காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை

காஷ்மீர் குறித்தான இந்தியர்களின் அறியாமை குறிப்பாகத் தமிழர்களின் மூடத்தனம் வேதனைக்குரியது. வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட படித்தறியாத இரண்டாம்தர, மூட, சினிமா நடிகன் போடுகிற கேவலமான ட்வீட்டுகளைப் படிக்கையில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என வெளியில் சொல்லக்கூட உண்மையில் வெட்கமாக இருக்கிறது. தமிழர்களின் அறியாமையே அவர்களை அழித்தது. அழித்துக் கொண்டிருக்கிறது. இனியும் அழியும்.

இந்தியா இன்றைக்கல்ல, என்றைக்குமே காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. கொடுக்கவும் முடியாது என்பது நிதர்சனம். அவ்வாறு விட்டுக் கொடுக்கும் நாளில் கணக்கற்ற நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து ஜனித்திருக்கும் பாரதவர்ஷம் மரணித்திருக்கும். மீளவே முடியாத படுகுழியில் இந்தியர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஹிந்துக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்திருப்பார்கள்.

ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியவராகக் கருதப்படுகிற, சப்த ரிஷிகளின் ஒருவரான காஷ்யப முனிவர் வாழ்ந்த பகுதியானதால் ‘காஷ்மிர்’ என அழைக்கப்படுவதனை உங்களில் பலர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். ஆதிகாலம் தொட்டே காஷ்மிரிகள் சிவனை வணங்கும் தீவிர சைவர்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் அவர்கள் சிவனை வழிபடுவதனை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் காஷ்மீரத்து பிராமணர்கள் தங்களின் குலப் பெயர்களை (பட், வாணி, தர், கவுல், முன்ஷி, ரெய்னா, கன்னா, ரிஷி….) தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கேனும் ஒருநாள் தங்கள் சந்ததிகள் மீண்டும் தாங்களின் தாய்மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பி வருவார்கள் என்கிற ஆசையில் அந்த வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அது மறக்கப்பட்டுவிட்டது. கடந்த ஐநூறாண்டுகால தொடர்ச்சியான கட்டாய மதமாற்றங்கள் காஷ்மிரிகளின் கலாச்சாரத்தை வேரறுறுத்துவிட்டது.

ஹர்ஷவர்த்தனனின் அரசில் அவருக்கு மந்திரியாக இருந்த கல்ஹானா காஷ்மீரின் வரலாற்றை எழுதியிருக்கிறார். “ஆற்றின் அரசர்கள்” எனப் பொருள்படும் “ராஜதரங்கிணி” காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை. பொதுயுகம் 653-இலிருந்து கல்ஹானா வாழ்ந்து மறைந்த 1266-ஆம் வருடம் வரை காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றை விளக்குகிறது “ராஜதரங்கிணி”. அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டுக் காஷ்மீரை அடுத்தவனுக்குத் தூக்கிக் கொடுப்பது போன்ற கோழைத்தனம் வேறொன்றுமில்லை.

காஷ்மீரின் மீதான இஸ்லாமியப்படையெடுப்புகள் பொதுயுகம் 750-ஆம் வருடத்திலிருந்தே துவங்கிவிட்டன. இஸ்லாமிய காலிஃப்பான அல்-மன்சூர், ஹசம்-பின்-அம்ரூ என்பவனை காஷ்மீரின் மீது படையெடுக்க அனுப்பினான். அதுவே காஷ்மீர் மீதான முதல் இஸ்லாமியப் படையெடுப்பு. அந்த முதல் படையெடுப்பில் “காஷ்மீர் ஹிந்து அரசனை அடக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை சிறைக் கைதிகளாகவும்,அடிமைகளாகவும்” பிடித்துச் சென்றதாகக் குறிப்பிடுகிறான் அம்ரூ.

அதனைத் தொடர்ந்து காஷ்மீரை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் கூட்டம் கூட்டமாக ஹிந்துக்களை மதமாற்றம் செய்தார்கள். அதனை எல்லாம் இங்கு எழுத இடமில்லை (இதனைக் குறித்து ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன், தமிழ்ஹிந்து.காமில்).

முகலாய அரசர்களின் காலத்தில் காஷ்மீரத்தில் கட்டாய மதமாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டன. அதிலும் அவரங்ஸிப்பின் காலத்தில் மதமாற்றம் உச்சத்திற்குச் சென்றது. காஷ்மீர் முழுமையான இஸ்லாமியப் பகுதியாக மாறியதும் அப்போதுதான். இந்தத் துயரைத் தாங்க இயலாத காஷ்மீரி பண்டிட்டுகள் சீக்கிய குருவான தேஜ்பகதூரிடம் சென்று முறையிட்டார்கள். ஹிந்துக்களின் மீதான இந்தக் கொடுமைகளை எதிர்த்தால் கோபமடைந்த அவ்ரங்ஸிப் சீக்கிய மதகுருவான குரு தேஜ்பகதூரையும் அவரது பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்ற வரலாறு இருக்கிறது.

