<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ்ஹிந்து &#187; பாரதி வை. இராமச்சந்திரன்</title>
	<atom:link href="http://www.tamilhindu.com/author/ramachandran/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilhindu.com</link>
	<description>தமிழரின் தாய்மதம்</description>
	<lastBuildDate>Mon, 21 May 2012 02:45:23 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.2.1</generator>
		<item>
		<title>பாரதியும் தேசியமும்</title>
		<link>http://www.tamilhindu.com/2008/10/bharati-and-nationalism/</link>
		<comments>http://www.tamilhindu.com/2008/10/bharati-and-nationalism/#comments</comments>
		<pubDate>Thu, 16 Oct 2008 13:57:28 +0000</pubDate>
		<dc:creator>பாரதி வை. இராமச்சந்திரன்</dc:creator>
				<category><![CDATA[வழிகாட்டிகள்]]></category>
		<category><![CDATA[Bharathi]]></category>
		<category><![CDATA[Bharati]]></category>
		<category><![CDATA[nationalism]]></category>
		<category><![CDATA[நாட்டுப்பற்று]]></category>
		<category><![CDATA[பாரதியார்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilhindu.com/?p=1085</guid>
		<description><![CDATA[மகாகவி சுப்பிரமணிய பாரதியையும், இந்த தேசத்தின்மேல் அவர் கொண்டிருந்த உணர்வையும் பிரித்துச் சொல்ல முடியாது. பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட அவருடைய பாடல்கள் மிகப் பெரும்பான்மையானவற்றுள் தேசபக்தி கலந்து நிறைந்தே இருக்கிறது. ‘நாட்டு மாந்தர் எல்லாம், தம்போல் நரர்கள் என்று கருதார்; ஆட்டு மந்தையாம் என்றே உலகில் அரசர் எண்ணிவிட்டார்’ என்பன போன்ற பகுதிகளில் பாஞ்சாலி சபதத்திலும் அவருடைய நாட்டுணர்வு வெளிப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ (அல்லது ‘தேசிய கீதங்கள்‘) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள அவருடைய பத்தொன்பது பாடல்கள், நாம் அனைவரும் நினைவில் கொள்ளத் தக்கவை. அன்னிய ஆதிக்கத்தால் அல்லற்படுதல், விடுதலை வேட்கை தலைதூக்கி நிற்றல், இந்த நாட்டு விடுதலைக்காக, அருபாடு பட்ட தலைவர்கள் நடத்திய போராட்டங்கள், போரால் மக்கள் அச்சமுடன் நலிதல், பஞ்சத்தால் வாடுதல் இன்னபிற உணர்வுகளால் நிறைந்து, நம்மைத் தட்டி எழுப்ப பாரதி இப்பாடல்களைப் பாடினார். பதினொன்றாம் வயதில் &#8221;பாரதி&#8221; (கலைமகள்) என்ற பட்டம்பெற்ற மகாகவி, முதலில் மூன்று பாடல்களில் &#8221;நாட்டு வணக்கம்&#8221; செய்தார். இவற்றில் ஒன்று &#8221;வந்தே மாதரம்” என்ற தலைப்பில் 1907ம் வருடம் இந்தியா பத்திரிகையில் வெளியிடப்பட்ட பாடல். வந்தே மாதரம் என்ற சொற்றொடருக்குத் &#8221;தாயை வணங்குகிறேன்&#8221; என்பது பொருள். அதையே &#8221;வந்தே மாதரம் என்போம்”என்று தொடங்கி, அதை அடுத்து “எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்&#8221; என்ற மொழிபெயர்ப்பாகவும் அளித்தார். இந்தப் பாடல், தாயுமானவர் அருளிய &#8216;ஆனந்தக் களிப்பு&#8217; வர்ணமெட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு. தேசிய கீதங்களில் ஒன்பதாவதான ‘எங்கள் தாய்‘ என்ற பாட்டு அண்ணாமலை ரெட்டியாரின் &#8216;காவடிச்சிந்து&#8217; மெட்டில் அமைந்துள்ளது. அவருடைய இத்தகைய பாடல்களெல்லாம் நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், பாரதியார் இசைஞானம் மிக்கவர். தக்கவிதமாக இசையமைத்துப் பாடப்படும் பாரதி பாடல்களின் சொற்களில் வீரியம் ஓங்கிநிற்பதை உணரமுடியும். பாரதத் தாயின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி &#8216;சக்தி&#8217; வழிபாட்டு அடிப்படையில், இச்சமுதாயத்தின் இன்றைய நிலை, எதிர்காலம், தேசிய ஒருமைப்பாடு முதலிய அடிப்படைக் கோணங்களில், பாரதி பாடியுள்ளதை, இக்கால [...]]]></description>
		<wfw:commentRss>http://www.tamilhindu.com/2008/10/bharati-and-nationalism/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
	</channel>
</rss>

