதியில் இந்த வாக்கியம் வருகிறது.

“யாக்ஞல்கியர்: நீரில் போட்ட உப்புக் கட்டி, அதைத் திரும்ப எடுக்க முடியாதபடி அந்த நீரிலேயே கரைந்து விடுகிறது. எப்பகுதியை சுவைத்தாலும் அது உப்பாகவே இருக்கும். அது போல, மைத்ரேயி, அந்தப் பேருயிர் முடிவற்றது, அளவிட முடியாதது, தூய அறிவே உருக் கொண்டது. இப்பொருள்களினின்று ஆத்மா (தனிப்பட்டு) தோன்றுகிறது, அவற்றிலேயே (தனிப்பட்ட தன்மை) அழிகிறது. (ஒருமையை) அடைந்தபின், அதற்கு அடையாளமில்லை, பெயரில்லை

மைத்ரேயி: என் தலைவனே, (ஒருமையை) அடைந்தபின் அடையாளமுமில்லை, பெயருமில்லை என்று கூறி இங்கு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

யாக்ஞவல்கியர்: நான் சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. இது நிறைந்த அறிவு, மைத்ரேயி. இருமை என்பது இருக்கையில், வேறொன்றைப் பார்க்கிறான், வேறொன்றை முகர்கிறான், வேறொன்றைக் கேட்கிறான், வேறொன்றை வணங்குகிறான், வேறொன்றை உணர்கிறான், வேறொன்றை அறிகிறான். ஆனால், அனைத்தும் ஆத்மாவே என்கையில் எவ்வாறு வேறொன்றை நுகர்வான், எவ்வாறு வேறொன்றைக் காண்பான், எவ்வாறு வேறொன்றைக் கேட்பான், எவ்வாறு வேறொன்றை வணங்குவான், எவ்வாறு வேறொன்றை உணர்வான், எவ்வாறு வேறொன்றை அறிவான்? இவை அனைத்தையும் அறிவது எவனாலோ, அவனை அறிவது எங்ஙனம்? அன்பே, அறிவோனை அறிவது எங்ஙனம்?”

(7)

कान्तं कारणकारणमादिमनादिं कालघनाभासं
कालिन्दी-गत-कालिय-शिरसि सुनृत्यन्तं मुहुरत्यन्तम् ।
कालं कालकलातीतं कलिताशेषं कलिदोषघ्नं
कालत्रयगतिहेतुं प्रणमत गोविन्दं परमानन्दम् ॥

காந்தம்ʼ காரணகாரணமாதி³மநாதி³ம்ʼ காலக⁴நாபா⁴ஸம்ʼ
காலிந்தீ³-க³த-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோ³ஷக்⁴நம்ʼ
காலத்ரயக³திஹேதும்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||

காந்தன் 
காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்
முதலானவன் முதலற்றவன் 
கருமேகச்சுடர் 
காளிந்திப் பொய்கையில் காளியன் சிரத்தில்
மீளமீள அழகுநடனம் புரிபவன்
காலமானவன்
காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன் 
அனைத்தையும் தோற்றுவிப்பவன்
கலியின் தீங்குகளை அழிப்பவன் 
காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை 
வணங்குவீர். 

காந்தன்: அனைத்தையும் ஈர்க்கும் அழகுடையவன். Magnetic.

காரண காரிய வாதத்தின் படி, அனைத்துப் பொருள்களுக்கும் ஆதிகாரணமாக, சத்வம்-ரஜஸ்-தமஸ் ஆகிய முக்குணங்களின் சேர்க்கையான மூல ப்ரகிருதி (ஆதி இயற்கை) உள்ளது என்று சாங்கிய தரிசனம் கூறுகிறது. இந்த மூலப்ரகிருதி என்ற கருத்தாக்கத்தை ஒரு இறுதி உண்மை (ultimate reaity) என்று கொண்டால், பின்பு உபநிஷதங்கள் கூறும் சத்-சித்-ஆனந்த வடிவமான ஆத்மா / பிரம்மம் என்பது மற்றொரு இறுதி உண்மை என்று ஆகிறது. இங்ஙனம் இரண்டு இறுதி உண்மைகள் உள்ளதாகக் கருதுவது, இரண்டற்ற ஒருமை (ஏகம் அத்விதீயம்) என்ற உபநிஷதக் கருத்துக்கு முரணானதாக அமையும். எனவே, இந்த மூலப்ரகிருதி என்பது முதற்காரணமல்ல, மாறாக பிரம்மத்தில் கற்பிக்கப்பட்டு அது உலகமாகவும் (ஜகத்), அனைத்துப் பொருள்களாகவும் தோன்றுகிறது என்கிறது வேதாந்த தரிசனம்.

அரையிருட்டில் கயிற்றைப் பாம்பு என்று கருதி மயக்கம் ஏற்படுகிறது. இதன் பொருள் கயிறு, பாம்பு என இரண்டு உண்மைப் பொருட்கள் உள்ளன என்பதல்ல. உண்மையான நிலைப்பொருளான (அதிஷ்டானம்) கயிற்றில், பாம்பு கற்பிக்கப் படுவது போல, பிரம்மத்தில் மூல ப்ரகிருதி கற்பிக்கப் பட்டது. அதுபற்றியே பரம்பொருளை காரணங்களுக்கெல்லாம் காரணம் (காரணகாரணம்) என்று கூறுகிறார். பிரம்மமே முதற்காரணம் என்பது ஆதி, அனாதி (முதலானவன், முதலற்றவன்) என்ற இரண்டு பதங்களால் மீண்டும் விளக்கப் பட்டது.

குயவன் களிமண்ணைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றுவதால் சட்டி, பானை, குடம் என்று பல்வேறு விதமான உருவங்களும் பெயர்களும் கொண்ட அழியும் பொருட்கள் இடையறாது தோன்றுகின்றன. அதே போல, காலச்சக்கரத்தின் சுழற்சியில் பல்வேறு பெயர்களும் உருவங்களும் (நாமரூபம்) கொண்ட சிருஷ்டியின் இயக்கம் இடையறாது நடக்கிறது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தில், குயவன், களிமண், சக்கரம் இவையனைத்தும் வேறுவேறாக அல்லாமல் பிரம்மம் என்ற ஒற்றைப் பொருளே இவையனைத்துமாகப் பரிணமிக்கிறது என்கிறது வேதாந்தம். காலம் (காலமானவன்), காலகலாதீதம் (காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்), கலிதாஶேஷம் (அனைத்தையும் தோற்றுவிப்பவன்), கால-த்ரய-க3தி-ஹேதும் (காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்) ஆகிய பதங்களால் இத்தத்துவம் குறிக்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணன் காத்தல், படைத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம்) ஆகிய முத்தொழில் புரியும் ஈசுவர சொரூபம் என்பதும் விளக்கப் பட்டது. நவீன இயற்பியல் பரிச்சயமுள்ளவர்கள் singularity என்ற கருத்தாக்கத்துடன் ஒப்பிட்டு தோராயமாக இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் (வேதாந்தம் கூறும் பிரம்ம தத்துவத்தின் தளம் நவீன இயற்பியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, ஆழமானது. இந்த ஒப்பீடு ஒரு சாதாரண புரிதலுக்கு மட்டுமே).

கலியின் தீங்குகளை அழிப்பவன் (கலிதோ3ஷக்4னம்). இயற்கையின் நியதிக்கேற்ப நிகழும் உலக வியவகாரங்களின் நெறிகள் பிறழ்ந்து, நிலைகுலையும் காலகட்டம் கலியுகம் என்று உருவகிக்கப் படுகிறது. அதர்மத்தின் ஆட்சி ஓங்கி தர்மத்தின் ஆற்றல் குறையும்போது, தீமைகளை அழிக்க அவதரிப்பவன்.

(8)

बृन्दावनभुवि-बृन्दारकगण-बृन्दाराधित-वन्द्यांघ्रिं
कुन्दाभामल-मन्दस्मेर-सुधानन्दं सुमहानन्दम् ।
वन्द्याशेष-महामुनि-मानस-वन्द्यानन्द-पदद्वन्द्वं
नन्द्याशेष-गुणाब्धिं प्रणमत गोविन्दं परमानन्दम् ॥

ப்³ருʼந்தா³வனபு⁴வி-ப்³ருʼந்தா³ரகக³ண-ப்³ருʼந்தா³ராதி⁴த-வந்த்³யாங்க்⁴ரிம்ʼ
குந்தா³பா⁴மல-மந்த³ஸ்மேர-ஸுதா⁴னந்த³ம்ʼ ஸுமஹானந்த³ம் |
வந்த்³யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்³யாநந்த³-பத³த்³வந்த்³வம்ʼ
நந்த்³யாஶேஷ-கு³ணாப்³தி⁴ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||

பிருந்தாவன நிலத்தில் 
தேவர்களின் கூட்டங்களும் 
பிருந்தா முதலான கோபியரும்
வணங்கும் பாதங்களையுடையவன்.
குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின்
அமுதத்தால் மகிழ்விப்பவன். 
சிறந்த ஆனந்தமானவன். 
வணங்கத் தகுந்த மாமுனிவர்கள் 
மனதில் போற்றி ஆனந்தமடையும் 
இணையடிகளையுடையவன். 
போற்றத்தகுந்த எண்ணற்ற நற்குணங்களின்
கடலென விளங்குபவன். 
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை 
வணங்குவீர். 

இந்தப் பாடலில் ஸ்ரீகிருஷ்ணனின் சகுண ரூபம் போற்றப் படுகிறது.

பிருந்தா என்பது கண்ணன் மீது அன்பு கொண்ட கோபிகையின் பெயர். துளசியையும் குறிக்கும்.

மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடி – புறத்தில் வெளிப்படையாக செய்யும் பூஜையைக் காட்டிலும் (பாஹ்ய பூஜை) மனத்தினால் செய்யப் படும் பூஜை (மானஸ பூஜை) சிறந்தது என்பது கருத்து.

(9) 

गोविन्दाष्टकमेतदधीते गोविन्दार्पितचेता यो
गोविन्दाच्युत माधव विष्णो गोकुलनायक कृष्णेति ।
गोविन्दाङ्घ्रिसरोजध्यानसुधाजलधौतसमस्ताघो
गोविन्दं परमानन्दामृतमन्तःस्थं स तमभ्येति ॥

கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து 
கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ 
கோகுலநாயகா கிருஷ்ணா எனக் கூறி
இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர் 
கோவிந்தனின் பாதகமலத் தியானம் எனும்
அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி 
தன் அகத்துள் இருக்கும்
பரமானந்த அமுதமான 
அந்த கோவிந்தனை
அடைவர். 

எட்டு சுலோகங்களுக்குப் பின் பலசுருதியாக இப்பாடல் அமைந்துள்ளது. தோத்திரங்களின் வழக்கமான பலசுருதிகளைப் போல லௌகீக பலன்களைக் கூறாமல், ஞானமே பலனாகக் கூறப்பட்டது.

சிறுவயதில் ஸ்ரீசங்கரர் வழிபட்ட ஸ்ரீகிருஷ்ணன் ஆலயம், காலடி.

வெறுமனே பாடுபவர் என்று இல்லாமல் கற்பவர் (அதீ4தே) என்று கூறியது, இந்தத் தோத்திரம் கூறும் வேதாந்தப் பொருளின் அர்த்த ஞானத்துடன் இதைப் பாடி தியானிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

தன் அகத்துள் உறையும் பரம்பொருளே கோவிந்தன் என்பதால், கோவிந்தனின் திருவடி தியானம் என்பது ஆத்மஞானத்தினின்றும் வேறானதல்ல. அழிவற்ற ஆனந்தத்தை உண்டாக்குவதால், அதுவே அமுதநீர்.

அனைத்துப் பாவங்களும் காம குரோதங்களால் உண்டாகின்றன. அந்தக் காமகுரோதங்கள் அவித்யையாகிய அக்ஞானத்தில் பிறப்பவை. எனவே, பாவத்திற்கு மூலகாரணமாகிய அவித்யையை அழிக்கும் ஞானத்தினால், பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.

ஏற்கனவே தன்னிடம் இல்லாத ஒரு பொருளை அடைவது (ஸாத்ய வஸ்து) என்றால் சரி. ஆனால் தன் அகத்துள் நீங்காமல் நிற்கும் பொருளை (ஸித்த வஸ்து) அடைவது என்றால்? பிரம்மாகிய அந்தப்பொருளும் ஆத்மாவாகிய தானும் வேறல்ல என்ற *அறிதலை* (ஞானம்) அடைவது என்பதே இதன் பொருள். கீழ்க்கண்ட கீதை மொழிகள் இங்கு சிந்திக்கத் தக்கன.

अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः। सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॥३६॥

பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய் (4.36)

तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः। गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः॥१७॥

பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள். (5.17)

இங்கு கூறப்பட்ட பகவானின் நாமங்களுக்கு நேரடியான பொருளுடன் கூட தத்துவார்த்தமான வேதாந்தப் பொருளும் உண்டு என்பதால் பொருளுணர்ந்து அந்த நாமங்களைக் கூறுவதே வேதாந்த விசாரமாகவும் ஆகிறது.

அச்யுத – விலகாதவன்.
பக்தர்களின் இதயத்திலிருந்து விலகாதவன்.
பிரகிருதி குணங்களுக்கு வசமாகாமல் தன் நிலையிலிருந்து விலகாமல் (மாறாமல்) நிற்கும் பொருள்.
‘அச்’ என்பது இலக்கணத்தில் உயிரெழுத்துக்களையும், அதன் வழிப்பொருளாக உயிர்களையும் (ஜீவன்களை) குறிக்கும். அசி+யுத = ஜீவன்களிடம் பேதமற்றுப் பிணைந்திருக்கும் அத்வைதப் பொருள்.

மாதவ – மா என்பது திருமகளைக் குறிக்கும். திருமகள் கேள்வன்.
இனிமை தரும் வசந்தத்தின் (மாதவ) நாயகன்.
‘மா’ எனப்படும் மாயைக்குத் தலைவனாக, அதற்கு வசப்படாமலிருந்து அதனை இயக்குபவன்.
மா: அழகு. அழகுகளின் தலைவன்.

விஷ்ணு – வியாபித்திருப்பவன். நிறைந்த பூரண சொரூபன்.
எங்கும் எல்லோராலும் துதிக்கப் படுபவன்.
பிறவித்துயர் என்னும் விஷத்தை அகற்றுபவன்.

கோகுலநாயக – கோகுலம் எனும் ஆயர்பாடியின் தலைவன்
பசுக்கூட்டங்களின் (ஜீவர்களின்) தலைவன்
அக்கூட்டங்களுக்கு உரியதை அடையும்படி செய்பவன்.
அறிஞர் கூட்டங்களின் தலைவன்.

கிருஷ்ண – (பக்தர்களை) வசீகரித்து இழுப்பவன்.
பாவிகளை இழுத்து அழிப்பவன்.
காலச்சக்கரத்தை இழுத்து சுழலச் செய்பவன்.
(துஷ்ட மாடுகளையும் துஷ்ட ஜீவர்களையும்) இழுத்து நேர்வழியில் திருப்பி விடுபவன்.
அழகிய கருநிறமுடையவன்.

கோவிந்த என்ற பதம் முன்பே விளக்கப் பட்டது.  இது நிர்குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்), ஸகுண பிரம்மம் (உருவமான பரம்பொருள்) இரண்டையும் குறித்து நிற்கிறது.

இந்த அற்புதமான தோத்திரத்திற்குத் தமிழ் உரை எழுதுமாறு என்னைக் கேட்டுக் கொண்டு என்னை தெய்வ சிந்தனையில் ஈடுபடுத்திய பெரியவர் Mohan Ramiah அவர்களுக்கு எனது வந்தனங்கள்.

*****

47 Replies to “ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்”

  1. சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன்.
    வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன்
    ——————
    ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்சி ?
    மதுசுதன சரஸ்வதி நேரில் பார்த்தாரா ? ஏன் கற்பனையாக புளுகு மூட்டையை அவிழ்கின்றாா் ?
    இப்படிப்பட்ட பல வர்ணனைகள் மக்களை குழப்புவதாக உள்ளது.
    இதுபோன்று பெண்கள் குளிக்கம் போது மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் படமும் நல்ல செய்தியை மக்களுக்கு அளிப்பதில்லை.
    ———————-
    கலைஉரைத்த கற்கனையெல்லாம் நிலை எனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக – என்றாா் வள்ளலாா்.
    மண் மூடிப்போக வேண்டியது இந்த கதைகள்தானா ? வேறு ஏதுவா ?

  2. // ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்சி ? மதுசுதன சரஸ்வதி நேரில் பார்த்தாரா ? ஏன் கற்பனையாக புளுகு மூட்டையை அவிழ்கின்றாா் ? //

    அ.அன்புராஜ் அவர்களுக்கு, முதல் விஷயம் நீங்கள் குறிப்பிடும் வரி கோவிந்தாஷ்டகத்தில் வருவது. அது ஸ்ரீசங்கரர் இயற்றியது என்று பதிவின் தலைப்பில் உள்ளது. தொடக்கத்தில் உள்ள சுலோகம் மட்டுமே ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி இயற்றியது.

    மேலும் உங்கள் கேள்வியே அடிப்படையற்றதாகவும் அபத்தமாகவும் இருக்கிறது. கண்ணனின் கோகுல பிருந்தாவன லீலையும் ராஸலீலையும் ஸ்ரீமத்பாகவதத்தில் சுகமுனிவரால் மிக விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. ஆழ்வார்கள், ஹரிதாசர்கள், மீரா, ஜெயதேவர், வல்லபாசாரியர், லீலாசுகர், சைதன்யர் என்று பாரதம் முழுவதும் பற்பல பக்த கவிகள் பலவிதங்களில்
    அதைப் பரவசத்துடன் பாடியிருக்கிறார்கள். பல மாபெரும் பக்தி சம்பிரதாயங்களே இந்த பிரேம பக்தியின் அடிப்படையில் எழுந்துள்ளன. அவை இன்றும் உயிர்த்துடிப்புடன் உள்ளன. இப்படி கிருஷ்ண லீலை குறித்து நன்கறியப்பட்ட ஒரு விஷயத்தையே தனது தோத்திரப் பாடலில் சங்கரர் எடுத்தாண்டிருக்கிறார்.

    இது எதையுமே கணக்கில் கொள்ளாமல், கிருஷ்ணனைப் பற்றி பல நூற்றாண்டுகளாக நம் மரபில் ஆழ வேரூன்றிய விஷயத்தை நீங்கள் பரிகசித்து கேலி செய்கிறீர்கள். கிருஷ்ணனை பரம்பொருள் என்று கருதாமல் ஒரு ஆசாமியாக, நபராக நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பதால் உங்களது பள்ளிக்கூட ஒழுக்க விதிகளை வைத்து கிருஷ்ணனை மதிப்பிட முயல்கிறீர்கள். கொடுமை.

