சமூகசேவை

இந்து சேவை அமைப்புகள், நிறுவனங்கள் பற்றிய விவரங்களும், செய்திகளும்

அறிவிப்புகள், சமூகசேவை

இ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை

இ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை

ஹிந்து அறவழி போராட்டத்திற்கும் - போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லுகின்ற தொண்டர்களுக்கும் - ஹிந்து பலிதானிகள் குடும்பத்தார்க்கும், எங்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் அறப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும் தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து நிதி திரட்டும் பணியில் எமது அமைப்பின் பணி தொடர்ந்திட இதைப் படிக்கும் இந்து உணர்வுள்ள பெருமக்கள் தங்களால் இயன்ற நிதியை எமது இந்து தர்ம சேவை அறக்கட்டளைக்கு (பதிவு எண்: 127/2006) அனுப்பிட வேண்டுகிறோம்.

மேலும் »

அறிவிப்புகள், சமூகசேவை

சிக்கிம் பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்!

சிக்கிம் பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்!

இடைவிடாது பெய்யும் பலத்த மழை, அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகள், துண்டிக்கப் பட்ட சாலைத் தொடர்பு போன்றவைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கி விட்ட நிலையில் மீட்புப் பணிகளை மிகுந்த சிரமத்திற்கிடையில்... ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் சேவாபாரதி தொண்டர்கள் பலர்... சிக்கிம் உங்களுடைய உதவியை நாடி நிற்கிறது...

மேலும் »

சமூகசேவை, சமூகம், பொது

அட்சய பாத்திரம்

August 18, 2011
-
அட்சய பாத்திரம்

குழாயில் கொட்டும் சாம்பாரையும் சறுக்குமர வாய்க்காலில் சறுக்கிவரும் சாதத்தையும் ஆவி பறக்க ஹாட்கேஸ்களில் பாக் செய்யும் பணி.. வரிசையாக அணிவகுத்து நிற்கும் அவைகள் நிரப்பப்பட்டவுடன் பெல்ட் கன்வேயரில் பயணித்து முனையில் அதனைத் தொட்டுக்கொண்டிருக்கும் லாரியில் ஏறுகிறது. இந்த ஹாட்கேஸ்கள் அசையாமல் இருக்கும் வசதியுடன் அமைக்கப் பட்டிரும்க்கும் அந்த லாரிகளில் முதலில் தரவேண்டியது கடைசியில் என்ற ரீதியில் அடுக்கப்பட்டபின், ஒரு செக்யூரிட்டியுடன் பறக்கிறது. அந்த வினாடி முதல் லாரியின் போக்கு ஜீ.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. செல்லுமிடம் பெங்களூரு நகரின் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள். தயாரிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு.

மேலும் »

அனுபவம், சமூகசேவை

அமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு

அமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு

பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும் தமிழ் கலாச்சார அமைப்பு இந்தியாவில் அமெரிக்கா என்றால் பணக்கார நாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் வறுமை உண்டு வயிற்றுக் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற மகாகவியின் லட்சியத்தை இவை போன்ற அமைப்புகள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன.

மேலும் »

சமூகசேவை, சமூகம், பொது

திருப்பூரில் பாரதியார் குருகுலம்

திருப்பூரில் பாரதியார் குருகுலம்

திருப்பூரில் இயங்கி வரும் பாரதியார் குருகுலம் பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது.

மேலும் »

சமூகசேவை

ஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை

ஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை

ஆர்ஷ வித்யா பீடாதிபதி பூஜைக்குரிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசியுடன், ஸ்ரீ விவேகானந்தா ஊரக வளர்ச்சிச் சங்கம் (Sri Vivekananda Rural Development Society) தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது... குடிப்பழக்கம் இருக்கும் தகப்பன்மார்களை குழந்தைகள் வணங்குவதில்லை. தாயாரை மட்டும் வணங்குகின்றனர். அவமானப்படும் தகப்பன்மார்... இந்த நற்பணிக்கு நன்கொடை தருபவர்களுக்கு, அந்தத் தொகைக்கு வருமான வரியிலிருந்து, வருமான வரிச் சட்டம் - பிரிவு 35 AC கீழ் 100 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது...

மேலும் »

இந்து மத மேன்மை, சமூகசேவை

மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை

January 18, 2011
-
மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை

இவருக்கு ஓய்வு என்பதில்லை. ஒரு சினிமாவுக்கு, ஒரு டிராமாவுக்கு, ஒரு விளையாட்டுக்கு, ஒரு சுற்றுலாவுக்கு என்று எங்குமே இவரால் போக முடியாது. மதுரையை விட்டு ஒரு நாள் கூட தன் சொந்த வேலைகளுக்காக நேரம் செலவழிக்க இயலாது. 24 மணி நேரமும், 365 நாட்களும் ஓய்வின்றி எந்தவித ஒப்பந்தமும் இல்லாத ஒரு கடமைக்கு, ஆதரவற்ற சமூகத்தின் ஒரு சேவைக்காகத் தன் இளமை, வருமானம், நேரம், மகிழ்ச்சி, குடும்பம் என்று அனைத்தையுமே இந்த இளைஞர் தியாகம் செய்துள்ளார். உலகம் முழுவதும் சுற்றி வரும் திறமையான படிப்புப் பெற்றும் உள்ளூரில் சேவை செய்யும் உன்னதமான ஒரு தியாகத்தை தன் வாழ்க்கைப்...

மேலும் »

அரசியல், சமூகசேவை

இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை

இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை

தமிழகம் முழுக்க இதுபோன்று இந்து தர்ம நலன் காக்கும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திடவும், தொண்டர்கள் மேல் போடப் பட்டுள்ள வழக்குகளை சந்திக்கவும், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதியுதவி தேவைப் படுகிறது... இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது அமைப்பினர் முன்னிலை வகிக்கின்றனர். திருவிளக்கு வழிபாடுகள், சமய வகுப்புகள், உழவாரப் பணிகள் ஆகியவை பல பகுதிகளில் நடத்தப் படுகின்றன...

மேலும் »

அனுபவம், சமூகசேவை, சமூகம்

எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

September 27, 2010
-
எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

ஒரு அறையில் சின்னதாக தனித்தனியாக லேமினேட் செய்யப் பட்டு மூன்று குழந்தைகளின் போட்டோக்கள் ஒரு மேசையில் இருந்தன. இதில எல்லாம் மதத்தைப் பார்த்தா நாம என்ன சார் மனுஷங்க?... திட்டமிட்டு இரண்டு பிராமணர்களை தேர்ந்தெடுத்து, மூளைச்சலவை செய்து, புரோடஸ்டண்ட் சர்ச்சில் மதம்மாற்றி.. இந்தியா இந்த அவலத்தை சகித்துக் கொள்வது மட்டுமல்ல, இதற்குத் துணைபுரியவும் செய்கிறது... இப்படி ஏமாத்தி இருக்காங்களே? நானும் ஏமாந்திருக்கேனே என்று நொந்து கொண்டார் நண்பர்..

மேலும் »

சமூகசேவை, சமூகம், பொது

இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை, பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்....கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள். புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர். எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்...

மேலும் »