Posted in சமூகம், சிறுவர், பொது on 3 October 2009
Stats: பார்வை: 557 and 4 Comments
அரசின் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் முதலில் தன்னிறைவு மனநிலை பெறவேண்டும். ஆசிரியப் பணியின் உன்னதத்தை அவர்கள் உணர வேண்டும். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெறும். இல்லையென்றால் இது வெறும் சமச்சீர் பாடத்திட்டமாக மட்டும் நின்று போய்விடும்.
Posted in இசை on 2 August 2009
Stats: பார்வை: 343 and 3 Comments
எல்லாவிதமான ராகங்களும் ஜன்ய (தாய்) ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. நம் கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) இருக்கின்றன. அடிப்படையில் ஸ்வர வரிசையின் பல வடிவப் பிணைப்புகளே இந்த ராகங்களாகும் …
Posted in அறிவியல் on 1 December 2008
Stats: பார்வை: 1,218 and 7 Comments
“மூக்குக் கட்டைப் பிரிக்கப் போகிறேன். ரத்தம் வந்தால் குடித்துவிட வேண்டும். என் மேல் துப்புகிற வேலையெல்லாம் வேண்டாம். ஒருவர் என்மேல் துப்பி, என் சட்டையெல்லாம் ஒரே ரத்தக் கறையாகிவிட்டது. கொஞ்சம் வலிக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார் டாக்டர்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆபரேஷன் செய்தபின் ஒரு பொட்டு கூட ரத்தம் வராமல், வலியும் இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தெம்பாக சுற்றிக்கொண்டிருந்தேன். கட்டு பிரிக்கப்போனால் இப்படி ரத்தம், வலி என்றால் வயிற்றைக் கலக்காமல் என்ன செய்யும்!
படுக்க வைத்து என் [...]
Posted in அறிவியல் on 5 June 2008
Stats: பார்வை: 2,088 and 11 Comments
பூஜ்யம் மற்றும் தசம எண் முறை (decimal number system) இவற்றின் தோற்றம் பற்றி, இவை பாரத நாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று உலகளாவிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்