    // கலைஉரைத்த கற்கனையெல்லாம் நிலை எனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக – என்றாா் வள்ளலாா்.
    மண் மூடிப்போக வேண்டியது இந்த கதைகள்தானா ? வேறு ஏதுவா ? //

    ஸ்ரீமத்பாகவத்தின் ஒரு பக்கத்தையாவது நீங்கள் வாசித்ததுண்டா? பிறகு அது “கண்மூடிப் பழக்கம்” என்று எதைவைத்து முடிவு கட்டுகிறீர்கள்? வள்ளலாரின் திருவடிப் புகழ்ச்சி வாசித்ததுண்டா? அதிலும் திருவருட்பாவின் மற்ற பலபாடல்களிலும் அவர் சிவபெருமானைக் குறித்து பல “கண்மூடிப் பழக்கமான” புராணச் செய்திகளைப் பாடுகிறாரே? சரி, அவற்றையெல்லாம் செல்லாது கடைசியில் சொன்ன ஜோதி வழிபாடு மட்டுமே செல்லும் என்னும் கொள்கையுடையவர்கள், வள்ளலாரின் அந்தக் கருத்து எல்லாப் புராணங்களையும் சாஸ்திரங்களையும் குறிப்பதாக கருதினால் அதனைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்து சம்பந்தமே இல்லாமல், இந்துமதத்தின் மற்ற புனித மரபுகளை அவதூறு செய்வது முதிர்ச்சியற்ற, வெறித்தனமான நிலைப்பாடு. இந்துமதம் என்ற மகாசமுத்திரத்தில் வள்ளலார் ஒரு சிறு துளி மட்டுமே என்பதை அந்தக் கொள்கையாளர்கள் உணர்வது நல்லது.

    மேலும், கோவிந்தாஷ்டகத்தையும் சங்கரரின் வேதாந்தத்தையும் நீங்கள் படித்துத் தான் ஆகவேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவுமில்லை.

  3. அ.அன்புராஜ் அவர்களுக்கு,

    சுவாமி விவேகானந்தர் கூறுவதைப் பாருங்கள். இது இந்தத் தளத்திலேயே கட்டுரையாக வந்திருக்கிறது.

    ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்:

    பாகம் 1: https://tamilhindu.com/2008/08/the-greatness-of-sri-krishna-by-vivekanand/

    பாகம் 2: https://tamilhindu.com/2008/08/hthe-greatness-of-sri-krishna-by-vivekanand-2/

    // கடவுள் ரூபத்துடன் கூடியவரா அல்லது அரூபமானவரா என்ற இப்பிரச்சினையை கோபிகளுடைய ஒப்பற்ற அன்பின் மூலம்தான் தீர்க்க முடியும். அவர்கள் கிருஷ்ணனுடைய புகழைக் கேட்க விரும்பவில்லை. அவர் சகலத்தையும் சிருஷ்டி செய்தவர், சகல சக்தியும் வாய்ந்தவர், எதையும் சாதிக்க வல்லவர் என்றெல்லாம் அவர்கள் உணர விரும்பவில்லை. அவர்கள் அறிந்த ஒரே விஷயம் அவர் எல்லையற்ற கருணைக்கடல் என்பதுதான். தங்களுடன் பிருந்தாவனத்திலிருந்த இளம் கிருஷ்ணனைத்தான் அவர்கள் போற்றிவந்தார்கள். அனைவருக்கும் தலைவனாய் அரசர்க்கு அரசனாய் அமர்ந்திருந்த அவர், அவர்களுக்கு என்றும் கோபாலனாகவே இருந்தார். “உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், போர் வேண்டேன், கல்வியும் செல்வமும் யான் வேண்டேன், சுவர்க்கமும் சுகமும் எனக்கு வேண்டாம். ஏ பகவானே! உன்னைப் பக்தி செய்து தொழுவதற்காக அந்த அன்பை அனுபவிப்பதற்காக, கணக்கற்ற நற்பிறவிகளை எனக்கு அளிப்பாயாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

    வேறு ஒரு நோக்கமும் இல்லாமல் அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை, என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தை குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதார புருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீ கிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது. அத்துடன் பயத்திற்காகவும் பொருட்களை இச்சித்தும் கடவுளைத் தொழுத காலம் ஒழிந்தது, அதற்குப் பதிலாக, அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை என்ற அதி உன்னதமான கருத்து தோன்றிற்று.

    அந்த அன்புதான் எத்தகையது! அவர்கள் அன்பின் தன்மையைத் தெரிந்து கொள்வது மிகக் கடினம் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். இந்த அதி அற்புதமான அன்பைத் தப்பர்த்தம் செய்யும் மூடர்கள் நம்மிடமும் இல்லாமலில்லை. இதைக் கேவலமாக நினைக்கும் இழிந்த அறிவீனர் நம் ரத்தத்தில் பிறந்தவர்களுள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். கோபிகளுடைய அன்பை வருணிக்கும் சரித்திராசிரியர் பிறவியிலேயே மிகப் புனிதமான சுகதேவர் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். மனிதன் மனதில் சுயநலம் இருக்கும்வரை, கடவுளை உண்மையாக நேசிப்பது அசாத்தியம். அத்தகையவர்களின் அன்பு வெறும் வியாபாரமே யொழிய வேறல்ல. ” பகவானே! நான் உனக்கு ஒன்று தருகிறேன், அதற்குபதிலாக நீ வேறொன்று தா ” என்று உரைக்கின்றது அவர்கள் அன்பு. ” நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்” என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய எல்லையற்ற அன்பை எங்ஙனம் உணர முடியும்? ” ஓ உன்னுடைய முத்தம் ஒன்று கொடுத்தருள்வாய். உன்னால் முத்தமிடப்பட்டவர்களுக்கு உன்மேலுள்ள அன்பு சதா தழல்விட் டெரிகிறது; அவர்கள் துன்பமெல்லாம் தொலைந்து, உன்னைத்தவிர மற்ற நினைவுகள் அனைத்தையும் மறக்கிறார்கள்” என்று அவர்கள் தெய்வீக அன்பால் உன்மத்தரானார்கள்.

    முதலில் பொன், பெயர், புகழ் முதலிய இவ்வற்ப ஆசைகளை மறந்துவிடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கோபிகளுடைய அன்பின் தன்மையை உணர முடியும். அப்புனிதமான அன்பை பூரண மனப் பரிசுத்தமடையாதவர்களால் அறிய முடியாது. காமமும், லோபமும் மற்ற ஆசைகளும் நிறைந்த அற்ப மனிதர்களுக்கு கோபிகளின் மாசற்ற அன்பில் குறைசொல்லத் தைரியமிருக்கிறதா? இவ்வன்பு தான் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் மகிமையாகும். கீதையின் உயர்ந்த தத்துவங்கள் கூடத் தன்னை முற்றிலும் மறந்த இவ்வன்புக்கு ஈடாகாது. ஆன்மிக லட்சியத்தைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் படிப்படியாக உயர்ந்துசெல்லும் மார்க்கம் கீதையில் உபதேசிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இங்கு, அன்பு மதுவுண்டு, பேரின்பத்தில் தன்னையும் மறந்து திளைத்து, குரு,சிஷ்யன், வேதங்கள், சுவர்க்கம், கடவுள் என்ற அத்தனையும் மறந்து, தாம் அன்புசெய்யும் கிருஷ்ணனைத் தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை. அன்பின் முதிர்ச்சியால் சகலமும் கிருஷ்ணமயமாகி, ஒவ்வொரு முகமும் கிருஷ்ணன் முகமாகத் தென்படுகிறது. தாங்களும் கிருஷ்ண மயமாகி விடுகிறார்கள். இது தான் அந்த அற்புதமான ஸ்ரீகிருஷ்ணனுடைய அன்பின் தன்மையாகும்.//

  4. திரு ஜடாஜு அவர்கட்கு

    திரு அன்புராஜ் அவர்களிடம் காண்பிக்கும் கோபத்தை ஒதுக்கிவிட்டு ஒருகணம் உங்கள் ஊரில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளைப் பாருங்கள்.அநேகமான செய்திகள் அங்கு தினமும் நடக்கும் போராட்டங்களையே காண்பிக்கும்.இவற்றுள் பங்குபற்றுவோர் பலர் அதுவும் முன் வரிசையில் நிற்போர் ஏன் தமது நெற்றியில் வைஷ்னவர்போல் நாமம் தரித்திருக்கிறார்கள்.இந்த நாமத்தின் அர்த்தம் என்ன? இது ஒருவரை கவிழ்த்தல் வீழ்த்தல் குழிபறித்தல் நாசமாக்கல் போன்ற கேடுகெட்ட தன்மையை காட்டுவதற்காக பாவிக்கப்படும் குறியீடுகள்தானே. அவர்கள்போடும் கோவிந்தா கோஷமும் இத்தமன்மையதுதானே. இதனையா வைஷ்ணவம் குறிப்பிடுகின்றது? இவற்றை எல்லாம் தினமும் பார்க்கும் உங்களுக்கு கோபம் வருவதில்லையா? அங்கு வாழும் வைஷ்ணவர்களுக்கு இவை உறைப்பதில்லையா? வைஷனவத்தின் குறியையே நக்கலடிக்கிறார்கள். கோவிந்தாவையே காறித் துப்புகிறார்கள். ஆனாலும் எந்த வைஷ்ணவனுக்கும் வைஷ்ணவிக்கும் இதனை தடுப்பதற்கு நாதியில்லை. சூடு சுரணை இல்லை. நீதிமன்றம் அணுகி ஓர் தடை உத்தரவை பெற வக்கில்லை. இவர்களெல்லாம் என்ன பிறவி ஐயா? பேசாமல் வேறு சமயங்களுக்கு மாறிவிடுங்கள். அங்கே பெருவாரியாக சூடு சுரணை உள்ளவர்கள் இருப்பார்கள்.அவர்களைப்பார்த்து இவர்களும் மாறிவிட சந்தர்ப்பம் உண்டு.

  5. Rishi அவர்களுக்கு, நீங்கள் கூறுவது யதார்த்தத்தில் வைணவர்கள் சமயத்தைப் பேணாததையும், மத அடையாளங்களையும் புனிதத்துவத்தையும் மரியாதை கொடுத்து ஏற்றபடி பின்பற்றாமல் இருப்பதையும் பற்றியது. அது ஒரு நடைமுறைப் பிரசினை.

    அன்புராஜ் கூறுவது ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி சமய நூல்களும் ஆசாரியர்களும் மகான்களும் கூறியுள்ள விஷயங்களையெல்லாம் தடாலடியாக அவதூறு செய்வது. “கண்மூடிப் பழக்கம்” என்று சொல்லி அவற்றை நீக்க வேண்டும் என்று கூறுவது.

    முன்னது உள்ளது என்பதால் பின்னது சரியானதாகி விடாது. குறைந்தது முன்னதில் குறிப்பிடப் பட்டவர்களுக்கு சமயம் பற்றிய குழப்பம் இல்லை. நடைமுறை ஆசாரங்களில் அசிரத்தை உள்ளது, அவ்வளவே. ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார தத்துவம் பற்றியே புரிதல் இல்லை, மரியாதை இல்லை. இருந்திருந்தால் அப்படி மறுமொழி இட்டிருக்க மாட்டார். அதற்கே எனது எதிர்வினை.

  6. சுவாமி விவோகானந்தாின் ” பிரம்மச்சரிய ஆச்சிரமம் வீழ்ந்ததால்தான் இந்தியா வீழ்ந்தது” என்ற கருத்தும் ஞானதீபத்தில் இடம் பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்று நான் கருதுகின்றேன்.பிரம்மச்சரிய ஆஸ்ரமம் எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது என்ற விபரம் ஞானதீபத்தில் இல்லை.அது குறித்து ஆய்வு செய்வோர் யாரும் இல்லை. ஆங்கில மொழியில் ” FIDELITY OF FACT ” என்ற கருத்தின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் சற்று நினைவில் கொள்ளுங்கள்.
    பாகவதமாக இருக்கட்டும் கண்ணனின் லீலைஎன்று சேலையை எடுப்பதும் பெண்கள் குளிக்கம் போது மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருப்பதும் வரலாறா ? கற்பனைக் கதையா ? கட்டுக் கதையா ? கண்ணனி்ன் சிறப்புக்கள் இதுவா ? வேறு உயா் தகுதியே அந்த கண்ணனுக்கு இல்லையா ? பண்ருட்டி என்ற ஊர் என்றாலே பலாப்பழம் என்பது நினைவுக்கு வரும்.கண்ணன் என்ற பெயா் வந்தால் அவர் பெண்களோடு கூட்டமாக ஆடுவாா் பெண்கள்குளிக்கும் போது ரசிப்பார் அல்லது உடன் இருப்பாா் ஏதோ செய்வாா் சேலைகளை ஒளித்து வைப்பாா் ஆட்டம் போடுவாா் என்று கண்ணனை இழிவு படுத்தி வைத்திருக்கும் அசிங்கத்தை நான் படம் பிடித்து எனது வருத்தத்தை பதிவு செய்தேன். அதில் என்ன தவறாக் கண்டடீர்கள்.
    பாகவதம் முற்றிலுமாகப் படித்திருக்கின்றேன்.fidelity of fact என்ற இலக்கணத்திற்கு சற்றும் பொருந்தாக ஒரு புத்தகம். காளீங்களை வென்றவன் ஏழைப்பங்காளன் புரட்சிக்காரன் ஊருக்கு உபகாரி நீதியை பேணியவன் நியாயம் உரைத்தவன் பிறா் துன்பம் பொறுக்காதவன் என்றல்லாம் ஆயிரம் சிறப்புக்களை கொண்ட இந்த கண்ணனை பாவம் பெண்கள் கூட்டத்திற்கும் சிறை வைத்திருப்பது அசிங்கம்.
    தாங்கள் அனைவரும் கண்ணனை இழிவு படுத்துபவைகளாக எனக்கு தோன்றுகின்றது.

    திருக்குறளின் கலைகளைப் பற்றி கூறாதது ஏன் ? என்ற புத்தகத்தை மாபெரும் தமிழ் அறிஞா் திரு.மா.பொ சிவஞானம் அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். கல்லூரி நூலகத்தில் அதைப்படித்தேன். பழைய காலத்தில் புலவா்கள் மானம் ரோசம் வீரம் தியாகம் ஈகை போன்ற உயா் பண்புகளை பாட்டின் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள் எழுதினாா்கள்.காலப்போக்கில் இவர்களுக்கும் கவிதைகள் கேட்பவா்களுக்கும் சலிப்பு ஏற்பட்டுவிட்டது எனவே இவர்கள் காதல் பெண்களின் அழகு தொடை முலை அல்குல் என்று காமத்தை நினைவுபடுத்தி இரத்தத்தை சுடுஏற்றும் காமவெறியைத் துண்டும் பாடல்களை ஏழுதி பெரும் பொருள்குவித்து வந்தாா்கள்.ஆனால் அதற்கு பெரும் எதிாப்பு எழுந்தது.எனவே முருகனே காதல் செய்தால் சைட் அடித்தான்.என்று முருகன் -வள்ளி வரலாற்றை காதல் விநோதங்கள் மண்டக்கா குண்டக்கா என்று எழுதி மக்களை ஏமாற்றி பின் தங்களின் செயலை நியாயப்படுத்தி தொடா்ந்து மடல் வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க என்ற போக்கில் எழுதி குவித்து வந்து காசு சம்பாதித்து வருகின்றனா். ”தாய்” நிலையில் வைத்து போற்றும் ஒரு பெண்ணின் அல்குல் பற்றி எழுதும் ஈனத்தனம் கொண்டது நமது பக்தி இலக்கியங்கள். ஆக வள்ளி என்ற பெண் பக்தை-ஒரு பெண் துறவியின் வாழ்க்கை வரலாறு உண்மைக்கு சற்றும் சம்பந்தம் யின்றி -fidelity of fact – என்ற சத்தியத்தை இழந்து காம களியாட்டமாக மாறி தெய்வங்கள் தரம் குறைக்கப்பட்டுள்ளது.இதை நான் சொல்லவில்லை.மா.பொ சிவஞானம் அவர்களும் சொல்லவில்லை. பாம்பன் சுவாமிகள் தான் மேற்படி கருத்துக்குச் சொந்தக்காரா் என்பதைத் தொிந்துகொண்டு வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள். பாகவதம் தெரியுமா சங்கராச்சாரியாரைத் தெரியுமா என்று ஏதோ கைநாட்டு பேர்வழியிடம்பேசுவதுபோல் என்னிடம் பேச வேண்டாம். பழமையின் பயித்தியக்காரத்தனங்களை அப்படியே காப்பாற்ற வேண்டும், தவறானது வீரயம் இழந்தது இந்துக்கள் மத்தியில் ஏதும் இல்லை என்பது போல் போலி தனங்கள் நிறைந்தவா்கள்தான் எனது கருத்தை எதிர்க்கின்றனா். தலையில் தேங்காய் உடைப்பதையே எதிர்த்து ஏதும் செய்ய நாதியற்றதுதானே இந்து சமய அமைப்புக்கள். திருவனந்தபுரம் பத்மநாத சாமிகள் ஆலயத்தில் கோடிக்கணக்கான செல்வங்கள் பாழாகி மண்ணாகிக்கொண்டிருக்கின்றதே. அறிவுள்ள சமுதாயம் என்றால் அவற்றை ஆக்க புா்வமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும்.இந்து சமூகபோலிகள் அதிகம் உள்ளது.

    கண்ணதாசன் மொழி பெயா்த்த கோபியா் கொஞ்சும் ரமணன் என்ற கவிதை புத்தகத்தை படித்ததுண்டா ? கோபியா்கள் காம வெறி எறி வடிகால் தேடி அவர்கள் உடல்கள் படும் அவஸ்தையை பச்சை பச்சையாக பதிவு செய்கின்றாார்.குடும்பத்தோடு அக்கா தங்கைகளோடு கூட்டாக எந்தகொம்பனாலும் அதை வாசிக்க முடியாது. பல சமய இலக்கியங்கள் முறையாக எழுதப்படவில்லை.காமசுவை பட எழுதி பாமர மக்கள் நெறி தடம் புரள காரணமாக உள்ளவை பல பக்தி இலக்கியங்கள் என்பது எனது முடிவான கருத்து.

