திருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை

”தமிழ் மண்ணிற்கு வருகை தருவதை மதிப்புக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். தமிழ் மக்களிடம் மூன்று நல்ல குணங்கள் உண்டு – கடும் உழைப்பு, சிரத்தை, ராஜகம்பீரம் & விசுவாசம் (royal & loyal). தமிழகத்தின் பொருட்கள் தேசிய, உலக சந்தைகளில் தரம் வாய்ந்தவையாக உள்ளன. … ” இது ஒரு சாதாரண அரசியல்வாதி பேசும் பேச்சல்ல. இந்த தேசத்தின் மீது, மண்ணின் மீது, காலகாலமாக இருந்து வரும் அதன் சமூக, கலாசார பந்தங்களின் மீது ஆழமான பிடிப்பும், அன்பும் கொண்ட ஒருவரின் பேச்சு. எண்ணமும், செயலும் எல்லாம் இந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவதற்காகவே, இந்த தேசமக்களின் நல்வாழ்விற்காகவே இயங்கும் ஒரு தேசபக்தனின் பேச்சு… “இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கொல்கிறது. பாகிஸ்தானிய ராணுவம் நமது ராணுவ வீரர்களைக் கொல்கிறது.. பயங்கரவாதம் அபபவியான பொதுமக்களைக் கொல்கிறது, பூடான், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணமான அந்த பலவீனமான அரசை அகற்ற வேண்டும் நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். எங்களது சக்தி அனைத்தையும் உங்களது முன்னேற்றத்திற்காக, நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். சிறப்பான மிகழ்ச்சி. மிக அருமையான உரை. தனிப்பட்ட அளவில், மோதி இன்னும் சில விஷயங்களையும் பேசியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது…

View More திருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை

நரேந்திர மோடி – நல்வரவு!

பாரதத் தாயின் தவப்புதல்வரை,  நல்லாட்சி தரும் நாயகரை வாழ்த்தி வரவேற்கிறது தமிழகம் !

View More நரேந்திர மோடி – நல்வரவு!

நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்

நான் அறியவந்தபடி, குஜராத்தில் பொதுவாழ்வில் ஊழல் என்பது முற்றிலுமாகக் களையப் பட்டு விட்டது. ஒரு தனிமனிதராக, நரேந்திர மோடி அவர்களது நேர்மை பெரும் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்தமாக, அவரது நிர்வாகத் திறன் தேசிய அளவில் ஆதரிக்கப் படவேண்டியது. அவர் சுயராஜ்ய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்துவார். வறுமையை ஒழிப்பார். எனவே, இந்தியாவின் பிரதமாக ஆவதற்கான அபூர்வமான வாய்ப்பை அவர் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்… தேசிய சிந்தனை மற்றும் உலகனத்தையும் அரவணைக்கும் அளவு நட்புணர்வு ஆகிய நேர்மறைப் பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளார் என்று கருதுகிறேன்…

View More நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்

தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2

எந்த ஒரு தேர்தலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு அனுதாப அலையும் வீசாத பட்சத்தில் ஆட்சி மாற்றமே பெரும்பாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த வழக்கமான நடைமுறை இம்முறை மாறுகிறது. இந்தத் தேர்தல்- செயலற்ற, சுயநல வடிவான, ஊழல் மலிந்த ஐ.மு.கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பும் ஒரு செயல்வீரரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வானது, நாடு முழுவதுமே ஒரு உந்துசக்தியைப் பாய்ச்சி இருக்கிறது…. “செப்டம்பர்-26 அன்று திருச்சி வருகை தரும் மோடியைப் பார்ப்பதற்காக இதுவரை இணையதளம் மூலமும், நேரடியாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு இமெயில் மூலம் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். அதனுடன் ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்கலாம்”… இந்த 4 கட்சிகளும், இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்படும் நிலை உருவாகும். இந்திய ஜனநாயகக் கட்சியும் காந்திய மக்கள் இயக்கமும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு துணையாக நிற்கும்…

View More தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2

செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்

இளந்தாமரை மாநாட்டில் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தலைவர் நரேந்திர மோடி…

View More செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்