Tag Archive: கம்பன்
You are browsing the tag archive for கம்பன்.
You are browsing the tag archive for கம்பன்.
ஆகஸ்டு 20th, 2008 | இந்து மத விளக்கங்கள், இலக்கியம் | 2 Comments
போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது…. சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்?
தினமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் பார்வையிடும் தமிழ் இந்து வலைத்தளத்தில் எழுத விருப்பமா? தளத்தின் கொள்கைகளுக்கேற்ப உங்கள் படைப்புக்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நன்றி.:
துரோணர் சாதியைக் காரணம் காட்டிக் கர்ணனுக்குக் கற்பிக்க மறுப்பதாக பவன்ஸ் பதிப்பில் கமலா சுப்பிரமணியம் எழுதியிருப்பதும், விக்கிபீடியாவில் சொல்லியிருப்பதும், இந்தக் கட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட காரணத்தால் எழுந்துள்ள பேச்சுகள். இவற்றுக்கு அடிப்படை இல்லை.
மறுமொழிகள்(4) | பார்வை: 104 |இஸ்லாமிய சட்டங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபு நாடுகளின் கலாச்சாரத்தில் தோய்ந்து உருவானவை. அவை நாகரிகத்துக்கும், நவீன காலத்திற்கும் பொருந்தி வரா. அவற்றை கடவுளே நேரடியாக கொண்டு வந்து கொடுத்தார், அதை பின்பற்றினால் தான் முஸ்லீம்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றெல்லாம் இளைய தலைமுறையை மூளைச்சலவை செய்கின்றனர் இஸ்லாமிய முல்லாக்கள். இந்த மூளைச்சலவையின் விளைவாக பல இஸ்லாமிய நாடுகளில் மனித நேயம் அருகி வருகிறது. அதன் ஒரு எடுத்துக் காட்டுதான் இப்படி ஷரீயா சட்டத்தால் பிரிக்கப் பட்ட தமிழ்க் [...]
மறுமொழி இடுக | பார்வை: 60 |
ஒரு வெள்ளை இனமேன்மை வாத மனம் தான் போப் பதினாறாம் பெனிடிக்ட் *இந்தியாவின்* *முதல்* பெண் புனிதரை பட்டமளித்து அங்கீகரித்ததாகக் கூற முடியும்.. ஏனெனில் இந்தியா ஏற்கனவே அதன் மண்ணில் வளர்ந்த தெய்வீகப் பெண்களான புனிதைகள் பலரைக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், இனம் குறித்த அதீத உணர்ச்சி கிறிஸ்தவ சபையில், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் அதிகமாக இல்லாதிருந்திருந்தால் அல்போன்ஸா (”இந்தியாவுக்கான” என்றில்லாமல்) கத்தோலிக்க உலகனைத்துக்குமான புனிதையாகக் குறிப்பிடப்பட்டிருப்பார்.
மறுமொழி இடுக | பார்வை: 87 |
நமக்குப் பொதுவாக கிடைக்கும் சித்திரம் உலகெங்கும் பரவிய மேற்கத்திய நாகரிகத்தின் பிரதிநிதிகள் ஆங்காங்குள்ள செடிகொடிகள் விலங்குகளை ஆராய்ந்து அவற்றினை ஒரு அறிவியல் முறைப்படிப் பாகுபடுத்தி அந்த வகைப்படுத்தல் அறிவியலை உலகெங்கும் பரப்பினர் என்பதுதானே? … அறிவியல் வரலாற்றாசிரியர் க்ரூவின் கணிப்புப்படி தாவரவியல் ஆராய்ச்சியாளர் லின்னயஸ் இந்தியப் பகுப்பு முறையின் அடிப்படையிலேயே ஏறக்குறைய 240 தாவரங்களை தனித்தனியான தாவர இனங்களாக பாகுபடுத்த முடிந்தது… ஒவ்வொரு தாவரத்தையும் குறித்த தகவல்கள் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் செய்யுள் வடிவத்தில் மலபார் பகுதி ஈழவர்களால் தெரிவிக்கப்பட்டன. இவற்றுள் சில செய்திகள் மிகத் தொன்மையான பழஞ்சுவடிகளிலிருந்து வந்தவையாக இருந்தன. இந்தத் தாவரத் தொகுப்பியல் ஐரோப்பாவில் வெகுவாகப் பரவியது… “தாவரவியலின் இலக்கணம் குறித்து எழுதிய ஜான் ரே (John Ray) வான் ரீட்டினை வாசித்திருந்தார் என்ற போதிலும் உயிரினம் (species) குறித்த அறிவினை அவரிடம் சேர்த்த ஈழவர்களின் பங்களிப்புக்கு அவர் முக்கியத்துவமும் அளிக்கவில்லை…”
மறுமொழி உள்ளது | பார்வை: 111 |
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
மனித வாழ்வில் எந்த நிலையில் பார்த்தாலும் ஒரு துணை தேவைப் படுகிறது. மனிதன் பிறந்ததும் தாயின் துணையோடு வாழ ஆரம்பிக்கிறான். கொஞ்சம் பெரியவனாகி விளையாடும் பருவம் வந்ததும் விளையாட ஒரு துணை தேவைப்படுகிறது. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் பக்கத்து வீட்டுப் பெரிய பையனோ, பெரிய பெண்ணோ, ஆயாவோ துணைக்குவருகிறார்கள். பள்ளியிலோ பாடங்களுக்குப் பாடவாரியாகத் துணைவன்! நாங்கள் படித்த காலத்திலெல்லாம் இந்தத் துணைவன் கிடையாது. இப்பொழுதோ 2, 3ம் வகுப்புகளுக்குக் கூட துணைவன் வந்து [...]
மறுமொழி இடுக | பார்வை: 86 |
அம்பேத்கர் சட்டக்கல்லூரி சம்பவம் தமிழ்நாட்டின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கும். கத்தியுடன் ஒரு மாணவன் பாய்வதும் பின்னர் மாணவர்கள் சூழ்ந்து கீழே கிடக்கும் ஒரு மாணவனை தடிகளால் அடிப்பதும் காவல்துறை அதிகாரிகள் அதனை வேடிக்கை பார்ப்பதும் - ஏறக்குறைய சினிமா காட்சியோவென தோன்றவைக்கும் ஒரு பயங்கரம். தாய் தந்தையர்கள் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி தம் செல்வங்களை படிக்க பட்டணத்துக்கு அனுப்புகிறார்கள், அவர்கள் தங்கள் செல்வங்கள் படித்து பட்டம் வாங்கும் காட்சியை காணும் தருணத்துக்காக காத்துக்கிடக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு காணக் [...]
மறுமொழிகள்(7) | பார்வை: 402 |
Copyright © 2008 தமிழ் இந்து
Structure theme modified and maintained by S.K