  7. அன்பின் பரிபுரணத்தை கோபியர்களிடம் காணலாம் என்கிறாா் சுவாமி விவேகானந்தா். கோபியர்களின் அன்பை எப்படி புரிந்து கொள்வது ? அதற்கான விளக்கம் எங்கே உள்ளது? சேலைகளை கண்ணன் ஒளித்து வைக்கும் காட்சியில் கோபியா்கள் குளிக்கும் காட்சியில் கண்ணன் உடன் இருப்பதாகக் காட்டும் காட்சி எந்த அன்பை உலகிற்கு காட்டுகிறது என்பது எனக்கு விளங்கவேயில்லை. கோவியர்கள் அன்புள்ளம் மிக்கவா்கள்.ஒருமன பாவனை கொண்டவா்கள்.கண்ணனின் தாயா் யசோதை கண்ணனை நேசிக்கவேயில்லையா ? கோபிகளை இழிவாக கருதும் எண்ணம் நிச்சயம் கடுகளவும் எனக்கு கிடையவே கிடையாது.சுவாமி விவேகானந்தா் உறுதியாக தெரிவிக்கின்றாா்

    இந்தியாவிற்கு தேவை கீதையின் கண்ணன்.கோபியர்களின் கண்ணன் அல்ல.

  8. ஸ்ரீகண்ணனை இப்படி பெண்கள் மத்தியில் ஆடினான் என்பதை யாா் சாட்சி ?
    மதுசுதன சரஸ்வதி நேரில் பார்த்தாரா ? ஏன் கற்பனையாக புளுகு மூட்டையை அவிழ்கின்றாா் ?
    இப்படிப்பட்ட பல வர்ணனைகள் மக்களை குழப்புவதாக உள்ளது.
    இதுபோன்று பெண்கள் குளிக்கம் போது மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் படமும் நல்ல செய்தியை மக்களுக்கு அளிப்பதில்லை.
    ———————————-
    இது வரியை ஏன் விவாதத்திற்கு எடுத்தக் கொள்ளவில்லை.பாகவதம் படீத்தீரா ? கீதைபடித்தீரா என்று கேட்கும் வேகத்தில் இந்த பத்தியை மறந்தது ஏனோ ?

  9. ஆனால் பின்னதைக் கூறும் அன்புராஜ் அவர்களுக்கு சமயத்தின் ஆதார தத்துவம் பற்றியே புரிதல் இல்லை, மரியாதை இல்லை. இருந்திருந்தால் அப்படி மறுமொழி இட்டிருக்க மாட்டார்.
    ——————————————-
    இத்தனை நாளும்எ னது பதிவுகளை தாங்கள் படித்திருக்கக் கூடும்.அதிலிருந்து தாங்கள் எடுத்த முடிவு இதுதானா ? வேடிக்கையாக உள்ளது.சுடுசொல்லால் சுட்டுவிட்டீர்கள்.நன்றி.
    ஆனால் தாங்கள் உத்தம புத்திரம் எங்கள் வீட்டுக் பிள்ளை 23ம் புலிகேசி என்ற தமிழ் திரைப்படங்களை பார்த்திருக்கக் கூடும். வளா்ப்பு சரியில்லை என்றால் எற்படும் விபரீதம் குறித்து மேற்படி திரைப்படங்கள் விளக்குகின்றன. 3 திரைப்படங்களிலும் ஒரு குழந்தை நல்லவனிடமும் மற்ற குழந்தை வில்லனிடம் வளரும்.வில்லனிடம் வளரும் குழந்தை எமாளியாக கல்வி அறிவற்று குடிகாரனாக பெண் சல்லாபத்தில் ஈடுபட்டவனாக முட்டாளாக வளரும். அதுபோல்தான் கோபியர்கள் கதையைப் படித்தால் வீரா்களும் பக்தா்களும் பொறுப்பான குழந்தைகளும் நமக்கு கிடைக்காது.பொறுக்கிகள்தான் கிடைக்கும். கோபியா்கள் கதை … காலாவதியாகிப்போன ஒரு லட்டு.அதற்கு பொருத்தமான இடம் குப்பைத் தொட்டிதான். இதுதான் சரியான கருத்து. சமயம் தனது வளா்ச்சி என்ற பரிணாமத்தில் கோபியர்களைக் கடந்து வளா்ந்து விட்டது.எனவே வாழை குலையான பின் வாழைப்புவை முறித்து விடுகின்றோம்.அதுபோல் கோபியா்கள் கதையும் என்பது எனது முடிவான முடிவு.

  10. நகேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம்
    ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்

    தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. … (தீராத)

    1.
    தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி

    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
    என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
    எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். … (தீராத)

    2.
    தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன
    செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
    மானொத்த பெண்ணடி என்பான் – சற்று
    மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; … (தீராத)

    3.
    அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை
    அழஅழச் செய்துபின், ”கண்ணை மூடிக்கொள்;
    குழலிலே சூட்டுவேன்” – என்பான் – என்னைக்
    குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். … (தீராத)

    4.
    பின்னலைப் பின்னின் றிழுப்பான்; – தலை
    பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
    வன்னப் புதுச்சேலை தனிலே – புழுதி
    வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். … (தீராத)

    5,
    புல்லாங் குழல்கொண்டு வருவான்; – அமுது
    பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்;
    கள்ளால் மயங்குவது போலே – அதைக்
    கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். … (தீராத)

    6.
    அங்காந் திருக்கும்வாய் தனிலே – கண்ணன்
    ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
    எங்காகிலும் பார்த்த துண்டோ ? – கண்ணன்
    எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? … (தீராத)

    7.
    விளையாட வாவென் றழைப்பான்; – வீட்டில்
    வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
    இளையாரொ டாடிக் குதிப்பான்; – எம்மை
    இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். … (தீராத)

    8.
    அம்மைக்கு நல்லவன் கண்டீர்! – மூளி
    அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
    எம்மைத் துயர்செய்யும் பெரியோர் – வீட்டில்
    யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். … (தீராத)

    9.
    கோளுக்கு மிகவும் சமர்த்தன்; – பொய்ம்மை
    குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
    ஆளுக் கிசைந்தபடி பேசித் – தெருவில்
    அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். … (தீராத)
    —————————
    ஏதோ பாரதியாா் கூட இருந்து பார்த்து போல் எழுதியிருக்கின்றாா். இலக்கியமா ? வரலாறா ?
    குறும்புகள் செய்வது குழந்தைகளுக்கு அழகுதான். சிறப்புதான்.அனைவரும் குழந்தைகள் செய்யும் குறும்புகள் வம்புகள் சேட்டைகள் மற்றம் ரௌடித்தனங்களையும் ரசிப்போம். இயற்கையானது.
    கண்ணன் குறும்புக்காரன் என்று எழுதுவது சிறப்புதான்.ஆனாலும் பாரதியாரின் 9 வது கவிதை எனக்கு பிடிக்கவில்லை.
    ஸ்ரீகண்ணன் என்ற இந்த அற்புதமான மனிதனை புனிதனை இறை அவதாரத்தை அவனவன் மனம் போல் எழுதி நாசப்படுத்தியிருக்கின்றார்கள். விபச்சாரத்தை -விபச்சாரியை Call Girl என்று அழைப்பது போல் ஒரு பணக்கார தேவடியாளை call girl என்று கண்ணியப்படுத்துவதுபோல் நச்சு இலக்கியத்திற்கு ஆபாசத்திற்கு சமூகத்தை பாழாக்கிய புத்தகங்களை சிருங்கார இலக்கியம் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைக்கின்றது ஒரு கூட்டம். அழுகி புளுத்த பிணத்திற்கு தங்க கவசம் சாத்துகின்றோம். போதுமா ? கம்பராமாயாண வா்ணனைகளை மேற்கோள் காட்ட வேண்டுமா ?
    கண்ணதாசன் கருணாநிதி போன்றவர்கள் பெரியாரிடம் பாலபாடம் கற்றவா்கள். ஒரு கட்டத்தில் தமிழ இலக்கியங்களை ஆபாச களஞ்சியம் என்றும் மூடநம்பிக்கைகளின் சுரங்கம் என்று சாடிய பெரியாா் சினிமா எடுப்பது கவிதைகள் எழுதுவது போன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என்று தடுத்தாா். கண்ணதாசனுக்கும் கருணாநிதிக்கும் நச்சு இலக்கியங்கள் -சிருங்கார இலக்கியங்கள் தான் நன்கு சோறு போடும் என்பது நன்கு தெரியும்.எனவேதான் மேற்படி பணப்பைத்தியங்கள் இரண்டும் பெரியாரிடமிருந்து விலகி சிருங்கார சுவை கொட்ட கொட்ட கதைகள் கட்டுரைகள் சினிபா படங்கள் எடுத்து தள்ளி பணம் கோடி கோடியாக சம்பாதித்தார்கள்.
    பின்னல் இட்ட கோபியரின் கண்ணத்திலே கன்னம் வைத்து மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ என்று பாட்டு எழுதினால்தானே லட்சக்கணக்கில் பாடல்கள் விலை போகும். அத்தைத தத்துவம் பேசினால் CD எத்தனை விலை போகும். மக்கள் போக்கு புரியாதவரா இந்த கண்ணதாசன்.சோறா ? சுரணையா ? கொள்கையா பணமா ? என்று வரும் போது உலக மாந்தர்கள் சோறுதான் பணம்தான் பிரதானம் என்று மாறி விடுவார்கள். அதுதான் சிருங்கார சுவையில் உலகம் செல்கின்றது.திருமந்திரத்தை படிப்பவா்கள் எத்தனை போ் ? கோபியா் கொஞ்சும் ராமணனை படிப்பவா்கள் லட்சம்பேராகவே இருப்பாா்கள்.

    ஸ்ரீராமனை ஏன் சிருங்கார சுவைக்கு பயன்படுத்தவில்லை ?குழந்தை ஸ்ரீராமனும் கண்ணன் போல் …………………………………. என்று எழுதி சிருங்கார ?சுவை என்ற சிரங்கை சற்று சொரிந்து கொள்வதுதானே ? ஏன் விட்டு வைத்தார்கள் ? ஏதாவது அரிய பெரிய மகா பெரிய தத்துவம் இருக்கின்றதா ? சிருங்காரம் என்ற பெயரில் கண்ணனை கண்ணியக்குறைவாக அநியாயமாக அவனது உண்மையான தகுதிகளை மறைத்து ஒரு Gay போல் எழுதி குவித்து இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது.

  11. என் மனைவியை உனக்கு தரத்தயாா் என்பது எந்த வகையில் சேரும் ?

    Why did Karna offer his wives to Pandava troops?
    https://www.sacred-texts.com/hin/m08/m08038.htm

    It’s my understanding that sons and wives were considered by many characters of mahabharata as possession – not a normal possession but a most valuable possession of life.
    So when a man becomes ready to give his sons and wives to some one or for some cause he is either making that cause or that person as his most important thing or he has lost his mental state completely.

    Let me give you One of the most famous statement made by Krishna –

    Here is one statement Krishna made where he said there is nothing that he can not give to Arjuna including wives and children. Now obviously Arjuna was not going to ask Krishna for sons and wives.

    The statement was made by Krishna to make the point that there is nothing dearer to Krishna than Arjuna and in case Arjuna ask Krishna for sons or wives – he would happily give his wives or sons to him.

    When he withdrew his heart from that purpose, I addressed the anxious and senseless Ashvatthama and said, “He who is always regarded as the foremost of all human beings, that wielder of gandiva, that warrior having white steeds yoked unto his car, that hero owning the prince of apes for the device on his standard, that hero who, desirous of vanquishing in a wrestling encounter the god of gods, the blue-throated lord of Uma, gratified the great Shankara himself, that Phalguna than whom I have no dearer friend on earth, that friend to whom there is nothing that I cannot give including my very wives and children, that dear friend Partha of unstained acts, never said unto me, O brahmana, such words as these which thou hast uttered.

    Ref . -Sauptika Parva: Section 12

    Krishna in fact makes it clear that doesn’t see any difference between him and Arjuna defining the spiritual bond that he shared with Arjuna-

    Vaisampayana continued, ‘Having addressed Krishna thus, the illustrious Pandava, who was the soul of Krishna, became dumb, when Janardana (in reply addressed that son of Pritha) saying, ‘Thou art mine and I am thine, while all that is mine is thine also! He that hateth thee hateth me as well, and he that followeth thee followeth me! O thou irrepressible one, thou art Nara and I am Narayana or Hari! We are the Rishis Nara and Narayana born in the world of men for a special purpose. O Partha, thou art from me and I am from thee! O bull of the Bharata race, no one can understand the difference that is between us!’

    Ref – Vana Parva: Arjunabhigamana Parva: Section XII

    Remember this quote – “O Partha, thou art from me and I am from thee!”

    Now coming to statement made by Karna, yes he offered his wives to Pandavas army and there no doubt about it –

    If that does not satisfy the person that discovers Arjuna to me, I will make him a more valuable gift, that, indeed, which he himself will solicit. Sons, wives and articles of pleasure and enjoyment that I have, these all I shall give him if he desires them. Indeed, unto him who discovers Keshava and Arjuna to me, I shall, after slaying those two, give all the wealth that may be left by them.”

    Ref – Karna Parva: Section 38

    So make no mistake – he was ready to give sons and wives to the soldier who would give information about Arjuna or Krishna.

    His ultimate goal was to either kill Arjuna or die in hand of him and he was ready to go any extent even if it means offering his sons and wives to a normal soldier.
    In fact he makes a statement that he could cast away any thing for the sake of his friend Duryodhana –

    Karna said I know this, O thou of mighty arms! All this without doubt, is (as thou sayest)! As thou tellest me, O, Bhishma, I am Kunti’s son, and not the son of a Suta! I was, however, abandoned by Kunti, and I have been reared by a Suta. Having (so long) enjoyed the wealth of Duryodhana, I dare not falsify it now. Like Vasudeva’s son who is firmly resolved for the sake of the Pandavas, I also, O thou that makest profuse presents to Brahmanas, am prepared to cast away my possessions, my body itself, my children, and my wife, for Duryodhana’s sake!

    Ref – Bhishma Parva: Bhagavat-Gita Parva: Section CXXIV

    Here the statement was made to make it clear that he values Duryodhana more than his life, sons and wives (Obviously by action of Karna it is pretty much questionable )

    [Note – Critical edition of Mahabharata removed the wife from the statement although but as he said he could give up his life – it literally means he placed Duryodhana before his own wives and sons.]

    Now first hypocrisy –

    When Kunti appeared before Karna to join Pandavas, he said he would not kill any Pandavas except Arjuna for whom he had taken vow and Duryodhana chosen him to fight against Arjuna.
    Very fair, but it was also clear that Bhima had taken vow to kill Duryodhana and his brothers.
    Krishna told to Arjuna – “He that hateth thee hateth me as well, and he that followeth thee followeth me”
    Then how come Karna leave Bhima and chose to kill only Arjuna. Clearly this was not the friendship Krishna shared with Arjuna.
    So when Krishna talked about giving wife to Arjuna he indeed made it clear the spiritual bonding he shared with Arjuna. Where as Krana’s statement of abandoning wife for Duryodhana was purely and overrated statement – Karna was ready to abandon wife for some one he didn’t consider as his own self!!!
    The second hypocrisy Karna shows when he questioned Yudisthira in following way-

    “Karna said,–‘Of all the persons in the assembly, three, viz., Bhishma, Vidura, and the preceptor of the Kurus (Drona) appear to be independent; for they always speak of their master as wicked, always censure him, and never wish for his prosperity. O excellent one, the slave, the son, and the wife are always dependent. They cannot earn wealth, for whatever they earn belongeth to their master. Thou art the wife of a slave incapable of possessing anything on his own account. Repair now to the inner apartments of king Dhritarashtra and serve the king’s relatives. We direct that that is now thy proper business. And, O princess, all the sons of Dhritarashtra and not the sons of Pritha are now thy masters. O handsome one, select thou another husband now,–one who will not make thee a slave by gambling. It is well-known that women, especially that are slaves, are not censurable if they proceed with freedom in electing husbands. Therefore let it be done by thee. Nakula hath been won, as also Bhimasena, and Yudhishthira also, and Sahadeva, and Arjuna. And, O Yajnaseni, thou art now a slave. Thy husbands that are slaves cannot continue to be thy lords any longer. Alas, doth not the son of Pritha regards life, prowess and manhood as of no use that he offereth this daughter of Drupada, the king of Panchala, in the presence of all this assembly, as a stake at dice?'”

    Ref – Sabha Parva: Sisupala-badha Parva: Section LXX

    Here is the man who is questioning how could Yudisthira stake Draupadi in dice while maintaining that no matter whether Draupadi was staked or not, she is slave as her husbands were turned in to slave.

    He also made it very clear that he believed the slaves, sons and wives are always dependent and kind of possession.

    Karna lectured Yudisthira for staking wife and same person goes on to offer wife in midst of battle to common soldiers to fulfill personal ambitions.
    How come staking wife is bad and offering wife in exchange for information which would help to fulfill his personal ambition is good?
    It has to be noted that Yudisthira staked everything on his own but didn’t staked Druapadi, he staked only when he lost himself and Shakuni asked Yudisthira stake her to win back very thing that he lost.
    So he hoped for the best but didn’t considered worst scenario in gambler haze as he trusted his elders that in their presence nothing bad sort could happen.
    Yudisthira always wanted to follow rules at any cost and that was kind of his ego. His another weakness was dice game which he loved to play but didn’t knew the rules – the weakness which was pretty cleverly exploited Shakuni.
    I don’t justify or support the action of Yudisthira but willing to call out the hypocrisy shown by Karna.
    Karna placed his ego on charity which was far more dangerous than Yudisthira.
    It was just because his enemies – pandavas were good and karna himself didn’t possess any thing much valuable which is why he was not exploited much.
    Karna in fact had a vow that he would give life (the highest thing a man can give) to bramhins.

    Kama replied, ‘Surely, this itself is highly fortunate for me that the god himself of splendour addresses me today, seeking my welfare. Listen, however, to these words of mine! May it please thee, O bestower of boons, it is only from affection that I tell thee this! If I am dear to thee, I should not be dissuaded from the observance of my vow! O thou that are possessed of the wealth of effulgence, the whole world knoweth this to be my vow that, of a verity, I am prepared to give away life itself unto superior Brahmanas!