காஷ்மீரத்திற்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு மிக ஆழமானது. ஆதிசங்கரரின் காலடிபட்ட மண் அது. சங்கரர் தனது சவுந்தர்யலஹரியை இயற்றிய இடமும் காஷ்மீரம்தான். ஸ்ரீநகருக்கு அவர் வந்து சென்றதற்கு அடையாளமாகக் கட்டப்பட்ட ஆலயம் இருக்கும் இடம் இன்றைக்கும் சங்கராச்சார்யா மலை (சங்கராச்சார்யா ஹில்) என்றே அழைக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக அவரது காலடிபட்ட இன்னொரு இடமான சாரதா வித்யாபீடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-ஆம் வருடம் காஷ்மீரைத் தாக்கிய பாகிஸ்தானிகள் அங்கிருந்து பல ஆயிரக்கணக்கான ஹிந்து மற்றும் சீக்கியப் பெண்களைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். அந்தப் பெண்களில் பலர் முஸ்லிம்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜீலம் சந்தையில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டார்கள். தங்களின் மதத்தைச் சாராத காஃபிர்களின் மீது ஜிகாத் செய்து அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களின் பெண்களையும், சொத்துக்களையும் அபகரிப்பது அல்லாவின் கட்டளை என முழுமையாக நம்புகிற முஸ்லிம்கள் இருக்கும்வர இந்தியாவுக்கும், இந்திய ஹிந்துக்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

பாகிஸ்தானின் நோக்கம் வெறுமனே இந்தியாவைப் பிடிப்பது மட்டுமில்லை என்பதினை நீங்கள் உணரவேண்டும். அவர்களின் நோக்கம் “கஸ்வா-எ-ஹிந்த்” என்பதினை உணராத இந்தியன், தமிழன் வேசிமகன்களான சில்லறை சினிமா நடிகனுக்குச் சமமானவன். “காஃபிர்களின் மீதான இறுதிப் போர் ஹிந்துஸ்தானத்தில் நடக்கும். அதில் வெல்லப்போகிற முஸ்லிம்களை வானத்திலிருந்து அல்லா இறங்கி வந்து வரவேற்று ஜன்னத்திற்கு அழைத்துப் போவார்” என்கிற மாதிரியானதொரு ஹதீசை முகமது நபி சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அதுவே கஸ்வா-எ-ஹிந்த்! காஃபிர் ஹிந்துக்களுக்கு எதிரான புனிதப்போர்!

இதை எத்தனை முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு முஸ்லிமும் நம்புகிறான். பாகிஸ்தானிய அரசியல்வாதிகளும், ஜெனரல்களும் பூரணமாக அதனை நம்புகிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பாகிஸ்தானை முன்னேற்ற எந்தவிதமான முயற்சியும் செய்வதில்லை. ஏனென்றால் இந்தியாவை வென்றால் எல்லா ஹிந்து காஃபிரையும் அடிமையாக வைத்துக் கொள்ளலாம். அவன் சொத்துக்களை அபகரித்து சுகவாழ்வு வாழலாம். கணக்கற்ற காஃபிரி ஹிந்துப் பெண்களுடன் காம சுகம் கொள்ளலாம் என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சொல்வதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமாக இருக்கலாம். என்ன செய்ய? உண்மையை நம்பச் செய்வதுதான் இந்தக் காலத்தில் கடினமாக இருக்கிறது.

இப்படி அல்லாவின் ஆணைப்படி காஷ்மிரைப் பிடித்து, அதன்பிறகு கஸ்வா-எ-ஹிந்த் புனிதப் போர் செய்து இந்தியாவைக் கொள்ளையடித்து சுகவாழ்வு என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தானியர்களின் கனவை மோடியும், அமித்ஷாவும் தகர்த்து எறிந்தால் பாகிஸ்தானியன் என்ன செய்வான்? அல்லா தங்களை இப்படி அம்போவெனக் கைவிடுவான் என்று எதிர்பார்க்காததால் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறியாமையில் உழலுகிற சில்லறை சினிமா நடிகனுக்காக இதனை நான் எழுதவில்லை. “உன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை நீ உணர்ந்து கொள்” என எச்சரிக்கவே இது எழுதப்பட்டிருக்கிறது.

“காஷ்மீருக்குண்டான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இனி காஷ்மீர் வாழ் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பழங்குடியின சமுதாயத்தினரும் மற்ற மாநிலங்களைப் போல இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை உய்விக்கவேண்டி அரசியலுக்கு வந்த திருமாவளவன் இதை எதிர்ப்பது எனக்கு மட்டும்தான் விநோதமாகத் தெரிகிறதா?

