பேயம்மை

தமிழில் பேய் என்ற சொல் முற்றிலும் தீய பொருளைக் கொண்டிருக்கவில்லை. பேய் என்பது உடல் கடந்த ஒரு நிலை.. தொங்கிய முலைகளும், குழி வயிறும், சிவந்த சடை மயிரும் கொண்ட பெண் பேய் இங்கு ஓர் பித்து நிலையின் குறியீடாக வருகிறது. உலகின் முட்டாள் தனங்களை எல்லாம் பார்த்து சிரித்து, உன்மத்தம் கொண்டு ஆடும் பித்து… அவள் உலகெங்கும் கல்வியின் ஒளியை எடுத்துச் செல்வாள். பார்த்தன் வில்லேந்தி அக்கிரமக் காரர்களை ஒழித்தது போல, அநீதியைக் கண்டு சீறி அநியாயம் செய்பவர்களை ஒழிப்பாள். ஆம், சத்தியத்தின் மீது, நீதியின் மீது, கல்வியின் மீது, போர்க் குணத்தின் மீது வெறி கொண்டவள். அந்தத் தாயின் சன்னதம்…

View More பேயம்மை

சகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்!

கோவா போலீஸாருக்கு ஒத்துழைக்க தேஜ்பால் மறுத்தார். மேலும் கோவா போலீஸாரை மிரட்டவும் செய்தார். சம்பவம் நடைபெற்ற ஓட்டலில் கண்காணிப்புக் காமிராக்களில் இருந்த காட்சிகளில் தேஜ்பாலின் அத்துமீறல்கள் பதிவாகி இருந்தன… சதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஓர் ஊடகம், தனது தவறுகளாலேயே தனது புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது…. மேலைநாட்டு மோகமும் மது பரிமாறும் விருந்துகளும் நமது ஊடகத் துறையைப் பற்றியிருக்கும் சாபக் கேடுகள் என்பதை நமது ஊடக நண்பர்கள் இனியேனும் உணர்ந்து தவிர்ப்பார்களா?….

View More சகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்!

தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்

தங்கள் வாழ்க்கை மற்றும் உடல்களை தாமே அழுத்தந்திருத்தமாக அடக்கியாளும் உரிமையும் ஆற்றலும் பெற வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சி நிச்சயமாக அரசியல் தன்மை உடையது தான். ஆனால் பெண்ணீய அரசியலும் அதன் தன்மைகளும் நமது அரசியல் கட்சிகளின் குறுகிய உலகத்தை விட பரந்தது… கற்பழிப்பு என்பது காமம் அல்லது கலவியைக் குறித்த விஷயம் அல்ல. மாறாக அது பெண்களின் ஆற்றல், சிறப்புரிமை மற்றும் அதிகாரபூர்வமான உரிமை ஆகியவற்றை பாதிக்கக்கூடியது என்பது குறித்து நாம் காலம் காலமாக பேசி வந்துள்ளோம்… இத்தருணத்தில் மௌனமாக வாளாவிருக்க நான் விழைந்திருந்தால்,என்னால் என்னையே நேரிட்டிருக்க முடியாது என்பது மாத்திரம் அல்ல, தலைமுறைகளாக முழு முனைப்புடன் செயல்பட்டு பெண்ணீய இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று புதுப்பிக்கும் அந்த நெஞ்சுரம் கொண்ட பெண்களையும் எதிர்கொள்ள முடியாமல் போயிருக்கும்…

View More தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்

அடிபணிதல்

அடிபணிதல் (Submission) என்ற திரைப்படம் பற்றிய பதிவு இது. டச்சுத் தொலைக் காட்சியில் வெளியிடப் பட்டு பலராலும் பாராட்டப்பட்டு, அதே சமயம் இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பும் இத்திரைப்படத்திற்கு உண்டானது. அயான் ஹிர்ஸி அலியும், இயக்குனர் தியோடர் வான்-கோவும் இணைந்து எடுத்த படம். வான்-கோ 2004-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆம்ஸ்டர்டாம் நகரத் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியால் ஏழு முறை சுடப்பட்டு, பின் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளியால் வான்-கோவின் உடலில் சொருகப்பட்ட கத்தியில், அயான் ஹிர்ஸி அலியையும் கொல்லப்போவதாக விட்டுச் சென்ற எச்சரிக்கைக் குறிப்பினை அடுத்து ஹிர்ஸி அலி நெதர்லாந்தை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று…. அயான் ஹிர்ஸி அலி கூறுகிறார் – “அடிபணிதலின்” மையக்கருத்து, ஒரு தனி மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு பற்றிய ஒன்று. எவர் மனதையும் புண்படுத்தவோ அல்லது கோபம் கொள்ளச் செய்வதற்காகவோ இந்தத் திரைப்படத்தை நான் எழுதவில்லை. ஒரு முஸ்லிம் பெண்ணானவள், குரானில் கூறப்பட்டுள்ள வாசகங்களைப் பின்பற்றி, எதனைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எவ்வாறு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து அடிபணிகிறாள் என்பதனைக் காட்டுவதற்காக மட்டுமே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது….

