கொலைகாரக் கிறிஸ்தவம் — 19

கோவாவிற்குள் கிறிஸ்தவப் பாதிரிகளைத் தவிர்த்து வேறெந்த மதகுருமார்களும், பூசாரிகளும் இருக்கவே கூடாது என்பதில் போர்ச்சுக்கீசியர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். போர்ச்சுக்கீசிய அரசனான செபாஸ்தியோ டிசம்பர் 4, 1567-ஆம் வருடம் வெளியிட்ட அரசாணையானைது போர்ச்சுக்கீசிய கோவாவில் முஸ்லிம் காஜிக்களோ அல்லது ஹிந்து யோகிக்களோ, கோவில்களில் பூசனைகள் செய்யும் ஹிந்து பிராமணர்களோ அல்லது மந்திரவித்தைகள் செய்பவர்களோ இருக்கவே கூடாது எனச் சொன்னது. ஹிந்துக்களின் மதத்தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் உடனடியாக கோவாவைவிட்டுச் செல்லவேண்டும், மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு கோவாவின் துறைமுகத்தில் கூலி வேலை செய்ய வைக்கப்படுவார்கள் என உத்தரவிட்டது.

இதுபோலவே, ஜூன் 28, 1727-ஆம் வருடம் ஜோவாவொ சால்தானா-டி-காமா “கோவாவிற்குள் ஹிந்து பிராமணப் பூசாரிகளும் வேறு பல ஹிந்து மதச்சடங்குகள் செய்பவர்களும் தங்களின் உண்மையான பெயர்களை மறைத்து வேறு பெயர்களில் தங்குவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார்கள் என எனக்குத் தெரியவந்தது.  இது எங்களது கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரானது. எனவே போலியான பெயர்களுடன் இங்கு வந்து தங்கியிருக்கும் ஹிந்து பிராமணர்களும், பூசாரிகளும் உடனடியாக கோவாவை விட்டு வெளியேற வேண்டும்,” என எச்சரித்து  மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தான்.

போர்ச்சுக்கீசிய அரசனால் 1567-ஆம் வருடம் ஹிந்துக்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஹிந்துக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ பாதிரியான பாதிரி அல்ஃபோன்ஸோ-டி-கோஸ்டா, “ஹிந்துக்கள் அனைவரும் அவர்களது குடும்பத்தினருடன் அவர்களுக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்று பாதிரிகளின் பிரசங்கங்களைக் கண்டிப்பாகக் கேட்கவேண்டும்” எனக் கூறியதும் பதிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது..

ஹிந்துக்களின் அவர்களது தொழில்களைச் செய்வதற்கும், அன்றாடக் கடமைகளைச் செய்து பிழைப்பதற்கும் பெரும் தடைகள் மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரிகளால் செய்யப்பட்டன. இதனால் அவர்கள் நரக வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

“வரி வசூலிக்கும் அதிகாரிகள், சுங்கவரி அலுவலர்கள், அரசாங்க கஜானாவை நிர்வாகிப்பவர்கள், கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர்கள், நீதிபதிகள் என எந்தவொரு கோவாவின் போர்ச்சுக்கீசிய அல்லது கிறிஸ்தவ அதிகாரிகள் பிராமணர்கள் மற்றும் ஹிந்துக்கள் எவரையும் கண்டிப்பாக பணிக்கு எடுக்கவே கூடாது.

“இதை மீறும் அதிகாரி உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் எனவும், அவனிடம் வேலை செய்த பிராமணன் அடிமையாகப் பிடிக்கப்பட்டு அவனது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் பாதி அரசனுக்கும், மீதிப் பாதி அவனைக் காட்டிக் கொடுத்தவனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், கோவா மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

“நகரங்களிலும், கோட்டைகளிலும் எவனேனும் ஒரு பிராமணன் அல்லது வேறொரு ஹிந்துவுக்கு வேலை கொடுத்த கவர்னரோ அல்லது போர்ச்சுக்கீசிய அதிகாரியோ பரமண்டலத்தில் இருக்கும் நமது பிதாவுக்கு பெரும் கேட்டினைக் கொண்டுவருகிறான் என உணரந்து, அவர்கள் உடனடியாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அந்த வேலைகள் சமீபத்தில் மதம்மாறின கோவா கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்படவேண்டும். அதுபோல விவசாயம் செய்வதற்கு நிலங்கள் ஒதுக்குகையில் அந்த நிலங்கள் கிறிஸ்தவனுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.” எனவும் அந்த உத்தரவு தெரிவித்தது.