    Ref – Vana Parva: Pativrata-mahatmya Parva: Section CCLXLVIII

    Now the person who considers sons and wives as his possession could easily give away them as charity if some one asked it (even if in disguise of bramhins)

    He could offer his sons and wives to common soldier in exchange of information to fulfill personal information.
    He could give any thing including life to donation to bramhins. Note – Blind charity or donation can’t be considered as good rather should be considered as egoistic action.
    An action that was done for the intention of doing good to society should be considered as good action.
    Karna’s action was for earning fame and merit which would allow him to be in heaven afterlife – its purely for personal issue.
    As I explained earlier that even though Krishna made the statement of giving sons and wives to Arjuna, it was made clear that Arjuna was an exception with whom Krishna hold the closest spiritual bonding.
    Karna’s offer has nothing such sort of thing, rather a materialistic gain to earn merit for personal case or getting information for fulfilling personal ambitions.
    I hope people like Chitra Banerjee Devikaruni or Kavita Kane read such thing before hailing him as best suitor.
    I agree with Gaddagunti Manikanta when he says that Karna is the most misunderstood character in mahabharata. Anything beyond that makes me smile only. The reason being same MB which exposed most most most 100 times most overrated character Karn to the whole world.

    I think the following text from MB can answer this question beautifully:

    Sauptika Parva: Section 12

    When he withdrew his heart from that purpose, I addressed the anxious and senseless Ashvatthama and said, “He who is always regarded as the foremost of all human beings, that wielder of gandiva, that warrior having white steeds yoked unto his car, that hero owning the prince of apes for the device on his standard, that hero who, desirous of vanquishing in a wrestling encounter the god of gods, the blue-throated lord of Uma, gratified the great Shankara himself, that Phalguna than whom I have no dearer friend on earth, that friend to whom there is nothing that I cannot give including my very wives and children, that dear friend Partha of unstained acts, never said unto me, O brahmana, such words as these which thou hast uttered.

    If Krishn could give away his wives and children to Arjun just for friendship without any purpose then what was wrong in Karn offering his wives as reward for seeking his rival on the fateful day?

    What makes Karna’s offer unacceptable and malicious to Karn haters but not that of Krishna’s?

    However, if same people find both statements as height of respective emotions in expressing momentary desire then I think I have answered the question in the most logical and rational manner.

    I look forward to your intelligent comments and views on this answer.

  12. Namaskaram Jatayu Sir

    I think that of all the avatarams of Lord Vishu, Narasimhavathara is the best and is flawless. Lord Krishna did some tricks so that Arjuna won the Kurukshetra war. Lord Ram also did some injustice in Vali vadam. In one of your replies to a reader, you are saying “எல்லா அவதார புருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீ கிருஷ்ணர”. I am not very well informed about our sacred scriptures. Please explain, why Lord Krishna’s avataram is superior to that of other avatharams.

    Sakuntala

  13. சகோதரி சகுந்தலா அவர்களே
    பழைமையின் கல்லறைகளை காப்பாற்ற வேண்டும் அதுதான் மதம் என்ற தேங்கியகுட்டை மனப்பான்மையோடு செயல்படுபவா்களிடம் இதுபோன்ற எந்த தெளிவுரையும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்காது. நான் எழுப்பியுள்ள பல கேள்விகளுக்கு இங்கு எற்கனவே விடை கிடைக்கவில்லை. இந்நிலையில் உங்களுக்கு விடை அளிப்பார்களா ?
    அவதாரங்களில் ஸ்ரீகிருஷ்ணா் சிறந்தவா் என்பதற்கு எந்த ஆதாரமும் விஷேசமும் நிச்சயம் இல்லை. பரசுராமா் அவதார புருஷன் இல்லை. அதற்கான எந்த தகுதியும் அவருக்கு இல்லை.ஒரு மனநிலைபாதிக்கப்பட்டு பழி வாங்கும் போக்கில் சத்திரியா்களையெல்லாம் கொன்று இரத்தத்தை குடித்தாா் என்று படித்த ஞாபகம். பராணங்களில் சுது வஞ்சகம் கட்டுக்கதைகள் பொய்கள் புரட்டு அதிகம்.
    இதுபோன்ற கருத்துக்களை தங்கள் மனதிற்குள் அனுமதிக்க வேண்டாம்.இன்னும் ஸ்ரீகிருஷ்ணரைப் போன்று உயா் தகுதி பெற்றவா்கள் ஆயிரமாயிரம் பேர்கள் இந்த மண்ணில் தோன்றி மறைந்து விட்டாா்கள். நமக்கு ஏதோ ஒரிருவரை அல்லது யாரையுமே தெரியாமல் போகலாம்.இந்துமதம் ஸ்ரீகிருஷ்ணருக்குள் அடங்கி விடவில்லை. இந்து பண்பாடு என்ற பரிணாமத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு மகத்தான இடம் உண்டு.சிறந்த லௌகிய வாழ்வை அரசியலை நமக்கு கற்றுக் தருவதில் அவரே முதல்வா். ஸ்ரீகிருஷணா் சிறந்தவா் என்ற அளவில் அவரைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதற்கு பின் பிறந்த பல புண்ணிய ஆத்மாக்கள் பற்றி அறிந்து கொள்ள கவனம் கொள்வோம். ஸ்ரீநாராயணகுருவைப்பற்றி அயோத்திதாசபண்டிதா் பற்றியும் படிப்போம். வள்ளலாா் பற்றியும் படிப்போம்.இன்னும் பிறக்கப் போகும் தியாகதீபங்கள் பற்றி படிக்க நமது மனக் கதவுகளை திறந்து வைப்போம்.

  14. விவாதம் இந்த அளவில் நின்று போய்விட்டது.அடிக்கடி கருத்துக்களை பதிவு செய்பவா்கள் கூட ஏதும் பதிவு செய்யவில்லை. ஆச்சரியமாக உள்ளது.

  15. அன்பின் ஸ்ரீ ரிஷி, ஸ்ரீ அன்புராஜ் ஐயா

    ஸ்ரீ வைஷ்ணவ குறியீடான திருமண் என்பதனை சண்டியர் ஏகடியமாகப் பேசுவதை ந்யாயாலயத்தில் வழக்காட முனைந்துள்ளனர். நமது தளத்தில் முன்னர் ஆரியத்தமிழன் என்ற பெயரில் கருத்து பதிந்து வந்துள்ள ஸ்ரீ நரசிம்மன் என்ற அன்பர் மூல்யமாக இந்த விவஹாரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என அறிகிறேன்.

    ஹிந்து மதமாக இருக்கட்டும் அல்லது மாற்று மதங்களாகிய ஆப்ரஹாமிய மதங்களாக இருக்கட்டும். அவற்றின் மீது எழுப்பப்படும் ஆரோபங்கள் சாரமுடையதாக இருக்க வேண்டும். ஹிந்து மதத்தின் வைதிக அவைதிக சமயங்களினூடே நிகழ்ந்துள்ள சம்வாதங்கள் இப்படியான தத்வார்த்த ரீதியிலே நிகழ்ந்த அதீத தர்க்கபூர்வமாக நிகழ்ந்த சம்வாதங்களே.

    காமம் என்பதனை மேற்கத்திய உலகு அணுகும் குற்றப்பார்வையுடன் ஹிந்து மத நூற்கள் என்றும் அணுகியதில்லை. அது த்ரிவர்க்கம் எனும் முப்பால் ஆகட்டும் அல்லது சதுர்வித புருஷார்த்தங்கள் ஆகட்டும். காமம் என்பது தார்மிகமாக நுகர வேண்டிய விஷயம் என்றே ஹிந்து மத நூற்கள் (வைதிக மற்றும் அவைதிக நூற்கள்) இதை அணுகியுள்ளன.

    இலக்கியம் வடிப்பதற்கு இலக்கணங்கள் உள்ளன. நவரஸமும் உயர்ந்த இலக்கியத்தில் வடிக்கப்பட வேண்டும். நவரஸங்களுள் மிகவும் ச்ரேஷ்டமாக இலக்கியகர்த்தாக்களால் கொண்டாடப்பட்டுள்ளது ச்ருங்காரம். ரஸானாம் உத்தமம் ச்ருங்கார ரஸ: என்பது ஆன்றோர் வாக்கு. கம்பனும் காளிதாஸனும் எழுதிய ச்ருங்காரத்தினை த்ராவிட அண்ணாதுரை முதலியார் போன்றோர் எடுத்தாள்கையில் அது கொச்சையாகத் தொனிக்கிறதே என்பது பொதுவில் எழும் வினா. தமிழில் ஆகச்சிறந்த இலக்கிய கர்த்தாவாகிய ஸ்ரீ ஜெயமோஹன் அவர்கள் ச்ருங்காரம் மற்றும் மலினமான காமம் இரண்டையும் தனது வ்யாசங்களில் விளக்கியுள்ளார். அது நோக்கத் தக்கது.

    ஹிந்து மதத்தின் ஒவ்வொரு நூலும் இன்று இணையத்தில் கிட்டுக்கிறது, ஆர்வமுள்ளவர்கள் அதை வாசித்தறியலாம். ஆனால் தத்வார்த்தம் என்பது முறையே குருவின் அருளால் …… சாஸ்த்ரங்கள் பகிரும் ஒழுக்கங்களின் பாற்பட்டு நூற்களை கசடறக்கற்று அதன் வழி ஒழுகும் ஒரு குருவின் அருளால்………. மட்டிலுமே அறியத்தக்கது. இணையத்தில் வாசிப்பவர்கள் அதிலிருந்தே குருவின் மற்றும் சிஷ்யனின் லக்ஷணங்களையும் கூடவே வாசித்தறியலாம்.

    கோபியரின் வ்ருத்தாந்தம் ஸ்ரீமத் பாகவதத்தில் காணக்கிட்டும். அருளாளர்கள் ஸ்ரீமத் பாகவதத்தினை கண்ணனெம்பெருமானின் உருவாக வர்ணிக்கப்புகுகையில் ராஸபஞ்சாத்யாயி எனப்படும் தசமஸ்கந்தத்தின் ஐந்து அத்யாயங்களை அவனின் ஹ்ருதயஸ்தானமாக குறியீடாகக் காண்பிக்கின்றனர். அது மட்டுமா. பக்தியினை விளக்க ஸுத்ரத்தை எழுதியருளிய நாரதர் தமது நார்த பக்தி ஸூத்ரத்தில் ஏகாதச பக்தி ஆசக்திகளில் மிக உயர்ந்ததாக கோபியரின் பக்தி பாவத்தை குறிப்பிடுகிறார்.

    கோபி பாவம் என்பது மலினமான காமம் என்று ஏகடியம் செய்பவர்கட்கோ அல்லது விலக்கத்தக்கது என்று எண்ணுபவர்கட்கோ அது தேவையற்றது. அவர்கள் அதிலிருந்து விலகிச் செல்லலாம். தத்வார்த்தங்களுள் நாட்டமுள்ளவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தின் ராஸ பஞ்சாத்யாயி மற்றும் பஞ்ச கீதங்கள் இவற்றை மேலும் வாசிக்கப்புகுகையில் மேலும் தெளிவு கிட்டும். முறையான கல்வி அறிவு பெறாத ஆனால் அளப்பிடற்கரிய ஞானத்துக்கு சொந்தக்காரர்களாகிய கோபியரை ஸாக்ஷாத் தேவகுருவான ப்ருஹஸ்பதியிடம் கல்வி கற்ற கண்ணனின் தோழனான உத்தவன்……….. நந்த வ்ரஜ ஸ்த்ரீணாம் பாதரேணும் அபீக்ஷ்ணச: ………… கோபியரின் திருவடித்தூளி நான் பெறக்கடவேன் என்று சொல்லப்புகுவானெனில் ………… அவர் தம் பெருமையினை எங்ஙனம் பறைசாற்றலாம். மேலும் நாட்டமுள்ளவர்கள் கௌடிய க்ரந்தங்களாகிய பக்தி ரஸாம்ருத ஸிந்து மற்றும் உஜ்வலநீலமணி போன்ற க்ரந்தங்களை வாசித்து உய்வுறலாம். ஆயினும்……..ஆயினும்…….உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே எனும்படிக்கு கண்ணனையே கதியாகக்கொண்டு சாஸ்த்ரம் காட்டும் லக்ஷணப்படி வாழும் குருவினை அடைக்கலம் புகுந்தால் மட்டிலுமே கோபீ பாவம் என்பதன் ஒரு கிரணத்துக்குக் கூட ஜீவன் அதிகாரியாவான் என்றே சாஸ்த்ரங்கள் இயம்புகின்றன.

    எழுப்பப்படும் வினாக்களுக்கு நேரடியாக சிறியேனால் உத்தரமளிக்க இயலவில்லை. காரணம் தகுதிக்குறைவு, ஆயினும் உத்தரம் பெறுவதற்கான பாதை திண்ணமாகக் காட்டியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.

    கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
    எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணனே.

  16. கம்பன் ஒரு வம்பன்
    என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவு U tube ல் உள்ளது. படித்து பாருங்கள். இலங்கேஸ்வரன் போர்களத்தில் செத்துக் கிடக்கின்றான்.அறிந்து இராவணனின் மனைவி மண்டோதரி கணவனின் உடலைக்காண வரும் காட்சியை கம்பன் வா்ணிப்பதை கம்பன் ஒரு வம்பன் என்று சிரித்துக் கொண்டே சொல்கின்றாா்.நான் கம்பனின் வாக்கியத்தை பதிவு செய்ய விரும்பவில்லை.அது அநாகரீகமானது.காட்டுமிராண்டித்தனமானது. நீசத்தனமானது.

    தங்களுக்கு திறமை இருந்தால் அந்த பாடலை பதிவு செய்து அப்படி கம்பன் என்ற வம்பன் எழுதியதற்கான நியாயத்தை தெரிவிக்க வேண்டும். தங்கள் மனைவியையோ தங்கையையோ தாயையோ ஒருவன் அப்படி ஒரு வர்ணணை செய்வது தங்களுக்கு உகந்ததாக இருக்குமா ? என்னால் ஏற்க முடியாது. நாம் தெய்வமாக கும்பிடும் பெண்ணின் அலகுல் பற்றி -பாம்பு படம் எடுத்தால் போல் இருந்தது என்று எழுதுவது கம்பனின் இலக்கிய சுவை என்பதை என்னால் ஏற்க முடியாது.இந்த ஆபாச வா்ணனைகள் கதையின் ஒட்டத்திற்கு கருவிற்கும் தேவையில்லை.
    SANE SEX ORDER BY PITRIM A SOROKIN -PUB.BHARATHIYA VIDYA BHAVAN என்ற புத்தகத்திற்கு தங்கள் கவனத்தை வேண்டுகின்றேன். ரஷ்யாவில் கம்யுனிசத்திற்கு எதிராக செயல்பட்ட சோரோகின் மானுடவியலில் அவர் பெற்றிருந்த மேதாவிலாசத்திற்காக ஆட்சியாளா் ஸ்டாலின் அவர்களால் நாடுகடத்தப்பட்டாா்.அவரது புலமைக்கு இது எடுத்துக் காட்டு. The future is for the village,town and country which is chaste என்பது இவரின் முடிவு.
    01..எனது கருத்தை தாங்கள் முறையாக பரிசீலனை செய்யவில்லை.
    02.எனது கடிதத்தில் தொிவிக்கப்பட்ட தகவல்களுக்கு எந்த விளக்கமும் தாங்கள் அளிக்கவில்லை.அதை மறுக்கவும் இல்லை.
    03.ஸ்ரீபாம்பன் சுவாமிகள் ஒன்றும் முட்டாள் இல்லை.தங்களை விட அறிவிலும் ஞானத்திலும் தவத்திலும் மிக மிக மிக மேம்பட்டவர்தான். அவரது கருத்துக்களை தள்ளுபடி செய்பவர்கள் பழமை பைத்தியங்கள். கல்லறை காவல்கள். சமூதாய நோக்கு அக்கறை கடுகளவும் இல்லாத சுயநல பிண்டங்கள்.
    04.வள்ளலாா் புராணங்களை சுது என்று குறைசொல்லுகின்றாா்.பரிசீலனை செய்தால் குறைந்து போய்விட மாட்டோம்.
    05. கோபியா் கொஞ்சும் ரமணன் என்ற புத்தகத்தை உங்கள் தாய் தமக்கை மகள் மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் 10 போ்கள் முன்னிலையில் வாசித்து காட்டினேன். யாரும் முகம் சுளிக்கவில்லை.ரசித்து கேட்டார்கள் என்று தங்களால் சான்று அளிக்க முடியுமா ?கம்பன் -வம்பன் பாடலையும் அங்கு வாசித்துக் காட்டலாம்.
    06. பழைய காலத்து விஷங்களை நச்சுக்களை அமிர்தம் என்று பீற்றி அலைய வேண்டாம்.ராசலீலை ராசகீாிடை என்பது இலக்கிய நச்சுக்கள்.ஸ்ரீகிருஷ்ணனை இதுபோல் வேறு எவரும் அசிங்கப்படுத்த முடியாது. தயது செய்து அதை அமிா்தம் என்று சொல்லி பாமர மக்களை ஏமாற்றாதீா்கள். நீங்கள் விரும்பினால் அந்த வழி போகலாம் என்பது தீமிரான பேச்சு. தெருவில் சாக்கடை பெருகினால் பாதிப்பு அனைவருக்கும்தான். சாக்கடை பெருக நான் காரணம் இல்லை என்று நினைத்து ஒதுங்க முடியாது. நச்சு இலக்கியம் படித்து தங்களைப் போன்ற இலக்கிய போலிகளின் கருத்தை நம்பி தன் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்பவன் எனது உறவினனாக இருக்கலாம். ஜீரணிக்கக் கூடியதை உண்ண வேண்டும்.
    07.சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டிய கனவான்கள் இந்தியாவிற்கு தேவை கீதையின் கண்ணன்தான்.
    கோபியரின் கண்ணன் அல்ல

    என்ற விவேகானந்தரின் கருத்திற்கு என்ன நியாயம் சொல்லப் போகின்றார்கள்.இதுவரை எந்த நியாயத்தையும் எழுதவில்லை.எழுத வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    08.கோபியர்கள் யாா் ? அவர்கள் இப்படி வேலை வெட்டியின்றி கண்ணனை சுற்றி வந்தாா்களா ? உடலை பற்றிய உணா்வின்றி கண்ணன் மீது பக்தி செய்தார்களா ?
    09.ஸ்ரீராமகிருஷ்ண தபோவத்து பத்திரிகையான தா்மசக்கரத்தில் ” சாதுக்கள் நிா்வாணமாக அலைவதை பாராட்டி எழுதியிருந்தாா்கள். நான் அந்த துறவியிடம் ” நிா்வாணமாக பொது இடத்தில் அலைவது சாதனை என்று நீஙகள் நம்பினால் தாங்களும் வெளியே செல்லும் போது நிா்வாணமாக சென்று வாருங்களேன். நிா்வாணம் சிறந்தது உயா்ந்த சாதனை என்ற கருத்து நமது மடத்தில் இருக்கும்ஆண் துறவிகளுக்கும் பொருந்துமா ? சேலம் ஸ்ரீசாரதா சமிதியில் இருக்கும் பெண் துறவிகளுக்கும் பொருந்துமா ? என்று கேட்டேன். எழுதியது தவறுதான் நடைமுறை வாழ்க்கைக்க சரிபட்டு வராது என்று ஒப்புக் கொண்டாா்.
    08.மற்றவா்களுக்கு புரியும் படி எழுதுங்கள்.எளிமையாக எழுத படியுங்கள்.

