நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 02

இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன… அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன… இந்தத் தகவல்களின் சாரம் என்ன ?

View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 02

நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01

இந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.

View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01

வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா

காட்சி பூர்வமாகவும், தொழில் நுட்ப நேர்த்தியிலும், நடிப்பிலும், இசையிலும், கதை சொல்லப் பட்ட உத்தியிலும், நடிப்பிலும், வரலாற்றை நேர்த்தியாகவும் உண்மையாகவும் சொன்ன விதத்திலும், கலை நேர்த்தியிலும், உன்னதமான இயக்கத்திலும், ஒருங்கிணைப்பிலும் இன்னும் எண்ணற்ற விதங்களிலும் இந்த பழசி ராஜாவின் வரலாறு ஒரு உன்னதமான சினிமா அனுபவமாக உருவெடுத்துள்ளது. இது போன்ற சினிமாக்கள் ஒரு நூற்றாண்டில் ஒரு முறையே உருவாகும் அபூர்வமான கலைப் படைப்புக்கள்.

View More வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா

நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

தமிழில் என்றாவது நிகழ்கால பிரச்சினை எதையாவது எடுத்துக்கொண்டு அலசிய படங்கள் வந்ததாக நினைவு இருக்கிறதா? கீழ்வெண்மணி சாயலில் ஒரு படம் வந்தது. அதைத் தவிர வேறு எதையாவது வைத்து? வீரப்பனை வைத்து மிகைப்படுத்தப்பட்ட படங்கள் வந்ததுண்டு. மிகைப்படுத்துதல் இல்லாமல் ஒரு அண்ணாமலைப் பல்கலை மாணவன் உதயகுமாரன் மரணம் குறித்தோ, ஒரு தர்மபரி பஸ் எரிப்பு குறித்தோ, ஒரு டாடா நிலப் பிரச்சினை குறித்தோ, மணல் கொள்ளை குறித்தோ, சிதம்பரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் குறித்தோ, வீரப்பனால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்தோ, கோவை குண்டு வெடிப்பு குறித்தோ தமிழில் என்றாவது நிகழ்கால சமூகப் பிரச்சினைகளைத் துணிந்து அலசும் படம் ஏதாவது வந்துள்ளதா?

View More நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

… இந்தப் படம் மெனக்கெட்டு குறிப்பிடும் அளவுக்கு எந்த விதத்திலும் ஒரு சிறப்பான படமோ அல்ல, குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவோ அல்ல. இவ்வளவு குறைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் தன் கதையினாலும், ஒரு சில வசனங்களினாலும், ஜிஹாதி பயங்கரவாதத்தினால் சூழப்பட்ட இன்றைய இந்திய சூழ்நிலையில் குறிப்பிடத் தக்க ஒரு படமாக மாறிப் போகிறது. இப்படி ஒரு சினிமா தமிழ் சூழலில் எடுக்கப் படுவது சாத்தியமில்லை என்பதினாலும் இதில் துணிவாக எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சிகளினாலும் இந்தப் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

View More அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை – 2

அடுத்தபடியாகத் தமிழ் நாட்டு வாக்காளர் கருத வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை இந்து விரோதப் போக்கு. கடந்த ஐந்து வருடங்களில் காங்கிரஸ் தி.மு.க. ஆட்சியில் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, கடுமையான இந்து விரோத நடவடிக்கைகளும் இந்து மதத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் கூடிய சதித் திட்டங்களும் நடந்துள்ளன. ஒரு சிறிய பட்டியலில் அதை அடக்க முடியாதென்றாலும், முக்கியமான சிலவற்றைக் குறிப்பிடலாம்….

View More பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை – 2

பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1

தமிழர்கள் தமது தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆம், மே 13ம் தேதி நமது எதிர்காலத்தை நிச்சயிக்கும் நாள். நல்லவர்கள் கூடவே திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களும் வந்து ஓட்டுக் கேட்கும் பொழுது யாருக்கு ஆதரவளிப்பது என்று வாக்களர் குழம்பிப் போவது இயற்கைதான். நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பமில்லாமல் சிந்திக்க உதவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்…

View More பாராளுமன்றத் தேர்தலில் தமிழனின் கடமை -1

‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

இந்திப் படவுலகில் கான்களும் அவர்களுக்குப் பின்புலமாக இருக்கும் இஸ்லாமிய மாஃபியாக்களும்தான் பெரும்பான்மையினர் என்றும், தானும், அமிதாப் போன்ற வெகு சிலரும் மட்டுமே இந்து நடிகர்கள் என்றும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் மிக துணிவாக வெளிப்படையாக அந்த நடிகர் சொல்வது இந்திய சினிமாக்களில் நாம் எதிர்பார்க்க முடியாத ஒரு ஆச்சரியம்…

View More ‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

நான் கடவுள்: பட விமர்சனம்

இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தமிழ்ப் படம்…

தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காக தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை…

View More நான் கடவுள்: பட விமர்சனம்

கருப்பு வெள்ளி

ப்ளாக் ஃப்ரைடே. மார்ச் 12, 1993 இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்ந்த ஒரு கருப்பு தினம்…குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து துணைக் கமிஷனர் ராகேஷ் மோரியாவின் குழு தடயங்களைச் சேகரிப்பதில் தொடர்கிறது… ஒவ்வொரு குண்டு வெடிப்பும் மீண்டும் அந்தந்தக் குழுக்களால் எப்படி நிகழ்த்தப் பட்டிருக்கும் என்பதை, தத்ரூபமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்…

View More கருப்பு வெள்ளி