Posts Tagged ‘ தமிழ்ஹிந்து ’

சமூகம், நிகழ்வுகள்

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, "விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்...

மேலும் »

நிகழ்வுகள், புத்தக விமர்சனம், வீடியோ

உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

உடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

இந்தப் புத்தகம் தேச ஒற்றுமையில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லாத அண்ணல் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோருக்கு நன்றிக் கடனாக, தன்னுடைய சிறு முயற்சி என்றும் இந்தப் புத்தகத்தின் தேவை தீரும் நாளையே தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அரவிந்தன் குறிப்பிட்டார்... ஜோ டி குரூஸ் அன்று கச்சிதமாகப் பேசி அனைவரையும் நெகிழவைத்தார்... கம்பர் சேக்கிழாருக்கு அடுத்தபடியாக அரவிந்தன் நீலகண்டனைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் எஸ்.ராமச்சந்திரன்... அதிரடிக்குரலும் ஆர்ப்பரிக்கும் அலைபோன்ற தொடர் பேச்சும் வாள் வீச்சாக இருந்தது....

மேலும் »

புத்தக விமர்சனம், பொது

தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்

தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்

தமிழ்ஹிந்து இணையதளம் குறித்து ஒரு விளம்பரம்.. இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் - தமிழ்ஹிந்து பரிந்துரை.. கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு - அரவிந்தன் நீலகண்டனின் புதிய நூல்! ... இரண்டு நூல்கள் தான் இந்த வருடக் கண்காட்சியைக் கலக்கப் போகும் அரசியல்/சமூகவியல் புத்தகங்கள் என்று பல புத்தக நோக்கர்கள் ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்... விஜயபாரதம் அரங்கில் தமிழ்ஹிந்து வெளியீடுகள் கிடைக்கும்..

மேலும் »

அறிவிப்புகள், புத்தக விமர்சனம்

சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!

சென்னையில் “உடையும் இந்தியா?” புத்தக வெளியீட்டு விழா!

ஜனவரி-3, 2012 (செவ்வாய்) மாலை 6 மணி.. அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பத்ரி சேஷாத்ரி, கிருஷ்ண பறையனார், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கல்வெட்டு எஸ்.இராமச்ச்சந்திரன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், டாக்டர் தியாக சத்திய மூர்த்தி, பேரா. சாமி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்... அழைப்பிதழ் கீழே! அனைவரும் வருக. ஆதரவு தருக!

மேலும் »

புத்தக விமர்சனம், பொது

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.. சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில் (ஸ்டால் எண் 76 & 77) கிடைக்கும்.

மேலும் »

அனுபவம், இலக்கியம், பொது

இந்துத்துவ முத்திரை

July 12, 2010
-
இந்துத்துவ முத்திரை

‘உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்’... சாரு நிவேதிதா அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே? அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் - இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட!

மேலும் »

அனுபவம், நிகழ்வுகள்

கோவை புத்தகக் கண்காட்சி 2010

கோவை புத்தகக் கண்காட்சி 2010

இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப்...

மேலும் »

புத்தக விமர்சனம், பொது

பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

இந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா? சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா? உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா? ஔரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் - இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா? முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா? - சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

மேலும் »

நிகழ்வுகள், பொது

சென்னை ஹிந்து ஆன்மிக-சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து.காம்!

சென்னை ஹிந்து ஆன்மிக-சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து.காம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக மைதானத்தில் 94 இந்து இயக்கங்கள் பங்கு பெரும் இந்த மாபெரும் கண்காட்சி ஐந்து நாட்களுக்கு (டிசம்பர் 24-28) நடைபெற்றது ... நமது தளம் பற்றிய விவரங்கள் மற்றும் இந்து தர்மத்தின் சீரிய கூறுகள் ஆகியவற்றை விளக்குமாறு பேனர்களை வடிவமைத்து தமிழ்ஹிந்து.காம் அரங்கில் அவற்றைக் காட்சிப் படுத்தியிருந்தோம். மேலும், தளம் பற்றிய அறிமுகம் துண்டுப் பிரசுரமாக (pamphlet) வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் தரப்பட்டது. எல்லா நாட்களும் பிரபலங்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை புரிந்தனர்.

மேலும் »