மகாகவி சுப்பிரமணிய பாரதியையும், இந்த தேசத்தின்மேல் அவர் கொண்டிருந்த உணர்வையும் பிரித்துச் சொல்ல முடியாது. பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட அவருடைய பாடல்கள் மிகப் பெரும்பான்மையானவற்றுள் தேசபக்தி கலந்து நிறைந்தே இருக்கிறது. ‘நாட்டு மாந்தர் எல்லாம், தம்போல் நரர்கள் என்று கருதார்; ஆட்டு மந்தையாம் என்றே உலகில் அரசர் எண்ணிவிட்டார்’ என்பன போன்ற பகுதிகளில் பாஞ்சாலி சபதத்திலும் அவருடைய நாட்டுணர்வு வெளிப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ (அல்லது ‘தேசிய கீதங்கள்‘) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள அவருடைய பத்தொன்பது பாடல்கள், நாம் அனைவரும் நினைவில் கொள்ளத் தக்கவை. அன்னிய ஆதிக்கத்தால் அல்லற்படுதல், விடுதலை வேட்கை தலைதூக்கி நிற்றல், இந்த... [மேலும்..»]


