சாணக்கிய நீதி – 7

This entry is part 2 of 8 in the series சாணக்கிய நீதி

அன்புக் காதலியான மனைவி, தன்னை உயிருக்குயிராகக் காதலிக்கும் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலன் வீட்டிற்குச் சென்றால், தன் கௌரவத்திற்கும், தன் குடும்பத்தின் நற்பெயருக்கும் இழுக்கு வந்து சேர்ந்ததே, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோமே என்று அணுஅணுவாக மனதிற்குள் புழுங்கி இறந்துபோகவோ, அல்லாது தற்கொலை செய்துகொள்ளவோ, நேரிடும்.

View More சாணக்கிய நீதி – 7

இந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்

இந்துத்துவத்தை உலகளாவிய ரீதியில் அகற்றுவது’ என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.…

View More இந்து விரோத மாநாட்டை ஆதரிக்கும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்

நீட் தேர்வு மூலம் அதிக சமூகநீதி, அதிக வாய்ப்புகள்

மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ’நீட்’ என்று சொல்லப்படும் நுழைவுத் தேர்வினை…

View More நீட் தேர்வு மூலம் அதிக சமூகநீதி, அதிக வாய்ப்புகள்

புதிய பொற்காலத்தை நோக்கி – 18

பிரிட்டிஷாருக்கும் கிறிஸ்தவத்துக்குமான பிணைப்பு இதுவென்றால், இந்தியாவில் இருந்தவர்கள் ஒரு மண்வெட்டி செய்வதாக இருந்தாலும் வயலில் நாற்று நடுவதாக இருந்தாலும் வான் ஆராய்ச்சி செய்வதாக இருந்தாலும் அம்மை நோய்க்கு மருந்து தயாரிப்பதாக இருந்தாலும் அனைத்தையும் தெய்வ நம்பிக்கையோடு பக்தியோடு இறைவனைக் கும்பிட்டுவிட்டே செய்திருக்கிறார்கள். பிரிட்டிஷாரின் அராஜகத்தை கிறிஸ்தவத்தோடு இணைத்துப் பேசாமல் இருந்ததில் என்ன அரசியல் இருந்ததோ அதுவே இந்துஸ்தானத்தில் இருந்தவர்களின் மேன்மையை இந்து மதத்தோடு இணைத்துச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இந்தியாவில் அனைத்து ஜாதியினருக்கும் தரப்பட்ட கல்வி பற்றிய ஆவணத்தில் அந்தப் பள்ளிகள் சரஸ்வதி வணக்கத்துடன் தான் ஆரம்பித்தது என்ற குறிப்பு எங்குமே இல்லை…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 18

புதிய பொற்காலத்தை நோக்கி – 16

உலக நாடுகள் தாம் தயாரிக்கும் மருந்துகளுக்கு கொள்ளை விலை வைக்கிறார்கள். ஜன் ஆயுஷில் அதே மருந்தை நாலில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் தயாரித்து வழங்குகிறார்கள். இது அற்புதமான இந்திய அணுகுமுறை… இந்த நடமாடும் இருதய பரிசோதனைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதனால்தான் இந்த சிகிச்சை சாத்தியமானது. இந்தக் கருவியின் விலையானது பெரு நகர மருத்துவமனையில் இருக்கும் பரிசோதனைக் கருவியின் விலையில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை… பாரதம் இதை தனது ஆன்மிகக் கடமையாக முன்னெடுத்துச் செய்யவேண்டும். மிகக் குறைந்த விலைக்கு நாகரிக மாமிசத்தை உற்பத்தி செய்து உயிர்களையெல்லாம் கொடூரத்தில் இருந்து காப்பாற்றவேண்டும்…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 16

