திருப்பலி [சிறுகதை]

பலர் என்னை எச்சரித்ததுண்டு. போனவாரம் கூட மேலவீதி ஸ்ரீனிவாசன் சொன்னான், அவர் என்னை கிறிஸ்தவராக்க முயற்சி செய்வார் என்று. அதற்காகவே அவர் பழகுகிறார்… அது ஒரு போர்ப் பிரகடனம். அவர்கள் ஆன்மாக்களை அவர்களின் ஆத்ம ஆதாயத்துக்காக ஏசுவுக்கு வென்றெடுக்கும் சிலுவைப் போரின் பிரகடனம்… ஒயினையும் ரொட்டியையும் மறைவாக எடுத்துக் கொண்டு அக்குகைக்கு வந்தோம். யாரும் அறியா வண்ணம் இரகசியமாக உண்மையான உயிருள்ள தேவனை ஆராதித்தோம்.

View More திருப்பலி [சிறுகதை]

சுமைதாங்கி [சிறுகதை]

என் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான். நாட்டார்த் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்… நீங்க ‘சுடலை மோட்சம்’ சிறுகதை படிச்சிருக்கீங்கதானே?… ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம்…

View More சுமைதாங்கி [சிறுகதை]

விருதுக் கொலை [சிறுகதை]

செல்வி ஏன் தூக்கில தொங்கினா… “இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்”…. “எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என இந்த அறிக்கை கோருகிறது…

View More விருதுக் கொலை [சிறுகதை]

சாட்சி [சிறுகதை]

திருநீறை இடும் போதெல்லாம் ஏனோ அவள் இளம் பிராயத்தில் பார்த்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாக “அந்த சிவந்தானே நம்மள இந்த பாடுபடுத்துறான்” என்று சொல்லுவது நினைவாக வரும்… நாளைக்கு பரிசுத்த ஆவியால் நான் குணமான பிறகு நானும் மண்டியிட்டு ஜெபிப்பேன். இதே போல… எனக்காக மட்டுமல்ல, இறந்து போன என் புருசனுக்காக, என்னை துரத்தின என் மவன், அவன் வீட்டுக்காரி, பேத்தி எல்லாரும் மனம் திரும்ப… ஜெபிப்பேன்.

View More சாட்சி [சிறுகதை]

ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்

பிற சமயத்தார் சைவத்திற்குத் தீங்கு இழைக்கத் தொடங்கும் அவ்வப்போது, தம் வாக்கு வல்லபத்தால், அவர்களை வென்று சைவப் பயிர் வளர்த்த வைதிகசைவக் காவலர் அப்பைய தீட்சிதர்… ஊர்ணநாபி (சிலந்திப்பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியிலெப்படிப் பல ஓஷதிகள் (தாவரங்கள்) உண்டாகின்றனவோ, மனிதன் மேனிமீது எப்படித் தலைமயிர் உடம்புமயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய அட்சரத்திலிருந்து (அழிவிலாதது) யாவும் உண்டாகின்றன… சிவன் எளிய பூசைக்கே உளம் மகிழ்வான். அவனை மகிழ்விக்கப் பச்சிலையும் நீரும் போதும்.. ‘

View More ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்

ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம். இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர்… ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்… அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம்.

View More ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

மாயக்கரங்கள் (சிறுகதை)

“ஆத்தா, எந்திரன் படம் பார்த்துட்டேன்.” என்று கத்திக் கொண்டே வந்தான் ரஜினி முத்து. முகம் எல்லாம் கருப்பும், சிவப்புமாக வண்ணப் பொடிகள் ஒட்டி மீசையில் வேர்வை சொட்ட கோமாளி மாதிரி வந்து நிற்கிற பிள்ளையைப் பார்த்து “டேய்… ” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்த அவன் அம்மா வசந்திக்கு சிரிப்பு வந்து விட்டது.

View More மாயக்கரங்கள் (சிறுகதை)

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]

பூமணி போல, சோ.தருமன் போல இமையமுமல்லவா, ‘தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை’ என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம்… இரத்தின.கரிகாலனின் கவிதைகள் ஏதோ சர்ச்சில் மன்னிப்புக்கோரும் சடங்காக மண்டியிட்டு, இதுகாறும் தானும் தன் முன்னோர்களும் தலித்து மக்களுக்கு இழைத்து விட்ட பாவங்களையெல்லாம் மன்னித்து பாப விமோசனம் கேட்கும் பாவனை கொண்டவையாக இருக்கின்றன… பூமணியைப் போலவே சோ.தருமனும் தலித் லேபிளை எவ்விதத் தயக்கமுமின்றி மறுப்பவர். மறுபடியும் பூமணிக்குச் சொன்னது போலவே சோ.தருமனும் எவ்விதத்திலும் ஒதுக்கி விடக் கூடியவரும் இல்லை…

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 7 [நிறைவுப் பகுதி]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6

ஆரம்பம் தொட்டு நேற்று வரை நாம் காணும் சோஷலிஸ யதார்த்த வகை எழுத்தாளர்களும் திராவிடக் கழகங்கள் சார்ந்த எழுத்தாளர்களும் கட்சிக் கொள்கைகள் சார்ந்து எழுதுபவர்களாகவும், தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்படும் வாழ்க்கை சார்ந்து எழுதுபவர்களாகவும் வேறுபடுகிறார்கள்… ஆனால் தலித் வாழ்க்கை அனுபவம் என்னவென்பதை எவ்வளவு நெருக்கமாக உணர முடியுமோ, எவ்வளவுக்கு ஒரு தலித் எழுதுதல் சாத்தியமோ அவ்வளவு நெருக்கத்தை பெருமாள் முருகன் தன் எழுத்தில் சாதித்து விடுகிறார்… தம் உயர்ஜாதி அந்தஸ்தை விட்டுவிட மனமில்லது ஜாதி பேதங்களை வந்த இடத்திலும் பேணுவதில் தீவிரமாக இருப்பதையும் அதற்கு சர்ச்சும் உதவியாக இருப்பதையும் கண்டு அதற்கு எதிரான தன் போராட்டங்களையும் அதில், தான் எதிர்கொண்ட கஷ்டங்களையும் பற்றிய வரலாற்றை ஒரு கற்பனைப் புனைவாக ‘யாத்திரை’ என்ற தலைப்பில் எழுதி உள்ளார்…

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5

கட்சி கொடுத்த அரசியல் கொள்கை வழி தம் சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டு அதன் வழி இடது சாரி எழுத்தாளர்கள் எப்படி எழுதவேண்டும் என்று பாடம் நடத்தியவர்கள். உலகம் முழுதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டைகள் அத்தனையும் இடிந்து சிதிலமாகிப் போகவே, அவர்களுக்குப் போக்கிடம் ஒன்று தேவையாகியிருந்தது. அகதிகளாக வசிப்பிடம் தேடிய அவர்களுக்கு அப்போது கண்முன் தெரிந்த தலித் எழுச்சி வசதியாகிப் போயிற்று. பின் என்ன?

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5