Payday loans Cialis online
payday loans Car insurance

ஆன்மிகம்

ஆன்மிகம்

அச்சுதனும், அம்பிகையும்

August 19, 2008
-
அச்சுதனும், அம்பிகையும்

அடர்ந்த வனங்களில் முனிவர்கள்தம் குடில்களில் அவதரிக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. அறத்தை நிலைநாட்ட யுகம்தோறும் அவதரிப்பவன் அண்ணன்; அறம் வளர்த்த நாயகியாக ஐயாற்றில் விளங்குபவள் தங்கை. [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தரவிறக்கம்

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும். [மேலும்..»]

ஆன்மிகம், சமூகம்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்

1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்துக்கள் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர்; அவர்கள் தாம் குடியமர்ந்த இடங்களில் வழிபாட்டுத்தலங்களையும் அமைத்துள்ளனர். இந்து சமயம் காட்டும் நெறியில் இந்துக்களாகவே வாழ்வதற்கு அவர்கள் உறுதியான அத்திவாரத்தை இட்டுள்ளனர். 15 இந்து கோவில்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன... [மேலும்..»]

ராமாயணம், வைணவம்

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 3

ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும். [மேலும்..»]

இலக்கியம், வைணவம்

அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்

August 4, 2008
-
அழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்

அழகிய மணவாள தாசர் என்ற ஓர் அடியவர்; 'பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்' என்றும் அழைப்பர். இவர் எழுதியது 'அஷ்டபிரபந்தம்' என்னும் நூல். எட்டு நூல்களின் தொகுப்பான இந்த நூலில் 'திருவரங்கக் கலம்பகம்' என்னும் நூலும் அடங்கும். திருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது... [மேலும்..»]

சைவம்

மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

அமரர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் எழுதுகிறார் - எப்படி எண்ணற்ற நுண் துகள்களை ஒரு சிறிய ஒளிக்கீற்றின் மூலமாகச் சூரியன் வெளிப்படுத்துகிறதோ அப்படியே மிகப் பெரியவனாக இருக்கிற இறைவனும் அழகும் அற்புதமும் தாண்டவமாடும் இவ்வண்ட கோள முழுமையையும் தன் அருளொளியால் வெளிக்காட்டுகிறான்... [மேலும்..»]

சைவம், வழிகாட்டிகள்

மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் அமர்ந்து உண்டனர். மாலையில் அருகிலிருந்த அன்பர் ஒருவரிடம் 'எத்தனை முறை சமையல் நடந்தது?' என்று கேட்டார் பாம்பன் சுவாமிகள். அதற்கு அந்த அன்பர், 'காலையில் சமைத்ததுதான், காய்கறிகள் மட்டுமே தீரத் தீர சமைக்க வேண்டி இருந்தது. உணவு அள்ள அள்ளக் குறையவில்லை' என்றார்'... [மேலும்..»]

இலக்கியம், சிறுவர், ராமாயணம், வைணவம்

பாலராமாயணம் – 2

பாலராமாயணம் – 2

சிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம். அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்.... [மேலும்..»]

ஆன்மிகம், வழிகாட்டிகள்

மகான்கள் வாழ்வில் – 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

மகான்கள் வாழ்வில் – 1: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார்... [மேலும்..»]

ஆன்மிகம், வைணவம்

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2

ஸ்ரீ மகாவீர வைபவம் – பகுதி 2

வனப்பு மிகுந்த இந்த ஸ்ரீராம தரிசன காட்சியை கண்ணுற்ற தேசிகரின் உள்ளம் கசிந்து உருகுகிறது. தேசிகரும் இளைய பெருமாளைப் போலத்தான். உலக விவகாரங்கள் பற்றிய அறிவு ஏற்படும் முன்னரே அவருக்கு பக்தி, பரம்பொருள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. “த்வமேவமாதாச பிதாத்வமேவ” என்ற கீதா வாக்யத்தை அடியொற்றி பரம்பொருளான நாராயணனையே தாயாகவும் தந்தையாகவும் உளமாற நினைத்து உருகி பல பாசுரங்கள் இயற்றியிருக்கிறார். [மேலும்..»]