லடாக்கில் பெரும்பான்மை சமுதாயத்தினர் புத்த மதத்தவர்!தமிழகத்தின் காஞ்சி காமாக்ஷி கோவிலையும், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலையும் தரைமட்டமாக்கிவிட்டு புத்த விஹாரைகளைக் கட்டச் செங்கல் சேகரித்துக் கொண்டிருக்கும் திருமாவளவன், லடாக் வாழ் பெளத்தர்கள் புனர்வாழ்வு பெறுவதை எதிர்ப்பதும் எனக்கு மட்டும்தான் விநோதமாகத் தெரிகிறதா?

இலங்கையில் தமிழ் ஹிந்துக்களுக்கு ஆதரவாக பெளத்தத்தையும், தமிழகத்தில் பெளத்த மற்றும் இஸ்லாத்திற்கு ஆதரவாக தமிழ் ஹிந்துக்களையும், லடாக்கில் இஸ்லாத்திற்கு ஆதரவாக பெளத்தத்தையும் எதிர்க்கும் திருமாவின் கொள்கை நிலைப்பாடுகள் எனக்கு மட்டும்தான் விநோதமாகத் தெரிகிறதா?”

– எதிராஜன் ஸ்ரீனிவாசன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

புலிவால் பிடித்த நாயரும், காஷ்மிர் பிரச்சினையைப் பிடித்த பாகிஸ்தானும் ஒன்றுதான். விடவே முடியாத சிக்கல் அது. கொஞ்சமேனும் மூளை இருக்கிற நாடு இந்தப் பிரச்சினையைத் தூக்கிக் கடாசிவிட்டு தன்னுடைய முன்னேற்றத்தைப் பார்க்கப் போயிருக்கும். ஆனால் பாகிஸ்தான் ஒரு விசித்திரமான நாடு. தன்னுடைய மண்டை உடைந்தாலும் பரவாயில்லை அடுத்தவனின் மூக்கிலிருந்து ரத்தம் வரவேண்டும் என்கிற எண்ணமுடையவர்களே அங்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருக்கிறார்கள்.

இரண்டு நாடுகளும் பிரிந்து ஏறக்குறைய 72 ஆண்டுகள் தீராமல் இருந்த காஷ்மிர் பிரச்சினையை இந்தியா ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஏறக்குறைய “நீ பிடித்த ஏரியாவை நீயே வைத்துக்கொள்; எங்களிடம் இருப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்கிற முடிவுக்கு வந்த இந்தியா தீர்க்கமான, தீர்மானமானதொரு முடிவினை எடுத்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியாவும், பாகிஸ்தானும் வீணடித்த பணம் கணக்கில் இல்லாதது. இரண்டுமே ஏழை நாடுகள் என்றாலும் இந்தியா தொழில்வளம் கொண்ட பெரியதொரு நாடு. எவ்வளவு செலவு வந்தாலும் தாக்குப் பிடிக்கும் தன்மை இந்தியாவிடம் இருக்கிறது.

மறுபக்கம் பாகிஸ்தான் பரிதாபமானதொரு நிலையில் இருக்கிறது. இன்றுவரை ஒரு சாதாரண குண்டூசியைக் கூடச் சொந்தமாகத் தயாரிக்க வக்கில்லாத, இறக்குமதியை மட்டுமே நம்பிருக்கிற, சீனா, அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகள் போடும் பிச்சையில் பிழைத்துக் கிடக்கிற நாடு அது. விவசாயத்தை விட்டால் அந்த நாடு உருப்படியாகத் தயாரிப்பது எதுவுமில்லை. அரசு நிர்வாகம் என்று எதுவுமில்லை. பத்திரிகைச் சுதந்திரமோ அல்லது நீதித்துறை சுதந்திரமோ அங்கு இல்லை. எல்லாமே பாகிஸ்தானிய ராணுவத்தின் கையில் இருக்கிறது. ராணுவம் சொல்வதுதான் அங்கு எழுதப்படாத சட்டம். அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் எந்தப் பத்திரிகையாளனும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்வது சந்தேகம்தான்.

சிறுபான்மையினருக்கு அங்கு எந்த உரிமையுமில்லை. சக முஸ்லிம்களான அஹமதியாக்களை ‘காஃபிர்கள்” எனத் தனது நாட்டு கான்ஸ்ட்டிடியூஷனில் (அரசியலமைப்புச் சட்டம்) எழுதி அவர்களை விரட்டியடித்த நாடு. இன்றைக்கும் அஹமதியாக்களுக்கும், ஷியாக்களும் பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை. ஹிந்துக்களின் நிலையோ இன்னும் கேவலமானது.