  17. கோபி பாவம் என்பது மலினமான காமம் என்று ஏகடியம் செய்பவர்கட்கோ அல்லது விலக்கத்தக்கது என்று எண்ணுபவர்கட்கோ அது தேவையற்றது. அவர்கள் அதிலிருந்து விலகிச் செல்லலாம். தத்வார்த்தங்களுள் நாட்டமுள்ளவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தின் ராஸ பஞ்சாத்யாயி மற்றும் பஞ்ச கீதங்கள் இவற்றை மேலும் வாசிக்கப்புகுகையில் மேலும் தெளிவு கிட்டும். முறையான கல்வி அறிவு பெறாத ஆனால் அளப்பிடற்கரிய ஞானத்துக்கு சொந்தக்காரர்களாகிய கோபியரை ஸாக்ஷாத் தேவகுருவான ப்ருஹஸ்பதியிடம் கல்வி கற்ற கண்ணனின் தோழனான உத்தவன்……….. நந்த வ்ரஜ ஸ்த்ரீணாம் பாதரேணும் அபீக்ஷ்ணச: ………… கோபியரின் திருவடித்தூளி நான் பெறக்கடவேன் என்று சொல்லப்புகுவானெனில் ………… அவர் தம் பெருமையினை எங்ஙனம் பறைசாற்றலாம். மேலும் நாட்டமுள்ளவர்கள் கௌடிய க்ரந்தங்களாகிய பக்தி ரஸாம்ருத ஸிந்து மற்றும் உஜ்வலநீலமணி போன்ற க்ரந்தங்களை வாசித்து உய்வுறலாம். ஆயினும்……..ஆயினும்…….உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே எனும்படிக்கு கண்ணனையே கதியாகக்கொண்டு சாஸ்த்ரம் காட்டும் லக்ஷணப்படி வாழும் குருவினை அடைக்கலம் புகுந்தால் மட்டிலுமே கோபீ பாவம் என்பதன் ஒரு கிரணத்துக்குக் கூட ஜீவன் அதிகாரியாவான் என்றே சாஸ்த்ரங்கள் இயம்புகின்றன.
    ——————————————
    இதை யாராவது எளிமையான தமிழில் மீண்டும் பதிவு செய்து உதவ வேண்டுகின்றேன்.

  18. அ.அன்புராஜ் அவர்களுக்கு, ஏற்கனவே உங்களது கருத்துக்கு கட்டுரையாசிரியர் உரிய மறுமொழி அளித்து விட்டார். நண்பர் கிருஷ்ண குமார் அவர்களும் தம் கருத்துக்களைச் சொல்லி விட்டார். அது எதையுமே உள்வாங்காமல் சும்மா உங்களது வறட்டுத்தனமான கருத்துக்களையே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நமது இந்துமத பக்தி மரபுகள், காவியங்கள், இலக்கியங்கள் இது குறித்த அடிப்படையான புரிதல் கூட முதிர்ச்சியற்றதாக உங்கள் கருத்துக்கள் உள்ளன.

    // கம்பன் ஒரு வம்பன் // – கம்பனை ராமகாதையை தமிழில் எழுதிய கவிச்சக்கரவர்த்தி என்ற அளவில்தான் நாம் போற்றுகிறோமே அன்றி, ஆன்மீக குருவாக அல்ல. காவிய ரசம் என்ற அளவில் சிருங்காரம், வீரம் உள்ளிட்ட அனைத்து ரசங்களையும் உணர்வுகளையும் காளிதாசன் போன்ற கவிஞர்கள் வெளிப்படுத்திய வகையிலேயே கம்பனும் எழுதியுள்ளான். உங்களுக்கு அது தவறாகத் தோன்றுகிறது என்றால் அது உங்களுக்கானது அல்ல, நீங்கள் படிப்பதைத் தவிர்க்கலாம்.

    பாம்பு படமெடுத்தது போன்ற அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கிறது என்று முற்றிலும் தவறாக மூன்றாந்தர ஆசாமிகள் எழுதியதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். தமிழை ஒழுங்காகப் படித்துவிட்டுப் பேசுவது நல்லது. கம்பராமாயணம், ஆழ்வார் நாயன்மார் பாசுரங்கள் எல்லாவற்றிலும் அல்குல் என்பது மேலே அகன்று கீழே குறுகியுள்ள மென்மையான இடையின் வடிவத்தைக் குறிக்கிறது (hour glass figure என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அது போல).. பெரியாழ்வார் பாசுரத்தில் “அல்குலேறி விளையாடி” என்று யசோதை கண்ணனிடம் சொல்வதாக வருகிறது.

    உங்களுக்கு தமிழ் பக்தி இலக்கியங்களில் சிறிதுகூட பரிச்சயமில்லை என்பதை உங்கள் மறுமொழிகள் காட்டுகின்றன. அருளாளர்கள் தங்களை நாயகி பாவத்திலும் இறைவனை நாயகனாகவும் கொண்டு பாடிய பாடல்களே இவற்றில் பெரும்பான்மையானவை. அவற்றில் சிருங்கார ரச வர்ணனை கணிசமான இடங்களில் உண்டு. முலைகளைப் பற்றிய வர்ணனை வந்தாலே அது விரசமானது, சென்சார் செய்யப் படவேண்டியது என்று உங்களைப் போலக் கருதினால் ஒட்டுமொத்த சைவத்திருமுறைகளையும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையுமே தூக்கிப் போட வேன்டியது தான்.. உங்கள் வள்ளலார் உச்சிமேல் வைத்துப் போற்றிய திருவாசகத்திலே எத்தனை இடங்களில் கொங்கை / முலை பற்றிய வர்ணனைகள் வருகின்றன என்று பாருங்கள். 90% இடங்களில் தேவியைக் குறித்தும், அடியார்களான பெண்களைக் குறித்துமே நேர்மறையாக அந்த வர்ணனைகள் உள்ளன. 10% இடங்களில் மட்டுமே பெண்ணாசையை நிந்திக்கும் இடங்களில் அத்தகைய வர்ணனைகள் உள்ளன. நல்லவேளை தமிழ்நாட்டின் பக்தர்கள் யாரும் உங்களைப் போல இல்லை. அவை பெண்ணழகின் “முழுமை” என்ற பரிமாணத்தைக் குறிக்கின்றன என்ற புரிதல் அவற்றை பக்தியுடன் கற்று ஓதும் எல்லா பக்தர்களுக்கும் உள்ளது.

    கோபிகைகளின் பக்தி குறித்து ஏற்கனவே ஜடாயு முன்பு ‘கோபிகா கீதம்’ பதிவில் விரிவாக எழுதியிருக்கீறார்.. அதை நீங்கள் வாசிக்கலாம் – https://tamilhindu.com/2010/08/gopika-geetam/

  19. காவிய ரசம் என்ற அளவில் சிருங்காரம், வீரம் உள்ளிட்ட அனைத்து ரசங்களையும் உணர்வுகளையும் காளிதாசன் போன்ற கவிஞர்கள் வெளிப்படுத்திய வகையிலேயே கம்பனும் எழுதியுள்ளான். உங்களுக்கு அது தவறாகத் தோன்றுகிறது என்றால் அது உங்களுக்கானது அல்ல, நீங்கள் படிப்பதைத் தவிர்க்கலாம்.
    ————————–
    சிருங்காரம் என்பது இலக்கிய பாலில் விழுந்த விஷம்தான் என்பது மட்டும் என் கருத்து.அதில் எந்தவித மாற்றமும் இல்லை. சாக்கடையில்தான் நாங்கள் இருப்போம் சமூக சிந்தனையின்றி பெண்களின் அலகுல் முலைகள் பற்றிய வா்ணணையில் காலம் கழிப்போம் என்று கழிப்பவா்கள் கழிக்கபட்டும்.

    இளைஞா்களை ராமன் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எனது ஆர்வத்திற்கு ஆதரவு இங்கு இல்லை.தங்களது கருத்துக்கள் கற்காலத்தவை.அவைகளால் காமூகா்களே தோன்றுவார்கள். தமிழ இலக்கியங்களை படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கின்றேன். குப்பைகளைப்படித்து ஆவதென்ன ?
    எனது பயணம் எனது வழியில் தொடரும்.

  20. சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி தபஸ்சானந்தா் ஆங்கிலத்தில் எழுதிய பாகவதம் என்ற நூலில் மதிப்புரை இந்துவில் வெளியானதை படித்தேன். மேற்படி புத்தகத்தில் ஸ்ரீகிருஷ்ணா் பல கோபிகை திருமணம பந்தம் யின்றி பெண்களுடன் உடல் உறவு கொணடாா் என்றும் கிருஷ்ணா் Universal soul எனவே அவருக்கு பந்தம் இல்லை என்று புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது என்று மதிப்புரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.எனவே மேற்படி புத்தகத்தை நான் வாஙகி படிக்கவில்லை.

  21. ‘உங்கள் வள்ளலார்” என்றது கண்டிக்கப்பட வேண்டியது.

    எதையும் ஏற்பதற்கும் விடுவதற்கும் ஒவ்வொரு இந்துவுக்கு உரிமை இருக்கிறது. இதை மறுப்பவர்கள் தீவிர இசுலாமில் சேர்ந்து வாழலாமே?

    இந்து இலக்கியத்தில் சிருங்கார இரசம் இருக்கிறது. அதற்கு எவ்வளவுதான் எப்படித்தான் விளக்கங்கள் கொடுத்தாலும் தன்னால் ஏற்க முடியவில்லை என்று ஓரிந்து சொல்லி (திரு அன்புராஜுக்கு இராமன் வேண்டும்; கிருஸ்ணன் வேண்டாமென்பதைப்போல) தனக்கு பிடித்தவாறு. மதத்தை கடைத்தொழுகுவதை —”எனது பயணம் எனது வழியில் தொடரும்! — என்று சொல்பவரை தடுத்து; கேலி செய்பவர் எப்படி இந்துவாக இருக்க முடியும்?

    கடவுளை எவ்வுருவிலும் பார்க்கலாம். எவ்வுருவையும் மறுதலிக்கலாம். பக்த இராமதாஸ் கடவுளை, இராமன்-சீதை தமப்தியாக‌ மட்டுமே பார்த்தவர். ஒருமுறை, பந்தர்பூர் விட்டோபாவின் கோயிலுக்குச் சென்ற போது அங்கு விட்டோபாவின் உருவத்தைப் பார்த்து (விட்டோபா மராட்டியர் வணங்கும் விஷ்ணு வடிவம்)) வணங்க மாட்டேன் என்று சொல்ல நடையைக்கட்டினார். ஆனால் விட்டோபா அவர் முன் – உன் விருப்பப்படி காட்சியளிப்பேன்; வா!” எனறவுடன் இராமதாஸ் சென்றார்; விட்டோபா இராமன்-சீதை தம்பதியாக கருவறையில் காட்சி தந்தார் என்பது பக்த இராமதாசின் வரலாறு. பக்த இராமதாசே சிவாஜியின் குரு.

    அனைவருக்கும் இந்துமதம் அவரவர் வழியில் என்பதுவே இம்மதத்தின் அடிப்படை. உங்கள் விருப்பத்தை பிறரின் மீது திணித்து தாலிபான் ஆட்டம் ஆடாதீர்.

  22. அன்புராஜுக்கு இராமன் வேண்டும்; கிருஸ்ணன் வேண்டாமென்பதைப்போல
    திரு பிஎஸ்வி யின் கருத்துக்களுக்கு நன்றி. தங்களின் பதிவை சற்று முன்னதாகவே எதிா்பார்த்தேன். நன்றி.
    ——————————————————————
    வாழும் கலை பற்றி அரசியல் பற்றி இந்த உலகத்தில் ஸ்ரீகிருஷ்ணா் அளவிற்கு பாடம் கற்றுத் தருவதற்கு வேறு யாா் உள்ளாா் ? இல்லவே இல்லை. தந்திரம் மந்திரம் என்று அவர் செய்யாத வித்தைகள் வேறு உள்ளதா ? தா்மத்தைக் காக்க அவா் பட்ட பாடு வேதனை என்ன என்ன ? அப்பப்பா ? ஸ்ரீகிருஷ்ணரை நான் ஸ்ரீராமன் அளவிற்கு பெரதும் மதிக்கின்றேன்.ஆனால் அந்த ஸ்ரீகிருஷ்ணன் நச்சு இலக்கிய வாதிகளால் நாசப்படுத்தப்பட்டுள்ளாா். அவரை ஆபாச புளுகு நச்சு இலக்கியங்களில் இருந்து அவரை மீட்க வேண்டும் என்பது மட்டும் தான் எனது ஆவா. ஆதரவு கிடைக்குமா என்று எனது கருத்தை பதிவு செய்தேன் அவ்வளவுதான். யார் சிறந்தவா் என்பதெல்லாம் நியாயமான விவாதம் அல்ல.அவரவர் நிலையில் அவரவா் சிறந்தவா்.ஸ்ரீராமன் வாழ்வு ஒரு பாடம்.ஸ்ரீகிருஷ்ணா் வாழ்வு ஒரு பாடம்.இரண்டுமே நமக்கு தேவைதான்.நச்சு இலக்கியமான பொய்யான கற்பனையான ராஸலீலை யை கொளுத்த வேண்டும். அது பொய்யானது என்று குப்பையில் தள்ளி கொளுத்த வேண்டும் என்பது மட்டும் எனது கருத்து.
    சுவாமி விவேகானந்தருக்கும் அந்த கருத்துதான் உள்ளது.அதனால்தான் இந்தியாவிற்கு தேவை பகவத்கீதையின் கண்ணன்தான்.

    கோபியா்களின் கண்ணன் அல்ல என்று தெளிவாக அறிவித்துள்ளாா்.
    இந்துக்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது.ஆனால் ஒரு சமுதாயமாக வாழ அனைவருக்கும் குறைந்த பட்ச செயல் திட்டம் தேவை என்பதும் ஒரு நியாயம்.இல்லையெனில் இந்து சமுகம் மனித வளத்தை விரயமாக்கி நாசமாக போய்விடும்.

  23. //.நச்சு இலக்கியமான பொய்யான கற்பனையான ராஸலீலை யை கொளுத்த வேண்டும். அது பொய்யானது என்று குப்பையில் தள்ளி கொளுத்த வேண்டும்//

    இதுபோல பெரியாழ்வாருக்கும் தோன்றியிருக்க வேண்டும். அவர் கிருஸ்ணரை அடல்ட் ஆக பார்க்கவில்லை. குழந்தையாக மட்டுமே பார்த்தார். பாரதியாரும் பல வடிவங்களில் பார்த்தாலும் இராசலீலா பற்றி பேசவில்லை. இராசலீலாவை, ஹரே கிருஸ்ணா, ஹரே ராமா கோஷ்டியினரிடமே விட்டால் நல்லது. அவர்கள் ஆயிரம் உட்பொருள்கள் சொல்வார்கள்; அவற்றைக் கேட்டு அங்கு சேர வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். எனினும் அதுவும் ஒரு பிரிவு.

    இந்துமதம் இப்படியாக எல்லாம் நிறைந்தது. விலக்கவேண்டியதை விலக்கிக்கொண்டு வேண்டிதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். இந்து ஒற்றுமை என்பது இந்து வேற்றுமை என்பதன் மேலேதான் கட்டமுடியும். இல்லாவிட்டால் இராசலீலாவைத் திணிக்கவேண்டும். ”உங்கள் வள்ளலார்” என்று நையாண்டி பண்ணவேண்டும். இராசலீலாவையும் வருணாஷ்ரதர்மத்தை ஏற்காதவனை கிருத்துவ கைக்கூலி என்று வசை பாடவேண்டும். அவரவர் விருப்பு வெறுப்புக்களை ஏற்று அவைகளினூடே ஓர் ஒருமையைக் கட்டப்பார்த்தால் இம்மதம் எதிர்காலத்தில் இன்னும் சிறக்கும்.

  24. குளியலில் ஆழ்ந்த யுவதிகளின்
    ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டு
    பின்பு திக்கே ஆடையாக நின்று -( எனது கருத்து அம்மணமாக நின்று )
    தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை
    அருகில் அழைப்பவன்.
    —————————-
    எவ்வளவு பொய்யான பொல்லாத வார்த்தைகள் .கற்பனைகள் உண்மையின் மகத்துவத்தை அழித்து விடக் கூடாது. ஒரு தியாகியை யோகியை ….. அசிங்கமாக சித்தரிக்கக் கூடாது.

    தவறான இலக்கிய கொள்கையினால் இந்து சமூகத்தின் மனத வளம் அழிந்து வருகின்றது.உாயா்சாதி மக்களுக்கு இதனால் பாதிப்பு இருக்குதா இல்லையா என்பது தெரியாது.பிற்பட்ட சாதிகள் ஸ்ரீகிருஷ்ணரைப் படித்தால் ….வழி தவறி போவார்கள்.
    தம்ழ்நாட்டில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, தனி குடும்பம் வைத்திருப்பான். இப்படத்திற்கு பெயா்”

    வீட்டில் ராமன்.வெளியில் கிருஷணன்-

    ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறப்பு எங்கே இருக்கின்றது.கண்ணியம் எங்கே உள்ளது. ஸ்ரீகிருஷ்ணரை இந்துக்கள் எவ்வளவு கேவலமான நிலையில் வைத்துள்ளாா்கள் என்பதற்கு இது ஒரு உரைகல்.இப்படி ஆயிரம் உள்ளது..

    மகாபாரத காலத்திலும் அவர் பலரிடம் வசைதான் வாங்கினாா். இன்றும் அவர் ????பாவம் ஸ்ரீகிருஷ்ணா். இரத்தக்கண்ணீா் வருகின்றது.வாய்விட்டு அழவேண்டும் போலிருக்கின்றது.