இந்தக் கொடுமைகளைத் தாங்காமல் பல ஹிந்துக்கள் அருகிலுள்ள விஜயநகரப் பகுதிகளுக்கும், முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆண்ட பகுதிகளுக்கும் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். இதனால் கோவாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட, கோபமுற்ற போர்ச்சுக்கீசியர்கள் அவ்வாறு வெளியேறியவர்களின் நிலங்களைப் பிடுங்கி, கோவா கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்தார்கள். மேலும் சில ஹிந்துக்கள் தங்களின் பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்களை கோவாவிலியே அனாதைகளாக விட்டுச் சென்றார்கள். அந்த ஹிந்து அனாதைக் குழந்தைகள் அனைவரும் உடனடியாக கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஹிந்து அனாதைகளைக் குறித்து போர்ச்சுக்கீசிய அரசன் செபாஸ்தியோ மார்ச் 23, 1559 அன்று வெளியிட்ட அரசாணை, …..இன்றைய தேதியிலிருந்து கோவாவில் தகப்பன், தாய், பாட்டன், பாட்டி அல்லது பிற உறவினர்கள் எவரும் இல்லாத கோவாவின் ஹிந்துக்களின் குழந்தைகள் அனைவரும், அல்லது அவர்களின் கடைசி உறவினன் இறந்தபிறகு, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைக் குறித்து உணரும் வயதுடையவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டு அனாதைகளை நிர்வகிக்கும் நீதிபதிமூலம் செயிண்ட் பால் கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவ பாதிரிகள் அவர்களுக்கு கிறிஸ்தவ மதத்தின் மேன்மையைக் கற்றுக் கொடுத்து அவர்களை அரசாங்கத்தின் உயர்பதவிகளில் அமர்த்த வேண்டும். என்றது.

இதை உடனடியாக ஏற்ற கோவாவின் வைசிராய் அண்டாவோ-டி- நூரன்ஹாவும், அவருக்குப் பின் வந்த கவர்னரான அண்டோனியோ மோனிஸ் பார்ரெட்டேவும் இதனைச் செயல்படுத்த முனைந்தார்கள்.

ஏப்ரல் 3, 1582-ஆம் வருடம், தந்தை இல்லாமல் தாயுடனோ அல்லது பாட்டன், பாட்டிகளிடமோ வளரும் ஹிந்துக் குழந்தைகளும் பிடித்துச்செல்லப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட வேண்டும் போர்ச்சுக்கீசிய அரசனால் இன்னொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

கோவாவில் ஹிந்துக்களுக்கு எதிராக இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய போர்ச்சுகீசிய பாதிரிகள், ஹிந்து அனாதைக் குழந்தைகளைக் குறித்து தங்களுக்கு தகவல்கள் தரப்படாமல் மறைக்கப்படுவதாகவும், அம்மாதிரியான குழந்தைகளை ஹிந்துக்கள் ஒளித்து வைத்துக் கொள்வதாகவும் அல்லது அவர்களை ரகசியமாக போர்ச்சுக்கீசிய பகுதியிலிருந்து கடத்தி கொண்டு போய்விடுவதாகவும் அதனால் தங்களால் அதிகமான ஹிந்து அனாதைக் குழந்தைகளை மதமாற்றம் செய்ய முடியவில்லை என்று புகாரளித்தார்கள். எனவே தாங்களே ஹிந்துக்களின் பகுதிக்குச் சென்று அவர்களைப் பிடித்து உடனடியாக ஆறு நாட்களுக்குள் அவர்களை மதமாற்றம் செய்ய அனுமதி வேண்டி அரசனுக்கு மனுச் செய்தார்கள்.

பாதிரிகளின் இந்தச் செயல் ஹிந்து அனாதைகளை மதம் மாற்றம் செய்வதுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. கோவா சட்டங்களின்படி ஹிந்து அனாதைகளின் நிலமும், சொத்தும் அவர்களின் கண்களை உறுத்தியதால் அந்தச் சொத்துக்களை அபகரிக்க வேண்டியும் இவர்கள் இந்த நாடகங்கள் ஆடினார்கள்.  அந்த அனாதைகளைப் பிடித்து கட்டாய மதமாற்றம் செய்ததின் காரணமாக ஹிந்துக்களின் சொத்துக்கள் அனைத்தும் கிறிஸ்தவர்களின் கைகளில் சென்று சேர்ந்தன.

