Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ கிறிஸ்துவம் ’

இந்து மத விளக்கங்கள், கலைகள், சமூகம், நிகழ்வுகள்

கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?

கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?

கர்னாடகாவில் கடந்த சில நாட்களாக மதக் கலவரம் தலை தூக்கியுள்ளது. கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு வருகின்றதாக வரும் செய்திகள் நம்மை கவலையுறச் செய்கின்றன. இந்த தாக்குதல்களில் சில இந்து அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன என்று கிறிஸ்துவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பொதுவாக இந்துக்கள் மதத்தின் பேரில் அடித்துக்கொள்வதை விரும்பாத ஒரு சாதுவான சமுதாயம். மற்ற மதத்தவரின் வழிப்பாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதை நாம் கண்டிக்கிறோம். ஆனால் உண்மையில் அங்கு என்ன நடந்தது? நிகழ்ந்தவைகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? யாருக்கு என்ன கோபம் ?.. எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் ஒரு மரியாதைக்குரிய இந்துத் துறவி... [மேலும்..»]

சமூகம், புதிய இந்து

அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!

August 25, 2008
-
அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாய் மதம் திரும்பும் விழாவில் 10 குடும்பத்தினர் இந்து மதத்தில் சேர்ந்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருஸ்துவ, முஸ்லிம் மதத்தினர் தாய்ச்சமயம் மதம் திரும்பும் விழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கோவில் அலுவலர்கள் விழாவிற்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து கடந்த 18ம் தேதி வீரட்டானேஸ்வரர் கோவில் முன் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில், நேற்று பண்ருட்டி ராமசாமி செட்டியார் திருமண மண்டபத்தில் தாய் மதம் திரும்பும் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு இந்து... [மேலும்..»]

வழிகாட்டிகள்

சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி

சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி

ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி, சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி மற்றும் அவர் நடத்திவந்த ஆசிரமத்தில் பயிலும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று இரவு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.... கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தவர்... மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நம் சகோதர-சகோதரிகள்... [மேலும்..»]

சமூகம்

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

"தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை 'சைத்தானின் பிள்ளை' என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் 'தமிழர் சமய மாநாடு' எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது..." - தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத்... [மேலும்..»]

வரலாறு

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்று சொன்னால் என்ன ஆகிவிடும். ஏன் நாம் இதனை எதிர்க்க வேண்டும்? என சிலர் கேட்கலாம். இந்த தலைமுறையின் தலை சிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகன் இந்த முயற்சிகளின் பின்னால் இருக்கும் வலைப்பின்னல்களை வெளிக்கொணர்கிறார். ஜெயமோகனின் தெளிவான கட்டுரையை அவருடைய வலைப்பதிவில் வாசிக்கலாம். [மேலும்..»]

வரலாறு

புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!

புனித தோமா சினிமா: கத்தோலிக்கர்களே சிந்திப்பீர்!

இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு, தோமா வந்ததாகக் கூறுகிற கத்தோலிக்க சபையாரும் கிறிஸ்தவப் பெருமக்களும் அதனைத் தங்கள் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே கூறுவார்களெனில் அதில் கேள்வி கேட்க எவ்வித உரிமையும் எவருக்கும் இல்லை. ஆனால் அதனை வரலாறாக முன்வைத்து அவரைக் கொன்றதாக இந்துக்கள்மீது குற்றம் சாட்டுவார்களேயானால் நிச்சயமாக அவர்கள் கூறுவதன் வரலாற்றுத்தன்மையை ஆராய்வது ஒவ்வொரு தமிழ்-இந்துவின் கடமையாகிறது... [மேலும்..»]