இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1

ஒவ்வொரு இனமும் தங்கள் இன வரலாறு என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவும் தங்கள் மூதாதையார்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு இந்நாள் வரை வந்துள்ளதாகவும் உறுதியாக நம்புகின்றனர். உணவு, உடை, மொழி, மூதாதையரால் தங்களுக்கு வந்துள்ள அறிவு (எழுதப்பட்டதாகவோ அல்லது வாய்மொழியால் இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவோ இருப்பது), கடவுள் மற்றும் அந்தக் கடவுளை வழிபடும் முறைகள், மருத்துவம், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் (தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை) போன்றவை இனத்திற்கு இனம் வேறுபட்டு உள்ளன.

View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1

ஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.

அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத்தானது ஒரு லாபநோக்கற்ற, ஏழைகளுக்கும், உதவிதேவைப்படுவோருக்கும் தன்னார்வ நோக்கில் உதவும் ஒரு அமைப்பு. ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்கும், கல்வி, உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதும் இதன் பணிகளில் ஒன்று.

View More ஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நீங்கள் இதுவரை சந்தித்துள்ள ஏழைகளில் பரம ஏழையாக உள்ளவருக்கு அதனால் பயன்கிடைக்குமா? என்று சிந்தித்து பார்த்து காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள் என்பதுதான் மகாத்மா சொன்ன அறிவுரை ஆகும்… இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்..சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு மாறுபடும். இதில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

View More பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1

டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் எல்லாவற்றுக்கும் செலவு அதிகமாக ஆகும். புவி பாதுகாப்பு உச்சி மாநாடு காசபிளாங்காவிலோ அல்லது கொல்கத்தாவிலோ நடைபெற்றிருந்தால் செயற்கையாக வெப்பம் அளிப்பது மற்றும் ஒளி அளிப்பது ஆகியவற்றுக்காக மின்சாரத்தை அதிக அளவில் செலவிடவேண்டி இருந்திருக்காது….. அமெரிக்கா கடந்த 30 ஆண்டில் தனது நிலப்பரப்பில் அணுசக்தி ஈனுலைகளை ஒன்றைக்கூட அமைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணுசக்தி ஈணுலைகளை அமைத்துத் தருவதாக சொல்லி கோடிக்கணக்கான தொகையை அபகரிக்க முற்படுகின்றன. (மூலம்: எம்.டி.நளபத், தமிழில்: ஆழிநோக்கி)

View More பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை… ‘நம்மவர்’ – ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.

View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)

பெரும் ஆய்வு நாற்காலிகளில் அமர்ந்த இவர்களில் பலர் தம்மைக் கிறித்தவர் என்று கூறிக்கொள்கின்றனரா என்றால் சொல்லமுடியாது. மேலை நாட்டு நிறவெறி, — ’உயர் நாகரிகம் தங்களது; கீழை நாட்டினர் கீழானவர்கள்; நாகரிகம் அற்ற மிருகப் பிராயத்தினர்; காட்டுமிராண்டிகள்; எனவே நாகரிக உலகின் சலுகைகளான பொது நீதி, மதிப்பான அணுகுமுறை, தங்கள் உடைமைகளின் மீதும் கருத்துகளின் மீதும் பிரத்யேக உரிமை பாராட்டத் தகுதியற்றவர்கள்’ — இது போன்ற மனநிலை, இவைதான் அவர்களுக்குள் பொதிந்து இயக்குகிறது என்பது நமது பிரமை பிடித்த பார்வையன்று என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது பல சமயங்களில் அவர்களுடைய சொல்லாடல்களும், அவற்றின் தொனியும்.

View More Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)

அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்

நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்– “நாயை அடிப்பானேன் வம்பைச் சுமப்பானேன்” என்று அதையே சற்று மாற்றி இந்தச் சம்பவத்திற்குப் பொருத்தினோமானால், “நாயை அடிப்பானேன் பீரைக் குடிப்பானேன்” என்று பொருத்தி விடலாம்.. இந்தச் சம்பவம் நம் சிந்தனைகளைத் தூண்டட்டும். இந்தியா போன்று பல்வேறு கலாசாரங்கள் கலக்கும் தேசத்திற்கு, விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையை கற்றுத் தரும் ஒரு பாடமாக அமையட்டும்.

View More அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்

கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதை

“என் தினத்தை உன்னதமாக்கியது பகவத் கீதை. நூல்களில் முதல் நூல் அது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் மகோன்னதம் நம்மிடம் உரையாடுவது போன்றதோர் மகத்துவம் அது – அதில் அற்பமானதென எதுவுமே இல்லை. ஆனால் மகா விசாலமானதும் அமைதி ததும்புவதும், சீரானதுமானதோர் ஆதி பேரறிவு மற்றோர் யுகத்திலிருந்து நாம் இன்று எதிர் நோக்கும் அதே கேள்விகளை உள்ளார்ந்து அறிந்து பதிலளித்துள்ளதாக அது அமைகிறது.” அமெரிக்காவின் மிகச்சிறந்த தத்துவ மேதையான ரால்ப் வால்டோ எமர்ஸன் (1803-1882) பகவத் கீதையை குறித்து எழுதிய வார்த்தைகள் இவை.

View More கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் கீதை