யானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்

தோல்வி காணாத கட்சி என்று எந்தக் கட்சியும் எக்காலத்திலும் இருந்ததில்லை. உண்மையில் இந்தத் தோல்வி பாஜகவை உள்முகமாக மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில், இத்தோல்வி பாஜகவின் அரசியல் எதிரியான காங்கிரஸ் அடைந்தது போன்ற அவமானகரமான தோல்வி அல்ல. மிகவும் போராடி, நூலிழையில் பாஜக பறிகொடுத்த வெற்றியைத் தான் காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுகிறது… கள நிலவரம் மிகவும் மோசமாக இருந்தபோதும், பாஜக கடைசி வரை கடுமையாகப் போராடி தோல்வி விகிதத்தைக் குறைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் சூறாவளிப் பிரசாரமும், வாக்குச்சாவடி மட்டத்திலான தீவிரமான களப்பணியும், நேர்த்தியான தேர்தல் செயல்பாடுகளும் இல்லாமல் இருந்திருந்தால், பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும்…

View More யானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்

சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்

அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தில்லியில் எதிர்பாராத வெற்றியை அறுவடை செய்ததன் மூலமாக,…

View More சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்

குறையொன்றும் இல்லை

மோடியின் அயராத உழைப்பும் மக்கள் அவர்மேல் கொண்ட நம்பிக்கையின் அடையாளமும் இந்த வெற்றிகளின் மாபெரும் உந்து சக்திகள். மொத்தம் 589 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 406 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது தோராயமாக 70 சதமானம்… மதசார்பின்மை பிரச்சாரம் எங்கே போச்சு? வரிந்து கட்டிச் சொன்ன குஜராத் கலவரப் பொய்களெல்லாம் என்ன ஆச்சு? மக்கள் அதையெல்லாம் டாய்லெட் பேப்பர் மாதிரி ஆக்கிவிட்டார்கள்!… முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களை சுலபமாக கவர்ந்த கேஜ்ரி தன் வெற்றிக்காக இன்னொரு காரியத்தைச் செய்திருக்கிறார். நாமும் டில்லி மக்களும் நாட்டு மக்களும் கூர்ந்து கவனிக்க வேண்டிய காரியம் அது. தேர்தலுக்கு முன்பாக பாங்ளாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனுக்கு எதிராக பத்வா விதித்த மௌலானா தக்வீரைச் சந்தித்தார். ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்த கேஜ்ரி அத்தோடு நிற்கவில்லை. முஸ்லிம்களை திருப்தி செய்யவும் முனைந்திருக்கிறார்….

View More குறையொன்றும் இல்லை

வீழும் காங்கிரஸ்! மலர்கிறது தாமரை !

ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் மொத்த உருவமானகாங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதிப் போட்டியில் மிக மோசமாகத் தோல்வியுற்றுள்ளது. ம.பி, சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பாஜக, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ராஜஸ்தானை மீட்டுள்ளது. தில்லியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதும், காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வதில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன… பாஜகவில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம், கட்சித் தொண்டர்களின் அணுகுமுறை மாற்றம் தான். இப்போதெல்லாம், பாஜக தொண்டர்களோ, தலைவர்களோ தங்கள் பழைய செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை. இது முந்தைய பாஜக அல்ல….

View More வீழும் காங்கிரஸ்! மலர்கிறது தாமரை !