கம்பன் காட்டும் இலக்கியச்சுவை

உலகக் காப்பிய வரிசையில் முன்நிற்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது இராமகாதையில் இலக்கியச்சுவையை அரியதொரு சுரங்கமாக்கிக் கொடுத்துள்ளான். ஒவ்வொரு வரியுமே கூட மிகுதியான இலக்கியச்சுவையுடன் அமையும். எடுத்துக்காட்டாக, அகத்தியரைக் கூறும் இடத்தில்,

View More கம்பன் காட்டும் இலக்கியச்சுவை

கம்பர் உருவப்படங்கள்

காலத்தால் முற்பட்ட, வரலாற்று ரீதியான, ஆதாரபூர்வமான கம்பர் உருவம் என்றால் அது தேரெழுந்தூர் கோயில் சிற்பம் தான். ஆனால், கம்பன் கழகங்கள் இந்த உருவத்தை ஏதோ காரணத்தால் வேண்டுமென்றே பயன்படுத்தாமல், தாங்களாக ஒரு உருவத்தைக் கற்பித்து, அந்தப் படங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்..

View More கம்பர் உருவப்படங்கள்

கம்பனும் காளிதாசனும்

யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி எழுமானால், கைவிரல்களை மொத்தத்தையும் மடக்கி, முதலில் சுண்டுவிரலைப் பிரித்தவாறு, ‘காளிதாசன்’ என்ற பெயரை உச்சரித்தால், அடுத்து வருவது அநாமிகா! (பெயரிலி, மோதிரவிரல் என்று இரு பொருள் இச்சொல்லுக்கு உண்டு). காளிதாசனுக்குப் பிறகு, கவிஞன் என்று பெயர் சொல்லவே யாருமில்லை என்ற பொருள்பட அமைந்த இந்த ஸ்லோகம், தெரிந்தோ தெரியாமலோ கம்பனால் இந்திரஜித்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. It is a pleasant coincidence.. வால்மீகியை ஒட்டியும் வெட்டியும் மாற்றியும் காளிதாசன் செய்திருக்கும் சித்திர வேலைப்பாடுகளில் பல, கம்பனுடைய காவிய அமைப்புக்கு வித்தாக இருந்திருக்கின்றன என்ற செய்தியையே தமிழகத்தில் இதுவரையில் யாரும் எடுத்து முன்வைத்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒருசில எடுத்துக் காட்டுகளையும் காண்போம்…

View More கம்பனும் காளிதாசனும்

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

View More கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

கம்பனும் இலங்கையும்

கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன… அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்… “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்…

View More கம்பனும் இலங்கையும்

இராம காதையில் இரு தியாக தீபங்கள்

வனவாச காலத்தில் இராமனுக்கு ஏதாவது இடர் வந்தால், ஆபத்துக்கள் வந்தால் அவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் உன் உயிரைக் கொடுத்தாவது அத் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்.. இராமன் இல்லாமல் நீ திரும்பி வர வேண்டாம்” என்கிறாள் சுமத்திரை.. இலக்குவன் சமைத்த பர்ணசாலையைப் பார்த்த  இராமன் நெகிழ்ந்து போகிறான். இலக்குவன் எப்படி இந்தப் பர்ணசாலையைக் கட்டி முடித் தான்? என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான்?’ என்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறான்…. ராவணன் ஆத்திர மெல்லாம் வீடணன் மேல் திரும்புகிறது. உடனே மயன் தந்த வேலாயுதத்தை ஏவுகிறான். இந்த வேலை யார் மீது பிரயோகித்தாலும் அவர்கள் அழிவது திண்ணம். இதைக் கண்ட அனுமனும் அங்கதனும் கூட ஓடி வருகிறார்கள் அந்த வேலைத் தாங்கிக் கொள்ள. அங்கதனும் வாலியால் அடைக்கலமாகக் கொடுக்கப் பட்டவன் தானே! அதனால் எல்லோரையும் முந்திக் கொண்டு இலக்குவன் ஓடி வந்து வேலை ஏற்கிறான்…

View More இராம காதையில் இரு தியாக தீபங்கள்

அவ்வரங்கள் இவ்வரங்கள்

இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது… கைகேயி இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள்… இராமன், ‘என் தாய்’ என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்… “இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள் சீதை… கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

View More அவ்வரங்கள் இவ்வரங்கள்

அச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]

தன்னுடைய பக்தர்களுக்குக் காட்சி தந்து அவர்களை மகிழ்விப்பதே அவதாரங்களின் முக்கிய நோக்கம் என்னும் செய்தியை நாம் பார்த்தோம். அப்படி என்ன அவன் பக்தர்களுக்கு அவனையே காண வேண்டும் என்ற துடிப்பு? இது பித்துப் பிடித்தவன் செயல் போன்றல்லவா உள்ளது? அவனைக் காண முடியவில்லை என்றால் பக்தர்கள் துயரப்படுவரா? ஏன், நாம் எல்லோரும் அவனைக் கண்டதே இல்லையே, நன்றாக மூன்று வேளை சாப்பிட்டுக் கொண்டு, கைநிறைய சம்பாதித்து, பிள்ளைக்குட்டிகளுடன் சந்தோஷமாகத் தானே இருக்கிறோம்? […]

View More அச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]