  25. இந்துமதம் இப்படியாக எல்லாம் நிறைந்தது. விலக்கவேண்டியதை விலக்கிக்கொண்டு வேண்டிதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
    ரொம்பசரி.இந்துமதம் ஒரு பிரமாண்டமான சந்தைக்கடை. அங்கு மீன் உண்டு.இறைச்சி உண்டு. காய்கறிகள் உண்டு.உலகத்தில் மனிதர்களுக்கு பயன்படும் அனைத்தும் உண்டு.இறைச்சி வாங்குபவன் காய்கறிகளை வாங்குகிறவனை இழிவு படுத்தக் கூடாது.அதுபோல் காய்கறி வாங்குகிறவனும் இறைச்சி வாங்குகின்றவனை இழிவாக கருதக் கூடாது. எனது கருத்து கலப்படம் கூடாது என்பதுதான். நான் கேட்பது தங்கம்.அதற்கு சரியான விலையை கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்.ஆனால் மாற்றுக் குறைந்த தங்கத்தைஅல்லது பித்தளையை தங்கம் என்று சொல்லி ஏமாற்றக் கூடாது.
    ஸ்ரீகிருஷ்ணா் அருமையான ஒரு ஜீவ டானிக். ஸ்ரீகிருஷ்ணரின் ஜீவடானிக் லேபல் போட்டு பாலிடாலை விற்பனை செய்து கல்லா கட்டுகின்றார்கள் சிருங்கார மடையா்கள். காடையா்கள். நீ எமாற வில்லை.மற்றவர்கள் ஏமாறுவதை தடுக்க நீ யாா் என்று என்னை கேட்பது நியாயமா ? இதுவே எனது வழக்கு.

  26. //இதுவே எனது வழக்கு.//

    புரிகிறது. ஆனால் உங்கள் போக்கிற்கும் தாலிபான்; ஐ எஸ் ஐ எஸ்; இசுலாமியத் தீவிரவாதிகள் (வஹாபிகள்; இசுலாம் பிரதர்ஹீட்) இப்படிப்பட்ட மதத்தீவிரவாதிகளுக்கும் உங்கள் போக்கிற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? எனபதே என் கேள்வி. பதில் சொல்லுங்கள்; தொடரலாம்.

  27. முகம்மது ஒரு சமய ஆச்சாரியாா் அல்ல.கடவுள் பக்தி பற்றி பேசிய ஒரு அரேபிய ஆட்சியாளா்.ராணுவ தளவதி.சண்டியா்.தாதா.ஹிடலா் போல் உலகை ராணுவ நடவடிக்கை மூலம் வென்று ஒரு கொடைக்குள் அரேபிய கலாச்சாரத்தின் அடிப்படையில் அரேபிய கலாச்சாரத்தை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும் என்பது ராணுவ தளபதி ஆன முகம்மதின் லட்சியம். அதற்கு ராணுவ முறைப்படி எதிரிகள் யாருக்கும் தயவு தாட்சண்யம் காட்ட வேண்டியதில்லை.காபீர் என்று முத்திரை குத்தி கொன்று விட குரான் அனுமதி அளிக்கின்றது.முகம்மது சாவின் விளிம்பில் இருக்கும் போது சொன்ன வார்த்தை ” இந்த அரேபிய மண்ணைவிட்டு யுதா்களையும் கிறிஸ்தவர்களையும் விரட்டி விடுங்கள்” என்பதே. இவ்வளவு பொல்லாத போதனைகளை நச்சு கருத்துக்களை அதிக அளவில் போதித்த ஒரு அரேபிய வல்லாதிக்க வாதியை பின்பற்றும் கூட்டம் ஒரு காடையா்களின் கூட்டம்.
    இன்று கூட தோ்தல் பிரச்சார கூட்டங்கள் நடைபெறும் ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 129 போ்கள் -முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளாா்கள். .இசுலாம் குரான் முகம்மது இருக்கும் வரை இந்த உலகத்திற்கு அமைதி ஒரு போதும் வராது.இசுலாம் அதன் பிறந்த இடத்திலேயே அழவின் சக்தியாக உள்ளது.அரபு நாடுகளை இணைக்க அதால் இயலாது போயிற்று.

    முகம்மதின் பேரால் முகம்மதின் போதனைகளால் நாச
    வேலைகள் செய்யும் ஒரு ரௌடிக் கூட்டமும்
    நானும் ஒன்றா ?
    யாரையும் கொலை செய்ய நான் தூண்ட வில்லையே.யாரையும் அழிக்கச் சொல்லவில்லையே. மனிதனை வெடிகுண்டுகள் வைத்து நாசமாக்கவிலலை.நான் சாப்பிடுவது சைவம்தான். என்னையும் தலியான்களையும் ஒப்படுவது ?????????சற்றும் பொருத்தமானது அல்ல.
    ஆனால் லட்சணக்கணக்கான வேறுபாடுகள் கொண்ட மக்களை இந்து கலாச்சாரம் ஒரே நிா்வாக அமைப்பில் அரசியல் அமைப்பில் வைத்துள்ளது இந்து தா்மத்தின் சாதனை.
    இந்தியாவில் சமய ஆச்சாரியாா் என்ற சொல் தரும் கருத்திற்கும் முகம்மதுவிற்கும் சம்பந்தம் இல்லை.2500 ஆண்டுகளுக்கு முன்பே கௌதம புத்தனை நாம் சமய கலா்சார வழிகாட்டியாக பெற்று இன்றும் கொண்டாடி வருகின்றோம். நவீன கால இந்துமதம் கௌதமரால் உருவாக்கப்பட்டதுதான்.கௌதமனை சிருங்கார சுவையில் யாரும் பாடவில்லை..ராமனைப்பாடவில்லை.சிருங்கார சுவை என்பது pornography என்பதுதான் என் கருத்து.அது கமூகத்திற்கு தீமை செய்து வருகின்றது.தீமைதான் செய்து வருகின்றது என்பது பல ஆண்டுகளாக சமூக நடைமுறையைப்பார்த்து நான் வந்த முடிவு .எனது கடிதங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை ஒவ்வொன்றாக மறுக்க வேண்டியதுதானே.அதைவிட்டு விட்டு தாங்கள் தாலியான் என்று எழுதுவது சற்றும் பொருத்தமானது அல்ல.
    1.சுவாமி விவேகானந்தா் இந்தியாவிற்கு தேவை கீதை சொன்ன கண்ணன். கோபியரின் கண்ணன் அல்ல என்ற கருத்திற்கு ஆதரவாக அல்லது எதிராக தங்களின் கருத்தை பதிவிடுங்கள் திரு.பிஎஸவி அவர்களே!

  28. திரு.BSV அவர்களுக்கு மேலே உள்ள எனது பதிவுகளில் உள்ள கருத்தக்கள் ஒவ்வொன்றாய் தாங்கள் மறுக்கவில்லை.மறுத்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

  29. இசுலாம் குரான் முகம்மது இருக்கும் வரை இந்த உலகத்திற்கு அமைதி ஒரு போதும் வராது.
    Absolutely. The other day, I watched a news item in which the muslim militants were screaming that they will fight with the Jews and the Hindus until these two races are wiped out. It is my understanding that Osama claimed India is an unfinished chapter in jihad.
    Sakuntala

  30. இக்கட்டுரைப்பொருள் வேறு; நாம் பேசுவது வேறு. மன்னிக்கவும். விளக்கம் சொல்லவேண்டியதால் சொல்கிறேன்.

    மஹமது ஒரு தீர்க்கதரிசி அல்லது மார்க்க தரிசி என்றுதான் இசுலாமியர்களால் கருதப்பட்டு அழைக்கப்படுகிறார். Prophet. சமய ஆச்சாரியரில்லை. சமய ஆச்சாரியர் என்ற சொல்லுக்கு இணையான சொல் மவுலானா. மவுலானாக்கள். மஹமதுவின் வாழ்க்கையையும் குரானின் உட்பொருள்களையும் விளக்குபவர்கள். மஹமது காலத்துக்குப்பின்னர் இசுலாம் வெகுவேகமாக பரவும்போது மவுலானக்கள் வந்தார்கள். இசுலாம் ஒரே வழியைக் காட்டவேண்டும். எனவே தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக முடியாதங்கே! மவுலானக்கள் வேண்டும். இந்துமதம் ஒரே வழியைக் காட்டவில்லை. (இந்துமதத்தில் ஒரு பிரிவில் மவுலானக்கள் அதாவது ஆச்சாரியர்கள் வேண்டும். ஆச்சாரியன் மூலமே தெயவத்தை அடைய வேண்டுமெனபது இராமானுஜர் – தேசிகன் வழி வந்த‌ வைணவம்)

    //முகம்மது சாவின் விளிம்பில் இருக்கும் போது சொன்ன வார்த்தை ” இந்த அரேபிய மண்ணைவிட்டு யுதா்களையும் கிறிஸ்தவர்களையும் விரட்டி விடுங்கள்” என்பதே. இவ்வளவு பொல்லாத போதனைகளை நச்சு கருத்துக்களை அதிக அளவில் போதித்த ஒரு அரேபிய வல்லாதிக்க வாதியை பின்பற்றும் கூட்டம் ஒரு காடையா்களின் கூட்டம்.//

    இந்த அரேபிய மண் என்றுதானே சொன்னார்? இப்போது இந்துத்வாவினரும் அதே தானே சொல்கிறார்கள்? இம்மண்ணின் மதம் இந்துமதமே அல்லது இந்துத்வமே என்றுதானே சொல்கிறார்கள்? கிருத்தவரும் இசுலாமியரும் இம்மண்ணில் வாழலாம். ஆனால் இந்துத்வ வாழ்க்கைப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றுதானே சொல்கிறார்கள்?

    பின்பற்றும் கூட்டம் காடையர்கள் கூட்டமெனச் சொல்ல முடியாது. கூலி வேலை செய்பவனும், மீன்பிடிப்பவனும் இசுலாமியராக கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். மீன் பிடிக்கும் குடும்பத்திலிருந்து வந்த அப்துல்காலம் போன்றவர்களும் இருக்கிறார்கள். காடையர்களா?

    இசுலாம் அரேபிய வல்லாதிக்கத்தில் பரவப்பட்டது என்று அன்றிருந்தது. இன்றில்லை. அரேபிய நாடுகள் இன்று வல்லாதிக்க அரசுகள் கிடையா. இன்று இசுலாம் வாளால் பரப்பப்படவில்லை. அப்படி வன்முறையால் பரப்புவோர் எங்கும் ஆதரிக்கப்படவில்லை. ஐ எஸ் எஸ் ஐ, தாலிபான் – இவர்களை ஆதரிக்கிறார்களா? இன்று இந்தியாவில் இசுலாமியாராவோர் எவ்வித கட்டாயத்தினாலும் மாறவில்லை. அவர்கள் அம்மதத்தில் இருக்கும் நீங்கள் சொல்லவிரும்பா பலபல நல்ல வழிகளுக்காக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியாவில நடப்பவைகளை எடுத்துக்காட்டாதீர்கள். அங்கு நடப்பவை அந்நாட்டுச்செயல்களே. இசுலாமைப்பற்றி நெகட்டிவ்வாக மட்டுமே தெரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

    //லட்சணக்கணக்கான வேறுபாடுகள் கொண்ட மக்களை இந்து கலாச்சாரம் ஒரே நிா்வாக அமைப்பில் அரசியல் அமைப்பில் வைத்துள்ளது இந்து தா்மத்தின் சாதனை.//

    தவறான புரிதல். இந்து தர்மம் என்பது ஒரு நேர்கோட்டில் காணப்படும் தோற்றம் இல்லை. அரசியலுக்காக அப்படி சொல்லலாம். உண்மையில் கிடையாது. ஒரே நிர்வாக அமைப்பு என்பதே பச்சைப்பொய். ஒரே தலைவர்; ஒரே கோட்பாடு; ஒரே வழி என்பனவெல்லாம் இங்கு கிடையா.

    இந்து தர்மத்தின் மகத்தான சாதனை என்னவென்றால், ஒவ்வொரு இந்துவுக்கும் அது கொடுக்கும் முழுச்சுதந்திரம். மற்ற மதங்களில் இஃதில்லை. பாகபிரிவினையில் எம் ஆர் ராதா முருக பக்தர்; அவர் மனைவி பெருமாள் பக்தர். ஒரே வீட்டில் வாழ்கிறோமே என்று கலாய்ப்பார். எப்படிப்பட்ட பேருண்மை அது! முருக பகதரும் பெருமாள் பக்தரும் ஒரே வீட்டில் வாழமுடியும். அஹமதியாவும், அல்லது சியாவும் ஷுன்னி முசுலிமும் ஒரே நாட்டில் கூட வாழமுடியா. ஒரே நிர்வாகம்; ஒரே பிரிவு. ஒரே குரான். பகவத் கீதையை இடைசெருகல் என்று என்னால் ஒதுக்க முடியும். குரான் இறைவனால அருளப்படவில்லை என்று ஒரு இசுலாமியனால் சொல்லமுடியாது. சொன்னால் அவன் இசுலாமியன் ஆகமாட்டான்.

    ஒரே நிர்வாகம் என்றால் இசுலாமோடு ஒத்துவருகிறது. ஒரே நிர்வாகம் என்பதை நம்பும் நீங்கள் இசுலாமின் ஒரே கொள்கை ஒரே தலைவன் கொள்கையோடு ஒத்துவருகிறீர்கள். இதைத்தான் நான் முன்பு குறிப்பிட்டேன்.

    புத்தரையும் ஜயனரையும் நீங்கள் கொண்டாடுங்கள். கோடிக்கணக்கான இந்துக்களுக்கு புத்தமதம் என்ன சொல்கிறது என்றே தெரியாது. புத்தர் கொல்லப்படவில்லை. 100 வயது வரை வாழ்ந்தார் எவ்வித ஆபத்துமின்றி. இப்படி எந்த மஹான் வந்தாலும் அவரை அப்படியே விடுவது எனபதுவே இந்து தர்மம். கொண்டாடுவதன்று. புத்தம் நாத்திகக் கொள்கை. எப்படி கொண்டாடமுடியும் ஒரு இந்து பக்தனால்? இந்துக்கள் அவரை மிரட்டவில்லை. ஓட ஓட விரட்டவில்லை. சகிப்புத்தன்மை. இஃது இந்து தர்மத்தில் இரண்டாவது மகத்தான சாதனை.

    சிருங்காரம் பக்தியில் ஒரு வகை. அதை ஏற்றுக்கொள்வதற்கும் கொள்ளாததற்கும் ஒரு இந்துவுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் ஃபோனோ கிராஃபி எனச்சொல்வது நான் வெஜிட்டேரியனை ஒரு வெஜிட்டேரியன் அவதூறாகப் பேசுவது போல. அல்லது ஒரு வெஜிட்டேரியனை, நான் வெஜிட்டேரியன் வெறுப்பது போல.

    ஞான மார்க்கம்; பக்தி மார்க்க‌ம். உங்களுக்கு ஞான மார்க்கம் நன்கு ஒத்துவரும். பாமர ஜனங்களுக்கு பக்தி மார்க்கமே சரி. இரு மார்க்கங்களிலும் எண்ணிறந்த வகைகள். பக்தி மார்க்கத்தில் சிருங்காரம் ஒரு வகை. இங்கு எழுதப்படும் பல கட்டுரைகள் உங்களுக்கு ஒத்துவரும். அவைகள் ஞான மார்க்கக்காரர்களுக்கு. For e.g the above essay on Adi Sankara’s philosophy: purely an intellectual exercise. ஓர் எளிய இந்துவுக்கு அவை இன்றியமையாதவை அல்ல.

    ”அவாளுக்கு அது; இவாளுக்கு இது” – இந்து மதம் நான்கே சொற்களில் அடங்கும்.

  31. There are more than one answer, however, according to a report narrated by Ahmad (1691) from the hadeeth of Abu ‘Ubaydah, who said that the last words that the Prophet (peace and blessings of Allaah be upon him) spoke were,

    “Expel the Jews of the Hijaaz and Najraan from the Arabian Peninsula, and know that they are most evil of people who took the graves of their Prophets as places of worship.”
    ———————
    சாதாரண மக்கள் ஆயிரம் சொல்லலாம்.இந்து வேதங்கள் இந்து என்று என்ற மத அமைப்பை உருவாக்க நினைக்கவில்லை. காற்று மழையும் இருப்பதைப்போல் அவைகள் உள்ளன்.ஆனால் உயா்ந்த நிலையில் மக்கள் போற்றும் ஒருவா் இறைவனின் தூதா் உலகிற்கு வழிகாட்டியாக இருக்கம் ஒரு மனிதனின் சொல் செயல் அனைத்திலும் ஒரு தரம் இருக்க வேண்டும் என்பது நியாயமானது.இது முகம்மதிடம் இல்லை.
    —————–
    திரு. அவர்களே என்னை தலியான் என்று பேச்சை மாற்றி தடம் புரண்டது தாங்கள்தாம். இசுலாம் பற்றி விவாதித்தது போதும். என் வினாக்களுக்கு தங்களிடம் பதில் இருந்தால் பதிவேற்றுங்கள். இல்லையேல் அப்படியே நிறுத்திக் கொள்வோம். இந்த உலக மக்களின் பெரும்பான்மையினா் அனுபவித்து -துன்பத்தை அனுபவித்துதான் திருந்துவார்கள்.

  32. திரு. அப்துல் கலாமை பல முஸ்லீம்கள் முஸலீமாக ஏற்றுக் கொள்ளவில்லை.தௌஹீத் ஜமாத் போன்ற அமைப்புக்கள் இன்றும் திரு.கலாம் அவர்களை காபீா் – இசுலாத்தை விட்டு வெளியில் சென்றவா் என்றே பிரச்சாரம் செய்கின்றார்கள். திரு.கலாம்ஐயா் திரு.கலாம் ஐயங்காா் என்று கிண்டல் செய்பவா் அநேகம்.
    அரபினாக இரு அல்லது அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றிவாழ்.இல்லையேல் சாவுதான் பாிசு என்பது இசுலாமிய முகம்மதின் போதனை.

    வருங்காலத்தில் இந்து சகமூகம் உருப்படியாக ஒரு மனித வளம் மிக்கதாய் வாழ வேண்டும் என்பதே எனது ஆதங்கம். தமிழ்இந்து இணைய வாசகர்களிடம் அதற்கு ஆதரவு இல்லை. இலக்கிய நச்சை -pornography யை அனைவரும் விரும்புகின்றார்கள் என்று உண்மையை அறிந்து கொண்ட நான் அடைந்தேன்.
    —————
    பாதையோ வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
    காதலை யாா் மனம் தேடும்-

    ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் இடம் பெற்ற ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ எனத் துவங்கும் இந்த திரைப்படப்பாடல் வரிகள் நல்ல கருத்தைதான் முன்வைக்கின்றது.