புதிய பொற்காலத்தை நோக்கி – 15

மேற்கத்திய உலகம் தயாரித்த ஏ.ஸி. 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிறதென்றால் இந்த இந்திய ஏஸி பத்தாயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறது. ஒரு கிராமத்து நபர் கண்டுபிடித்த கருவி இது. எந்த பல்கலைக்கழக பேராசிரியரும் விஞ்ஞானியும் இதைச் செய்யவில்லை… சைக்கிள்களின் பயன்பாடு அதிகரித்தாகவேண்டியது காலத்தின் கட்டாயம். எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்ற்ச் சூழல் மாசை அது கணிசமாகக் குறைக்கவும் செய்யும். இந்த எண்ணம் நமக்கு இதுவரை இருந்திருக்கவில்லை. இதனால் நமது சாலைகளில் சைக்கிள்களுக்கென்று தனி லேன் அமைக்க வழியில்லை…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 15

புதிய பொற்காலத்தை நோக்கி – 14

சொந்த கலாசாரம், தேச பக்தி, உயர் மதிப்பீடுகள் போன்றவை கல்வியின் அடிப்படையாக இருக்கவேண்டும். பொருளாதார, சர்வதேச அம்சங்கள் இரண்டாம்பட்சமானதாக இருக்கவேண்டும்.. இணையம் என்பது அனைவரையும் அருகே கொண்டுவந்து விட்டிருக்கிறது. இணைய வழி வகுப்புகள், கருத்தரங்குகள், சந்திப்புகள் போல் இணைய வழி குடும்ப நிகழ்ச்சிகள் மாதம்தோறும் நடத்தப்படலாம்…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 14

புதிய பொற்காலத்தை நோக்கி – 13

கிறிஸ்தவ மதம் உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றத் துடிப்பதுபோல் கிறிஸ்தவ தேசப் பொருளாதார சக்திகள் தமது கார்ப்பரேட் பொருளாதார வடிவத்தையே உலகம் முழுவதிலும் திணிக்கத் துடிக்கின்றன. கிறிஸ்தவ தேச குளிர்பான நிறுவனங்கள் உலகம் முழுவதும் தாகத்துக்கு தனது பானத்தை மட்டுமே அருந்தவேண்டும் என்று நினைக்கின்றன. கிறிஸ்தவ தேசக் கல்வி அமைப்புகள் உலகம் முழுவதும் தனது கலாசாரம், வரலாறு, விஞ்ஞானம் இவை மட்டுமே இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறது. கிறிஸ்தவ தேச அரசியல் சக்திகள் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை மலரச் செய்யும் பெரும் சிலுவையைக் கஷ்டப்பட்டுத் தானே தோளில் சுமந்துகொண்டு தமது கைப்பாவைகளையே உலகம் முழுவதிலும் நியமித்துவருகின்றன…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 13

புதிய பொற்காலத்தை நோக்கி – 12

ஆங்கிலம், கார், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், அலோபதி மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மின் விளக்குகள், ஃப்ரிட்ஜ், டி.வி, செல்போன், குளிர்பானங்கள் என எதையும் பயன்படுத்தக்கூடாது. மேற்குலகின் கண்டுபிடிப்புகள் வேண்டும். மேற்குலகைப் பழிக்கவும் வேண்டும் என்றால் எப்படி நியாயம் என்று ஒரு கேள்வி இங்கு எழுகிறது. மேற்குலகினர் நம்மை முடக்கினார்கள் என்பதைச் சொல்லும் தார்மிகத் தகுதியை அரை மேற்கத்தியராக ஆகிவிட்டிருக்கும் நாம் இழந்துவிட்டிருக் கிறோம். அந்த உண்மையைச் சொல்லவேண்டுமானால் நாம் நம் கடந்த காலத்துக்குத் திரும்பியாகவேண்டும். மாட்டுவண்டி, திண்ணைப் பள்ளி, பாட்டி வைத்தியம், ஓட்டு வீடு, அரிக்கேன் விளக்கு, அரை ஆடை, பிரசவ கால மரணங்கள், மண் ரோடு, கமலை ஏற்றம், ராட்டை, கிட்டிப்புள், கபடி, மரத்தடி பஞ்சாயத்து எனத் திரும்பியாகவேண்டும். இது சாத்தியமா?…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 12

புதிய பொற்காலத்தை நோக்கி – 11

உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 11