[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்

“இது திருநெல்வேலிக்குச் செல்கிறது. பக்தர்கள் அங்கு வருவார்கள்!”… நீங்கள் உயிர்வாழ அவசியம் என மருத்துவரின் கட்டாயம் இருக்குமேயானால் அசைவ உணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்… ஜாதி என்பது சமுதாய சவுகரியங்களுக்காக ஏற்பட்டது. ஜாதியில் உயர்வு, தாழ்வு கிடையாது. ஜாதி துவேஷம் கூடாது… தர்மச் சக்கரம் பத்திரிகை உயிருள்ளவர்களைப் போற்றவோ, தூற்றவோ செய்யாது. எல்லா சமயங்களிலுமுள்ள உயர்ந்த கோட்பாடுகளை இப்பத்திரிகை பிரசாரம் செய்யும்.

View More [பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்

[பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…

அன்பு சகோதர்களே! நீங்கள் நன்றாக இந்து மதத்தை விமர்சனம் செய்து விட்டீர்கள். நன்றாக சாடியும் உள்ளீர்கள். அதாவது, மதத்தலைவர்களின் கருத்துக்கு எல்லோரும் வாய்பொத்தி, கைகட்டி ஏற்றுகொள்வதாக கூறுகிறீர்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி ஏற்றுகொள்ளப்படுவதில்லை. உண்மைதான். முற்றிலும் உண்மைதான். என்னசெய்வது சகோதரர்களே! பகுத்தறிவும், சுயசிந்தனையும், கொள்கை தெளிவும் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாதம் இருக்கும்; பிரதிவாதம் இருக்கும்; மோதல்கள் இருக்கும் மேற்சொன்ன பண்புகள் இல்லாத இடங்களில் ……..

View More [பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…

[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

இதனை நாம் எவரிடமிருந்தும் கடன் பெறவில்லை, பெறவேண்டிய அவசியமும்
இல்லை.இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கட்டப்பட்ட குருகுலம்
இது. தவிர உழைப்பின் மாண்பினை(Dignity of Labour) இந்திய மக்களுக்க உணர்த்திய
வகையில் இப்பெருமை காந்திடிகளுக்கு உண்டு. காந்தியடிகள் இதை
நடைமுறைப்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே பரமஹம்ஸர் இச்செயலைச்
செய்து காட்டியிருக்கிறார். குலத்தால் அந்தணராகிய ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்ஸர்
உண்மையான தொண்டு என்ன என்பதைத் தம் வாழ்வின் மூலமாக உணர்த்தியருளினார்

View More [பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி

1000 சித்பவானந்தர்கள் வந்தாலும் தமிழ் மண்ணில் சம்ஸ்க்ருதத்தை வளர்த்து விட முடியாது என்று ஈவெரா கர்ஜித்தார். சுவாமிகளின் துறவு சீடர்களில் ஒருவர் சமஸ்கிருதத்தையும் வேதத்தையும் பரப்புவதற்காகவே சுவாமிகள் பெயரிலேயே ஆஸிரமம் அமைத்து தம்மை
அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்.

View More [பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி

[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!

தபோவனம் கட்டத் தேவைக்கு மேற்பட்டும் நிதி வரத்துவங்கியது. உடனடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார்:

“தாயுமானவர் தபோவனத்திற்குத் தேவையான நிதி சேர்ந்து விட்டது. இனி அன்பர்கள் நிதி அனுப்பவேண்டாம். அனுப்பினால் திருப்பி அனுப்பப்படும்”.

View More [பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா!

[பாகம் 2] குதி. நீந்தி வா !

சுவாமியிடம் பெற்ற வைராக்கிய உணர்வினால்தான் திண்டுக்கல்லில் ஒரு மில்லாக இருந்த செளந்தரராஜா மில்லை 6 மில்களாக உயர்வடையச் செய்ய என்னால் முடிந்தது. சாதாரண ஆபீஸ் பையனாக உள்ளே வந்த நான் முதலாளிக்கே Special Advisor -ஆக முடிந்தது.

View More [பாகம் 2] குதி. நீந்தி வா !

வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

காலதாமதமாக வந்தார் ஒரு பிரதம விருந்தாளி. வந்தவர் சாதாரணமானவர் அல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சித்பவானந்த சுவாமியோ நேரத்தை மிக முக்கியமானதாகக் கருதுபவர். எதையும் யாருக்காகவும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காத உறுதிப்பாடு உடையவர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் மேடையில் எல்லார் முன்னிலையிலும் வைத்தே கேட்டு விட்டார் [..]

View More வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1