இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்

இந்திய அரசியலைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. ஆனால், தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற போலி மதச்சார்பின்மை கட்சிகளும் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் ஒடித்து வளைத்து திரித்து வந்துள்ளனர். இந்த பிரசினையின் சில அம்சங்களை விளக்கும் முகமாக தில்லியைச் சேர்ந்த சமர்த் டிரஸ்ட் என்ற அமைப்பு “தி மெஜாரிடி ரிப்போர்ட்” என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் தமிழ் வடிவத்தை இங்கு வெளியிடுகிறோம் (தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், பாஞ்சஜன்யம் இதழின் ஆசிரியர்)…

View More இந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்

உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்

2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மானிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர். இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்தன. இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு கீழே..

View More உ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்

நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்

மோடியை நீங்கள் சந்திக்கச் சென்றீர்களானால் அவர் கவனம் முழுவதும் உங்களிடம் மட்டுமே தான் இருக்கும். உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எந்தவித இடையூறுக்கும் ஆட்பட மாட்டார். மோடி, மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வார். மற்றவர்களை விட தான் தான் உயர்ந்தவன் என்று ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டார். மோடியுடன் உரையாடுவது ஒரு திறந்த புத்தகத்தைப் படிப்பது போன்றது…. எஸ்.பி.,சொக்கலிங்கம் எழுதியுள்ள இந்த நூல் 2002 குஜராத் கலவரத்தின் பின்னணி, அது தொடர்பான பல்வேறு விசாரணை கமிஷன்கள், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் நூல் விலாவாரியான செய்திகளைத் தருகிறது. தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் குஜராத்தில் மோடியின் தலைமையில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றதற்குக் காரணம் மாநில அரசின் செயல் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று தீண்டியிப்பதால் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது…

View More நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்

வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை

பாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சியாக மோடியை பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தமிழக மக்களின் மன நிலையை நேரில் அறியவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுகி அறிவதற்காகவும் இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது… தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோள் கீழே.. இதில் தன்னார்வலர்களாகப் பங்குபெற விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை அளித்து களப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்..

View More வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை

காஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்

அக்டோபர்-27  ஞாயிறு காலை 10 மணிக்கு.  திரு. ஆறுமுகம், காவல் துறை கண்காணிப்பாளர்…

View More காஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்

இயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்

தஞ்சை மாவட்டத்தின் இயற்கை வழி விவசாயிகள் ஒருங்கிணைந்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை…

View More இயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்

நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்

நான் அறியவந்தபடி, குஜராத்தில் பொதுவாழ்வில் ஊழல் என்பது முற்றிலுமாகக் களையப் பட்டு விட்டது. ஒரு தனிமனிதராக, நரேந்திர மோடி அவர்களது நேர்மை பெரும் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்தமாக, அவரது நிர்வாகத் திறன் தேசிய அளவில் ஆதரிக்கப் படவேண்டியது. அவர் சுயராஜ்ய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்துவார். வறுமையை ஒழிப்பார். எனவே, இந்தியாவின் பிரதமாக ஆவதற்கான அபூர்வமான வாய்ப்பை அவர் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்… தேசிய சிந்தனை மற்றும் உலகனத்தையும் அரவணைக்கும் அளவு நட்புணர்வு ஆகிய நேர்மறைப் பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளார் என்று கருதுகிறேன்…

View More நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்

செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்

இளந்தாமரை மாநாட்டில் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தலைவர் நரேந்திர மோடி…

View More செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்

ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை

திருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார். போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்…. தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்… இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்…

View More ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை

ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)

வேத நெறிப்படி வாழ நாம் எடுக்கும் சங்கல்பம் அல்லது உறுதியே யக்ஞோபவீத தாரணம் அல்லது பூணூல் அணிதல். உபநயனம் என்ற கல்விக் கண் திறக்கும் சடங்கின் புற அடையாளமாக பூணூல் அணியப் படுகிறது… அதன்படி வருகின்ற ஆவணி மாதம் 4ஆம் நாள் (20/08/2013) செவ்வாய் கிழமை ஆவணி அவிட்டம் நாளில் காலை 9 மணிக்கு யஜுர் வேத உபாகர்மம் நடைபெறும். அது சமயம் புதிதாக பூணூல் அணிய விருப்பம் உள்ளவர்கள் யாரும் இதில் கலந்து கொண்டு யக்ஞோபவீத தாரணம் செய்து கொள்ளலாம். இடம்: சென்னை திருவல்லிக்கேணி ஆரிய சமாஜம் … தகுதி: மனிதராக பிறந்த அனைவரும். தக்ஷிணை : வேதங்கள் காட்டும் வழியில் வாழ்வதே… மேலும் விவரங்கள் கீழே..

View More ஆகஸ்டு-20: யஜுர்வேத உபாகர்மம் (பூணூல் அணி விழா)