பாகிஸ்தானிய ஹிந்துக்கள் நாய்களை விடவும் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் பல நூற்றுக்கணக்கான ஹிந்துப் பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்ட பின்னர் முஸ்லிம்களுக்கு நிக்காஹ் செய்து வைக்கப்படுகிறார்கள். பெண்களை இழந்த ஹிந்துப் பெற்றோர்களின் கதறல்களை எந்த இம்ரான்கானும் கேள்வி கேட்பதில்லை. கிறிஸ்தவர்களின் நிலையோ ஹிந்துக்களி நிலைக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை. கொல்லப்படும் கிறிஸ்தவர்களையும், எரிக்கப்படும் சர்ச்சுகளையும் குறித்துக் கேள்விகேட்க எவனுமில்லை.

பலூச்சிஸ்தானில் நடக்கும் கொடுமைகளை எழுதவே கை கூசுகிறது. அப்பாவி பலூச்சிகள் நித்தமும் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிந்திக்களின் நிலையும் அதுவேதான். பாகிஸ்தான் என்றால் பஞ்சாபிகள் மட்டும்தான். பஞ்சாபிகள் தவிர வேறொருவர் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை எனபதுவே இன்றைய நிலைமை. பாகிஸ்தான் பிடித்துவைத்திருக்கும் காஷ்மீரில் நிலைமை என்ன? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் பாகிஸ்தானிகளை வெறுக்கவல்லவா செய்கிறார்கள்?

நிலைமை இப்படி இருக்க, பாகிஸ்தான் பிரதம மந்திரியான(!) இம்ரான்கான் அந்த நாட்டுப் பாராளுமன்றத்தில் “இந்தியா ஒரு இனவெறி பிடித்த நாடு. அங்கு சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பில்லை. முஸ்லிம்களை அடித்துக் கொல்கிறார்கள்” என்று புளுகுகிறான். “திப்புசுல்தான் மாதிரி சாகும்வரை போர் புரியப் போவதாக” மிரட்டுகிறான். “புல்வமாக்கள் மீண்டும் நடக்கும்” எனப் புலம்புகிறான்.

இந்தியாவில் அப்படியா நடக்கிறது? பெரும்பான்மை ஹிந்துக்களை அல்லவா இந்திய நாட்டுச் சட்டங்கள் அடக்கி ஆள்கின்றன? தங்களுக்கும் சிறுபான்மையினரைப் போல சம உரிமை வேண்டும் என்றல்லவா இந்த நாட்டு ஹிந்துக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? இம்-த-டிம் மீண்டும், மீண்டும் தனது அறியாமையை, மதவெறியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியா இன்று இல்லை. தன்னை எல்லா விதத்திலும் பலப்படுத்திக் கொண்ட, பலப்படுத்திக் கொண்டுருக்கும் இந்தியா இது. பாகிஸ்தானின் எல்லைகளைத் தொடந்து கண்காணிக்கும் சாட்டிலைட்டுகளும், உளவு விமானங்களும் தொடர்ந்து பறந்து கொண்டிருக்கின்றன. அதையும் மீறி உள்ளே நுழைபவனின் கதி என்ன என்பதனை பாக்கிஸ்தானி பயங்கரவாதிகளும், ராணுவமும் நன்கு அறிவார்கள்.

முன்பெல்லாம் பிடிபடுகிற பாகிஸ்தானி பயங்கரவாதிகளைக் கைது செய்து சிறையில் அடைத்த இந்தியா இன்றைக்கு அங்கே அவர்களைக் கொல்கிறது. பயங்கரவாதிகளின் மீது மென்மையான நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் அரசாங்கமல்ல இன்றைக்கு இருப்பது. இன்னொரு புல்வாமா நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பது பாகிஸ்தானிய ராணுவத்திற்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அப்படியானதொரு நிகழ்வினை நிகழ்த்திக்காட்ட அவர்கள் தொடர்ந்து முயல்வார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. முன்பைப் போலல்லாமல் இன்றைக்கு இந்திய ராணுவமும், அரசாங்கமும் அதற்குத் தயாராகவே இருக்கிறது.

ஐ.நா. சபையில் முறையிடுவோம், பிரச்சினையைக் கிளப்புவோம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இன்றைக்கு எந்த உலக நாடும் வளர்ந்துவரும் பொருளாதார சக்தியான இந்தியாவை எதிர்த்துக் கொண்டு திவாலான பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவே மாட்டார்கள். அங்கு போய் கத்திவிட்டு வரலாம். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அமெரிக்காவே அந்தர் பல்டியடித்துவிட்டது. ஐரோப்பிய நாடுகள் எப்போதும் அமெரிக்காவைத்தான் பின்பற்றும். கருத்துச் சொல்லும். அமெரிக்காவே “அது இந்தியாவின் உள் நாட்டுப் பிரச்சினை” என்று கை கழுவிய பின்னர் வேறெந்த ஐரோப்பிய நாடும் அதனை மாற்றிச் சொல்ல முன்வராது.

