Articles in the பிறமதங்கள் Category
Posted in கதைகள், பிறமதங்கள் on 2 August 2010
Stats: பார்வை: 899 and 30 Comments
“அண்ணா, இவர் ராஜாராமன், அவர் நரசிம்மன்,” என்று ரங்கன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்களில் இரண்டாமவர், “ம்ஹும், எபிநேசர்!” என்று திருத்திவிட்டுச் சிரித்தார். ரங்கன் தொடர்ந்து, அண்ணா இவர்கள் குடுத்த தைரியம்தான், இன்னிக்கு நான் இந்த நிலைமையில இருக்கேன்,” என்று சொல்ல, இன்னொருவர், “இல்ல மிஸ்டர் ரங்கன், கர்த்தர் அருள்தான் இதுக்குக் காரணம்….
Posted in பிறமதங்கள், வரலாறு on 21 June 2010
Stats: பார்வை: 1,742 and 26 Comments
பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை… மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.. பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு..
Posted in அனுபவம், பிறமதங்கள், புதிய இந்து on 4 June 2010
Stats: பார்வை: 2,681 and 112 Comments
(மூலம்: நவோமி ப்ரெட்டிமேன்) நானும் எங்களது பணியில் முழுமுற்றாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்… மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக… நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் - அச்சம்.
Posted in அனுபவம், பிறமதங்கள் on 29 April 2010
Stats: பார்வை: 1,447 and 24 Comments
நிறைய ஹிந்துப் பள்ளிகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படி ஹிம்சைக்கு ஆளாவதில்லை. எல்லா ஹிந்துப் பள்ளிக்கூடங்களும் மறக்காமல் சர்வ சமயப் பிரார்த்தனைதான் நடத்துகிறார்கள். கோவிலுக்குள்ளே வந்து கும்பிட்டு, திருநீறு வாங்கிக்கொண்டு, பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போ என்று ஒரு கிறிஸ்தவப் பையனைச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால், இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
Posted in அரசியல், சமூகம், பிறமதங்கள் on 18 March 2010
Stats: பார்வை: 569 and 11 Comments
[எழுதியவர்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)] சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் எந்தப் பல்கலைக் கழகத்துடன் வேண்டுமானாலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் மட்டுமல்லாமல் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரித்தார்கள், இடதுசாரிகளும் ஆதரித்தார்கள். இதை பாரதிய ஜனதாவும், சிவசேனையும் கடுமையாக விமர்சித்தன. முஸ்லிம் கல்வி நிறுவனம், உதாரணமாக ஜார்க்கண்டில் உள்ள ஜும்ரீத் அலியா என்ற சிறுபான்மைக் கல்வி நிறுவனம் எந்த மத்திய பல்கலைக்கழகத்துடனும் தனது விருப்பம் போல தன்னை இணைத்துக் கொள்ளலாம். மத்திய பல்கலைக்கழகத்திலிருந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பட்டம் பெற முடியும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதும் சுலபமாகும். வெளியிடங்களிலும் இதைக் காட்டி உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.
ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹிந்து மாணவரால் அப்படி…
Posted in அரசியல், சமூகம், பிறமதங்கள் on 12 March 2010
Stats: பார்வை: 995 and 21 Comments
[எழுதியவர்: ஓ.பி. குப்தா, ஐ.எஃப்.எஸ் (ஓய்வு)]. உங்கள் பார்வைக்கு 7 முக்கிய புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஹிந்து வாக்காளர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்ற அவர்கள் அக்கறையின்றி வாக்களித்து வரும் முறைதான் காரணம் என்பதை இந்தப் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக நன்கு படித்த ஹிந்துக்களின் பார்வைக்கு இந்தப் புள்ளிவிவரங்களைச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் இவை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. ஆனால் இதைப்பற்றி நன்கு படித்த ஹிந்துக்களுக்குச் சரியாக தெரியாமல் இருக்கிறது. இதற்கு ஊடகமும் ஹிந்துக்களின் நலனில் உண்மையான அக்கறையற்ற அரசியல்வாதிகளும் காரணம் என்று சொல்வதைவிட…
Posted in பிறமதங்கள், பொருளாதாரம் on 10 February 2010
Stats: பார்வை: 1,331 and 30 Comments
கேரள மாநில தொழிற் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், “KSIDC இஸ்லாமிய நிதிமுறை நிறுவனத்தை ஸ்தாபித்து விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது; இது KSIDC-யும் தனியார்களும் சேர்ந்து விருத்தி செய்யும் நிறுவனமாகும்; இந்நிறுவனம் பணம் கொடுக்கல் வாங்கல்களில் வட்டி வசூல் செய்யாது; இது முழுவதுமாக இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி இயங்கும்”
Posted in சமூகம், நிகழ்வுகள், பிறமதங்கள், பொது on 4 February 2010
Stats: பார்வை: 2,504 and 38 Comments
செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!
Posted in சமூகம், பிறமதங்கள், புத்தக விமர்சனம் on 9 December 2009
Stats: பார்வை: 1,649 and 9 Comments
பிரிட்டிஷ் அதிகாரியின் சொற்களில், “புனித சிலுவை வீரர்கள் இந்துமதம் என்ற இந்தக் கோட்டையின் உறுதியான சுவர்களை சுற்றிவளைத்து, பலமிழக்கச் செய்து, தகர்க்க வேண்டும்”… கிறிஸ்தவ மிஷநரிகளின் மொழியும், வழிமுறைகளிலும் மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டதே தவிர. அவர்களது கொள்கைகளும், இலக்குகளும் காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று அப்படியே தான் உள்ளன…. பொதுத் தளத்தில் அருண் ஷோரியுடன் விவாதம் செய்யத் தயாரா என்று கேட்டு இந்தியாவின் பல திருச்சபைகளிலும் உள்ள தலைமைப் பாதிரியார்களுக்கும், ஆர்ச்பிஷப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. அவர்களில் ஒருவர் கூட இந்த சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை.
Posted in சமூகம், பிறமதங்கள் on 26 November 2009
Stats: பார்வை: 1,425 and 4 Comments
பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன …“ஒளி” “காட்டப் படும்” அதை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள், தங்களைத் துன்புறுத்திக் கொள்வது மட்டுமல்ல, தேவனின் ஆணைக்கும், அல்லாஹ்வின் இறை விருப்பத்திற்கும் (அல்லது, கம்யூனிசத்தின் படி “சரித்திரத்திற்கும்”) குறுக்கே வருகிறார்கள் என்றே ஏஜென்ஸி கருத வேண்டியாகிறது..
Posted in ஆன்மிகம், பிறமதங்கள் on 28 October 2009
Stats: பார்வை: 3,194 and 134 Comments
… இந்த ஓவியத்தில் உள்ளது போன்றதொரு காட்சியை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வருணித்துவிட்டு இத்தகைய சாவு எனக்கு வாராமல் அருளவேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டுகிறார். இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே.
Posted in அரசியல், பிறமதங்கள் on 16 October 2009
Stats: பார்வை: 1,016 and 1 Comment
தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சேவை செய்வதே எங்கள் உய்ர்மூச்சு என்றெல்லாம் நாடகம் ஆடும், “தமிழ்” அரசியல்வாதிகளில் ஒருவர் கூட மதானியின் விடுதலைக்கு எதிராகவோ, அல்லது அவன் குண்டு வைத்ததனால் பாதிக்கப் பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ஆதரவாகவோ, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்து தமிழ் மக்களை அவமரியாதை செய்தனர்.
Posted in இலக்கியம், சைவம், பிறமதங்கள் on 6 October 2009
Stats: பார்வை: 4,605 and 203 Comments
மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்… ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
Posted in பயங்கரவாதம், பிறமதங்கள் on 28 September 2009
Stats: பார்வை: 2,323 and 58 Comments
ஷரியா இஸ்லாமிய சட்டம் நமது ஹிந்துஸ்தானில் அமலாக்கப்பட்டுவிட்டது போல அக்கனவில் கண்டேன். கனவில் கண்டவைகளை, இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தாலும் வயிற்றைக்கலக்கி, எனக்குள் உள்ளூர நடுக்கம் ஏற்பட்டு, நிலநடுக்கமும் உண்டானதுபோல ஆகிறது.
Posted in சமூகம், பிறமதங்கள் on 16 September 2009
Stats: பார்வை: 1,301 and 18 Comments
கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர்… மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையே இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான்….
Posted in சமூகம், பிறமதங்கள், வீடியோ on 31 August 2009
Stats: பார்வை: 12,507 and 525 Comments
”சனாதன தர்மத்தை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறும் வேதங்கள், இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருந்தன. எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’ மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று சொல்லியுள்ளது.. சென்னை, திருவான்மியூர் அட்வெண்ட் சர்ச் வாசலில் ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகாலஷேபம்” என்று விளம்பரம் …
Posted in பிறமதங்கள், பொது on 11 August 2009
Stats: பார்வை: 983 and 13 Comments
… அங்கு ஆசிரியர் என்னை அஞ்ஞானப்பிள்ளை என்றே கூறுவார். என்னை அவ்வாறு கூறுமாறும் கற்பித்தார். சிவபெருமான் நிந்திக்கப்படுவார். உமாதேவி இழித்துரைக்கப்படுவார். அங்கு நெற்றியில் திருநீறு பூசியிருக்கும் மாணவர்கள் சாம்பலில் புரண்டு வந்திருக்கும் கழுதைபோல்வர் என்று கூறப்படும்….
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்