Payday loans Cialis online
payday loans Car insurance

Blog Archives

கதைகள்

இனிப்பு [சிறுகதை]

இனிப்பு [சிறுகதை]

தங்கள் கோரிக்கையில் கண்டுள்ளவாறு ஒவ்வொரு ஸ்ட்ரெச்சர் தூக்கிக்கும் சான்றிதழ் அளிப்பது இயலாது... பிரிட்டோரியாவில் இருந்து வந்த பதிலில் காலனியல் செகரட்டரி, பேரரசியின் இனிப்புகள் வெள்ளை சோல்ஜர்களுக்கு மட்டுமேயான மரியாதை என்றும் கூலிகளுக்கு அவை அளிக்கப்படமுடியாது என்பதை தெரிவிப்பதாகவும் கண்டிருந்தது..."மோசமாக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன் நெல்சன். இத்தனை மோசமாக அல்ல"... "எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது நாயுடோ...” [மேலும்..»]

கதைகள்

யாதுமாகி….

யாதுமாகி….

இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்... மாட்சிமை தாங்கிய பேரரசரின் சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாவலுக்காகவும் ஜனநாயகத்தையும் இந்தியாவையும் ஜப்பானிய காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்றவும் நாங்கள் இங்கே அனுப்பப்பட்டதாக... "விபசாரி! சின்ன சின்ன சந்தோஷங்களுக்குள் கூட என்னென்ன அதிர்ச்சிகள் என் தேவனே...”... ஒரே கோஷம் மட்டுமே கேட்டது. ஒற்றைக் குரலாக– ‘பந்தே மாதரம்’... இப்போது ஒரு குண்டு அவளது நெற்றி வட்டத்தை சரியாகத் துளைத்தது. [மேலும்..»]

கதைகள்

விலக்கப்பட்ட மலர் [சிறுகதை]

விலக்கப்பட்ட மலர் [சிறுகதை]

ஒருமுறை தெரியாமல் மரிய புஷ்பம் குழுக் கூட்டம் முடிந்து டீ குடிக்கும் போது கேட்டுவிட்டாள்: ‘நாம பிடிக்கிற மீனுலதான் பங்கு வாங்குகாவ, அந்த பங்கெல்லாம் சேத்து வெளிய காலேஜெல்லாம் கட்டுக்காவ. ஆனா இந்த ஊருக்கு வெளிய நம்ம புள்ளைகளுக்கு படிக்க வழிய காணும். நாம எதுக்காக்கும் அப்ப? [மேலும்..»]

கதைகள்

பால் [சிறுகதை]

பால் [சிறுகதை]

ஒரு மனித முகத்தால் இத்தனை அருவெறுப்பான குரோதத்தைச் சுமக்க முடியுமா என்ன? கூடை மலத்தை அவருடைய அறையில் கொட்டியிருந்தால் அவர் முகம் அப்படித்தான் போயிருக்கும்... ஜெயில் களி தின்னாலும் குடும்பம் சுகபோஜனம் செய்ய பூர்வார்ஜிதச் சொத்து இருந்தா என்ன ரிஃபார்ம்னாலும் பேசலாம்... ஹுவான்சாங்கும் பாகியானும் வந்தாங்க... நாலந்தாவுக்கும் தட்சசீலத்துக்கும் காஞ்சிக்கும் யவனன் வந்து படிக்கலை? ஆனா இன்னைக்கு... [மேலும்..»]

கதைகள், வரலாறு

மதம் [சிறுகதை]

மதம் [சிறுகதை]

மன்னனுக்கும் அடிமைக்கும் ஆன்மா ஒன்றுதான் என்றெல்லாம் போதிக்கிறார்களாமே? நாளைக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் இந்தத் தத்துவங்கள் பெருகினால் அப்புறம் எந்தப் பிரஜை தன் அரசனை தெய்வமகனாகப் பார்ப்பான் ஈஸிபஸ்? எவன் தன் தேவகுமாரனான எனக்காக உயிர்துறக்க முன்வருவான்? [மேலும்..»]

கதைகள்

அமுதம் [சிறுகதை]

அமுதம் [சிறுகதை]

தொழுவக்குடிகளை தர்மானுசாராங்களுக்கு எதிராக கலகம் விளைவிக்கத் தூண்டியிருக்கிறீரென்று உம்மை உடனடியாக அழைத்து வர ஆணையாகியிருக்கிறது ஓய். பிராமணர் என்று கூடப் பார்க்காமல், உடனே வராவிட்டால் பிணைத்து அழைத்து வரவும் உத்தரவாகியிருக்கிறது... அதென்ன நிக்ருஷ்ட ஜந்மம்? தாழ்ந்த சாதியா?... நியான் ஒளியில், அந்த ஒரே பாதையின் ஈர மணற் பரப்பில் என்னுடைய காலடித்தடங்கள் மட்டுமே இருந்தன... [மேலும்..»]

கதைகள்

திருப்பலி [சிறுகதை]

திருப்பலி [சிறுகதை]

பலர் என்னை எச்சரித்ததுண்டு. போனவாரம் கூட மேலவீதி ஸ்ரீனிவாசன் சொன்னான், அவர் என்னை கிறிஸ்தவராக்க முயற்சி செய்வார் என்று. அதற்காகவே அவர் பழகுகிறார்... அது ஒரு போர்ப் பிரகடனம். அவர்கள் ஆன்மாக்களை அவர்களின் ஆத்ம ஆதாயத்துக்காக ஏசுவுக்கு வென்றெடுக்கும் சிலுவைப் போரின் பிரகடனம்... ஒயினையும் ரொட்டியையும் மறைவாக எடுத்துக் கொண்டு அக்குகைக்கு வந்தோம். யாரும் அறியா வண்ணம் இரகசியமாக உண்மையான உயிருள்ள தேவனை ஆராதித்தோம். [மேலும்..»]

இலக்கியம், கதைகள்

சுமைதாங்கி [சிறுகதை]

சுமைதாங்கி [சிறுகதை]

என் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான். நாட்டார்த் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்... நீங்க 'சுடலை மோட்சம்' சிறுகதை படிச்சிருக்கீங்கதானே?... ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம்... [மேலும்..»]

இலக்கியம், கதைகள்

விருதுக் கொலை [சிறுகதை]

விருதுக் கொலை [சிறுகதை]

செல்வி ஏன் தூக்கில தொங்கினா… "இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்"…. "எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என இந்த அறிக்கை கோருகிறது... [மேலும்..»]

கதைகள்

சாட்சி [சிறுகதை]

சாட்சி [சிறுகதை]

திருநீறை இடும் போதெல்லாம் ஏனோ அவள் இளம் பிராயத்தில் பார்த்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாக “அந்த சிவந்தானே நம்மள இந்த பாடுபடுத்துறான்” என்று சொல்லுவது நினைவாக வரும்... நாளைக்கு பரிசுத்த ஆவியால் நான் குணமான பிறகு நானும் மண்டியிட்டு ஜெபிப்பேன். இதே போல... எனக்காக மட்டுமல்ல, இறந்து போன என் புருசனுக்காக, என்னை துரத்தின என் மவன், அவன் வீட்டுக்காரி, பேத்தி எல்லாரும் மனம் திரும்ப... ஜெபிப்பேன். [மேலும்..»]