என்னைக் கேட்டால் பாகிஸ்தானுக்கு இதுவொரு அருமையானவாய்ப்பு. எத்தனை கத்தினாலும், புல்வாமாக்கள் செய்தாலும் இந்தியா காஷ்மிரை ஒருபோதும் விட்டுத் தராது. பதிலுக்கு மூக்கு உடைபடுவதுதான் மிச்சமாகும். எனவே பாகிஸ்தான் தனது பொருளாதாரத்திற்காக, இத்தனை நாட்கள் நினைத்துப்பார்த்திருக்காத தனது மக்களின் நல வாழ்விற்காகத் தனது சக்தியைச் செலவிட வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் பாகிஸ்தான் என்கிற நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் போகக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

பாகிஸ்தானிய ராணுவத்தின் அதிகாரங்களைப் பிடுங்கி அவர்களை அடக்கிவைத்தால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் அதற்குத் துணிச்சலான தலைமை வேண்டும். அந்தத் தலைமை இன்றைக்குப் பாகிஸ்தானில் இல்லை. எதிர்வரும் காலத்திலும் அதுபோன்றதொரு தலைமை வருவதற்கான சாத்தியங்கள் கண்ணில் தென்படவில்லை. படித்தவர்கள், நேர்மையான சிந்தனையுடையவர்கள் பாகிஸ்தானில் அருகி விட்டார்கள். உண்மையான அறிவாளிகள், சிந்தனையாளர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானை விட்டுச் சென்றுவிட்டார்கள்.

இன்றைய பாகிஸ்தான் சுயநலமிகளால், சிந்தனையற்ற மூடர்களால், கண்மூடித்தனமான மதவாதிகளால் இயக்கப்படுகிற ஒன்று. அதுபோன்றதொரு தேசத்தில் வாழ்கிற மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.

ஜெய் ஹிந்த்.

(பி.எஸ்.நரேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

16 Replies to “காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை”

  1. அருமையான கட்டுரை.உண்மையை இவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.நன்றி.வாழ்த்துக்கள்.

  2. இந்துவில் வெளியாகும் கட்டுரைகளை வாட்ஸ்அப் பில் வெளியிடுவது எப்படி ?

  3. இந்துவில் வெளியாகும் கட்டுரைகளை வாட்ஸ்அப் பில் வெளியிடுவது எப்படி ?

  4. தமிழ் ஹிந்துவுக்கு என்று ஒரு தரம் இருந்தது. இனி மேல் அதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் போலிருக்கிறது.

    // வேசிமகன்களான சில்லறை சினிமா நடிகனுக்குச் சமமானவன் // வேசிமகன் என்று வசைபாடும் நரேந்திரன் வேசியின் மகனாகப் பிறப்பது அவன் தவறு என்று நினைக்கிறார். இதை தமிழ் ஹிந்துவும் பிரசுரிக்கிறது. சினிமா நடிகன் என்பதையே வசையாகப் பயன்படுத்துபவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? சினிமா நடிகன் என்பது கருத்து சொல்வதற்கான தகுதியும் அல்ல, தகுதியின்மையும் அல்ல என்பதை அவர்தான் புரிந்து கொள்ளவில்லை, தமிழ் ஹிந்து தளத்தின் பதிப்பாசிரியர்களுமா? எந்த முகத்தோடு சாய்வாலா என்று இழிவாகப் பேசுபவர்களை இடித்துரைக்கிறீர்கள்? நரேந்திரன் ஐ.டி. துறையில் பணி புரிபவர் என்று ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். சில்லறை ஐ.டி. துறை பணியாளர் என்று எழுதுவது எத்தனை அறிவார்ந்த செயலாக இருக்கும்?

    சினிமா நடிகரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பது அவர் தவறு அல்ல. அதை நாலு பேர் காது கொடுத்துக் கேட்டால் அதுவும் அவர் தவறு அல்ல. இன்னொரு சினிமா நடிகர் கூடத்தான் காஷ்மீர் பற்றி மோடியும் ஷாவும் அர்ஜுனன், கிருஷ்ணன் என்று பேசி இருக்கிறார், அவரைப் பார்த்தும் வேசி மகனான சில்லறை சினிமா நடிகர் ஏன் கருத்து சொல்கிறார் என்று நரேந்திரன் வசை பாடுவாரா? அவர் அப்படி தப்பித்தவறி வசை பாடினால் அதை தமிழ் ஹிந்துவும் பிரசுரித்துவிடுமா?

