இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது... கைகேயி இராமனை, 'உங்கள் மகன்' என்றோ, 'கோசலை மகன்' என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல 'சீதை கேள்வன்' என்று குறிப்பிடுகிறாள்... இராமன், 'என் தாய்' என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், 'என் தெய்வம்' என்கிறான்... "இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்," என்கிறாள் சீதை... கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!