View More அடிபணிதல்

கன்னியின் கூண்டு – 3

இஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள்….. முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத கோபத்துடன் வாழ்கிறது அச்சமூகம்…. முஸ்லிம்கள் தங்களையும், தங்களின் பெண்களையும் அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து விடுதலையடைந்து வெளியே வரவேண்டுமென்றால், அவர்கள் தங்களின் சுய விமரிசனத்தையும், குரான் சொல்லும் சட்ட திட்டங்ககளையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். இந்தச் செயலைச் செய்வதற்கு இன்று மேற்குலகில் வாழும் 15 மில்லியன் முஸ்லிம்களே சரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், மேற்கத்திய நாட்டில் வசிக்கும் ஒரு முஸ்லிம் அவரது மதத்தின் உட்கட்டமைப்பைப் பற்றி ஆராய்ந்தால் அவருக்கு எந்த மேற்கத்திய நாடும் சிறைத் தண்டனையோ அல்லது இஸ்லாமிய நாடுகளைப் போல மரண தண்டனையோ வழங்கும் என்றும் அஞ்சவேண்டியதில்லை….

View More கன்னியின் கூண்டு – 3

கன்னியின் கூண்டு – 2

இஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் காரணமாக அப் பெண்கள் எப்போதும் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள்… தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்… இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து வெட்டி எடுத்து விட்டு று நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை. இந்த முறை ஏறக்குறைய முப்பது இஸ்லாமிய நாடுகளில், எகிப்து, சோமாலியா, சூடான் உட்பட்ட, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது…கருத்தடையும், கருக்கலைப்பும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு நடத்துவதும், கணவன் அறியாமல் கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் அன்றாடம் நடக்கிறது….

View More கன்னியின் கூண்டு – 2

கன்னியின் கூண்டு – 1

அயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர் எழுதிய ”கன்னியின் கூண்டு” என்ற நூல் இஸ்லாமியப் பெண்களீன் நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது…. எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம்…. ஆண்களை பொறுப்பற்றவனாகவும், எதிர்பாராத நடவடிக்கைகள் கொண்டவனாகவும், அச்ச மூட்டும் பேயைப் போன்றவனாகவும், தெருவில் நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் சுய கட்டுப்பாட்டை இழந்து நடப்பவர்களாகவும் சித்தரிக்கிறது….

View More கன்னியின் கூண்டு – 1

காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

வெறியாட்டம் சம்பிரதாய நாடக வடிவிலோ, அல்லது நவீன நாடகங்கள் என்று சொல்லப்பட்டு வந்த நாடகங்கள் போன்றோ இல்லை. ஒப்பாரியிலேயே நாடக நிகழ்வு முழுதையும் மேடையேற்றியிருந்தார் ராமானுஜம். நடு நாயகமான பாத்திரம் ஏற்று நடித்த காந்தி மேரியின் நடிப்பு தோரணைகளும் சரி, பெருந்தேவியும் சரி எல்லாமே பொருத்தமாகத் தான் இருந்தன. முதல் முயற்சியே சிறப்பாக வெற்றி பெற்றது தான்… இப்போது காந்தி மேரி ஒரு நாடகாசிரியராக நம் முன் பொம்மக்காவின் மூன்று பெண்கள் என்னும் நாடகத்துடன் வருகிறார். ஆண்கள் விதித்துள்ள வரம்பிற்கு அடங்கி கடைசியில் குரல் எழுப்புவது பெண்ணியக் குரல், எதிர்ப்புக் குரல் அல்ல. பொம்மக்கா நாடகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறார்கள். இது ஒரு இயல்பான எதிர்ப்புக் குரல், பெண்ணீயக் குரல்… ஃபாஷன் அல்லாத ஒரு காரியத்தைச் செய்துள்ள, ஊரோடு ஒட்டி வாழ மறுத்துள்ள காந்தி மேரிக்கு என் வாழ்த்துக்கள்…

View More காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா

மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும்…

View More பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா

வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்

இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்று ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல முடியவில்லை . இந்த மரணம் சமூகத்தை நோக்கி ,அதன் அறத்தை நோக்கி எண்ணற்ற கேள்விகளை முன் வைக்கிறது… சம கால ஆண்களின் பாலியல் சிந்தனை வறட்சி கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கிறது. இந்த சமூகத்தின் ஆகப்பெரிய நோயாக பாலியல் தேவை தான் எழுந்து நிற்பதாக ஒரு தோற்றம் உருவாகிறது. அடுத்து காதல் பற்றிய பிதற்றல்களும், அதன் புனிதத்தன்மை ,இயல்பு பற்றிய கோட்பாடுகள் அதை ஒரு பாலைவன மதம் அளவுக்கு தீவிரமான அடிப்படைவாத சித்தாந்தங்களை முன்னிறுத்துகிறது… அரசிடம் போதுமான அளவு சம்பளம் பெறும் ஒரு அரசு மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை கீழ்த்தரமாக நடத்த தூண்டுவது எது?…. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமில வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும், நம்பிக்கையையும் அளிக்க பெரும் முயற்சியை செலவிட்டு வருகிறது…

View More வினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்