  33. //திரு. அப்துல் கலாமை பல முஸ்லீம்கள் முஸலீமாக ஏற்றுக் கொள்ளவில்லை.தௌஹீத் ஜமாத் போன்ற அமைப்புக்கள் இன்றும் திரு.கலாம் அவர்களை காபீா் – இசுலாத்தை விட்டு வெளியில் சென்றவா் என்றே பிரச்சாரம் செய்கின்றார்கள். திரு.கலாம்ஐயா் திரு.கலாம் ஐயங்காா் என்று கிண்டல் செய்பவா் அநேகம்.//

    என்னையும்தான் க்ருஸ்ணகுமார் கிருத்துவன் என்கிறார்

    நாம் என்ன நம்மை நினைக்கிறோம்? எப்படி வாழ்கிறோம் எனபதுதான் கேள்வியும் பதிலுமாக இருக்க வேண்டும் அப்துல் கலாமும் (இறந்தவர்களுக்கு திரு போடுவதில்லை) அவர் அண்ணன் குடும்பமும் உற்றார் உறவினர்களும் (அனைவரையும் இழுக்கக் காரணம் இவர்கள் எவருமே கலாமைப் பிராமணன் என ஒதுக்கவில்லை) தங்களை முஸ்லீம்கள் அல்ல; அல்லாவும் குரானும் எங்களுக்கல்ல என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறீர்களா? இசுலாமியனாகப் பிறந்து இசுலாமியனாகவே இறந்து, தான் பிறந்து ஊரிலே இசுலாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படடு வாழ்ந்து மறைந்தவர் உங்கள் கருத்துப்படி, மற்றவர்கள் அவரை இசுலாமியனில்லை என்றால் கலாம் இந்துவாகி விடுவார்! யாரிந்த ஜமாத் என்னை இசுலாமியனில்லை என்பதற்கு? இவர்களுக்கு யாரதிகாரம் கொடுத்தது? யாரிந்த கிருஸ்ணகுமார் என்னை இந்துவில்லை என்பதற்கு? இவருக்கு யாரந்த அதிகாரம் கொடுத்தது?(சேர்ந்த கேள்விகள் எனபதால் இணைக்கிறேன்) மற்றவருக்காக நீங்கள் இந்துவாகவோ, இசுலாமியனாகவோ வாழவில்லை சார்! உங்களுக்காக உங்கள் ஆத்மா திருப்திக்காக ஆன்மிகத்திற்காக வாழ்கிறீர்கள்!!

    கலாம் இசுலாமியராக வாழ்ந்து மறைந்தவர் இசுலாம் பிடிக்கவில்லையென்றால் மதம் மாறலாம் தமிழ்நாடு இசுலாமியர்கள் அவரைத் தடுப்பதில்லை மிரட்டுவதுமில்லை அப்படி வெளியேறுபவகள் இசுலாம் மதத்தையோ அல்லா மஹமது குரான் பற்றியோ அவதூறாகப்பேசி இழிவுபடுத்தக்கூடாது அவ்வளவுதான். இவை எம்மதத்திலுமே உள்ள உணர்வுகள்தான் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள் என்றுதான் சிலர் aarppaattam pannukiraarkaL?

    நீங்கள் கவனிக்க வேண்டியது கலாம் உலகநடப்புக்களை அன்றாடம் அறிந்தவர் தாலிபான் நூறு பேர்களைக் கொன்றார்கள் ஐ எஸ் எஸ் ஐ காஃபிர்கள் என பிறரைக்கொன்றார்கள் என்பதையெல்லாம் அறிந்து இசுலாமை விட்டு ஏன் விலகவில்லை? அப்படிப்பட்ட மதத்தில் இருக்கக்கூடாது இருக்கவும் முடியாதென்றும் உங்கள் பேச்சு எங்கே போயிற்று?

    இசுலாம் இருந்து கொண்டேயிருக்கும் அது பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்துக்கொண்டேயிருக்கும் எப்படி அதைச்செய்கிறது என்பதை அறிந்து நாம் பாடம் படித்துக்கொள்வதை விட்டு வன்முறையே இசுலாம் எனப்தனால் ஒரு பலனுமில்லை மிரட்டி இசுலாமியராக்குகிறார்கள் என்பது இன்று பொய் பின் ஏன் அதில் இருக்கிறார்கள் என்பதற்கு என் பதில் சாதிகள் இல்லையென்றால் ஷயா, ஷன்னி அகமடியா இருக்கிறார்களே? பட்டாணி, லப்பை இருக்கிறார்களே? என்பீர்கள் ஆனால் என் பதில், இசுலாமின் எளிமை அஃது ஓர் எளிய மார்க்கம் என்பதுவே அதன் மகத்தான சாதனை இசுலாமைப்பற்றி ஓர் மீனவனிடம் எளிமையாகச் சொல்லி விளக்க முடியும். அவனிடம் நான் போய் அல்லது கூவம் ஆற்றோரம் குடிசைவாசிகளிடம் போய், ஜடாயுவின் இக்கட்டுரையை – ”ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரை” யைக் கொண்டு போய்க் கொடுத்து விளக்கினால்…? என்னவாகும் ஒன்னும் ஆகாது என் சூட்டையும் கோட்டையும் பார்த்துவிட்டு சார் இது நொச்சி குப்பம் வழிதவறி இங்கு வந்துவிட்டீர்கள் மயிலாப்புருக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போகவேண்டுமென்பார்கள் வெளியே வந்து வழியும் காட்டுவார்கள் 🙂 நாகரிகம் தெரிந்தவர்கள் என்பதால்.

    இசுலாமை நீங்கள் விரட்டி இந்துமதத்தைக் கொண்டு போகவேண்டுமென்றால், இசுலாமை விட இந்துமதம் எளிமையாக்கினால் மட்டுமே சாத்தியம்!!

    (I’ve closed my arguments here! Thanks !!)

  34. //இசுலாம் பிடிக்கவில்லையென்றால் மதம் மாறலாம் தமிழ்நாடு இசுலாமியர்கள் அவரைத் தடுப்பதில்லை மிரட்டுவதுமில்லை அப்படி வெளியேறுபவகள் இசுலாம் மதத்தையோ அல்லா மஹமது குரான் பற்றியோ அவதூறாகப்பேசி இழிவுபடுத்தக்கூடாது அவ்வளவுதான்.//
    அவ்வளவுதானா!இது உண்மை அல்ல.
    அரபுகள்-இசுலாம் பற்றியது அறிந்து உணர்ந்து தன்னை வருத்தி கொண்டது அனுபவித்து கொண்டது என்பதை தமிழ்நாடு இந்தியா அறியும்.

  35. யாா் எதை பதிவிட்டாலும் குறை கூறுவதுபோல் பதிவு செய்வது மிகதவறான மனோநிலை. திரு.கலாம் அவர்கள் அரேபிய அடிமைத்தனம் இல்லாத நல்ல முஸ்லீம். இசுலாம் என்பது எளிமையான மதம் என்பது பொய்.உ்ணமைகள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதில்லை.அணுவை பற்றிய விஞ்ஞானம் —மண்டையை பிளந்து விடும்.அவ்வளவு கடினமானது.இந்துக்ளுக்கு மத அரசியல் கிடையாது.ஸ்ரீகிருஷ்ணனைத் தெரிந்தவா்கள் மத அரசியல் தெரிந்தவா்கள்.அதனால்தான் சுவாமி விவோகானந்தா் ” இன்று இந்தியாவிற்கு கோபியா்களின் கண்ணன் தேவையில்லை. பகவத்கீதையின் கண்ணன் தான் தேவை” என்று முழங்குகின்றாா். சந்நியாசிகளை கொண்டாடி கொண்டாடி சமூக உணா்வுகளுக்கு ஆட்சி அதிகாரம் ஆகியவற்றின் அவசியம் முக்கியத்துவம் தெரியாதவா்களாக இந்துக்கள் வெகுகாலம் வாழ்ந்து விட்டாா்கள்.என்ன இருந்தாலும் 1000 ஆண்டுகள் இந்துக்களை நேசிக்காதவா்களுக்கு அடிமையாக இருந்து நமது சமூகத்தை பெரிதும் பாழ்படுத்திவிட்டோம்.
    இந்து மதம் எளிமையானது.
    அது ஸ்ரீநாராயணகுருவின் கைவண்ணத்தால் எளிமையாக்கப்பட்டுள்ளது.
    எளிமையான இந்து மதத்தை காண்பித்தால் அது குறித்து எந்த கவனத்தையும் கொள்ளாது, ஆதரவாக பதிவுகளைச் செய்யாது சம்பந்தமில்லாமல் குதர்க்கம் பேசுவது BSV
    அவர்களின் தனிச் சிறப்பு.

  36. எழுதியது சரியென்றால் மறுப்பவர்கள் உண்டோ? தவறென்பதால் மறுக்கப்படுகிறது

    சுவாமி விவேகானந்தர் சொன்னது உங்களுக்குப் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுஙகள் ராசலீலா எனக்கும்தான் பிடிக்கவில்லை அதற்காக ஹரே கிருஸ்ணா ஹரே ராமாக்காரர்களை நான் மறுக்கிறேனா? அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது Simple 🙂

    அதே சமயம் உங்களுக்குப் பிடித்தது மட்டுமே பிற இந்துக்களுக்கும் பிடிக்கவேண்டுமெனபது இந்துமதக்கொள்கைக்கு எதிரானது இசுலாமியத் தீவிரவாதத்தைப் போன்றது என்பது மட்டுமே என் எதிர்வாதம்

    கலாம் இசுலாமியர் அப்படித்தான் வாழ்ந்தார் மறைந்தார் அவரைப்போல பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்கள் இந்தியாவில் பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றனர் இவர்களை இசுலாமியத்தீவிரவாதம் ஒன்றும் செய்யவில்லை என்பதும் என் எதிர்வாதம் வன்முறையே இசுலாம் என்றால் கலாமும் அவர்கள் உறவினர்களும் ஏன் இசுலாமில் இருக்கிறார்கள்?

    இந்துமதத்தில் எளிமையாகவும் இருக்கிறது ஆனால் அது மேலோங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள் அவ்வளவுதான் மற்ற மக்களைப் பிராமணர்களாக்கி – வெஜிட்டேரியன், வடமொழி மந்திரங்கள்; வேள்வி என்று போவது – அவர்கள் வழியிலேயே விட்டால், இந்துமதம் ஓங்கும் இல்லாவிட்டால் பிறமதங்கள் ஓங்கும் எதுவேண்டுமுங்களுக்கு என்று முடிவு செய்து கொள்ளுங்கள்

    நாராயணகுருவின் முயற்சி கேரளாவில் – அதுவும் பிள்ளைகளிடமே – போய்ச்சேர்ந்தது கேரள தலித்துக்கள் கண்டு கொள்ளவேயில்லை தமிழ்நாட்டிலும் அது செல்லாது அப்படிச் செல்லுமென்றிருந்தால், – அன்று திருனெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களெல்லாம் திருவாங்க்கூரில்தான் – எப்போதே நாராயண குரு தென்மாவட்டங்களில் பிரபலமாகிருப்பார் குரு செய்த‌ பெரிய தப்பு – அல்லது அவருக்குப் பின் நடந்த தவறு – ஜாதிக்குள் அடைந்ததுதான் குரு ஈழவர்களைப்பற்றித்தான் கவலைப்பட்டார் ”நான் என்ன பிராமணர்களின் சிவனையா ப்ரதிஷ்டைப் பண்ணுகிறேன் ஈழவர்களின் சிவனைத்தானே பிரதிஷ்டை பண்ணுகிறேன்! ” என்று மிரட்ட வந்த நம்பூதிர்களுக்கு அவர் கொடுத்த பதில் பிரபலம் ஆனால் பாருங்கள் – அதே நம்பூதிரிகளிடம் ”நான் ஈழவர்கள், தலித்துகளின் சிவனைத்தானே ப்ரதிஷ்டை பண்ணுகிறேன்!” என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் சொல்லாத்தால் அவரின் உள்ளத்தில் இருந்தோர் அவர் ஜாதிக்காரர்களே எனபது கேரள தலித்துக்களின் ஆதங்கம் எனவே அவரை தலித்துக்கள் ஏற்க முடியாமல் போனது இன்று கேரள பிள்ளைகள் வீடுகளிலும், நெல்லை, குமரி பிள்ளைகள் வீட்டிலும்தான் குருவின் படங்களை இருப்பதைப் பார்க்கலாம்

    ஜாதிவாரியாக இந்து குருக்களில் பலர் செயல்பட்டது இந்துமதத்தில் பெருங்குறைகள் ஒன்று அல்லது காமராஜைப் பண்ணியது போல, ஆள் போனபின் தம் ஜாதிக்காரர் என்று கட்டமைத்து விடுகிறார்கள் காமராஜ் நாடாரானது போல, நாராயண குரு பிள்ளையானதுதான் அவர் விட்டுச்சென்ற – அல்லது எடுத்துக்கொண்ட – legacy 🙁

  37. மக்களில் எதிா் நீச்சல் போட நினைப்பவா்கள் வெகு சிலரே. போகிற வெள்ளத்தோடு செல்ல வேண்டும் என்று நினைப்பவா்கள் மிக அதிகம்.ஸ்ரீநாராயணகுரு தன்னோடு ஈழவா்கள் , புலையா்கள் மற்றும் பிற சாதி மக்களை இணைத்துச் செல்லவே விரும்பினாா். அதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாா். புலையா்களை தவிா்த்து ஈழவா்கள் செயல்பட்டபொழுதெல்லாம் ஈழவா்களை கடுமையாக கண்டித்துள்ளாா். புலையா்கள் சாதியில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணா ஸ்ரீநாராயணகுருவின் வழியில் பயணப்பட்டு இன்று கேரளத்தில் திருவல்லா சிவன் கோவில் அர்ச்சகராக பணிசெய்து வருகின்றாா்.அனைவரும் அவரை கோவிலுக்கு வரவேற்றுச் சென்ற காட்சி அற்புதமாக உள்ளது.
    ஐயா ஸ்ரீவைகுண்டரின் ஆலயத்தில் அபிஷேகங்கள் கிடையாது.சிலைகள் கிடையாது. மனித வள விரயம் கிடையாது.பசிக்கு உணவளிப்பது சிறந்த பணியாக நினைக்கின்றாா்கள். மனிதன் தனக்கு வெண்டிய பிரார்த்தனைகளை தானே செய்து கொள்ள வேண்டும் என்பது கொள்கை. ஏட்டு வாசிப்பு படிப்பு என்பது நடைமுறையில் உள்ளது. எளிமையானது. ஆனால் மக்களுக்க இன்றும் சங்கராச்சாரியாா் தான் பெரிதாக பத்திாிகைகளும் தொலைக்காட்சி பெட்டிகளும் காட்டுகின்றன. சமய நிகழ்சசிகளில் ஸ்ரீநாராயணகுருவையோ, ஸ்ரீவைகுண்டரையோ காணமுடியாது.வசந்த தொலைக்காட்சி மட்டும் ஐயா தரிசனம் என்று 30நிமிடங்கள் ஒதுக்குகின்றாா்கள்.
    ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நடத்தும் அந்தா்யோகம் அனைத்து இந்துக்களுக்கும் கிடைக்க வேண்டும். அமைதியாக அமாந்து முறையாக பாடி ஒதி வழிபாடு செய்து பழக வேண்டியது,மனதிற்கு அமைதி தரும் பழக்கங்கள் காலத்தின் தேவை.இந்துக்கள் அதைப் பெற வேண்டும். தேவாரத்திலோ திருவாசகத்திலோபிரபந்தங்களிலோ ஒரு பாடல் கூட பாடத்தெரியாத இந்துக்கள் பல கோடி தமிழ்நாட்டில். இந்த அவலட்சணத்தில் லட்சக்கணக்கான கோவில்கள் மடங்கள் இந்து சமய அறநிலையத்துறை கேவலம்.லட்சியம் குறி என்ன என்று தெரியாத பயணங்கள்.

  38. கேரள தலித்கள் ஸ்ரீநாராயணகுரு விடம் செல்லாமல் தடுத்தது ஸ்ரீநாராயணகுரு அல்ல. அவரை முன்உதாரணமாகக் கொண்டு அய்யன்காளி போன்றவா்கள் வழிகாட்டுதல்படி தங்களது வழிபாட்டு முறைகளை சிந்தனை முறைகளை ஆளுமையை மாற்றி திருத்தி அமைக்க தடையாக இருந்தது என்ன ? எனக்கு விபரம் தெரியவில்லை. நாகர்கோவில் இல்லத்து பிள்ளைமாா் கோவிலுக்கு வந்த ஸ்ரீநாராயணகுரு அங்கிருந்த 22 சந்நிதிகளில் ஒன்றை விட்டுவிட்டு மற்ற 21 சந்நிதிகளை உடைக்க ஆலோசனை வழங்கி அதன் படி நிறைவேற்றப்பட்டது என்று படித்தருக்கின்றேன்.

  39. //திரு.கலாம் அவர்கள் அரேபிய அடிமைத்தனம் இல்லாத நல்ல முஸ்லீம்.//
    அரேபிய அடிமைத்தனம், அரேபிய ஆக்கிரப்பு ஆசை இல்லாத முஸ்லீம்களே இந்தியாவில் இன்னொரு மதத்தை சேர்ந்த சகோதர இந்தியன் என்று எடுத்து கொள்ளபடுவார்கள்.
    இசுலாம் என்பது எளிமையான மதம் என்று சொல்லும் BSV முஸ்லீம் பெண்கள் புர்க்கா அணிந்து பொது இடங்களில் தங்களை மறைக்க வேண்டும் என்பதிற்காக சொல்கிறாரா, அல்லது ஆண்களுக்கு தலாக் கொடும் வசதிக்காக சொல்கிறாரா?

