ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

ஐந்து மாநிலங்களிலும் ஐந்து விதமான தீர்ப்புகள். இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒவ்வொரு கட்சியும் மகிழ்ச்சி அடையவும் வருத்தம் கொள்ளவும் பல முடிவுகளை அளித்திருக்கிறது எனில் மிகையில்லை.. பல தசாப்தங்களாக இக்கட்சிகளின் பிடியில் இருந்த மேற்கு வங்கத்தில் பாஜக இப்போது இரண்டாவது பிரதானக் கட்சியாகி இருக்கிறது. அந்த வகையில் பாஜகவுக்கு சோகத்திலும் ஆறுதல்… தமிழகத்தில் கருணாநிதியின் நேரடி வாரிசான ஸ்டாலின் தனது அரசியல் தலைமையை நிரூபிக்கும் கட்டாயமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் அடுத்த தலைமை தானே என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தன. இந்தச் சோதனையில் இருவருமே வென்றுள்ளனர்…

View More ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்

அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா

கடுமையான விமர்சனங்களை அவர் மீது கொண்டிருந்தாலும் கூட அவரது மறைவை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் கூட சொல்ல முடியாத ஒரு வேதனை ஏற்படுகிறது… 20-21ம் நூற்றாண்டுகளின் யுகசந்தியில் தமிழ்நாட்டை சுயலாப மக்கள் விரோத சுரண்டல்வாதிகளும், துவேஷம் வளர்க்கும் இனவாத அரசியல் கயவர்களும் சீரழித்து விடாமல் காத்த தேவதை ஜெயலலிதா… கறாரான அரசியல்வாதி, பாதரசம் போன்று நிலையின்றி அலைபாயும் ஆளுமை (mercurial personality), இரும்பை ஒத்த உறுதி, மிகவும் சிக்கலான நிர்வாகத்தையும் கையாளும் செயல்திறன் – இத்தகைய பிரமிப்பூட்டும் பண்புகளின் கலவையாக ஜெயலலிதா விளங்கினார்….

View More அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா

தமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்

இங்கு மிகப்பெரிய சந்தேகம், முதலில் பா.ஜ.கவினருக்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதா என்பதே. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விழையும் ஒரு கட்சி இதைப்போன்றதொரு அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல…. இன்று தமிழகத்தில் உருப்படியான அரசியல் சக்தியாகத் தெரிந்தது அ.இ.அ.தி.மு.க மட்டும் தான். இந்த சூழலில் தமிழக அரசியலில் ஒரு ஆற்றல் வெற்றிடம் நிலவுவதை நம்மால் உணரமுடிகிறது. அந்தவெற்றிடத்தை நிரப்புவது யார்? அந்த இடத்துக்கான போட்டியாளர்கள் யார்?யார்?… இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள். இனத்தையும், சமுதாயத்தையும், இயற்கையையும் காப்பவர்களாகக் காட்டிக்கொண்டு,கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் கையாள்களாக இருக்கக்கூடிய அமைப்புகள்…இந்தப் பட்டியலைப் பார்த்தாலே தமிழகம் சந்தித்துக்கொண்டிருக்கும் அபாயம் புரியும்….

View More தமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்

மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி

மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்… 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்….தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக காட்சியளிக்கும் இடதுசாரிகளின் நிலை கேவலமாகவே காட்சியளிக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் முதல்வர் என பிரகடனப்படுத்தியுள்ள அ.தி.மு.கவை முழுமையாக நம்ம முடியுமா என்பது தெரியவில்லை….

View More மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி

தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்

இன்னமும் 100 பேர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக- அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்… ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் 15 அமைச்சர்களை மாற்றுவதென்பது, ஒட்டுமொத்த அமைச்சரவையின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாகவே உள்ளது… உளவுத்துறைக்கு அமைச்சர்கள் குறித்த தவறான தகவல்களை போட்டியாளர்கள் தருவதாகவும் தகவல்கள் உண்டு… பதவியில் இல்லாதவர்களே நிம்மதியாக இருக்க முடியும் என்ற சூழல் தமிழகத்தில்… காமராஜர் அமைச்சரவையில் அரசியல் நடத்தவில்லை… காமராஜர் ஆட்சி என்பது ஒரு கனவுச்சொல்லாக தமிழகத்தில் நிலைபெற்றிருப்பது அதனால்தான்…

View More தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்

அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்

கண்டு பிடிக்கப்பட்ட பைப் குண்டு 6 அடி நீளமுள்ளதும், அதனுள் 7 கிலோ டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் [..] இந்த வெடி குண்டை கண்டு பிடித்தது காவல் துறையினர் கிடையாது [..] அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழி இஸ்லாமியர்களின் பயங்கரவாத சம்பவங்கள் நடந்த பகுதி என்பதை காவல் துறை கவனிக்கவில்லை [..] முக்கிய பிரமுகருக்கான பயண பாதுகாப்பு திட்டத்திலேயே மதுரை மாவட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என ஐ.பி அதிகாரியிடம் விசாரித்த போது அவர் கொடுத்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. தொடர்ச்சியாக அத்வானியின் உயிருக்கு ஆபத்து என்பதும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா, சிமி , இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளால் எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

View More அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்

பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்

தங்களது பயங்கரவாதத் தன்மை மறைய வேண்டும் என்கிற நோக்கத்திலேயே செயல்படுகின்ற சில இஸ்லாமிய அமைப்புகள், காலத்திற்குத் தகுந்தாற்போல் அரசியலில் தங்களது கூட்டணிகளை மாற்றிக் கொண்டு நல்லவர்கள் போல் காட்சி அளிக்க முயலுகிறார்கள். இப்படிப்பட்ட பச்சோந்தித்தனத்திற்கு தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான… இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா எப்படிப்பட்டவர், இவரின் தொடர்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பார்த்தால் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தின் ஊற்றுகண் என்பது வெட்ட வெளிச்சமாகும்… அல்-உம்மா மற்றும் ஜிகாத் இயக்கங்கள் தடை செய்யப்பட்டவுடன் திமுகவின் ஆதரவுடன், “மனித நீதிப் பாசறை” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை… தற்போது கோவையில் உள்ள கோட்டைமேடு, தனி பாகிஸ்தானாகக் காட்சி அளிக்கிறது…

View More பயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல் அங்கீகாரம்