Posted in அரசியல், நிகழ்வுகள் on 23 August 2010
Stats: பார்வை: 737 and 11 Comments
ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த சர்ச் பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா?…திருப்பதி சேவா டிக்கெட் விற்பனை ஊழலுக்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக பணியமர்த்தப்பட்டவர்கள்…ஆலய நிர்வாகம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் மனச்சாட்சியோடு பணியாற்ற முடியும். சில ஆசாமிகள் ஆலயங்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது….
Posted in சமூகம், தத்துவம், வரலாறு on 8 July 2010
Stats: பார்வை: 581 and 2 Comments
புனிதமற்ற வாழ்க்கைதான் மானுடருக்கு லபித்திருக்கிறது. புனிதம் என்பதே ஒரு ஆதர்சம். இல்லாதது என்பதால்தான் அத்தனை கவர்ச்சியாக அது தெரிகிறது…நம் தனிவாழ்வின் வரலாற்றுச் சிறையில் இருந்தே நாம் ஒவ்வொருவரும் உலகை நோக்குகிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்… சமத்துவம் என்ற பெயரில் நிறையப் புரட்டு வேலைகள் செய்து பதவிக்கு வந்து வேறொரு அடுக்கு முறையை மக்கள் மீது திணித்த பல சர்வாதிகாரிகளை நாம் மார்க்சியம், நாசியிசம், ஃபாசிஸம், கிருஸ்தவம், இஸ்லாம் என்ற செமித்தியச் சிந்தனையின் பல வடிவங்களில் உலகில் பார்க்கிறோம்…
Posted in அரசியல், பயங்கரவாதம் on 9 June 2010
Stats: பார்வை: 667 and 7 Comments
மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பங்களாதேஷிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்றே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். முஸ்லிம்களைப் பகைத்துக்கொண்டால் சிறுபான்மையினரின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம் அரசியல் கட்சிகளுக்கு- குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு- உள்ளது. இதனால் காங்கிரஸாரின் ஆதரவுடன் பங்களாதேஷிகள்…. இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. வாக்குவங்கி சார்ந்த பயமும் ஓரு முக்கிய காரணமாகும்.
Posted in அறிவியல், கேள்வி-பதில் on 22 May 2010
Stats: பார்வை: 1,433 and 7 Comments
வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? … அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்? அவர்களின் உலகில் இசை இருக்குமா? … விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையை புன்னகையுடன் ஆமோதிப்பான்.
Posted in அரசியல், சமூகம், நிகழ்வுகள், பொருளாதாரம் on 18 May 2010
Stats: பார்வை: 1,668 and 9 Comments
இந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன… அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன… இந்தத் தகவல்களின் சாரம் என்ன ?
Posted in அரசியல் on 6 May 2010
Stats: பார்வை: 1,587 and 43 Comments
புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்… ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.
Posted in அரசியல், சமூகம், நிகழ்வுகள் on 3 May 2010
Stats: பார்வை: 1,099 and 13 Comments
(மூலம்: தருண் விஜய்) இந்த ஏழைகளுக்கு ஏதாவது போடு” என்று உங்களை உதாசீனம் செய்யும் நிலையில் ஒரே ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். அலுவலகங்களில் வேலை மந்தமாக நடப்பதற்குக் காரணம் காட்டப்படுபவர்களாகவும் முட்டாள்களாகவும் மற்றவர் போடும் பிச்சையில் வாழ்பவர்களாகவும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள். அதன் பின்னால், வால்மீகியாக வாழ்வது என்றால் என்ன என்று…
Posted in அரசியல் on 6 April 2010
Stats: பார்வை: 2,262 and 44 Comments
இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் கிறுத்துவ நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவ நாடுகளிடமிருந்து நிதி பெறும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களும் இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் செக்யூலரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் மௌடீக ஹிந்துக்களும் அதிக அளவில் வேலைபார்க்கும் நிறுவனங்களாகவோ இருக்கின்றன. எனவே அவை அனைத்தும், இந்த தேசத்தின் ஹிந்துத் தன்மையை முழுவதுமாக அழித்து, கிறுத்துவ கலாசாரத்தை இந்நாட்டில் நுழைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.
Posted in ஆன்மிகம், நிகழ்வுகள், நேர்காணல், பொது on 27 March 2010
Stats: பார்வை: 2,504 and 64 Comments
சில வெளிநாட்டு குழுக்களால், இந்து குருமார்களை, குறிப்பாக தென்னிந்திய குருமார்களை ஒழித்துக் கட்டுவதற்காகத் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப் பட்டுள்ளது… நான் பதிவு செய்த நேர்காணலில் இவை அனைத்தையும் விட்டுவிட்டு, மறுபடி அலைந்து திரியும் ஒரு சாதாரணத் துறவியாக ஆகத் தான் தயார் என்று நித்யானந்தா கூறினார்.. ஜடாயுவின் பின்னுரை - நித்யானந்தாவின் தற்போதைய நிலைமை கீதை கூறும் “யோக ப்ரஷ்டன்”, அதாவது யோகத்திலிருந்து தவறியவன் என்ற வரையறைக்குப் பொருந்தி வருகிறது என்று நினைக்கிறேன்.
Posted in ஆன்மிகம், சமூகம், நிகழ்வுகள், பொது on 21 March 2010
Stats: பார்வை: 2,181 and 17 Comments
இந்து அமைப்புகளின் பலவீனங்கள் என்னென்ன என்று எதிராளிகளுக்குத் தெரிய வரும்போது, இதே போன்ற விவகாரங்களை மற்ற இந்து அமைப்புகளும் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும். இதனை ஒரு முன்னறிவிப்பாகவே கூறுகிறேன்… ஒரு விஷயம் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் அது அறிவியலே அல்ல, ஏனென்றால் அறிவியல் அபோதபூர்வமானது, ஒழுக்கவிதிகள் சாராதது… சிவ சூத்திரங்களில் உள்ள 112 ஆன்மிக சாதனை முறைகளில், 6 முறைகள் ஆணும் (யோகி) பெண்ணும் (யோகினி) இணைந்து புரியும் யோகம் பற்றிக் கூறுகின்றன.
Posted in சமூகம், பொது on 15 February 2010
Stats: பார்வை: 1,232 and 28 Comments
இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!
Posted in அரசியல், பயங்கரவாதம் on 23 January 2010
Stats: பார்வை: 717 and 7 Comments
சில நாள்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது. அவரிடம் காஷ்மீர் பிரச்சினையின் தீர்விற்கு வழி கேட்டபோது அவர் காஷ்மீர் பிரச்சினை தீர இரண்டு விஷயங்களை அரசு செய்ய வேண்டும் என்றார். ஒன்று பெரிய அளவில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். இரண்டாவதாக முஸ்லீம் அல்லாதவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்றார்.
Posted in இந்து மத மேன்மை, சமூகம், மகளிர் on 6 November 2009
Stats: பார்வை: 13,302 and 238 Comments
நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்