  40. / கேரள தலித்கள் ஸ்ரீநாராயணகுரு விடம் செல்லாமல் தடுத்தது ஸ்ரீநாராயணகுரு அல்ல. //

    குரு ஒரு மஹான் அவரிடம் ஈனத்தனமான ஜாதிப்பற்றும் பாசமும் இருந்திருக்கா அவர் பார்வை அவரின் கசப்பான வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே தோன்றியது நம்பூதிரிகளின் பழமைவாதம் மிகவும் கொடுமையானது ஆசாரங்களை பிறர் வருந்தும் வண்ணம் கடைபிடித்து வந்தனர் (பாரதியார் எழுதுகிறார்: ஒரு நீண்ட கம்பின் ஒரு முனையை ஒரு நம்பூதிரி பிடிக்க மறுமுனை ஒரு தலித்தின் மேல் பட்டுவிட்டால் நம்பூதிரி அலறுவான் தீட்டாகிவிட்டது என்று! பாரதியாரின் ”மலையாளம்” கட்டுரையைப் படிக்கவும் பிராமணர்கள் படிக்க வேண்டாம்; உங்கள் ஆசாரங்களையும் போட்டுத் துவைக்கிறாரங்கே:-))

    ஈழவர்களையும் (இல்லத்துப்பிள்ளைகளும் அங்கு ஈழவர்களே) ஒதுக்கினார்கள் குருவின் சீர்திருத்தம் இந்துமதத்தில் மட்டுமே அவர் சமூகத்தை மதமாகத்தான் பார்த்தார் ஒருவேளை இராமானுஜர் நம்பியது போல – மதத்தை சீர்திருத்தினால் அது சமூகத்தையே சீர்திருத்துவதாகும் – என்று நினைத்தார் அஃதை ஈழவ மக்களை வைத்தே செய்ய வேண்டுமென நினைத்தார் குரு இதுகொண்டு, அவர் சமூகத்தை நேரடியாக பார்க்கவில்லை அவர் இங்கு இப்படி செய்யும் நேரத்தில்தான் தலித்து மக்களை நாயர்களும் நம்பூதிரிகளும் தீண்டாமைக்கொடுமைக்குள்ளாக்கினார்கள் பெண்கள் திறந்த மார்புடந்தான் செல்லவேண்டும் ஆண்கள் சட்டை போடக்கூடாது செருப்பணியக்கூடாது என்றெல்லாம் அய்யன் காளி சட்டை அணிந்து தலைப்பாகை கட்டியதைக் கண்டு அவரைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள் காளி தலித்துகளின் மானத்துக்காக போராடினார்

    ஆக குரு அங்கே பார்க்கவில்லை காளி இங்கே பார்க்கவில்லை என்று முடிக்கவேண்டும் நல்லவேளை காளி கிருத்துவராக வில்லை அங்கே பார்க்கவில்லை இங்கே பார்க்கவில்லை என்பது குருவோடு மட்டும்தான் சட்டாம் சுவாமி என்ற மலையாள சாமியாரும் அவரோடு அணுக்கலில் இருந்த ஒரு தமிழ் ஐயர் (சாமியார்தான்) பெயர் மறந்துவிட்டது இருவரும் காளியோடு நட்பு கொண்டு அவரின் சமூக போராட்டத்தின் துணை நின்றனர் எனவே காளி மதம் மாறவில்லை இவ்விரு சாமியார்களும் இல்லையென்றால் (சாமியார்கள் என்றால் இங்கே துறவிகள் என்று பொருள்) இல்லையென்றால், ஒரு கேரள தலித்துகூட இன்று இந்துவாக இருக்க மாட்டான் காளி தலித்துமக்களிடையே எடுத்த புகழ் ரொம்ப பெரியது எனபதால்

    குருவை நாம் குறை சொல்லாமல் ஒரு bad luck என்று மட்டுமே முடிக்கவேண்டும் அந்த bad luck லக் இப்போது குருவை வைத்து ஒரு அரசியல் கட்சியாகவும் கேரளாவில் வளர்ந்து அது கேரள பிள்ளைகளின் ஜாதிக்கட்சியாகவும் ஆனது பெரும் சோதனை It happened only after he passed away

  41. இசுலாம் மதம் எளிமையான மதமா ? பணக்காரர்களின் மதமா? என்பது அல்ல பிரச்சனை.பயங்கரவாத மதம் என்பதுதான் ஆபத்து.முகம்மது செய்த போர்கள் தன்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாததற்கு தண்டனையாக வழங்கப்பட்டது. பதா் போர் எ ன்பது பாலைவனத்தில் வியாபாரப்பொருட்களோடு சென்ற வியாபாரிகளை கொள்ளை அடித்ததை அரேபிய நூல்களில் பதர் யுத்தம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூக்கியா என்ற மகளை திருமணம் செய்த உதுமான என்பவா் இவரை நபியாக ஏற்றுக் கொள்ளாத அரபியாக இருந்தாா். எனவே மகள் ரூக்கியாவை மருமகன் வீட்டிலிருந்து அழைத்து வந்து தனது வீட்டில் வைத்துக்கொண்டாா். வேறு நபர்களுக்கு திருமணம் செய்ய முயன்றாா். ரூக்கியா சம்மதிக்கவில்லை.8 ஆண்டுகள் இப்படி பிரிவினையில் கழிந்தது. பின் உதுமான் முஸ்லீம்ஆக மாறிய பின் மகளை அனுப்பி வைத்தாா். ஒரு பெண் கொடுத்த விசம் வைத்த ஆட்டு இறைச்சியை உண்டதால் அடிக்கடி உடல் நலம் கெட்டு மரணம் அடைந்தாா்.இவரது மரணத்திற்கு பின் பதவிச் சண்டையில் பெரும் நாசம் ஏற்பட்டது. அவரது மகள் பாத்திமாவை திருமணம் செய்த அலி என்பவருக்கு கலிபா பதவி கிடைக்கக் கூடாது என்று பெரும் சதிவலைகள் நடைபெற்றது.முகம்மதின் மனைவி ஆயிசாவின் யின் தந்தை அபுபக்கா் முதல் கலிபாவாக-ராஜாவாக பதவியேற்றாா். பின் உமா் என்பவா் மன்னா் ஆனாா்.எகிப்தின் மீது கொடூரமான ஒரு போரை நடத்தி கைபற்றி முஸ்லீமாக மாறாதவா்களை பெரும் சித்திரவதை செய்தாா். பின் உதுமான் என்ற மருமகன் பதவியேற்றாா். அவர் தனது உறவினா்களுக்கு பதவி சலுகைகள் வழங்குகின்றாா் என் பெரும்குழப்பம் ஏற்பட்டது. ஆயிசா ” உதுமானை காபீா்என்று திட்டினாா்.பின்னா் உதுமான கொலை செய்யப்பட்டாா்.அதற்கு பின் பாத்திமா என்ற மகளை திருமணம் செய்ய அலி மன்னா் ஆனாா். அவருக்கு யாரும் கீழ்.படியவில்லை. ஆயிசாவிற்கும் அலிக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒட்டகப்போா் பஸ்ரா என்ற இடத்தில் எற்பட்டது.முஸ்லீம்கள் இரு அணிகளாக நின்று போர் செய்து 6000 பேர்களை கொன்றாா்கள்.அலி வென்றாா். இருப்பினும் அலிக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை.நொந்து போன அலி படிப்படியான பின்வாங்கி மக்கா மதினாவைவிட்டு ஈராக்கிற்கு தனது அரண்மனையை மாற்றிக்கொண்டாா். பள்ளிவாசலில் தொளுகை நடத்தும் போது வாளால் வெட்டி கொல்லப்பட்டாா். பின் அவரது மகன் 3 பேரும் கொல்லப்பட்டனா்.
    பாத்திமா செத்த வரலாறு
    முகம்மது இறந்த பின் யாா் மன்னா் என்ற பதவிச் சண்டை ஆரம்பித்தது. ஒருசாராா் முகம்மதுவின் மருமகன் அலியை கலிபா ஆக ஆக்க விரும்பினாா்கள்.ஆனால் மிக சாமா்த்தியமாக ஆயிசாவின் அப்பா -முகமதின் மாமனாா் அபுபக்கா் கலிபா ஆகிவிட்டாா்.ஆனால் பாத்திமாவும் அலியும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.அலிவிட்டில் ஆதரவாளா்களின் கூட்டம் நடைபெற்றது. வீட்டிற்கு உமா் தீவைத்து விட்டாா். பின கர்ப்பம் தரித்த பாத்திமாவை உமா் கீழே தள்ளி விட்டாா்.கா்ப்பச் சிதைவு ஏற்பட்டு 6 மாதத்தில் பாத்திமா மரணம் அடைந்தாா். பாத்திமாவின் உடலை மிகவும் ரகசியமாக அடக்கம் செய்து 100 இடத்தில் மணலை கூட்டி கல்லறைபோல் அடையாளம் செய்து வைத்தாா் அலி.
    ————————————————————
    இரண்டாம் கலிபா உமா் தனது பாதுகாவலா் ஒருவரால் கொல்லப்பட்டாா்.
    ———————————————————
    இங்கே எங்காவது ஆன்மவியல் இருக்கின்றதா ? இசுலாம் இதுதான்.
    ஹிடலா் உலகை ஆள நினைத்தது போல் அரேபியன் உலகை ஆள வேண்டும் என்று விரும்பினாா் முகம்மது என்ற அரேபிய ராணுவ தளபதி. அவர் நபியும் அல்ல.நபிகள் நாயகமும் இல்லை.

  42. நான் சொல்லிக்கொண்டிருக்கும் கருத்துகள் வேறு; நீங்கள் சொல்வது வேறு நீங்கள் என்னதான் சொன்னாலும் உலகமெங்கும் இந்தியாவிலும் இசுலாமியர் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகிறதே தவிர குறையவில்லை கிருத்துவர்கள் எண்ணிக்கை குறையலாம் ஆனால் இசுலாமியர் பெருகுவார்களே தவிர குறைவதே இல்லை நீங்கள் எழுதியதைவிட இத்தளத்தில் ”வன்முறையே வரலாறாய்” என பயங்கரமான படங்களெல்லாம் போடப்பட்டு தொடர்கட்டுரைகளே வந்துவிட்டன அதைவிட புதிதாக என்ன சொல்லிவிட முடியும்? கிருத்துவர்கள் வசிக்கா கிராமங்கள் ஏராளம் . இந்தியாவில் இசுலாயரில்லா கிராமம் இருக்கிறதென்றால் வியப்பே திருவைகுண்டத்தில் பசிலாபாத் என்ற பகுதியே நூற்றுக்கணக்கான இசுலாமிய குடும்பங்களோடு வாழ்கின்றன எப்படி ? ஒன்றன்று; இரண்டல்ல ஒன்பது திவ்ய தேச கோயில்கள் சுற்றிருக்கும் திருவைகுண்டத்தில் பெருமாளை வணங்கும் குடும்பங்கள் குறையக் காரணம்? ஆழ்வார் திருநகரியில் ஒரு பகுதியே பைசிலாபாத் ஒரு சிறுநடைதான் பெருமாள் கோயிலுக்கு இக்கேள்விகளுக்கு விடைகள் தேடுங்கள் I don’t know

  43. ஜனத்தொகை இடம் மாறி வருகின்றது.பட்டணத்தை நோக்கி நகா்ந்து வருகின்றது. முஸ்லீம்கள் சமூக கட்டுப்பாடுகளை இறுக்கமாக பிடித்து வாழ்கின்றனா் என்பது உண்மைதான்.இந்துக்கள் தான் மனிதனை மறந்து அதிக எண்ணிக்கையில் சிலைகளை கொண்டாடி வருகின்றனா். சிலைகளுக்கு என்ன உபச்சாரம்.அலங்காரம்.அபிஷேகம். சிலையை மறந்து மனிதனை நினைக்கவிலலை என்றால் இந்துமதம் இந்துக்களும் பரிணாம போராட்டத்தில் அழிவது நிச்சயம்.மனிதனை மறந்து வாழ்பவன் இறைவன் இல்லை என்பது திரைப்படபாடல். மனிதனை மறந்து வாழ்பவன் இந்துவாக இருக்கின்றான். சடஙகுகள் இந்துக்களை காலி செய்து வருகின்றன.
    பழனி கோவிலிலும் வைத்தீஸ்வரன்கோவிலிலும் சிலைக்குஎன்று வாங்கப்பட்ட 32கீலோ தங்கம் ஐம்பொன் சிலை செய்ய பயன்படுத்தபடவில்லை.காவல்துறை விசாரணையில் ஸ்தபதி மற்றும் கோவில் நிா்வாக அதிகாரிகள். சிலைகளை ஒழித்தால்என்ன ? அதுதான் ஸ்ரீராராயணகுரு ஒரு கோவிலில் இருந்த 59 சிலைகளை உடைத்து விட்டு ஒருசிலையை வைத்து வழிபட ஆவன செய்தாா். அந்த இந்துக்கள் சற்று உருப்பட்டு வருகின்றனா்.
    எனது ஊரில் ஒரு அம்மன் கோவில் உள்ளது.அதன் நிா்வாகத்தில் தனி ஒரு பெரிய பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீமுத்தாரம்மன் கோவிலில் விநாயகா் பத்ரகாளி அம்மன் சுடலைமாடன் என்று சந்நதிகள் உள்ளது.அண்மையில் ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கு என்று தனியாக சிறு கோவில் கட்டித்தான் ஆக வேண்டும் என்று முடிவ செய்து கட்டி முடித்து விட்டாா்கள்.கோவில்கட்ட பணம் தர முடியாது என்று மறுத்து விட்டேன்.

  44. ஆனாலும் 40 நாட்கள் மண்டல புஜை செய்ய ஒரு நாள் செலவை தாங்கள் எற்க வேண்டும் என்று பத்து பெரியவா்கள் வீட்டிற்கு வந்து கேடகும் போது இவர்களின் அறீவீனத்தை கண்டிக்க இயலவில்லை.பணம் கொடுத்தேன்.இப்படி நவகிரகங்கள் கட்டிவிட்டாா்கள்.அருள்மிகு தட்சணாமூாத்திக்கு தனி கோவில் கட்டிவிட்டாா்கள். கோவிலின் நிா்வாகச் செலவு கணிசமாக உயா்ந்து வருகின்றது.செலவை காரணம் காட்டி இது போன்ற கோவில் சந்நிதிகளைகட்டாதீா்கள் என்று அனைவரிடமும் விளக்கி விட்டேன்.
    நேற்று கோவிலில் ஸ்ரீஅனுமாருக்கு தனி கோவில் ஒன்று கட்டவேண்டும் என ஆதரவு திரட்ட ஆரம்பித்து விட்டாா்கள். 493 குடும்பங்கள் உள்ள இந்த ஊரில் எனக்கு ஒரு ஓட்டு கூட இல்லை. வசுல் ஆரம்பித்தாகி விட்டது என்று நினைக்கின்றேன்.
    இறைவா இந்துக்களை என்று திருத்தப்போகின்றாய் ?நான் ஊரில் உள்ள மாணவச் செல்வங்கள் NEET/JEE தோ்வுகளுக்கு படிக்க தேவையான புத்தகங்கள் வாங்கி பஞ்சாயத்து நூலகத்திற்கு அளிக்க ரூ.50000 திரட்ட முயன்று வருகின்றேன்.யாரும் காது கொடுப்பாா் எஇல்லை. ஏதோ பைத்தியக்கார விடுதியில் இருந்து தப்பி வந்தவன்போல என்னை அனைவரும் பார்க்கின்றனா்.

    என்னை முந்திக்கொண்டு ஸ்ரீஅனுமாா் பறந்து கொண்டு இருக்கின்றாா்.
    விரைவில் ஸ்ரீஅனுமாருக்கு தனி சந்நிதி கட்டப்பட்டு விடும்.கும்பாபிஷேகம் பாலபிஷேகம் என்று உபச்சாரங்கள் தூள்பறக்கும். அடுத்த NEET/JEE தோ்வு முடிவுகள் வரும் போது எங்கள் ஊா் மாணவச்செல்வங்களின் பெயா் அதில் இடம் பெறுமா ? இந்துக்கள் நிரந்தர திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை. அம்மன்கொடை அபிஷேகம் என்று வழிபாடுகள் அனைத்தும் ஒன்று இரண்டு நாள் கூத்தாக முடிந்து விடும். பாவம். 1000 ஆண்டுகள் அடிமைகளாக இருந்து தங்களுக்கு எது நல்லது என்பதை உணர இயலாத ஜடங்களாக மாறியிருக்கின்றாா்கள்.
    ———————————————————–
    ஊரில் திருவிளக்கு புஜை மாதம் ஒரு நாள் நடைபெறும். அன்று பெண்கள்
    குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் கலந்து கொள்வார்கள். நல்ல காரியம்.நான் ஆளுக்கொரு விளக்க வைக்காமல் பொதுவாக ஒரு விளக்கு வைத்து வழிபாடு செய்யுங்கள் என்று கருத்து சொன்னேன். தள்ளுபடி செய்து விட்டாா்கள்.
    —————–
    ஊரில் கொடை விழா.ஒரு நாள் மாலை திருவிளக்கு புஜை நடைபெற்றது.1008 டோக்கன்கள் தலா ரூ.5க்கு பல ஊரில் உள்ளவா்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு பல ஊா் பெண்களை திரட்டி டோக்கனுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசு தங்க கம்மல் உட்பட 30 பரிசுகள் என்று விளம்பரப்படுத்தி பக்தி கிஞ்சித்தும் இல்லாத ஒரு பகட்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கி அமா்க்களம் நடந்தது. 3000 பேர்களுக்கு இலவச சாப்பாடு வேறு. பணம் …..ஊரில் வசுல் செய்து …………. ? இப்படித்தான் பல ஊர்கள் உள்ளன. இதில் எங்காவது நிதி மேலாண்மை நேர மேலாண்மை நிரந்தர திட்டங்கள் ஏதும் உள்ளதா ? இப்படி எவ்வளவுகாலம் ஓட்டுவது.
    ——————————————————————
    சொக்கலிங்கபுரம் என்ற சிறிய கிராமத்தில் சிலா் பணக்கார்களாக மாறிவிட்டாா்கள்.எனவே அம்மன் கோவிலுக்கு கோபுரம் கட்டித்தருகின்றோம் என்று முன்வந்தாாகள். உடனே ஊா் தலைவா் என்னை ஆலோசித்தாா். இன்று கோபுரம் கட்டிவிட்டுச் சென்று விடுவார்கள்.15 ஆண்டுகள் கழித்து மராமத்து செய்ய வேண்டும் என்றால் லட்சங்கள் தேவைப்படும்.அதை யாா் தருவா்கள் என்று கேட்டேன். ஊா் பெரியவா் ” முதலில் கோபுர மாராமத்து செய்ய ரூ.40 லட்சம் வங்கியில் நிரந்தர வைப்பாக முதலீடு செய்யுங்கள்.பின் கோபுரம் கட்டித்தாருங்கள் என்றாா். வருடங்கள் 3 கழிந்து விட்டது.யாரும் கோபுரம் கட்ட வரவில்லை.
    ———————————————————————————-
    நானும் எதிா்நீச்சல் போடடுக்கொண்டுதான் இருக்கின்றேன். எதிா் நீச்சல் தொடரும்.

  45. வன்முறையே வரலாறாய் என்ற கட்டுரைகளில் முஸ்லீம் மன்னா்களின் ஆட்சிமுறைதான் விளக்கம் பட்டுள்ளது.இந்துக்கள் அடைந்த இழிநிலை விளக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக முகம்மதுவின் வாழ்க்கை தரம் போதனைகள் சம்பவ்ஙகள் விவாதிக்கப்படவில்லை. அதற்கு நமது தளம் இன்னும் தயாராகயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *