Payday loans Cialis online
payday loans Car insurance

சமூகசேவை

இந்து சேவை அமைப்புகள், நிறுவனங்கள் பற்றிய விவரங்களும், செய்திகளும்

அனுபவம், சமூகசேவை, சமூகம்

எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

September 27, 2010
-
எல்லோரும் ஏமாந்துகிட்டிருக்காங்க.. அப்ப நீங்க?

ஒரு அறையில் சின்னதாக தனித்தனியாக லேமினேட் செய்யப் பட்டு மூன்று குழந்தைகளின் போட்டோக்கள் ஒரு மேசையில் இருந்தன. இதில எல்லாம் மதத்தைப் பார்த்தா நாம என்ன சார் மனுஷங்க?... திட்டமிட்டு இரண்டு பிராமணர்களை தேர்ந்தெடுத்து, மூளைச்சலவை செய்து, புரோடஸ்டண்ட் சர்ச்சில் மதம்மாற்றி.. இந்தியா இந்த அவலத்தை சகித்துக் கொள்வது மட்டுமல்ல, இதற்குத் துணைபுரியவும் செய்கிறது... இப்படி ஏமாத்தி இருக்காங்களே? நானும் ஏமாந்திருக்கேனே என்று நொந்து கொண்டார் நண்பர்.. [மேலும்..»]

சமூகசேவை, சமூகம், பொது

இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை, பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்....கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள். புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர். எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்... [மேலும்..»]

ஆன்மிகம், சமூகசேவை, சமூகம்

உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!

உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!

துடைப்பம், தண்ணீர் வாளிகள், மம்மட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றுடன் பக்தர்கள் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்...தீட்சிதர்கள், அவர்களுக்கு அன்புடன் அன்னமிட்டனர். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து தீட்சிதர்கள் வழங்கிய உணவை உண்டனர்... சிதம்பரம் கோயில் தூய்மையானது. இப்போது புது மெருகுடன் கோயில் காட்சி அளிக்கிறது; சிதம்பரம் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். [மேலும்..»]

சமூகசேவை, நிகழ்வுகள், பொது

லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்

லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்

அரசு நிர்வாகம் மீட்பு, நிவாரணப் பணிகளில் மெதுவாகவே ஈடுபடுகிறது... லே அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் (ஐ.டி.சி) நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. உடனடியாக முகாம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வெள்ளப் பகுதிக்கு விரைந்தனர். யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்புப் பணியைத் துவங்கிவிட்டனர்... கடுமையான இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகித் தவிக்கும் லே சகோதரர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாமல் இருக்கலாம். இந்த இயக்கம் ஆற்றும் மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கி அவர்களுக்கு தோள் கொடுக்கலாமே! [மேலும்..»]

சமூகசேவை, பொது

ஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.

ஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.

அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத்தானது ஒரு லாபநோக்கற்ற, ஏழைகளுக்கும், உதவிதேவைப்படுவோருக்கும் தன்னார்வ நோக்கில் உதவும் ஒரு அமைப்பு. ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்கும், கல்வி, உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதும் இதன் பணிகளில் ஒன்று. [மேலும்..»]

சமூகசேவை, வழிகாட்டிகள்

வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்

வாழும் வரலாறு: நானாஜி தேஷ்முக்

ஒருபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வியக்கவைக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களின் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளும் ஆபத்துகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அதிகார வெறி, பொதுநலத்தை ஓரங்கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் கோஷ்டிப் பூசல் காணப்படுகிறது. எந்தக் கட்சியும் இதற்கு விலக்கல்ல. இந்த பரஸ்பர அவநம்பிக்கை, தகராறு போன்றவற்றால் அரசியல் கட்சிகள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன. அறப்பண்பு முற்றிலுமாக செல்லரித்துப் போய்விட்டது. மனித விழுமியங்கள் நலிவடைந்து விட்டன. அரசுகள் ஸ்திரத்தன்மை இழந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் அநீதியும் அட்டூழியமும் அக்கிரமமும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் என்ன பரிகாரம் என்பதை... [மேலும்..»]

சமூகசேவை

இலங்கைத் தமிழரின் இன்னல் களைய நன்கொடை தந்து உதவுங்கள்!

இலங்கைத் தமிழரின் இன்னல் களைய நன்கொடை தந்து உதவுங்கள்!

இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப் பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு உதவ சேவாபாரதி அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் விவரங்களுக்கு... [மேலும்..»]

சமூகசேவை

நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்

நினைவஞ்சலி: பேராசிரியர் பரமசிவம்

பேராசிரியர் படுகொலையில் இன்றளவும் நியாயம் கிடைத்திடாத அளவிலும் கூட அவரது நினைவு தினமும் மானுடத்துக்கு சேவை செய்யும் தினமாக மாறியுள்ளது, அன்னிய மதவெறியின் ஆதிக்க கொலைக் கரங்களுக்கு அப்பால் இன்றும் நம் இந்து தருமம் வாழ்வது இத்தகையோரின் தியாகங்களால்தாம். "...நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்" என்றார்... [மேலும்..»]

சமூகசேவை

காந்தி நிகேதன்

காந்தி நிகேதன்

காந்தி வாழுமிடம். (காந்திநிகேதன் ஆஸ்ரமம்) 1980ம் ஆண்டு. மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி – திருநெல்வேலி. முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பிற்குள் நுழைகின்றனர். எல்லா மாணவர்களும் ஒரு கையால் “குட்மார்னிங் சார்” என கல்லூரி முதல்வருக்கு முகமன் கூறிக் செல்கின்றனர். ஒரே ஒரு மாணவர் மட்டும் நின்று “வணக்கம் அய்யா” என இருகரம் கூப்பி வணங்குகிறார். அவரை கல்லூரி முதல்வர் ஆரத்தழுவி “எந்தப் பள்ளியில் படித்தாய்?” எனக் கேட்கிறார். “காந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளி, கல்லுப்பட்டி” எனக் கூறுகிறான் அந்த மாணவன். தற்போது பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணிபுரிகிறார் அந்த மாணவர். வயதில் மூத்தவர்களிடம் யாராவது “வணக்கம் அய்யா”... [மேலும்..»]

சமூகசேவை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி

பிகாரில் திசை திரும்பி கட்டுக்கடங்காமல் ஓடிய கோசி நதி, பல உயிர்களையும் உடைமைகளையும் மூழ்கடித்து அனைவரையும் வருத்தமடையச் செய்த அதே வேளையில் மத வேற்றுமைகளையும் மூழ்கடித்தது சற்று ஆறுதலான விஷயம். வெள்ள நிவாரண முகாம்களில் மத வேறுபாடு இன்றி எல்லா மதத்தினரும் ஒருவருக்கொருவர் உதவுவது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. சேவா பாரதி அமைப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாமில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரு வாரமாக தங்கி உள்ளனர். "எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்கின்றனர். நிவாரண முகாமில் இதைவிட வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியாது" என்று முகமது சலாலுதீன் கூறினார்... [மேலும்..»]