  5. தமிழ் ஹிந்துவின் தரம்
    தாயின் முலைப்பால் போன்றது!

    அதன் புனிதமோ
    அப்பனின் கோவணம் போன்றது!

    அம்மாவின் முலையிலிருந்து
    நேரடியாகப் பாலைக் குடித்துக் கொண்டே
    அப்பனின் கோவணத்தை
    முகர்ந்து கொள்பவர்களால்
    நிறைந்தது தமிழ்ஹிந்து!

    மலம் என நினைத்தவுடனேயே
    குண்டி கழுவிக் கொள்ளும்
    புனிதர்கள் மட்டுமே
    படிப்பார்கள் தமிழ்ஹிந்துவை!

    அடேயப்பா!!

    (Edited and published)

  6. அறியாமையில் உழலுகிற சில்லறை சினிமா நடிகனுக்காக இதனை நான் எழுதவில்லை. “உன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை நீ உணர்ந்து கொள்” என எச்சரிக்கவே இது எழுதப்பட்டிருக்கிறது.
    —————————————————————
    ஆா்வி தங்களுக்கு இவ்வளவு அவசரம் ஆவேசம் ஏன் ? சினியா நடிகர்கள் குறித்த அபிப்ராயம் தவிா்த்து மேற்படி கட்டுரையில் உள்ள ஆழமாக வரலாற்று உண்மைகளை நாம் அறி்ந்து கொள்ள வேண்டும்.

    தக்க பயிற்சியின்றி ஒரு ஆழமான சிக்கலான வழக்கு குறித்து அபிப்ராயம் தெரிவிக்கக் கூடாது.நடிகன் ஆகிவிட்டால் சில வெற்றிப்படங்களை அளித்து விட்டால் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து விட்டால் …..

    அது ,காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து சொல்ல அவருக்கு என்ன தகுதியை அளித்திருக்கும் ?
    விஜய் சேதுபதி என்ற கூத்தாடி எந்த தகுதியும் இன்றி காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்திருப்பது கேட்கும் நாம் எல்லாம் முட்டாள்களா ?
    ஆகவே எந்த தகுதியும் இல்லாத பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் தங்களது பேட்டியை வெளியிட ஒளிபரப்ப தயாராக உள்ளாா்கள் என்ற ஒரே காரணத்திற்காக தகுதியில்லாத பொருள்கள் குறித்து கருத்து தெரிவிப்பது பண்பாடு அல்ல. ஆணவம் அது.திரு.நரேந்திரன் கருத்து சரியானதுதான்.பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் அது மக்கள் முன் வைத்துள்ளது. வேறு யாரும் கஸ்வத்-இ-ஹிந்த என்ற ஒரு முக்கியமான அம்சத்தை முன் வைக்கவில்லை. நபி என்று சொல்லப்படும் முஹம்மது ”இந்தியா மீது படையெடுத்து வெல்ல வேண்டும் ”என்ற பொருளில் சில கருத்துக்களை சொல்லியிருப்பதாக ஹதீஸில் சில பதிவுகள் உள்ளதாக new age islam என்ற இணையத்திலும் கட்டுரைகள் உள்ளது.விவாதங்கள் உள்ளது.
    தமிழ்ஹிந்து ஒவ்வொரு இந்துவும் மனதில் இருத்த வேணடிய கட்டுரைகள் நிறைய உள்ளது.அனைவரையும் படிக்க ஆவன செய்வோம்.

  7. சினிமா நடிகர்கள் பற்றி அவர் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்தமாக அல்ல. குறிப்பாக தேசீயக் கல்விக்கொள்கை பற்றி உளறிக்கொட்டிய சிலர் மற்றும் வெளிநாட்டில் சென்று இந்திய அரசின் சட்டத்திருத்தங்கள் பற்றியெல்லாம் உளறிக்கொட்டிய ஒரு சினிமா நடிகரை (விஜய் சேதுபதி மற்றும் அவரைப் போன்றோரைப் பற்றித்தான் சொல்லியுள்ளார். திரு பி எஸ் நரேந்திரன் அவர்களின் கட்டுரை ஒரு அற்புதமான தொகுப்பு. ரஜினிகாந்த் இந்த 370 மற்றும் 35 A – நடவடிக்கைகளை வரவேற்றுப் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  8. கோடி கோடியாய் தந்தையும் தனயனும் தம்பியும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். மனைவியை சினிமா நடிக்க அனுப்பி விட்டாரே சுராதி சுரா். பேராசையாரைத்தான் விட்டது.மனைவியை நடிகையாக்கிப் பார்ப்பவனை நல்ல ஆண்மகன் என்று நமது நாட்டில் கருதமாட்டாா்கள்.