ஓர்மே ஆவணங்கள் (Orme manuscripts, Vol. 114, Sect.4, Page 164), ஹிந்து அனாதைகள் குறித்து மராட்டா சிவாஜிக்கும், போர்ச்சுக்கீசியர்களுக்குன் நிகழ்ந்த தொடர் சச்சரவுகளைக் குறித்துக் கூறுகிறது:

அனாதை ஹிந்துக் குழந்தைகளைப் பிடித்து ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதன் காரணமாக மராட்டா சிவாஜிக்கும், போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே தொடர்ந்து சச்சரவுகள் நிகழ்ந்தன. ஹிந்துக்களின் பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துக்களை மதமாற்றம் என்கிற பெயரில் போர்ச்சுக்கீசிய பாதிரிகள் எடுத்துக் கொள்வதனை மராட்டாக்கள் மிகவும் எதிர்த்தார்கள். இதன் காரணமாக இவர்களிடையே தினமும் சச்சரவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன….

பாதிரிகளால் கைப்பற்றிக் கொண்டு செல்லப்பட்ட சில ஹிந்து அனாதைகளில் சிலர் பெரும் பணம் மாற்றாகக் கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. பாதிரிகளைத் தவிர்த்துச் சில சாதாரண போர்ச்சுக்கீசியர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு ஹிந்துக்களிடம் பெரும் பணம் பெற்றுக் கொண்ட நிகழ்வுகளும் அங்கு சாதாரணமாக நிகழ ஆரம்பித்தது. அந்தச் செயல்கள் அனைத்து பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. போர்ச்சுக்கீசிய பாதிரிகள் தங்களின் அரசனுக்கு இதனைக் குறித்து புகார்களும் அளித்துள்ளார்கள். அந்த ஆவணங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

சில சமயங்களில் ஹிந்துக் குழந்தைகளின் தகப்பன்மார்கள் உயிருடன் இருந்தபோதே அவர்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு, சர்ச்சுகளின் அடைக்கப்பட்டுப் பின்னர் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். பாதிரிகளின் கொடூரங்களுக்கு அஞ்சிய பல ஹிந்துக்கள் இந்தச் சம்பவங்களை கண்ணீருடன் ஏற்றுக் கொண்டு அமைதியானார்கள். ஏனென்றால் போர்ச்சுக்கீசியக் கோர்ட்டுகளில் ஹிந்துக்களின் சொற்களுக்கு மதிப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் மிக மோசமாக பழிவாங்கப்படுவார்கள் என்பதும் இன்னொருபுறம்.

இதே நிலைமை 1718-ஆம் வருடம் வரையிலும் கோவாவெங்கும் இருந்தது. இந்தக் கட்டாய மதமாற்றங்களுக்கு அஞ்சிய பல ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளை போர்ச்சுக்கீசியப் பகுதிகளிலிருந்து வெளியே கொண்டுசென்றார்கள். எனவே ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்பினால் தங்களின் கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்குப் பங்கம் வந்துவிடும் என அஞ்சிய கோவா வைசிராய் ஜூலை 11, 1718-ஆம் வருடம் கீழ்க்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்:

கோவாவில் வாழும் எந்த ஹிந்து ஆண் அல்லது பெண் எவரும் தங்களின் பாதுகாப்பில் வாழும் பதினான்கு வயதிற்குட்பட்ட மகனையோ அல்லது பேரனையோ அல்லது பனிரெண்டு வயதிற்குட்பட்ட ஹிந்துப் பெண்களையோ இந்தியப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லத் தடைவிதிக்கப்படுகிறது.  அவ்வாறு அழைத்துச் செல்லப்படுவது சட்டவிரோதம் என அறிவிக்கிறேன். இந்த உத்தரவை மதிக்காதவர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்படுவதுடன் அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு கசையடி வழங்கப்படுவதுடன், அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு குவாமா நதிக்கருகில் வருவதும் தடை செய்யப்படும்.  இந்த தண்டனைகளிலிருந்து தப்ப ஒரே வழி அவர்கள் அந்தக் குழந்தைகளை கிறிஸ்தவ பாதிரிகளிடம் ஒப்படைத்து அவர்களை மதமாற்றம் செய்ய அனுமதிப்பதுதான்.

[தொடரும்]

2 Replies to “கொலைகாரக் கிறிஸ்தவம் — 19”

  1. ‘Ghazwa-e-Hind’ (War against India) Will Continue Irrespective of Indo-Pak Tie, Jaish-e-Mohammed Resolved, In a Conference, More Than a Year Ago: Intelligence Report
    முஹம்மது என்ற அரேபிய தளபதி இந்தியாவின் மீது படையெடுக்க தன் சீடர்களுக்கு ஆலோசனை வழங்கினாா். இந்த முஹம்மதை நபி என்றும் சொல்வார்கள்.
    Feb 28, 2019

    NEW DELHI: Pakistan-based terror group Jaish-e-Mohammad, which was responsible for the killing of 40 CRPF personnel in Pulwama, had resolved in a conference more than a year ago that its “Ghazwa-e-Hind” (War Against India) will continue irrespective of Indo-Pak ties, according to an intelligence report.

