சிறைவிடு காதை – மணிமேகலை 24

என்னுடைய அந்தபுரத்தில் மணிமேகலை என்ற பெண் ஒருத்தி இருக்கிறாள். உன்னை ஒருவருக்கும் தெரியாமல் அவள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லச் சொல்கிறேன். நீ அங்குள்ள அந்தப்புர மகளிரின் கண்களில் பட்டுக்கொண்டிருப்பதுதான் உன் வேலை. பிறகு நல்ல சமயம் பார்த்து, ‘மணிமேகலை கண்சாடை காட்டித் தன்னுடைய இளம் முலைகள் இரண்டையும் உன்னுடைய அழகிய மார்பில் பொருந்தும்படி என்னுடன் கூடினாள்’ என்று மற்றவர்களிடம் கூறவேண்டும். இதற்கு வெகுமதி ஒரு கிழி நிறை பொன் கழஞ்சு. இது அரச கட்டளை. செய்ய மறுத்தால் தண்டிக்கப்படுவாய்.

View More சிறைவிடு காதை – மணிமேகலை 24