  9. // விஜய் சேதுபதி என்ற கூத்தாடி எந்த தகுதியும் இன்றி காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்திருப்பது கேட்கும் நாம் எல்லாம் முட்டாள்களா ? //

    நல்ல கேள்வி. விஜய் சேதுபதிக்கு தகுதி இருக்கிறது அல்லது இல்லை என்று தீர்மானிக்கும் தகுதி தங்களுக்கு எங்கிருந்த்து கிடைத்தது? சரி விடுங்கள், பி.எஸ். நரேந்திரனுக்கு காஷ்மீர் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? விஜய் சேதுபதி இந்தியக் குடிமகன், நரேந்திரன் இந்தியக் குடியுரிமை இல்லாத புலம் பெயர்ந்த இந்தியராகக் கூட இருக்கலாம். புலம் பெயர்ந்த இந்தியராக இருந்தாலும் சரி, இந்தியக் குடிமகனாக இருந்தாலும் சரி காஷ்மீர் பற்றி நரேந்திரனுக்கு எல்லா தகுதியும் உண்டு என்று நீங்கள் கருதுகிறீகள். நானும் அவ்வாறே. அப்படி நரேந்திரனுக்கு எல்லா தகுதியும் இருக்கும்போது சினிமா நடிகராக இருக்கும் ஒரே காரணத்தால் விஜய் சேதுபதிக்கு தகுதி இல்லை என்பதில் உள்ள கேனத்தனத்தை அடுத்தவர் விளக்க வேண்டுமா, அன்புராஜ்? சினிமா நடிகராக இருப்பதால் விஜய் சேதுபதி தகுதி இழக்கிறார் என்றால் ரஜினிகாந்துக்கு எதிராகவும் பொங்க வேண்டியதுதானே?

    மாற்றுக் கருத்துக்களை எதிர்த்துப் பேசுங்கள், அது உங்கள் உரிமை. மாற்றுக் கருத்து சொல்பவனுக்கு தகுதி இல்லை என்று ஆரம்பிப்பது அரதப்பழசான கருணாநிதி டெக்னிக். மாற்றுக் கருத்து சொல்பவனை வேசி மகன் என்று வசைபாடுவது தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா டெக்னிக்.

    (Edited and published)

  10. Yo RV, I wrote this one specifically for you man. You didn’t get it. Aren’t you?

    தமிழ் ஹிந்துவின் தரம்
    தாயின் முலைப்பால் போன்றது!

    அதன் புனிதமோ
    அப்பனின் கோவணம் போன்றது!

    அம்மாவின் முலையிலிருந்து
    பாலைக் குடித்துக் கொண்டே
    அப்பனின் கோவணத்தை
    முகர்ந்து கொள்பவர்களால்
    நிறைந்தது தமிழ்ஹிந்து!

    மலம் என நினைத்தவுடனேயே
    குண்டி கழுவிக் கொள்ளும்
    புனிதர்கள் மட்டுமே
    படிப்பார்கள் தமிழ்ஹிந்துவை!

    அடேயப்பா!!

  11. அன்புராஜ்? சினிமா நடிகராக இருப்பதால் விஜய் சேதுபதி தகுதி இழக்கிறார் என்றால் ரஜினிகாந்துக்கு எதிராகவும் பொங்க வேண்டியதுதானே?
    ————————————–
    ரஜினிகாந்த கமலகாசன் போன்ற எந்த நடிகரும் சமூக பிரச்சனைகள் குறித்து சரியான கண்ணோட்டம் பெற முயன்றவர்கள் இல்லை.
    ரஜனிகாந்த பற்றி இந்த கட்டுரையில் விவாதம்யில்லை. ஏற்கனவே ரஜனியை எதிா்த்து என்து கருத்தை தமிழ்ஹிந்துவில் எனது கருத்தை தெரிவித்துள்ளேன்.அரசியலுக்கு தரமான தகுதியான மனிதர்கள் வேண்டும்.திரைப்படத்துறையினா் வேண்டாம். அவர்கள் நடிக்க மட்டும் தெரிந்தவர்கள்.

  12. நரேந்திரன், நான் உளறல்களை கண்டுகொள்வதில்லை.

    // அரசியலுக்கு தரமான தகுதியான மனிதர்கள் வேண்டும்.திரைப்படத்துறையினா் வேண்டாம். அவர்கள் நடிக்க மட்டும் தெரிந்தவர்கள். // சுத்தம். நடிகர்களுக்கு அரசியல் பேச தகுதி இல்லை என்கிறீர்கள். நீங்கள் மளிகைக்கடை வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். மளிகைக்கடைக்காரர்களுக்கு மளிகை சாமான் விற்க மட்டுமே தெரியும், அவர்கள் அரசியல் பேசக் கூடாது என்று சொல்லிவிடலாமா? தரம், தகுதி என்று திருப்பி திருப்பி பேசுகிறீர்கள், உங்கள் தகுதி என்ன என்று விளக்க முடியுமா? உங்களுக்கு அரசியல் பேசும் தரம், யாருக்கு தரம் இருக்கிறது இல்லை என்று தீர்மானிக்கும் தகுதி எங்கிருந்து வந்தது என்று திருப்பிக் கேட்டால் ஏதாவது பதில் சொல்லிவிட முடியுமா?

