
நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் ‘கோடிக் கரங்கள்’ நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கழிசடைகளை நம்பித் தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள்…. எப்.டி.ஐ.யை இறுதிவரை எதிர்த்த பா.ஜ.க, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், அதிமுக, திரிணாமூல், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.. லோக்சபாவிலும் சரி, ராஜ்ய சபாவிலும் சரி, எப்.டி.ஐ.யை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ஆயினும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ‘ஏதோ ஒரு முறையில்’ தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அரசு நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறது. இது கையாலாகாதவன் பீம புஷ்டி லேஹியம் சாப்பிட்டது போலத் தான் இருக்கிறது…