மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!

Author Profile: ஜயராமன் 

Biography »

Publications »

ஆ! அசின்
By ஜயராமன்
Posted in சமூகம் on 14 January 2009
Stats: பார்வை: 1,142 and 10 Comments

இந்தக் கட்டுரைக்கு ‘காட்மண்டுவில் கஜினிகள்’ என்றுதான் தலைப்பு வைக்க இருந்தேன். முன்னாள் இந்துதேசம் நேபாளத்தில், இந்துக்களின் மிகப் புனித ஆலயம் பசுபதிநாத் சிவன் கோவில் தாக்கப்பட்டு களங்கப்படுத்தப்பட்டது. இந்தியன் என்ற ஒரே காரணத்தால், தலைமை அர்ச்சகர் தாக்கப்பட்டு, வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்…

அழிவிலிருந்து மீண்டெழுவோம் - தருண் விஜய்
By ஜயராமன்
Posted in பயங்கரவாதம் on 7 January 2009
Stats: பார்வை: 752 and 2 Comments

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம்.

மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும்.

தமிழ் படும் பாடு!
By ஜயராமன்
Posted in சமூகம் on 22 September 2008
Stats: பார்வை: 2,086 and 47 Comments

சென்னை ஏர்போர்ட்டில் ஒருவர் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார். அவர் லக்கேஜ் வந்து சேரவில்லையாம். அருகிலிருந்த ஒரு அறைக்கதவில் பெரிதாய் “மெய்புலன் அறைகூவலர்” என்று எழுதியிருந்தது. சரி, யாரோ ஒரு ஆபீசர் என்று நினைத்து உள்ளே வேகமாக நுழைந்து பார்த்தார். அது ஒரு கக்கூஸ். ‘சே’ என்று திரும்பினார்!
அவர் அந்த அறையில் சேவித்தது நவீனயுகத்தின் நாகரீகத்தமிழ். தமிழுக்கு இருக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் போதாதென்று இது இன்னொன்று புதிதாய் முளைத்திருக்கிறது. ‘Political correctness’ - (இதற்கு எனக்குத் தமிழ் தெரியவில்லை. ‘அரசியல் [...]

இயற்கையைக் காக்கும் இந்துமதம்
By ஜயராமன்
Posted in சமூகம் on 16 July 2008
Stats: பார்வை: 914 and 4 Comments

அவசியத்திற்கு அதிகமாக மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது என்பது சாத்திரம். “கோடரியை கண்டதும் மரம் பயந்து நடுங்குகிறது” என்று வேதம் இதற்கு விளக்கம் சொல்கிறது. இந்த உருவகத்தின் மூலம் மரத்தை உணர்வும், அறிவுமுள்ள ஒரு ஆன்மாவாகக் கற்பித்து அதை மதிக்கக் கற்றுத்தருகிறது வேதம்….நம் நதிகளையும், மரங்களையும், சோலைகளையும் அசுத்தம் செய்யாமலும், அழிக்காமலும் போற்றிப் பாதுகாப்பது சமுதாயக் கடமை மட்டுமல்ல தெய்வீகக் கடமையும் ஆகும் என்று உணரவேண்டும்.

அமர்நாத் யாத்திரை: பழம்பெரும் பாரம்பரியம்
By ஜயராமன்
Posted in இந்து மத மேன்மை, வரலாறு on 9 July 2008
Stats: பார்வை: 1,322 and 14 Comments

புனித அமர்நாத் குகையும் அதன் பனிலிங்கமும் இந்தியர்களால் மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்ததும், இந்தியா முழுவதிலிருந்து பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்ததும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன. அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன…

ஜெகா மாமா
By ஜயராமன்
Posted in இந்து மத மேன்மை on 13 June 2008
Stats: பார்வை: 828 and 3 Comments

“ஜகா மாமா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தத்தோ J. ஜெகதீசன் மலேசியாவில் பிறந்து அங்கு டாக்டர் பட்டம் பெற்றவர். மலேசிய அரசின் “தத்தோ” (இங்கிலாந்தின் சர் விருது போன்ற) விருது பெற்றவர். தன் 33 வயது வரை இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தார். யாரும் இந்து மதத்தின் உண்மைப் பொருளை அவருக்கு எடுத்துச் சொல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.
ஆனால், 1976ல் ஒரு ஆன்மீக உணர்வால் உந்தப்பட்டு இந்து மதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கிருத்துவம், புத்தம், இஸ்லாம் [...]

இங்கிலாந்தின் முதல் இந்து பள்ளிக்கூடம்
By ஜயராமன்
Posted in நிகழ்வுகள் on 12 June 2008
Stats: பார்வை: 478 and No Comments

இந்து மதத்தில் ஒழுகி இந்து மதக் கோட்பாடுகளை கடைபிடிக்கும் அனைவருக்கும் இங்கே அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளிக்கு எதிர்பாராத அளவில் ஆதரவுகள் பெருகிவருகின்றன. ஹாரோ நகரின் 900 நபர்கள் இந்த பள்ளியை ஆதரித்து கடிதங்கள் அனுப்பியுள்ளார்கள்.

காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்
By ஜயராமன்
Posted in சமூகம் on 12 June 2008
Stats: பார்வை: 689 and 1 Comment

“நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்” என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு “நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்” என்றார் ரோஷன் லால்.