  13. //சினிமா நடிகர்கள் பற்றி அவர் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்தமாக அல்ல. குறிப்பாக தேசீயக் கல்விக்கொள்கை பற்றி உளறிக்கொட்டிய சிலர் மற்றும் வெளிநாட்டில் சென்று இந்திய அரசின் சட்டத்திருத்தங்கள் பற்றியெல்லாம் உளறிக்கொட்டிய ஒரு சினிமா நடிகரை (விஜய் சேதுபதி மற்றும் அவரைப் போன்றோரைப் பற்றித்தான் சொல்லியுள்ளார். திரு பி எஸ் நரேந்திரன் அவர்களின் கட்டுரை ஒரு அற்புதமான தொகுப்பு//

    ‘வேசி மகன்கள்’ என்று பன்மையில் குறிப்பிடுகிறார். வேசிமகனான சேதுபதி என்று சொல்லியிருக்கலாம். வேசியின் மகனாக இருப்பது மகனின் பாவமல்ல. வேசியும் ஏன் வேசியானாள் என்று தெரியாமல் இகழ்வதும் நல்லோர் செய்வதல்ல.

    நம்மை விட சினிமா நடிகர்களும் நடிகைகளும் மட்டம் என நினைத்தால் இக்காலத்துக்கு பொருந்தாது. இன்றைய சமூகத்தில் ஒரு தொழிலை விட இன்னொரு தொழில் உயர்ந்தது; அல்லது தாழ்த்து என்று சொன்னால் சிரிப்பார்கள்.

    ஆர் வி விமர்சித்தது கட்டுரையை அல்ல. கட்டுரையில் வரும் தவறான சொற்களையே!

    எவ்வவுதான் சிறப்பாக எழுதினாலும், வாசித்து முடித்த பின் ”வேசி மகன்கள்” என்று சொல்தான் நினைப்பில் வந்து ஆக்கிரமித்து கட்டுரையையின் நோக்கத்தை அமுத்தி விடும். ஒரு வெள்ளைப்பலகையில் ஒரு சிறு கரும்புள்ளி இருந்தால், எல்லாரும் அதைத்தானே பார்ப்பார்கள்?

    (Edited and published)

  14. விஜய்சேதுபதி காஷ்மீர்பிரச்சனை குறித்து கருத்து சொல்லியிருக்கின்றாா்.அவருக்கு தனிப்பட்ட முறையில் அதற்கான தகுதிகள் இருந்தது என்பது கருத்து .

    1000 ஆண்டுகால காஷ்மீர்சரித்திரம் அவருக்கு தெரியும்.
    காஷ்மிருக்கு சென்றிருக்கின்றாா்.
    லடாக்கிற்கு சென்றிருக்கின்றாா். பாக்கிஸ்தான் காடையர்கள் நடவடிக்கைகள் அவருக்கு நன்கு தெரியும். இந்திய அரசின எதிர்வினை அறிவாா். காஷ்மீரில் வாழும் இந்துக்கள் புத்தமதததினரின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து அவருக்கு நன்கு தெரியும்

    அரசியல் சமூகசுழ்நிலை ஆகியவைகுறித்து தெளிவான முடிவுகளை எடுப்பதற்குமுன் விரிவான ஆய்வுகளை நடத்தியிருக்கின்றாா் என்பதை தங்களால் விளக்க முடிந்தால் விஜய சேதுபதி காஷ்மீா் குறித்து கருத்து தெரிவிக்க தகுதியானவா்எ ன்று ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.

  15. ரஜனியும் பேசினார் மேடையிலேயே, அவருக்கு நீங்கள் காட்டிய எல்லாவற்றையும் கற்று அறிந்து அலசியவரா ? சும்மா…அவருக்குத் தோன்றியதை பேசினார். அது உங்களுக்குச் சரியென்றால், அவரின் அறிவை கேள்விக்குள்ளாக்க மாட்டீர்கள். இல்லையா ?

  16. அன்புள்ள BSV மீண்டும் எடக்கு மடக்கு என்று வாதம் மட்டும் செய்ய வந்து விட்டீர்கள்.

    ரஜனி பற்றி தலைப்பை போடுங்கள்

    விவாதம் செய்வோமே.

    நான் தயாா். மேலே பதிவு செய்துள்ள கடிதங்களை தாங்கள் படிக்கவில்லையோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *