ஆன்மிகம், போலி ஆன்மிகம், துறவு, சாமியார்கள் : ஒரு கேள்வி-பதில் - ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள்

Articles in the இசை Category

காவடிகள் சிந்து பாடும் கழுகுமலை
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in ஆன்மீகம், இசை, இலக்கியம் on 4 December 2009
Stats: பார்வை: 636 and 3 Comments

”கருணை முருகனைப் போற்றி - தங்கக் காவடி தோளின் மேலேற்றி…. “ - காவடிச்சிந்து மெட்டுக்கள், படித்தவர், பாமரர் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. காவடிச்சிந்து என்றாலே நம் நினைவுக்கு வருபவர், அண்ணாமலை ரெட்டியார்… இங்கு கழுகுமலையில் கடலொத்த வீதிகள் காணப்படுகின்றன. அங்குள்ள கடைகளின் முன்பு முத்துப் பந்தல் போட்டிருக்கிறார்கள். அந்தப் பந்தலின் ஒளியினால் அஷ்ட கஜங்களுடைய தந்தங்களின் ஒளி கூட மழுங்கி விடுமாம்!

இசைக்கூறுகள் - 6 : குறியீட்டு முறையின் வரலாறு
By ரா.கிரிதரன்
Posted in இசை, கலைகள் on 6 September 2009
Stats: பார்வை: 597 and 1 Comment

1874களில் ரவீந்தரநாத் தாகூர் Hindoo Patriot என்ற இதழில் - “இசை முறைகள் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் தனிப்பட்ட குறியீட்டு முறை இருக்கும். அவை விஞ்ஞான முறைப்படி உள்ளதா, மற்ற முறைகளை விட மேன்பட்டதா என்ற கேள்விகள் தேவையில்லாதவை.. எல்லாவிதங்களிலும் ஆங்கில யுத்திகளைப் பயன்படுத்தும் நாம், இந்திய இசைக்கு எங்கள் முறையே சிறந்தது என எண்ணுகிறோம்” - என குறியீட்டு விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

சொற்றமிழ் சூடுவார்
By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Posted in இசை, சைவம், புத்தக விமர்சனம் on 20 August 2009
Stats: பார்வை: 482 and 1 Comment

பேணிக் காப்பாரின்றி எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து வருவதுபோல ஓதுவார் பரம்பரையும் போற்றுவாறின்றி மங்கி வருகின்றது… தீட்சிதர் கீர்த்தனைகள் திருமுறைகளுக்கு எதிரானவை அல்ல; தீட்சிதர் சுந்தரமூர்த்தி நாயனார் மேல் பத்திகொண்டு அவரைப் போற்றி ‘டக்கா’ என்னும் அபூர்வராகத்தில் ஒருகீர்த்தனை இயற்றியுள்ளார் …

இசைக்கூறுகள் - 5 : இசைப் பயிற்சி மற்றும் அரங்கிசை வடிவங்கள்
By ரா.கிரிதரன்
Posted in இசை, கலைகள் on 19 August 2009
Stats: பார்வை: 542 and 5 Comments

ஐரோப்பா இசை பயிற்சியில், சில சுரக்கோர்வைகளை கற்றுக்கொண்டு சின்ன பாடல்களையோ, துணை இசைக் கோர்வைகளையோ இசைக்கலாம். கர்நாடக சங்கீத பயிற்சிப் பாடங்களோ படிப்படியாக சுரங்களைப் பாடுவதையும், அவற்றைக் கோர்த்து ஒரு ராகத்தைப் பாடுவதையும் உருவாக்கும். இந்தப் பயிற்சியிலும் பல நிலைகள் உள்ளன…

காற்றினிலே வரும் கீதம்
By எஸ்.ஜயலக்ஷ்மி
Posted in ஆன்மீகம், இசை, வைணவம் on 13 August 2009
Stats: பார்வை: 328 and 2 Comments

சிவந்து மலர்ந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து கொண்டது போல முகத் தாமரையை சுருண்ட தலைமயிர் அழகு செய் கிறது. இந்த முகத் தாமரை யிலிருந்து தேனினும் இனிய கீதம் பெருகி வருகிறது. இந்த அமுத கீதத்தைப் பருகிய மான்கள் எப்படி அனுபவிக்கின்றன? …ண்ணனின் கானா மிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்கு கின்றன. சில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தரு கின்றன …

இசைக்கூறுகள் - 4 : மேளகர்த்தா ராகங்கள்
By ரா.கிரிதரன்
Posted in இசை on 2 August 2009
Stats: பார்வை: 345 and 3 Comments

எல்லாவிதமான ராகங்களும் ஜன்ய (தாய்) ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. நம் கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) இருக்கின்றன. அடிப்படையில் ஸ்வர வரிசையின் பல வடிவப் பிணைப்புகளே இந்த ராகங்களாகும் …

திருமுறை இசையில் அழகியல் மாற்றம்
By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Posted in இசை, இலக்கியம், கலைகள், சைவம் on 22 July 2009
Stats: பார்வை: 564 and 3 Comments

சம்பந்தர் இசையில் புது மரபினைத் தோற்றுவித்ததைப் போலவே இசைப்பாடல்களின் வடிவத்திலும் புது மரபினைத் தோற்றுவித்தார்…. யாழின் கட்டிலிருந்து முதலில் இசை விடுதலை பெற்றது. பின் யாப்பின் கட்டினையும் உடைத்து விரிவடைந்தது. இது தென்னக இசை உருக்களில் நிகழந்த அழகியல் மாற்றம் …

இசைக்கூறுகள் - 3 : ரஸபாவம் - ராகம்
By ரா.கிரிதரன்
Posted in இசை on 20 July 2009
Stats: பார்வை: 414 and 4 Comments

ஆலாபனை மிக முக்கியமானதொரு பகுதி. இந்தப் பகுதியில் பாடகர் தான் பாட இருக்கும் ராகத்தின் வளைவு நெளிவுகளில் வளம் வருவார். பல சமயங்களில் அதிகமான நேரம் ஆலாபனை செய்ய செலவாகும். ஒரு பாடலுக்கு நேர்த்தி சேர்ப்பது ஆலாபனையே …

அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்
By ஜடாயு
Posted in இசை on 18 July 2009
Stats: பார்வை: 323 and 15 Comments

… பட்டின் நேர்த்தியும், தேனின் அடர்த்தியும், மலரின் மென்மையும், வீணையின் கம்பீரமும், அருவியோசையின் ஒழுக்கும் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதம் என்று அந்தக் குரலைக் கற்பனை செய்யலாம் ! ஸ்ருதியும், லயமும் சிறிதும் பிசகாமல் ராக பாவம் முழுமையாக நிறைந்து அந்தக் குரலோடு சேர்வதால் விளையும் சங்கீதம் தான் பட்டம்மாளின் இசை….

இசைக்கூறுகள் - 2 : பாகம் 01- தாளம் மற்றும் ஸ்வரம்
By ரா.கிரிதரன்
Posted in இசை, கலைகள், பொது on 7 July 2009
Stats: பார்வை: 310 and 3 Comments

ராணுவ அணிவகுப்புகளில் இருக்கும் ஒற்றுமை தாள அடிப்படையிலேயே அமைந்திருக்கும்… இதில் நாம் இருவகை இயக்கங்களை ஒரே நேரத்தில் செய்கிறோம். அப்படி செய்யும்போதே ஒரு ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் நிகழ்கின்றது. இதைப் போன்று தொடந்து செய்து வந்தால் இரு பகுதிகளாக மட்டுமே பிரிக்க முடியும். ஒரே போன்ற இசை அமைப்பு மட்டுமே உருவாகியிருக்கும்.

மைக்கேல் ஜாக்ஸன் - மீட்பரைத் தேடி
By ஹரி வெங்கட்
Posted in இசை, பொது on 26 June 2009
Stats: பார்வை: 215 and 7 Comments

கலைஞர்களின் ஆதார சக்தி மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்று சொல்லப்படுவதுண்டு. அது அடங்காமல் பீறிடும் போது அது அவர்கள் உடலையே சீரழிக்கும், ஆளுமையை சிதைக்கும் என்பார்கள். எந்த ஒரு சமூகமும்/தனிமனிதனும் வீழ்ச்சி அடையும்போது, அவர் சார்ந்த சமூகத்தின் ஆன்மிக வளம் மட்டுமே அந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்தமுடியும்…

இசைக்கூறுகள் - 1 : அறிமுகம்
By ரா.கிரிதரன்
Posted in இசை, கலைகள் on 24 June 2009
Stats: பார்வை: 294 and 2 Comments

இத்தொடரில் தமிழிசைக்கான கேள்விகளை பற்றி விவாதிக்கும் அதே வேளையில், எந்த ஒரு நிலையிலிருந்தும் மூன்றாம் ரக இசை அனுபவத்தை அடைவதே நம் நோக்கமாகும்.



"));