    Citing the report, officials said the conference organised in Okara district in Pakistan on November 27, 2017, saw more than 2,000 participants showering praise on organisational activities of JeM and the role played by its chief Masood Azhar, the mastermind of February 14 Pulwama strike in Jammu & Kashmir, among other terror attacks in India.

    According to the intelligence report prepared on the basis of inputs from across the border, JeM resolved at the conference to continue what it called its ‘Ghazwa-e-Hind’.

    The conference was addressed by JeM leaders Abdul Rauf Asghar, Md Maqsood and Abdul Malik Tahir.

    Asghar said the Indo-Pak friendship and bilateral trade would not end ‘jihad’ as there were many youths ready to sacrifice, the report said.

    It further said that another six-day meeting, held in February 2018, saw the JeM’s ‘Shoba-e-Taaruf’ (Department of Introduction) conducting 13 interaction sessions in which 700 people, including 65 ‘Ulemas’ (religious scholars), participated.

    The JeM terrorists had carried out a suicide attack on February 10, 2018, on Indian Army’s Sunjwan camp in Jammu and Kashmir in which five Army officers were killed and many more were injured.

    Five JeM terrorists took part in the attack in which three were killed and two escaped.

    The report said it was described by the JeM as a pre-planned operation carried out on the Sunjwan Camp by JeM as part of “revenge” operations launched by the ‘Afzal Guru Shaheed Squad’ in Kashmir.

    The intelligence report also mentioned a four-day visit to Sialkot district in March 2018 of JeM’s ‘Shoba-e-Taaruf’ delegation, comprising Mujahid Abbas, Rashid Mushtaq and Abid Mehmood, during which it organised 17 sessions attended by 1,500 people, including 50 ‘Ulemas’.

    The delegation recruited 22 people for a training course and 91 for ‘Daura-e-Tafseer’ (Training on Jihad and Quran). The participants also promised to take part in religious events organised by the JeM and the ‘Ulema’ expressed satisfaction over the schedule for training prepared by JeM chief Masood Azhar.

    They also appreciated religious services rendered by Masood Azhar and prayed for JeM ‘Mujahideen’. The delegation held five separate sessions with JeM activists, which were attended by 28 ‘Ulema’ and activists, the report said.

    https://zeenews.india.com/india/jem-resolved-to-continue-jihad-against-india-intelligence-report-2184307.html

    ——–

  2. Prophecy number 1.
    Holy Prophet (PBUH) Told Hazrat Abu Huraira (RA):
    “From the Umat (Followers of Islam currently) there will be a rise of Battalions from Sindh (Indus) and Hind (Sub-continent). If I got opportunity to be part of such a movement and if I martyred then it is good, if I returned alive I will be like free Abu Huraira who is freed from Hell by Allah”.

    Prophecy number 2:
    Holy Prophet (PBUH) Told Hazrat Suban (RA):
    “Two groups in my Umma will be freed by Allah from hell fire, One which will conquer India and the other which will be with Hazrat Esa (AS).”

    Prophecy number 3:
    Holy Prophet (PBUH) Discussed India with Hazrat Abu Huraira (RA) and told that:
    “One of your Battalion will fight in India, Allah will give success to them to the level that they (Mujahideen) will enchain their (Hindus) rulers with clutches, and Allah will forgive sins of these warriors and when they return they will find Hazrat Esa (AS) in Damascus.”
    Hazrat Abu Huraira (AS) said:
    “If i had opportunity to participate in this war then i will sell all of my old and new belongings and will participate. When Allah will give us success and when we will return i will be an independent Abu Huraira who will come to Damascus and will find Hazrat Esa (AS). O my Holy Prophet (PBUH) i will have very strong desire at that time to got to him and tell him that i am your companion.”

    Prophecy number 4:
    Hazrat Kaab (RA) said that Holy Prophet (PBUH) said that:
    “One of the Kings of Bait-ul-Muqadas will launch Battalion to India. Muslims will conquer India, capture their treasures, then King will use these treasures to decorate Bait-ul-Muqadas. That Battalion will present the rulers of India enchained with clutches in front of King. His warriors with permission of King will conquer all the area between east and west and will stay in India will the arrival of Dajjal.”

    Prophecy number 5:
    This prophecy narrated by Hazrat Safwan Bin Umru (RA) is Marfoh in the level . He said that some people told him that Holy Prophet (PBUH) said that
    “Some people from My Umma will fight India. Allah will give them great success till they will enchain the rulers of India in clutches, Allah will forgive sins of these Mujahideen and when they will return Damascus they will find Hazrat Esa (AS) there”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *