பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2

சர்க்கரை, எத்தனால் தயாரிப்புக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சர்க்கரை விற்பனை கட்டுப்பாடுகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் இருந்து முழுவிலக்கு அளித்து ,சர்க்கரை துறைகளுக்கும், எத்தனால் உற்பத்தி, விநியோகம், ஆகியவற்றிற்கு தேவையான ஆய்வு நடவடிக்ககள், மேம்பாடு இவற்றை கவனித்து மேலாண்மை செய்யவும், விவசாயிகளின் நலன் காக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தனியான தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையத்தை ட்ராய், பிரசார்பாரதி போல அமைத்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம்….

View More பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2

பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1

லிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும்,விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும் தாண்டி எரிபொருள் தீர்ந்து போய்விட்டால் என்ன என்பது போன்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நலனில், நல்வாழ்வில் வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற நல்லதெல்லாம் இந்திய மக்களுக்கு ஏற்படும் அப்படினு தெரிஞ்சாலே ,மக்கள் நல்லாயிருந்துடுவாங்க அப்படிங்கற ஒரு கருதுகோள் போதுமே காங்கிரஸ் அரசு இதை தடுத்து நிறுத்த…

View More பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1

பெட்ரோல் விலை உயர்வு – 2

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான வரிகள் என்பதோடு அதனை இனிமேல் நிர்ணயிப்பது தனியார் நிறுவனங்களின் கைகளில்!..

View More பெட்ரோல் விலை உயர்வு – 2

பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது.

View More பெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்!

2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?

View More 2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

கருணாநிதி என்ன கடவுளா?: ஒரு வித்தியாசமான குரல்

”மீண்டும் பார்ப்பனத் தலைமை தொடங்கிவிட்டது” என்று கறுவிய கருணாநிதி, சங்கராச்சாரியாரிடம் அதிகாரம் இருப்பின் அவருக்குப் பாதபூசை செய்து அவருடைய கால்களைக் கழுவி அதைத் தீர்த்தமென்று தன் தலையில் தெளித்துக்கொள்ளத் தயங்காதவர்,” என்கிறார் கருப்பையா… “தி.மு.க. என்ன சங்கரமடமா?” என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி. சங்கர மடத்தில் ஒருவர் நியமனம் பெற அவர் “ஸ்மார்த்த பிராமணராக” இருக்கவேண்டும். தி.மு.க.வில் நியமனம் பெற, கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்கவேண்டும் என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆகமுடியுமா?”

View More கருணாநிதி என்ன கடவுளா?: ஒரு வித்தியாசமான குரல்

தீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி

இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை. ஒவ்வொரு இந்தியனையும் கட்டாயப்படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம். தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லிமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்பது சிமி இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்… திருமதி சோனியா காந்தி, “தீவிரவாதத் தடுப்பு எனும் பெயரில் ஒரு அமைப்பை தடைசெய்வதால் மட்டும் பயங்கரவாத செயலை அடக்க இயலாது. ஆகவே சில அமைப்புகளுக்கு தடைவிதிப்பு ஏற்க இயலாது”…

View More தீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி

அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்

ஆழத்தில் இருக்கும் பெட்டியை அவரால் தான் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் கண்ணீரோடு காத்திருக்கிறார்கள்…. ஊழல் செய்த நபர்களை விட்டுவிட்டு வெறும் ஊழலுக்கு எதிராக எனும் வசதியான நிலைப்பாட்டை உருவாக்குவதை பார்க்கிறேன்…எல்லா பெரும்போராட்டங்களுக்கு பிண்ணணியிலும் ஒரு திரைமறைவு ஆட்டம் இருக்கத்தான் செய்யும்…சிவில் சொசைட்டி பஜனை கேட்கும் இடத்திலெல்லாம் உணர்ச்சி வசப்படாமல் உன்னிப்பாக அதன் போக்கை கவனிப்பது நல்லது..

View More அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்

கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ

இன்னல்கள் அனுபவிக்கிறது உன் குடும்பம். இசை விழா நடத்துகிறது இத்தாலிய குடும்பம்.

View More கார்ட்டூன்: ரோம் ராணியின் நீரோ

அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை

ஏ, ஏ, அம்மா. இந்தா பாருங்கமா. அழாதீங்கம்மா. அம்மா, அழாதீங்கம்மா. பாருங்க. நீங்கள் அழுவதைப் பார்த்தால் எனக்குக் கண்ணில் கண்ணீர் தேங்குகிறது… நான் திருடவில்லை என்று, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் நீங்கள் கூப்பாடு போட ஆரம்பித்தது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூப்பாடு போட்டால்தான் இந்தியப் பத்திரிக்கை உலகமும் கவனிக்கும். யவன ராணி கூப்பிட்ட குரலுக்கு ஆஜராவதில்தான் மெக்காலே புத்திரர்களுக்குப் பெருமிதம் அதிகம்..

View More அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை