மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்

சுதந்திர இந்திய வரலாற்றில் தேர்தல் முடிவுகளை ஒட்டி நடந்த மிகக் கொடூரமான வன்முறையாக சமீபத்தில் திரிணாமுல் கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய மேற்குவங்க வன்முறைகள் உள்ளன… மாநிலத்தின் பல இடங்களில் கற்பழிப்புகள், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. தேர்தல் நாளன்று பாஜகவின் வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றிய காரணத்துக்காகவே பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்… கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சகோதர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்…

View More மேற்கு வங்கத்தில் வன்முறை வெறியாட்டம்

மரபும் விமானப்பயணமும்

“நம்ம மரபு .. அது பழசு சார்”.. “மரபுன்னு எதைச் சொல்றீங்க?” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. ”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது”…“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா? அதுதான் முக்கியம்”…குழும சிந்தனை என ஒன்று அமையும்போது, அதன் எல்லைகள் குழுமத்தால் வகுக்கப்பட்டு, தனி உறுப்பினர்களின் ஆழ்மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தலைவர்கள் இல்லாது போயினும், குழும சிந்தனைகளால் வடிவாக்கப்பட்ட ஒரு பிரதி , குழுமத்திற்குக் கிடைக்கிறது, அது வழிநடத்தும்….

View More மரபும் விமானப்பயணமும்

மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2

நன்கொடை வழங்குபவர்கள் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவுவதற்காகத்தானே பணம் தருகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள கிளைகளுக்கு கிடைப்பதெல்லாம் வெறும் தொடக்கநிலை உதவி மட்டுமே. திரட்டப்பட்ட பெரும்பாலான நன்கொடை நிதியும் வட்டிகன் வங்கியின் கணக்கிலேயே கிடக்கும்…. 1994-இல் மதர் தெரசாவின் இல்லங்களின் அவலநிலைகளைக்குறித்து டாக்டர் ராபின் ஃபாக்ஸ் எழுதிய விமர்சனக் கட்டுரையில் முறையான அறுவைச்சிகிழ்ச்சை என்பது இந்த அமைப்பின் இந்திய கிளைகளில் காணப்படவே முடியாத ஒன்று என்று சொன்னது மருத்துவ உலகையே அன்று அதிச்சிக்குள்ளாக்கியது…
மதர் தெரசாவின் வியாபாரம் என்பது என்ன? பணத்துக்காக நல்ல மனசாட்சியை பண்டமாற்று செய்வது என்பதுதான் அது. இந்த பண்டமாற்றில் மிகப்பெரும் நன்மை அடைந்தவர்கள் நன்கொடை தந்தவர்கள். கிஞ்சித்தும் நன்மை காணாதவர்கள் ஏழைகள்… .(மொழிபெயர்ப்புக் கட்டுரை)

View More மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 2

மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1

”உங்களைப் போல் மேற்கிலிருந்து வரும் படித்தவர்கள் எல்லாம் இந்தப் பெண்மணியை ஏன் இப்படி கடவுள் நிலைக்கு ஏற்றி விட்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை!” என்கிறார் ராம்பகன் சேரியின் பண்ணாலால் மாணிக். அந்த சேரியில் 4000 பேர் வசிக்கக்கூடிய 16 குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களைக் கட்டியிருக்கிறார் அவர். ““மதர் தெரசாவின் அமைப்பு? மூன்றுமுறை உதவி வேண்டி போனேன். நான் சொல்வதை அவர்கள் கேட்கவே இல்லை. அந்த ஸிஸ்டர்களிடம் ஏகப்பட்ட பணம் கொழிக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும், அதை என்ன செய்கிறார்கள் என்பதோ யாருக்குமே தெரியாது!”.. உலக அளவில் தெரசாவின் சேவை அமைப்பு வருடத்திற்கு 100 மில்லியன் டாலர்கள் நன்கொடை வசூலித்ததாகக் கணக்கிடுகிறார்கள் – இந்த வசூல் பலப்பல வருடங்களாகத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. சேவை நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை வெளியிட வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம். மதர் தெரசாவின் நிறுவனமோ இந்த ஆணையைத் தொடர்ந்து உதாசீனப் படுத்தி வருகிறது. STERN நிறுவனம் இந்திய நிதி அமைச்சகத்தை இது குறித்து கேட்டதில் இது வெளியிட முடியாத ரகசியத் தகவல் என்று கூறி விவரங்கள் தர மறுத்து விட்டது… (மொழிபெயர்ப்புக் கட்டுரை)

View More மதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன? – 1

வன்முறையே வரலாறாய்…- 23

தேசப் பிரிவினையின் போது, நவகாளி காங்கிரஸ் அங்கத்தினர்களால் கல்கத்தா காங்கிரஸ் அலுவலகத்திற்கு அக்டோபர் 15, 1946-இல் அனுப்பப்பட்ட ஒரு தந்தி நடந்த பயங்கரங்களுக்கு சான்றாக உள்ளது.. நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்த நவகாளியில், ஏறக்குறைய 95 சதவீதம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களாக்கப் பட்டார்கள். மறுத்தவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்… ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம் குண்டர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டார்கள். இந்துக்கள் வசித்த பல கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. இந்துக் கோவில்கள் உடைத்தெறியப்பட்டன.. பீகார் முஸ்லிம் லீக் வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கை முகமதலி ஜின்னாவிடம், “இந்து காஃபிர்களுக்கு இத்தனை வருடங்கள் நேரம் கொடுத்தோம். இருண்ட காஃபிரி மதமான இந்துமதத்தை அழித்து, உலகிற்கு ஒளியூட்டும் இஸ்லாத்தை நிறுவ நமக்கு நேரம் வந்துவிட்டது. அரேபியாவில் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் காஃப்ரி இந்துக்களைக் கொன்று இந்த உன்னத காரியத்தைச் செய்வோம்” என வலியுறுத்துகிறது…

View More வன்முறையே வரலாறாய்…- 23

வன்முறையே வரலாறாய்…- 22

1946 ஆகஸ்ட்: முகமது அலி ஜின்னா வாளுடன் இருக்கும் படத்துடன் “…உங்களது வாட்களை எடுக்கத் தயாராகுங்கள்….ஓ காஃபிர், நீ ஒன்றும் பெருமிதப்பட்டுக் கொள்ளாதே. உனது அழிவு காலம் நெருங்கி விட்டது; படுகொலைகள் இனித் துவங்கவிருக்கிறது” என்ற செய்தி தாங்கிய சுற்றறிக்கை ஒன்று கல்கத்தா மேயரால் வெளியிடப்பட்டது. கிரிமினல்களையும், கொலைகாரர்களையும் ஒன்று திரட்டிய முஸ்லிம் லீக், அவர்களுக்குச் சகலவிதமான பயங்கர ஆயுதங்களையும் வழங்கியது… இந்தச் சம்பவங்களை நினைவு கூறும் லாகூர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி கோஸ்லா, “தெருக்களெங்கும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன….இந்துக் குழந்தைகள் கூரைகளின் மீதிருந்து தூக்கியெறியப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்…பல குழந்தைகளும், மற்றவர்களும் கொதிக்கும் எண்ணை ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார்கள். இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் பின்னர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள்” என்கிறார்…

View More வன்முறையே வரலாறாய்…- 22

காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்

1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை. அந்த அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர். காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin) பற்றிய திட்டவட்டமான முடிவுகளை 1959ல் அறிவித்தார். காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாக இந்தக் கண்டுபிடிப்புகளே மூல காரணம்…. கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார்… மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர்களையும் விட, சம்பு நாத் டேயின் பங்களிப்பு மிக அதிகமானது, உயர்வானது…

View More காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்

மதர் தெரசா: ஒரு பார்வை

தெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார். அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனதொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரி ஆப் சாரிடி”  நிறுவனத்தை வலுபடுத்த ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் தன்தொண்டு நிறுவனத்தை குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது..

View More மதர் தெரசா: ஒரு பார்வை