அம்பேத்கர் சட்டக்கல்லூரி சம்பவம் தமிழ்நாட்டின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கும். கத்தியுடன் ஒரு மாணவன் பாய்வதும் பின்னர் மாணவர்கள் சூழ்ந்து கீழே கிடக்கும் ஒரு மாணவனை தடிகளால் அடிப்பதும் காவல்துறை அதிகாரிகள் அதனை வேடிக்கை பார்ப்பதும் – ஏறக்குறைய சினிமா காட்சியோவென தோன்றவைக்கும் ஒரு பயங்கரம். தாய் தந்தையர்கள் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி தம் செல்வங்களை படிக்க பட்டணத்துக்கு அனுப்புகிறார்கள், அவர்கள் தங்கள் செல்வங்கள் படித்து பட்டம் வாங்கும் காட்சியை காணும் தருணத்துக்காக காத்துக்கிடக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு காணக் கிடைப்பதோ தம் கனவுகளை நிறைவேற்ற காத்திருக்கும் அவர்களது நம்பிக்கைகள் கல்லூரி வாசல்களிலேயே கொடூரங்களில் உறைந்து சோக அவலங்களாக உலகுக்கே காட்சியளிக்கும்... [மேலும்..»]










