புதிய இந்து

புதிதாக இந்து நெறியைத் தழுவிய இந்துக்கள், அவர்களது எண்ணங்கள், சாதனைகள், அவர்களைப் பற்றிய விபரங்கள்.

இந்து மத மேன்மை, புதிய இந்து

கானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்

கானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்

இந்தக் கோவிலில் பிராத்தனை பாடல் பாடி வழிபாட்டுக்காகக் காத்திருப்பவர்களில் யாரும் இந்தியர் இல்லை. அவர்களுக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது. அதுமட்டுமில்லை அவர்களில் பலர் இந்தியாவையயே பார்த்ததில்லை. பின் எப்படி இந்த கோவில்?

மேலும் »

அனுபவம், பிறமதங்கள், புதிய இந்து

மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

June 4, 2010
-
மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

(மூலம்: நவோமி ப்ரெட்டிமேன்) நானும் எங்களது பணியில் முழுமுற்றாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்... மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக... நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் - அச்சம்.

மேலும் »

புதிய இந்து, வழிகாட்டிகள்

கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை

கன்யாஸ்திரீயையும் நனைக்கும் கருணை மழை

இலங்கையில் தேராவாத பௌத்தம் இனவெறியாக மாறித் தமிழர்களைக் கொன்றுபோடுகிறது. ஆனால், அங்கிருக்கும் ஒரு துறவியை இந்துமதம் அன்பினால் கவருகிறது... "ஹிந்து மதத்தின் மீது எனக்கு ஒரு ரகசிய ஈர்ப்பு ஏற்பட்டது. நமக்குப் பிடித்தமான ஒன்றில் லயித்து, அதனோடு ஒரு உறவை வளர்க்கும் ஆர்வமானது அடிப்படையான மனித இயல்பு. என்னைக் கவர்ந்தாள் காளி...கிருத்துவ மதத்தை முற்றிலும் கைகழுவினேன்."

மேலும் »

புதிய இந்து

புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்

புறமும், அகமும்: ஜான் என்னும் விஷ்ணுபக்தர்

..தனது கையால் இடித்த கோவிலை மீண்டும் தனது கையால் நிர்மாணித்தலே அமைதி பெறும் வழி என உணர்ந்தார் தாமஸ்.. உடனே கோயில் கட்டும் வேலையை நிறுத்தும்படி உள்ளூர் கிறித்தவ சபை உத்திரவிட்டது. ஜானுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கோவிலை கட்டியதும்தான் தங்களது குடும்ப நிம்மதி மீண்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால் கிறித்தவ சபையின் எதிர்ப்பையும் மீறி கோயிலை அமைத்து வழிபாடு செய்யத்தொடங்கினார்.

மேலும் »

புதிய இந்து

ஒரு குடும்பத்தின் கதை…

ஒரு குடும்பத்தின் கதை…

நண்பனின் மனைவி சில நிமிடங்களிலேயே வேற்றாட்கள் என்று பாராமல் எங்கள் முன் குமுறி அழ ஆரம்பித்தார். "என்னைச் சந்தேகப்படுகிறார், திட்டுகிறார், அடிக்கிறார், நிம்மதியே இல்லை, வயதுக்கு வந்த பெண் குழந்தை வேறு, நான் என்ன செய்வேன்!" என்று அழுதார்...

மேலும் »

சமூகம், புதிய இந்து

தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி

தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி

தருமம் மிகு தூத்துக்குடி செங்கோல் ஆதீன மகாசன்னிதான சுவாமிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி வீரத்திருமகன் அர்ஜுன் சம்பத் அவர்கள் மற்றும் குமரி மாவட்ட செந்தூரான் பேரவையும் இணைந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 346 மக்கள் தாய்மதமாம் இந்து தருமத்தில் இணைந்த 'தாய் மதம் திரும்பும் விழா' நாகர்கோவில் அருள் மிகு நாகராஜா திருக்கோவில் அருகில் உள்ள 'அனந்த சமுத்திரம்' திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் »

சமூகம், புதிய இந்து

தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா

தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா

தாய்நாடு காக்க, தாய்மொழி காக்க, தீண்டாமையை ஒழிக்க, சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்க, இந்து ஒற்றுமை காத்திட தமிழன்பர்கள் பலர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பும் திருவிழா வரும் ஞாயிறன்று (31-08-2008) நாகர்கோயிலில் நிகழவிருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

மேலும் »

சமூகம், புதிய இந்து

அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!

August 25, 2008
-
அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாய் மதம் திரும்பும் விழாவில் 10 குடும்பத்தினர் இந்து மதத்தில் சேர்ந்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருஸ்துவ, முஸ்லிம் மதத்தினர் தாய்ச்சமயம் மதம் திரும்பும் விழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கோவில் அலுவலர்கள் விழாவிற்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து கடந்த 18ம் தேதி வீரட்டானேஸ்வரர் கோவில் முன் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில், நேற்று பண்ருட்டி ராமசாமி செட்டியார் திருமண மண்டபத்தில் தாய் மதம் திரும்பும் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு இந்து...

மேலும் »

புதிய இந்து

அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து

அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து

அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.

மேலும் »