Author Profile: வெற்றிச்செல்வன்
Biography »
Publications »
Posted in சினிமா on 23 February 2010
Stats: பார்வை: 910 and 12 Comments
பெண்ணின் அப்பா கடத்தல்காரர்களிடம் சொல்கிறார்: நாங்கள் பலவீனமான நாடாக இருக்கிறோம், பரந்த மனப்பான்மை என்ற தவறான நோக்கில் உங்களை உள்ளே விடுகிறோம், நாங்கள் எதுவும் செய்ய இயலாத கையாலாகதவர்களாக இருக்கிறோம், உங்களைப் போன்ற வன்முறைக்குத் துணைபோகும் சக்திகள் உலகம் முழுவதும் பரவி குண்டு வைக்கிறீர்கள், எங்கள் பெண்களைக் கடத்தி ஏலம் விடுகிறீர்கள், இருந்தும் கைகள் கட்டப் பட்டவர்களாகிய நாங்கள் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் …
Posted in சமூகம், பயங்கரவாதம் on 27 November 2009
Stats: பார்வை: 894 and 18 Comments
பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இஸ்ரேலியர்களிடம் பாடம் கற்கவேண்டும் இந்தியா. பாலஸ்தீனியர்கள் கல்லெறிந்தால் இஸ்ரேலியர்கள் குண்டுமழை பொழிவார்கள். அப்படிப்பட்ட அநியாயமான பதிலடி கொடுக்காவிட்டாலும், வாங்கிய அடிக்குக் கூட திருப்பி அடிக்க மாட்டேன் என்பது என்ன வகையான ராஜதந்திரமோ?
Posted in புத்தக விமர்சனம் on 12 November 2009
Stats: பார்வை: 929 and 12 Comments
திருநங்கை - பெயரே நாகரீகமாக இல்லை? இப்படி ஒரு பெயரை அறிமுகம் செய்தவருக்கு திருநங்கைகள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். இதுபோக அரவாணிகள், மூன்றாம் பாலினம் என்னும் வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எது வல்லமை உள்ளதோ அது நிற்கும்.
Posted in புதிய இந்து on 15 June 2009
Stats: பார்வை: 214 and 1 Comment
..தனது கையால் இடித்த கோவிலை மீண்டும் தனது கையால் நிர்மாணித்தலே அமைதி பெறும் வழி என உணர்ந்தார் தாமஸ்.. உடனே கோயில் கட்டும் வேலையை நிறுத்தும்படி உள்ளூர் கிறித்தவ சபை உத்திரவிட்டது. ஜானுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கோவிலை கட்டியதும்தான் தங்களது குடும்ப நிம்மதி மீண்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால் கிறித்தவ சபையின் எதிர்ப்பையும் மீறி கோயிலை அமைத்து வழிபாடு செய்யத்தொடங்கினார்.
Posted in சமூகம் on 8 June 2009
Stats: பார்வை: 262 and 3 Comments
இந்துப் பண்பாட்டின் மூலம் இயல்பாய் ஜனநாயகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டிய நேபாளம், இன்று ஜனநாயகத்தையே மறுக்கும் மாவோதிகளின் பிடியில். நலிந்து பட்ட உடலில் நோய்கள் புகுவதுபோல இன்று மோசமான நிலையில் இருக்கும் நேபாளத்தைக் குறிவைத்து மிஷநரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அவர்களது குறிக்கொள்கள்: கடைசி நேபாளிவரை கிறித்தவனாக மதம்மாற்றுவது.
Posted in வரலாறு on 20 April 2009
Stats: பார்வை: 525 and 7 Comments
பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார். எண் 9, அட்லர் தெரு, கமர்ஷியல் ரோடு, அவரது முகவரியாயிற்று. அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல் டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார்…
Posted in இந்து மத மேன்மை on 1 March 2009
Stats: பார்வை: 609 and 8 Comments
காந்தியடிகள் சிறுவனாய் இருந்தபோது பார்த்த ‘சிரவணனின் பிதுர்பக்தி’ என்ற நாடகம் அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது…
கடந்த பதிமூன்று ஆண்டுகளாகத் தனது தாயாரைத் தோளில் சுமந்து தீர்த்த யாத்திரையாகக் கொண்டு செல்கிறான் ஒரு நவீன சிரவணன்…
Posted in சமூகசேவை on 25 February 2009
Stats: பார்வை: 554 and 4 Comments
காந்தி வாழுமிடம். (காந்திநிகேதன் ஆஸ்ரமம்)
1980ம் ஆண்டு. மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி - திருநெல்வேலி. முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பிற்குள் நுழைகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரு கையால் “குட்மார்னிங் சார்” என கல்லூரி முதல்வருக்கு முகமன் கூறிக் செல்கின்றனர். ஒரே ஒரு மாணவர் மட்டும் நின்று “வணக்கம் அய்யா” என இருகரம் கூப்பி வணங்குகிறார். அவரை கல்லூரி முதல்வர் ஆரத்தழுவி “எந்தப் பள்ளியில் படித்தாய்?” எனக் கேட்கிறார். “காந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளி, கல்லுப்பட்டி” எனக் கூறுகிறான் அந்த [...]
Posted in நிகழ்வுகள் on 16 December 2008
Stats: பார்வை: 409 and 4 Comments
உத்திரப்பிரதேசத்தில் ஏமாற்றி மதம் மாற்றப்பட்ட கிட்டத்தட்ட பதினோராயிரம் பேர் கிறிஸ்தவத்திலிருந்து தாய்மதம் திரும்புகின்றனர். தரம் ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான வேலைகளைச் செய்து வருகிறது…
Posted in பண்டிகைகள் on 10 December 2008
Stats: பார்வை: 803 and 12 Comments
கிட்டத்தட்ட அறுநூறு வருஷம் முந்தி எங்கூர்ல (தே. கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்) பஞ்சம் தலைவிரிச்சி ஆடுனப்ப ஆந்திராவுல உள்ள நவாப்புக படைஎடுப்புனால எங்க ஊருக்கு ஒரு பாட்டி ஆறு பெண் கொழந்தைகளோட வந்தாங்க.. கிராமத்துல அன்னைக்கு நல்ல வசதியா இருந்த அக்ரகார ராவ் ( அப்ப அவரு கிரமத்தலைவரா இருந்தவரு) வீட்டுலையும் நாயக்கரைய்யா வீட்டுலையும் பாட்டி புள்ளைங்களோட தங்குச்சி.. கிராமத்துக்கு வந்து அடைக்கலமான அவங்கள தங்களோட புள்ளையாவே நெனச்ச கிராமத்து மக்கள் அந்த ஆறு பொண்ணுங்களுக்கும் மாப்பிள்ளை [...]
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்