அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

வேதநெறியும் தமிழ் சைவத்துறையும் (2009) என்பதில் தொடங்கி சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகள் தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளன. ஐயா அவர்களின் கட்டுரை ஒவ்வொன்றும் அவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும், அவரது சைவசித்தாந்த ஞானத்தெளிவுக்கும், அவரது சிவபக்திச் சிறப்பிற்கும் சான்று பகர்வனவாக இருக்கும். திருமுறைகளைப் பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாது, இசைக்கவும் வல்லவர். ஆழ்ந்த கர்நாடக சங்கீத ரசனை கொண்டவர். பேராசியரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பும், தொடர்ந்து சைவ அன்பர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் கற்பித்து வந்தவர். .

View More அஞ்சலி: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

பறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் காட்டப்பட வேண்டும்?… சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது….

View More பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்

மக்களின் நம்பிக்கை, வழிபாடு, சமயம் சார்ந்த செயல்பாடுகள் இவற்றில் வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் ஒரு மடத்துக்கு எந்த குற்றச்சாட்டோ அல்லது குறைபாடுகளோ இல்லாத நபர் தலைமை ஏற்பதுதான் பொருத்தமாக இருக்கும்… சிவ தீட்சை பெற்ற சிலர் அவர்கள் ஆதீன கோயில்களில் கட்டளைத் தம்பிரான்களாகப் பல காலம் பணியாற்றித் தங்களை பக்குவப் படுத்திக் கொண்டு அவர்களில் தகுதி அடிப்படையில் அந்த ஆதீனத் தலைமை பண்டாரமாக நியமிக்கப் பெறுகின்றனர், முதிய வயதில் கூட அந்தத் தலைமை கிடைக்காமல் போனவர்களும் உண்டு… பல சடங்குகள் இருக்க திடீர் சாம்பார் போல திடீர் மடாதிபதியாக ஆவது எப்படி என்பது புரியாத புதிராக இருக்கிறது…

View More மதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்

யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை

உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டிடக் குழு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறது.

View More யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை