Payday loans

Blog Archives

அறிவிப்புகள்

ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே என்ற சகோதர இணையதளம் கடந்த ஒரு மாதமாக இயங்கி வருகிறது.. தமிழில் இந்து அறிவியக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தொடங்கப் பட்ட இந்துத்துவ பதிப்பகம் சார்பாக நடத்தப் படும் இந்த இணையதளம் பல அருமையான படைப்புக்களையும், விவாதங்களையும் வரும் நாட்களில் தொடர்ந்து வழங்கும்.. இத்தளம் வழியாக இந்துத்துவ பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கவும் முடியும். நமது வாசகர்கள் அனைவரும் தங்களது ஏகோபித்த ஆதரவை ஹிந்த்துவம் டுடே இணையதளத்திற்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். [மேலும்..»]

அரசியல், சமூகம்

வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை

வ.களத்தூர்   வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தில் 2013 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தீவிர மத மோதல்கள் இந்து – இஸ்லாமிய வகுப்பாரிடம் நடந்துள்ளன. இம்மோதல்கள் குறித்து ஒரு பக்க வகுப்புவாத ஆதரவும் மற்றொரு சாரருக்கு எதிரான தீர்மானமான முன்முடிவு கொண்டவர்களும் கொண்ட ஒரு ‘உண்மை அறியும் குழு’ எனும் தனியார் குழு அளித்த அறிக்கைகள் வகுப்புவாத இணைய தளங்களால் இணையம் மூலம் சமுதாயத்தில் பரப்பப்பட்டன. இச்சூழ்நிலையில் அந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும் நிலவும் சூழலையும் அறிய அரவிந்தன் நீலகண்டன், வீர,ராஜமாணிக்கம் மற்றும் சில சமூக அக்கறை கொண்டோர் குழு கிராமத்திற்குச் சென்று இரு சமுதாய... [மேலும்..»]

தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 36

எழுமின் விழிமின்  – 36

பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும்.  வீரன் தான் முக்தியை எளிதில் எட்டிப் பிடித்து எய்த முடியும்; கோழை அல்ல.  வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள்.  மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்கிறது.  'மகத்தான சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும்' என்பது உண்மை தான்; சந்தேகமில்லை.  இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும். மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகளால் கட்டுண்டுக் க்டக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்ப்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள். 'அச்சமற்றிரு' என்று... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இவை அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது.... இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால், தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போனதாக மாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? தேவையான... [மேலும்..»]

தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 35

எழுமின் விழிமின்  – 35

.....பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்கவேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிட,ம் கடுங்கோபமாக இருக்கிறாள். அந்நிலையில் அவள் இருக்கும்பொழு து உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப்போய் புதிய அலை எழுகிறது. அது தான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது. கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி... [மேலும்..»]

தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 34

எழுமின் விழிமின் – 34

முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவுமே அவனை ஒருபோதும் திருப்திப் படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்து கொண்டே செல்வோம்.... உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும்,  நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால் தான் கிடைத்தது என்பது தெரியவரும்.  நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது.... நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமான, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர் விட்டுக் கதறுகிறோம்.  உதவியானது வெளியிலிருந்து வராது. ... [மேலும்..»]

அறிவிப்புகள்

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து ஒரு புத்தக அரங்கை அமைத்துள்ளது. இந்துத்துவ பதிப்பகத்தின் வெளியிடுகளாக, ம.வெங்கடேசன் எழுதியுள்ள ”புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?”, ”தாழ்த்தப் பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?”, ”1947 – பாகிஸ்தானில் தாழ்த்தப் பட்டவர்கள்” ஆகிய நூல்கள் இந்த அரங்கில் கிடைக்கும். “பண்பாட்டைப் பேசுதல்”, “சாதிகள் – ஒரு புதிய கண்ணோட்டம்” ஆகிய நூல்களின் புதிய பதிப்புகளும் கிடைக்கும். அத்துடன் மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள இந்துத்துவம், இந்து தர்மம், இந்துப் பண்பாடு, வரலாறு... [மேலும்..»]

பயங்கரவாதம்

ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்

ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்

இன்னொரு நாள்.. இன்னொரு நகரம் .. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர வெறியாட்டம்.. இழந்தவை இந்திய உயிர்கள். சிந்தியது இந்திய ரத்தம். காங்கிரஸ் அரசே, போலி மதச்சார்பின்மை கட்சிகளே, உங்கள் ஈனத்தனமான வாக்கு வங்கி அரசியலுக்காக அப்பாவி மக்கள் வீதிகளில் உடல் சிதறி மடிய வேண்டுமா? அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர் ஜிகாதி பயங்கரவாதச் செயல்களை பெருமளவு தடுத்தி நிறுத்தி விட்டன. ஏன் இந்தியாவால் முடியவில்லை? சிந்தியுங்கள் மக்களே. ஹைதரபாதில் உயிரிழந்த மனித உயிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த ஆறுதல்கள். [மேலும்..»]

இந்து மத மேன்மை, தொடர், விவேகானந்தர்

எழுமின் விழிமின் – 33

எழுமின் விழிமின் – 33

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்துவிட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை.... பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத... [மேலும்..»]

அறிவிப்புகள்

மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

மலர்மன்னன் இறைவனடி சேர்ந்தார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்ட பெரியவர் திரு. மலர்மன்னன் அவர்கள் இன்று (9-பிப்ரவரி-2013) காலை 5 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை கண்ணீருடனும் ஆற்றொணாத் துயரத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தருணத்தில் அவரது பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தினர், சமூகத் தொண்டர்கள், அபிமானிகள், வாசகர்கள் ஆகியோருடன் தமிழ்ஹிந்துவும் துயரத்தில் இணைகிறது. அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: [மேலும்..»]